Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranamபாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) >  யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) > தக்ஷ காண்டம் (1 - 403)தக்ஷ காண்டம் (404 - 907)  > தக்ஷ காண்டம் (908-1562 )தக்ஷ காண்டம் (1563 - 2067)


 

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 4. யுத்த காண்டம் படலம் 4 (457 - 876)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 4 (verses 457 - 876 )


Acknowledgements: Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

    457

    கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம்
    நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ்
    சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத்
    துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய.

    1

    458

    வேறு
    இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து
    மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித்
    திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன்
    நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நனைந்தான்.

    2

    459

    நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம் நீட
    இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே
    அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப்
    புனைவன் வாகையென் ன்னினான் அழிவிலாப் புகழோன்.

    3

    460

    செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி
    வெங்கண் ஒற்றிரில் அளப்பிலா¢ தங்களை விளியா
    அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர்
    எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான்.

    4

    461

    என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ்
    சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத்
    துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள்
    வென்றி கொண்டநூ றாயிர வௌ¢ளத்தின் மிக்கோர்.

    5

    462

    வேறு
    சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங்
    கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி
    பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி
    பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார்.

    6

    463

    எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வௌ¢ ளத்தி னோருந்
    திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி யார்ப்ப
    விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக்
    கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல்.

    7

    464

    தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம்
    நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும்
    நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி
    ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான்.

    8

    465

    அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங்
    கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச்
    செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும்
    இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன். 9

    16

    466

    எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட்
    கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற் கோதை
    தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும்
    அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.

    10

    467

    குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில்
    சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி
    மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும்
    இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல்.

    11

    468

    பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்
    எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக
    அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல
    விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான்.

    12

    469

    கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற
    வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்
    காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக மென்ன
    ஆயிர நூறு வௌ¢ளத் தவுணரும் புடைசூழ்ந் தார்த்தார்.

    13

    470

    வேறு
    அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன்
    துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன்
    என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி
    மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான்.

    14

    471

    திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர்
    கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப்
    பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும்
    அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும்.

    15

    472

    ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின்
    மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப்
    போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர்
    ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில்.

    16

    473

    தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில்
    கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர்
    வந்த நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து
    முந்து தானையந் தலைவராய் ஏகினா¢ முறையால்.

    17

    474

    ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர்
    வாகை கொண்டநூ றாயிர வௌ¢ளத்து மறவோ£¢
    ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி
    ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க.

    18

    475

    வேறு
    கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர்
    படா¢ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத் தேர்மல்
    அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்றவ
    விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான்.

    19

    476

    தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு கோடு
    திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை
    கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்
    கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற றம்மா.

    20

    477

    தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு சேண்போய்
    முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர்
    கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும்
    எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே.

    21

    478

    நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக்
    கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம்
    தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர்
    மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன்.

    22

    479

    நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும்
    ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை
    ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத்
    தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி.

    23

    480

    கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண வௌ¢ளம்
    துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை
    என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும்
    பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே.

    24

    481

    கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும்
    நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி
    மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின்
    அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ.

    25

    482

    திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப்
    பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந்
    தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி
    எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா.

    26

    483

    வேறு
    ஆனவியல் பெய்தஅவு ணப்படைக ளோடும்
    வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத்
    தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக்
    கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான்.

    27

    484

    அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த
    துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன்
    இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே
    சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான்.

    28

    485

    ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே
    ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப்
    பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி
    வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான்.

    29

    486

    என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல்
    குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப
    வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான்
    மன்றல்மலா¢ சிந்திஅயன் மாலொடு வழுத்த.

    30

    487

    செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர்
    தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக்
    கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர்
    எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச.

    31

    488

    நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன்
    வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை
    வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக்
    கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார்.

    32

    489

    பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற
    பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர்
    பாரிடர்பு £¤ந்தனர் பரிக்குமெனை யென்னாப்
    பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும்.

    33

    490

    தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி
    தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி
    மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்
    கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்.

    34

    491

    நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும்
    கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப்
    பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே
    ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும்.

    35

    492

    சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும்
    எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின்
    வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித்
    திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார்.

    36

    493

    மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை
    இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன்
    செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப்
    பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான்.

    37

    494

    அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி
    மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த
    தொடா¢ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர்
    படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல.

    38

    495

    வேறு
    வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள்
    கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவா¢
    தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர்
    விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே.

    39

    496

    மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும்
    தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்
    மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும்
    ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல்.

    40

    497

    மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ்
    அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல்
    முப்புகா இலைப்படை முசலம் முற்கரம்
    கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை.

    41

    498

    பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை
    எற்றுவர் பா£¢தனில் எறிவர் மாதிரஞ்
    சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென
    முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.

    42

    499

    இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில்
    பொருகளி ராயிரம் புரள மோதுவர்
    கரிகளொ ராயிரங் கரங்கொண் டேற்றியே
    பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார்.

    43

    500

    பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண்
    டாயிர கோடியாம் அவுணர் தங்களைச்
    சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார்
    காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே.

    44

    501

    குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர்
    இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர்
    வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்
    சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.

    45

    502

    மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள்
    நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்
    கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத்
    தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர்.

    46

    503

    இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித்
    தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள்
    அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி
    வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே.

    47

    504

    பொன்றிகழ படையொடு புவியும் வானுமாய்
    நின்றிடும் அவுணா¢கள் நீடு தொல்பிணக்
    குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச்
    சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.

    48

    505

    நீடிய வேற்படை நிமலன் காணுற
    வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற்
    கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல்
    ஆடிய உடற்குறை அனந்த கோடியே.

    49

    506

    வேறு
    மானப் படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும்
    ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா றிகல்செய்யுங்
    கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித்
    தானை தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான்.

    50

    507

    தேரா யிரமா யிரமங் கொருபாற் சேமத் தொடுசெல்லக்
    காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார
    ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே
    ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான்.

    51

    508

    வா£¢வில் லதனை விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச்
    சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய் தனன்நிற்ப
    ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் புரிகின்றான்
    போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர்.

    52

    509

    ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா இகல்செய்யும்
    பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ யுமிழ்கண்ணான்
    மேதக் கசலந் தரனா£¢ உடலம் வீழும் படிகீண்ட
    சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன்.

    53

    510

    எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு
    கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்கொள்ளும்
    தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச
    விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார்.

    54

    511

    மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில்
    கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான்
    பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா
    நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான்.

    55

    512

    வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சோ¢ அதிசூரன்
    எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம்
    எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ்
    செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.

    56

    513

    அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர்
    பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா
    உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்
    கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான்.

    57

    514

    வேறு
    பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை
    ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள்
    மாயும் வண்ணம றம்புரி உக்கிரன்
    சீய மாமெனச் சென்றுதைத் தானரோ.

    58

    515

    உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப்
    பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே
    சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய்
    புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான்.

    59

    516

    தூண்டு கின்ற் சுடர்க்கணை யாவையும்
    ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக்
    காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன்
    மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே.

    60

    517

    வேறொர் தேரிடை வெய்தென எய்தியே
    ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ
    மாறி தெய்வத மாப்படை தொட்டுனை
    ஈறு காண்பன் இறந்தனை நீயெனா.

    61

    518

    முன்னு பூசை முதலிய யாவையும்
    முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின்
    வன்னி மாப்படை வாங்கி வணங்கியே
    மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான்.

    62

    519

    ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன்
    வீசு வெம்படை வீரத்தை நோக்கியே
    ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை
    நேச மோடு நினைந்தனன் போற்றினான்.

    63

    520

    எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோ்
    அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன்
    செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே
    கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட.

    64

    521

    நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன்
    துங்க மாமகன் தொல்புனல் மாப்படை
    பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்
    அங்க வற்றையும் பற்றி அருந்தினான்.

    65

    522

    காற்றின் வெம்படை ஏவினன் கைதவன்
    ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்
    தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே
    ஏற்ற மான இரும்பொருள் யாவதோ.

    66

    523

    மற்றும் அவ்வதி சூரன் மலரயன்
    ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன்
    பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால்
    பெற்றி ருந்த பெரும்படை ஏவினான்.

    67

    524

    ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன்
    பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங்
    கையில வாங்கிக் கதுமென வாய்க்கொளா
    வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே.

    68

    525

    ஆன காலை அரிமுகன் காதலன்
    யானி னிச்செய் இயற்கையென் னேயிவன்
    தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை
    மேனி லாவிய வேதன்கொ லோவென்றான்.

    69

    526

    மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை
    ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார்
    ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத்
    தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான்.

    70

    527

    சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல்
    தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன்
    ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர்
    கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார்.

    71

    528

    அண்ணல் வாசவ னாதிய ராகிய
    எண்ணில் வானவர் யாவரும் இச்செயல்
    கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப்
    பண்ண வன்முன் பணிந்திது கூறுவார்.

    72

    529

    எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை
    செங்க ணான்படை தீயநின் மாப்படை
    அங்கி யாவும் அணுகஇப் பூதா¢கோன்
    நுங்கு மாறென் நுவலுதி என்னவே.

    73

    530

    இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன்
    அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான்
    கந்தன் எந்தை கழலிணை போற்றியே
    வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான்.

    74

    531

    எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ்
    செம்மை யானவன் செம்பொற் சிலம்படி
    மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன்
    எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான்.

    75

    532

    மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய
    சக்க ரம்நுக ருந்தவத் தோனினும்
    மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்
    உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான்.

    76

    533

    பண்டு நாமருள் பல்படை யாவையும்
    உண்ட தோவியப் பொல்லையில எல்லையில்
    அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன்
    கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ.

    77

    534

    என்ன நான்முகன் எண்ணி இயம்பலும்
    அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந்
    துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல்
    இன்னு மாக இவற்கென் றியம்பினார்.

    78

    535

    வேறு
    வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர்
    சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல்
    ஊன மாகிய படையென உன்னலை உமைபால்
    ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான்.

    79

    536

    மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச்
    சிந்தை மேலுறு வௌ¤யோ டரன்படை செலுத்த
    அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும்
    எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில்.

    80

    537

    நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும்
    விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும்
    எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும்
    அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே.

    81

    538

    ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும்
    ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப்
    பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி
    நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான்.

    82

    539

    ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான்
    மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான்
    ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி
    மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில்.

    83

    540

    அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின் அவர்பால்
    நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க
    விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூ£¢
    பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே. 84

    16

    541

    ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச்
    சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார்
    வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்
    ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண் றிரிந்தார்.

    85

    542

    நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர்
    ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து
    பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன்
    வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான்.

    86

    543

    எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்
    பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத்
    தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான்
    மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி.

    87

    544

    துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர்
    மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும்
    நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு நகையா
    விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின்.

    88

    545

    கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின்
    நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த
    கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப்
    படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப.

    89

    546

    பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும்
    பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன்
    மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்
    சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச் சொரிந்தான்.

    90

    547

    வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள் வலிதின்
    விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி
    முடியுங் கைகளும் ஆகமும முகத்தொடு மொய்ம்பும்
    அடியுஞ் சோ£¤நீர் கான்றிட அழுந்திய அவர்பால்.

    91

    548

    மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும் மண்மேல்
    அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும்
    இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக்
    கொற்ற வீரா¤ல் கனகன்என் பவன்எதிர் கொண்டான்.

    92

    549

    எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த
    அதிரும் வார்கழல் அன்னலோ£¢ வடிக்கணை அழுத்த
    உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான்
    கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின்.

    93

    550

    பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம் பனைக்கை
    நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக்
    காகம் போலவௌ¢ ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர்
    மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான்.

    94

    551

    இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் தினாங்
    கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின்
    அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக்
    குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான்.

    95

    552

    குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித்
    தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப்
    புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள்
    பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி.

    96

    553

    பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்
    நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப்
    புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத
    அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான்.

    97

    554

    அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக்
    கவன வெம்பரி யாயின உலந்தன காணாப்
    பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான்
    புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள போல்வான்.

    98

    555

    முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்நீர்
    செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய
    வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே
    மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ வந்தான்.

    99

    556

    வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி
    குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய்
    பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக்
    கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான்.

    100

    557

    சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக்
    குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன்
    ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்
    நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான்.

    101

    558

    எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர் எறியத்
    தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார்
    விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித்
    தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.

    102

    559

    ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே
    அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள்
    பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில்
    கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான்.

    103

    560

    தனது கார்முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்
    முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின்
    நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி
    மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை வளைத்தான்.

    104

    561

    வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக மறவோன்
    குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி
    இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன்
    கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர் கிடைத்தான்.

    105

    562

    எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி
    கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா
    அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம்
    நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில்.

    106

    563

    பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன்
    சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப
    மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை
    ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான்.

    107

    564

    உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும் முயங்கி
    எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப
    நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால்
    ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான்.

    108

    565

    விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே வெகுண்டு
    நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா
    அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை
    இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான்.

    109

    566

    முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா
    இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக்
    கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு
    பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான்.

    110

    567

    தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர் தண்டம்
    இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப்
    புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன்
    மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான்.

    111

    568

    தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத் தொலைத்து
    மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து
    பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து
    விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய் வீழ்ந்தான்.

    112

    569

    விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு
    பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே
    அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண்
    டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந் துற்றான்.

    113

    570

    வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர்
    கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி
    யாரும் வானவர் வியபபுற அவுணர்கள் அயரத்
    தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால்.

    114

    571

    மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன்
    றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே
    பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்
    உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார்.

    115

    571

    தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால்
    சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப
    வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால்
    கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.

    116

    573

    ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப்
    பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப
    வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன்
    போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர்.

    117

    574

    வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன்
    பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார்
    அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன்
    கா¤த ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின்.

    118

    575

    மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு வளைத்து
    நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச்
    சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன்
    ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான்.

    119

    576

    உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து
    சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல்
    குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற்
    றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான்.

    120

    577

    எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம் இறலுங்
    குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி
    செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே
    உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப.

    121

    578

    கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று
    மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத
    ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந் தொருதன்
    செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில்.
    ( * பா-ம் - திரள்.)

    122

    579

    காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங் கண்டு
    தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர்
    சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி
    ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான்.

    123

    580

    எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின் வீழ்ந்து
    மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற்
    செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை
    அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே.

    124

    581

    மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து
    பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத்
    தொக்க பேரழல் உலகட எழுந்ததோற் றம்போல்
    மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான்.

    125

    582

    சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும்
    ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக்
    காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக்
    கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக் குனித்தான்.

    126

    583

    வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை
    நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல்
    பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த
    நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால்.

    127

    584

    கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள்
    மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்
    உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ்
    சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி.

    128

    585

    யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில்
    வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து
    மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும்
    ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் அரவம்.

    129

    586

    வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன் விண்ணோர்
    நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக்
    கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட
    பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி.

    130

    587

    வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும் மறத்தால்
    விஞ்சு பூதமீ ராயிர வௌ¢ளமும் வெருவி
    எஞ்சி யேயவண் நின்றிடா தி£¤ந்துள வென்றால்
    அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ.

    131

    588

    சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப்
    பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப்
    போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து
    மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும் மரமும்.

    132

    589

    அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி
    பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித்
    தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து
    துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான்.

    133

    5901

    முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத்
    தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தனன்
    கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்
    அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார்.

    134

    591

    துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண்
    டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்
    களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி
    உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான்.

    135

    592

    நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான்
    ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான்
    வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான்
    ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன்.

    136

    593

    மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்
    காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான்
    ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன்
    மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி மறிந்தான்.

    137

    594

    பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன் பதுமன்
    எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்
    மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான்
    சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார்.

    138

    595

    நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண்
    பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற்
    றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி
    துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என் பவனும்.

    139

    596

    வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான்
    சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான்
    சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான்
    பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான்.

    140

    597

    இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர்
    அனிக வேந்தர்கள் போரவலி இன்றியே அழியத்
    துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர்
    கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள்.

    141

    598

    தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன்
    வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி
    ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண்
    மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான்.

    142

    599

    முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம்
    திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப்
    பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி
    உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான்.

    143

    600

    உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே
    எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி
    வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை
    கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின்.

    144

    601

    வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள்
    ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி
    தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத்
    தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான்.

    145

    602

    செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து
    மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி
    குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில்
    அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான்.

    146

    603

    அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப்
    பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி
    ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து
    விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன்.

    147

    604

    வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன்
    கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா
    ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால்
    உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள்.

    148

    605

    முட்டு வெங்கணை வீரராக் கதனெனும் மொய்ம்பன்
    தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க
    நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில்
    எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த் தெழுந்தான்.

    149

    606

    விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க்
    கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத்
    துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன்
    வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது மணிவாள்.

    150

    607

    நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன்
    தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன்
    படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென்
    றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல.

    151

    608

    அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட அலமந்
    திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண்
    டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும்
    கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன்.

    152

    609

    சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப
    வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச்
    சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன்
    தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி.

    153

    610

    திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி
    வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை
    ஒருதி றத்தருந் தௌ¤கிலர் உணர்ந்திட அற்றோ
    இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.

    154

    611

    ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று
    கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத்
    தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற்
    றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான்.

    155

    612

    வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகைமேல்
    புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும்
    மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன்
    சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான்.

    156

    613

    சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை
    ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த
    குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப
    நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான்.

    157

    614

    நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு
    தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத்
    தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள்
    விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான்.

    158

    615

    ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்
    கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல்
    மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா
    ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான்.

    159

    616

    வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக்
    கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச்
    சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின்
    மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல்.

    160

    617

    உற்ற தோரெ·கம் நுண்டுக ளாகிவிண் ணுலவிச்
    சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன்
    மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்
    சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான்.

    161

    618


    ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல்
    பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த
    வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த
    சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம்.

    162

    619

    மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக்
    ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று
    நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங்
    குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர் கொண்டான்.

    163

    620

    எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த
    துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா
    அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து
    நுதிநெ டுங்கணை அழுத்தின் ஆயிர நுதலின்.

    164

    621

    ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில்
    பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து
    சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து
    மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ.

    165

    622

    எறித்த ருஞ்சுடா¢த் தபனனுஞ் சேடனும் இரங்கப்
    பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம்
    வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால்
    அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா.

    166

    623

    கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள்
    உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து
    பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா
    வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான்.

    167

    624

    வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின் வலிதாய்
    அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை வெடித்த
    தாமெனக் கீண்டது விண்டது சோரி
    துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால்.

    168

    625

    வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச்
    சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா
    ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும
    வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள.

    169

    626

    பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற்
    றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி
    முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம்
    புரந்த ரப்பெய்£ வாகையான் ஏற்றெதிர் புகுந்தான்.

    170

    627

    ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான்
    ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை
    மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக்
    கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக.

    171

    628

    குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன்
    முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால்
    உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல்
    மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால்.

    172

    629

    தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான்
    முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம்
    கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை
    விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான்.

    173

    630

    நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத்
    திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை
    உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீ£¢ உமிழ்ந்து
    மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி.

    174

    631

    தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார்
    சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும்
    நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி
    வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.

    175

    632

    சார்ங்கம் அன்னதோ£¢ வலியதாய் மாமதன் தனுவாம்
    ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக்
    கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக்
    கூ£¢ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான்.

    176

    633

    ஆ£¢ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம்
    வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார்
    சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப்
    பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை.

    177

    634

    ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின்
    சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன்
    ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத்
    தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான்.

    178

    635

    தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத் தலைசேர்
    வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே
    எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா
    விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த.

    179

    636

    விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக்
    கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி
    உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப்
    புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில்.

    180

    637

    விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்¢ந்து
    மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின்
    உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்
    திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான்.

    181

    638

    அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன்
    இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சோ
    உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப்
    பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும்.

    182

    639

    எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத்
    தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய்
    குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே
    அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா.

    183

    640

    பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி
    ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி
    மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய்
    இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான்.

    184

    641

    தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்
    மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்
    ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில
    ஏதும் வல்லன்யான் வேண்டுபோ£¢ புரிதியால் என்றான்.

    185

    642

    என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம்
    தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த
    துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன்
    குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான்.

    186

    643

    சிலைப னித்திடக் குனித்திடு காலையிற் செம்பொன்
    மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய்
    அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண்
    தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும்.

    187

    644

    வேறு
    அம்முறை வேலையில் ஆடல்கொள மொய்ம்பின்
    செம்மல்த னாது செழுங்கர முற்ற
    மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக்
    கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான்.

    188

    645

    ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ்
    சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை
    மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும்
    பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே.

    189

    646

    அங்கது காலையில் ஆயிர கோடி
    துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப்
    புங்கவ னுக்கிளை யான்புய லென்ன
    வெங்கணை வீசி விலக்கினன் நின்றான்.

    190

    647

    விலக்கிய காலை வெகுண்டிவன் ஆவி
    கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன்
    இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்ான்
    கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே.

    191

    648

    வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி
    செற்றமொ டேசெறி வித்திடு காலை
    மற்றவை சிந்தினன் வாளிகள் நூறு
    நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன்.

    192

    649

    அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி
    மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட
    வச்சிர மாகிய மால்வரை ஒன்றின்
    உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன.

    193

    650

    நூறயில் வாளி நுதற்கிடை சென்று
    மூறில னாகி உறுந்திறல் நோக்கி
    ஆறுமு கேசன் அயற்படை அல்லால்
    ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான்.

    194

    651

    என்றிடும் வீரன் இதற்பினும் வாளி
    துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன்
    வன்றிறல வெங்கணை யாலவை மாற்றி
    ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான்.

    195

    652

    அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல்
    மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற
    செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே
    உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ.

    196

    653

    ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன்
    ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன்
    பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில்
    கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான்.

    197

    654

    அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த
    வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப்
    புலவொடு சோரி புறத்தில் விளங்க
    இலவம லர்ந்தென யாரும் இருந்தார்.

    198

    655

    அங்கது நோக்கி அழன்றசு ரேசன்
    செங்கணை ஐம்பது தீயென ஓச்சி
    வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப்
    பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான்.

    199

    656

    அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர்
    வட்டணை யாழிகொள் வையம தேறி
    நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத்
    தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான்.

    200

    657

    வேறு
    வீறாகிய அசுரர்கிறை மிகமூரல் படைத்து
    மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு நிற்பர்
    சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி
    ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய்.

    201

    658

    காற்றின்படை கன்லின்படை கண்டம்பல வாகக்
    கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ்
    சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும்
    ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே.

    202

    659

    அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும் அம்மை
    சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் தலைவன்
    வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும்
    முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான்.

    203

    660

    ஏற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி
    வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு மொய்ம்பன்
    மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப்
    போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான.

    204

    661

    விண்ணோர்படை இவையாவையும் விளிவாதலும் வீரன்
    நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித னாகி
    மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக்
    கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான்.

    205

    662

    விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி
    அடுக்குற்றிடும் உருமுப்புகை அழல்கால்பல படைகள்
    மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை யுலகு
    நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ.

    206

    663

    ஆண்டேவரும் அயன்மால்படை அவுணன்தட மார்பங்
    கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக லத்தின்
    மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச்
    சேண்டோய்கிரி துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே.

    207

    664

    மாயோன்படை உலகந்தரு மறையோன்படை அவுணத்
    தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி சிந்தி
    மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி
    ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன அன்றே.

    208

    665

    மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி
    நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர முன்னிக்
    கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட அண்டம்
    ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான்.

    209

    666

    முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால்
    எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில எந்தப்
    புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும்
    உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன்.

    210

    667

    ஊனீத்திடு தவிண்ணவர் உலகம்புகழ் அயன்மால்
    தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர் தன்மை
    மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல் அதனைத்
    தேனீத்தொகை தசையீதெனச் சேருந்திறன் அன்றே.

    211

    668

    தெரிந்திட்டனை நீயோச்சிய திறல்வெம்படை என்பால்
    புரிந்திட்டதொர் வயமொன்றிலை பொள்ளென்றும் மேவி
    முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்ன பொடிந்தே
    எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால்.

    212

    669

    வில்வன்மைகொள் சரவன்மையும் விண்ணோர்படைக் கலத்தின்
    பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும் இயல்பாம்
    தொல்வன்மையுங் கண்டேயுனைத் தொலைவில்படை ஒன்றால்
    கொல்வன்எனக் காலந்தெரி கூற்றாமென நின்றேன்.

    213

    670

    என்னாவசு ரன்செப்பலும் இளையோன்இனி ஒன்றால்
    ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென உன்னாத்
    தொன்னாள்எயில் மூன்றட்டருள் தூயோன்படைக் கலத்தை
    மன்னாரருள் புரிசிந்தனை வழிபாட்டோடு விடுத்தான்.

    214

    671

    விடுங்காலையின் இறைவன்படை விடம்வெங்கனல் அசனி
    கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல கூளி
    தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற
    அடுங்காலமி தெனவேநெடி தார்த்துற்றதை யன்றே.

    215

    672

    உறுகின்றதொர் படைநோக்கினன் உரமுற்றெனக் குடைந்தே
    இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால்
    பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல் என்னாச்
    செறுகின்றதொ ரவுணர்க்கிறை சிவன்றொல்படை எடுத்தான்.

    216

    673

    ஊறேற்றிடு தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி
    ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை தொடுப்ப
    நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை எதிர்ோய்
    மாறேற்றமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ.

    217

    674

    வேறு
    காண்டகு நுதல்விழிக் கடவுள் மாப்படை
    ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே
    மாண்டிடும் உலகென வானம் போற்றிட
    மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால்.

    218

    675

    அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்
    இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள்
    உன்னுயிர் இன்னினி ஒழிப்பன் காண்கெனாத்
    தன்னெடுஞ் சிலைவளைஇச் சரங்கள் சிந்தினான்.

    219

    676

    துன்புறு அடிக்கணை சூரன் சிந்தலும்
    தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே
    முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான்
    பொன்புனை அலங்கலம் யுத்து வள்ளலே.

    220

    677

    அத்தகும் எல்லையில் அவுணர் மன்னவன்
    முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே
    வித்தக மொய்ம்புடை வீர வாகுவின்
    கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான்.

    221

    678

    சிலையது துணிதலுஞ் சீறி வீரனோர்
    இலையுடை வேலினை யெடுத்து வீசலுந்
    தொவறு வரம்பெறு சூரன் மார்பெனும்
    மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே.

    222

    679

    இற்றுழி அவுணர்கள் இறைவன் மாலயன்
    மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர்
    கற்றையங் கதிர்மணிக் கதையொன் றோர்ச்சினான்
    வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல்.

    223

    680

    திண்மைகொள ப·றலைச் சேடன் பாங்குளார்
    எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே
    உண்மலி யார்ப்புடன் ஒழுகிச் சென்றென
    வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே.

    224

    681

    வெங்கதை வருதலும் வீர வாகுவோர்
    செங்கதை எதிருறச் செலுத்தி நிற்றலும்
    அங்கதை நீறுசெய் தவன்றன் மார்பிடைத்
    துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே.

    225

    682

    மேக்குயர் பெருஞ்சின வீர வாகுவின்
    மாக்கிளர் அகலமேல் வயிர மாக்கதை
    தாக்கலும் விண்டது தாரைச் செம்புணீர்
    தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே.

    226

    683

    ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்
    போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்
    தாழந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்
    வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி யோடவே.

    227

    684

    ஆற்றலின் றாகியே அண்ணல் வீழ்தலும்
    மேற்றிகழ வலவனாம் விசாலி என்பவன்
    தேற்றுறு பான்மையைச் சிந்தித் தோர்புடை
    காற்றெனத் தேர்கொடு கடிது போயினான்.

    228

    685

    போந்திடு காலையில் புலம்பி வீழந்துளான்
    மாய்ந்திடுஞ சரதமாம் என்று மாறிலான்
    ஆய்ந்தனன் சிலைனித் தப்பு மாரிதூய்க்
    காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல்.

    229

    686

    பொன்றிடா வரத்தினான் பூத சேனைமேற்
    சென்றனன் கணைமழை சிதறிக் கோறலும்
    நின்றவை இரிந்தன நெடிய தீங்கதிர்
    என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல்.

    230

    687

    தாக்கிகல் வீரருஞ் சயங்கொள் மொய்ம்பனும்
    நீக்கமில் இராயிர நீத்தத் தானையும்
    ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை
    நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான்.

    231

    688

    ஆண்டது வேலையில ஆறு மாமுகன்
    பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா
    ஏண்டகு சூரன்மேல் இரதம் ஒய்யெனத்
    தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே.

    232

    689

    வேறு
    இணைஅறு முருகன் இவ்வா றிசைத்தலும் இனைய தோரா
    உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் பாகன் நகர்
    கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட் டேரைத்
    துணையறு சூரன் முன்னர்த் துண்ணெனத் தூண்டி உய்த்தான்.

    233

    690

    ஆயது காலை தன்னில் அவுணர்கோன் அநந்த கோடி
    ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்
    சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற தென்னத்
    தூயதோர் குமரன் போரில் தோன்றிய தோற்றங் கண்டான்.

    234

    691

    முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணுங்
    குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும்
    எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந்
    தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான்.

    235

    692

    சூரெனும் அவுணர் கோமான் தொல்லைநாள் நோற்ற வாறும்
    பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த வாறும்
    ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம் மையன்
    பேரெழில் உருவம் நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ.

    236

    693

    எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர தாற்றித்
    துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா லறிவின் மிக்கோர்
    நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக் குமர மூர்த்தி
    செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான்.

    237

    694

    பூவுல கண்ட மெல்லாம் புரந்திடுஞ சூரன் தன்னைத்
    தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க
    மூவிரு முகத்து வள்ளல் முன்னவர்வந் தெய்தப் பெற்றான்
    ஆவிவன் தவத்திற் கன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ.

    238

    695

    இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே
    உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் குமரன் தன்னைத்
    தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன் என்றால்
    அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந் துரைக்கற் பாலார்.

    239

    696

    பொருசமர் விளைப்பான் போலப் பொருக்கெனப் போந்து சூரன்
    இருவிழி தன்னிற் காண்பான் எளிதுதன் வடிவங் காட்டி
    அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன் மாயத்
    திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு மன்றே.

    240

    697

    சிந்தையால் அறிதற் கொண்ணாத் திருவுரு விழியாற் கண்டு
    முந்துதான் நின்ற சூரன் முழுதுல கடுவான் நின்றோன்
    மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில் வெகுளி தூண்டக்
    கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான்.

    241

    698

    வேறு
    சேனை யாய்நினைச் சூழந்தவர் செருவலி அழிந்து
    போன போனதோர் மாதிரந் தெரிந்தில பூத
    மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல
    ஏனை யோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார்.

    242

    699

    இற்ற நின்பெரும் படைக்கெலாந் தலைவனாய் என்பால்
    ஒற்று வந்துள வீரனும் பொதுயிர் ஒழிந்தான்
    மற்று நீயொரு பாலன என்னொடு மலைந்து
    கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் குறிப்பு.

    243

    700

    மேல தாகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்
    ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும்
    மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர்
    பாலன் வல்லைகொல் என்னொடு போர்த்தொழில் பயில.

    244

    701

    முந்தை நாள்வலி இல்லதோர் அடுக்கலும் முன்யான்
    தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்
    புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல
    மைந்த என்னையும் நினைந்தனை போலுநின் மனத்தில்.

    245

    702

    தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா
    ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை அடலின்
    வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர்
    ஊக்கம் உன்னலை சிறுவநீ பெருஞ்சமர்க் குற்றாய்.

    246

    703

    கமல மேலுறை பகவனும் மாயனுங் ககனத்
    தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச்
    சிமைய மங்கையும் இரங்குற என்னொரு சிலையால்
    இமையொ டுங்குமுன் நின்வலி அழிக்குவன் என்றான்.

    247

    704

    வேறு
    சூரனென் றுரைபெற் றுள்ள தொல்லையோன் இனைய தன்மை
    வீரமுந் திறலுஞ் சீரும் வெகுளியுங் கொண்டு செப்ப
    ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா
    மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய லுற்றான்.

    248

    705

    வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை
    பற்றியும் உடையம் எண்ணில் படைகளும் உடையம் வீயாப்
    பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல் உடையம் என்று
    மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும் வல்லை மன்னோ.

    249

    706

    வரமிகு சிறப்பி னேமை மழவிளங் குமரன் கொல்லோ
    பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின் புந்தி கொண்டாய்
    பொ¤துநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி நாட்டத்
    தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம் அடுவ தம்மா.

    250

    707

    அறிவுடை முதியர் என்றும் ஆண்டினை யோர்கள் என்றுஞ்
    சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்
    வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்
    விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே.

    251

    708

    நூற்றுடன் எட்ட தென்ன நுவலுறும் உகத்தின் காறும்
    பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் வலியை இன்னே
    தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னால்
    ஊற்றுடைப் பாலிற் புக்க உறையென அடுதும் என்றான்.

    252

    709

    வேறு
    என்னு முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந் தன்னை
    முன்ன ளந்தவன் போல் அண்ட முகடுதோய் வுற்ற
    கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப
    அன்ன பான்மையைக் கண்டனன் ஆதியங் குமரன்.

    253

    710

    மால யன்சுரர் பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப
    ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள்
    மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர் வியன்தாட்
    கோலம் என்னஓர் நெடுஞ்சிலை யெடுத்தனன் குமரன்.

    254

    711

    அடற்பெ ருந்திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப்
    படித்த லந்தனை அருளுவான் ஆடல்செய் பரமன்
    எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிட இயல்பால்
    தடுத்த செங்கைபோல் குனித்தனன் அறுமுகன் தனுவை.

    255

    712

    குனித்த வில்லிடைக் குமரவேள் நாணொலி கொண்டான்
    அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர் ஓதைபோல் அவுணன்
    சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்
    பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும் பரிசின்.

    256

    713

    அள்ளி லைப்படை அவுணர்கோன் அடுசர மழைதூய்
    வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும் மறைப்பத்
    தௌ¢ளி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந் தித்துக்
    கொள்ளை வெங்கணை துரந்தவை யாவையுங் குறைத்தான்.

    257

    714

    குறைத்த காலையில் சினவியே பின்னருங் கொடுநஞ்
    சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் ஓச்சி
    அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன் தன்னை
    மறைத்து விண்ணெறி மாற்றினன் பகழிமா மழையால்.

    258

    715

    ஆன பான்மைசேர் பகழியின் படலிகை அவுணன்
    சோனை வாளியால் துணித்திடை வீட்டியே சுரர்தஞ்
    சேனை காவலற் கண்டனன் வினைத்தனை சிந்தி
    ஞான நாயகத் தாணுவைக் காணுநற் றவர்போல்.

    259

    716

    கண்டு தீயவன் பத்துநூ றாயிரங் கணைகள்
    அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும் அவற்றை
    எண்ட ருஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு
    புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன் புயமேல்.

    260

    717

    கயப்பொ ருப்பினை உரித்தமால் வரைதரு காளை
    வயப்பொ ருப்ப்பினை அடுகணை சூரனாம் வலியோன்
    புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்
    அயப்பொ ருப்பையுற் றடல்பெறா அழலவன் கதிர்போல்.

    261

    718

    மாயை தன்மகன் வச்சிர யாக்கையின் வலியை
    நாய கன்திரு மதலைகண் டழலெழ நகைத்துத்
    தீய வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி
    ஆயி ரங்கணை யால்அவன் சிலையினை அறுத்தான்.

    262

    719

    சிலையி னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து
    மலையி னைத்தடிந் தவன்மிசை மலரயன் தந்த
    இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ்
    கொலையு டைக்கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான்.

    263

    720

    ஏறு சேவகத் தவுணர்கோன் அயிற்படை இறலும்
    வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி
    மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி
    ஆறு மாமுகன் புயத்திலேழ் வாளிதொட் டார்த்தான்.

    264

    721

    செங்க திர்ப்பகை தன்னைமுன் உதவினான் செலுத்தும்
    வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் விமலன்
    துங்க மிக்கதோள் புக்குநுண் தூளிய தாகிப்
    பொங்க னற்றிரள் பட்டதோர் பூளைபோன் றனவால்.

    265

    722

    மொய்யி ருங்கணை பட்டுநீ றாதலும் முருகன்
    வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா
    ஐயி ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச்
    செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் சிதைத்தான்.

    266

    723

    ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையிற் சிலையும்
    பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த
    ஏழி ரண்டுநூ றாயிரந் தேரையும் இமைப்பின்
    ஊழி நாயகன் தன்சர மழையினால் ஒழித்தான்.

    267

    724

    சேம மாகியே நின்றிடு தேரெலாஞ் செவ்வள்
    காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான்
    தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன்
    ஏம மாகியே கொண்டிடு சூலமொன் றெறிந்தான்.

    268

    725

    நண்ண லன்விடு முத்தலைப் படையைநாற் கணையால்
    பண்ண வன்திரு மாமகன் இருதுணி படுத்துத்
    துண்ணெ னக்கணை ஏழினால் அவன்குடை துணியா
    அண்ண லஞ்சுடர் முடியையோர் கணையினால் அறுத்தான்.

    269

    726

    மணிப டுத்திய மவுலியை அறுத்தபின் வலியோன்
    பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி
    அணிப டுத்தியே புனைதரு மதாணிகள் அனைத்தும்
    துணிப டுத்தினன் மறைகளுந் துணிந்திடற் கரியோன்.

    270

    727

    ஆன காலையில் சூரபன் மாவெனும் அரசன்
    மான வன்மையில் குறைந்தது நோக்கிமா டுள்¢ள
    சேனை காவலர் நாற்படை தன்னொடுஞ் சேர்ந்து
    சோனை யாப்படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார்.

    271

    728

    ஏழு நேமியும் எறிந்துமே ருவைவளைந் தென்னக்
    கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து
    சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொன்னாட்
    பூழி யாகவே அவுணரூர் அட்டவன் புதல்வன்.

    272

    729

    குருதி வேற்படை கொண்டவன் தன்புடைக் குழுமிப்
    பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான்
    கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட்
    பரிதி யம்படை தொட்டனன் இரவியிற் படர.

    273

    730

    இலகும் வெய்யவன் நடுவுநாள் யாமத்தின் ஏகி
    அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர்
    தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள்
    மலையும் வீசிய படைகளுந் துணித்தது மன்னோ.

    274

    731

    மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெங்கண்
    மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத்
    தானை யாவையும் துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ்
    சேனை காவலர் யாரையும் துணித்திடுந் திகிரி.

    275

    732

    அரந்து ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்
    உரந்து ணித்திடும் இகழின்நாத் துணித்திடும் உரப்பில்
    சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற்
    கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள்.

    276

    733

    குடைது ணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்
    தொடைது ணித்திடும் தேர்நிரை பூண்டமான் தொகையின்
    இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின் இருந்த
    படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும்.

    277

    734

    கொற்ற மிக்கதோர் கோல்கொடு வலியுடைக் குலாலன்
    சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று
    பற்ற லார்பெருந் தானையைப் ப·றுணி படுத்தி
    ஒற்றை நேமியம் பெரும்படை திரிந்ததால் உலவி.

    278

    735

    போர ழிந்திடும் அவுணர்தம் உடற்குறை புகையாச்
    சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ் பரியும்
    தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி
    வீர மாமகம் ஒன்றியற் றுவதென விளங்கும்.

    279

    736

    வெஞ்ச மாத்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி
    வஞ்ச கத்தொடு மாயமாம் பேரிருண் மாற்றி
    எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச்
    செஞ்சு டர்க்கதி ராயதால் அறுமுகன் திகிரி.

    280

    737

    நச்சு தன்னிடத் தமலையை இருத்திய நம்பன்
    இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை
    அச்சு தன்கரத் தேந்திய நேமிகண் டதனை
    மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித மேவி.

    281

    738

    தீர்த்தன் உய்த்திடு நேமியம் பெரும்படை செருவில்
    ஆர்த்த தானைநூ றாயிர வௌ¢ளமு மடைய
    மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு முகத்தோன்
    வார்த்தை யால்அவை முழுவது மாற்றிய வாபோல்.

    282

    739

    ஆடல் உற்றவேற் பண்ணவன் அலர்கதிர்ப் பரிதி
    பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப் படுத்து
    மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற்
    காடு முற்றவுந் தனிபடர்ந் துண்டதோர் கனல்போல்.

    283

    740

    கைம்ம லிந்திடு குடைபல காம்பிடை துணிந்து
    மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து
    பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர் தடத்திற்
    செம்மல் கொண்டமர் தாமரைக் காடுபோல் திகழும்.

    284

    741

    அழுங்கல் கொண்டதோர் கரிபரி அவுணர்பேர் அனிகம்
    வழங்கல் இன்றிவீழ்ந் தவிந்திடு களேவரம் மலிதல்
    தழங்கு தெண்டிரை உலகுள சயிலங்கள் அனைத்தும்
    ஒழுங்க தாகிவந் தாயிடைத் தொக்கவா றொப்ப.

    285

    742

    அகல்வி சும்புகா றொங்கிய களேவரம் அதன்பால்
    ஞெகிழி கொண்டவாய்ப் பேயின நிணனுண்டு சிரித்து
    மிகவும் ஆர்ப்பெடுத் தீண்டுவ மின்னியே இடித்து
    முகிலி ருங்கணம் முதுவரைச் சாரல்மொய்த் ததுபோல்.

    286

    743

    மையல் யானையும் அவுணர்த மியாக்கையும் மற்றும்
    ஒய்யெ னக்கொடு குருதியம் பேரியா றொழுகல்
    செய்ய தோர்பணி கருங்கடல் மறைத்தல்சிந் தித்து
    வெய்ய நஞ்சுமிழ்ந் திருநிலம் படர்தல்போல் விளங்கும்.

    287

    744

    மாணி லைப்படு பேய்சில களேவர வரைபோய்ச்
    சோணி தப்புனல் ஆறுபாய்ந் திடஅதன் துவலை
    சேணி லத்துளார் அரிவையர் புனைகலை தெறிப்ப
    நாணல் உற்றனர் பூப்பென நகைப்பரென் றுன்னி.

    288

    745

    சொல்ல ருந்திறல் அவுணரில் சிலர்தலை துணிந்து
    வல்லை யிற்கிளர்ந் தார்த்தலும் வலியினால் தம்மை
    அல்லல் செய்திடு கோளிரண் டல்லதை அவைபோல்
    எல்லை யில்லவை வந்தஎன் றிரியுமால் இரவி.

    289

    746

    நீடி விண்படர் கொடிசில நிமிர்கவந் தத்தின்
    காடு தன்னிடைப் புகுந்துதந் தலைமிசைக் காட்டி
    ஆடல் யானையின் களேவரங் குத்துவ அடுபோ
    ரூடு காக்கையின் முகரும்வந் தார்கொலென் றுரைப்ப.

    290

    747

    நீட லுற்றசீர் அவுணர்கோன் ஆணையால் நிலமேல்
    வீட லுற்றிடு வயவர்க்குத் தம்முயிர் மீட்டுங்
    கூட லுற்றிடு திறனெனக் கூளிகை கொட்ட
    ஆட லுற்றிடும் உடற்குறை அநந்தகோ டிகளால்.

    291

    748

    இனைய வெல்லையில் எம்பிரான் எரிகதிர்ப் பரிதி
    முனையில் வந்தடல் செய்ததை உணா¢ந்திலன் முன்சூழ்
    கனையி ருங்கடற் படையெலாம் பட்டவா கண்டு
    மனம ருண்டொரு தமியனாய் நின்றனன் வலியோன்.

    292

    749

    நீண்ட தன்ொரு வேற்படை உய்த்துநீக் கினனோ
    பாண்ட ரங்கம தியற்றுவான் படையின்வீட் டினனோ
    மாண்டு போகவென் றொருமொழி தன்னின்மாற் றினனோ
    ஈண்டு தானையை முடித்ததெவ் வாறிவ னென்றான்.

    293

    750

    தேரி ழந்தனன் சிலையதும் இழந்தனன் திறல்சேர்
    பேரி ழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும்பூண்
    ஏரி ழந்தனன் மவுலியுங் கவிகையும் இழந்தான்
    பாரி ழந்திடு மன்னர்போல் நின்றனன் படிமேல்.

    294

    751

    நின்றி டுந்திறல் அவுணர்கோன் நெடுஞ்சினம் நெஞ்சில்
    துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி
    நன்று நன்றொரு பாலகன் வலியென நகையா
    வென்றி நான்முகன் படைக்கலம் எடுத்துமேல் விடுத்தான்.

    295

    752

    வேறு
    சூர்ப்புயல் அன்னதொர் சூரன் விடுக்கும்
    மாற்படு போதன் வயப்படை சென்று
    பாற்படு மெல்லை பரஞ்சுடர் செங்கை
    வேற்படை சென்று விழுங்கிய தன்றே.

    296

    753

    விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம்
    அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி
    வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி
    முழங்கழல் என்ன முனிந்துடன் விட்டான்.

    297

    754

    விட்டிடு மாயவன் வெம்படை ஏகி
    மட்டறு கண்ணர்தம் மாலுரு ஈன்று
    கிட்டிய காலை கிளர்ந்திடும் ஔ¢வேல்
    அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ.

    298

    755

    சயம்புனை செம்மல் தனாதருள் நீரால்
    அயன்படை தன்னுடன் அம்புவி கேள்வன்
    வியன்படை தன்னையும் வேற்படை உண்ணக்
    கயம்படு சூரது கண்டுவிம் முற்றான்.

    299

    756

    கறுத்திடு கின்றதொர் கந்தர வள்ளல்
    விறற்படை தன்னை விடுத்திடின் யாரே
    மறுத்திடு வார· தென்று மனத்திற்
    குறித்னன் மாயை கொடுத்தருள் கோமான்.

    300

    757

    முப்புரம் நீறெழ மூரல் விளைத்தோன்
    மெய்ப்படை தன்னை விடுப்பது தேற்றி
    அப்படை ஏந்தி அருச்சனை நீரால்
    ஒப்பறு சீர்த்தியன் ஒய்யென உய்த்தான்.

    301

    758

    அத்தகு வெம்படை ஆடல் இயற்றும்
    முத்தலை வேற்படை மூர்த்திகள் கோலம்
    எத்திசை தன்னினும் ஈண்டுற ஆர்த்து
    மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ.

    302

    759

    ஆடியல் யானைக ளாயின எட்டும்
    வீடிய வேயென வீழ்ந்தயர் வுற்ற
    நீடிய நேமியின் நின்றிடு செந்த
    ஓடிய சேடனும் உட்கி உலைந்தான்.

    303

    760

    படித்தலம் நெக்கது பல்வகை மேகம்
    இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத்
    துடித்தது திங்கள் சுழன்றது மேரு
    வெடித்த திடந்தொறும் விண்டதிவ் வண்டம்.

    304

    761

    இலக்கர் நடுங்கினர் ஏனைய வீரர்
    கலக்க மடைந்தனர் காண்டகு பூதர்
    மலக்கம தெய்தினர் மற்றிது தன்னை
    விலக்கரி தாலென ஓடினர் விண்ணோர்.

    305

    762

    புடவி முதற்புவ னங்கள் அனைத்தும்
    நொடிவரை செல்லுமுன் நொய்தென மாய
    முடிவ தியற்றிடு மூர்த்திதன் நாமப்
    படைவர அன்னது பா£¢த்தனன் வள்ளல்.

    306

    763

    எந்தைதன் மாப்படை ஈதென ஐயன்
    சிந்தை புரிந்தொரு செங்கையை நீட்டி
    வந்திடும் அப்படை பற்றினன் மாதோ
    தந்தவன் வாங்கிய தன்மைய தென்ன.

    307

    764

    பெற்ற முயர்த்த பெருத்கை நாமக்
    கொற்ற நெடும்படை யைக்கும ரேசன்
    பற்றியொர் பாணி பரித்தனன் நின்றான்
    மற்றது கண்டனன் மாயவள் மைந்தன்.

    308

    765

    வேறு
    விட்ட விட்டதோர் படைக்கெலாம் வேறுவே றொன்று
    தொட்டி லான்அத னாலது மாற்றுதல் துணியான்
    கிட்டும் எல்லையில் அவையெலாங் கவர்ந்தனன் கேடில்
    அட்ட மூர்த்திசேய் என்பது காட்டினன் அம்மா.

    309

    766

    என்னொ டேபொரற் கிவனலால் வேறிலை இனையோன்
    தன்னொ டேபொரற் கியானலா திலையிது சரதம்
    அன்ன பான்மையின் எனக்குநே ராம்இவன் அலது
    பின்னை யாருளர் தமியனுக் குவமையாப் பேச.

    310

    767

    மான வேற்படை வன்மையும் விற்றொழில் வலியும்
    ஏனை யாயுள வன்மையுங் கண்டனன் இனிமேல்
    பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பனென் றுன்னி
    மோன மாகியே நின்றனன் அவுணர்கள் முதல்வன்.

    311

    768

    பொருளின் நீர்மையால் புனைகலன் மாற்றலிற் புவிமேல்
    இருளின் நீ£மையாய்த் தோன்றினோன் அற்புத மெய்தி
    மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல்
    அருளின் நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான்.

    312

    769

    இந்தி ரன்தனி மதலையை இமையவர் தம்மை
    அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை அதற்கா
    முந்தொ ரொற்றனை விடுத்தனம் ஆங்கவன் மொழியுஞ்
    சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர்தஞ் சிறையும்.

    313

    770

    அன்ன தன்மையால் ஈண்டியாம் வந்தனம் அமரில்
    தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை
    முன்னம் அட்டிடு முறையென நின்னையும் முனிவால்
    இன்ன வைகலே அடுதுமென் றேகினம் மீண்டும்.

    314

    771

    ஈண்டு நின்புடை ஈண்டிய இலக்கம்வௌ¢ ளத்து
    நீண்ட தானையும் நின்சிலை வன்மையும் நின்னால்
    தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளுந் தொலைந்து
    மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய்.

    315

    772

    நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது நின்னை
    அடுதல் இங்கொரு பொருளுமன் றரிதுமற் றன்றால்
    படையி ழந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய்
    முடியு மென்றுதாழ்க் கின்றனம் தருமத்தின் முறையால்.

    316

    773

    பன்னு கின்றதென் பற்பல விண்ணுளோர் பலரும்
    துன்னு தொல்சிறை விடுத்தியேல் உன்னுயிர் தொலையேம்
    அன்ன தன்மையே மறுத்திடின் ஒல்லைநாம் அடுதும்
    என்னை கொல்லுன தெண்ணங்கள் உரைத்தியால் என்றான்.

    317

    774

    வேறு வேறுநின் றுலகெலாம் அளிப்பது வெ·கி
    ஆறு மாமுகம் பன்னிரு செங்கைகொண் டருள்வோன்
    ஊறு சேர்அவு ணன்றனக் கினையன உரைப்ப
    மாறொர் வாசகஞ் சொற்றிலன் உளத்திவை மதிப்பான்.

    318

    775

    படையி ழந்தனன் இவனென உன்னியே பாலன்
    இடைதெ ரிந்தனன் போலவே இமையவர் யாப்பை
    விடுதி என்னவும் வல்லனா யினன்விளி வில்லேன்
    அடலும் ஆற்றலுந் தெரிந்திலன் பிள்ளைமை யதனால்.

    319

    776

    மன்ற லந்தொடை அறுமுகன் வரம்பிலா வைகல
    நின்று பேரமர் புரியநான் வறிதுநின் றிடினுங்
    கொன்றி டுந்தொழில் வல்லனே தந்தைமுன் கொடுக்க
    என்றும் மாய்ந்திடா ஒருவரம் பெற்றிடும் என்னை.

    320

    777

    தொழுத குந்திரு மவுலியுங் கவிகையுந் துணிய
    இழிவ தாகியே தமியன்நின் றமரியற் றிடினும்
    அழிவ தில்லையால் ஆவது மிலைபுகழ் அதனால்
    பழிய தொன்றுறும் அங்கது பாதுகாத் திடுவேன்.

    321

    778

    வேற்று நீர்த்தடங் கொள்வதை அன்றிவௌ¢ ளங்கள்
    ஊற்று நீர்ப்பெரும் புணரியைக் கொள்வதற் குறுமோ
    ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே அன்றி
    மாற்று மோவென தழிவுறா வரத்தையும் மைந்தன்.

    322

    779

    என்னை அங்கவன் முடித்திடல் அரியதா லியானும்
    அன்ன வன்றனை இத்துணை வெல்வதும் அனைத்தே
    தொன்ன கர்ப்பெரு வளத்தொடும் படையொடுந் துன்னிப்
    பின்னர் வந்தமர் இயற்றியே பெருந்திறல் பெறுவேன்.

    323

    780

    வசைய தன்றிது செருச்செய்வோர் பற்பகல் மலைந்து
    விசையம் எய்தினும் மேன்மையாம் வியப்புமாம் மேலுந்
    திசைவி ளங்குறு புகழுமாம் யானுமிச் செய்கை
    இசைவ தேகடன் அறிஞர்தஞ் சூழ்ச்சியும் இ·தே.

    324

    781

    என்று பற்பல சூழ்ச்சிகள் மனத்திடை எண்ணி
    ஒன்றொர் மாயையின் மந்திரந் தன்னையுள் ளுறுத்தி
    நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்தவண் நீங்கிப்
    பொன்றி கழ்ந்திடும் மகேந்திரக் கோயிலுட் போனான்.

    325

    782

    மறைந்து போயசூர் முயற்சியை மன்னுயிர் தோறும்
    உறைந்த நாயகன் கண்டனன் ஒருதனிச் செவ்வேல்
    எறிந்து மற்றவன் உயிர்கொள நினைந்திலன் இன்னும்
    மறிந்து தீயவன் உய்யுமோ வெனுந்திரு வருளால்.

    326

    783

    வேறு
    ஆய வேலைதனில் ஆறுமு கன்பால்
    மாயனும் மயனும் வானவர் கோவும்
    ஏய தேவர்களும் யாவரும் எய்தித்
    தூய வந்தனை யுடன்சொல லுற்றார்.

    327

    784

    என்று காசிபன் இடந்தனில் வந்தான்
    அன்று தான்முத லாவசு ரேசன்
    வென்றி யேகொடு வியப்பொ டிருந்தான்
    உன்ற னோடுபொரு தோனன் இன்றே.

    328

    785

    நீடு சூரனுடன் நீஅமர் செய்தல்
    ஆடலே அலதை ஆங்கவன் ஆவி
    கோடல் சிந்தையிடை கொண்டலை என்னின்
    ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ.

    329

    786

    துங்க முற்றுடைய சூர்தனை வேலான்
    மங்கு வித்திடுதி மற்றதன் முன்னம்
    அங்க வற்கெதிர் அருஞ்சமர் ஆற்றல்
    எங்கண் வைத்துடைய இன்னருள் அன்றோ.

    330

    787

    என்றி யம்புதலும் எந்தை வினாவி
    நன்று நன்றென நகைத்தினி நம்முன்
    சென்று நின்றுசமர் செய்திடின் வல்லே
    வென்று சூர்முதலை வீட்டுது மென்றான்.

    331

    788

    ஆடல் சேரும்அவு ணன்சமர் ஆற்றா
    தோடி னாரும்உறு கண்ணுள ராகி
    வீடி னார்களௌ வீழ்ந்தயர் வாரும்
    கூடி னார்குமர வேள்புடை வந்தார்.

    332

    789

    சங்க மாகியுறு சாரதர் ஆனோர்
    எங்கள் நாயகனை எய்தி இகற்சூர்
    மங்குல் வானிடை மறைந்தது தேரா
    அங்கண் ஞாலமலை வுற்றிட ஆர்த்தார்.

    333

    790

    திகழ்ந்த பூதர்கள் செருத்தனில் எம்மை
    இகழ்ந்த சூ£¢நகரின் இம்மதில் வீட்டி
    அகழ்ந்து கோபுரம் அகன்கட லிட்டு
    மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மின மென்றார்.

    334

    791

    வம்மின் வம்மினென வல்லைவி ளித்துத்
    தம்மி னங்களொடு சாரதர் மேலோர்
    அம்ம கேந்திரம் அழுங்குற ஆர்த்திட்
    டிம்மெ னக்கடி தெயிற்புறம் உற்றார்.

    335

    792

    உற்ற காலைதனில் ஒண்மதில் காக்குங்
    கொற்ற வீரன்அதி கோரன் மருங்கிற்
    சுற்று தானையொடு சோர்விலன் நின்றான்.

    336

    793

    கண்டு ளான்நன கனன்றிதழ் கவ்வித்
    திண்டி பேரிதி பிலைப்பறை ஆர்ப்பத்
    தண்ட லின்றிஅமர் தானைக ளோடு
    மண்டு போர்புரிய வந்தெதிர் புக்கான்.

    337

    794

    எதிர்பு குந்திடலும் ஏற்றெதிர் சென்றார்
    அதிர்பு குங்கழலின் ஆடுறு பூதர்
    பொதிர்பு குந்தவருள் போந்துழி எண்ணில்
    கதிர்பு குந்தனையகாட்சி படைத்தார்.

    338

    795

    தோம ரம்பரசு குலமொ டெ·கம்
    ஏம ருங்கதைகள் ஏவினர் கோரன்
    மாம ருங்கவுணர் மற்றிவர் குன்றங்
    காம ரம்படைக லந்து விடுத்தார்.

    339

    796

    எடுத்து வேழநிரை எற்றினர் தேரை
    ஒடித்தே றிந்தனர் உகண்டுகள் பாய்மாப்
    பிடித்தொர் கைகொடு பிசைந்தனர் வீரர்
    துடித்தி டும்படி துகைத்தனர் பூதர்.

    340

    797

    எறிவர் பல்படையும் எய்குவர் வெங்கோல்
    குறிய ஈட்டிகொடு குத்துவர் வாளால்
    செறுநர் தங்களுடல் சிந்துவர் இவ்வா
    றறியும் வெஞ்சமரை ஆற்றினர் தீயோர்.

    341

    798

    சோரி பொங்கின சொரிந்தன மூளை
    சாரு றுங்குடர் சரிந்தன சேனங்
    காரி பம்பின கணங்களும் ஏனை
    வீர ராம்அவுண ரும்பலர் வீந்தார்.

    342

    799

    ஈடு றுஞ்சமர் இழைத்துழி இவ்வா
    றாடல் வெங்கணவர் ஆற்ற முனிந்தே
    சாடி வன்மையொடு தாக்கலும் நில்லா
    தோடி னார்அவுண ராயுளர் முற்றும்.

    343

    800

    கோர மிக்கஅதி கோர னெனும்பேர்
    வீரன் மற்றதனை நோக்கி வெகுண்டே
    ஓரே ழுத்தனை உரத்தொடு பற்றிச்
    சார தப்படைஞர் தம்மொடு நேர்ந்தான்.

    344

    801

    தலைத னிற்கரத லத்தினின் மொய்ம்பின்
    மலையி னிற்பெரிய மார்பின் முகத்தின்
    ஒலிக ழற்கணம் உலைந்திட மோதிக்
    கொலைவி ளைத்தொருவ னேகுல வுற்றான்.

    345

    802

    ஈடி லாதொ ரெழுப்படை பற்றா
    ஓடி யோடிஉரு முற்றென மோதி
    வீடு றாதமர் விளைத்திடு பூதர்
    கோடி கோடியொ ரிமைப்பிடை கொன்றான்.

    346

    803

    இந்த வாறவன் எழுக்கொடு தாக்க
    முந்து தூசிமுரி வுற்றது கண்டான்
    கந்தன் ஏவல்செய் கணப்படை மன்னன்
    சிந்து மேகன்முனி வோடெதிர் சென்றான்.

    347

    804

    சென்ற பூதரிறை செங்கையில் வைகுங்
    குன்றம் ஒன்றைஅதி கோர னெனும்பேர்
    வென்றி யான்மிசை விடுத்தலும் நோக்கித்
    தன்த டக்கையெழு வால்தகர் வித்தான்.

    348

    805

    தகரும் எல்லைதரி யார்கடல் வற்ற
    முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல்
    வெகுளி யோடவுணர் வேந்தனை எய்தி
    அகல மீதினில் அடித்தனன் மாதோ.

    349

    806

    அடித்த லோடும்அவு ணர்க்கிறை யானோன்
    இடுக்கண் எய்திஇவன் ஆவியை இன்னே
    முடிப்பன் என்றுமுச லங்கொடு மொய்ம்பில்
    புடைத்த னன்உருமு வீழ்வது போல.

    350

    807

    பூதன் மொய்ம்பிடை புடைத்த எழுத்தான்
    ஏதமா முரிய ஏற்றெதிர் தெவ்வைக்
    காது கைகொடு கபோலம் அதன்கண்
    மோத வேயவுணன் ஆவி முடிந்தான்.

    351

    808

    வாய்தல் போற்றிய வயப்படை வீரன்
    சாத லுற்றுழி தலைத்தலை ஆர்த்துப்
    பூத சேனையா¢கள் பொம்மென ஏகி
    மூதெ யிற்றலை முதற்கடை சென்றார்.

    352

    809

    ஆண்டி யோசனை ஒராயிரம் வான்போய்
    ஈண்டு செம்மணிக ளால்இய லுற்று
    மாண்ட தீயவட வாமுக மேபோல்
    நீண்ட தோர்சிகரி நின்றது கண்டார்.

    353

    810

    கண்ட தோர்சிகரி கைகொடு தொட்டுத்
    தெண்டி ரைக்கடலின் மேற்செல விட்டார்
    மண்டு மேருவரை யின்குவ டேந்திச்
    சண்ட வாயுவிடு தன்மைய தென்ன.

    354

    811

    அன்ன வேலையில் அலைந்தது ஞாலம்
    பன்ன கேசனும் மிகப்பட ருற்றான்
    மன்னு சூருறை மகேந்திர மூதூர்
    துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார்.

    355

    812

    ஈண்டு பூதரெறி யுஞ்சிக ரந்தான்
    ஆண்டவ் வேலையிடை ஆழ்ந்தது தொன்னாள்
    நீண்ட மேனிஇறை நின்றளி யாமுன்
    மாண்டு சாய்ந்துவிழு மந்தர மென்ன.

    356

    813

    வேறு
    பொலங்கெழு சிகரிஅப் புணரி சேர்தலின்
    கலங்கின விரிதிரைக் கைம்ம றித்ததால்
    மலங்கின மொடுசுறா அருந்தி மிங்கில
    கிலங்களும் இரிந்ததங் கிளைக ளோடுமே.

    357

    814

    மாதலம் புகுந்திடுஞ் சிகரி வாரியுட்
    பூதரங் குய்த்திட விரைவிற் போவது
    வேதமுன் கொணர்தரு மீனம் வேலையில்
    பாதலம் புகுந்திடு பான்மை போலுமே.

    358

    815

    கழற்கறங் கியதெனுங் கண்ணர் உந்திய
    அழற்கொழுந் தாகிய சிகரத் தாய்மணி
    நிழற்பொலிந் திடுவன நீல வேலையில்
    தழற்பரந் தழுவதோர் தன்மை போலுமே.

    359

    816

    நாகர மணிவெயில் நணுகும் வேலையில்
    சீகரம் உம்பர்போய்த் தெறிந்து மீள்வது
    சாகரம் உற்றது தழலென் றுன்னியே
    மாகர வாரிநீர் வழங்கல போலுமால்.

    360

    817

    காமரு சிகரியில் கவைஇய மாமணி
    ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே
    பூமது நுகர்தரு பொறிவண் டானவை
    தாமரை வனமென அயிர்த்துச் சாருமால்.

    361

    818

    பங்கய மணிநிழற் பரப்பை நோக்கியே
    இங்கிவை தசையென எண்ணிப் புட்குலம்
    நுங்கிய செல்வன நொய்தின் எய்தியே
    அங்கிகொ லெனச்சில அகன்று போயின.

    362

    819

    தெழித்திடும் வேலையிற் செய்ய சோதியால்
    தழற்பொலி கோபுரந் தரிப்பின் றேகலால்
    கிழித்தன பணிபதி கிளர்ந்து மற்றவர்
    விழித்தனர் உருமென வெருவி ஓடினா£¢.

    363

    820

    பூதர்கள் யாம்பிடு பொலங்கொள் போபுரம்
    ஓதநெஞ் சடைதலும் உதிரங் கான்றதால்
    சேதன மோவிது செப்பும் என்றனர்
    மீதுறு கதிர்மணி வெயிலென் றுன்னலார்.

    364

    821

    பொற்பகல் சிகரியுட் பொருந்தி ஆழ்பவர்
    அற்பகல் நுகருமீன் அவரை நுங்குமால்
    முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது
    பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே.

    365

    822

    ஆனதொர் கோபுரம் அளப்பி லாதமர்
    தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால்
    மீனுறு திரைக்கடல் வௌ¢ள மேற்செலா
    மாநகர் எயில்தனை வளைந்து புக்கதே.

    366

    823

    காதிடும் இயற்கையில் கால்கொண் டேகலிற்
    பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின்
    மீதமர் காரினில் விமலன் விட்டிடும்
    பூதரை நிகர்த்ததப் புரிசை சூழ்புனல்.

    367

    824

    மைக்கடல் புவியினும் மகேந்தி ரப்புரம்
    மிக்கது போலுமென் றைய மேற்கொளா
    இக்கணம் நாடுதும் என்று சென்றபோல்
    புக்கது நகரிடைப் புணரி நீத்தமே.

    368

    825

    மீனெனும் மைந்தரை மிசைந்த தானவர்க்
    கானதொ ரிறுவரை அணுகிற் றிவ்விடை
    யானவர்ப் பொருவனென் றெண்ணிச் சேறல்போல்
    போனதப் பதியினுட் புணரி நீத்தமே.

    369

    826

    இவ்வகை நிகழ்ந்திட எறிந்த கோபுரம்
    பௌவமுற் றிடுதலும் பைம்பொன் மாமதில்
    வெவ்வலி அரசர்கள் விளிய ஈறிலாக்
    கௌவைகொள் திருநகர்க் காட்சித் தாயதே.

    370

    827

    எல்லைமற் றனையதில் ஈண்டு சாரதர்
    மல்லலம் புரிசையின் வடாது பாங்கரை
    ஒல்லையில் தம்பதத் துதைப்பச் சாய்ந்தது
    செல்லுற வீழ்ந்திடு சிகர மேயென.

    371

    828

    மாமதில் சாய்தலும் வலிய பூதர்கள்
    காமரு நகரினுட் கலந்து நண்ணினார்
    ஏமரு கடங்கலுழ் இபங்கள் ஈண்டியோர்
    தாமரை மலர்த்தடந் தன்னிற் புக்கபோல்.

    372

    829

    கானுறு பங்கயக் கடவுட் கிப்பகல்
    போனதோர் காலையிற் புணரி யாவையும்
    மாநிலங் கொள்வது மானப் பூதவெஞ்
    சேனைகள் மகேந்திர புரத்திற் சென்றவே.

    373

    830

    புக்கனர் வீரர்கள் புயலின் மேனியுஞ்
    செக்கரங் குஞ்சியாந் தீயுங் கைகளாய்
    மிக்கெழு புணரியும் வேறு வேறுறா
    மைக்கடல் உலப்பில வருவ போலவே.

    374

    831

    துதித்திட அரியவன் நகரில் துண்ணென
    எதிர்த்திடு தானவர் இனத்தை ஒல்லையில்
    சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும்
    உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே.

    375

    832

    மதரொடு குறுகும்அவ் வயவெம் பூதர்கள்
    அதிர்கழல் அடிகளால் அளப்பில் மாளிகை
    பிதிர்பட உந்தலும் பிறங்கு பூழிகள்
    கதிருறு கதியினுங் கடந்து போனவே.

    376

    833

    வேறு
    அங்கவ் வெல்லையிற் சாரத வேந்தர்கள் அயில்வேற்
    புங்க வன்தனை நீங்கியாம் அவுணர்கோன் புரத்துள்
    இங்கி னிப்படர் கின்றது தக்கதன் றென்னாச்
    செங்க ளந்தனின் மீண்டனர் சேனையுந் தாமு.

    377

    834

    ஆன காலையிற் பூதர்தஞ் செய்கைகள் அனைத்தும்
    ஞான நாயகன் காண்குறா நல்லருள் புரிந்து
    மான வேற்டை வீரரும் அமரரும் வழுத்தச்
    சேனை யாவையுங் கொண்டுதன் பாசறை சேர்ந்தான்.

    378

    835

    பாச றைப்புகு குமரவேள் பாரிடப் பகுதி
    ஆச றப்புனை ஆவணச் சூழல்போய் அமர
    வாச வத்தனிக் கடவுளா தியர்புடை வழுத்த
    ஈச னிற்சிறந் தரியணை தன்னில்வீற் றிருந்தான்.

    379

    836

    ஈண்டு தானவர் இலக்கம்வௌ¢ ளத்தரும் இன்னே
    மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க் கரத்தால்
    தீண்டி வான்மையிற் குறைந்தனன் என்றுசெஞ் சுடரோன்
    ஆண்டு மூழ்குவான் புக்கென அளக்கரை அடைந்தான்.

    380

    837

    வேறு
    புரந்தர னாதியர் புன்மை நீக்கியே
    பெருந்திரு வுதவுவான் பிரான்தன் காதலன்
    இருந்தனன் பாசறை ஈது நின்றிடத்
    திருந்தலர் மாட்டுறுஞ் செய்கை செப்புவாம்.

    381

    838

    ஒருவரும் ஔத்தினும் உணர்வு றாவகை
    அருவம தாகியே அகன்று சூர்முதல்
    பொருவரு மகேந்திர புரத்துக் கோயிலுள்
    திருமகள் மணமனைச் சேறல் மேயினான்.

    382

    839

    பஞ்சடி நூபுரப் பதுமை கோயில்போய்
    அஞ்சியல் அடுத்தமெல் லமளி மேலுறாத்
    துஞ்சலன் யாரொடுஞ் சொல்லும் ஆடலன்
    வெஞ்சமர் வினையமே உன்னி மேவினான்.

    383

    840

    ஆனதொ ரெல்லையில் அரசன் போர்செயப்
    போனதும் பொருதலும் புறந்தந் தோமென
    மாநகர் அதனிடை வறியன் வந்ததும்
    பானுவின் பகைஞனுக் கொற்றர் பன்னினார்.

    384

    841

    சொன்னடை மந்திரத் தொடா¢பும் மாயமும்
    தன்னுறு படைகளும் சாதனஞ் செய்வோன்
    அன்னது கேட்டலும் அலக்கண் எய்தியே
    மன்னுறு கடிநகர் வல்லை ஏகினான்.

    385

    842

    மணிநிரை இகலியே மாறு வில்லுமிழ்
    இணையறு சினகரம் எய்திச் சேக்கைமேல்
    தணிவறு சூழ்ச்சியோ டமர்ந்த தாதைதன்
    துணையடி வணங்கியே தொழுது கூறுவான்.

    386

    843

    மாற்றலர் யாவரும் மறிய வல்லைபோர்
    ஆற்றுதி யாலென ஐய முற்பகல்
    சாற்றினை விடுத்தனை தமியன் ஏகியே
    ஏற்றவர் தம்முடன் இகல்செய் தேனரோ.

    387

    844

    உற்றிலன் அறுமுகன் ஒழிந்த வீரர்கள்
    சுற்றிய படையொடு துவன்றிப் போர்செய்தார்
    பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான்
    மற்றவர் உணர்ச்சியும் வலியும் மாற்றினேன்.

    388

    845

    சென்றமர் இயற்றிய செறுநர் யாரையும்
    வென்றனன் அத்துணை விமலன் மாமகன்
    ஒன்றொரு மாப்படை உய்ப்ப என்படை
    வன்றிறல் நீங்கியே வருந்தி மீண்டதே.

    389

    846

    அன்னதோர் பான்மையால் அனையா¢ யாவரும்
    பின்னுணர் வெய்தியே பெயர்ந்து போயினார்
    என்னிது வெற்றியென் றியானும் மீண்டனன்
    உன்னொடும் உரைத்திலன் உள்ளம் வௌ¢கினேன்.

    390

    847

    நெற்றியங் கண்ணுடை நிமலன் ஏனையோர்
    முற்றரு படைகளால் முடிவின் மாயையால்
    பற்றலர் யாரையும் படுத்து நாளையே
    வெற்றிகொள் குவனெனா நென்னல் மீண்டனன்.

    391

    848

    ஞாயிறு வந்தபின் நண்ண லா£¢மிசைப்
    போயமர் இயற்றிடப் புறத்திற் சென்றனன்
    ஆயதன் முன்னரே அனிகந் தன்னுடன்
    ஏயென ஏகினை எந்தை நீயென்றார்.

    392

    849

    வரந்தனில் அழிவுறா வள்ளல் ஈண்டுறு
    திருந்தல ருடன்அமர் செய்தற் காகவோர்
    அருந்துணை வேண்டலை அதனை உன்னிமீண்
    டிருந்தனன் இப்பகல் ஈதென் செய்கையே.

    393

    850

    ஓர்ந்திலை இத்திறம் உணர்வு ளாரொடுந்
    தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை
    சார்ந்திடு நாற்பெருந் தானை தன்னொடும்
    போ¢ந்தனை அமர்க்கிது பெருமைப் பாலதோ.

    394

    851

    அமரருக் காக்கமும் அவுணர்க் கேக்கமும்
    அமையவர் முதல்வனுக் கின்பும் நல்கினை
    குமரனைக் கணங்களைக் குறித்து மன்னநீ
    சமா¤னுக் கேகுதல் தலைமை யாகுமோ.

    395

    852

    திகழ்ச்சிகொள் மேலவர் சிறியர் தம்மொடு
    நிகழச்சிகொள் போரிடை நேர்வ ரேயெனில்
    புகழ்ச்சிய தில்லையால் பொருது வெல்லினும்
    இகழச்சியின் பாலதாம் எவரெ வர்க்குமே.

    396

    853

    சென்றது கிடந்திடச் சிறியன் என்னினும்
    ஒன்றிவண் மொழிகுவன் உள்ளங் கோடியால்
    இன்றிர வகன்றபின் ஏகி யாரையும்
    வென்றிகொண் டேகுவன் விடுத்தி யாலெனை.

    397

    854

    கொற்றவை சிறுவனைக் கொற்றங் கொள்வதும்
    சுற்றுறு படையையான் தொலைக்குந் தன்மையும்
    ஒற்றுவர் கண்டுமுன் உரைக்க எந்தைநீ
    தெற்றென மகிழ்ச்சியிற் சிறந்து வைகுதி.

    398

    855

    வேறு
    கூரிய வேற்படை கொண்டுடை யோனை
    வீரர்கள் தம்மொடு வெற்றிகொ ளேனேல்
    வாரலன் ஈண்டு மகிழ்ந்திறை நல்கும்
    பேரர சாட்சி பிடிக்கிலன் என்றான்.

    399

    856

    என்பது கேட்டலும் எவ்வுல கிற்குந்
    துன்பு புரிந்திடு சூரபன் மாவாம்
    முன்பன் மகிழ்ந்து முகத்தெதிர் நிற்குந்
    தன்புதல் வற்கிது சாற்றுதல் உற்றான்.

    400

    857

    மூவர்கள் தாங்களும் முச்சக முள்ள
    தேவரும் ஐயிரு கிக்குடை யோரும்
    ஏவரும் ஏற்கினும் எம்பியை அட்ட
    மேவலன் ஆற்றலை வெல்லரி தம்மா.

    401

    858

    பன்னிரு செங்கை படைத்துள சேயோன்
    தன்னொ டெதிர்ந்து சமர்த்தொழில் செய்வார்
    என்னல தில்லை இவன்சிறி யோனென்
    றுன்னலை வன்மையின் ஒப்பில னேகாண்.

    402

    859

    குன்றம் எறிந்திடு கூரிய வேற்கை
    வன்றிற லாளனை வன்மையில் யானே
    வென்றிடு கின்றனன் மேலது நிற்க
    ஒன்றுள தைய உரைப்பது கேண்மோ.

    403

    860

    ஒற்றென வந்துநம் மூர்அலை வித்துப்
    பற்றலர் நீடு படைக்கிறை யாகுங்
    கொற்ற வனைத்தனி கூவி மலைந்து
    செற்றனை ஏகுதி சேனையொ டென்றான்.

    404

    861

    தந்தை புகன்றிடு தன்மையை ஓரா
    எந்தை பிராற்குளம் இத்திற மாமேல்
    முந்திறை தன்னின் முடிப்பனி தென்ன
    மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன்.

    405

    862

    அடுசமர் செய்வகை ஆங்கவன் ஏக
    விடையது நல்கி வியத்தகு மன்னன்
    இடையுறு சூழ்ச்சிக ளியாவும் இகந்து
    மிடைதரு தொல்வள மேவி இருந்தான்.

    406

    863

    தாதைதன் ஏவல்த லைக்கொடு சென்றே
    ஆதவன் மாற்றல னாகிய மைந்தன்
    ஏதமில் தன்குலம் ஏகலும் அங்கண்
    தூதுவர் பற்பலர் துண்ணென வந்தார்.

    407

    864

    துங்கம துற்றுள சூர்தரு மைந்தன்
    செங்கம லம்புரை சீறடி தன்னைத்
    தங்கண் முடிக்கொடு தாழ்ந்தனர் நின்றே
    இங்கிவை கேட்க எனாமொழி குற்றார்.

    408

    865

    வேறு
    மன்னவன் இன்றுபோய் மலைந்து மீண்டபின்
    ஒன்னலன் மாட்டுறும் உலப்பில் பூதர்கள்
    இந்நகர் வடாதுசார் எய்திக் காவலோன்
    தன்னுயிர் கொண்டனர் தானை சிந்தினார்.

    409

    866

    தகுவர்தம் மாப்படை தலைய ழிந்தபின்
    அகலிரு விசும்பளந் தாண்டு நின்றிடு
    சிகரியைக் கீண்டுதஞ் செங்கை யாலெடா
    வெகுளியொ டளக்கரின் மீது வீசினார்.

    410

    867

    நீடிய சிகரிபோய் நேமி புக்கபின்
    மாடுறு வடபுல மதிலை முற்றவுஞ்
    சாடினர் மீண்டனர் தலைவ இந்நகர்
    கோடில தாங்கடற் குட்டம் போன்றதே.

    411

    868

    என்றலும் வினவியே ஏந்தல் தன்புடை
    சென்றிடும் வயவரிற் சிலரை நோக்கியே
    வன்றிற லுடையநம் மரப்ல் தச்சனை
    ஒன்றொரு கணத்தின்முன் உய்த்தினர் என்னவே.

    412

    869

    ஆயவர் விரைந்துபோய் அவுணத் தச்சனை
    மேயினர் இறைமகன் விளித்து ளானெனக்
    கூயினர் வருகெனக கொடுவந் துய்த்தனர்
    மாயிருங் கதிரைமுன் வெகுண்ட மைந்தன்முன்.

    413

    870

    தன்னடி வணங்கியே தச்சன் நிற்றலும்
    மன்னவர் மன்னவன் மதலை வல்லைநீ
    இந்நகர் வடமதில் சிகரி ஏனவுந்
    தொன்னெறி அமைக்கெனச் சொற்றுத் தூண்டினான்.

    414

    871

    எல்லைமற் றன்னதின் எல்லை தன்பகை
    கல்லுயர் மொய்ம்பன்மா காயன் என்பதோர்
    வல்லவு ணன்தனை வருதி என்றுகூய்
    ஒல்லையின் இனையதொன் றுரைத்தல் மேயினான்.

    415

    872

    சேயுயர் வடமதிற் சிகரி தன்னிடைப்
    போயினை அந்நெறி புரத்தி யால்எனா
    ஆயிரப் பத்தெனும் அணிக வௌ¢ளமோ
    டேயினன் தானுறும் இருக்கை எய்தினான்.

    416

    873

    அத்துணை ஏகியே அவுணர் கம்மியன்
    உத்தர நெடுமதில் ஓங்கு கோபுரஞ்
    சித்திர வுறுபபொடு சித்தத் துன்னியே
    வித்தக வன்மையால் விதித்துப் போகவே.

    417

    874

    அடுகரி புரவிதேர் அவுணர் தானையாங்
    கடலுடன் சென்றுமா காயன் என்பவன்
    வடமதிற் சிகரியின் வாய்தல் போற்றியே
    சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான்.

    418

    875

    ஆயது நிகழ்வுழி ஆழி வெற்பின்வாய்
    ஞாயிறு நணுகநள் ளிருளின் யாமினி
    போயது மெய்ப்புலன் புந்தி சேர்வுழி
    மாயைய தகன்றிடும் வண்ணம் என்னவே.

    419

    876

    கங்குலென் றுரைபெறு கடவுட் கற்புடை
    நங்கையை மேவுவான் நயப்பு மேற்கொளா
    அங்கவ ளைத்தொடர்ந்து தணுகு வானெனச்
    செங்கதிர் அண்ணல்கீழ்த் திசையில் எய்தினான்.

    420

ஆகத் திருவிருத்தம் - 876

 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home