| 209 | வேறுவானவார் உரைகேளா 
		மறலியொ டிகல்வெங்கண்
 தானவன் இவனேஎன் தனிஉயிர் அடுகிற்பான்
 ஈனம 
		துறுதேவர் இவனொடு நுமையின்றே
 ஊனுடல் உயிரோடும் உண்குவன் அதுகாணீர்.
 | 146 | 
      | 210 | என்னலும் இகல்சிங்கன் 
		எரிகலுழ் விழியான்என்முன்னிது புகல்கின்றாய் முடிகுவை இனியென்னாக்
 கொன்னலில் தருகையால் கொடிறுடை தரமோத
 ஒன்னலன் அதுபோழ்தின் ஒலிமுகி 
		லெனவீழ்ந்தான்.
 | 147 | 
      | 211 | போழுறு பகுவாயில் பொலிதரும் 
		எயிறோடும்வீழுறு நகையாலும் விரிகுரு தியினாலுந்
 தாழுறு மதிதன்னைத் 
		தாரகை நிரைசூழ
 ஊழுற அமா�செவ்வான் ஒத்ததவ் வுழியன்றே.
 | 148 | 
      | 212 | சண்டனும் இறலோடும் சமன்விட 
		வருதூதர்அண்டலர் வெருவாமுன் அலமரல் உறுகின்றார்
 கண்டனன் அதுசிங்கன் 
		கையன துயிர்தன்னைக்
 கொண்டணை குதிரென்னக் குறுகினர் அதுகொண்டார்.
 | 149 | 
      | 213 | ஆனதொர் செயல்பாரா அசமுகன் 
		எனவோதும்மானவன் இறைநில்நில் வந்துன துயிர்உண்பல்
 ஏனைய ரெனவேநீ 
		எண்ணலை எனையென்னாக்
 கானிமிர் தருதேர்மேற் கடுவிசை யொடுசென்றான்.
 | 150 | 
      | 214 | சிங்கன தெதிர்செல்லுஞ் 
		செல்லுறழ் பகுவாயான்அங்கணு கிடும்வேலை அதிபல மதுவென்போன்
 எங்கினி 
		அகல்வாய்நீ இற்றனை இவண்என்னாப்
 பொங்கிய சினமோடும் பொள்ளென விடைபுக்கான்.
 | 151 | 
      | 215 | செந்தழல் புரைவெங்கட் டிறல்அச 
		முகன்என்போன்முந்துற மதுவென்னும் மொய்ம்பினன் எதிர்கோடல்
 அந்தக 
		னொடுகாலன் அமர்புரி தரவேமுன்
 வந்தெதிர் எதிர்தன்மை மானுவ தெனலாமால்.
 | 152 | 
      | 216 | அணுகினர் இருவோரும் அசமுகன் 
		அதுகாலைக்குணநனி சிலைகொள்ளக் குலவிய சிலைகொள்ளாக்
 கணிகையர் 
		மிளிர்வேற்கட் கடைநில வியதென்ன
 நுணுகிய நுதிவெங்க ணோன்கணை சிதறுற்றான்.
 | 153 | 
      | 217 | முன்னது வரலோடும் முகனுறு 
		செயலோரான்துன்னுபு செறிபோழ்துந் துணைவிழி இமையாதான்
 தன்னிலை 
		இறையேனுந் தவிர்கிலன் ஒருதானே
 அந்நிலை தனில்நின்றான் அடுதிறல் 
		முயல்கின்றான்.
 | 154 | 
      | 218 | பாலுற நிமிர்கின்ற பழுமர 
		மதுபற்றாமேலுறு சரம்வீசான் விடுகணை படமெய்யில்
 சாலிகை யெனநின்றான் 
		தகுவன திரதத்தில்
 காலென விசைசென்றே கருமுகி லெனஆர்த்தான்.
 | 155 | 
      | 219 | ஆர்த்தனன் அதுகேளா அசமுகன் 
		அயர்வெய்தித்தேர்த்தனில் நிலமீதிற் சிலையொடு கணைசிந்தி
 வேர்த்தனன் 
		வறிதுற்றான் விம்மினன் மெலிதன்மை
 பார்த்தனன் மதுவென்போன் இவையிவை 
		பகர்கின்றான்.
 | 156 | 
      | 220 | வீரனும் அலைஎஞ்சா வெஞ்சமர் 
		வலன்எய்தச்சூரனும் அலைநின்றே சூர்நிலை அதுகாணுந்
 தீரனும் அலைஎன்னே 
		செருமுய லுதிநீநின்
 ஆருயிர் கொடுபோகென் றவனியின் மிசைபோனான்.
 | 157 | 
      | 221 | பாரிடன் நிலன்மேவப் பகர்அச 
		முகன்என்னும்பேருடை யவன்வௌ�கிப் பெருமிதம் இலனாகிப்
 போரிடை 
		வெருவுற்றேன் எனவொரு புரையுற்றேன்
 ஆரிடை யிதுதீர்வ னெனஅல மருகின்றான்.
 | 158 | 
      | 222 | ஆயிடை அவுணன்தான் அமா�புரி 
		கிலனாகிப்போயினன் அவன்அந்தோ பொன்றுதல் இனிதென்னாக்
 காயமொ டுளமானக் 
		கனல்சுட மனம்வேவத்
 தீயென வெகுளுற்றான் செருமுயல் திறல்பெற்றான்.
 | 159 | 
      | 223 | ஒல்லையின் அவன்ஏகி யுழிதனி 
		தொடராநிற் 
        கொல்லுவன் இனியாண்டுக் குறுகினும் அகலாதே
 நில்லுநில் லெனவாரா நீனிற 
		முகிலென்னச்
 செல்லுறழ் பகுவாயால் திசைசெவி டுறஆர்த்தான்.
 | 160 | 
      | 224 | அற்றமில் மதுவென்போன் அசமுகன் 
		உரைகேளாக்கற்றதும் உளகொல்லோ கழறினை சிலவீரம்
 பெற்றிலை யெனைநாடிப் 
		பெயருதல் பிழைளேனும்
 உற்றலை இசையெற்கோர் உறுபழி தருகின்றாய்.
 | 161 | 
      | 225 | என்றிது புகல்கின்றோன் எதிருற 
		இகலிப்போய்ப்பொன்றிகழ் சிலைகோலிப் பொறியுமிழ் பிறைவாளி
 ஒன்றல 
		பலவுய்பப உருகெழு சினமெய்தி
 நின்றனன் அவையாவும் நெடியகை கொடுவீசி.
 | 162 | 
      | 226 | வேறுவைத்தலைப் பகழிமேல் 
		விடுப்ப மாமது
 எய்த்திலன் இறையுமென் றெண்ணி எண்ணலன்
 முத்தலைக் 
		கழுவயின் முசலம் ஆதியாங்
 கைத்தலப் படையெலாஞ் சிதறுங் காலையே.
 | 163 | 
      | 227 | சாரதன் மெய்யுறத் தளர்ந்து 
		தானவன்தேரினை விரைந்துதன் செங்கை யாலெடா
 வாரிதி மேற்செல விடுப்ப 
		வஞ்சகன்
 பாரிடை ஒல்லையிற் பாய்ந்து மேயினான்.
 | 164 | 
      | 228 | குப்புறு கின்றவன் கூளி 
		வேந்தன்முன்வெப்பமொ டணுகுறா வீங்கு தோளினால்
 துப்புறு மற்றொழில் 
		தொடங்க வானகத்
 தப்புறம் அவனசெல அடிகொண் டோச்சினான்.
 | 165 | 
      | 229 | வெய்தென இறந்துவான் மீண்டு 
		பூதன்முன்எய்தினன் அவனுரத் திடியின் எற்றியே
 வைதனன் போயினன் மறைந்து 
		மற்றொரு
 கைதவம் நினைந்தனன் ககனம் புக்குளான்.
 | 166 | 
      | 230 | வரந்தனிற் பெற்றதோ�� மாயன் 
		நேமியைக்கரந்தனில் எடுத்தனன் கருத்தில் அர்ச்சனை
 புரிந்தனன் 
		தொழுதனன் போற்றிப் பூதன்மேல்
 விரைந்துற விடுத்தனன் விளிந் தன்மையான்.
 | 167 | 
      | 231 | மாசுறும் அசமுகன் மதுவின் 
		ஆகமேற்பாசனம் வியப்பமால் பரிதி உய்த்தலும்
 காசினி அவன்வெறுங் 
		கரத்தன் ஆதலின்
 வீசிய அப்படை வெகுண்டு மீண்டதே.
 | 168 | 
      | 232 | கணையிருள் உருவினைக் கனலி 
		சேர்ந்தெனமுனைகெழும் அசமுகன் முடியை அட்டதால்
 தனதுகை நேமிதன் னால்உ 
		றாததோர்
 வினையிலை என்பது மெய்மை போலுமால்.
 | 169 | 
      | 233 | உலந்தனன் அசமுகன் உருமு 
		வீழ்ந்தெனநிலந்தனில் வீழ்தலும் நின்ற தானவர்
 புலந்தனர் ஆழிமால் 
		புடையிற் போயது
 தொலைந்ததின் றமரெனா அமரர் துள்ளவே.
 | 170 | 
      | 234 | சாற்றிய அவுணர்தந் தலைவர் 
		ஏனையர்நாற்றிறப் படையொடு நடந்து தம்முளஞ்
 சீற்றம தாகியே செவி 
		ளைத்தலும்
 ஏற்றெதிர் சாரதர் இரிந்து போயினார்.
 | 171 | 
      | 235 | வெற்றிகொள் தானவர் வெகுண்டு 
		போர்செயப்பற்றல ராகிய பாரி டத்தவர்
 இற்றனர் வன்மையை இரிந்து 
		போயினார்
 மற்றது கண்டனன் வலிய தணடகன்.
 | 172 | 
      | 236 | வேறுஏற்ற மாகும் 
		இலக்கவில் வீரருட்
 சாற்று பேரிசைத் தண்டகப் பேரினான்
 கூற்றை நேர்வ 
		தொருசிலை கோட்டியே
 மாற்ற லார்மிசை வாளிகள் தூவினான்.
 | 173 | 
      | 237 | மின்னு நாரி வியன்சிலை யேசிலைதுன்னு நாணொலி சூருரு மேற்றொலி
 பொன்னின் வாளி மழைபொழிந் திட்டதான்
 மன்னு தண்டக மாப்பெருங் கொண்டலே.
 | 174 | 
      | 238 | தட்டின் மொய்ம்புடைத் தண்டக 
		மேலையோன்விட்ட வாளிகள் வெய்யவர் தானையுட்
 பட்ட காலைப் பரந்தெழு 
		சோரிநீர்
 மட்டி லாத குடிஞையின் வந்ததே.
 | 175 | 
      | 239 | இரதம் இற்றன எண்ணில வண்ணமார்பரிகள் பட்டன பற்பல மாமதக்
 கரிகள் பட்ட கணிப்பில எண்ணிலா
 அரிகள் 
		நேர்அவு ணப்படை பட்டதே.
 | 176 | 
      | 240 | இந்த வாறிவர் பட்டிட ஏனையோர்நொந்து தம்முயிர் காப்ப நுதலியே
 சிந்தி யேயெண் டிசையினும் பாரினும்
 அந்த ரத்தினு மாய்இரிந் தோடினார்.
 | 177 | 
      | 241 | வேறுதண்டா அவுணப் 
		படையிவ்வகை சாய்ந்த வாறும்
 எண்டா னைமள்ளர் பலர்அங்கண் இறந்த வாறும்
 விண்டாழ் கதிரைச் சிறைபூட்டிய வீர வீரன்
 கண்டான் வெகுண்டான் நகைத்தொன்று 
		கழறு கின்றான்
 | 178 | 
      | 242 | மட்டார் தெரியல் மகவான் முதல் 
		வானு ளோர்கள்எட்டாத சேணில் தொலைவெய்தி இரிந்து போக
 வட்டாடல் செய்த 
		நமரங்களின் றாவி மாண்டு
 பட்டா��கொல் ஈசன் மகன்ஏவு படைகள் தம்மால்.
 | 179 | 
      | 243 | எல்லார் கதிரைச் சிறைபூட்டிய 
		யானும் நிற்கஒல்லார்கள் ஆற்றல் உளராயடும் ஊறறம் நான்றால்
 கொல்லாது 
		சீற்றம் இலதாய்இகல் கொண்டு றாதேல்
 வெல்லாது கொல்லோ அரிதன்னையும் வேழம் 
		எல்லாம்.
 | 180 | 
      | 244 | வாரார் கழற்கால் அமராரட 
		மாய்ந்த வௌ�ளம்ஈரா யிரத்தின் மிகுமல்லதை எஞசு றாதால்
 பேராமல் 
		என்பாங் கரின்நிற்பன் பேசில் வௌ�ளம்
 ஓரா யிரமே இரிகின்ற தொழிந்த 
		தெல்லாம்.
 | 181 | 
      | 245 | ஒன்றே வரிவில் ஒருவேன்பிடித் 
		தொன்ன லார்மேற்சென்றே அடல்செய் திலன்முன்னமென் சேனை யெல்லாங்
 கொன்றே 
		னியானே பொரவிட்டனன் கூழை தன்னின்
 நின்றேன் இ�தோர் பொருளென்று நினைந்தி 
		லேனால்.
 | 182 | 
      | 246 | தீருஞ் செயலை நினைந்தாவதென் 
		செனறி யானேஓரொன்று கன்னல் முடிகின்றமுன் ஒன்ன லார்தம்
 பேரின் றெனவே 
		அடுவேனது பெற்றி லேனேல்
 சூரன் குமரன் அலன்யானெனச் சூள்மொ ழிந்தான்.
 | 183 | 
      | 247 | பானுப் பகைவன் இவைகூறிப் 
		பரிதி மான்தேர்மானக் கடுங்கோல் வலவன் மரபிற் கடாவச்
 சேனைக் கடலி 
		னுடன்சென்றுதன் செங்கை தன்னில்
 கூனற் சிலையைப் புருவத் தினொடு 
		குனித்தான்.
 | 184 | 
      | 248 | மேதக்க தன்கைச் சிலைவாங்கி 
		விளங்கும் வௌ�ளிசோதிக் கிறையாயுறும் எல்லையிற் சூல்கொள் மேகம்
 மூதக்க பாரிற் சொரிந்தென்ன முனிந்து நேரும்
 பூதப் படைமேற் பரமாரி 
		பொழிதல் உற்றான்.
 | 185 | 
      | 249 | பொழிகின்ற காலைத் திறன்மேதகு 
		பூதர் நோக்கிக்குழிகின்ற கண்ணின் அழல்காலக் குலாச லங்கள்
 ஒழிகின்ற 
		வெற்பு முழுதும்பறித் தொல்லை வீசி
 அழிகின்ற காலத் துருமேறென ஆர்த்து 
		நின்றார்.
 | 186 | 
      | 250 | என்றின் பகைஞன் தனைபூதா�கள் 
		யாரும் வீசுங்குன்றம் பலவும் புடைசுற்றக் குறித்து நோக்கி
 ஒன்றங் 
		கதனுக் கொருகோடி ஒண்கோல தாகத்
 துன்றும் படியே முறைதூண்டித் துகள்செய் 
		திட்டான்.
 | 187 | 
      | 251 | வண்டூது பூந்தாரவன் வாளியின் 
		மாய்ந்த குன்றம்நுண்டூளி யாகியது வானிடை நொய்தின் ஏகி
 விண்டூர்க 
		டோறுஞ் செறிகின்றவர் மேனி தோயக்
 கண்டூதி ஆற்றாதவர் விண்ணிடைக் கங்கை 
		புக்கார்.
 | 188 | 
      | 252 | தேவுத் தடந்தேர் ஒருவன்செரு 
		வெல்லை முற்றும்மேவிக் கறங்கில் திரிவான்றனி வில்லை வாங்கிக்
 கோவைத் 
		தொடையொன் றினில்ஆயிர கோடி வாளி
 தூவக் கணத்தின் தொகைமுற்றுந் தொலைவு 
		செய்தான்.
 | 189 | 
      | 253 | நன்கா லநீவி மிளிர்கின்ற 
		நறுசெய் தோய்ந்தமின்கா லதனின் விரைகின்ற செந்தீயின் வெய்ய
 முன்காலு 
		கின்ற சுடருள்ளன மூன்று கண்ண
 வன்காலன் அஞ்ச அடவல்லன வஞ்சன் வாளி.
 | 190 | 
      | 254 | தோளைத் துணிக்குங் கரத்தோடு 
		துணிக்கு மார்பைத்தாளைத் துணிக்கும் எரிகுஞ்சித் தலைது ணிக்கும்
 வாளைத் துணிக்கும் அணிமெய்வயப் பூதர் வாழ்க்கை
 நாளைத் துணிக்கும் 
		அசுரன்விடு நாம வெங்கோல்.
 | 191 | 
      | 255 | சூரற் கினிய மகன்வாளி 
		துணித்து வீசவீரத்தின் மிக்க கணத்தின்றலை வீழு முன்னர்ச்
 சீருற்ற 
		சோரிப் புனல்சிந்துவ தீயர்சென்ற
 பாரைப் புனிதஞ் செயுந்தன்மை படைத்த 
		தன்றே.
 | 192 | 
      | 256 | பொன்செய் றிலங்குங் 
		கணைத்தள்ளலும் பூதர் சென்னிமின்சென்ற வானத் தெழச்சோரியு மீதெ ழுந்த
 என்சென் றனையாங் குமரன்படை ஏக லென்னாப்
 பின்சென்று பற்றித் தருவான்றொடர் 
		பெற்றி போலும்.
 | 193 | 
      | 257 | எய்யுந் தொழிலுக் கவன்மேலவர் 
		யாவர் எங்கள்ஐயன் வடையாகிய பூதர்தம் மாற்றல் மொய்ம்புங்
 கையும் 
		வரையுஞ் சிரமுங் கழற்காலும் மார்பும்
 ஒய்யென் றறுக்கும் அவுணன்விடும் 
		ஒன்றொர் வாளி.
 | 194 | 
      | 258 | வானோர் தொகையைச் சிறையிட்டவன் 
		மற்றிவ் வாறுதானோர் சிலையின் வலியாலடத் தாவில் பூதர்
 ஆனோர் 
		அளப்பில்லவர் மாய்ந்திட ஆற்ற லில்லா
 ஏனோர்கள் யாரும் உடையவார்இவை எண்ண 
		லுற்றார்.
 | 195 | 
      | 259 | மின்னும் புகர்வேலவன் 
		அங்குளன் வீர வாகுபின்னின்றனன் ஈதுண ரான்பிற ராரு மற்றே
 முன்னின்ற 
		நம்மை இவன்அட்டிடு மொய்ம்பி லேம்யாம்
 என்னிங்கு நிற்ப தெனப்பூதர் 
		இரிந்து போனார்.
 | 196 | 
      | 260 | இரிகின்ற பூதர் எவரும் 
		படைக்கீற்றின் நின்ற 
        வரிகின்ற தண்டார் அடல்மொய்ம்புடை வள்ளல் பாங்கர்ப்
 பரிகின்ற நெஞ்சத் 
		தொடுசெல்லவப் பான்மை யாவுந்
 தெரிகின்றனன் உக்கிரன் என்பதொர் சேனை 
		வேந்தன்.
 | 197 | 
      | 261 | கண்டுக் கிரனாகிய பூதன் 
		கனன்று செங்கண்விண்டிற் பெரிது நிவப்புற்று விளங்கு பொன்னந்
 தண்டப்படை ஒன்றினை அங்கையில் தாங்கி யேகி
 அண்டத் தவர்கள் புகழத்தனி 
		ஆர்த்து நேர்ந்தான்.
 | 198 | 
      | 262 | செற்றத்துடன் உக்கிரன் 
		நேர்புகு செய்கை தன்னைக்கற்றைக்கதி ரைத்தளை இட்டவன் கண்டு தன்கைக்
 கொற்றச்சிலை யைக்குனித் தாயிர கோடி வாளி
 முற்றத்துரந் தேயவன் யாக்கையை 
		மூடி ஆர்த்தான்.
 | 199 | 
      | 263 | மைக்கின்ற மேனி நெடும்பூதனை 
		வஞ்சன் வாளிதைக்கின்றில வானுதி மாய்ந்து தளர்ந்து வீழ்ந்த
 மெய்க்கின்ற இன்பும் அறனும் விளையாது வாளா
 பொய்க்கின்ற வன்கைப் 
		பொருள்வல்லையிற் போ தேபோல்.
 | 200 | 
      | 264 | விடுகின்ற வாளி பயனின்றயல் 
		வீழ்த லோடும்படுகின்ற தன்மை யதுகண்டனன் பானு கோபன்
 அடுகின்ற தெவ்வா 
		றிவன்றன்னையென் றங்கண் வானந்
 தொடுகின்ற தாங்கோ ரெழுவத்தைச் சுழற்றி 
		விட்டான்.
 | 201 | 
      | 265 | தீயன்முச லந்தனை உக்கிரன் 
		செங்கை தாங்கும்ஆய்திண்கதை யாற்சிதைத் தேயவன் தேரை அண்மிப்
 பாயும்பரி யைப்புடைத் தொல்லையிற் பாரின் வீட்ட
 வேயென்று பல்காலிகழ்ந் 
		தா��த்தனர் யாரும் வானோர்.
 | 202 | 
      | 266 | புரவித் தொகுதி விளிவாகப் 
		பொருவின் மைந்தன்எரியிற் கனன்று புடைஓ ரிரதத்தின் வாவி
 வா�விற் 
		குனித்துக் கிரன்ஏந்தும் வலிய தண்டம்
 முரிவுற்றிட வேயொரு நூறு மொட்டம்பு 
		தொட்டான்.
 | 203 | 
      | 267 | நூறொண்கணை யால்அவன் 
		தண்டம்நுண் டூள தாகச்சீறுந்திறல் உக்கிரன் கைக்கொடு தீயன் மைந்தன்
 ஏறுந்தடந் தேர்தனை வானின் எடுத்து வீச
 வீறும் பரிதி பதத்தின்துணை மேய 
		தன்றே.
 | 204 | 
      | 268 | துன்னான் மதலை வருகின்றது 
		சூரன் நோக்கிமுன்னாளின் நின்று நமைப்பற்ற முயன்று ளான்கொல்
 அன்னான் 
		புணர்ப்பை உணரேன்அணித் தாகும் இன்னம்
 என்னா வதோவென் றுளத்துன்னி இரிந்து 
		போனான்.
 | 205 | 
      | 269 | தேரோடு சென்ற அசுரன்மகன் 
		சேணின் மீண்டுபாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கில்
 காரோடு வானந் 
		தவறுற்றுழிக் காமர் தாருத்
 தூரோடு சாய்ந்து மறிகின்றதொர் தோற்றம் 
		ஒக்கும்.
 | 206 | 
      | 270 | வேறுவீழு கின்றதேர் 
		ஒருவியே வெங்கதிர்ப் பகைஞன்
 தாழு மெய்யுடை உக்கிரன் தன்னைவந் தணுகி
 மாழை யொண்கையால் எற்றியே எடுத்துவா னுலகோர்
 ஏழை யுங்கடந் தப்புறஞ் 
		சென்றிட எறிந்தான்.
 | 207 | 
      | 271 | எறியும் வெய்யவன் வேறொரு 
		தேரின்மே லேறிவௌ�கொள் பங்கயத் தண்ணலா் விதித்துமுன் னளித்த
 செறியு 
		மூவிலை இருதலை வேலினைச் சேண்போய்
 மறியும் உக்கிரன் எதிர்புக விடுத்தனன் 
		மன்னோ.
 | 208 | 
      | 272 | விடுத்த தெய்வவேல உக்கிரன் 
		மருமத்தை விடர்போற்படுத்தி யேபுகுந் தப்புறம் போந்திடப் பாரின்
 அடுத்து மற்றவன் சிறியதர் வுற்றனன் அதுகண்
 டெடுத்த குன்றொடுந் தண்டியென் 
		றுரைப்பவன் எதிர்ந்தான்.
 | 209 | 
      | 273 | தண்டி யாகிய பாரிடன் தனதுகைத் 
		தலத்தின்மிண்டு கின்றதோர் அடுக்கலை அவன்மிசை வீசக்
 கொண்ட வார்சிலை 
		வாங்கி ஆயிரங்கணை கோத்துக்
 கண்ட துண்டம தாக்கினன் அதனையோர் கணத்தில்.0
 | 210 | 
      | 274 | வெற்பு நுண்டுகள் ஆதலும் 
		விண்ணுற நிமிர்ந்துகற்ப கம்புரை மராமரம் ஒன்றினைக் களைந்து
 வற்பு 
		றுங்கரந் தனினெடுத் தவுணர்கோன் மணித்தேர்
 முற்பு குந்திடும் பரிகளைப் 
		புடைத்தனன் மொய்ம்பால்.
 | 211 | 
      | 275 | மொய்ம்பி னிற்புடைத் 
		திடுதலுங் கவனமா முழுதும்அம்பு வித்தலை மறிந்தன அதற்குமுன் அவுணன்
 பைம்பொன் முத்தலைப் பலபதி னாயிரம் பகழி
 செம்பு னற்கொளத் தண்டிதன் 
		நெற்றியுட் செறித்தான்.
 | 212 | 
      | 276 | செறித்த காலையின் மெலிந்தனன் 
		தண்டியச் செய்கைகுறித்து நோக்கியே பினாகியாம் பூதனோர் குன்றம்
 பறித்து வீசுவான் முயறலும் ஆயிரம் பகழி
 நிறத்தின் மூழ்குமா றெய்தனன் 
		அனையனும் நின்றான்.
 | 213 | 
      | 277 | குன்று கொண்டகைப் பினாகியுந் 
		தொல்வலி குறைந்துநின்ற காலையி வேனைய பூதரும் நேர்ந்து
 சென்று 
		வீற்றுவீற் றமரினைச் சிலபொழு தியற்றி
 ஒன்று தீங்கதிர்ப் பகைஞனுக் 
		காற்றலர் உடைந்தார்.
 | 214 | 
      | 278 | எண்ட ருங்கணத் தலைவர்கள் 
		தொலைதலும் இதனைக்கண்டு வெஞ்சினந் திருகியே எதி��ந்தனர் கபாலி
 அண்ட 
		லோசனன் நிரஞ்சனன் உருத்திரன் அகண்டன்
 தண்ட கன்முதல் இலக்கமா கியபடைத் 
		தலைவர்.
 | 215 | 
      | 279 | மிடல்ப டைத்திடும் இலக்கமாம் 
		வீரரும் விரவித்தடம ணிப்பெருந் தேரொடும் அவுணன்முன் சார்ந்து
 சுடரு 
		டைக்கட கங்கிளர் செங்கையில துன்னுங்
 கொடும ரத்தினைக் குனித்தனர் நாணொலி 
		கொண்டார்.
 | 216 | 
      | 280 | கவடு பட்டிடும் ஈரிரு 
		மருப்புடைக் ககுபக்குவடு பட்டதை உரைப்பதெ னொருகரிக் கொம்பாற்
 சுவடு 
		பட்டிடு மேருவுஞ் சலித்தது துளங்கிச்
 செவிடு பட்டன வானமும் வையமுந் 
		திசையும்.
 | 217 | 
      | 281 | பானு கோபன்மற் றதுகண்டு 
		சிறுநகை படைத்துமான வெஞ்சிலை யொன்றினைத் தோள்கொடு வணக்கி
 மேன 
		லந்திகழ அண்டங்கள் யாவையும் வெருவத்
 தேனின் வீழ்ச்சியை மலைந்திடுங் 
		குணத்தொலி செய்தான்.
 | 218 | 
      | 282 | உலத்தின் மேற்படு மொய்ம்புடை 
		இலக்கரும் ஒருங்கேவலத்தில் வெஞ்சிலை இடத்தினில் வடிக்கணை தொடுத்து
 நிலத்தில் வந்துகார் நெடும்புனல் சிதறிய நெறிபோற்
 புலத்தி யன்முறைப் 
		பேரன்மேல் தலைத்தலை போழிந்தார்.
 | 219 | 
      | 283 | தொடலை அம்புயத் திலக்கமாம் 
		பொருநருந் தொடுத்துவிடுச ரத்தொகை அவுணன்மேல் வீற்றுவீற் றேகல்
 நெடிய 
		தெண்டிரைப் பேரியா றெண்ணில நிரந்து
 புடவி கொண்டதோர் அளக்கர்மேற் போவன 
		போலும். 0
 | 220 | 
      | 284 | இலக்கர் விட்டிடு சரமெலாம் 
		அவுணர்கள் எவருங்கலக்க முற்றிட வருதலுஞ் சூ��மகன் கண்டே
 கொலைக்கொ 
		டுஞ்சிலை வளைத்ததில் ஆயிர கோடி
 விலக்க ருங்கணை தொத்தவை அறுத்தனன் 
		விரைவில்.
 | 221 | 
      | 285 | அறுத்து மற்றுமோ ராயிர 
		கோடிஅம் பதனைச்செறுத்து விட்டிட அறுமுகன் பரிசனர் தெரிந்து
 விறற்க 
		டுங்கணை யாங்கதற் கெழுமையால் விடுத்து
 மறித்து மீண்டிடு வித்தனா� 
		அவுணர்கோன் வாளி.
 | 222 | 
      | 286 | அறந்தி றம்பிய சூர்மகன் 
		வாளிகள் அனைத்தும்முறிந்து மற்றவன் தன்மிசை உற்றன முழங்கிச்
 செறிந்த 
		மாமுகில் உயிர்த்திடுஞ் சீகரஞ் செல்லா
 தெறிந்து கால்பொர வந்துழி 
		மீண்டுபோம் இயல்போல்.
 | 223 | 
      | 287 | செங்க திர்ப்பகை சீறியே 
		செயிரிலா வயிரத்துங்க வெங்கணை அபரித மிசைமிசை துரந்து
 வெங்கண் 
		வீரா�கள் செலுத்திய சரமெலாம் விலக்கி
 அங்கை யிற்கொண்ட கார்முகம் 
		இலக்கமும் அறுத்தான்.
 | 224 | 
      | 288 | பிடித்த கார்முகம் அற்றுழி 
		மானவர் பெயர்த்துந்தடத்த தேரிடை இருந்திடுஞ் சேமமாந் தனுக்கள்
 எடுத்து வாங்கியே சரந்துரந் திரவியம் பகைஞன்
 தொடுத்து மேவிடுங் கணைகளை 
		இடையிடை துணித்தார்.
 | 225 | 
      | 289 | சூரன் மாமகன் தொடுசரந் 
		துணித்தபின் தூண்டுந்தேரி லாயிரம் பரியினூ றாயிரந் தெழிக்
 காரு 
		லாவரு பதாகையில் ஆயிரங் கடவி
 ஊரும் வன்மைசோ� வலவன்மேல் ஆயிரம் 
		உய்த்தார்.
 | 226 | 
      | 290 | வசையில் வீரர்கள் இவ்வகை 
		விடுத்தலும் மனத்திற்பசையில் சூர்மகன் இரதமும் பரிகளும் பாகும்
 அசனி 
		கொண்டதோர் துசவமும் அற்றன அதற்பின்
 விசையில் வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் 
		வெகுண்டு.
 | 227 | 
      | 291 | வைய மேற்செலும் அவுணர்கோன் 
		தன்சிலை வணக்கிச்செய்ய கூர்ங்கணை நூறுநூ றாயிரஞ் செலுத்தி
 ஐயன் 
		விட்டவர் தேரொடு சிலைகளை அறுத்து
 மெய்யி டந்தொறும் அழுத்தினன் எண்ணிலா 
		விசிகம்.
 | 228 | 
      | 292 | பரிதி மாற்றலன் பகழிகள் 
		மெய்யெலாம் பட்டுக்குருதி சோ��தலும் இலக்கருந் தொல்வலி குறைந்து
 பெரிது நோயுழந் தாற்றல ராகியே பின்னர்ப்
 பொருதி றந்தனை நினைந்திலர் 
		உடைந்துபின் போனார்.
 | 229 | 
      | 293 | வற்பு றுத்திய இலக்கம்வில் 
		லாளரும் மலையவிற்பி டித்தவன் ஒருவனே யாரையும் வென்றான்
 முற்ப 
		கற்புரி தவப்பயன் இ�தென மொழிமோ
 கற்பி னாற்றலென் றுரைத்துமோ கழறுவ 
		தெவையே.
 | 230 | 
      | 294 | ஆன காலையில் வீரகோ ளரியென 
		அறையும்மான வீரன்மற் றதுகண்டு தனதுவில் வளைத்துப்
 பானு கோபன்முன் 
		னெய்தியே பிறைமுகப் பகழி
 சோனை மாரியும் விம்மித முற்றிடச் சொரிந்தான்.
 | 231 | 
      | 295 | சொரிந்த காலையில் அதுகண்டு 
		சூரன்மா மதலைசிரந்து ளக்கியே ஈங்கிவன் ஆற்றலுந் திறலும்
 பெருந்த 
		னிச்சிலை விஞ்சையும் நன்றெனப் பேசி
 வரிந்த கார்முகங் குனித்தனன் 
		பனித்தனன் வானோர்.
 | 232 | 
      | 296 | குனித்த சாபத்தின் நூறுநூ 
		றாயிர கோடிநுனித்த வச்சிர நொறிலுடைப் பகழிகள் நூக்கித்
 தனித்து 
		நேர்ந்தவன் விடுத்திடு சரமெலாந் தடிந்து
 துனித்தி டக்கணை ஆயிரம் 
		அழுத்தினன் தோள்மேல்.
 | 233 | 
      | 297 | தோளில் ஆயிரம் வெங்கணை 
		அழூத்தலுந் தோலாக்கோள ரித்திறற் பேரினன் கோமகன் துரந்த
 வாளி 
		யாவையும் விலக்கியே ஆங்கவன் மருமஞ்
 சாள ரம்படச் செறித்தனன் ஆயிரஞ் 
		சரங்கள்.
 | 234 | 
      | 298 | சரங்கள் ஆயிரம் அகலமேல் 
		அழுத்தலுந் தகுவன்இரங்கி நோயுழந் தாற்றவும் முனிவுசெய் திவனைக்
 கரங்கொள் வில்லினால் வெல்லரி தாமெனக் கருதி
 உரங்கொள் விண்டுவின் 
		படைக்கலந் தனையெடுந் துய்த்தான்.
 | 235 | 
      | 299 | நார ணன்படை ஆங்கவன் உருக்கொடு 
		நடந்துவீர கோளரி விடுத்திடு சரமெலாம் விழுங்கிப்
 பாரும் அண்டமும் 
		நடுக்குற இடிக்குரற் பகுவாய்க்
 காரி ரிந்திட ஆர்ப்பொடு கடிதுசென் றதுவே.
 | 236 | 
      | 300 | விண்டு வின்படை அணுகலும் 
		விறலரி யதனைக்கண்டு மால்படை எடுக்குமுன் அப்படை கடிதாய்
 வண்டு 
		லாந்தொடை மார்பிடம் புகுந்துமன் னுயிரை
 உண்ட தில்லையால் அவசமாக் கியதவ 
		னுணர்வை.
 | 237 | 
      | 301 | அண்ணல் ஏந்திடும் வேற்படை 
		ஆணையால் அனையான்உண்ணி லாவுயிர் கொளவஞ்சி எருவைநீ ருண்டு
 கண்ண 
		னார்படை சிறிதுதன் வன்மையுங் காட்டித்
 துண்ணெ னப்பின்னர் மீண்டது 
		சூர்மகன் தன்பால்.
 | 238 | 
      | 302 | மீண்ட காலையில் வீரகோ ளரிஅவண் 
		வீழ்ந்துமாண்டு ளான்என மயங்கினன் அங்கது வயமார்த்
 தாண்டன் என்பவன் 
		கண்டுதன் தனிச்சிலை குனித்து
 மூண்ட செற்றமொ டணுகினன் கதிர்ப்பகை 
		முன்னர்.
 | 239 | 
      | 303 | ஓங்கல் வாகுடை வீரன்நேர்ந் 
		திடுமுன்ஒண் கையில்தாங்கும் வில்லினை அவுணனோ ராயிரஞ் சரத்தால்
 ஆங்க 
		னந்துணித் தாயிரங் கணைநுதல் அழுத்த
 ஏங்கி னார்சுரர் அனையன்வே றொருசிலை 
		எடுத்தான்.
 | 240 | 
      | 304 | எடுத்த கார்முகம் வாங்குமுன் 
		இரவியம் பகைஞன்தொடுத்து நூறுகோல் அதனையும் ஓரிரு துணியாப்
 படுத்தொ 
		ராயிரம் பகழியால் தேரொடும் பரியை
 முடித்து வாளியோ ரேழுநூ றுய்த்தனன் 
		மொய்ம்பில்.
 | 241 | 
      | 305 | தேர ழிந்திடச் சிலையதும் 
		அழிந்திடத் திறல்சேர்பேர ழிந்திடத் தனிமையாய் நின்றவன் பிரியா
 ஊர 
		ழிந்திட வறியனாம் பரிதிபோல் உற்றான்
 கார ழிந்திட ஆர்த்தனன் 
		கிளர்ந்தெழுங் கதத்தான்.
 | 242 | 
      | 306 | பராக மாப்புவி அகழ்ந்திடு 
		பணைமருப் பிரட்டைவராக மாயிரத் தாற்றல்பெற் றுடையசூர் மகன்மேல்
 விராக 
		நெஞ்சுடை விறற்கதிர் பாய்ந்தனன் விண்மேல்
 இராகு வின்மிசைத் தினகரன் 
		வாவினா னென்ன.
 | 243 | 
      | 307 | பாய்ந்து திண்டிறல் வெய்யவன் 
		வெய்யவன் பகைஞன்ஏந்து வார்சிலை பறித்திரு துணிபடுத் தெறிய
 வேந்தன் 
		மாமகன் வெகுண்டுதன் மருங்கிடை விசித்த
 நாந்த கம்முரீஇக் குற்றினன் 
		மருமத்தின் நடுவண்.
 | 244 | 
      | 308 | வீர வெயயவன் உரமிசைச் 
		செலுத்திய வெங்கட்கூரும் வாட்படை வாங்குமுன் ஆங்கவன் குருதி
 சூரி 
		யன்பகை அகலம்வந் துற்றது தூயோன்
 தாரை வாளொன்று மாறுபோய்க் குற்றிய 
		தகவின்.
 | 245 | 
      | 309 | குற்றி வாங்குமுன் வீரமார்த் 
		தாண்டனுங் கொதித்துக்கற்றை வெஞ்சுடர்ச் சுரிகையை மருங்குறை கழித்து
 மற்ற வன்மணி மார்பத்து வயிரவான் கவசம்
 இற்றி டும்படி குற்றினன் யாவரும் 
		இரங்க.
 | 246 | 
      | 310 | கிளைத்திடு டுந்திறல் 
		வெய்யவன் குற்றலுங் கேடுவிளைத்த சூர்மகன் தன்னுடைச் சுரிகையால் 
		மீட்டும்
 குளத்தில் மூழ்குறக் குற்றினன் அன்னதோர் குற்றிற்
 களைத்து 
		வீழ்ந்தனன் கால்பொர மறிந்தகற் பகம்போல்.
 | 247 | 
      | 311 | தாழ்ந்த சோரியும் அலக்கணும் 
		பெருகுறத் தடந்தேர்வீழ்ந்த வன்றனை விளிந்தனன் இவனென விடுத்துத்
 தாழ்ந்த தோர்பெருந் தனுவினை எடுத்துழி தன்னிற்
 சூழ்ந்த தானையோ டேற்றனன் 
		சூரியன் பகைஞன்.
 | 248 | 
      | 312 | ஏற்று நேர்வரு சூரன்மா மதலையை 
		எதிர்ந்துபோற்ற லார்புகழ் வீரராக் கதன்எனும் பொருநன்
 காற்றினன் 
		வந்தனன் துணைவர்கள் தொலைந்ததுங் கண்டான்
 சீற்றம் உள்ளுற நிமிர்ந்தெழக 
		குனித்தனன் சிலையை.
 | 249 | 
      | 313 | சிலைகு னித்தொரு பத்துநூ 
		றயிற்கணை தெரிந்தேஒலியு டைக்கழற் சூரன்மா மதலைமே லுய்ப்ப
 விலகி 
		யத்தொகைப் பகழியால் நம்பிதன் வியன்தேர்
 வலவ னைத்தலை துணித்தனன் வாளிநூ 
		றதனால்.
 | 250 | 
      | 314 | நூறு வாளியாற் சூதன்மாண் 
		டிடுதலும் நொடிப்பில்வேறொர் பாகனை வீரராக் கதன்நிறீ வெகுளா
 ஆறு 
		மாமுகன் அடிநினைந் தாயிரங் கணையால்
 கூறு செய்தனன் அவுணர்கோன் குருமணி 
		மகுடம்.
 | 251 | 
      | 315 | உவமை நீங்கிய ஐவகைத் தாயவேற் 
		றுருவின்மவுலி இற்றிடத் திருவின்றி மன்றநாண் எய்தி
 அவதி இல்லதோர் 
		பெருஞ்சினம் மூண்டெழ அவுணன்
 குவடி லாமணிக் குன்றுபோல் நின்றனன் குறுகி.
 | 252 | 
      | 316 | மணியி ழந்திடும் அரவுபோல் 
		கதிரிலா வான்போல்பணையி ழந்திடுங் கற்பகப் பழுமரந் தனைப்போல்
 துணைம 
		ருப்பினை இழந்திடுந் தந்திபோல் தொல்லை
 அணியி ழந்திடு மகளிர்போல் அழகிலன் 
		ஆனான்.
 | 253 | 
      | 317 | இற்றொ ழிந்திடு மகுடநீத் 
		தேவலர் அளித்தகற்றை ஒண்சுடர் மவுலியொன் றினைமுடி கவித்து
 வெற்றி 
		வீரராக் கதன்விடு சரமெலாம் விலக்கி
 மற்ற வன்சிலை துணித்தனன் வாளியா 
		யிரத்தால்.
 | 254 | 
      | 318 | ஆடல் வெஞ்சிலை அறுத்தலும் 
		வயமுடை அரக்கன்நாடி ஓர்தனு எடுக்குமுன் நாகிளங் கதிரை
 வீட ருந்தளை 
		இட்டவன் விசிகமா யிரத்தால்
 பாடு செய்தனன் அனையவன் தனதுதோ�ப் பரியை.
 | 255 | 
      | 319 | மாய்ந்து மாத்தொகை படுதலும் 
		வீரனோர் மணித்தேர்பாய்ந்த காலையில் இரவிமாற் றலனவன் பாணி
 ஏந்து 
		வில்லினை ஆயிரம் பகழியால் இறுப்ப
 வேந்தன் மாமகன் தன்மிசை அயிலொன்று 
		விடுத்தான்.
 | 256 | 
      | 320 | விடுத்த வேலினை நூகோல் 
		தொடுத்தவன் வீட்டத்திடத்தின் மேற்படு வீரராக் கதனது தெரிந்து
 தடத்த 
		தேரினும் இழிந்தறை கூவியே தனிபோய்
 எடுத்தெ றிந்தனன் பானுபோ பன்தனி 
		இரதம்.
 | 257 | 
      | 321 | எறியும் எல்லையில் தகுவர்தங் 
		குரிசில்விண் ணெழுந்துவெறிகொள் பங்கயத் தண்ணல்முன் கொடுத்ததேர் வேலைச்
 செறுநன் ஆவியை உண்கென விடுத்தலுஞ் சென்று
 விறல ரக்கன்மேற் பட்டதங் 
		கனையனும் வீழ்ந்தான்.
 | 258 | 
      | 322 | தரையில் வீழ்ந்திடும் வீரராக் 
		கதன்நனி தளர்ந்தான்முருகன் ஆணையாற் போந்தில தவனுயிர் முன்னம்
 இரவி 
		யம்பகை திகிரியின் மறிந்துளான் எழுந்து
 பொருதல் வன்மையின் றாகியே 
		இடைந்துபின் போனான்.
 | 259 | 
      | 323 | போன காலையில் வேறொரு தேரிடைப் 
		புகுந்துபானு மாற்றலன் வணக்கியோ�� கார்முகம் பற்றி
 ஊனும் ஆவியுங் 
		கவர்ந்திடு சரமழை ஓச்சி
 ஏனை வீரர்கள் தம்மையும் வெல்லுமா றெதிர்ந்தான்.
 | 260 | 
      | 324 | வீர வந்தகன் வீரமா மகேச்சுரன் 
		வீரதிரன் வீரமா மகேந்திரன் திதற்புரந் தரனாம்
 நேரி லா��இவர் ஐவருஞ் 
		சிலைகொடு நேர்ந்து
 சூரி யன்பகை வன்மிசைக் கணைமழை சொரிந்தார்.
 | 261 | 
      | 325 | சொரிந்து வேறுவே றளவையி 
		லாதபோர்த் தொழிலைப்புரிந்து பின்னுறச் சூர்மகன் சரங்கள்மெய் புதைய
 வருந்தி நின்றனர் இருவர்கள் மறிந்தனர் ஒருவர்
 இரிந்து தேர்சிலை 
		அழிந்துநொந் தேகினர் இருவர்.
 | 262 | 
      | 326 | வேறுசாற்றும் இத்திறம் 
		வீரர்கள் யாஆயுந் தனிமைந்தன்
 வீற்று வீற்றமர் ஆடியே வென்றிகொண் 
		டிடும்வேலை
 ஆற்ற லின்றிமுன் பின்றிய அவுணர்தா னைகள்முற்றும்
 நாற்றி 
		சைக்கணும் வந்துவந் தவனைநண் ணியவன்றே.
 | 263 | 
      | 327 | பின்று சேனைகள் யாவையுந் 
		தன்னயற் பெயர்த்தும்வந்தொன்ற வேயிர வியம்பகை வருதலும் உதுகண்டான்
 நன்று நன்றியவன் ஆற்றலின் திறமென நகைசெய்தான்
 என்று நந்திதன் கணத்தரில் 
		தலைமைபெற் றிருக்கின்றான்.
 | 264 | 
      | 328 | வாகை மொய்ம்புடை மேலையோன் 
		மாலயன் தனக்கெட்டாஏக நாயகன் திருமகன் தாளிணை இனிதுன்னி
 ஓகை யால்நனி 
		வழுத்தியே போர்த்தொழில் உளங்கொண்டு
 சேகு நெஞ்சுடைப் பானுகோ பன்முனஞ 
		செலலுற்றான்.
 | 265 | 
      | 329 | அரியும் நான்முகத் தொருவனுங் 
		குனித்திட அறத்தேவுஞ்சுருதி மாமறைத் தொகுதியுங் குனித்திடச் 
		சுரர்கோவும்
 இரவி அண்ணலும் மதியமுங் குனித்திட இகலாடல்
 திருவும் 
		மோடியுங் குனித்திடக் குனித்தனன் சிலைதன்னை.
 | 266 | 
      | 330 | விசையெ டுத்திடும் ஊதையும் 
		வடவையும் வெருக்கொண்டுவசையெ டுத்திட அளக்கருந் தம்மொலி வறிதாகத்
 திசையெ டுத்திடும் அண்டமும் புவனமுஞ் சிதைந்தேமா
 றிசையெ டுத்திட 
		எடுத்தனன் சிலையின்நாண் இசைதன்னை.
 | 267 | 
      | 331 | நாணொ லிக்கொடு வெஞ்சமர் 
		புரியமேல் நடப்பானைக்காண லுற்றனன் தினகரற் சினவிய கதக்கண்ணான்
 ஏணு 
		டைப்பெருங் கார்முகம் ஒன்றுவே றெடுத்திட்டான்
 சேணி லத்தவர் பனித்திடக் 
		குனித்தொலி செய்திட்டான்.
 | 268 | 
      | 332 | முன்பு திண்டிறல் வாகுவின் 
		வாகுவின் முழக்கத்தைஅன்பின் நாடிய அமரர்கள் அளவைதீர் மகிழ்வெய்திப்
 பின்பு சூ��மகன் சிலையொலி கேட்டலும் பேதுற்றே
 இன்ப துன்பங்கள் ஒருவழிக் 
		கண்டனம் இவணென்றார்.
 | 269 | 
      | 333 | புகழ்ச்சி மேலவன் குணத்தொலி 
		செவிக்கொடு பொலிந்தோர்கள்இகழ்ச்சி மிக்கவன் குணத்திசை கேட்டலும் 
		இரங்குற்றார்
 திகழ்ச்சி ஆரமு துண்டவர் நஞ்சமுண் செயல்போன்றார்
 மகிழச்சி ஈற்றினில் துன்புவந் தடைவதோர் வழக்கன்றோ.
 | 270 | 
      | 334 | மாயன நான்முகன் மகபதி முதலிய 
		வானோர்கள்காயம் யாவினும் நிரந்தனர் அமர்த்தொழில் காண்பாராய்
 ஆய 
		போழ்தினிற் சூரபன் மாவருள் அசுரேசன்
 தூய வன்தனை நோக்கியே இனையன 
		சொல்கின்றான்.
 | 271 | 
      | 335 | கோதை வேலினால் தாரகன் தனையடு 
		குகன் அல்லைஆதி ஏனமாய்ப் புவியினைக் கிளைத்திடும் அரியல்லை
 வேத 
		நான்முகத் தவன்அல்லை விண்ணுளோர் வேந்தல்லை
 தூத னாகிய நீகொல்என் 
		னெதிர்பொருந் தொழில்வல்லாய்.
 | 272 | 
      | 336 | இழைத்த மாயையால் முற்பகற் 
		போந்தனை எங்கோன்முன்பழித்தி றஞ்சில கூறினை இளவலைப் படுத்திட்டாய்
 அழித்தி மாநகர் யான� துணர்ந்திலன் அதனாலே
 பிழைத்தி அன்றெனின் உய்ந்திவண் 
		வந்திடப் பெறுவாயோ.
 | 273 | 
      | 337 | பொருது வென்றிகொண் டுனதுயிர் 
		நடுவனூர் புகுவிப்பன்சரதம் இங்கிது பிறந்திடும் அளவையில் தழல்காலும்
 பரிதி யைச்சிறை பிணித்தவன் ஒற்றனைப் படுத்தானென்
 றொருத னிப்பழி கொள்வதல் 
		லாற்புகழ் உறுவேனோ.
 | 274 | 
      | 338 | முனைமு டித்தநின் துணைவரை 
		வென்றன் முரட்பூதந்தனைய டர்த்தனன் சிந்தினன் அனிகமுந் தனிநோ�ந்த
 உனைமு டிக்குவன் உனைவிடுத் தோனையும் உலைவித்தென்
 சினமு டிக்குவன் மகபதி 
		தன்னையுஞ் சிறைசெய்வேன்.
 | 275 | 
      | 339 | என்ற காலையில் வீரவா 
		கியம்புவான் எவரேனுஞ்சென்று போர்புரி வார்தமை வெல்வதே திறலாகும்
 பின்று வார்தமை அடுவதே வசையலால் பிறிதுண்டோ
 வென்றி எய்துவார் உரைப்பரோ 
		போர்புரி விரைந்தென்றான்.
 | 276 | 
      | 340 | வேறுஎன்னு மாத்திரத் 
		திரவியம் பகைஞன்ஈ ரைந்து
 பொன்னெ டுங்கணை எடுத்துவார் சிலையிடைப் பூட்டி
 மின்னு வாமென விடுத்தலும் வீரனும் விரைவில்
 அன்ன ஈரைந்து வாளிதொட் 
		டவற்றினை அறுத்தான்.
 | 277 | 
      | 341 | ஆறு நாலுவெம் பகழியும் 
		அறுத்தபின் அறிஞன்நூறு வாளிகள் விடுத்தலும் வந்தது நோக்கி
 வீறும் 
		அத்தொகைச் சரங்கள்விட் டவையிடை வீட்டி
 ஈறி லான்மகன் மீதிலா யிரங்கணை 
		எய்தான்.
 | 278 | 
      | 342 | ஆயி ரங்கணை தூண்டிமற் 
		றவற்றினை அறுத்துத்தூய வன்பதி னாயிரஞ் சுடுசரந் துரப்பத்
 தீயன் 
		அத்தொகை வாளியால அங்கவை சிந்தி
 ஏயெ னக்கொடும் பகழிநூ றாயிரம் எய்தான்.
 | 279 | 
      | 343 | உய்த்த வாளிநூ றாயிரந் 
		தன்னையும் உரவோன்அத்தொ கைப்படு பல்லவந் தூண்டியே அறுத்துப்
 பத்து 
		நூற்றின்மேல் ஆயிரம் பெற்றிடும் பகழி
 மெய்த்த ழற்கதிர் இரவியம் 
		பகைஞன்மேல் விடுத்தன்.
 | 280 | 
      | 344 | விடுத்த வாளியைப் பத்துநூ 
		றாயிரம் விசிகந்தொடுத்து மாற்றியே சூரபன் மாவருள் தோன்றல்
 எடுத்து 
		நூறுநூ றாயிரம் புங்கவம் ஏவ
 நொடிப்பில் வீட்டினன் அனையன சிலீமுகம் 
		நூக்கி.
 | 281 | 
      | 345 | வஞ்ச னேவினை மாற்றியே 
		எம்பிரான் மதலைசெஞ்ச வாளிநூ றாயிர கோடிகள் செலுத்தக்
 கஞ்ச மாமகள் 
		உயிர்த்திடு திருமகன் கணிப்பில்
 புஞ்ச வார்கணை இறுதிநாள் முகிலெனப் 
		பொழிந்தான்.
 | 282 | 
      | 346 | பா��ம றைந்தன திசையெலாம் 
		மறைந்தன படர்முந்நீர்ம றைந்தன குலகிரி மறைந்தன நிலவுங்
 கார்ம றைந்தன 
		ககனமும் மறைந்தன கதிரோன்
 தேர்ம றைந்தன இருவர்தங் கணைமழை செறிய.
 | 283 | 
      | 347 | பாரி வட்டமும் மாதிர வட்டமும 
		பரவைவாரி வட்டமும் நேமியின் வட்டமும் மலிவான்
 மூரி வட்டமும் 
		அண்டத்தின் வட்டமும் முடுகிச்
 சாரி வட்டமாய்த் திரிவன அனையவர் தடந்தேர்.
 | 284 | 
      | 348 | மாறில் வாளிகள் முறைமுறை 
		சொரிதலான் மறைவர்ஈறு செய்தவை அகற்றுழித் தோன்றுவர் இமைப்பில்
 வேறு 
		வேறதாய் இத்திறம் நிகழ்த்திடும் வீரர்
 சூறை போலமர் ஆடினர் உலகெலாஞ் 
		சுற்றி.
 | 285 | 
      | 349 | இரவி வானவன் தனதுதிண் 
		தேரினும் ஈ��க்கும்புரவி மீதினும் உடுபதி மானத்தும் புறஞ்குழ்
 கரிகள் மீதினும் விண்ணுலா அமரர்தங் கண்ணும்
 பொருவி லாளியர் விடுகணை 
		சிதறியே போமால்.
 | 286 | 
      | 350 | செங்கண் வீரர்கள் இருவரும் 
		பொருவதித் திசையென்றங்கு நாடரி தவர்விடும் பகழிகள் அனந்தம்
 மங்குல் 
		வானெலாம் நிரந்தன மிசையினும் வருமால்
 இஙகு நிற்கரி தெமக்கென ஓடினர் 
		இமையோ��.
 | 287 | 
      | 351 | புடவி கீழ்வன அண்டங்கள் 
		துளைப்பன புறத்திற்கடலொ ரேழையும் பருகுவ புவனங்கள் கடப்ப
 அடலின் 
		மேதக்க யாவருந் தடுத்திடற் கரிய
 வடவை நாவையுந் துணிப்பன அவர்விடும் 
		வாளி.
 | 288 | 
      | 352 | இகல்க டந்திடு திண்டிறல் 
		வாகுவும் இரவிப்பகையும் ஆற்றிய பெருஞ்சமர் வலியையார் பகர்வார்
 மிகுதி கொண்டபல் கணைமழை உலப்புறா விடுப்பத்
 திகிரி யம்படை போன்றன 
		அனையர்கைச் சிலைகள்.
 | 289 | 
      | 353 | வெய்ய வன்றனைத் தளையிடும் 
		வெய்யவன் விறலார்துய்ய மொய்ம்பினான் விடுசர மாரியைத் தொலைத்துக்
 கையி ருந்திடு கார்முகம் ஒன்றையுங் கடிதின்
 ஐயி ரண்டுநூ றயிற்கணை 
		யால்அறுத் தா��த்தான்.
 | 290 | 
      | 354 | ஆ��த்த காலையில் வீரவா 
		குப்பெயர் அறிஞன்பேர்த்தும் ஓர்தனு வாங்கியே பெருஞ்சினம் பிடித்துச்
 சூ��த்த வெங்கணை ஆயிரம் விரைவினில் தூண்டி
 மூர்த்த மொன்றினில் அவுணன்ஏந் 
		தியசிலை முரித்தான்.
 | 291 | 
      | 355 | முரித்த காலையின் அவுணர்கோன் 
		ஆற்றவும் முனிந்துகரத்தின் மற்றொரு சிலைகுனித் தாயிரங் கணைகள்
 உரத்தின் நம்பியும் அணங்குற விடுத்தலும் ஒரேழ்
 சரத்தி னாலவன் தனிப்பெரு 
		மவுலியைச் சாய்த்தான்.
 | 292 | 
      | 356 | வாய்த்த பன்மணி குயிற்றிய 
		கனகமா மவுலிசாய்த்த காலையின் வேறொரு கதிர்முடி தன்னை
 ஏத்தல் 
		சான்றிடு சூர்மகன் புனையுமா றெடுத்தான்
 பூத்த செங்கதி ரவனைமுன் 
		பிடித்தவா போல.
 | 293 | 
      | 357 | எடுத்த பொன்முடி சென்னியிற் 
		கவித்தனன் இதன்முன்வடித்த வெங்கணை ஆயிரந் தூண்டிமற் றவன்மேல்
 அடித்த 
		சாலிகை சிந்தினன் சிந்திய அளவில்
 நடித்து நல்லறம் பாடின பரிதியும் 
		நகைத்தான்.
 | 294 | 
      | 3589 | நிருதர் போற்றிடு சூர்மகன் 
		ஆயிர நெடுங்கோல்சுருதி நாயகன் இளவல்தன் நுதலிடைத துரப்பக்
 குருதிநீ 
		ருண்டு குழுவொடுந் தோன்றுவ குணபால்
 பரிதி வானவன் இளங்கதிர் விரிந்தெழும் 
		பரிசின்.
 | 295 | 
      | 359 | நெற்றி மீதுகோல் ஆயிரம் 
		படுதலும் நிறையில் 
        சற்று நீங்கிலன் தன்வலி சுருங்கிலன் தக்கோன்
 பற்றிஅங் கையால் 
		பறித்தவை வீசினன் பகைஞன்
 கொற்ற வெய்யகோல் விளிவின்றி நின்றிடுங் கொல்லோ.
 | 296 | 
      | 360 | சகத்தை நல்கிய அறுமுகற் 
		கிளவல்அத் தகுவன்முகத்தின் ஆயிரம் அகலத்தின் ஆயிரம் மொய்ம்பின்
 அகத்தின் ஆயிரங் கரங்களின் ஆயிர மாக
 மிகைத்த வெங்கணை தெரிந்தொரு 
		தொடையினில் விடுத்தான்
 | 297 | 
      | 361 | விட்ட வாளிகள் சூர்மகன் 
		அவயவம் விரவிப்பட்டு மூழ்கலும் அவசமாய்த் தளர்ந்தனன் பாணி
 நெட்டி 
		ருஞ்சிலை ஊற்றமாய் வறியனாய் நின்றான்
 தொட்ட தெண்கயத் தூறிமேல் எழுந்தது 
		சோரி.
 | 298 | 
      | 362 | வந்து வந்தெழு குருதிநீர் 
		முழுதுடன் மறைப்பப்புந்தி தன்னிடைச் சீற்றமும் மூண்டெழப் பொலிவான்
 செந்த ழற்பிழம் பாலுயா� குன்றெனத் திகழ்ந்தான்
 அந்தி மேற்றிசை எழிலியின் 
		வண்ணமு மானான்.
 | 299 | 
      | 363 | ஆன போழ்தினில அவுணமாத் 
		தலைவர்கள் யாரும்பானு மாற்றலன் பொருவலி இன்மையைப் பாராச்
 சேனை 
		நாற்பெரும் பரவையி னோடுமுன் சென்று
 மான வேற்படை வீரவா குவின்புடை 
		வளைத்தார்.
 | 300 | 
      | 364 | இலைபி றங்கிய சூலம்விட் 
		டேறுதண் டெழுவம்உலைபி றங்கிய கணிச்சிநே மிப்படை ஓங்கும்
 சிலைபி 
		றங்கிய பகழிகள் வீரன்மேற் செலுத்தி
 மலைபி றங்கிய இரவிசூழ் திமிரென 
		மறைத்தார்.
 | 301 | 
      | 365 | வேறுதொடைக்கலன் நிலவு 
		மார்பில் தொல்அசு ரேசர் கொண்ட
 படைக்கல மான வெல்லாம் விடுத்தலுந் தனது 
		பாணி
 இடைக்கலந் திருந்த வார்விற் குனித்தனன் இடுக்கட் பட்டோர்
 அடைக்கலம் புகுதும் வௌ�ளி அருவரை அளித்த அண்ணல்.
 | 302 | 
      | 366 | ஆயிர கோடி கோடி அடுசரந் 
		தொடையொன் றாகமாயிரும் புயத்து வள்ளல் வல்லையின் வலிது தூண்டித்
 தீயவர் உடன்று விட்ட படையெலாஞ் சிந்த லுற்றான்
 பாயிருட் படலங் கீறுஞ் 
		செங்கதிர்ப் பரிதி யேபோல்.
 | 303 | 
      | 367 | அவுணர்கள் யாருமுய்த்த அடுபடை 
		மாரி சிந்திக்குவவுறு விசயத் தோளான் கொடுஞ்சரம் அனந்த கோடி
 தவறில 
		வாக உய்த்துத் தகுவர்தந் தானை முற்றும்
 உவரியுண் வடவை போல ஒல்லையின் 
		முடிக்க லுற்றான்.
 | 304 | 
      | 368 | தோலினை அறுக்கும் வாளைத் 
		துணித்திடுஞ் சோதி வில்லின்காலினை அறுக்கும் வெய்ய கணிச்சியை அறுக்கும் 
		வீசுங்
 கோலினை அறுக்கும் நேமிக் கொடும்படை அறுக்குங் காமர்
 வேலினை 
		அறுக்கும் அம்மா விடலைதன் வீர வாளி.
 | 305 | 
      | 369 | வேறுஉரந்துணிக்குங் 
		கவசமிடும் உரந்துணிக்கும் புயந்துணிக்கும் ஒன்ன லார்தங்,
 கரந்துணிக்கும் அடல்புரிமோ கந்துணிக்குங் கழல் துணிக்குங் கணிச்சி கைத்தோ,
 மரந்துணிக்குங் குனித்தகொடு மரந்துணிக்கும் வாய்துணிக்கும் மவுலி தாங்குஞ்,
 சிரந்துணிக்கும் எறிந்திடும்வச் சிரந்துணிக்கும் உரவோன்றன் செங்கை 
		வாளி.
 | 306 | 
      | 370 | கதமறுக்கும் வதமறுக்குந் 
		தூங்குபுழைக் கையறுக்குங் கபோலத் தூறும், மதமறுக்கும் நுதலறுக்கும் 
		வாயறுக்குஞ் செவியறுக்கும் வயிரக் கோட்டின்,
 விதமறுக்கும் வாலறுக்கும் 
		மேய்யறுக்குந் தலையறுக்கும் வேழஞ் செல்லும்,
 பரமறுக்கும் முரணறுக்கும் 
		அரண்அறுக்கும் வீரன்விடு பகழி மாரி.
 | 3071 | 
      | 371 | ஆரறுக்குஞ் சகடறுக்கும் 
		அச்சறுக்கும் நெடுந்துவசம் அறுக்குந்தேரின், பாரறுக்குங் கூம்பறுக்கும் 
		பாகறுக்கும் அங்கணுறும் பதகர் ஆவி,
 வேரறுக்கும் ஆடியறுக்கும் 
		விரிதருகொய் யுளையறுக்கும் விளங்குஞ் செம்பொன்,
 தாரறுக்கும் புரவிகளின் 
		தலையறுக்கும் நிலையறுக்குஞ் சரங்கள் மன்னோ.
 | 308 | 
      | 372 | கானோடும் வரையோடுங் கரையோடுந் 
		திரையோடுங் கழியினோடும், மீனோடுங் கடலோடும் விசையோடுந் திசையோடும் 
		மேகமோடும்,
 வானோடும் நிலனோடும் இருகதிரின் மருங்கோடும் வாளத்தோடும்,
 தேனோடும் 
		பூந்தாரான் சிலையோடும் நெடுமபகழி சிந்துஞ்சென்னி.
 | 309 | 
      | 373 | வேறுபாயிரும் புனல்போல் 
		ஓடிப் படியெனப் பரந்து நீடித்
 தேயுவின் திறல்மேல் கொண்டு சேணென முடிவின் 
		றாகி
 வாயுவின் விரைந்து சென்று வள்ளல்கை வாளி ஒவ்வொன்
 றாயிர கோடி 
		சென்னி அறுக்கினும் வெறுக்கி லாவே.
 | 310 | 
      | 374 | வரந்தனில் தமைமை சான்ற ஒருசில 
		மான வீரர்சிரந்தனைத் துணித்துக் கொண்டு சீர்கெழு சூரன் வைகும்
 புரந்தனிற் கொடுபோய் அன்னார் பொற்றொடி மடந்தை மார்தங்
 கரந்தனின் 
		உகுத்துச் செல்லுங் கந்தனுக் கிளவல் வாளி.
 | 311 | 
      | 375 | புரண்டன வயவர் யாக்கை 
		பொழிந்தன குருதித் தாரைஉருண்டன மான்தேர் ஆழி உலவின வலவுங் கூளி
 திரண்டன குணங்கர் ஈட்டஞ் செறித்ன சேனம் பிள்ளை
 இருண்டன திசைகள் முற்றும் 
		இரிந்தன ஒழிந்த தானை.
 | 312 | 
      | 376 | பட்டன புரவிப் பந்தி படிந்தன 
		முடிந்த வேழங்கெட்டனர் அவுணர் யாருங் கிடந்தன ஒடிந்த திண்டேர்
 அட்டனன் ஒருவன் நின்றான் அகலிரு விசும்பை வலலே
 தொட்டன பிணத்தின் பொம்மல் 
		சோரியா றொழுகிற் றன்றே.
 | 313 | 
      | 377 | பாய்ந்திடு குருதி நீத்தம் 
		படர்ந்தது புகுந்து பௌவஞ்சேர்ந்தது சுறவு மாந்திச் செருக்கிய திறலோன் 
		அம்பால்
 வீந்திடும் ஆவி விடுத்தனர் சென்று தந்தாள்
 ஓய்ந்தனர் நடுவன் 
		தூதர் ஒழிந்தன கழிந்த பூசல்.
 | 314 | 
      | 378 | சிந்திய அவுணர் தானைச் 
		செய்தியும் பரிதிக் கூற்றன்நொந்தனன் தமியன் நின்ற தன்மையும் நோக்கி 
		நோக்கி
 நந்தம தண்ணல் தன்பால் நண்ணுதும் என்னா மீண்டு
 வந்தன முந்து 
		சாய்ந்த வயப்பெரும் பூத வௌ�ளம்.
 | 315 | 
      | 379 | இரிந்திடு பூத வீர ரியாவரும் 
		மீண்டார் நின்றுவருந்திய தலைவர் தொல்லை வன்மிடல் பெற்றார் அங்கண்
 அருந்துயர் உழந்து வீழ்ந்தார் ஆவியோ டெழுந்தார் இன்னோர்
 பொருந்தனி வீர 
		வாகுப் புடையுற வளைந்து புக்கார்.
 | 316 | 
      | 380 | அங்கது போழ்து தன்னின் 
		அயர்வுயிர்த் துணர்வு தோன்றச்செங்கதி ரோனைச் சீறுஞ் சேவகன் சுற்று 
		நோக்கிச்
 சங்கையின் நிமிர்ந்த கொள்கைத் தன்பெருஞ் சேனை காணான்
 கங்கமுங் கழுகும் ஆர்க்குங் களேபரச் சூழல் கண்டான்.
 | 317 | 
      | 381 | நேருறு தனிவில் லாளி நின்றது 
		நோக்கி நம்பால்சாருறும் அனிக மெல்லாந் தடிந்தனன் இவனென் றுன்னி
 ஆரிடை யடஙகிற் றம்மா ஆண்மைக்கும் அவதி யுண்டோ
 வீரன்மற் றிவனே அல்லால் 
		வேறிலை போலு மென்றான்.
 | 318 | 
      | 382 | இனையன வியந்து பின்னும் 
		என்னெதிர் பொருத வீரர்அனைவரும் விளிந்தோர் அன்றி அடல்வலி படைத்தோர் 
		இல்லை
 குனிசிலை ஒருவன் நின்றான் கொற்றமுற் றிடுவன் அம்மா
 தினகரன் 
		பகைஞன் ஆற்றல் சீரிது சீரி தென்றான்.
 | 319 | 
      | 383 | கன்னலொன் றளவை தன்னில் 
		கந்தவேள் ஒற்றன் யாக்கைசின்னபின் னங்களாகச் செய்குவன் செய்தி டேனேல்
 பின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனுமல்லேன்
 என்னொரு சிலையும் 
		யானும் எரியிடைப் புகுவ னென்றான்.
 | 320 | 
      | 384 | வஞ்சினம் இனைய கூறி மாதிரக் 
		கிழவன் மைந்தன்நெஞ்சினில் வெகுளித் தீயும் மானமும் நீடி ஓங்க
 எஞ்சலில் ஈசன் முன்னம் ஏகிய கொடுநஞ சென்னச்
 செஞ்சிலை வீரன் முன்னந் 
		தேரொடுஞ் சென்று சேர்ந்தான்.
 | 321 | 
      | 385 | கைத்தலத் திருந்த தொல்லைக் 
		கார்முகம் வளைய வாங்கிமுத்தலைப் பகழி அங்கோ ராயிரம் விடுப்ப மொய்ம்பன்
 அத்திறத் தியன்ற வாளி ஆயிரஞ் சிலையிற் பூட்டி
 உய்த்தனன் அறுத்துப் 
		பின்னு மொராயிரஞ் சரங்கள் விட்டான்.
 | 322 | 
      | 386 | அற்றது தெரிந்து தீயோன் 
		ஆயிரம் விசிகந் தூண்டிமற்றவை விலக்கிப் பின்னும் வாளியோர் அயுதந் 
		தொட்டுக்
 கொற்றவன் தேரும் பாகுங் குரகதக் குழுவு மாயச்
 செற்றனன் அதனை 
		நோக்கிச் சேணுளார் அலக்கண் உற்றார்.
 | 323 | 
      | 387 | வில்லொடும் வீர வாகு வேறொரு 
		தோ�மேற் பாய்ந்துவல்லிதின் நூற்று நூறு வாளிகள் துரந்து வெய்யோன்
 சில்லியந் தேரும் மாவும் வலவனுஞ் சிலையும் வீழப்
 பல்லிருந் துண்டஞ் 
		செய்தான் விண்ணவர் பண்ணை ஆர்ப்ப.
 | 324 | 
      | 388 | பூங்கழல் மிழற்ற வேறோர் 
		பொன்னவாந் தேரின் மீப்போய்ஆங்கொரு சாபம் பற்றி அவுணன்றன் செவியின் 
		காறும்
 வாங்கினன் ஏழு நூறு வச்சிரப் பகழி பூட்டி
 ஓங்கலம் புயத்து 
		வீரன் உரத்திடைப் புகவுய்த் தார்த்தான்.
 | 325 | 
      | 389 | ஆகத்திற் பகழி பாய அறுமுகன் 
		தூதன் முன்னஞ்சோகத்தை உணர்கி லாதோன் துயரத்தின் சுவையுங் கண்டு
 மாகத்தில் இரவி தன்னை வன்சிறை பிணித்தோன் சென்னி
 காகத்துக் கிடுவன் 
		என்னா வெகுண்டனன் காலன் போல்வான்.
 | 326 | 
      | 390 | கறுத்திடு வீரன் சூரேழ் 
		கங்கபத் திரங்கள் ஏவிஅறுத்தனன் சிலையைப் பின்னும் ஆயிரம் பகழி தூண்டி
 நொறிற்பரி இரதந் தன்னை நூறினன் நூறு கோலான்
 மறுத்தெதிர் பொருத தீயோன் 
		மருமத்தை வாயில் செய்தான்.
 | 327 | 
      | 391 | வருந்திலன் அதற்கு மைந்தன் 
		வயினுறும் இரத மொன்றின்விரைந்துடன் புகலும் வீரன் விசிகமா யிரத்தைத் 
		தூண்டி
 உரந்திறந் திட்ட வாற்றால் ஓச்சியே புறத்தில் தூங்கும்
 அரந்திகழ் பகழத் தூணி துணிபட அறுத்தான் அன்றே.
 | 328 | 
      | 392 | தூவுறு பகழி தூர்க்குந் 
		தூணியிற் றிடலும் நேமிக்காவலன் தனயன் அம்மா கார்முகம் விஞ்சை தன்னால்
 மேலவன் வென்றி கோடல் அரிதெனா வினைய முன்னித்
 தேவர்தே வுதவு மோகப் 
		படையினைச் செங்கை கொண்டான்.
 | 329 | 
      | 393 | சிந்தனை கவரும் மோகத் தீப்படை 
		அவுணன் செங்கைவந்திட அனைய போழ்தின் மனத்தினால் வழிபா டாற்றி
 வெந்திறல் அனிகத் தோடு மேவலன் தன்னை எய்திப்
 புந்தியை அழித்து வீட்டி 
		வருகெனப் புகன்று விட்டான்.
 | 330 | 
      | 394 | விட்டிடு மோக மென்னும் 
		வியன்படை வெகுளி வீங்கித்தட்டுடை நெடுந்தேர் வெய்யோன் தன்பெருஞ் 
		சுடர்கள் மாற்றி
 நெட்டிருட் படலை வீசி நிரந்தபல் லுயிரும் அஞ்சி
 உட்டௌ� வகன்று மாழ்க ஒல்லெனப் பெயர்ந்த தன்றே.
 | 331 | 
      | 395 | பெயர்ந்திடு மோக நாமப் 
		பெரும்படை ஊக்க நோகதித்துயர்ந்தனர் வெருவி ஆற்றத் துளங்கினர் 
		துணுக்கென் றுள்ளம்
 அயர்ந்தனர் பூதர் யாரும் மவ்வவர் தலைவ ரானோர்
 சயந்தனை இழந்து நின்று சாம்பினர் தேம்பு கின்றார்.
 | 332 | 
      | 396 | வேறுமோகப் படைசே றலுமுந் 
		தெதிர்மா
 றேகப் படையொன் றையுமே வுகிலார்
 சேகப் படையத் தொடைசிந் 
		தினரால்
 மாகப் படைமொய்ம் புடைவள் ளல்பினோர்.
 | 333 | 
      | 397 | அந்தத் திறல்வெம் படையாற் 
		றலுடன்வந்துற் றுழிமே லவன்மற் றிதுதான்
 எந்தப் படையால் அழிவெய் 
		துமெனாச்
 சிந்தித் தனன்வே றொருசெய் கையிலான்.
 | 334 | 
      | 398 | ஒன்றா முதலோன் இவையுன் 
		னுதலும்அன்றா லம்வருந் திறனா மெனவே
 சென்றார் உணர்வுஞ் சிதைவித் 
		ததுபோர்
 வென்றார் புகழ்மோ கவியன் படையே.
 | 335 | 
      | 399 | இலக்கத் துடன்எண் மரும்ஏ 
		னையரும்அலக்கத் துடன்வீழ்ந் தனர்மாற் றலரூர்
 கலக்குற் றிடுகா 
		ளைகருத் தழியா
 நிலக்கட் படுகந் தெனநின் றனனால்.
 | 336 | 
      | 400 | நிற்கும் பொழுதத் தினின்நீ 
		டகல்வானற்கும் பரிதிப் பகையங் கதுகண்
 டெற்கின் றெதிரா யினர்யா 
		வருளார்
 நற்குன் னினன்என் றுநகைத் தனனே.
 | 337 | 
      | 401 | புகழுற் றிடுமே லவர்புந் 
		தியின்மாறிகழுற் றிடுபெற் றிதெரிந் தவுணன்
 மகிழுற் றுநகைத் துவயம் 
		புனையா
 நிகழுற் றிடுசீ ரொடுநின் றனனே.
 | 338 | 
      | 402 | மல்வன் மைகொள்மொய்ம் 
		பனுமற் றவருந்
 தொல்வன் மையிலா துடல்சோர்ந் தனரால்
 வில்வன் மையினால் 
		இவர்வீ டுறவே
 கொல்வன் கடிதென் றுகுறித் தனனே.
 | 339 | 
      | 403 | வரிகின் றவில்வாங் கினன்வா 
		லுணர்வுதிரிகின் றவன்மேற் சிலைவீ ரர்கள்மேல்
 விரிகின் றகணப் படைமேல் 
		விசிகஞ
 சொரிகின் றனன்யாக் கைதுளைத் தனனே.
 | 340 | 
      | 404 | ஆங்கா கியவே லையில்ஆ றுமுகன்பாங்காம் விறலோ னொடுபா ரிடர்கள்
 நீங்கா மருள்மால் கொடுநே ரலனால்
 தீங்கா யினதன் மைதெரிந் தனனே.
 | 341 | 
      | 405 | தெரிந்தான் முகமா றொடுசேர்ந் 
		துயிர்தோறிருந்தார் அருள்செய் திடுமெம் பெருமான்
 விரைந்தாங் கொர்அமோ 
		கவியன் படையைப்
 புரிந்தான் அதனோ டுபுகன் றிடுவான்.
 | 342 | 
      | 406 | நன்றே தௌ�வுற் றெமர்நண் 
		ணும்வகைநின்றே திலன்விட் டநெடும் படைபாற்
 சென்றே அதன்வன் மைசிதைத் 
		திவண்நீ
 வென்றே வருகென் றுவிடுத் தனனே.
 | 343 | 
      | 407 | ஏண்கொண் டசிவன் மகனே வுபடைசேண்கொண் டுபடா�ந் திருள்சிந் தையராய்த்
 தூண்கொண் டிடுதோ ளவர்துன் 
		னியதோர்
 மாண்கொண் டசெருக் களம்வந் ததுவே.
 | 344 | 
      | 408 | மிடல்கொண் டவமோ கவியன் 
		படைசென்றிடுகின் றுழிவெய் யவனே வுபடை
 அடல்கொண் டிடும்வீ ராகத் 
		தில்இருள்
 உடையும் படிவல் லையினோ டியதால்.
 | 345 | 
      | 409 | அசைகொண் டவுடுத் திரளா 
		னவெலாம்மிசைகொண் டவினன் வரவே கியபோல்
 திசைகொண் டிடுநம் மவர்சே 
		னையொரீஇ
 விசைகொண் டவுணன் படைமீண் டதுவே.
 | 346 | 
      | 410 | மோகத் தனிவெம் படைமொய்ம் 
		பிலதாய்ஏகத் திறல்வா குவும்ஏ னையரும்
 ஆகத் தினின்மை யல்அகன் றமலன்
 வாகைப் படைகண் டுமகிழ்ந் தனரே.
 | 347 | 
      | 411 | அழலுற் றதுபோ லஅகல் மணியின் நிழலுற் றிடுதேர் மிசைநின் றவனும்
 எழலுற் றிடுவீ ரர்கள்யா வர்களுந்
 தொழலுற் றனர்நின் றுதுதித் தனரே.
 | 348 | 
      | 412 | செயிர்கொண் டகருத் தொடுசெற் 
		றலர்தம்உயிர்கொண் டிடுவோன் படையூற் றமெலாம்
 அயிர்கொண் டிடஅட் 
		டதன்ஆற் றல்தெரீஇ
 மயிர்கொண் டபொடிப் பொடுவாழ்த் தினரால்.
 | 349 | 
      | 413 | தீயோன் படைசெய் தசெயற் 
		கையில்யாம்மாயோ மருளென் கையகத் தடையா
 வாயோ டுரைவீ ரமறுத் தனராய்
 ஏயோ வெனவௌ� கினர்யா வருமே.
 | 3501 | 
      | 414 | அண்டா தவனால் எம்மகத் 
		திலிருள்உண்டா கியதன் மையுணர்ந் தறிவன்
 விண்டா னுறஇப் படைவிட் 
		டனனென்
 றெண்டா வுமுளத் திடையெண் ணினரால்.
 | 351 | 
      | 415 | முந்நாள் கெனுமொய்ம் 
		புளமூர்த் திதனைஉன்னா அருள்நீர் மையுளத் தடையா
 அன்னார் தொழுதேத் 
		தினர்அத் துணையின்
 மின்னா மெனஅப் படைமீண் டதுவே.
 | 352 | 
      | 416 | மீண்டுற் றவமோ கவியன் 
		படைபோய்த்தூண்டுற் றகுகன் புடைதுன் னியதால்
 ஆண்டுற் றிடும்வீ 
		ரர்கள்அண் டலன்மேல்
 மூண்டுற் றிடுபூ சல்முயன் றனரே.
 | 353 | 
      | 417 | ஆங்குற் றிடுகா லையடுந் 
		திறலின்பாங்குற் றிடுமொய்ம் புபடைத் துடையோன்
 நீங்கற் கருமா 
		னமும்நீள் சினமும்
 ஓங்குற் றெழவின் னதையுன் னினனே.
 | 354 | 
      | 418 | அந்நே ரலன்ஈண் டொரடற் படையான்முன்னே மயல்செய் தமுரண் தொலைய
 இன்னே அடுவேன் எனஎண் ணமுறாக்
 கொன்னே 
		அரன்மாப் படைகொண் டனனே.
 | 355 | 
      | 419 | அங்கத் துணைகண் டனன்அவ் 
		வசுரன்எங்கட் கிறைவன் படைஏ கியதும்
 வெங்கட் படுதன் படைமீண் டதுவுஞ்
 செங்கட் டிறல்அண் ணல்செயற் கையும.
 | 356 | 
      | 420 | வேறுஇம்மெனச் சூர்மகன் 
		இவற்றை நோக்குறா
 விம்மிதம் எய்தினன் வீர மொய்ம்புடைச்
 செம்மலை 
		எதிர்ந்திலன் செருக்கு நீத்தனன்
 கைம்மிகு துயரினன் கருதல் மேயினான்.
 | 357 | 
      | 421 | இவ்விடை ஒன்னலர் எண்ணம் 
		யாவையும்வவ்வினன் மாநில வரைப்பின் வீட்டினன்
 உய்வகை பெற்றுடன் 
		உணர்ந்து தோன்றினார்
 செய்வதென் ஐயகோ கடவுள் செய்கையே.
 | 358 | 
      | 422 | எடுத்தனன் மாற்றலன் இறைவன் 
		மாப்படை 
        தொடுத்திடு வான்எனில் துன்னி என்னுயிர்
 படுத்திடும் யானது பரித்து 
		வந்திலன்
 விடுத்துடன் அப்படை விலக்கும் வண்ணமே.
 | 359 | 
      | 423 | வென்றிடல் அரிதினி வீர 
		வாகுவைச்சென்றனன் முதுநகர்த் தெய்வ தப்படை
 மன்றவுந் தந்திவன் வன்மை 
		மாற்றுவன்
 நின்றிடல் பழுதென நெஞ்சில் உன்னினான்.
 | 360 | 
      | 424 | அயன்மகன் மதலைசேய் அருவ 
		மாகியேவியன்மிகு தனதுதேர் விடுத்து விண்ணெழீஇப்
 பயனறு முகிலெனப் 
		படர்ந்து வல்லையின்
 நயனுறு கடிமதில் நகருட் போயினான்.
 | 361 | 
      | 425 | கொற்றவன் மறைந்தகல் கொள்கை 
		காண்டலுஞ்சுற்றுறு தானவர் தொலைந்து போயினா��
 அற்றது தெரிந்திடும் 
		அமரர் யாவரும்
 வெற்றிஇன் றெமதென விளம்பி ஆர்த்தனர்.
 | 362 | 
      | 426 | மாயையின் அருவமாய் வஞ்சன் 
		மாநகர்போயினன் காலையே புகுவன் போர்க்கினி
 ஆயவன் தனைவிரைந் தடுதி 
		என்றுபூத்
 தூயினர் வீரன்மேற் சுரர்கள் யாவரும்.
 | 363 | 
      | 427 | தினகரன் மாற்றலன் செம்பொற் 
		றேரொரீஇஇனைவுடன் அருவமாய் இரிந்து போதலை
 வினையமொ டோ��வுறா வீரன் 
		நின்றனன்
 முனிவொடு பிழைபடு மூரி யானைபோல்.
 | 364 | 
      | 428 | விண்டிடு சூர்மகன் வெருவி 
		வெந்நிடல்கண்டனர் துணைவருங் கணத்தின் வீரருந்
 திண்டிறல் இழந்தனன் 
		தீயன் பற்றிநாங்
 கொண்டணை வாமெனக் கூறல் மேயினார்.
 | 365 | 
      | 429 | என்பது விளம்பியே யாரும் 
		ஆர்ப்பொடுதுன்புறும் அவுணனைத் தொடா�ந்து பற்றுவான்
 முன்பொடு 
		முயறலுந் தெரிந்த மொய்ம்பினான்
 தன்புடை யோர்க்கிது சாற்றல் மேயினான்.
 | 366 | 
      | 430 | பேடியர் சிறுதொழில் பேணி 
		உள்வெரீஇஓடினன் போகிய ஒன்ன லான்றனை
 நாடிநாம் அடுவது நலத்தின் பாலதோ
 சாடுவன் இனிவரிற் சரதம் யானென்றான்.
 | 367 | 
      | 431 | என்றிவை வள்ளலும் இயம்ப 
		யாவரும்நன்றென இசைத்தலும் அவற்றை நாடியே
 குன்றுறழ் புயத்துணை 
		கொட்டிக் குப்புறீஇ
 வென்றிகொள் பாரிட வௌ�ளம் ஆர்த்தவே.
 | 368 | 
      | 432 | முற்றிய தமர்இனி முயல்வ 
		தில்லையால்செற்றலன் ஓடினன் திரும்பும் வீரனும்
 நிற்றிலன் இனியென 
		நினைந்து நீங்குவான்
 உற்றன னாமென இரவி யோடினான்.
 | 369 | 
      | 433 | செந்திரு மதுமலர் செறியப் 
		பூத்துழமுந்துறு நித்திலம் முழுது மொய்த்தென
 அந்தர முழுவதும் அடைந்த 
		செக்கரில்
 சுந்தர உடுநிரை பலந் தோன்றிய.
 | 370 | 
      | 434 | குண்டுநீர்க் கனலொடு குலாவி 
		மாதுளத்தெண்டகு தமியரை இகலி மாமதி
 பண்டுள முனிவரர் பரமன் மேல்விடு
 வெண்டலை யாமென விண்ணில் தோன்றினான்.
 | 371 | 
      | 435 | இத்துணை வேலையில் இலக்கத் 
		தெண்மராம்மெய்த்துணை யார்களும் வெய்ய பூதரும்
 அத்துணைப் படைகளும் 
		அயலிற் சென்றிட
 மொய்த்துணை விறலுடை மொய்ம்பன் மீண்டனன்.
 | 372 | 
      | 436 | அந்தமில் கயிலையை அருளிற் 
		போற்றிடுநந்திதன் கணத்தரின் நாத னாகியோன்
 விந்தைகொள் செருநிலம் 
		ஒருவி மீண்டுபோய்க்
 கந்தவேள் பாசறைக் கண்ணுள் நண்ணினான்.
 | 373 | 
      | 437 | நண்ணிய திறலினான் நான்மு 
		கன்முதற்புண்ணிய மேலவர் போற்ற ஆண்டுறு
 கண்ணுதல் அருள்புரி கந்தன் 
		முன்புபோய்த்
 துண்ணென வணங்கினன் துணைவர் தம்மொடும்.
 | 374 | 
      | 438 | வணங்கினன் எழுந்துபின் வள்ளல் 
		தோ�ந்திடஇணங்கலன் தன்மகன் எதிர்ந்து போர்செயா
 அணங்குடன் இரிந்ததும் 
		அனைத்துஞ் செப்பலுங்
 கணங்களின் முதல்வன்மேற் கருணை ஆற்றினான்.
 | 375 | 
      | 439 | நல்லருள் புரிந்தபின் நம்பி 
		இப்பகல்தொல்லமர் உழத்தலின் துன்பங் கூர்ந்துளாய்
 எல்லிது பொழுதுநின் 
		இருக்கை தன்னிடைச்
 செல்லுதி துணைவரோ டென்று செப்பினான்.
 | 376 | 
      | 440 | செப்பலும் விடைகொடு செம்மல் 
		பின்னவர்மெய்ப்படு பாரிடம் விரவச் சென்றொராய்
 ஒப்பருந் தனதுபேர் 
		உறையுள் வைகினான்
 துப்புறு தானைகள் தொன்மை போலுற.
 | 377 | 
      | 441 | சேயவன் விடுத்திடு சேனை பாசறைபோயதும் இருந்ததும் புகலுற் றாம்இனி
 மாயிரு வளங்கெழு மகேந்தி ரப்பதி
 ஆயிடை நிகழ்ந்தவா றறியக் கூறுவாம்.
 | 378 | 
      | 442 | ஆடுறு சமரிடை அழிந்து முன்னரேஓடிய அவுணர்கோன் உள்ளந் தன்னிடைப்
 பாடுறு துயரமும் பழியும் மானமும்
 நீடினன் பெருமித நிலைமை நீங்கினான்.
 | 379 | 
      | 443 | கோனுறு மந்திரங் குறுகல் 
		செய்திலன்தானுறு திருநகர் தன்னில் ஏகியே
 ஊனம துடையர்போல் உயங்கி 
		வைகினான்
 பானுவின் பகைஞனென் றுரைக்கும் பண்பினான்.
 | 380 | 
      | 444 | மந்திரக் கிளையொடு மருவ 
		வேண்டலன்தந்திரத் தமரொடுஞ் சார்தல் வேண்டலன்
 சிந்துரத் தொல்பகைச் 
		சென்னி போற்றிய
 இந்திரப் பெருந்தவி சிருக்கை வேண்டலன்.
 | 381 | 
      | 445 | ஆடுறு மங்கையா� ஆடல் வெ�கலன்பாடுறு மங்கையர் இசையில் பற்றலன்
 கூடுறு மங்கையர் குழாமும் நோக்கலன்
 ஊடுறு மங்கையர் புணர்ப்பும் உன்னலான்.
 | 382 | 
      | 446 | நிசாவது சென்றபின் நெடுஞ்செவ் 
		வேலுடைவிசாகனை அவன்படை வீரர் தங்களை
 அசாவுறு செருவில்வென் றாடல் 
		கொள்வதற்
 குசாவினன் உளத்துடன் ஊக்கம் வேறிலான்.
 | 383 | 
      | 447 | வேறுஆதவன் தன்பகை அவ்வழி 
		அமர்தலும்
 மேதகுந் தொல்சமர் விளைவெலாம் நோக்கியே
 மூதகுந் திருநகர் 
		முழுமணிக் கோயிலில்
 தூதர்கை தொழுதுபோய்ச் சூரனுக் குரைசெய்வா��.
 | 384 | 
      | 448 | கேட்டியால் உன்மகன் கேடிலா 
		வாகைசேர்தோட்டுணை யானொடுந் தொல்சமர் ஆற்றியே
 ஈட்டுபல் பூதரை ஈறுசெய் 
		திவ்விடை
 மீட்டும்வந் தெய்தினான் வினையமுண் டாங்கொலோ.
 | 385 | 
      | 449 | அன்னபண் புணர்கிலேம் அதனைமேல் 
		அறிதியான்மின்னுதண் சுடருடை வேலவன் தூதனும்
 பன்னரும் படையொடும் 
		பாசறைக் கேகினான்
 இன்னதால் விளைவெனா இவையெலாம் பகர்தலும்.
 | 386 | 
      | 450 | மாற்றலார் தமையட வலியில 
		னாகியேஊற்றமா மைந்தன்வந் துற்றசொற் கேட்குமுன
 சீற்றமாய் எரிவிழி 
		சிதறவே வெய்துயிர்த்
 தாற்றவும் முறுவலித் தரசன்ஒன் றுரைசெய்வான்.
 | 387 | 
      | 451 | மைந்தரும் துணைவரும் மருவுபல் 
		சுற்றமும்தந்திரத் தலைவருஞ் சமரினுக் கேகலர்
 நந்தலில் படையொடு 
		நாளைநான் சென்றுபின்
 கந்தனைத் திறல்கொடே கடிதில்மீண் டிடுவனால்.
 | 388 | 
      | 452 | போதிர்இப் பொழுதெனப் புகறலும் 
		பணிகுறாத்தூதுவர் போயினார் சூரனாம் அவுணர்கோன்
 ஏதிலார் தம்மைவென் 
		றிசைபுனைந் திடுதல்மேற்
 காதலாய் வைகினான் யாவதுங் கருதலான்.
 | 389 | 
      | 453 | அடுபெரும் போரினை ஆற்றியே 
		ஆற்றலால்முடிவிலா விறல்கொள முன்னுவீ ரர்க்கெலாம்
 நெடியவளாய்த் 
		திறலிலா நெஞ்சினா ருக்கெலாம்
 கடியளாய் வைகினான் கங்குலாம் நங்கையே.
 | 390 | 
      | 454 | பிரிகுவார் தங்களைப் பிரிகலா 
		தேனையோர்அருகுதான் நிற்கலா தச்சம்நாண் இன்றியே
 விரகநோய் தெறுதலால் 
		மிக்கதோர் தூர்த்தராய்த்
 திரிகுவா ராமெனச் செல்லும்இவ் வெல்லியே.
 | 391 | 
      | 455 | பாடுசால் தென்றிசைப் 
		பா��புரந் திடும்இராஈடுசால் வெம்பகல் எல்லொடும் வருவது
 நேடியே 
		மதியெனும் நீள்குடை முன்செல
 ஓடல்போற் போயதால் உடுவெனும் படையொடும்.
 | 392 | 
      | 456 | மையிருட் கலையினை மகிழ்நனாம் 
		மதிநிலாக்கையினால் நீக்கியே கலவிசெய் தகலுழி
 வெய்யவன் வருமெனா 
		வௌ�கியத் துகிலுடீஇ
 ஓய்யெனப் போயினாள் கங்குலென் றுற்றுளாள்.
 | 393 |