| 
	 963  | 
 
எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான் 
அனையதற் பின்னர் ஆண்டை அமரர்கம் மியனை நோக்கி 
வனைகழற் சூர பன்மன் மற்றியாம் உறைதற் கொத்த 
புனைதிரு நகரம் வல்லே புரிமதி புலவ வென்றான்.  | 
	 
	1  | 
| 
	 964  | 
 
என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும் 
வென்றிகொள் மூதூ ருககு வியலிடம் உரைத்தி யென்ன 
நன்றெனப் புகரோன் தானே நகர்களுக் கெல்லை கூற 
அன்றவை வினவித் தென்பால் அளக்கரை அடைந்தான் அன்றே.  | 
	 
	2  | 
| 
	 965  | 
 
ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள 
யோசனை எல்லை முன்னோன் உறுநக ராகக் கோலிக் 
காசினி வரைகள் தம்மால் கதுமெனத் தூர்த்து மிக்க 
பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப பின்றை.  | 
	 
	3  | 
| 
	 966  | 
 
காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும் 
நாயகி நகர மென்ன நாடொறுஞ் சூழு மாற்றால் 
சேயுயர் விசும்பிற் போகச் செம்பொனால் மதிலைச் செய்து 
வாயில்கள் நான்க மைத்து ஞாயிலும் வகுத்து நல்கி.		  | 
	 
	4  | 
| 
	 967  | 
 
நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன 
மாற்பெருங் கோபு ரங்கள் மணிவெயில் எறிப்ப நல்கி 
நூற்படும் ஒழுக்கம் நாடி நூறியோ சனையொன் றாகப் 
பாற்படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ.		  | 
	 
	5  | 
| 
	 968  | 
 
முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி 
ஒப்பருந் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன் 
வைப்பெனச் செம்பொன் மாடம் வரம்பில வகுத்து மாதர் 
மெய்ப்படும் ஆடல் கூரும் வியலிடம் பலவுஞ் செய்து.  | 
	 
	6  | 
| 
	 969  | 
 
மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில் 
கோளரி தயங்கு பொற்பிற் கோபுரங் குன்றம் அம்பொற் 
சூளிகை அரங்க மன்றஞ் சுடருமேற் றலங்கள் தூய 
சாளரஞ் சோலை வாவி தனித்தனி யாகத் தந்து.  | 
	 7  | 
| 
	 970  | 
 
வேறு 
ஆயதன் நடுவுற அயுத வெல்லையில் 
பாயதோர் நெடுமதில் பயில நல்கியே 
மாயவள் திருமகன் வைக ஆங்கொரு 
கோயிலை எழில்பெறக் குயற்றி னானரோ.  | 
	 8  | 
| 
	 971  | 
 
வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந் 
தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள் 
சீரணி தபனியச் சிகர கோபுரங் 
காரணி மணிவரை கவின்கொள் சூளிகை.  | 
	 9  | 
| 
	 972  | 
 
ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம் 
சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம் 
தானவர் தலைவர்கள் சாருந் தொல்லிடம் 
ஏனைய அரக்கர்கள் இனிது சேரிடம்.		  | 
	 10  | 
| 
	 973  | 
 
நாடரும் விசும்புறை நாரி மாரெலாம் 
ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம் 
பாடலின் முறைபயில் பைம்பொன் மண்டபம் 
மாடக யாழ்முரல் வயிர மண்டபம்.		  | 
	 11  | 
| 
	 974  | 
 
மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி 
குயில்முத லாகிய குலவு மண்டபம் 
இயலுறு யூகமான் இரலை செச்சைகள் 
பயிலுறு வாரணம் பரவும் மண்டபம்.		  | 
	 12  | 
| 
	 975  | 
 
சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம் 
முந்திய வேள்விகள் முயலும் மண்டபம் 
மந்திர வியல்பினோர் மருவு மண்டபம் 
இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம்.		  | 
	 
	13  | 
| 
	 976  | 
 
திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட 
அரசியல் புரியுமத் தாணி மண்டபம் 
இருநிதி உளலொம் ஈண்டும் மண்டபம் 
பரனருள் படைக்கலம் பயிலும் மண்டபம்.  | 
	 14  | 
| 
	 977  | 
 
அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம் 
நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்தகில் 
பெருந்துவர்க் காயடை பிறவுஞ் சாலவும் 
இருந்திடு கின்றபேர் எழில்கொள் மண்டபம்.  | 
	 15  | 
| 
	 978  | 
 
மானனை யார்பலர் மருவு மண்டபம் 
ஆனதோர் ஊசலாட் டயரும் மண்டபம் 
பானிலா உமிழ்தரு பளிங்கின் மண்டபம் 
வானுயர் சந்திர காந்த மண்டபம்.		  | 
	 16  | 
| 
	 979  | 
 
மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம் 
காமரு பவளமார் கவின்கொள் மண்டபம் 
ஏமரு மரகதத் தியன்ற மண்டபம் 
தாமரை உயிர்த்திடு தரள மண்டபம்.		  | 
	 17  | 
| 
	 980  | 
 
கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன 
யாவையும் நல்கியே இதனுக் குள்ளுற 
மாவுறு சூரபன் மாவுந் தன்குலத் 
தேவியும் உறையவோர் உறையுள் செய்தரோ.		  | 
	 18  | 
| 
	 981  | 
 
இங்கிது சூழ்தர எண்ணி லாதன 
மங்கல நிறைதரு மாட வீதிகள் 
அங்கவன் துணைவிய ராகி வந்திடும் 
நங்கையர் மேவர நலத்தின் நல்கியே.		  | 
	 19  | 
| 
	 982  | 
 
காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி 
வாவிக ளோடைகள் பொய்கை வான்றொடு 
பூவியல் தண்டலை பொலன்செய் குன்றுடன் 
யாவையும் முறைபட இயற்றி னானரோ.		  | 
	 20  | 
| 
	 983  | 
 
அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே 
யுள்ளுறு நகரிடை உறையுங் கோயிலில் 
தள்ளரும் பொன்சுடர் தழைத்த பொற்பினால் 
வௌ�ளிய தானது மேலைப் பொன்னகர்.  | 
	 21  | 
| 
	 984  | 
 
வேறு 
 
இன்னவையும் ஏனவையும் எண்ணிமனத் தால்அருளித் 
தன்னிகரில் அவுணர்பிரான் சயத்தோடு பெருந்தலைமை 
மன்னவரு தலின்வீர மகேந்திரமே யாமென்றே 
அந்நகருக் கோர்நாமம அணிபெறுத்தி அளித்தனனே.  | 
	 
	22  | 
| 
	 985  | 
 
ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் 
சோமபுர மெனப்புகலுஞ் சுவேதபுரம் அவுணர்புரம் 
வாமபுரம் பதுமபுரம் மகேந்திரமா புரமென்னுங் 
காமர்புரத் தெண்டிசைக்குங் காட்சிபெற உதவினனால்.		  | 
	 
	23  | 
| 
	 986  | 
 
மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி 
ஆண்டதுபோல் அகன்பரப்பில் ஆசுரம்என் றொருநகரம் 
நீண்டவட கடல்நடுவண் நிருதர்புகழ்ந் திடுமாற்றால் 
காண்டகைய சீயமுகக் காவலற்கு நல்கினனே.  | 
	 24  | 
| 
	 987  | 
 
மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங் 
கொற்றமிகுஞ் சூரபன்மன் குலவுபெருந் தானையெலாஞ் 
சுற்றமுடன் மேவுதற்குத் தொன்னகரம் பலவமைத்துக் 
கற்றுணருஞ் சிறுவரொடுங் கம்மியன்மீண் டேகினனே.  | 
	 
	25  | 
| 
	 988  | 
 
வேறு 
நீடு மேரு நெடுவரைத் தென்புடை 
நாடு சீர்கெழு நாவலந் தீவினில் 
கூடு கின்றபொற் கூடந் தனக்கொரு 
மாடு போந்தனன் மாமயன் தாதையே.  | 
	 26  | 
| 
	 989  | 
 
பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில் 
தகுவர் போற்றிடுந் தாரகற் காகவே 
மகிழ்வின் நீரொடு மாயா புரமெனா 
நகர மொன்றை அணிபெற நல்கினான்.  | 
	 27  | 
| 
	 990  | 
 
வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும் 
இனைய வூர்கள் இயற்றியம் மாயையின் 
தனய னுக்கிவை சாற்றலும் நன்றெனா 
அனிக மோடங் கடைந்தனன் என்பவே.  | 
	 28  | 
| 
	 991  | 
 
மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே 
உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன் 
கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக் 
கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான்.  | 
	 1  | 
| 
	 992  | 
 
நண்ணு கின்றுழி நான்முக னாதியாம் 
விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும் 
அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய 
எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ.  | 
	 2  | 
| 
	 993  | 
 
கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு 
தாவில் பீடிகை தன்மிசை வைகியே 
மாவு லாவிய மால்கடல் தெண்புனல் 
தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான்.		  | 
	 3  | 
| 
	 994  | 
 
ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர் 
சூடி ஒண்கலன் தூயன் பூண்டுபின் 
பீடு சேர்தரு பின்னவர் பால்வர 
நீடு காதல் நிருதர் புகழ்வே.		  | 
	 4  | 
| 
	 995  | 
 
நிகரி லாத நிருதர்க் கிறைதொழப் 
புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட 
மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட 
மகப திக்கு மனந்தளர் வெய்தவே.		  | 
	 5  | 
| 
	 996  | 
 
வந்து சீய மணித்தவி சேறினன் 
அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும் 
இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே 
சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான்.  | 
	 6  | 
| 
	 997  | 
 
கண்டு தானவர் காசிபன் காதலன் 
புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா 
அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை 
உண்ட ளாரின் உளங்களிப் பெய்தினார்.  | 
	 7  | 
| 
	 998  | 
 
அன்ன வேலை அமரர் முனிவர்கள் 
பொன்ன வாநறும் போது கரங்கொடே 
மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை 
முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார்.  | 
	 8  | 
| 
	 999  | 
 
வேறு 
பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை 
ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே 
ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான் 
தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார்.  | 
	 
	9  | 
| 
	 1000  | 
 
நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான் 
பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார் 
வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ வல்ல 
கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார்.		  | 
	 
	10  | 
| 
	 1001  | 
 
முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று 
மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும் 
எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப் 
பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார்.  | 
	 
	11  | 
| 
	 1002  | 
 
குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான் 
இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந் 
திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத் 
துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார்.  | 
	 
	12  | 
| 
	 1003  | 
 
அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி 
வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி 
நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித் 
திரம்பயில் நடனம் மூன்றுஞ்* செவ்விதிற் புரிய லுற்றார்.	  
( * நடனம் மூன்று - தேசிகம், வடுகு, சிங்களம் என்பன.)  | 
	 
	13  | 
| 
	 1004  | 
 
இத்திறம் அமரர் யரும் ஏனையர் தாமும் ஈண்டித் 
தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற 
மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே 
மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான்.		  | 
	 
	14  | 
| 
	 1005  | 
 
களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித் 
துளித்திடு துழாய்மால் தன்னைச் சூரனாம் அவுணன் பாரா 
அளித்தவன் தன்மூ தாதை யாயினை அதனால் நின்னை 
விளித்திடு மெல்லை தோறும் விரைந்திவண் மேவு கென்றான்.  | 
	 
	1  | 
| 
	 1006  | 
 
செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத் 
துங்கமோ டரசு செய்யுஞ் சூரனாம வீரன் பாரா 
இங்குநின் மைந்த ரோடும் என்னிடந் தன்னி லேகி 
அங்கம்ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி யென்றான்.  | 
	 
	2  | 
| 
	 1007  | 
 
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் 
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் 
நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய் 
எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி யென்றான்.  | 
	 
	3  | 
| 
	 1008  | 
 
அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப் 
பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும் 
மறைவொடு திரியு மாறும் மற்றினி விடுத்து நாளும் 
நிறைவொடு கதிரோன் போல்இந் நீள்நகர் வருதி யென்றான்.  | 
	 
	4  | 
| 
	 1009  | 
 
பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன விரைவின் நோக்கி 
இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின் 
அங்கவர் தம்பா லெய்தி அவர்பணி யாவும் ஆற்றிச் 
செங்கம லம்போல் யாவர் தீண்டினுங் குளிர்தி யென்றான்.  | 
	 
	5  | 
| 
	 1010  | 
 
சுடர்முடி யாவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப் 
படிமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தங் 
கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுணர் தம்மை 
அடுவது கனவும் உன்னா தஞ்சியே திரிதி யென்றான்.		  | 
	 
	6  | 
| 
	 1011  | 
 
அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா 
எண்டரு நம்மூ தூரில் யாவரும் புனைந்து நீத்த 
தண்டுளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்தம் 
நுண்டுக ளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான்.		  | 
	 
	7  | 
| 
	 1012  | 
 
காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில் 
நாவிவெண் பளிதஞ் சாந்தம் நரந்தமோ டளாவித் தீம்பால் 
ஆவியின் வௌ�ய நொய்ய அரும்பனி நீரிற் கூட்டித் 
தூவுதி இடங்க டோறுங் காற்றது துடைக்க வென்றான்.		  | 
	 
	8  | 
| 
	 1013  | 
 
வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன் 
தேசுறு துறக்கம் வைகுந் தேவர்தங் குழுவி னோடும் 
ஆசையங் கிழவ ரோடும் அருந்தவ ரோடும் போந்து 
பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான்.  | 
	 
	9  | 
| 
	 1014  | 
 
இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத் 
தன்னுறு பணியின் நிற்பான் சாற்றுலும் அனையர் 
அன்னது செய்து மென்றே அனையவர் றொழுக அன்னான் 
மன்னினன் அரசில் பின்றை மணஞ்செய உன்னி னானால்.  | 
	 
	10  | 
| 
	 1015  | 
 
மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த 
பதுமகோ மளைஎன் றோதும் பாவையைப் புகரோன் நாடிச் 
சதுர்முகன் முதலாந் தேவர் தானவர் பிறரும் போற்ற 
விதிமுறை வதுவை செய்து விழைவொடு மேவி யுற்றான்.		  | 
	 
	11  | 
| 
	 1016  | 
 
அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர் 
கின்னரர் இயக்கர் நாகர் கிம்புரு டாதி யானோர் 
கன்னியர் அளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித் 
துன்னுபன் மலர்த்தேன் உண்ணுஞ் சுரும்பென இன்பந் துய்த்தான்.  | 
	 
	12  | 
| 
	 1017  | 
 
அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள 
திருமிகு விபுதை தன்னைச் சீர்மணஞ் செய்து நல்கி 
நிருதிதன் புதல்வி யான நேரிழை சவுரி தன்னைக் 
கரிமுக இளவல் சேரக் கடிமணம் புரிவித் திட்டான்.  | 
	 
	13  | 
| 
	 1018  | 
 
இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி 
மெய்வளம் பெறநுங் கட்கு விதித்திடும் மூதூ ரேகி 
அவ்விரு கோடி வௌ�ளம் அனிகமோ டிருத்தி ரென்னாத் 
தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமா றேவி னானால்.		  | 
	 
	14  | 
| 
	 1019  | 
 
ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி 
நீவிர்கள் இரண்டு கோடி நீத்தமாம் அனிகத் தோடு 
தீவுக டோறும் ஆழி இடந்தொறுஞ் செய்த மூதூர் 
மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான் மன்னோ.		  | 
	 
	15  | 
| 
	 1020  | 
 
மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற் 
கூறுபா தலங்கள் யாவும் ஒழிந்தவுங் குறுகி யேதன் 
ஈறிலா ஆணை போற்ற எல்லையில் அவுணர் தம்மை 
ஆறெனுங் கோடி வௌ�ளத் தனிகமோ டேகச் செய்தான்.  | 
	 
	16  | 
| 
	 1021  | 
 
விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர் 
எட்டொடு பிலனோ ரேழும் ஏனைய வரைப்பு மாகிக் 
கிட்டின செறிந்து மொய்த்த கேடில்சீர் அவுணர் தானை 
மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே.  | 
	 
	17  | 
| 
	 1022  | 
 
எங்கணுந் தனது தானை அடையறா தீண்ட லோடுந் 
துங்கவெஞ் சூர பன்மன் தானுரை தொன்மூ தூரில் 
அங்கணோ ரிலக்கம் வௌ�ளத் தவுணர்தந் தானை தன்னை 
மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ.		  | 
	 
	18  | 
| 
	 1023  | 
 
கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம் 
அரிமரை முகத்து வீரர் அவணர்தந் தலைவ ரானோர் 
இருவகை நான்மை யோர்க்கும் எண்டிசை நகரும் ஈந்து 
வருபடை அயுதத் தோடும் மகேந்திரங் காக்கச் செய்தான்.  | 
	 
	19  | 
| 
	 1024  | 
 
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான 
வாயில்க டோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும் 
கோயிலின் இருக்கை தோறுங் குணிப்பிலா வீரர் தம்மை 
நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி யிட்டான்.		  | 
	 
	20  | 
| 
	 1025  | 
 
துர்க்குணன் தரும கோபன் துன்முன் சங்க பாலன் 
வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத் 
தொக்கமந் திரிக ளாகத் துணைக்கொடே சூர பன்மன் 
மிக்கவா னவர்கள் போற்ற வீற்றிருந் தரசு செய்தான்.  | 
	 
	21  | 
| 
	 1026  | 
 
அரசு செய்தலும் அந்தர நாதனுஞ் 
சுரரு மேனை முனிவருந் தொக்குறீஇ 
வரைசெய் மாட மகேந்திர மாபுரத் 
தொருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார்.  | 
	 1  | 
| 
	 1027  | 
 
கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத் 
தலைவன் மாப்பதி சார்ந்தவர் தம்பதி 
பலவு மேகிப் பணித்தன ஆற்றியே 
உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார்.  | 
	 2  | 
| 
	 1028  | 
 
வேறு 
 
ஊனமுற்றோர் போலிவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன்,  
வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித்,  
தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்றோ தரங்க வேலை,  
மீனனைத்துஞ் சூறைகொண்டு வைகலுமுய்த் திடுதிரென விளம்பினானால்.		  | 
	 
	3  | 
| 
	 1029  | 
 
உரைக்குமொழி யதுகேளா அனையரெலம் உள்நடுங்கி உயங்கி வௌ�கித்,  
திரைக்கடலின் மீன்றனக்குத் தருகென்றான் இதற்கினிநாஞ் செய்வ தேதோ,  
விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நந்தலையில் விதித்தான் என்னா,  
இரக்கமொடு மறுத்தலஞ்சி அத்திறமே புரிதுமென இறைஞ்சிப் போனார்.  | 
	 
	4  | 
| 
	 1030  | 
 
போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி,  
ஆகின்ற தெமக்கேயோர் பழியன்றோ அனையதுவந் தணுகா முன்னர்ச்,  
சாகின்ற தேமிகவும் இனிதாகும் எமக்கதுவுஞ் சாரா தந்தோ,  
வேகின்ற சிந்தையினேஞ் செய்வதெவன் எனப்புலம்பி வேலை புக்கார்.  | 
	 
	5  | 
| 
	 1031  | 
 
அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த,  
மைவேலை தனக்கிறைவன் நீயன்றோ நின்னினுமோர் வலியா ருண்டோ,  
கைவேலைப் பணியியற்றித் திமிங்கிலமே முதலாய கணிப்பின் மீன்கள்,  
இவ்வேலை ஏற்றுதியேல் இடர்வேலைக் கரையிலெமை யெடுத்தி யென்றான்  | 
	 
	6  | 
| 
	 1032  | 
 
வௌ�ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணுளோர்க்கு,  
வள்ளல்நீ இரங்குதியோ அத்தொழில்யான் புரிவனென வருணன் கூறி,  
அள்ளல்வே லையுட்புகுந்து தனதுபெருங் கரதலத்தால் அலைத்து வாரி,  
யுள்ளமீன் குலங்களெல்லாந் தடங்கரையில் வரையேபோல் உயர்த்த லுற்றான்.  | 
	 
	7  | 
| 
	 1033  | 
 
தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத்,  
தடுக்கல்முழு வதுநோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்றலாலே,  
எடுப்பதுநுந் தொழிலென்றே இந்திரன்றான் விளம்புதலும் இமையோ ரெல்லாம்,  
நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரங்குலைத்து நாணுக் கொண்டார்.  | 
	 
	8  | 
| 
	 1034  | 
 
சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால் வைகும்,  
மன்னனுயிர் தலைவாங்கச் செங்கதிரோன் பெரும்புனலின் வடிவை வாட்டப்,  
பன்னகரா கியதிறத்தாற் பிணித்திடும்அச் சுமையதனைப் பகட்டின் வேந்தன்,  
இன்னலுறு வானவர்பால் எடுத்தவவர் கொண்டேகி இரங்கு கின்றார்.  | 
	 
	9  | 
| 
	 1035  | 
 
வேறு 
பன்னும் புகழ்ச்சூர பன்மனெனுந் தீயவனான் 
முன்னுந் துயர்க்கடலின் மூழ்கி முரணழிந்தேம் 
துன்னும் பழியாந் தொழலிதுவுஞ் செய்தனமால் 
இன்னும் படுவதொழில் ஏதோ உணரேமே.  | 
	 10  | 
| 
	 1036  | 
 
பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால் 
ஆர்கின்ற தின்றோ ரலரே அ�துயிரை 
ஈர்கின்ற தந்தோ விதியே எமக்கிதுவுந் 
தீர்கின்ற காலம் உளதோநீ செப்பாயே.		  | 
	 11  | 
| 
	 1037  | 
 
பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும் 
பாவமென நூலில் பகருகின்ற இத்தொழிலை 
ஏவர்புரி கின்றார் எமக்கோவந் தெய்துமதோ 
தேவ கதியின் நிரயஞ் சிறப்புடைத்தே.		  | 
	 12  | 
| 
	 1038  | 
 
தக்க துணராத தானவர்கள் தங்களினும் 
மக்களினுந் தாழ்வாம் வலைஞர்தொழில் செய்தனமால் 
இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த 
மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே.		  | 
	 13  | 
| 
	 1039  | 
 
வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள 
போத நெறியாம் அதற்குப் புறம்பனேம் 
தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தாற் செப்புகின்ற 
வேதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே.  | 
	 
	14  | 
| 
	 1040  | 
 
தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும் 
வானவர்க ளென்றே மதிக்குந் தகைமையினோம் 
ஈனமொடு மீன்சுமந்தே எல்லோர் களும்நகைக்கத் 
தானவர்முன் செல்வதிலுஞ் சாதல்மிக நன்றுநன்றே.		  | 
	 
	15  | 
| 
	 1041  | 
 
என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத் 
துன்னு நிருதர்புகழ் சூரன் திருநகரின் 
மன்னுதிசை யாளரொடும் வந்தனரால் அவ்வளவில் 
அன்னசெயல் கண்டே அவுணர்உரை செய்குவார்.  | 
	 16  | 
| 
	 1042  | 
 
மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம் 
ஈதோ சிலமீன் தருகின் றனரென்பார் 
மீதோ டியபரிதி வெய்யோன்முன் னுண்டவெறுங் 
கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்றுரைப்பார்.  | 
	 
	17  | 
| 
	 1043  | 
 
தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார் 
ஈங்கிவர்க்கு நாணம் இலையோ சிறிதென்பார் 
தீங்கிழைக்கின் யாரேனுஞ் செய்யாத தேதென்பார் 
மூங்கையொத்து ளாரோ மொழியார் இவரென்பார்.  | 
	 18  | 
| 
	 1044  | 
 
முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும் 
பந்தத் துடன்வாழ் பரதவரே செய்கின்ற 
இந்தத் தொழிலும் இவர்க்குவரு மோவென்பார் 
சிந்திப்ப தென்னோ விதியின் செயலெனபார்.		  | 
	 
	19  | 
| 
	 1045  | 
 
வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும் 
பேதை நெறியே பிடித்தார் இவரென்பார் 
கோதுபடா நந்தங் குலத்தை மிகநலிந்தார் 
ஏதுபடார் இன்னம் இமையோ ரெனவுரைப்பார்.		  | 
	 
	20  | 
| 
	 1046  | 
 
மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும் 
விண்ணோர்க் கிறைவன் விரைவினுயிர் விட்டிலனாற் 
கண்ணோ பெரிது கருத்தோ சிறிதென்பார் 
பெண்ணோ அலிதானோ பேடோ வெனவுரைப்பார்.		  | 
	 21  | 
| 
	 1047  | 
  
 வேறு 
	இந்த வாறு பலரும் இயம்பிடப் 
	புந்தி நொந்து புலம்புபுத் தேளிர்கள் 
	தந்தி யூருந் தலைவனை முற்கொடு 
	வந்து தீயவன் வாய்தலுற் றாரரோ.		  | 
	 22  | 
| 
	 1048  | 
 
பரிதி வேந்தன் பணிமுறை நாடியே 
வருதிர் ஈண்டென்று வாயிலர் கூறிடப் 
பொருதி ரைக்கடல் மீன்கொடு போய்ச்சுரர் 
ஒருத னிப்பெருங் கோயிலுள் உய்த்தனர்.		  | 
	 23  | 
| 
	 1049  | 
 
எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன் 
துளித்த தேன்றொடைச் சூர்முதல் காணுறீஇக் 
களித்து வந்து கடவுளர் வைகலும் 
அளித்தி ரென்ன அழகிதென் றேகினார்.  | 
	 24  | 
| 
	 1050  | 
 
என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே 
பொன்றி னாரின் புலர்ந்து புலம்புறீஇத் 
துன்று கின்ற துயர்க்கடல் மூழ்கியே 
ஒன்றும் வேத வொழுக்கமற் றாரரோ.				  | 
	 
	25  | 
| 
	 1051  | 
 
அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால் 
பதுமகோ மளையென் றோதும் பாவைதன் உதரம் போந்து 
புதுமதிக் குழவி யேபோல் பொற்பொடு பொலிந்து முன்னம் 
மதலையங் கொருவன் வந்தான் மறலிக்கு மறலி போல்வான்.  | 
	 
	1  | 
| 
	 1052  | 
 
வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ 
அந்தமில் மகிழ்ச்சி பொங்க அவுணர்தங் கிளைஞர்க் கெல்லாம் 
நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீச லுற்றான் 
இந்திரன் முதலி னோரும் யாவரும் இடுக்கண் எய்த.		  | 
	 
	2  | 
| 
	 1053  | 
 
வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர் 
ஆசிகள் புகன்று போற்றி அன்னதோர் மைந்தன் தன்னைக் 
காசொடு வயிர முத்தங் கதிர்பொலந் தொட்டில் சேர்த்தார் 
மாசகல் மதிய மேபோல் பைப்பய வளர்தல் உற்றான்.  | 
	 
	3  | 
| 
	 1054  | 
 
கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன் 
தொட்டிலில் துயிலு மெல்லை ஒருபகல் சுடரின் என்றூழ் 
விட்டதோர் நூழை தன்னால் மேவியே அனையன் மெய்யிற் 
பட்டதங் கதனை நாடிப் பரிதியைச் சுளித்துப் பார்த்தான்.  | 
	 
	4  | 
| 
	 1055  | 
 
பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ் 
சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக் 
கார்த்திடு புயங்கங் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு 
போத்துமோர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிதொன் றுண்டோ.  | 
	 
	5  | 
| 
	 1056  | 
 
தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா 
ஆனதோர் செம்பொற் றொட்டில் அணிமணிக் காலி னூடே 
பானுவை வலிதிற் கட்டிப் பண்டுபோல் துயின்றான் அங்கண் 
வானவர் அதனை நோக்கி மனம்வெரீஇ மறுக்க முற்றார்.  | 
	 
	6  | 
| 
	 1057  | 
 
பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன் 
கருதியிந் திரனே ஏனைக் கடவுளர் யாருஞ் சூழ 
நிருதர்கோன் தன்பால் வந்து நீடிருட் பகைவன் தன்னைத் 
தருதிநின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி யென்றான்.  | 
	 
	7  | 
| 
	 1058  | 
 
வேறு 
மறைபு ரிந்தநான் முகன்இவை புகறலும் வானத் 
திறைபு ரிந்திடும் இரவியை என்மகன் இன்னே 
சிறைபு ரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக் 
குறைபு ரிந்ததென் பகர்தியென் றுரைத்தனன் கொடியோன்.  | 
	 
	8  | 
| 
	 1059  | 
 
சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை 
முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல் 
அற்ற மில்சுடர் ஆதபந் தீண்டிய ததனால் 
பற்றி வெய்யவற் சிறைபுரிந் தானெனப் பகர்ந்தான்.  | 
	 
	9  | 
| 
	 1060  | 
 
மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந் 
தகுவர் கோன்மிக மகிழந்துநீர் என்மகற் சார்ந்து 
மிகவும் நன்மொழி கூறியே ஆங்கவன் விடுப்பப் 
பகல வற்கொடு போதிரால் ஈண்டெனப் பகர்ந்தான்.  | 
	 
	10  | 
| 
	 1061  | 
 
கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன் 
நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால் 
ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசையுறும் அண்ணல் 
மாட்டு மேவிநின் றளவையில் ஆசிகள் வகுத்தான்.  | 
	 
	11  | 
| 
	 1062  | 
 
அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான் 
என்பெ றும்பரி சுமக்கென இன்னதோர் இரவி 
துன்பு றுஞ்சிறை அகற்றுதி என்றலுந் தொல்லோய் 
உன்பெ ரும்படை தருதியேல் விடுவனென் றுரைத்தான்.		  | 
	 
	12  | 
| 
	 1063  | 
 
உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ 
நிரைத்த செங்கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன் 
விரைத்த பயங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து 
பரித்தி யாலென உதவினன் மோகவெம் படையே.		  | 
	 
	13  | 
| 
	 1064  | 
 
படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு 
விடைய ளித்தனன் தாதையத் தன்மையை வினவி 
நடைய ளித்தனன் புதல்வனுக் கன்னதோர் நன்னா 
ளிடைய ளித்தனன் பானுகோ பன்எனும் இயற்பேர்.		  | 
	 
	14  | 
| 
	 1065  | 
 
பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன் 
மானை நேர்விழி மங்கையர் மதனென மயங்க 
ஆன பேருரு வெய்தியே அம்புயத் திருவின் 
கோனொ டேபொரு தவன்றனைப் பெருந்திறல் கொண்டான்.  | 
	 
	15  | 
| 
	 1066  | 
 
பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால் 
நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர் 
இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார் 
மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான்.  | 
	 
	16  | 
| 
	 1067  | 
 
மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால் 
உய்த்து நல்கிடச் சூரனும் வெய்யவன் ஒருங்கே 
பத்து நூறுள மும்மைசேர் பாலரைப் பயந்தான் 
இத்தி றத்தவர் தம்முடன் அங்கண்வீற் றிருந்தான்.  | 
	 
	17  | 
| 
	 1068  | 
 
வேறு 
சீற்ற முற்றிடு சிங்க முகன்கணே 
தோற்றி னான்அதி சூரன்என் ோர்மகன் 
வீற்று நூற்றுவர் மேவினர் அன்னவர் 
ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே.		  | 
	 18  | 
| 
	 1069  | 
 
அந்த நாளில் அவன்றன் இளவலாந் 
தந்தி மாமுகத் தாரகன் தன்னிடை 
முந்து செய்தவ மொய்ம்பினொர் மாமகன் 
வந்து தோன்றினன் வான்கதிர்ப் பிள்ளைபோல்*.  
(* வான் கதிர்ப் பிள்ளை - பாலசூரியன். )  | 
	 19  | 
| 
	 1070  | 
 
ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற் 
கேம மான குரவன் இசைப்பஅந் 
நாமம் எய்தி நலம்பெறு காளையாய்க் 
காமன் என்னக் கவின்றனன் யாக்கையே.		  | 
	 20  | 
| 
	 1071  | 
 
ஓத ருங்கலை யாவும் உணர்கினும் 
ஏத மாவதோர் விஞ்சை இயற்றிடான் 
பாத கம்புரி யான்பழி பூண்கிலான் 
நீதி யன்றி எவையும் நினைகிலான்.		  | 
	 21  | 
| 
	 1072  | 
 
வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர் 
மாறு கொண்டவர் உண்டெனின் மற்றவர் 
ஈறு கொண்டிட ஏற்றுர மேற்படை 
ஊறு கொண்டிட உன்னுந் தகைமையான்.		  | 
	 22  | 
| 
	 1073  | 
 
சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான் 
அகரும்** நல்கி அமர்ந்தென அன்னதோர் 
மகனை நல்கி வளங்கெழு மாயமா 
நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன்.	 
(** அகர் - அகில்; பல அகில்களில் சதுரக்கள்ளி 
வைரமாகிய அகிலும் ஒன்று. )  | 
	 23  | 
| 
	 1074  | 
 
அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம் 
மன்னினள் ஒருவன்றன் மனையெனும் முறையில்லாள் 
தன்னிறை தவிர்கின்றாள் தருமம திலள்வானோர் 
பன்னியர் தமைமுன்னோர் படர்புயம் உறவுய்ப்பாள்.  | 
	 
	1  | 
| 
	 1075  | 
 
ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும் 
வேள்விநை யுறும்வண்ணம் வெந்தொழில் புரிகின்றாள் 
நீள்வினை வடிவானாள் நிருதர்ள் குலமெல்லாம் 
மாள்வினை யெனயாண்டும் வைகலும் உலவுற்றாள்.		  | 
	 
	2  | 
| 
	 1076  | 
 
கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக் 
கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை 
அட்டனள் நுகர்கின்றான் அனையவள் ஒருவைகல் 
முட்டினள் துருவாச முனியுறு தனியெல்லை.		  | 
	 
	3  | 
| 
	 1077  | 
 
அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச் 
சிந்துவன் இவனின்னே செய்தவம் அ�தன்றி 
மைந்தர்கள் பெறுவேனால் வல்லையில் இவண்என்னாப் 
புந்தியில் நினைவாயே போய்அவன் எதிருற்றாள்.		  | 
	 
	4  | 
| 
	 1078  | 
 
உறுதலும் முனிநாடி ஒண்டோடி தனியேநீ 
குறுகிய தெவன்மாதோ கூறுதி யெனலோடும் 
மறுவறு முனிநின்பால் மனமகிழ வொடுமேவிச் 
சிறுவர்கள் பெறவந்தேன் செப்புவ திதுவென்றாள்.  | 
	 
	5  | 
| 
	 1079  | 
 
என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி 
வென்றிகொள் மடமாதே மேலுறு தவமெல்லாங் 
குன்றிடும் உனையின்னே கூடுவ னெனின்நீயும் 
நின்றிடல் பழியல்லால் நீதியும் அலவென்றான்.				  | 
	 
	6  | 
| 
	 1080  | 
 
முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள் 
இனியுனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம் 
மனநினை வொழிகென்றே வன்மையி னொடுபுல்லி 
அனையவன் இதமூறல் ஆரமு தயிலுற்றாள்.		  | 
	 7  | 
| 
	 1081  | 
 
ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக் 
கூடினள் அதுபோழ்தில் குறுகினர் இருமைந்தர் 
ஈடுறு வலிமிக்கார் இன்னவர் தமையன்னை 
மாடுற வருகென்றே மகிழ்வொடு தழுவுற்றாள்.		  | 
	 
	8  | 
| 
	 1082  | 
 
தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி 
மழகளி றனையீர்காள் வல்லவு ணரில்வந்தீர் 
விழுமிய தவமாற்றி மேவுதிர் வலியென்ன 
அழிதரு நிறைகொண்ட அசமுகி உரைசெய்தாள்.  | 
	 9  | 
| 
	 1083  | 
 
தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும் 
ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி 
ஆயதொர் பெயர்பெற்றோர் அன்னைதன் உரைகொண்டே 
தூயதொர் குரவோன்றன் துணையடி பணிகுற்றார்.		  | 
	 
	10  | 
| 
	 1084  | 
 
மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப் 
பூண்டிடு திறன்மிக்க புதல்வரை யெதிர்நோக்கி 
வேண்டிய தெவனென்ன வெய்யவள் தருமைந்தர் 
ஈண்டுன தவமெல்லாம் யாம்பெற அருளென்றார்.  | 
	 11  | 
| 
	 1085  | 
 
ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன் 
வீற்றொரு பொருளுண்டேல் வினவுதிர் எனமேலோன் 
சீற்றம துளராகிச் சிறுவர்கள் இவன்ஆவி 
மாற்றுதும் இவண்என்னா வல்லையின் எழலுற்றார்.  | 
	 
	12  | 
| 
	 1086  | 
 
இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற 
சிறுவர்கள் செயல்நாடிச் சினமொடு முனிநீவிர் 
மறுவறு தவருக் வைகலும் இடர்செய்வீர் 
குறுமுனி நுமதாவி கொள்ளுக இனியென்றான்.		  | 
	 
	13  | 
| 
	 1087  | 
 
இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா 
மனமுறு தனிவிஞ்சை மாயையின் மறைபோழ்தில் 
தனயர்கள் இருவோருந் தந்தைத னைக்காணார் 
அனைதனை விடைகொண்டே யாயிடை ஒருவுற்றார்.		  | 
	 
	14  | 
| 
	 1088  | 
 
வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங் 
கோறலை மனமுன்னிக் குமரர்கள் இருவோரும் 
தேறிய வுணர்வோடுந் திசைமுக வனைநோக்கி 
ஈறகல் பகலாக எரியத னிடைநோற்றார்.		  | 
	 15  | 
| 
	 1089  | 
 
செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண் 
வந்திலன் அதுநாடி மற்றொரு செயலுன்னி 
வெந்திறல் இளையோனை வில்வல னெனும்வெய்யோன் 
சுந்தர மணிவாளால் துணிபட எறிகுற்றான்.  | 
	 16  | 
| 
	 1090  | 
 
கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம் 
நெய்யுடன் அவியாக்கி நீடிய கனலூடே 
வையகம் அருள்தாதை மந்திர முறையுய்த்து 
வெய்யவன் ஒருவேள்வி விரைவொடு புரிகுற்றான்.		  | 
	 
	17  | 
| 
	 1091  | 
 
தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே 
அவனியின் மிசைவந்தே அரியதொர் செயல்செய்வாய் 
எவனருள் பரிசென்ன இணையடி தொழுதேத்தி 
அவுணர்கள் வடிவாம்வில் வலன்இவை அறைகின்றான்.		  | 
	 
	18  | 
| 
	 1092  | 
 
வன்னியில் அவியூணாய் மாண்டிடும் ஒருபின்னோன் 
மெய்ந்நிறை வடிவோடும் விரைவுடன் வரல்வேண்டும் 
என்னலும் வாதாவி எழுகென அயன்ஓத 
அன்னதொர் பொழுதின்கண் ஆர்த்தவன் எழுந்திட்டான்.  | 
	 
	19  | 
| 
	 1093  | 
 
ஆங்கனம் அசுரேசன் அதிசய முளனாகித் 
தீங்குடன் ஒருசூழ்ச்சி சிந்தையி னிடையுன்னிப் 
பூங்கம லத்தோனைப் போற்றிசெய் தடியேனுக் 
கீங்கொரு வரம்எந்தாய் ஈகென உரைசெய்வான்.		  | 
	 
	20  | 
| 
	 1094  | 
 
புல்லயின் மறியேபோற் பொலிவுறும் வாதாவி 
ஒல்லையின் இனிமேலும் உடல்துணி படுவானேல் 
எல்லையில் பரிவால்யான் எம்பியை எழுகென்னத் 
தொல்லையில் வடிவோடுந் தோன்றிமுன் வரல்வேண்டும்.		  | 
	 
	21  | 
| 
	 1095  | 
 
இப்படி வரமொன்றே யான்பெற அருள்கென்றே 
மெய்ப்படும் உணர்வில்லா வில்வலன் உரைசெய்ய 
அப்படி பலகாலம் அதுமுடி கெனநல்கிச் 
செப்பரு மறைவேதாச் சேணுடை நெறிசென்றான்.  | 
	 22  | 
| 
	 1096  | 
 
சேறலும் அதுகாலைச் சிறுவர்கள் இருவோரும் 
ஏறென அமர்சூர்முன் ஏகியுன் மருகோர்யாம் 
வேறல எனவோதி மேதினி முனிவோரைக் 
கோறல்செய் வெருவன்மை கொண்டதும் உரைசெய்தார்.		  | 
	 
	23  | 
| 
	 1097  |  
  
மன்னவன் அவர்தம்மை மகிழ்வொடு நனிபுல்லி 
என்னுழை மருகீர்காள் இனிமையொ டுறுமென்ன 
அன்னவர் சிலவைகல் ஆயிடை தனில்வைகிப் 
பின்னுற இருவோரும் பெருநில மிசைவந்தார்.		  | 
	 
	24  | 
| 
	 1098  | 
 
நவைதவிர் குடகின்கண் நால்வகை நெறிகூடுங் 
கவலையின் வளமல்குங் கானக விடைதன்னில் 
அவுணர்கள் தாம் அங்கோர் ஆச்சிர மஞ்செய்தே 
எவரெவ ரும்வெ�கும் எப்பொருள் களுமுய்த்தார்.		  | 
	 
	25  | 
| 
	 1099  | 
 
அன்னதொ ரிடைதன்னில் ஆரிட ராயுள்ளோர் 
இன்னுயிர் கொளவுன்னி இருவருள் இளமைந்தன் 
பொன்னிவர் திரிகோட்டுப் பொருதக ராய்நிற்க 
முன்னவன் விரதஞ்செய் முனிவரின் இனிதுற்றான்.		  | 
	 
	26  | 
| 
	 1100  | 
 
வில்வலன் எனவோதும் வெய்யவன் அவ்வெல்லைச் 
செல்வதோர் முனிவோரைச் செவ்விதின் எதிர்கொண்டு 
வல்விரை வொடுதாழ்ந்து மற்றும தடியேன்றன் 
இல்வரு வீரென்னா இயல்பொடு கொடுசென்றே.		  | 
	 
	27  | 
| 
	 1101  | 
 
இப்பகல் அடிகேளுக் கிவ்விடை உணவென்னா 
ஒப்பறு நெறிகூறி ஓதன வகையெல்லாம் 
அப்பொழு தினிலட்டே அயமெனும் இளையோனைத் 
துப்புறு கறியாகத் துண்டம துறுவித்தே.		  | 
	 
	28  | 
| 
	 1102  | 
 
உள்ளுறு குறியாகும் ஊன்முழு வதும்நாடி 
வள்ளுறு சுடர்வாளால் வகைவகை படவீர்ந்தே 
அள்ளுறு கறியாக அட்டபின் அவரவ்வூண் 
கொள்ளுற நுகர்வித்தே கூவுவன் இளையோனை.		  | 
	 
	29  | 
| 
	 1103  | 
 
கூவிய பொழுதின்கட் கொறியெனும் உருவானோன் 
ஆவிமெய் யுளனாகி அன்னவர் உதரத்தை  
மாவலி யொடுகீண்டே வருதலும் இருவோருஞ் 
சாவுறு முனிவோர்தந் தசையினை மிசைவாரால்.  | 
	 30  | 
| 
	 1104  | 
 
வேறு 
வீடுறு முனிவர்ஊன் மிசைந்து தொன்மைபோல் 
ஆடென முனியென அனையர் மேவிய 
நாடொறும் இச்செயல் நடாத்தி யுற்றனர் 
கேடறு முனிவர்தங் கிளைகள் மாளவே.  | 
	 31  | 
| 
	 1105  | 
 
இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர் 
செப்பரு முனிவரைத் தேவர் தங்களை 
ஒப்பறு நரர்தமை ஒறுப்ப மாயைதன் 
வைப்புறு காதலன் அரசின் மன்னினான்.  | 
	 1  | 
| 
	 1106  | 
 
ஆயிரத் தெடடெனும் அண்டம் யாவையுஞ் 
சேயுயர் இந்திர ஞாலத் தேர்மிசை 
ஏயெனும் அளவையில் ஏகி வைகலும் 
நாயக முறையினை நடாத்தி நண்ணினான்.		  | 
	 2  | 
| 
	 1107  | 
 
ஒருபகற் பாதலத் தூடு வைகிடும் 
ஒருபகல் மாதிரம் உலவிச் சேர்தரும் 
ஒருபகல் விண்பதந் தோறும் உற்றிடும் 
ஒருபகல் அயன்பதத் துன்னி மன்னுமே.		  | 
	 3  | 
| 
	 1108  | 
 
தண்ணறுந் துளவினான் தனது தொல்பதம் 
நண்ணிடும் ஒருபகல் நாளு மிவ்வகை 
எண்ணரும் உலகுதோ றேதி மாலையில் 
துண்ணென மீள்வனால் சூர பன்மனே.  | 
	 4  | 
| 
	 1109  | 
 
அவ்வகை யால்அர சாற்றும் எல்லையில் 
எவ்வமில் சூர்முதல் இந்தி ரன்னெனுந் 
தெவ்வினை வன்சிறை செய்து தேவியை 
வவ்விய வுன்னினன் வருவ தோர்கிலான்.		  | 
	 5  | 
| 
	 1110  | 
 
உன்னிய தீயவன் ஒருதன் தானையின் 
மன்னனை விளித்துநீ வாச வன்றனை 
இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றியென் 
முன்னுற விடுகென முன்னம் ஏவியே.				  | 
	 
	6  | 
| 
	 1111  | 
 
நீடிய தன்பெரு நிலயங் காப்பவர் 
கோடுறு நிசிசரர் குலத்துள் தோன்றினார் 
கேடகம் வாள்அயில் கெழுவு கையினார் 
பாடவ மடந்தையர் பவங்கள் போன்றுளார்.		  | 
	 7  | 
| 
	 1112  | 
 
ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில் 
அன்புடன் விளித்துநீர் அமரர் தம்மிறை 
இன்புறு தேவியைப் பற்றி யீமென 
வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே.		  | 
	 8  | 
| 
	 1113  | 
 
போக்கலும் அவரெலாம் பொன்னின் நாட்டின் மேல் 
ஊக்கம தாகியே உருத்துச் சேறலும் 
நோக்கிய தூதுவர் நொய்திற் போகியே 
மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார்.		  | 
	 
	9  | 
| 
	 1114  | 
 
வந்நனர் அவுணரும் வயங்கொள் மாதரும் 
அந்தமில் படையொடும் அடல்செய் நீரர்போல் 
சிந்தனை யாவதோ தெரிந்தி லோமென 
இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே.		  | 
	 10  | 
| 
	 1115  | 
 
பொம்மென அவர்தமைப் போக்கித் தீயினும் 
வெம்மைகொள் நெஞ்சினார் வினைய முன்னியே 
அம்மனை மனைவியோ டகன்று மாயையான் 
இம்மென இப்புவி தன்னில் ஏகினான்.		  | 
	 11  | 
| 
	 1116  | 
 
ஏகய வெல்லையின் இகல்வெஞ் சூர்விடப் 
போகிய மாதரும் பொருவில் வீரரும் 
நாகர்தம் மிறையமர் நகரை நண்ணினார் 
ஆகர முதலிய இடந்தொ றாய்குவார்.				  | 
	 
	12  | 
| 
	 1117  | 
 
வினைவயிற் சென்றிடும் வீரர் யாவருந் 
துனைமத் திறைவனைத் துவிக் காண்கிலர் 
மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும் 
நினைவயர்த் துள்ளுறு கவலை நீடினார்.		  | 
	 13  | 
| 
	 1118  | 
 
நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே 
ஏயின செயலினை ஈறு செய்கிலம் 
போயினன் சசியொடும் புலவர் கோனெனா 
ஆயவன் நகரெலாம் ஆய்வுற் றாரரோ.		  | 
	 14  | 
| 
	 1119  | 
 
சுற்றினர் நகரெலாந் துவித் தேவரைப் 
பற்றினர் விலங்கலின் பகைவற் காட்டென 
எற்றினர் புலோமசை யாண்டை யாளெனக் 
குற்றினர் வாய்தொறுங் குருதி பாயவே.		  | 
	 15  | 
| 
	 1120  | 
 
விண்ணவர் யாவரும் வேந்துந் தேவியும் 
நண்ணிய துணர்கிலம் நாங்கள் எங்களைத் 
துண்ணென வருத்தலிர் துயர்கின் றோமெனாத் 
தண்ணளி வருநெறி தளர்ந்து சாற்றவே.  | 
	 16  | 
| 
	 1121  | 
 
விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர் 
முட்டினர் மகேந்திர மதிய மாநகர் 
கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வானிடைப் 
பட்டது புகன்றனர் பழிகொள் நெஞ்சினார்.		  | 
	 
	17  | 
| 
	 1122  | 
 
போயினர் இருவரும் புறத்த ராயென 
ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன் 
தீயென வெகுண்டனன் தேடொ ணாததோர் 
தூய்மணி இழந்திடும் அரவின் துன்புளான்.		  | 
	 
	18  | 
| 
	 1123  | 
 
ஒற்றரி பலர்தமை யொல்லை கூவியே 
பொற்றொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர் 
கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே 
சொற்றிடு வீரெனச் சூரன் தூண்டினான்.		  | 
	 19  | 
| 
	 1124  | 
 
தோடவிழ் தெரியலான் தூண்டை ஒற்றர்கள் 
ஓடினர் வீற்றுவீற் றுலக மெங்கணும் 
தேடினர் காண்கிலர் திரிகுற் றார்இனி 
நீடிய பொன்னகர் நிகழ்ச்சி கூறுகேன்.  | 
	 20  | 
| 
	 1125  | 
 
வேறு 
செல்லெனும் ஊர்தி அண்ணல் தேவியுந் தானும் நீங்கச் 
சொல்லருங் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன 
எல்லியம் பொழுது போன்றே யாதுமோர் சிறப்பும் இன்றாய்ப் 
புல்லென லாய தன்றே பொருவில்பொன் னகர மெல்லாம்.  | 
	 
	21  | 
| 
	 1126  | 
 
அழிந்தன வளங்க ளெல்லாம் ஆகுல மயங்கிற் றின்பம் 
ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கிய துலக மெங்கும் 
எழுந்தது புலம்ப லோதை யாவர்தங் கண்ணுந் தெண்ணீர் 
பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்ற தன்றே.		  | 
	 
	22  | 
| 
	 1127  | 
 
இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவ லாகி 
மன்னிய உபேந்தி ரன்றான் வானவர் உலகை நீங்கி 
முன்னைவை குண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக் 
கன்னிகை நோற்று மேவுங் காஞ்சியை யடைந்த வாபோல்.  | 
	 
	23  | 
| 
	 1128  | 
 
சேண்பதந் தன்னை நீங்குஞ் சிறியதோர் தந்தை தன்னைக் 
காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன் மைந்தன் 
தூண்புரை கின்ற செம்பொற் றோளுடைச் சயந்தன் என்போன் 
மாண்பொடு சிறிது வைகல் வைகுண்டத் திருந்தான் அன்றே.		  | 
	 
	24  | 
| 
	 1129  | 
 
இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடுங் 
கரந்துடன் போந்த வாறுங் காமரு துறக்கந் தன்னில் 
விரைந்துவந் தவுணர் தேடி மீண்டிட விண்ணு ளோர்கள் 
அரந்தையோ டுற்ற வாறும் அங்ஙனந் தேர்ந்தான் அம்மா.  | 
	 
	25  | 
| 
	 1130  | 
 
தந்தைதன் மெலிவு காணில் தங்குடித் தலைமை யெல்லாம் 
மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கதாம் அறனும் அ�தே 
எந்தையு மில்லை யான்போய் என்னகர் காப்ப னென்னாப் 
புந்தியி லுன்னி மைந்தன் பொன்னகர் தன்னில் வந்தான்.  | 
	 
	26  | 
| 
	 1131  | 
 
பொன்னகர் புக்க மைந்தன் புலம்புறு சுரரைக் கண்டு 
தன்னுயிர் போலுந் தந்தை தாய்தனைக் காணா னாகி 
இன்னலங் கடலின் மூழ்கி ஏக்கமோ டிரக்க மிக்குப் 
பின்னொரு செயலு மின்றிப் பித்தரே போல வுற்றான்.		  | 
	 
	27  | 
| 
	 1132  | 
 
உற்றிடு மெல்லை தன்னில் உம்பர்கோன் மதலை யுள்ளந் 
தெற்றெனத் தௌ�ப்ப வுன்னி நாரதன் என்னுஞ் சீர்சால் 
நற்றவ முனிவன் செல்ல நடுக்கமோ டெழுந்து தாழ்ந்து 
மற்றொரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான்.		  | 
	 
	28  | 
| 
	 1133  | 
 
நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தஞ் செய்யும் 
வன்றிறற் சூரற் கஞ்சி மற்றெனைப் பயந்த மேலோர் 
சென்றனர் சென்ற வெல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை 
என்றினி யகலுங் கொல்லோ எம்பிரான் இயம்பு கென்றான்.  | 
	 
	29  | 
| 
	 1134  | 
 
தருக்கினை இழந்து நின்ற சயந்தன்இத் தன்மை கூறப் 
பொருக்கென முனிவன் ஓர்ந்து பொங்குபே ரருளால் நோக்கித் 
திருக்கிளர் கின்ற தாங்கோர் செழுமணித் தவிசின் மீதில் 
இருக்கென இருத்திப் பின்னர் இன்னன இசைக்க லுற்றான்.		  | 
	 
	30  | 
| 
	 1135  | 
 
தீங்குவந் தடையு மாறும் நம்மைதான் சேரு மாறும் 
தாங்கள்செய் வினையி னாலே தத்தமக் காய அல்லால் 
ஆங்கவை பிறரால் வாரா அமுதநஞ் சிரண்டி னுக்கும் 
ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ.  | 
	 
	31  | 
| 
	 1136  | 
 
இன்பம தடைந்த காலை இனிதென மகிழ்ச்சி எய்தான் 
துன்பம துற்ற போதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார் 
இன்பமுந் துன்பந் தானும் இவ்வுடற் கியைந்த வென்றே 
முன்புறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த நீரார்.  | 
	 
	32  | 
| 
	 1137  | 
 
வறியவர் செல்வ ராவர் செல்வர்பின் வறிய ராவர் 
சிறியவர் உயர்ந்தோ ராவர் உயர்ந்துளோர் சிறிய ராவர் 
முறைமுறை நிகழும் ஈது முன்னையூழ் வினையே கண்டாய் 
எறிகதிர் வழங்கும் ஞாலத் தியற்கையும் இனைய தன்றோ.  | 
	 
	33  | 
| 
	 1138  | 
 
ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வு மெல்லாம் 
நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ளற் பாற்றோ 
மேக்குயர் கடவுட் டிங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை 
போக்கொடு வரவு நாளும் முறைுறை பொருந்திற் றன்றே.  | 
	 
	34  | 
| 
	 1139  | 
 
ஆதலின் உமது தாழ்வும் அவுணர் தம்உயர்வும் நில்லா 
ஈதுமெய் யென்று கோடி இந்நகர் தணந்து போன 
தாதையும் பயந்த தாயும் தம்முருக் கரந்து போந்து 
மேதினி வரைப்பி னூடு மேவினர் போலு மன்றே.  | 
	 
	35  | 
| 
	 1140  | 
 
மைந்தநீ தோற்று முன்னம் வானவர்க் கலக்கண் செய்த 
தந்தியின் முகங்கொண் டுற்ற தானவன் துஞ்சும் வண்ணம் 
அந்தநாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல 
இந்தவெஞ சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய்.  | 
	 
	36  | 
| 
	 1141  | 
 
என்றிவை பலவுங் கூறி இன்னினி வெஞ்சூர் தானும் 
பொன்றிடும் உமது துன்பும் பொள்ளென அகன்று போரும் 
நன்றிது துணிதி யென்றே நாரத முனிவன் தேற்றிச் 
சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்ப மெய்தி.		  | 
	 
	37  | 
| 
	 1142  | 
 
வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளுந் 
திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல் 
இருந்தனன் சயந்த னென்போன் இருநிலத் திடைமுன் போன 
புரந்தரன் செய்த தன்மை யானினிப் புகலு கின்றேன்.		  | 
	 
	38  | 
| 
	 1143  | 
 
மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப் பாரில் 
சித்திர மனைவி யோடுந் தெக்கிண தேயம் புக்குப் 
பத்துடன் இரண்டு நாமம் படைத்ததொல் காழி நண்ணி 
இத்தல மினிதே யென்னா இருந்தனன் இமையோர் கோமான்.		  | 
	 
	39  | 
| 
	 1144  | 
 
அந்தநல் லிருக்கை தன்னில் அயர்வுயிர்த் திறைவி யோடும் 
இந்திரன் இருந்த பின்னர் என்றுநாம் இறைவற் போற்றிப் 
புந்திகொள் மகிழவாற் பூசை புரிதுமென் றுன்னி யாண்டோர் 
நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான்.  | 
	 
	40  | 
| 
	 1145  | 
 
சந்தகில் பலவு தேமாச் சரளமே திலகந் தேக்குக் 
கொந்தவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம் 
நந்திய கதலி கன்னல் நாகிளம் பூகம் வன்னி 
முந்துயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி.		  | 
	 
	41  | 
| 
	 1146  | 
 
சாதியே கோங்கு நாகஞ் சண்பகம் இதழி ஞாழல் 
பாதிரி வழையே குந்தம் பாரிசா தஞ்செ ருத்தி 
போதுறு நரந்தம் வில்வம் பொலிகா வீரஞ் செச்சை 
கோதறு மயிலை மௌவல் கொழுந்துசெவ் வந்தி முல்லை.  | 
	 
	42  | 
| 
	 1147  | 
 
இவைமுத லாகி யுள்ள தருக்களும் புதலு மெல்லாம் 
நவையறந் தெரிந்து வைத்தோர் நந்தன வனத்தைத் செய்ய 
அவைமிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளுஞ் 
சிவனடி அருச்சித் தங்கட் டேவியோ டிறைவன் உற்றான்.  | 
	 
	43  | 
| 
	 1148  | 
 
உற்றிடு மெல்லை தன்னில் உலகினில் அவுணர்க் கெல்லாங் 
கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயந் துருவிச் செல்ல 
அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு 
மற்றவண் வேணு வாகி மறைந்துநோற் றிருந்தான் மாதோ.  | 
	 
	44  | 
| 
	 1149  | 
 
வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளுந் 
தாணுவை வழிபட் டங்கட் சரமகன் சாரும் நாளிற் 
காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள் 
ஆணையிற் பெய்யா தாக அவ்வனம் வாடிற் றன்றே.		  | 
	 
	45  | 
| 
	 1150  | 
 
நீடிய காமர் பூங்கா நெருப்புறு தன்மைத் தென்ன 
வாடின நீரின் றாகி மற்றது மகத்தின் கோமான் 
நாடினன் கவன்று தொன்னாள் நான்முகத் தவனும் மாலுந் 
தேடரும் பரனை யுன்னி இரங்கின்ன் செயல்வே றில்லான்.  | 
	 
	46  | 
| 
	 1151  | 
 
திருந்தலர் புரமூன் றட்ட சேவகற் பரவ லோடும் 
பொருந்தலர் பூங்கா வாடிப் போயின எனினும் பொன்றா 
இருந்தலம் இதனில் யாறொன் றெய்துமால் மகவான் இன்னே 
வருந்தலை என்றோர் மாற்றம் வானிடை எழுந்த தன்றே.  | 
	 
	47  | 
| 
	 1152  | 
 
எழுவதோர் செஞ்சொற் ளோ எம்பிரான் அருளீ தென்னாத் 
தொழுதனன் போற்றி மேனி துண்ணெனப் பொடிப்பச் சிந்தை 
முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே இருந்தான் அங்கண் 
அழகிய நதியொன் றுற்ற வரன்முறை அறைய லுற்றேன்.		  | 
	 
	48  | 
| 
	 1153  | 
 
அந்தப் பொழுதத் தளிகொண் டுடையோர் 
சிந்தைக் கௌ�தாஞ் சிவன்மெய் யருளான் 
முந்துற் றுணர்நா ரதமா முனிவன் 
விந்தக் கிரிமுன் னுறமே வினனால்.		  | 
	 1  | 
| 
	 1154  | 
 
மேவிப் பலஆ சிவிளம் புதலுந் 
தேவப் படிவங் கொள்சிலம் புதொழா 
ஆவற் புதம்வந் ததெம்மண் ணலென 
கூவப் படுபான் மையிசைத் திடுவான்.		  | 
	 2  | 
| 
	 1155  | 
 
மேருத் தனிவெற் புவிதிக் கரியோன் 
மூரிச் சிலையா கியமொய்ம் பதனால் 
தாரித் துலகீன் றவள்தன் மரபாற் 
பேரற் பொடுவந் துபிறக் கையினால்.		  | 
	 3  | 
| 
	 1156  | 
 
குன்றுக் கிறையாய் உறுகொள் கையினால் 
என்றைத் தொடவிண் ணிலெழுந் துறலால் 
இன்றிப் புவியா வையும் நித் தன்அடும் 
அன்றைப் பகல்கா றும்அளித் திடலால்.				  | 
	 
	4  | 
| 
	 1157  | 
 
ஓரா யிரமாம் முடியுள் ளதனால் 
காரார் களன்மே யகவின் கயிலை 
சாரா வொருசார் வுறுதன் மையினால் 
சூரான் அவனால் தொலைவில் லதனால்.		  | 
	 5  | 
| 
	 1158  | 
 
தாழுங் கதிருந் தகுமேல் நெறியில் 
வாழுஞ் சசியும் மலிதா ரகையும் 
ஏழென் றிடுகோ ளுமியா வர்களுஞ் 
சூழும் படிநின் றிடுதொன் மையினால்.		  | 
	 6  | 
| 
	 1159  | 
 
கொன்னே இமையோர் குடிகொண் டதனால் 
பொன்னேர் கொடுயர்ந் துபொருந் துதலால் 
பன்னே மிகள்சூழ வருபான் மையினால் 
தன்னேர் இலையென் றுதருக் கியதே.		  | 
	 7  | 
| 
	 1160  | 
 
பரந்தும் பர்நிமிர்ந் திடுபைம் பொன்வரை 
பெருந்தன் மைமதித் திடுபெற் றியைநீ 
தெரிந்தில் லைகொல்அன் னசெயற் கையெலாம் 
விரைந்துன் னொடுசெப் பியமே வினனே.		  | 
	 8  | 
| 
	 1161  | 
 
என்றான் முனிவோன் இதுகேட் டிடலும் 
ஒன்றா ியதே வுருவாய் எதிரும் 
வன்றாழ் கிரிமா மறமுற் றுயிரா 
நன்றால் இ�தென் றுநகைத் தறையும்.		  | 
	 9  | 
| 
	 1162  | 
 
இல்லா புளதொல் லிறுமாப் பகலம் 
பல்லார் இகழப் பகரும் விதியான் 
அல்லா ரெனவே நனிநா ணமுறா 
வில்லா கிவளைந் ததுமேன் மையதோ.		  | 
	 10  | 
| 
	 1163  | 
 
பொன்னார் இமவான் புரிநோன பதனால் 
அன்னான் இடைவந் தமர்வுற் றனளால் 
மன்னா குமவன் மகளா யினளோ 
எந்நா ளுமியா ரையுமீன் றருள்வாள்.		  | 
	 11  | 
| 
	 1164  | 
 
பாங்குற் றிடுபா ரினையாற் றுவனென் 
றோங்குற் றனன்எவ் வுலகும் பரியா 
ஆங்குற் றனவோ பலஅன் னவையுந் 
தாங்குற் றதுகண் ணுதல்சத் தியதே.		  | 
	 121  | 
| 
	 1165  | 
 
விற்சூழ் கதிரோன் முதல்விண் ணவர்கள் 
தற்சூழ்ந் தனல்அல் லதுசந் ததமும் 
எற்சூழ்ந் திலரோ எழுதீ வுளவாங் 
கற்சூழந் திலரோ கடல்சூழந் திலரோ.		  | 
	 13  | 
| 
	 1166  | 
 
பன்னிற் குவடும் பலவுண் டெனவே 
உன்னுற் றிடுமோ உயர்கள் ளிகளின் 
சென்னித் தொகையைத் தெரிசிக் கின்அயன் 
தன்னொத் திலனோ தலைநான் குளவே.		  | 
	 14  | 
| 
	 1167  | 
 
கடிதா கியசூ�� இதுகல் லெனவே 
அடரா மல்விடுத் தனன்அன் றுதனை 
நெடிதே யதுவுன் னிலன்நீள் பரிதிப் 
படையா னினும்ஆற் றல்படைத் துளனோ.  | 
	 15  | 
| 
	 1168  | 
 
தண்ணுற் றிடுபொன் மைதயங் குருவம் 
நண்ணுற் றனமென் றுளநா டினனோ 
எண்ணுற் றவன்நல் லுணர்வெய் திலனான் 
மண்ணிற் புனைபா வைவனப் பதுவே.		  | 
	 16  | 
| 
	 1169  | 
 
தன்கண் ணுறுவா னவர்தாம் பலரும் 
என்கண் ணமரா மல்இகழ்ந் தனரோ 
நன்கண் ணுதல்நா யகனா� கயிலை 
யின்கண் அரகுற் றிலதெக் கிரியே.				  | 
	 
	17  | 
| 
	 1170  | 
 
திருவைத் தவர்கண் டுயில்செங் கண்அரா 
மருவித் தனைமுந் துமறைத் திடுநாள் 
விரைவிற் படரூ தைவெகுண் டுபறித் 
தொருமுத் தலைகொண் டதுணர்ந் திலனோ.		  | 
	 18  | 
| 
	 1171  | 
 
கிளர்ப்புற் றிடுசிம் புளொர்கே சரிமுன் 
அளப்பற் றிடுதன் னுருவண் டமெலாம் 
வளர்ப்புற் றிடுஞான் றொர்மணிப் பரல்போல் 
குளப்புற் றனன்ஈ துகுறித் திலனோ.		  | 
	 19  | 
| 
	 1172  | 
 
வரபத் திரைகேள் வன்மறம் புரியுஞ் 
சரபத் துருவுற் றுழிதாழ் சிறையின் 
விரவிப் படரூ தையின்மின் மினிபோல் 
திரிகுற் றனன்அன் னதுதேற் றிலனோ.		  | 
	 20  | 
| 
	 1173  | 
 
அறியுற் றிடுபா ரதமா னவெலாங் 
குறியுற் றிடதோல் முகர்குஞ் சரன்மேல் 
எறியுற் றமருப் பினிலே டெனலாய்ப் 
பொறியுற் றிடுமென் பதுபொய்த் திடுமோ.		  | 
	 21  | 
| 
	 1174  | 
 
தானோர் வரையல் லதுதா ரணியுண் 
கோனோ அலன்அல் லதுகோ கனத 
வானோன் அலன்வா சவன்அல் லன்அவன் 
ஏனோ தனைமே லெனவெண் ணியதே.		  | 
	 22  | 
| 
	 1175  | 
 
என்னா வடவெற் பையிழித் துரையா 
அந்நா கம்பியக் கும்அகந் தையினை 
நன்னா ரதநீக் குவனநா டுகெனா 
முன்னா வுருநீத் ததுமொய் வரையே.						  | 
	 
	23  | 
| 
	 1176  | 
 
வேறு 
எண்டரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை 
கொண்டனர் திரண்டு நீண்டு குலாய்நிமிர் கொள்கைத் தென்ன 
விண்டொடா விந்த மாங்கோர் விஞ்சையால் அகன்று சேண்போய்ப் 
புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்த தன்றே.  | 
	 
	24  | 
| 
	 1177  | 
 
உருக்கிளர் விந்த மென்னும் உருகெழு பிறங்கல் மேல்போய்ப் 
பரக்கம் தாகி அம்பொற் பனிவரை காறும் ஆன்று 
நெருக்கிய தனைய பான்மை நிலமுழு தளந்த மேலோன் 
திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்தெனத் திகழந்த தம்மா.		  | 
	 
	25  | 
| 
	 1178  | 
 
விந்தமிந் நெறியால் ஆன்று மேக்குறக் கிளர்ந்து போகி 
அந்தர நெறியை மாற்ற அலரிவெண் டிங்கள் சேயோன் 
புந்திபொன் புகரே காரி புயங்கநாள் பிறரும் நோக்கிச் 
சிந்தையில் துணுக்க மெய்தி இனையன செப்ப லுற்றார்.		  | 
	 
	26  | 
| 
	 1179  | 
 
தானவர் செயலோ என்பார் தருமமில் அரக்க வெய்யோ 
ரானவர் செயலோ என்பார் அல்லவேல் அயன்மா லென்னும் 
வானவர் செயலோ என்பார் மாயமீ தாகும் என்பார் 
மேனிமிர் பிறங்க லின்றி வௌ�ளிடை இலைகொல் என்பார்.		  | 
	 
	27  | 
| 
	 1180  | 
 
என்னிது வென்று போதத் தெம்பிரான் அருளால் நாட 
அன்னது தெரித லோடும் ஆமிது விந்த மேருத் 
தன்னுடன் இகலொன் றுண்டாய்த் தராதல வரைப்பில் வானில் 
சென்னெறி விலக்கிற் றென்று சிந்தனை செய்து தேர்வார்.		  | 
	 
	28  | 
| 
	 1181  | 
 
செம்பொன்மால் வரையின் பாங்கிற் சிவனடி யுன்னி நோற்றே 
அம்புரா சியைமுன் னுண்டோன் அமர்ந்தனன் அவனீண் டுற்றால் 
உம்பர்போய் நின்ற விந்தம் ஒடுங்கும்என் றியாரும் ஓர்ந்து 
கும்பமா முனியை யுன்னி இனையன கூற லுற்றார்.		  | 
	 
	29  | 
| 
	 1182  | 
 
பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யுங் 
கைந்நாக மாலை நினைந்தே கராவொன்று கௌவ 
என்னா யகனே எனத்தன் கையெடுத் தழைப்ப 
அன்னான்அங் கெய்தி விடுவித்த தறிகி லாயோ.		  | 
	 
	1  | 
| 
	 1183  | 
 
பூவார் கமலத் தயன்நல்கிய பூவை தன்மேல் 
தூவா மயலாய்க் கிளியாகித் தொடர்ந்து செல்லக் 
காவாய் பரனே எனலோடுங் கலங்கல் என்றே 
தேவாதி தேவன் அருள்செய்தது தேர்கி லாயோ.		  | 
	 
	2  | 
| 
	 1184  | 
 
சத்தார் பிருகு தனதில்லைத் தடிந்த வெல்லை 
இத்தா ரணியில் அளவில்பிறப் பெய்து கென்ன 
அத்தா அருளென் றரிநோற்றுழி ஐயன் வந்து 
பத்தாக என்று நிறுவுற்றது பார்த்தி டாயோ.		  | 
	 
	3  | 
| 
	 1185  | 
 
தேவர்க் கெனினும் நிலத்தின்கட் செறிந்து வாழ்வோர் 
ஏவர்க் கெனினும் ஒருதுன்புறின் எய்தி நீக்கல் 
காவற் குரியார் கடனாம்அக் கடமை தூக்கின் 
மேவற் கரிதாந் தனிமுத்தியின் மேல தன்றோ.		  | 
	 
	4  | 
| 
	 1186  | 
 
தௌ�ளத் தௌ�ந்த மறைக்கள்வனைச் செற்ற மீன்போல் 
அள்ளற் கடலை ஒருநீ அகன்கை யடக்கிக் 
கள்ளத் தவுணன் நிலைகாட்டிநங் கண்ணில் வைத்த 
கொள்ளைக் கருணை உலகெங்கணுங் கொண்ட தெந்தாய்.		  | 
	 
	5  | 
| 
	 1187  | 
 
விந்தக் கிரிநாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போ 
டிந்தப் பொழுதத் திகல்கொண் டுலகெங்கும் ஈறாம் 
அந்தத் துயருங் கயிலைக்கிணை யாவ லென்றே 
சிந்தித் ததுகொல் எழுந்திட்டது சேண தெல்லாம்.		  | 
	 
	6  | 
| 
	 1188  | 
 
மண்ணுற்ற வெல்லை அளவிட்டிடு மால்கொ லென்றே 
எண்ணுற் றெவரும் வெருக்கொண்டிட ஈண்டை விந்தம் 
விண்ணுற்ற அண்டத் துணையாய்மிசைப் போவ தையா 
கண்ணுற்ற நோக்கம் விடுத்தேயிது காண்கி லாயோ.		  | 
	 
	7  | 
| 
	 1189  | 
 
மல்லற் கிரிவிண் ணெறிமாற்றலின் மற்றெ மக்குஞ் 
செல்லற் கரிதாயது பாருடைத் தேய முற்றும் 
எல்லைப் பொழுது மயக்குற்ற இவற்றை நீக்க 
ஒல்லைக் குறியோய் வரல்வேண்டுமென் றுன்ன லுற்றார்.		  | 
	 
	8  | 
| 
	 1190  | 
 
வேறு 
உன்ன லோடும் உலகம் நனந்தலைப் 
பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின் 
மன்னி நோற்றுறை வண்டமிழ் மாமுனி 
தன்னு ளத்தில்அத் தன்மைகண் டானரோ.  | 
	 9  | 
| 
	 1191  | 
 
மேக்கு யர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை 
நீக்கி வான நெறியினைத் தொன்மைபோல் 
ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான் 
ஊக்கி னான்முன் உததியை உண்டுளான்.		  | 
	 10  | 
| 
	 1192  | 
 
துள்ளி கண்ணிடைத் தூங்குறக கைதொழ 
உள்ளம் என்பொ டுருகவு ரோமமார் 
புள்ளி பொங்கப் புகழந்து பரிசடை 
வள்ளல் தன்னை மனத்திடை முன்னினான்.    | 
	 11  | 
| 
	 1193  | 
 
முன்னும் எல்லையில் மூரிவௌ� ளேறெனும் 
மின்னு தண்சுடர் வௌ�ளிவெற் பின்மிசைப் 
பொன்னின் மால்வரை போந்தெனப் புங்கவன் 
துன்னு பாரிடர் சூழ்தரத் தோன்றினான்.		  | 
	 12  | 
| 
	 1194  | 
 
ஆதி யுற்றுழி அச்சமொ டேயெழீஇ 
மூது ரைத்தமிழ் முற்றுணர் மாமுனி 
கோதை யுற்றிடக் கொம்பொடு வாங்கிய 
பாத வத்திற் பணிந்தனன் பன்முறை.		  | 
	 13  | 
| 
	 1195  | 
 
சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்துபின் 
முன்னர் நின்று முறைபட போற்றலும் 
மின்னு லாஞ்சடை விண்ணவன் வெ�கிய 
தென்னை மற்ற தியம்புரி யாலென்றான்.				  | 
	 
	14  | 
| 
	 1196  | 
 
விந்த மால்வரை மேருவை மாறுகொண் 
டந்த ரத்தை யடைத்த ததன்வலி 
சிந்த என்கட் சிறிதருள் செய்கெனாச் 
சந்த நூற்றமிழ்த் தாபதன் கூறினான்.		  | 
	 15  | 
| 
	 1197  | 
 
அக்க ணத்துனக் காற்றல் வழங்கினாம் 
மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டிஅத் 
தெக்கி ணஞ்சென்று சீர்ப்பொதி யத்திடைப் 
புக்கு வைகெனப் புங்கவன் செப்பினான்.      | 
	 
	16  | 
| 
	 1198  | 
 
என்ற லுந்தொழு தேத்திநின் பூசனை 
நன்று செய்ய நளிதடங் கூவலும் 
நின்றி டாப்புனல் நீடவுந் தென்றிசைக் 
கொன்றொர் தீர்த்தம் உதவுகென் றோதினான்.		  | 
	 
	17  | 
| 
	 1199  | 
 
அனைய காலை அருங்கயி லாயமேல் 
இனிது வைகிய ஏழ்நதி தன்னுளும் 
புனித மாகிய பூம்புனற் பொன்னியைப் 
பனிம திச்சடைப் பண்ணவன் முன்னினான்.		  | 
	 18  | 
| 
	 1200  | 
 
அந்த வேலை அ�துணர்ந் தேவெரீஇச் 
சிந்தை பின்னுறச் சென்று திருமுனம் 
வந்து காவிரி வந்தனை செய்தலும் 
எந்தை நோக்கி இதனை இயம்புவான்.		  | 
	 19  | 
| 
	 1201  | 
 
தீது நீங்கிய தென்றிசைக் கேகிய 
கோதி லாத குறுமுனி தன்னொடும் 
போதல் வேண்டும் பொருபுனற் காவிரி 
மாது நீயென மற்றவள் கூறுவாள்.		  | 
	 20  | 
| 
	 1202  | 
 
திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும் 
அண்ண லேயிவன் ஆண்டகை யாகுமால் 
பெண்ணி யானிவன் பின்செலல் நீதியோ 
எண்ணின் ஈதும் இயற்கையன் றென்னவே.  | 
	 21  | 
| 
	 1203  | 
 
திரிபில் சிந்தையன் தீதுநன் கிற்படா 
ஒருமை கொண்ட உளத்தன்நம் மன்பருள் 
பெரியன் ஈங்கிவன் பின்னுறச் செல்கெனா 
அருள்பு ரிந்தனன் ஆல மிடற்றினான்.		  | 
	 22  | 
| 
	 1204  | 
 
ஆங்க தற்கிசைந் தந்நதி யின்றியான் 
தீங்கி லாத முனியொடு பின்செல்வன் 
ஓங்கல் மேய வொருவ இவன்றனை 
நீங்கு காலத்தை நீயருள் கென்னவே.		  | 
	 23  | 
| 
	 1205  | 
 
நன்று நன்றிது நங்கைநின் காரணத் 
தென்று நோக்கி இவன்கரங் காட்டுவன் 
அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச் 
சென்று வைகெனச் செப்பினன் எந்தையே.		  | 
	 24  | 
| 
	 1206  | 
 
செப்பு மாற்றஞ் செவிக்கமு தாதலும் 
அப்பெ ரும்புன லாறவன் பின்செல 
ஒப்ப லோடும் உயிர்க்குயி ராகியோன் 
தப்பின் மாமுனிக் கின்னது சாற்றினான்.  | 
	 25  | 
| 
	 1207  | 
 
நீடு காவிரி நீத்தத்தை நீயினிக் 
கோடி உன்பெருங் குண்டிகைப் பாலென 
நாடி யத்திறஞ் செய்தலும் நன்முனி 
மாடு சேர்ந்தனள் மாநதி யென்பவே.				  | 
	 
	26  | 
| 
	 1208  | 
 
ஆய காலை அகத்திய தென்றிசைத் 
தேய மேகெனச் சீர்விடை நல்குறாப் 
பாயு மால்விடைப் பாகன் மறைந்தனன் 
போயி னான்செறி பூதரி னத்தொடும்.		  | 
	 27  | 
| 
	 1209  | 
 
வேறு 
அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கண் நீங்கி 
மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர்கோன் பயந்த லோபா 
முத்திரை தனைமுன் வேண்டு*மு துக்குறைத் திண்மை சான்ற 
சிந்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான்.	  
( * முதுக்குறைத் திண்மை சான்ற சித்தன் - புலத்திய முனிவன். 
முதுக்குறை - பேரறிவு. )  | 
	 28  | 
| 
	 1210  | 
 
24. கிரவுஞ்சப் படலம் 
 
பொன்றிகழ வரையின் நின்றுங் குறுமுனி புவியே ஆறாத் 
தென்றிசைக் கேகு மெல்லைத் திறலரிக் கிளவல் வாழ்க்கை 
வன்றிறல் மாய மூதூர் வந்தெய்த ஆண்டை வைகும் 
அன்றிலம் பேர்பெற் றுள்ள அவுணன்அத் தன்மை கண்டான்.  | 
	 
	1  | 
| 
	 1211  | 
 
வானுயர் உலகந் தன்னை வசுந்தரை யாக்ம் பாரை 
ஏனைய ககன மாக்கும் எறிதிரைப் பரவை தன்னை 
மேனிமியர் பிறங்க லாக்கும் வெற்பினைப் புணரி யாக்கும் 
பானுவை மதிய மாக்கும் மதியினைப் பகலாச் செய்யும். .  | 
	 
	2  | 
| 
	 1212  | 
 
அணுவினை மேரு வாக்கும் அன்னதோர் மேரு வெற்பை 
நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனி தன்னைப் 
புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவன மாக்கும் 
இணருறு நேமித் தீயை எல்லைநீ ராகச் செய்யும். .  | 
	 
	3  | 
| 
	 1213  | 
 
கன்னலின் அயுதத் தொன்றிற் கடவுளர்க் கேனும் நீத்தோர் 
என்னவர் தங்கட் கேனும் எனைப்பல மாயஞ் சூழ்ந்து 
பன்னெடுங் காலஞ் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா 
அன்னவன் வன்மை யாவும் ஆரறிந் துறைக்கற் பாலார். .  | 
	 
	4  | 
| 
	 1214  | 
 
அத்தகு தகுவர் கோமான் அடற்கிர வுஞ்சன் அன்போன் 
மெய்த்தமிழ் முனிவன் செல்லும் வியனெறி விந்த மேபோல் 
கொத்துயர் குவடு மல்கிக் குன்றுருக் கொண்டு தன்பால் 
உய்த்திடு மாறு போக்கி உறுதலுங் குறியோன் கண்டான். .  | 
	 
	5  | 
| 
	 1215  | 
 
காண்டலும் வியந்து நன்றிக் கடிவரை நடுவ ணாக 
ஈண்டிதோ ரத்தம் உண்டால் இவ்வழி நடத்தும் என்னா 
ஆண்டத னிடையே போக அந்நெறி குரோச வெல்லை 
மாண்டலும் இலதே யாக மற்றொரு சுரமுற் றன்றே. .  | 
	 
	6  | 
| 
	 1216  | 
 
அந்நெறி கண்டு தொன்னூல் அறைமுனி ஏக லோடுஞ் 
சென்னெறி மேலின் றாகத் திரும்பினன் செல்லுங் காலை 
முன்னுள நெறியுங் காணான் முனிவரன் மயங்க ஓர்சார் 
பின்னொரு வட்டை கண்டு பேதுற லோடும் போனான். .  | 
	 
	7  | 
| 
	 1217  | 
 
ஆறது செல்லுமெல்லை அடலெரி கனைந்து சூழச் 
சூறைகள் மயங்க மங்குல் துண்ணென மாரி தூவ 
மாறகல் உருமுச் சிந்த வல்லிருட் படலை சுற்ற 
வீறகல் மாயை சூழந்தான் எறுழ்வலி அவுணர் கோமான். .  | 
	 
	8  | 
| 
	 1218  | 
 
மட்டுறு குறிய செம்மல் மற்றது நோக்கித் தீயோர் 
பட்டிமை யொழுக்கீ தென்னாப் பயின்றிடு போத நீரால் 
உட்டௌ� பான்மை நாட ஊழ்த்திறந் தெரித லோடுங் 
கட்டழல் என்னச் சீறிக் கரதலம் புடைத்து நக்கான். .  | 
	 
	9  | 
| 
	 1219  | 
 
நன்றுநன் றவுணன் கொல்லாம் நமக்கிது புரியு நீரான் 
இன்றிவன் வன்மை நீப்பன் யானென அவுண வெய்யோன் 
குன்றுரு வதனிற் குற்றிக் குறுமுனி பாணித் தண்டால் 
துன்றிரும் பூழை யாக்கிச் சூளிவை புகல லுற்றான்..  | 
	 
	10  | 
| 
	 1220  | 
 
மாண்மதி பெறாத வெய்யோய் மற்றுநின் தொன்மை நீங்கி 
நீண்மலை யாகி ஈண்டே நின்றுநீ யவுணர்�க் கெல்லாம் 
ஏண்மிகும் இருக்கை யாகி இருந்தவத் தோர்க்கும் ஏனைச் 
சேண்மலி கடவு ளோர்க்குந் தீத்தொழில் இழைத்தி பன்னாள்.  | 
	 
	11  | 
| 
	 1221  | 
 
மாற்படு நமது பாணி வலிகெழு தண்டால் உன்றன் 
பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெல்லாம் 
ஏற்புடை இருக்கை யாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள் 
வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான்.  | 
	 
	12  | 
| 
	 1222  | 
 
பழிதரும் இனைய சாபம் பகர்ந்துதன் சிரகந் தன்னில் 
உழிதரு புனலை வாங்கி உளங்கொள்மந் திரத்தால் வீசி 
அழிதர மாயை நீக்கி ஆண்டொரீஇ மீண்டு தென்பால் 
வழியது செவ்வன் நாடி வண்டமிழ் முனிவன் போனான்.		  | 
	 
	13  | 
| 
	 1223  | 
 
அன்னனதா ரவுணர் கோமான் அன்றுதொட் டசல மாகித் 
துன்னெறி அவுணர் யாருந் துவன்றிய அரண மாகி 
நென்னலின் முதனாள் காறு நின்றனன் அனையான் தன்னை 
என்னையா ளுடைய நீயன் றியாவரே அடுதற் பாலார்.		  | 
	 
	1  | 
| 
	 1224  | 
 
பைந்தமிழ் முனிவன் வான்றொய் பனிவரை யதனை நீங்கித் 
கந்தரஞ் செறியாற் கோட்டுக் கடவுளர் வரைச்சா ரெய்தி 
அந்தம தடைந்தோர்க் தங்கண் அருளினால் தனது மூல 
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்.		  | 
	 
	2  | 
| 
	 1225  | 
 
கங்கைசென் றொழுகுங் காசிக் கறைமிடற் றகில நாதன் 
பங்கய அடிகள் தாழ்ந்து பரவல்செய் தாண்டு நீங்கித் 
துங்கதை கொண்ட விந்தத் தொல்வரைக் கொருசா ரேகி 
அங்கதன் நிலைமை நோக்கி அறிவன்ஒன் றியம்ப லுற்றான்.  | 
	 
	3  | 
| 
	 1226  | 
 
சேயுயர் நிவப்பிற் றாகிச் சேண்புகும் விந்த மென்னும் 
மாயிருங் குவடு கேண்மோ மற்றியாம் பொதிய வெற்பில் 
போயிருந் திடவே உன்னிப் போந்தனம் அதனுக் கின்னே 
நீயொரு சிறிது செல்லும் நெறியளித் திடுதி யென்றான்.		  | 
	 
	4  | 
| 
	 1227  | 
 
எறிகதிர் மதிலி னுக்கும் ஏகருந் திறத்தால் வான 
நெறியினை யடைத்துத் தொல்லை நெடியமால் போன்று நின்றேன் 
குறியநிற் கஞ்சி யாறு கொடுப்பனோ எனது தோற்றம் 
அறிகிலை மீண்டு போகென் றவ்வரை மொழிந்த தன்றே.		  | 
	 
	5  | 
| 
	 1228  | 
 
கேட்டலும் அதனைச் சீற்றங் கிளர்ந்திட நகைத்து நாதன் 
தாட்டுணை யுன்னித் தொன்னாட் சதமகன் வேண்ட ஆழி 
மாட்டுறச் செறித்த கையை மலரயன் பதத்தின் காறும் 
நீட்டினன் தவமே யன்றி நெடும்பொருள் பிறவு முண்டோ.		  | 
	 
	6  | 
| 
	 1229  | 
 
அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவுங் குறியோன் விந்த 
வெற்பின தும்பர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி 
வற்புற வூன்ற வல்லே மற்றது புவிக்கட் டாழ்ந்து 
சொற்பிலம் புகுந்து சேடன் தொன்னிலை அடைந்த தன்றே.		  | 
	 
	7  | 
| 
	 1230  | 
 
அள்ளலை யடைகின் றோரில் அரம்புகும் அடுக்க லஞ்சி 
வள்ளலை யருளிக் கேண்மோ மற்றுனை வழிப டாமல் 
எள்ளலை யிழைத்து மேன்மை இழந்தனன் தமியன் குற்றம் 
உளளலை எழுவ தெஞ்ஞான் றுரையெனக் கூறிற் றன்றே.		  | 
	 
	8  | 
| 
	 1231  | 
 
அன்னதோர் பொழுது தன்னில் அலைகடல் செறித்த அங்கை 
முன்னவன் விந்த வெற்பின் மொழியினை வினவி யான்போய் 
இந்நெறி யிடையே மீளின் எழுதியால் நீயு மென்னா 
நன்னகை யோடு சொற்றான் நாரதன் சூழ்ச்சிக் கொப்ப.		  | 
	 
	9  | 
| 
	 1232  | 
 
வன்புலப் புவிக்குள் விந்தம் மறைதலும் அறிவின் நீராற் 
புன்புலப் பகையை வென்றோன் கரத்தைமுன் போலச் செய்து 
துன்புலப் புற்ற சிந்தைச் சுரர்கள்பூ மாரி தூர்ப்பத் 
தென்புலப் பொதிய வெற்பிற் செல்வது சிந்தை செய்தான்.		  | 
	 
	10  | 
| 
	 1233  | 
 
ஆயிடை விந்தம் பார்புக் கழுந்திட அகல்வா னத்துத 
தேயம்வௌ� ளிடைய தாகத் தினகரன் முதலாந் தேவர் 
பாய்சுடர் விளக்கம் யாண்டும் பரந்தன சிறையை நீங்கி 
ஏயென அளக்கர் நீத்தம் எங்கணுஞ் செறிவு மாபோல்.		  | 
	 
	11  | 
| 
	 1234  | 
 
அதுபொழு தலரி யாதி அமரர்கள் அகத்தி யன்பாற் 
கதுமென அடைந்து போற்றிக் கைதொழு தெந்தை செய்த 
உதவியார் புரிவர் நின்னால் உம்பரா றொழுகப் பெற்றோம் 
பொதியமேல் இனிநீ நண்ணி இருத்தியெம் பொருட்டா லென்றார்.  | 
	 
	12  | 
| 
	 1235  | 
 
என்றலும் விழுமி தென்னா இசைவுகொண் டமரர் தம்மைச் 
சென்றிட வானிற் றூண்டித் தெக்கிணந் தொடர்ந்து செல்லக் 
குன்றமர் குடாது தேயங் குறுகும்வில் வலன்வா தாவி 
அன்றுயிர் இழப்ப நின்றார் அகத்தியன் வரவு கண்டார்.		  | 
	 
	13  | 
| 
	 1236  | 
 
கண்டனர் இவனே போலுங் காய்சினத் தவுணர் ஆவி 
கொண்டனன் வேலை முன்னங் குடித்துமிழ் கின்ற நீரான் 
அண்டரை யருள்வா னாங்கொல் அடைந்தனன் அவனுக் கின்னே 
உண்டியை யுதவி ஆவி கொள்ளுதும் ஊனொ டென்றார்.		  | 
	 
	1  | 
| 
	 1237  | 
 
என்றிவை புகன்ற பின்னர் இளவல்வா தாவி யொன்போன் 
குன்றதன் புடையில் ஓர்சார் கொறியுருக் கொண்டு போந்து 
மென்றழை புதலின் மேய வில்வலன் என்னு மேலோன் 
 ஒன்றிய புலத்தின் மிக்கோர் உருவுகொண் டுற்றான் அன்றே.  | 
	 
	2  | 
| 
	 1238  | 
 
மீதுறு சடையும் நீறு விளங்கிய நுதலும் வேடங் 
காதணி குழையின் சீருங் கண்டிகைக் கலனும் மேற்கொள் 
பூதியுந் தண்டுங் கையும் புனையுரி யுடையு மாக 
மாதவ வேடந் தாங்கி முனிவனேர் வல்லை சென்றான்.		  | 
	 
	3  | 
| 
	 1239  | 
 
மெய்தரு புறத்துக் காமர் வியனுருக் கொண்டு தன்னுட் 
கைதவங் கொண்டு செங்கேழக் காஞ்சிரங் கனிபோல் மேய 
மைதிகழ் மனத்தன் நோ�போய் வண்டமிழ் முனிவற் போற்றி 
ஐதென வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான்.		  | 
	 
	4  | 
| 
	 1240  | 
 
அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன் இன்று 
முடிவுற வந்தீர் யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன் 
கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனித மாகும் 
படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை.  | 
	 
	5  | 
| 
	 1241  | 
 
பணிதலும் ஒருதன் கையிற் பரவையம் புனலை வாரி 
மணிபடு பதுமம் போல வாய்க்கொளும் முனிவன் தீயோன் 
துணிவினை யுணரா னாகித் துண்ணென வுவகை தோன்ற 
இணையறு தவத்தின் மிக்கோய் எழுதியென் றிதனைச் சொற்றான்.  | 
	 
	6  | 
| 
	 1242  | 
 
ஆறெதிர் எண்ம ராகும் ஆயிர முனிவர் தம்பால் 
வேறுள தவத்தார் தம்பால் மிக்கநின் னியற்கை தன்னில் 
கூறுசெய் அணுவின் காறுங் குணமில சரதம் ஈது 
தேறுதி இருககை யேது செல்லுதும் வருக வென்றான்.		  | 
	 
	7  | 
| 
	 1243  | 
 
என்றருள் முனியை நோக்கி ஈதென துறையுள் என்னச் 
சென்றனன் முடிவான் வந்த தீயவன் அவற்கொண் டேகி 
மன்றதன் இருக்கை யுற்று மரபுறு தவிசிற் சேர்த்திப் 
பொன்றிகழ் அடிகட் கேற்ற பூசனை புரிந்து சொல்வான்.		  | 
	 
	8  | 
| 
	 1244  | 
 
எந்தைநீ யானும் ஏனை என்குலத் தவரும் உய்ய 
வந்தனை போலும் இந்நாள் மற்றென திருக்கை வைகி 
வெந்திடு புற்கை யேனும் மிசைநதனை எனக்குச் சேடந் 
தந்தருள் புரிந்து போதி தவத்தரில் தலைவ என்றான்.		  | 
	 
	9  | 
| 
	 1245  | 
 
சொல்வல முனிவர் மேலோன் சூர்முதன் மருகா யுள்ள 
வில்வலன் மாற்றங் கேளா விழுமிது பரிவின் மிக்கோய் 
ஒல்வதோர் உணவு நின்பால் உவந்தியாம் அருந்திப் பின்னர்ச் 
சொல்வது கடனா மென்று செப்பினன் தீமை தீர்ப்பான்.		  | 
	 
	10  | 
| 
	 1246  | 
 
மேலவன் இதனைக் கூற வில்வன் வணங்கி எந்தாய் 
சீலமோ டடிசில் செய்வன் சிறிதுபோ திருத்தி யென்று 
காலையங் கதனில் ஆண்டோர் கயப்புனல் படிந்து மூழ்கிச் 
சாலவும் புனித னாகி அடுவதோர் சாலை புக்கான்.		  | 
	 
	11  | 
| 
	 1247  | 
 
அத்தலை நிலத்தை நீரால் ஆமயம் பூசி யாண்டுஞ் 
சித்திரம் உறுத்தி யாவுந் தேடிவால் வளையின் சின்னம் 
ஒத்ததண் டுலமா சேக ஒண்புன லிடையே இட்டு 
முத்திறம் மண்ணி மற்றோர் முழுமணிக் குழிசி உய்த்தான்.		  | 
	 
	12  | 
| 
	 1248  | 
 
தாக்குறு திறலின் வெய்ய தழல்பொதி கருவி யான 
ஆக்கிய செய்த தொன்றில் அழலினை அதனுள் மூட்டித் 
தேக்ககில் ஆர மாட்டிச் சீருணத் தசும்ப ரொன்றில் 
வாக்கிய வுலைப்பெய் தேற்றி மரபில்வால் அரியுள் ளிட்டான்.		  | 
	 
	13  | 
| 
	 1249  | 
 
பதனறிந் துண்டி யாக்கிப் பாலுற வைத்துப் பின்னர் 
முதிரையின் அடிசி லட்டு முன்னுறு தீம்பால் கன்னல் 
விதமிகும் உணாக்கள் யாவும் மேவுற அமைத்துக் கொண்டு 
புதுமணங் கமழுந் தெய்வப் புனிதமாங் கறியுஞ் செய்தான்.		  | 
	 
	14  | 
| 
	 1250  | 
 
ஆற்றலால் மேடம் போலாய் ஆரிடர் உயிரை யெல்லாம் 
மாற்றுவான் அமைந்து இளவலை வலிதிற் பற்றிக் 
கூற்றமே போல மேவும் முனிவன்முற் கொணர்ந்து கையில் 
ஏற்றகூர்ங் குயத்தாற் காதி இருதுணி யாக்கி னானே.  | 
	 
	15  | 
| 
	 1251  | 
 
அணிப்படு போர்வை நீக்கி அங்கமும் அகற்ி வாளால் 
துணிப்பன துணித்தும் ஈர்ந்துஞ் சுவைத்திடும் உறுப்பூன் எல்லாங் 
குணிப்பொடு குட்ட மிட்டுக் குழிசிகள் பலவிற் சேர்த்தி 
மணிப்புனல் கொண்டு முக்கால் மரபினால் மணணல் செய்து.		  | 
	 
	16  | 
| 
	 1252  | 
 
உரைத்தவக் கறிக்கு வேண்டும் உவர்முதல் அமைந்த நல்கி 
வருத்துறு கனன்மேற் சேர்த்தி வாதியிற் புழுக்கல் செய்தே 
அரைத்திடு கறியின் நுண்தூள் ஆதிதூய் இழுது பெய்து 
பொரிப்பன பொரித்திட்டாவி போந்திடா வண்ணம் போற்றி.		  | 
	 
	17  | 
| 
	 1253  | 
 
கறியினுண் பொடியும் ஏனைக் கந்தமார் துகளும் அந்நாள் 
வரையல்போ குற்ற தூய வாலரிப் பொடியும் நீவி 
உரைகெழு துப்பும் வாக்கி பொழுகுபல் காயங் கூட்டித் 
திறனொடும் அளாவி யாங்கோர் சிற்சில பாகு செய்து.		  | 
	 
	18  | 
| 
	 1254  | 
 
பின்னரும் பலகால் வேண்டும் பெற்றியிற் கரித்துச் செம்மி 
முன்னுற அளிக்க நின்ற முதிரையின் புழுக்கல் அட்டுச் 
செந்நல நீடுங் கன்னல் தீம்புளிங் கறியுஞ் செய்யா 
அன்னதோர் தொடக்கம் யாவும் அருளினன் அருளி லாதான்.  | 
	 
	19  | 
| 
	 1255  | 
 
ஆசினி வருக்கை யாதி அளவையில் கனிகள் கீறித் 
தேசமர் கன்னல் தீந்தேன் சேர்தரச் சிவணி யேனை 
வாசமும் மலரும் இட்டு வரம்பில அமைத்துப் புத்தேள் 
பூசனைக் குரிய அன்பாற் பொருக்கெனக் குவவு செய்தான்.		  | 
	 
	20  | 
| 
	 1256  | 
 
குய்வகை யுயிர்ப்பின் மாந்திக் குவலயம் விரும்பு கின்ற 
ஐவகை உணவும் ஆறு சுவைபட அளித்துப் பின்னும் 
எவ்வகை யனவுந் தானே இமைப்பினில் அமைத்து வல்லே 
கவ்வையி னோடுஞ் சென்று கடமுனி கழல்மேல் தாழ்ந்தான்.  | 
	 
	21  | 
| 
	 1257  | 
 
எந்தைநீ இன்ன காலை இரும்பசி யுடற்ற ஆற்ற 
நொந்தனை போலும் மேனி நுணங்கினை தமியேன் ஈண்டுத் 
தந்தனன் உணவி யாவுந் தளர்வற நுகரு மாறு 
வந்தருள் என்று வேண்ட மற்றதற் கியைந்து போனான்.		  | 
	 
	22  | 
| 
	 1258  | 
 
அட்டிடு சாலை மாட்டே அகத்தியற் கொடுபோய் ஆங்கண் 
இட்டதோர் இருக்கை தன்னில் இருத்தியே முகமன் கூறி 
மட்டுறு தூநீர் கந்த மலர்புகை தீபங்கொண்டு 
பட்டிமை நெறியிற் பூசை புரிந்துபின் பதநேர் குற்றான்.  | 
	 
	23  | 
| 
	 1259  | 
 
வேறு 
	தௌ�ளுஞ் சுடர்ப்பொன் இயல்கின்ற தட்டை திருமுன்னர் வைத்து நிரையா,  
	வள்ளங்கள் வைத்து மிகுநாரம் உய்த்து மரபில் திருத்தி மறையோன்,  
	உள்ளங் குளிர்ப்ப அமுதன்ன உண்டி யுறு பேதம் யாவும் உதவா,  
	வௌ�ளம் படைத்த நறுநெய்ய தன்கண் விட்டான்தன் னாவி விடுவான்.  | 
	 
	24  | 
| 
	 1260  | 
	 
	முறைவைப்பு நாடி முதன்மைக்கண் மேவு முதிரைப் புழுக்கல் மறியின்,  
	கறிவர்க்கம் ஏனை யவைசுற்றின் மேய கவினுற்ற கிண்ண மிசையே,  
	உறவிட்டு நீட மதுரித்த யாவும் உடனுய்த் தொழிந்த வளனுஞ்,  
	செறிவித்து மேலை முனிகைக்குள் நீடு சிரகத்தின் நீரு தவினான்.  | 
	 
	25  | 
| 
	 1261  | 
	 
	பெருநீர் அடங்கு சிறுகையி னூடு பெறவுய்த்த தோயம் அதனை,  
	இருபான்மை உண்டி யதுசூழும் வண்ண மிசையோடு சுற்றியதுதான்,  
	ஒருகால் நுகர்ந்து பலகாலி னுக்கும் உதவிப்பின் உள்ள படியும்,  
	அருகாது செய்து மிகவே விரும்பி அயில்வான் தவங்கள் பயில்வான்.		  | 
	 
	26  | 
| 
	 1262  | 
	 
	அடுகின்ற உண்டி கறிவர்க்க மேலை அவையன்பி லாத அசுரன்,  
	இடுகின்ற தேது முடிவெய்து காறும் இனிதுண்டு பின்றை முனிவன்,  
	கடிகொண்ட நாரம் அனையன் கொணர்ந்து கரமுய்ப்ப நுங்கி யெழுவான்,  
	பொடிகொண்டு தன்கை மலர்நீவி மிக்க புனல்கொண்டு மண்ணல் புரியா.  | 
	 
	27  | 
| 
	 1263  | 
	 
	மைக்காரின் மெய்யன் அருள்கின்ற நாரம் வாய்க்கொண் டுமிழ்ந்து 
	பலகால்,  
	முக்காலின் நுங்கி வாய்பூ முறைநாடி அங்க மெவையும்,  
	மிக்கானுமூறு புரியாவ தன்றி வேறுள்ள செய்கை பலவும்,  
	அக்காலை யங்கொர் புடையுற் றியற்றி அவண்வீற் றிருக்கும் அளவில்.		  | 
	 
	28  | 
| 
	 1264  | 
	 
	வேதா அளித்த வரமுன்னி யேவில் வலனென்னும் வெய்ய அசுரன்,  
	போதா விருந்த முனியாவி கோடல் பொருளாக நெஞ்சின் நினையா,  
	வாதாவி மைந்த இளையாய் விரைந்து வருகென்று கூற முனிவன்,  
	தீதார் வயிற்றின் இடையே எழுந்து திறல்மேட மாகி மொழிவான்.  | 
	 
	29  | 
| 
	 1265  | 
					 
					வேறு 
					எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல எனதூனும் உண்ட கொடியோன்,  
					உண்ணாடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரங் கிழித்து 
					வருவன்,  
					அண்ணாவில் வலனேயெ னக்கூறி ஏதம்பி அரிபோல் முழங்கி யிடலும்,  
					மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்ய திட்ட மாயந் தெரிந்து 
					வெகுள்வான்.		  | 
	 
	30  | 
| 
	 1266  | 
	 
	ஊனகொண்ட கறியாகி நுகர்வுற்ற வாதாவி உயிர்போகி யுண்ட இயல்பே,  
	தான்கொண்டு முடிகென்று சடரத்தை யொருகாலை தமிழ் வல்ல முனித டவலுங்,  
	கான்கொண்ட எரிமண்டு சிறுபுன் புதற்போன்று கடியோ னுமுடி வாகவே,  
	வான்கொண்ட லெனஅங்கண் முன்னின்ற வன்தம்பி மாய்வுற்ற துன்னி வருவான்.  | 
	 
	31  | 
| 
	 1267  | 
	 
	மெய்க்கொண்ட தொன்னாள் உருக்கொண்டு முனிதன்னை வெகுளுற்றொர் தண்ட 
	மதனைக்,  
	கைக்கொண்டு கொலையுன்னி வருபோழ்தில் முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை,  
	மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில் வலன்றானு மடிவெய்தலும்,  
	அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம்நீங்கி அப்பால் அகன்ற னனரோ.  | 
	 
	32  | 
| 
	 1268  | 
 
செங்கை தூங்கிய தீர்த்த நீரொடுங் 
கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி 
மங்கு கின்றஅம் மைந்தர் நேருறா 
அங்கண் மேவினார் அருந்த வத்தர்போல்.  | 
	 1  | 
| 
	 1269  | 
 
நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக் 
காரின் மேனியர் கறங்கு கண்ணினர் 
தீரர் ஆற்றவுஞ் சினத்தர் ஒல்லென 
ஆர வாரஞ்செய் தணுகி னாரரோ.  | 
	 2  | 
| 
	 1270  | 
 
அண்மை யாகுவர் அகல்வர் மாமுனி 
கண்முன் எய்துவர் கரந்து காண்கிலார் 
விண்மு கிற்குளே மேவி ஆர்ப்பரால் 
மண்மி சைப்பினும் வருவர் சூழவரே.		  | 
	 3  | 
| 
	 1271  | 
 
கோதில் ஆற்றல்சேர் கும்ப மாமுனி 
ஈது நோக்கியே இவரை முன்னமே 
காதி னாம்நமைக் கருதி வந்தனர் 
மாத வத்தினோன் மைந்தர் ஆதலால்.		  | 
	 4  | 
| 
	 1272  | 
 
பேர்கி லாதஇப் பிரம கத்திநோய் 
தீரு மாற்றினால் சிவன தாள்களை 
ஆர்வ மோடிவண் அருச்சிப் பாமெனா 
நேரின் மாமுனி நினைந்து நின்றரோ.		  | 
	 5  | 
| 
	 1273  | 
 
ஆசில் கொங்கினுக் கணித்தின் ஓரிடை 
வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ 
ஈச னார்தமை இலிங்க மேயில் 
நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான்.		  | 
	 6  | 
| 
	 1274  | 
 
தூய குண்டிகைத் தோயம் அன்றியே 
சேய மாமலர் தீபந் தீம்புகை 
ஆய போனகம் ஆதி யானவை 
ஏயு மாற்றினால் இனிது தேடினான்.		  | 
	 7  | 
| 
	 1275  | 
 
விழுமி தாகிய விரதர் வீயவே 
வழியி ருந்திடும் வஞ்சர் ஆவிகொள் 
பழிய கன்றிடப் பரமன் தாள்மிசை 
அழிவில் அன்பொடே அருச்சித் தானரோ.  | 
	 8  | 
| 
	 1276  | 
 
மங்கை பாகனை மற்றும் பற்பகல் 
சிங்கல் இன்றியே சிறந்த பூசைசெய் 
தங்கண் மேவினான் அவன்க ணாகிய 
துங்க வெம்பவந் தொலைந்து போயதே.		  | 
	 9  | 
| 
	 1277  | 
 
அனைய காலையில் அரிய தீந்தமிழ் 
முனிவ ரன்செயல் முற்றும் நாடியே 
துனியல் நாரதன் தொல்லை வானவர்க் 
கினிய கோமகன் இருக்கை எய்தினான்.		  | 
	 10  | 
| 
	 1278  | 
 
தாணு வின்பதந் தன்னை உன்னியே 
வேணு வாகியே மெய்த்த வஞ்செயுஞ் 
சேணின் மன்னவன் செல்லு நாரதற் 
காணும் எல்லையிற் கழல்வ ணங்கினான்.  | 
	 11  | 
| 
	 1279  | 
 
எழுதி மன்னவெண் றெடுத்து மார்புறத் 
தழுவி நன்றிவட் சார்தி யோவெனா 
உழுவ லன்பினால் உரைப்ப வாசவன் 
தொழுத கையினான் இனைய சொல்லுவான்.		  | 
	 12  | 
| 
	 1280  | 
 
இன்று காறுநின் னருளின் யானிவண் 
நன்று மேவினன் நாதன் பூசனைக் 
கொன்ற துண்டுதீங் குரைப்பன் கேட்டியால் 
குன்ற மன்னதோர் குணத்தின் மேலையோய்.		  | 
	 13  | 
| 
	 1281  | 
 
கோதின் மாமல்ர் குழுவு தண்டலைக் 
கேது நீரிலை இறந்து வாடுமால் 
போதும் இல்லையால் பூசை செய்வதற் 
கீத ரோகுறை யென்றி யம்பினான்.		  | 
	 14  | 
| 
	 1282  | 
 
வேறு 
இன்னவை பலவுங் கூறி இந்திரன் தவிசொன் றிட்டு 
முன்னுற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக 
அன்னதோர் அறிஞன் நின்னூர் அரசியல் பிறவும் ஈசன் 
தன்னருள் அதனால் மேனாள் வருவது தளரேல் மன்னோ.		  | 
	 
	15  | 
| 
	 1283  | 
 
ஆறணி சடையி னானுக் கருச்சனை புரிதற் கிங்கோர் 
ஊறுள தென்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே 
மாறிடுங் காலம் ஈண்டு வந்ததப் பரிசை யெல்லாங் 
கூறுவன் கேட்டி யென்னாக் கோமகற் குரைக்க லுற்றான்.		  | 
	 
	16  | 
| 
	 1284  | 
 
தன்னிகர் இலாத முக்கண் சங்கரன் பொதிய வெற்பின் 
முன்னுறை கென்று விதும்ப முனிவனை விடுத்த வாறும் 
அன்னவன் விந்தந் தன்னை அகன்பிலத் திட்ட வாறும் 
துன்னெறி புரிந்த வெஞ்சூர் மருகரைத் தொலைத்த வாறும்.		  | 
	 
	17  | 
| 
	 1285  | 
 
அப்பழி தீரு மாற்றால் ஐதெனக் கொங்கின் நண்ணி 
முப்புர மெரித்த தொல்லை முதல்வனை அருச்சித் தேத்தி 
மெய்ப்பரி வாகி அங்கன் மேவிய திறனும் முற்றச் 
செப்பினன் பின்னும் ஆங்கோர் செய்கையை உணர்த்த லுற்றான்.  | 
	 
	18  | 
| 
	 1286  | 
 
அருந்தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித் தங்கண் 
இருந்திடு கின்றான் நாடி ஏகினன் அவன்வா லாகப் 
பொருந்துகுண் டிகையின் மன்னும் பொன்னியா றதனை இங்கே 
வரும்பரி சியற்றின் உன்றன் மனக்குறை தீரு மென்றான்.		  | 
	 
	19  | 
| 
	 1287  | 
 
குரவன்ஈ துரைத்த லோடுங் குறுமுனி கொணர்ந்து வைத்த 
வரநதி தனையிக் காவில் வரவியற் றிடுமா றென்கொல் 
பெருமநீ யுரைத்தி யென்னப் பேரமு தருத்தி யேத்திக் 
கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை என்றான்.  | 
	 
	20  | 
| 
	 1288  | 
 
குணப்பெருங் குன்ற மன்ன கோதிலா அறிவன் இன்ன 
புணர்ப்பினை இரைதத லோடும் புரந்தான் பொருமல் நீங்கிக் 
கணிப்பிலா மகிழ்ச்சி யெய்திக் காசிபன் சிறுவர் கொண்ட 
அணிப்பெருந் திருவும் நாடும் அடைந்தனல் போன்று சொல்வான்.  | 
	 
	21  | 
| 
	 1289  | 
 
எந்தைநீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும் 
உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர் 
வந்திடு மாறும் ஈண்டு வரவுன தருளால் இன்னே 
தந்திமா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான்.		  | 
	 
	22  | 
| 
	 1290  | 
 
அருள்முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே 
புரிகரி முகவற் கைய பூசனை யென்று கூறிப் 
பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து 
சுரரெலாம் பரவு கின்ற தொல்லையம் பதத்தி லுற்றான்.		  | 
	 
	23  | 
| 
	 1291  | 
 
சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவுங் கங்கை 
யாறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன் றன்னை 
மாறகல் மேனி கொண்டு வரன்முறை தாபித் தன்னான் 
சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர்.  | 
	 
	24  | 
| 
	 1292  | 
 
இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியுந் தேனும் 
முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றுந் 
தொக்குறு மதுர மூலத் தொடக்கமுஞ் சுவைத்தீம் பாலும் 
மிக்கபண் ணியமு மாக விருப்புற நிவேதித் தானால்.		  | 
	 
	25  | 
| 
	 1293  | 
 
இவ்வகை நிவேதித் தேபின் எம்பிரான் றன்னை ஏத்த 
மைவரை யனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல் 
கவ்வையோ டனந்த கோடி கணநிரை துவன்றிச் சூழ 
அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர் கோமான்.  | 
	 
	26  | 
| 
	 1294  | 
 
அஞ்சலை மகவா னென்ன ஐங்கரக் கடவுள் கூற 
நெஞ்சகந் துணுக்கம் நீங்கி நிறைந்தபே ருவகை யெய்தி 
உஞ்சன னென்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது 
செஞசெவே சென்னி தீண்டச் சென்றுமுன் வணக்கஞ் செய்தான்.  | 
	 
	27  | 
| 
	 1295  | 
 
பூண்டிகழ் அலங்கல் மார்பில் பொன்னகர்க் கிறைவன் முக்கண் 
ஆண்டகை சிறுவன் தாள்மேல் அன்பொடு பணிந்து போற்ற 
நீண்டதோர் அருளால் நோக்கி நின்பெரும் பூசை கொண்டாம் 
வேண்டிய பரிசென் என்றான் வேழமா முகனை வென்றான்.		  | 
	 
	28  | 
| 
	 1296  | 
 
இந்திரன் அதுகேட் டைய எம்பிராற் காக ஈண்டோர் 
நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச் 
செந்தழ லுற்றா லென்னத் தினகரன் சுடரால் மாய்ந்து 
வெந்துக ளான தண்ணல் மேலடு புரமே யென்ன.				  | 
	 
	29  | 
| 
	 1297  | 
 
என்னலும் ஏந்தல் கேளா ஏழ்பெருந் தலத்தின் நீரும் 
முன்னுறத் தருகோ வான முழுப்பெருங் கங்கை தானும் 
பன்னதி பிறவும் இங்ஙன் விளித்திடோ பரவை யாவுந் 
துன்னுறு விக்கோ ஒன்று சொல்லுதி வேண்டிற் றென்றான்.		  | 
	 
	30  | 
| 
	 1298  | 
 
ஐங்கரக் கடவுள் இவ்வா றறைதலும் அனைத்தும் நல்கும் 
பங்கயத் தயனு மாலும் பரவுறு பழையோய் இங்ஙன் 
அங்கவற் றொன்றும் வேண்டேன் அதுநினக் கரிதோ யானொன் 
றிங்குனைக் கேட்ப னென்னா இனையன இசைக்க லுற்றான்.  | 
	 
	31  | 
| 
	 1299  | 
 
சகத்துயர் வடபொன் மேருச் சாரலின் நின்றும் போந்து 
மிகத்துயர் எவர்க்குஞ் செய்யும் வெய்யள் சிறுவர்ச் செற்று 
மகத்துயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன் பொற்றாள் 
அகத்தியன் கொங்கின் பால்வந் தருச்சனை புரிந்து மேவும்.		  | 
	 
	32  | 
| 
	 1300  | 
 
அன்னவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே 
பொன்னியென் றுரைக்குந் தீர்த்தம் பொருந்தியேஇருந்த தெந்தாய் 
நன்னதி யதனை நீபோய் ஞாலமேற் கவிழ்த்து விட்டால் 
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீரு மென்றான்.		  | 
	 
	33  | 
| 
	 1301  | 
 
பாகசா தனன்இம் மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி 
மாகயா னனத்து வள்ளல் மற்றித செய்து மென்னா 
ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை தன்னில் 
காகமாய் முனிபா லான கமண்டல மிசைக்கண் உற்றான்.				  | 
	 
	34  | 
| 
	 1302  | 
 
கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மிதிற் பொன்னி 
சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி 
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவனென் றோரான் 
இங்கொரு பறவை கொல்லாம் எய்திய தென்று கண்டான்.				  | 
	 
	35  | 
| 
	 1303  | 
 
கண்டனன் பிள்ளை செல்லக் கரதல மெடாநின் றோச்ச 
அண்டருக் கலக்கண் செய்த கயமுகத் தவுணற் செற்றேன் 
குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர்புனற் கன்னி யன்னான் 
பண்டையில் இசைவு செய்தான் பாரில்நீ படர்தி என்றான்.				  | 
	 
	36  | 
| 
	 1304  | 
 
என்னலுங் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற 
அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை 
நன்னதி போல விண்ணும் ஞாலமும்நடுங்க ஆர்த்துப் 
பொன்னியா றுலகந் தன்னில் பொள்ளெனப் பெயர்ந்த தன்றே.				  | 
	 
	37  | 
| 
	 1305  | 
 
பெயர்தலும் உமைதன் பிள்ளை பிள்ளையின் உருவம் நீத்துப் 
பயிறரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன்போற் செல்லச் 
சயமிகு தவத்தின் மேலோன் தன்மையங் கதனை நோக்கி 
உயிர்முழு தடவே தோன்றும் ஒருவன்போல் உருத்து நின்றான்.		  | 
	 
	38  | 
| 
	 1306  | 
 
தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின் மேலோன் 
யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டுறு நதியைச் சிந்திப் 
போவனோ சிறிது மெண்ணா அகந்தையன் போலும் அம்மா 
யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின் என்றான்.		  | 
	 
	39  | 
| 
	 1307  | 
 
விரைந்தன பின்ன ரேக மெய்வழி பாடு செய்வோர் 
அரந்தையை நீக்கும் எங்கோன் அச்சுறு நீரன் போல 
இரிந்தனன் போத லோடும் இருகையுங் கவித்த மாக்கித் 
துரந்தனன் முனிவன் சென்னி துளக்குறத் தாக்க உன்னி.				  | 
	 
	40  | 
| 
	 1308  | 
 
குட்டுவான் துணிந்து செல்லுங் குறுமுனிக் கணிய னாகிக் 
கிட்டுவான் விசும்பி னூடு கிளருவான் திசைக டோறும் 
முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன் கைக்கும் 
எட்டுவான் சேய னாகி ஏகுவான் எவர்க்கும் மேலோன்.		  | 
	 
	41  | 
| 
	 1309  | 
 
இப்படி முனிவன் சீற்றத் தலமர யாண்டு மேகித் 
தப்பினன் திரித லோடுஞ் சாலவுந் தளர்ச்சி யெய்திச் 
செப்பரி திவன்றன் மாயஞ் செய்வதென் இனியா னென்னா 
ஒப்பருந் தவத்தோன் உன்ன எந்தைய� துணர்ந்தான் அன்றே.  | 
	 
	42  | 
| 
	 1310  | 
 
ஓட்டமோ டுலவு முன்னோன் ஒல்லையில் தனது மேனி 
காட்டினன் முனிவன் காணாக் கதுமெனக் கலங்கி அந்தோ 
கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ 
ஈட்டொடு துரந்தேன் கொல்லென் றேங்கினன் இரங்கு கின்றான்.  | 
	 
	43  | 
| 
	 1311  | 
 
இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான் கொண்ட 
கரங்களை எடுத்து வானில் காருரும் ஏறு வெற்பின் 
உரங்கிழி தரவே நீங்கா துரப்பினில் வீழ்வ தேபோல் 
வரங்கெழு தனாது நெற்றி வருந்துறத் தாக்கல் உற்றான்.		  | 
	 
	44  | 
| 
	 1312  | 
 
தாக்குதல் புரிந்த காலைத் தாரகப் பிரம மான 
மாக்கய முகத்து வள்ளல் வரம்பிலா அருளி னோடு 
நோக்கியுன் செய்கை என்னை நுவலுதி குறியோய் என்னத் 
தேக்குறு தமிழ்தேர் வள்ளல் இனையது செப்பு கின்றான்.		  | 
	 
	45  | 
| 
	 1313  | 
 
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச் 
சிந்தனை புரிந்தேன் யாதுந் தௌ�விலேன் அதற்குத் தீர்வு 
முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து 
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி யென்றான்.		  | 
	 
	46  | 
| 
	 1314  | 
 
என்றலுந் தவிர்ந்து முன்னோன் இணையடி மிசையே பல்கால் 
சென்றுசென்றிறைஞ்சி யன்னோன் சீர்த்திய தெவையும் போற்றி 
உன்றிறம் உணரேன் செய்த தவற்றினை உளத்திற் கொள்ளேல் 
நன்றருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான்.  | 
	 
	47  | 
| 
	 1315  | 
 
புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டோர் 
வரந்தரு காமர் தண்கா வைத்தனன் அதுநீ ரின்றி 
விரைந்தது பொலிவு மாழ்க வெறுந்துகள் ஆத லோடும் 
இரந்தனன் புனல்வேட் டெம்மை இயல்புடன் வழிபட் டிந்நாள்.		  | 
	 
	48  | 
| 
	 1316  | 
 
ஆதலின் கோடிபோல் யாமுன் னரும்புனற் குடிகை மீது 
காதலித் திருந்து மெல்லக் கவிழத்தனம் அதனை ஈண்டுப் 
போதலுற் றிடவுஞ் சொற்றாம் பொறாதுநீ செய்த வற்றில் 
யாதுமுட் கொள்ளேம் அவ்வா றினிதென மகிழ்தும் அன்றே.		  | 
	 
	49  | 
| 
	 1317  | 
 
ஈண்டுநீ புரிந்த தெல்லாம் எமக்கிதோ ராட லென்றே 
காண்டுமா லன்றி நின்பால் காய்சினங் கொண்டேம் அல்லேம் 
நீண்டசெஞ் சடையெம் மையன் நேயன்நீ எமக்கும் அற்றே 
வேண்டிய வரங்கள் ஈதுங் கேண்மதி விரைவின் என்றான்.		  | 
	 
	50  | 
| 
	 1318  | 
 
வேறு 
என்னா இதுசெப் பலும்எம் பெருமான் 
முன்னா கியதோர் முனிவன் பணியா 
உன்ன ரருள்எய் தலின்உய்ந் தனன்யான் 
நன்னா யகனே எனவே நவில்வான்.		  | 
	 51  | 
| 
	 1319  | 
 
நின்பா லினும்அந நெடுமா லுணரான் 
தன்பா லினுமே தமியேன் மிகவும் 
அன்பா வதொர்தன் மையளித் தருள்நீ 
இன்பால் அதுவெ� குவன்எப் பொழுதும்.		  | 
	 52  | 
| 
	 1320  | 
 
இன்னே தமியேன் எனவே இனிநின் 
முன்னே நுதலின் முறையால் இருகை 
கொன்னே கொடுதாக் குநர்தங் குறைதீர்த்� 
தன்னே யெனவந் தருள்செய் யெனவே.		  | 
	 53  | 
| 
	 1321  | 
 
முத்தண் டமிழ்தேர் முனிஈ தறைய 
அத்தன் குமரன் அவைநல் கினமால் 
இத்தன் மையவே அலதின் னமும்நீ 
சித்தந் தனில்வேண் டியசெப் பெனவே.  | 
	 54  | 
| 
	 1322  | 
 
கொள்ளப் படுகுண் டிகையிற் குடிஞை 
வௌ�ளப் பெருநீர் மிசையுற் றடிகள் 
தள்ளக் கவிழ்வுற் றதுதா ரணிமேல் 
எள்ளிற் சிறிதும் இலதென் றிடவே.		  | 
	 55  | 
| 
	 1323  | 
 
ஊனாய் உயிராய் உலகாய்* உறைவோன் 
மேனாள் அருள்செய் வியன்மா நதிதான் 
போனா லதுபோற் புனலொன் றுளதோ 
நானா டிடவே நலமா னதுவே.	  
 
( * சிவஞானிகள், �மரத்தை மறைத்தது மாமத யானை� என்று 
     திருமூலர் கூறியதுபோல் உலகாதிகளையும் சிவபெரு- 
     மானாகவே காண்கின்றார்கள். அல்லாதவர்கள் உலகாதி- 
     களாகவே காண்கின்றார்கள்; ஆதலின் உலகாய் என்றார். )  | 
	 
	56  | 
| 
	 1324  | 
 
அந்நீர் மையினால் அடியேற் கிவண்நீ 
நன்னீர் நவையற் றதுநல் கெனவே 
கைந்நீர் மையினாற் கடுகின் துணையாம் 
முந்நீர் அயிலும் முனிவன் மொழிய.		  | 
	 57/td>  | 
| 
	 1325  | 
 
காகத் தியல்கொண் டுகவிழ்த் திடமுன் 
போகுற் றபுதுப் புனலாற் றிடையே 
மாகைத் தலநீட் டினன்வா னுலவும் 
மேகத் திறைமால் கடல்வீழ்ந் தெனவே.		  | 
	 58  | 
| 
	 1326  | 
 
அள்ளிச் சிறிதே புனலம் முனிவன் 
கொள்ளப் படுகுண் டிகையுய்த் திடலும் 
உள்ளத் தைநிரப் பியொழிந் ததெலாம் 
வௌ�ளத் தொடுபார் மிசைமே வியதே.		  | 
	 59  | 
| 
	 1327  | 
 
முன்னுற் றதுபோல் முனிகுண் டிகைநீர் 
துன்னுற் றதுமேல் தொலையா வகையால் 
என்னிப் புதுமை யெனநோக் கினனால் 
தன்னுற் றமனத் தவமா முனியே.		  | 
	 60  | 
| 
	 1328  | 
 
பேருற் றிடுமிப் பெருநீர் அதனில் 
வாரிச் சிறிதே வருகுண் டிகையில் 
பாரித் தனன்இப் படிமுற் றுறுவான் 
ஆரிப் படிவல் லவரா யினுமே.				  | 
	 61  | 
| 
	 1329  | 
 
அந்தத் திருமால் அயனே முதலோர் 
வந்தித் திடவே வரமீந் தருளி 
முந்துற் றிடுமூ லமொழிப் பொருளாம் 
எந்தைக் கரிதோ இதுபோல் வதுவே.		  | 
	 62  | 
| 
	 1330  | 
 
என்றே நினையா இபமா முகவற் 
சென்றே பணியாச் சிறியேன் குறையா 
ஒன்றே துமிலேன் உதவுற் றனைநீ 
நன்றே கவிழும் நதிநீ ரையுமே.		  | 
	 63  | 
| 
	 1331  | 
 
முந்தே முதல்வா முழுதுன் னருளால் 
அந்தே யளவும் அளியில் சிறியேன் 
உய்ந்தேன் இனியும் முனையுன் னுழிநீ 
வந்தே அருள்கூர் மறவேல் எனவே.		  | 
	 64  | 
| 
	 1332  | 
 
அற்றா கவென அருள்செய் தயலே 
சுற்றா வருதொல் படையோ டுமெழாப் 
பற்றா னவர்நா டுபரம் பொருள்சேய் 
மற்றா ரும்பியப் பமறைந் தனனே.		  | 
	 65  | 
| 
	 1333  | 
 
வேறு 
மறைகின்ற எல்லைதனில் குறுமுனிவிம் மிதமாய்மன் னுயிர்கள் எங்கும்,  
உறைகின்ற தனிமுதல்வன் புதல்வன்றன் கோலத்தை உணர்ந்து போற்றி,  
அறைகின்ற காவிரியைக் கண்ணுற்று நகைத்து வெகுண் டருள்கை நாடி, 
உறைகின்ற கொங்குதனை ஒருவித்தென் றிசைநோக்கி யொல்லை சென்றான்.		  | 
	 
	66  | 
| 
	 1334  | 
 
செற்றாலம் உயிரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள்,  
பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை மார்கள்,  
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி முகின் மேனிப் புத்தேள் வைகுங்,  
குற்றாலம் ஆவதொரு வளநகரைக் குறுமுனிவன் குறுகி னானால்.		  | 
	 
	1  | 
| 
	 1335  | 
 
அப்பதியில் அச்சுதனுக் காலயமொன் றுளதம்மா அவனி மீதில்  
ஒப்பிலதோர் திருமுற்றம் அ�தென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ்  
செப்புவரா யிடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார்,  
மெய்ப்படுநூல் முறைகண்டு மோகத்தால் தமதுமத மேற்கொண் டுள்ளார்.  | 
	 
	2  | 
| 
	 1336  | 
 
அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக்காணின் அழன்று பொங்கி,  
மூன்னுறுதொல் பகைஞரென மிகஇகழந்து மற்றவர்தம் முகநோக் காராய்த்,  
துன்னெறியே மேற்கொண்டு மறைபயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித்,  
தந்நெறியும் புரியாதங் கிருந்தனரால் அ�துணர்ந்தான் தமிழ்நர் கோமான்.  | 
	 
	3  | 
| 
	 1337  | 
 
குறுமுனிவன் ஆங்கவர்தஞ் செயலுணர்ந்து குற்றால மென்னும் மூதூர், 
மறுகினிடை யேநடந்து மாயவன்தன் ஆலயமுன் வருத லோடும்  
நெறிவருமவ் வாலயத்திற் செறிகின்ற வைணவர்கள் நெடிது நோக்கிச்,  
செறுநர்தமைக் கண்டுபதை பதைப்பார்போல் வெய்துயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார்.  | 
	 
	4  | 
| 
	 1338  | 
 
ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனையதனால் உலகில் தேவர்,  
எல்லாரும் அறியவைய மேற்றோனுக் கடியவன்நீ ஈண்டு செல்லச்,  
செல்லாது கைத்தலத்தில் ஒருகோலுங் கொண்டனையாற் சிறியை போலும்,  
நில்லாயெம் பெருமான்றன் மாநரம் அணுகாது நீங்கு கென்றார்.		  | 
	 
	5  | 
| 
	 1339  | 
 
என்றிடலும் வெகுளாது நகைசெய்து மறைநெறியை யிகந்து நின்றீர்,  
துன்றியிவண் உறைகின்ற துணரேன்இத் திறமெவருஞ் சொன்னார் இல்லை,  
நன்றுநெறி யென்றுவந்தேன் நும்பான்மை உணர்வேனேல், நான்இம் மூதூர்,  
சென்றிடவும் நினையேனால் முனியற்க யான்மீண்டு செல்வே னென்றான்.  | 
	 
	6  | 
| 
	 1340  | 
 
பொதியமலை தனிலேகும் முனிவன்இது புகன்றிடலும் பொறாது நீயிப்,  
பதியதனில் வருவதுவும் பாவமாம் ஈண்டுநீ படர்தி யென்ன,  
இதுசரதம் மொழிந்தீர்கள் தொல்லோர்தம் நூன்முறையும் ஈதேயென்னா,  
விதியருளுந் தக்கனார் வழிமுறையோர் தமைநீங்கி மீண்டு செல்வான்.		  | 
	 
	7  | 
| 
	 1341  | 
 
சிட்டர்புகழ் கயிலைமலை காத்தருளுந் திருநந்தி தேவன் செங்கேழ்,  
மட்டுறுபங் கயத்துறையும் நான்முகத்தோன் துருவாசன் மறைநூல் யாவுந்,  
தட்டறவே உணர்பிருகு கவுதமன்கண் ணுவமுனிவன் ததீசி இன்னோர்,  
இட்ட பெருஞ் சாபமெலாம் பொய்த்திடுமோ எனவுன்னி ஏக லற்றான்.		  | 
	 
	8  | 
| 
	 1342  | 
 
ஏகலுறு குறுமுனிவன் உயிர்க்குயிராய் நின்றோனை இகழ்வார் தங்கண்,  
மோகமுறும் அகந்தையினை முதலோடுங் களைவனென முன்னி முன்னாட்,  
போகியதன் மாயையினால் இரதத்தின் ஆவிபடு பொன்னே போலப்,  
பாகவத மாகுவதோர் உருக்கொண்டான் கருணையினாற் பரவை போல்வான்.		  | 
	 
	9  | 
| 
	 1343  | 
 
ஆளுடைய நாயகன்பால் அன்புடையான் மாயவன்றன் அடியனேபோல்,  
கோளுடைய மாயத்தான் மேனிகொண்டு மீண்டுமங்கட் குறுக லோடும்,  
நீளிடையில் வரக்கண்ட வயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித்,  
தாளிடையில் வீழ்ந்திடலும் நாரணனுக் காகவெனச் சாற்றி நின்றான்.		  | 
	 
	10  | 
| 
	 1344  | 
 
அடிமுறையின் வணங்கியெழும் வேதியர்தங் களைநோக்கி அரிபால் அன்பு,  
முடிவிலைநும் பாலென்று மொழிந்தனர்அங் கதுகாண முன்னி வந்தாம்,  
படியதனில் உமக்குநிகர் யாருமிலை நுமைக்கண்ட பரிசால் யாமுந்,  
தொடர்வரிய பேருணர்வு பெற்றெனமென் றேபின்னுஞ் சொல்லல் உற்றான்.  | 
	 
	11  | 
| 
	 1345  | 
 
முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் முன்னம் இன்னே,  
அத்திகிரி தனிலிருப்பச் செல்கின்றோம் நமபெருமான் அமருங் கோயில்,  
இத்தல மேல் உளதென்பர் அதுபாவும் விருப்புடையோம் என்ன அன்னோர்,  
கைத்தலத்தோர் விரற்சுட்டி அதுதிருமால் இருக்கையெனக் காட்டலுற்றார்.  | 
	 
	12  | 
| 
	 1346  | 
 
காட்டுதலுங் கைதொழுது மாலுறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி,  
ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி யேத்திப்,  
பாட்டிலுறு தொல்லடியார் தமைநோக்கி இவரை வழி படுதற் குள்ளம்,  
வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான்.  | 
	 
	13  | 
| 
	 1347  | 
 
நன்றெனவே சிலரேகித் தூயதிரு மஞ்சனமும் நறுமென் போதும்,  
மன்றலுறு செஞ்சாந்தும் அணித்துகிலும் ஏனையவும் மரபிற் கொண்டு  
சென்றுமுனி வரன்முன்னம் உய்த்திடலும் அனையவர்தந் திறத்தை நோக்கி,  
இன்றிவரை யருச்சனைசெய் விதிமுறையைப பார்த்திடுங்கள் யாரு மென்றே.    | 
	 
	14  | 
| 
	 1348  | 
 
அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை அகத்துட் கொண்டு,  
சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக்,  
குறுகுகுறு கெனஇருத்தி ஔளரக்கிற் புனைபாவை கோல மீதும்,  
அறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்.  | 
	 
	15  | 
| 
	 1349  | 
 
அல்லிமலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும் அறியொணாத்,  
எல்லையிலாப் பரம்பொருளைத் தாபித்து மந்திரங்க ளெடுத்தக் கூறித்,  
தொல்லையுருக் கொண்டுமலர் மஞ்சனமே முதலியன தூய ஆக்கி,  
ஒல்லைதனில் அருச்சிப்பக் காண்டலும்அவ் வந்தணர்கள் உருத்துச் சொல்வார்.		  | 
	 
	16  | 
| 
	 1350  | 
 
காயத்தான் மிகச்சிறியன் முப்புரத்தை நீறாக்குங் கடவுட் காற்ற,  
நேயத்தான் இவ்விடையே முன்வந்தான் யாமிகழ நில்லா தேகி,  
ஆயத்தான் பாகவத வடிவாய்வந் திச்சமயம் அழித்தான் அந்தோ,  
மாயத்தான் பற்றுமினோ கடிதென்று குறுமுனியை வளைந்து கொண்டார்.  | 
	 
	17  | 
| 
	 1351  | 
 
பற்றிடுவான் வளைகின்றோர் தமைநோக்கி எரிவிழித்துப் பரவை தன்பால்,  
உற்றவிடம விடுத்ததென முனிவனறன் வெகுளித்தீ உய்த்த லோடுஞ்,  
சுற்றியது சுற்றியவர் தமைப்பின்னும் பொறிபடுத்தித் துரந்து செல்ல,  
மற்றவர்கள் இரிந்தேதம் பதியிழந்து சிதறினரால் மண்மே லெங்கும்.		  | 
	 
	18  | 
| 
	 1352  | 
 
அன்னோர்கள் போயிடலும் இன்றுமுதல் சிவன்இடமீ தாயிற்றென்று,  
முன்னோனை அருச்சித்துப் பணிந்துவிடை கொண்டுதென்பால் முன்னிச் சென்று,  
பொன்னோடு மணிவரன்றி அருவியிழி தருபொதியப் பொருப்பில் நண்ணி,  
மன்னோமெய்த் தவம்புரிந்து வீற்றிருந்தான் அப்பரமன் மலர்ந்தான் உன்னி.		  | 
	 
	19  | 
| 
	 1353  | 
	 
	வேறு 
	பூவிரி கின்ற காமர் பொதும்பர்சேர் பொதிய வெற்பில் 
	தாவிரி கும்பத் தண்ணல் வந்திடு தன்மை சொற்றாம் 
	மாவிரி கின்ற சாதி வனத்திடை மலர்ப்பூங் காவில் 
	காவிரி போந்த வாறும் ஏனவும் கழறு கின்றோம்.				  | 
	 
	20  | 
| 
	 1354  | 
 
கொடியுருக் கொண்டு முன்னங் குண்டிகை இருந்த பிள்ளை 
படிமிசை அதனைத் தள்ளப் படர்ந்தகா விரியின் றன்மை 
விடலருந் தளையின் நீக்கி வியனெறிப் படுத்த லோடும் 
அடிகளின் அருளாற் செல்லும் ஆருயிர் போன்ற தன்றே.		  | 
	 
	1  | 
| 
	 1355  | 
 
பண்டொரு தந்தி யானோன் படர்சிறைப் புள்ளாய்த் தள்ளக் 
குண்டிகை இருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை 
எண்டருந் தடையால் வல்லோன் இருங்கடத் திட்ட பாந்ாள் 
மண்டலத் தொருவன் நீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே.		  | 
	 
	2  | 
| 
	 1356  | 
 
ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவனூல் ஒழுக்குந் தொல்லை 
வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும் நீரார் 
போதத்தின் ஒழுக்கும் எங்கோன் புரிதரு கருணை யென்னும்  
ஓதத்தின் ஒழுக்கு மென்னக் காவிரி யோடிற் றன்றே.		  | 
	 
	3  | 
| 
	 1357  | 
 
தள்ளரும் பரவை ஏழுந் தரணியைச் சூழ்ந்து நின்ற 
உள்ளுறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப் 
பொள்ளெனப் புகுந்த தென்னப் புவியெலாம் பரவி ஆர்த்துத் 
தௌ�ளிதிற் கலங்கி நீத்தந் தௌ�கிலா தொழுகிற் றாமால்.		  | 
	 
	4  | 
| 
	 1358  | 
 
தெண்டிரைப் புணரி யெல்லாந் தினைத்துணை யாக வாரி 
உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டு மெல்லை 
அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தி லேந்துங் 
குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற் குவமை உண்டோ.		  | 
	 
	5  | 
| 
	 1359  | 
 
தொல்லையிற் குறியோன் வந்தான் துய்க்குமோ இன்னு மென்னா 
வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின் 
எல்லையிற் படர்ந்த தென்ன இலைசெறி பொதும்பர் ஈட்டம் 
ஒல்லையிற் பரித்து மேல்கொண் டோடிய தொலிகொள் நீத்தம்.  | 
	 
	6  | 
| 
	 1360  | 
 
சந்தமும் அகிலுஞ் சங்குந் தரளமுங் கவரி தானுஞ் 
சிந்துரத் தெயிறும் பொன்னும் மணிகளுந் திரைமேற் கொண்டு 
வந்திழி நதியின் தன்மை வருணன்இப் பொருள்க ளெல்லாம் 
இந்திரன் தன்பால் ஒச்ச ஏகுதல் போன்ற மாதோ.		  | 
	 
	7  | 
| 
	 1361  | 
 
வரையெனுந் தடம்பொற் றேரும் மதகரித் தொகையும் மாந்தர் 
நிரைகளுந் தரங்க மாவும் நெறிக்கொடு மகவான் தன்பால் 
விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க் கரசன் மீது 
பொரவிடு தானை வௌ�ளம் போவன போன்ற தன்றே.		  | 
	 
	8  | 
| 
	 1362  | 
 
ஆவதோர் இனைய வாற்றால் அலையினால் அகல்வான் முட்டிக் 
காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பாற் 
போவதோர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து நோற்குந் 
தாவறு வனத்திற் போதார் தண்டலை புகுந்த தன்றே.  | 
	 
	9  | 
| 
	 1363  | 
 
ஓடுநீர் நீத்தப் பொன்னி யொல்லையிற் காமர் காவில் 
பீடுற வருத லோடும் பேதுறு மகவான் காணா 
ஆடினான் நகைத்தான் எங்கோன் அருச்சனை முடிந்த தென்று 
பாடினான் முதல்வன் றாளைப் பரவினான் படர்ச்சி தீர்ந்தான்.  | 
	 
	10  | 
| 
	 1364  | 
 
சீரினை யகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர் 
ஊரினைக் கவர்ந்து தன்னோர் உயிருக்கும் இறுதி நாடுஞ் 
சூரனை வென்றால் என்னத் தொலைவிலா மதர்ப்பு மிக்கான் 
ஆரவன் உளத்திற் கொண்ட உவகையை அறைதற் பாலார்.  | 
	 
	11  | 
| 
	 1365  | 
 
பாடுறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவா னேபோல் 
வாடுறு கின்ற தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி 
ஆடுறு பசிநோ யுற்றோர் அரும்பெறல் அமிர்தம் வந்து 
கூடுற நுகர்ந்தால் என்னக் குளிர்ப்பொடு தளிர்த்த தன்னே.		  | 
	 
	12  | 
| 
	 1366  | 
 
வானிறை கின்ற கொண்மூ வார்துளி தலைஇய பின்றைக் 
கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றா லென்ன 
மேனியுறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதுந் 
தானிறை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா.  | 
	 
	13  | 
| 
	 1367  | 
 
வேறு 
வானில மளவிட வளர்ந்த புன்னைகள் 
ஆனவை முழுவதும் அரும்பு கின்றன 
தூநகை நித்திலத் தொடையல் மெய்யுடை 
நீனிற மாயவன் இலைஇய தொக்குமால்.				  | 
	 
	14  | 
| 
	 1368  | 
 
தண்ணுறு பாசடை தயங்கு புன்னைகள் 
கண்ணுறு வியன்சினை கவினப் பூத்தன 
எண்ணுறு தாரகை ஈண்டி மொய்த்திட 
எண்ணுற முகிலினம் விளங்கிற் றென்னவே.  | 
	 15  | 
| 
	 1369  | 
 
பண்படும் அளியினம் பயிலு றாதன 
சண்பக அணிமரந் தயங்கிப் பூத்தன 
எண்படு தபனியத் தியன்ற போதினை 
விண்படு தருக்கொடு மேவல் போன்றவே.  | 
	 16  | 
| 
	 1370  | 
 
புயற்பட லந்தொடும் புதுமென் பாடலம் 
வியற்பட மலர்ந்தபூ விழுமென் வண்டினம் 
அயற்பட வூதுவான் வயந்தக் கம்மியன் 
செயற்படு மணிச்சிறு சின்னம் போலுமால்.		  | 
	 
	17  | 
| 
	 1371  | 
 
விண்டொடர் மதிகதிர் மிளிருந் தாரகை 
கண்டிட வைகலுங் கணிப்பில் கண்ணடி 
மண்டல நிரைத்துமண் மாது வைத்தெனக் 
கொண்டலை யளவிய கோங்கு பூத்தவே.  | 
	 18  | 
| 
	 1372  | 
 
மாமலர்க் கொன்றையும் மணிமென் பூவையுந் 
தாமிரு புடையுறத் தளிர்த்த செய்யமா 
ஏமுறு மாலயன் இடையில் வந்தெழு 
தோமறு பரஞ்சுடர்த் தோற்றம் போன்றவே.  | 
	 19  | 
| 
	 1373  | 
 
ஆதவன் மீதுபோய் அசையுந் தாழைகள் 
மேதகு பாளைகள் மிசைதந் துற்றன 
பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய 
கோதறு நித்திலக் கோவை போன்றவை.				  | 
	 
	20  | 
| 
	 1374  | 
 
வச்சிர மேனிய வரைகொள் காட்சிய 
பச்சிளம் பூகம்வெண் பாளை கான்றன 
நச்சுறு சோலையா நங்கைக் கெண்ணிலார் 
எச்சமில் சாமரை இரட்ட ஏந்தல்போல்.		  | 
	 21  | 
| 
	 1375  | 
 
மேற்றிகழ் செங்கர வீர மானவை 
ஆற்றவுஞ் சினைதொறும் அரும்பு கின்றன 
நாற்றடம் புயமுடை நாதற் கிந்திரன் 
ஏற்றிய மணிச்சுட ரென்ன லாயதே.				  | 
	 
	22  | 
| 
	 1376  | 
 
அல்லிடை யனறியே அலர்ந்த மாலதி 
வல்லிகள் தருவெனும் மகிழ்நர் தங்களைப் 
புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா 
முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல்.		  | 
	 
	23  | 
| 
	 1377  | 
 
ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள் 
பாசடை யிடையிடை பரவு கின்றன 
தேசுறு தருநிழல் திருவில் துஞ்சிய 
வாசவன் விழிகளின் மல்கு கின்றவே.		  | 
	 24  | 
| 
	 1378  | 
 
தொல்லையின் முறைநெறி யொருவித் தோயமேல் 
வல்லையில் அங்கிகள் வந்துற் றாலென 
அல்லியுஞ் சேயன அரத்த ஆம்பலும் 
புல்லிய கிடங்கினிற் பொலிந்து பூத்தவே.		  | 
	 
	25  | 
| 
	 1379  | 
 
பாயிரும் புனற்கயம் பரந்த பாசடை 
ஆயின இடையிடை அவிழ்ந்த பங்கயச் 
சேயலர் வண்டினந் திளைப்பச் சேர்வன 
காயெரி புகையொடு கானம் புக்கபோல்.				  | 
	 
	26  | 
| 
	 1380  | 
 
எண்ணுமித் தருக்களுங் கொடியும் ஏனவுங் 
கண்ணுற மலர்வதும் அரும்புங் காட்சியும் 
வண்ணம தெற்றெனின் மாலைச் செக்கரும் 
விண்ணுறும் உடுக்களும் விரவிற் றொக்குமால்.		  | 
	 
	27  | 
| 
	 1381  | 
 
இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால் 
நந்தன வனமெலாம் நன்று பூத்தலும் 
அந்தநன் மலர்கொடே யாதிக் கன்பினால் 
முந்துறு பூசனை முயல முன்னினான்.		  | 
	 28  | 
| 
	 1382  | 
 
விடியல்வை கறை* தனின் மேவி வண்டுதேன் 
புடையுறு முன்னரே புரையி லாததோர் 
கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுதல் 
அடிகளில் விதிமுறை அருச்சித் தானரோ. 
( * விடியல்வைகறை - மிக விடியற் காலம். )  | 
	 
	26  | 
| 
	 1383  | 
 
அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை 
இப்படி அருச்சனை இயற்றி வைகலும் 
ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன் 
வைப்புறு சண்பக வனத்தின் வைகினான்.		  | 
	 30  | 
| 
	 1384  | 
 
அந்நாள் அதனில் அவுணர்க் கிறைஏவல் 
தன்னான் மிகவுந் தளர்ந்து சிலதேவர் 
எந்நாள்இப் புன்மை எமைநீங்கும் என்றிரங்கிப் 
பொன்னாடு விட்டுப் புவிதன்னிற் போந்தனரே.		  | 
	 
	1  | 
| 
	 1385  | 
 
தீந்துமிழின் வைப்பான தெக்கிண தேயநண்ணி 
மாந்தர்புகழ் காழி வனம்போந்து வானவர்தம் 
வேந்துதனைக் கண்டு விரைநாண் மலரடிக்கீழ்ப் 
போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார்.  | 
	 
	2  | 
| 
	 1386  | 
 
ஒன்றே தருமம் ஒழிந்து புவனமெலாஞ் 
சென்றே அடுகின்ற தியவுணர் தந்துடக்கில்  
அன்றே எமைவிட் டகன்றாய் உனக்கிதுவும் 
நன்றே எமையாளும் நாயகனும் நீயன்றோ.		  | 
	 3  | 
| 
	 1387  | 
 
கோட்டுக் களிற்றோடுங் கோளரியோ டும்புவியை 
வாட்டுற் றிடுஞ்சூர வல்லியத்தின் வன்சிறையில் 
ஈட்டுற்ற தேவர் எனும்பசுக்கள் தம்மையெலாங் 
காட்டிக் கொடுத்துக் கரந்ததென்கொல் காவலனே.		  | 
	 
	4  | 
| 
	 1388  | 
 
ஏனம் பசுமான் இரலை மரைபடுத்த 
ஊனும் வடியும் ஒலிகடலின் உள்ளபல 
மீனுஞ் சுமந்து விறலசுரர்க் கேவல்செய்து 
மானங் குலைந்து மறந்தோம் மறைகளுமே.		  | 
	 5  | 
| 
	 1389  | 
 
மையார் களத்தார் வரம்பெற்ற சூரனுக்குச் 
செய்யாத ஏவலேலாஞ் செய்தோம் நெறிநீதி 
எய்யாத மான மிவையெல்லாந் தானிழந்தோம் 
ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே.		  | 
	 6  | 
| 
	 1390  | 
 
முந்நாளுந் தந்தி முகத்தவுணன் ஏவல்செய்து 
பன்னாள் உழன்றோம் பரமர் அதுதீர்த்தார் 
பின்னாளுஞ் சூரன் பெயர்த்தும் எமைவருத்த 
இந்நாடி ரிந்தோம் இனித்தான் முடியாதே.		  | 
	 
	7  | 
| 
	 1391  | 
 
எந்நாளும் உன்னைப் புகலென் றிருந்தவியாந் 
துன்னா அவுணராற் சோர்ந்து துயருழப்ப 
உன்னா ருயிர்காத் தொளித்திங் கிருந்தனையால் 
மன்னா உனக்குத் தகுமோ வசையன்றோ.  | 
	 8  | 
| 
	 1392  | 
 
சூரன் முதலாச் சொலப்பட்ட வெவ்வசுரர் 
வீரங் குலைந்து விளிவதற்கும் இவ்வுலகில் 
ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள் 
தீரும் படிக்குஞ் செயலொன்று செய்வாயே.  | 
	 9  | 
| 
	 1393  | 
 
என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும் 
மன்னா கியமகவான் மாற்றம் அவைகேளா 
அன்னார் மனங்கொண்ட ஆகுலத்தைக் கண்டுநெடி 
துன்னா அயரா உயரா உரைக்கின்றான்.  | 
	 10  | 
| 
	 1394  | 
 
மாயை உதவ வருகின்ற வெஞ்சூரன் 
தீய பெருவேள்வி செய்யத் தொடங்குமன்றே 
போய நமதுரிமை பொன்னாடுந் தோற்றனமென் 
றோயு முணர்வால் உமக்கங் குரைத்திலனோ.		  | 
	 11  | 
| 
	 1395  | 
 
அற்றே மகஞ்செய் தமலன் தருவரங்கள் 
பெற்றே நமது பெரும்பதமுங் கைக்கொண்டு 
சற்றேனும் அன்பில்லாத் தானவர்கோன் தாழ்வான 
குற்றே வலைநம்பாற் கொண்டான் குவலயத்தே.		  | 
	 
	12  | 
| 
	 1396  | 
 
நீள்வா ரிதியின் நெடுமீன் பலசுமந்து 
தாழ்வாம் பணிபிறவுஞ் செய்துந் தளர்ந்துலகில் 
வாழ்வா மெனவே மதித்திருந்தோம் மற்றதன்றிச் 
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே.		  | 
	 
	13  | 
| 
	 1397  | 
 
என்னே அத்தீமை யெனவே வினவுங்காற் 
பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்குங் 
கொன்னே எனையுங் கொடுஞ்சிறையில் வைப்பதற்கு 
முன்னே நினைந்தான் முறியில்லாத் தீயோனே.		  | 
	 
	14  | 
| 
	 1398  | 
 
ஆன செயலுன்னி அனிகந் தனைநம்பால் 
வானுலகில் உய்ப்ப மதியால் அ�துணர்ந்து 
நானும் இவளும் நடுநடுங்கி அச்சுற்று 
மேனி கரந்து விரைந்துவிண்ணை நீங்கினமால்.		  | 
	 
	15  | 
| 
	 1399  | 
 
மீனும் வடியும் வியன்தசையுந் தான்சுமந்த 
ஈன மதுவன்றி ஈதோர் பழிசுமக்கின் 
மானம் அழிய வருமே அதுவன்றித் 
தீன முறுசிறையுந் தீராது வந்திடுமே.		  | 
	 16  | 
| 
	 1400  | 
 
வெய்யவர்தம் வன்சிறையின் வீழின் முடிவில்லா 
ஐயன் அடிகள் அருச்சித் தியாமெல்லாம் 
உய்ய அவுணர் உயிரிழப்ப மாதவத்தைச் 
செய்யும் நெறியுண்டோ வெனச்சிந்தை செய்தனனே.  | 
	 
	17  | 
| 
	 1401  | 
 
சிந்தை அதனில் இனைய செயலுன்னி 
அந்த மறுதுயரத் தாழும் நுமைவிட்டு 
வந்து புவியின் மறைந்துதவஞ் செய்துமுக்கன் 
எந்தை அடிகள் அருச்சித் திருந்தனனே.  | 
	 18  | 
| 
	 1402  | 
 
அல்லல் புரியும் அவுணர்பணி யால்வருந்தித் 
தொல்லையுள மேன்மையெலாந் தோற்றனமே மற்றினிநாம் 
எல்லவரும் வௌ�ளி மலைக்கேகி இறைவனுக்குச் 
சொல்லி நமது துயரகற்றிக் கொள்வோமே.  | 
	 19  | 
| 
	 1403  | 
 
வம்மின் எனவுரைப்ப வானோர் அதுகேளா 
வெம்மி னதுகண்ட வியன்கண் டகியெனவும் 
அம்மென் மயிலெனவும் ஆடி நகைசெய்து 
தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றலுற்றார்.		  | 
	 
	20  | 
| 
	 1404  | 
 
கோவுநீ எங்கள் குரவனுநீ தேசிகன்நீ 
தேவுநீ மேலாந் திருவுநீ செய்தவநீ 
ஆவிநீ மற்றை அறிவுநீ இன்பதுன்பம் 
யாவுநீ யாகில் எமக்கோர் குறையுண்டோ.		  | 
	 21  | 
| 
	 1405  | 
 
பார்த்துப் பணித்த பணிசெய்து நின்றன்னை 
ஏத்தித் திரிதல் எமக்குக் கடனாகும் 
நீத்துத் துயர நெறியுறுத்தி எம்மையென்றுங் 
காத்துப் புரத்தல் உனக்குக் கடன்ஐயா.				  | 
	 
	22  | 
| 
	 1406  | 
 
தேரா அவுணர் திறந்தன்னை முன்தடிந்தாய் 
சூரா தியருயிருங் கொள்ளுநெறி சூழ்கின்றாய் 
பாராள் பவர்க்கும் பலமுனிவர்க் குஞ்சுரர்க்கும் 
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்.				  | 
	 
	23  | 
| 
	 1407  | 
 
ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான் 
காதலாய் அத்தன் கயிலைக் கெமைக்கொண்டு 
போதுநீ யென்னப் புரந்தரனும் நன்றென்று 
கோதிலா உள்ளத் தொருசூழ்ச்சி கொண்டனனே.		  | 
	 
	24  | 
| 
	 1408  | 
 
ஆவ தொருகாலை அமரர்கோன் தானெழுந்து 
தேவர் தமைநோக்கிச் சிறிதிங் கிருத்திரென 
ஏவரையும் அங்கண் இருத்தியொரு தானேகிப் 
பாவை அயிராணி பாங்கர் அணுகினனே.		  | 
	 25  | 
| 
	 1409  | 
 
அன்னம் பொருவு நடையாள் அவன்வரலும் 
முன்னங் கெதிரா முறையாற் பலமுறையும் 
பொன்னங் கழலிணையைப் பூண்டு வணங்கியெழீஇ 
என்னிங்கொ ரெண்ணமுடன் ஏகிற் றிறையென்றான்.  | 
	 
	1  | 
| 
	 1410  | 
 
அம்மொழியைக் கேளா அரசன் உரைசெய்வான் 
வெம்மைபுரி சூரன் வியன்பணியா லேவருந்தி 
எம்மை யடைந்தார் இனையசில தேவர் 
தம்முன் இடர்பலவுஞ் சாற்றி இரங்கினரே.		  | 
	 
	2  | 
| 
	 1411  | 
 
அன்னார் மனங்கொண்ட ஆகுலமும் நந்துயரும் 
பொன்னார் சடைமுடியெம் புண்ணியற்குத் தாம்புகலின் 
இந்நாள் அவுணர்க் கிறுவாய் தனைப்புரிந்து 
தொன்னான் உரிமை யளிப்பன்எனுந் துணிவால்.		  | 
	 
	3  | 
| 
	 1412  | 
 
ஆகின்ற துன்பத் தழலாற் பதைபதைத்து 
வேகின்ற சிந்தை வியன்அமரர் தம்முடன்யான் 
பாகொன்று தீஞ்சொல் உமைபாகன் பணிவரைக்குப் 
போகின்றேன் இது புகலுதற்கு வந்தனனே.		  | 
	 4  | 
| 
	 1413  | 
 
என்னும் பொழுதில் இடருற் றிகல்வாளி 
தன்னங்கம் மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென 
அன்னம் பொருவு நடையாள் அயிராணி 
மன்னன் திருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே.  | 
	 5  | 
| 
	 1414  | 
 
வீழ்ந்தாள் தரிக்கரிதாம் வெய்ய துயர்க்கடலில் 
ஆழ்ந்தாள் தனதறிவும் அற்றாள் பிரியாது 
வாழ்ந்தாளென் செய்வாள் மகவான் அதுகண்டு  
தாழ்ந்தா குலத்தோ டெடுத்தான் தடக்கையால்.		  | 
	 
	6  | 
| 
	 1415  | 
 
ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத்தன் 
ஊருமிசை யேற்றி உணர்ச்சிவரும் பான்மையெலாஞ் 
சேரவொருங் காற்றச் சிறிதே தௌ�வுற்றாள் 
காரின் மலிகின்ற மின்போலுங் காட்சியினாள்.		  | 
	 
	7  | 
| 
	 1416  | 
 
சிந்தை மயக்கஞ் சிறிதகன்று தேற்றம்வர 
முந்தை இடர்வந்து முற்றுந் தனைச்சூழ்ந்த 
வந்த மடமான் அதுபோழ்தில் தன்னுள்ளம் 
நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள்.		  | 
	 8  | 
| 
	 1417  | 
 
பொன்னாடு விட்டுப் புவியின் வனத்திருந்து 
முன்னார் அருள்கொண் டுவப்புற்று மேவினனால் 
என்னா ருயிரே எனைநீ பிரிவாயேல 
பின்னர் துணையான் பிழைக்கும் நெறியுண்டோ.		  | 
	 
	9  | 
| 
	 1418  | 
 
வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும் 
மேகத் திறமும் வியன்மதியு மாவதுபோல் 
நாகத் துறைவோர்க்கு நாயகமே நீயலதென் 
சோகத்தை நீக்கித் துணையாவார் வேறுண்டோ.		  | 
	 
	10  | 
| 
	 1419  | 
 
அன்றி யுனைப்பிரிந்தும் ஆவிதனைத் தாங்கவல்லேன் 
என்றிடினும் யானொருத்தி யாருந் துணையில்லை 
ஒன்றுநெறி நீதி உணராத தீயவுணர் 
சென்றிடுவர் நாளும் அவர்கண்டால் தீங்கன்றோ.		  | 
	 
	11  | 
| 
	 1420  | 
 
நீடு புகழ்சேர் நிருதர்கோன் சூழ்ச்சியினால 
தேடரிய பொன்னுலகச் செல்வத்தை விட்டிந்தக் 
காடுதனில் வந்து கரந்து தவம்புரிந்து 
பாடுபடு மாறும் பழிக்கஞ்சி யேயன்றோ.		  | 
	 12  | 
| 
	 1421  | 
 
தீய அவுணர் திரிவர் அவர்சிறியர் 
மாயை பலபலவும் வல்லார் பவமல்லால் 
ஆய தருமம் அறியார் பழிக்கஞ்சார் 
நீயும் அ�துணராய் அன்றே நெடுந்தகையே.  | 
	 13  | 
| 
	 1422  | 
 
உன்னன் புடைய வொருமகனும் இங்கில்லை 
துன்னுஞ் சுரருமில்லை தொல்களிற்றின் வேந்துமில்லை 
பின்னிங் கொருமா தருமில்லை பெண்ணொருத்தி 
தன்னந் தனியிருக்க அஞ்சேனோ தக்கோனே.		  | 
	 14  | 
| 
	 1423  | 
 
பல்லா றொழுகிப் பவஞ்செய் அவுணரெனும் 
ஒல்லார் எனைக்காணின் ஓடிவந்து பற்றினர்போய் 
அல்லா தனபுரிவ ரானால் அனையபழி 
எல்லாமுன் பாலன்றி யார்கண்ணே சென்றிடுமே.		  | 
	 
	15  | 
| 
	 1424  | 
 
மன்னே இதுவோர் துணிவுரைப்பன் மன்னுயிர்கொண் 
டின்னே தமியேன் இரேன்உலகில் யாவரையும் 
முன்னே படைத்தளிக்கும் முக்கணர்தம் வெற்பினுக்குன் 
பின்னே வருவேன் பெயர்வா யெனவுரையா.		  | 
	 16  | 
| 
	 1425  | 
 
பின்றாழ் குழலி பெருந்துயரத் தோடெழுந்து 
நின்றாள் இறையுன்னி நேயத் தொடுநோக்கி 
நன்றால் உனது திறனென்று நாகரிறை 
சென்றார்வ மோடவளைப் புல்லியிது செப்புகின்றான்.  | 
	 
	17  | 
| 
	 1426  | 
 
வாராய் சசியே வருந்தேல் அமரருடன் 
காரார் களத்தோன் கயிலைக் கியான்போனால் 
ஆராய்ந்து நின்னை அளிப்பவர்ற் றாலன்றோ 
பேரார்வ மோடெனது பின்நீ வருவதுவே.				  | 
	 
	18  | 
| 
	 1427  | 
 
செய்ய சடைமேற் சிறந்தமதிக் கோடுபுனை 
துய்யவனும் வேலைத் துயின்றோனுஞ் சேர்ந்தளித்த 
ஐயன் எமக்கோர் அரணாகி யேயிருக்க 
நையல் முறையாமோ நங்காய் நவிலுதியால்.  | 
	 19  | 
| 
	 1428  | 
 
ஏவென்ற கண்மடவாய் ஈசனருள் அன்னோனை 
வாவென் றளியால் வழுத்திமனத் துன்னின்இங்கே 
மேவுங் கயிலையில்யான் மீண்டு வருந்துணையுங் 
காவென் றுனைஅவன்பாற் கையடையா நல்குவனால்.  | 
	 
	20  | 
| 
	 1429  | 
 
ஆற்றல் பெரிதுடைய ஐயனே நின்றன்னைப் 
போறறியருள் செய்யும் பொருந்துதியால் ஈண்டேன்று 
தேற்றுதலும் அன்னான் சிறப்பெவன்கொல் செப்புகெனக் 
கோற்றொடிகேள் என்னா அமரேசன் கூறுகின்றான்.		  | 
	 
	21  | 
| 
	 1430  | 
 
முன்னம் பரமன் அருளின்றி முகுந்த னாதி 
மன்னுஞ் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக் 
கன்னங் கரிய விடம்வந்துழிக் காரி னங்கள் 
துன்னும் பொழுதிற் குயில்போல் துணுக்குற் றிரிந்தார்.  | 
	 
	1  | 
| 
	 1431  | 
 
அண்ணற் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செந்தீ 
வண்ணத் தமலன் அடிபோற்ற வருந்தல் என்றே 
உண்ணற் கரிய பெருநஞ்சினை உண்டு காத்துக் 
கண்ணற்கும் ஏனை யவர்க்கும்மிவை கட்டு ரைப்பான்.		  | 
	 
	2  | 
| 
	 1432  | 
 
இன்னுங் கடைமின் அமுதம் மெழுமென்று கூற 
அந்நின் றவர்பாற் கடலின்கண் அடைந்து முன்போற் 
பின்னுங் கடைந்தார் இபமாமுகப் பிள்ளை தன்னை 
முன்னம் வழிபட் டிலர்வந்து முடிவ தோரார்.		  | 
	 
	3  | 
| 
	 1433  | 
 
என்னா யகற்கு வழியா டியற்றாத நீராற் 
கொன்னார் கடலின் நடுமத்தங் குலைந்து வீழ்ந்து 
பன்னாகர் வைகும் இடஞ்செல்லஅப் பான்மை நோக்கி 
அன்னானை அர்ச்சித் தனர்அச்சுத னாதி யானோர்.  | 
	 
	4  | 
| 
	 1434  | 
 
ஆரா தனைசெய்துழி மந்தர மாதி மைந்தன் 
பேரா அருளால் பிலம்நின்று பெயர்ந்து முன்போல் 
வாரா நிலைபெற் றிடலோடு மகிழ்ந்து போற்றிக் 
காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார்.		  | 
	 
	5  | 
| 
	 1435  | 
 
கடைகின்றுழிச் செம்மதி யாமெனக் காமர் செம்பொன் 
அடைகின்ற கும்பத் தெழுந்திட்ட தமுத மங்கண் 
மிடைகின்ற தொல்லைச் சுரர்தானவர் யாரும் வெ�கி 
உடைகின்ற வேலையென ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார்.  | 
	 
	6  | 
| 
	 1436  | 
 
எம்மால் இதுவந் துளதால் எமக்கேயி தென்றே 
தம்மா சையினாற் சுரர்தானவர் தம்மின் மாறாய்த் 
தெம்மா னமுடன் பொரவுன்னலுந் தீர்வு நோக்கி 
அம்மால் விரைவின் ஒருமோகினி ஆயி னானே.		  | 
	 
	7  | 
| 
	 1437  | 
 
மூலம் பிறந்த விடம்போல் அழன்மூண் டிடாமல் 
நீலம் பிறந்து பிறர்அச்சுற நேர்ந்தி டாமல் 
ஞாலம் பிறந்தோர் சுரர்தானவர் நச்ச ஆங்கோர் 
ஆலம் பிறந்த தெனமோகினி யாகி நின்றான்.		  | 
	 
	8  | 
| 
	 1438  | 
 
சேணார் உலகிற் புவிதன்னில் திசையி லெங்குங் 
காணாத வப்பெண் ணுருக்கண்டனர் காதல் கைமிக் 
கூணார் அமுதந் தனைவிட்டு முன்னொன்று கண்டோர் 
மாணா கியபல் பொருள்கண்டென வந்து சூழ்ந்தார்.  | 
	 
	9  | 
| 
	 1439  | 
 
மெய்த்தா மரையே முதலாய விசிக நான்கும் 
உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப் 
பித்தாய் உணர்வு பிழையாகிப் பெரிது மாலாய் 
அத்தா ருகமா முனிவோரினும் ஆர்வ மிக்கார்.		  | 
	 
	10  | 
| 
	 1440  | 
 
எண்ணா அவுணர் தொகையல்லதை எந்தை மாயம் 
உண்ணாடு வானோர் களும்பெண்மயல் உற்று நின்றார் 
மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் 
பெண்ணாசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும்.		  | 
	 
	11  | 
| 
	 1441  | 
 
பூண்டுற்ற கொங்கைப் பொலன்மோகினி யான புத்தேள் 
ஆண்டுற் றவர்தங் களைநோக்கி அமரை நீங்கும் 
ஈண்டுற் றனன்யான் அமுதும் முளதேது நீவிர் 
வேண்டுற்ற தும்பால் உறக்கொண்மின் விரைவின் என்றான்.  | 
	 
	12  | 
| 
	 1442  | 
 
மாலா னவன்அங் கதுகூற மனந்தி ரிந்து 
நோலா மையினால் இறக்கின்றவர் நோக்கி யெங்கள் 
பாலா வதுநீ யெனமுன்வரும் பான்மை நாடி 
மேலாம் அமுதே எமக்கென்றனர் விண்ணு ளோர்கள்.  | 
	 
	13  | 
| 
	 1443  | 
 
வானா டவர்நல் லமுதங்கொடு மாயை நீங்கிப் 
போனார் ஒருசார் அவரோடு பொருத தீயோர் 
தேனார் மொழிமோ கினியாகிய செங்கண் மாலை 
ஆனா விருப்பிற் கொடுபோயினர் ஆங்கொர் சாரில்.		  | 
	 
	14  | 
| 
	 1444  | 
 
கொண்டே கியதா னவர்தங்கள் குழுவை நோக்கித் 
தண்டேன் மலர்ப்பா யலின்என்னைத் தழுவ வல்லான் 
உண்டே இதனில் ஒருவீரன் உவனை இன்னங் 
கண்டேன் இலையென்றனன் பெண்ணுருக் கொண்ட கள்வன்.  | 
	 
	15  | 
| 
	 1445  | 
 
ஈறாம் அவுணர் பலரும்மிது கேட்டெ னக்கு 
மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன் 
வீறா கியவீ ரனும்யானென வீற்று வீற்றுக் 
கூறா எனையே புணரென்று குழீஇயி னாரே.		  | 
	 16  | 
| 
	 1446  | 
 
கொம்மைத் துணைமென் முலையண்ணலைக் கூடயாரும் 
வெம்மைப் படலால் இகல்கொண்டனர் வேறு வேறு 
தம்மிற் பொருது முடிந்தார் கிளைதம்மி லுற்ற 
செம்மைக் கனலால் முடிவுற்றிடுஞ் செய்கை யேபோல்.  | 
	 
	17  | 
| 
	 1447  | 
 
அன்னார் தொகையில் இருவோர்அரி மாயை யுன்னி 
என்னாம் இவரோ டிறக்கிறனம் என்று நீங்கித் 
தொன்னாள் உருவந் தனைமாற்றிச் சுரர்கள் போலாய்ப் 
பொன்னா டவர்தங் குழுவோடு புகுந்து நின்றார்.		  | 
	 
	18  | 
| 
	 1448  | 
 
மாண்டார் அவுணர் அதுநோக்கி வரம்பின் மாயம் 
பூண்டாரும் வெ�க மடமாதெனப் போந்த கள்வன் 
மீண்டான் அமரர் பலரும் விருப்புற்று மேவ 
ஈண்டாழி தன்னில் அமுதந்தனை ஈத லுற்றான்.		  | 
	 
	19  | 
| 
	 1449  | 
 
ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தி னூடு 
போயங் கிருந்த இருகள்வரும் பொற்பு மிக்க 
மாயன் பகிரும் அமிர்த்ந்தனை மந்தி ரத்தால் 
ஆயும் படிகொண் டிலர்வல்லையின் ஆர்த லுற்றார்.  | 
	 
	20  | 
| 
	 1450  | 
 
தண்டா மரைக்குப் பகைநண்பெனச சாரும் நீரார் 
கண்டார் புடையுற் றவரிங்கிவர் கள்வ ரேயாம் 
உண்டார் அமுதங் கடிதென் றுளத்துன்னி யங்கண் 
விண்டான் அவற்குக் குறிப்பால் விழிகாட்டி னரால்.  | 
	 
	21  | 
| 
	 1451  | 
 
காட்டுற் றிடலும் அரிநோக்கியிக் கள்வ ரேயோ 
வீட்டுற்ற வானோ ருடன்உண்குவ ரென்று தன்கை 
நீட்டுற் றிடுசட் டுவங்கொண்டு நிருதர் சென்னி 
வீட்டிச் சுரருக் கமுதூட்டி விருந்து செய்தான்.		  | 
	 
	22  | 
| 
	 1452  | 
 
அண்டத் தவர்முன் னருந்துற்ற அமுத மன்னார் 
கண்டத் திடையே வருமுன்னது கண்டு மாயன் 
துண்டித்த சென்னி யழிவற்ற துணிந்த யாக்கை 
முண்டத் துடனே துணிபட்டு முடிந்த வன்றே.		  | 
	 
	23  | 
| 
	 1453  | 
 
மாளாத சென்னி யுடைத்தானவர் மாண்பு நோக்கி 
நீளார் அமுதுண்டவர் விண்ணிடை நிற்ப ரென்னாத் 
தாளால் உலகம் அளந்தோன் அவர்தங் களுக்குக் 
கோளா நிலையை இறையோன் அருள்கொண்டு நல்க.  | 
	 24  | 
| 
	 1454  | 
 
புன்னாகம் நாக மணிவான் அடிபோற்றி நோற்றுச் 
செந்நாக மோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப் 
பின்னாக முன்னந் தமைக்காட்டிய பெற்றி யோரை 
அந்நாக மீது மறைப்பார் அமுதுண்ட கள்வர்.		  | 
	 
	25  | 
| 
	 1455  | 
 
வேறு 
கெழிய ராகுவுங் கேதுவு மேயென 
மொழிய நின்ற முதற்பெயர் தாங்கியே 
விழுமி தாகிய வெய்யவ னாதியாம் 
எழுவர் தம்மொ டிருவரும் ஈண்டினார்.		  | 
	 26  | 
| 
	 1456  | 
 
ஈது நிற்கமுன் இன்னமு தந்தனை 
ஆத ரத்தொ டயின்றவிண் ணோர்தொழ 
ஓத வேலை யொருபுடை யாகவே 
மாது ருக்கொண்ட மாதவன் வைகவே.		  | 
	 27  | 
| 
	 1457  | 
 
நால்வ கைப்பட நண்ணிய சத்தியுள் 
மாலும் ஆதலின் மற்றது காட்டுவான் 
ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறுங் 
கோல மெய்திக் குறுகினன் அவ்விடை.		  | 
	 28  | 
| 
	 1458  | 
 
தண்டு ழாய்முடி யான்தனி நாயகற் 
கண்டு வெ�கக் கறைமிடற் றெம்பிரான் 
உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ 
கொண்ட வேடம் இனிதென்று கூறினான்.		  | 
	 29  | 
| 
	 1459  | 
 
ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும் 
நாணி இவ்வுரு நல்கிய தன்மையாள் 
காணி யாயுனைக் காதலித் துற்றனள் 
பேணி நிற்பதெ னென்னைப் பெருமநீ.		  | 
	 30  | 
| 
	 1460  | 
 
ஆதி காலத் தயன்செயல் முற்றிட 
மாதை மேவிட வந்துனை வேண்டினங் 
காத லோவன்று காரண னாகையின் 
மீது சேர்தரும் வீரியன் அல்லையோ.		  | 
	 31  | 
| 
	 1461  | 
 
நெற்றி யங்கண் நிமல உனக்கிகல் 
பற்ற தில்லையெப் பான்மையர் கண்ணினும் 
அற்ற தாக என்னாகந் தழுவுவான் 
உற்ற காதலும் உண்மைய தன்றரோ.		  | 
	 32  | 
| 
	 1462  | 
 
என்ன காரணம் எண்ணிக்கொல் ஏகினை 
அன்ன பான்மை யறிகிலன் எம்பிரான் 
இன்ன தாடலை நீயல்ல தேவரே 
பின்னை நாடி யறிவுறும் பெற்றியோர்.		  | 
	 33  | 
| 
	 1463  | 
 
அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் 
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் 
முன்பு கேட்டது மன்று முதல்வநீ 
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ.  | 
	 34  | 
| 
	 1464  | 
 
என்று மாயன் இசைத்தலும் எம்பிரான் 
அன்று நீம் நமக்கொரு சத்திகாண் 
அன்று தாருகத் தந்தணர் பாங்குறச் 
சென்ற போழ்தினுஞ் சேயிழை யாயினாய்.  | 
	 35  | 
| 
	 1465  | 
 
முன்னை வேதன் முடிந்தனன் போதலும் 
உன்னொ டேவந் துவப்பொடு கூடினோம் 
பின்னர் இந்தப் பிரமனை யுந்தியால் 
அன்னை யாகி அளித்தனை அல்லையோ.		  | 
	 36  | 
| 
	 1466  | 
 
ஆகை யாலுன் அணிநலந் துய்த்திட 
ஓகை யால்இவண் உற்றனன் செல்கென 
மாகை யாரப் பிடிப்ப வருதலும் 
போகை யுன்னிப் பொருக்கென ஓடினான்.  | 
	 37  | 
| 
	 1467  | 
 
நாணி ஓடிய நாரண னைப்பிறை 
வேணி யண்ணல் விரைவுட னேகியே 
பாணி யாலவன் பாணியைப் பற்றினான் 
சேணி னின்று திசைமுகன் போற்றவே.		  | 
	 38  | 
| 
	 1468  | 
 
பற்றி யேகிப் படிமிசை நாவலாற் 
பெற்ற தீவிற் பெருங்கடற் சார்பினின் 
மற்று நேரில் வடதிசை வைப்பினில் 
உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான்.		  | 
	 39  | 
| 
	 1469  | 
 
நண்ணி யேதனி நாயகன் அவ்விடைப் 
பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன் 
உண்ணெ கிழ்ந்து மயக்குற் றுருகியே 
எண்ணில் இன்புறக் கூடினன் என்பவே.		  | 
	 40  | 
| 
	 1470  | 
 
மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும் 
ஏன்று கூடிய வெல்லையில் அன்னவர் 
கான்று மிர்ந்த புனல்கண்டகி யென 
ஆன்ற தோர்நதி யாகிஅ கன்றதே.		  | 
	 41  | 
| 
	 1471  | 
 
அந்த நீரின் அகம்புறம் ஆழிகள் 
தந்து வச்சிர தந்தி யெனப்படும் 
முந்து கீட முறைமுறை யாகவே 
வந்து தோன்றின மாழையின் வண்ணமாய்.		  | 
	 42  | 
| 
	 1472  | 
 
ஆய மண்ணில் அகங்கெழு பஞ்சர 
மேயெ னத்தந் திருந்து சிலபகல் 
மாயும் அவ்வுயிர் மாய்ந்தபிற் கூடுகள் 
தூய நேமிக் குறிகொடு தோன்றுமால்.		  | 
	 43  | 
| 
	 1473  | 
 
நீர்த்த ரங்க நிரல்பட வீசியே 
ஆர்த்தி ரங்கி அணைவுறு கண்டகித் 
தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள் 
ஈர்த்து வந்திடும் இம்பர்கொண் டெய்தவே.  | 
	 44  | 
| 
	 1474  | 
 
அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை 
இந்நி லத்தர்கொண் டேகி அகத்துறை 
பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே 
இன்ன மூர்த்தம் இ�தென நாடுவார்.		  | 
	 45  | 
| 
	 1475  | 
 
நாடி யேயவை நாரண னாகவே 
கூடும் அன்பிற் குவலயத் தேசிலர் 
தேடி அர்ச்சனை செய்வர் அதன்பெயர் 
கேடில் சானக் கிராமம் தென்பரால்.		  | 
	 46  | 
| 
	 1476  | 
 
மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே 
சால மேவு தனிநக ரேயிதன் 
மூல காரணம் ஆகையின் முந்தையோர் 
மேலை நாமம் அதற்கு விதித்தனர்.		  | 
	 47  | 
| 
	 1477  | 
 
இந்த வண்ணம் இருக்க முராரியும் 
அந்தி வண்ணத் தமலனு மாகியே 
முந்து கூடி முயங்கிய வெல்லையில் 
வந்த னன்னெமை வாழ்விக்கும் ஐயனே.  | 
	 48  | 
| 
	 1478  | 
 
மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ் 
செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய் 
உக்கி ரத்துடன் ஓர்மகன் சேர்தலும் 
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்.  | 
	 49  | 
| 
	 1479  | 
 
அத்த குந்திரு மைந்தற் கரிகர 
புத்தி ரன்எனும் நாமம் புனைந்துபின் 
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும் 
வைத்து மிக்க வரம்பல நல்கியே.		  | 
	 50  | 
| 
	 1480  | 
 
புவனம் ஈந்து புவனத் திறையென 
அவனை நல்கி அமரரும் மாதவர் 
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான் 
சிவன தின்னருள் செப்புதற் பாலதோ.		  | 
	 51  | 
| 
	 1481  | 
 
முச்ச கத்தை முழுதருள் மேனிகொண் 
டச்சு தன்றொழ அச்சுதன் போற்றிட 
மெச்சி யேயவ ருக்கு விடைகொடுத் 
தெச்ச மில்சிவன் ஏகினன் என்பவே.		  | 
	 52  | 
| 
	 1482  | 
 
நாய கன்செல நான்முகத் தோனைமுன் 
தாயெ னத்தருந் தாமரைக் கண்ணினான் 
சேய வைகுண்டஞ் சேர்ந்தனன் ஐயனும் 
போயி னான்றன் புவனத் தரசினில்.		  | 
	 53  | 
| 
	 1483  | 
 
அங்கண் மேவி அரிகர புத்திரன் 
சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மொடும் 
எங்கு மாகி இருந்தெவ் வுலகையுங் 
கங்கு லும்பகல் எல்லையுங் காப்பனால்.		  | 
	 54  | 
| 
	 1484  | 
 
மண்ண கத்தரும் வானவ ரும்மலர் 
அண்ண லுந்தினம் அர்ச்சிக்கும் நீர்மையான் 
கண்ண னும்புக ழப்படு காட்சியான் 
எண்ணின் அங்கவ னுக்கெதிர் இல்லையே.  | 
	 55  | 
| 
	 1485  | 
 
அன்ன நீர்மையன் காணென தன்பினால் 
உன்னை வந்திக் காத்தருள் உத்தமன் 
என்ன லோடும் இசைந்துநின் றாளரோ 
பொன்னி னாடு தணந்த புலோமசை.		  | 
	 56  | 
| 
	 1486  | 
 
வேறு 
இந்திரன் மங்கை இசைந்தது காணா 
நந்தமர் கையனும் நம்பனும் நல்கு 
மைந்தனை உன்னி வழுத்துத லோடும் 
அந்தமி லாவெம தையன் அறிந்தான்.		  | 
	 57  | 
| 
	 1487  | 
 
காருறழ் வெய்ய களிற்றிடை யாகிப் 
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப் 
பூரணை புட்கலை பூம்புற மேவ 
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்.		  | 
	 58  | 
| 
	 1488  | 
 
முன்னுற மேவலும் மூவுல கோர்க்கு 
மன்னவ னாகிய வாசவன் ஐயன் 
பொன்னடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப 
என்னிவண் வேண்டும் இயம்புதி யென்றான்.		  | 
	 
	59  | 
| 
	 1489  | 
 
கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை 
மாட்டுறு சூரன் வருத்துத லாற்பொன் 
நாட்டினை விட்டனன் நானிவ ளோடுங் 
காட்டுறு வேயென வேகர வுற்றே.		  | 
	 60  | 
| 
	 1490  | 
 
நோற்றிவண் மேவினன் நோதகும் வானோர் 
ஆற்றரி தாவவு னன்செயும் இன்னல் 
சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப் 
போற்றுதி யென்று புலம்பின ரன்றே.		  | 
	 61  | 
| 
	 1491  | 
 
தள்ளரும் வானவர் தம்மொடு முக்கண் 
வள்ளல் தனக்கெம் வரத்த முரைக்க 
வௌ�ளி மலைக்கு விரைந்துசெல் கின்றேன் 
எள்ளரி தாகிய இல்லினை வைத்தே.		  | 
	 62  | 
| 
	 1492  | 
 
தஞ்சமி லாது தனித்திவ் வனத்தே 
பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால் 
வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே 
அஞ்சினள் உன்றன் அடைக்கலம் ஐயா.  | 
	 63  | 
| 
	 1493  | 
 
ஆத்தன் அமர்ந்த அகன்கிரி நண்ணி 
வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும் 
பூத்திடு காமர் புலோமசை தன்னைக் 
காத்தருள் என்றிது கட்டுரை செய்ய.		  | 
	 64  | 
| 
	 1494  | 
 
மேதகு செண்டுள வீரன் இசைப்பான் 
ஏதமு றாதநின் ஏந்திழை தன்னைத் 
தீதடை யாது சிறப்பொடு காப்பன் 
நீதனி யென்று நினைந்திடல் கண்டாய். 	  | 
	 65  | 
| 
	 1495  | 
 
இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே 
அல்லுறழ் கண்டன் அருங்கயி லைக்குச் 
செல்லுதி யென்றருள் செய்து திரும்பித் 
தொல்லையெம மையனொர் சூழலின் உற்றான். 	  | 
	 66  | 
| 
	 1496  | 
 
வாளமர் நீந்தி வயந்தனின் மிக்க 
காளனெ னப்படு கட்டுரை யோனை 
ஆளுடை அண்ணல் அருட்கொடு நோக்கிக் 
கேளிவை யென்று கிளத்திடு கின்றான். 	  | 
	 67  | 
| 
	 1497  | 
 
மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப் 
போவது முன்னினன் பொன்னகர் மன்னன் 
தேவியி ருந்தனள் தீங்கு வராமே 
காவல் கொள்நீ யெனக் கற்பனை செய்தான்.  | 
	 68  |