| 
				 193
    			
    			  | 
				 மாட மாளகை வாயி 
				றொறுந்தொறும் நீடு கண்ணுள ராமென நின்றுநின் றாடு சித்திரப் 
				பத்தி யமரரும் நாடி நோக்கி நயந்திடப் பட்டதே. 
    			 
    			  | 
				 47  | 
			
			
				| 
				 194
    			
    			  | 
				 எல்லை தீர்ந்த விரவிக 
				டூண்டிய சில்லி யாழித் திகிரிகண் மானுமால் மல்லன் மாநகர் 
				மைந்தர்க ளுர்தரும் பல்வ யகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. 
    			 
    			  | 
				 48  | 
			
			
				| 
				 195
    			
    			  | 
				 வௌ�ளை யாதி வியன்கவி 
				யாவையும் தௌ�ளி தின்மொழி தென்கலை யேமுதல் உள்ள பல்கலை 
				யோதுகின் றார்களும் வள்ளி யோர்களும் மன்றுதொ றீண்டுவார். 
    			 
    			  | 
				 49  | 
			
			
				| 
				 196
    			
    			  | 
				 இகலும் வேழத் 
				தெயிற்றினை யேய்ந்திடும் நகிலி னார்க ணறுங்குழன் மேலிடும் 
				அகலி னாவியு மாய்மணி மாடமேல் முகிலும் வேற்றுமை யின்றி 
				முயங்குமே. 
    			 
    			  | 
				 50  | 
			
			
				| 
				 197
    			
    			  | 
				 பண்ணி னோசையும் பானலை 
				வென்றிடுங் கண்ணி னார்கள் களிநட வோசையுந் தண்ண ரம்பிய 
				றந்திரி யோசையும் விண்ணு ளோர்க்கும் விருந்தென லாயவே. 
    			 
    			  | 
				 51  | 
			
			
				| 
				 198
    			
    			  | 
				 அணிகு லாவு மரம்பையர் 
				காளையர் நணிய தோளை நயப்புற நாகருங் கணிகை மாதரைக் காமுற 
				மேவலான் மணிகொள் காஞ்சி மதனர சாயதே. 
    			 
    			  | 
				 52  | 
			
			
				| 
				 199
    			
    			  | 
				 கூற்றிற் செல்லுங் 
				கொலைக்கரித் தானமும் ஏற்றிற் செல்லு மிடையர்தஞ் சேரியின் 
				ஊற்றிற் செல்லு மொண்பாலு முடனுறா ஆற்றிற் செலலுமவ் வாவணந் 
				தோறுமே. 
    			 
    			  | 
				 53  | 
			
			
				| 
				 200
    			
    			  | 
				 வேறு பண்ணுளர் 
				நரம்பியல் பாணிக் கேற்றிட எண்ணுள கணிகைய ரினத்தொ டாடலுங் 
				கண்ணுள ராடலுங் காம னாடலும் விண்ணுள ராடலும் வெறுப்ப மேவுமே.
    			
    			  | 
				 54  | 
			
			
				| 
				 201
    			
    			  | 
				 அரிவையர் மைந்தர்க 
				ளணிந்து நீத்ததே திருமகள் காமுறுஞ் செல்வ மாகுமேற் கருதரு 
				நான்முகக் கடவுட் காயினும் பொருவரு நகர்வளம் புகலற் பாலதோ.
    			
    			  | 
				 55  | 
			
			
				| 
				 202
    			
    			  | 
				 வேறு மாறாய்ச் 
				சிறார்க ளெறிந்தாடிய மான்ம தத்தாற் சேறாய்ப் பொற்சுண்ணத் 
				துலர்வாய்ப்பனி நீ்கள் சிந்த ஆறாய்ப் பளிதத் தினில்வாலுகத் தாறு 
				மாகி வேறாய்ப் புவியோ ருணர்வாமென மேய வீதி.
    			
    			  | 
				 56  | 
			
			
				| 
				 203
    			
    			  | 
				 தண்டாமரை யேந்திய 
				வானவன் றன்னை யொத்தான் எண்டாவிய மாமத னேந்திழை யாரி லஞ்சி 
				வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தேன் உண்டாடிய தேன்களை 
				யொத்தனர் ஓங்கல் மைந்தர். 
    			 
    			  | 
				 57  | 
			
			
				| 
				 204
    			
    			  | 
				 ஏமங் குலவ முரசங்க 
				ளிரட்ட வாசத் தாமங் கமழ்பந் தரினூடு தமககி யன்ற ஓமங் களின்மா 
				மணஞ்செய் தனரூர் குலாவும் மாமங் கலமே யுலப்பின்றி மலிந்த தன்றே. 
    			 
    			  | 
				 58  | 
			
			
				| 
				 205
    			
    			  | 
				 மாகந் திகழு 
				மகிலாவிகொள் மாட மீதிற் பாகின் மொழியா ரிளமைந்தர்தம் பாலி 
				னோச்சப் போகுஞ் சிவிறிப் பனிநீர்புறஞ் சிந்த வென்று மேகஞ் 
				சிதறும் பெயலென்ன விளங்கும் வீதி. 
    			 
    			  | 
				 59  | 
			
			
				| 
				 206
    			
    			  | 
				 வன்மா முலையேந் 
				தியமங்கையர் மைந்த ரானோர் தொன்மாட மீதி லெறிந்தாடுபொற் சுண்ண 
				மொடு நன்மா மலர்த்தாது விசும்புற நண்ண மேகம் பொன்மா 
				முகிலாய்ப் பனிநீரிற் பொழியு மன்றே.
    			
    			  | 
				 60  | 
			
			
				| 
				 207
    			
    			  | 
				 தாராற் பொலிபொற் 
				புயவீரர் தவாது செல்லுந் தேரார்ப்பு நால்வாய்க் 
				கரியார்ப்பும்வெஞ் சேனை யார்ப்பும் ஏரார்ப்பு மிக்க பதிமானவ 
				ரீண்டு மார்ப்புங் காரார்ப்பும் வேலைக் கடலார்ப்புங் கடுத்த 
				வன்றே. 
    			 
    			  | 
				 61  | 
			
			
				| 
				 208
    			
    			  | 
				 வானோக்கி நிற்கு 
				முலகென்னவு மன்ன வன்செங் கோனோக்கி நிற்குங் குடியென்னவுங் கோதி 
				லும்பர் ஆனோர்க்கு நாக ருலகோர்க்கு மவனி யோர்க்கும் 
				ஏனோர்க்கும் நாடும் நகராகி யிருந்த தவ்வூர். 
    			 
    			  | 
				 62  | 
			
			
				| 
				 209
    			
    			  | 
				 கோடு நெறியு 
				மிகலும்மனக் கோட்ட மாய கேடும் பிணியு முதலாகிய கேதம் யாவும் 
				நீடும் பரிவோ டுறைவா ரிடைநீங்க லாலே வீடந் நகரே யெனிலேன்னின் 
				விளம்ப வற்றோ.
    			
    			  | 
				 63  | 
			
			
				| 
				 210
    			
    			  | 
				 வேறு ஏமமே தருவாச் 
				சினைகளு மனைத்தா விலைதளிர் செய்யபூந் துகிராக்,  காமர்பூ மணியா 
				வுதித்தொரு காஞ்சி கண்ணரோ ரைவர்மு கண்டு, 
       தாமினி தருளும் பொய்கையின் மருங்கே தன்னிழல் பிரிகிலா துறலாற், 
       பூமியெண் காஞ்சி மாபுர மெனும்பேர் புனைந்ததப் பொருவிலா நகரம். 
    			 
    			  | 
				 64  | 
			
			
				| 
				 211
    			
    			  | 
				 சுருதியானுறங்கு 
				மிராத்தொறு முடிவிற் றுஞ்சிய வூழிக டோறும், 
      			 விரையவந் துலக மழித்திடுங் கடலவ் வியன்பதி யெல்லையுட் 
				சிறிதும், 
      			 வருவதை யஞ்சிப் புறந்தனிற் சூழ வந்தொரு சத்திகாத் திடலாற்,  
				பிரளய சித்தென் றொருதிரு நாமம் பெற்றதக் காஞ்சியம் பேரூர்.
    			
    			  | 
				 65  | 
			
			
				| 
				 212
    			
    			  | 
				 கயிலையி லரனை 
				யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற், 
      			 பயிலுறு கொடிய வினையிரு ளகலும் பான்மையால் வந்துமா நிழற்கீழ், 
      			 இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச், 
      			 செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச் சீரூர். 
    			 
    			  | 
				 66  | 
			
			
				| 
				 213
    			
    			  | 
				 விண்ணுறை மகவான் 
				கரிபுரி தவத்தால் வெற்பதாய்த் தன்னை முன்றாங்கு,  புண்ணிய கோடி 
				யிபகிரி மிசையே பொருவிலா வேதியுத் தரத்தில், 
      			 அண்ணலங் கமலத் திசைமுகன் வேள்வி யாற்றலு மவற் கருள் செய்வான், 
      			 கண்ணன்வந் திடலால் விண்டுமா புரமாங் கட்டுரை பெற்றதக் காஞ்சி.
    			
    			  | 
				 67  | 
			
			
				| 
				 214
    			
    			  | 
				 கார்த்திரு மேனித் 
				தண்டுழாய் மௌலிக் கண்ணனுங் கமலமே லயனும், 
      			 ஆர்த்திடுந் தரங்கப் பகீரதி மிலைந்த வவிர்சடை யமலனு மாகும், 
      			 மூர்த்திக டத்த முலகமே போல முன்னியப் பதியமர் செயலாற்,  
				சீர்த்திரி மூர்த்தி வாசமா கியபேர் சிறந்ததக் கச்சிமா நகரம்.
    			
    			  | 
				 68  | 
			
			
				| 
				 215
    			
    			  | 
				 தரணிகண் முழுதும் 
				புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால்,  திருமகள் 
				கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில், 
      			 அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால், 
				 வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். 
    			 
    			  | 
				 69  | 
			
			
				| 
				 216
    			
    			  | 
				 வீடுறு முத்தி 
				போகமென் றவற்றில் வெ�கிய வெ�கியாங் கென்றுங், 
      			 கூடுறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடுந் தன்மையாற் 
				காம, 
      			 பீடமென் றொருபேர் பெற்றது மலர்மேற் பிரமமே முதலினோர் தவத்தை, 
				 நாடினர் செயலால் தபோமய மெனும்பேர் நணியது கச்சிமா நகரம்.
    			
    			  | 
				 70  | 
			
			
				| 
				 217
    			
    			  | 
				 சகங்களோர் மூன்றி 
				லறம்பெரி துளதித் தரணியித் தரணிமா நகர்க்குள்,  மிகுந்தரு 
				மத்தின் பலத்தினைத் தரலால் வியன்சகற் சாரமென் றொருபேர்,  
				புகும்பரி சுடைய தட்டசித் திகளும் பொருவின்மா தவர்க்கரு டிறத்தாற்,  
				பகர்ந்திடுஞ் சகல சித்தியென் றொருபேர் படைத்தது கச்சியம் பதியே.
    			
    			  | 
				 71  | 
			
			
				| 
				 218
    			
    			  | 
				 உன்னருங் கயிலை நாயக 
				னுமையை யொருபக னீலியென் றுரைப்ப, 
      			 அன்னவ டனது காளிமங் கழிப்ப வங்கதி லையைவந் தெழலும்,  முன்னவ 
				னவளை யிந்நக ரிருந்து முறைபுரிந் தருளென விடுப்பக்,  கன்னிகாத் 
				திடலாற் கன்னிகாப் பென்னுங் கவின்பெய ருடையது கச்சி. 
    			 
    			  | 
				 72  | 
			
			
				| 
				 219
    			
    			  | 
				 அரியதோர் கயிலைக் 
				கணங்களி லொருவ னானதுண் டீரன்மா லதிபால், 
      			 பெருமயல் கொள்ளச் சிவனிவ ளடுநீ பிறந்திருந் தின்பமுற் 
				றெம்பால், 
      			 வருகென நிலமேன் மன்னர்பாற் றோன்றி மற்றவ ளோடுசேர்ந் தரசு,  
				புரிதரு செயலாற் காஞ்சிதுண் டீர புரமெனப் புகலநின் றதுவே. 
    			 
    			  | 
				 73  | 
			
			
				| 
				 220
    			
    			  | 
				 தன்னையே யருச்சித் 
				திடமலர்க் கேகித் தடந்தனிற் கராவின்வாய்ப் பட்டுத்,  தன்னையே 
				நினைந்து தன்னையே யழைத்த தந்தியைக் காத்தவொண் புயமால், 
      			 தன்னையே வேண்டித் தழன்மகஞ் செய்யத் தண்டகற் கெண்டிசை யரசு,  
				தன்னையீக் திடலால் தண்டக புரமாந் தனிப்பெயர் பெற்றதத் தனியூர். 
    			 
    			  | 
				 74  | 
			
			
				| 
				 221
    			
    			  | 
				 அழகிய வயோத்தி 
				மதுரையே மாயை யவந்திகை காசிநற் காஞ்சி, 
      			 விழுமிய துவரை யெனப்புவி தன்னின் மேலவாய் வீடருள் கின்ற,  
				எழுநக ரத்துட் சிறந்தது காஞ்சி யென்றுமுன் னெம்பிரா னுமைக்கு,  
				மொழிதரு நகரந் நகரெனி லதற்கு மூவுல கத்துநே ருளதோ. 
    			 
    			  | 
				 75  | 
			
			
				| 
				 222
    			
    			  | 
				 பங்கமில் வசிட்டன் 
				பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் செயைச், 
      			 செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும், 
      			 அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி,  கங்கைகா 
				ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம்.
    			
    			  | 
				 76  | 
			
			
				| 
				 223
    			
    			  | 
				 தொல்லையோர் பிரமன் 
				றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல், 
      			 செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் 
				சூதம், 
      			 எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் 
				டிழிந்து, 
      			 நல்லுமை குறிக்கொண் முதல்வனை வங்கி நயந்தவ னிருந்ததந் நகரம். 
    			 
    			  | 
				 77  | 
			
			
				| 
				 224
    			
    			  | 
				 சமையமா றினையுந் 
				தாயென வளர்த்துச் சராசர வணுக்களுய்ந் திடுவான்,  அமைதரு 
				மெண்ணான் கறத்தினைப் போற்றி யாதிபீ டத்தில்வீற் றிருக்கும்,  
				உமையமர் காமக் கோட்டியைக் கதிரோ னுடுபதி கணங்கள்சூழ் தரலால், 
      			 இமையவர் தமக்குந் திசைமயக் கறாத வியல்புடைத் தந்நக ரென்றும். 
    			 
    			  | 
				 78  | 
			
			
				| 
				 225
    			
    			  | 
				 பாவமோர் கோடி 
				புரியினு மொன்றாம் பரிவினிற் றருமமொன் றியற்றின், 
      			 ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கு மின்னதோர் பெற்றியை நாடித், 
				 தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச் சனைபுரிந் 
				தங்கண்,  மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி வியனகர்ப் 
				பெருமையார் விரிப்பார்.
    			
    			  | 
				 79  | 
			
			
				| 
				 226
    			
    			  | 
				 கங்கைதன் சிறுவ 
				னருள்பெறு வேதாக் கண்படை கொண்டகா லையினும், 
      			 அங்கவன் றுஞ்சும் பொழுதினுங் காஞ்சி யழிவுறா திருந்தபான் 
				மையினால், 
      			 துங்கவெண் பிறையு மிதழியு மரவுஞ் சுராதிபர் முடிகளு மணிந்த, 
      			 மங்கையோர் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே. 
    			 
    			  | 
				 80  | 
			
			
				| 
				 227
    			
    			  | 
				 அரியபல் லிசையும் 
				மறைபுனல் கங்கை யருஞ்சிலை யிலிங்கமங் குறைவோர்,  சுரர்தரு 
				வனைத்துங் கற்பக மின்பந் துய்ப்பது வேள்வியூன் பூசை, 
      			 உரைசெப நடத்தல் வலம்வருந் தன்மை யுன்னலே தியானம்வீழ்ந் 
				திடுதல், 
      			 பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கலால் எந்நகர்க் குளதே. 
    			 
    			  | 
				 81  | 
			
			
				| 
				 228
    			
    			  | 
				 கணமுகில் செக்கர் 
				போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள்,  மணிசுடர் வயிரக் 
				கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன் வருசூர் 
       துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தன்மால் விசயை, 
       இணையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம். 
    			 
    			  | 
				 82  | 
			
			
				| 
				 229
    			
    			  | 
				 அறுசம யத்திற் 
				கடந்தசை வத்தின் அன்றிவீ டிலதெனத் தெளிந்து 
      			 பிறரறி யாது தொன்மைபோ லிருந்து பிஞ்சகன் மீதுகன் மலரால்,  
				எறிதரு தேரர் அன்பர்தங் கலிங்க மெழிலிகள் நனைத்தலுஞ் சிரத்தை,  
				முறைபுரி சிலைமேல் மோதினோர் முதலோர் முத்திபெற் றுடையதம் மூதூர்.
    			
    			  | 
				 83  | 
			
			
				| 
				 230
    			
    			  | 
				 ஈசன தருளாற் கயிலையை 
				நீங்கி யிமையமா மயிலறம் புரிவான், 
      			 காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நீழலிற் பரனைப்,  
				பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி,  
				ஆசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லனையகாஞ் சிக்குநே ரதுவே. 
    			 
    			  | 
				 84  | 
			
			
				| 
				 231
    			
    			  | 
				 ஆருயிர் முழுதும் 
				வீடுபெற் றுய்வான் அறம்புரி சாலைய தணித்தாப், 
      			 பேரர விறைவன் றவத்தின்மு னிருந்த பிலத்திடைக் கோயில் கொண் 
				டென்றும், 
      			 பூரனி நோற்றுவழிபட வனையாள் பூசனை கொண்டியா வர்க்குங்,  காரண 
				மான பரசிவ னனந்த கலையொடு நிலையதக் காஞ்சி.
    			
    			  | 
				 85  | 
			
			
				| 
				 232
    			
    			  | 
				 இன்னமு முமையாள் 
				நோற்றிடு மாங்கே யிறப்பினும் பிறப்பினும் நிலையாய்,  மன்னியே 
				யுறினு மொருகண மேனும் வைகினும் மறைகளாந் தனிமா, 
       நன்னிழ லிருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினு மதனை,  உன்னினும் 
				முத்தி வழங்குகாஞ் சியைப்போ லுலகில்வே றொருநக ருளதோ.
    			
    			  | 
				 86  | 
			
			
				| 
				 233
    			
    			  | 
				 கண்ணுதற் பரனுந் 
				தண்டுழாய் மவுலிக் கடவுளுங் கமலமே லயனும், 
      			 விண்ணவர்க் கிறையுங் கொற்றமா லினியும் மேலைநாட் பிறந்ததொன் 
				மனுவுந், 
      			 தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில் கடந்ததண் 
				டகனும், 
      			 அண்ணலங் கரிகால் வளவனும் பிறரு மரசுசெய் தளித்ததந் நகரம்.
    			
    			  | 
				 87  | 
			
			
				| 
				 234
    			
    			  | 
				 வேலைசூ ழுலகி னெங்கணு 
				மிருபால் வீட்டினை வெ�கினோர்க் குதவும், 
      			 ஆலய நூற்றெட் டுள்ளமற் றவற்றுள் ஐம்முகப் பரஞ்சுட ரமருங்,  
				கோலமார் நிலய மிருபது மாயோன் கோநக ரெட்டுமாக் குழுமி,  நாலெழு 
				தான முள்ளவந் நகர்போல் நாம்புகழ் நகரமற் றெவனோ.
    			
    			  | 
				 88  | 
			
			
				| 
				 235
    			
    			  | 
				 கச்சபா லயமே கம்பமே 
				மயானங் கவின்கொள்கா ரோணமா காளம், 
      			 பச்சிமா லயநல் லநேகபங் கடம்பை பணாதர மச்சரம் வராகம்,  
				மெய்ச்சுர கரமுன் னிராமம்வீ ரட்டம் வேதநூ புரமுருத் திரர்கா,  
				வச்சிர னகரம் பிரமமாற் பேறு மறைசையாஞ் சிவாலய மிருபான்.
    			
    			  | 
				 89  | 
			
			
				| 
				 236
    			
    			  | 
				 கரிகிரி யட்ட 
				புயந்திரு வெ�காக் கருதுமூ ரகஞ்சகா ளாங்கஞ், 
      			 சுரர்புகழ் நிராகா ரந்நிலாத் திங்கட் டுண்டநற் பாடக மினைய,  
				அரிதிரு முற்ற மெட்டவை யன்றி அறுபதி னாயிர நிலயம்  பரசிவன் 
				சத்தி குமரர்மால் புறத்தோர் பலரும்வீற் றிருப்பதப் பதியோ.
    			
    			  | 
				 90  | 
			
			
				| 
				 237
    			
    			  | 
				 ஒன்றுதீ விளக்க மீரிட 
				மொருமூன் றுற்றிடு தெற்றிநான் கரணம், 
      			 நின்றிடு தருவைந் தாறுபுள் ளேழு நெடுநதி யெண்பொது வொன்பான், 
				 மன்றலம் பொய்கை வியன்சிலை யொருபான் மன்றவை பத்தின்மே லோன்று,  
				நின்றம்ந் தொழுகு நெறியில்அற் புதமாய் நிகரிலா துறையுமந் நகரம். 
    			 
    			  | 
				 91  | 
			
			
				| 
				 238
    			
    			  | 
				 சிறந்திடு மதியு 
				மிரவியு மாழ்கச் செகமேலாந் தனதொளி பரப்பி, 
      			 அறம்புரி காமக் கோட்டிமந் திரத்து ளம்மைவாழ் பிலத்தினு ளழியா 
      			 துறைந்திடு தூண்டா விளக்கமொன் றுதித்த வுயிர்த்தொகை யிறந்திடா 
				விடமொன், 
      			 றிறந்திடு முயிர்கள் பிறந்திடா விடமொன் றெம்பிரா னிருந்தவீ 
				ரிடமே. 
    			 
    			  | 
				 92  | 
			
			
				| 
				 239
    			
    			  | 
				 தோற்றுயிர்க் குணவு 
				நல்குமோர் தெற்றி சொற்றவை யுதவுமோர் தெற்றி,  தேற்றுசொன் 
				மூகர்க் களிக்குமோர் தெற்றி தெற்றிமூன் றிவைநக ரெல்லை,  
				ஈற்றினிற் கீழபா லளக்கருந் தென்பா லியற்பெரும் பெண்ணைநன் னதியும்,  
				மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்புநான் கரணே.
    			
    			  | 
				 93  | 
			
			
				| 
				 240
    			
    			  | 
				 மறைகளி னுருவாய்ப் 
				பொன்மலர் தனிமா மலரொடு காயிலா தென்றுஞ், 
      			 செறிதரு பலங்க ளுதவிநுங் கினர்க்குச் சித்திகள் வழங்குறு 
				மெகினம், 
      			 வெறிமலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை நோக்குமோ ரத்தி, 
      			 நறுநிழல் பிரிய திருந்ததோர் காஞ்சி நன்னகர் தன்னில்ஐந் தருவே. 
    			 
    			  | 
				 94  | 
			
			
				| 
				 241
    			
    			  | 
				 உம்பரூண் பகிருஞ் 
				சாதக மணிக ளுதவிடு மன்ன நூலுரைத்துக், 
      			 மொம்புறு கிளைளை யலகுசொல் லாந்தை குறைபெறிற் கூவுறாக் கோழி, 
				 இம்பரிற் பாவந் துடைத்திடு நேமி இவையறு புள்ளெழு நதிதான்,  
				கம்பைநற் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சிபொன் மண்ணிவெ�காவே.
    			
    			  | 
				 95  | 
			
			
				| 
				 242
    			
    			  | 
				 குரைபுனல் வேட்டோர்க் 
				குதவியே திரியுங் கூவலம் பொதுக்குறு முயல்போய்க்,  கரிதொடர் 
				பொதுவே ழிசையுறு பொதுமால் கண்டுயின் றிடுபொது வேறோர்,  
				உருவுசெய் பொதுவோர் புற்றின்மா முழவ மொலித்திடும் பொதுத்திசை 
				மயக்கம்,  புரிதரு பொதுவென் னம்மைநோற் றருளும் பொற்பொது விவைகள் 
				எண்பொதுவே. 
    			 
    			  | 
				 96  | 
			
			
				| 
				 243
    			
    			  | 
				 முன்னுறு பிணிகள் 
				மாற்றிடும் பொய்கை முதல்வர்கள் முடிவுறுங் காலைச்,  செந்நிற 
				மாகும் பொய்கைமுக் காலந் தெரித்திடும் பொய்கைகண் ணுதலோன்,  
				தன்னடி காட்டும் பொய்கைவேண்டியது தந்திடும் பொய்கைமெய்ஞ் ஞானம், 
      			 பொன்னிறஞ் செல்வம் வசீகரந் தருநாற் பொய்கையோ டொன்பதாம் பொய்கை. 
    			 
    			  | 
				 97  | 
			
			
				| 
				 244
    			
    			  | 
				 விடந்தனை யகற்று 
				மொருகலா ருயிர்கள் மெய்ப்பிணி மாற்றிடு பொருகல்,  அடைந்தவ 
				ரெல்லா மிமையவ ராக வளித்திடு மொருகல்வெம் படையால், 
       தடிந்திட வேறாய்த் துணிபடு முடலஞ் சந்துசெய் வித்திடு மொருகல், 
       நெடும்படை வரினு மவையிரிந் தோட நிலைபெறீஇ நிற்குமாங் கொருகல். 
    			 
    			  | 
				 98  | 
			
			
				| 
				 245
    			
    			  | 
				 துஞ்சினர் தம்மை 
				யெழுப்புமாங் கொருகல் தொல்வழக் கறுத்திடு மொருகல்,  எஞ்சலி 
				னிதியங் கெடுத்துளோர் வினவி லீனெக் காட்டிடு மொருகல், 
      			 விஞ்சிய வினைக டீர்த்திடு மொருகல் வேந்தருக் கரசிய லுதவித், 
				 தஞ்சம தாக நின்றிடு மொருகல் தக்ககல் லையிரண் டவையே. 
    			 
    			  | 
				 99  | 
			
			
				| 
				 246
    			
    			  | 
				 அயன்மனைச் சென்றோர் 
				கணவரைப் பிழைத்தோர் அடிகளை யிகழ்ந்துளோர் அணுகில்,  துயருறு 
				மூகை யாக்குமோர் மன்றஞ் சோரர்முன் சுழலுமோர் மன்றம், 
      			 வியனிறம் பலவாத் தோன்றுமோர் மன்றம் விஞ்சைகள் வழங்குமோர் 
				மன்றம், 
      			 மயல்பரி கின்ற பொழுதொடு திசையின் மயக்கறத் தெளிக்குமோர் 
				மன்றம்.
    			
    			  | 
				 100  | 
			
			
				| 
				 247
    			
    			  | 
				 நாகரூ ருய்க்கும் 
				பிலத்ததோர் மன்றம் நவமணி யுதவுமோர் மன்றம், 
      			 மாகர்பே ரமிர்த மிருக்குமோர் மன்றம் வடிவினை மறைப்பதோர் 
				மன்றம், 
      			 மேகநின் றறாது பொழியுமோர் மன்றம் வியன்பகல் கங்குலாக் கங்குல், 
				 ஆகிய பகலா விருப்பதோர் மன்றம் ஐயிரண் டொன்றுமன் றவையே. 
    			 
    			  | 
				 101  | 
			
			
				| 
				 248
    			
    			  | 
				 ஈங்கிவை யன்றிச் 
				சிலைகளுந் தருவு மிடங்களுங் கூவலும் நதியும், 
      			 பாங்குறு குளனுந் தீர்த்தமும் பிலமும் பழனமுஞ் சோலையும் 
				பிறவும், 
      			 ஆங்கவை யனந்த கோடியுண் டோரொன் றளவில்அற் புதத்தன அவற்றைப்,  
				பூங்கம லத்தோன் சுருக்கற விரித்துப் புகலினு முலப்புற வற்றோ. 
    			 
    			  | 
				 102  | 
			
			
				| 
				 249
    			
    			  | 
				 தோட்டலர் வனசத் 
				திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வங்கிக், 
      			 கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் 
				குணர்ந்து, 
      			 மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த, 
      			 பாட்டினில் அங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமயனுக் 
				கெளிதோ.
    			
    			  | 
				 103  | 
			
			
				| 
				 250
    			
    			  | 
				 வேறு சொற்படு மினைய 
				காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண் கற்புறு மிமைய வல்லி கருணையால் 
				வைகி நோற்கும் பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில் 
				எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே. 
    			 
    			  | 
				 104  | 
			
			
				| 
				 251
    			
    			  | 
				 ஆவதோர் குமர கோட்ட 
				மதனிடை யரன்கண் வந்து தூவுடை யெ�க மொன்றாற் சூர்முத றொலையச் 
				செற்றுத் தேவர்வெஞ் சிறையை மாற்றிச் சேண்மக பதிக்கு நல்கி 
				மேவிய குமர மூர்த்தி வியத்தக வுறையும் மாதோ.
    			
    			  | 
				 105  | 
			
			
				| 
				 252
    			
    			  | 
				 மேவருங் கூடல் மேலை 
				வெற்பினில் அலைவாய் தன்னில் ஆவினன் குடியி னல்லே ரகந்தனிற் 
				றணிகை யாதிப்  பூவுல குள்ள வெற்பிற் பொற்புறும் ஏனை வைப்பிற் 
				கோவில்கொண் டருளி வைகுங் குமரகோட் டத்து மேயோன். 
    			 
    			  | 
				 106  | 
			
			
				| 
				 253
    			
    			  | 
				 வச்சிர மெடுத்த 
				செம்மல் வைகிய துரக்கந் தன்னில் அச்சுதன் பதத்துக் கப்பா லானதன் 
				பதத்தில் விண்ணோர் மெச்சுறு கந்த வெற்பில் வீற்றிருந் தருளு 
				மாபோல் கச்சியிற் குமர கோட்டங் காதலித் தமருங் கந்தன்.
    			
    			  | 
				 107  | 
			
			
				| 
				 254
    			
    			  | 
				 ஈண்டுள தரணி முற்று 
				மெல்லைதீர் வான வைப்பும் ஆண்டகை மகவான் சீரு மம்புயன் முதலோர் 
				வாழ்வும் மாண்டிடல் பிறந்த லின்றி மன்னிய வீடும் போற்றி 
				வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும்.
    			
    			  | 
				 108  | 
			
			
				| 
				 255
    			
    			  | 
				 கொண்டலை யளக்கு 
				நொச்சிக் குமரகோட் டத்துச் செவ்வேள் கண்டிகை வடமுந் தூநீர்க் 
				கரகமுங் கரத்தி லேந்திப் பண்டையி லயனை மாற்றிப் படைத்தருள் 
				வேடந் தாங்கி அண்டர்க ளெவரும் போற்ற வருள்புரிந் தமர்ந்தா 
				னன்றே.
    			
    			  | 
				 109  | 
			
			
				| 
				 256
    			
    			  | 
				 ஆயதோர் காஞ்சி மூதூ 
				ரதனிடை யம்பு யத்தின் மேயவன் றனது புந்தி விமலமாம் பொருட்டான் 
				மேனாள் மாயவன் கமட மாகி வழிபடு தலத்தின்* முக்கண் நாயகன் 
				றனையர்ச் சித்து நாமக ளுடனாங் குற்றான்.  ( * மாயவன் கமடமாகி 
				வழிபடுதலம் - கச்சபாலயம். )
    			
    			  | 
				 110  | 
			
			
				| 
				 257
    			
    			  | 
				 உற்றிடு கின்ற நாளி 
				லுலகிலில் லறத்தை யாற்றி நற்றவம் பலவும் போற்றி நண்ணிய முனிவ 
				ரேல்லாம் மற்றவ ணேகிக் கஞ்ச மலர்மிசை யிருந்த வையன் பொற்றிரு 
				வடியைத் தாழ்ந்து போற்றினர் புல லுற்றார்.
    			
    			  | 
				 111  | 
			
			
				| 
				 258
    			
    			  | 
				 அத்தகே ளிந்நாள் 
				காறும் அடியமில் லறத்தை யாற்றி** அத்தல நகர மெங்கு மிருந்தன 
				மினிமேல் நாங்கள் சித்தம தொருங்க நோற்றுச் செய்கட னியற்றி வைக 
				மெய்த்தவ வனம தொன்றை விளம்பியே விடுத்தி யென்றார்.  ( ** 
				இல்லறத்தை ஆற்றல் - தென்புலத்தார் தெய்வம், விருந்து, சுற்றம் 
				முதலியோரை உபசரித்தல். )
    			
    			  | 
				 112  | 
			
			
				| 
				 259
    			
    			  | 
				 என்றலுந் தருப்பை 
				யொன்றை யேழுல களித்தோன் வாங்கி ஒன்றொரு திகிரி யாக்கி யொய்யென 
				வுருட்டிப் பாரில் இன்றிதன் பின்ன ராகி யெல்லிரு மேகி யீது 
				நின்றிடும் வனத்தி னூடே நிலைப்பட விருத்தி ரென்றான்.
    			
    			  | 
				 113  | 
			
			
				| 
				 260
    			
    			  | 
				 திருப்பது மத்து 
				வள்ளல் சேவடிக் கமலந் தாழா விருப்பொடு விடைகொண் டேக விரைவினி 
				லன்னான் விட்ட தருப்பையின் நேமி சென்றோர் தனிவனத் திறுத்த 
				லோடும் இருப்பிட மெமக்கீ தென்னா இருந்தவ ரிருந்தா ரங்ஙன்.
    			
    			  | 
				 114  | 
			
			
				| 
				 261
    			
    			  | 
				 தாமரை யண்ண லுய்த்த 
				தருப்பையின் நேமி தன்னால் நாமம தொன்று பெற்ற நைமிசா ரணியம் 
				வைகுந் தூமுனி வரர்க ளெல்லாஞ் சொல்லருந் தவத்தை யாற்றி மாமறை 
				நெறியி னின்று மகமொன்று புரித லுற்றார். 
    			 
    			  | 
				 115  | 
			
			
				| 
				 262
    			
    			  | 
				 அகனமர் புலனோர் 
				நான்கு மான்றமை பொருட்டா லாங்கோர் மகவினை செய்து முற்றி வாலிதா 
				முணர்ச்சி யெய்தி இகலறு முளத்த ராகி யிருந்தன ரிதனை நாடிச் 
				சுகனென வுணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான். 
    			 
    			  | 
				 116  | 
			
			
				| 
				 263
    			
    			  | 
				 முழுதுணர் சூதன் 
				றன்னை முனிவரர் கண்டு நேர்போய்த் தொழுதனர் பெரியோய் எம்பாற் 
				றுன்னலா லின்ன வைகல் விழுமிது சிறந்த தென்னா வியத்தகு முகமன் 
				கூறித் தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெருஞ் சாலை யுய்த்தார்.
    			
    			  | 
				 117  | 
			
			
				| 
				 264
    			
    			  | 
				 திருக்கிளர் பீட 
				மொன்று திகழ்தர நடுவ ணிட்டுச் 
				 சுருக்கமில் கேள்வி சான்ற சூதனை யிருத்தி யாங்கே அருக்கிய 
				முதல நல்கி யவனது பாங்க ராகப் பொருக்கென யாரும் வைகி யி�தொன்று 
				புகல லுற்றார்.
    			
    			  | 
				 118  | 
			
			
				| 
				 265
    			
    			  | 
				 முந்தொரு ஞான்று 
				தன்னில் முளரியந் தேவன் சொல்லால் வந்திவ ணிருந்தே மாக மற்றியாம் 
				புரிந்த நோன்பு தந்தது நின்னை யற்றாற் றவப்பயன் யாங்கள் 
				பெற்றேஞ் சிந்தையி னுவகை பூத்தேஞ் சிறந்ததிப் பிறவி யென்றார்.
    			
    			  | 
				 119  | 
			
			
				| 
				 266
    			
    			  | 
				 அன்னது சூதன் கேளா 
				ஆதியம் பரனை யேத்தி மன்னிய வேள்வி யாற்றி வாலறி வதனை யெய்தித் 
				துன்னிய முனிவிர் காணுந் தொல்குழு வடைத லன்றோ என்னிக ராயி 
				னோருக் கிம்மையிற் பெறும்மே றென்றான்.
    			
    			  | 
				 120  | 
			
			
				| 
				 267
    			
    			  | 
				 அவ்வழி முனிவர் 
				சொல்வார் அருமறை கண்ட வண்ணல் செவ்விய மாணாக் கர்க்குட் 
				சிறந்துளோய் திரற்சூ ராவி வவ்விய நெடுவே லண்ணல் மாண்கதை 
				தேர்வான் பன்னாள் இவ்வொரு நசைகொண் டுள்ளே மியம்புதி யெமக்க 
				தென்றார்.
    			
    			  | 
				 121  | 
			
			
				| 
				 268
    			
    			  | 
				 அம்மொழி சூதன் கேளா 
				அழல்படு மெழுகே யென்னக் கொம்மென வுருக வுள்ளங் குதூகலித் தவச 
				மாகி மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை யரும்ப வாசான் 
				பொய்ம்மையில்படிவ முன்னித் தொழுதிவை புகலலுற்றான்.
    			
    			  | 
				 122  | 
			
			
				| 
				 269
    			
    			  | 
				 மன்னவன் மதலை யாசான் 
				மாமகன் றனது மைந்தன் பன்னுசொற் கொள்வோன் ஈவோன் வழிபடு பண்பின் 
				மிக்கோன் என்னுமிங் கிவருக் கீவ தேனைநூல் உங்கள் போலச் 
				செந்நெறி யொழுகு வார்க்கே செப்புவன் புராணம் முற்றும்.
    			
    			  | 
				 123  | 
			
			
				| 
				 270
    			
    			  | 
				 தனைநிகர் பிறரின் றாய 
				சண்முகற் கன்பு சான்ற முனிவிர்காள் உரைப்போர் கேட்போர் 
				முத்திசேர் காந்தத் துண்மை வினவினீ ரதனை யின்னே விளம்புவன் 
				புலன்வே றின்றி இனிதுகேண் மிக ளென்னா எடுத்திவை இயம்ப லுற்றான்.
    			
    			  | 
				 124  |