| 
				 1052
    			
    			  | 
				 அனந்தரம தாகஉமை 
				யம்மையொடு பெம்மான் நனந்தலையில் வைகிய நலங்கொள்கும ரேசன் 
				இனங்கொடு தொடர்ந்தஇளை யாரொடு மெழுந்தே மனங்கொளருள் நீர்மைதனின் 
				ஆடலை மதித்தான்.
    			
    			  | 
				 1  | 
			
			
				| 
				 1053
    			
    			  | 
				 தட்டைஞெகி ழங்கழல் 
				சதங்கைகள் சிலம்பக் கட்டழகு மேயஅரை ஞாண்மணி கறங்க வட்டமணி 
				குண்டல மதாணிநுதல் வீர பட்டிகைமி னக்குமரன் ஆடல்பயில் கின்றான். 
    			 
    			  | 
				 2  | 
			
			
				| 
				 1054
    			
    			  | 
				 மன்றுதொறு லாவுமலர் 
				வாவிதொ றுலாவுந் துன்றுசிறு தென்றல்தவழ் சோலைதொ றுலாவும் 
				என்றுமுல வாதுலவும் யாறுதொ றுலாவுங் குன்றுதொறு லாவுமுறை 
				யுங்குமர வேளே.
    			
    			  | 
				 3  | 
			
			
				| 
				 1055
    			
    			  | 
				 குளத்தினுல வும்நதி 
				குறைந்திடு துருத்திக் களத்தினுல வும்நிரைகொள் கந்துடை 
				நிலைத்தாந் தளத்தினுல வும்பனவர் சாலையுல வும்மென் னுளத்தினுல 
				வும்சிவன் உமைக்கினைய மைந்தன். 
    			 
    			  | 
				 4  | 
			
			
				| 
				 1056
    			
    			  | 
				 இந்துமுடி முன்னவன் 
				இடந்தொறு முலாவும் தந்தையுடன் யாயமர் தலங்களி னுலாவும் 
				கந்தமலர் நீபமுறை கண்டொறு முலாவும் செந்தமிழ் வடாதுகலை 
				சேர்ந்துழி யுலாவும். 
    			 
    			  | 
				 5  | 
			
			
				| 
				 1057
    			
    			  | 
				 மண்ணிடை யுலாவும்நெடு 
				மாதிர முலாவும் எண்ணிடை யுறாதகடல் எங்கணு முலாவும் விண்ணிடை 
				யுலாவும்மதி வெய்யவன் உடுக்கோள் கண்ணிடை யுலாவும்இறை கண்ணில்வரு 
				மண்ணல். 
    			 
    			  | 
				 6  | 
			
			
				| 
				 1058
    			
    			  | 
				 கந்தருவர் சித்தர்கரு 
				டத்தொகைய ரேனோர் தந்தமுல காதிய தலந்தொறு முலாவும் இந்திரன் 
				இருந்ததொல் லிடந்தனில் உலாவும் உந்துதவர் வைகுமுல கந்தொறு 
				முலாவும். 
    			 
    			  | 
				 7  | 
			
			
				| 
				 1059
    			
    			  | 
				 அங்கமல நான்முகன் 
				அரும்பத முலாவும் மங்கலம் நிறைந்ததிரு மால்பத முலாவும் 
				எங்கள் பெருமாட்டிதன் இரும்பத முலாவும் திங்கள்முடி மேற்புனை 
				சிவன்பத முலாவும். 
    			 
    			  | 
				 8  | 
			
			
				| 
				 1060
    			
    			  | 
				 இப்புவியில் அண்டநிரை 
				யெங்கணு முலாவும் அப்புவழ லூதைவௌ� அண்டமு முலாவும் 
				ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவுஞ் செப்பரிய ஒர்பரசி 
				வன்றனது மைந்தன்.
    			
    			  | 
				 9  | 
			
			
				| 
				 1061
    			
    			  | 
				 வேறு இருமூவகை 
				வதனத்தொடும் இளையோனெனத் திரியும் ஒருமாமுக னொடுசென்றிடும் 
				உயர்காளையி னுலவும் பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந் 
				தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள். 
    			 
    			  | 
				 10  | 
			
			
				| 
				 1062
    			
    			  | 
				 காலிற்செலும் 
				பரியிற்செலும் கரியிற்செலும் கடுந்தேர் மேலிற்செலும் 
				தனியாளியின் மிசையிற்செலும் தகரின் பாலிற்செலும் மானத்திடை 
				பரிவிற்செலும் விண்ணின் மாலிற்செலும் பொருசூரொடு மலையச்செலும் 
				வலியோன். 
    			 
    			  | 
				 11  | 
			
			
				| 
				 1063
    			
    			  | 
				 பாடின்படு 
				பணியார்த்திடும் பணைமென்குழல் இசைக்கும் கோடங்கொலி 
				புரிவித்திடும் குரல்வீணைகள் பயிலும் ஈடொன்றிய சிறுபல்லிய 
				மெறியும்மெவ ரெவரும் நாடும்படி பாடுங்களி நடனஞ்செயும் முருகன். 
    			 
    			  | 
				 12  | 
			
			
				| 
				 1064
    			
    			  | 
				 இன்னேபல வுருவங்கொடி 
				யாண்டுங்கும ரேசன் நன்னேயமொ டாடுற்றுழி நனிநாடினள் வியவா 
				முன்னேயுல கினையீன்ளவள் முடிவின்றுறை முதல்வன் பொன்னேர்கழ 
				விணைதாழ்ந்தனள் போற்றிப்புகல் கின்றாள்.
    			
    			  | 
				 13  | 
			
			
				| 
				 1065
    			
    			  | 
				 கூடுற்றநங குமரன்சிறு 
				குழவிப்பரு வத்தே ஆடற்றொழி லெனக்கற்புத மாகும்மவன் போல்வார் 
				நேடிற்பிற ரிலைமாயையின் நினைநேர்தரு மனையான் பீடுற்றிடு 
				நெறிதன்னையெம் பெருமான்மொழி கென்றாள். 
    			 
    			  | 
				 14  | 
			
			
				| 
				 1066
    			
    			  | 
				 அல்லார்குழ லவள் 
				இன்னணம் அறியர்களின் வினவ ஒல்லார்புர மடுகண்ணுதல் உன்றன்மகன் 
				இயல்பை எல்லாவுயிர் களுமுய்ந்திட எமைநீகட வினையால் 
				நல்லாய்இது கேண்மோவென அருளாலிவை நவில்வான்.
    			
    			  | 
				 15  | 
			
			
				| 
				 1067
    			
    			  | 
				 வேறு ஈங்கனம் நமது 
				கண்ணின் எய்திய குமரன் கங்கை தாங்கினள் கொண்டு சென்று சரவணத் 
				திடுத லாலே காங்கெயன் எனப்பேர் பெற்றான் காமர்பூஞ் சரவ ணத்தின் 
				பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான். 
    			 
    			  | 
				 16  | 
			
			
				| 
				 1068
    			
    			  | 
				 தாயென ஆரல் போந்து 
				தனங்கொள்பால் அருத்த லாலே ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு 
				தொல்பேர் பெற்றான் சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீ யொன்றாச் 
				செய்தாய் ஆயத னாலே கந்த னாமெனு நாமம் பெற்றான். 
    			 
    			  | 
				 17  | 
			
			
				| 
				 1069
    			
    			  | 
				 நன்முகம் இருமூன் 
				றுண்டால் நமக்கவை தாமே கந்தன் தன்முக மாகியுற்ற; தாரகப் பிரம 
				மாகி முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்றாய் 
				உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே. 
    			 
    			  | 
				 18  | 
			
			
				| 
				 1070
    			
    			  | 
				 ஆதலின் நமது சத்தி 
				அறுமுகன் அவனும் யாமும் பேதக மன்றால் நம்போற் பிரிவிலன் 
				யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் 
				சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். 
    			 
    			  | 
				 19  | 
			
			
				| 
				 1071
    			
    			  | 
				 மேலினி யனைய செவ்வேள் 
				விரிஞ்சனைச் சுருதிக் கெல்லாம் மூலம தாகி நின்ற மொழிப்பொருள் 
				வினவி அன்னான் மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே 
				ஞாலமன் னுயிரை யெலலா நல்கியே நண்ணும் பன்னாள்.
    			
    			  | 
				 20  | 
			
			
				| 
				 1072
    			
    			  | 
				 தாரகன் றன்னைச் சீயத் 
				தடம்பெரு முகத்தி னானைச் சூரபன் மாவை ஏனை யவுணரைத் தொலைவு 
				செய்தே ஆரணன் மகவான் ஏனை யமரர்கள் இடுக்கண் நீக்கிப் பேரருள் 
				புரிவன் நின்சேய் பின்னர்நீ காண்டி யென்றான். 
    			 
    			  | 
				 21  | 
			
			
				| 
				 1073
    			
    			  | 
				 என்றலும் இளையோன் 
				செய்கை எம்பெரு மாட்டி கோள நன்றென மகிழ்ச்சி கொண்டு நணுகலும் 
				உலக மெல்லாஞ் சென்றரு ளாடல் செய்யுந் திருத்தகு குமரன் பின்னர் 
				ஒன்றொரு விளையாட் டுள்ளத் துன்னியே புரித லுற்றான்.
    			
    			  | 
				 22  | 
			
			
				| 
				 1074
    			
    			  | 
				 குலகிரி யனைத்து 
				மோர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த் தலைதடு மாற்ற மாகத் 
				தரையிடை நிறுவும் எல்லா அலைகடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி 
				வெற்பைப் பிலனுற அழுத்துங் கங்கைப் பெருநதி யடைக்கு மன்னோ.
    			
    			  | 
				 23  | 
			
			
				| 
				 1075
    			
    			  | 
				 இருள்கெழு பிலத்துள் 
				வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப் பொருள்கெழு மேரு வாதி 
				அடுக்கலிற் பூட்டி வீக்கி அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் 
				றாக உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும். 
    			 
    			  | 
				 24  | 
			
			
				| 
				 1076
    			
    			  | 
				 ஆசையங் கரிகள் தம்மை 
				அங்கைகொண் டொன்றோ டொன்று பூசல்செய் விக்கும் வானிற் போந்திடுங் 
				கங்கை நீரால் காய்சின வடவை மாற்றுங் கவின்சிறைக் கலுழ னோடு 
				வாசுகி தன்னைப் பற்றி மாறிகல் விளைக்கு மன்றே. 
    			 
    			  | 
				 25  | 
			
			
				| 
				 1077
    			
    			  | 
				 பாதல நிலயத்துள்ள 
				புயங்கரைப் படியிற் சேர்த்திப் பூதல நேமி யெல்லாம் புகுந்திடப் 
				பிலத்தி னுய்க்கும் ஆதவ முதல்வன் றன்னை அவிர்மதிப் பதத்தி 
				லோச்சுஞ் சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும்.
    			
    			  | 
				 26  | 
			
			
				| 
				 1078
    			
    			  | 
				 எண்டிசை புரந்த தேவர் 
				இருந்ததொல் பதங்க ளெல்லாம் பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் 
				பிறழ வைக்குங் கொண்டலி னிருந்த மின்னின் குழுவுடன் உருமுப பற்றி 
				வண்டின முறாத செந்தண் மாலைசெய் தணியு மன்றே. 
    			 
    			  | 
				 27  | 
			
			
				| 
				 1079
    			
    			  | 
				 வெய்யவர் மதிகோள் 
				ஏனோர் விண்படர் விமானந் தேர்கள் மொய்யுறப் பிணித்த பாசம் 
				முழுவதுந் துருவ னென்போன் கையுறு மவற்றில் வேண்டுங் கயிற்றினை 
				இடைக்கண் ஈர்ந்து வையகந் திசைமீச் செல்ல வானியில் விடுக்கு 
				மைந்தன்.
    			
    			  | 
				 28  | 
			
			
				| 
				 1080
    			
    			  | 
				 வடுத்தவிர் 
				விசும்பிற் செல்லும் வார்சிலை யிரண்டும் பற்றி 
      			 உடுத்திரள் பலகோ ளின்ன உண்டையாக் கொண்டு வானோர் முடித்தலை 
				யுரந்தோள் கண்ட முகம்படக் குறியா வெய்தே அடற்றனு விஞ்சை 
				காட்டும் ஆறிரு தடந்தோள் அண்ணல். 
    			 
    			  | 
				 29  | 
			
			
				| 
				 1081
    			
    			  | 
				 இத்திறம் உலகந் 
				தன்னில் இம்பரோ டும்பர் அஞ்சிச் சித்தமெய் தளர்த லன்றிச் 
				சிதைவுறா வகைமை தேர்ந்து வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு 
				புரிந்தான் ஆவி முத்தர்தம் விழியின் அன்றி முன்னுறா நிமல 
				மூர்த்தி. 
    			 
    			  | 
				 30  | 
			
			
				| 
				 1082
    			
    			  | 
				 அயது காலை ஞாலத் 
				தவுணர்கள் அதனை நோக்கி ஏயிது செய்தார் யாரே யென்றுவிம் மிதராய் 
				எங்கள் நாயகன் வடிவந் தன்னை நனிபெரும் பவத்துட் டங்குந் தீயவ 
				ராத லாலே கண்டிலர் தியக்க முற்றார். 
    			 
    			  | 
				 31  | 
			
			
				| 
				 1083
    			
    			  | 
				 சிலபகல் பின்னும் 
				வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டே உலகினில் அவுணர் யாரும் 
				உறைதலின் அவர்க்குத் தன்மெய் நிலைமைகாட் டாது செவ்வேள் 
				நிலாவலும் நேடி யன்னோர் மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய 
				தென்றார்.
    			
    			  | 
				 32  | 
			
			
				| 
				 1084
    			
    			  | 
				 ஆயதோர் குமரன் செய்கை 
				அவனியின் மாக்கள் காணாத் தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண 
				ரெல்லாம் மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாக மேயின 
				விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார். 
    			 
    			  | 
				 33  | 
			
			
				| 
				 1085
    			
    			  | 
				 புவனியின் மாக்க 
				ளின்ன புகறலுந் திசைகாப் பாளர் தவனனே மதிய மேனோர் சண்முகன் 
				செய்கை நாடி அவனுரு வதனைக் காணார் அவுணர்தம் வினையு மன்றால் 
				எவரிது செய்தார் கொல்லென் றிரங்கினர் யாருங் கூடி. 
    			 
    			  | 
				 34  | 
			
			
				| 
				 1086
    			
    			  | 
				 தேருறு மனைய தேவர் 
				தேவர்கோன் சிலவ ரோடு மேருவி லிருந்தான் போலும் வேதனும் அங்கண் 
				வைகும் ஆருமங் கவர்பா லேகி அறைகுது மென்று தேறிச் சூரர்கோன் 
				றனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்த லுற்றார்.
    			
    			  | 
				 35  | 
			
			
				| 
				 1087
    			
    			  | 
				 வடவரை யும்பர் 
				தன்னில் வானவ ரானோ ரேகி அடைதரு கின்ற காலை ஆறுமா முகங்கொண் 
				டுள்ள கடவுள்செய் யாடல் நோக்கி அவனுருக் காணா னாகி இடருறு 
				மனத்தி னோடும் இருந்தஇந் திரனைக் கண்டார்.
    			
    			  | 
				 36  | 
			
			
				| 
				 1088
    			
    			  | 
				 அரிதிரு முன்ன ரெய்தி 
				அடிதொழு தங்கண் வைகி விரிகட லுலகின் வானின் மேஹவதொன் னிலைமை 
				யாவுந் திரிபுற வெவரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது 
				புரிகலர் அவுணர் போலும் புகுந்தஇப் புணர்ப்பென் னென்றார். 
    			 
    			  | 
				 37  | 
			
			
				| 
				 1089
    			
    			  | 
				 வானவர் இறைவன் 
				அன்னோர் மாற்றமங் கதனைக் கேளா யானுமிப் பரிசு நாடி யிருந்தனன் 
				இறையுந் தேரேன் ஆனதை யுணர வேண்டின் அனைவரு மேகி அம்பொன் 
				மேனிகொள் கமலத் தோனை வினவுதும் எழுதி ரென்றான். 
    			 
    			  | 
				 38  | 
			
			
				| 
				 1090
    			
    			  | 
				 எழுதிரென் றுரைத்த 
				லோடும் இந்திரன் முதலா வுள்ளோர் விழியிடைத் தெரிய அன்னோர் 
				மெய்த்தவம் புரிந்த நீரால் அழிவற வுலகி லாடும் அறுமுகன் வதன 
				மொன்றில் குழவிய தென்ன அன்ன குன்றிடைத் தோன்றி னானால். 
    			 
    			  | 
				 39  | 
			
			
				| 
				 1091
    			
    			  | 
				 வாட்டமொ டமரர் கொண்ட 
				மயக்கறத் தனாது செய்கை காட்டிய வந்தோன் மேருக் கனவரை யசைத்துக் 
				கஞ்சத் தோட்டிதழ் கொய்து சிந்துந் துணையென உயர்ந்த செம்பொற் 
				கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவி யேபோல்.
    			
    			  | 
				 40  | 
			
			
				| 
				 1092
    			
    			  | 
				 தோன்றிய குமரன் 
				றன்னைச் சுரபதி சுரரா யுள்ளோர் ஆன்றதோர் திசைகாப் பாளர் 
				அனைவருந் தெரிகுற் றன்னோ வான்தரை திரிபு செய்தோன் மற்றிவ னாகு 
				மென்னாக் கான்திரி அரியை நேரும் விலங்கெனக் கலங்கிச் சொல்வார்.
    			
    			  | 
				 41  | 
			
			
				| 
				 1093
    			
    			  | 
				 வேறு நொய்தாங் 
				குழவி யெனக்கொள்கிலம் நோன்மை நாடின் வெய்தாம் அவுணக் 
				குழுவோரினும் வெய்யன் யாரும் எய்தாத மாயம் உளனால்இவன் றன்னை 
				வெம்போர் செய்தால் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார். 
    			 
    			  | 
				 42  | 
			
			
				| 
				 1094
    			
    			  | 
				 சூழுற்ற வெல்லை 
				இமையோர்க்கிறை தொல்லை நாளில் காழுற்ற தந்தம் அறவேகிவெண் 
				காட்டில் ஈசன் கேழுற்ற தாள்அர்ச் சனைசெய்து கிடைத்து வைகும் 
				வேழத்தை உன்ன அதுவந்தது மேரு வின்பால். 
    			 
    			  | 
				 43  | 
			
			
				| 
				 1095
    			
    			  | 
				 தந்தங்கள் பெற்று 
				வருகின்ற தனிக்க ளிற்றின் கந்தந் தனில்போந் தடல்வச்சிரங் காமர் 
				ஔ�வாள் குந்தஞ் சிலைகொண் டிகல்வெஞ்சமர்க் கோல மெய்தி மைந்தன் 
				றனைவா னவரோடும் வளைந்து கொண்டான்.
    			
    			  | 
				 44  | 
			
			
				| 
				 1096
    			
    			  | 
				 வன்னிச் சுடர்கால 
				விசையோடு மரீஇய பாங்கிற் பன்னற் படுகுன் றவைசூழ்தரு பான்மை 
				யேபோல் உன்னற் கரிய குமரேசனை உம்பர் கோனும் இன்னற் படுவா 
				னவரும்மிகல் செய்ய வுற்றார். 
    			 
    			  | 
				 45  | 
			
			
				| 
				 1097
    			
    			  | 
				 தண்ணார் கமலத் 
				துணைமாதரைத் தன்னி ரண்டு கண்ணா வுடைய உமையாள்தரு கந்தன் வானோர் 
				நண்ணா ரெனச்சூழ் வதுநோக்கி நகைத்தி யாதும் எண்ணாது முன்போல் 
				தனதாடல் இழைத்த வேலை. 
    			 
    			  | 
				 46  | 
			
			
				| 
				 1098
    			
    			  | 
				 எட்டே யொருபான் 
				படைதம்முள் எறிவ வெல்லாந் தொட்டே கடவுட் படைதன்னொடுந் தூர்த்த 
				லோடும் மட்டேறு போதிற் கடுகின்றுழி வச்சி ரத்தை விட்டே 
				தெழித்தான் குமரன்மிசை வேள்வி வேந்தன். 
    			 
    			  | 
				 47  | 
			
			
				| 
				 1099
    			
    			  | 
				 வயிரத் தனிவெம் 
				படையெந்தைதன் மார்பு நண்ணி அயிரிற் றுகளாய் விளிவாக அதனை 
				நோக்கித் துயரத் தழுங்க இமையோரிறை தொல்லை வேழஞ் செயிருற் 
				றியம்பி முருகேசன்முன் சென்ற தன்றே. 
    			 
    			  | 
				 48  | 
			
			
				| 
				 1100
    			
    			  | 
				 செல்லுங் கரிகண் 
				டுமையாள்மகன் சிந்தை யாலோர் வில்லுங் கணைகள் பலவும் விரைவோடு 
				நல்கி ஒல்லென் றிடநா ணொலிசெய்துயர் சாபம் வாங்கி எல்லொன்று 
				கோலொன் றதன்நெற்றியுள் ஏக வுய்த்தான். 
    			 
    			  | 
				 49  | 
			
			
				| 
				 1101
    			
    			  | 
				 அக்கா லையில்வேள் 
				செலுத்துங்கணை அண்டர் தம்மின் மிக்கான் அயிரா வதநெற்றியுள் மேவி 
				வல்லே புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி வீழா மைக்கார் 
				முகில்அச் சுறவேயது மாண்ட தன்றே. 
    			 
    			  | 
				 50  | 
			
			
				| 
				 1102
    			
    			  | 
				 தன்னோர் களிறு 
				மடிவெய்தலுந் தான வேந்தன் அன்னோ வெனவே இரங்கா அயல்போகி நின்று 
				மின்னோ டுறழ்தன் சிலைதன்னைம வெகுண்டு வாங்க முன்னோன் மதலை 
				பொருகோலவன் மொய்ம்பி லெய்தான்.
    			
    			  | 
				 51  | 
			
			
				| 
				 1103
    			
    			  | 
				 கோலொன்று விண்ணோர்க் 
				கிறைமேல்கும ரேசன் உய்ப்ப மாலொன்று நெஞ்சன் வருந்திப்பெரு வன்மை 
				சிந்திக் காலொன்று சாபத் தொழில்நீத்தனன் கையி லுற்ற வேலொன் 
				றதனைக் கடிதேகுகன் மீது விட்டான்.
    			
    			  | 
				 52  | 
			
			
				| 
				 1104
    			
    			  | 
				 குந்தப் படையோர் 
				சிறுபுற்படு கொள்கை யேபோல் வந்துற் றிடஅற் புதமெய்தினர் மற்றை 
				வானோர் கந்தக் கடவுள் சிலையிற்கணை யொன்று பூட்டித் தந்திக் 
				கிறைவன் தடம்பொன்முடி தள்ளி ஆர்த்தான். 
    			 
    			  | 
				 53  | 
			
			
				| 
				 1105
    			
    			  | 
				 துவசந் தனையோர் 
				கணைகொண்டு துணித்து மார்பிற் கவசந் தனையோர் கணையால்துகள் கண்டு 
				விண்ணோன் அவசம் படஏழ் கணைதூண்டினன் ஆழி வேண்டிச் சிவசங் 
				கரஎன் றரிபோற்றிய செம்மல் மைந்தன்.
    			
    			  | 
				 54  | 
			
			
				| 
				 1106
    			
    			  | 
				 தீங்கா கியவோ 
				ரெழுவாளியுஞ் செல்ல மார்பின் ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி 
				வீழ்ந்தான் ஓங்கார மேலைப் பொருள்மைந்தனை உம்ப ரேனோர் 
				பாங்காய் வளைந்து பொருதார்படு கின்ற தோரார். 
    			 
    			  | 
				 55  | 
			
			
				| 
				 1107
    			
    			  | 
				 இவ்வா றமரர் 
				பொருமெல்லையில் ஈசன் மைந்தன் கைவார் சிலையைக் குனித்தேகணை 
				நான்கு தூண்டி மெய்வா ரிதிகட் கிறைவன்றனை வீட்டி மற்றும் 
       ஐவா ளியினால் சமன்ஆற்றல் அடக்கி னானால். 
    			 
    			  | 
				 56  | 
			
			
				| 
				 1108
    			
    			  | 
				 ஒரம் பதனால் 
				மதிதன்னையும் ஒன்றி ரண்டு  கூரம் பதனாற் கதிர்தன்னையும் கோதில் 
				மைந்தன் ஈரம் பதனால் அனிலத்தையும் மேவு மூன்றால் வீரம் 
				பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான். 
    			 
    			  | 
				 57  | 
			
			
				| 
				 1109
    			
    			  | 
				 நின்றார் எவருங் 
				குமரேசன் நிலைமை நோக்கி இன்றா ரையுமற் றிவனேயடு மென்று தேறி 
				ஒன்றான சிம்புள் விறல்கண்டரி யுட்கி யோடிச் சென்றா லெனவே 
				இரிந்தோடினர் சிந்தை விம்மி. 
    			 
    			  | 
				 58  | 
			
			
				| 
				 1110
    			
    			  | 
				 ஓடுஞ் சுரர்கள் 
				திறநோக்கி உதிக்கும் வெய்யோன் நீடுங் கதிர்கள் நிலவைத்துரக் 
				கின்ற தேபோல் ஆடுங் குமரன் அவரைத்துரந் தண்டர் முன்னர் 
				வீடுங் களத்தி னிடையேதனி மேவி நின்றான். 
    			 
    			  | 
				 59  | 
			
			
				| 
				 1111
    			
    			  | 
				 ஒல்லா தவரிற் 
				பொருதேசில உம்பர் வீழ நில்லா துடைந்து சிலதேவர்கள் நீங்க நேரில் 
				வில்லா ளியாகித் தனிநின்ற விசாகன் மேனாள் எல்லா ரையும்அட் 
				டுலவும்தனி ஈசன் ஒத்தான்.
    			
    			  | 
				 60  | 
			
			
				| 
				 1112
    			
    			  | 
				 வேறு சுரர்கள் 
				யாருந் தொலைந்திட வென்றுதான் ஒருவ னாகி உமைமகன் மேவுழி 
				அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான் குருவை யெய்திப் புகுந்தன 
				கூறினான். 
    			 
    			  | 
				 61  | 
			
			
				| 
				 1113
    			
    			  | 
				 நற்ற வம்புரி நாரதன் 
				கூற்றினை அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ இற்ற தேகொல் 
				இமையவர் வாழ்வெனாச் சொற்று வல்லை துயருழந் தேகினான்.
    			
    			  | 
				 62  | 
			
			
				| 
				 1114
    			
    			  | 
				 ஆத பன்மதி அண்டர் 
				தமக்கிறை மாதி ரத்தவர் மால்கரி தன்னுடன் சாதல் கொண்ட 
				சமர்க்களந் தன்னிடைப் போதல் மேயினன் பொன்னெனும் பேரினான். 
    			 
    			  | 
				 63  | 
			
			
				| 
				 1115
    			
    			  | 
				 ஆவி யின்றி அர் மறி 
				குற்றது தேவ ராசான் தெரிந்து படருறாத் தாவி லேர்கெழு 
				சண்முகன் அவ்விடை மேவி யாடும் வியப்பினை நோக்கினான்.
    			
    			  | 
				 64  | 
			
			
				| 
				 1116
    			
    			  | 
				 முழுது ணர்ந்திடு 
				மொய்சுடர்ப் பொன்னவன் எழுதொ ணாத எழில்நலந் தாங்கியோர் குழவி 
				தன்னுருக் கொண்ட குமரனைத் தொழுது நின்று துதித்திது சொல்லுவான். 
    			 
    			  | 
				 65  | 
			
			
				| 
				 1117
    			
    			  | 
				 வேறு கரியரி 
				முகத்தினன் கடிய சூரனென் றுரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும் 
				பருவரல் உழந்துதன் பதிவிட் டிப்பெரு வரையிடை மகபதி மறைந்து 
				வைகினான். 
    			 
    			  | 
				 66  | 
			
			
				| 
				 1118
    			
    			  | 
				 அன்னவன் நின்னடி 
				அடைந்து நிற்கொடே துன்னலர் தமதுயிர் தொலைத்துத் தொன்மைபோல் 
				தன்னர செய்தவுந் தலைவ னாகவும் உன்னினன் பிறிதுவே றொன்றும் 
				உன்னலான். 
    			 
    			  | 
				 67  | 
			
			
				| 
				 1119
    			
    			  | 
				 பற்பகல் அருந்தவம் 
				பயின்று வாடினன் தற்பர சரவணத் தடத்திற் போந்தவுன் உற்பவம் 
				நோக்கியே உவகை பூத்தனன் சொற்படு துயரெலாந் தொலைத்து ளானென. 
    			 
    			  | 
				 68  | 
			
			
				| 
				 1120
    			
    			  | 
				 கோடலும் மராத்தொடு 
				குரவுஞ் செச்சையுஞ் சூடிய குமரநின் றொழும்பு செய்திட 
				நேடுறும் இந்திரன் நீயித் தன்மையின் ஆடல்செய் திடுவரை அறிகி 
				லானரோ. 
    			 
    			  | 
				 69  | 
			
			
				| 
				 1121
    			
    			  | 
				 நாரணன் முதலினோர் 
				நாடிக் காணொணா ஆரண முதல்வனும் உமையும் அன்னவர் சீரரு 
				ளடைந்தனர் சிலரும் அல்லதை யாருன தாடலை அறியும் நீரினார். 
    			 
    			  | 
				 70  | 
			
			
				| 
				 1122
    			
    			  | 
				 பற்றிய தொடர்பையும் 
				உயிரை யும்பகுத் திற்றென வுணர்கிலம் ஏதந் தீர்கிலஞ் 
				சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமெலாம் உற்றுன தாடலை உணர வல்லமோ. 
    			 
    			  | 
				 71  | 
			
			
				| 
				 1123
    			
    			  | 
				 ஆதலால் வானவர்க் 
				கரசன் ஆற்றவும் ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத் தீதெனா 
				வுன்னிவெஞ் செருவி ழைத்தனன் நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை. 
    			 
    			  | 
				 72  | 
			
			
				| 
				 1124
    			
    			  | 
				 மற்றுள தேவரும் 
				மலைந்து தம்முயிர் அற்றனர் அவர்களும் அறிவி லாமையால் 
				பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச் செற்றிடின் எவரருள் 
				செய்யற் பாலினோர். 
    			 
    			  | 
				 73  | 
			
			
				| 
				 1125
    			
    			  | 
				 சின்மய மாகிய செம்மல் 
				சிம்புளாம் பொன்மலி சிறையுடைப் புள்ளின் நாயகன் வன்மைகொள் 
				விலங்கினை மாற்ற வல்லது மின்மினி தனையடல் விசய மாகுமோ.
    			
    			  | 
				 74  | 
			
			
				| 
				 1126
    			
    			  | 
				 ஒறுத்திடும் அவுணர்க 
				ளொழிய வேரொடும் அறுத்தருள் உணர்விலா அளியர் உன்னடி 
				மறுத்தலில் அன்பினர் மற்றின் னோர்பிழை பொறுத்தருள் கருணையாற் 
				புணரி போன்றுவாய். 
    			 
    			  | 
				 75  | 
			
			
				| 
				 1127
    			
    			  | 
				 பரமுற வணிகரைப் 
				பரித்துப் பல்வளந் தருகலங் கவிழ்ந்திடச் சாய்த்து மற்றவர்  
				ஒருதலை விளிதல்போல் உன்னிற் பெற்றிடுந்  திருவினர் பொருதுனைச் 
				செருவில் துஞ்சினார். 
    			 
    			  | 
				 76  | 
			
			
				| 
				 1128
    			
    			  | 
				 தொழுதகு நின்னடித் 
				தொண்ட ராற்றிய பிழையது கொள்ளலை பெரும சிந்தையுள் அழிதரு 
				மினையவர் அறிவு பெற்றிவண் எழுவகை யருளென இறைஞ்சிக் கூறினான். 
    			 
    			  | 
				 77  | 
			
			
				| 
				 1129
    			
    			  | 
				 பொன்னவன் இன்னன 
				புகன்று வேண்டிட முன்னவர் முன்னவன் முறுவல் செய்துவான் மன்னவ 
				னாதியர் மால்க ளிற்றொடும் அந்நிலை எழும்வகை அருள்செய் தானரோ. 
    			 
    			  | 
				 78  | 
			
			
				| 
				 1130
    			
    			  | 
				 வேறு அந்தியின் 
				வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே,  இந்திரனும் 
				மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச், 
       சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக், 
       கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும். 
    			 
    			  | 
				 79  | 
			
			
				| 
				 1131
    			
    			  | 
				 கலங்கினர் இரங்கினர் 
				கலுழ்ந்தனர் புலர்ந்தனர் கவன்ற னர்உளம், 
      			 மலங்கினர் விடந்தனை அயின்றவ ரெனும்படி மயர்ந்த னலிசேர்,  
				உலங்கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரந்த னையிழந்,  
				திலங்கெழில் முகம்பொலி விகந்தனர் பொருந்தமை யிகழ்ந்த னர்களே. 
    			 
    			  | 
				 80  | 
			
			
				| 
				 1132
    			
    			  | 
				 துஞ்சியெழும் 
				அன்னவர்கள் ஏழுலகு முன்னுதவு சுந்த ரிதரும், 
      			 மஞ்சனரு ளோடுவிளை யாடுவது காண்டலும் வணங்கி யனையான்,  
				செஞ்சரண் இரண்டினையு முச்சிகொடு மோயினர் சிறந்த லர்துணைக்,  
				கஞ்சமல ரிற்பல நிறங்கொள்அரி யின்தொகை கவைஇய தெனவே. 
    			 
    			  | 
				 81  | 
			
			
				| 
				 1133
    			
    			  | 
				 கந்தநம ஐந்துமுகர் 
				தந்தமுரு கேசநம கங்கை யுமைதன், 
				 மைந்தநம பன்னிரு யுத்தநம நீபமலர் மாலை புனையுந்,  தந்தைநம 
				ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம்,  எந்தைநம என்றுமிளை யோய்நம 
				குமாரநம என்றுதொழுதார்.
    			
    			  | 
				 82  | 
			
			
				| 
				 1134
    			
    			  | 
				 பொருந்துதலை யன்புடன் 
				எழுந்தவர்கள் இவ்வகை புகழ்ந்து மனமேல், 
      			 அரந்தைகொடு மெய்ந்நடு நடுங்குதலும் அன்னதை அறிந்து குமரன், 
       வருந்தலிர் வருந்தலி ரெனக்கருணை செய்திடலும் மற்ற வர்கடாம், 
       பெருந்துயரும் அச்சமு மகன்றுதொழு தேயினைய பேசி னர்களால். 
    			 
    			  | 
				 83  | 
			
			
				| 
				 1135
    			
    			  | 
				 ஆயவமு தத்தினொடு 
				நஞ்சளவி உண்குநரை அவ்வி டமலால்,  தூயவமு தோவுயிர் தொலைக்குமது 
				போலுனது தொல்ல ருளினால்,  ஏயதிரு வெய்திட இருந்தனம்உன் னோடமரி 
				யற்றி யதனால்,  நீயெமை முடித்தியலை அன்னதவ றெம்முயிரை நீக்கி 
				யதரோ. 
    			 
    			  | 
				 84  | 
			
			
				| 
				 1136
    			
    			  | 
				 பண்டுபர மன்றனை 
				இகழ்ந்தவன் மகத்திலிடு பாக மதியாம், 
      			 உண்டபவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்பொ ருதுநேர்,  
				கொண்டிகல் புரிந்தனம் அளப்பில்பவம் வந்தகும ரேச எமைநீ,  தண்ட 
				முை செய்தவை தொலைத்தனை உளத்துடைய தண்ண ளியினால்.
    			
    			  | 
				 85  | 
			
			
				| 
				 1137
    			
    			  | 
				 ஆதலின் எமக்கடிகள் 
				செய்தஅரு ளுக்குநிக ராற்று வதுதான், 
      			 ஏதுளது மற்றெமை உனக்டிய ராகஇவ ணீது மெனினும்,  ஆதிபரமாகிய 
				உனக்கடியம் யாம்புதி தளிப்ப தெவனோ,  தாதையர் பெறச்சிறுவர் 
				தங்களை அவர்ககருள்கை தக்க பரிசோ.
    			
    			  | 
				 86  | 
			
			
				| 
				 1138
    			
    			  | 
				 அன்னதெனி னுந்தௌ�வில் 
				பேதையடி யேம்பிழை யனைத்தும் உளமேல், 
      			 உன்னலை பொறுத்தியென வேகுமர வேள்அவவை யுணர்ந்து நமைநீர்,  
				முன்னமொரு சேயென நினைந்துபொரு தீர்நமது மொய்ம்பு முயர்வும்,  
				இன்னுமுண ரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தி னனரோ. 
    			 
    			  | 
				 87  | 
			
			
				| 
				 1139
    			
    			  | 
				 எண்டிசையு மீரெழு 
				திறத்துலகும் எண்கிரியு மேழு கடலுந், 
      			 தேண்டிரையும் நேமிவரை யும்பிறவும் வேறுதிரி பாகி யுளசீர்,  
				அண்ட நிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளு மாகி அயனும்,  
				விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்கு மரனே. 
    			 
    			  | 
				 88  | 
			
			
				| 
				 1140
    			
    			  | 
				 மண்ணளவு பாதலமெ 
				லாஞ்சரணம் மாதிர வரைப்பும் மிகுதோள், 
      			 விண்ணளவெ லாமுடிகள் பேரொளியெ லாம்நயனம் மெய்ந்த டுவெலாம்,  
				பண்ணளவு வேதமணி வாய்உணர்வெ லாஞ்செவிகள் பக்கம் அயன்மால்,  
				எண்ணளவு சிந்தை யுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈச னுயிரே. 
    			 
    			  | 
				 89  | 
			
			
				| 
				 1141
    			
    			  | 
				 ஆனதொரு பேருருவு 
				கொண்டுகும ரேசனுற அண்டர் பதியும், 
      			 ஏனையரும் அற்புதமி தற்புதமி தென்றுதொழு தெல்ல வருமாய்,  
				வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும் வனப்பு முணரார்,  
				சானுவள வாஅரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றி னர்களால். 
    			 
    			  | 
				 90  | 
			
			
				| 
				 1142
    			
    			  | 
				 வேறு சேணலம் வந்த 
				சோதிச் சிற்பர முதல்வ எம்முன் மாணல முறநீ கொண்ட வான்பெருங் 
				கோலந் தன்னைக் காணலம் அடியேங் காணக் காட்டிடல் வேண்டு மென்ன 
				நீணலங் கொண்டு நின்ற நெடுந்தகை அதனைக் கேளா. 
    			 
    			  | 
				 91  | 
			
			
				| 
				 1143
    			
    			  | 
				 கருணைசெய் தொளிகள் 
				மிக்க கண்ணவர்க் கருளிச் செவ்வேள் அருணமார் பரிதிப் புத்தேள் 
				அந்தகோ டிகள்சேர்ந் தென்னத் அருணவில் வீசி நின்ற தனதுரு 
				முற்றுங் காட்ட  இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் 
				கண்டார். 
    			 
    			  | 
				 92  | 
			
			
				| 
				 1144
    			
    			  | 
				 அடிமுதன் முடியின் 
				காறும் அறுமகன் உருவ மெல்லாங் கடிதவ னருளால் நோக்கிக் கணிப்பிலா 
				அண்ட முற்றும் முடிவறு முயிர்கள் யாவும் மூவருந் தேவர் யாரும் 
				வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச் சொல்வார். 
    			 
    			  | 
				 93  | 
			
			
				| 
				 1145
    			
    			  | 
				 அம்புவி முதலாம் 
				பல்பே ரண்டமும் அங்கங் குள்ள உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் 
				பொருளும் மாலுஞ் செம்பது மத்தி னோனுஞ் சிவனொடுஞ் செறிதல் 
				கண்டோம் எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா. 
    			 
    			  | 
				 94  | 
			
			
				| 
				 1146
    			
    			  | 
				 அறிகிலம் இந்நாள் 
				காறும் அகிலமும் நீயே யாகி ளுறைதரு தன்மை நீவந் துணர்த்தலின் 
				உணர்ந்தா மன்றே பிறவொரு பொருளுங் காணேம் பெருமநின் வடிவ மன்றிச் 
				சிறியம்யாம் உனது தோற்றந் தெரிந்திட வல்ல மோதான். 
    			 
    			  | 
				 95  | 
			
			
				| 
				 1147
    			
    			  | 
				 முண்டகன் ஒருவன் 
				துஞ்ச முராரிபே ருருவாய் நேமிக் கண்டுயில் அகந்தை நீங்கக் 
				கண்ணுதற் பகவன் எல்லா அண்டமும் அணிப்பூ ணார மாகவே ஆங்கொர் மேனி 
				கொண்டன னென்னுந் தன்மை குமரநின் வடிவிற் கண்டேம். 
    			 
    			  | 
				 96  | 
			
			
				| 
				 1148
    			
    			  | 
				 நாரணன் மலரோன் 
				பன்னாள் நாடவுந் தெரிவின் றாகிப் பேரழல் உருவாய் நின்ற 
				பிரான்திரு வடிவே போலுன் சீருரு வுற்ற தம்மா தௌ�கிலர் அவரும் 
				எந்தை யாரருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்தி டாரோ. 
    			 
    			  | 
				 97  | 
			
			
				| 
				 1149
    			
    			  | 
				 அரியொடு கமலத் தேவும் 
				ஆடல்செய் தகிலந் தன்னோ டொருவரை யொருவர் நுங்கி உந்தியால் 
				முகத்தால் நல்கி இருவரு மிகலு மெல்லை எடுத்தபே ருருநீ கொண்ட 
				திருவுரு விதனுக் காற்றச் சிறியன போலு மன்றே. 
    			 
    			  | 
				 98  | 
			
			
				| 
				 1150
    			
    			  | 
				 ஆகையால் எம்பி ரான்நீ 
				அருவுரு வாகி நின்ற வேகநா யகனே யாகும் எமதுமா தவத்தால் எங்கள் 
				சோகமா னவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை நாகமே லிருந்து 
				மாற்றால் நண்ணினை குமர னேபோல். 
    			 
    			  | 
				 99  | 
			
			
				| 
				 1151
    			
    			  | 
				 எவ்வுரு வினுக்கும் 
				ஆங்கோ ரிடனதா யுற்ற உன்றன் செவ்வுரு வதனைக் கண்டு சிறந்தனம் 
				அறம்பா வத்தின் அவ்வுரு வத்தின் துப்பும் அகலுதும் இன்னும் 
				யாங்கள் வெவ்வுரு வதத்திற் செல்லேம் வீடுபே றடைது மன்றே. 
    			 
    			  | 
				 100  | 
			
			
				| 
				 1152
    			
    			  | 
				 இனையன வழுத்திக் கூறி 
				யிலங்கெழிற் குமர மூர்த்தி தனதுபே ருருவை நோக்கிச் சதமகன் முதலா 
				வுள்ளோர் தினகரன் மலர்ச்சி கண்ட சில்லுணர் வுயிர்க ளென்ன 
				மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார்.
    			
    			  | 
				 101  | 
			
			
				| 
				 1153
    			
    			  | 
				 எல்லையில் ஔ�பெற் 
				றன்றால் எந்தைநின் னுருவம் இன்னும் ஒல்லுவ தன்றால் காண ஔ�யிழந் 
				துலைந்த கண்கள் அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத் 
				தொல்லையின் உருவங் கொண்டு தோன்றி யே அளித்தி யென்றார். 
    			 
    			  | 
				 102  | 
			
			
				| 
				 1154
    			
    			  | 
				 என்றிவை புகன்று 
				வேண்ட எம்பிரான் அருளால் வான்போய் நிற்னபே ருருவந் தன்னை 
				நீத்தறு முகத்தோ னாகித் தொன்றுள வடிவத் தோடு தோன்றலுந் தொழுது 
				போற்றிக் குன்றிருஞ் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூற லுற்றான். 
    			 
    			  | 
				 103  | 
			
			
				| 
				 1155
    			
    			  | 
				 தொன்னிலை தவாது 
				வைகுஞ் சூரனே முதலா வுள்ள ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் 
				பாங்கர் மன்னிநின் றேவல் செய்ய வானுயர் துறக்கம் நண்ணி என்னர 
				சியற்றி எந்தாய் இருத்திஎன் குறையீ தென்றான். 
    			 
    			  | 
				 104  | 
			
			
				| 
				 1156
    			
    			  | 
				 இகமொடு பரமும் வீடும் 
				ஏத்தினர்க குலப்பு றாமல் அகனம ரருளால் நல்கும் அறுமுகத் 
				தவற்குத் தன்சீர் மகபதி யளிப்பான் சொற்ற வாசகம் சுடரொன் றங்கிப் 
				பகவனுக் கொருவன் நல்கப் பராவிய போலு மாதோ. 
    			 
    			  | 
				 105  | 
			
			
				| 
				 1157
    			
    			  | 
				 வானவர் கோனை நோக்கி 
				வறிதுற நகைத்துச் செவ்வேள் நீநமக் களித்த தொல்சீர் நினக்குநாம் 
				அளித்தும் நீவிர் சேனைக ளாக நாமே சேனையந் தலைவ னாகித் தானவர் 
				கிளையை யெல்லாம் வீட்டுதும் தளரேல் என்றான்.
    			
    			  | 
				 106  | 
			
			
				| 
				 1158
    			
    			  | 
				 கோடலங் கண்ணி வேய்ந்த 
				குமரவேள் இனைய கூற ஆடியல் கடவுள் வௌ�ளை அடற்களிற் றண்ணல் கேளா 
				வீடுற அவுண ரெல்லாம் வியன்முடி திருவி னோடுஞ் சூடின னென்னப் 
				போற்றிச் சுரரோடு மகிழ்ச்சி கொண்டான்.
    			
    			  | 
				 107  | 
			
			
				| 
				 1159
    			
    			  | 
				 அறுமுகத் தேவை நோக்கி 
				அமரர்கோன் இந்த வண்டத்  துறைதரு வரைகள் நேமி உலகுயிர் பிறவும் 
				நின்னால் முறைபிறழ்ந் தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை 
				யெல்லாம் நிறுவுதி யென்ன லோடும் நகைத்திவை நிகழத்த லுற்றான். 
    			 
    			  | 
				 108  | 
			
			
				| 
				 1160
    			
    			  | 
				 இன்னதோ ரண்டந் 
				தன்னில் எம்மில்வே றுற்ற வெல்லாந் தொன்னெறி யாக என்றோர் தூமொழி 
				குமரன் கூற முன்னுறு பெற்றித் தான முறையிறந் திருந்த தெல்லாம் 
				அந்நிலை எவரும் நோக்கி அற்புத மடைந்து நின்றார். 
    			 
    			  | 
				 109  | 
			
			
				| 
				 1161
    			
    			  | 
				 வேறு நிற்கு 
				மெல்லையின் நிலத்திடை யாகிப் பொற்கெ னத்திகழ் பொருப்பிடை மேவுஞ் 
				சிற்கு ணக்குரிசில் சேவடி தாழூஉச் சொற்க நாடுள சுரேசன் 
				உரைப்பான். 
    			 
    			  | 
				 110  | 
			
			
				| 
				 1162
    			
    			  | 
				 ஆண்ட கைப்பகவ ஆரண 
				மெய்ந்நூல் பூண்ட நின்னடிகள் பூசனை யாற்ற வேண்டு 
				கின்றும்வினை யேம்அது செய்ய ஈண்டு நின்னருளை ஈகுதி யென்றான்.
    			
    			  | 
				 111  | 
			
			
				| 
				 1163
    			
    			  | 
				 என்ன லுங்குகன் 
				இசைந்து நடந்தே பொன்னி னாலுயர் பொருப்பினை நீங்கித் தன்ன 
				தொண்கயிலை சார்ந்திடு ஞாங்கர் மன்னி நின்றதொரு மால்வரை 
				புக்கான். 
    			 
    			  | 
				 112  | 
			
			
				| 
				 1164
    			
    			  | 
				 குன்றி ருஞ்சிறை 
				குறைத்தவன் ஏனோர் ஒன்றி யேதொழு துவப்புள மெய்தி என்றும் 
				நல்லிளைய னாகிய எங்கோன் பின்றொ டர்ந்தனர் பிறங்கலில் வந்தார். 
    			 
    			  | 
				 113  | 
			
			
				| 
				 1165
    			
    			  | 
				 சூரல் பம்புதுறு 
				கல்முழை கொண்ட சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ ஆரும் விண்ணவர் 
				அவன்கழல் தன்னைச் சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார். 
    			 
    			  | 
				 114  | 
			
			
				| 
				 1166
    			
    			  | 
				 அந்த வேலையம 
				ரர்க்கிறை தங்கண் முந்து கம்மியனை முன்னுற அன்னான் வந்து 
				கைதொழலும் மந்திர மொன்று  நந்த மாநகரின் நல்கிவ ணென்றான். 
    			 
    			  | 
				 115  | 
			
			
				| 
				 1167
    			
    			  | 
				 அருக்கர் தந்தொகை 
				அனைத்தையு மொன்றா உருக்கி யாற்றியென ஒண்மணி தன்னால் திருக்கி 
				ளர்ந்துலவு செய்யதொர் கோயில் பொருக்கெ னப்புனைவர் கோன்புரி 
				குற்றான். 
    			 
    			  | 
				 116  | 
			
			
				| 
				 1168
    			
    			  | 
				 குடங்கர் போல்மகு 
				டங்கெழு வுற்ற இடங்கொள் கோபுர விருக்கையின் நாப்பண் கடங்க 
				லுழ்ந்திடு கரிக்குரு குண்ணும் மடங்கல் கொண்தொர் மணித்தவி 
				சீந்தான். 
    			 
    			  | 
				 117  | 
			
			
				| 
				 1169
    			
    			  | 
				 ஈந்த வெல்லைதனில் 
				இந்திரன் ஏவப் போந்து வானெறி புகுந்திடு தூநீர் சாந்த மாமலர் 
				தழற்புகை யாதி ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர். 
    			 
    			  | 
				 118  | 
			
			
				| 
				 1170
    			
    			  | 
				 வேறு அன்ன 
				காலையில் அண்டர்கள் மேலையோன் சென்னி யாறுடைத் தேவனை வந்தியா 
				உன்ன தாளருச் சித்தியா முய்ந்திட இந்நி கேதனம் ஏகுதி 
				நீயென்றான். 
    			 
    			  | 
				 110  | 
			
			
				| 
				 1171
    			
    			  | 
				 கூற்ற மன்னதுட் 
				கொண்டுவிண் ணொரெலாம் போற்ற மந்திரம் புக்கு நனந்தலை ஏற்ற 
				ரித்தொகை ஏந்தெழிற் பீடமேல் வீற்றி ருந்தனன் வேதத்தின் 
				மேலையோன். 
    			 
    			  | 
				 120  | 
			
			
				| 
				 1172
    			
    			  | 
				 ஆன காலை அமரர்கள் 
				வாசவன் ஞான நாயக நாங்கள் உனக்கொரு தானை யாகுந் தலைவனை நீயெனா 
				வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினர். 
    			 
    			  | 
				 121  | 
			
			
				| 
				 1173
    			
    			  | 
				 நொதுமல் பெற்றிடு 
				நுண்டுகில் சூழ்ந்தனர் முதிய சந்த முதலமட் டித்தனர் கதிரும் 
				நன்பொற் கலன்வகை சாத்தினர் மதும லர்த்தொகை மாலிகை சூட்டினர். 
    			 
    			  | 
				 122  | 
			
			
				| 
				 1174
    			
    			  | 
				 ஐவ கைப்படும் 
				ஆவியும்* பாளிதம் மெய்வி ளக்கமும் வேறுள பான்மையும் எவ்வெ 
				வர்க்கும் இறைவற்கு நல்கியே செவ்வி தர்ச்சனை செய்தன ரென்பவே.  
				( * ஐவகைப்படும் ஆவி - நறுமணம் கமழும் பொருட்டு, கோட்டம், 
				துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்ற ஐவகை வாசனை 
       பொருள்களைப் பொடித்து இடும் தூபம்.)
    			
    			  | 
				 123  | 
			
			
				| 
				 1175
    			
    			  | 
				 புரந்த ரன்முதற் 
				புங்கவர் தம்முளத் தரந்தை நீங்க அருச்சனை செய்துபின் பரிந்து 
				தாழ்ந்து பரவலும் ஆயிடைக் கரந்து வள்ளல் கயிலையிற் போயினான். 
    			 
    			  | 
				 124  | 
			
			
				| 
				 1176
    			
    			  | 
				 வெற்பின் மிக்குயர் 
				வௌ�ளியம் பொற்றையில்  சிற்ப ரன்மறைந் தேகலுந் தேவரும் 
				பொற்பின் மேதகு பொன்னகர் அண்ணலும் அற்பு தத்துடுன் அவ்வரை 
				நீங்கினார்.
    			
    			  | 
				 125  | 
			
			
				| 
				 1177
    			
    			  | 
				 ஈசன் மைந்தன் இளையன் 
				இமையவர் பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை மாசில் கந்த வரையென 
				யாவரும் பேச ஆங்கொர் பெயரினைப் பெற்றதே. 
    			 
    			  | 
				 126  | 
			
			
				| 
				 1178
    			
    			  | 
				 ஆன கந்த வடுக்கலைத் 
				தீர்ந்துபோய் வான மன்னன் மனோவதி நண்ணினான் ஏனை வானவர் 
				யாவரும் அவ்வவர் தான மெய்தனர் தொன்மையில் தங்கினார். 
    			 
    			  | 
				 127  | 
			
			
				| 
				 1179
    			
    			  | 
				 உயவல் ஊர்திகொண் 
				டொய்யென முன்னரே கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள் பயிலும் 
				வீரரும் பாரிட மள்ளரும் அயலின் மேவர ஆயிடை வைகினான். 
    			 
    			  | 
				 128  |