| 
		 457
        | 
		 கங்குல்போந் 
		திடுதலுங் கணபணப பன்னகம் நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ் 
		சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத் துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் 
		பரிதிய. 
       
        | 
		 1  | 
    
      | 
		 458
        | 
		 வேறு இரவி 
		செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து மரபி னிற்புரி நாட்கடன் 
		முடித்துமன் றெய்தித் திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன் 
		நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நனைந்தான்.
      
        | 
		 2  | 
    
      | 
		 459
        | 
		 நினைதல் உற்றுழி 
		உளத்திடைப் பெருஞ்சினம் நீட இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் 
		யானே அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப் புனைவன் வாகையென் 
		ன்னினான் அழிவிலாப் புகழோன்.
      
        | 
		 3  | 
    
      | 
		 460
        | 
		 செங்கண் 
		வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி வெங்கண் ஒற்றிரில் அளப்பிலா� 
		தங்களை விளியா அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர் எங்க 
		ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான். 
      	 
        | 
		 4  | 
    
      | 
		 461
        | 
		 என்ற லுந்தொழு 
		தாயிர கோடியோர் யாண்டுஞ் சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத் 
		துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள் வென்றி கொண்டநூ றாயிர 
		வௌ�ளத்தின் மிக்கோர். 
       
        | 
		 5  | 
    
      | 
		 462
        | 
		 வேறு சூலமே 
		கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங் கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் 
		நாஞ்சில் பிண்டி பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி பீலிவல் 
		முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார். 
       
        | 
		 6  | 
    
      | 
		 463
        | 
		 எண்டகும் இனைய 
		வாற்றால் இலக்கம்வௌ� ளத்தி னோருந் திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் 
		சுற்றி யார்ப்ப விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக் 
		கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல். 
       
        | 
		 7  | 
    
      | 
		 464
        | 
		 தேக்கினன் 
		கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம் நோக்கினன் சிந்தை கொண்ட 
		நோன்மைசார் துயரம் யாவும் நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது 
		வென்றி ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான்.
      
        | 
		 8  | 
    
      | 
		 465
        | 
		 அழிந்திடு கின்ற 
		காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங் கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் 
		கேக முன்னிச் செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும் 
		இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன். 9
      
        | 
		 16  | 
    
      | 
		 466
        | 
		 எடுத்தனன் 
		சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட் கொடுத்திடு படைகள் யாவுங் 
		கொண்டனன் சுரத்திற் கோதை தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் 
		தோறும் அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.
      
        | 
		 10  | 
    
      | 
		 467
        | 
		 குந்தளச் 
		சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில் சுந்தரத் துணர்மென் தும்பை 
		தொடுத்திடு பிணையல் சேர்த்தி மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் 
		செய்யும் இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல். 
       
        | 
		 11  | 
    
      | 
		 468
        | 
		 பண்ணுலாம் 
		புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம் எண்ணிலாப் புரவி மான்தேர் 
		ஏமமாய்ப் பின்னர் ஏக அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல 
		விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான். 
       
        | 
		 12  | 
    
      | 
		 469
        | 
		 கோயிலின் எல்லை 
		நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற 
         வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக் காய்கதிர்த் தபனற் 
		கண்ட கலிவியன் உலக மென்ன ஆயிர நூறு வௌ�ளத் தவுணரும் புடைசூழ்ந் 
		தார்த்தார். 
       
        | 
		 13  | 
    
      | 
		 470
        | 
		 வேறு அன்ன 
		காலையில் அரிமுகன் சேய்அதி சூரன் துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் 
		தொல்லோன் என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி மன்னர் மன்னனை 
		அடைதலும் இனையன வகுப்பான். 
      	 
        | 
		 14  | 
    
      | 
		 471
        | 
		 திரைகொள் 
		வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர் கரையி லாவழி யுடைந்திடும் அன்னது 
		கடுப்பப் பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும் அரச ரில்வழி 
		நின்றிடா தன்னவை அழியும். 
       
        | 
		 15  | 
    
      | 
		 472
        | 
		 ஆத லால்இனி 
		நீர்இரு வீர்களும் அமரின் மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப் 
		போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர் ஈது நன்றென வணங்கியே ஏகினர் 
		இமைப்பில். 
       
        | 
		 16  | 
    
      | 
		 473
        | 
		 தந்த மான்தடந் 
		தேர்மிசை ஏறியே சமரில் கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர் வந்த 
		நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து முந்து தானையந் தலைவராய் ஏகினா� 
		முறையால். 
       
        | 
		 17  | 
    
      | 
		 474
        | 
		 ஆகும் எல்லையில் 
		அங்கது நோக்குறா அடுபோர் வாகை கொண்டநூ றாயிர வௌ�ளத்து மறவோ�� ஓகை 
		எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி 
         ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க. 
       
        | 
		 18  | 
    
      | 
		 475
        | 
		 வேறு 
		கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர் படா�ந்திடு கின்ற 
		காலைப் பருமணி வயிரத் தேர்மல் அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை 
		சுற்றவ விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான். 
       
        | 
		 19  | 
    
      | 
		 476
        | 
		 தொண்டகந் துடியே 
		பம்பை தூரியம் முருடு கோடு திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை 
		கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய் கொண்டதோர் பதலை சங்கம் 
		குடமுழா இயம்பிற றம்மா. 
       
        | 
		 20  | 
    
      | 
		 477
        | 
		 தட்டுடை 
		நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு சேண்போய் முட்டுறு கொடிகள் 
		ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர் கட்டுறு கழலின் ஆர்ப்பு 
		ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும் எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் 
		டெழுந்த அன்றே. 
       
        | 
		 21  | 
    
      | 
		 478
        | 
		 நீனிற 
		முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக் கானிறை பூழி ஈட்டங் ககனமேற் 
		செல்ல முன்னம் தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர் 
		மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன். 
       
        | 
		 22  | 
    
      | 
		 479
        | 
		 நேசமொ டென்பால் 
		வைகும் நெறியினார் தமக்கு வீடும் ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் 
		என்னை ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத் தூசிபார் 
		விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி. 
       
        | 
		 23  | 
    
      | 
		 480
        | 
		 கன்னிறை அழித்த 
		மொய்ம்பிற் கார்கெழும் அவுண வௌ�ளம் துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் 
		படலைச் செய்கை என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும் பொன்னுல 
		கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே. 
       
        | 
		 24  | 
    
      | 
		 481
        | 
		 கண்ணகல் 
		தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும் நண்ணிய கொடிகள் வான்போய் 
		நளிர்புனற் கங்கை நக்கி மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின் 
		அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ. 
       
        | 
		 25  | 
    
      | 
		 482
        | 
		 திங்கள்வெண் 
		குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப் பங்கய மலர்ந்த தன்ன 
		பருமணிக் கவிகை முற்றுந் தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு 
		மாற்றி எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா. 
       
        | 
		 26  | 
    
      | 
		 483
        | 
		 வேறு ஆனவியல் 
		பெய்தஅவு ணப்படைக ளோடும் வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத் தானதுதெ 
		ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக் கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான். 
       
        | 
		 27  | 
    
      | 
		 484
        | 
		 அன்றுபுரி 
		வேள்வியிடை ஆதியருள் செய்த துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன் 
		இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே சென்றவனை வென்றெமது சீர்அருளு 
		கென்றான். 
       
        | 
		 28  | 
    
      | 
		 485
        | 
		 ஆம்பரிசு கூறஅவ 
		னுக்கருள் புரிந்தே ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப் 
		பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு 
		கென்றான். 
       
        | 
		 29  | 
    
      | 
		 486
        | 
		 என்றிடலும் 
		நன்றென எழுந்துலவை அண்ணல் குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப 
		வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான் மன்றல்மலா� சிந்திஅயன் மாலொடு 
		வழுத்த. 
       
        | 
		 30  | 
    
      | 
		 487
        | 
		 செழுந்தருண 
		மேதகைய தோன்மிசை வானோர் தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக் 
		கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர் எழுந்தனர் தெழித்தனர் 
		இருங்கடலும் அஞ்ச. 
       
        | 
		 31  | 
    
      | 
		 488
        | 
		 நாட்டமொரு 
		மூன்றுடைய நாதனருள் மைந்தன் வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை 
		வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக் கேட்டனிக பூதர்கள் 
		கிளர்ந்துபடர் கின்றார். 
       
        | 
		 32  | 
    
      | 
		 489
        | 
		 பாரிடர்க 
		ளாய்அறுமு கற்பரவு கின்ற பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர் 
		பாரிடர்பு ��ந்தனர் பரிக்குமெனை யென்னாப் பாரிடம்விண் ணோடுபகர் 
		தற்கெழுதல் போலும். 
       
        | 
		 33  | 
    
      | 
		 490
        | 
		 தக்கையொ 
		டுடுக்கைதுடி சல்லரி தடாரி தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி 
		மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல் கொக்கரை இயம்பினர்கள் கோடிகண 
		நாதர். 
       
        | 
		 34  | 
    
      | 
		 491
        | 
		 நாடுதவ நாரதனும் 
		நல்லுவணர் தாமும் கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப் பாடினர்கு 
		மாரன்அடி பன்முறை பணிந்தே ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும். 
       
        | 
		 35  | 
    
      | 
		 492
        | 
		 சண்முகன 
		தேவல்கொடு தாவில்இளை யோனும் எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின்  
		வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித் திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை 
		சென்றார். 
       
        | 
		 36  | 
    
      | 
		 493
        | 
		 மொய்ம்மலி 
		படைத்தலைவர் முந்தியுறு தானை இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன் 
		செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப் பொம்மலுறு தானவர்கள் போர்முனை 
		அடைந்தான். 
       
        | 
		 37  | 
    
      | 
		 494
        | 
		 அடைந்தபொழு 
		திற்புவியும் அந்தரமு மாகி மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த 
		தொடா�ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர் படர்ந்துபுடை சுற்றியிடு 
		பான்மையது போல. 
       
        | 
		 38  | 
    
      | 
		 495
        | 
		 வேறு 
		வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள் கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு 
		தானவா� தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர் விளைந்தது பெருஞ்சமர் 
		விண்ட தண்டமே. 
       
        | 
		 39  | 
    
      | 
		 496
        | 
		 மாச்சினை 
		மரங்களும் வரையுந் தண்டமும் தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும் 
		மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும் ஓச்சினர் பூதர்கள் ஒன்ன 
		லார்கள்மேல். 
       
        | 
		 40  | 
    
      | 
		 497
        | 
		 மெய்ப்படும் 
		அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ் அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல் 
		முப்புகா இலைப்படை முசலம் முற்கரம் கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை. 
       
        | 
		 41  | 
    
      | 
		 498
        | 
		 பற்றுவர் 
		கரிகளைப் பரியி னங்களை எற்றுவர் பா��தனில் எறிவர் மாதிரஞ் சுற்றுவர் 
		விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென முற்றுடல் எருத்தினை முரித்துச் 
		சிந்துவார். 
       
        | 
		 42  | 
    
      | 
		 499
        | 
		 இரதமொ ராயிரம் 
		எடுத்துச் செங்கையில் பொருகளி ராயிரம் புரள மோதுவர் கரிகளொ ராயிரங் 
		கரங்கொண் டேற்றியே பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார். 
       
        | 
		 43  | 
    
      | 
		 500
        | 
		 பாய்பரி யாயிரப் 
		பத்துப் பாணிகொண் டாயிர கோடியாம் அவுணர் தங்களைச் சேயிரு நிலத்திடைச் 
		சிதையச் சிந்துவார் காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே. 
       
        | 
		 44  | 
    
      | 
		 501
        | 
		 குரங்குளைப் 
		புரவியர் குஞ்ச ரத்தினர் இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர் 
		வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச் சரங்களில் பிறவினில் தடிதல் 
		மேயினார். 
       
        | 
		 45  | 
    
      | 
		 502
        | 
		 மலைதனைச் 
		சிந்துவர் மறங்கொள் பூதர்தாள் நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர் 
		கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத்  தலைதனைச் சிந்துவர் தறுகட் 
		டானவர். 
      	 
        | 
		 46  | 
    
      | 
		 503
        | 
		 இவ்வகை மாறுகொண் 
		டிகல்செய் கின்றுழித் தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள்  அவ்விடை 
		ஏன்றுநின் றமர்இ யற்றுழி வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே. 
       
        | 
		 47  | 
    
      | 
		 504
        | 
		 பொன்றிகழ 
		படையொடு புவியும் வானுமாய் நின்றிடும் அவுணா�கள் நீடு தொல்பிணக் 
		குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச் சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார். 
       
        | 
		 48  | 
    
      | 
		 505
        | 
		 நீடிய வேற்படை 
		நிமலன் காணுற வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற் கூடுவ திலையெனக் 
		குனிக்கு மாறுபோல் ஆடிய உடற்குறை அனந்த கோடியே. 
       
        | 
		 49  | 
    
      | 
		 506
        | 
		 வேறு மானப் 
		படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும் ஏனைப் படையும் முடிவுற் 
		றிடவே இவ்வா றிகல்செய்யுங் கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் 
		தனைநோக்கித் தானை தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான். 
       
        | 
		 50  | 
    
      | 
		 507
        | 
		 தேரா யிரமா 
		யிரமங் கொருபாற் சேமத் தொடுசெல்லக் காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் 
		இமைசார ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே ஓரா 
		யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான். 
       
        | 
		 51  | 
    
      | 
		 508
        | 
		 வா��வில் லதனை 
		விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச் சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் 
		துணிசெய் தனன்நிற்ப ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் 
		புரிகின்றான் போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர். 
       
        | 
		 52  | 
    
      | 
		 509
        | 
		 ஓதக் கடல்போல் 
		அலமந் தலமந் துலையா இகல்செய்யும் பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் 
		புகைதீ யுமிழ்கண்ணான் மேதக் கசலந் தரனா�� உடலம் வீழும் படிகீண்ட 
		சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன்.
      
        | 
		 53  | 
    
      | 
		 510
        | 
		 எண்டா னவருக் 
		கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு கண்டான் முனியா விரைவில் படர்வான் 
		காலன் திறல்கொள்ளும் தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச 
		விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார்.
      
        | 
		 54  | 
    
      | 
		 511
        | 
		 மாறா கியஉக் 
		கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில் கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா 
		வருகின்றான் பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா நூறா 
		யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான். 
       
        | 
		 55  | 
    
      | 
		 512
        | 
		 வெய்தாம் 
		அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சோ� அதிசூரன் எய்தான் அதுமற் றவன்மேற் 
		படவே எருவைப் பெருநீத்தம் எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் 
		தொடுசெற்றஞ் செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.
      
        | 
		 56  | 
    
      | 
		 513
        | 
		 அதிர்பொற் 
		கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர் பிதிர்பட் டிடலும் புவிமேற் 
		படர்தல் பிழையா மெனவுன்னா உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் 
		மிசைநீலக் கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான். 
       
        | 
		 57  | 
    
      | 
		 514
        | 
		 வேறு பாயும் 
		வேலைஅப் பல்மணித் தேரினை ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள் மாயும் 
		வண்ணம றம்புரி உக்கிரன் சீய மாமெனச் சென்றுதைத் தானரோ. 
       
        | 
		 58  | 
    
      | 
		 515
        | 
		 உதைக்க வெய்யவன் 
		ஒண்பரி பாரிடைப் பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே சிதைப்பன் 
		இந்தச் சிறியனை என்றுமெய் புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான். 
       
        | 
		 59  | 
    
      | 
		 516
        | 
		 தூண்டு கின்ற் 
		சுடர்க்கணை யாவையும் ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக் காண்ட லுங்கதை 
		கைக்கொடவ் வுக்கிரன் மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே. 
       
        | 
		 60  | 
    
      | 
		 517
        | 
		 வேறொர் தேரிடை 
		வெய்தென எய்தியே ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ மாறி தெய்வத மாப்படை 
		தொட்டுனை ஈறு காண்பன் இறந்தனை நீயெனா. 
       
        | 
		 61  | 
    
      | 
		 518
        | 
		 முன்னு பூசை 
		முதலிய யாவையும்  முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின் வன்னி மாப்படை 
		வாங்கி வணங்கியே மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான். 
       
        | 
		 62  | 
    
      | 
		 519
        | 
		 ஆசை தோறும் 
		அழல்சிந்த மாற்றலன் வீசு வெம்படை வீரத்தை நோக்கியே ஈசன் மைந்தன் 
		இணைமலர்த் தாள்களை நேச மோடு நினைந்தனன் போற்றினான். 
       
        | 
		 63  | 
    
      | 
		 520
        | 
		 எவ்வெ வர்க்கும் 
		இறையவ னாகியோ் அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன் செவ்வி திற்செலுந் 
		தீச்சரம் பற்றியே கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட. 
       
        | 
		 64  | 
    
      | 
		 521
        | 
		 நுங்கு வான்றனை 
		நோக்கி அரிமுகன்  துங்க மாமகன் தொல்புனல் மாப்படை பொங்கு சண்டப் 
		பொருபடை ஏவலும் அங்க வற்றையும் பற்றி அருந்தினான். 
       
        | 
		 65  | 
    
      | 
		 522
        | 
		 காற்றின் 
		வெம்படை ஏவினன் கைதவன் ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான் தேற்று 
		கின்றுழிச் செய்தவம் அன்றியே ஏற்ற மான இரும்பொருள் யாவதோ. 
       
        | 
		 66  | 
    
      | 
		 523
        | 
		 மற்றும் அவ்வதி 
		சூரன் மலரயன் ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன் பற்றி நுங்கவப் 
		பங்கயன் தாதைபால் பெற்றி ருந்த பெரும்படை ஏவினான். 
       
        | 
		 67  | 
    
      | 
		 524
        | 
		 ஒய்யெ னச்சென் 
		றுருகெழு நாரணன் பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங் கையில வாங்கிக் 
		கதுமென வாய்க்கொளா வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே. 
       
        | 
		 68  | 
    
      | 
		 525
        | 
		 ஆன காலை 
		அரிமுகன் காதலன் யானி னிச்செய் இயற்கையென் னேயிவன் தானவ் வீசன்கொல் 
		கண்ணன்கொல் தாமரை மேனி லாவிய வேதன்கொ லோவென்றான். 
       
        | 
		 69  | 
    
      | 
		 526
        | 
		 மூவ ராகிய 
		மூர்த்திகள் அல்லதை ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார் ஆவ னாவன் 
		அவர்க்குள் இவனெனாத் தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான். 
       
        | 
		 70  | 
    
      | 
		 527
        | 
		 சீற்றங் கொண்ட 
		அவுணர் திரைக்கடல்  தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன் ஏற்றங் 
		கண்டுழி என்செய்தும் என்றனர் கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார். 
       
        | 
		 71  | 
    
      | 
		 528
        | 
		 அண்ணல் வாசவ 
		னாதிய ராகிய எண்ணில் வானவர் யாவரும் இச்செயல் கண்ணு றாஇகல் கண்டருள் 
		நான்முகப்  பண்ண வன்முன் பணிந்திது கூறுவார். 
       
        | 
		 72  | 
    
      | 
		 529
        | 
		 எங்க ளால்வரும் 
		எண்ணில் பெரும்படை செங்க ணான்படை தீயநின் மாப்படை அங்கி யாவும் 
		அணுகஇப் பூதா�கோன் நுங்கு மாறென் நுவலுதி என்னவே. 
       
        | 
		 73  | 
    
      | 
		 530
        | 
		 இந்தி ராதியர் 
		கேண்மின்கள் ஈங்கிவன் அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான் கந்தன் எந்தை 
		கழலிணை போற்றியே வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான். 
       
        | 
		 74  | 
    
      | 
		 531
        | 
		 எம்மை யாளுடை 
		ஈசன் அருள்பெறுஞ் செம்மை யானவன் செம்பொற் சிலம்படி மும்மை யுந்தொழு 
		முத்திபெற் றான்இவன் எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான். 
       
        | 
		 75  | 
    
      | 
		 532
        | 
		 மைக்க ருங்கடல் 
		வண்ணன்முன் ஏவிய சக்க ரம்நுக ருந்தவத் தோனினும் மிக்க ஆற்றலன் 
		வெற்றியின் மேலையான் உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான். 
       
        | 
		 76  | 
    
      | 
		 533
        | 
		 பண்டு நாமருள் 
		பல்படை யாவையும் உண்ட தோவியப் பொல்லையில எல்லையில் அண்ட முஞ்சிதைத் 
		தாக்குவன் ஈங்கிவன் கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ. 
       
        | 
		 77  | 
    
      | 
		 534
        | 
		 என்ன நான்முகன் 
		எண்ணி இயம்பலும் அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந் துன்னு சென்னி 
		துளக்கிப் பெருந்திறல் இன்னு மாக இவற்கென் றியம்பினார். 
       
        | 
		 78  | 
    
      | 
		 535
        | 
		 வேறு வான 
		மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர் சேனை காவலன் பூதனை நோக்கிநிற் 
		சிதைப்பல் ஊன மாகிய படையென உன்னலை உமைபால் ஞான நாயகன் படைதொடு வேனென 
		நவின்றான். 
       
        | 
		 79  | 
    
      | 
		 536
        | 
		 மந்தி ரந்தனிற் 
		பூசனை முதலிய வகுத்துச் சிந்தை மேலுறு வௌ�யோ டரன்படை செலுத்த அந்த 
		மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும் எந்தை கொண்டதோ ருருவெனத் 
		தோன்றிய திமைப்பில். 
       
        | 
		 80  | 
    
      | 
		 537
        | 
		 நஞ்சும் ஆரழல் 
		நாகமும் நடுவன துருவும் விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும் 
		எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும்  அஞ்சி டும்படி நடந்ததால் 
		அரன்படை யதுவே. 
       
        | 
		 81  | 
    
      | 
		 538
        | 
		 ஈசன் மாப்படை 
		வருதலும் உக்கிரன் என்னும் ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப் 
		பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி நேச மோடுகை தொழுதரன் பொன்னடி 
		நினைந்தான். 
       
        | 
		 82  | 
    
      | 
		 539
        | 
		 ஆண்டை உக்கிரன் 
		நிற்றலும் அஞ்சலி புரிவான் மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான் 
		ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் 
		விரைவில். 
      	 
        | 
		 83  | 
    
      | 
		 540
        | 
		 அண்ண லம்படை 
		துறந்தவர் மேல்விடின் அவர்பால் நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க 
		விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூ�� பண்ண வன்றனை அடைந்ததாங் 
		கவனருள் படையே. 84
      
        | 
		 16  | 
    
      | 
		 541
        | 
		 ஆன பெற்றிகண் 
		டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச் சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் 
		சிறந்தார்  வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம் ஏனை வீரர்கள் 
		விழிபொழி தாரைகாண் றிரிந்தார். 
       
        | 
		 85  | 
    
      | 
		 542
        | 
		 நீங்கு 
		கின்றதோர் தானவர் குழுவினை நீவிர் ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் 
		இழிந்து பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன் வீங்கு தோளிடை 
		எற்றினன் உக்கிரன் வெகுண்டான். 
       
        | 
		 86  | 
    
      | 
		 543
        | 
		 எற்று தண்டினை 
		அங்கையால் உக்கிரன் என்போன் பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத் 
		தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான் மற்ற வன்றன துயிர்கொடு 
		போயினன் மறலி. 
      	 
        | 
		 87  | 
    
      | 
		 544
        | 
		 துஞ்சி வீழ்அதி 
		சூரனை நோக்கியே துகடீர் மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும் நஞ்சு 
		மாமெனக் கொதித்தனன் அழலெழு நகையா விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் 
		விரைவின். 
       
        | 
		 88  | 
    
      | 
		 545
        | 
		 கடிது சென்றசு 
		ரேந்திரன் இந்திரன் கரத்தின் நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் 
		நிமிர்ந்த கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப் படியும் 
		வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப. 
       
        | 
		 89  | 
    
      | 
		 546
        | 
		 பூதர் அங்கது 
		நோக்கியே தண்டமும் பொருப்பும் பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன் 
		மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச் சோதி வெங்கணை இறுதிநாள் 
		முகிலெனச் சொரிந்தான். 
       
        | 
		 90  | 
    
      | 
		 547
        | 
		 வடிகொள் வார்ணை 
		விடுத்தலும் பூதர்கள் வலிதின் விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி 
		முடியுங் கைகளும் ஆகமும முகத்தொடு மொய்ம்பும் அடியுஞ் சோ��நீர் கான்றிட 
		அழுந்திய அவர்பால். 
      	 
        | 
		 91  | 
    
      | 
		 548
        | 
		 மற்றும் வெங்கணை 
		உலப்பில தூண்டலும் மண்மேல் அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும் 
		இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக் கொற்ற வீரா�ல் கனகன்என் 
		பவன்எதிர் கொண்டான். 
      	 
        | 
		 92  | 
    
      | 
		 549
        | 
		 எதிர தாய்வரு 
		கனகன்மேல் தாரகன் ஈந்த அதிரும் வார்கழல் அன்னலோ�� வடிக்கணை அழுத்த 
		உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான் கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் 
		கடிதின். 
       
        | 
		 93  | 
    
      | 
		 550
        | 
		 பாகன் தன்னுயிர் 
		உலந்திட உதைத்துவெம் பனைக்கை நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக் 
		காகம் போலவௌ� ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர் மேகந் தாரணி மிசைஇழிந் 
		தாலென மீண்டான். 
      	 
        | 
		 94  | 
    
      | 
		 551
        | 
		 இழிந்து மால்வரை 
		ஒன்றுகீண் டசுரரிந் தினாங் கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் 
		கரத்தின் அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக் குழிந்த 
		கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான். 
       
        | 
		 95  | 
    
      | 
		 552
        | 
		 குனித்து 
		நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித் தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி 
		சாய்த்துப் புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள் 
		பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி. 
       
        | 
		 96  | 
    
      | 
		 553
        | 
		 பகழி ஆயிரம் 
		படுதலும் ஆடகன் பையுள்  நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப் 
		புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத அகழு மால்வரை ஒன்றெறிந் 
		துன்மத்தன் ஆர்த்தான். 
       
        | 
		 97  | 
    
      | 
		 554
        | 
		 அவன்எ 
		றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக் கவன வெம்பரி யாயின உலந்தன 
		காணாப் பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான் புவனம் உண்ணிய 
		நின்றதோர் கடவுள போல்வான். 
       
        | 
		 98  | 
    
      | 
		 555
        | 
		 முந்து வெங்கணை 
		உலப்பில தூண்டலும் முந்நீர் செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் 
		செறிய வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே மந்தன் என்பவன் 
		தாரகன் புதல்வன்நோ வந்தான். 
       
        | 
		 99  | 
    
      | 
		 556
        | 
		 வருத லோடும்ஆங் 
		கவன்மிசை ஐயிரு வாளி குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய் பரிதி 
		மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக்  கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது 
		கண்டான். 
       
        | 
		 100  | 
    
      | 
		 557
        | 
		 சென்று 
		மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக் குன்று மீண்டுமற் றவன்புடை 
		போயது கொடியோன் ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான் நின்று மந்தன் 
		அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான். 
       
        | 
		 101  | 
    
      | 
		 558
        | 
		 எடுத்து மால்வரை 
		ஒன்றவன் உரத்தின்நேர் எறியத் தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் 
		தரியார் விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித் தொடுத்து நூறுகோல் 
		அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.
      
        | 
		 102  | 
    
      | 
		 559
        | 
		 ஒழிந்த சாரதத் 
		தலைவர்க ளியாவரும் உடன்றே அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள் 
		பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில் கழிந்த துன்பொடும் இலக்கரில் 
		தண்டகன் கண்டான். 
       
        | 
		 103  | 
    
      | 
		 560
        | 
		 தனது கார்முகம் 
		வாங்கியே தண்டகப் பெயரோன் முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின் 
		நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி  மனமவெ குண்டுபின் 
		தன்பெருஞ் சிலையினை வளைத்தான்.
      
        | 
		 104  | 
    
      | 
		 561
        | 
		 வளைத்து நாலிரண் 
		டம்பினைத் தண்டக மறவோன் குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி 
		இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன் கிளத்து சோமுகன் தாரகன் 
		மகன்எதிர் கிடைத்தான். 
       
        | 
		 105  | 
    
      | 
		 562
        | 
		 எதிர்பு 
		குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் 
		அழுத்தலுங் கவலா அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம் நுதிகொள் 
		வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில். 
       
        | 
		 106  | 
    
      | 
		 563
        | 
		 பல்ல வங்களா 
		யிரமும்அத் தாரகன் பாலன் சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப 
		மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை ஒல்லை இங்கிவன் உயிரினை 
		உண்கென உய்த்தான். 
       
        | 
		 107  | 
    
      | 
		 564
        | 
		 உய்த்த வேல்அவன் 
		அகலமேற் படுதலும் முயங்கி எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப 
		நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால் ஒத்த வன்மையன் விசயன்என் 
		பவன்கடி துற்றான். 
      	 
        | 
		 108  | 
    
      | 
		 565
        | 
		 விசயன் ஆங்கொரு 
		கொடுமரம் வாங்கியே வெகுண்டு நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா 
		அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை இசையும் வில்லொடு நாரியைத் 
		துணிபட இறுத்தான். 
      	 
        | 
		 109  | 
    
      | 
		 566
        | 
		 முற்று நூலுணர் 
		பாகுயிர் உலத்தலும் முனியா இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக் 
		கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு பொற்றை அன்னதன் தேர்விடு 
		வலவனின் பொலிந்தான். 
      	 
        | 
		 110  | 
    
      | 
		 567
        | 
		 தகுவர் கோன்ஒரு 
		வலவனை நிறுவியோர் தண்டம் இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப் 
		புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன் மிகவும் எல்லையில் 
		சரங்களைத் தூண்டினன் விடுத்தான். 
       
        | 
		 111  | 
    
      | 
		 568
        | 
		 தொட்ட தொட்டன 
		கணையெலாந் துகள்படத் தொலைத்து மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து 
		பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து விட்ட வில்லொடு குருதியுந் 
		தானுமாய் வீழ்ந்தான். 
       
        | 
		 112  | 
    
      | 
		 569
        | 
		 விழுந்த 
		காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு 
		பொருதே அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண் டுழந்த துன்பொடு 
		வீரமொய்ம் பினன்விரைந் துற்றான். 
       
        | 
		 113  | 
    
      | 
		 570
        | 
		 வீர வாகுவேள் 
		இணையடி போற்றியே வெகுண்டோர் கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி 
		யாரும் வானவர் வியபபுற அவுணர்கள் அயரத் தார காசுரன் மதலையை மறைத்தனன் 
		சரத்தால். 
       
        | 
		 114  | 
    
      | 
		 571
        | 
		 மறைப்ப 
		மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன் றிற்க டுஞ்சிலை ஒன்றினை 
		வளைத்தவன் மிசையே பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும் உறைத்த 
		செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார். 
       
        | 
		 115  | 
    
      | 
		 571
        | 
		 தார கத்திற 
		லான்மகன் தூண்டியேழ் சரத்தால் சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் 
		துணிப்ப வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால் கூர யிற்கணை 
		ஆயிரம் விடுத்தனன் குறியால். 
      	 
        | 
		 116  | 
    
      | 
		 573
        | 
		 ஏகும் வார்கணை 
		தாரகன் மகன்சிலை இறுத்துப் பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப 
		வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன் போக லோடுமற் றன்னது கண்டனர் 
		புலவோர். 
       
        | 
		 117  | 
    
      | 
		 574
        | 
		 வெருவ ரப்பொருந் 
		தாரகன் மதலையை வீரன் பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார் 
		அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன் கா�த ருஞ்சுதன் சிம்புளின் 
		சுதனிவன் கழறின். 
       
        | 
		 118  | 
    
      | 
		 575
        | 
		 மாறொர் தேரிடைப் 
		பாய்ந்தவன் ஒருதனு வளைத்து நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச் 
		சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன் ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் 
		றார்த்தான். 
       
        | 
		 119  | 
    
      | 
		 576
        | 
		 உறைக ழித்துவாள் 
		உருவியே உம்பரிற் படர்ந்து சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் 
		தேர்மேல் குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற் றிறைக 
		ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான். 
       
        | 
		 120  | 
    
      | 
		 577
        | 
		 எறிந்த காலையில் 
		இற்றதோர் கைத்தலம் இறலுங் குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி 
		செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே உறைந்த தோர்கரும் பணியழல் 
		மணியுமிழ்ந் தொப்ப. 
       
        | 
		 121  | 
    
      | 
		 578
        | 
		 கைய றுத்தலுந் 
		தாரகன் தன்சுதன் கனன்று மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத 
		ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந் தொருதன் செய்ய பொற்பதத் 
		துதைத்தனன் அங்கவன் சிரத்தில்.  ( * பா-ம் - திரள்.) 
       
        | 
		 122  | 
    
      | 
		 579
        | 
		 காமர் தாளினால் 
		உதைத்துவிண் படர்தலுங் கண்டு தூம மார்விழி யான்அசு ரேந்திரன் 
		தொடர்ந்தோர் சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி ஏம நாந்தகத் தால்அவன் 
		தலையற எறிந்தான். 
       
        | 
		 123  | 
    
      | 
		 580
        | 
		 எறிந்த சென்னியு 
		மியாக்கையும் இப்பரின் வீழ்ந்து மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது 
		வான்மேற் செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை அறிந்த தானவக் 
		கடலெலாம் ஓடின அன்றே. 
       
        | 
		 124  | 
    
      | 
		 581
        | 
		 மக்க ளாயினர் 
		இருவரும் இறந்தது மலைந்து பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத் 
		தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல் மிக்க சீற்றமேற் கொண்டனன் 
		அண்டங்கள் வென்றான். 
       
        | 
		 125  | 
    
      | 
		 582
        | 
		 சீற்ற மேதகு 
		காசிபன் மதலைபோர் செய்யும் ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக் 
		காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக் கூற்றின் வெம்பசி 
		தணிப்பகோர் சிலையினைக் குனித்தான். 
      	 
        | 
		 126  | 
    
      | 
		 583
        | 
		 வாணி போற்றிடு 
		சயமகள் வீரமா மடந்தை நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல் பூண 
		ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் 
		நகத்தால். 
       
        | 
		 127  | 
    
      | 
		 584
        | 
		 கரங்கொள் 
		வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள் மரங்கள் சிந்தினர் சிகரிகள் 
		சிந்தினர் மலையும் உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ் 
		சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி. 
       
        | 
		 128  | 
    
      | 
		 585
        | 
		 யாண்டு மாகியே 
		இரிந்தனர் அல்லதிந் நிலத்தில் 
         வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து மாண்டு ளார்சிலர் 
		மயக்கமுற் றார்சிலர் மற்றும் ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் 
		அரவம். 
       
        | 
		 129  | 
    
      | 
		 586
        | 
		 வேதன் அஞ்சினன் 
		மால்முடி துளக்கினன் விண்ணோர் நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் 
		நடுங்கிக் கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட பூதம் அஞ்சின 
		உயிர்த்தொகை அஞ்சின பொருமி. 
       
        | 
		 130  | 
    
      | 
		 587
        | 
		 வஞ்சன் வார்சிலை 
		நாணொலி கேட்டலும் மறத்தால் விஞ்சு பூதமீ ராயிர வௌ�ளமும் வெருவி எஞ்சி 
		யேயவண் நின்றிடா தி��ந்துள வென்றால் அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் 
		தனவோ. 
       
        | 
		 131  | 
    
      | 
		 588
        | 
		 சூரன் விற்பெரு 
		முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப் பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப் 
		போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து மாரி யிற்பொழந் திட்டனர் 
		வரைகளும் மரமும். 
       
        | 
		 132  | 
    
      | 
		 589
        | 
		 அன்ன வேலையிற் 
		பத்துநூ றாயிர கோடி பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித் 
		தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து துன்னு பாரிடத் தலைவர்தம் 
		யாக்கையைத் துளைத்தான். 
      	 
        | 
		 133  | 
    
      | 
		 5901
        | 
		 முடிது ளைத்தனன் 
		முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத் தொடையல் மார்பினைத் துளைத்தனன் 
		பாணியைத் துளைத்தனன் கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர் 
		அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார். 
       
        | 
		 134  | 
    
      | 
		 591
        | 
		 துளைத்து 
		மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண் டிளைத்து நின்றனன் அதிபலன் 
		வக்கிரன் என்போன் களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி 
		உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான். 
       
        | 
		 135  | 
    
      | 
		 592
        | 
		 நீடு குன்றினை 
		யேந்தியே அச்சுதன் நின்றான் ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் 
		உளைந்தான் வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான் ஆடு றுந்துயர் 
		அறிந்தனன் அண்டவா பரணன். 
       
        | 
		 136  | 
    
      | 
		 593
        | 
		 மேக மாலிஉ 
		நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான் காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் 
		கவன்றான் ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன் மாக வந்தன்நொந் 
		திரங்கினன் அத்திரி மறிந்தான். 
       
        | 
		 137  | 
    
      | 
		 594
        | 
		 பத்தி ரன்சிறி 
		திடைந்தனன் உடைந்தனன் பதுமன் எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் 
		இரிந்தான் மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான் சித்தி 
		ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார். 
       
        | 
		 138  | 
    
      | 
		 595
        | 
		 நெஞ்ச ழிந்தனர் 
		மாலியும் நீலனும் நெடுங்கண் பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் 
		பதைப்புற் றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி துஞ்சல் கூடினர் 
		வாமனுஞ் சோமன்என் பவனும். 
       
        | 
		 139  | 
    
      | 
		 596
        | 
		 வெங்கண் 
		உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான் சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ 
		ரிடன்மறந் தீர்ந்தான் சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான் 
		பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான். 
       
        | 
		 140  | 
    
      | 
		 597
        | 
		 இனைய தன்மையால் 
		இவர்முத லானநூற் றெண்மர் அனிக வேந்தர்கள் போரவலி இன்றியே அழியத் 
		துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர் கனையும் வார்சிலை வாங்கியே 
		தூர்த்தனர் கணைகள்.
      
        | 
		 141  | 
    
      | 
		 598
        | 
		 தூர்த்து 
		மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன் வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன 
		விலக்கி ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண் மூர்த்தம் ஒன்றினில் 
		அனையவர் சிலைகளை முரித்தான். 
      	 
        | 
		 142  | 
    
      | 
		 599
        | 
		 முரித்து 
		மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம் திரித்தும் ஆயிர கோடிவெங் 
		கணையினைச் செலுத்திப் பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி 
		உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான். 
       
        | 
		 143  | 
    
      | 
		 600
        | 
		 உய்த்த வாளிகள் 
		நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் 
		டிரங்கி வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை கைத்த லங்கெழு 
		சிலையொடு நேர்ந்தனன் கடிதின். 
      	 
        | 
		 144  | 
    
      | 
		 601
        | 
		 வாங்கு 
		வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள் ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் 
		கணையெனும் எழிலி தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத் 
		தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான். 
       
        | 
		 145  | 
    
      | 
		 602
        | 
		 செறித்த 
		காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து மறித்தும் வெஞ்சரந் தூண்டவே 
		ஆயிரம் வாளி  குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில் அறுத்து 
		ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான். 
       
        | 
		 146  | 
    
      | 
		 603
        | 
		 அட்ட காலையில் 
		வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப் பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி 
		ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் 
		விறலோன். 
      	 
        | 
		 147  | 
    
      | 
		 604
        | 
		 வந்த வீரராக் 
		கதனெனும் நாமத்து வலியோன் கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா 
		ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால் உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் 
		ஒராயிரங் கணைகள். 
       
        | 
		 148  | 
    
      | 
		 605
        | 
		 முட்டு வெங்கணை 
		வீரராக் கதனெனும் மொய்ம்பன் தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க 
		நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில் எட்டு மாதிரக் கரிகளும் 
		வெருவஆர்த் தெழுந்தான். 
       
        | 
		 149  | 
    
      | 
		 606
        | 
		 விண்ணெ ழுந்தவன் 
		அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க் கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் 
		முகத்தைத் துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன் வண்ண வார்சிலை 
		முடிந்தில தொடிந்தது மணிவாள். 
       
        | 
		 150  | 
    
      | 
		 607
        | 
		 நெடிய வாட்படை 
		இற்றிட விறலுடை நிருதன் தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன் 
		படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென் றடியின் மேற்படுத் தெறிந்தனன் 
		அண்டமேற் செல்ல. 
       
        | 
		 151  | 
    
      | 
		 608
        | 
		 அரக்கர் வீரனை 
		அவுணர்கோன் எறிந்திட அலமந் திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண் 
		டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும் கரக்க வீசிவந் தேற்றனன் 
		மகேந்திரன் கடியோன். 
      	 
        | 
		 152  | 
    
      | 
		 609
        | 
		 சூரன் அங்கது 
		விலக்கியே கணைமழை துரப்ப வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச் சாரி 
		வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன் தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி. 
       
        | 
		 153  | 
    
      | 
		 610
        | 
		 திரியும் வட்டணை 
		முறையினாற் சரமழை சிதறி வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை ஒருதி 
		றத்தருந் தௌ�கிலர் உணர்ந்திட அற்றோ இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் 
		என்றால். 
       
        | 
		 154  | 
    
      | 
		 611
        | 
		 ஆள ரிக்குடன் 
		வந்தவன் அத்துணை அழன்று  கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத் 
		தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற் றோளின் முப்பது கணைவிடுத் 
		தவன்வலி தொலைத்தான். 
       
        | 
		 155  | 
    
      | 
		 612
        | 
		 வலிதொ லைந்தவன் 
		வீழ்தலும் மாக்களின் தொகைமேல் புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் 
		புகலும் மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன் சிலைகு னிந்திடப் 
		பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான். 
       
        | 
		 156  | 
    
      | 
		 613
        | 
		 சென்ற வீரதீ 
		ரன்விடு கணையொடு சிலையை ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த 
		குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப நன்று நன்றெனாத் தண்டமொன் 
		றெடுத்துமேல் நடந்தான். 
       
        | 
		 157  | 
    
      | 
		 614
        | 
		 நடத்த லாகிய 
		எல்லையில் பகழியோர் நான்கு தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் 
		துணித்துத் தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள்  விடுத்து 
		மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான். 
       
        | 
		 158  | 
    
      | 
		 615
        | 
		 ஆன காலையில் 
		வீரமா மகேசனாம் அடலோன் கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல் மான 
		மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா ஊனும் ஆவியும் கவர்வதோர் 
		தெய்வவேல் உய்த்தான். 
       
        | 
		 159  | 
    
      | 
		 616
        | 
		 வேல்வி 
		டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக் கோல்வி டுத்தலும் ஆயிரம் 
		அன்னவை குறைத்துச் சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின் 
		மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல். 
       
        | 
		 160  | 
    
      | 
		 617
        | 
		 உற்ற தோரெ�கம் 
		நுண்டுக ளாகிவிண் ணுலவிச் சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன் 
		மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர் சொற்ற சாபத்தின் 
		முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான். 
       
        | 
		 161  | 
    
      | 
		 618
        | 
		  ஏழெ 
		னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல் பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த 
		வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த சூழு கின்றதோர் மன்னுயிர் 
		அடைந்தது துரியம். 
       
      
  | 
		 162  | 
    
      | 
		 619
        | 
		 மகேசன் என்பவன் 
		மயங்கலும் மற்றது நோக்கிக் ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று 
		நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங் குகேசன் ஏவல்செய் வீரகே 
		சரியெதிர் கொண்டான். 
       
        | 
		 163  | 
    
      | 
		 620
        | 
		 எதிர்பு 
		குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த துதிகொள் வார்சிலை தன்னையேழ் 
		கணையினால் துணியா அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து  நுதிநெ 
		டுங்கணை அழுத்தின் ஆயிர நுதலின். 
       
        | 
		 164  | 
    
      | 
		 621
        | 
		 ஆயி ரங்கணை 
		நுதலிடை அழுத்தஅம் புவியில் பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து 
		சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து மாயை தந்திடு மதலைமேல் 
		விடுத்தனன் மன்னோ. 
       
        | 
		 165  | 
    
      | 
		 622
        | 
		 எறித்த 
		ருஞ்சுடா�த் தபனனுஞ் சேடனும் இரங்கப் பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் 
		குன்றம் வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால் அறுத்து 
		மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா. 
       
        | 
		 166  | 
    
      | 
		 623
        | 
		 கரம்பு 
		குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள் உரம்பு குந்திட வீரகே சரிமனம் 
		உளைந்து பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா வரம்பு 
		குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான். 
       
        | 
		 167  | 
    
      | 
		 624
        | 
		 வடித்த விற்படை 
		அவுணர்கோன் மருமத்தின் வலிதாய் அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை 
		வெடித்த தாமெனக் கீண்டது விண்டது சோரி துடித்து யிர்ப்பொடு தேரிடை 
		மறிந்தனன் துயரால். 
       
        | 
		 168  | 
    
      | 
		 625
        | 
		 வீர கோளரி 
		பதைத்துமான் தேரிடை வீழச் சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா 
		ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும வாரி திக்கிடை எறிந்தனன் 
		விண்ணவர் மருள. 
       
        | 
		 169  | 
    
      | 
		 626
        | 
		 பரந்த பாற்கடல் 
		எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற் றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் 
		டணுகி முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம் புரந்த ரப்பெய்� 
		வாகையான் ஏற்றெதிர் புகுந்தான். 
       
        | 
		 170  | 
    
      | 
		 627
        | 
		 ஏற்றெ 
		திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான் ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் 
		செய்வனேல் அவற்றை மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக் 
		கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக. 
       
        | 
		 171  | 
    
      | 
		 628
        | 
		 குறுகும் அப்படை 
		வரத்தினை நோக்கியே கொடியோன் முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால் 
		உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல் மறலி தன்படை பட்டுமாய்ந் 
		திட்டது வரத்தால். 
       
        | 
		 172  | 
    
      | 
		 629
        | 
		 தண்ட கன்படை 
		மாய்தலுஞ் சயங்கெழு மகவான் முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம் 
		கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட 
		விடுத்தான். 
       
        | 
		 173  | 
    
      | 
		 630
        | 
		 நிறந்த 
		ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத் திறந்து போயின வீரமா 
		புரந்தரன் செங்கை உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீ�� உமிழ்ந்து 
		மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி. 
       
        | 
		 174  | 
    
      | 
		 631
        | 
		 தீர ராந்திறல் 
		அவுணர்கள் பூதராஞ் சிதைவார் சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும் 
		நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் 
		வெருவ. 
       
        | 
		 175  | 
    
      | 
		 632
        | 
		 சார்ங்கம் 
		அன்னதோ�� வலியதாய் மாமதன் தனுவாம் ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் 
		தேற்றுக் கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக் கூ��ங்கொ டுங்கணை 
		சிதறிநின் றார்ப்பிசை கொண்டான். 
      	 
        | 
		 176  | 
    
      | 
		 633
        | 
		 ஆ��ப்பெ 
		டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம் வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் 
		விஞ்சையர் விண்டார் சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப் 
		பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை. 
       
        | 
		 177  | 
    
      | 
		 634
        | 
		 ஆன காலையில் 
		வீரரந் தகன்விடும் அம்பின் சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன் 
		ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத் தானும் ஆயிரம் பகழிதொட் 
		டன்னதைத் தடுத்தான். 
       
        | 
		 178  | 
    
      | 
		 635
        | 
		 தடுத்த காலையில் 
		அவுணர்கோன் சினவிமுத் தலைசேர் வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே 
		எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா விடுத்த பல்லவம் யாவையுஞ் 
		சிந்தியே விரைந்த. 
      	 
        | 
		 179  | 
    
      | 
		 636
        | 
		 விரைந்து 
		போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக் கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் 
		கலக்கி உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப் புரந்த 
		ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில். 
       
        | 
		 180  | 
    
      | 
		 637
        | 
		 விறல்ப 
		டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்�ந்து மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே 
		மனத்தின் உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத் திறல்ப டைத்திடு 
		மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான். 
       
        | 
		 181  | 
    
      | 
		 638
        | 
		 அரிகள் 
		அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன் இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் 
		எழில்சோ உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப் பெரிது வெஞ்சினம் 
		எய்தியே அவுணர்கோன் பேசும். 
      	 
        | 
		 182  | 
    
      | 
		 639
        | 
		 எமது வீரமா 
		மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத் தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய் 
		குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே அமரின் ஆற்றலை இன்றொடே 
		முடிக்குவன் அம்மா. 
       
        | 
		 183  | 
    
      | 
		 640
        | 
		 பற்று பட்டிமை 
		பயிற்றியே அமைச்சரின் பன்னி ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி 
		மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய் இற்றை வைகலோ நின்னுயிர்க் 
		கிழைத்தநாள் என்றான். 
      	 
        | 
		 184  | 
    
      | 
		 641
        | 
		 தூதும் ஆகுவன் 
		அமைச்சனும் ஆகுவன் துன்னார் மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன் 
		ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில ஏதும் வல்லன்யான் வேண்டுபோ�� 
		புரிதியால் என்றான். 
       
        | 
		 185  | 
    
      | 
		 642
        | 
		 என்று வீரனோ 
		திடுதலும் எரிந்தன நயனம் தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த 
		துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன் குன்ற மன்னவிற் குனித்தனன் 
		நாணொலி கொண்டான். 
       
        | 
		 186  | 
    
      | 
		 643
        | 
		 சிலைப னித்திடக் 
		குனித்திடு காலையிற் செம்பொன் மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய் 
		அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண் தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் 
		தானும். 
       
        | 
		 187  | 
    
      | 
		 644
        | 
		 வேறு அம்முறை 
		வேலையில் ஆடல்கொள மொய்ம்பின் செம்மல்த னாது செழுங்கர முற்ற மைம்மலி 
		வார்சிலை வன்மையின் வாங்கிக் கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான். 
       
        | 
		 188  | 
    
      | 
		 645
        | 
		 ஆர்த்திடு 
		பேரொலி ஆங்கவன் வாங்குஞ் சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை மூர்த்தம 
		தொன்றினின் முச்சக வைப்பும் பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே. 
       
        | 
		 189  | 
    
      | 
		 646
        | 
		 அங்கது காலையில் 
		ஆயிர கோடி துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப் புங்கவ னுக்கிளை 
		யான்புய லென்ன வெங்கணை வீசி விலக்கினன் நின்றான். 
       
        | 
		 190  | 
    
      | 
		 647
        | 
		 விலக்கிய காலை 
		வெகுண்டிவன் ஆவி கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன் இலக்கம் 
		விடுத்திட ஏந்தல் தடுத்ான் கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே. 
       
        | 
		 191  | 
    
      | 
		 648
        | 
		 வெற்றிகொள் 
		வான்பினும் வெங்கணை கோடி செற்றமொ டேசெறி வித்திடு காலை மற்றவை 
		சிந்தினன் வாளிகள் நூறு நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன். 
       
        | 
		 192  | 
    
      | 
		 649
        | 
		 அச்சுத னாம்அவு 
		ணன்குளம் எய்தி மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட வச்சிர மாகிய 
		மால்வரை ஒன்றின் உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன. 
       
        | 
		 193  | 
    
      | 
		 650
        | 
		 நூறயில் வாளி 
		நுதற்கிடை சென்று மூறில னாகி உறுந்திறல் நோக்கி ஆறுமு கேசன் அயற்படை 
		அல்லால் ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான். 
       
        | 
		 194  | 
    
      | 
		 651
        | 
		 என்றிடும் வீரன் 
		இதற்பினும் வாளி துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன் வன்றிறல வெங்கணை 
		யாலவை மாற்றி ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான். 
       
        | 
		 195  | 
    
      | 
		 652
        | 
		 அம்பிரு 
		நான்கும் அணைந்துடன் ஆடல் மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற 
		செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ. 
       
        | 
		 196  | 
    
      | 
		 653
        | 
		 ஓடிய வேலை 
		யுளைந்திடு நெஞ்சன் ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன் பாடுறு 
		தேர்விடு பாகர்தம் மெய்யில் கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான். 
       
        | 
		 197  | 
    
      | 
		 654
        | 
		 அலகில் 
		நெடுங்கணை ஆகம் அழுந்த வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப் புலவொடு சோரி 
		புறத்தில் விளங்க  இலவம லர்ந்தென யாரும் இருந்தார். 
       
        | 
		 198  | 
    
      | 
		 655
        | 
		 அங்கது நோக்கி 
		அழன்றசு ரேசன் செங்கணை ஐம்பது தீயென ஓச்சி வெங்கண் விறற்புயன் மேதகு 
		தேரைப் பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான். 
       
        | 
		 199  | 
    
      | 
		 656
        | 
		 அட்டிடு காலை 
		அடற்புயன் ஆங்கோர் வட்டணை யாழிகொள் வையம தேறி நெட்டழல் வாயு 
		நெடும்படை தன்னைத் தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான். 
       
        | 
		 200  | 
    
      | 
		 657
        | 
		 வேறு வீறாகிய 
		அசுரர்கிறை மிகமூரல் படைத்து மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு 
		நிற்பர் சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி ஊறாயின நூறாயிரம் 
		உதிராயின பிதிராய். 
      	 
        | 
		 201  | 
    
      | 
		 658
        | 
		 காற்றின்படை 
		கன்லின்படை கண்டம்பல வாகக் கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ் 
		சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும் ஏற்றந்தனை இழந்தேகடி 
		திறந்திட்டன அன்றே. 
      	 
        | 
		 202  | 
    
      | 
		 659
        | 
		 அருணன்படை 
		மறலிப்படை அழிவெய்தலும் அம்மை சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் 
		தலைவன் வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும் முரணங்கொடு 
		கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான். 
       
        | 
		 203  | 
    
      | 
		 660
        | 
		 ஏற்றவை 
		அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு 
		மொய்ம்பன் மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப் போயப்படை 
		யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான. 
       
        | 
		 204  | 
    
      | 
		 661
        | 
		 விண்ணோர்படை 
		இவையாவையும் விளிவாதலும் வீரன் நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித 
		னாகி மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக் கண்ணோன்படை 
		யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான். 
       
        | 
		 205  | 
    
      | 
		 662
        | 
		 
		விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி அடுக்குற்றிடும் 
		உருமுப்புகை அழல்கால்பல படைகள் மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை 
		யுலகு நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ. 
       
        | 
		 206  | 
    
      | 
		 663
        | 
		 ஆண்டேவரும் 
		அயன்மால்படை அவுணன்தட மார்பங் கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக 
		லத்தின் மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச் சேண்டோய்கிரி 
		துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே. 
       
        | 
		 207  | 
    
      | 
		 664
        | 
		 மாயோன்படை 
		உலகந்தரு மறையோன்படை அவுணத் தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி 
		சிந்தி மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி ஏயோவென வசையெய்தி 
		இரிந்திட்டன அன்றே. 
      	 
        | 
		 208  | 
    
      | 
		 665
        | 
		 மீளுற்றவை 
		இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர 
		முன்னிக் கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட அண்டம் ஆளுற்றிடும் 
		அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான். 
       
        | 
		 209  | 
    
      | 
		 666
        | 
		 முத்தேவரின் 
		முதலாகிய மூவாமுதல் வரத்தால் எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில 
		எந்தப் புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும் உய்த்தேதடை 
		வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன். 
       
        | 
		 210  | 
    
      | 
		 667
        | 
		 ஊனீத்திடு 
		தவிண்ணவர் உலகம்புகழ் அயன்மால் தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர் 
		தன்மை மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல் அதனைத் தேனீத்தொகை தசையீதெனச் 
		சேருந்திறன் அன்றே. 
      	 
        | 
		 211  | 
    
      | 
		 668
        | 
		 தெரிந்திட்டனை 
		நீயோச்சிய திறல்வெம்படை என்பால் புரிந்திட்டதொர் வயமொன்றிலை 
		பொள்ளென்றும் மேவி முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்ன பொடிந்தே 
		எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால். 
       
        | 
		 212  | 
    
      | 
		 669
        | 
		 வில்வன்மைகொள் 
		சரவன்மையும் விண்ணோர்படைக் கலத்தின் பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும் 
		இயல்பாம் தொல்வன்மையுங் கண்டேயுனைத் தொலைவில்படை ஒன்றால் கொல்வன்எனக் 
		காலந்தெரி கூற்றாமென நின்றேன். 
       
        | 
		 213  | 
    
      | 
		 670
        | 
		 என்னாவசு 
		ரன்செப்பலும் இளையோன்இனி ஒன்றால் ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென 
		உன்னாத் தொன்னாள்எயில் மூன்றட்டருள் தூயோன்படைக் கலத்தை மன்னாரருள் 
		புரிசிந்தனை வழிபாட்டோடு விடுத்தான். 
       
        | 
		 214  | 
    
      | 
		 671
        | 
		 விடுங்காலையின் 
		இறைவன்படை விடம்வெங்கனல் அசனி கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல 
		கூளி தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற அடுங்காலமி 
		தெனவேநெடி தார்த்துற்றதை யன்றே. 
      	 
        | 
		 215  | 
    
      | 
		 672
        | 
		 உறுகின்றதொர் 
		படைநோக்கினன் உரமுற்றெனக் குடைந்தே இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால் 
		பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல் என்னாச் செறுகின்றதொ ரவுணர்க்கிறை 
		சிவன்றொல்படை எடுத்தான். 
       
        | 
		 216  | 
    
      | 
		 673
        | 
		 ஊறேற்றிடு 
		தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை 
		தொடுப்ப நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை எதிர்ோய் மாறேற்றமர் 
		புரிந்திட்டது வையத்தவர் வெருவ. 
       
        | 
		 217  | 
    
      | 
		 674
        | 
		 வேறு காண்டகு 
		நுதல்விழிக் கடவுள் மாப்படை ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே 
		மாண்டிடும் உலகென வானம் போற்றிட மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால். 
       
        | 
		 218  | 
    
      | 
		 675
        | 
		 அன்னது நோக்கியே 
		அசுரர் மேலையோன் இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள் உன்னுயிர் இன்னினி 
		ஒழிப்பன் காண்கெனாத் தன்னெடுஞ் சிலைவளைஇச் சரங்கள் சிந்தினான். 
       
        | 
		 219  | 
    
      | 
		 676
        | 
		 துன்புறு 
		அடிக்கணை சூரன் சிந்தலும் தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே 
		முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான் பொன்புனை அலங்கலம் யுத்து வள்ளலே. 
       
        | 
		 220  | 
    
      | 
		 677
        | 
		 அத்தகும் 
		எல்லையில் அவுணர் மன்னவன் முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே வித்தக 
		மொய்ம்புடை வீர வாகுவின் கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான். 
       
        | 
		 221  | 
    
      | 
		 678
        | 
		 சிலையது 
		துணிதலுஞ் சீறி வீரனோர் இலையுடை வேலினை யெடுத்து வீசலுந் தொவறு 
		வரம்பெறு சூரன் மார்பெனும்  மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே. 
       
        | 
		 222  | 
    
      | 
		 679
        | 
		 இற்றுழி 
		அவுணர்கள் இறைவன் மாலயன் மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர் கற்றையங் 
		கதிர்மணிக் கதையொன் றோர்ச்சினான் வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல். 
       
        | 
		 223  | 
    
      | 
		 680
        | 
		 திண்மைகொள 
		ப�றலைச் சேடன் பாங்குளார் எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே உண்மலி 
		யார்ப்புடன் ஒழுகிச் சென்றென வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே. 
       
        | 
		 224  | 
    
      | 
		 681
        | 
		 வெங்கதை 
		வருதலும் வீர வாகுவோர் செங்கதை எதிருறச் செலுத்தி நிற்றலும் அங்கதை 
		நீறுசெய் தவன்றன் மார்பிடைத் துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே. 
       
        | 
		 225  | 
    
      | 
		 682
        | 
		 மேக்குயர் 
		பெருஞ்சின வீர வாகுவின் மாக்கிளர் அகலமேல் வயிர மாக்கதை தாக்கலும் 
		விண்டது தாரைச் செம்புணீர் தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே. 
       
        | 
		 226  | 
    
      | 
		 683
        | 
		 ஆழ்ந்திடு 
		சோரியன் அவுணன் தண்டினால் போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன் 
		தாழந்திடும் விறலினன் தளரும் யாக்கையன் வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி 
		யோடவே. 
       
        | 
		 227  | 
    
      | 
		 684
        | 
		 ஆற்றலின் றாகியே 
		அண்ணல் வீழ்தலும் மேற்றிகழ வலவனாம் விசாலி என்பவன் தேற்றுறு 
		பான்மையைச் சிந்தித் தோர்புடை காற்றெனத் தேர்கொடு கடிது போயினான். 
       
        | 
		 228  | 
    
      | 
		 685
        | 
		 போந்திடு 
		காலையில் புலம்பி வீழந்துளான் மாய்ந்திடுஞ சரதமாம் என்று மாறிலான் 
		ஆய்ந்தனன் சிலைனித் தப்பு மாரிதூய்க் காய்ந்தனன் சென்றனன் கணத்தின் 
		தானைமேல். 
       
        | 
		 229  | 
    
      | 
		 686
        | 
		 பொன்றிடா 
		வரத்தினான் பூத சேனைமேற் சென்றனன் கணைமழை சிதறிக் கோறலும் நின்றவை 
		இரிந்தன நெடிய தீங்கதிர் என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல். 
       
        | 
		 230  | 
    
      | 
		 687
        | 
		 தாக்கிகல் 
		வீரருஞ் சயங்கொள் மொய்ம்பனும் நீக்கமில் இராயிர நீத்தத் தானையும் 
		ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான். 
       
        | 
		 231  | 
    
      | 
		 688
        | 
		 ஆண்டது வேலையில 
		ஆறு மாமுகன் பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா ஏண்டகு சூரன்மேல் 
		இரதம் ஒய்யெனத் தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே. 
       
        | 
		 232  | 
    
      | 
		 689
        | 
		 வேறு இணைஅறு 
		முருகன் இவ்வா றிசைத்தலும் இனைய தோரா உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் 
		பாகன் நகர் கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட் டேரைத் துணையறு 
		சூரன் முன்னர்த் துண்ணெனத் தூண்டி உய்த்தான். 
       
        | 
		 233  | 
    
      | 
		 690
        | 
		 ஆயது காலை 
		தன்னில் அவுணர்கோன் அநந்த கோடி ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை 
		ஓட்டிச் சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற தென்னத் தூயதோர் 
		குமரன் போரில் தோன்றிய தோற்றங் கண்டான். 
       
        | 
		 234  | 
    
      | 
		 691
        | 
		 முண்டக மலர்ந்த 
		தன்ன மூவிரு முகமுங் கண்ணுங் குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல 
		மார்பும் எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந் தண்டையுஞ் 
		சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான். 
       
        | 
		 235  | 
    
      | 
		 692
        | 
		 சூரெனும் அவுணர் 
		கோமான் தொல்லைநாள் நோற்ற வாறும் பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த 
		வாறும் ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம் மையன் பேரெழில் உருவம் 
		நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ. 
       
        | 
		 236  | 
    
      | 
		 693
        | 
		 எஞ்சலில் அவுணர் 
		செம்மல் இங்ஙனம் அமர தாற்றித் துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா லறிவின் 
		மிக்கோர் நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக் குமர மூர்த்தி 
		செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான். 
       
        | 
		 237  | 
    
      | 
		 694
        | 
		 பூவுல கண்ட 
		மெல்லாம் புரந்திடுஞ சூரன் தன்னைத் 
         தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க மூவிரு முகத்து 
		வள்ளல் முன்னவர்வந் தெய்தப் பெற்றான் ஆவிவன் தவத்திற் கன்றி 
		அறத்திற்கும் முதல்வன் அன்றோ. 
       
        | 
		 238  | 
    
      | 
		 695
        | 
		 இன்னமும் 
		முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் 
		குமரன் தன்னைத் தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன் என்றால் 
		அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந் துரைக்கற் பாலார். 
       
        | 
		 239  | 
    
      | 
		 696
        | 
		 பொருசமர் 
		விளைப்பான் போலப் பொருக்கெனப் போந்து சூரன் இருவிழி தன்னிற் காண்பான் 
		எளிதுதன் வடிவங் காட்டி அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன் மாயத் 
		திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு மன்றே. 
       
        | 
		 240  | 
    
      | 
		 697
        | 
		 சிந்தையால் 
		அறிதற் கொண்ணாத் திருவுரு விழியாற் கண்டு முந்துதான் நின்ற சூரன் 
		முழுதுல கடுவான் நின்றோன் மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில் வெகுளி 
		தூண்டக் கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான். 
       
        | 
		 241  | 
    
      | 
		 698
        | 
		 வேறு சேனை 
		யாய்நினைச் சூழந்தவர் செருவலி அழிந்து போன போனதோர் மாதிரந் தெரிந்தில 
		பூத மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல ஏனை யோர்களும் என்னொடு 
		பொருதனர் இறந்தார். 
       
        | 
		 242  | 
    
      | 
		 699
        | 
		 இற்ற நின்பெரும் 
		படைக்கெலாந் தலைவனாய் என்பால் ஒற்று வந்துள வீரனும் பொதுயிர் ஒழிந்தான் 
		மற்று நீயொரு பாலன என்னொடு மலைந்து கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் 
		குறிப்பு. 
       
        | 
		 243  | 
    
      | 
		 700
        | 
		 மேல தாகிய 
		நின்னுடைத் தாதையும் விண்ணும் ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும் 
		மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர் பாலன் வல்லைகொல் என்னொடு 
		போர்த்தொழில் பயில. 
       
        | 
		 244  | 
    
      | 
		 701
        | 
		 முந்தை நாள்வலி 
		இல்லதோர் அடுக்கலும் முன்யான் தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும் 
		புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல மைந்த என்னையும் நினைந்தனை 
		போலுநின் மனத்தில். 
      	 
        | 
		 245  | 
    
      | 
		 702
        | 
		 தேக்கு சீரினேன் 
		வரத்தியல் உன்னலை சிதையா ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை அடலின் 
		வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர் ஊக்கம் உன்னலை சிறுவநீ 
		பெருஞ்சமர்க் குற்றாய். 
       
        | 
		 246  | 
    
      | 
		 703
        | 
		 கமல மேலுறை 
		பகவனும் மாயனுங் ககனத் தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச் 
		சிமைய மங்கையும் இரங்குற என்னொரு சிலையால் இமையொ டுங்குமுன் நின்வலி 
		அழிக்குவன் என்றான். 
       
        | 
		 247  | 
    
      | 
		 704
        | 
		 வேறு சூரனென் 
		றுரைபெற் றுள்ள தொல்லையோன் இனைய தன்மை வீரமுந் திறலுஞ் சீரும் 
		வெகுளியுங் கொண்டு செப்ப ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா 
		மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய லுற்றான். 
       
        | 
		 248  | 
    
      | 
		 705
        | 
		 வெற்றியும் 
		உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை பற்றியும் உடையம் எண்ணில் 
		படைகளும் உடையம் வீயாப் பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல் உடையம் 
		என்று மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும் வல்லை மன்னோ. 
       
        | 
		 249  | 
    
      | 
		 706
        | 
		 வரமிகு சிறப்பி 
		னேமை மழவிளங் குமரன் கொல்லோ பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின் 
		புந்தி கொண்டாய் பொ�துநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி நாட்டத் 
		தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம் அடுவ தம்மா. 
       
        | 
		 250  | 
    
      | 
		 707
        | 
		 அறிவுடை முதியர் 
		என்றும் ஆண்டினை யோர்கள் என்றுஞ் சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு 
		வளத்தர் என்றும் வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும் 
		விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே. 
       
        | 
		 251  | 
    
      | 
		 708
        | 
		 நூற்றுடன் எட்ட 
		தென்ன நுவலுறும் உகத்தின் காறும் பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் 
		வலியை இன்னே தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னால் ஊற்றுடைப் 
		பாலிற் புக்க உறையென அடுதும் என்றான். 
       
        | 
		 252  | 
    
      | 
		 709
        | 
		 வேறு என்னு 
		முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந் தன்னை முன்ன ளந்தவன் போல் அண்ட 
		முகடுதோய் வுற்ற கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப அன்ன 
		பான்மையைக் கண்டனன் ஆதியங் குமரன். 
      	 
        | 
		 253  | 
    
      | 
		 710
        | 
		 மால யன்சுரர் 
		பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள் 
		மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர் வியன்தாட் கோலம் என்னஓர் நெடுஞ்சிலை 
		யெடுத்தனன் குமரன். 
      	 
        | 
		 254  | 
    
      | 
		 711
        | 
		 அடற்பெ 
		ருந்திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப் படித்த லந்தனை அருளுவான் 
		ஆடல்செய் பரமன் எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிட இயல்பால் தடுத்த 
		செங்கைபோல் குனித்தனன் அறுமுகன் தனுவை. 
       
        | 
		 255  | 
    
      | 
		 712
        | 
		 குனித்த 
		வில்லிடைக் குமரவேள் நாணொலி கொண்டான் அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர் 
		ஓதைபோல் அவுணன் சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன் செகத்தில் 
		பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும் பரிசின். 
       
        | 
		 256  | 
    
      | 
		 713
        | 
		 அள்ளி லைப்படை 
		அவுணர்கோன் அடுசர மழைதூய் வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும் மறைப்பத்  
		தௌ�ளி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந் தித்துக் கொள்ளை வெங்கணை 
		துரந்தவை யாவையுங் குறைத்தான். 
       
        | 
		 257  | 
    
      | 
		 714
        | 
		 குறைத்த 
		காலையில் சினவியே பின்னருங் கொடுநஞ் சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் 
		ஓச்சி அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன் தன்னை மறைத்து விண்ணெறி 
		மாற்றினன் பகழிமா மழையால். 
      	 
        | 
		 258  | 
    
      | 
		 715
        | 
		 ஆன பான்மைசேர் 
		பகழியின் படலிகை அவுணன் சோனை வாளியால் துணித்திடை வீட்டியே சுரர்தஞ் 
		சேனை காவலற் கண்டனன் வினைத்தனை சிந்தி ஞான நாயகத் தாணுவைக் காணுநற் 
		றவர்போல். 
       
        | 
		 259  | 
    
      | 
		 716
        | 
		 கண்டு தீயவன் 
		பத்துநூ றாயிரங் கணைகள் அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும் அவற்றை 
		எண்ட ருஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன் 
		புயமேல். 
       
        | 
		 260  | 
    
      | 
		 717
        | 
		 கயப்பொ ருப்பினை 
		உரித்தமால் வரைதரு காளை வயப்பொ ருப்ப்பினை அடுகணை சூரனாம் வலியோன் 
		புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர் அயப்பொ ருப்பையுற் 
		றடல்பெறா அழலவன் கதிர்போல். 
       
        | 
		 261  | 
    
      | 
		 718
        | 
		 மாயை தன்மகன் 
		வச்சிர யாக்கையின் வலியை நாய கன்திரு மதலைகண் டழலெழ நகைத்துத் தீய 
		வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி ஆயி ரங்கணை யால்அவன் சிலையினை 
		அறுத்தான். 
       
        | 
		 262  | 
    
      | 
		 719
        | 
		 சிலையி 
		னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து மலையி னைத்தடிந் தவன்மிசை 
		மலரயன் தந்த இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ் கொலையு டைக்கணை 
		தூண்டியே அன்னதைக் குறைத்தான். 
      	 
        | 
		 263  | 
    
      | 
		 720
        | 
		 ஏறு சேவகத் 
		தவுணர்கோன் அயிற்படை இறலும் வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி 
		மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி  ஆறு மாமுகன் புயத்திலேழ் 
		வாளிதொட் டார்த்தான். 
       
        | 
		 264  | 
    
      | 
		 721
        | 
		 செங்க திர்ப்பகை 
		தன்னைமுன் உதவினான் செலுத்தும் வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் 
		விமலன் துங்க மிக்கதோள் புக்குநுண் தூளிய தாகிப் பொங்க னற்றிரள் 
		பட்டதோர் பூளைபோன் றனவால். 
       
        | 
		 265  | 
    
      | 
		 722
        | 
		 மொய்யி ருங்கணை 
		பட்டுநீ றாதலும் முருகன் வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா ஐயி 
		ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச் செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் 
		சிதைத்தான். 
       
        | 
		 266  | 
    
      | 
		 723
        | 
		 ஆழி பூண்டிடும் 
		இரதமும் அங்கையிற் சிலையும் பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த ஏழி 
		ரண்டுநூ றாயிரந் தேரையும் இமைப்பின் ஊழி நாயகன் தன்சர மழையினால் 
		ஒழித்தான். 
       
        | 
		 267  | 
    
      | 
		 724
        | 
		 சேம மாகியே 
		நின்றிடு தேரெலாஞ் செவ்வள் காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான் 
		தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன் ஏம மாகியே கொண்டிடு சூலமொன் 
		றெறிந்தான். 
       
        | 
		 268  | 
    
      | 
		 725
        | 
		 நண்ண லன்விடு 
		முத்தலைப் படையைநாற் கணையால் பண்ண வன்திரு மாமகன் இருதுணி படுத்துத் 
		துண்ணெ னக்கணை ஏழினால் அவன்குடை துணியா அண்ண லஞ்சுடர் முடியையோர் 
		கணையினால் அறுத்தான். 
      	 
        | 
		 269  | 
    
      | 
		 726
        | 
		 மணிப டுத்திய 
		மவுலியை அறுத்தபின் வலியோன் பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி 
		அணிப டுத்தியே புனைதரு மதாணிகள் அனைத்தும் துணிப டுத்தினன் மறைகளுந் 
		துணிந்திடற் கரியோன். 
       
        | 
		 270  | 
    
      | 
		 727
        | 
		 ஆன காலையில் 
		சூரபன் மாவெனும் அரசன் மான வன்மையில் குறைந்தது நோக்கிமா டுள்�ள சேனை 
		காவலர் நாற்படை தன்னொடுஞ் சேர்ந்து சோனை யாப்படை வழங்கியே குமரனைச் 
		சூழ்ந்தார். 
       
        | 
		 271  | 
    
      | 
		 728
        | 
		 ஏழு நேமியும் 
		எறிந்துமே ருவைவளைந் தென்னக் கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து 
		சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொன்னாட் பூழி யாகவே அவுணரூர் அட்டவன் 
		புதல்வன். 
      	 
        | 
		 272  | 
    
      | 
		 729
        | 
		 குருதி வேற்படை 
		கொண்டவன் தன்புடைக் குழுமிப் பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான் 
		கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட் பரிதி யம்படை தொட்டனன் 
		இரவியிற் படர. 
      	 
        | 
		 273  | 
    
      | 
		 730
        | 
		 இலகும் வெய்யவன் 
		நடுவுநாள் யாமத்தின் ஏகி அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர் 
		தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள் மலையும் வீசிய படைகளுந் 
		துணித்தது மன்னோ. 
       
        | 
		 274  | 
    
      | 
		 731
        | 
		 மேனி லாவிய 
		தேர்களைத் துணித்திடும் வெங்கண் 
         மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத் தானை யாவையும் 
		துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ் சேனை காவலர் யாரையும் துணித்திடுந் 
		திகிரி. 
       
        | 
		 275  | 
    
      | 
		 732
        | 
		 அரந்து 
		ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின் உரந்து ணித்திடும் இகழின்நாத் 
		துணித்திடும் உரப்பில் சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற் 
		கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள். 
       
        | 
		 276  | 
    
      | 
		 733
        | 
		 குடைது 
		ணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின் தொடைது ணித்திடும் தேர்நிரை 
		பூண்டமான் தொகையின் இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின் இருந்த 
		படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும். 
       
        | 
		 277  | 
    
      | 
		 734
        | 
		 கொற்ற மிக்கதோர் 
		கோல்கொடு வலியுடைக் குலாலன் சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு 
		சுழன்று பற்ற லார்பெருந் தானையைப் ப�றுணி படுத்தி ஒற்றை நேமியம் 
		பெரும்படை திரிந்ததால் உலவி. 
       
        | 
		 278  | 
    
      | 
		 735
        | 
		 போர ழிந்திடும் 
		அவுணர்தம் உடற்குறை புகையாச் சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ் 
		பரியும் தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி வீர மாமகம் 
		ஒன்றியற் றுவதென விளங்கும். 
       
        | 
		 279  | 
    
      | 
		 736
        | 
		 வெஞ்ச 
		மாத்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி வஞ்ச கத்தொடு மாயமாம் பேரிருண் 
		மாற்றி எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச் செஞ்சு டர்க்கதி 
		ராயதால் அறுமுகன் திகிரி. 
      	 
        | 
		 280  | 
    
      | 
		 737
        | 
		 நச்சு தன்னிடத் 
		தமலையை இருத்திய நம்பன் இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை அச்சு 
		தன்கரத் தேந்திய நேமிகண் டதனை மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித 
		மேவி. 
       
        | 
		 281  | 
    
      | 
		 738
        | 
		 தீர்த்தன் 
		உய்த்திடு நேமியம் பெரும்படை செருவில் ஆர்த்த தானைநூ றாயிர வௌ�ளமு மடைய 
		மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு முகத்தோன் வார்த்தை யால்அவை 
		முழுவது மாற்றிய வாபோல். 
      	 
        | 
		 282  | 
    
      | 
		 739
        | 
		 ஆடல் உற்றவேற் 
		பண்ணவன் அலர்கதிர்ப் பரிதி பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப் படுத்து 
		மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற் காடு முற்றவுந் தனிபடர்ந் 
		துண்டதோர் கனல்போல். 
       
        | 
		 283  | 
    
      | 
		 740
        | 
		 கைம்ம லிந்திடு 
		குடைபல காம்பிடை துணிந்து மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து 
		பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர் தடத்திற் செம்மல் கொண்டமர் தாமரைக் 
		காடுபோல் திகழும். 
       
        | 
		 284  | 
    
      | 
		 741
        | 
		 அழுங்கல் 
		கொண்டதோர் கரிபரி அவுணர்பேர் அனிகம் வழங்கல் இன்றிவீழ்ந் தவிந்திடு 
		களேவரம் மலிதல் தழங்கு தெண்டிரை உலகுள சயிலங்கள் அனைத்தும் ஒழுங்க 
		தாகிவந் தாயிடைத் தொக்கவா றொப்ப. 
       
        | 
		 285  | 
    
      | 
		 742
        | 
		 அகல்வி சும்புகா 
		றொங்கிய களேவரம் அதன்பால் ஞெகிழி கொண்டவாய்ப் பேயின நிணனுண்டு சிரித்து 
		மிகவும் ஆர்ப்பெடுத் தீண்டுவ மின்னியே இடித்து முகிலி ருங்கணம் 
		முதுவரைச் சாரல்மொய்த் ததுபோல். 
       
        | 
		 286  | 
    
      | 
		 743
        | 
		 மையல் யானையும் 
		அவுணர்த மியாக்கையும் மற்றும் ஒய்யெ னக்கொடு குருதியம் பேரியா றொழுகல் 
		செய்ய தோர்பணி கருங்கடல் மறைத்தல்சிந் தித்து வெய்ய நஞ்சுமிழ்ந் 
		திருநிலம் படர்தல்போல் விளங்கும். 
       
        | 
		 287  | 
    
      | 
		 744
        | 
		 மாணி லைப்படு 
		பேய்சில களேவர வரைபோய்ச் சோணி தப்புனல் ஆறுபாய்ந் திடஅதன் துவலை சேணி 
		லத்துளார் அரிவையர் புனைகலை தெறிப்ப நாணல் உற்றனர் பூப்பென நகைப்பரென் 
		றுன்னி. 
       
        | 
		 288  | 
    
      | 
		 745
        | 
		 சொல்ல ருந்திறல் 
		அவுணரில் சிலர்தலை துணிந்து வல்லை யிற்கிளர்ந் தார்த்தலும் வலியினால் 
		தம்மை அல்லல் செய்திடு கோளிரண் டல்லதை அவைபோல் எல்லை யில்லவை வந்தஎன் 
		றிரியுமால் இரவி. 
       
        | 
		 289  | 
    
      | 
		 746
        | 
		 நீடி விண்படர் 
		கொடிசில நிமிர்கவந் தத்தின் காடு தன்னிடைப் புகுந்துதந் தலைமிசைக் 
		காட்டி ஆடல் யானையின் களேவரங் குத்துவ அடுபோ ரூடு காக்கையின் 
		முகரும்வந் தார்கொலென் றுரைப்ப. 
      	 
        | 
		 290  | 
    
      | 
		 747
        | 
		 நீட லுற்றசீர் 
		அவுணர்கோன் ஆணையால் நிலமேல் வீட லுற்றிடு வயவர்க்குத் தம்முயிர் 
		மீட்டுங் கூட லுற்றிடு திறனெனக் கூளிகை கொட்ட ஆட லுற்றிடும் உடற்குறை 
		அநந்தகோ டிகளால். 
       
        | 
		 291  | 
    
      | 
		 748
        | 
		 இனைய வெல்லையில் 
		எம்பிரான் எரிகதிர்ப் பரிதி முனையில் வந்தடல் செய்ததை உணா�ந்திலன் 
		முன்சூழ் கனையி ருங்கடற் படையெலாம் பட்டவா கண்டு மனம ருண்டொரு 
		தமியனாய் நின்றனன் வலியோன். 
       
        | 
		 292  | 
    
      | 
		 749
        | 
		 நீண்ட தன்ொரு 
		வேற்படை உய்த்துநீக் கினனோ பாண்ட ரங்கம தியற்றுவான் படையின்வீட் டினனோ 
		மாண்டு போகவென் றொருமொழி தன்னின்மாற் றினனோ ஈண்டு தானையை முடித்ததெவ் 
		வாறிவ னென்றான். 
      	 
        | 
		 293  | 
    
      | 
		 750
        | 
		 தேரி ழந்தனன் 
		சிலையதும் இழந்தனன் திறல்சேர் பேரி ழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும்பூண் 
		ஏரி ழந்தனன் மவுலியுங் கவிகையும் இழந்தான் பாரி ழந்திடு மன்னர்போல் 
		நின்றனன் படிமேல். 
       
        | 
		 294  | 
    
      | 
		 751
        | 
		 நின்றி 
		டுந்திறல் அவுணர்கோன் நெடுஞ்சினம் நெஞ்சில் துன்ற மார்பகம் வியர்த்திட 
		முடித்தலை துளக்கி நன்று நன்றொரு பாலகன் வலியென நகையா வென்றி 
		நான்முகன் படைக்கலம் எடுத்துமேல் விடுத்தான். 
       
        | 
		 295  | 
    
      | 
		 752
        | 
		 வேறு 
		சூர்ப்புயல் அன்னதொர் சூரன் விடுக்கும் மாற்படு போதன் வயப்படை சென்று 
		பாற்படு மெல்லை பரஞ்சுடர் செங்கை வேற்படை சென்று விழுங்கிய தன்றே. 
       
        | 
		 296  | 
    
      | 
		 753
        | 
		 விழுங்குதல் 
		கண்டனன் வெய்யவன் நெஞ்சம் அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி 
		வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி முழங்கழல் என்ன முனிந்துடன் விட்டான். 
       
        | 
		 297  | 
    
      | 
		 754
        | 
		 விட்டிடு மாயவன் 
		வெம்படை ஏகி மட்டறு கண்ணர்தம் மாலுரு ஈன்று கிட்டிய காலை 
		கிளர்ந்திடும் ஔ�வேல் அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ. 
       
        | 
		 298  | 
    
      | 
		 755
        | 
		 சயம்புனை 
		செம்மல் தனாதருள் நீரால் அயன்படை தன்னுடன் அம்புவி கேள்வன் வியன்படை 
		தன்னையும் வேற்படை உண்ணக் கயம்படு சூரது கண்டுவிம் முற்றான். 
       
        | 
		 299  | 
    
      | 
		 756
        | 
		 கறுத்திடு 
		கின்றதொர் கந்தர வள்ளல் விறற்படை தன்னை விடுத்திடின் யாரே மறுத்திடு 
		வார� தென்று மனத்திற் குறித்னன் மாயை கொடுத்தருள் கோமான். 
       
        | 
		 300  | 
    
      | 
		 757
        | 
		 முப்புரம் நீறெழ 
		மூரல் விளைத்தோன் மெய்ப்படை தன்னை விடுப்பது தேற்றி அப்படை ஏந்தி 
		அருச்சனை நீரால் ஒப்பறு சீர்த்தியன் ஒய்யென உய்த்தான். 
       
        | 
		 301  | 
    
      | 
		 758
        | 
		 அத்தகு வெம்படை 
		ஆடல் இயற்றும் முத்தலை வேற்படை மூர்த்திகள் கோலம் எத்திசை தன்னினும் 
		ஈண்டுற ஆர்த்து மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ. 
       
        | 
		 302  | 
    
      | 
		 759
        | 
		 ஆடியல் யானைக 
		ளாயின எட்டும் வீடிய வேயென வீழ்ந்தயர் வுற்ற நீடிய நேமியின் நின்றிடு 
		செந்த ஓடிய சேடனும் உட்கி உலைந்தான். 
       
        | 
		 303  | 
    
      | 
		 760
        | 
		 படித்தலம் 
		நெக்கது பல்வகை மேகம் இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத் துடித்தது 
		திங்கள் சுழன்றது மேரு வெடித்த திடந்தொறும் விண்டதிவ் வண்டம். 
       
        | 
		 304  | 
    
      | 
		 761
        | 
		 இலக்கர் 
		நடுங்கினர் ஏனைய வீரர் கலக்க மடைந்தனர் காண்டகு பூதர் மலக்கம 
		தெய்தினர் மற்றிது தன்னை விலக்கரி தாலென ஓடினர் விண்ணோர். 
       
        | 
		 305  | 
    
      | 
		 762
        | 
		 புடவி முதற்புவ 
		னங்கள் அனைத்தும் நொடிவரை செல்லுமுன் நொய்தென மாய முடிவ தியற்றிடு 
		மூர்த்திதன் நாமப் படைவர அன்னது பா��த்தனன் வள்ளல். 
       
        | 
		 306  | 
    
      | 
		 763
        | 
		 எந்தைதன் 
		மாப்படை ஈதென ஐயன் சிந்தை புரிந்தொரு செங்கையை நீட்டி வந்திடும் 
		அப்படை பற்றினன் மாதோ தந்தவன் வாங்கிய தன்மைய தென்ன. 
       
        | 
		 307  | 
    
      | 
		 764
        | 
		 பெற்ற முயர்த்த 
		பெருத்கை நாமக் கொற்ற நெடும்படை யைக்கும ரேசன் பற்றியொர் பாணி 
		பரித்தனன் நின்றான் மற்றது கண்டனன் மாயவள் மைந்தன். 
       
        | 
		 308  | 
    
      | 
		 765
        | 
		 வேறு விட்ட 
		விட்டதோர் படைக்கெலாம் வேறுவே றொன்று தொட்டி லான்அத னாலது மாற்றுதல் 
		துணியான் கிட்டும் எல்லையில் அவையெலாங் கவர்ந்தனன் கேடில் அட்ட 
		மூர்த்திசேய் என்பது காட்டினன் அம்மா. 
      	 
        | 
		 309  | 
    
      | 
		 766
        | 
		 என்னொ டேபொரற் 
		கிவனலால் வேறிலை இனையோன் தன்னொ டேபொரற் கியானலா திலையிது சரதம் அன்ன 
		பான்மையின் எனக்குநே ராம்இவன் அலது பின்னை யாருளர் தமியனுக் குவமையாப் 
		பேச. 
       
        | 
		 310  | 
    
      | 
		 767
        | 
		 மான வேற்படை 
		வன்மையும் விற்றொழில் வலியும் ஏனை யாயுள வன்மையுங் கண்டனன் இனிமேல் 
		பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பனென் றுன்னி மோன மாகியே நின்றனன் 
		அவுணர்கள் முதல்வன். 
       
        | 
		 311  | 
    
      | 
		 768
        | 
		 பொருளின் 
		நீர்மையால் புனைகலன் மாற்றலிற் புவிமேல் இருளின் நீ�மையாய்த் தோன்றினோன் 
		அற்புத மெய்தி மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல் அருளின் 
		நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான். 
       
        | 
		 312  | 
    
      | 
		 769
        | 
		 இந்தி ரன்தனி 
		மதலையை இமையவர் தம்மை அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை அதற்கா 
		முந்தொ ரொற்றனை விடுத்தனம் ஆங்கவன் மொழியுஞ் சிந்தை கொண்டிலை விடுத்திலை 
		அமரர்தஞ் சிறையும். 
       
        | 
		 313  | 
    
      | 
		 770
        | 
		 அன்ன தன்மையால் 
		ஈண்டியாம் வந்தனம் அமரில் தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை 
		முன்னம் அட்டிடு முறையென நின்னையும் முனிவால் இன்ன வைகலே அடுதுமென் 
		றேகினம் மீண்டும். 
      	 
        | 
		 314  | 
    
      | 
		 771
        | 
		 ஈண்டு நின்புடை 
		ஈண்டிய இலக்கம்வௌ� ளத்து நீண்ட தானையும் நின்சிலை வன்மையும் நின்னால் 
		தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளுந் தொலைந்து மாண்டு போயது கண்டனை 
		வறியனாய் நின்றாய். 
       
        | 
		 315  | 
    
      | 
		 772
        | 
		 நெடிய தாரகற் 
		செற்றவேல் இருந்தது நின்னை அடுதல் இங்கொரு பொருளுமன் றரிதுமற் றன்றால் 
		படையி ழந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய் முடியு மென்றுதாழ்க் 
		கின்றனம் தருமத்தின் முறையால். 
       
        | 
		 316  | 
    
      | 
		 773
        | 
		 பன்னு கின்றதென் 
		பற்பல விண்ணுளோர் பலரும் துன்னு தொல்சிறை விடுத்தியேல் உன்னுயிர் 
		தொலையேம் அன்ன தன்மையே மறுத்திடின் ஒல்லைநாம் அடுதும் என்னை கொல்லுன 
		தெண்ணங்கள் உரைத்தியால் என்றான். 
       
        | 
		 317  | 
    
      | 
		 774
        | 
		 வேறு வேறுநின் 
		றுலகெலாம் அளிப்பது வெ�கி ஆறு மாமுகம் பன்னிரு செங்கைகொண் டருள்வோன் 
		ஊறு சேர்அவு ணன்றனக் கினையன உரைப்ப மாறொர் வாசகஞ் சொற்றிலன் உளத்திவை 
		மதிப்பான். 
       
        | 
		 318  | 
    
      | 
		 775
        | 
		 படையி ழந்தனன் 
		இவனென உன்னியே பாலன் இடைதெ ரிந்தனன் போலவே இமையவர் யாப்பை விடுதி 
		என்னவும் வல்லனா யினன்விளி வில்லேன் அடலும் ஆற்றலுந் தெரிந்திலன் 
		பிள்ளைமை யதனால். 
       
        | 
		 319  | 
    
      | 
		 776
        | 
		 மன்ற லந்தொடை 
		அறுமுகன் வரம்பிலா வைகல நின்று பேரமர் புரியநான் வறிதுநின் றிடினுங் 
		கொன்றி டுந்தொழில் வல்லனே தந்தைமுன் கொடுக்க என்றும் மாய்ந்திடா ஒருவரம் 
		பெற்றிடும் என்னை. 
       
        | 
		 320  | 
    
      | 
		 777
        | 
		 தொழுத குந்திரு 
		மவுலியுங் கவிகையுந் துணிய இழிவ தாகியே தமியன்நின் றமரியற் றிடினும் 
		அழிவ தில்லையால் ஆவது மிலைபுகழ் அதனால் பழிய தொன்றுறும் அங்கது பாதுகாத் 
		திடுவேன். 
       
        | 
		 321  | 
    
      | 
		 778
        | 
		 வேற்று 
		நீர்த்தடங் கொள்வதை அன்றிவௌ� ளங்கள் ஊற்று நீர்ப்பெரும் புணரியைக் 
		கொள்வதற் குறுமோ ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே அன்றி மாற்று 
		மோவென தழிவுறா வரத்தையும் மைந்தன். 
      	 
        | 
		 322  | 
    
      | 
		 779
        | 
		 என்னை அங்கவன் 
		முடித்திடல் அரியதா லியானும் அன்ன வன்றனை இத்துணை வெல்வதும் அனைத்தே 
		தொன்ன கர்ப்பெரு வளத்தொடும் படையொடுந் துன்னிப் பின்னர் வந்தமர் 
		இயற்றியே பெருந்திறல் பெறுவேன். 
       
        | 
		 323  | 
    
      | 
		 780
        | 
		 வசைய தன்றிது 
		செருச்செய்வோர் பற்பகல் மலைந்து விசையம் எய்தினும் மேன்மையாம் 
		வியப்புமாம் மேலுந் திசைவி ளங்குறு புகழுமாம் யானுமிச் செய்கை இசைவ 
		தேகடன் அறிஞர்தஞ் சூழ்ச்சியும் இ�தே. 
       
        | 
		 324  | 
    
      | 
		 781
        | 
		 என்று பற்பல 
		சூழ்ச்சிகள் மனத்திடை எண்ணி ஒன்றொர் மாயையின் மந்திரந் தன்னையுள் 
		ளுறுத்தி நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்தவண் நீங்கிப் பொன்றி 
		கழ்ந்திடும் மகேந்திரக் கோயிலுட் போனான். 
       
        | 
		 325  | 
    
      | 
		 782
        | 
		 மறைந்து போயசூர் 
		முயற்சியை மன்னுயிர் தோறும் உறைந்த நாயகன் கண்டனன் ஒருதனிச் செவ்வேல் 
		எறிந்து மற்றவன் உயிர்கொள நினைந்திலன் இன்னும் மறிந்து தீயவன் உய்யுமோ 
		வெனுந்திரு வருளால். 
       
        | 
		 326  | 
    
      | 
		 783
        | 
		 வேறு ஆய 
		வேலைதனில் ஆறுமு கன்பால் மாயனும் மயனும் வானவர் கோவும் ஏய தேவர்களும் 
		யாவரும் எய்தித் தூய வந்தனை யுடன்சொல லுற்றார். 
       
        | 
		 327  | 
    
      | 
		 784
        | 
		 என்று காசிபன் 
		இடந்தனில் வந்தான்  அன்று தான்முத லாவசு ரேசன் வென்றி யேகொடு வியப்பொ 
		டிருந்தான் உன்ற னோடுபொரு தோனன் இன்றே. 
       
        | 
		 328  | 
    
      | 
		 785
        | 
		 நீடு சூரனுடன் 
		நீஅமர் செய்தல் ஆடலே அலதை ஆங்கவன் ஆவி கோடல் சிந்தையிடை கொண்டலை 
		என்னின் ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ. 
       
        | 
		 329  | 
    
      | 
		 786
        | 
		 துங்க முற்றுடைய 
		சூர்தனை வேலான் மங்கு வித்திடுதி மற்றதன் முன்னம் அங்க வற்கெதிர் 
		அருஞ்சமர் ஆற்றல் எங்கண் வைத்துடைய இன்னருள் அன்றோ. 
       
        | 
		 330  | 
    
      | 
		 787
        | 
		 என்றி 
		யம்புதலும் எந்தை வினாவி நன்று நன்றென நகைத்தினி நம்முன் சென்று 
		நின்றுசமர் செய்திடின் வல்லே வென்று சூர்முதலை வீட்டுது மென்றான். 
       
        | 
		 331  | 
    
      | 
		 788
        | 
		 ஆடல் சேரும்அவு 
		ணன்சமர் ஆற்றா தோடி னாரும்உறு கண்ணுள ராகி வீடி னார்களௌ வீழ்ந்தயர் 
		வாரும் கூடி னார்குமர வேள்புடை வந்தார். 
       
        | 
		 332  | 
    
      | 
		 789
        | 
		 சங்க மாகியுறு 
		சாரதர் ஆனோர் எங்கள் நாயகனை எய்தி இகற்சூர் மங்குல் வானிடை மறைந்தது 
		தேரா அங்கண் ஞாலமலை வுற்றிட ஆர்த்தார். 
       
        | 
		 333  | 
    
      | 
		 790
        | 
		 திகழ்ந்த 
		பூதர்கள் செருத்தனில் எம்மை இகழ்ந்த சூ��நகரின் இம்மதில் வீட்டி 
		அகழ்ந்து கோபுரம் அகன்கட லிட்டு மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மின 
		மென்றார். 
       
        | 
		 334  | 
    
      | 
		 791
        | 
		 வம்மின் 
		வம்மினென வல்லைவி ளித்துத் தம்மி னங்களொடு சாரதர் மேலோர் அம்ம 
		கேந்திரம் அழுங்குற ஆர்த்திட் டிம்மெ னக்கடி தெயிற்புறம் உற்றார். 
       
        | 
		 335  | 
    
      | 
		 792
        | 
		 உற்ற காலைதனில் 
		ஒண்மதில் காக்குங் கொற்ற வீரன்அதி கோரன் மருங்கிற் சுற்று தானையொடு 
		சோர்விலன் நின்றான். 
       
        | 
		 336  | 
    
      | 
		 793
        | 
		 கண்டு ளான்நன 
		கனன்றிதழ் கவ்வித் திண்டி பேரிதி பிலைப்பறை ஆர்ப்பத் தண்ட லின்றிஅமர் 
		தானைக ளோடு மண்டு போர்புரிய வந்தெதிர் புக்கான். 
       
        | 
		 337  | 
    
      | 
		 794
        | 
		 எதிர்பு 
		குந்திடலும் ஏற்றெதிர் சென்றார் அதிர்பு குங்கழலின் ஆடுறு பூதர் 
		பொதிர்பு குந்தவருள் போந்துழி எண்ணில் கதிர்பு குந்தனையகாட்சி 
		படைத்தார். 
       
        | 
		 338  | 
    
      | 
		 795
        | 
		 தோம ரம்பரசு 
		குலமொ டெ�கம் ஏம ருங்கதைகள் ஏவினர் கோரன் மாம ருங்கவுணர் மற்றிவர் 
		குன்றங் காம ரம்படைக லந்து விடுத்தார். 
       
        | 
		 339  | 
    
      | 
		 796
        | 
		 எடுத்து வேழநிரை 
		எற்றினர் தேரை ஒடித்தே றிந்தனர் உகண்டுகள் பாய்மாப் பிடித்தொர் 
		கைகொடு பிசைந்தனர் வீரர் துடித்தி டும்படி துகைத்தனர் பூதர். 
       
        | 
		 340  | 
    
      | 
		 797
        | 
		 எறிவர் 
		பல்படையும் எய்குவர் வெங்கோல் குறிய ஈட்டிகொடு குத்துவர் வாளால் 
		செறுநர் தங்களுடல் சிந்துவர் இவ்வா றறியும் வெஞ்சமரை ஆற்றினர் தீயோர். 
       
        | 
		 341  | 
    
      | 
		 798
        | 
		 சோரி பொங்கின 
		சொரிந்தன மூளை சாரு றுங்குடர் சரிந்தன சேனங் காரி பம்பின கணங்களும் 
		ஏனை வீர ராம்அவுண ரும்பலர் வீந்தார். 
       
        | 
		 342  | 
    
      | 
		 799
        | 
		 ஈடு றுஞ்சமர் 
		இழைத்துழி இவ்வா றாடல் வெங்கணவர் ஆற்ற முனிந்தே சாடி வன்மையொடு 
		தாக்கலும் நில்லா தோடி னார்அவுண ராயுளர் முற்றும். 
       
        | 
		 343  | 
    
      | 
		 800
        | 
		 கோர மிக்கஅதி 
		கோர னெனும்பேர் வீரன் மற்றதனை நோக்கி வெகுண்டே ஓரே ழுத்தனை உரத்தொடு 
		பற்றிச் சார தப்படைஞர் தம்மொடு நேர்ந்தான். 
       
        | 
		 344  | 
    
      | 
		 801
        | 
		 தலைத னிற்கரத 
		லத்தினின் மொய்ம்பின் மலையி னிற்பெரிய மார்பின் முகத்தின் ஒலிக 
		ழற்கணம் உலைந்திட மோதிக் கொலைவி ளைத்தொருவ னேகுல வுற்றான். 
       
        | 
		 345  | 
    
      | 
		 802
        | 
		 ஈடி லாதொ 
		ரெழுப்படை பற்றா ஓடி யோடிஉரு முற்றென மோதி வீடு றாதமர் விளைத்திடு 
		பூதர் கோடி கோடியொ ரிமைப்பிடை கொன்றான். 
      	 
        | 
		 346  | 
    
      | 
		 803
        | 
		 இந்த வாறவன் 
		எழுக்கொடு தாக்க முந்து தூசிமுரி வுற்றது கண்டான் கந்தன் ஏவல்செய் 
		கணப்படை மன்னன் சிந்து மேகன்முனி வோடெதிர் சென்றான். 
       
        | 
		 347  | 
    
      | 
		 804
        | 
		 சென்ற பூதரிறை 
		செங்கையில் வைகுங் குன்றம் ஒன்றைஅதி கோர னெனும்பேர் வென்றி யான்மிசை 
		விடுத்தலும் நோக்கித் தன்த டக்கையெழு வால்தகர் வித்தான். 
       
        | 
		 348  | 
    
      | 
		 805
        | 
		 தகரும் எல்லைதரி 
		யார்கடல் வற்ற  முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல் வெகுளி யோடவுணர் 
		வேந்தனை எய்தி அகல மீதினில் அடித்தனன் மாதோ. 
       
        | 
		 349  | 
    
      | 
		 806
        | 
		 அடித்த 
		லோடும்அவு ணர்க்கிறை யானோன் இடுக்கண் எய்திஇவன் ஆவியை இன்னே 
		முடிப்பன் என்றுமுச லங்கொடு மொய்ம்பில் புடைத்த னன்உருமு வீழ்வது போல. 
       
        | 
		 350  | 
    
      | 
		 807
        | 
		 பூதன் 
		மொய்ம்பிடை புடைத்த எழுத்தான் ஏதமா முரிய ஏற்றெதிர் தெவ்வைக் காது 
		கைகொடு கபோலம் அதன்கண் மோத வேயவுணன் ஆவி முடிந்தான். 
       
        | 
		 351  | 
    
      | 
		 808
        | 
		 வாய்தல் போற்றிய 
		வயப்படை வீரன் சாத லுற்றுழி தலைத்தலை ஆர்த்துப் பூத சேனையா�கள் 
		பொம்மென ஏகி மூதெ யிற்றலை முதற்கடை சென்றார். 
       
        | 
		 352  | 
    
      | 
		 809
        | 
		 ஆண்டி யோசனை 
		ஒராயிரம் வான்போய் ஈண்டு செம்மணிக ளால்இய லுற்று மாண்ட தீயவட வாமுக 
		மேபோல் நீண்ட தோர்சிகரி நின்றது கண்டார். 
       
        | 
		 353  | 
    
      | 
		 810
        | 
		 கண்ட தோர்சிகரி 
		கைகொடு தொட்டுத் தெண்டி ரைக்கடலின் மேற்செல விட்டார் மண்டு மேருவரை 
		யின்குவ டேந்திச் சண்ட வாயுவிடு தன்மைய தென்ன. 
       
        | 
		 354  | 
    
      | 
		 811
        | 
		 அன்ன வேலையில் 
		அலைந்தது ஞாலம் பன்ன கேசனும் மிகப்பட ருற்றான் மன்னு சூருறை மகேந்திர 
		மூதூர் துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார். 
       
        | 
		 355  | 
    
      | 
		 812
        | 
		 ஈண்டு பூதரெறி 
		யுஞ்சிக ரந்தான் ஆண்டவ் வேலையிடை ஆழ்ந்தது தொன்னாள் நீண்ட மேனிஇறை 
		நின்றளி யாமுன் மாண்டு சாய்ந்துவிழு மந்தர மென்ன. 
       
        | 
		 356  | 
    
      | 
		 813
        | 
		 வேறு 
		பொலங்கெழு சிகரிஅப் புணரி சேர்தலின் கலங்கின விரிதிரைக் கைம்ம றித்ததால் 
		மலங்கின மொடுசுறா அருந்தி மிங்கில கிலங்களும் இரிந்ததங் கிளைக ளோடுமே. 
       
        | 
		 357  | 
    
      | 
		 814
        | 
		 மாதலம் 
		புகுந்திடுஞ் சிகரி வாரியுட் பூதரங் குய்த்திட விரைவிற் போவது 
		வேதமுன் கொணர்தரு மீனம் வேலையில் பாதலம் புகுந்திடு பான்மை போலுமே. 
       
        | 
		 358  | 
    
      | 
		 815
        | 
		 கழற்கறங் 
		கியதெனுங் கண்ணர் உந்திய அழற்கொழுந் தாகிய சிகரத் தாய்மணி 
		நிழற்பொலிந் திடுவன நீல வேலையில்  தழற்பரந் தழுவதோர் தன்மை போலுமே. 
       
        | 
		 359  | 
    
      | 
		 816
        | 
		 நாகர மணிவெயில் 
		நணுகும் வேலையில் சீகரம் உம்பர்போய்த் தெறிந்து மீள்வது சாகரம் 
		உற்றது தழலென் றுன்னியே மாகர வாரிநீர் வழங்கல போலுமால். 
       
        | 
		 360  | 
    
      | 
		 817
        | 
		 காமரு சிகரியில் 
		கவைஇய மாமணி ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே பூமது நுகர்தரு பொறிவண் 
		டானவை தாமரை வனமென அயிர்த்துச் சாருமால். 
       
        | 
		 361  | 
    
      | 
		 818
        | 
		 பங்கய மணிநிழற் 
		பரப்பை நோக்கியே இங்கிவை தசையென எண்ணிப் புட்குலம் நுங்கிய செல்வன 
		நொய்தின் எய்தியே அங்கிகொ லெனச்சில அகன்று போயின. 
       
        | 
		 362  | 
    
      | 
		 819
        | 
		 தெழித்திடும் 
		வேலையிற் செய்ய சோதியால் தழற்பொலி கோபுரந் தரிப்பின் றேகலால் 
		கிழித்தன பணிபதி கிளர்ந்து மற்றவர் விழித்தனர் உருமென வெருவி ஓடினா��. 
       
        | 
		 363  | 
    
      | 
		 820
        | 
		 பூதர்கள் 
		யாம்பிடு பொலங்கொள் போபுரம் ஓதநெஞ் சடைதலும் உதிரங் கான்றதால் சேதன 
		மோவிது செப்பும் என்றனர் மீதுறு கதிர்மணி வெயிலென் றுன்னலார். 
       
        | 
		 364  | 
    
      | 
		 821
        | 
		 பொற்பகல் 
		சிகரியுட் பொருந்தி ஆழ்பவர் அற்பகல் நுகருமீன் அவரை நுங்குமால் 
		முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே. 
       
        | 
		 365  | 
    
      | 
		 822
        | 
		 ஆனதொர் கோபுரம் 
		அளப்பி லாதமர் தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால் மீனுறு 
		திரைக்கடல் வௌ�ள மேற்செலா மாநகர் எயில்தனை வளைந்து புக்கதே. 
       
        | 
		 366  | 
    
      | 
		 823
        | 
		 காதிடும் 
		இயற்கையில் கால்கொண் டேகலிற் பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின் 
		மீதமர் காரினில் விமலன் விட்டிடும் பூதரை நிகர்த்ததப் புரிசை சூழ்புனல். 
       
        | 
		 367  | 
    
      | 
		 824
        | 
		 மைக்கடல் 
		புவியினும் மகேந்தி ரப்புரம் மிக்கது போலுமென் றைய மேற்கொளா இக்கணம் 
		நாடுதும் என்று சென்றபோல் புக்கது நகரிடைப் புணரி நீத்தமே. 
       
        | 
		 368  | 
    
      | 
		 825
        | 
		 மீனெனும் 
		மைந்தரை மிசைந்த தானவர்க் கானதொ ரிறுவரை அணுகிற் றிவ்விடை யானவர்ப் 
		பொருவனென் றெண்ணிச் சேறல்போல் போனதப் பதியினுட் புணரி நீத்தமே. 
       
        | 
		 369  | 
    
      | 
		 826
        | 
		 இவ்வகை 
		நிகழ்ந்திட எறிந்த கோபுரம் பௌவமுற் றிடுதலும் பைம்பொன் மாமதில் 
		வெவ்வலி அரசர்கள் விளிய ஈறிலாக் கௌவைகொள் திருநகர்க் காட்சித் தாயதே. 
       
        | 
		 370  | 
    
      | 
		 827
        | 
		 எல்லைமற் 
		றனையதில் ஈண்டு சாரதர் மல்லலம் புரிசையின் வடாது பாங்கரை  ஒல்லையில் 
		தம்பதத் துதைப்பச் சாய்ந்தது செல்லுற வீழ்ந்திடு சிகர மேயென. 
       
        | 
		 371  | 
    
      | 
		 828
        | 
		 மாமதில் 
		சாய்தலும் வலிய பூதர்கள் காமரு நகரினுட் கலந்து நண்ணினார் ஏமரு 
		கடங்கலுழ் இபங்கள் ஈண்டியோர் தாமரை மலர்த்தடந் தன்னிற் புக்கபோல். 
       
        | 
		 372  | 
    
      | 
		 829
        | 
		 கானுறு பங்கயக் 
		கடவுட் கிப்பகல் போனதோர் காலையிற் புணரி யாவையும் மாநிலங் கொள்வது 
		மானப் பூதவெஞ் சேனைகள் மகேந்திர புரத்திற் சென்றவே. 
       
        | 
		 373  | 
    
      | 
		 830
        | 
		 புக்கனர் 
		வீரர்கள் புயலின் மேனியுஞ் செக்கரங் குஞ்சியாந் தீயுங் கைகளாய் 
		மிக்கெழு புணரியும் வேறு வேறுறா மைக்கடல் உலப்பில வருவ போலவே. 
       
        | 
		 374  | 
    
      | 
		 831
        | 
		 துதித்திட 
		அரியவன் நகரில் துண்ணென எதிர்த்திடு தானவர் இனத்தை ஒல்லையில் 
		சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும் உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே. 
       
        | 
		 375  | 
    
      | 
		 832
        | 
		 மதரொடு 
		குறுகும்அவ் வயவெம் பூதர்கள் அதிர்கழல் அடிகளால் அளப்பில் மாளிகை 
		பிதிர்பட உந்தலும் பிறங்கு பூழிகள் கதிருறு கதியினுங் கடந்து போனவே. 
       
        | 
		 376  | 
    
      | 
		 833
        | 
		 வேறு அங்கவ் 
		வெல்லையிற் சாரத வேந்தர்கள் அயில்வேற் புங்க வன்தனை நீங்கியாம் 
		அவுணர்கோன் புரத்துள் இங்கி னிப்படர் கின்றது தக்கதன் றென்னாச் செங்க 
		ளந்தனின் மீண்டனர் சேனையுந் தாமு. 
       
        | 
		 377  | 
    
      | 
		 834
        | 
		 ஆன காலையிற் 
		பூதர்தஞ் செய்கைகள் அனைத்தும் ஞான நாயகன் காண்குறா நல்லருள் புரிந்து 
		மான வேற்டை வீரரும் அமரரும் வழுத்தச் சேனை யாவையுங் கொண்டுதன் பாசறை 
		சேர்ந்தான். 
       
        | 
		 378  | 
    
      | 
		 835
        | 
		 பாச றைப்புகு 
		குமரவேள் பாரிடப் பகுதி ஆச றப்புனை ஆவணச் சூழல்போய் அமர வாச வத்தனிக் 
		கடவுளா தியர்புடை வழுத்த ஈச னிற்சிறந் தரியணை தன்னில்வீற் றிருந்தான். 
       
        | 
		 379  | 
    
      | 
		 836
        | 
		 ஈண்டு தானவர் 
		இலக்கம்வௌ� ளத்தரும் இன்னே மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க் கரத்தால் 
		தீண்டி வான்மையிற் குறைந்தனன் என்றுசெஞ் சுடரோன் ஆண்டு மூழ்குவான் 
		புக்கென அளக்கரை அடைந்தான். 
       
        | 
		 380  | 
    
      | 
		 837
        | 
		 வேறு புரந்தர 
		னாதியர் புன்மை நீக்கியே பெருந்திரு வுதவுவான் பிரான்தன் காதலன் 
		இருந்தனன் பாசறை ஈது நின்றிடத் திருந்தலர் மாட்டுறுஞ் செய்கை 
		செப்புவாம். 
       
        | 
		 381  | 
    
      | 
		 838
        | 
		 ஒருவரும் 
		ஔத்தினும் உணர்வு றாவகை அருவம தாகியே அகன்று சூர்முதல் பொருவரு 
		மகேந்திர புரத்துக் கோயிலுள் திருமகள் மணமனைச் சேறல் மேயினான். 
       
        | 
		 382  | 
    
      | 
		 839
        | 
		 பஞ்சடி நூபுரப் 
		பதுமை கோயில்போய் அஞ்சியல் அடுத்தமெல் லமளி மேலுறாத் துஞ்சலன் 
		யாரொடுஞ் சொல்லும் ஆடலன் வெஞ்சமர் வினையமே உன்னி மேவினான். 
       
        | 
		 383  | 
    
      | 
		 840
        | 
		 ஆனதொ ரெல்லையில் 
		அரசன் போர்செயப் போனதும் பொருதலும் புறந்தந் தோமென மாநகர் அதனிடை 
		வறியன் வந்ததும் பானுவின் பகைஞனுக் கொற்றர் பன்னினார். 
       
        | 
		 384  | 
    
      | 
		 841
        | 
		 சொன்னடை 
		மந்திரத் தொடா�பும் மாயமும் தன்னுறு படைகளும் சாதனஞ் செய்வோன் அன்னது 
		கேட்டலும் அலக்கண் எய்தியே மன்னுறு கடிநகர் வல்லை ஏகினான். 
       
        | 
		 385  | 
    
      | 
		 842
        | 
		 மணிநிரை இகலியே 
		மாறு வில்லுமிழ் இணையறு சினகரம் எய்திச் சேக்கைமேல் தணிவறு 
		சூழ்ச்சியோ டமர்ந்த தாதைதன் துணையடி வணங்கியே தொழுது கூறுவான். 
       
        | 
		 386  | 
    
      | 
		 843
        | 
		 மாற்றலர் 
		யாவரும் மறிய வல்லைபோர் ஆற்றுதி யாலென ஐய முற்பகல் சாற்றினை 
		விடுத்தனை தமியன் ஏகியே ஏற்றவர் தம்முடன் இகல்செய் தேனரோ. 
       
        | 
		 387  | 
    
      | 
		 844
        | 
		 உற்றிலன் 
		அறுமுகன் ஒழிந்த வீரர்கள்  சுற்றிய படையொடு துவன்றிப் போர்செய்தார் 
		பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான் மற்றவர் உணர்ச்சியும் வலியும் 
		மாற்றினேன். 
       
        | 
		 388  | 
    
      | 
		 845
        | 
		 சென்றமர் 
		இயற்றிய செறுநர் யாரையும் வென்றனன் அத்துணை விமலன் மாமகன் ஒன்றொரு 
		மாப்படை உய்ப்ப என்படை வன்றிறல் நீங்கியே வருந்தி மீண்டதே. 
       
        | 
		 389  | 
    
      | 
		 846
        | 
		 அன்னதோர் 
		பான்மையால் அனையா� யாவரும் பின்னுணர் வெய்தியே பெயர்ந்து போயினார் 
		என்னிது வெற்றியென் றியானும் மீண்டனன் உன்னொடும் உரைத்திலன் உள்ளம் 
		வௌ�கினேன். 
       
        | 
		 390  | 
    
      | 
		 847
        | 
		 நெற்றியங் 
		கண்ணுடை நிமலன் ஏனையோர் முற்றரு படைகளால் முடிவின் மாயையால் பற்றலர் 
		யாரையும் படுத்து நாளையே வெற்றிகொள் குவனெனா நென்னல் மீண்டனன். 
       
        | 
		 391  | 
    
      | 
		 848
        | 
		 ஞாயிறு வந்தபின் 
		நண்ண லா��மிசைப் போயமர் இயற்றிடப் புறத்திற் சென்றனன் ஆயதன் முன்னரே 
		அனிகந் தன்னுடன் ஏயென ஏகினை எந்தை நீயென்றார். 
       
        | 
		 392  | 
    
      | 
		 849
        | 
		 வரந்தனில் 
		அழிவுறா வள்ளல் ஈண்டுறு திருந்தல ருடன்அமர் செய்தற் காகவோர் 
		அருந்துணை வேண்டலை அதனை உன்னிமீண் டிருந்தனன் இப்பகல் ஈதென் செய்கையே. 
       
        | 
		 393  | 
    
      | 
		 850
        | 
		 ஓர்ந்திலை 
		இத்திறம் உணர்வு ளாரொடுந் தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை 
		சார்ந்திடு நாற்பெருந் தானை தன்னொடும் போ�ந்தனை அமர்க்கிது பெருமைப் 
		பாலதோ. 
       
        | 
		 394  | 
    
      | 
		 851
        | 
		 அமரருக் 
		காக்கமும் அவுணர்க் கேக்கமும் அமையவர் முதல்வனுக் கின்பும் நல்கினை 
		குமரனைக் கணங்களைக் குறித்து மன்னநீ சமா�னுக் கேகுதல் தலைமை யாகுமோ. 
       
        | 
		 395  | 
    
      | 
		 852
        | 
		 திகழ்ச்சிகொள் 
		மேலவர் சிறியர் தம்மொடு நிகழச்சிகொள் போரிடை நேர்வ ரேயெனில் 
		புகழ்ச்சிய தில்லையால் பொருது வெல்லினும் இகழச்சியின் பாலதாம் எவரெ 
		வர்க்குமே. 
       
        | 
		 396  | 
    
      | 
		 853
        | 
		 சென்றது 
		கிடந்திடச் சிறியன் என்னினும் ஒன்றிவண் மொழிகுவன் உள்ளங் கோடியால் 
		இன்றிர வகன்றபின் ஏகி யாரையும் வென்றிகொண் டேகுவன் விடுத்தி யாலெனை.
      
        | 
		 397  | 
    
      | 
		 854
        | 
		 கொற்றவை 
		சிறுவனைக் கொற்றங் கொள்வதும் 
         சுற்றுறு படையையான் தொலைக்குந் தன்மையும் ஒற்றுவர் கண்டுமுன் உரைக்க 
		எந்தைநீ தெற்றென மகிழ்ச்சியிற் சிறந்து வைகுதி. 
       
        | 
		 398  | 
    
      | 
		 855
        | 
		 வேறு கூரிய 
		வேற்படை கொண்டுடை யோனை வீரர்கள் தம்மொடு வெற்றிகொ ளேனேல் வாரலன் 
		ஈண்டு மகிழ்ந்திறை நல்கும் பேரர சாட்சி பிடிக்கிலன் என்றான். 
       
        | 
		 399  | 
    
      | 
		 856
        | 
		 என்பது 
		கேட்டலும் எவ்வுல கிற்குந் துன்பு புரிந்திடு சூரபன் மாவாம் முன்பன் 
		மகிழ்ந்து முகத்தெதிர் நிற்குந் தன்புதல் வற்கிது சாற்றுதல் உற்றான். 
       
        | 
		 400  | 
    
      | 
		 857
        | 
		 மூவர்கள் 
		தாங்களும் முச்சக முள்ள தேவரும் ஐயிரு கிக்குடை யோரும் ஏவரும் 
		ஏற்கினும் எம்பியை அட்ட மேவலன் ஆற்றலை வெல்லரி தம்மா. 
       
        | 
		 401  | 
    
      | 
		 858
        | 
		 பன்னிரு செங்கை 
		படைத்துள சேயோன் தன்னொ டெதிர்ந்து சமர்த்தொழில் செய்வார் என்னல 
		தில்லை இவன்சிறி யோனென் றுன்னலை வன்மையின் ஒப்பில னேகாண். 
       
        | 
		 402  | 
    
      | 
		 859
        | 
		 குன்றம் 
		எறிந்திடு கூரிய வேற்கை வன்றிற லாளனை வன்மையில் யானே வென்றிடு 
		கின்றனன் மேலது நிற்க ஒன்றுள தைய உரைப்பது கேண்மோ. 
       
        | 
		 403  | 
    
      | 
		 860
        | 
		 ஒற்றென வந்துநம் 
		மூர்அலை வித்துப் பற்றலர் நீடு படைக்கிறை யாகுங் கொற்ற வனைத்தனி கூவி 
		மலைந்து செற்றனை ஏகுதி சேனையொ டென்றான்.
      
        | 
		 404  | 
    
      | 
		 861
        | 
		 தந்தை புகன்றிடு 
		தன்மையை ஓரா எந்தை பிராற்குளம் இத்திற மாமேல் முந்திறை தன்னின் 
		முடிப்பனி தென்ன மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன். 
       
        | 
		 405  | 
    
      | 
		 862
        | 
		 அடுசமர் செய்வகை 
		ஆங்கவன் ஏக விடையது நல்கி வியத்தகு மன்னன் இடையுறு சூழ்ச்சிக 
		ளியாவும் இகந்து மிடைதரு தொல்வள மேவி இருந்தான். 
       
        | 
		 406  | 
    
      | 
		 863
        | 
		 தாதைதன் ஏவல்த 
		லைக்கொடு சென்றே ஆதவன் மாற்றல னாகிய மைந்தன் ஏதமில் தன்குலம் ஏகலும் 
		அங்கண் தூதுவர் பற்பலர் துண்ணென வந்தார். 
       
        | 
		 407  | 
    
      | 
		 864
        | 
		 துங்கம துற்றுள 
		சூர்தரு மைந்தன் செங்கம லம்புரை சீறடி தன்னைத் தங்கண் முடிக்கொடு 
		தாழ்ந்தனர் நின்றே இங்கிவை கேட்க எனாமொழி குற்றார். 
       
        | 
		 408  | 
    
      | 
		 865
        | 
		 வேறு மன்னவன் 
		இன்றுபோய் மலைந்து மீண்டபின் ஒன்னலன் மாட்டுறும் உலப்பில் பூதர்கள் 
		இந்நகர் வடாதுசார் எய்திக் காவலோன் தன்னுயிர் கொண்டனர் தானை சிந்தினார். 
       
        | 
		 409  | 
    
      | 
		 866
        | 
		 தகுவர்தம் 
		மாப்படை தலைய ழிந்தபின் அகலிரு விசும்பளந் தாண்டு நின்றிடு சிகரியைக் 
		கீண்டுதஞ் செங்கை யாலெடா வெகுளியொ டளக்கரின் மீது வீசினார். 
       
        | 
		 410  | 
    
      | 
		 867
        | 
		 நீடிய சிகரிபோய் 
		நேமி புக்கபின் மாடுறு வடபுல மதிலை முற்றவுஞ் சாடினர் மீண்டனர் தலைவ 
		இந்நகர் கோடில தாங்கடற் குட்டம் போன்றதே. 
       
        | 
		 411  | 
    
      | 
		 868
        | 
		 என்றலும் 
		வினவியே ஏந்தல் தன்புடை சென்றிடும் வயவரிற் சிலரை நோக்கியே வன்றிற 
		லுடையநம் மரப்ல் தச்சனை ஒன்றொரு கணத்தின்முன் உய்த்தினர் என்னவே. 
       
        | 
		 412  | 
    
      | 
		 869
        | 
		 ஆயவர் 
		விரைந்துபோய் அவுணத் தச்சனை மேயினர் இறைமகன் விளித்து ளானெனக் 
		கூயினர் வருகெனக கொடுவந் துய்த்தனர் மாயிருங் கதிரைமுன் வெகுண்ட 
		மைந்தன்முன். 
       
        | 
		 413  | 
    
      | 
		 870
        | 
		 தன்னடி வணங்கியே 
		தச்சன் நிற்றலும் மன்னவர் மன்னவன் மதலை வல்லைநீ இந்நகர் வடமதில் 
		சிகரி ஏனவுந் தொன்னெறி அமைக்கெனச் சொற்றுத் தூண்டினான். 
       
        | 
		 414  | 
    
      | 
		 871
        | 
		 எல்லைமற் 
		றன்னதின் எல்லை தன்பகை கல்லுயர் மொய்ம்பன்மா காயன் என்பதோர் வல்லவு 
		ணன்தனை வருதி என்றுகூய் ஒல்லையின் இனையதொன் றுரைத்தல் மேயினான். 
       
        | 
		 415  | 
    
      | 
		 872
        | 
		 சேயுயர் வடமதிற் 
		சிகரி தன்னிடைப் போயினை அந்நெறி புரத்தி யால்எனா ஆயிரப் பத்தெனும் 
		அணிக வௌ�ளமோ டேயினன் தானுறும் இருக்கை எய்தினான். 
       
        | 
		 416  | 
    
      | 
		 873
        | 
		 அத்துணை ஏகியே 
		அவுணர் கம்மியன் உத்தர நெடுமதில் ஓங்கு கோபுரஞ் சித்திர வுறுபபொடு 
		சித்தத் துன்னியே வித்தக வன்மையால் விதித்துப் போகவே. 
       
        | 
		 417  | 
    
      | 
		 874
        | 
		 அடுகரி 
		புரவிதேர் அவுணர் தானையாங் கடலுடன் சென்றுமா காயன் என்பவன் வடமதிற் 
		சிகரியின் வாய்தல் போற்றியே சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான். 
       
        | 
		 418  | 
    
      | 
		 875
        | 
		 ஆயது நிகழ்வுழி 
		ஆழி வெற்பின்வாய் ஞாயிறு நணுகநள் ளிருளின் யாமினி போயது மெய்ப்புலன் 
		புந்தி சேர்வுழி மாயைய தகன்றிடும் வண்ணம் என்னவே. 
       
        | 
		 419  | 
    
      | 
		 876
        | 
		 கங்குலென் 
		றுரைபெறு கடவுட் கற்புடை நங்கையை மேவுவான் நயப்பு மேற்கொளா அங்கவ 
		ளைத்தொடர்ந்து தணுகு வானெனச் செங்கதிர் அண்ணல்கீழ்த் திசையில் 
		எய்தினான்.
      
        | 
		 420  |