Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranamபாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876)யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) > தக்ஷ காண்டம் (1 - 403)தக்ஷ காண்டம் (404 - 907)  > தக்ஷ காண்டம் (908-1562 )தக்ஷ காண்டம் (1563 - 2067)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 4. யுத்த காண்டம் / படலம் 8-11 (1304 - 1922)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 4 (verses 1304 - 1922)


Acknowledgements: Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website ' http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம்

1304 -1545

9. மூவாயிரர் வதைப் படலம்

1546 - 1633

10. தருமகோபன் வதைப் படலம்

1634 - 1713

11. பானுகோபன் வதைப் படம்

1714 - 1922


செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

4 யுத்த காண்டம்

8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம்* (1304 -1545)
( * நாலாநாட் பகல் அக்கினிமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.)

    1304

    எட்டாசையு ளோர்களை எண்கரியைக்
    கட்டாவுறு சில்கதி ரைப்பரியை
    முட்டாவரு தேரினை முன்கொணரா
    வட்டாடிய தோர்வலி பெற்றுடையான்.

    1

    1305

    கருவாயுறு கின்றதொர் காலைமுதல்
    திருமாதுடன் முற்றழல் சிந்திடலும்
    பெருமாயவள் வந்துபி றந்திடுவோன்
    எரிமாமுகன் என்ற இயற்பெயரான்.

    2

    1306

    பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர்
    பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன்
    அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான்
    முன்னாட்கொடு வந்ததொர் மொய்ம்புடையான்.

    3

    1307

    முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன்
    தன்னைச்சிறை யிட்டது தான்வினவா
    மன்னுற்றிடு சோமதனை வைகல்பல
    இன்னற்பட வசே¤றை இட்டுடையான்.

    4

    1308

    தெய்வப்படை தாங்கிய செங்கையினான்
    ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான்
    மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான்
    எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான்.

    5

    1309

    அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம்
    வந்தானடி தன்னை வணங்கியிவண்
    எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ்
    சிந்தாகுல மோடிது செப்பிடுவான்.

    6

    1310

    உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால்
    விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான்
    கண்ணாரெயில் வேலி கடந்துநமை
    எண்ணாது புரத்திடை ஏகினால்.

    7

    1311

    ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம்
    வேகும்படி செந்தழல் வீசிடலும்
    மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா
    றாகும்புனல் சிந்தி அவித்தனவே.

    8

    1312

    மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண்
    டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங
    கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட்
    டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே.

    9

    1313

    அட்டானது கேட்டனம் ஆடகனை
    விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய்
    தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும்
    நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால்.

    10

    1314

    நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும்
    தஅங்குற்றிடு கின்றன மாநகரை
    உங்குற்றிடு தூதன் ஒறுத்தனால்
    இங்குற்ற நிகழ்சியி தென்றனனே.

    11

    1315

    செங்கோன்முற கோடிய தீயவுணன்
    அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால்
    வெங்கோரமு கத்து வியன்புதல்வன்
    தங்கோமுக மாவிது சாற்றிடுவான்.

    12

    1316

    மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ
    உன்னுற்றள மீதில் உருத்திடவே
    முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ
    என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ.

    13

    1317

    மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப்
    புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை
    அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன்
    விடைதந்தரு ளென்று விளம்பினனே.

    14

    1318

    நன்றேயிது செப்பினை நண்ணலனை
    வென்றேவரு கென்று விடுத்திடலும்
    நின்றேதொழு தவ்விடை நீங்கினனால்
    குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன்.

    15

    1319

    கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின்
    நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன்
    சீர்க்கோநக ரத்திடை சென்றனனால்
    போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான்.

    16

    1320

    மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல்
    மொய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக்
    கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே.

    17

    1321

    தன்றறதையி ¨திதரு தாயுதவும்
    பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே
    ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச்
    சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான்.

    18

    1322

    அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப்
    புறமுற்றனன் அங்கது போழ்துதனில்
    திறமற்றது தூதுவர் செப்புதல்முன்
    மறமுற்றிடு தானைகள் வந்தனவே.

    19

    1323

    ஓராயிர வௌ¢ளம் ஒருத்தலினம்
    தேரானவும் அத்தொகை திண்டிறல்மா
    ஈராயிர வௌ¢ள மியாவர்களும்
    ஆராய்வரி தலாவு ணக்கடலே.

    20

    1324

    வேறு
    ஆன காலையில் அங்கி முகாசுரன்
    மான மேற்கொண்டு மாற்றலா¢ யாரையும்
    யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச்
    சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான்.

    21

    1325

    நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே
    மல்கு காதலர் வந்து கலந்துழப்
    பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர்
    அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர்.

    22

    1326

    அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல்
    விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல்
    எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக்
    கருத்தின் நிற்கில காய்சின வேழமே.

    23

    1327

    மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன
    விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன
    எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர்
    கண்ணிற் கொப்பன கந்துக ராயியே.

    24

    1328

    வஞ்சம் நீடி அருளற்று மாயமே
    எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய்
    விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர்
    நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே.

    25

    1329

    தார்த்த டம்புயத் தானவர் பல்லியம்
    ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால்
    தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி
    வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல்.

    26

    1330

    சோதி மெய்யெழில் தூயன மாற்றியே
    மீது செல்லரும் வெவ்வியருள் உய்த்தலால்
    ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர்
    காதல் போன்ற கடிதெழும் பூழியே.

    27

    1331

    பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய
    மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம்
    நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன்தலை
    காட்டி வாங்குங் கணிகையர் போலவே.

    28

    1332

    சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண்
    ஆற ளாவிநின் றாடுவ கேதனம்
    ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள்
    வேறு ளாரையும் வெ·கிவி ளித்தல்போல்.

    29

    1333

    வீழு மும்மத வேழங்கள் மத்தகம்
    சூழி காலின் அசைதொறும் தோன்றுவ
    மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக்
    காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல்.

    30

    1334

    தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே.

    31

    1335

    வேறு
    எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி
    சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம்
    வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும்
    செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம்.

    321

    1336

    சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன்
    காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர்
    மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன்
    ஏமரு பூத சேனைக் கெதிருற எய்யித னானால்.

    33

    1337

    எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி
    அதி£¢ந்தன துடியுஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள்
    உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம்
    பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே.

    33

    1338

    தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி
    விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக்
    கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர்
    பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம்.

    35

    1339

    முத்தலைக் கழவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக்
    கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை
    எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை
    அத்தலை அவுணர் வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா.

    36

    1340

    தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும்
    முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண்
    மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும்
    செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய்.

    37

    1341

    இருபெபம் படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை
    வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர்
    பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ
    ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார்.

    38

    1342

    உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன்
    கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள
    படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி
    அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே.

    39

    1343

    இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக்
    கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத்
    தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே ரஞ்ச ஆர்க்கும்
    முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான்.

    40

    1344

    வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி
    சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி
    இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர் உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார்.

    41

    1345

    சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல்
    முற்றுறு பகழ தூவ முழங்கழ லென்னச் சீறி
    மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே
    நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும் உய்த்தான்.

    42

    1346

    உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற
    மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங்
    கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல்
    மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான்.

    43

    1347

    மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ
    மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி
    ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும்
    பூதல மிசையே வீழப் பொன்றினன் புயலின் பேரோன்.

    44

    1348

    புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி
    அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக
    இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப்
    பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான்.

    45

    1349

    வேறு
    வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய
    விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல்
    முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக்
    கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான்.

    46

    1350

    தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா
    மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங்
    கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின்
    நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும்.

    47

    1351

    ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின்
    ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும்
    மூரிப்பரி மாவிற்றன முருகன்படை வீரர்
    தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே.

    48

    1352

    ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா
    ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே
    பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற்
    கூடுற்றன பாறுற்றனகுறுகுற்றன கழுகே.

    49

    1353

    அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா
    மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான்
    கைக்கார்முகந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப்
    புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தாச்ர மழையே.

    45


    1354

    கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல்
    வருகின்ற உறுகின்றன மன்னன்மகன் முன்னம்
    பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும்
    இரிகின்றன படுகின்றன விருவோர்பக ழியுமே.

    51

    1355

    போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான்
    தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா
    ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர்
    ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான்.

    52

    1356

    மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான்
    வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச்
    சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங்
    கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர்.

    53

    1357

    இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக்
    கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா
    விடமாகிய எரிமாமுகன் விறலோர்புய வரைமேல்
    வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான்.

    54

    1358

    சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன் சரங்கள்
    மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன்
    முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ம்பின்
    அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தா£¢.

    55

    1359

    வேறு
    அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன்
    மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய்
    எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ்
    செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான்.

    56

    1360

    ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத்
    தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே
    வென்றிகொள் மொய்ம்புடை விடலை தன்னையுங்
    கொன்றிடு கின்றனன் என்று கூறினான்.

    57

    1361

    கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர்
    வேறுவே றடுகணை வீசி வெய்யவன்
    ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும்
    நூறினார் அவனுடல் நூழை யாக்கினார்.

    58

    1362

    ஆயது காலையில் அவுணன் வேறொரு
    பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல்
    தூயவன் படையினை எடுத்துத் துண்ணென
    நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான்.

    59

    1363

    அடலெரி முகத்தினான் ஆதி நாயகன்
    படைதொட அன்னது படியும் வானமும்
    வடவையின் உருவமாய் வரலும் அச்செயல்
    விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார்.

    60

    1364

    அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப்
    புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண்
    டினப்படு துணைவர்கள் யாரும் வாருண
    முனைப்டை தூண்டினர் முடியுஞ் செய்கையார்.

    61

    1365

    தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை
    சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை
    ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால்
    ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென.

    62

    1366

    சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத்
    துலகுளோர் வெருவர ஊழி யான்படை
    வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும்
    மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே.

    63

    1367

    மீண்டது போதலும் வீரர் அவ்விடை
    மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார்
    மூண்டிடு பொருங்கனல் முகத்தன் அங்கது
    காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான்.

    64

    1368

    ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும்
    மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள்
    கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத்
    திரங்கினர் வெருவினர் இந்து போயினார்.

    65

    1369

    நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா
    துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வந்
    தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான்
    வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே.

    66

    1370

    வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப்
    பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத்
    தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும்
    ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான் .

    67

    1371

    போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின்
    வீக்கிய கனைகழல் வீர வாகுவைத்
    தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன்
    நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான்.

    68

    1372

    வேறு
    எதிரா கியபூ தரைஏ னையரை
    மதியேன் நினையே அடவந் தனன்நீ
    அதுகா லையின்இங் ஙன்அடைந் த¨னீயல்
    விதியே உனைஎன் முன்விடுத் ததுவே.

    69

    1373

    கொன்றாய் பல¨ரி கொடுவெஞ் சமரின்
    வென்றாய் பலரை மிகைசெய் தனையாய்
    நின்றாய் வருவாய் நினதா யிருருக்
    கின்ற குவதோ இறுதிப் பகலே.

    70

    1374

    முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல்
    என்னைக் கருதேல் இனிஓ ரிறையில்
    உன்னைக் தலைகொய் தொருவன் னியையும்
    மன்னர்க் கிறைசே வடிவ¨தி திடுவேன்.

    71

    1375

    பூண்பால் முலைமா தா¢புணர்ச் சியெனும்
    ஆண்போர் தனிலே வலியற் றழியும்
    ஆண்பால் ஒருவன் அவனே அலனோ
    ஏண்பால் உனையா¢இவண்வென் றிலனேல்.

    72

    1376

    என்னா எதிரா இவையொப் பனசொற்
    சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன்
    பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத்
    தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான்.

    73

    1377

    முளையார் தரும்பொன் னவன்முந் துசமர்
    விளையா வடிவந் தனைவிட் டகலா
    வளையார் புனல்புக் கனன்அன் னவனுக்
    கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ.

    74

    1378

    மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம்
    மாண்டார் கதிரோன் பகைமற் ரொருவன்
    மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ
    ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ.

    75

    1379

    வீடிச் செருவில் விளிவா குதியோ
    பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென
    ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ
    நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே.

    76

    1380

    பார்காத் திடினும் பலதா னவரும்
    நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச்
    சூர்காத் திடினுந் தொலைவில் விறலோர்
    ஆர்காத் திடினும் அடுவேன் உனையே.

    77

    1381

    என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங்
    குன்றன் னசினத் தழல்கொம் மெனவே
    சென்றுள் ளமலைத் துழிதீ முகவன்
    வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே.

    78

    1382

    வேறு
    நடுத்தான்அகன் றிடுசூர்மகன் நாணோதையைச் சிலைநின்
    றெடுத்தான்எடுத் தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான்
    உடுத்தான்உதிர்ந் தனசேடனும் உலைந்தான்உல கனைத்துங்
    கெடுத்தான்இவ னெனவானவார் கிளையோடின அன்றே.

    79

    1383

    அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன்
    கைக்கார்முகம் இருகால்வைத் தொருகாலொலி காட்டத்
    திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி
    இக்காலம தோபார்முழு திறுங்காலம தென்றார்

    80

    1384

    என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ்
    கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன்
    மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப்
    பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான்.

    81

    1385

    செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன்
    ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப
    எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து
    மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான்.

    82

    1386

    கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து
    புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன் திளவல்
    முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை
    அண்டங்கிழ படஊதினன் அவுணப்படை புகழ.

    83

    1387

    ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண்
    ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத் துய்த்துச்
    சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன்
    தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான்.

    84

    1388

    சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக்
    கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாமுகன் அதன்மேல்
    குதையொன்றினைத் துரந்தேயருட் குமரேசனுக் கிளையோன்
    சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான்.

    85

    1389

    மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன்
    காற்றோன்படை துரக்கின்றுழ இவனும்மது கடவக்
    கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன்
    வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான்.

    86

    1390

    மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை
    வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி
    நாகத்தமர் கறைநீவிய நவிகூரிய கணைநூ
    றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான்.

    87

    1391

    தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள்
    மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும்
    கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட
    பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான்.

    88

    1392

    விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின்
    றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும்
    ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம்
    அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக.

    89

    1393

    விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூ£¢உரும் ஏற்றால்
    நௌ¤ந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத்
    தௌ¤ந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய்
    எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான்.

    90

    1394

    மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான்
    அழிபட்டிடின் வருவாயென அந்நாட்சிறு காலைப்
    பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி
    வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான்.

    91

    1395

    வேறு
    விஞ்சுந் தொல்விறல் மேவு சூர்தரு
    மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும்
    நஞ்சுந துண்ணென நண்ணு காளிதன்
    நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள்.

    92

    1396

    சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள்
    சூலங் கொண்ட லமர்ந்த தோளினாள்
    கோலம் பெற்ற குலிங்க வேணியாள்
    கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள்.

    93

    1397

    போதங் கொன்று பொறாமை மிக்குளாள்
    போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள்
    ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம்
    ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள்.

    94

    1398

    சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
    சங்கா ரத்தணி தந்த செங்கையாள்
    உங்கா ரத்தின் உரத்த ஆடையாள்
    உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள்.

    95

    1399

    ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்
    ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்
    காலத் தீயர்க ளிற்றின் மேலையோர்
    காலத் தீயர் கலங்கு காட்சியாள்.

    96

    1400

    அஞ்சத் தானடி யான வானவர்
    அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள்
    நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய்
    நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள்.

    97

    1401

    அங்கத் தன்மை யளாய மர்ந்திடும்
    அங்கத் தன்மை யளாய் காளிமால்
    சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன்
    சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள்.

    98

    1402

    வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை
    எல்லைப் பல்படை யாவை யுங்கொளா
    மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை
    செல்லக் கூறி செறிந்து சூழ்தர.

    99

    1403

    மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற
    வேதக் கூளிகள் ஏறு கேதனம்
    ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
    மேதக் கோசை மிகுத்து மேவவே.

    100

    1404

    வேறு

    விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர்
    எரிமுக மதலையை எய்தி நோக்கியான்
    உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ
    பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள்.

    101

    1405

    இவ்வகை அருளியே இளவல் பாற்படும்
    தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக்
    கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள்
    ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே.

    102

    1406

    ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென
    ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும்
    வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் றேற்றனர்
    வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு ளோரெலாம்.

    103

    1407

    காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம்
    வாளிகள் சிந்தினர் வரைநெ டுந்தரு
    நீளிகள் எழுக்கதை நேமி இன்னன
    கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார்.

    104

    1408

    அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள்
    எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக்
    கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள்
    பத்திரை தன்னருள் படைத்த காளியே.

    105

    1409

    வீசிய முத்தலை வெய்ய வேற்படை
    காய்சின எரிபுகை கான்று காளிகள்
    மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர்
    பாசன மருளுறப் படர்தல் உற்றதே.

    106

    1410

    சண்டிகை விடுபடை தனது வன்மையைக்
    கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர்
    உண்டிடும் இ·தென உன்னி யேழிரு
    புண்டரு சிலீமுகம் பொள்ளென் றேவினான்.

    107

    1411

    தீக்கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம்
    மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள்
    ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை
    நோக்கினள் காளியென் றைக்கும் நோன்மையாள்.

    108

    1412

    துண்ணென யான்விடு சூலந் தன்னையும்
    அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை
    எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன்
    உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள்.

    109

    1413

    என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற
    நின்றிடு சேனையங் கடலை நீக்கியே
    வென்றிடு வயப்புலி மிசைககொண் டார்த்திடாச்
    சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள்.

    110

    1414

    முன்னுற யான்விடு மூவி லைப்படை
    தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை
    இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி
    அன்னது காத்திடல் அரிது காணென்றாள்.

    111

    1415

    என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங்
    கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும்
    நின்றவை முழுவதும் நீறு செய்வனென்
    வன்றிறல் தெரிந்திலை மாதுநீ யென்றான்.

    112

    1416

    கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ்
    செற்றம தாகியே தெழித்துச் சண்டிகை
    மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள்
    சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே.

    113

    1417

    அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென்
    றரிந்தனர் பணியெனா இன்னும் இந்துவும்
    வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத்
    தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே.

    114

    1418

    எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு
    நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே
    அட்டனன் துணிபட அரியின் மேலவள்
    தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே.

    115

    1419

    எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ்
    செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால்
    அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப்
    பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ.

    116

    1420

    நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன்
    வாலுளை மடங்கனன் இருத்தல் மாண்பொரீஇப்
    பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல்
    ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள்.

    117

    1421

    ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர்
    கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத்
    தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந்
    தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள்.

    118

    1422

    நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான்
    தாக்கணங் காம்இவள் தன்ன தாவியை
    நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத்
    தூக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான்.

    119

    1423

    இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும்
    ஒடித்தன னாமென ஒருகை யாலுறப்
    பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத்
    தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள்.

    120

    1424

    கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும்
    உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர்
    தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய்
    இரங்கிய தவள்துயா¢ யாவர் கூறுவார்.

    121

    1425

    எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர்
    ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும்
    மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன
    விண்கிளர் அண்டபித் திகையும் விண்டதே.

    122

    1426

    திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல்
    வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க்
    கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன்
    உரைபெறு பெயரையும் ஒழிவுற் றாளரோ.

    123

    1427

    இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின
    ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ்
    செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள்
    வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள்.

    124

    1428

    ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட
    ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது
    நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை
    நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள்.

    125

    1429

    அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால்
    வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ
    புந்தியி லாதிவட் புக்க னன்எனாச்
    சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள்.

    126

    1430

    இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத்
    தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத்
    திகழ்ந்தனன் நின்றிடு திறலி னான்றனைப்
    புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள்.

    127

    1431

    கன்றிய கற்புடைக் கனலி மாமுகன்
    இன்றெனை அருச்சனை இயற்றி ஏத்தியே
    ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான்
    நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன்.

    128

    1432

    உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ்
    சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ
    நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின
    இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை.

    129

    1433

    கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை
    ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும்
    அறுத்தனை நிற்குதி அலரி தன்னைமுன்
    செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல்நீ.

    130

    1434

    அடையலர் தம்மைவென் றாறு மாமுகம்
    உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி
    நெடிதுபல் லூழியும் நீடி வாழ்தியால்
    கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள்.

    131

    1435

    இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர்
    வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச்
    சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை
    மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி.

    132

    1436

    வேறு
    சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங்
    கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத்
    திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று
    கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான்.

    133

    1437

    கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி
    ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச்
    சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன்
    வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான்.

    134

    1438

    சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக்
    கோலமுங் கொண்டு பாங்கிற் கூறிகள் சூழ வைகும்
    நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி
    வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ.

    135

    1439

    வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந்
    தூவுநுண் பனியா லன்றே துளும்புவ அ·தே போலத்
    தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமியேன் இங்ஙன்
    மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை.

    136

    1440

    இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வௌவி
    முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி
    அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான்
    மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இ·தே என்றான்.

    137

    1441

    கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர்
    அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று
    வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு
    முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான்.

    138

    1442

    கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா
    முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா
    நெடுந்தனிச் சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்துத் தானும்
    அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி.

    139

    1443

    வேறு
    அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் அமைந்தன்
    மறத்தினொடு நூறுசரம் வாலியன் பூட்டிச்
    சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக்
    குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான்.

    140

    1444

    தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ்
    கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே
    ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட
    மூரிவரி வெஞ்சிலை முரித்தமா¢ விளைத்தான்.

    141

    1445

    வில்லது முரிந்திடலும் வேறோ£சிலை வாங்கிக
    கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே
    கொல்வனெனும் வெய்யமொழி கூறிமண நாறும்
    அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான்.

    142

    1446

    அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும்
    உய்த்திடின் எனக்குவரும் ஊதியம்என் என்னாச்
    சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர
    பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான்.

    143

    1447

    வாரிதி வளாகம்அரை மாத்திரையின் உண்ணும்
    வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை
    நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா
    யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே.

    1442

    1448

    அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன்
    தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி
    வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி
    மின்னுவென வீரனிடை மீண்டுபடா¢ந் தன்றே.

    145

    1449

    வேறு
    வெய்யஅக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன்
    ஒய்யென அச்செயல் உம்பர் நோக்குறா
    ஐயனை வாழ்த்திநின் றலரின் மாரிதூய்
    மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார்.

    146

    1450

    புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும்
    துறந்தனா¢ உவகையால் சொல்லும் ஆடலர்
    சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட்
    பிறந்திடு மைந்தரதம் பெற்றி எய்தினார்.

    147

    1451

    எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன்
    பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம்
    ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச்
    செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர்.

    148

    1452

    முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர்
    பொற்புடை இளையவன் புடையிற் சுற்றிடாக்
    கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை
    சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார்.

    149

    1453

    செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன்
    கைதனில் இருந்ததோ£¢ கார்மு கம்வளைஇ
    நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல்
    எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே.

    150

    1454

    இத்திறங் கணமதொன் றிடைய றாமலே
    கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை
    உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும்
    மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே.

    151

    1455

    எறிந்திடு படைகளும் எய்த கோல்களும்
    முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமுஞ்
    செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும்
    தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார்.

    152

    1456

    வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன
    வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன
    சூழுறும் அவுணரும் தோலைந்து போயினார்
    பாழியம் தோளினான் பகழித் தன்மையால்.

    153

    1457

    பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை
    வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச்
    சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல்
    ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலால்.

    154

    1458

    பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும்
    நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல்
    புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால்
    கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே.

    155

    1459

    மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி
    தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை
    ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற
    ஆமையிற் போவன குருதி ஆற்றினே.

    156

    1460

    கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின்
    தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர்
    பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற
    வாரிதி வடவையுண் டுலவு மாண்பென.

    157

    1461

    கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய
    குருதியம் புனல்மழை குலாவும் வைகலின்
    வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா
    அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால்.

    158

    1462

    மீளிகள் குருதிநீர் வௌ¢ள மாயதில்
    வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங்
    கோளுறு மயிலையிற் கலவக் கண்டுதங்
    கேளிரென றெதிர்வன கெழும வேலைமீன்.

    159

    1463

    அழல்பொரு செக்கர்வா னகத்தின் மாமதிக்
    குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல்
    நிழல்பொதி கவிதைதந் நெடிய தாளற
    ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே.

    160

    1464

    அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால்
    தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக்
    கொலைபுரி மறவர்தங் குடா¤ற் பின்னியே
    வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே.

    161

    1465

    ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங்
    கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம்
    மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும்
    காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம்.

    162

    1466

    தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய
    சாரதி தலையினும் புரவி தம்மினுஞ்
    சோரிகள் இழிவன தொலைந்த வையமும்
    ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே.

    163

    1467

    சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு
    துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர்
    கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம்
    இனமென எதி£¢தழீஇ யிரங்கு கின்றவே.

    164

    1468

    விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை
    இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார்
    கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத்
    திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார்.

    165

    1469

    மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக்
    கழுக்களுங் கால்படக் கவலுற் றார்சிலர்
    விழுக்கொடு வள்ளுரம் விராய பூழியில்
    இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர்.

    166

    1470

    பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை
    நீந்தினர் ஒருசிலர் நீத்திக் காலெழா
    தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார்
    மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே.

    167

    1471

    காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை
    ஈண்டிய வௌ¢ளிடை இளவல் மேனியாய்
    நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே
    மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார்.

    168

    1472

    துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா
    மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத்
    தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர்
    கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர்.

    169

    1473

    எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே
    தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம்
    பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா
    நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர்.

    170

    1474

    பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத்
    திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம
    நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங்
    கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார்.

    171

    1475

    சூளுறு போரிடைத் தொலைந்து போகியே
    நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய்
    ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை
    ஞாளிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர்.

    172

    1476

    தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள்
    தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து ளோர்சிலர்
    நாயின துருக்கொடு நடக்க ஞாளிகள்
    ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர்.

    173

    1477

    விசையொடு சாரதர் விரவ வேற்றுரு
    இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார்
    தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும்
    அசைவில ராகியே அழுங்கி னார்சிலர்.

    174

    1478

    புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட
    மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக்
    கண்டிலர் சிரந்தெரீஇக் கவன்ற ரற்றிய
    ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர்.

    175

    1479

    சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே
    ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெரீஇ
    வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள்
    பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர்.

    176

    1480

    அழிதரு வோர்தமை அவரின் முன்னரே
    கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண்
    வழிதரு செலவினில் வந்து பற்றியெம்
    பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர்.

    177

    1481

    வல்விரை புறவையை நோக்கி மற்றவட்
    செல்லுதிர் பூதா¢கள் தெரியக் கண்டிரேல்
    இல்லையிந் நெறிதனில் இறந்து ளோரெனச்
    சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர்.

    178

    1482

    காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை
    ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய
    பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள்
    நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர்.

    179

    1483

    அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங்
    கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக்
    குடர்கெழு சோரியங் குடிஞைக் கண்ணுறீஇக்
    கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர்.

    180

    1484

    சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம
    தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர்
    சோரிய துரமிசை துதையப் பூசியே
    வீரர்கள் இவரென மேவு வார்சிலர்.

    181

    1485

    இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா
    வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும்
    மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங்
    கௌவையின் அரற்றின கடலு டைந்தபோல்.

    182

    1486

    அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே
    செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை
    எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ்
    சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார்.

    183

    1487

    எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம்
    உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய்
    அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா
    புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான்.

    184

    1488

    புண்டர நீறணி புனிதன் பாங்கரின்
    மிண்டினர் இவரலாம் மேவி நிற்றலும்
    எண்டகும் இளையவா¢ எழுவர் தம்மையுங்
    கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான்.

    185

    1489

    ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர்
    மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும்
    மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ
    ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான்.

    186

    1490

    என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன்
    உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன்
    கொன்றனன் அவருயிர் கூற்றும் வௌவினான்
    பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால்.

    187

    1491

    இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை
    ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள
    தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத்
    தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான்.

    188

    1492

    உக்கிரன் இனையன உரைப்ப யாரினும்
    மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப்
    பக்கம தாயினர் படர ஏகினான்
    தொக்குறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லைகளாய்.

    189

    1493

    வேறு

    ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப்
    பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள்
    காய்சின அங்கி செங்கண் கான்றிடக் ளேவ ரத்து
    வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான்.

    190

    1494

    கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக்
    கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வான்
    விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி
    உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான்.

    191

    1495

    தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்வீர்
    எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றி ரென்னும்
    வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும்
    நம்பினேன் உம்மை என்னும் நானுமக் கயலோ என்னும்.

    192

    1496

    அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும்
    இங்குநீர் வடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும்
    துங்கவெம் படைகள் ஏந்திச் சூழந்துடன் துணையாய் வந்த
    உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும்.

    193

    1497

    அம்மவேவ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும்
    இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும்
    செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும்
    எம்மையா ளுடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும்.

    194

    1498

    சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின்
    ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும்
    சூரர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி
    வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும்.

    195

    1499

    துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச
    வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும்
    அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும்
    மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும்.

    196

    1500

    அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண
    விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல்
    விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினன் வேலுக் கென்னும்
    படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும்.

    197

    1501

    ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால்
    இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ
    வென்றிய தென்னும் என்றன் வீரமா சுணட தென்னும்
    பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும்.

    198

    1502

    வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை
    மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச்
    சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும்
    எல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே.

    199

    1503

    அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி
    இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி
    வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன்
    விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான்.

    200

    1504

    நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோ£¢ நல்க
    ஏற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது
    மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன்
    கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான்.

    201

    1505

    வேறு
    ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற
    வானோ ரேபோல் தானவ ரேபோல் வழசெல்லா
    ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி
    தானே உண்பான் கூற்றுவன் என்னும் மியோனே.

    202

    1506

    விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள்
    ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா
    தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத்
    தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ.

    203

    1507

    போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி
    மூதக் கோர்எண் டாரக மூல மொழிக்கேட்டு
    வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும்
    ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ.

    204

    1508

    ஆறுபட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங்
    கூறிட் டேவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால்
    சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான்
    மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ.

    205

    1509

    சீலந் தன்னால் ஓர்விழு போதைச் சிவனுக்கென்
    றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன் உயிர்வௌவிச்
    சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக்
    காலன் பன்னாள் தூங்கிய வண்ணங் காணானோ.

    206

    1510

    நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும்
    துஞ்சற் றுணற் றரன்மிசை வில்வந் தூர்த்தோனை
    வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற
    அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ.

    207

    1511

    அக்கா லத்தின் எல்லையின் மைந்தற் கரவென்றே
    முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை **
    மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம்
    இக்கால் கொண்டே அவரை உரைத்ததேன் யானன்றோ.
    ( ** ஒரு வேடன் தன் மகனுக்கு இறுதிக்காலத்தில், ஆகர [பிடுங்கு], பிரகர [அடி],
    சங்கர [கொல்] என்னும் சொற்களைக்கூறி, அதன்படி நட என்று கட்டளையிட்டு மாண்டான்
    அச்சொற்கள் தீமை குறித்தனவாயினும் சிவநாமம் அடங்கப் பெற்றமையால் அவன்
    சிவகதி அடைந்தான் என்பது இங்குக் குறித்த வரலாறாகும்.)

    208

    1512

    மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய
    துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின்
    இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி
    அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானே.

    209

    1513

    நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர்
    கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன்
    ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே
    சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும்.

    210

    1514

    வேறு
    என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து
    பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித்
    தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும
    மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான்.

    211

    1515

    வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன்
    கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க
    கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய்
    வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான்.

    212

    1516

    செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப்
    பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப்
    பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி
    மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான்.

    213

    1517

    கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன்
    விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி
    இருந்த மானேசோத் தரகிரித் தென்புறத் தியம
    புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே.

    214

    1518

    தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணெனப்போய்
    அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென்
    றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல்
    விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில்.

    215

    1519

    அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து
    துயரு ழந்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர்
    பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான்
    கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான்.

    216

    1520

    கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால்
    கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப்
    பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா
    அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான்.

    217

    1521

    ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின்
    மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட
    சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து
    கான விஞ்சையர் பாடல்கேட் டிரப்பது கண்டான்.

    218

    1522

    தொழு மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி
    முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன்
    ஆழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான்
    எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான்.

    219

    1523

    என்ற காலையில் எழுவரும் எழுந்திரு மருங்கு
    நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி
    ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும்
    மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ.

    220

    1524

    புக்க காலையின் எழுவரும் தம்முடன் புகுந்தார்
    மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில்
    தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள்
    அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றா£¢த்தார்.

    221

    1525

    இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து
    முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால்
    சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப்
    பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன்.

    222

    1526

    புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த
    எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான்
    வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும்
    சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான்.

    223

    1527

    எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல்
    கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும்
    திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து
    கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார்.

    224

    1528

    அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனகம்
    துன்ன தாகிய வந்தனன் இளவலைத் தொழுது
    மின்னு லாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய்
    முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான்.

    225

    1529

    எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக்
    குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி
    வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார்
    அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை.

    226

    1530

    அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார்
    தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன்
    இங்கு நின்இளை யா£¢உயிர் கொள்வனோ எவரும்
    வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும்.

    227

    1531

    வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான் வௌ¢ளித்
    தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ
    டுனது தம்பியர் தங்களை விளித்திவண் உய்த்தேன்
    முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென மொழிந்தான்.

    228

    1532

    அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல்
    நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள்
    வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண் டுற்றாம்
    புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான்.

    229

    1533

    புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும் புத்தேள்
    உவகை தன்னொடு தன்புரத் தேகினன் ஒன்னார்
    இகலை வெ·கியே பூதரும் துணைவரும் ஏத்த
    நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை நின்றான்.

    230

    1534

    நின்று மற்றிவை நாடிய ஒற்றா¢நீள் நகரில்
    சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர் செய்து
    வென்றி மொய்ம்பினன் விடுத்திடு வீரன்மாப் படையால்
    பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தனனெனப் புகன்றார்.

    231

    1535

    வேறு
    அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம்
    மிக்கான் புவியின் மிசைவீழ்ந் தயரா
    எக்கா லுமுறா தவிடர்க் கடலுட்
    புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான்.

    232

    1536

    உண்ணே யமதாம் உயிரே உறவே
    கண்ணே மணியே கனல்மா முகனே
    விண்ணே கினையோ இவண்மீள் கிலையால்
    எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே.

    233

    1537

    எந்தைக் கிளையான் தனையிந் நகரின்
    வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான்
    நொந்துற் றனைமெய் யுநுடங் கினையால்
    அந்தத் துயர்இங் ஙனமா றியதோ.

    234

    1538

    தேறா இகல்செய் திடுதே வரெலாம்
    மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத்
    தாறா இடர்என் வயின்ஆக் கினையால்
    கூறாய் இதுவுங் குமரற் கியல்போ.

    235

    1539

    காரோ திமருங் குளகா ரணனோ
    சீரோ திமனோ திருமா லவனோ
    நேரோ தியவொற் றடநீ முடிகென்
    றாரோ தினரோ அதறிந் திலனே.

    236

    1540

    பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ
    மெய்விட் டனையென் றுவிளம் பினரால்
    நெய்விட் டவயிற் படைநே ரலன்முன்
    கைவிட் டெனையே குவதுன் கடனோ.

    237

    1541

    தூதா னவன்வா ளிதுணித் திடவிண்
    மீதே கினையென் றுவிளம் பினர்அப்
    போதே அதுணர்ந் துபொறுத் தனனால்
    ஏதே துபொறா தினமென் னுயிரே.

    238

    1542

    ஆவா தமியேன் அயர்வுற் றிடவே
    மூவா இளமைந் தமுடிந் தனையே
    ஓவா துமகப் பெறவோங் குதவத்
    தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே.

    239

    1543

    எல்லே உனைநம் புவதென் அகல்வாய்
    சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன்
    கல்லே புரைநின் கவின்மார் பதனை
    வல்லே தழுவிக் கொளவந் தருளே.

    240

    1544

    செய்யாய் கரியாய் திருவே சிறுவா
    மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற்
    கையாய் அரசே களிறே தமியேற்
    கையா வெனைநீ யும்அயர்த் தனையோ.

    241

    1545

    என்றின் னனபன் னியிரங் குதலும்
    நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத்
    துன்றுந் துயரக் கடல்துன் னினளால்
    அன்றந் நகர்மிக் கதழுங் குரலே.

    242


    ஆகத் திருவிருத்தம் - 1545
    ------

    9. மூவாயிரர் வதைப் படலம்* (1546 - 1633)

    ( * நாலாநாட் பகலே மூவாயிரவர் வதை நிகழந்ததாகும்.)

    1546

    ஆயதோர் காலைமூ வாயிர ரத்தொகை
    மேயின மைந்தர்கள் வினவி ஈதெலாம்
    மாயிரு விசும்பினை அளாவு மன்னவன்
    கோயிலை யடைந்தனர் குழுவொ டேகினார்.

    1

    1547

    துன்னுறு பழியெனும் சூறை எற்றிட
    இன்னலந் தெண்டிரை எறிய வைகிய
    மன்னியல் நோக்கியே வணக்கம் செய்தெழீஇ
    முன்னர்நின் றினையன மொழிதல் மேயினார்.

    2

    1548

    உரமிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும்
    பெருவிறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி
    எரிமுக னொருவனை ஏவி னாய்அவன்
    செருவினை அவரொடு செய்ய வல்லனோ.

    3

    1549

    வலியவர் தம்மையும் வரம்பின் மிக்குறின்
    மெலியவ ராயினும் வென்று போவரால்
    உலகினில் வழக்கமீ துணர்ந்தி லாய்கொலோ
    கலைபயில் கற்புடைக் காவல் மன்னனே.

    4

    1550

    ஒட்டலர் குழுவினுள் ஒரும கன்றனை
    விட்டனை மேல்வரும் வினையம் ஓர்ந்திலை
    அட்டுறு தா£¤னாய் அமரில் அங்கவன்
    பட்டனன் என்றிடிற் பரிதற் பாலையோ.

    5

    1551

    தீமுகன் ஒருவனுக் கிரங்கித் தேம்பலை
    யாமுளம் இரணியன் இன்னும் உற்றுளன்
    தாமரை மகிழ்நனைத் தளைப டுத்திய
    கோமகன் உளன்ஒரு குறையுண் டாகுமோ.

    6

    1552

    நண்ணல ராயினோர் நலிந்து செற்றிடக்
    கண்ணகல் தேர்பரி களிறு தானவர்
    எண்ணில மாய்ந்தவென் றிறையும் ஆகுலம்
    பண்ணலை ஐயஅப் பரிசு கேட்டிநீ.

    7

    1553

    ஏழெனுங் கடல்வறந் திடினும் நின்னடி
    சூழ்தரு படைக்கொரு தொலைவும் இல்லையால்
    ஊழியும் அழிகுறா ஒருவ நீயிவண்
    பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ.

    8

    1554

    நின்றுவா னளவெலாம் நிவந்த மேருவாங்
    குன்றினோர் தினைத்துணை குறைந்த தன்னதால்
    துன்றுநந் தானையுள் துன்ன லார்பொர
    இன்றுகா றாகவே இறந்த சேனையே.

    9

    1555

    சிறந்திடு தலைமையுந் திறலும் ஆக்கமும்
    மறந்தனை யாகியே வலிய னாகுநீ
    இறந்தவர் தமைநினைந் திரங்கற் பாலையோ
    புறந்தரு கின்றதோ ரமரர் போலவே.

    10

    1556

    அண்டர்தம் முதல்வனை அயனை மாயனைச்
    சண்டனைப் பவனனைத் தழலை யாரையும்
    விண்டொடர் செலவினில் விரைந்து பற்றியே
    கொண்டணை கின்றனம் குறிப்ப தாகுமேல்.

    11

    1557

    விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பொடு
    மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும்
    எண்ணினை என்னினும் யாங்கள் எந்தைநின்
    உண்ணினை வின்படி முடித்தும் ஒல்லையில்.

    12

    1558

    பன்னுவ தென்பல பணித்தி யாங்கள்போய்
    முன்னுறு பூதரை முரண்கொள் வீரரைப்
    பின்னுறு கந்தனைப் பிறரை ஈண்டொரு
    கன்னலின் வென்றுநின் கழல்கள் காண்டுமால்.

    13

    1559

    என்றிவை புகறலும் இடுக்கண் நீங்கியே
    நன்றிது மைந்தர்காள் நடமின் போர்க்கென
    வன்றிறல் முதல்வனை வணங்கிக் கைதொழா
    நின்றவர் ஏவரும் நீங்கி னாரரோ.

    14

    1560

    வேறு
    வன்னச் சிலைகொண் டனர்வான் கவசந்
    துன்னுற் றிடுவித் தனர்தூ ணியினை
    வென்னிற் செறிவித் தனர்வெவ் விரலிற்
    பொன்றுற் றிடுபுட் டில்புனைந் தனரால்.

    15

    1561

    சீர்புக் குறுகை படைசெங் கைகொளாத்
    தார்புக் கமர்தும் பைதனைத் தரியா
    மார்புக் கலமாக் கலன்வர்க் கமிடாத்
    தேர்புக் கனர்வந் தனசே னைகளே.

    16

    1562

    சங்கங் கள்முழங் கினதண் ணுமைகோ
    டெங்கெங் குமியம் பினவேண் படகந்
    துங்கங் கெழுபே ரிதுவைத் தனவால்
    அங்கங் குருமுற் றனவா மெனவே.

    17

    1563

    அவுணப் படையெண் ணிலஆற் றல்மிகுங்
    கவளக் கரிஎண் ணிலகா மருசீர்
    இவுளித் தொகைஎண் ணிலவீட் டமுறா
    உவணுற் றிடுதே ரும்உலப் பிலவே.

    18

    1564

    முழங்குற் றனபல் லியமும் மதமாத்
    தழங்குற் றனதேர் ஒலிதந் தனவால்
    அழுங்குற் றனவாம் பரியாங் கவைகள்
    விழுங்குற் றனபா ரொடுவிண் ணினையே.

    19

    1565

    நீடுற் றிடுதேர் களின்நீள் துவசம்
    ஆடுற் றனதா ரில்அளித் தொகுதி
    பாடுற் றனவெங் கொடிபா றுமிசை
    கூடுற் றனகூ ளிகுனித் தனவே.

    20

    1566

    தொகையா னைகடம் மொடுசூழ் கரியின்
    தகையா யினதா னவர்தம் முருவஞ்
    சிகையா ரழலா யினசென் னியெழும்
    புகையா னதுவான் எழுபூ ழியதே.

    21

    1567

    இப்பான் மையதா கியெழுந் துபடை
    அப்பால் விரவுற் றுழிஅன் னதுகண்
    டொப்பா ருமில்சூ ரன்உகந் தருள்கூர்
    மெய்ப்பா லகர்சென் றனர்வெய் தெனவே.

    22

    1568

    மூவா யிரர்தா னைகள்முந் துசெல
    ஏவா மெனவெம் மைகொடே குதலுந்
    தேவா னவர்கண் டனர்சிந் தைவெரீஇ
    யாவா வெனஅஞ் சியழுங் கினரே.

    23

    1569

    அக்கா லையின்மூ வகையா யிரரும்
    மெய்க்கார் புவிசென் றுவிரைந் தனபோல்
    தொக்கா டல்புரிந் திடுதொல் நிலமேற்
    புக்கார் அதுகண் டனர்பூ தர்களே.

    24

    1570

    எதிர்கின் றனர்பூ தர்களேற் றனரால்
    முதிர்கின் றசினங் கெழுமொய் யவுணர்
    அதிர்கின் றனபே £¤கள்அண் டமெலாம்
    பிதிர்கின் றனநே மிபிளந் ததுவே.

    25

    1571

    வாள்கொண் டெறிகின் றனர்வல் லெழுவுத்
    தோள்கொண் டிடுவெங் கதைதூண் டினரால்
    தாள்கொண் டசிலைக் கணைதாஞ் சொரிவார்
    நீள்கொண் டலையன் னநிசா சரரே.

    26

    1572

    சூலப் படைவிட் டனர்தொல் பரிதிக்
    கோலப் படைவிட் டனர்குந் தமுடன்
    ஆலப் படைவிட் டனர்ஆ டுகுறட்
    சாலப் படைநின் றுதளர்ந் திடவே.

    27

    1573

    அடுகுற் றிடுசூ லமடற் கதைகள்
    தொடுகுற் றனர்நே மிகள்தூண் டிடுவார்
    விடுகுற் றனர்வெற் பினைவெவ் வசுரர்
    படுகுற் றனர்ஆர்த் தனர்பா ரிடரே.

    28

    1574

    வீழ்கின் றனபட் டிடும்வீ ரருடல்
    தாழ்கின் றனசெம் புனல்சாய்ந் தனவால்
    ஆழ்கின் றனவே லையில்அங் கதன்வாய்
    மூழகின் றனபேய் கொடிமொய்த் தனவே.

    29

    1575

    மறக்குஞ் சரமா யினவாம் பரிதேர்
    சிறக்கின் றனபட் டனதீ அவுணர்
    துறக்கின் றனர்ஆ விதொலைந் திடுவார்
    இறக்கின் றகணங்களுமெண் ணிலவே.

    30

    1576

    வேறு
    காணாவது மூவாயிரர் கனல்வெஞ்சினந் திருகிக்
    கோணாகம தெனவேயடுங் கொடும்பூதரைக் குறுகி
    நீணாகம தெனவிண்டொட நிமிர்வெஞ்சிலை குனியா
    வேணார்குணத் தொலிகொண்டர் இதுகொல்லுரு மெனவே.

    31

    1577

    வாங்குற்றிடு சிலைதன்னிடை வல்லேசர மாரி
    தூங்குற்றிடு புயலாமெனச் சொரிந்தார்சொரிந் திடலும்
    ஏங்குற்றன பூதப்படை இரிகின்றன அதுகண்
    டாங்குற்றிடு கணவீரர்கள் அவுணர்க்கெதிர் புகுந்தார்.

    32

    1578

    தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின்
    துண்டத்தவர் பரிமான்தொகை தொலைப்பார்சிலர் பாகன்
    கண்டத்தலை உருளும்படி யுதைப்பார்சிலர் கரத்தால்
    அண்டத்தினில் அவர்தேரெடுத் தெறிவார்சிலர் அம்மா.

    33

    1579

    எழுக்கொண்டவர் தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய்
    மழுக்கொண்டவர் சிலையிற்றிட எறிவார்சிலர் வரையின்
    குழுக்கொண்டவர் அனிகந்தனைக் கொல்வார்சிலர் வார்வில்
    பழுக்கொண்டிடு கவடாமெனப் பறிப்பார்சிலர் முறிப்பார்.

    34

    1580

    தாவாதுயர் கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய
    மூவாயிர ரெனுமைந்தர்கள் முனியாச்சிலை குனியா
    ஓவாதுக முடிவெல்லையில் உருமுச்செறி வனபோல்
    தீவாயுமிழ் கனல்வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே.

    35

    1581

    நேர்புற்றமர் புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள்
    மார்புற்றிடத் தடந்தோளெனும் வரையுற்றிட முகத்தின்
    சார்புற்றிடக் கரமுற்றிடத் தாளுற்றிடச் செந்நீர்
    சோர்புற்றிடத் தளர்ந்தேமனந் துயருற்றிட நின்றார்.

    36

    1582

    கலக்கித்தட மலர்சிந்திடு களிறாமென அடல்செய்
    விலக்கற்கரு மூவாயிரர் வில்லாண்மையும் வல்லார்
    அலக்கட்படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி
    இலக்கத்தரி லோராயிரர் எரியாமெனச் செயிர்த்தார்.

    37

    1583

    குன்றேயென மிசைபோகிய கொறறப்புயத் தவன்முன்
    சென்றேதொழு திப்போரினைச் சிறயேங்களுக் கருண்மோ
    என்றேயுரைத் தனாவேண்டலும் இளையோன்அதற் கிசையா
    நன்றேயமா¢ செயநீவிர்கள் நடமின்னென அகன்றா£¢.

    38

    1584

    விசயன்சயன் இடபன்கர வீரன்அதி கோரன்
    அசலன்அதி குணன்வாமனன் அனந்தன்அக ளங்கன்
    வசையில்புகழ் அனகன்சத வலிமாருதன் வருணன்
    சசிகண்டகன் முதலாயிரர் சமரின்றலை புகுந்தார்.

    39

    1585

    முந்துற்றிடும் அவர்யாவரும் மூவாயிரர் எதிர்போய்க்
    கந்தக்கட வுளைஅன்பொடு கருத்திற்றொழு தேத்தி
    மைந்துற்றிடு தங்கார்முகம் வளையாவடி வாளி
    அந்தத்தினி முகிலாமென அவர்மேற்சொரிந் தார்த்தார்.

    40

    1586


    ஆர்க்கின்றதொர் பொழுதத்தினில் அவர்வில்வலி தன்னை
    மூர்க்கன்தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
    கூர்க்கின்றதொர் நெடுவாளிகள் குணிப்பில்லன பூட்டிச்
    சூர்க்கொண்டல்கள் தம்மோடமர் புரிந்தாலெனச் சொரிந்தார்.

    41

    1587

    மூவாயிரர் விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித்
    தாவாவிற லோர்ஆயிரர் தம்வாளியை அடுமால்
    மேவார்புகழ விறல்மைந்தர்கள் வெவ்வாளிகள் அவுணர்
    ஏவானவை துணியும்படி எதிர்சிந்திடும் விரைவில்.

    42

    1588

    இவ்வாறமர் புரிகின்றுழ இலக்கத்தவர் தேரைத்
    தெவ்வாகிய மூவாயிரர் சிதைவித்தனர் சரத்தால்
    அவ்வாறுதெ ரிந்தேயெமர் அவுணன்தரு மைந்தர்
    கைவார்சிலை யொடுதேரினை அழித்தார்கணை தூண்டி.

    43

    1589

    இலக்கத்தவர் எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச்
    சிலைக்கட்படு நெடுவெங்கணை சிந்திச்சிதை வித்தே
    நிலக்கட்பட மூவாயிரர் தொகைதன்னையும் நிறுவி
    மலைக்கட்படும் அரிபோற்புடை வருதேரிடைப் புகுந்தார்.

    44

    1590

    சிலைபோய்க்கட விச்சென்றிடு தேர்போயடல் செய்யும்
    கொலைபோயனி கம்போயுளங் கொள்ளும்பெரு மிதத்தின்
    நிலைபோய்வெகு ளுற்றேபுவி நின்றோர்தமைப் பிணித்த
    வலைபோகிய மானேயென வளைத்தார்வய மைந்தர்.

    45

    1591

    வேறு
    பொலம்படு தேரொடு பொன்ற வன்மைபோய்த்
    தலம்படும் அவுணர்கள் தளர்தல் மேயினார்
    இலம்படை வந்துழ ஈதல் சான்றவர்
    குலம்படு துயரொடு குறையும் தன்மைபோல்.

    46

    1592

    பறித்தனர் வரைகளைப் பழும ரம்பல
    முறித்தனர் வியர்பபுறு மொய்ம்பர் தம்மிசைச்
    செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும்
    மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார்.

    47

    1593

    தெவ்வரை யாகிய சிறார்கள் தொன்மரங்
    கைவரை வீசலுங் கணைகள் தூண்டியே
    இவ்வரை யெனுங்கணத் திறுத்து வீட்டினார்
    ஐவரை வென்றிகொள் அனிக வீரரே.

    48

    1594

    அட்டடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை
    விட்டன கிரியெலாங் கணையின் வீட்டியே
    நெட்டழற் பகழிகள் நிறத்தின் மூழ்குறத்
    தொட்டனர் உறுப்பெலாந் துளைத்தல் மேயினார்.

    49

    1595

    துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட
    விளைத்தனர் ஒருசிலர் இரிந்திட் டார்சிலர்
    களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்றுபோர்
    விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார்.

    50

    1596

    தேவரை வென்றுளார் சிலவர் மால்வரைக்
    காவலர் தேரினைக் கரங்க ளாலெடா
    மேவரும் புணரியுள் வீசி யார்த்தனர்
    ஓவென அமரர்கள் புலம்பி யோடவே.

    51

    1597

    நீசர்கள் ஒருசிலர் நேமி சென்றிட
    வீசிய தேரினும் விரைவின் நீங்குறாக்
    காசினிப் பாலராய்க் கார்மு கம்வளைஇ
    ஆசுக மழைசொரிந் தார்த்துப் பொங்கினார்.

    52

    1598

    மீண்டிடு பொருநர்கள் விசிக மாமழை
    தூண்டிட அவுணர்கள் தொகையிற் பற்பலர்
    காண்டலும் வடவையின் கணத்திற் சீறியே
    ஆண்டெதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினா£¢.

    53

    1599

    மறத்தொடு மருத்தின மரங்கொள் கொம்பரை
    இறுத்திடு தன்மைபோல் எந்தை பின்வரு
    திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மையாற்
    பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார்.

    54

    1600

    பற்றலர் கொடுமரம் பறித்துச் சிந்துழிச்
    செற்றமொ டெம்பிரான் சேனை வீரர்கள்
    மற்றவ ரும்பதை பதைப்ப மாண்கையால்
    எற்றினர் அனையரும் இடியிற் றாக்கினார்.

    55

    1601

    பரவிய உவரியும் பாலின் வேலையுந்
    திரைகளை எதிரெதிர் சிதறி யார்த்தெழீஇப்
    பொருதிற மேயெனப் பொருவில் மற்றொழில்
    இருதிற வயவரும் மிகலி ஆற்றினார்.

    56

    1602

    கொடுந்தொழி லாரொடு கொற்ற வீரர்கள்
    அடைந்தனர் இவ்வகை யாண்மைப் போரினைத்
    தொடர்ந்துநின் றியற்றியே தொல்லை வன்மைபோய்
    உடைந்தனர் விசயன்அங் கொருவன் அன்றியே.

    57

    1603

    இசையுறு தமரெலாம் இரிந்து போதலும்
    விசயனே யெனப்படும் வீரன் சீறியே
    வசையுறும் அவுணர்கோன் மகாரைக் கூற்றுவன்
    திசையுறு நகரிடைச் செலுத்து வேனென்றான்.

    58

    1604

    வேணியின் மதியுடை விமலன் நல்கியே
    வேணுறு வரிசிலை ஈறி லாதது
    தூணியி னிடையுறத் துன்னிற் றன்னதைப்
    பாணியில் எடுத்தனன் சமரியில் பாணியான்.

    59

    1605

    கரதலத் தெடுத்திடு கார்மு கந்தனை
    விரைவொடு கோட்டியே விசயன் என்பவன்
    ஒருதனி மாருதத் தோடிச் சூழ்வுறாச்
    சரமழை பொழிந்தனன் அவுணர் தங்கள்மேல்.

    60

    1606

    கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன்
    உரங்களை அறுத்தனன் உயர்திண் டோளொடு
    சிரங்களை அறுத்தனன் சிலரைக் கானிடை
    மரங்களை அறுத்திடும் வண்ண மென்னவே.

    61

    1607

    அற்றன உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந்
    துற்றன கூடிய வுணர்வும் ஆவியும்
    மற்றவர் எழுந்தனர் வாகை வீரன்மேல்
    பொற்றைக ளாயின பொழிந்து போர்செய்தார்.

    62

    1608

    தலையொடு கரங்களும் தாளுந் தோள்களும்
    மெலிவொடு துணிந்தவர் மீட்டுங் கூடினர்
    அலர்தரு பங்கயத் தண்ணல் தன்னிடை
    வலிதவர் பெற்றிடு வரத்தின் தன்மையால்.

    63

    1609

    கண்டமும் மொய்ம்பருங் கழலும் வாளியால்
    துண்டம தாயினர் தொக்கு மேயினார்
    சண்டவெங் கால்பொரத் தணந்து சிந்திய
    தெண்டிரை நெடும்புனல் மீட்டும் சேர்தல்போல்.

    64

    1610

    பன்னரும் திறலினான் பகழி பாய்தொறும்
    மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார்
    மின்னது வந்துழி விளிந்து வெவ்விருள்
    தொன்னிலை எய்தியே தொடர்ந்து தோன்றல்போல்.

    65

    1611

    கையொடு சென்னியும் கழலும் மார்பமும்
    கொய்யுமுன் தொன்மைபோல் கூட மைந்தர்கள்
    ஒய்யென எழுந்தனர் உலகில் தேர்வுறில்
    செய்யுறு தவத்தினும் சிறப்புண் டாங்கொலோ.

    66

    1612

    கண்டனன் விசயனாங் காளை ஆவிபோய்த்
    துண்டம தாகியே துஞ்சி னா£¢எழீஇ
    மண்டமர் புரிவது மனத்தின் விம்மிதம்
    கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன்.

    67

    1613

    அகத்திடை விம்மிதம் அடைந்து நின்றுளான்
    திகைத்தனன் வரங்கொல்இச் செய்கை என்றனன்
    புகைத்தென உயிர்த்தனன் பொங்கு கின்றனன்
    நகைத்தனன் இவர்செயல் நன்று நன்றெனா.

    68

    1614

    தொட்டிடு பகழியால் துணிந்து போரிடைப்
    பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும்
    விட்டிடின் ஆவதென் மேவ லார்தமை
    அட்டிடல் இன்றெனக் கரிது போலுமால்.

    69

    1615

    அன்னவர் தமையடல் அரிய தாமெனில்
    ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே
    பன்னெடு நாளமர் பயின்று நிற்பினும்
    என்னுயிர் கொள்வது மௌ¤தன் றாலரோ.

    70

    1616

    வென்றிலன் இவர்தமை வென்றி லேன்எனில்
    சென்றெதிர் மாற்றலர் செருவில் வன்மைபோய்ப்
    பொன்றுதல் பெற்றிலன் பொதுவ னோர்மகன்
    கொன்றிடும் உலவையின் கொள்கை யாயினேன்.

    71

    1617

    பற்றலர் தங்களைப் படுப்பன் யானெனா
    வெற்றிகொள் வானென விளம்பி வந்தயான்
    செற்றில னாகியே சிலையுங் கையுமாய்க்
    கொற்றவ னோடுபோய்க் கூட லாகுமோ.

    72

    1618

    மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
    ஆற்றவும் வலியரென் றறைந்து மீள்வனேல்
    தோற்றனன் என்றெமர் துறப்பர் அன்றியும்
    போற்றலர் விடுவர்கொல் புறந்தந் தேகவும்.

    73

    1619

    பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன்
    எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன்
    வைத்திலன் புகழினை வசையொன் றெய்துவேன்
    செத்திலன் இருந்தனன் செயலற் றேனென்றான்.

    74

    1620

    விண்டினை மாறுகொள் விசயன் இவ்வகை
    அண்டரும் துன்புகொண் டகத்தி லுன்னுழி
    உண்டொரு செய்கையான் உய்யு மாறெனக்
    கண்டனன் துயர்க்கடல் கடக்கும் பெற்றியான்.

    75

    1621

    ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை
    வேறொரு துணையிலை மெய்மை ஈதெனத்
    தேறினன் அவனடி சிந்தை செய்தனன்
    மாறிழி அருவிநீர் வழியும் கண்ணினான்.

    76

    1622

    அண்ணலங் குமரனை அகத்துட் கொண்டுழி
    எண்ணிய எண்ணியாங் கெவர்க்கும் நல்குவோன்
    விண்ணிடை ஒல்லையின் விசய னென்பவன்
    கண்ணிடைத் தோன்றியே கழறல் மேயினான்.

    77

    1623

    வேறு
    கேளிது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித்
    தாளொடு முடியுங் கையும் தடிந்தனை தடிந்த தெல்லாம்
    மீளவும் தோன்றிற் றன்றே மேவலர் பெற்ற தோராய்
    நீளமர் வயமின் றாகி நின்றனை தளரேல் நெஞ்சம்.

    78

    1624

    ஏற்றபல் படைகள் தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று
    வீற்றுவீற் றடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
    ஆற்றல்சேர் படையொன் றுய்க்கின் அனைவரும் முடிவர் ஈது
    நாற்றலை யுடையோன் தொன்னாள் நல்கிய வரம தென்றான்.

    79

    1625

    என்றிவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி
    ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
    வென்றிகொள் படையை நல்கி விசயனுக் களித்து மேவா£¢
    பொன்றிட இதனை இன்னே விடுகெனப் புகன்று போனான்.

    80

    1626

    தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங்
    கூர்ந்தனன் ஞமலி யூர்தி கொற்றவெம் படையை வாங்கி
    ஆர்ந்தநல் லன்பில் பூசை ஆற்றினன் அதனை யெல்லாம்
    ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன்.

    81

    1627

    ஈண்டிவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால்
    மாண்டிட அடுவான் போலும் மற்றதன் முன்னர் மாயம்
    பூண்டிடு படையால் இன்னோற் சிறுதியைப் புரிவ னென்னா
    ஆண்டுதன் னுளத்தில் உன்னி அவுணனப் படையை விட்டான்.

    82

    1628

    மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித்
    தீயுமிழ் கின்ற காரி திண்படை செலுத்தச் சென்று
    பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால்
    ஆயிரர் தமையுஞ் சுற்றிஅடல் செய்து மீண்ட தன்றே.

    83

    1629

    ஒருகணப் பொழுதின் முன்னர் ஒராயிர முப்பா லோருஞ்
    செருநிலத் தவிந்தா ரன்ன செய்கையை விசயன் காணா
    முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
    பொருதிரைப் புணரி யென்ன ஆர்த்தனர் பூத ரெல்லாம்.

    84

    1630

    ஏமுறும் அவுணர் தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம்
    காமரு திசைகள் முற்றும் கதுமென விரிந்து போன
    மாமலர் பொழிந்தார் விண்ணோர் மற்றிவை அனைத்தும் நாடிக்
    கோமகன் முன்பு சென்றார் குரைகழல் அவுணர் தூதர்.

    85

    1631

    வெய்யவன் பகைவன் தாதை வியன்கழல் பணிந்து தூதர்
    ஐயநின் மைந்தர் முப்பா லாயிரர் தம்மை யெல்லாம்
    ஒய்யென இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
    பொய்யல சரத மென்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான்.

    86

    1632

    வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப்
    போழ்ந்திட நிலத்தைக் கையாற் புடைத்தனன் புரண்டு வெற்பில்
    தாழ்ந்திடு மருவி யென்ன இழிபுனல் தாரை பொங்கச்
    சூழ்ந்தார் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான்.

    87

    1633

    அன்னதோ ரெல்லை மைந்தர் அனைவரும் முடிந்த தோரா
    மன்னவன் இசைமை நீங்கி மாயிருந் தவிசில் தப்பி
    இன்னலின் மறிந்த தென்ன இரவியங் கடவுள் மேல்பால்
    பொன்னெடுங் கிரியின் எய்தி ஔ¤யிலன் புணரி வீழ்ந்தான்.

    88


    ஆகத் திருவிருத்தம் - 1633
    ------

    10. தருமகோபன் வதைப் படலம்* (1634 - 1713)

    ( * நாலாநாள் இரவு தருமகோபன் வதை நிகழந்ததாகும்.)

    1634

    முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே
    இடரினை உழந்திடும் இறைவன் தன்முனம்
    படியறு நல்லறப் பகைஞன் போந்திடா
    அடிமுறை பணிந்துநின் றறைதல் மேயினான்.

    1

    1635

    மன்னவர் மன்னநீ மனத்தில் இவ்வகை
    இன்னல்செய் தாற்றவும் இரங்கு வாயெனில்
    துன்னலர் மகிழுவா¢ சுரர்கள் யாவரும்
    நன்னகை செய்குவர் நமரும் வௌ¢குவா£¢.

    2

    1636

    முந்துறு மாற்றலர் முனைவெம் போரிடைத்
    தந்தையர் விளியினுந் தமர்கண் மாயினும்
    மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள்
    சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தீர்வரோ.

    3

    1637

    ஏற்றிகல் புரிந்திடும் எமரை வௌவிய
    கூற்றுளன் தொன்மைபோற் படைத்துக் கூட்டுவான்
    நாற்றிசை முகனுளன் நாமு ளோம்நம
    தாற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ.

    4

    1638

    அந்தமில் வெறுக்கையும் அழிவில் ஆயுளும்
    நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும்
    இந்திர ஞாலமும் இருக்க எந்தைநீ
    புந்தியில் அமரர்போற் புலம்ப லாகுமோ.

    5

    1639

    விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக்
    கண்ணிய விரதமுங் கழிந்த மானமும்
    நண்ணலர் தங்களை நலியுந் தன்மையும்
    எண்ணலை இடையறா திடுக்கண் போற்றுமோ.

    6

    1640

    மாற்றல ராகிய அமரர் மானவர்
    கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர்
    ஆற்றிடு துயருனக் காவ தன்றெனாத்
    தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்குளான்.

    7

    1641

    வேறு
    ஆற்றிடு தருமம் நீத்த அமைச்சன்வந் தினைய வாற்றால்
    தேற்றிடு கின்ற காலைச் சிறிதுதன் அவலம் நீத்துக்
    கூற்றென யானே சென்று கூடலர் தொகையை விண்மேல்
    ஏற்றுவ னென்று சீறி அவுணர்கோன் எழுந்து சென்றான்.

    8

    1642

    சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையிற் றாழ
    இன்றிவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே யேகி
    வன்றிறற் பகைஞர் தம்மை வளைத்துவல் விரைந்து சாடி
    வென்றியுற் றிடுவ னென்ன வேண்டினன் அமைச்சர் மேலோன்.

    9

    1643

    அறந்தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு
    சிறந்திடு மடங்க லாற்றுஞ் செம்பொன்செய் பீட மேவி
    உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடைகொண் டேகிப்
    புறந்தனில் வந்து வல்லே போர்ப்பெருங் கோலங் கொண்டான்.

    10

    1644

    போதகத் தரசு தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற
    மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையிற் கொணர்த்தி ரென்னாத்
    தூதுவர்க் குரைத்த லோடுந் துண்ணென அனைய ரோடி
    மேதகு நிகளம் நீக்கி விடுத்துமுன் னுய்த்து நின்றார்.

    11

    1645

    புந்தியிற் குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற
    தந்தியந் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன்
    அந்தமில் படைக ளேந்தி அமைச்சர்கள் பலருஞ் சூழ
    இந்திரன் இவன்கொ லென்ன ஏறினன் எழிலி போல்வான்.

    12

    1646

    அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபஞ்
    செறிந்தன கரிதேர் வாசி தெழித்தன அவுணர் தானை
    நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம்
    மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே.

    13

    1647

    எண்ணிலா வௌ¢ள மாவும் இபங்களும் இவுளித் தேரும்
    வெண்ணிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையிற் சுற்றப்
    புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீ கத்தை யூர்ந்தே
    அண்ணல்மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன்.

    14

    1648

    அண்டா¢மற் றிதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த
    கண்டகன் சிலையொன் றேந்தி மாதிரக் களிறு தன்னுள்
    புண்டரீ கத்தை ஊர்ந்து பொருமெனில் இவனை யாற்றல்
    கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார்.

    15

    1649

    ஆவணம் அனந்தம் நீங்கி அனிகமும் தானு மேகி
    மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் பெற்ற சேனை
    காவலன் வெகுண்டு நின்ற களத்திடை அணுக லோடும்
    மேவலர் எதிர்ந்தார் என்னா வியன்கழற் பூதர் ஆர்த்தார்.

    16

    1650

    பொற்றைக ளேந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச்
    சுற்றுறு துணையி னோரைத் தொல்லைநாள் நகரஞ் செற்ற
    கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி
    இற்றது கொல்லோ நந்தம் வாழ்க்கையென் றிரங்கிச் சொல்வான்.

    17

    1651

    வேறு
    பஞைகர்க ளாயினோர் பரவித் தன்மிசை
    இகல்செய வருவரேல் இரங்கி ஏங்குதல்
    மிகுபழி இங்கிது வினவின் மானவா¢
    நகைசெய்வர் பொருவதே நன்று போலுமால்.

    18

    1651

    எச்சமில் சேனையும் படையும் ஈண்டிய
    கைச்சிலை இருந்தது கரியும் ஒன்றுள
    தச்சுறு கின்றதென் ஆவ தாகுமால்
    பொச்சையர் கடன்நனி பொருமல் கொள்வதே.

    19

    1653

    வெல்லினும் செறுநர்முன் வெரிக தீயினும்
    அல்லது விளியினு மாக யானினி
    மல்லலம் படையொடு மாற்ற லார்மிசைச்
    செல்லுவ தன்றியே இரங்கல் சீரிதோ.

    20

    1654

    வேறு
    கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி
    எண்ணிநின் றயர்தல் வீரர் இயற்கைய தாமோ பின்னர்
    நண்ணிய வாறு நண்ண நானினித் தளரேன் என்னாத்
    துண்ணெனத் தேறிச் சென்றான் சூரனுக் கமைச்சன் ஆனோன்.

    21

    1655

    இங்கிது பொழுது தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ்
    கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்த தென்ன
    அங்கவன் தானை வௌ¢ளத் தவுணரும் பூதர் தாமும்
    பொங்கொலிக் கடல்போல் ஆர்த்துப் பொள்ளென அமரின் ஏற்றார்.

    22

    1656

    வேறு
    தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார்
    இலக்குற நேமிகள் கணிச்சி ஏவினார்
    மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார்
    சிலைத்தனர் வயிர்துடி செறிவெம் பூதரே.

    23

    1657

    வில்லுமிழ் சரத்தினில் வேலில் வாளினில்
    கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில்
    வல்லையந் தனில்உடை வாளில் வச்சிரச்
    செல்லினின் நுதிகெழு திகிரி நேமியில்.

    24

    1658

    தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில்
    பிண்டிபா லத்தினில் ஆற்றப் பீடுமேல்
    கொண்டதோர் எழுவினில் பிறவில் கொட்புறா
    அண்டரும் அவுணரும் அணிந்து போர்செய்தார்.

    25

    1659

    அயர்ப்புறு தானவர் அமைச்சர் யாவரும்
    வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும்
    வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப்
    புயற்படு பெயலெனப் பொழிந்து போர்செய்தார்.

    26

    1660

    பெய்வதொத் தெங்கணும் பெரிதும் வீழ்தலால்
    உய்வதெத் தன்மையென் றுலகம் அச்சுற
    இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும்
    தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார்.

    27

    1661

    மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர்
    சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர்
    வீந்தன கரிபா¤ விளிந்த தேர்நிரை
    பாய்ந்தன செம்புனல் பரந்த கூளியே.

    28

    1662

    நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார்
    முந்துறும் அமைச்சர்போ£¢ முயன்று நின்றனர்
    அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே
    வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன்.

    29

    1663

    இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்திமுன்
    வடித்திடு சிலையினை வாங்கித் தானவர்
    முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள்
    பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே.

    30

    1664

    நீண்டதோர் சிலீமுகம் நெடிது மேலவன்
    தூண்டிய காலையில் துணிந்த கையினர்
    வீண்டிடு தலையினர் விளிந்த மெய்யினர்
    மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே.

    31

    1665

    துறக்கம தலைத்திடு தொலைவில் தானவர்
    மறுக்கமுற் றசைந்தனர் வந்து போர்செய
    விறற்படு சாரதர் வெகுண்டு மேற்செலா
    இறப்புறு வரைபல எடுத்து வீசினார்.

    32

    1666

    வீசிய வேலையில் வெதும்பி விம்மியே
    மாசுறு தானவர் வாகை சிந்தியே
    ஆசறு போனகத் தட்டில் சூடுறு
    பூசைய தாமென உடைந்து போயினார்.

    33

    1667

    இடைந்தனர் ஆகியே அவுணர் யாவரும்
    உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள்
    படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில்
    தொர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார்.

    34

    1668

    கண்டனன் ஆங்கவை அறத்தைக் காய்பவன்
    புண்டிகழ்ந் தனையகட் பூதர் மேற்செலா
    விண்டொடர் பெருந்தனு வாங்கி வெவ்வுயிர்
    உண்டிடு சரந்தெரீஇ உலப்பின் றேவினான்.

    35

    1669

    ஏவிய நோன்கணை யாவும் ஏற்றெழு
    தீவிழிப் பூதர்பால் சேறல் இந்திரன்
    வாவிய வூர்திகள் வாரி நேமியில்
    தூவிய துள்ளியின் தோற்றம் போன்றதே.

    36

    1670

    கைச்சிலை உகைத்திடு கணைகள் யாவையும்
    நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்க்ள்
    அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன்
    வச்சிரம் எய்திய வரைகள் மானவே.

    37

    1671

    வேறு
    வானவர்கள் கோமகன் வயக்களிறி தென்னத்
    தானவர்கள் போற்றுதரு மப்பகைஞன் ஊர்ந்த
    ஆனையது பூதர்தமை அங்கைகொடு வாரி
    ஊனொடுயிர் சிந்திட உடற்றியதை அன்றே.

    38

    1672

    கோடதொரு நான்குகொடு குத்தியது தாளின்
    ஊடுறமி தித்தவண் உழக்கியது வாலால்
    பாடுற எறிந்தது பனைக்கைய துகொண்டே
    வீடுறமுன் எற்றியது வீரர்படை தன்னை.

    39

    1673

    மாறகலும் வெங்கரியிவ் வாறடல்செய் காலை
    வீறுகெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி
    ஊறுசெய அங்கதின் உலப்பில்கணை ஓச்சி
    நாறுநடு வார்தொகையின் நண்ணினர்கள் வீரா¢.

    40

    1674

    காயமுழு தொன்றிய கணக்கில்படை யாவும்
    மூயதவ ளக்களிறு முற்றுமெழு சோரி
    பாயவணை கிற்பது பணிக்குழுவு கவ்வச்
    சேயபணி சுற்றமறை திங்கள்படர்ந் தென்ன.

    41

    1675

    வெந்திறல்கொள் புண்டரிக வேழமிது தன்மை
    நொந்ததெனி னுந்தனது நோன்மையழி யாதாய்
    முந்தியிடு சேனையை முருக்கவது நோக்கித்
    தந்திநிரை சாரதர் தமைத்தடித லுற்ற.

    42

    1676

    கண்டைகெழு தாரினொலி கல்லென விரைப்ப
    அண்டமுடைந் தென்னநனி ஆர்த்தவுணன் ஊரும்
    புண்டரிக வெங்களிறு போர்த்தொழல் இயற்ற
    உண்டைகெழு பூதநிரை ஒய்யென உடைந்த.

    43

    1677

    தண்டமுடை கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன்
    கண்டனன் அழன்றுதன கார்முகம தொன்று
    கொண்டனன் எடுத்தது குனித்தழலின் வாளி
    அண்டர்பகை யூர்தியின் அடைச்சிநனி ஆர்த்தான்.

    44

    1678

    ஆர்த்தடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர்
    மூர்த்தமயர் வுற்றது முனிந்தவுணர் கோமான்
    பார்த்திறையின் நூறுகணை பாலமிசை ஓச்சத்
    தேர்த்துலவு சோரியொடு தேர்மிசை இருந்தான்.

    45

    1679

    இருந்ததிற லோன்மிசையொ ரெ·கமது வாங்கி
    விரைந்துதரு மப்பகை விடுத்திடலும் நோக்கி
    மருந்தெனமுன் வந்துதிறல் வாசவன்அவ் வைவேல்
    முரிந்துதுணி யாகவொர் முரட்கணை தொடுத்தான்.

    46

    1680

    மத்தகய மன்னதிறல் வாசவன் விரைந்தே
    பொத்திரம தொன்றுகொடு போரயில் முருக்கிக்
    குத்திரம தொன்றவுணர் கூவிவெருக் கொள்ள
    அத்திரமென் மாரிகொட வன்றனை மறைத்தான்.

    47

    1681

    மறைத்தலும் மறப்பகைஞன் வாளிமழை தூவிக்
    குறைத்தனன் அளப்பில்கணை ஏனவை குழீஇப்போய்ச்
    செறுத்தவன தாகமிசை சென்றுசெருக் கின்றி
    விறற்கவச நக்குபு விளிந்துபுடை வீழ்ந்த.

    48

    1682

    வேறு
    மீண்ட வேலையின் வெய்ய சூழச்சியோன்
    மாண்டு ளானென வாகை வீரன்மேல்
    பூண்ட யங்குறு பொன்னந் தண்டமொன்
    றீண்ட வீசினான் யாரும் அஞ்சவே.

    49

    1683

    எழுவின் நீள்கதை இமைப்பில் சென்றவன்
    பழுவின் மார்பகம் பட்ட வேலையின்
    விழும நோயுயு£ விம்மி னானரோ
    வழுவை மேலையோன் வயத்தின் மேவவே.

    50

    1684

    கருத்தில் நல்லறங் காய்ந்த வன்செயல்
    தெரித்து நின்றிடும் திறல்கொள் வாகினான்
    உருத்து நோக்கியே உரையும் தன்னுளக்
    கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான்.

    51

    1685

    நின்னில் ஐயநின் நேர லன்புயந்
    தன்னை யாத்துநிற் றருவம் யாமெனப்
    பன்னு மானவர் பௌவம் நீத்தொராய்
    முன்னு தானவர் முதல்வன் நேர்புக.

    52

    1686

    எதி£¤ லாமையால் யாரும் அஞ்சவே
    அதிரு நோன்கழல் ஆடல் மொய்ம்பனை
    மதியில் தானவன் மழைகள் மின்குழுச்
    சிதறி யென்னத்தீச் சிந்த நோக்கினான்.

    53

    1687

    நோக்கி நீகொலோ நோன்மை யோடெனைத்
    தாக்கு மாறுவந் தனையை யானுனை
    யாக்கை சிந்திய அமைந்து நின்றனன்
    காக்க வல்லையேல் காத்திநீ யென்றான்.

    54

    1688

    மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது
    விழுமி தாரினும் வெற்றி பெற்றனன்
    அழிவ னேநினக் காடல் கொளவன்யான்
    கழியை நீந்துதல் கடலில் பாடதோ.

    55

    1689

    மற்றுன் வன்மையும் மதர்ப்பும் நின்பெருங்
    கொற்ற மானதும் வரத்தின் கொள்கையும்
    இற்றை வைகலே ஈறு செய்வன்நீ
    கற்ற போரினைக் கடிது செய்கென.

    56

    1690

    வேறு
    கானக்களி வரிபம்பிய கமழ்தார்புனை அகலம்
    வானக்கிறை தனதூர்திகள் மரபோடுசென் றிசைக்கும்
    தீனக்குர லெனநாணொலி திசையெங்கணும் செல்லக்
    கூனற்சிலை தனையொல்லையில் தருமப்பகை குளித்தான்.

    57

    1691

    மற்கொண்டிடும் மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால்
    எற்கொண்டேழு களிற்றின்மிசைச் சிலைவாங்கினன் இருத்தல்
    கற்கொண்டதொர் வௌ¢ளிக்கிரி மிசைகாணிய கணைதூய்
    விற்கொண்டொரு பசுங்கார்முகில் மேவுற்றென லாமால்.

    58

    1692

    அதுவன்றியும் அவனுந்திய அடுவெங்களி றலர்தண்
    கதிரின்குழு முழுதொன்றுபு ககனந்தனில் எழுசெம்
    மதியந்தன தொருபங்கையொர் வயவெம்பணி நுகரப்
    புதிதொண்பிறை யதுவொன்றிடை புகநின்றது பொருவும்.

    59

    1693

    முந்தேயவன் எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக்
    கந்தேயென நிமிர்தோளுடைக் கடுஞ்சூழ்ச்சியன் ஒழுகும்
    செந்தேனுறழ் குணத்திற்சரம் செலுத்தாத்திறன் மொய்ம்பற்
    கந்தேயுமெய் வௌ¤யின்றென அவனைக்கரந் தார்த்தான்.

    60

    1694

    கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன்படை ஞன்மெய்
    அரக்குன்றுப் டயின்மாய்ந்தவை அயல்வீழந்தன கண்டான்
    இரக்கின்றவர்க் குதவான்கரந் தேற்காத்திரு வினர்பால்
    பரக்கும்பொரு ளுகுத்தன்னதிற் பயன்பெற்றிலன் எனவே.

    61

    1695

    அயில்சிந்திட முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர்
    முயலுந்திறல் கெழுமொய்ம்பினன் முனிந்தெ·கமொன் றெடுத்துப்
    புயலன்னதொர் வடிவத்தவன் பூணாருநெஞ் செறியச்
    செயலன்னது கண்டாங்கெதிர் தீவாளிகள் உய்த்தான்.

    62

    1696

    உய்க்குஞ்சுடர் வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி
    மைக்கொண்டலை நிகர்மேனியன் மனந்துண்ணென அணுகி
    மெய்க்கொண்டதொர் நெடுஞ்சாலிகை விளியும்படி வீட்டிப்
    புக்குள்ளுற மூழ்கித்தனி புறம்போந்தது விரைவில்.

    63

    1697

    புறம்போதலும் இகல்மந்திரி பொருமிப்புகை உயிர்த்து
    நிறம்போகிய செந்நீரொடு நினைகின்றி லன்இருப்ப
    மறம்போகிய தனிவெங்கரி மகிணன்செய லோரா
    அறம்போகிய மனத்தான்றனை அடவுற்றதை யன்றே.

    64

    1698

    முந்துற்றிடு கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத்
    தந்தத்தொகை கொடுதாக்குபு சமரத்திடை இட்ட
    கந்தொத்ததொ ரெழுவொன்றது கைக்கொண்டவன் வலவன்
    சிந்தப்புடைத் ததுகாண்டலுஞ் செந்தீயெனக் கனன்றான்.

    65

    1699

    வையந்தன தீறாதலும் வறிதேயயல் பாயா
    மெய்யங்கைய தொன்றாலவன்மேல்வந்திடும் வேழக்
    கையங்குறப் பற்றாக்கடங் கலுழுங்கவுண் மோதி
    ஒய்யென்றெடுத் தப்பாலையின் உலகம்புக உய்த்தான்.

    66

    1700

    எறிந்தானெடுத் ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப்
    பிறிந்தாகவம் இயற்றெல்லையில் பெயர்காலையின அமைச்சன்
    அறிந்தான்கயம் இழந்தேன்கொலென் றயராவத னோடு
    மறிந்தான்புனை கலந்தன்னொடு மணிமாமுடி சிந்த.

    67

    1701

    வீழ்கின்றதொர் களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து
    மாழ்கின்றது புடைபோகிய மதியில்லவன் எழுந்தே
    காழ்கொண்டதொர் கதையொன்றுதன் கைக்கொண்டுரத் தெறியத்
    தாழ்கொண்டதொர் கரத்திற்கடுத் தலைகொண்டது தறித்தான்.

    68

    1702

    வலிகொண்டதொர் தனித்தண்டது மடிவாதலும் மற்றோர்
    குலிசந்தனை விடவாங்கெதிர் குறுகக்கரம் பற்றிப்
    புலிகண்டதொர் கலைமானெதிர் புக்காலென அவுணர்
    தலைவன்றனை அடல்மொய்ம்பினன் தடமார்பிடைப் புடைத்தான்.

    69

    1703

    மூளாவுருத் தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல்
    வாளாபுவி மிசைவீழதலும் வயமிக்கவன் ஒருகால்
    தாளாலுதைத் தனன்அத்துணை தருமப்பகை வீழ்ந்தான்
    கேளாகிய அவுணப்படை கெட்டோடிய தன்றே.

    70

    1704

    வேறு
    விழுந்தயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல
    எழுந்தது தரும கோபன் இறந்தபா டதனை நோக்கி
    அழுந்திடும் இன்னல் வேலைக் ககன்கரை கிடைத்தா லென்னத்
    தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும்.

    71

    1705

    செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ
    பொய்யென நினையல் வாழி புண்டரீ கப்பேர் உள்ளேன்
    வையகம் போற்றுஞ் சீரேன் மாதிரங் காவல் கொண்டேன்
    கையனித் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள்.

    72

    1706

    வன்றளை மூழ்கும் தீயென் மதியிலா அமைச்சற் போற்றி
    இன்றுகா றூர்தியானேன் ஏவின பலவும் செய்தேன்
    ஒன்றுநான் மறுத்த துண்டேல் உயிர்குடித் தூனும்வல்லே
    தின்றிடு மென்றே அஞ்சித் திரிநதனன் செயல்வே றில்லேன்.

    73

    1707

    எட்டுள திசையில் வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று
    மட்டறு வெகுளி வீங்கி மற்றெனை உர்ந்து தொன்னாள்
    கிட்டினன் அவரை யெல்லாங் கிளையொடு முடித்தோன் தன்னை
    அட்டனை நீயே யல்லால் அவனையார் அடுதற் பாலா£¢.

    74

    1708

    புந்தியில் அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை
    வந்துநீ அடுத லாலே வானவர் கவலை தீர்ந்தார்
    உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன்மேல் உண்டோ
    முந்துறு தளையின் நீங்கி முத்திபெற் றாரை ஒத்தேன்.

    75

    1709

    தீதுகொள் பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன்
    மாதவஞ் செய்தேன் கொல்லோ மற்றுனை எதிரப் பெற்றேன்
    ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கு மாற்றாற்
    போதுவன் தமியன் என்று தொழுதது புண்ட ரீகம்.

    76

    1710

    புண்டரீ கத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன்
    அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக் கென்ன
    விண்டொடர் நெறியிற் சென்றாங் கவுணர்க்கு வெருவ லின்றிப்
    பண்டமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற் றன்றே.

    77

    1711

    மாதிரங் காவல் பூண்ட மதக்கறிற் றரசு செல்ல
    ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப்
    பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்த லுற்றார்
    தூதுவர் அதுகண் டோடிச் சூரனைத் தொழுது சொல்வார்.

    78

    1712

    தண்டக முதல்வ கேண்மோ தானையும் தானு மேகி
    மண்டமா¢ புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான்
    உண்டையும் அழித லுற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற
    புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியும் போய தென்றார்.

    79

    1713

    வேறு
    பழுது டைத்திறன் மந்திரி பட்டசொல் வினவி
    முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி
    அழுது யிர்த்துமெய் யுயிர்பதை பதைத்திட அங்கண்
    எழுது சித்திரம் பாவைபோல்போல் உணா¢வுபோய் இருந்தான்.

    80


    ஆகத் திருவிருத்தம் - 1713
    ------

    11. பானுகோபன் வதைப் படம்* (1714 - 1922)

    (* ஐந்தாநாள் பானுகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)

    1714

    எள்ளல் செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட
    கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான்
    பொள்ளெ னப்படர் வேன்எனப் புந்திகொண் டவன்போல்
    ஔ¢ள ழற்கதிர் வீசியே இரவிவந் துதித்தான்.

    1

    1715

    சுருதி நீங்கிய அவுணர்கோன் இந்திறந் துயரம்
    பெரிதும் எய்தியே இருந்துழக் கண்டனர் பெயர்ந்து
    குருதி நோக்குடை ஒற்றரில் ஒருசிலர் குறுகிப்
    பரிதி தன்பகை அடிபணிந் தினையன பகர்வார்.

    2

    1716

    முன்ன மாயமாப் படைக்கலந் தூண்டியே மொய்ம்பு
    பன்னி ரண்டுளான் தூதனைப் படையொடும் படுத்துத்
    தொன்னெ டுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள்
    அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே.

    3

    1717

    வெங்கண் மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச்
    செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த
    அங்க தொல்லையின் மூவிரு புணரிகள் அகன்று
    பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவுபுக் கதுவே.

    4

    1718

    புக்க வேலையின் மாயமாப பெரும்படை புறந்தந்
    தக்க ணந்தொலை வெய்திய தயர்வுயிர்த் தறிந்து
    தொக்க பாரிடர் யாவரும் வீரர்தந் தொகையும்
    மிக்க திண்டிறல் வாகுவும் எழுந்திவண் மீண்டார்.

    6

    1719

    ஆணடவ் வெல்லைவந் திறுத்திடும் வேற்படை அருளி
    மீண்டு கந்தவேள் இருந்துழிப் போந்தது விரைவால்
    ஈண்டிம் மாநகர் கூற்றியே செறுநர்கள் இகலின்
    மூண்டு போர்செய்வான் பு£¤சையுட் புகுந்தனர் முரணால்.

    6

    1720

    அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத்
    தரணி காவலன் வினவியே தன்னயல் நின்ற
    இரணி யன்றனைக் கனல்முகத் தண்ணலை ஏனை
    முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால்.

    7

    1721

    ஆன காலையில் வந்துவந் தடுசமர் ஆற்றி
    மான வேற்பற்படைப் பண்ணவன் தூதனால் மற்றை
    ஏனை யோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
    மீன மாய்க்கடல் புகுந்தனன் இரணியன் வெருவி.

    8

    1722

    மன்னர் ன்னவன் இவையெலாம் வினவியே மனத்தில்
    உன்ன ருந்துயர் வேலைபுக் காற்றலா துழந்தான்
    இந்ந கர்ப்படை யாவையும் வறந்தன இன்னும்
    துன்ன லார்இவண் நின்றனர் என்றிவை சொற்றார்.

    9

    1723

    சொற்ற வாசகம் வினவலுஞ் சூரியன் பகைஞன்
    இற்ற வேகொலாம் நம்பெரும் வாழ்க்கையென் றிரங்கிச்
    செற்ற மோடுதன் பெதிரெதிர் மலைந்திடச் செங்கேழ்ப்
    பொற்றை யன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான்.

    10

    1724

    போந்து கோநகர் அணுகியே துன்பொடு புணர்ந்த
    வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி
    ஆந்த ரங்கமாம் அளியொடு முந்துநின் றவுணா¢
    ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான்.

    11

    1725

    மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித்
    தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல
    ஆய காலையில் வேல்விடுத் தவர்தமை மீட்ட
    சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின்.

    12

    1726

    தெரிந்த மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல்
    பொருந்து கைத்தலத் தாறுமா முகனொடு பொருது
    வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
    இரிந்து மற்றிவண் வருதலால் உய்ந்தனை எந்தாய்.

    13

    1727

    ஏற்ற தோர்சிலை இழந்தனை மானமும் இன்றித்
    தோற்று வந்தனை தொல்வரத் தியற்கையும் தொலைந்தாய்
    சீற்ற முற்றிலன் முருகவேள் அவன்சினஞ் செய்யின்
    ஆற்று மோவெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும்.

    14

    1728

    ஆர ணன்தனை உலகொடும் உண்டுமுன் னளித்த
    கார ணன்தனி ஆழியைக் களத்திடை அணிந்த
    தார கன்தனை நெடியமால் வரையொடு தடிந்த
    வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார்.

    15

    1729

    புல்லி தாகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
    வல்லி யந்தனக் குண்டியாய் மாய்ந்திடுங் கதைபோல்
    எல்லை யில்பகல் அமரரை அலைத்திடும் யாமும்
    தொல்லை நாள்வலி சிந்தியே குமரனால் தொந்தோம்.

    16

    1730

    கோட லுஞ்சுனைக் குவளையுங் குளவியுங் குரவும்
    ஏட லர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன்
    பாட லந்திறல் உரைப்பதென் ஆங்கவன் பணித்த
    ஆட லம்புயத் தண்ணலை வெல்வதும் அரிதால்.

    17

    1731

    நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவ தொன்றை
    இடைவி டாமலே முயன்றுபெற் றிடுகின்ற தியற்கை
    உடல்வ ருத்தியும் தங்களால் முடிவுறா தொன்றை
    முடிவு மீதெனக் கொள்வது கயவர்தம் முறையே.

    18

    1732

    ஆற்றல் ந்தரை இழந்தனை நால்வகை அனிகத்
    தேற்றம் அற்றனை என்னுடன் ஒருவன்நீ இருந்தாய்
    மேற்றி கழந்தநின் குலத்தினை வேரொடு வீட்டக்
    கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலைமேற் கொண்டாய்.

    19

    1733

    வெஞ்ச மஞ்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
    நெஞ்ச கந்தளிர்ப் பெய்துவன் நோலர் சமருக்
    கஞ்சி னேன்என்று கருதலை அரசநீ இன்னும்
    உஞ்சு வைகுதி யோவெனும் ஆசையால் உரைத்தேன்.

    20

    1734

    உறுதி ஒன்றினி மொழிகுவன் தொன்னகர் உள்ளார்
    சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி
    அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின்
    இறுதி யில்பகல் நிைக்குநின் பெருவளம் என்றான்.

    21

    1735

    வெம்பு தொல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித்
    தும்பை யந்தொடை மிலைச்சிய மணிமுடி துளக்கி
    மொய்ம்பும் ஆகமுங் குலுங்கிட முறுவலித் துயிர்த்து
    நம்பி மந்திரச் சூழ்ச்சிநன் றாலென நவில்வான்.

    22

    1736

    வேறு
    என்னிவை உரைத்தாய் மைந்த இன்றியான் எளிய னாகிப்
    பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின்
    மன்னவர் மன்னன் என்றே யாரெனை மதிக்கற் பாலார்
    அன்னதும் அன்றி நீங்கா வசையுமொன் றடையு மாதோ.

    23

    1737

    கூனொடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானோர்
    ஊமை தடைந்த புன்மை யாக்கையோ டொழியும் அம்மா
    மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகுல்
    ஏனையர் வசையில் மாற்றம் எழுமையும் அகல்வ துண்டோ.

    24

    1738

    தேவரும் மலர்மே லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள
    ஏவரும் ஆணை போற்ற இருந்தர சியற்றல் உற்றேன்
    மூவரின் முதலா முக்கண் மூர்த்திதன் வரங்கொண் டுள்ளேன்
    மேவலர் சிறையை இன்று விடுவனோ விறலி லார்போல்.

    25

    1739

    பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம்
    நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
    சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில்
    ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ.

    26

    1740

    இறந்திட வரினும் அல்லால் இடுக்கணொன் றுறினுந் தம்பால்
    பிறந்திடு மானந் தன்னை விடுவரோ பெரிய ரானோர்
    சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
    துறந்திடேன் பிடித்த கொள்கை சூரனென் றொருபேர் பெற்றேன்.

    27

    1741

    இன்னுமோர் ஊழி காலம் இருக்கினும் இறப்ப தல்லால்
    பின்னுமிங் கமர்வ துண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம்
    மின்னெனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க் கஞ்சி இந்த
    மன்னுயிர் சுமக்கி லேன்யான் மாயவன் றனையும் வென்றேன்.

    28

    1742

    அஞ்சினை போலும் மைந்த அளியநின் இருக்கை போகித்
    துஞ்சுதி துஞ்ச லில்லா வரத்தினேன் தொலைவ தில்லை
    நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேர லார்மேல்
    வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான்.

    29

    1743

    இவ்வகை தாதை கூற இரவிதன் பகைஞன் கேளா
    உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்த தொன்று
    மெய்வகை விதியை யாரே வென்றவர் வினையிற் கேற்ற
    செய்வகை செய்வேன் என்னாச் சிந்தைசெய் தினைய சொல்வான்.

    30

    1744

    அறிவொரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை
    இறையதும் உள்ளங் கொள்ளா தெந்தைநீ பொறுத்தி கண்டாய்
    சிறியதோர் பகுவப் பாலர் தீமொழி புகன்றா ரேனும்
    முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூலப்பின் மேலோர்.

    31

    1745

    அத்தநீ வெகுளல் நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை
    வித்தக வன்மை சான்ற விறற்புய னோடும் அட்டுன்
    சித்தமும் மகிழு மாறு செய்குவன் விடுத்தி யென்னாக்
    கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழலிணி பணிதல் செய்தான்.

    32

    1746

    பணிந்திடு கின்ற காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந்
    தணிந்தனன் உவகை பெற்றான் தனயநின் உள்ளம் போர்மேல்
    துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான்
    அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான்.

    33

    1747

    தொடையசை காமர் பொற்றோட் சூரிது புகல மைந்தன்
    விடையது பெற்று மீண்டு மேதகு துயரி னோடு
    கடிதுதன் கோயில் புக்குக் கடவுளர் பலருந் தந்த
    அடல்நெடும் படைக ளெல்£ம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே.

    34

    1748

    மையுறு தடங்கண் மாதர் வனமுனை திளைக்கு மார்பின்
    மெய்யுறை யொன்று வீக்கி விரல்மிசைப் புட்டில் சேர்த்திக்
    கையுற ஒருவில் லேந்திக் கைப்புடை கட்டி வாளி
    செய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான்.

    35

    1749

    சேமமா யுள்ள எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத்
    தாமநீள் கவிகை வேந்தன் தனிமகன் கடையிற் சென்று
    காமர்சூழ் கனக வையம் ஒன்றின்மேற் கடிது புக்கான்
    ஏமமால் வரையின் உம்பர் எழிலியே றணைந்த தேபோல்.

    36

    1750

    மற்றது காலை தன்னில் வாம்பரி நிரையுந் தேருங்
    கொற்றவெங் களிறும் வீரர் குழாங்களுங் குணிப்பில் வௌ¢ளஞ்
    சுற்றின இயங்கள் முற்றுந் துவைத்தன துவச கோடி
    செற்றின இரவி செல்லுந் தேயம தடைத்த அன்றே.

    37

    1751

    தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வௌ¢ளம்
    பாரிடைக் கொண்டு நின்ற புணரியிற் பாங்கர் சூழச்
    சூரிடைக் கொண்ட அன்புந் துயரமும் உளத்தை யுண்ணப்
    போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான்.

    38

    1752

    வேறு
    மாவாழ் தெருவு பலகோடிகள் வல்லை நீங்கி
    மேவார் பொருத களத்தெல்லை விரைந்து நண்ணி
    மூவா யிரரும் பிறரும்முடி வான நோக்கி
    யாவா வெனவே இரங்கிக்கலுழ்ந் தல்லல் செய்வான்.

    39

    1753

    தாளாண்மை மிக்க அசுரன்மகன் தாங்கல் செல்லா
    நீளா குலத்தின் அழிகின்றதன் நெஞ்சு தேற்றிக்
    கேளா£ தொகைமேற் பெருஞ்சீற்றங் கிளர்ந்து செல்லச்
    சூளால் இனைய தொருவாசகஞ் சொல்லல் உற்றான்.

    40

    1754

    மாசாத்தர் அன்ன வயப்பூதரை மாய வாட்டித்
    தேசார்க்கும் வேலோற் கிளையோனைச் செகுத்தி டேனேல்
    காசாற் பொலியும் அகல்அல்குலின் காமம் வெ·கி
    வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க யானே.

    41

    1755

    என்னா ஒருசூள் இசையா அவனேக லோடும்
    அன்னான வரவு தனைநோக்கி அவுணர் தங்கள்
    மன்னாகும் நின்ற மகனாகும் மலைவ தற்குப்
    பின்னார் வருவார் எனப்பூதர்கள் பேச லுற்றார்.

    42

    1756

    பேசுற்ற காலை அவுணப்படை பேர்ந்து சென்றாங்
    காசற்ற பூதப் படைதம்மெதிர் ஆர்த்து நேரப்
    பூசற் பறைகள் இயம்புற்றன பூமி பொங்கி
    மாசற்ற வானைத் திசையோடு மறைந்த தன்றே.

    43

    1757

    ஆர்த்ததர் கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி
    தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரந்தூவ லுற்றார்
    பார்த்தார் அவுணர் எழுநாஞ்சில் பரசு தண்டஞ்
    சீர்த்தா கியவில் லுமிழ்வாளி செலுத்தி விட்டார்.

    44

    1758

    வேறு
    பொங்கு வன்மைகொள் பூதரும், வெங்கொ டுந்தொழல் வினையரும்
    இங்கிவ் வாறெதிர் ஏற்றிடா, அங்கண் வெஞ்சமர் ஆற்றினார்.

    45

    1759

    அரிய ஒண்பகல் அல்லொடே, பொருது பா£¢மிசை புக்கபோல்
    இருதி றத்தரும் இகலியே, விரவு பூசல் விளைத்தனர்.

    46

    1760

    உரங்கொள் பாரிடர் உய்த்திடு, மரங்கள் குன்றுகள் மாண்டிட
    நெருங்கி நேர்ந்த நிசாசரர், சரங்கள் கொண்டு தடிந்தனர்.

    47

    1761

    விற்கொள் அம்பினை வேலினை, எற்கொள் நாஞ்சில் எழுக்கதை
    வர்க்க மானதை வன்கணர், கற்க ளாற்றுகள் கண்டனர்.

    48

    1762

    சிவந்த பங்கிகொள் சென்னிகள், நிவந்த மொய்ம்பு நிலத்துகக்
    கவிழ்ந்து ருண்டு களத்திடை, அவிந்த பூதம் அனந்தமே.

    49

    1763

    நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதஞ், செஞ்செ வித்தலை சிந்தியே
    எஞ்சு தானவர் எண்ணிலா£¢, துஞ்சி னார்பழி துஞ்சவே.

    50

    1764

    பாய்ந்த வாசிகள் பாரிடங், காய்ந்த யானைகள் காசினி
    ஏய்ந்த தேர்களி யாவையும், மாய்ந்து பாரின் மறிந்தவே.

    51

    1765

    சோரி தூங்கிய தொல்பிணம், மேரு விண்ணை விழுங்கின
    காரி யூர்தி கருங்கொடி, ஓரி கங்கம் உலாயவே.

    52

    1766

    இந்த வாறிரு பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப்
    புந்தி நோவறு பூதர்தம், முந்து தூசி முரிந்ததே.

    53

    1767

    தாழும் ஒன்னலர் தாக்கலால், நீள்கொ டிப்படை நெக்கிடக்
    கூழை நின்றிடு கூளிகள், ஆழி யென்ன அடுத்தவே.

    54

    1768

    புடைநி ரம்பிய பூதர்வந், திரைவி டாதெதிர் ஏற்றிடா
    அடலின் மேதகும் அவுணமாக், கடலை நின்று கலக்கினார்.

    55

    1769

    ஒடிந்த தேர்கள் உலந்துபார், கிடந்த யானை கிளர்ந்தமா
    மடிந்த தானவர் மாப்படை, தடிந்து லாயினா¢ சாரதர்.

    56

    1770

    வேறு
    அதிரும் கழல்சேர் அவுணப் படைகள்
    முதிரும் குறளெற் றமுடிந் திடலும்
    எதிருஞ சமரத் திடையெய் தியதோர்
    கதிரின் பகையங் கதுகண் டனனே.

    57

    1771

    சிந்தாய் வருமிச் சிலசா ரதரே
    நந்தா னையெலாம் நலிகின் றனரோ
    அந்தா இனிதென் றடுதேர் கடவா
    வந்தான் விரைவால் இமையோர் மறுக.

    58

    1772

    கடிதாய் வருகா லொடுகா ரெழிலி
    படிமே லுறவே படர்கின் றதுபோல்
    கொடிதா கியவிற் குனியா முனியா
    வடிவா ளிகள்தூய் அவுணன் வரலும்.

    59

    1773

    வண்டார் தெரியல் வலியோன் வரவைத்
    தண்டா தமர்செய் திடுசா ரதர்கள்
    கண்டார் எதிரே கடிதே நடவா
    அண்டார் தொகைஅச் சுறஆர்த் தனரே.

    60

    1774

    தருவுங் கதையுந் தருசூ லமுமால்
    வரையுங் கொழுவும் மழுவும் எழுவுஞ்
    சொரிகின் றனர்பல் வளனுந் தொலையா
    எரியின் மிசையே இடுமந் தணர்போல்.

    61

    1775

    தொடுகின் றகழல் தொருசா ரதர்கள்
    விடுவின் றவெலாம மிசைவந் திடலும்
    அடுகின் றசினத் தவுணன் தழலில்
    படுகின் றசரம் பலதூண் டினனே.

    61

    1776

    பணிபட டகனற் படைதூண் டுதலும்
    திணிபட் டகணத் திறலோர் வரைகள்
    அணிபட் டதருக் குலமா தியெலாம்
    துணிபட் டனவே துகள்பட் டனவே.

    63

    1777

    கல்லும் தருவும் கதையும் பிறவும்
    சொல்லும் திறலும் துகன்பட் டிடலும்
    வெல்லும் தகுவன் மிகுசா ரதர்மேல்
    செல்லும் படிவெங் கணைசிந் தினனே.

    64

    1778

    சிந்துற் றிடுசெங் கனல்வெங் கணைகள்
    பொந்துற் றிடுகின் றபுயங் கமென
    வந்துற் றுடன்முற் றும்வருத் துதலால்
    நொந்துற் றனர்அற் றனர்நோன் மையெலாம்

    65

    1779

    விடுகின் றகனற் கணைவெந் திறலோர்
    உடலம் புழைசெய் திடவுற் றனரால்
    படரும் குறியோன் கதைப· றுளையா
    அடுதொல் கிரவுஞ் சமதா மெனவே.

    66

    1780

    தெரிகுற் றகனற் கணைசென் றுபுகப்
    பொருகொற் றமகற் றியபூ தர்மிசைப்
    பெருகுற் றதுசோ ரிபெருங் கருவிண்
    டுருகுற் றிடுசெம் பொழுகும் படிபோல்.

    67

    1781

    கதிரும் கனல்வெங் கணைசா ரதர்மெய்
    புதைகின் றுழிசெம் புனல்வந் தெழுவ
    உதிரம் பிறவுற் றிடுதீ யுறவால்
    எதிர்வந் தவைதன் னிடனுய்ப் பதுபோல்.

    68

    1782

    விடமெய்க் கணைமா ரிகள்தம் மிசையே
    படவெய்த் தனர்சிந் தைபதைத் திடுவார்
    கடவுட் கதிரைக் கனலும் கொடியோற்
    குடைவுற் றனரால் உறுபூ தரெலாம்.

    69

    1783

    வேறு
    நிலைய ழிந்து நெடுங்கடல் பாரிடம்
    தொலைய முன்னம் தொலைந்திடு தானவர்
    வலிதெ ரிந்து வயம்புனை தானவர்
    தலைவன் முன்வந்து சார்ந்தனர் என்பவே.

    70

    1784

    ஆய காலை அழிந்துவெம் பூதர்கள்
    போய வாறும் புரையறு சூர்தரு
    சேய வன்திறல் செய்கையும் நோக்கினான்
    காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான்.

    71

    1785

    மலைக்கு லக்கொடி வாமத்தன் மைந்தராம்
    இலக்க வீரருள் ஏனைய மைந்தருள்
    தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான்
    விலக்கில் தேரொடும் வெய்தென ஏகினான்.

    72

    1786

    ஆதி தந்த அறுமுகத் தெம்பிரான்
    பாத முன்னிப் பரவிக் கடிதுபோய்
    மேத குங்கதிர் வெம்பகை தானையாம்
    ஓத முட்கக் குனித்தனன் ஓர்சிலை.

    73

    1787

    காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
    தாமு னிந்து தகுவர்தந் தானைகள்
    தோம ரங்கதை சூலம்வை வாளிவேல்
    நேமி யாதி நெருக்குற வீசினார்.

    74

    1788

    வீசு கின்ற வியன்படை மாய்ந்துகத்
    தேசு லாவு திறலுடை மொய்ம்பினான்
    ஓசை கொண்டதன் சாபம் உமிழ்ந்தென
    ஆசு கங்கள் அளப்பில தூண்டினான்.

    75

    1789

    தூண்டும் வாளி துணிபடச் செய்தலும்
    மாண்டு போயின மற்றவர் வெம்படை
    ஈண்டு தானவர் யாரும் மறைந்திட
    மீண்டும் வார்கணை வீசினன் வீரனே.

    76

    1790

    கற்றை வார்சடைக் கண்ணுத லோன்சுதன்
    கொற்ற வில்லுமிழ் கூர்ங்கணை விட்டன
    பற்ற லார்மெய் படுதலும் அன்னவர்க்
    கிற்ற தாள்முடி தோள்புயம் யாவுமே.

    77

    1791

    ஆர ழிந்தன ஆழி அழிந்தன
    தேர ழிந்தன திண்பரி கைமுகக்
    கார ழிந்த கடுந்தொழில் தானவர்
    போர ழிந்த புகுந்த சோரியே.

    78

    1792

    மற்ற வெல்லை வலியநந் தானைகள்
    இற்ற வேகொல் இவன்சிலை யாலெனாச்
    செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன்
    ஒற்று தேர்வல வற்கிவை ஓதுவான்.

    79

    1793

    அடுத்து நம்படை அட்டவன் முன்னுற
    விடுத்தி தேரை வலவனை வெய்தென
    வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர்
    நடத்தி யார்த்தனன் நாகர் நடுங்கவே.

    80

    1794

    மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன்
    தூண்டு தேர்மிசைத் துண்ணென நண்ணியே
    பூண்ட தன்சிலை கோட்டிப் பொருஞசினம்
    மூண்டு மேலவன் முன்னிது கூறுவான்.

    81

    1795

    எஞ்ச லின்றிய என்பெருந் தானைகள்
    துஞ்சும் வண்ணந் தொலைத்தனை நீயினி
    உஞ்சு போகரி துன்றனை அட்டிட
    வஞ்சி னங்கொடு வந்தனன் யானென்றான்.

    82

    1796

    என்ற லோடும் இருந்திறன் மொய்ம்பினான்
    பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின்
    வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர்
    நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கென்றான்.

    83

    1797

    விளைத்த சீற்றத்து வெந்திறற் சூர்மகன்
    வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரந்
    தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரந்
    துளைத்தி டும்படி பூட்டுபு தூண்டினான்.

    84

    1798

    ஆக மூழ்கி அடற்கணை போழ்ந்துபின்
    ஏக வென்றும் இளையவன் பின்னவன்
    சோக மோடுதன் தொல்சிலை வாங்கியே
    நாகர் போற்றிட நாணொலிக் கொண்டனன்.

    85

    1799

    நாணொ லிக்கொடு நஞ்சழல் கான்றெனத்
    தூணி யுற்ற சுடுசரம் ஆயிரம்
    வேணு யுய்த்து விரைவினில் தூண்டினான்
    ஏணு டைக்கொடி யோன்புயத் தெய்தவே.

    86

    1800

    ஆயி ரங்கணை அம்புயம் மூழ்கலும்
    நோயு ழந்துள நொந்து நொடிப்பினில்
    தீய வன்மகன் செஞ்சரம் நூற்றினால்
    தூய வன்வில் துணிபடுத் தானரோ.

    87

    1801

    திண்டி றற்புயன் செஞ்சிலை இற்றிட
    அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓரயில்
    கொண்டு ருத்துக் கொடுந்தொழிற் சூர்மகன்
    முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான்.

    88

    1802

    வீசு வெம்படை வெய்யவற் சீறிய
    நீசன் மாண்டகு நெற்றியுட் சேறலும்
    மாசில் வான்மிசை வந்தெழு செக்கர்போல்
    ஆசில் செம்புனல் ஆறெனச் சென்றதே.

    89

    1803

    சென்ற காலையில் தீயவன் ஓரிறை
    நின்று தேரின் நினைவில னாகியே
    பின்றை முன்னுணர் வெய்தப் பெருந்தகை
    ஒன்றொர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான்.

    90

    1804

    வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும்
    ஆங்கவ் வெய்யனும் அப்படை யேவியே
    தாங்கி வன்மை தணித்தலுந் தாவிலோன்
    தீங்க னற்படை உய்த்தனன் சீறியே.

    91

    1805

    மாரி யன்னகை மன்னவர் கோமகன்
    ஆர ழற்படை அவ்வழி தூண்டலும்
    வீர வாகு விடுத்திடு தீப்படை
    போரி யற்றிப் பொருக்கென மீண்டதே.

    92

    1806

    சுடுக னற்பஆஆ போந்திடச் சூர்மகன்
    கடிது பின்னுங் கதிர்ப்படை தானெடா
    அடுதி அன்னவன் ஆவியை நீயெனா
    விடுத லோடும் விரைந்தது சென்றதே.

    93

    1807

    விரைந்து சென்றதை வீரமொய்ம் புள்ளவன்
    தெரிந்து சேணிடைச் செங்கதி ரோன்படை
    துரந்து நீக்கலுஞ் சூர்மகன் பங்கயத்
    திருந்த வன்படை ஏவினன் என்பவே.

    94

    1808

    தேன்மு கத்துத் திருமல ரோன்படை
    வான்மு கத்து வருதலும் ஆங்கவன்
    ஊன்மு கப்படை ஒய்யெனத் தூண்டினான்
    நான்மு கத்தன் அடற்கண நாயகன்.

    95

    1809

    தூண்டு வேதன் படைக்கலஞ் சூர்மகன்
    ஆண்டு தொட்ட படையை அகற்றியே
    மீண்டு வந்திட வெய்யவன் வீரன்மேல்
    நீண்ட மாயன் நெடும்படை வீசினான்.

    96

    1810

    வீசும் அப்படை தன்னை விலக்கினான்
    கேச வன்படை யால்கிளர் மொய்ம்புடை
    மாசில் கேள்வியன் மற்றது நோக்கியே
    நீசன் மாகன் உள்ளம் நினைகுவான்.

    97

    1811

    தொட்ட தொட்ட படைகள் தொலைவுற
    விட்ட னன்படை மேலினி யாவையும்
    அட்டு நல்கும் அரன்படை தூண்டுதறின்
    ஒட்ட லன்கரத் துண்டது கண்டதே.

    98

    1812

    ஆத லாரியான் அப்படை தூண்டிடல்
    ஊதி யத்தை யுடைத்தன்று மாயையால்
    ஏதி லானை இனியடல் செய்வதே
    நீதி யென்று நினைந்தனன் நேரலன்.

    99

    1813

    விஞ்சை மமய வியன்முது மந்திரம்
    நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே
    செஞ்சு டர்க்கதி ரைச்சிறை செய்திடு
    வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும்.

    100

    1814

    பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர்
    தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா
    வீங்கும் ஆற்றல் விறலுஆ மொய்ம்பன்மேல்
    வாங்கு விற்கணை மாரி வழங்கினான்.

    101

    1815

    சூறை யென்னத் திரிபவன் தூண்டிய
    மாறில் வாளிப டப்பட வள்ளல்மெய்
    ஊற தாகி உலப்பறு செம்புனல்
    ஆற தென்ன வழிக்கொண்ட தாலரோ.

    102

    1816

    அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடா¢
    தண்ட மோடு தளர்ந்தனர் சார்பினோர்
    விண்டு விண்டு வெருவினர் அச்செயல்
    கண்டு வீரன் கனலெனச் சீறினான்.

    103

    1817

    வேறு
    ஒன்றொரு மாயை தன்னால் உய்ந்துமுன் வென்று போனான்
    இன்றும துன்னி னானோ இனியது முடிக்க அற்றோ
    நன்றிது நன்றி தம்மா நானிவன் தன்னை இன்னே
    கொன்றிடு கிறபேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன்.

    104

    1818

    ஈதுதன் புந்தி தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து
    போதரு கின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச்
    சேதனங் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி
    மேதகு வழிபா டாற்றி யவுணனைக் குறித்து விட்டான்.

    105

    1819

    பொருவருந் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
    இருளினை இரியல் செய்யும் இரவிபோற் சேற லோடும்
    விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன்
    ஒருபெருந் தேருந் தானு மாகியே உம்பர் நின்றான்.

    106

    1820

    தோன்றியே விண்ணின் நின்ற சூ£¢மகன் தொலைவில் ஆற்றல்
    சான்றதன் மாயம் போன தன்மையுந் தடந்தோள் வீரன்
    ஆன்றநல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம்
    மான்றிடும் அமரர் யாரும் மனமகிழ் சிறந்து நின்றார்.

    107

    1821

    அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
    மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச
    வெவ்வழி இனிநீ போதி யானிவண் அடுவன் என்னாக்
    கைவழி வரிவில் வாங்கித் தேரொடுங் ககனஞ் சென்றான்.

    108

    1822

    விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன்
    கண்ணுற முன்பு நேர்ந்து கணைபல கோடி தூர்த்தான்
    நண்ணலன் அவனுஞ் சீறி நவின்றதோர் சாபம் வாங்கித்
    துண்ணென விசிக மா£¤ சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச.

    109

    1823

    நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று
    போரினை இழைப்ப தென்ன இருவரும் பொருது நின்றார்
    ஓரிரை அளவை தன்னில் ஒராயிர நூறு கோடி
    சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம்பொற் றேர்கள்.

    110

    1824

    ஏற்றிகல் புரியும் வீரா¢ எதிரெதிர் துரக்கும் வாளி
    நாற்றிசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
    மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவு தன்னை
    மாற்றியெவ் வுலகு ளோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே.

    111

    1825

    செற்றமொ டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும்
    முற்றிடு கின்ற காலத் துகுவன கவன மான்தேர்
    அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
    இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை.

    112

    1826

    கிட்டுவ சேணிற் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும்
    முட்டுவ ஒன்றை யொன்றை இடம்வலம் முறையிற் சூழ்ந்து
    வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே
    எட்டுள திசையும் விண்ணுந் திரிவன இருவர் தேரும்.

    113

    1827

    இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப்
    புகழுவர் உரப்பி வீரம் புகன்றெடுத் தழைப்பர் பூசல்
    மகிழுவர் நகைப்பர் வெற்றி வால்வள முழக்கஞ் செய்து
    திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர்.

    114

    1828

    புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
    விரைந்தெதிர் மலைந்த முறைமுறை வெகுண்டு விட்ட
    வரந்தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
    கரந்தனன் இரவி திங்கள் கலைகளுங் குறைந்த தன்றே.

    115

    1829

    வேறு
    காலொப்பன கூற்றொப்பன கனலொப்பன கடுவின்
    பாலொப்பன உருமொப்பன பணியார்புரம் பொடித்த
    கோலொப்பன கதிரொப்பன குன்றந்தனைக் கொன்ற
    வேலொப்பன இருவீரரும் விடலுற்றிடு விசிகம்.

    116

    1830

    வரைபுக்கக புயல்புக்கன வான்புக்கன மறிதெண்
    டிரைபுக்கன கடல்பக்கன திசைபுக்கன திசைசூழ்
    தரைபுக்கன அண்டத்துழை தனிற்புக்கன பிலத்தின்
    நிரைபுக்கன இளையோனுடன் அவுணன்விடு நெடுங்கோல்.

    117

    1831

    திரிகின்றன இருவோர்விடு தீவாளியும் அவைபட்
    டெரிகின்றன புயலின்குலம் இருநாற்றிசைக் கரியுங்
    கரிகின்றன புவிவிண்டன கடல்வற்றிறின உடுமீன்
    பொரிகின்றன உலகெங்கணும் புகைவிம்மிய தன்றே.

    118

    1832

    பொடியோங்கியே திறன்மொய்ம்புடைப் புலவன்விடு சரத்தை
    வடியோங்கிய கணைமாரியின் அருக்கன்பகை மாற்றம்
    கொடியோன்மகன் விடுவாளியைக் குதைவெங்கணை மழையால்
    நெடியோன்தனித் துணையானவன் அறுத்தேயுடன் நீக்கும்.

    119

    1833

    போரிவ்வகை இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில்
    பாரின்றலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார்
    ஆரிங்குளர் இவரேயென அமர்செய்தவர் அடுபோர்
    வீரந்தனில் எவரேயிவர்க் கிணையென்று வியந்தார்.

    120

    1834

    அவ்வேலையின் நூறாயிரம் அடுவெங்கணை அதனால்
    மைவேலையில் வருபானுவைத் தளைபூட்டிய மைந்தன்
    செவ்வேலவன் திருத்தூதுவன் தேரைப்பொடி படுத்தி
    எவ்வேலையும் வெருக்கொண்டிட இடியேறென ஆர்த்தான்.

    121

    1835

    ஆ£¢க்கின்றுழ விறல்மொய்ம்புடை அறிவன்சினந் திருகிச்
    சீர்க்கின்றவிண் மிசைமின்றுதன் சிலைகாலுற வாங்கிக்
    கூர்க்குங்கணை ஓராயிரங் கொளுவித்துரந் திட்டுக்
    கார்க்கின்றமெய் அவுணர்க்கிறை கடுந்தேர்துகள் கண்டான்.

    122

    1836

    வையந்துக ளாய்இற்றிட வானத்திடை நின்ற
    வெய்யன்பெருஞ் சினஞ்செய்துவில் வீரன்தன துரத்தின்
    ஐயஞ்சுநஞ் சயில்வாளிபுக் கழுந்தும்படி தூண்டிச
    சையந்தனைக் கடந்தேவளர் தடந்தோள்புடைத் தா£¢த்தான்.

    123

    1837

    உரத்திற்புகு நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன்
    கரத்திற்சிலை தனிலேழிரு கணைபூட்டினன் செலுத்தி
    வரத்திற்றனக் கிணையில்லதொர் மன்னன்மகன் தனது
    சிரத்திற்பொலி மகுடந்தனைச் சிந்தித்துகள் செய்தான்.

    124

    1838

    மாண்கொண்டிடு முடிசிந்திட வறியானெனத் திகழும்
    ஏண்கொண்டிடு சூரன்மகன் ஏழேழ்கணை தூண்டித்
    தூண்கொண்டிடு திறல்மொய்ம்புடைத தொல்லோன்உரம் பிணித்த
    நாண்கொண்டிடு கவசந்தனை நடுவேதுணித் திட்டான்.

    125

    1839

    ஆகம்படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால்
    நாகம்படு சடையோன்சுதன் நன்றீதென நகையாப்
    பாகம்படு பிறைபோலெழு பகுவாய்க்கணை செலுத்தி
    மேகம்படு மணிமேனியன் வில்லைத்துணி படுத்தான்.

    126

    1840

    வில்லொன்றிரு துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா
    அல்லொன்றிய மனத்தீயவன் அயன்முன்கொடுத் துள்ள
    எல்லொன்றிய தனிவேலினை எடுத்தீங்கிவன் தன்னைக்
    கொல்லென்றுரைத் துரவோன்மிசை குறித்துச்செல விடுத்தான்.

    127

    1841

    வேறு
    விடுத்த காலையின் இத்திறந் தெரிந்திடும் விறலோன்
    அடற்பெ ருங்கணை ஆயிர கோடிகள் அதனைத்
    தடுத்தி டும்படி செலுத்தினன் அவையெலாந் தடிந்து
    வடித்த வேற்படை வான்வழிக் கொண்டுவந் ததுவே.

    128

    1842

    வந்த காலையில் அதன்வலி நோக்கியே வள்ளல்
    இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக்
    கந்த வேளடி வழுத்தியே கருதலன் விடுத்த
    குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான்.

    129

    1843

    குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன்
    திறத்த ராகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார்
    அறத்தை யாற்றிடும் இளையவன் அங்கது நோக்கி
    எறித்த ருஞ்சுடர் வாளினை உறையகத் திட்டான்.

    130

    1844

    அள்ளி லைத்தனி வேற்படை இறுதலும் அதனைக்
    கள்ள விஞ்சைகள் பயின்னறிடு சூர்மகன் காணாத்
    தௌ¢ளி தம்மவோ என்படை வலியெனச் செப்பிப்
    பொள்ளெ னக்கர வாளமொன் றெடுத்தனன் பொருவான்.

    131

    1845

    கருமு கிற்புரை மேனியன் கரத்தில்வாள் பற்றி
    விரவு மின்னுவின் கொடியென விதிர்த்துமுன் வீசி
    உருமி டிக்குலத் தாவலங் கொட்டியார்த் துருத்துச்
    செருமு யற்சியாற் சீரிளங் கோவின்முன் சென்றான்.

    132

    1846

    சென்ற காலையில் இளையவன் தன்பெருஞ் சிலைகால்
    ஒன்ற வாங்கியே பகழிபல் லாயிரம் உய்த்து
    வென்றி வாட்படை யானுரங் கிழித்திட விடர்செய்
    குன்றில் வீழ்தரும் அருவிபோல் வீழ்ந்த குருதி.

    133

    1847

    பரிதி மமற்றலன் மிசைவரு பகழியும் பாரான்
    குருதி வீழ்வதும் உரம்பகிர் வுற்றதுங் குறியான்
    ஒருதன் மானமுந் தானுமா யோடினன் குறுகிச்
    சுருதி யன்னவன் சிலையினை வாளினால் துணித்தான்.

    134

    1848

    வில்லி றுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
    செல்லெ னத்தெழித் தொருதன்வாள் வீசினன் திரிய
    அல்ல லுற்றிடும் இமையவர் அங்கது நோக்கி
    இல்லை மற்றிவன் இறந்தபின் அமரென்ப தென்றார்.

    135

    1849

    அங்க வெல்லையில் வீரவா குப்பெயர் அறிஞன்
    திங்கள் சூடிய உலகடுந் தாதையிற் சீறித்
    துங்க மிக்கதன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி
    எங்கண் ஏகுதி என்றுபோய் அவுணனை எதிர்த்தான்.

    136

    1850

    ஏற்றெ திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன்
    காற்றெ னச்சென்று நேர்ந்தனன் இருவருங் கலந்து
    சீற்ற நீர்மையால் வாளமர் உழந்தனர் செங்கட்
    கூற்றும் அங்கியுஞ் சமர்புரி கின்றகோட் பென்ன.

    137

    1851

    மாறு மாறுசென் றடிமுதல் உறுப்பினை வாளால்
    வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி
    ஊறு செய்திற நாடுவர் இடைதெரிந் துறாமல்
    சூறை யாமெனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார்.

    138

    1852

    இன்ன தன்மையில இருவரும் வாளமர் இயற்றி
    மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால்
    தன்னை நேரிலா இளையவன் தடக்கைவாள் அகற்றி
    அன்ன வன்திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே.

    139

    1853

    மாற்ற லன்கர வாளினால் எறிதலும் வள்ளல்
    ஆற்றல் மொய்ம்பிடைக் குருதியா றிழிதர அதுகண்
    டேற்றம் எய்தினன் சூ£¢மகன் இவன்றனக் கிளையோன்
    தோற்றி டுங்கொலென் றிரங்கினர் வானவர் துளங்கி.

    140

    1854

    அன்ன காலையில் இளையவன் அறுமுகத் தமலன்
    பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து
    மின்னு வானதன் வாட்படை வீசியே விரைந்து
    துன்ன லன்வலத் தோளினை வலியொடு துணித்தான்.

    141

    1855

    துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
    பணித்த னிச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
    மணித்த சும்புகொள் மொய்ம்புடை அவுணர்கோன் மற்றும்
    தணிப்ப ருஞ்சினந் தன்னொடு முயன்றனன் சமரே.

    142

    1856

    தீய வன்றனி முயற்சியை நோக்கியே திறலோன்
    தூய வள்கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப
    மாயை தொல்படை விடுத்தி வேனென மதித்தான்
    ஆய காலையில் அறிஞனும் அவன்தலை அறுத்தான்.

    143

    1857

    வாளில் அங்கவன் அடுதலுஞ் சென்னியும் வரைநேர்
    தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
    நாளு லந்தனன் அவனுயிர் வௌவியே நடுவன்
    ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென்புலத் தடைந்தான்.

    144

    1858

    சூரன் மாமகன் முடிந்தது முனிவருஞ சுரரும்
    ஆரும் நோக்கியே ஆடினா¢ பாடினர் ஆர்த்தார்
    வீர வீரன்நீ யாமென இளவலை வியந்து
    மாரி யாமென அவன்மிசை பொழிந்தனர் மலர்கள்.

    145

    1859

    நுவல ருந்திறல் சூர்மகன் பட்டது நோக்கி
    அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆத்துத்
    தவல ருந்திறல் வீரனை வழுத்தினர் தனது
    கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள்.

    146

    1860

    அன்ன காலையில் வீரவா குப்பெயா¢ அறிஞன்
    தன்னு ளஞ்சிறந் தகலிரு விசும்பினைத் தணவா
    இந்நி லத்திடை வந்துதன் துணைவர்தம் மினத்தைத்
    துன்னி யாங்கவர் புகழ்ந்திட இனையன சொல்வான்.

    147

    1861

    ஆன தொல்பெரு மாயையால் நம்மைமுன் அலைத்த
    பானு கோபனை அட்டனம் பகர்ந்தசூ ளுறவு
    தானு முற்றிய தால்இனி எம்பிரான் தன்முன்
    சேனை தன்னொடு மேவுதுஞ் செல்லுதி ரென்றான்.

    148

    1862

    மிக்க வீரனித் தன்மையை உரைத்தலும் வினவி
    முக்கண் நாயகன் குமரவேள் இணையடி முன்னம்
    புக்கு நென்னலுந் தொழுதில நன்றுநீ புகன்றாய்
    தக்க தேயிது என்றனர் துணைவராந் தலைவர்.

    149

    1863

    ஆங்கவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர்
    தாங்கு பூதருந் தானையந் தலைவரும் தழுவிப்
    பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படாந்து
    பூங்கி டங்குசூழ் பாசறை இருக்கையுட் புகுந்தான்.

    150

    1864

    சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
    பூதர் தம்மொடுந் துணைவர்கள் தம்மொடும் போந்து
    காத லாகியே அறுமுகத் தையனைக் கண்டு
    பாத பங்கயந் தன்னிடைப் பனமுறை பணிந்தான்.

    151

    1865

    பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும் பகவன்
    தெரிந்து நோக்கிநீ சூர்மக னோடுபோர் செய்து
    வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழ்ந்தாம்
    விரைந்து கேண்மதி நல்குதும் வேண்டுவ தென்றான்.

    152

    1866

    என்று மூவிரு முகமுடைப் பண்ணவன் இயம்ப
    நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
    அன்றி யான்செய்த செயலிலை ஆயினும் அடியேற்
    கொன்று மற்றிவண் அருளிய வேண்டுமென் றுரைப்பான்.

    153

    1867

    கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்
    மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெ·கேன்
    மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
    சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்.

    154

    1868

    அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச்
    சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
    உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப
    எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான்.

    155

    1869

    உடைய தொல்விறல் ாகுவுக் கிவ்வரம் உதவிப்
    புடையி னில்தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா
    அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி
    விடைபு ரிந்தனன் யாவர்க்கு மேலதாம் விமலன்.

    156

    1870

    செங்க திர்ப்பகை அட்டவன் முதலிய திறலோர்
    புங்க வன்றனைத் தொழுதுதம் இருக்கையிற் போனார்
    இங்கு மற்றிது நின்றிட அவுணர்தம் இறைவற்
    கங்கண் உற்றிடு செய்கையை மேலினி அறைவாம்.

    157

    1871

    வேறு
    ஈதிவர் புரிந்ததேல் இறைவன் தன்னையுங்
    காதுவர் என்பது கருத்துட் கொண்டெழா
    வாதுவர் கவனமா வழிக்கொண் டாலெனத்
    தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார்.

    158

    1872

    மதிதொடு கடிமதில் மகேந்தி ரப்புரத்
    ததிர்தரு முரசொலி யவிந்து துன்பினான்
    முதிர்வுறும் அழுகுரல் முழங்கும் வீதிபோய்க்
    கதுமென அரசவைக் களத்துள் ஏகினார்.

    159

    1873

    துன்னிய பெரும்புனல் தூண்டு கண்ணினர்
    உன்னருந் துயரினர் உயிர்க்கு நாசியர்
    மன்னவன் இணையடி வணங்கி உன்மகன்
    முன்னுறு தூதனால் முடிவுற் றானென்றார்.

    160

    1874

    தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலுஞ்
    சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன்
    ஆழ்ந்திடு துயர்க்கடல் அழுந்தி ஓவெனா
    வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான்.

    161

    1875

    நக்குறு சுடரென நடுககம் உள்ளுற
    மிக்கெழு குருதிநீர் விழிகள் கான்றிடத்
    தொக்குடல் வியர்ப்பொடு துளக்கங் கொண்டிட
    அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான்.

    162

    1876

    தளர்ந்துடல் வெதும்புறத் தன்கண் சோர்வுற
    உளந்திரி வுறஉயிர் ஊசல் ஆடிட
    விளிந்தவ ராமென வீழ்ந்து மான்றவன்
    தௌ¤ந்தனன் இரங்கினன் இனைய செப்பினான்.

    163

    1877

    வேறு
    மைந்தவோ என்றன் மதகளிறோ வல்வினையேன்
    சிந்தையோ சிந்தை தெவிட்டாத தௌ¢ளமுதோ
    தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ
    எந்தையோ சின்னை இதற்கோ வளர்த்தனனே.

    164

    1878

    வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து
    முன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால்
    என்னைத் தனியேவைத் தெந்தையுமே குற்றனையேல்
    பின்னைத் தமியேன் பிழைக்கும் படிஉண்டோ.

    165

    1879

    ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ்
    சொன்னாய் அதுவும் இகழந் துன்னைத் தோற்றனனால்
    என்னாம் இனியதனை எண்ணுவதி யாவருக்குந்
    தன்னால் வராத வினையுளதோ தக்கோனே.

    166

    1880

    நன்றீ தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல்
    என்றீர மாகஇசைத் தாயான் ஏகாமல்
    சென்றீ எனவே செலுத்தியுனைப் போக்கினனால்
    ஒன்றீங் குளதோ பிழையுன் மிசைஐயா.

    167

    1881

    கைப்பேபப கொண்டு கடவுளர்க ளெல்லோரும்
    முப்போதும் வந்து முறையால் வழிபடுவார்
    ஒப்போதல் இல்லா உனதுமே லுள்ளபகை
    இப்போ துடன்நீங்கி யேமுற் றிருந்தாரோ.

    168

    1882

    உன்னா ணைக்கஞ்சி உறங்கா துழன்றிடுமால்
    இந்நாள் தனிலநீ இறந்தா யெனமகிழ்ந்து
    பன்னாகப் பாயல் படுத்திருவர் கால்வருடத்
    தொன்னாள் எனவே கவலையின்றித் துஞ்சானோ.

    169

    1883

    நந்தா னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர்
    சிந்தா மணியே திருவேயென் தௌ¢ளமுதே
    எந்தாய் தனியேபோய் எங்கிருந்தாய் அங்கேயான்
    வந்தாலும் உன்றன் மதுரமொழ கேட்பேனோ.

    170

    1884

    சோராத சூழச்சித் துணைவர்சிறார் எல்லாருஞ்
    சேரார் பொருதலைப்பச் சென்றொழிந்து போயினரால்
    ஆராய்ந் தெனதுதுயர் ஆற்றுவதற் காருமிலை
    வாராய் புதல்வா கடிதோடி வாராயே.

    171

    1885

    நீடித் திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை
    வீடிச் சதுர்முகத்தோன் வேண்டிடநீ விட்டபின்னர்
    வாடித் தளர்ந்து வசைபடைத்த வெய்யவனார்
    ஓடிக் ககனத் துளமகிழ்ந்து செல்லாரோ.

    172

    1886

    பற்றார் அடித்தொண்டு பேணிப் பரந்துழலும்
    ஒற்றா னவனோ உனைத்தான் அடவல்லான்
    அற்றார் தமதுடலுக் காவியாயச் சென்றிடவே
    கற்றா யேல்என்னை மறந்திடவுங் கற்றாயோ.

    173

    1887

    மாகொற்ற மைந்தன் மடிந்தான் எனக்கேட்டும்
    ஏகிற் றிலையால் இருக்கின்ற தின்னும்உயிர்
    வேகுற்ற துள்ளம் மிகுதுயரம் வந்தவழிச்
    சாகுற்ற தோர்வரமுஞ் சங்கரன்பாற் பெற்றிலனே.

    174

    1888

    வெற்றி யுளமதலை வீந்தால் விளியாமல்
    மற்றும் எனதுயிரும் வைகும் வலிதாகச்
    செற்றி டலும்ஆகா தென்செய்கேன் அழியாமல்
    பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே.

    175

    1889

    ஆவியே கண்ணே அரசே உனைச்சமருக்
    கேவியே இவ்வா றிரங்குதற்கோ இங்கிருந்தேன்
    கூவியே கொண்டுசெலுங் கூற்றுவன்ஒற் றோஅறியேன்
    பாவியேன் இந்தப் பதிபுகுந்த தூதுவனே.

    176

    1890

    கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னதன்றேல்
    வேற்றோர் இடந்தன்னில் மேவினையோ யானொன்றுந்
    தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம்
    ஆற்றேன் அரசேயென் னாருயிரரே வாராயோ.

    177

    1891

    என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
    அன்னான் உழையில் அவுணர் சிலரோடித்
    துன்னார் களத்தில் துணிவுற்ற சீர்மதலை
    பொன்னார் உடலங் கொடுுலம்பிப் போந்தனரால்.

    178

    1892

    வேறு
    சேந்த குஞ்சிச் சிலதர்செஞ் ஞாயிறு
    பாய்ந்த அண்ணல் படிவ மிசைக்கொளா
    வேந்தன் முன்னுற உய்த்து விரைந்தவன்
    பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார்.

    179

    1893

    அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
    தண்ட கஞ்செய் தனிக்குடை மன்னவன்
    துண்ட மாகிய தோன்றல்தன் யாக்கையைக்
    கண்ட ரற்றிக் கலுழ்ந்து கலங்கினான்.

    180

    1894

    அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
    பற்று நெல்லெழில் பார்த்திடுங் கண்களில்
    ஒற்றும் முத்தம் உதவும் உரனிலாப்
    புற்ற ராவில் உயிர்க்கும் புரளுமால்.

    181

    1895

    துஞ்ச லாகித் துணிவுற்றுந் தெவ்வர்மேல்
    நெஞ்சு கொண்ட நெடுஞ்சினந் தீர்கிலை
    விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
    எஞ்சு மேகொல் இனிஉன்னொ டென்னுமால்.

    182

    1896

    கையி ªª£ன்றைக் கதுமெனப் பற்றிடாச்
    செய்ய கட்படு செம்புனல் ஆட்டியே
    வெய்ய வற்கொடு விண்ணினுந் தந்தகை
    ஐய ஈதுகொ லோவென் றரற்றுமே.

    183

    1897

    வாள ரம்படு வாளிகள் மூழ்கலில்
    சார ரங்க ளெனப்பழை தங்கிய
    தோளை மார்பினை நோக்கும் தொலைவிலா
    ஆளை நீயல தாருள ரேயெனும்.

    184

    1898

    பாறு லாய பறந்தலை தன்னிடை
    வேறு வேறது வாகநின் மெய்யினைக்
    கூறு செய்தவன் ஆவி குடித்தலால்
    ஆறு மோவென் னகததுயர் என்றிடும்.

    185

    1899

    மூண்ட போ£¢த்தொழில் முற்றிய என்மகன்
    ஈண்டு வந்ததொர் தூதுவன் எற்றிட
    மாண்டு ளானென் துரைத்திடின் மற்றியான்
    ஆண்ட பேரர சாற்றல்நன் றேயெனும்.

    186

    1900

    சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல்
    பொருத்தி நோக்கிப் புரளுமென் புந்தியை
    வருத்தும் ஆகுலம் மற்றது கண்டுநீ
    இருத்தி யோவுயி ரேயின்னும் என்றிடும்.

    187/tr>

    1901

    மருளும் அங்கை மறிக்கும் மதலையை
    அருளின் நோக்கி அழும்விழுஞ் சோர்வுறும்
    புரளும் வாயிற் புடைக்கும் புவியிடை
    உருளும் நீட வுயிர்க்கும் வியர்க்குமே.

    188

    1902

    மன்னர் மன்னவன் மற்றிது பான்மையால்
    இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
    கன்னி மாநகர்க் காப்பினுள் வைகிய
    அனனை கேட்டனள் ஆகுலம் எய்தினாள்.

    189

    1903

    நிலத்தில் வீழ்ந்து சா¤ந்து நெடுமயிர்
    குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
    அலைத்த வுந்தியள் ஆற்றருந் துன்பினள்
    வலைத்த லைப்படு மஞ்ஞையின் ஏங்கினாள்.

    190

    1904

    அல்லல் கூர்ந்த அவுணன்றன் காதலி
    தொல்லை வைகிய சூழலை நீங்கியே
    இல்லை யாகிய என்மகற் காண்பனென்
    றொல்லை ஆவலித் தோடினள் ஏகினாள்.

    191

    1905

    மாவ லிக்கு மடங்கெலொப் பான்தனிக்
    காவ லிக்குத் துயர்வந்த கன்னிமீர்
    நாவ லிக்ண நண்ணுதிர் என்றுகூய்
    ஆவ லித்தனர் ஆயிழை மாரெலாம்.

    192

    1906

    வாங்கு பூநுதல் மன்னவன் தேவிதன்
    பாங்கர் மங்கையர் பற்பல ருங்குழீஇக்
    கோங்க மன்ன முலைமுகங் கொட்டியே
    ஏங்கி யேதுயர் எய்தி இரங்கினார்.

    193

    1907

    இந்தி ரைக்கு நிகர்வரும் ஏந்திழை
    அந்த மில்லதொ ராயிழை மாரொடு
    முந்தி யேகி முடிந்து துணிந்திடு
    மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்.

    194

    1908

    மயங்கி னாள்பின் மனந்தௌ¤ வெய்தினாள்
    உயங்கி னாள்மிக ஓவென் றரற்றினாள்
    தியங்கி னாள்உரும் ஏறு திளைத்திடு
    புயங்க மென்னப் புரண்டு புலம்பினாள்.

    195

    1909

    வேறு
    வெய்யோன் என்றூழ் தீண்டுத லோடும் விண்ணிற்போய்க்
    கையோ டன்னாற் பற்றினை வந்தென் கண்முன்னம்
    மொய்யோ டன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
    ஐயோ கூற்றுக் கின்றிரை யாவ தறியேனே.

    196

    1910

    பண்டே வானஞ் செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங்
    கொண்டே சென்றாய் அப்பகல் உன்றல் கோலத்தைக்
    கண்டேன்இன்றே இக்கிடை தானுங் காண்பேனோ
    விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே.

    197

    1911

    செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று
    முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அதுவாங்கித்
    தந்தாய் நொந்தேற் கின்றொரு மாற்றந் தருகில்லாய்
    அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே.

    198

    1912

    பாபத் தாலோ விண்ணவ ரானோர் பலர்கூறுஞ்
    சாபத் தாலோ யாரினும் மேலாந் தனிமூவர்
    கோபத் தாலோ எவ்வகை யாலோ குறியேன்யான்
    சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே.

    199

    1913

    பொன்போல மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக்
    கொன்போ£¢ மூட்டி மைந்தரை எல்லாங் கொல்வித்துத்
    துன்போ டிந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே
    என்போ லாக வானவர் மாதர் எல்லோரும்.

    200

    1914

    வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக்
    கான்றா லிக்கும் வன்னி முகத்துக் கழல்வீரன்
    மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல்வந்த
    தோன்றா லென்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ.

    201

    1915

    துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச்
    சென்றே வானிற் புக்கனை நின்பாற் செலும்வண்ணம்
    ஒன்றே உள்ளந் தான்துணி யாதால் உலைவெய்து
    நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா.

    202

    1916

    கருந்தேன் மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம்
    விருந்தே யாகும் நின்னடை காணும் விதியற்றேன்
    மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்றிங்ஙன்
    இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே.

    203

    1917

    நையா நிற்குந் தேவர் தமக்கு நனிதுன்பஞ்
    செய்யா நிற்றல் நன்றல என்றேன் அதுதேரா
    தையா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனுந்தான்
    உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே.

    204

    1918

    வேறு
    என்றிவை பன்னித் தேவி இரங்கினள் இரங்க லொடு
    நின்றிடு துணைவி மாரும் நீடுதொல் கிளைஞர் யாரும்
    கண்றொழி புனிற்கு என்னக் கதறினர் காமர் மூதூர்
    வென்றியை நீங்கி அந்நாள் விழுமநோய் மிக்க தன்றே.

    205

    1919

    அன்னது காலை தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப்
    பன்னருஞ் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
    தொன்னிலை இருக்கை உய்த்துத் துண்ணெனச் சீற்றங் கொண்டு
    தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க் கிதனைச் சொல்வான்.

    206

    1920

    மாற்றலர் தொகையை யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச்
    சீற்றமாய்க் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
    ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
    வீற்றொரு சாரியின் இட்டு விடாதுபோற் றிடுதி ரென்றான்.

    207

    1921

    அன்னது பலருங் கேளா அழகிதென் றெடுத்து மைந்தன்
    பொன்னுடல் ஒருசார் உய்த்துப் பொற்றினர் போற்ற லோடும்
    மன்னவன் வெகுண்டு நந்தம் மாற்றலர் தொகையை யெல்லாம்
    என்னிளை யோனுக் கூணா அளிப்பனென் றெண்ணங்கொண்டான்.

    208

    1922

    தும்பையஞ் சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச்
    செம்புன லொழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
    அம்புதி வடாது பாங்கர் ஆசுரத் தரசு செய்யும்
    எம்பியை வல்லை ஓடிக் கொணருதிர் ண்டை என்றான்.

    209


    ஆகத் திருவிருத்தம் - 1922

 

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home