Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranam பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876)யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) > தக்ஷ காண்டம் (1 - 403)தக்ஷ காண்டம் (404 - 907)  > தக்ஷ காண்டம் (908-1562 )தக்ஷ காண்டம் (1563 - 2067)


 
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 2. அசுர காண்டம் படலம் 33-43 (1498 - 1929 )

kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 2 (verses 1498 - 1929 )


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2006.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

33. இந்திரன் கயிலை செல் படலம்

1498 - 1517

34. அசமுகிப் படலம் 1518 - 1549
35. இந்திராணி மறுதலைப் படலம் 1550 - 1573
36. மகாகாளர் வரு படலம்1574 - 1603
37. அசமுகி சோகப் படலம்1604 - 1633
38. இந்திரன் மீட்சிப் படலம்1634 - 1642
39. சூரன் அரசிருக்கைப் படலம் 1643 -1669
40. அசமுகி நகர்காண் படலம்1670 -1702
41. அசமுகி புலம்புறு படலம் 1703 - 1717
42. சூரன் தண்டஞ்செய் படலம்1718 - 1788
43. அமரர் சிறைபுகு படலம்1789 - 1929


செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

2. அசுர காண்டம்
33. இந்திரன் கயிலை செல் படலம் (1498 - 1517)

    1498

    அத்துணை தன்னில் அருந்துணை இல்லான்
    மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி
    எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
    சித்தம் வருந்தல் எனத்தௌ¤ வித்தான்.

    1

    1499

    மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
    பேதுறு வானவர் பேரவை நண்ணிப்
    போதுமெ னக்கொடு போந்து விரைந்தே
    நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே.

    2

    1500

    அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
    இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி
    நந்திபி ரானுறை நன்கடை சேரா
    வந்தனை செய்து வழுத்தினன் நின்றான்.

    3

    1501

    நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச்
    சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி
    இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா
    நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான்.

    4

    1502

    நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
    மூல வியோக முதற்பொருள் காட்டி
    ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
    கால மிதன்றென வேகழ றுற்றான்.

    5

    1503

    தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன்
    கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
    மாறியீ ழிந்திடு வல்விட மற்றும்
    ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான்.

    6

    1504

    இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
    உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார்
    தம்பம தான தடம்புணை தாழ
    அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல்.

    7

    1505

    செல்லல் உழந்து தியங்கிய தேவர்
    எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன்
    நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன்
    மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான்.

    8

    1506

    தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக்
    காயுவொ டாற்றல் அளப்பில செல்வம்
    ஏயவை யாவும் இருந்தவ நீரால்
    நாயகன் முந்துற நல்கினன் அன்றே.

    9

    1507

    நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித்
    தீங்கு குறித்தெழு தீவினை சேர
    ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம்
    ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா.

    10

    1508

    சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும்
    மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம்
    ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில்
    தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும்.

    11

    1509

    நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொ்
    ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன்
    மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந்
    தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும்.

    12

    1510

    அன்னது செய்திடின் அன்பறு சூரன்
    முன்னர் அருந்தவ முற்றிய காலைச்
    சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற்
    பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார்.

    13

    1511

    அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில்
    நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே
    எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம்
    தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால்.

    14

    1512

    ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும்
    பாக நினைந்து பரம்பொரு ளானோன்
    மோகமி லார்பெற மோனக ஞான
    யோகியல் காட்டி யுறைந்துள னேகொல்.

    15

    1513

    ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந்
    தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை
    ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே
    ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா.

    16

    1514

    மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
    யாவதும் ஈதென அண்டரும் யானும்
    பூவுல கத்திடை போந்திடின் இன்னே
    தீவினை யார்சிறை செய்வது திண்ணம்.

    17

    1515

    ஆதலின் ஆயிடை அண்டரும் யானும்
    போத லிலைப்புனி தன்கழல் காணத்
    தீதறு வேலை தனைத்தெரி வுற்றான்
    வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான்.

    18

    1516

    பேர்பெறு நந்திபி ரானது கேளா
    ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர்
    சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே
    ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான்.

    19

    1517

    வானவர் கோனரன் மால்வரை தன்னிற்
    போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
    மானபு லோமசை செய்கையும் அல்லா
    ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம்.

    20


    ஆகத் திருவிருத்தம் - 1517
    - - -

    34. அசமுகிப் படலம் (1518 - 1549)

    1518

    நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
    ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
    பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற்
    பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள்.

    1

    1519

    சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற
    மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
    காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
    நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள்.

    2

    1520

    கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால்
    உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
    வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
    கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள்.

    3

    1521

    கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால்
    அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
    இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
    மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள்.

    4

    1522

    பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும்
    நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
    முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
    சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள்.

    5

    1523

    கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர்
    வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
    சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
    ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள்.

    6

    1524

    பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன்
    துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
    கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
    மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின்.

    7

    1525

    பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ்
    செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
    துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
    பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள்.

    8

    1526

    சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள்
    மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
    காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
    தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள்.

    9

    1527

    மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
    மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
    சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
    ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே.

    10

    1528

    கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள்
    ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
    வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
    தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள்.

    11

    1529

    ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
    ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
    பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித்
    கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள்.

    12

    1530

    மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள்
    கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
    தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
    எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின்.

    13

    1531

    அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன்
    முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
    எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
    கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில்.

    14

    1532

    மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத்
    தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
    குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
    விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான்.

    15

    1533

    நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக்
    குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
    சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
    பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள்.

    16

    1534

    அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி
    நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
    வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
    முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே.

    17

    1535

    இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி
    அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
    வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
    திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான்.

    18

    1536

    வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை
    தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
    கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
    ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார்.

    19

    1537

    தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான்
    கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
    வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
    கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள்.

    20

    1538

    இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
    வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
    புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
    கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள்.

    21

    1539

    தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக்
    கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக்
    காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால்
    வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான்.

    22

    1540

    ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான்
    தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
    ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
    கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள்.

    23

    1541

    நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ
    பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
    சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
    ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள்.

    24

    1542

    எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி
    மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
    பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
    கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ.

    25

    1543

    ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன்
    மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
    பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
    சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே.

    26

    1544

    இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது
    நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
    தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
    பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல்.

    27

    1545

    தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன்
    புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
    இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
    அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான்.

    28

    1546

    அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான்
    பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
    கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
    தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை.

    29

    1547

    அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான்
    தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
    றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
    கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ.

    30

    1548

    எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக்
    கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
    முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
    உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க.

    31

    1549

    பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும்
    அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ·தே
    உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
    என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள்.

    32


    ஆகத் திருவிருத்தம் - 1549
    -----

    35. இந்திராணி மறுதலைப் படலம் (1550 - 1573)

    1550

    தக்க வேழகத் தலையள் கூறிய
    அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந்
    தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல்
    புக்க தேயெனப் பொருமி விம்மினாள்.

    1

    1551

    கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி
    செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
    விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட
    இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள்.

    2

    1552

    ஏடி நீயிவண் இசைத்த தீமொழி
    நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
    யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற்
    கூடு தீமையார் குறிக்கற் பாலரே.

    3

    1553

    வேதம் யாவையும் விதித்த நான்முகன்
    காத லன்தருங் கடவுள் மங்கைநீ
    நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப்
    பேதை யாரெனப் பேச லாகுமோ.

    4

    1554

    தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர்
    தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
    ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால்
    ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ.

    5

    1555

    தருமம் பார்த்திலை தக்க மாதவக்
    கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
    பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
    உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை.

    6

    1556

    பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு
    மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
    வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
    இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ.

    7

    1557

    ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின்
    ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது
    தோன்று நீயிவை துணியல் வாழிகேள்
    சான்று நின்குலத் தகுவர் யாவரும்.

    8

    1558

    இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ்
    சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன்
    வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை
    உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே.

    9

    1559

    நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங்
    கோன்மை யன்றியே கொடுமை செய்துள
    மேன்மை மன்னரும் வேறு ளார்களும்
    பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே.

    10

    1560

    மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான்
    நாளும் நாதனென் றறைதி யார்கணுங்
    கோளும் நல்லவுங் கறுகும் அல்லலும்
    நாளை உங்கள்பால் நணுகு றாதவோ.

    11

    1561

    நீதி யாகிய நெறியி லாதவள்
    ஆத லான்மிக அறிவு மாழ்கியே
    தீது கூறினாய் செல்வி தன்றரோ
    மாது நீயிது மறத்தி யுய்யவே.

    12

    1562

    ஏவ ரென்றனை எய்தற் பாலினோர்
    தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென்
    ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங்
    காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள்.

    13

    1563

    என்ற காலையில் எயிறு தீயுகக்
    கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த்
    தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே
    நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள்.

    14

    1564

    மறுவில் வாசவன் மனைவி கூறிய
    உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில
    அறிவில் பேதையாய் அலகை தேறலால்
    வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல்.

    15

    1565

    ஆன காலையில் அசமு கத்தினாள்
    ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால்
    வான வர்க்கிறை மாதை நோக்கியே
    தானு ரைத்தனள் இனைய தன்மையே.

    16

    1566

    கிட்டி நல்லன கிளத்தி னேனெனை
    ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை
    அட்டு நுங்குவன் அண்ணற் காகவே
    விட்ட னன்இது மெய்மை யாகுமால்.

    17

    1567

    ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச்
    சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய்
    பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால்
    ஈத்துப் போகின்றேன் சரத மீதரோ.

    18

    1568

    முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந்
    தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும்
    விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே
    படர்வன் அன்னது பார்த்தி மேலெனா.

    19

    1569

    வெய்யள் அவ்வயி ராணி மென்கரங்
    கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய்
    மொய்யிற் போயினாள் முரணி லாதவள்
    ஐய கோவெனா அரற்றல் மேயினாள்.

    20

    1570

    பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
    ஆவி போந்தென அவச மாகியே
    ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள்
    காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள்.

    21

    1571

    ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந்
    துய்ய தீம்படை* தோகை கண்ணுறா
    வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென
    மையு லாயகண் வாரி மிக்கதே.
    (* ஐயர் - அந்தணர்கள். அவுணர் - இங்குச் சந்தியா
    காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள்.
    தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள். )

    22

    1572

    காசி பன்தருங் கலதி கூற்றுவன்
    பாச மன்னகைப் பட்டு விம்மினாள்
    வாச வன்றனி மனைவி வெங்கொலைப்
    பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல்.

    23

    1573

    நாரி லாதவள் நலிந்து கொண்டனள்
    பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ்
    சோரு கின்றவள் சுற்று நோக்கியே
    யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள்.

    24


    ஆகத் திருவிருத்தம் - 1573
    -----

    36. மகாகாளர் வரு படலம் (1574 - 1603)

    1574

    பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
    ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
    கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
    மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம்.

    1

    1575

    ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங்
    காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
    பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
    வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள்.

    2

    1576

    ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள்
    ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
    மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
    வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன்.

    3

    1577

    சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர்
    வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
    பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
    காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான்.

    4

    1578

    இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம்
    வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
    உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
    கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான்.

    5

    1579

    கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
    அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
    கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
    கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான்.

    6

    1580

    வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள்
    பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
    மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல
    ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள்.

    7

    1581

    ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும்
    மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
    யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
    தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள்.

    8

    1582

    வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
    கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
    முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
    குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன்.

    9

    1583

    தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே
    பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
    விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
    அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான்.

    10

    1584

    கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே
    ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
    வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
    மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள்.

    11

    1585

    தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான்
    காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ¢ளை
    வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
    வீரரில் வீரனான வீரமா காளன் என்றான்.

    12

    1586

    என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
    பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
    நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
    சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள்.

    13

    1587

    புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள
    இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
    சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
    உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே.

    14

    1588

    குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும்
    முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
    அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
    எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே.

    15

    1589

    படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக்
    கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
    விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
    விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே.

    16

    1590

    காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே
    ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
    சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
    சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே.

    17

    1591

    சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
    வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
    கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
    கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள்.

    18

    1592

    வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான
    சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
    நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
    விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல்.

    19

    1593

    ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
    குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
    கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
    இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள்.

    20

    1594

    இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே
    முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத்
    தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
    ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள்.

    21

    1595

    வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
    ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
    சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
    பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய்.

    22

    1596

    தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர்
    அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
    எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
    விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள்.

    23

    1597

    பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
    வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
    மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
    போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான்.

    24

    1598

    என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி
    நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
    அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
    சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால்.

    25

    1599

    துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள
    பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
    கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
    வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால்.

    26

    1600

    போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
    ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
    சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
    தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள.

    27

    1601

    இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன
    மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
    அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
    உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி.

    28

    1602

    அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற
    வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
    செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
    துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க.

    29

    1603

    வேறு
    மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
    சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
    உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
    பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே.

    30


    ஆகத் திருவிருத்தம் - 1603
    -----

    37. அசமுகி சோகப் படலம் (1604 - 1633)

    1604

    அறைபடு கழலினான் அவுண மாதர்கை
    எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால்
    திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங்
    குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே.

    1

    1605

    திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக்
    கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள்
    வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள்
    விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள்.

    2

    1606

    மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
    வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள்
    உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப்
    புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள்.

    3

    1607

    புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித்
    துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா
    விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும்
    இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே.

    4

    1608

    கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக்
    குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத்
    துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை
    இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே.

    5

    1609

    திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா
    நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும்
    புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
    உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால்.

    6

    1610

    உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென
    விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந்
    தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை
    விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ¢குமே.

    7

    1611

    அற்றிடு கரத்தினை அறாத கையினால்
    தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
    ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர்
    இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே.

    8

    1612

    வீவதே இனியெனும் வினையி னேன்றனக்
    காவதோ இ·தெனும் ஐய கோவெனும்
    ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற்
    போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே.

    9

    1613

    காசினி தனில்வருங் கணவர் கைதொடக்
    கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப்
    பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர்
    ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும்.

    10

    1614

    தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம்
    போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி
    ஆவதன் முன்னரே அவரை யட்டுல
    கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே.

    11

    1615

    பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும்
    ஆரழல் வடவையை அவித்தி டோவெனும்
    பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும்
    மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும்.

    12

    1616

    பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே
    மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும்
    நாளினை முழுவதும் நாளு டன்வருங்
    கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும்.

    13

    1617

    சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது
    பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன்
    ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே
    ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும்.

    14

    1618

    கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய்
    அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே
    உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத்
    தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும்.

    15

    1619

    செந்நலம் நீடிய தென்னங் காயிடைத்
    துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப்
    பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய்
    இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும்.

    16

    1620

    இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
    செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா
    ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
    வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும்.

    17

    1621

    தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற
    நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந்
    தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ்
    ஆக்குகோ மாலென அருந்து கோவெனும்.

    18

    1622

    வேறு
    ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள்
    சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள்
    பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள்
    வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள்.

    19

    1623

    வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய
    தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின
    புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று
    இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள்.

    20

    1624

    வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச்
    செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்ும்
    ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால்
    கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ.

    21

    1625

    பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ்
    சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின்
    ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய
    சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும்.

    22

    1626

    ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர்
    நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய்
    ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும்
    போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள்.

    23

    1627

    வேறு
    ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில்
    வானவர் தங்களின் மடந்தை மார்களில்
    தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
    ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ.

    24

    1628

    நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால்
    அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால்
    எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர்
    வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ.

    25

    1629

    ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே
    சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும்
    மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால்
    ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள்.

    26

    1630

    வேறு

    மொழிந்து துன்முகி தௌ¤த்தலும் நன்றென முன்னா
    எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க்
    கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ
    அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள்.

    27

    1631

    துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன்
    வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
    இப்பு றத்தினில் ஔ¤ப்பினும் இதுவன்றி அண்டத்
    தப்பு றத்தினில் ஔ¤ப்பினும் பிழைப்புமக் கரிதே.

    28

    1632

    மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின்
    உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை
    இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில்
    சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால்.

    29

    1633

    உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம்
    எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன்
    தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங்
    கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள்.

    30


    ஆகத் திருவிருத்தம் - 1633
    -----

    38. இந்திரன் மீட்சிப் படலம் (1634 - 1642)

    1634

    அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன்
    உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில்
    தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன்
    புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான்.

    1

    1635

    போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர்
    மானி னம்பிரிந் தற்றென அவ்வனம் வைகிக்
    கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால்
    ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான்.

    2

    1636

    மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச்
    சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக்
    கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய்
    ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான்.

    3

    1637

    நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட்
    கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி
    அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித்
    துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே.

    4

    1638

    வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி
    அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன்
    சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம்
    முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி.

    5

    1639

    கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த
    செம்மை யா£களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான்
    பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும்
    எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப.

    6

    1640

    நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத்
    துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி
    நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச்
    சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி.

    7

    1641

    போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி
    மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக்
    கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா
    ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன்.

    8

    1642

    சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா
    அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று
    புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி
    எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான்.

    9


    ஆகத் திருவிருத்தம் - 1642
    -----

    39. சூரன் அரசிருக்கைப் படலம் (1643 -1669)

    1643

    இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால்
    முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள்
    தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
    அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம்.

    1

    1644

    வேறு

    மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின்,
    ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள்,
    தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன,
    ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே.

    2

    1645

    இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும்,
    அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி,
    வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி,
    பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார்.

    3

    1646

    தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய்,
    தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில்,
    ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற்,
    பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும்.

    4

    1647

    பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி,
    தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப்,
    பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி,
    அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ¤ரும்.

    5

    1648

    மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந்,
    தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே,
    அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி,
    எண்ணிலா தனவும் ப·றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும்.

    6

    1649

    பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின்,
    உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ¤றுதா ரகையவட் குயிற்றித்,
    தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத்,
    திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும்.

    7

    1650

    ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின்,
    மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித்,
    தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க,
    வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான்.

    8

    1651

    மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக,
    கோலொடு வௌ¤ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு,
    பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும்,
    வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய.

    9

    1652

    காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும்,
    ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத்,
    தாரக விறலோன் ப·றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப,
    ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர.

    10

    1653

    எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச்,
    செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி,
    அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல்,
    மைவரை யனைய அவுணா¢கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க.

    11

    1654

    உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில்,
    தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத்,
    தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய்,
    விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ.

    12

    1655

    நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற்,
    பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி,
    மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித்,
    துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற.

    13

    1656

    ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும்,
    வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும்,
    ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால்,
    கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும.

    14

    1657

    மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப்,
    பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா,
    இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித்,
    தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார.

    15

    1658

    விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக்,
    கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி,
    எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத்,
    தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில்.

    16

    1659

    தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம்,
    வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர்,
    தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர்,
    ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற.

    17

    1660

    ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா,
    வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர்,
    நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை,
    முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய.

    18

    1661

    தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில்,
    வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா,
    ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப்,
    பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப.

    19

    1662

    திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர்,
    நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள,
    வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத்,
    தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய.

    20

    1663

    வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல்,
    பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர்,
    பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ்,
    சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப.

    21

    1664

    பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட் டிடை தோறும்,
    மின்றிகழ் நுசுப்பில் திருமக்ள் பலராய் வீற்றுவீ ற்றிருத்தலே போலக்,
    குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று,
    துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற.

    22

    1665

    தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ செவ்வழி யென்னுநா னிலத்திற்,
    பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய்,
    மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட்,
    கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப.

    23

    1666

    மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே,
    ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ்,
    சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும்,
    பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ.

    24

    1667

    கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால்,
    தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ்,
    சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச்,
    சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய.

    25

    1668

    ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும்,
    பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும்,
    பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித் துகில் பிறவும்,
    மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க.

    26

    1669

    தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி,
    ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின்,
    ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும்,
    ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன.

    27

    ஆகத் திருவிருத்தம் - 1669
    -----

    40. அசமுகி நகர்காண் படலம் (1670 -1702)

    1670

    இன்னன பலபல எய்தச் சூரனாம்
    மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில்
    தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள்
    தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள்.

    1

    1671

    மோட்டுறு மகேந்திர முதிய மாநகர்
    கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள்
    மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக்
    கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ.

    2

    1672

    கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன்
    பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார்
    அழிதரு துன்புகொண் டழலில் சீறினார்
    இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா.

    3

    1673

    மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந்
    தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல்
    ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி
    யானது கண்டனர் அவுணர் யாவரும்.

    4

    1674

    வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத்
    திட்டனர் கவற்றினை இசைத்த சூளொடுங்
    கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர்
    விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர்.

    5

    1675

    தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப்
    புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை
    முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார்
    பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர்.

    6

    1676

    கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி
    கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர்
    ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது
    பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர்.

    7

    1677

    துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம்
    மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ்
    செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார்
    ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர்.

    8

    1678

    ஊனமில் பலபணி யுடன்று சீறியே
    பானுவை நுகரவிண் படரு மாறென
    வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா
    மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற றார்சிலர்.

    9

    1679

    வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள்
    ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ
    யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச்
    சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர்.

    10

    1680

    குறிகெழு வௌ¤லொடு குற்றி நாட்டியும்
    அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா
    எறிகுறு படையினை எய்யுங் கோலினை
    நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர்.

    11

    1681

    நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை
    ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய்
    ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப்
    போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார்.

    12

    1682

    வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங்
    காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள்
    வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை
    கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர்.

    13

    1683

    நாடக நூல்முறை நுனித்து நன்றுணர்
    கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர்
    ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங்
    கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார்.

    14

    1684

    புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு
    நலப்படு வேள்விகள் நடத்திக் கேளொடு
    பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க்
    குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர்.

    150

    1685

    மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு
    சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே
    மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது
    காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர்.

    16

    1686

    தோடுறு வரிவிழித் தோகை மாருடன்
    மாடம திடைதொறும் வதிந்த பங்கயக்
    காடுறு பூந்தடங் காமர் தண்டலை
    ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர்.

    17

    1687

    சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங்
    கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார்
    உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார்
    தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர்.

    18

    1688

    அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார்
    பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர்
    கனலொடு தீர்ப்புகை காலு யிர்ப்பினர்
    முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை.

    19

    1689

    வேறு
    அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி
    வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
    முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
    செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார்.

    20

    1690

    மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன்
    கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே
    பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன்
    ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார்.

    21

    1691

    சிரபத்தி அளவை யில்£த் திறலரி ஒருநாற் றந்தக்
    கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கஞ் செய்ய
    வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட்
    சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார்.

    22

    1692

    வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங்
    கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப்
    பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற
    செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார்.

    23

    1693

    பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண்
    வௌ¤ற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன்
    ஔ¤ற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக்
    களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார்.

    24

    1694

    ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று
    பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
    ஆசறு சங்கு கன்னன் அகட்டற் குண்டம் போல்வான்
    தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார்.

    25

    1695

    நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது
    தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார்
    அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார்
    நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார்.

    26

    1696

    புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார்
    கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார்
    இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார்
    நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார்.

    27

    1697

    கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும்
    பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார்
    இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார்
    விழுப்பெரு முனிவா¢ சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார்.

    28

    1698

    அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத்
    தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித்
    துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ
    இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார்.

    29

    1699

    ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ
    பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற்
    சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று
    கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார்.

    30

    1700

    கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார்
    நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார்
    மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும்
    ஓடியே அறிதும் என்பார் இனையன வரைத்த லோடும்.

    31

    1701

    சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய்
    வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர்
    சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம்
    ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார்.

    32

    1702

    அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து
    துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப்
    பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து
    மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானான்.

    33


    ஆகத் திருவிருத்தம் - 1702
    -----

    41. அசமுகி புலம்புறு படலம் ( 1703 - 1717)

    1703

    மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக்
    கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத்
    திறலுடை முனைனை யோரைத் சிந்தையில் உன்னி யாண்டைப்
    பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள்.

    1

    1704

    வேறு
    வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய்,
    பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும்,
    அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே,
    சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ.

    2

    1705

    தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற,
    மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம்என்பார்,
    ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி,
    ஏகிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ.

    3

    1706

    வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப்,
    பெருவீர முடன்வந்ததேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று,
    பொருவீர மாகாளன் அவையுமீட் டேகினன் அப்பொதும்பர்க் கானில்,
    ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ.

    4

    1707

    புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத,
    வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை,
    உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென்,
    கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின்.

    5

    1708

    மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான்,
    போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான்,
    ஏயினான் ஒருவனையே அவன்போன்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத்,
    தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ.

    6

    1709

    எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும்,
    உள்ளுற்ற பகையுண்டேன் கேடுளதென் றுரைப்பர் அ·துண்மை யாமால்,
    தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல்,
    கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின்.

    7

    1710

    சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள்,
    உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல்,
    அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும்,
    இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறயரென இகழ்ந்திட் டீரே.

    8

    1711

    முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை,
    வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ,
    இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான்,
    அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா.

    9

    1712

    பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின்,
    முறைசெய்த செங்கதிரோன்ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச்,
    சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக்,
    குறைசெய்து போதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே.

    10

    1713

    நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப்,
    பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றான்,
    ஈண்டாருங் குறும்பகைஞர் என்ரம்போந் திறமியற்ற இனிது வையம்,
    ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா.

    11

    1714

    வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச் செல்ல,
    ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர்,
    மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன் தூதன் வெகுண்டு வந்தென்,
    கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ.

    12

    1715

    சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ்,
    சேரவே புரந்ததனைநின் பரிதிசெங்கோல் குடை யெங்குஞ் செல்லா நிற்கும்,
    ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும்,
    வீரமா காளனிடைக் கண்டில னால்வலியர்முனம் மேவு றாவோ.

    13

    1716

    ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான்,
    இந்நாளில் அ·தன்றி ஒருவனைக்கொண் டெனது கையும் இழப்பித் தாரே,
    பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ,
    மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழி வரவை மதிக்கி லாயோ.

    14

    1717

    காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண்,
    ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ,
    ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ,
    பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ.

    15


    ஆகத் திருவிருத்தம் - 1717
    -----

    42. சூரன் தண்டஞ்செய் படலம் (1718 - 1788)

    1718

    என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப்
    பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா
    மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன்
    பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள்.

    1

    1719

    புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின்
    மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக
    அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன்
    இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான்.

    2

    1720

    என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய்
    உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை
    தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து
    முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான்.

    3

    1721

    புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில்
    இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம்
    விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு
    கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய்.

    4

    1722

    என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய்
    துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம்
    வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல்
    மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில்.

    5

    1723

    வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில்
    இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந்
    துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக்
    கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப.

    6

    1724

    புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல
    வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய
    மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே
    செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும்.

    7

    1725

    நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ
    ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர்
    ஆட கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர்
    பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார்.

    8

    1726

    தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும்
    ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த
    ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி
    தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான்.

    9

    1727

    பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை
    நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன்
    ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து
    ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே.

    10

    1728

    அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங்
    கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று
    துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான்
    எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான்.

    11

    1729

    மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன்
    கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள்
    ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த
    மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ.

    12

    1730

    பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன்
    திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன்
    இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும்
    ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான்.

    13

    1731

    விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி
    எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது
    கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய
    உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன்.

    14

    1732

    மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும்
    நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன்
    சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின்
    குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன்.

    15

    1733

    கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது
    தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன்
    இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது
    மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ.

    16

    1734

    பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை
    மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள்
    தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால்
    ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல்.

    17

    1735

    நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில்
    தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென்
    பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை
    யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ.

    18

    1736

    வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே
    தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல்
    தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால்
    போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே.

    19

    1737

    இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள்
    வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே
    பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான்
    ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே.

    20

    1738

    மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா
    எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச்
    சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ
    நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான்.

    21

    1739

    நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல
    மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன்
    செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே
    புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான்.

    22

    1740

    ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித்
    தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும்
    நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை
    கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன்.

    23

    1741

    வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும்
    இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே
    அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை
    சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே.

    24

    1742

    வலியர் ஆகியே பு£¤ந்தனர் எனினுமற் றவர்கள்
    மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ
    ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார்
    அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர்.

    25

    1743

    நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத்
    துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர்
    எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே
    சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய்.

    26

    1744

    முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற்
    கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே
    சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர்
    கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின்.

    27

    1745

    விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும்
    அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த
    சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப்
    பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன்.

    28

    1746

    அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம்
    எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச்
    செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை
    மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன்.

    29

    1747

    ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத்
    தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து
    போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல
    ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான்.

    30

    1748

    ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச்
    சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற சேர்த்தி
    வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப்
    போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான்.

    31

    1749

    மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன்
    உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி
    அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை
    நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான்.

    32

    1750

    எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப்
    பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான்
    நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா
    அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான்.

    33

    1751

    அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற்
    புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல
    நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில்
    தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன்.

    34

    1752

    என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து
    வன்றி றற்கரங் கூடுக மற்றிவா¢க் கெனலும்
    ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும்
    நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான்.

    35

    1753

    அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன்
    தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி
    தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல்
    முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து.

    36

    1754

    உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில்
    தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை
    எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே
    அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன்.

    37

    1755

    சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று
    நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ
    மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல்
    கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த.

    38

    1756

    வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா
    அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா
    இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன்
    செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில்.

    39

    1757

    இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக்
    களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித்
    தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில்
    விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி.

    40

    1758

    மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன்
    குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில்
    புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர்
    முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான்.

    41

    1759

    நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப
    ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக்
    காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின்
    மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர்.

    42

    1760

    துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை
    கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள்
    அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந்
    தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன்.

    43

    1761

    வேறு
    தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின்
    வினைஞரிற் சிலா¢தமை விளித்து நீவிர்போய்த்
    துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென
    முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான்.

    44

    1762

    ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே
    குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே
    பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான்
    தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான்.

    45

    1763

    வானிடை மண்ணிடை மாதி ரத்திடை
    மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை
    ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும்
    ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால்.

    46

    1764

    ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர்
    சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக்
    காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர்
    நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர்.

    47

    1765

    தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி
    வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர்
    பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல்
    உரையற நின்றனர் உலவைப் பண்ணவர்.

    48

    1766

    வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
    நின்றிடு கால்களை நீடு கால்களிற்
    துன்றிய கனைகழற் சூர னென்பவன்
    ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ.

    49

    1767

    ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச்
    சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான்
    சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும்
    பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே.

    50

    1768

    திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின்
    குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண்
    டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத்
    தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார்.

    51

    1769

    ஏவல ராயினோர் ஏகி யெல்லையின்
    காவலராகிய கடவு ளோர்தமைக்
    கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந்
    தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான்.

    52

    1770

    புல்லிய மகபதி புணர்த்த அச்செயல்
    ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர்
    எல்லிரு மனமகிழ்ந் திருத்திர்¢ என்னொடுஞ்
    சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர்.

    53

    1771

    நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர்
    இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால்
    வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா
    அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும்.

    54

    1772

    தூவி கெழுவிய சூரன் பின்பில
    ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி
    காவலர் தமையெலாங் கடிது வம்மெனக்
    கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான்.

    55

    1773

    தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே
    ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந்
    தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள்
    ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே.

    56

    1774

    ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர்
    தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங்
    காக்குநா¢ தொகுதியைக் காவல் மன்னவன்
    நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான்.

    57

    1775

    எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே
    களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன்
    ஔ¤த்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர்
    அளித்தது சாவும் அழகி தாமரோ.

    58

    1776

    குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன்
    நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன்
    மறித்திரு முகனுடை மங்கை தன்கரம்
    அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர்.

    59

    1777

    மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங்
    கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ
    உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ
    பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ.

    60

    1778

    ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ
    வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ
    சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ
    நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே.

    61

    1779

    எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற்
    கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப்
    பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங்
    கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம்.

    62

    1780

    தாயெனும் ஏழகத் தலையள் துன்முக
    ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை
    போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி
    மாயமி தாகுமால் மன்ன என்னவே.

    63

    1781

    மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப்
    புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர்
    இடையுற என்வயின் இனைய தோர்பழி
    அடைவது மாயையாம் அழகிதே என்றான்.

    64

    1782

    வேறு
    ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத்
    தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள
    மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத்
    தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான்.

    65

    1783

    சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான்
    சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான்
    சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான்
    சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான்.

    66

    1784

    எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள்
    முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து
    விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி
    மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான்.

    68

    1785

    மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர்
    இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும்
    உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா
    அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான்.

    68

    1786

    குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட
    நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா
    உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ்
    சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார்.

    69

    1787

    வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா
    என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர்
    சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர்
    நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார்.

    70

    1788

    போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும்
    மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும்
    போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல்
    ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன்.

    71


    ஆகத் திருவிருத்தம் - 1788
    -----

    43. அமரர் சிறைபுகு படலம் (1789 - 1929)

    1789

    எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய
    மழவுறு சூர்மகன் மாறி லாதபேர்
    அழகினை மெய்கொள் அணிந்து தொல்படை
    விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே.

    1

    1790

    இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும்
    ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த்
    திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில்
    விரைவினில் சுற்றின அனிக வௌ¢ளமே.

    2

    1791

    நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம்
    பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி
    உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான்
    திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான்.

    3

    1792

    கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள்
    வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ
    உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந்
    தளர்ந்தன நௌ¤ந்தனன் தரிக்குஞ் சேடனே.

    4

    1793

    பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந்
    தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர்
    எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடியே
    உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல்.

    5

    1794

    வேறு
    ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில்
    வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத்
    தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ குன்றின்
    ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே.

    6

    1795

    பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள
    கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த
    சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர்
    ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல்.

    7

    1796

    மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந்
    துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி
    விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வௌ¤யே செய்ய
    தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே.

    8

    1797

    முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி
    அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச்
    சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை
    எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான்.

    9

    1798

    என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன்
    மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில்
    அன்னதும் இ·தே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப்
    பன்னிரு பெயர்ச்சீ காழிப்* பழுமரக் காவிற் சேர்ந்தான். 10
    (* பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில்
    ஒன்றாகிய சீகாழிப்பதி.)

    1<0/td>

    1799

    தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத்
    தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவௌ¢ ளிடைய தாக்க
    வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான்
    காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான்.

    11

    1800

    வேறு
    அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும்
    முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர்
    மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற்
    பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே.

    12

    1801

    எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல்
    வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர்
    கழிந்திடு திறலினர் ககன வாணர்கள்
    அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார்.

    13

    1802

    மண்டல மேமுதல் வகுத்த வான்கதி
    கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள்
    விண்டொடர் செலவினில் விரவு பூழியால்
    அண்டமும் புவியென வையம் ஆக்கிய.

    14

    1803

    இலகிய பொன்னகர் எல்லை எங்கணும்
    அலைதரு மதநதி யாக்கி யாயிடை
    நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுன்
    டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே.

    15

    1804

    வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங்
    கொங்கிவர் தருமலா¢க் கூந்தல் வாசத்தால்
    அங்குள மாதர்மேல் அணுகி வையக
    மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே.

    16

    1805

    அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர்
    பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால்
    வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ்
    சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே.

    17

    1806

    மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன்
    முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா
    இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற்
    பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே.

    18

    1807

    விடா¢நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர்
    இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற்
    கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய
    கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே.

    19

    1808

    வேறு
    செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும்
    அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து
    வந்தான் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர்
    நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான்.

    20

    1809

    எந்தை யாகுங் குரவன் இலை இமையோர் குழுவிற் பலரில்லை
    தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால்
    அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும்,
    முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே.

    21

    1810

    பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை
    வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி
    ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற்
    கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே.

    22

    1811

    தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும்
    பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர்
    ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும்
    போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ.

    23

    1812

    போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின்
    ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ
    ஈவ தில்லை யவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழவ திலையெதிர்ந்து
    சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே.

    24

    1813

    அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார்
    நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்படியார்
    தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அ·தே போலத் தானவர்கோன்
    வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே

    25

    1814

    செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி
    வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கோண்மின்
    ஒருவீ ரன்றி, எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழ
    தருவீவேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேயே.

    26

    1815

    என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா
    உன்றன் உள்ளம் ஈதாயின் உமக்கு வேறோர் உணர்வுண்டோ
    வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும்
    பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார்.

    27

    1816

    வேறு
    சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித்
    துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா
    வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன்
    கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில்.

    28

    1817

    கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம்
    மல்கிய கறைப்த மருப்பிணை இரட்டை
    மெல்கிய புழைக்கரம் வௌற்றுடலின் வேழம்
    பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே.

    29

    1818

    இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி
    வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி
    உந்தினன் நடாத்திஅயல் உம்பபர்புறம் மொய்ப்பப்
    புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான்.

    30

    1819

    போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான்
    ஆகம்வௌ¤ றாகும்அயி ராவதமி சைக்கண்
    வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற்
    சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன.

    31

    1820

    பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி
    வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார்
    நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி
    ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல்.

    32

    1821

    பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத்
    தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப்
    பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய்
    வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும்.

    33

    1822

    ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப்
    பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த
    வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக்
    கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும்.

    34

    1823

    முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான்
    வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி
    எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ்
    சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும்.

    35

    1824

    வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி
    முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார்
    தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ
    அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார்.

    36

    1825

    கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா
    முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார்
    ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால்
    வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார்.

    37

    1826

    எழுப்படை விடுத்தர் எடுத்தகதை விட்டார்
    மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார்
    நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார்
    சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி.

    38

    1827

    மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ்
    சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச்
    சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும்
    பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல்.

    39

    1828

    அங்கமெம செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி
    எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந்
    துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற
    வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல்.

    40

    1829

    நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி
    ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி
    ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின்
    கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி.

    41

    1830

    சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை
    ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள்
    நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை
    மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன.

    42

    1831

    இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி
    மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக்
    கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான்
    தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான்.

    43

    1832

    வேறு
    கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம்
    உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக்
    கொண்டான் குணத்தின் இரைகாட்டினன் கோட்டி நேர்போய்
    அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான்.

    44

    1833

    பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர்
    மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி
    ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ்
    சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார்.

    45

    1834

    சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வௌ¢ளைக்
    கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி
    பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள்
    வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல்.

    46

    1835

    கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச்
    செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே
    மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி
    வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால்.

    47

    1836

    வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து
    மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா
    வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம்
    வாட்டிப் பின்வௌ¢ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான்.

    48

    1837

    வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங்
    காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல்
    ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ்
    சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை.

    49

    1838

    நூறாய்ப் புகுதா னவர்வௌ¢ளம் நொடிப்பின் மாய
    வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக
    ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம்
    மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட.

    50

    1839

    காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில்
    பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய்
    தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை
    நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன்.

    51

    1840

    எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன்
    தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய்
    விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன
    வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் ாரி தூர்த்தான்.

    52

    1841

    தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி
    தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி
    ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால்
    வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான்.

    53

    1842

    பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல
    கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர்
    ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான்
    காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல்.

    54

    1843

    சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத்
    தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு
    முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித்
    துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான்.

    55

    1844

    வேறு
    ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச்
    சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக்
    குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம்
    என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான்.

    56

    1845

    மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித்
    தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம்
    மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி
    உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல்.

    57

    1846

    சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன்
    மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன்
    தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர்
    ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார்.

    58

    1847

    தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண் முன்னி
    ஆங்குற்றிடு பரபாற்பொரு தன்னான்புரி மாயம்
    நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி
    ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார்.

    59

    1848

    அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர்
    தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும்
    கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான்
    முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன்.

    60

    1849

    வேறு
    அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன்
    இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா
    முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான
    மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான்.

    61

    1850

    மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை
    விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை
    கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன்
    உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப.

    62

    1851

    ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து
    மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித்
    தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து
    பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான்.

    63

    1852

    வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும்
    கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய்
    பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்
    பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன்.

    64

    1853

    வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற· தில்லோர்
    அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே
    தொல்லை யூழ்முறை புணர்ந்திடும் நின்னைநீ துதிக்கச்
    செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன்.

    65

    1854

    தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன்
    ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே
    ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக்
    கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான்.

    66

    1855

    சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து
    மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான்
    அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர்
    தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ வதுபோல்.

    67

    1856

    பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன்
    ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன்
    மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங்
    காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின்.

    68

    1857

    அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத்
    துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான்
    இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும்
    மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல்.

    69

    1858

    இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன்
    வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித்
    துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி
    அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான்.

    70

    1859

    அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற்
    செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி
    மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய்
    உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து.

    71

    1860

    உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப்
    பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து
    மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர்
    வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன.

    72

    1861

    வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர்
    பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற கறித்துச்
    சேந்த மெல்லிதழ அதுக்கிவா னுருமெனத் தெழியா
    ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன்.

    73

    1862

    கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி
    சோனை வெங்கணை தூண்டிவிற் றூண்யைத் துணித்துத்
    தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன்
    மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன்.

    74

    1863

    வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல்
    சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும்
    மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர்
    செய்வ தற்குத் தௌ¤தலின் றாயினான்.

    75

    1864

    நீண்ட வாளிக ளான நிறத்திடை
    ஆண்ட காலை அரிமகன் தந்திமேல்
    வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன்
    மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால்.

    76

    1865

    நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந்
    தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென
    விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத்
    துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே.

    77

    1866

    கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம்
    முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர்
    வற்ற போதும் அவன்சினக் கண்ணழல்
    வற்று வித்தமெய் வார்குரு திப்புனல்.

    78

    1867

    சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே
    அயர்ந்த போதத் தலையவன் ஊர்தியாம்
    கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே
    துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே.

    79

    1868

    காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும்
    ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப்
    பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன்
    வீய்ந்து போன தெழித்தது வேழமே.

    80

    1869

    பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர்
    மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத்
    தாண்டி வௌ¢ளையந் தந்தியைச் சீறினான்
    மூண்டு பானுவை முன்சிறை செய்துளான்.

    81

    1870

    மற்ற வன்றன் மணியணி மார்பிடைச்
    செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும்
    பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின்
    இற்ற வால்அதன் ஈரிரு தந்தமும்.

    82

    1871

    தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு
    சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன்
    உந்து தொண்டலம் பற்றிமற் றோர்கையால்
    தந்தி வேந்தன் கவுளிடைத் தாக்கினான்.

    83

    1872

    வேறு
    காழ்ந்த நெஞ்சினன் கரங்கொடு தாக்கலுங் கயமா
    ஆழ்ந்த தெண்டிரைப் பாற்கடல் உடைந்தென அரற்றி
    வீழ்ந்த யர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில்
    சூழ்ந்த தொல்லுணர் வெய்தலும் அவனிவை சொல்லும்.

    84

    1873

    மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை
    தீயர் பற்றுவர் அழியுமிந் நகரெனச் சிறிது
    நீயி ரங்கலை இனிமன னேவிதி நெறிகாண்
    ஆயின் இங்கிவை என்றனன் சயந்தனாம் அறிஞன்.

    85

    1874

    நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற் றுணிபு
    மனத்தில் வைத்திடும் இந்திர்கான்முளை மயங்கித்
    தனித்த நீர்மையுங் களிற்றோடு வீழந்ததுந் தளர்வும்
    அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார்.

    86

    1875

    ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே
    போர்த்த தாமெனச் சுற்றினர் பற்றினர் புவிமேல்
    கூர்த்த வாலெயிற் றரவினம் யாவையுங் குழீஇப்போய்ச்
    சீர்த்த வெல்லையில் இரவியைக் கரந்திடுந் திறம்போல்.

    87

    1876

    தடித்த மொய்ம்புடைச்சயந்தனைத் தானவத் தலைவர்
    பிடித்த காலையிற் கைதவன் கைதவன் பெரிதும்
    அடித்தி டுங்கள்குற் றிடுங்கள்இங் கிவனுயிர் அதனைக்
    குடித்தி டுங்களென் றா£¢எலா வவுணரும் குழுமி.

    88

    1877

    மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர்
    பொன்னே டும்பெருந் தேர்மிசைப் பொள்ளென ஏகிப்
    பன்ன ரும்புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித்
    துன்னி நின்றிடும் அவுணருக் கொருமொழி சொல்வான்.

    89

    1878

    வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட மயங்கிப்
    பெரிது மெய்தளர் வுற்றனன் பேசவுங் கில்லான்
    கருத லானெ இவன்றனை வருத்தலிர் கடிதே
    சுரர்கு ழாத்தொடு புரிமினோ சிறையெனச் சொற்றான்.

    90

    1879

    கொற்ற வன்மொழி வினவியே மந்தரக் குன்றைச்
    சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள்
    இற்ற கொல்லேன நாணினால் யாத்தனர் இமையோர்
    உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்குற உய்த்தார்.

    91

    1880

    வேறு
    தொழிலிது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே
    தழியகா வலரை நோக்கிச் சயந்தனும் இருவரும் அல்லால்
    ஒழியநின் றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர்
    அழியஇம் மூதூர் செந்தீ அரசனுக் களித்திர் என்றான்.

    92

    1881

    என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத் துறக்கம் யாண்டுஞ்
    சென்றனர் நாடி யேனைத் தேவரை மகளீர் தம்மை
    ஒன்றொரு வரையும் வீடா துடனுறப் பற்றி நாணால்
    பொன்றிரள் தடந்தோள் யாத்துப் புரவலன் முன்னர் உய்த்தா£ர்.

    93

    1882

    உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச்
    சித்திரங் கெழுவு பொன்னந் திருநகர் எல்லை யெங்கும்
    புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே
    முத்திற வரைப்பும் எங்கோன் முறுவலான் முடிந்த வாபோல்.

    94

    1883

    ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத் துறக்க மூதூர்
    பூழிய தான தன்றே புரந்தரன் வறியன் போனான்
    வீழுறு சிறையின் உற்றார் மிக்கவ ரென்றால் யாரும்
    வாழிய செல்வந் தன்னை நிலையென மதிக்க லாமோ.

    95

    1884

    அளிபட னின்றி யென்றும் அலர்தரு நிழற்றும் மூதூர்
    வௌ¤படு சுடலை போலாய் வேற்றுருக் கோட லோடுங்
    களிபடு பானு கோபன கண்டனன் அவுணர் தம்மில்
    ஔ¤படு காவ லோரை நோக்கியீ துரைக்கல் உற்றான்.

    96

    1887

    தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ டுற்ற
    ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையுங் கொடுமுன் நீவிர்
    போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி
    ஆதவன் பகைஞன் மீளா அனிகமோ டவனி வந்தான்.

    97

    1886

    மாநில மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக்
    கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச்
    சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று
    தானவர் மன்னன் முன்போய்த் தாள்முற வணக்கஞ் செய்தான்.

    98

    1887

    தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி எந்தாய்
    கண்டிலன் சசிய வானோர் காவலன் தனையுங் காணேன்
    அண்டரைச் சயந்தன் தன்னை யாரையுங் கொண்டு சென்றான்
    விண்டொடர் துறக்க முற்றும் வெங்கனல் கொளுவி என்றான்.

    99

    1888

    என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு குமரற் புல்லித்
    தன்றிரு முன்னர் இட்ட சயந்தனை முதலி யோரைக்
    கன்றினன் உருத்து வாட்கைக் காவலர் சிலரை நோக்கித்
    துன்றிய இனையர் அங்கம் யாவையுந் துணித்திர் என்றான்.

    100

    1889

    இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை வீடு பெற்ற
    உருகெழு புலிபாய்ந் தொப்ப ஒப்பிலா அரசன் சொல்லால்
    விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால் மேவித்
    துருவையின் முகத்தி காணத் துண்ணெனத் துணிக்கல் உற்றார்.

    101

    1890

    கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ லத்தைக் கல்லென்
    றரற்றுறு கண்டந் தன்னை அணிகெழு துண்டந் தன்னைச்
    சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த நோன்பின்
    உரத்தினில் அவைக ளெல்லாம் உடனுடன் பொருந்த லுற்ற.

    102

    1891

    செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார் தம்மை யாருங்
    கொல்லா¤ திறையுங் அங்கங் குறைத்தலும் அரிதா மென்றாற்
    சொல்லரி தினையர் வன்மை தொலைந்ததெம் வரத்தா லென்னா
    வல்லரி புரைவெஞ் சூரன் மதித்துமற் றதனைக் கண்டான்.

    103

    1892

    கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன் றானும் வீடா
    எண்டரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதி ரென்றே
    திண்டிறல் அசுரர் கேட்பச் செப்பலுஞ் சயந்தன் றன்னை
    அண்டரைப் பிடர்தொட் டுந்தி ஆங்ஙனங் கொண்டு போனார்.

    104

    1893

    போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி
    ஏயினன் நங்கோன் இன்னோர் யாரையுங் காவல் கொண்மின்
    நீயிர்க ளென்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை
    ஆயவர் வல்லி பூட்டி அருஞ்சிறைக் களத்தில் உய்த்தார்.

    105

    1894

    மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால் நோக்கி
    நின்னக ரத்திற் போதி நீயென அனையன் போனான்
    அன்னதோர் சூர பன்மன் அவையொரீஇ உறையுள் புக்கான்
    இன்னலங் கடலில் உற்றார் இருஞ்சிறைப் பட்ட வானோர்.

    106

    1895

    வேறு
    காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கா¤ந்து
    பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான்
    நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரான் நல்கும்
    வீட தேயலால் துன்பறும் ஆக்கம்வே றுண்டோ.

    107

    1896

    வேறு
    படவர வனையதோர் பரும அல்குலார்
    இடுகிய நுண்ணிடை எழில ணங்கினோர்
    கொடுமைசெய் அவுணரூர் குறுகி வேடர்பால்
    பிடியுறு மஞ்ஞையிற் பெரிதும் அஞ்சினார்.

    108

    1897

    சூரன்வாழ் பெருநகா¢ துன்னிக் காப்பொடு
    சீரிலா ஏவல்கள் செய்து மேவினார்
    கூரும்வாய் வெங்குரீஇக் குடம்பை உய்த்திடப்
    பேருறா திலகுமின் மினியின் பெற்றிபோல்.

    109

    1898

    வாடிய மகபதி மதலை வானுளோர்
    ஆடுறு துயர்க்கடல் அழுந்திச் சூரர்கோன்
    வீடருஞ் சிறையிடை மேவி னாரவர்
    பாடுறு திறத்தையார் பகரற் பாலினோர்.

    110

    1899

    இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந்
    தன்னவர் பெருஞ்சிறை அகற்றும் வன்மையார்
    பின்னெவர் உண்டுயிர் பெற்றுக் காத்திடு
    முன்னவர் தமக்கெலா முதல்வ நீயலால்.

    111

    1900

    வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு
    சயந்தன்விண் ணுலகிடைச் சமர்செய் தெய்த்துழி
    வயந்தரு கோடுகண் மாய்ந்து தந்திவீழ்ந்
    தயர்ந்தது புவியிடை அணுகிற் றத்துணை.

    112

    1901

    வாலிய ஔ¤கெழு வனத்தில் ஏகியே
    மூலம தாகிய முக்கண் மூர்த்தியை
    மேலுள தாணுவின் மேவச் செய்துபின்
    சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே.

    113

    1902

    அறிவுள மால்கரி அமலன் தந்திர
    முறையது நாடியே முதிரும் அன்பினால்
    மறையுற வழிபடீஇ வைகும் எல்லையில்
    குறைபடு நாற்பெருங் கோடும் வந்தவே.

    114

    1903

    பா£¢ப்பதி மருங்குறு பகவன் ஆணையால்
    மாற்பெருங் களிற்றிடை வல்லை முன்புபோல்
    நாற்பெருந் தந்தமும் நண்ண நோக்கியே
    ஏற்பரு மகிழ்ச்சியோ டிருந்த தவ்விடை.

    115

    1904

    வேறு
    ஆயதோர் அமைதி யின்கண் அணங்கொடு மேரு வெற்பிற்
    போயின அமரர் கோமான் பொன்னகர் சூரன் மைந்தன்
    காயெரி கொளுவி அங்கட் கடவுளர் குழுவி னோரைச்
    சேயொடு பற்றி ஏகிச் சிறைசெய்த தன்மை தேர்ந்தான்.

    116

    1905

    தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான் பன்னாள்
    வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச்
    சார்ந்துநிற் கென்னை வேண்டுஞ் சாற்றென முதல்வன் நீதி
    பேர்ந்தசூர் கிளையைச் செற்றெம் பேதுற வகற்று கென்றான்.

    117

    1906

    என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை மேவி
    ஒன்றொரு குமரன் றன்னை உதவுவம் அவனே போந்து
    வென்றிகொள் சூர னாதி அவுணரை விரைவிற் செற்று
    மன்றநும் முரிமை ஈவன் வருந்தலென் றுரைத்துப் போனான்.

    118

    1907

    சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க் கிறைவன் ஏனோர்
    ஏதிலர் தம்மால் வீடான் என்றுதன் உளத்தி லெண்ணிச்
    சோதிகொள் பரம மாகிதத் தோன்றிடு முதல்வன் நீயே
    ஆதலின் விமல மூர்த்தி அவரைமே லடுதி யென்றான்.

    119

    1908

    அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு சூழ்ந்து
    மைவரு களத்தோன் தன்பான் மதனனை உய்ப்ப அன்னோன்
    மெய்விழி எரியின் மாய்ந்து வெறுந்துகள் படலுந் தேவர்
    எவ்வெவ ரும்போய் வேண்ட இரங்கியே கருணை செய்தான்.

    120

    1909

    அரியயன் மகவான் தேவர் அருங்கணத் தலைவர் யாரும்
    பரவுற இமய வெற்பிற் படா¢ந்துபின் உமையை வேட்டுப்
    பிரிவருங் கயிலை நண்ணிப் பின்னெம திரக்கம் நாடிக்
    கருணையால் எந்தை நின்னை நெற்றியங் கண்ணால் தந்தான்.

    121

    1910

    எந்தைநீ வந்த பின்றை இந்திரன் அயன்மால் தேவர்
    அந்தமில் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற ஆவி
    வந்தது போன்ற தம்மா வலியவெஞ் சூரற் செற்றுத்
    தந்தம தரசு பெற்ற தன்மையர் போல வுற்றார்.

    122

    1911

    ஆழ்தத முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு
    வீழ்தரு வோர்கள் தம்பால் வியன்கல மொன்று சேர
    ஊழ்தரு தொடர்பாற் பற்றி உய்ந்தெனத் துன்ப வேலைக்
    கீழ்தரு வோர்கள் நின்னாற் கிளர்ந்துமேல் எழுதல் உற்றார்.

    123

    1912

    புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம னோர்கள்
    அரந்தையை அகற்ற உன்னி ஐயநீ போந்த பின்னுந்
    தெரிந்திடு துணிபிற் சேர்ந்துந் தெம்முனைச் சூரற் கஞ்சிக்
    கரந்தனர் இருந்தார் காணிற் கடுஞ்சிறைப் பிணிப்ப னென்£.

    124

    1913

    எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில்
    தம்பெரு வடிவங் காணச் சாருவர் ஒழிந்த காலை
    உம்பர்கோன் முதலோர் தத்தம் உருக்கரந் துழல்வர் வான்மேல்
    வெம்பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமை யேபோல்.

    125

    1914

    மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும்
    அறந்தவிர் சூர பன்மன் அடுபடைத் தலைவர்க் காணிற்
    பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை
    இறந்தன ராகிப் பின்னர் இன்னுயிர் பெறுவர் அன்றே.

    126

    1915

    வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில் அவுணர் கோனை
    நினைப்பினும் அவச மாவர் நெடுந்துயில் பெறாத நீரால்
    மனப்படு கனவு நீத்தார் மற்றது வருமேல் அங்கண்
    உனப்படு சூரற் காணின் உயிரையும் இழப்பர் அம்மா.

    127

    1916

    பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர ரோடு
    துன்னருஞ் சிறையுட் சேர்த்தித் துயர்ப்பெருங் கடலுள் வீட்டி
    மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும்
    இன்னமும் அவுணர் கோமான் இந்திரற் கலக்கண் சூழும்.

    128

    1917

    ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலாற் சீரான்
    மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா வாற்றால்
    இப்பகல் வானோர்க் கெல்லாம் இடர்புரி கொடுமை நீரால்
    அப்பெருஞ் சூரற் கென்றும் ஆரம்நேர் அன்று மாதோ.

    129

    1918

    ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா றேனை
    ஆயிரத் தோரேழ் அண்டத் தவன்செயல் அறிதல் தேற்றாந்
    தூயதோர் பரத்தின் மேலாஞ் சோதியாய் எம்மைக் காப்பான்
    மேயின ஒருநீ அன்றி வேறியார் தெரிதற் பாலார்.

    130

    1919

    தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை என்னில்
    கடந்திடல் புரியார் மாலுங் கமலமேல் அயனும் வானோர்
    அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர விருநா லண்டத்
    தொடுங்கிய உயிரும் அன்னோன் பெருமையார் உரைக்கற் பாலார்.

    131

    1920

    முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு சூர பன்மன்
    கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீராற்
    படியறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே
    அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கற் பாலார்.

    132

    1921

    ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான் நாளும்
    இந்திரை கேள்வன் போர்செய் தெஞ்சினன் எவர்க்கும் மேலாய்
    முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான் பின்னர்
    வந்தடல் புரியான் நீயே மற்றவற் கோறல் வேண்டும்.

    133

    1922

    ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை மைந்தர்
    ஏவர்கள் தமையும் அட்டே எழிலபெறு சயந்த னோடும்
    தேவர்தஞ் சிறையை நீக்கித் திசைமுகன் மகவா னாதிக்
    காவலர் பதங்கள் நல்கிக் காத்தருள் எம்மை யென்றான்.

    134

    1923

    இவ்வஆஆ முகமா றுள்ள எம்பிரான் உளத்திற் கேற்ப
    உய்வுறும் அன்பாற் பொன்னோன் உரைப்பமுன் அறிந்த தொன்றை
    மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை ஓவாச்
    செவ்வியல் மகார்வாய்க் கேட்குந் திறனென வினவிச் சொல்வான்.

    135

    1924

    புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும்
    ஒன்றிடை விடாது முற்றும் உள்ளவா றுரைத்தாய் நம்மு
    னன்றிது பனுவற் கெல்லாம் நாதனை ஒருநீ அன்றோ
    வென்றவன் புறத்தை நீவி இனிதருள் புரிந்தான் எங்கோன்.

    136

    1925

    அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெஞ்சூர்
    இறுசெயல் நினைக்கி லாகும் ஈண்டையோர் ஆடல் உன்னிக்
    குறுகினை யதுபோல் அன்னோன் கொள்கையுந் தேர்ந்தாய் நிற்கோர்
    சிறியனேன் உரைத்தேன் என்னுந் தீப்பிழை பொறுத்தியென்றான்.

    137

    1926

    பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன்
    மறத்தலில் அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்ற
    வெறித்தரு கதிர்வேல் அண்ணல் எம்முரை கொண்டு சொற்றாய்
    உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான்.

    138

    1927

    வேறு
    பொன்னெனும் பெயரினான் பொருவில் கந்தவேள்
    இன்னருள் நிலைமைபெற் றிருந்த பின்னரே
    தன்னயல் நிற்புறு சதம கத்தனை
    அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான்.

    139

    1928

    ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை
    மூண்டிடு சூர்குல முடிய வானுளோர்
    மீண்டிட இருஞ்சிறை விண்ப தத்தைநீ
    ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான்.

    140

    1929

    இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும்
    மகபதி பரிவொடு வணங்கி வானவத்
    தொகையொடு போற்றியே துன்பெலாம் ஒரீஇப்
    புகலரும் மகிழ்ச்சியுட் பொருந்தல் மேயினான்.

    141


    ஆகத் திருவிருத்தம் - 1929

அசுர காண்டம் முற்றுப் பெற்றது
ஆகக் காண்டம் இரண்டுக்குத் திருவிருத்தம் - 3712

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home