| 
				 1329
    			
    			  | 
				 வெம்மை தீர்ந்திடும் 
				அப்பெரு நெறியிடை விரைந்து செம்மை சேர்தரு குமரவேள் படையொடு 
				செல்ல அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர் தம்மை 
				வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம். 
    			  | 
				 1  | 
			
			
				| 
				 1330
    			
    			  | 
				 விண்டு லாய்நிமிர் 
				கிரவுஞ்ச கிரியினை விண்ணோர் கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி 
				கலக்கங் கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன் புண்ட 
				ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான். 
    			  | 
				 2  | 
			
			
				| 
				 1331
    			
    			  | 
				 தூய நான்மறை அந்தணர் 
				முனிவர்இச் சுரத்திற் போய வெல்லையின் நெறியதாய் வரவரப் 
				புணர்த்து மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய் ஏய 
				தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண்.
    			
    			  | 
				 3  | 
			
			
				| 
				 1332
    			
    			  | 
				 நேரில் இக்கிரிக் 
				கொருபுடை மாயநீள் நகரில் சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் 
				துணைவன் போரில் அச்சுதன நேமியை அணியதாப் புனைந்தோன் தார 
				கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால். 
    			 
    			  | 
				 4  | 
			
			
				| 
				 1333
    			
    			  | 
				 இன்ன வன்றனை 
				அடுதியேல் எளிதுகாண் இனையோன் முன்ன வன்றனை வென்றிட லெனமுனி 
				மொழிய மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி அன்ன வன்றனை 
				முடிக்குதும் இவணென அறைந்தான்.
    			
    			  | 
				 5  | 
			
			
				| 
				 1334
    			
    			  | 
				 வேறு சிறந்திடு 
				முருகவேள் இனைய செப்பலும் நிறைந்திடும் அமரரும் இறையும் 
				நெஞ்சினில் உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார் இறந்தனன் 
				தாரகன் இன்றொ டேயெனா.
    			
    			  | 
				 6  | 
			
			
				| 
				 1335
    			
    			  | 
				 ஐயர்கள் பெருமகிழ் 
				வடைய ஆறிரு கையுடை முருகன்அக் காலை தன்புடை மெய்யருள் எய்திய 
				வீர வாகுவாந் துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான். 
    			 
    			  | 
				 7  | 
			
			
				| 
				 1336
    			
    			  | 
				 உற்றவக் கிரிகிர 
				வுஞ்ச மாகுமால் மற்றத னொருபுடை மாய நொச்சியுட் செற்றிய 
				அசுரர்தஞ் சேனை தன்னுடன் அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான்.
    			
    			  | 
				 8  | 
			
			
				| 
				 1337
    			
    			  | 
				 ஏயநின் துணைவர்கள் 
				இலக்கத் தெண்மர்கள் ஆயிர வௌ�ளமாம் அடல்கொள் பூதர்கள் சாய்வறு 
				தலைவர்கள் தம்மொ டேகியே நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய்.
    			
    			  | 
				 9  | 
			
			
				| 
				 1338
    			
    			  | 
				 தடுத்தெதிர் 
				மலைந்திடும் அவுணர் தானையைப் படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல் 
				அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம் முடித்திட வருகுதும் முந்துபோ 
				வென்றான்.
    			
    			  | 
				 10  | 
			
			
				| 
				 1339
    			
    			  | 
				 நலமிகு குமரவேள் நவில 
				இன்னணம் வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத் தலைமிசை கூப்பிய 
				கரத்தன் தாழ்ந்துமுன் நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே. 
    			 
    			  | 
				 11  | 
			
			
				| 
				 1340
    			
    			  | 
				 ஏந்தலந் துணைவராம் 
				இலக்கத் தெண்மரை ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே வாய்ந்திடு 
				பெருந்திறல் வாகு தன்னுடன்  போந்திடும் அவுணரைப் பொரவென் 
				றேவினான்.
    			
    			  | 
				 12  | 
			
			
				| 
				 1341
    			
    			  | 
				 ஏவலும் அனையவர் 
				யாரும் எம்பிரான் பூவடி வணங்கியே போதற் குன்னலும் ஆவியுள் 
				ஆவியாம் அமலன் பாங்குறுந் தேவர்கள் கம்மியற் கிதனைச் 
				செப்புவான். 
    			 
    			  | 
				 13  | 
			
			
				| 
				 1342
    			
    			  | 
				 மேதகு பெருந்திறல் 
				வீர வாகுவை தியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால் ஏதமி 
				லாதபல் லிரதம் நல்கெனா ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன்.
    			
    			  | 
				 14  | 
			
			
				| 
				 1343
    			
    			  | 
				 அத்திறங் கேட்டதோர் 
				அமரர் கம்மியன் ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே சித்திர 
				வயப்பரி சீயங் கூளிகள் இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான். 
    			 
    			  | 
				 15  | 
			
			
				| 
				 1344
    			
    			  | 
				 வேறு அன்ன 
				தேர்த்தொகை அதனை எம்பிரான் மின்னு காலவேல் வீர வாகுவும் 
				பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத மன்ன ரும்பெற வழங்கி னானரோ. 
    			 
    			  | 
				 16  | 
			
			
				| 
				 1345
    			
    			  | 
				 பாகர் தூண்டிடப் 
				படருந் தேர்கள்மேல் வாகை சேர்தரும் வாகு வேமுதல் ஆகினோர் 
				அடைந் தம்பொன் மால்வரைத் தோகை மைந்தனைத் தொழுது போற்றினார். 
    			 
    			  | 
				 17  | 
			
			
				| 
				 1346
    			
    			  | 
				 தொழுது வள்ளலைச் 
				சூழ்ந்து மும்முறை விழுமி தாகிய விடைபெற் றேகினார் பழுதில் 
				நீத்தமோர் பத்து நூறெனக் குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே. 
    			 
    			  | 
				 18  | 
			
			
				| 
				 1347
    			
    			  | 
				 பாய பூதர்தம் படைக்கு 
				வேந்தராய் ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய் மேயி 
				னார்க்கெலாம் வீர வாகுவோர் நாய கம்பெறீஇ நடுவட் போயினான். 
    			 
    			  | 
				 19  | 
			
			
				| 
				 1348
    			
    			  | 
				 அமர்வி ளைக்கமுந் 
				தவனை யேவியே தமர வேலையில் தானை சூழ்தர இமைய வர்க்கிறை ஏனை 
				யோர்தொழக் குமர வேள்கடைக் கூழை யேகினான். 
    			 
    			  | 
				 20  | 
			
			
				| 
				 1349
    			
    			  | 
				 வேறு பிற்பட 
				எம்பிரான் பெயர ஏவலால் முற்படு வீரனை முயங்கிப் பாரிடச் 
				சொற்படை படர்வன தூமந் தன்னொடு சிற்பரன் நகையழல் புரத்துச் 
				சென்றபோல்.
    			
    			  | 
				 21  | 
			
			
				| 
				 1350
    			
    			  | 
				 அரிநிரை பூண்டதேர் 
				அலகை பூண்டதேர் பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ விரிகடல் 
				வரைப்பினில் மேக ராசியுங் கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் 
				செல்வபோல். 
    			 
    			  | 
				 22  | 
			
			
				| 
				 1351
    			
    			  | 
				 இடையகல் இரதமோ டிரதந் 
				தாக்கிய படையொடு படைவகை செறிந்த பல்வகைக் கொடியொடு கொடிநிரை 
				துதைந்த கூளியர் அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே. 
    			 
    			  | 
				 23  | 
			
			
				| 
				 1352
    			
    			  | 
				 சங்கொடு பணைதுடி 
				தடாரி காகளம் பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம் எங்கணும் 
				இயம்பின எழுந்து பூழிபோய்ச் செங்கம லத்தவன் பதத்தைச் 
				செம்மிற்றே.
    			
    			  | 
				 24  | 
			
			
				| 
				 1353
    			
    			  | 
				 சாற்றுமிவ் 
				வியல்புறத் தானை வீரருஞ் சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான் 
				கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன் போற்றிய மாயமா புரியைச் 
				சேர்ந்தனன். 
    			 
    			  | 
				 25  | 
			
			
				| 
				 1354
    			
    			  | 
				 வேறு சேர்ந்திடு 
				மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு நேர்ந்திடும் அவுண ரோடு 
				நின்றமர் விளைத்து நின்றார் ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் 
				கோயில் புக்குச் சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது 
				சொல்வார். 
    			 
    			  | 
				 26  | 
			
			
				| 
				 1355
    			
    			  | 
				 எந்தைமற் றிதுகேள் 
				நும்முன் இமையவர் தொகையை யிட்ட வெந்துயர்ச் சிறையை நீக்க 
				விரிசடைக் கடவுள் மைந்தன் கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் 
				கடக்கு மென்னா அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு 
				மன்றே. 
    			 
    			  | 
				 27  | 
			
			
				| 
				 1356
    			
    			  | 
				 என்னிவர் மாற்ற 
				மென்னா யாந்தெரி குற்றே மாக அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் 
				திரட்டி யென்னப் பன்னுறு பூத வௌ�ளம் படர்ந்திடக் குமரன் 
				போந்தான் முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார். 
    			 
    			  | 
				 28  | 
			
			
				| 
				 1357
    			
    			  | 
				 என்றலும் வடவைத் 
				தீயில் இழுதெனும் அளக்கர் வீழத் துன்றிய எழுச்சி மானத் 
				துண்ணெனச் செற்றந் தூண்டே மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி 
				சிருக்கை நீங்கிக் குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான்.
    			
    			  | 
				 29  | 
			
			
				| 
				 1358
    			
    			  | 
				 எழுந்ததுதன் மருங்கு 
				நின்ற ஒற்றை நோக்கி இந்தச் செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை 
				முளிபுற் கானில் கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை 
				முற்றும் உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான்.
    			
    			  | 
				 30  | 
			
			
				| 
				 1359
    			
    			  | 
				 வேறு அன்னபணி 
				முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற,  
				கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும், 
       முன்னமொரு ொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப், 
       பின்னர்வரும் அமைச்சர்கள் தந்தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான்.
    			
    			  | 
				 31  | 
			
			
				| 
				 1360
    			
    			  | 
				 வீடுவான் போலுமினித் 
				தாரகனென் றவன்சீர்த்தி விரைவில் வந்து, 
      			 கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத் தென்ன, 
				 நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வௌ�ளொலியல் நிமிர்ந்து வீசப்,  
				பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும் ஆர்ப்ப. 
    			 
    			  | 
				 32  | 
			
			
				| 
				 1361
    			
    			  | 
				 ஈமத்தே நடம்புரியுங் 
				கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன், 
      			 மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத், 
      			 தாமத்தேர் பெறுகின்ற மடஙகல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால், 
      			 சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண.
    			
    			  | 
				 33  | 
			
			
				| 
				 1362
    			
    			  | 
				 ஒற்றர்கூ வியவேலை 
				ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக், 
      			 கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட், 
      			 கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச், 
       சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் ப�றேரில் தவன்றிச் சூழ.
    			
    			  | 
				 34  | 
			
			
				| 
				 1363
    			
    			  | 
				 மொய்யமர்செய் கோலமொடு 
				முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி,  பையரவின் 
				தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர், 
       மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச், 
       செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க.
    			
    			  | 
				 35  | 
			
			
				| 
				 1364
    			
    			  | 
				 கார்க்குன்றம் 
				அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந்,  
				தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை, 
      			 ஆர்க்கின்ற ஆயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் 
				நாட்டில், 
      			 தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் 
				தோன்ற.
    			
    			  | 
				 36  | 
			
			
				| 
				 1365
    			
    			  | 
				 வாகையுள பல்லியமும் 
				இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன், 
      			 ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல்,  
				சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச்,  
				சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே.
    			
    			  | 
				 37  | 
			
			
				| 
				 1366
    			
    			  | 
				 எல்லோருந் தொழுதகைய 
				குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர், 
      			 கல்லோடு மரனோடுங் கரையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச,  
				வில்லோடுங் கணையோடும் வேலோடும் புரையுமனத்  தவுணர்படை 
				எதிர்சிதறி அமர்செய் திட்டார். 
    			 
    			  | 
				 38  | 
			
			
				| 
				 1367
    			
    			  | 
				 வேறு எண்ணுறு 
				படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை விண்ணுறு பூழி யென்னும் 
				விரிதரு புகைமீச் செல்ல மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று 
				வார்போல் கண்ணுறும் இமையோர் கண்கள் படிப்புனல் கான்ற அன்றே. 
    			 
    			  | 
				 39  | 
			
			
				| 
				 1368
    			
    			  | 
				 இரிந்திட லின்றி 
				நேர்வந் தேற்றமர் புரித லாலே சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு 
				சென்னி துள்ளச் சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் 
				மாயப் பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார்.
    			
    			  | 
				 40  | 
			
			
				| 
				 1369
    			
    			  | 
				 தேருடைத் தெறிந்து 
				பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி ஆருடைத் திகிரிச் சில்லி 
				அங்கையால் எடுத்துச் சுற்றிப் போருடைத் திறலோர் தம்பால் பொம்மென 
				நடாத்தும் பொற்பால் காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் 
				அன்றே. 
    			 
    			  | 
				 41  | 
			
			
				| 
				 1370
    			
    			  | 
				 தேர்பரித் தெழுந்து 
				மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால் கார்பரித் தன்ன தோகைக் 
				கவனவாம் புரவி யீட்டம் போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் 
				புடைத்துச் சிந்திப் பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை 
				தீர்ப்பார். 
    			 
    			  | 
				 42  | 
			
			
				| 
				 1371
    			
    			  | 
				 வாலுடைக் களிற்றின் 
				ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக் காலுடைத் திகிரித் திண்டேர் 
				கழல்களால் உருட்டிக் காமர் பாலுடைப் புரவித் தானை பதங்களால் 
				உழக்கிச் சென்றார் வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர 
				வீரர். 
    			 
    			  | 
				 43  | 
			
			
				| 
				 1372
    			
    			  | 
				 வாருறு புரசை பூண்ட 
				வன்களிற் றொருத்தல் யாவுஞ் சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி 
				சூழப் பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது காருற 
				வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே. 
    			 
    			  | 
				 44  | 
			
			
				| 
				 1373
    			
    			  | 
				 கண்ணெதிர் நின்று 
				போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித் துண்ணெனப் பூதர் வீசத் 
				துளங்கிய கலன்க ளோடும் விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது 
				விசும்பில் தப்பி மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே.
    			
    			  | 
				 45  | 
			
			
				| 
				 1374
    			
    			  | 
				 ஆயிர வௌ�ள மாகுங் 
				கணவரும் ஆங்க ணுள்ள பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து 
				வீசி மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார் ஏயென 
				வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார். 
    			 
    			  | 
				 46  | 
			
			
				| 
				 1375
    			
    			  | 
				 நிணங்கவர் ஞமலி 
				யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின் கணங்களும் அலகை தானுங் 
				கறங்கிடக் கானத் தோங்கிப் பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் 
				விலக்கி யார்க்கும் அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா. 
    			 
    			  | 
				 47  | 
			
			
				| 
				 1376
    			
    			  | 
				 தரைத்தடஞ் சிலைய 
				தாகத் தறுகண்வெம் பூத ரானோர் வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி 
				யாகத் திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை 
				அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார். 
    			 
    			  | 
				 48  | 
			
			
				| 
				 1377
    			
    			  | 
				 தத்துறு புரவித் 
				திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் 
				பணைகொண் டெற்றி முத்தலை யெ�கம் வீசி முசலத்திற் புடைத்து 
				மொய்ம்பால் குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர். 
    			 
    			  | 
				 49  | 
			
			
				| 
				 1378
    			
    			  | 
				 விழுந்தன படிவம் 
				யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல் எழுந்தன குருதித் தாரை 
				ஈர்த்தன நீத்த மாக அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய 
				கொழுந்தசை மிசைந்து நின்று குரவை யாட் டயர்ந்த கூளி.
    			
    			  | 
				 50  | 
			
			
				| 
				 1379
    			
    			  | 
				 கண்டனன் இனைய தன்மை 
				தாரகன் கடிய சீற்றங் கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் 
				புற்றுத் தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி 
				அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான். 
    			 
    			  | 
				 51  | 
			
			
				| 
				 1380
    			
    			  | 
				 அல்லெனப் பட்டமேனி 
				அவுணர்கட் கரசன் கையிற் கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் 
				கரங்கள் சென்னி பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் 
				சாய்ந்த புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம். 
    			 
    			  | 
				 52  | 
			
			
				| 
				 1381
    			
    			  | 
				 பிடித்திடு வயிரத் 
				தண்டம் பெருங்கடற் பூத வௌ�ளம் முடித்திடல் புகழோ அன்றால் தாரக 
				மொய்ம்பின் மேலோன் அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் 
				ஓங்கி எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல். 
    			 
    			  | 
				 53  | 
			
			
				| 
				 1382
    			
    			  | 
				 தாரிடங் கொண்ட 
				மார்பத் தாரகன் வயிரத் தண்டம் போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் 
				கரங்கள் சிந்திக் காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப 
				வீட்டிப் பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா. 
    			 
    			  | 
				 54  | 
			
			
				| 
				 1383
    			
    			  | 
				 அன்றரி விடுத்த ஆழி 
				ரமா வணிந்த தீயோன் கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் 
				செல்லும் வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி 
				நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார். 
    			 
    			  | 
				 55  | 
			
			
				| 
				 1384
    			
    			  | 
				 திண்கண நிரையின் 
				வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் 
				சிலைகா லூன்றி மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி 
				ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார். 
    			 
    			  | 
				 56  | 
			
			
				| 
				 1385
    			
    			  | 
				 சூழ்ந்தனர் துரந்த 
				வாளி தோன்முகத் தவுணன் யாக்கை போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில 
				புன்மை யாகித் தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை 
				தாங்கி வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட. 
    			 
    			  | 
				 57  | 
			
			
				| 
				 1386
    			
    			  | 
				 தரைபடப் புகழ்வைத் 
				துள்ள தாரகன் தடமார் பத்தைப் புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் 
				பட்டு மீண்டு நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம் 
				வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே. 
    			 
    			  | 
				 58  | 
			
			
				| 
				 1387
    			
    			  | 
				 விடுகணை மாரி யாவும் 
				மீண்டிட வெகுண்டு விண்ணோர் படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் 
				அவைகள் எய்தா உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக் 
				கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார். 
    			 
    			  | 
				 59  | 
			
			
				| 
				 1388
    			
    			  | 
				 மற்றது காலை தன்னில் 
				வலியினால் வயிரத் தண்டஞ் சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் 
				கடுமான் தேர்கள் எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் 
				வாரிப் பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான். 
    			 
    			  | 
				 60  | 
			
			
				| 
				 1389
    			
    			  | 
				 துளும்பிய அளக்கர் 
				தன்னில் சூழுற நின்ற தெங்கின் வளம்படு பழுக்காய் வர்க்கம் 
				மாருதம் எறியச் சிந்திக் குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற 
				வீரர் இளமபிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார். 
    			 
    			  | 
				 61  | 
			
			
				| 
				 1390
    			
    			  | 
				 கொற்றவில் உழவன் வீர 
				கோளரி யதனை நோக்கிச் செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் 
				கொண்டு பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன் 
				பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான். 
    			 
    			  | 
				 62  | 
			
			
				| 
				 1391
    			
    			  | 
				 ஆர்த்திடு மோதை கேளா 
				அண்டர்கள் அனையன் மீது தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் 
				காணா வேர்த்தனன் மான முன்றான் வீரகே சரிமேல் அங்கைத் 
				தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான்.
    			
    			  | 
				 63  | 
			
			
				| 
				 1392
    			
    			  | 
				 வேறு சென்றொர் 
				மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன் மன்றல் மார்பகம் படுதலும் 
				வீழ்ந்தனன் மயங்கி வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு 
				குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான். 
    			 
    			  | 
				 64  | 
			
			
				| 
				 1393
    			
    			  | 
				 வேறு 
				குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி 
				வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப் 
				பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில் செறித்தேயுற 
				வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன்.
    			
    			  | 
				 65  | 
			
			
				| 
				 1394
    			
    			  | 
				 பொழிந்தான்சர 
				மழைநம்மவன் புரமேலது பொழுதின் இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை 
				ஈரெழுதொட் டிறுப்ப அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா 
				மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான்.
    			
    			  | 
				 66  | 
			
			
				| 
				 1395
    			
    			  | 
				 பொருமூவிலை வேலங்கவன் 
				பொன்மார்புறப் பொருமிப் பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா 
				உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய் வருமூவரும் ஒருநால்வரும் 
				மாறுற்றமர் இழைத்தார்.
    			
    			  | 
				 67  | 
			
			
				| 
				 1396
    			
    			  | 
				 அமர்செய்திடும் 
				எழுவீரரும் அவுணன்றனக் குடையக் குமரன்பதந் தலைக்கொண்டிடுங் 
				கோமானது காணா எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச் 
				சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான். 
    			 
    			  | 
				 68  | 
			
			
				| 
				 1397
    			
    			  | 
				 ஒருகார்முகம் 
				இருகால்வளை வுறேகுனித் துகுதேன் அருகாதொழு கியதன்மையின் 
				அவிர்நாணொலி யெடுப்பத் திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர் 
				இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார். 
    			 
    			  | 
				 69  | 
			
			
				| 
				 1398
    			
    			  | 
				 நாண்கொண்டிடும் 
				ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார் பூண்கொண்டிடு சிலைவாங்கலும் 
				மகிழ்வுற்றிடு புலவோர் சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் 
				அதுவந்திடச் சிறந்தே மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் 
				வதுபோல்.
    			
    			  | 
				 70  | 
			
			
				| 
				 1399
    			
    			  | 
				 வேறு மேதா வியர்க 
				பரவுந்திறல் வீரவாகு மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத் 
				தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித் தீதாம் அழல்போல் 
				வெகுண்டேயிது செப்பு கின்றான். 
    			 
    			  | 
				 71  | 
			
			
				| 
				 1400
    			
    			  | 
				 பொன்றா வலிகொண் 
				டமராடிய பூதர் தம்மை வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால் 
				வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக் கொன்றாவி உண்பன் 
				எனலுங்கொடி யோன்உ ரைப்பான்.
    			
    			  | 
				 72  | 
			
			
				| 
				 1401
    			
    			  | 
				 மாயன் றனைவென் 
				றவன்நேமியை மாசில் கண்டத் தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு 
				றாதே நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ் சீயந் தனையும் 
				நரிவெல்வது திண்ண மாமோ. 
    			 
    			  | 
				 73  | 
			
			
				| 
				 1402
    			
    			  | 
				 சாருங் குறள்வெம் 
				படையாவையுஞ் சாய்ந்த வீரர் ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து 
				நின்றார் வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய் 
				பாரென் வலியால் உதாவி படுப்ப னென்றான். 
    			 
    			  | 
				 74  | 
			
			
				| 
				 1403
    			
    			  | 
				 என்னுந் துணையில் 
				சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத் தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார 
				கப்பேர் மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூணடிச் சின்னம் 
				புரிந்து கணைநூறு செலுத்தி னானால். 
    			 
    			  | 
				 75  | 
			
			
				| 
				 1404
    			
    			  | 
				 எவ்வக் கொடியோன் 
				தொடுவாளியை ஏந்தல் காணா அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று 
				மாற்றக் கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத் தெய்வப் 
				படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான். 
    			 
    			  | 
				 76  | 
			
			
				| 
				 1405
    			
    			  | 
				 வேறு வெங்கனற்படை 
				தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின் செங்கனற்படை யேவியன்னது 
				சிந்தவேவரு ணப்படை அங்கணுய்ததிட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை 
				படையினைத் துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன். 
    			 
    			  | 
				 77  | 
			
			
				| 
				 1406
    			
    			  | 
				 இரவிதன்படை 
				அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே விரைவிலன்னது தொலைவுகண்டனன் 
				வீரமேதகு தாரகன் உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது 
				கந்தவேள் அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா.
    			
    			  | 
				 78  | 
			
			
				| 
				 1407
    			
    			  | 
				 அனிலவெம்படை 
				வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன் அனதுதொல்படை ஏவினானது 
				தணிவில்செற்றமொ டேகலும் வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை 
				தூண்டியே நினையுமுனனது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே. 
    			 
    			  | 
				 79  | 
			
			
				| 
				 1408
    			
    			  | 
				 ஆயதன்மைகள் 
				கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே மேயவானவர் படைகள் யாவையும் 
				வீரன்மற்றிவன் வென்றனன் மாயநீர்மையின் இங்கிவன்றிறல் 
				வனமைகொள்ளுதும் இனியெனாத் தீயபுந்தியில் இனையவாறு 
				தெரிந்துசிந்தனை செய்துமேல். 
    			 
    			  | 
				 80  | 
			
			
				| 
				 1409
    			
    			  | 
				 தொல்லைமாயையின் 
				விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென மல்லன்மேவரு தாரகாசுரன் 
				வடிவமெண்ணில தாங்கியே எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி 
				இருட்குழாம் ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே.
    			
    			  | 
				 81  | 
			
			
				| 
				 1410
    			
    			  | 
				 கண்டுமற்றது 
				வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே விண்டுநீளிடை நின்றபூதர் 
				வெருண்டுபின்னரும் ஓடினார் மண்டுபேரமர் செய்தயர்ந்திடு 
				மானவீரரும் அச்சமேல் கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் 
				குணலையிட்டனர் அவுணரே. 
    			 
    			  | 
				 82  | 
			
			
				| 
				 1411
    			
    			  | 
				 வேறு தார கப்பெயர் 
				அவுணர்கோன் மாயையின் சமரும் ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் 
				புடையோன் பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும் வீர 
				பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான். 
    			 
    			  | 
				 83  | 
			
			
				| 
				 1412
    			
    			  | 
				 துங்க வுக்கிரச் 
				சிம்புள்மாப் படையினைத் தூயோன் செங்கை பற்றலும் அன்னது தாரகன் 
				செயலால் அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப்  பொங்கு 
				பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே. 
    			 
    			  | 
				 84  | 
			
			
				| 
				 1413
    			
    			  | 
				 தன்பு ணர்ப்புறு 
				மாயைதான் உடைதலுந் தமியாய் முன்பு நின்றதோர் தாரகன் 
				மொய்ம்புளான் றன்னைப் பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் 
				பிடித்து மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில். 
    			 
    			  | 
				 85  | 
			
			
				| 
				 1414
    			
    			  | 
				 தார கன்தொலைந் 
				தோடலுந் தனக்கிணை யில்லோன் போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் 
				புத்தேள் வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச் சீரி தாகிய 
				தூணியுள் அன்னதைச் செறித்தான். 
    			 
    			  | 
				 86  | 
			
			
				| 
				 1415
    			
    			  | 
				 அற்ற போர்வலித் 
				தாரகன் பின்வரைந் தணுகிப் பற்றி நாண்கொடு புயந்தனைப் 
				பிணித்தெனைப் பணித்த கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் 
				குறித்து மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு.
    			
    			  | 
				 87  | 
			
			
				| 
				 1416
    			
    			  | 
				 வேழ மாமுகற் கிளவலை 
				உன்னியே வீரன் ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச் சூழு 
				மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப் பாழி யொன்றுசென் 
				றொளித்தனன் தாரகப் பதகன். 
    			 
    			  | 
				 88  | 
			
			
				| 
				 1417
    			
    			  | 
				 முன்ன மாங்கவன் போகிய 
				பூழையுள் முடுகிப் பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும் 
				அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின் மன்ன னேகுறா இருள்நிலம் 
				போன்றுவை கியதே. 
    			 
    			  | 
				 89  | 
			
			
				| 
				 1418
    			
    			  | 
				 நீளு மாலிருள் 
				படர்தலுஞ் சில்லிடை நெறியால் தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் 
				காணான் ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான் மீளு 
				கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான்.
    			
    			  | 
				 90  | 
			
			
				| 
				 1419
    			
    			  | 
				 செற்ற மிக்கவன் 
				மாயைஇவ் வரையெனச் சிந்தித் துற்ற காலையில் அவுணனா கியகிர 
				வுஞ்சப் பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து மற்ற 
				வன்றன துணர்வினை மையல்செய் ததுவே. 
    			 
    			  | 
				 91  | 
			
			
				| 
				 1420
    			
    			  | 
				 இயலி சைத்தமிழ் 
				முனிவரன் இசைத்தசூள் இசைவால் வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை 
				மிகவும் மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித் துயில 
				லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே.
    			
    			  | 
				 92  | 
			
			
				| 
				 1421
    			
    			  | 
				 அம்ம லைக்கணே 
				முன்னவன் உறங்கலும் அனைய செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் 
				சிறந்த தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும் விம்ம 
				லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார்.
    			
    			  | 
				 93  | 
			
			
				| 
				 1422
    			
    			  | 
				 உடைந்து போயின தாரகன் 
				றன்னைநம் முரவோன் தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி 
				அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட் படர்ந்து நாடுதும் 
				யாமுமென் றெண்ணினர் பலரும். 
    			 
    			  | 
				 94  | 
			
			
				| 
				 1423
    			
    			  | 
				 எண்ணி யேயிசைந் 
				திளையரோ ரெண்மரும் இலக்கம் நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா 
				யகரும் அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று 
       விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில்.
    			
    			  | 
				 95  | 
			
			
				| 
				 1424
    			
    			  | 
				 ஆய வெற்பினில் வீரவா 
				குப்பெயர் அடலோன் போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந் தீய 
				தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல் மாயம் எண்ணில புரிதலும் 
				மயங்கியே வதிந்தார்.
    			
    			  | 
				 96  | 
			
			
				| 
				 1425
    			
    			  | 
				 வெற்றி வீரவா 
				குப்பெயர் அண்ணலும் வீரர் மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா 
				உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே இற்று ளாரென 
				மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான். 
    			 
    			  | 
				 97  | 
			
			
				| 
				 1426
    			
    			  | 
				 அண்ட மீமிசை நின்றவா 
				னவர்கள்இவ் வனைத்துங் கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக் 
				கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித் தண்டம் யாவையும் 
				வெருவின தலைவர்இன் மையினால்.
    			
    			  | 
				 98  | 
			
			
				| 
				 1427
    			
    			  | 
				 மலையின் மீமிசை 
				பெழுதரு தாரகன் மற்றோர் தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள் 
				பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற் சிலைய தொன்றினை 
				வாங்கியே செருநிலஞ் சென்றான். 
    			 
    			  | 
				 99  | 
			
			
				| 
				 1428
    			
    			  | 
				 நீடு தன்சிலை நாணொலி 
				கொண்டுநீள் சரங்கள் கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி ஆடல் 
				சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந் தோட லுற்றனர் திசையினும் 
				விண்ணினும் உலைந்தே.
    			
    			  | 
				 100  | 
			
			
				| 
				 1429
    			
    			  | 
				 ஆன காலையின் நாரதன் 
				இனையகண் டழுங்கி மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து 
				போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர் சேனை காவலன் நின்றதோர் 
				கடைக்கூழை சேர்ந்தான்.
    			
    			  | 
				 101  | 
			
			
				| 
				 1430
    			
    			  | 
				 அரிது மாதவம் புரிதரு 
				நாரதன் அடலின் விரவு மாயிரம் பூதவௌ� ளத்தொடு மேவுங் கருணை 
				சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச் சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே 
				இனையன சொல்வான். 
    			 
    			  | 
				 102  | 
			
			
				| 
				 1431
    			
    			  | 
				 ஐய நின்படை வீரர்கள் 
				பெருஞ்சம ராடி வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச் செய்ய 
				மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப் பொய்யின் மொய்ம்புடைத் 
				தாரகன் தன்னொடும் பொருதார்.
    			
    			  | 
				 103  | 
			
			
				| 
				 1432
    			
    			  | 
				 தலைக்க ணாகிய வீரனுந் 
				தமிபியர் பிறரும் இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும் 
				புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன் மலைக்கண் 
				உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால்.
    			
    			  | 
				 104  | 
			
			
				| 
				 1433
    			
    			  | 
				 உய்த்த காலையில் 
				அவுணனா கியகிர வுஞ்சம் மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் 
				வெருவிப் பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர் இத்தி 
				றந்தனை உயர்ந்தனன் தாரக னென்போன். 
    			 
    			  | 
				 105  | 
			
			
				| 
				 1434
    			
    			  | 
				 தெரிந்து தாரகன் 
				மகிழ்வொடு பறந்தலை சென்று  துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை 
				சொரிய முரிந்து பேரீயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும் 
				இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான். 
    			 
    			  | 
				 106  | 
			
			
				| 
				 1435
    			
    			  | 
				 என்ற காலையில் நாரதன் 
				உள்ளமும் இமையோர் நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில் 
				துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும் ஒன்ற நோக்கியே 
				அறுமுகப் பண்ணவன் உரைப்பான். 
    			 
    			  | 
				 107  | 
			
			
				| 
				 1436
    			
    			  | 
				 வேறு ஆருமிது 
				கேண்மின் அம ராடுகளன் ஏகித் தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும் 
				ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் 
				என்றான். 
    			 
    			  | 
				 108  | 
			
			
				| 
				 1437
    			
    			  | 
				 எந்தையிவை கூறுதலும் 
				யாருமவை தேர்ந்து சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா 
				அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக் கந்தனடி வந்தனை 
				புரிந்தனர் களிப்பால். 
    			 
    			  | 
				 109  | 
			
			
				| 
				 1438
    			
    			  | 
				 கந்தமுரு கேசனது 
				காலைமுது பாகாய் வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச் 
				சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே உந்துதி விரைந்தென 
				உரைத்தருள லோடும். 
    			 
    			  | 
				 110  | 
			
			
				| 
				 1439
    			
    			  | 
				 என்னவினி தென்றுதொழு 
				தேழெழுவ கைத்தாந் தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக் 
				கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித் துன்னுபரி மான்நிரைகள் 
				தூண்டிமிக ஆர்த்தான். 
    			 
    			  | 
				 111  | 
			
			
				| 
				 1440
    			
    			  | 
				 வேறு ஆன காலைதனில் 
				அண்டமும் வையந் தானும் அங்குள தடங்கிரி யாவும் ஏனை மாகடலும் 
				எண்டிசை யுள்ள மான வேழமும் நடுங்கின மன்னோ. 
    			 
    			  | 
				 112  | 
			
			
				| 
				 1441
    			
    			  | 
				 வாவு கின்றபல மாநிரை 
				தூண்டத் தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன் மேவு தொல்லிரதம் 
				விண்ணெறி கொண்டே ஏவ ரும்புகழ ஏகிய தன்றே. 
    			 
    			  | 
				 113  | 
			
			
				| 
				 1442
    			
    			  | 
				 ஆதி யங்குமரன் அவ்வழி 
				பொற்றேர் மீது செல்லுதலும் விண்முகில் பல்வே றோதும் 
				வண்ணமுடன் உற்றென வானில் பூத சேனைபுடை போயின அன்றே. 
    			 
    			  | 
				 114  | 
			
			
				| 
				 1443
    			
    			  | 
				 போர ழிந்துபுற 
				கிட்டெதிர் பூதர் ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த நார 
				ணன்றனது நன்மரு கானோன் தார கன்திகழ் சமர்க்களம் உற்றான். 
    			 
    			  | 
				 115  | 
			
			
				| 
				 1444
    			
    			  | 
				 கவன மோடுபடர் காலினு 
				முந்திச் சிவன்ம கன்றனது சேனைய தானோர் உவரி யாமென உறுந்திறம் 
				நோக்கி அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார். 
    			 
    			  | 
				 116  | 
			
			
				| 
				 1445
    			
    			  | 
				 சகந்து திக்கவரு 
				சாரதர் தாமும் அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும் இகந்த வன்மையொ 
				டெதிர்ந்திகல் எய்தி வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார். 
    			 
    			  | 
				 117  | 
			
			
				| 
				 1446
    			
    			  | 
				 கரங்கொள் நேமிகள் 
				கணிச்சிகள் தீவாய்ச் சரங்க ளாதியன தானவர் விடடார் உரங்கொள் 
				மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள் மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர். 
    			 
    			  | 
				 118  | 
			
			
				| 
				 1447
    			
    			  | 
				 முரிந்த தேர்நிரை 
				முடிந்தன மாக்கள் நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி  சொரிந்த 
				பூதர்மெய் துணிந்தன வானில் திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே. 
    			 
    			  | 
				 119  | 
			
			
				| 
				 1448
    			
    			  | 
				 நிறங்கொள் செங்குருதி 
				நீத்தம தாகிக் கறங்கி யோடின கவந்தமொர் கோடி மறங்கொ டாடுவ 
				வயின்தொறு மாகிப் பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம். 
    			 
    			  | 
				 120  | 
			
			
				| 
				 1449
    			
    			  | 
				 அனைய வாறிவர் அருஞ்சம 
				ராற்றப் புனையல் வாகையுள பூதர்கள் தம்மால் வினையம் வல்லவுணர் 
				வெவ்வலி சிந்தி இனைத லோடுமிரி குற்றனர் அன்றே. 
    			 
    			  | 
				 121  | 
			
			
				| 
				 1450
    			
    			  | 
				 தன்ப படைத்தொலைவு 
				தாரகன் நோக்கிக் கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே மின்ப 
				டைத்தபல வெங்கணை தூவி வன்ப படைக்கணம் வருந்த நடந்தான். 
    			 
    			  | 
				 122  | 
			
			
				| 
				 1451
    			
    			  | 
				 நடந்தெ திர்ந்தகண 
				நாதரை யெல்லாந் தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே இடந்தி 
				கழ்ந்தஇமை யத்திறை நல்கும் மடந்தை தந்ததிரு மைந்தன்முன் 
				உற்றான். 
    			 
    			  | 
				 123  | 
			
			
				| 
				 1452
    			
    			  | 
				 உற்ற காலைதனில் 
				ஒற்றரை நோக்கிச் சற்று நீதியறு தாரக வெய்யோன் செற்றம் 
				என்னுமழல் சிந்தையின் மூள மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான்.
    			
    			  | 
				 124  | 
			
			
				| 
				 1453
    			
    			  | 
				 என்ன லுங்குமரன் 
				இங்கிவ னேயாம் மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந் துன்னு 
				தேர்கடிது தூண்டி எவர்க்கும் முன்ன வன்மதலை முன்னுற வந்தான். 
    			 
    			  | 
				 125  | 
			
			
				| 
				 1454
    			
    			  | 
				 வேறு முழுமதி யன்ன 
				ஆறு முகங்களும் முந்நான் காகும் விழிகளின் அருளும் வேலும் வேறுள 
				படையின் சீரும் அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ் 
				செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ.
    			
    			  | 
				 126  | 
			
			
				| 
				 1455
    			
    			  | 
				 தற்பம துடைய சிந்தைத் 
				தாரகன் இனைய வாற்றால் சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் 
				நோக்கி அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால் கற்பனை 
				கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். 
    			 
    			  | 
				 127  | 
			
			
				| 
				 1456
    			
    			  | 
				 இந்தவா றுன்னிப் 
				பின்னர் யார்க்குமே லாகும் ஈசன் தந்ததோர் வரமும் வீரத் 
				தன்மையும் வன்மைப் பாடும் முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் 
				நினைந்து சீறிக் கந்தவேள் தன்னைநோக்கி இனையன கழற லுற்றான். 
    			 
    			  | 
				 128  | 
			
			
				| 
				 1457
    			
    			  | 
				 நாரணன் றனக்கு மற்றை 
				நான்முகன் றனக்கும் வௌ�ளை வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல 
				னுக்குந் தாரணி தனல்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர் காரண 
				மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான். 
    			 
    			  | 
				 129  | 
			
			
				| 
				 1458
    			
    			  | 
				 அறவினை புரிந்தே 
				யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும் இறையவ னாகும் ஈசன் இமையவர் 
				தம்மை நீங்கள் சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம் 
				விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான்.
    			
    			  | 
				 130  | 
			
			
				| 
				 1459
    			
    			  | 
				 வேறு கூரிய 
				வேற்படைக் குமர நாயகன் பேரருள் நிலைமையால் இனைய பேசலும் 
				போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத் தாரக னென்பவன் சாற்றல் 
				மேயினான். 
    			 
    			  | 
				 131  | 
			
			
				| 
				 1460
    			
    			  | 
				 செந்திருத் திகழுமார் 
				புடைய செங்கணான் சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே 
				அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென் கந்தரத் தணிந்தது காண்கி 
				லாய்கொலோ. 
    			 
    			  | 
				 132  | 
			
			
				| 
				 1461
    			
    			  | 
				 இன்றுகக றெம்முடன் 
				இகலிப் போர்செயச் சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட் 
				பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது வென்றுளார் இலையது வினவ 
				லாய்கொலோ. 
    			 
    			  | 
				 133  | 
			
			
				| 
				 1462
    			
    			  | 
				 முட்டிவெஞ் சமரினை 
				முயல முன்னம்நீ விட்டிடு தலைவரை வென்று வெற்பினில் பட்டிட 
				இயற்றினன் பலக ணங்ளை அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ. 
    			 
    			  | 
				 134  | 
			
			
				| 
				 1463
    			
    			  | 
				 ஆகையால் எம்முடன் 
				அமரி யற்றியே சோகம தடையலை சூல பாணிபால் ஏகுதி பாலநீ என்று 
				கூறலும் வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான். 
    			 
    			  | 
				 135  | 
			
			
				| 
				 1464
    			
    			  | 
				 தாரணி மறையவன் ததீசி 
				தன்மிசை நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன் கூரினை 
				இழந்துபோய்க் குலாலன் சக்கர நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ. 
    			 
    			  | 
				 136  | 
			
			
				| 
				 1465
    			
    			  | 
				 சூற்புயல் மேனியான் 
				துங்கச் செங்கையின் பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ 
				வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம் வேற்படை நின்னுயிர் விரைவின் 
				உண்ணுமால். 
    			 
    			  | 
				 137  | 
			
			
				| 
				 1466
    			
    			  | 
				 உங்கள்பே ராற்றல்இவ் 
				வுலகை வென்றன இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன 
				அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள் பொங்குபே ரொளிவர விளிந்து 
				போனபோல். 
    			 
    			  | 
				 138  | 
			
			
				| 
				 1467
    			
    			  | 
				 ஈட்டிய மாயைகள் 
				எவையுந் தன்வழிக் காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந் 
				தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை மீட்டிடு கின்றனன் விரைவி 
				னாலென்றான். 
    			 
    			  | 
				 139  | 
			
			
				| 
				 1468
    			
    			  | 
				 என்றலுஞ் சீறியே 
				இகலித் தாரகன் குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே மின்றிகழ் 
				நாணொலி எடுப்ப விண்மிசைச் சென்றிடும் அமரருந் தியக்க 
				மெய்தினார். 
    			 
    			  | 
				 140  | 
			
			
				| 
				 1469
    			
    			  | 
				 எய்திய காலையில் 
				எந்தை கந்தவேள் கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை மொய்தனில் 
				வாங்கிநாண் முழக்கங் கோடலும் ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே. 
    			 
    			  | 
				 141  | 
			
			
				| 
				 1470
    			
    			  | 
				 நாரியின் பேரொலி 
				நாதன் கோடலும் ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார் பேருல 
				கெங்கணும் பேதுற் றேங்கின தாரக முதல்வனுந் தலைது ளக்கினான். 
    			 
    			  | 
				 142  | 
			
			
				| 
				 1471
    			
    			  | 
				 துளக்கிய தாரக சூரன் 
				கைத்தலங் கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென வளக்கதிர் 
				நுனைகெழு வயிர வான்கணை அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான்.
    			
    			  | 
				 143  | 
			
			
				| 
				 1472
    			
    			  | 
				 ஆயதோர் காலையில் ஆறு 
				மாமுகன் மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ் சாயகந் தூண்டியே 
				தார காசுரன் ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான். 
    			 
    			  | 
				 144  | 
			
			
				| 
				 1473
    			
    			  | 
				 சிந்திய காலையில் 
				செயிர்த்துத் தாரகன் உந்தினன் பின்னரும் ஓராயி ரங்கணை 
				கந்தனும் அனையது கண்டு வல்லையின் ஐந்திரு பகழிதொட் டவற்றை 
				நீக்கினான். 
    			 
    			  | 
				 145  | 
			
			
				| 
				 1474
    			
    			  | 
				 மீட்டுமத் தாரகன் 
				விசிகம் வெஞ்சிலை பூட்டிய வாங்கலும் புராரி காதலன் ஈட்டமொ 
				டொருகணை யேவி ஆங்கவன் தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான்.
    			
    			  | 
				 146  | 
			
			
				| 
				 1475
    			
    			  | 
				 வேறு அங்கோர் 
				சிலையைக் குனித்தானது காலை தன்னில் எங்கோ முதல்வன் ஒருபாணியின் 
				ஏந்து வில்லில் செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான் 
				வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில். 
    			 
    			  | 
				 147  | 
			
			
				| 
				 1476
    			
    			  | 
				 சேரார் பரவுந் 
				திறல்வேலவன் செய்கை நோக்கித் தாரார் முடித்தா ரகவீரன் தனது 
				வில்லில் ஓரா யிரம்வா ளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து நேராய் 
				விரவுங் கணையாவையும் நீறு செய்தான். 
    			 
    			  | 
				 148  | 
			
			
				| 
				 1477
    			
    			  | 
				 வெய்யான் அநந்தங் கணை 
				தூண்ட விமலன் நல்குந் துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி 
				மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம் எய்யாகும் வண்ணஞ் 
				செறித்தானவன் யாக்கை யெங்கும்.
    			
    			  | 
				 149  | 
			
			
				| 
				 1478
    			
    			  | 
				 ஒருகோடி வாளி 
				உறலோடும் உருத்து நீசன் இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி 
				இருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும் பொருகோடும் வீழ 
				விடுத்தான்இரு புங்க வாளி. 
    			 
    			  | 
				 150  | 
			
			
				| 
				 1479
    			
    			  | 
				 வந்தங் கிரண்டு 
				சரமும்பட மாயை மைந்தன் தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி 
				யெய்தி முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக் கந்தன் 
				தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான். 
    			 
    			  | 
				 151  | 
			
			
				| 
				 1480
    			
    			  | 
				 மல்லற் கொடியிற் 
				றதுகண்டு மறங்கொள் வெய்யோன் வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது 
				வீட்டித் தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன் 
				செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான். 
    			 
    			  | 
				 152  | 
			
			
				| 
				 1481
    			
    			  | 
				 வேறங் கொருதேர் 
				மிசையேறியொர் வில்லை வாங்கி நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் 
				ஏவி மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள் ஏறுந் தடந்தேர் 
				வலவன்புயத் தெய்த உய்த்தான்.
    			
    			  | 
				 153  | 
			
			
				| 
				 1482
    			
    			  | 
				 வென்றோர் புகழுங் 
				குமரன்வியன் தேர்க டாவிச் சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய 
				வாளி வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப் 
				பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான். 
    			 
    			  | 
				 154  | 
			
			
				| 
				 1483
    			
    			  | 
				 வீழுற் றிடலும் 
				விழுசெம்புனல் வௌ�ள மிக்கே தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த 
				லுற்ற பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச் சூழிக் 
				களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன.
    			
    			  | 
				 155  | 
			
			
				| 
				 1484
    			
    			  | 
				 மன்னா கியதா 
				ரகன்அங்கண் மயங்கி வீழ அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக் 
				கொன்னார் சினங்கொண டடுபோரைக் குறித்து நம்பன் தொன்னான் உதவுந் 
				திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார்.
    			
    			  | 
				 156  | 
			
			
				| 
				 1485
    			
    			  | 
				 சூலந் திகிரிப் 
				படைதோமரந் துய்ய பிண்டி பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி 
				தண்டம் ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக வேலும் படைகள் 
				பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி. 
    			 
    			  | 
				 157  | 
			
			
				| 
				 1486
    			
    			  | 
				 கறுத்தான் அவர்தஞ் 
				செயல்கண்டுதன் கார்மு கத்தை நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட 
				வுய்த்து மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி அறுத்தான் 
				விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன்.
    			
    			  | 
				 158  | 
			
			
				| 
				 1487
    			
    			  | 
				 வெய்தாகிய தீங்கணை 
				மாரி விசாகன் மீட்டும் பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு 
				மார்பைத் துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக் 
				கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே. 
    			 
    			  | 
				 159  | 
			
			
				| 
				 1488
    			
    			  | 
				 வில்லோர் பரவுந் 
				திறல்வேலவன் வெய்ய கோலால் அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில் 
				பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச் சில்லோர் 
				கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார்.
    			
    			  | 
				 160  | 
			
			
				| 
				 1489
    			
    			  | 
				 மைக்கார் சிவந்த 
				தெனுந்தாரகன் மையல் நீங்கி அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி 
				நின்று தொக்கார் அமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி நக்கான் 
				அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான்.
    			
    			  | 
				 161  | 
			
			
				| 
				 1490
    			
    			  | 
				 வேறு செய்ய 
				வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக் கையி ழந்துமு 
				கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன் மைய லெய்திவி ழுந்த 
				னன்பொரும் வலிய தானையும் மாண்டன ஐய வீங்கொரு தமியன் நின்றனன் 
				அழகி தாலென தண்மையே. 
    			 
    			  | 
				 162  | 
			
			
				| 
				 1491
    			
    			  | 
				 தாவில் வெஞ்சிலை 
				வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே மேவ லானிவன் உயிர்கு 
				டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால் தேவர் மாப்படை தொடுவ 
				னிங்கினி யென்று சிந்தனை செய்துபின் ஏவரும் புகழ் தார காசுரன் 
				இனைய செய்கை இயற்றினான். 
    			 
    			  | 
				 163  | 
			
			
				| 
				 1492
    			
    			  | 
				 வேறு அடலரி 
				நான்முக னாதி வானவப் படையினை யாவையும் பவஞ்செய் தாரகன் 
				விடவிட வந்தவை வெருவி மேலையோன் புடைதனில் ஒடுங்கியே போற்றி 
				நின்றவே. 
    			 
    			  | 
				 164  | 
			
			
				| 
				 1493
    			
    			  | 
				 செங்கண்மா லயன்முதற் 
				றேவர் மாப்படை துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப் புங்கவன் 
				பாங்கரிற் போற்றி நிற்றலும் அங்கது கண்டனன் அவுணர் மன்னவன். 
    			 
    			  | 
				 165  | 
			
			
				| 
				 1494
    			
    			  | 
				 ஒருவினன் அகநதையை 
				உள்ள மோரிறை வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான் எரிகலுழ் 
				விழியினன் இவனை வென்றிடல் அரியது போலுமென் றகத்தில் உன்னினான். 
    			 
    			  | 
				 166  | 
			
			
				| 
				 1495
    			
    			  | 
				 பாங்கரின் மாதுடைப் 
				பரமன் தொல்படை ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை  வாங்கினன் 
				அருச்சனை மனத்தி னாற்றினன் ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான். 
    			 
    			  | 
				 167  | 
			
			
				| 
				 1496
    			
    			  | 
				 சங்கரன் தொல்படை 
				தறுகண் ஆலமும் புங்கவர் படைகளும் பூத ராசியும் அங்கத 
				நிரைகளும் அளப்பில் சூலமும் வெங்கனல் ஈட்டமும் விதித்துச் 
				சென்றதே. 
    			 
    			  | 
				 168  | 
			
			
				| 
				 1497
    			
    			  | 
				 கலைகுலாம் பிறைமுடிக் 
				கடவுள் மாப்படை அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும் உலைகுறா 
				தலமர வுரத்துச் சேறலும் இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான்.
    			
    			  | 
				 169  | 
			
			
				| 
				 1498
    			
    			  | 
				 கந்தவேள் அனையது 
				கண்டு தந்தையைச் சிந்தையின் உன்னியோர் செங்கை நீட்டியே 
				அந்தவெம் படையினை அருளிற் பற்றினான் தந்தவன் வாங்கிய தன்மை 
				யென்னவே. 
    			 
    			  | 
				 170  | 
			
			
				| 
				 1499
    			
    			  | 
				 நெற்றியில் விழியுடை 
				நிமலன் காதலன் பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான் மற்றது 
				தாரக வலியன் கண்ணுறீஇ இற்றது நந்திரு இனியென் றேங்கினான். 
    			 
    			  | 
				 171  | 
			
			
				| 
				 1500
    			
    			  | 
				 தேவர்கள் தேவனார் 
				தெய்வத் தொல்படை ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான் மூவிரு 
				முகமுடை முதல்வன் வன்மையை நாவினி லொருவரால் நவிறற் பாலதோ. 
    			 
    			  | 
				 172  | 
			
			
				| 
				 1501
    			
    			  | 
				 ஆயினும் அரன்மகன் 
				அறத்தின் போரலால் தீயதோர் கைதவச் செருவ துன்னலான் மாயைகள் 
				ஆற்றியே மறைந்து நின்றுநான் ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான். 
    			 
    			  | 
				 173  | 
			
			
				| 
				 1502
    			
    			  | 
				 கையனும் இவ்வகை 
				கருத்தி லுன்னியே ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன் வையமொ 
				டேகிநீ வல்ல மாயைகள் செய்குதி செய்குதி யென்று செப்பினான். 
    			 
    			  | 
				 174  | 
			
			
				| 
				 1503
    			
    			  | 
				 வேறு செப்பிய 
				இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி முப்புர 
				வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான் அப்புர நிருதர்க 
				ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக ஒப்பறு சூரன திளையோனும் 
				உருமென அவையிடை உலவுற்றான்.
    			
    			  | 
				 175  | 
			
			
				| 
				 1504
    			
    			  | 
				 வேலைக ளுருவினை 
				வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன் காலம திறுதியில் உலகுண்ணுங் 
				கனையொலி அனலிக ளெனநின்றான் சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை 
				சூழ்தரும் இருளாக மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட 
				நிரையானான். 
    			 
    			  | 
				 176  | 
			
			
				| 
				 1505
    			
    			  | 
				 இந்திரன் முதலுள 
				சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல் அந்தநெ டுங்கிரி வரலோடும் 
				அருகினில் உறுகுல கிரியாகித் தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட 
				முதிரொலி யுடன்வந்தான் முந்திய தந்தம துருமாறி முறைமுறை 
				நின்றதொர் திறனேபோல். 
    			 
    			  | 
				 177  | 
			
			
				| 
				 1506
    			
    			  | 
				 வாயுவின் உருவென 
				மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான் தேயுவின் உருவென வரலுற்றான் 
				திரியவும் நெடுவரை விரைவோடுங் காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம 
				திடையுற மிடைகாலை ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் 
				அறமில்லான். 
    			 
    			  | 
				 178  | 
			
			
				| 
				 1507
    			
    			  | 
				 அவ்வகை தாரகன் 
				வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி எவ்விடை யுஞ்செறி தரலோடும் 
				எம்பெரு மானவன் இவைகாணாத் தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் 
				என்றுள மிசைகொண்டே கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி 
				கழறுற்றான்.
    			
    			  | 
				 179  | 
			
			
				| 
				 1508
    			
    			  | 
				 தாரகன் என்பதோர் 
				பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை ஓரிறை செல்லுமுன் உடல்கீறி 
				உள்ளுயி ருண்டுபு றத்தேகிப் பாரிடர் தம்மை இலக்கத்தொன் 
				பதின்மர்க ளாக உரைகின்ற வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை 
				தன்னை விடுத்திட்டான்.
    			
    			  | 
				 180  | 
			
			
				| 
				 1509
    			
    			  | 
				 சேயவன் விட்டிடு 
				தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும் ஆயிடை செய்த 
				புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண் மாயையி னாகிய 
				வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந் தூயவன் விழியழல் 
				சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற. 
    			 
    			  | 
				 181  | 
			
			
				| 
				 1510
    			
    			  | 
				 வேறு அரண்டரு 
				கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந் திரண்டொரு வடிவின் 
				வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு முரண்டரு தடந்தோள் அண்ணல் 
				முத்தலை படைத்த சூலம் இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் 
				றவ்வேல்.
    			
    			  | 
				 182  | 
			
			
				| 
				 1511
    			
    			  | 
				 முடித்திடல் அரிய மாய 
				மூரிநீர்க் கடலை வற்றக் குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் 
				திடுத லோடுந் தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் 
				பற்றி ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான். 
    			 
    			  | 
				 183  | 
			
			
				| 
				 1512
    			
    			  | 
				 அச்சமொர் 
				சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல் நச்சர வென்னச் சீறி 
				நணுகலும் அவன்மார் பென்னும் வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் 
				றென்னச் செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே. 
    			 
    			  | 
				 184  | 
			
			
				| 
				 1513
    			
    			  | 
				 தாரகன் மார்ப 
				மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு சீரிய கிரவுஞ் சத்திற் 
				சேர்ந்துபட் டுருவிச் சென்று வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய 
				தென்ன அங்கட் சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே. 
    			 
    			  | 
				 185  | 
			
			
				| 
				 1514
    			
    			  | 
				 மீண்டிடு சீற்ற 
				வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை 
				யெழுப்பி வான்போய் மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன் 
				தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா.
    			
    			  | 
				 186  | 
			
			
				| 
				 1515
    			
    			  | 
				 தண்டம தியற்றுங் 
				கூர்வேல் தாரக வவுணன் மார்பும் பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே 
				ரோசை கேளா விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார் 
				அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர். 
    			 
    			  | 
				 187  | 
			
			
				| 
				 1516
    			
    			  | 
				 வடித்ததை யன்ன 
				கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத் தடித்திடு கின்ற யாக்கைத் 
				தாரகன் அநந்த கோடி இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து 
				துள்ளிப் படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான்.
    			
    			  | 
				 188  | 
			
			
				| 
				 1517
    			
    			  | 
				 தடவரை யனைய 
				மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப் புடவியில் வீழா நின்றான் 
				பொள்ளென வானில் துள்ளிக் கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் 
				கலக்க மெய்தி உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன்.
    			
    			  | 
				 189  | 
			
			
				| 
				 1518
    			
    			  | 
				 தளர்ந்திடல் இல்லா 
				வீரத் தாரகன் பட்டு வானில் கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு 
				பிலமும் பாரு பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம் 
				உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை. 
    			 
    			  | 
				 190  | 
			
			
				| 
				 1519
    			
    			  | 
				 தண்ணளி சிறிது 
				மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய் மண்ணிடை மறிந்த தன்மை 
				வன்சிறை இழந்த நாளில் திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் 
				றுன்னி விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. 
    			 
    			  | 
				 191  | 
			
			
				| 
				 1520
    			
    			  | 
				 வெற்றிய தாகுங் 
				கூர்வேல் வெற்பினை அட்ட காலைச் செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய 
				பொறிக ளெங்கும் பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம் 
				வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே. 
    			 
    			  | 
				 192  | 
			
			
				| 
				 1521
    			
    			  | 
				 சிறந்திடு மாய 
				வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப் பிறந்திடு கின்ற தீயைத் 
				தீயெனப் பேச லாமோ அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் 
				மெய்யில் உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே. 
    			 
    			  | 
				 193  | 
			
			
				| 
				 1522
    			
    			  | 
				 யானுற்ற குன்றந் 
				தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள் தானுற்ற நதியை வந்து தடிந்ததே 
				என்ன வெற்பில் ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம் 
				வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே. 
    			 
    			  | 
				 194  | 
			
			
				| 
				 1523
    			
    			  | 
				 திறலுடை நெடுவேல் 
				அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும் பொறிகளும் துகளும் ஆர்ப்பும் 
				பொள்ளெனச் செறிந்த தன்மை மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் 
				அடைந்தொன் றாகி இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ.
    			
    			  | 
				 195  | 
			
			
				| 
				 1524
    			
    			  | 
				 தந்தியின் வதனங் 
				கொண்ட தாரக வவுணன் மார்வில் சிந்துறு குருதச் செந்நீர் திரைபொரு 
				தலைத்து வீசி அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில் 
				வந்திடு பூழை* புக்கு மறிகடல் மடுத்த தன்றே.  ( * பூழை - 
				துவாரம்.)
    			
    			  | 
				 196  | 
			
			
				| 
				 1525
    			
    			  | 
				 விட்டவேல் மீண்டு 
				கந்த வேள்கரத் திருப்பத் தீயோன் பட்டதும் வெற்பு மாய்ந்த 
				பான்மையும் அவுணர் யாருங் கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் 
				கமலத் தேவும் முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் 
				ஆர்த்தார்.
    			
    			  | 
				 197  | 
			
			
				| 
				 1526
    			
    			  | 
				 ஆடினர் குமரற் போற்றி 
				அங்கைக ளுச்சி மீது சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் 
				சூழ்ந்து பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார் 
				நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார். 
    			 
    			  | 
				 198  | 
			
			
				| 
				 1527
    			
    			  | 
				 ஆங்கது காலை தன்னில் 
				அளப்பிலா மாயை வல்ல ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந் 
				தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள் பூங்கழல் 
				வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார். 
    			 
    			  | 
				 199  | 
			
			
				| 
				 1528
    			
    			  | 
				 வாருறு கழற்கால் வீர 
				வாகுவே முதலா வுள்ள வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் 
				நோக்கித் தாரகன் வரை**யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர் 
				ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான்.  ( ** 
				தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.)
    			
    			  | 
				 200  | 
			
			
				| 
				 1529
    			
    			  | 
				 செய்யவன் இனைய வாறு 
				சீரருள் புரிய வீரர் ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ 
				மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி வெய்யதோர் கிரிமா 
				யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார்.
    			
    			  | 
				 201  | 
			
			
				| 
				 1530
    			
    			  | 
				 என்றலும் வீர 
				மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள் வென்றிகொள் சூரன் 
				பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட வன்றிறற் படையின் வேந்தை*** 
				மற்றவன் கரத்தின் நல்கி நன்றிது போற்று கென்றே நவின்றுநல் 
				லருள்பு ரிந்தான்.  ( *** படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.) 
    			 
    			  | 
				 202  | 
			
			
				| 
				 1531
    			
    			  | 
				 தாரகன் போரில் 
				துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம் ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் 
				எழுவே செய்து பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச் 
				சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவவேள். 
    			 
    			  | 
				 203  |