Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranam பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) தக்ஷ காண்டம் (1 - 403) > தக்ஷ காண்டம் (404 - 907) > தக்ஷ காண்டம்(908-1562 ) > தக்ஷ காண்டம் (1563 - 2067)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 6. தக்ஷ காண்டம் / படலம் 14 -20 (908-1562 )

kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 6 taksha kANTam (verses 908 - 1562)


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


14. கயமுகன் உற்பத்திப் படலம் (908-1172)

908

பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ
டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில்
வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப்
போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான்.

1

909

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி
வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற்
கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான்.

2

910

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப்
பொருது வென்றிகொண் டேனக்குமப் பெரும்புகழ் புனைய
ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக்
குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன்.

3

911

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
பொற்றை யின்சிறை தடிந்தவன் கரரொடும் போர்மேல
உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து
மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற்
கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால்.

4

912

கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம்
பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க்
கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றம் அவுணர்
ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண உரைத்தி.

5

913

சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி
உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த
நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே
அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான்.

6

914

உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில்
வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ
கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத்
தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான்.

7

(1. பாகசாதனன் - இந்திரன். விஞ்சையர் - வித்தியாதரர்.
2. வினையேற்கு - பாவியாகிய எனக்கு.
3. குரு - சுக்கிரன். கொடியோன் - அசுரர் அரசன்.
4. பொற்றை - மலை.
7. வெதும்பிய - வெப்பமுற்று. சாந்து - சந்தனம்.)

915

வேறு
ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை
வேதியர் தலைவ னான வி£¤ஞ்சன்மெய் யுணர்விற் பூத்த
காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி
மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல்.

8

916

அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய்
மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன்
உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு
தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான்.

9

917

ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி
ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு
மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள்
நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே.

10

918

நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ்
செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க
மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங்
கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன்.

11

919

அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது
செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன
எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன
மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான்.

12

920

மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள்
காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள்
பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி
ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் சீர்த்தி யென்றான்.

13

921

மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக்
கன்னிகை யாகி நிற் காமரு வல்லி அன்னாள்
நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன்
என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள்.

14

922

உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர்
பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே
மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல
ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய்.

15

923

ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது
பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று
நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந்
தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி.

16

9243

சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப்
பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு
வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள்
ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான்.

17

(8. விரிஞ்சன் : காதலன் - சனகாதியோர்.
9. அன்னவன் - அவ்வசிட்டன்.
மாகதன் - ஒரு முனிவன்.
12. புகர் - சுக்கிரன். 13. விபுதை - இவள் ஒரு அசுர கன்னிகை.
15. வென் - முதுகு. 16. ஏது - காரணம்.)

925

வேந்தன் துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால்
போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல்
ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர்
மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண்.

18

926

ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய்
மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி
ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார்
மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள்.

19

927

நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை
மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில்
காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித்
தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள்.

20

928

வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல
மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள்
கோனி· துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால்
நானதற் சிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள்.

21

929

போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும்
வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா
ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக்
காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள்.

22

930

என்றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வௌ¢ளிக்
குன்றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு
வன்றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா
நின்றருந் தவத்தை யாற்ற நெடும்பகல கழிந்த தன்றே.

23

931

மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின்
ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று
காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணுஉ
ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன்.

24

932

மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா
துறந்தனன் காமம் என்னுஞ் சூழவலைப் பட்டுச் சோர்வுற்
றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று
பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான்.

25

933

என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும்
நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய்
தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா
வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான்.

26

(18. மீள்வல் - திரும்புவேன். 20. நேமிகள் - கடல்கள்.
21. மேனகை - தேவ மாதரில் ஒருத்தி.
22. காந்தன் - காதலன். 24. களிறு ஒருத்தல் - ஆண் யானை.
பிடி - பெண் யானை.
25. மனுவின் செய்கை - மந்திரம் செபிக்கும் தொழில்.
26. சூர் - அச்சம்.)

934

தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ
ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை
யாவதென் றாக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி
போவதிற் பயனியா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான்.

27

935

பேவதற் கெண்ணுப் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங்
காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத்
தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம்
யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள்.

28

936

ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு
தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா
வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன்
பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர.

29

937

மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப்
பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று
கன்னியும் என்னை வெ·குங் காந்தரு வத்தி னாளும்
இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா.

30

938

கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும்
அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால்
வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான்
விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான்.

31

939

முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக
இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப்
பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன
வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான்.

32

940

என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற
நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே
அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி
இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன.

33

941

மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி
எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும்
மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப்
புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே.

34

942

நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி
ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள்
மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்லுச்
செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில்.

35

(29. கூட்டம் - சேர்க்கை. பரிவு கூர - அன்புமிக.
32. முருந்து - மயிலிறகின் அடி.
35. உள்ளம் ஆதீ நான்மை - மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்.)

943

அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ்
செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம்
வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க்
கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான்.

36

944

பற்றிய பலகை ஔ¢வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ்
சுற்றினன் வரைகள் யாவுந் துகள்பத் துணைத்தாள் உந்தி
எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ்
செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான்.

37

945

அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே
மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த
சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில்
துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர்.

38

946

இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத்
தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி
முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற
உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான்.

39

947

மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந்
தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி
நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச்
சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள்.

40

948

வரன்முறை ணர்த லோடும் மாகத முனிவன் யானே
தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ்
சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா
எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான்.

41

949

சிலபொழு திரங்கித் தேறிச் செயிழை மடந்தை நுங்கோன்
மெலிவுநின் னெண்ணந் தோனும் வீடுபெற் றுய்ய யான்முன்
பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர்
உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான்.

42

950

போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று
தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி
ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக்
காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான்.

43

(36. வய - பெருமை. தடவு - வளைவு. வயிர்த்திடும் - வைரம்
பொருந்திய. நால்வாய் - தொங்குகின்ற வாய்.
37. பலகை - கேடகம்.
39. இபமுகம் - யானைமுகம்.
40. தூயவன் - இங்கு மாகத முனிவன். சுளித்து - கோபித்து.
சேயிழை - இங்கு விபுதை.
41. சராசரம் - சரம் + அசரம். சரம் - அசையும் பொருள்; இது இயங்கியற்
பொருள் (இயங்குதிணை) அல்லது சங்கமம் எனவும் பெயர்பெறும்.
அசரம் - அசையாப்பொருள் இது நிலையியற் பொருள் (நிலைத்திணை)
அல்லது தாவரம் எனவும் பெயர்பெறும்.
43. தாது - மகரந்தம். தயிர்த்தியர் - அசுரர். தபனன் - சூரியன்.
காணும் காலை - உதயகாலம்; கண்டபொழுதுமாம்.)

951

தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண
ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான்
ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ
டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார்.

44

952

சீற்றங்கெகள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக்
கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக்
காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம்
ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார்.

45

953

மலையிஆ¨பி பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி
அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி
உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவா¢ பரிதி யோடு
நிலையினைத் தடுப்பர் சேடன் நெறிதரப் பெயர்வர் மாதோ.

46

954

தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன்
திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று
மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித்
தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே.

47

955

அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக்
கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிரைந்தா ராகப்
பொய்த்தவர் வெறுக்கை என்னப் பொயின உயிர்கள் சால
எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி.

48

956

முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும்
அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை
தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான
புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான்.

49

957

வேறு
ஔ¢ளி தாகிய உங்குலத் துற்றுள
மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன்
தௌ¢ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன்
வௌ¢ளி என்பதொர் மேதகு பேரினேன்.

50

958

உங்கு லத்துக் கொருமுத லாகிய
சிங்க மன்ன திறலினன் உய்த்திட
இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி
தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான்.

51

959

குரவ னாகிக் குறுகிய சல்லியன்
பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன்
திருவ டித்துணை சென்று வணங்கியே
கரிமு கத்தன் கழறுதல் மேயினான்.

52

(45. தறுகண் - அஞ்சாமை. கொட்புஎன்ன - உலவினாற்போல்.
46. சேடன் - ஆதி சேடன்.
47. நுங்கி - விழுங்கி. செந்நீர் - இரத்தம்.
48. பொய்த்தவர் - பொய்யுரைப்போர்.
49. முகரிமை - முதன்மை. தோல்முகத்தவன் - கயமுகாசுரன்.
50. மள்ளர் - வீரர். 52. சல்லியன் - சுக்கிரன்.)

960

இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம்
அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண்
உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப்
பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான்.

53

961

அந்த வேலை அவுணர்கள் யாவருஞ்
சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா
எந்தை யார்தங் குரவர் இவரெனா
வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார்.

54

962

சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன்
ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை
போத கன்முகம் நோக்கிப் பொருவிலா
ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன்.

55

963

வேறு
மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார்
மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய்
ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா
போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய்.

56

964

முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான்
மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத்
துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட்
டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே.

57

965

இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை
அம்மையில் இன்பந் தானும் அகன்றஆ போலும் அன்றே
உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிறி¢பின்னை
எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால்.

58

966

ஆக்கமுந் திறலுஞ சீரும் ஆயுவும் நலனும் மேலாம்
ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம அன்றோ
நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினை வெல்லாம்
போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய்.

59

967

ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி
ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம்
நோற்றிடு விரதஞ் சீலம் நூவலரும் போதம் யாவுங்
கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான்.

60

(53. இறுவது - அழிவது. அறிவ - ஞானாசிரியனே.
54. பார்க்கவன் - சுக்கிரன்.
55. முகிற்கோள் எனும் செவ்வியோன் - சுக்கிரன்.
57. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகை.
முரட்பகை - வலியபகை. ஐம்பால் மெய்ப்பகை - ஐம்புலனாகிய உட்கபகை.
58. அம்மை - அவ்வுலகம். உம்மை - நடுவணதான இக்காலம்.
எம்மை - எந்தச்சென்மம்.
60. விஞ்சை - வித்தை. மகவு - புத்திரப்பேறு. சீலம் - ஒழுக்கம்.
போதம் - நல்லுணர்வு. குறித்திடில் - கருதினால்.)

968

காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி
ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி
ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை
மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே.

61

969

சீரிர துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா
தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட்
சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை
பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ.

62

970

மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை
தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை
அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல்
இந்திரன் போருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ.

63

971

சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி
அறிகில வாகி வீழவுற் றகப்படு மாவும் மீனும்
பறவையும் என்ன எல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே
விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய்.

64

972

ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற
மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந்
தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார்
மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான்.

65

973

சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல்
முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும்
இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன்
அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான்.

66

(61. காலன் - எமன். சேர்ப்பன் - நெய்தனிலத்தவனான செம்படவன்.
மேல் - பின்னர். அவன் - அந்த எமன். வீடும் - அழியும்.
63. அனிகம் - சேனை.
64. வீழவுற்று அகப்படும் - வலையிலும், தூண்டிலிலும், கண்ணியிலும்
முறையே அகப்பட்டுக் கொள்ளுகின்ற. விறல் - வெற்றி. )

974

வேறு
ஐயவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக்
      கறங்கும்அறி வடங்கு கின்ற
மெய்வினைய மந்திரமுந் தந்திரமும்
      அங்கமுறு விதியி னோடு
கைவினையும் உட்கோளும் புறங்காப்பும்
      விரதஞ்செய் கடனும் ஏனைச்
செய்வினையும் உணர்வித்து மேருவின்பால்
      தவம்புரியச் செல்லு கென்றான்.

67

975

ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும்
      புகரடியின் இறைங்சி அங்கண்
மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு
      நோற்றிடுவான் விரைவின் ஏகக்
காவதமங் கோரிரண்டு கடப்பளவுந்
      தானின்று கண்ணின் நோக்கிப்
போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய்
      அவுணர்பதி புகுந்தான் அன்றே.

68

976

அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன்
      புகுந்தவெலாம் அறைய அன்னான்
இக்காலந் தானன்றோ அருள்செய்தீர்
      எனவியம்ம்பி ஏத்தி அன்பால்
முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த்
      தன்பதத்தின் முன்ன மேபோல்
மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும்
      புரந்தரனும் விழுமங் கொள்ள.

69

977

மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை
      எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு
மீண்டியதிண் காழிரும்பின் எ·கமுதல்
      வியன்படைகள் இயற்சை என்னக்
காண்டகைய தங்குரவ னானபுகர்
      உரையதனைக் கருத்துட் சேர்த்தி
ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன்
      தவம்புரிவான் அகலல் உற்றான்.

70

978

அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக்
      கொருசார்போய் அவுணர் வேந்தன்
துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன
      கொணர்வித்துத் தூநீர் ஆடிச்
செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன்
      முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து
தங்கள்குர வன்பணித்த பெற்றியினால்
      மிக்கதவந் தன்னைச் செய்வான்.

71

979

பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக்
      கரணவியல் போக்கி ஆசான்
குறிவழியே தலைநின்று மூலவெழுத்
      துடனைந்துங் கொளுவி எண்ணி
அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப்
      பரம்பொருளாய் அமல மாகிச்
செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி
      அவனுருவைச் சிந்தை செய்தான்.

72

(68. காவதம் - காதம்; ஓர் அளவு. 69. விழுமம் - துன்ப
70. அகலம் - மார்பு. கயமுகன் தவத்திற்குச் செல்கை, அவன் தந்தங்களில்
பட்டுத் திரும்பும் எ·கம் முதலிய ஆயுதத்தின் மீட்சியை ஒத்து என்க.
71. செங்கதிரோன்தனை நோக்கி ஆற்றுகடன் - சூரிய நமஸ்காரம்.
72. முதல் இரண்டடிகள் இறைவனைத் தியானிக்க வேண்டும் முறையினை
விளக்குகின்றன. கரணம் - அந்தக் கரணம். மூவவெழுத்து - பிரணவம்.
ஐந்து - பட்சாட்சரம். கொளுவி - கலந்து.)

980

வேறு
ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான்
ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான்
ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான்
மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான்.

73

981

காலமூ வாயிரங் கழிந்த பின்முறை
மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே
மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா
மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான்.

74

982

கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர்
திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல்
அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக்
கொண்டனர் தம்பதி அறியக் கூறினார்.

75

983

கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன்
ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா
வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும்
மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான்.

76

984

புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான்
அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன்
உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங்
குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ.

77

985

ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன்
காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான்
தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ
மாசறு தவஞ்செய மனத்து முன்னினான்.

78

986

சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை
மற்றொரு பேரழ வதிய அன்னதில்
கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ
நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே.

79

(73. அடகு - இலைகள். அனிலம் - காற்று.
74. மருத்தெனும் மாவை - பிராண வாயு என்னும் குதிரையை.
மூல வெங்கனல் - மூலாக்கினி. மூட்டுறா - (பிரம நாடியில்) மூட்டச்செய்து.
75. தம்பதி - தமது அரசன்; இந்திரன்.
76. வெகுட்சி - கோபம். 77. புலந்தனன் - வருந்தி. பொருமல் - அழுதல்.
அலந்தனன் - துன்பமுற்று. உலந்தனன் - வாடி.
78. தேசிகன் அருளால் - (தவத்திற்கு இரங்கி இறைவன் வராவிடில்
தீயினின்று தவம்செய் என்று) சுக்கிரன் அருளியபடி.
79. நள்ளிடை - நடுவிடம்.)

987

மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத்
தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண்
டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர்
நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான்.

80

988

புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு
தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ
விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ
அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ.

81

989

அன்னதோர் அமையில் அவுணன் மாசுடல்
வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது
பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது
மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால்.

82

990

ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே
போற்றிய வருமிவன் பொறையும் மேன்மையும்
நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ
நூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார்.

83

991

வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி
பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால்
ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை
ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார்.

84

992

தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை
அளப்பருங் குணத்துடன் அமா¢ந்த நாயகன்
உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி
துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார்.

85

993

இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில்
பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன்
அன்னது நாடியே அவுண ருக்கிறை
முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல்.

86

(80. அவதி - காலம். 81. புழைக்கை - துதிக்கை.
82. கார் இரும்பின் - காய இரும்பைப்போல.
மாண்டது - மாட்சிமையுற்றது. மிடல் - வலிமை.
83. பொறை - சாந்த குணம். திட்பம் - திண்மை.
85. நாயகன் - சிவன்; கயமுகனுமாம்.
86. மூரி - வலிமை; திமிலுமாம்.)

994

வேறு
வந்து தோன்றலும் மற்றது நோக்கியத்
தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச்
சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு
தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான்.

87

995

போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா
றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப்
பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத்
தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான்.

88

996

வேறு
மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர்
மேலுறு தகையினர் வெய்ய போரிடை
ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட
ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால்

89

997

எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ
குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை
முற்றுற வரினும்யான் முடிவு றாவகை
அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால்.

90

998

மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட
மக்களால் அவுணரால் மற்றை யோர்களால்
தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை
இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால்.

91

999

என்னிக ராகிவந் தொருவன் என்னொடு
முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும்
அன்னவன் படையினும் அழிவு றாவகை
பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால்.

92

1000

வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர்
இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில்
திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப்
புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால்.

93

1001

அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால்
பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால்
என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன்
நன்றவை பெறுகென நல்கி யேகினான்.

94

1002

பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ்
சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர
உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன்
மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார்.

95

1003

காழுறு பெருந்தரு நாறு காசினி
வீழுறு தூரொடு மெலிந்து நின்றன
ஊழுறு பருவம்வந் துற்ற காலையில்
சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான்.

96

(89. ஆலமர் கடவுள் - கல்லால் நிழலில் அமரும் கடவுள்; தக்ஷ¢ணாமூர்த்தி.
93. ஆழி - ஆக்கினா சக்கரம். கோல் - செங்கோல்.
94. சூழ்ச்சி - பகைவர் வஞ்சனை.
95. தவம் செய்யு முன் இரும்பென விளங்கிய உடலம் தவம்செய்த
பின் பொன்னென விளங்கியதால் கயமுகனை,
“மற்றொரு கயமுகன்” என்றார். 96. பெருந்தரு - ஆலமரம்.
நாறு - நாறுகள். தூர் - சிறு வேர்களான விழுதுகள்.
ஊழுறு பருவம் - நற்பருவம். கயமுகன் பிற்காலத்தில் தவப்
பெருமையால் சேனை வன்மை, ஆயுத வன்மை முதலியவற்றுடன்
விளங்கினான் என்பது இச்செய்யுளின் உட்கருத்து.)

1004

அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில்
புற்புத மாமெனப் புளகம் பூத்துளான்
சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான்
சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான்.

97

1005

அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல
மன்னனும் வௌ¢ளியும் மதங்க மாமுகன்
தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப்
பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார்.

98

1006

தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன்
அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும்
விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின்
மண்ணுல கதனிடை வல்லை எய்தினான்.

99

1007

வேறு
புவனி தன்னிடைப் போந்துபின், அவுணர் கம்மிய அறிஞனை,
நுவலும் அன்பொடு நோக்குறா, உவகை யால்இவை யுரைசெய்வான்.

100

1008

நாவ லந்தரு நண்ணுமத்,
தீவின் மேதகு தென்றிசைப்,
பூவி லோர்நகர் புரிதியால்,
மேவ வென்று விளம்பவே.

101

1009

பூவின் மேல்வரு புங்கவத்,
தேவு நாணுறு செய்கையில்,
காவன் மாநகர் கண்டதிற்,
கோவி லொன்று குயிற்றினான்.

102

1010

வேறு
வெங்கண் மேதகு வேழமு கத்தனைத்
தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச்
சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன்
றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை.

103

1011

இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன்
நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே
சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன்
மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான்.

104

1012

காமர் தங்கிய காப்பியன் அந்நகர்
தூம தங்கெழு தோல்முகற் காதலான்
மாம தங்க புரம்என மற்றொரு
நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான்.

105

(98. அவுணர் தொல்குல மன்னன் - அசுரேந்திரன்.
104. தேசிகன் - சுக்கிரன்.
105. காப்பியன் - சுக்கிரன். தூ - சிந்துகின்ற. மதங்கபுரம் -
இது கயமுகன் நகரம்.)

1013

அந்த மாநகர் ஐதெனக் கம்மியன்
சிந்தை நாடினன் செய்திடு காலையில்
தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ
அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான்.

106

1014

காத மங்கொரு பத்தெனக் கற்றவர்
ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும்
பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர்
வீதி நோக்னின் விம்மிதம் எய்தினான்.

107

1015

அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு
தருக்கு தானவர் தம்முடன் எய்தியே
பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர்
இருக்க நல்கினன் இந்நகர் யாவையும்.

108

1016

அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின்
மங்க லத்தொடு வல்லையின் ஏகியே
சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல்
வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ.

109

1017

போந்து பின்னர்ப் பொருவருந் தானவர்
வேந்தன் மாமக ளான விசித்திர
காந்தி தன்னைக் கருதுநன் னாளினில்
ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான்.

110

1018

விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம்
நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள்
வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம்
எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான்.

111

1019

பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக
மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய
எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய
அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான்.

112

1020

சூழும் வானவர் தானவர் துன்னியே
தாழ ஏழுல குந்தன தாணையால்
வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர்
ஆழி செல்ல அரசுசெய் தானவன்.

113

1021

ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க்
காவும் மாமணி யுங்கம லாலயத்
தேவும் பின்வருந் தேவரும் மாதரும்
ஏவல் செய்ய இனிதிருந தானரோ.

114

(106. ஐது என - அழகென. 109. வெங்கைமாமுகன் - கயமுகன்.
110. விசித்திர காந்தி - இவள் கயமுகன் மனைவி; அசுரேந்திரன் மகள்.
111. வரைந்து - மணந்து.
112. புஷ்பக மன் - குபேரன். 114. ஆ - காமதேனு. சங்கம் - சங்கநிதி.
அம்புயம் - பதுமநிதி. கா - கற்பகத்தரு.)

1022

புந்தி மிக்க புகரும் புகருடன்
அந்த மற்ற அவுணர்கள் மன்னனும்
தந்தி யின்முகத் தானவ னுக்குநன்
மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார்.

115

1023

அன்ன காலை அடுகரி மாமுக
மன்னன் முன்வரும் வாசவ னாதியாந்
துன்னு வானவர் சூழலை நோக்கியே
இன்ன தொன்றை இயம்புதல் மேயினான்.

116

1024

வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம்
மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே
கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச்
செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான்.

1170

1025

அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும்
மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே
முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன்
சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார்.

118

1026

எழிலி யூர்தியும் ஏனைய வானவர்
குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத்
தழித கன்பணி அல்கலும் ஆற்றியே
பழியெ னும்பர வைப்படிந் தாரரோ.

119

1027

கரிமு கத்துக் கயவன தேவலால்
பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச்
சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால்
இருவ ருக்கும் இயம்பி இரங்கினான்.

120

1028

இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந்
தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா
உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும்
புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார்.

121

1029

மாகர் யாவரும் வாசவ னும்புடை
யாக வந்திட அம்புயன் மாலுமை
பாகன் மேய பனிவரைக் கோயிலுள்
ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே.

122

1030

கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல்
தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன்
அண்ட ரோடும் அலமரல் எய்தியே
வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே.

123

(119. எழிலி ஊர்தி - இந்திரன். அல்கலும் - நாடோறும்.
பழியெனும் பரவை - துன்பக்கடல்.
122. மாகர் - தேவர். 123. அலமரல் - துன்பம்.)

1031

வேறு
ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர்
தானவன் கயமுகன் என்னுந் தன்மையான்
வானவர் தமையெலாம் வருத்தி னானவன்
ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால்.

124

1032

வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல்
எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம்
புங்கவ நினக்கது பொருளன் றாகையால்
அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ.

125

1033

என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண்
ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக
வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன்
வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான்.

126

1034

வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும்
நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச்
சூடினர் சென்னிமேல் தொழுத கையராய்
ஆடினர் பாடினர் அமரர் யாருமே.

127

1035

பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே
ஈங்கினி நும்பதிக் கேகு வீரென
ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர்
வீங்குறு காதலால் விடைகொண் டேகினார்.

128

1036

ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி
சேகரம் மிலைச்சிய சென்னி வானவன்
பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத்
தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான்.

129

1037

யாம்பெரு விருபபுடன் இயற்று வித்திடுந்
தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென
வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக்
காம்படு தோளுடைக் கவுரி கூறினாள்.

130

1038

ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந்
தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ்
சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில்
போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான்.

131

1039

நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந்
தாணுவைப் போலவே தனது பாதமுஞ்
சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங்
காணுதற் கரியதக் கடிகொள் சோலையே.

132

(125. விறலை - வெற்றியை. 129. விதி சேகரம் - பிரமகபாலம்.
உலகெலாம் பயந்த சுந்தரத் தோகை - உமாதேவியார்.
130. காம்படு தோள் - மூங்கிலைப்பழிக்கும் தோள்.
131. தையல் - உமாதேவியார். 132. கடி - வாசனை;
இது முதல் சோலை வருணனை ஆகும்.)

1040

தேசுடைத் தருநிரை திருமென் போதொடு
பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன
ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட
நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால்.

133

1041

பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி
மேலுறு பைங்கொடி வேத நாயகன்
ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன்
மாலுறு மங்கையர் வடிவம் போலுமால்.

134

1042

கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன்
அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ்
சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர்
வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால்.

135

1043

பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச்
சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி
காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார்
ஏந்திய தீபிகை என்ன லானவே.

136

1044

வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந்
தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி
ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட்
கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய.

137

1045

வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங்
கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன
எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில்
தண்டுளி சிதறிய தன்மை போன்றவே.

138

1046

கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய
பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல்
மற்றவ ணுள்ளபவன் மரமுந் தம்பயன்
எற்றையும் உலப்புறா தீகை சான்றவே.

139

1047

காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு
தேவியொ டேயருள் செய்து சிற்பரன்
ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர்
ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான்.

140

1048

எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங்
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே.

141

(133. பாசடை - பசியஇலை.
135. கொடிகளின் பசுமையும் தருக்களின் செம்மையும் அம்மை
அப்பரை ஒத்து விளங்குகின்றன.
136. தீபிகை - தீபத்தட்டு. 138. வான்நிறம் - வெண்ணிறம்.
மதுமலர் - தேன்மலர்.
140. கா - சோலை. ஓவிய மன்று - சித்திர மண்டபம்.
141. பெருநசை - பெருவிருப்பம். விண்டிடம் - விலகாமல்.
ஓவியக்கோலம் - சித்திர வடிவம்.)

1049

பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே
ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த்
தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே.

142

1050

அன்னவை உமையவள் காண ஆங்கவை
முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும்
என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு
மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள்.

143

1051

மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக்
கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும்
ஏலவார் கருங்குழல் இறைவி கேளென
ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன்.

144

1052

வேறு
முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர்
மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ
அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால்
நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே.

145

1053

காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின்
மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார்
ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ்
சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே.

146

1054

என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை
தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த்
துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா
முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே.

147

1055

அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள்
முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய்
மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான்.

148

1056

ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணா¢வதாம்
பெருமைதயான் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான்
இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான்.

149

(142. தனி எழுத்து - ஏகாட்சரம்; பிரணவம்.
தூங்கும் - தொங்குகின்ற. கைம்மலைகள் - யானைகள்.
144. மூலமாம் எழுத்து பிரணவாட்சரங்கள். 147. குடிலை - ஓங்காரம்.
148. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்; சிலர் பீசமதத்தை
நீக்கிக் கைம்மதம் என்றும் கூறுவர்.)

1057

மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப்
பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம்
இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர்
அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன்.

150

1058

வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச்
சிந்தையார் வத்தொடுஞ சென்னிதாழ்த் திடுதலுந்
தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத்
தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி.

151

1059

என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல்
அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை
உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ.

152

1060

சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல்
ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக்
கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ
நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால்.

153

1061

கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந்
தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய்
வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா
ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான்.

154

1062

மோனமே குறியதா முதலெழுத் தருளிய
ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ்
சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும்
ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான்.

155

1063

புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா
நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா
அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட்
சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான்.

156

1064

தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே
முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர
நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர்
வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான்.

157

(152. என்னரே ஆயினும் - எத்தகையோராயினும்.
அன்னவர்தம் சிந்தை போல் - அவர் எண்ணம்போல.
உன்னலார் - நினைந்துவழிபடாதவர். ஊறு - இடையூறு.
153. நாயகம் - தலைமைத்தன்மை.
154. கான் - நாற்றம். கரடம் - மதம். சாடி - அழித்து.
ஆனையின்முகவன் - விநாயகன். ஐம்முகன் - சிவபெருமான்.
155. மோனம் - மௌனம். முதலெழுத்து - பிரணவம்.
ஞானமாமதலை - விநாயகன்.
156. அருந்தி - விருப்பம். மருவினான் - சென்றான்.)

1065

அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப்
பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய
மின்னுதண் சுடர்விடும் வௌ¢ளிமால் வரைமிசைக்
துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான்.

158

1066

அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால்
நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம்
எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப்
புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே.

159

1067

வேறு
நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை
இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய
ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா
அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான்.

160

1068

சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாஞ் சசிமுதற் கலவுங் கோடியால்.

161

1069

என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்.

162

1070

பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன்
முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன்
மற்றிது புகறலும் வனசக் கண்ணினான்
நற்றிறம் இ·தென நவின்று வைகினான்.

163

1071

இந்தவா றாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே.

164

1072

அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம்
முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக்
கதுமென வைத்தலுங் கவுரி நீநமக்
கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ.

165

(158. நேமியான் - திருமால். 160. ஒருத்தி - ஒப்பற்ற உமாதேவியார்.
161. சூது - சூதாட்டம். சசி - சந்திரன். கோடி - கொள்வாய்.
162. சான்று - சாட்சி. மன்னினை - பொருந்தி.
163. இகல் - வெறுப்பு. வனசக்கண்ணினான் - திருமால்.
164. உழையர் - ஊழியர்கள். காசு, பலகை - இவை சூதாடு கருவிகள்.)

1073

கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல்
அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள்
தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால்
எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார்.

166

1074

பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர்
அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந்
துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர்
விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார்.

167

1075

அடியிது பொட்டைஈ தென்பர் அ·தென
முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக்
கடிதினில் கழறினர் கவறு சிந்தினார்
நொடிதரு கருவிகள் எதிரிகள் நூக்கினார்.

168

1076

வேறு
ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ
தேற்றாம் அ·தியார்க்கு மளப்பருஞ செய்கை யாலே
மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத்
தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான்.

169

1077

ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி
நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை
வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால்
நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான்.

170

1078

மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம்
ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி
வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச்
சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள்.

171

1079

சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர்
வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும்
நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச்
செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள்.

172

1080

பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய்
தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப்
பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ
காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ.

173

(166. கவறு - சூதாடுகருவி.
167. பஞ்சு, பாலை, ஈரைஞ்சு, அஞ்சு, நடம், துருத்தி,
வெடி - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள்.
168. அடி, பெட்டை - இவை சூதாட்டத்தின் குழூஉக்குறிகள்.
கவறுசிந்துதல் - காய்களைவெட்டுதல். நூக்கினார் - தள்ளினார்.
169. ஏற்றான் - இடபத்தையுடையவன்.
170. வென்றாய் அலை - வெற்றி பெறவில்லை. தார் - மாலை. நேர்தி - அளித்தி.
171. இகல்ஆட - பகைத்து நானே வென்றேன் என்று கூற.
172. செல் - மேகம். ஐம்பால் - கூந்தல். ஆற்ற - மிகவும்.
173. கண்ணனுமாயினை - இங்கு, நீ கண்ணுடையவனான் இருந்தும்
அதற்குரிய செயலினை இழந்தாய் என்பது குறிப்பு.பாலினுற்றாய் - பக்கத்திலிருந்தாய்;
பாற்கடலிலிருந்தாய்; பாலை வைத்துக்கொண்டு பொய் சொல்லலாகாது என்பது கருத்து.)

1081

ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை
ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய்
பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை
ஆம்பால் உருவம் அ·தங்கண் அடைந்த தன்றே.

174

1082

அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக்
கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச்
செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா
எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான்.

175

1083

காலாய் வௌ¤யாய்ப் புனலாய்க் கனலோடு பாராய்
மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய்
நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன்
மாலா யவனுக் கி·தொன்று வகுத்து ரைப்பான்.

176

1084

என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய்
நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய்
தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில்
முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய்.

177

1085

ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில்
பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே
ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு
தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ செய்து சேர்தி.

178

1086

அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே
எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச்
செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி
மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே.

179

1087

வேறு
என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி
அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில்
துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும்
முன்னவ னுமேகென முராரியை விடுத்தான்.

180

1088

விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே
கட்டழகின் மேதகைய காமனது தாதை
சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம நண்ணி
மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான்.

181

(174. ஏம்பால் - மகிழ்ச்சியால். கைதவம் - வஞ்சனை.
பாம்பு ஆதி - பாம்பாகக்கடவாய்.
175. கவற்சி - கலக்கம். செவ்வான் - செவ்வானம்.
176. கால் . காற்று. வௌ¤ - ஆகாயம். நாதன் - சிவன்.
177. இசைத்தனை - தவறுகூறினை. ஈது - பாம்பு வடிவாகும் இச்சாபத்தினை.
ஆலவனம் - திருவாலங்காடு. 178. தொன்மரம் - ஆலமரம்.
பராரை - பெரிய அடிப்பாகம்.
179. கயமுகன் - விநாயகன். சேவகன் - வீரன். மஞ்சே அனையாய் - மேக வண்ணனே!
இவ்வுரு - இப்பாம்பு வடிவம். 180. முரா£¤ - திருமால்.
181. காமனது தாதை - திருமால். சிட்டர்கள் - மேலானவர்கள்.
தெனாது புலம் - தென்னாடு. மட்டு - தேன்.)

1089

நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச்
சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத்
தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந்
தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம்.

182

1090

பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி
விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத்
தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால்
வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும்.

183

1091

அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள்
உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப்
பண்டுகரி யோன்தயில்கொள் பாசடைகள் தன்பாற்
கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால்.

184

1092

மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில்
விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத்
தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும்
புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும்.

185

1093

பாசடை தொடுக்கப்பட லைப்பழு மரத்தின்
வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை
பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி
ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே.

186

1094

ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப்
பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன்
கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும்
மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த.

187

1095

ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில்
பாசமொடு நின்றதொரு பான்மைய· தன்றேல்
வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால்
வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும்.

188

1096

மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற்
கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி
வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின்
மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை.

189

(182. புலவர் - அறிஞர். தாரு - கல்லால விருட்சம்.
183. இது முதல் ஆல மரத்தின் வருணனை ஆகும்.
உலவ¨திதிரன் - கிளைகள். வீழின் நிரை - விழுதின் வரிசை.
தசும்பு - குடம். வசுந்தரை - பூமி.
184. வடம் அன்ன - அந்த ஆலேபோல.
185. கரி - இங்குப் பெண் யானை.
186. படலை - மாலை. பழுமரம் - ஆலமரம். பூசல் - சிறுசண்டை.
187. ஆல்வரை - ஆலமரமாகிய மலை. ஆசுகம் - காற்று.
இரவிபாகன் - அருணன். கந்துகம் - சத்தமா என்னும் குதிரைகள்.
மத்திகை - குதிரைச் சம்மட்டி; சவுக்கு.
188. தெனாதுதிசை யாளும் இறை - எமன். மாலிகை - பூமாலை.
பழுமாமர விலங்கல் - ஆலமரமாகிய மலை.
189. ஊனம் - அழிவு. கான்றல் - பெய்தல்.
மாண்ட - மாட்சிமை வாய்ந்த.)

1097

இரும்பறை ஆலமிசை எம்முருவு கொள்ளா
வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா
வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம்
தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள்.

190

1098

கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல்
நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத்
துடித்தன எனத்தலை துளக்கின உரோமம்
பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய்.

191

1099

கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும்
அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை
துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற
விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம்.

192

1100

செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின்
மருப்பின் ஒசிப்பவன் வரத்தினியல் காணா
விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும்
பரப்பிய நிகர்த்துள பயங்ககெழுவு பைங்காய்.

193

1101

வௌ¢ளிபடு கின்றமதி விண்படர் விமானங்
கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத்
துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப்
புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர்.

194

1102

காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால்
தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே
பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங்
கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம்.

195

1103

அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான்
பவ்வநிற வண்ணல் துயில் பாசடை கள்தம்மோ
டெவ்வகை கமத்திரென வேவினவ என்றே
வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான.

196

1104

அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன்
உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஔ¢வாள்
வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப்
பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன்.

197

(190. வெம்பணிகள் - கொடிய பாம்புகள். தம்பதி - பாதாளம்.
191. கட்செவி - கண்ணே காதாக உடையது; பாம்பு. புனிறு - இளமை.
192. கவடு - பெருங்கிளை. முகை - மொட்டு.
193. பயம் - பால். கெழுவு - பொருந்திய.
194. கள்ளிபடு - கள்ளியிலும் அதிகமாக உண்டாகின்ற.
தொத்த - பட. முயல் - முயல் என்னும் களங்கம்.
195. மதிசான்று என்றது ஆல மரக்கிளைகள் சந்திர மண்டலத்தை முட்டியதை.
கோ - இறைவன். அது : பகுதிப்பொருள் விகுதி. கோளி - ஆலமரம்.
196. நோக்கினன் - நோக்கி. வினவஎன்றே - வினவி அறிதற்கு என்றே.
அரவினுக்கு இறைவன் - ஆதிசேடன்.
197. உந்தியில் - வயிற்றில். ஓங்கல் - உயர்ந்த. வாள் - வாட்படை.
ஓங்கல் கெழும் ஔ¢வாள் வந்துறையினில் புகுவதென்ன - உதயி கிரியில் உதித்து
விளங்கிய சூரியன் சென்று கடலுள் புகுந்தாற்போல எனவும் பொருள்கொள்ளலாம்.)

1105

சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான
இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும்
அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும்
வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம்.

198

1106

வேறு
முந்து வேழ முகத்தவன் ஏவலால்
நொந்து சிந்தை நுணங்கிய தேவரும்
இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன்
வந்த தோர்ந்து மகிழச்சியின் மேயினார்.

199

1107

ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன்
ஆதி யோர்கயி லாயத் தணுகியே
போத கத்துப் புகர்முகப் புங்கவன்
பாத முற்றுப் பணிந்து பரவினார்.

200

1108

பரவல் செய்திடுக பான்மையை நோக்கியே
கருணை செய்த கயமுகத் தெம்பிரான்
உரையும் நுங்கட் குறுகுறை என்றலும்
வரன்மு றைப்பட வாசவன் கூறுவான்.

201

1109

தொல்லை நாண்மதி சூடிய சோதிபால்
எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான்
கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன்
அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை.

202

1110

பின்னும் நங்களைப் பீடற வைகலுந்
தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான்
அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால்
மன்ன வேபுதி தொன்று வகுத்தனன்.

203

1111

கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற்
குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந்
தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும்
பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம்.

204

1112

கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல்
மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும்
பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ்
சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம்.

205

(198. சத்தி உரை - தேவியின் சாபமொழி. ஆதி - சிவன்.
விததக முதற்புதல்வன் - ஞானவடிவினனாகிய விநாயகன்.
199. ஐங்கரன் - விநாயகன். 200. போதகம் - இளமை. புகர் - புள்ளி.
204. கிடைத்துழி - அடைந்தபோது. குழைஇணை - இரு காது.)

1113

ஆங்க வன்தன் தாவியொ டெங்குறை
நீங்கு வித்திட நீவரு வாயென
ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு
பாங்கர் வைகும் பராபரன் கூறினான்.

2063

1114

ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை
ஏத மாற்றுதி என்று வழிபடீஇ
மோத காதிகள் முன்னுற வார்த்திடப்
பூத நாதன் அருளில் புகலுவான்.

207

1115

அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம்
விஞ்சு வேழ முகமுடை வீரனைத்
துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக்
குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே.

208

1116

இறைவ னோடும் இமையவர் எம்முடைச்
சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின
மறுமை இன்பமும் வந்தன வால்இனிப்
பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார்.

209

1117

வேறு
துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை
இன்புறு காலையில் ஈசன் தந்திடும்
அன்புடை முன்னவன் ஆனை மாமுக
முன்பனை யடுவது முன்னி னானரோ.

210

1118

பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள்
நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர்
அருக்கனின் இலகிய அசலன் என்பவன்
தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான்.

211

1119

ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக்
காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல்
மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே
கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார்.

212

1120

சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக்
காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர்
பூமரு மதுமலர் பொழிதல் மேயினர்
ஏமரு பூதரில் எண்ணி லோர்களே.

213

1121

துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை
கடிபடு கரடிகை கணையம் சல்லிகை
இடியுறழ் பேரிகை இரலை காகளங்
குடமுழ வியம்பினர் கோடி சாரதர்.

214

(206. ஓங்கல் - இமயமலை.
207. ஏதம் - துன்பம். மோதகாதிகள் - மோதகம் முதலியபொருள்கள்.
208. துஞ்சுவித்து - இறக்கச்செய்து. 210. முன்னவன் - விநாயகப்பெருமான்.
211. அசலன் - பூதகணங்களில் ஒருவன். 213. ஏமரு - மகிழ்வுற்ற.
214. துடி - உடுக்கை. தோம்இல் - குற்றமில்லாத. தண்ணுமை - மத்தளம்.
இரலை, ஊதுகொம்பு, சல்லரி, கரடிகை, கணையம், சல்லிகை காகளம் குட முழவு
- இவைகள் வாத்திய வகைகள்.)

1122

சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன்
வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும்
அந்தர அமரரும் அடைந்து போற்றியே
புந்திகொள் உவகையால் போதல் மேயினார்.

215

1123

தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு
பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை
சேருற வீசியே புடையிற் சென்றனர்
காரினை யடைதரு கடவுள் வில்லென.

216

1124

விரைந்தெழு சாரத வௌ¢ளம் எண்ணில
நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன்
பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன்
புரந்திடு மதங்கமா புரமுன் போயினான்.

217

1125

ஆயது கயமுகத் தவுணர் கோடியே
வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ
ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன்
சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான்.

218

1126

பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின
சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன
எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன
வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார்.

219

1127

ஆயிர வௌ¢ளமாம் அனிகஞ் சுற்றிடக்
காய்கனல் விழியுடைக் கயமு காசுரன்
ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல்
நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான்.

220

1128

நண்ணிய காலையின் நவையில் பூதரும்
அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப்
பண்ணினர் பெருஞசமர் படையின் வன்மையால்
விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே.

221

1129

புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள்
எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர்
அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர்
கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார்.

222

1130

ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே
வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின்
ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந்
தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார்.

223

(216. கடவுள்வில் - இந்திரவில்.
218. வேயினர் - ஒற்றர். சேய் - செவ்விய.
219. சில்லிகொள் - தகடுகள் பதித்த. 223. தியக்கம் - கலக்கம்.)

1131

ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை
அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை
குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள்
மொழிந்திட அரியதோர் விசய முற்றினா£¢.

224

1132

உயர்தரு தானவர் உடைந்த தன்மையும்
புயவலி கொண்டுள பூதர் யாவருஞ்
சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே
கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான்.

225

1133

உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைக்சிலை
வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர்
விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந்
துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென.

226

1134

அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும்
வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர்
இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார்
புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே.

227

1135

கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது
மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன்
இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில்
அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே.

228

1136

காருடை இபமுகக் கடவுள் மேலையோன்
ஏருற வருதலும் நின்ற தூதரைச்
சீருறு கயமுகத் தீயன் நோக்கியே
யாரிவண் பொருவதற் கணுகுற் றானென.

229

1137

பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக்
காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன்
உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன்
பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார்.

230

1138

அன்னது கேட்டலும் அவணன் சீறியே
பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம்
பொன்னி ரதத்தினை புழைக்கை மாமுகன்
முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே.

231

1139

கேட்டிடு கலவையோன் கிஞ்சு கக்குரத்
தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை
காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை
ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற.

232

(224. குறள் - குறுகிய. விசயம் - வெற்றி.
227. அரம்தெறு - அரத்தால் கூராக்கிய.
ஆகம் - உடல். 228. கிம்புரி - பூண். 230. பணை - பருமை.
231. கடவுதி - செலுத்து வாயாக.)

1140

ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத்
தூயனை யழல்விழ சுழல நோக்கியே
காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால்
சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான்.

233

1141

நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே
தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை
உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர்
வந்தனை இறையது மதியி லாய்கொலோ.

234

1142

அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும்
வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர்
பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன்
வென்றவர் இவரென விளம்ப வல்லையோ.

235

1143

தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய
வான்பெறு தேவரால் மக்க ளாலவர்
ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது
நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல்.

236

1144

பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம்
என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர்
தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை
உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால்.

237

1145

பொருதெனை வென்றனை போக வல்லையேல்
வருதியென் றுரைத்தலும் வானு லாவிய
புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை
அருளுட னொருமொழி அறைவ தாயினான்.

238

1146

வேறு
நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள்
வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப்
புரந்தரன் முதவி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார்
அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே.

239

1147

உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ
பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி
இந்நிலத் தரசு செய்தே இருத்திய· திசையா தென்னின்
நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான்.

240

(232. வலவையோன் - சாரதி. கிஞ்சுகம் - செந்நிறம்.
234. நுந்தை - உனது தந்தை. இறையது - சிறிதும்.
236. ஊன் - மாமிசம். படை - ஆயுதம்.
239. நிரந்த - வரிசையான. எந்தை - சிவன். அரந்தை - துன்பம்.)

1148

என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழிழிழிழித்துச் சென்றோர்
பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி
மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும்
முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான்.

241

1149

பொற்றனு முரிந்து வீழப புழைக்கையிற் பிடித்த தண்டால்
எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன்
மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச்
செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப.

242

1150

திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த்
தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும்
விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக்
கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான்.

243

1151

நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே
ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான்
அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற்
படும்படி நினைந்து முன்னோன் பாரம்ஒன் றுய்த்தான் அன்றே.

244

1152

விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங்
கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ
அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை
பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான்.

245

1153

முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ்
சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும்
எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ
வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான்.

246

1154

நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில்
சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால்
இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை
யூன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான்.

247

1155

தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது
விடுத்தலும் அனையன் மார்வை வெய்தெனக் கீண்டு போகி
உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க்
கடல்படிந் தமலன் மைந்தன் கரத்தில்வந் திருந்த தன்றே.

248

1156

புயலினத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற் றென்னக்
கயமுகத் தவுணன் முந்நீர்க் கடலுடைந் தென்ன ஆர்த்திட்
டியலுடைத் தேர்மேல் வீழா எய்த்தனன் அவன்தன் மார்பில்
வியனதித் தாரை என்ன விரிந்தன குருதி வௌ¢ளம்.

249

(241. பொன் - அழகு. எழு - ஓர் ஆயுதம். முரண் - வலிமை.
243. கண்டகன் - கொடியன்; கயமுகன். கையறவு - துன்பம்.
244. பாசம் - கயிறு. 245. அட்டது - அழித்தது.
247. எந்தை - எந்தையாகிய விநாயகர். தன் திருக்கோட்டில் ஒன்று -
தனது கொம்புகளில் ஒன்றான வலது கொம்பை.
248. கரத்தில் - வலது கரத்தில்.)

1157

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பின்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா.

250

1158

ஆய்ந்தநல் லுணர்வின் மேலோர் அறிவினும் அணுகா அண்ணல்
ஈந்ததொல் வரத்தால் மாயா இபமுகத் தவுணன் வீழ்ந்து
வீந்தனன் போன்று தொல்லை மெய்யொரீஇ விண்ணும் மண்ணுந்
தீந்திட எரிகண் சிந்தைச் சீற்றத்தோ ராகு வானான்.

251

1159

தேக்கிய நதிசேர் கின்ற சென்னியன் செம்மல் தன்னைத்
தாக்கிய வருத லோடுஞ் சாரதன் தோளின் நீங்கி
நீக்கருந் துப்பின் தாக்கி நீநமைச் சுமத்தி என்று
மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் தூர்தல் உற்றான்.

252

1160

மற்றது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும்
இற்றனன் கயவெஞ் சூரன் எம்மிடர் போயிற் றன்றே
அற்றதெம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார்
சுற்றிய கலிங்கம் வீசித் துண்ணென விசும்பு தூர்த்தார்.

253

1161

காமரு புயலின் தோற்றங் காண்டலுங் களிப்பின் மூழ்கி
ஏமரு கலாப மஞ்ஞை இனமெனக் குலவு கின்றார்
தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம
பூமலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார்.

254

11621

காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவுந்
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படுஞ் செய்கை யென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
நீப்பது கருதி யன்றோ நீயருள் வடிவங் கொண்டாய்.

255

1163

உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
இன்னதென் றுணர்ந்த தில்லை யாமுனை அறிவ தெங்ஙன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போலாம்.

256

1164

என்றிவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி ஏத்தி
நன்றிகொள் சிந்தை யோடு நகையொளி முகத்த ராகி
மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்த லோடும்
ஒன்றிய கருணை நோக்கால் உலப்பிலா அருள்பு ரிந்தான்.

257

(250. செய்யகாடு - செங்காடு; இது தற்போது திருச்செங்காட்டாங்குடி
என வழங்குகிறது. 251. தொல்லைமெய் - யானைவடிவு. ஒரீஇ - நீங்கி.
ஆகு - பெருச்சாளி. 252. பிடரி - முதுகு. 253. இற்றனன் - இறந்தனன்.
கலிங்கம் - ஆடை. 254. கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில்.
257. எகினம் - அன்னம்.)

1165

உய்ந்தனம் இனிநாம் என்னா ஓதிமம் உயர்த்தோன் வௌ¢ளைத்
தந்தியன் யாரும் பேற்றிச் சார்தலுஞ சமரின் முன்னம்
வெந்தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை
எந்தையங் கினிது நோக்கி எழுதிரென் றருளிச் செய்தான்.

258

1166

அவ்வகை அருள லோடும் அரவென எழுந்து போற்றி
மைவரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி
எவ்வமில் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாஞ்
செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசிலா நிருதர்க் கீசன்.

259

1167

மந்திரி யோடுஞ் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழகி
உய்ந்தனன் போவல் யானென் றுன்னிஓர் பறவை யாகி
அந்தரத் திறந்த புள்ளோ டணுகியப் பதியை நீங்கிச்
சிந்தையிற் செல்லல் கூரச் செம்பொன்மால் வரையிற் சென்றான்.

260

1168

தாழுறு சார லூடு தபனனும் உணராத் தாருச்
சூழலொன் றுண்டால் அங்கட் சுருங்கையோ டிருந்த சேமப்
புழையுட் புலம்பி உற்றான் பொன்னகர் இறைக்கும் அங்கண்
ஊழிவெங் காலிற் சூழும் உலப்பில்பூ தர்க்கும் அஞ்சி.

261

1169

வானவர் பகைஞன் அந்த மதங்கமா புரியை நீங்கிப்
போனதோர் காலை மற்றைப் புகருமோர் புள்ள தாகித்
தானுறை உலகு நண்ணித் தவமறைந் தல்ல தாற்றி
ஊனுட லோம்பு வார்போல் ஒருப்படா யோகில் உற்றான்.

262

1170

பூதரும் அன்ன வேலைப் புரிசைசூழ் நகரம் போகி
நீதியில் அவுண ராகி நிறங்கிளர் படைகொண் டோரைக்
காதிவெஞ் சினப்போர் முற்றிக் களத்திடை வருத லோடும்
ஆதிதந் தருளும் மைந்தன் அவ்விடை அகன்று மீண்டான்.

263

1171

மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானங் கணபதீச் சரம தென்பார்.

264

1172

புரமெரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர்
எரிவிழி சிதறும் ஆகு எருத்தமேல் இனிதின் ஏறிச்
சுரபதி அயன்விண் ணோர்கள் தொழுதுடன் சூழந்து போற்ற
அரவென மாலோன் வைகும் ஆலமா வனத்திற் புக்கான்.

265

(258. ஒதிமம் - அன்னம். வௌ¢ளைத் தந்தியன் - இந்திரன்.
259. அரவென - ஹரஹர என்ற ஒலியுடன்.
260. மந்திரி - இங்குச் சுக்கிரன். பதியை - மங்கத புரத்தை. செல்லல் - வருத்தம்.
261. சாரல் - மலை அடிவாரம். தபனன் - சூரியன். சுருங்கை - சிறு துவாரம்.
சேமம் - காவல். புழையுள் - மரப்பொந்தில். 262. வானவர் பகைஞன் - அசுரேந்திரன்.
264. கணபதீச்சரம் - இது திருச்செங் காட்டாங்குடியில் உள்ள சிவாலயத்தின் பெயர்.)


ஆகத் திருவிருத்தம் - 1172

15. அனந்தன் சாப நீங்கு படலம் (1173- 1210)

1173

புக்கதொரு பொழுதிலங்கண் முந்தோ ராலம்
      பொந்தினிடை இருந்தமலன் பொற்றாள் உன்னி
மிக்கதவம் புரிமாலைங் கரத்து முன்னோன்
      மேவியது மனங்கொண்டு விரைவின் ஆங்கே
அக்கணமே எதிர்சென்று வழுத்திக் காண
      அம்மையளித் தருள்சாபம் அகற லோடுஞ்
சக்கரமே முதலியஐம் படைக ளேந்தித்
      தனாதுதொல்லைப் பேருருவந் தன்னைப் பெற்றான்.

1

1174

மாலோன்தொல் லுருவுதன்பால் மேவக் கண்டு
      மகிழ்சிறந்து சிவனருளை மனங்கொண் டேத்தி
மேலோன்தன் முன்னரெய்தி வணக்கஞ் செய்து
      மீண்டுமவன் தனைத்துதித்து விமல நீயென்
பாலோங்கு பூசனைகொண் டருளல் வேண்டும்
      பணித்தருள்க ஆதிபரா பரத்தின் பாலாய்
மூலோங்கா ரப்பொருளாய் இருந்தாள் ன்னம்
      மொழிந்தருள்சா பந்தொலைத்த முதல்வ என்றான்.

2

1175

ஐங்கரன்றான் மாலுரைத்த மாற்றங் கேளா
      அன்னதுசெய் கெனஅருளி அங்கண் மேவக்
கொங்குலவு மஞ்சனநீர் சாந்த மாலை
      கொழும்புகையே முதலியன கொண்டு போந்து
சங்கரனார் மதலைதனை அருச்சித் தன்பால்
      தாவறுபண் ணியம்பலவுஞ் சால்பில் தந்து
பொங்கியபால் அவியினொடு முன்ன மார்த்திப்
      போற்றியே இ·தொன்று புகலல் உற்றான்.

3

1176

வின்னாமம் புகல்கின்ற திங்கள் தன்னில்
      மிக்கமதி தனிலாறாம் பக்க மாகும்
இந்நாளில் யானுன்னை அருச்சித் திட்ட
      இயறகைபோல் யாருமினி ஈறி லாவுன்
பொன்னாரும் மலரடியே புகலென் றுன்னிப்
      பூசைபுரிந் திடவுமவர் புன்கண் எல்லாம்
அந்நாளே அகற்றிநீ யுலவாச் செல்வம்
      அளித்திடவும் வேண்டுமி· தருள்க வென்றான்.

(1. அமலன் - சிவன். ஐம்படை - சங்கு, சக்கரம், வாள், வில்,
கதை என்பன.
2. மேலோன் - இங்கு விநாயகக் கடவுள். 3. பண்ணியம் - பலகாரங்கள்.
பாலவி - பாற்சோறு. ஆர்த்தி - நிவேதித்து.
4. வில் நாமம் புகல்கின்ற திங்கள் - மார்கழி மாதம். மிக்கமதி - சுக்கிலபட்சம். ஆறாம் பக்கம் - சஷ்டிதிதி.)

4

1177

மாயனுரை கேட்டலுநீ மொழிந்தற் றாக
      மகிழ்ந்தனநின் பூசையென மதித்துக் கூறி
ஆயவனும் அயன்முதலா வுள்ளோர் யாரும்
      அன்பினொடு வாழ்த்திசைப்ப ஆகு என்னுந்
தூயதொரூர் தியிலெய்திக் கணங்க ளானோர்
      சூழ்ந்துரக் கயிலையெனுந் துகடீர் வெற்பின்
நேயமுடன் போந்தரனை வணக்கஞ் செய்து
      நீடருள்பெற் றேதொல்லை நிலையத் துற்றான்.

5

1178

வேறு
அற்றை நாளில் அரியயன் ஆதியோர்
நெற்றி யங்கண் நிமலன் பதங்களின்
முற்று மன்பொடு மும்முறை தாழ்ந்தருள்
பெற்று நீங்கினர் பேதுறல் நீங்கினார்.

6

1179

கரிமு கம்பெறு கண்ணுதற் பிள்ளைதாள்
பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி
அருள்பு ரிந்திட அன்னதொர் வேலையில்
பரிவி னாலொர் பரிசினைக் கூறுவார்.

7

1180

எந்தை கேண்மதி எம்மை அலைத்திடுந்
தந்தி மாமுகத் தானவற் செற்றியால்
உய்ந்து நாங்கள் உனதடி யோமிவண்
வந்து நல்குகைம் மாறுமற் றில்லையே.

8

1181

நென்னல் காறும் நிகரில் கயாசுரன்
முன்ன ராற்று முறைப்பணி எந்தைமுன்
இன்ன நாட்டொட் டியற்றுதும் யாமென
அன்ன செய்திரென் றான்அருள் நீர்மையான்.

9

1182

இத்தி றம்படும் எல்லையின் நின்றிடும்
அத்த லைச்சுரர் யாவரும் அன்புறீஇக்
கைத்த லத்தைக் கபித்தம தாக்கியே
தத்தம் மத்தகந் தாக்கினர் மும்முறை.

10

1183

இணைகொள் கையை யெதிரெதிர் மாற்றியே
துணைகொள் வார்குழை தொட்டனர் மும்முறை
கணைகொள் காலுங் கவானுஞ் செறிந்திடத்
தணிவி லன்பொடு தாழந்தெழுந் தேத்தினார்.

11

1184

இணங்கும் அன்புடன் யாருமி தாற்றியே
வணங்கி நிற்ப மகிழ்சிறந் தான்வரை
அணங்கின் மாமகன் அவ்வியல் நோக்கியே
கணங்க ளார்த்தன கார்க்கட லாமென.

(6. செற்றி - கொன்றருளினீர். மதி - முன்னிலையசை.
10. கபித்த மது ஆக்கி - மூடிக்கொண்டு. மத்தகம் - நெற்றி.
11. துணை - இரண்டு. கணைகொள்கால் - கணைக்கால். கவான் - தொடை.)

12

1185

நின்ற தேவர் நிமலனை நோக்கியே
உன்றன் முன்னம் உலகுளர் யாவரும்
இன்று தொட்டெமைப் போலிப் பணிமுறை
நன்று செய்திட நல்லருள் செய்கென.

13

1186

கடனி றத்துக் கயமுகன் அத்திற
நடைபெ றும்படி நல்கிஅ மரர்கோன்
நெடிய மாலயன் நின்றுள ருக்கெலாம்
விடைபு ரிந்து விடுத்தனன் என்பவே.

14

1187

அம்பு யக்கண் அரியயன் வாசவன்
உம்பர் அவ்வரை ஒல்லையின் நீக்குறாத்
தம்ப தந்தொறுஞ் சார்ந்தனர் வைகினார்
தும்பி யின்முகத் தோன்றல் அருளினால்.

15

1188

முந்தை வத முதலெழுத் தாகிய
எந்தை தோற்றம் இயம்பினம் இங்கினி
அந்த மில்குணத் தாண்டகைக் கோர்குணம்
வந்ததென் னென்றி மற்றது கேட்டிநீ.

16

1189

வேறு
நற்குண முடைய நல்லோரும் நாடொணாச்
சிற்குணன் ஆகுமச் சிவன்ப ராபரன்
சொற்குண மூவகைத் தொடர்பும் இல்லதோர்
நிர்க்குணன் அவன்செயல் நிகழ்த்தற் பாலதோ.

17

1190

பரவிய வுயிர்க்கெலாம் பாசம் நீக்குவான்
அருளினன் ஆகியே அமலன் மாலயற்
கிருதொழின் முறையினை ஈந்து மற்றவைக்
குரியன குணங்களும் உள்ள வாக்கினான்.

18

1191

முடித்திடல் இயற்றுஎம முதல்வன் அத்தொழில்
தடுப்பரும் வெஞ்சினந் தன்னில் முற்றுமால்
அடுத்தவப் பான்மையால் அதன்கண் தாமதம்
படுத்தினன் அத்திறம் பலருந் தேர்வரால்.

19

1192

மாமறை அளப்பில வரம்பில் ஆகமந்
தோமற உதவியோர் தொன்ம ரத்திடைக்
காமரு முனிவரர் கணங்கட் கன்னவை
தாமத குணத்தனேல் சாற்ற வல்லனோ.

(13. நிமலனை - விநாயகப் பெருமானை.
இப்பணிமுறை - குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபடுதலை.
15. தும்பியின் முகத்தோன்றல் - கணபதி.
16. அந்தமில் குணத்து ஆண்டகை - சிவபெருமான்.
17. மூவகைக் குணம் - சாத்து விதம், இராசதம், தாமதம் என்னும் மூவகைக் குணம்.
18. இருதொழில் - காத்தல், படைத்தல் என்பன.
19. சங்காரத் தொழில் தாமத குணம் அமைந்துள்ளது என்க.
20. அன்னவை - வேதசிவாகமங்கள். தாமத குணத்தனேல் - தாமதகுணத்தராயின்.)

20

1193

வாலிய நிமலமாமம் வடிவங் கண்ணுதல்
மேலவன் எய்துமோ வேதம் விஞ்சையின்
மூலமென் றவனையே மொழியு மோவிது
சீலமில் லார்க்கெவன் தேற்றும் வண்ணமே.

21

1194

இமையவர் யாவரும் இறைஞ்சுங் கண்ணுதல்
விமலன்அன் றிறுதியை விளைக்கும் பண்பினால்
தமகுணன் என்றியத் தன்மை செய்கையால்
அமைகுண மியற்குணம் அறியற் பாலதோ.

22

1195

ஈத்தலும் அளித்தலும் இயற்று வோர்க்குவ
சாத்திக ராசதந் தத்தஞ் செய்கையின்
மாத்திரை யல்லது மற்ற வர்க்கவை
பார்த்திடின் இயற்கையாப் பகர லாகுமோ.

23

1196

அக்குண மானவை அளிக்குஞ் செய்கையால்
தொக்குறும் இயற்கையத் தொல்லை யோர்கள்பால்
இக்குண மல்லதோர் இரண்டுஞ் சேருமால்
முக்குண நெறிசெலும் முனிவர் தேவர்போல்.

24

1197

நேமியாற் குருவெலாம் நீல மாயதுந்
தோமறு கடலிடைத் துயில்கொள் பான்மையும்
மேமுறும் அகந்தையும் பிறவு மெய்துமேல்
தாமத ராசதந் தானு முற்றவே.

25

1198

அறிவொருங் குற்றுழி அனையன் கண்ணுதல்
இறைவனை வழிடீஇ ஏத்தி இன்னருள்
நெறிவரு தன்மையும் நீடு போதமும்
பெறுதலிற் சாத்திக முறையும் பெற்றுளான்.

26

1199

மேனிபொற் கென்றலின் விமல வான்பொருள்
நானெனும் மருட்கையின் நவையில் ஈசனைத்
தானுணர் தௌ¤வினில் தவத்திற் பூசையில்
ஆனது குணனெலாம் அயன்ற னக்குமே.

27

1200

ஆதலின் விருப்புடன் அல்ல தெய்தினோர்
ஓதிய குணவிதத் துவர் கண்ணுதல்
நாதனுக் கனையது நணுகு றாமையால்
பேதைமை ஒருகுணம் அவன்கட் பேசுதல்.

28

1201

மூன்றென உளபொருள் யாமும் முன்னமே
ஈன்றவன் கண்ணுதல் என்னும் நான்மறை
சான்றது வாகுமால் தவத்தர்க் கென்னினும்
ஆன்றதோர் அவன்செயல் அறியற் பாலதோ.

(23. படைத்தல் தாழிலில் சாத்துவித குணமும், காத்தல் தொழிலில்
இராசத குணமும் உள்ளன என்க. 27. மருட்கை - மயக்கம்.
28. மூன்றென உள பொருள் யாவும் - மும்மாயா தத்துவப் பொருள்
அனைத்தையும்.)

29

1202

செங்கண்மால் முதலிய தேவர் ஏனையோர்
அங்கவர் அல்லவை அகத்துள் வைகியே
னுங்குமா யாவையும் இயற்று கின்றதோர்
சங்கரன் ஒருகுணச் சார்பின் மேவுமோ.

30

1203

ஈறுசெய் முறையினை எண்ணித் தாமதங்
கூறினர் அல்லது குறிக்கொள் மேலையோர்
வேறொரு செய்கையின் விளம்பி னாரலர்
ஆறணி செஞ்சடை அமல னுக்கரோ.

31

1204

வேறு
என்றிவை பலவுந் தூயோன் இசைத்தலும் இனைய வெல்லம்
வன்றிறல் வெறுக்கை எய்தி மயங்கலால் தக்கன் என்னும்
புன்றொழில் புரியுந் தீயோன் பொறுத்திலன் புந்தி மீது
நன்றென அறிதல் அதற்றான் ஒருசில நவிலல் உற்றான்.

32

1205

முனிவகேள் பலவும் ஈண்டு மொழிவதிற் பயனென் வௌ¢ளிப்
பனிவரை உறையும் நுங்கோன் பகவனே எனினு மாக
அனையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும்
இனியிவை மொழியல் போதி என்செயல் முடிப்பன் என்றான்.

33

1206

வேறு
வளங்குலவு தக்கனிது புகன்றிடலுந்
      ததீசிமுனி மனத்திற் சீற்றம்
விளைந்ததுமற் றவ்வளவில் வெருவியது
      வடவையழல் விண்ணோர் நெஞ்சந்
தளர்ந்ததுபொன் மால்வரையுஞ் சலித்தந்தக்
      குலகிரியுந் தரிப்பின் றாகி
உளைந்தனவே லைகள்ஏழும் ஒடுங்கியன
      நடுங்கியதிவ் வுலகம் எல்லாம்.

34

1207

அக்கணமே முனிவரன்தன் பெருஞ்சீற்றந்
      தனைநோக்கி அந்தோ என்னால்
எக்குவடும் எக்கிரியும் எக்கடலும்
      எவ்வுலகும் யாவும் யாருந்
தக்கன்ஒரு வன்பொருட்டால் தளர்ந்திடுமோ
      எனமுனிவு தணிந்து தற்சூழ்
ஒக்கலாடும் அவணெழுந்து சிறுவிதியின்
      முகநோக்கி ஒன்று சொல்வான்.

35

1208

சங்கரனை விலக்கியின்று புரிகின்ற
      மகஞ்சிதைக தக்க நின்னோ
டிங்குறையும் அமரரெலாம் அறிவுறவின்
      னேயென்னா இசைத்துப் பின்னர்
அங்கணுறு மறையோர்தம் முகநோக்கி
      அந்தணரில் அழிதூ வானீர்
உங்கள்குலத் தலைமைதனை இழந்திட்டீர்
      கேண்மினென உரைக்கல் உற்றான்.

36

1209

பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ
      எனவணங்கிப் பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண்
      டிகையினையும் இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும்
      பிறந்திறந்து கதியு றாது
பாசமத னிடைப்பட்டு மறையுரையா
      நெறியதனிற் படுதிர் என்றான்.

37

1210

இனையநெறி யாற்சாபம் பலவுரைத்துத்
      ததீசிமுனி இரண்டு பாலும்
முனிவர்தொகை தற்சூழத் தானுறையும்
      ஆச்சிரம முன்னிச் சென்றான்
அனையவன்தன் பின்னாகத் தக்கனென்போன்
      பெருந்தகவும் ஆற்றும் நோன்பும்
புனைபுகழுஞ் செழுந்திருவும் ஆற்றலுமாம்
      மனச்செருக்கும் போயிற் றன்றே.

(31. ஈறு செய்முறை - சங்காரத் தொழில்.
33. மொழியல் - உரையாதே.
போதி - போவாய். 35. முனிவு - கோபம். ஒக்கல் - சுற்றத்தினர்.
36. அழிதூவானீர் - பேடியாயுள்ளவர்களே.
37. மறையுரையாநெறி - அவைதிக மார்க்கம். படுதிர் - புகுதிர்.)

38


ஆகத் திருவிருத்தம் - 1210

16. தானப் படலம் ( 1211- 1256 )

1211

போனதோர் பொழுதிலவன் துவசமிற்ற
மகத்தூணிற் பொருக்கென் றெய்திக்
கானுலா வியகொடியுங் கழுகுமிடைந்
தனயாருங் கலங்கத் தானே
மானமார் வேதவல்லி மங்கலநா
ணுங்கழன்ற மற்றித் தன்மை
ஆனதோர் துன்னிமித்தம் பலவுண்டால்
முடிவோன்கண் அவையு றாவோ.

1

1212

வேறு
இந்த வாறுதுன் னிமித்தங்கள் பலநிகழ்ந் திடவுஞ்
சிந்தை செய்திலன் சிறுவதும் அஞ்சிலன் தீயோன்
தந்தை தன்னையும் நாரணன் தன்னையுந் தகவால்
முந்து பூசனை புரிந்தனன் முகமன்கள் மொழியா.

2

1213

மற்றை வானவர் யாவர்க்கும் முனிவர்க்கும் மரபால்
எற்று வேண்டிய அவையெலாம் நல்கியே இதற்பின்
பெற்ற மங்கையர் தமக்கும்மா மருகர்க்கும் பெரிதும்
அற்ற மில்லதோர் மங்கலத் தொல்சிறப் பளித்தான்.

3

1214

நாலு மாமுகக் கடவுள்சேய் இத்திறம் நல்கி
மாலும் யாவருங் காத்திடத் தீத்தொழில் மகஞ்செய்
வேலை நோக்கியே தொடங்கினன் அவ்விடை வேள்விச்
சாலை தன்னிடை நிகழ்ந்தன சாற்றுவன் தமியேன்.

4

1215

முன்னரே தக்கன் ஏவலும் வினைசெயல் முறையால்
மன்னு தேனுவோ ராடகச் சாலையின் மாடே
பொன்னின் மால்வரை நடுவுசேர் வௌ¢ளியம் பொருப்பை
அன்ன தாமென அன்னமாம் பிறங்கலை அளித்த.

5

1216

ஏதம் நீங்கிய தீயபால் அடிசிலும் எண்ணில்
பேத மாகிய முதிரையின் உண்டியும் பிறவாம்
ஓத னங்களும் வீற்றுவீற் றாகவே உலகின்
மாதி ரங்களிற் குலகிரி யாமென வகுத்த.

6

1217

நெய்யி னோடளாய் விரைகெழு நுண்டுகள் நீவிக்
குய்யின் ஆவியெவ் வுலகமும் நயப்புறக் குழுமி
வெய்ய தாகிய கருனைகள் திசைதொறும் மேவும்
மையல் யானைக ளாமென வழங்கிற்று மாதோ.

7

1218

அண்ணல் சேர்வெந்தை (1)தோயவை நொலையலே ஆதிப்
பண்ணி யங்களுந் தாரமுங் கனிவகை பலவும்
மண்ணின் மேலுறு கிரியெலாங் குலகிரி மருங்கு
நண்ணி னாலெனத் தொகுத்தன யாவரும் நயப்ப.
*பா-ம் - (1) தோசையே)

8

1219

விருந்தி னோர்கொள விழுதுடன் பால்தயிர் வௌ¢ளந்
திருந்து கங்கையும் யமுனையு மாமெனச் செய்த
அருந்தும் உண்டிகள் யாவையும் வழங்குகோ அதனில்
பொருந்து கின்றது தந்ததென் றாலது புகழோ.

9

1220

தாவில் பாளித மான்மதஞ் சாந்துதண் பனிநீர்
நாவி வௌ¢ளடை செழும்பழுக் காயொடு நறைமென்
பூவு மேனைய பொருள்களும் நல்கின புகழ்சேர்
தேவர் கோமகன் பணிபுரி கின்றதோர் தேனு.

10

(1. துவசம் - கொடி. கொடி - காகம். மங்கல நாண் - திருமங்கலியம்.
2. சிறுவதும் - சிறிதும். மொழியா - மொழிந்து. 4. தமியேன் - அடியேன்.
5. ஆடகச்சாலை - பொன்மயமான பாகசாலை.
அன்னமாம் பிறங்கல் - சோறாகிய மலை. 6. முதிரை - கடலை.
ஓதனம் - சோறு. 7. நீவி - கலந்து. குய் - தாளிப்பு.
கருனைகள் - பொரிக்கறிகள்.
8. வெந்தை - பிட்டு. தோயவை - தோசை. நொலையல் - அப்பம்.
பண்ணியங்கள் - பலகாரங்கள். தாரம் - அருமைப் பண்டங்கள்.
9. விழுது - நெய். கோ - காமதேனு. 10. பாளிதம் - கர்ப்பூரம்.
மான்மதம் - கஸ்தூரி. நாவி புனுகு. வௌ¢ளடை - வெற்றிலை.
பழுக்காய் - பாக்கு. நறை - தேன். தேனு - காமதேனு.)

1221

ஆவ திவ்வகை யாவது நல்கியே அங்கண்
மேவு கின்றது மணியும்அச் சங்கமும் வியன்சேர்
காவும் அம்புய நிதியமுந் தக்கனாங் கடியோன்
ஏவ லாலருட் சாலையில் அடைந்தன இமைப்பில்.

11

1222

கணித மில்லதோர் பரிதிகள் மேனியிற் கஞலும்
மணிக ளோர்புடை தொகுத்தன ஆடக வரைபோல்
அணிகொள் காஞ்சன மோர்புடை தொகுத்தன அம்பொற்
பணிக ளாடைக ளோர்புடை தொகுத்தன படைத்தே.

12

1223

மற்றும் வேண்டிய பொருளெலாம் உதவிஅம் மருங்கில்
உற்ற வேலைஅத் தக்கன தேவலின் ஒழுகா
நிற்றல் போற்றிய முனிவரர் யாவரும் நிலத்தோர்க்
கிற்றெ லாமிவண் வழங்குதும் யாமென இசைத்தார்.

13

1224

வேறு
இன்ன வேலையில் இச்செயல் யாவையும்
முன்ன மேயுணர் முப்புரி நூலினர்
துன்னி மேயமனந் தூண்டவந் தொல்லையில்
அன்ன சாலை தனையணைந் தாரரோ.

14

1225

சாலை காண்டலுந் தக்கனை ஏத்தியே
பாலர் தன்மையிற் பாடினர் ஆடினர்
கோல மார்பிற் குலாவிய வெண்டுகில்
வேலை யாமென வீசிநின் றார்த்துளார்.

15

1226

மிண்டு கின்றஅவ் வேதியர் தங்களைக்
கண்டு வம்மின் கதுமென நீரெனாக்
கொண்டு சென்று குழுவொடி ருத்தியே
உண்டி தன்னை உதவுதல் மேயினார்.

16

1227

மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள்
இறுதி யில்லன யாவர்க்கும் இட்டுமேல்
நறிய உண்டிகள் நல்கியின் னோர்தமக்
குறவி னாரென ஊட்டுவித் தார்அவண்.

17

1228

அன்ன காலை அரும்பசி தீர்தரத்
துன்ன வுண்டுஞ் சுவையுடைத் தாதலால்
உன்னி உன்னியிவ் வுண்டிகள் சாலவும்
இன்னம் வேண்டு மெனவுரைப் பார்சிலர்.

18

(11. மணி - சிந்தாமணி. சங்கம் - சங்கநிதி. கா - கற்பகத்தரு.
அம்புயநிதி - பதுமநிதி. 12. கஞலும் - விளங்குகின்ற. ஆடகம்,
காஞ்சனம் - இவைகள் பொன்களின் வகைகள்.
17. தட்டைகள் - தாம்பாளங்கள்.)

1229

குற்ற மொன்றுள கூறுவ தென்னினி
நற்றவஞ் செய்து நான்முக னால்இவண்
உற்ற உண்டி யெலாமுண ஓர்பசி
பெற்றி லோமெனப் பேதுறு வார்சிலர்.

19

1230

வீறு முண்டி மிசைந்திட வேண்டும்வாய்
நூறு நூற தெனநுவல் வார்தமை
ஏற வேண்டு மிதிலமை யாதெனச்
சீறி யேயிகல் செய்திடு வார்சிலர்.

20

1231

புலவர் கோன்நகர் போற்றிய தேனுவந்
தலகில் இவ்வுண வாக்கிய தாலெனாச்
சிலர்பு கன்றனர் தேக்கிட உண்மினோ
உலவ லீரென ஓதுகின் றார்சிலர்.

21

1232

அறிவி லாத அயன்மகன் யாகம்இன்
றிறுதி யாமென் றிசைத்தனர் அன்னது
பெறுதி யேனுமிப் பேருண வேநமக்
குறுதி வல்லையில் உண்மினென் பார்சிலர்.

22

1233

உண்டி லேம்இவண் உண்டதில் ஈதுபோற்
கண்டி லேம்ஒரு காட்சியும் இன்பமுங்
கொண்டி லேம்இன்று கொண்டதில் ஈசனால்
விண்டி லேம்எனின் மேலதென் பார்சிலர்.

23

1234

எல்லை யில்லுண வீயும்இத் தேனுவை
நல்ல நல்லதொர் நாண்கொடி யாத்திவண்
வல்லை பற்றிநம் மாநக ரிற்கொடு
செல்லு தும்மெனச் செப்புகின் றார்சிலர்.

24

1235

மக்கள் யாவரும் வானவர் யாவரும்
ஒக்கல் யாவரும் உய்ந்திட வாழ்தலால்
தக்கன் நோற்ற தவத்தினும் உண்டுகொல்
மிக்க தென்று விளம்புகின் றார்சிலர்.

25

1236

மைந்தன் இட்டன மாந்திட நான்முகன்
தந்தி லன்வயின் சாலவும் ஆங்கவன்
சிந்தை மேலழுக் காறுசெய் தானெனா
நொந்து நொந்து நுவலுகின் றார்சிலர்.

26

1237

குழுவு சேர்தரு குய்யுடை உண்டிகள்
விழைவி னோடு மிசைந்தன மாற்றவும்
பழுதி லாவிப் பரிசனர் தம்மொடும்
எழுவ தெப்படி என்றுரைப் பார்சிலர்.

27

(20. வீறும் - மிக்க. இகல் - சண்டை.
21. புலவர்கோன் - இந்திரன்.
25. ஒக்கல் - சுற்றம்.
27. குழுவு - (வாசனைப்) பொருள்களின் கூட்டம்.பரிசனர் - நட்பினர்.)

1238

இந்த நல்லுண வீண்டு நுகர்ந்திட
நந்தம் மைந்தரை நம்மனை யாங்கொடு
வந்தி லம்மினி வந்திடு மோவெனாச்
சிந்தை செய்தனர் செப்புகின் றார்சிலர்.

28

1239

அன்ன பற்பல ஆர்கலி யாமெனப்
பன்னி நுங்கும் பனவர்கள் கேட்டனர்
என்ன மற்றவை யாவையும் ஆர்தர
முன்ன ளித்து முனிவர் அருத்தினார்.

29

1240

அருத்தி மிச்சில் அகற்றி அருந்தவ
விருத்தி மேவிய வேதியர் தங்களை
இருத்தி மற்றொர் இருக்கையில் வாசநீர்
கரைத்த சந்தின் கலவை வழங்கினார்.

30

1241

நளிகு லாவிய நாவி நரந்தம்வெண்
பளிதம் வௌ¢ளடை பாகுடன் ஏனவை
அளியு லாவும் அணிமலர் யாவையும்
ஔ¤று பீடிகை உய்த்தனர் நல்கினார்.

31

1242

அரைத்த சாந்தம் அணிந்துமெய் எங்கணும்
விரைத்த பூந்துணர் வேய்ந்துபைங் காயடை
பரித்து நின்ற பனவர்புத் தேளுறுந்
தருக்க ளாமெனச் சார்ந்தனர் என்பவே.

32

1243

ஆன பான்மையில் அந்தணா யாவரும்
மேன காதலின் வெய்தென ஏகியே
வான மண்ணிடை வந்தென ஏர்கெழு
தான சாலை தனையடைந் தார்களே.

33

1244

அடையும் வேலை அயனருள் காதலன்
விடையி னால்அங்கண் மேவு முனிவரர்
இடைய றாதவர்க் கீந்தனர் ஈந்திடுங்
கொடையி னால்எண்ணில் கொண்டலைப் போன்றுளார்.

34

1245

பொன்னை நல்கினர் பூணொடு பூந்துகில்
தன்னை நல்கினர் தண்சுட ரோனென
மின்னை நல்கும் வியன்மணி நல்கினர்
கன்னி யாவுங் கறவையும் நல்கினார்.

35

1246

படியி லாடகப் பாதுகை நல்கினர்
குடைகள் நல்கினர் குண்டிகை நல்கினர்
மிடையும் வேதியர் வேண்டிய வேண்டியாங்
கடைய நல்கினர் அங்கைகள் சேப்பவே.

36

(29. ஆர்கலி - கடல். பன்னி - கூறி. நுங்கும் - உண்ணும்.
பனவர்கள் - அந்தணர்கள். 30. மிச்சில் - எச்சில்.
31. நாவி - புனுகு. நரந்தம் - கஸ்தூரி.
33. தானசாலை - தானம் வழங்கும் இடம்.
34. இங்குத் தானங்களை வரையறை இன்றி வழங்கினார்கள் என்க.
35. கன்னிஆ - கன்னிப் பசு; கடாரி. கறவை - கன்றுடைய பசு.)

1247

இந்த வண்ணம் இறையதுந் தாழ்க்கிலர்
முந்து நின்ற முனிவரர் ஆண்டுறும்
அந்த ணாளர்க் கயினியொ டாம்பொருள்
தந்து நின்று தயங்கினர் ஓர்புடை.

37

1248

அற்ற மில்சிறப் பந்தணர் ஆயிடைப்
பெற்ற பெற்ற பெருவளன் யாவையும்
பற்றி மெல்லப் படர்ந்தனர் பற்பல
பொற்றை செய்தனர் போற்றினர் ஓர்புடை.

38

1249

வரத்தி னாகும் வரம்பில் வெறுக்கைதம்
புரத்தி னுய்த்திடும் புந்தியில் அன்னவை
உரத்தி னால்தமக் கொப்பரும் வேதியர்
சிரத்தின் மேற்கொடு சென்றனர் ஓர்புடை.

39

1250

அரிதன் ஊர்தியும் அன்னமும் கீழ்த்திசை
அரிதன் ஊர்தியும் ஆங்கவன் மாக்களும்
அரிதன் ஊர்தியும் ஆருயிர் கொண்டிடும்
அரிதன் ஊர்தியும் ஆர்ப்பன ஓர்புடை.

40

1251

தான மீது தயங்கிய தேவரும்
ஏனை யோர்களும் இவ்விடை ஈண்டலின்
மீன மார்தரு விண்ணென வெண்ணிலா
மான கோடி மலிகின்ற ஓர்புடை.

41

1252

நரம்பின் வீணை ஞரலுறும் வேய்ங்குழல்
பரம்பு தண்ணுமை பண்ணமை பாடல்நூல்
வரம்பின் ஏய்ந்திட வானவர் வாடவே
அரம்பை மார்கள்நின் றாடினர் ஓர்புடை.

42

1253

தேவர் மாதருஞ் சிற்சில தேவருந்
தாவி லாமகச் சாலையின் வைகிய
காவு தோறுங் கமல மலர்ந்திடும்
ஆவி தோறும்உற் றாடினர் ஓர்புடை.

43

1254

வேத வல்லி வியப்புடன் நல்கிய
காதல் மாதருங் காமரு விண்ணவர்
மாத ராருஞ் சசியும் மகத்திரு
ஓதி நாடியங் குற்றனர் ஓர்புடை.

44

1255

இனைய பற்பல எங்கணும் ஈண்டலிற்
கனைகொள் பேரொலி கல்லென ஆர்த்தன
அனையன் வேள்விக் ககன்கடல் யாவையுந்
துனைய வந்தவண் சூழ்ந்தன போலவே. 45

18

1256

ஊன மேலுறும் உம்பரும் இம்பரும்
ஏன காதலின் மிக்கவண் ஈண்டுவ
வான யாறு வருந்தி யும்புவித்
தான யாறுந் தழீஇயின போன்றவே.

46

(37. அயினி - சோறு. 38. பொற்றை - மலை.
39. வெறுக்கை - செல்வம். 40. கீழ்த்திசை அரி - இந்திரன்; இவன்
ஊர்தி ஐராவதம். மாக்கள் - இங்கு உச்சைச் சிரவ முதலிய குதிரைகள்.
அரிதன் ஊர்தி அக்கினி தேவன் வாகனமான ஆட்டுக்கடா.
41. தானமீது - சுவர்க்கத்தில். 42. ஞரலுறும் - ஒலிக்கும்.
43. மகச்சாலை - யாகசாலை. ஆவி - வாவிகள்.
46. ஊனம் மேலுறும் - வருங்காலத்தில் துன்பமடையும்.)

ஆகத் திருவிருத்தம் - 1256

17. வேள்விப் படலம் (1257- 1265)

1257

இகந்த சீர்பெறும் இப்பெருஞ் சாலையில்
அகந்தை மிக்க அயன்பெருங் காதலன்
மகம்பு ரிந்தது மற்றது சிந்திடப்
புகுந்த வாறும் பொருக்கெனக் கூறுகேன்.

1

1258

வேறு
மருத்து ழாய்முடி மாலயன் பாங்குற மகத்தின்
கருத்த னாகிய தீயவன் முன்னமே கருதி
வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின்
இருத்து முத்தழல் என்றலும் நன்றென இசைந்தார்.

2

1259

முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால்
உற்ற அங்கியை வேதிகைப் பறப்பைமேல் உய்த்துச்
சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து
மற்று முள்ளதோர் விதியெலாம் இயற்றினர் மன்னோ.

3

1260

ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன்சேய்
பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா
நீங்கள் உங்களுக் காகிய செய்கையை நினைந்து
தூங்கல் இன்றியே புரிமினோ கடிதெனச் சொன்னான்.

4

1261

சொன்ன வாசகங் கேட்டலும் இருத்தினோர் தொகையின்
முன்ன மாகிய அம்மகந் தனக்கவி முழுதும்
வன்னி யாதியாஞ் சமிதையுந் தருப்பையும் மற்றும்
இன்ன போல்வதுங் கொடுவழங் கினர்களா றிருவர்.

5

1262

அந்த வேள்விசெய் வித்தனர் ஒருவரால் அவிகள்
எந்தை எல்லவர் கொள்ளவே அவரவர்க் கிசைத்த
மந்தி ரந்தனைப் புகன்றனர் ஒருவர்அவ் வானோர்
தந்த மைக்குறித் தழைத்தனர் ஒருவர்பேர் சாற்றி.

6

1263

மற்ற வார்க்கெலாம் அமைந்திடும் அவிகளை மலர்க்கை
பற்றி யங்கிவாய் அளித்தனர் ஒருவர்அப் பரிசின்
அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர்அங் கதற்கு
முற்றும் நல்லருள் புரிந்தனர் ஒருவரம் முதல்போல்.

7

1264

இருத்தி னோர்களும் பிறரும்ஈ தியற்றுழி யாக
கருத்த னாகிய தக்கன்அத் தேவரைக் கருதிப்
பரித்து நுங்குதிர் என்றவி புரிதொறும் பகர்ந்தே
அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கெலாம் அமுதின்.

8

1265

திருந்து கின்றநற் சுவையினால் தூய்மையால் திகழும்
மருந்து போன்றன என்னினும் உயிர்தொறும் மனத்தும்
இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்
கருந்தும் நீரலா நஞ்சென லாகிய அவிகள்.

9

(1. இகந்த - அளவு கடந்த. 2. மரு - வாசனை. மகத்தின் கருத்தன் -
யாக கருத்தா.
3. இருத்தினோர் - வேள்வியில் ஆசாரியனுக்கு ஒத்தாசை செய்பவர்;
சாதகாசாரியர். அரணி - தீக்கடைக்கோல். அங்கி - அக்கினி.
பறப்பை - நெய் விடு கருவிகள். பரிதிகள் - யாக மேடைகள்.
5. வன்னியாதியாம் சமிதை - வன்னி முதலிய சமித்துக்கள்.
இருத்தினோர் ஆறு இருவர் என்க.
7. அங்கிவாய் அளித்தனர் - அக்கினிமூலமாக அளித்தனர்.
9. உயிர்தொறும் மனத்தும் இருந்த எம்பிரான் - சிவபெருமான்.
அருந்தும் நீரலா - உண்ணத்தகாத.)


ஆகத் திருவிருத்தம் - 1265
------

18. உமைவரு படலம் (1266 - 1326 )

1266

பேசுமிவ் வேள்வி பிதாமகன் மைந்தன்
நாசம் விளைந்தட நாடி இயற்ற
மாசறு நாரத மாமுனி யுற்றே
காசினி மேலிது கண்டனன் அன்றே.

1

1267

கண்டனன் ஆலமர் கண்டனை நீக்கிப்
புண்டரி கந்திகழ் புங்கவன் மைந்தன்
அண்ட ருடன்மகம் ஆற்றினன் அன்னான்
திண்டிறல் கொல்லிது செய்திடல் என்னா.

2

1268

எண்ணிய நாரதன் எவ்வு லகுஞ்செய்
புண்ணிய மன்னதொர் பூங்க யிலாயம்
நண்ணிமுன் நின்றிடு நந்திகள் உய்ப்பக்
கண்ணுதல் சேவடி கைதொழு துற்றான்.

3

1269

கைதொழு தேத்திய காலஅன் னானை
மைதிகழ் கந்தர வள்ளல்கண் ணுற்றே
எய்திய தென்னிவண் இவ்வுல கத்தில்
செய்திய தென்னது செப்புதி என்றான்.

4

1270

எங்கணு மாகி இருந்தருள் கின்ற
சங்கரன் இம்மொழி சாற்றுத லோடும்
அங்கது வேலையில் அம்முனி முக்கட்
புங்கவ கேட்டி யெனப்புகல் கின்றான்.

5

1271

அதிர்தரு கங்கை அதன்புடை மாயோன்
விதிமுத லோரொடு மேதகு தக்கன்
மதியிலி யாயொர் மகம்புரி கின்றான்
புதுமையி தென்று புகன்றனன் அம்மா.

6

1272

ஈங்கிது கூறலும் எம்பெரு மான்றன்
பாங்கரின் மேவு பராபரை கேளா
ஆங்கவன் மாமகம் அன்பொடு காண்பான்
ஓங்கு மகிழ்ச்சி உளத்திடை கொண்டாள்.

7

1273

அங்கணன் நல்லரு ளால்அனை யான்றன்
பங்குறை கின்றனள் பாங்கரின் நீங்கி
எங்கள் பிரானை எழுந்து வணங்கிச்
செங்கை குவித்திது செப்புத லுற்றாள்.

8

1274

தந்தை எனபடு தக்கன் இயற்றும்
அந்த மகந்தனை அன்பொடு நோக்கி
வந்திடு கின்றனன் வல்லையில் இன்னே
எந்தை பிரான்விடை ஈகுதி என்றாள்.

9

1275

என்றலும் நாயகன் ஏந்திழை தக்கன்
உன்றனை எண்ணலன் உம்பர்க ளோடும்
வன்றிறல் எய்தி மயங்குறு கின்றான்
இன்றவன் வேள்வியில் ஏகலை என்றான்.

10

1276

இறையிது பேசலும் ஏந்திழை வேதாச்
சிறுவ னெனப்படு தீயதொர் தக்கன்
அறிவிலன் ஆகும் அவன்பிழை தன்னைப்
பொறுமதி என்றடி பூண்டனள் மாதோ.

11

1277

பூண்டனள் வேள்வி பொருக்கென நண்ணி
மீண்டிவண் மேவுவல் வீடருள் செய்யுந்
தாண்டவ நீவிடை தந்தருள் என்றாள்
மாண்டகு பேரருள் வாரிதி போல்வாள்.

12

1278

மாதிவை கூறலும் வன்மைகொள் தக்கன்
மேதகு வேள்வி வியப்பினை நோக்குங்
காதலை யேலது கண்டனை வல்லே
போதுதி என்று புகன்றனன் மேலோன்.

13

(1. பிதாமகன் - பிரமன். 4. மைதிகழ் கந்தரம் - நீலகண்டம்.
6. கங்கை அதன்புடை - கங்கா நதிக்கரையில்.
7. பராபரை - அம்பிகை. 10. ஏந்திழை - உமாதேவியே!
வன்திறல் - மிக்க செருக்கு. ஏகலை - போகாதே.
11. இறை - சிவபெருமான். பொறுமதி பொறுப்பாயாக.மதி : முன்னிலையசை.
12. மாண்டகு - மாட்சிமை மிக்க. வாரிதி - கடல்.)

1279


வேறு
அரன்பிடை புரிதலும் அம்மை ஆங்கவன்
திருவடி மலர்மிசைச் சென்னி தாழ்ந்தெழா
விரைவுடன் நீங்கியோர் விமானத் தேறினாள்
மரகத வல்லிபொன் வரையுற் றாலென.

14

1280

ஐயைதன் பேரருள் அனைத்தும் ஆங்கவள்
செய்யபொன் முடிமிசை நிழற்றிச் சென்றெனத்
துய்யதொர் கவுரிபாற் சுமாலி மாலினித்
தையலார் மதிக்குடை தாங்கி நண்ணினார்.

15

1281

துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர்
கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்
இவர்தரும் ஒதிமம் எண்ணி லாதஓர்
அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென.

16

1282

கால்செயும் வட்டமுங் கவின்கொள் பீலியும்
மால்செயும் நறுவிரை மல்க வீசியே
நீல்செயும் வடிவுடை நிமலை பாற்சிலர்
வேல்செயும் விழியினர் மெல்ல ஏகினார்.

17

1283

கோடிகம் அடைப்பைவாள் குலவு கண்ணடி
ஏடுறு பூந்தொடை ஏந்தி யம்மைதன்
மாடுற அணுகியே மானத் தேகினார்
தோடுறு வரிவிழித் தோகை மார்பலர்.

18

1284

நாதன தருள்பெறு நந்தி தேவியாஞ்
சூதுறழ் பணைமுலைச் சுகேசை என்பவள்
மாதுகை திருவடி மலர்கள் தீண்டிய
பாதுகை கொண்டுபின் படர்தல் மேயினாள்.

19

1285

கமலினி அனிந்திதை என்னுங் கன்னியர்
அமலைதன் சுரிகுழற் கான பூந்தொடை
விமலமொ டேந்தியே விரைந்து செல்கின்றார்
திமிலிடு கின்றதொல் சேடி மாருடன்.

20

1286

அடுத்திடு முலகெலாம் அளித்த அம்மைசீர்
படித்தனர் ஏகினர் சிலவர் பாட்டிசை
எடுத்தனர் ஏகினர் சிலவர் ஏர்தக
நடித்தனர் ஏகினர் சிலவர் நாரிமார்.

21

(15. ஐயை - அம்பிகை.
16. துவர் - செந்நிறம். இவர்தரு - செல்லாநின்ற.
17. கால் - காற்று. பீலி - மயில்விசிறி. நீல் - நீலநிறம். நிமலை - அம்பிகை.
18. கோடிகம் - பூந்தட்டு; அணிகலச் செப்புமாம். கண்ணடி - கண்ணாடி.
தோடு - காதணி. 19. சூது - சொக்கட்டான் காய்.
20. அமலை - அம்பிகை. விமலம் - தூய்மை. திமில் - திமிலம் : பேரொலி.
21. சிலவர் - சிலர். நாரிமார் - பெண்கள்.)

1287

பாங்கியர் சிலதியர் பலரும் எண்ணிலா
வீங்கிய பேரொளி விமானத் தேறியே
ஆங்கவள் புடையதாய் அணுகிச் சென்றனர்
ஓங்கிய நிலவுசூழ் உடுக்கள் போன்றுளார்.

22

1288

தண்ணுறு நானமுஞ் சாந்துஞ் சந்தமுஞ்
சுண்ணமுங் களபமுஞ் சுடரும் பூணகளும்
எண்ணருந் துகில்களும் இட்ட மஞ்சிகை
ஒண்ணுத லார்பரித் துமைபின் போயினார்.

23

1289

குயில்களுங் கிள்ளையுங் குறிக்கொள் பூவையும்
மயில்களும் அஞ்சமும் மற்றும் உள்ளவும்
பயிலுற ஏந்தியே பரைமுன் சென்றனர்
அயில்விழி அணங்கினர் அளப்பி லார்களே.

24

1290

விடையுறு துவசமும் வியப்பின் மேதகு
குடைகளும் ஏந்தியுங் கோடி கோடியாம்
இடியுறழ் பல்லியம் இசைத்தும் அம்மைதன்
புதைதனில் வந்தனர் பூதர் எண்ணிலார்.

25

1291

அன்னவள் அடிதொழு தருள்பெற் றொல்லையில்
பன்னிரு கோடிபா ரிடங்கள் பாற்பட
முன்னுற ஏகினன் மூரி ஏற்றின்மேல்
தொன்னெறி அமைச்சியற் சோம நந்தியே.

26

1292

இவரிவர் இத்திறம் ஈண்ட எல்லைதீர்
புவனமும் உயிர்களும் புரிந்து நல்கிய
கவுரியம் மானமேற் கடிது சென்றரோ
தவலுறு வோன்மகச் சாலை நண்ணினாள்.

27

1293

ஏலுறு மானநின் றிழிந்து வேள்வியஞ்
சாலையுள் ஏகியே தக்கன் முன்னுறும்
வேலையில் உமைதனை வெகுண்டு நோக்கியே
சீலமி லாதவன் இனைய செப்பினான்.

28

(22. உடுக்கள் - நட்சத்திரங்கள்.
23. நானம் - கஸ்தூரி. சாந்து - கலவைச் சந்தனம். சந்தம் - சந்தனம்.
மஞ்சிகை - பேழை; பெட்டி. 24. பூவை - நாகணவாய்ப்பறவை.
அஞ்சம் - அன்னம். பரை - உமை.
26. சோமநந்தி - இவன் ஒரு தலைமைக் கணாதிபன்.
28. சீலமிலாதவன் - ஒழுக்கமற்ற தக்கன்.)

1294


வேறு
தந்தை தன்னொடுந் தாயி லாதவன்
சிந்தை அன்புறுந் தேவி யானநீ
இந்த வேள்வியான் இயற்றும் வேலையில்
வந்த தென்கொலோ மகளிர் போலவே.

29

1295

மல்லல் சேரும்இம் மாம கந்தனக்
கொல்லை வாவென உரைத்து விட்டதும்
இல்லை ஈண்டுநீ ஏக லாகுமோ
செல்லும் ஈண்டுநின் சிலம்பில் என்னவே.

30

1296

மங்கை கூறுவாள் மருகர் யார்க்குமென்
தங்கை மார்க்கும்நீ தக்க தக்கசீர்
உங்கு நல்கியே உறவு செய்துளாய்
எங்கள் தம்மைஓர் இறையும் எண்ணலாய்.

31

1297

அன்றி யும்மிவண் ஆற்றும் வேள்வியில்
சென்ற என்னையுஞ் செயிர்த்து நோக்குவாய்
நன்ற தோவிதோர் நவைய தாகுமால்
உன்தன் எண்ணம்யா துரைத்தி என்னவே.

32

1298

ஏய முக்குணத் தியலுஞ் செய்கையுள்
தீய தொல்குணச் செய்கை ஆற்றியே
பேயொ டாடல்செய் பித்தன் தேவியாய்
நீயும் அங்கவன் நிலைமை எய்தினாய்.

33

1299

அன்ன வன்தனோ டகந்தை மேவலால்
உன்னை எள்ளினன் உனது பின்னுளோர்
மன்னு கின்றவென் மருகர் யாவரும்
என்னி னும்மெனக் கினியர் சாலவும்.

34

1300

ஆத லாலியா னவர் பாங்கரே
காத லாகியே கருது தொல்வளன்
யாது நல்கினன் இந்த வேள்வியில்
ஓது நல்லவி யுளது நல்கினேன்.

35

1301

புவனி உண்டமால் புதல்வ னாதியாம்
எவரும் வந்தெனை ஏத்து கின்றனர்
சிவனும் நீயுமோர் சிறிதும் எண்ணலீர்
உவகை யின்றெனக் குங்கள் பாங்கரில்.

36

1302

ஏற்றின் மேவுநின் இறைவ னுக்கியான்
ஆற்றும் வேள்வியுள் அவியும் ஈகலம்
சாற்று கின்றவே தத்தின் வாய்மையும்
மாற்று கின்றனன் மற்றென் வன்மையால்.

37

1303

அனைய தன்னிஈண் டடுத்த நிற்கும்யான்
தினையின் காறுமோர் சிறப்புஞ் செய்கலன்
எனவி யம்பலும் எம்பி ராட்டிபால்
துனைய வந்ததால் தோமில் சீற்றமே.

38

(30. மல்லல் - வளப்பம். நின்சிலம்பில் - உனது கயிலை மலைக்கு.
33. தீயதொல் குணம் - தாமதகுணம.
36. உவகை இன்று - விருப்பம் இல்லை.
37. சாற்றுகின்ற - சிவபரமாக உரையாநின்ற. வாய்மை - உண்மைப் பொருளை.
38. தினை - ஒரு தானியம்; இது அளவில் சிறியது. துனைய - விரைவாக.)

1304

சீற்ற மாயதீச் செறியு யிர்ப்பொடே
காற்றி னோடழல் கலந்த தாமெனத்
தோற்றி அண்டமுந் தொலைவில் ஆவியும்
மாற்று வானெழீஇ மல்கி ஓங்கவே.

39

1305

பாரும் உட்கின பரவு பௌவமுந்
சீரும் உட்கின நெருப்பும் உட்கின
காரும் உட்கின கரிகள் உட்கின
ஆரும் உட்கினர் அமர ராயுளார்.

40

1306

பங்க யாசனப் பகவன் தானுமச்
செங்கண் மாயனுஞ் சிந்தை துண்ணென
அங்கண் உட்கினார் என்னின் ஆங்கவள்
பொங்கு சீற்றம்யார் புகல வல்லரே.

41

1307

வேலை அன்னதில் விமலை என்பவள்
பாலின் நின்றதோர் பாங்கி தாழ்ந்துமுன்
ஞாலம் யாவையும் நல்கும் உன்றனக்
கேலு கின்றதோ இனைய சீற்றமே.

42

1308

மைந்தர் யாரையும் வளங்கள் தம்மொடுந்
தந்து நல்கிய தாய்சி னங்கொளா
அந்த மாற்றுவான் அமைந்து ளாயெனின்
உய்ந்தி டுந்திறம் உண்டு போலுமால்.

43

1309

அறத்தை ஈங்கிவன் அகன்று ளானெனச்
செறுத்தி அன்னதோர் சீற்றம் யாரையும்
இறைக்கு முன்னரே ஈறு செய்யுமால்
பொறுத்தி ஈதெனப் போற்றல் மேயினாள்.

44

1310

போற்றி நிற்றலும் புனிதை தன்பெருஞ்
சீற்ற மாய்எழுந் தீயை யுள்ளுற
மாற்றி வேள்விசெய் வானை நோக்கியே
சாற்று கின்றனள் இனைய தன்மையே.

45

1311

என்னை நீயிவண் இகழ்ந்த அன்மையை
உன்ன லேன்எனை யுடைய நாயகன்
தன்னை எள்ளினாய் தரிக்கி லேன்அதென்
கன்னம் ஊடுசெல் கடுவு போலுமால்.

46

1312

நிர்க்கு ணத்தனே நிமல னன்னவன்
சிற்கு ணத்தனாய்த் திகழு வானொரு
சொற்கு ணத்தனோ தொலைக்கு நாள்அடு
முற்கு ணத்தினை முன்னு மாறலால்.

47

(42. வேலை அன்னதில் - அந்தச்சமயத்தில். விமலை - ஒரு சேடி.
43. வளங்கள் தம்மொடு - தனுகரணபுவன போகங்களாகிய வளப்பங்களுடன்.
45. புனிதை - உமாதேவியார். 46. கன்னம்ஊடு - காதினுள். கடுவு - விஷம்.
47. ஒரு சொற்குணத்தனோ - ஒரு குணமுடையவனோ. தொலைக்கு நாள்
அடு முற்குணத்தினை முன்னு மாறலால் - சங்கார காலத்திற்கு முன் உள்ள
குணத்தினைக் கருதுவதன்றித் தாமதமாகிய ஒரு குணமுடையனோ இல்லை
என்றபடி. நிமலன் (சிவபெருமான்) நிற்குணத்தனே; அவனே சிற்குணனாகவும்
விளங்குவான்; சங்கார காலத்தில் சங்கரிக்கு முன் குணத்தினை எண்ணுவதே
அல்லாமல் மற்றைய காலத்துத் தாமத குணமுடையவனோ அல்லன் என்பது கருத்து.)

1313

துன்று தொல்லுயிர் தொலைவு செய்திடும்
அன்று தாமதத் தடுவ தன்றியே
நன்று நன்றது ஞான நாயகற்
கென்று முள்ளதோர் இயற்கை யாகுமோ..

48

1314

தீய தன்றடுஞ் செயலும் நல்லருள்
ஆயில் ஆவிகள் அழிந்துந் தோன்றியும்
ஓய்வி லாதுழன் றுலைவு றாமலே
மாய்வு செய்திறை வருத்த மாற்றலால்..

49

1315

ஆன வச்செயல் அழிவி லாததோர்
ஞான நாயகற் கன்றி நாமெனும்
ஏனை யோர்களால் இயற்ற லாகுமோ
மேன காவலும் விதியும் என்னவே..

50

1316

முன்னரே எலா முடித்த நாதனே
பின்னும் அத்திறம் அளிக்கும் பெற்றியான்
அன்ன வன்கணே அனைத்து மாகுமால்
இன்ன பான்மைதான் இறைவன் வாய்மையோ..

51

1317

தோமி லாகமஞ் சுருதி செப்பியே
ஏம விஞ்சைகட் கிறைவ னாகியே
நாம றும்பொருள் நல்கும் எந்தையைத்
தாம தன்னெனச் சாற்ற லாகுமோ..

52

1318

ஆத லால்அவன் அனைவ ருக்குமோர்
நாத னாமரோ அவற்கு நல்லவி
ஈதல் செய்திடா திகழ்தி அஞ்சியே
வேதம் யாவையும் வியந்து போற்றவே..

53

1319

சிவனெ னுந்துணைச் சீரெ ழுத்தினை
நுவலு வோர்கதி நொய்தி லெய்துவார்
அவனை எள்ளினாய் ஆரி தாற்றுவார்
எவனை உய்குதி இழுதை நீரைநீ. .

54

(49. உயிர்கள் பிறப்பு இறப்புக்களில் வருந்தாமல் இளைப்பாறும் பொருட்டே
இறைவன் சங்காரத்தொழில் புரிகின்றார்ன; இச்செயல் அருட்டிறமே ஆகுமென்க.
50. நாம் எனும் - அகங்காரம் பொருந்திய. மேன - முன் உரைத்த.
காவலும் விதியும் - காத்தலும் படைத்தலும். 51. இறைவன் வாய்மை - சிவபெருமானின் உண்மைநிலை. 52. ஏம விஞ்சை - உயிர்க்குப் பாதுகாவலான
வித்தை. நாம் அறும் - நிந்தை இல்லாத. 54. சிவன் எனும் - மங்களாகரம்
பொருந்திய. துணைச்சீர் எழுத்து - 'சிவ' என்னும் இரண்டெழுத்து. கதி - சிவகதி.)

1320

வேறு
முண்டக மிசையினோன் முகுந்தன் நாடியே
பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக்
தொண்டிலர் எள்யி கொடுமை யோர்க்கெலாந்
தண்டம்வந் திடுமென மறைகள் சாற்றுமால்..

55

1321

ஈதுகேள் சிறுவிதி இங்ங னோர்மகம்
வேதநா யகன்தனை விலக்கிச் செய்தனை
ஆதலால் உனக்கும்வந் தடைக தண்டமென்
றோதினாள் உலகெலாம் உதவுந் தொன்மையாள்.

56

1322

இன்னன கொடுமொழி இயம்பி வேள்விசெய்
அந்நிலம் ஒருவிஇவ் வகிலம் ஈன்றுளாள்
முன்னுள பரிசன முறையின் மொய்த்திடப்
பொன்னெழின் மானமேற் புகுந்து போந்தனள்.

57

1323

அகன்றலை உலகருள் அயன்தன் காதலன்
புகன்றன உன்னியுட் புழுங்கி ஐந்துமா
முகன்திரு மலையிடை முடுகிச் சென்றனள்
குகன்தனை மேலருள் கொடிநு சுப்பினாள்.

58

1324

ஒருவினள் ஊர்தியை உமைதன் நாயகன்
திருவடி வணங்கினள் சிறிய தொல்விதி
பெரிதுனை இகழ்ந்தனன் பெரும அன்னவன்
அரிதுசெய் வேள்வியை அழித்தி என்னவே.

59

1325

எவ்வமில் பேரருட் கிறைவ னாகியோன்
நவ்வியங் கரமுடை நாதன் ஆதலின்
அவ்வுரை கொண்டில னாக அம்பிகை
கவ்வையொ டினையன கழறல் மேயினாள்.

60

1326

மேயின காதலும் வெறுப்பு நிற்கிலை
ஆயினும் அன்பினேற் காக அன்னவன்
தீயதோர் மகத்தினைச் சிதைத்தல் வேண்டும்என்
நாயக னேயென நவின்று போற்றினாள்.

61

(55. கொண்டிலர் - கொள்ளாராய். தண்டம் - தண்டனை.
56. வேதநாயகன் - சிவபெருமான். 57. ஒருவி - நீங்கி.
58. ஐந்து மாமுகன் மலை - கயிலாயமலை. ஐந்து மாமுகன் - ஈசானம்,
தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து
திருமுகங்களையுடைய சிவபெருமான். குகன் - முருகன். நுசுப்பு - இடை.
59. தொல்விதி - தக்கன். 60. நவ்வி - மான். கவ்வை - துன்பம்.)

ஆகத் திருவிருத்தம் - 1326
----

19. வீரபத்திரப் படலம் (1327 - 1386)

1327

அந்த வெல்லைஎமை யாளுடைய அண்ணல் அகிலந்
தந்த மங்கைதன தன்பினை வியந்து தளருஞ்
சிந்தை கொண்டசெயல் முற்றியிடு மாறு சிறிதே
புந்தி யுள்ளுற நினைநதனன் நினைந்த பொழுதே.

1

1328

பொன்னின் மேருவின் இருந்திடு பொலங்கு வடெலாம்
மின்னும் வௌ¢ளிமுளை மேற்கொடுவிளங் கியதென
மன்னு தண்சுடர் மதிக்குறை மிலைச்சு மவுலிச்
சென்னி ஆயிரமும் வான்முகடு சென்றொ ளிரவே.

2

1329

விண்ட லந்தனில் இலங்குசுட ரின்மி டலினைக்
கண்ட லந்தர ஒதுங்குவன போற்க திருலா
மண்ட லந்திகழ் முகந்தொறும் வயங்கு பணியின்
குண்ட லங்களிணை கொண்டகுழை கொண்டு லவவே.

3

1330

ஆன்ற திண்கடல் வறந்திட இறந்த தனிடைக்
தோன்று கின்றதொர் மடங்கல்வலி யின்று தொலைய
மூன்று கண்கள்முக மாயிரமு மேவி முனிவால்
கான்ற அங்கிகளின் அண்டமுழு துங்க ரியவே.

4

1331

சண்ட மாருதமும் அங்கியும் ஒதுங்கு தகவால்
துண்ட மீதுறுங் உயிர்ப்புடன் எழுந்த சுடுதீ
அண்ட கோளமுடன் அப்புறமு மாகி அழியாக்
கொண்ட லூடுதவழ் மின்னுவென வேகு லவவே.

5

1332

மலரின் வந்துறையும் நான்முகன் முகுந்தன் மகவான்
புலவர் தம்புகழ் அனைத்தையும் நுகர்ந்த பொழுதில்
சிலவொ ழுங்கொடித ழின்புடைகள் சிந்தி எனவே
நிலவு செய்தபிறை வாள்எயிறு நின்றி லகவே.

6

1333

துண்ட மீதின்அழ லோஇதழின் வீழ்ந்த சுசியோ
மண்டு தீவிழிகள் கான்றகனலோம னமிசைக்
கொண்டதோர் வெகுளி யாகிய கொடுந்த ழலதோ
எண்டி சாமுகமு மாகிஅடு கின்ற தெனவே.

7

1334

தண்ட லின்றுறையும் ஆவிகள் வெரீஇத் தளரமேல்
அண்ட ரண்டநிரை விண்டிட அவற்றி டையுறுந்
தெண்டி ரைக்கடல் கலங்கஅடல் உற்ற சிவனின்
கொண்ட ஆர்ப்புமுழு தெண்டிசை குலாய்நி மிரவே.

8

(2. குவடு - சிகரம். மிலைச்சு - சூடிய. மவுலி - கிரீடம்.
3. பணியின் குண்டலம் - சர்ப்பகுண்டலம். குழை - காது.
5. சண்ட மாருதம் - பெருங்காற்று. துண்டம் - மூக்கு. 6. நுகர்ந்த - உண்ட.
7. எண்டிசா முகம் - எட்டுத் திக்கு. 8.வெரீஇ -பயந்து.)

1335

தராத லங்கண்முழு துண்டுமிழு கின்ற தகைசேர்
அராவி னங்கடமை யங்கடக மங்க தமொடே
விராய மென்றொடிக ளாவிடுபு விண்ணு றநிமிர்க்
திராயி ரங்கொள்புய மெண்டிசையெ லாஞ்செ றியவே.

9

1336

வரத்தின் மேதகைய வேதன்முத லான வலியோர்
சிரத்தின் மாலிகை அடுக்கல்அவ ரென்பு செறிபூண்
பெரத்த கேழலின் மருப்பினுடன் ஆமை பிறவும்
உரத்தின் மேவுபுரி நூலொடு பெயர்ந்தொ ளிரவே.

10

1337

குந்தம் வெம்பலகை தோமரமெ ழுக்கு லிசம்வாள்
செந்த ழற்கழுமுள் சூலமொடு பீலி சிலைகோல்
முந்து தண்டம்அவி ராழிவசி யால முதலாம்
அந்த மில்படைகள் அங்கைக டொறுங்கு லவவே.

11

1338

ஐய மாழைதனின் மாமணியி னாகி அறிவார்
செய்ய லாதுவரு பேரணிக ளோடு சிவணிப்
பையு லாவுசுடர் வெம்பணிக ளான பணியும்
மெய்யெ லாமணி இடந்தொறும் மிடைந்தி லகவே.

12

1339

நெஞ்ச லஞ்சல மரும்பிறவி நீடு வினையின்
சஞ்ச லஞ்சல மகன்றதன தன்பர் குழுவை
அஞ்ச லஞ்சலெனுமஞ் சொலென விஞ்சு சரண்மேற்
செஞ்சி லம்பொடு பொலுங்கழல் சிலம்ப மிகவே.

13

1340

வேறு
அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த
எந்தை தன்வடி வாயவன் நுதல்விழி யிடையே
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மா
முந்து வீரபத் திரனெனுந் திறலுடை முதல்வன்.

14

1341

அங்க வேலையில் உமையவள் வெகுளியால் அடல்செய்
நங்கை யாகிய பத்திர காளியை நல்கச்
செங்கை யோரிரண் டாயிரம் பாதிசெம் முகமாய்த்
துங்க வீரபத் திரன்றனை யடைந்தனள் துணையாய்.

15

1342

எல்லை தீர்தரு படைக்கலத் திறையுமவ் விறைவற்
புல்லு கின்றதோர் திறலுடைத் துணைவியும் போலத்
தொல்லை வீரனுந் தேவியும் மேவரு தொடர்பை
ஒல்லை காணுறா மகிழ்ந்தனர் விமலனும் உமையும்.

16

9. தராதலங்கள் - உலகங்கள். 10. கேழல் - பன்றி. 11. குந்தம் - ஈட்டி.
பீலி - பேரீட்டி. கோல் - அம்பு. வசி - வாள். 12. ஐ - அழகு; அ : சாரியை.
மாழை - பொன். 14. அந்தி - அந்திப் பொழுது. 15. பாதி - இங்கு ஆயிரம்.
துங்கம் - உயர்வு.)

1343

தன்னை வந்தடை பத்திரை தன்னொடு தடந்தாள்
மன்னு வார்கழல் கலித்திட வலஞ்செய்து வள்ளல்
அன்னை தாதையை வணங்கியே யவர்தமை நோக்கி
முன்ன நின்றுகை தொழுதனன் இவைசில மொழிவான்.

17

1344

மால யன்றனைப் பற்றிமுன் தந்திடோ மறவெங்
காலன் ஆவியை முடித்திடோ அசுரரைக் களைகோ
மேலை வானவர் தம்மையுந் தடிந்திடோ வேலை
ஞாலம் யாவையும் விழுங்குகோ உலகெலா நடுக்கோ.

18

1345

மன்னு யிர்த்தொகை துடைத்திடோ வரம்பில வாகித்
துன்னும் அண்டங்கள் தகர்த்திடோ நுமதுதூ மலர்த்தாள்
சென்னி யிற்கொடே யாதொன் றென்னினுஞ் செய்வன்
என்னை இங்குநீர் நல்கியே தெப்பணிக் கொன்றான்.

19

1346

என்ற வீரனை நோக்கியே கண்ணுதல் எம்மை
அன்றி வேள்விசெய் கின்றனன் தக்கன்அவ் விடைநீ
சென்று மற்றெம தவியினைக் கேட்டிஅத் தீயோன்
நன்று தந்தன னேயெனின் இவ்விடை நடத்தி.

20

1347

தருத லின்றெனின் அனையவன் தலையினைத் தடிந்து
பரிவி னால்அவன் பால்உறு வோரையும் படுத்துப்
புரியும் எச்சமுங் கலக்குதி அங்கது பொழுதின்
வருதும் ஆயிடை ஏகுதி என்றனன் வள்ளல்.

21

1348

அந்த வேலையில் பத்திரை தன்னொடும் அடலின்
முந்து வீரனவ் விருவர்தம் பதங்களின் முறையால்
சிந்தை அன்புடன் வணங்கியே விடைகொண்டு சிவனை
நிந்தை செய்தவன் வேள்வியை அழித்திட நினைந்தான்.

22

1349

உன்னி மற்றறண் நீங்கியே ஆற்றவும் உருத்துத்
தன்னு யிர்ப்பினால் அளவையில் கணங்களைத் தந்து
துன்னு கின்றமெய் வியர்ப்பினால் சிலவரைத் தொகுத்து
வன்னி போல்மயிர்க் கால்தொறுஞ் சிலவரை வகுத்தான்.

23

1350

மொழியி னிற்பல பூதரை அளித்தனன் முளரி
விழியி னிற்பல பூதரை அளித்தனன் வேணி
யுழியி னிற்பல பூதரை அளித்தனன் உந்திச்
சுழியி னிற்பல பூதரை அளித்தனன் தூயோன்.

24

1351

தோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் சுவையின்
கோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் குளிர்பொற்
றாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் தடக்கை
வாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் வலியோன்.

25

(17. பத்திரை - பத்திரகாளி. 18. தந்திடோ - வரவோ. முடித்திடோ - முடிக்கவே. நடுக்கோ நடுங்குமாறு செய்யவோ. 20. கேட்டி - கேள். நடத்தி - திரும்பி வருவாயாக. 21. பரிவு - அன்பு. எச்சம் - வேள்வி. வள்ளல் - சிவன். 22. அவ்விருவர் - அம்மை அப்பர். 23. தன் - இங்கு வீரபத்திரர். உயிர்ப்பு - சுவாசம். 25. சுவையின்கோள் - நாக்கு.)

1352

கையி னிற்சில பூதரை அளித்தனன் களத்தில்
வெய்ய மார்பினிற் கன்னத்திற் சிலவரை விதித்தான்
ஐய தோர்முழந் தாள்தனிற் சிலவரை அளித்தான்
குய்ய மீதினில் ஊருவிற் சிலவரைக் கொடுத்தான்.

26

1353

இன்ன தன்மையில் வீரபத் திரனெனும் இறைவன்
தன்னை நேர்வரும் எண்ணிலா வீரரைத் தந்து
துன்னு கின்றுழிப் பத்திரை என்பதோர் துணைவி
அன்ன பண்பினிற் காளிகள் தொகையினை அளித்தாள்.

27

1354

வீர பத்திர உருத்திரன் வேறுவே றளித்த
சார தர்க்குளங் கோர்சிலர் நீனிறந் தழைப்போர்
கோர பத்திரம் மணிக்கலன் மின்னுவிற் குலவக்
காரெ னப்பொலிந் துருமெனக் கழறுகின் றனரால்.

28

1355

அக்கு மாலையும் மணிகளும் உடுக்கள்போல் அவிரப்
பக்க பாணிலா எயிறுகள் பிறையெனப் பயில
மிக்கு நீடிய வடிவின ராகியே மேலாஞ்
செக்கர் வானெனச் சேர்ந்தெழு பூதர்கள் சிலரே.

29

1356

அண்ட ரைத்தொலை வித்திடும் வீரனை அடைந்தோர்
பிண்ட முற்றும்வான் நிறத்தினர் பூதரில் பெரியோர்
பண்டி ரைத்தொரு முனிமகன் பின்றொடர் பாலின்
தெண்டி ரைக்டற் றொகையெனக் கிளர்ந்தனர் சிலரே.

30

1357

வெம்பொன் மேனியர் அணுகுறின் அவர்தமை விரைவில்
பைம்பொன் மேனியர் ஆக்குமத் திருநிழல் பரப்பி
அம்பொன் மார்புடை மகுந்தனில் வடிவுடை யவராய்ச்
செம்பொன் மால்வரை நிரையெனத் தோன்றினர் சிலரே.

31

1358

மேய வான்பசப் பூ£தரு மேனிய ராகிக்
காய மித்துணை யெனப்படாக் கணக்கின ராகி
மாயர் கண்டுயில் சேக்கையைத் தங்கணே வகுத்துச்
சேய தொன்மரத் தொகையெனக் கெழீஇயினர் சிலரே.

32

1359

வேறு
அங்க வர்க்குள் அடல்விடை ஆனனந்
தங்கி நின்று தயங்கினர் ஓர்சிலர்
பொங்கு சீற்றப் பொருதிறல் வாலுளைச்
சிங்க மாமுக மாய்த்தெழித் தார்சிலர்.

33

1360

புழைகொள் கையுடைப் போர்வலி யாளியின்
முழைகொள் மாமுக மாகிமொய்த் தார்சிலர்
வழுவை யானனம் மன்னினர் ஓர்சிலர்
உழுவை யின்முக மாகியுற் றார்சிலர்.

33

(26. குய்யம் - அபானவாயில். ஊரு - தொடை. 28. பத்திரம் - பாட்படை.
29. அக்கு மாலை - என்புமாலை; உருத்திராட்ச மாலையுமாம்.
30. அண்டர் - தேவர். பிண்டம் - உடல். முனிமகன் - இங்கு உபமன்னியு.
32. பசப்பு - பசலை நிறம். மாயர் - திருமால். 34. புழை - துவாரம்.
முழை - குகை. வழுவை - யானை. ஆனனம் - முகம். உழுவை பலி.)
அலைமு கப்பரி ஆனனம் எய்தியே
கொலைமு கத்துக் குழீஇயினர் ஓர்சிலர்
மலைமு கத்து மரைகளி றெண்குடன்
கலைமு கத்துக் கவினடைந் தார்சிலர்.

1362

இனையர் தங்குழு எண்ணில அன்னர்கைப்
புனைய நின்ற பொருபடை எண்ணில
வினைகொள் வன்மையும் வீரமும் இற்றென
நினைவ தற்கரி தெங்ஙன் நிகழ்த்துகேன்.

36

1363

கையில் எண்ணில் படையினர் காய்கனல்
செய்ய பூணினர் தீக்கலுழ் கண்ணினர்
வெய்ய சொல்லர் வெருவரு மேனியர்
வையம் யாவும் மடுக்குறும் வாயினார்.

37

1364

கட்டு செஞ்சடைக் கற்றையர் காய்ந்தெழு
நெட்ட ழற்கு நிகர்வரு நாவினர்
வட்டி மாலைகள் மானும் எயிற்றினர்
தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார்.

38

1365

துண்ட மீது சொரிதருந் தீயினர்
அண்ட கூடம் அலைத்திடுங் கையினர்
சண்ட மாருதந் தாழ்க்குஞ் செலவினர்
உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார்.

39

1366

மடித்த வாயினர் வானவர் என்பினால்
தொடுத்த கண்ணி துயல்வரு மார்பினர்
தடித்த தோளர் தனித்தழல் என்னினும்
பிடித்து நுங்கும் பெரும்பசி மிக்குளார்.

40

1367

நச்சில் தீயவர் நானில மங்கையும்
அச்சுற் றெஞ்ச அடிகள் பெயர்த்துளார்
கச்சைத் தோல்மிசை கட்டிய தட்டியர்
உச்சிட் டம்மென் றுலகினை உண்கிலார்.

41

1368

சூழி யானை துவன்றிய மால்வரைப்
பாழி யாகப் படர்செவி வாயினர்
ஊழி மாருதம் உட்கும் உயிர்ப்பினர்
ஆழி யாக அகன்ற அகட்டினார்.

42

(35. அலை முகப்பரி - கடலிடத்துள்ள வடவை என்னும் குதிரை.
மறை - மான். எண்கு - கரடி. கலை - குரங்கு. 38. வட்டி - பலகறை.
40. நுங்கும் - தின்னும். 41. நச்சில் - விடத்தைக்காட்டிலும்.
தட்டி - அரையில் கட்டும் உடை விசேடம்; அரைச் சல்லடம்.
உச்சிட்டம் - (திருமால் உண்ட) எச்சில். 42. சூழி - முகபடாம்.)

1369

ஆழ்ந்த சூர்ப்பசுங் கண்ணர் அடித்துணை
தாழ்ந்த கையர் தடக்குறுந் தாளினர்
வீழ்ந்து மிக்க வியன் அத ரத்தினர்
சூழ்ந்த பூதத் தொகையினர் யாவரும்.

43

1370

வேறு
அத்தகை நின்றிட அண்ண லுடன்சேர்
பத்திர காளி பயந்திடு கின்ற
கத்து கடற்புரை காளிகள் தம்மை
இத்துணை யேயென எண்ணரி தாமால்.

44

1371

அந்தமில் பல்படை அங்கையில் ஏந்தி
உந்திய தும்பைகள் உச்சி மிலைச்சிச்
சுந்தர மெய்திய தோற்றம தாகி
விந்தை யெனச்சிலர் மேவினர் அன்றே.

45

1372

தோளின் மிசைத்திரி சூலம் இலங்கக்
கோளில் உயிர்ப்பலி கொள்கலன் ஏந்தித்
தாளிடை நூபுர சாலமி லங்கக்
காளிகள் போற்சிலர் காட்சி மலிந்தார்.

46

1373

வாகினி எங்குள வென்றிட மல்கு
மோகினி போற்சிலர் மொய்த்தனர் மாயச்
சாகினி போற்சிலர் சார்ந்தனர் அல்லா
யோகினி போற்சிலர் உற்றனர் அம்மா.

47

1374

அயிருற அண்டம் அனைத்தையும் ஏற்றா
உயிரவி நுங்கிய உன்னி யெழுந்தே
செயிரவி யாது தெழித்திடு தொன்னாள்
வயிரவி போற்சிலர் மன்னினர் மாதோ.

489

1375

நீடலை மாலை நிலத்திடை தோய
ஆடுறு பாந்தள் அணிக்கலன் மின்ன
ஈடுறு வானுரும் ஏறென ஆர்த்தே
மோடிக ளாமென மொய்த்தனர் சில்லோர்.

49

1376

இவ்வகை மாதர்கள் யாவரும் வெவ்வே
றைவகை மேனிய ராய்வத னங்கள்
கைவகை எண்ணில ராய்க்கவின் மாட்சிச்
செவ்விய ராய்ச்செரு மேற்கிளர் கின்றார்.

50

1377

வேறு
கணந்திகழ் அனைய பூதர் காரிகை மார்கள் யாரும்
அணங்குறு காளி தன்னோ டாண்டகை வீரன் தாளில்
பணிந்தனர் பரசி அன்னார் பாங்கரில் விரவிச் சூழ்ந்து
துணங்கைகொ டாடிப் பாடித் துள்ளியே போத லுற்றார்.

51

1378

ஈட்டுமிக் கெழுந்து செல்லும் இன்னதோர் பூதர் தம்மில்
மோட்டிகல் பானு கம்பன் முதலிய கணங்கள் முத்தி
வீட்டுடைத் தலைவ னான வீரபத் திரன்முன் னாகி
ஈட்டுடைப் பல்லி யங்கள் யாவையும் இயம்பிச் சென்றார்.

52

1379

கொண்டபே ராற்ற லோடுங் குலவிய வீரன் தன்பால்
அண்டமேல் உரிஞ்சப் பல்வே றணிப்பெருங் கவிகை கொண்டும்
விண்டுலாங் கவரி யீட்டம் வீசியுஞ் சேற லுற்றார்
தண்டனே பினாகி சிங்கன் ஆதியாம் தறுகட் பூதர்.

53

1380

பாசிழை மகளிர் சில்லோர் பத்திரை பாங்க ராகித்
தேசுடைக் கவிகை ஈட்டந் திருநிழல் பரப்ப ஏந்தி
மாசறு கவரி வட்டம் பரம்பில இரட்டிப் பல்வே
றாசிகள் புகன்று செம்பொன் அணிமலர் சிதறிப் போந்தார்.

54

1381

படர்ந்திடு புணரி போலப் பார்முழு தீண்டித் தானை
அடங்கலும் ஆர்க்கும் ஓதை அகிலமுஞ் செறிய விண்ணும்
உடைந்ததவ் வண்டங் கொல்லோ உதுகொலோ இதுவோ என்னா
மிடைந்தபல் லண்டத் தோரும் விதிர்ப்பொடும் விளம்பல் உற்றார்.

55

1382

பூமிகள் எழுந்த அம்மா புவியெலாம் பரவித் தொல்பேர்
ஆழியும் அடைத்து வான்புக் கச்சுதன் பதங்கா றேகி
ஊழியின் முதல்வ னார்க்கும் ஒலியினால் உடைந்த அண்டப்
பாழிக டொறுமுற் றெல்லாம் புவனமும் பரந்த அன்றே.

56

1383

அங்கெழு பூழி தன்னால் அவர்விழி கலுழுந் தீயால்
செங்கையிற் படைக்தேய்ப்பச் திறிய கனலால் வையம்
எங்கணும் எரிகள் துன்னி இரும்புகைப் படலம் ஈண்டிக்
கங்குலும் பகலுங் காணாக் கடைக்கப்பல் போன்ற தன்றே.

57

1384

இப்பெருந் தானை சூழ எம்பிரான் எழுந்து சீற்றத்
துப்புடன் ஏகித் தக்கன் தொல்மகம் புரியுஞ சாலை
வைப்பினை அணுகித் தன்பால் வருடைத் தலைவர்க் கொன்று
செப்பினன் என்ப மன்னோ சேணுரு மேறு நாண்.

58

1385

பற்றலர் புரமூன் றட்ட பரமனை இகழ்ந்து நீக்கிக்
சிற்றினம் பொருளென் றுன்னிச் சிறுவிதி என்னுந் தீயோன்
இற்றிடு நெறியால் வேள்வி இயற்றும்இச் சாலை வாயில்
சுற்றொடு சேமஞ் செய்து துயக்கறக் காத்தி ரென்றான்.

59

1386

என்றலுந் தானை யோர்கள் எயிற்புற முற்றுஞ் சூழ்ந்து
நின்றனர் வானி னூடு நெருங்கினர் வாய்தல் தோறுஞ்
சென்றனர் கொடிய தக்கன் சேனையாய் எதிர்ந்தோர் தம்மைக்
கொன்றனர் அவரூன் துய்த்துக் கூற்றனும் உட்க ஆர்த்தார்.

60

(54. பாசிழை - பசிய ஆபரணம். 57. பூழி - புழுதி. கடைப்பகல் - ஊழிநாள்.
58. எம்பிரான் - வீரபத்திரன். 59. சேமம் - பாது காவல். துயக்கு சோர்வு.
60. எயில் - மதில். ஊன் - மாமிசம். உட் - அஞ்சுமாறு.)


ஆகத் திருவிருத்தம் - 1386

20. யாகசங்காரப் படலம் (1387 -1562 )

1387

ஆர்த்தலும் இறைவி தன்னோ டாண்டகை வீரன் வாசத்
தார்த்தொகை தூங்கும் யாக சாலையுள் ஏக லோடுந்
தீர்த்தனைத் தலைவி தன்னைத் திசைமுகன் முதலோர்யாரும்
பார்த்தனர் உளந்துண் ணென்று பதைபதைத் தச்சங் கொண்டார்.

1

1388

மடங்கலின் வரவு கண்ட மானினம் போன்றும் வானத்
தடங்கிய உருமே றுற்ற அரவினம் போன்றும யாக்கை
நடுங்கினர் ஆற்றல் சிந்தி நகையொரீஇ முகனும் வாடி
ஒடுங்கினர் உயிரி லார்போல் இவைசில உரைக்க லுற்றார்.

2

1389

ஈசனும் உஆஆயு மேவந் தெய்தினர் என்பார் அன்னார்
காய்சினம் உதவ வந்த காட்சியர் காணும் என்பார்
பேசரி தந்தோ அந்தோ பெரிதிவர் சீற்றம் என்பார்
நாசம்வந் திட்ட தின்றே நம்முயிர்க் கெலாம் என்பார்.

3

1390

தக்கனுக் கீறும் இன்றே சார்ந்தது போலும் என்பார்
மிக்கதோர் விதியை யாரே விலக்கவல் லார்கள் என்பார்
முக்கணெம் பெருமான் தன்னை முனிந்திகழ் கின்ற நீரார்
அக்கண முடிவர் என்றற் கையமும் உண்டோ என்பார்.

4

1391

விமலனை இகழு கின்றான் வேள்வியேன் புரிந்தான் என்பார்
நமையெலாம் பொருளென் றுன்னி நடத்தினன் காணும் என்பார்
இமையவர் குழுவுக் கெல்லாம் இறுதி யின்றாமோ என்பார்
உமையவள் பொருட்டால் அன்றோ உற்றதீங் கிதெலாம் என்பார்.

5

1392

ஈடுறு பூதர் யாரும் எங்கணும் வளைந்தார் என்பார்
ஓடவும் அரிதிங் கென்பார் ஔ¤த்திடற் கிடமே தென்பார்
வீடினங் காணும் என்பார் மேலனிச் செயலென் னென்பார்
பாடுசூழ் அங்கி நாப்பண் பட்டபல் களிறு போன்றார்.

6

1393

அஞ்சினர் இனைய கூறி அமரர்கள் அரந்தை கூரச்
செஞ்சரண் அதனை நீங்காச் சிலபெரும் பூதர் சூழப்
பஞ்சுறழ் பதுமச் செந்தாட் பத்திரை யோடு சென்று
வெஞ்சின வீரன் வெய்யோன் வேள்விசெய் வதனைக் கண்டான்.

7

(1. இறைவி - பத்திரகாளி. தீர்த்தனை - பரிசுத்தனான வீரபத்திரனை.
தலைவி தன்னை - பத்திரகாளியை. 2. மடங்கல் - சிங்கம். உரும் ஏறு - இடியேறு.
4. ஈறும் - அழிவும். 5. நமை - நம்மை; இங்கு பிரமன் முதலிய தேவர்களை.
பொருள் என்று - சிறந்த கடவுள் என்று. 6. ஈடு - வன்மை. பாடு - பக்கம்.
7. அரந்தை - துன்பம். பஞ்சு - செம்பஞ்சு.)

1394

இடித்தென நக்குப் பொங்கி எரிவிழித் திகலி ஆர்த்துப்
பிடித்தனன் வயக்கொம் போதை பிளந்தது செம்பொன் மேரு
வெடித்தது மல்லல் ஞாலம் விண்டன அண்டம் யாவும்
துடித்தன உயிர்கள் முற்றும் துளங்கினர் சுரர்க ளெல்லாம்.

8

1395

எழுகின்ற ஓசை கேளா இடியுண்ட அரவிற் கோரா
விழுகின்றார் பதைக்கின்றார் றார்வாய் வெருவுகின் றார்கள் ஏங்கி
அழுகின்றார் ஓடு கின்றார் அழிந்ததோ வேள்வி என்று
மொழிகின்றார் மீளு கின்றார் முனிவரும் இமையோர் தாமும்.

9

1396

வானவர் பிறரிவ் வாறு வருந்தினர் என்னின் அங்கண்
ஏனையர் பட்ட தன்மை இயம்பரி தெவர்க்கும் என்றால்
நானது புகல வற்றோ நளிர்புனல் வறந்த காலத்
தானதோ ருருமே றுற்ற அசுணமாத் தன்மை பெற்றார்.

10

1397

வேலையங் கதனின் மேலாம் வீரருள் வீரன் ஏகி
மாலயன் தானும் உட்க மகத்தின்முன் அடைத லோடுஞ்
சீலம தகன்ற கொள்கைச் சிறுவிதி அவற்கண் டேங்கிச்
சாலவு நடுக்குற் றுள்ளந் தளர்ந்தனன் தலைமை நீங்கி.

11

1398

சாரதர் வளைந்த வாறும் சாலைய துடையு மாறும்
ஆருமங் குற்ற வானோர் அயர்வுறு மாறு நோக்கிப்
பேரஞர் உழந்து தேறிப் பெருந்திற லாளன் போல
வீரபத் திரனை நோக்கி விளம்பினன் இனைய தொன்றே.

12

1399

இங்குகுந் தடைந்த தென்கொல் யாரைநீ என்ன லோடுஞ்
சங்கரன் தனது சேயான் தக்கநின் வேள்வி தன்னின்
அங்கவற் குதவும் பாகம் அருளுதி அதற்கா அந்தப்
புங்கவன் அருளி னாலே போந்தனன் ஈண்டை யென்றான்.

13

1400

இத்திறம் வீரன் கூற இருந்தவத் தக்கன் உங்கள்
அத்தனுக் குலகம் வேள்வி அதனிடை அவியின் பாகம்
உய்த்திடா தென்ன அங்கண் உறைதரு மறைகள் நான்குஞ்
சுத்தமார் குடிலை தானுந் துண்ணென எழுந்து சொல்லும்.

14

1401

ஈறிலா உயிர்கட் கெல்லாம் இறையவன் ஒருதா னாகும்
மாறிலா அரனே அல்லால் மகத்தினுக் கிறையா யுள்ளோன்
வேறொர்வா னவனும் உண்டோ வேள்வியில் அவற்கு நல்குங்
கூறுநீ பாணி யாது கொடுத்தியால் என்ற அன்றே.

15

(8. வயக் கொம்பு - வெற்றிக்கு ஊதும் கொம்பு.
9. அசுணமா - இ·து இனிய இசையைக் கேட்டுக்களிக்கும் ஒரு மிருகம்;
பறவை என்பாரும் உளர். 14. உங்கள் அத்தன் - இங்குச் சிவபெருமான்.
உலகம் - உலக மக்கள். குடிலை - பிரணவம்.)

1402

தேற்றமில் சிதட னாகுஞ் சிறுவிதி கேட்ப இன்ன
கூற்றினால் மறைகள் நாங்குங் குடிலையும் ஒருங்கு கூடிச்
சாற்றலும் அன்னான் நல்காத் தலைமைகண் டிறவன் தொல்சீர்
போற்றியங் ககன்று தத்தம் புகலிடம் போய அன்றே.

16

1403

போதலுந் தக்கன் தன்னைப் பொலங்கழல் வீரன் பாரா
வேதமும் பிறவுங் கூறும் விழுப்பொருள் கேட்டி அன்றே
ஈதியெம் பெருமாற் குள்ள இன்னவி எனலுங் கானில்
பேதையொ டாடல் செய்யும் பித்தனுக் கீயேன் என்றான்.

17

1404

ஆங்கது கேளா அண்ணல் அம்புய னாதி யாகிப்
பாங்குற விரவும் வானோர் பல்குழு அதனை நோக்கி
நீங்களும் இவன்பா லானீர் நிமலனுக் கவிநல் காமல்
ஈங்கிவன் இகழுந் தன்மை இசைவுகொல் உமக்கும் என்றான்.

18

1405

என்றலும் அனையர் தொல்லூர் இசைவினால் அதுகே ளார்போல்
ஒன்றுமங் குரையா ராகி ஊமரின் இருத்த லோடும்
நின்றதோர் வீரன் வல்லே நெருப்பெழ விழித்துச் சீறி
நன்றிவர் வன்மை என்னா நகையெயி றிலங்க நக்கான்.

193

1406

கடித்தனன் எயிறு செந்தீக் கானற்னன் கனன்று கையில்
பிடித்திடு மேரு வன்ன பெருந்திறல் கதைய தொன்றால்
தடித்திடும் அகல மார்பத் தடவரை அகடு சாய
அடித்தனன் தக்கன் உள்ளம் வெருவர அரிமுன் வீழ்ந்தான்.

20

1407

விட்டுமுன் வீழத லோடும் வீரருள் வீரத் தண்ணல்
மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ்
சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக்
குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல்.

21

1408

தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல
மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்
வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான்.

22

1409

ஏடுலாந் தொடையல் வீரன் இத்திறம் இவரை முன்னஞ்
சாடினான் அதுகண் டங்கட் சார்தரும் இமையோர் யாரும்
ஓடினார் உலந்தார் வீழ்ந்தார் ஔ¤த்திடற் கிடமே தென்று
தேடினார் ஒருவர் இன்றிச் சிதறினார் கதறு கின்றார்.

23

(16. புகலிடம் - இருப்பிடம். போய - போயின.
17. பேதை - காளி. பித்தன் - சிவன். ஈயேன் - கொடேன்.
19. தொல் ஊழ் - பழைய ஊழ்வினை. இசைவினால் - தொடர்பால்.
அது - வீரபத்திரன் கூறியதை. ஊமரின் - ஊமைகள் போல.
20. அரி முன் - திருமால் முன்பு. 21. விட்டு - விட்டுணு. கமலப்போதில்...
...சிட்டன் - பிரமதேவன். மேல்வரும் - பின்வரும்.
குமரன் போல் - குமரக் கடவுள் போல்.
22. அன்னான் வாக்குறு தேவி - சரசுவதி.
மற்றவர் - இலக்குமி முதலியோர். குயம் - முலை.)

1410


வேறு
இன்னதோர் காலையில் இரிந்து போவதோர்
மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத்
தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச்
சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ.

24

1411

அடித்ததங் கொடுமதி அதனைத் தேய்த்தபின்
விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும்
இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன்
உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே.

25

1412

எறித்தரு கதிரவன் எயிறு பார்மிசைத்
தெறித்திட உயிரொரீஇச் சிதைந்து வீழ்தலும்
வெறித்தரு பகனெனும் வெய்ய வன்விழி
பறித்தனன் தகுவதோர் பரிசு நல்குவான்.

26

1413

தொட்டலும் பகன்விழித் துணையை இத்திறம்
பட்டது தெரிந்துயிர் பலவும் பைப்பைய
அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும்
வெட்டினன் அவன்தலை வீர வீரனே.

27

1414

மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன்
உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில்
அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறீஇத்
தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால்.

28

1415

அண்டர்கோன் வீழ்தலும் அலமந் தோடிய
திண்டிறல் அங்கியைத் திறல்காள் சேவகன்
கண்டனன் அங்கவன் கரத்தை ஒல்லையில்
துண்டம தாகவே துணித்து வீட்டினான்.

29

1416

கறுத்திடு மிடறுடைக் கடவுட் டேவனை
மறுத்தவன் நல்கிய வரம்பில் உண்டியும்
வெறுத்திலை உண்டியால் என்று வீரனும்
அறுத்தனன் எழுதிறத் தழலின் நாக்களே.

30

1417

துள்ளிய நாவொடுந் துணிந்த கையொடுந்
தள்ளுற வீழந்திடுந் தழலின் தேவியை
வள்ளுகி ரைக்கொடு வலங்கொள் நாசியைக்
கிள்ளினன் வாகையால் கிளர்பொற் றோளினான்.

31

1418

அரிதுணைக் கின்னதோர் ஆணை செய்திடும்
ஒருதனித் திறலினான் உம்பர் மேலெழு
நிருதியைக் கண்டனன் நிற்றி யாலெனாப்
பொருதிறல் தண்டினால் புடைத்திட் டானரோ.

32

(24. சின்னம் - சிதைவு. 25. கதிரவன் - சூரியன். கவுள் - கன்னம்.
26. பகன் எனும் வெய்யவன் - பகன் என்னும் மற்றொரு சூரியன்.
28. நாகம் - சுவர்க்கம். உடைந்தனன் - மனம் உடைந்து.
29. அங்கியை - அக்கினி தேவனை. சேவகன் - வீரபத்திரன்.
30. ஏழு திறந்து - ஏழு பகுதியினை யுடைய.)

1419

வீட்டினன் நிருதியை வீரன் தன்பெருந்
தாட்டுணை வீழ்தலுந் தடிதல் ஓம்பினான்
ஓட்டினன் போதிரென் றுரைத்துச் செல்நெறி
காட்டினன் உருத்திர கணத்தர்க் கென்பவே.

33

1420

ஒழுக்குடன் உருத்திரர் ஒருங்கு போதலும்
எழு¢கொடு வருணனை எற்றிச் செங்கையின்
மழுக்கொடு காலினை மாய்த்து முத்தலைக்
கழுக்கொடு தனதனைக் கடவுள் காதினான்.

34

1421

எட்டெனுந் திசையினோன் ஏங்கி வௌ¢கியே
அட்டிடுங் கொல்லென அஞ்சிப் போற்றலுங்
கிட்டி வைதனன் கேடு செய்திலன்
விட்டனன் உருத்திரர் மேவும் தொல்நெறி.

35

1422

தாணுவின் உருக்கொடு தருக்கு பேரினான்
நாணொடு போதலும் நடுந டுங்கியே
சோணித புரத்திறை துண்ணென் றோடுழி
வேணுவின் அவன்தலை வீரன் வீட்டினான்.

36

1423

மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்
குணமிகு வரிசிலை குனித்து வீரனோர்
கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்.

37

1424

இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
சிரந்துணி படுதலும் செய்கை இவ்வெலாம்
அரந்தையொ டேதெரிந் தயன்தன் காதலன்
விரைந்தவண் எழுந்தனன் வெருக்கொள் சிந்தையான்.

38

1425

விட்டனன் திண்மையை வெய்ய தோர்வலைப்
பட்டதொர் பிணையெனப் பதைக்குஞ் சிந்தையான்
மட்டிட அரியஇம் மகமும் என்முனங்
கெட்டிடு மோவெனா இவைகி ளத்தினான்.

39

1426

ஊறகல் நான்முகத் தொருவன் வாய்மையால்
கூறிய உணர்வினைக் குறித்து நோற்றியான்
ஆரணி செஞ்சடை அமலன் தந்திட
வீறகல் வளம்பல வெய்தி னேனரோ.

40

1427

பெருவள நல்கிய பிரானைச் சிந்தையிற்
கருதுதல் செய்திலன் கசிந்து போற்றிலன்
திருவிடை மயங்கினன் சிவையை நல்கியே
மருகனென் றவனையான் மன்ற எள்ளினேன்.

41

(33. செல்நெறி - போம் வழி. 34. எழு - எழுவாயுதம்.
காலினை - வாயு தேவனை. தனதனை - குபேரனை.
35. எட்டெனும் திசையினோன் - ஈசானன்.
36. வேணுவின் - பாட்படையினால். 37. பிணைஎன - மான் வடிவங் கொண்டு.
38. எச்சன் - யாகத்தின் அதி தேவதை. 39. மட்டிட - அளவிடுதற்கு.
40. ஊறு அகல் - குற்றம் அற்ற. ஈறு அகல் - எல்லையற்ற.
41. மன்ற - மிகவும். எண்ணினேன் - இகழ்ந்தேன்.)

1428

வேதநூல் விதிமுறை விமலற் கீந்திடும்
ஆதியாம் அவிதனை அளிக்கொ ணாதெனத்
தாதையோன் வேள்வியில் தடுத்தி யானுமிவ்
வேதமாம் மகந்தனை இயற்றி னேனரோ.

42

1429

தந்தைசொல் லாமெனுந் ததீசி வாய்மையை
நிந்தனை செய்தனன் நீடு வேள்வியில்
வந்தவெண் மகள்தனை மறுத்துக் கண்ணுதல்
முந்தையை இகழ்ந்தனன் முடிவ தோர்கிலேன்.

43

1430

அன்றியும் வீரன்நின் றவியை ஈதியால்
என்றலும் அவன்தன தெண்ணம் நோக்கியும்
நன்றென ஈந்திலன் மறையும் நாடிலேன்
பொன்றிட வந்தகொல் இனைய புந்தியே.

44

1431

அல்லியங் கமலமேல் அண்ணல் ஆதியாச்
சொல்லிய வானவர் தொகைக்கு நோற்றிட
வல்லபண் ணவர்க்கும்வே தியர்க்கும் மற்றவர்
எல்லவர் தமக்குமோர் இறுதி தேடினேன்.

45

1432

துதிதரு மறைப்பொருள் துணிபு நாடியும்
நதிமுடி அமலனை நன்று நிந்தியா
இதுபொழு திறப்பதற் கேது வாயினேன்
விதிவழி புந்தியும் மேவு மேகொலாம்.

46

1433

எனத்தகு பரிசெலாம் இனைந்து தன்னுடை
மனத்தொடு கூறியே மாளும் எல்லையில்
நினைத்தறி வின்மையை நிகழ்த்தின் ஆவதென்
இனிச்செய லென்னென எண்ணி நாடினான்.

47

1434

பாடுறு சாரதர் பரப்பும் வேள்வியின்
ஊடுறு வீரன துரமுஞ் சீற்றமுஞ்
சாடுறு பத்திரை தகவுங் கண்ணுறீஇ
ஓடுவ தரிதென உன்னி யுன்னிமேல்.

48

1435

சென்றதோர் உயிரொடு சிதைந்த தேவர்போல்
பின்றுவன் என்னினும் பிழைப்ப தில்லையால்
வன்றிறல் வீரன்முன் வன்மை யாளர்போல்
நின்றிடல் துணிபெனத் தக்கன் நிற்பவே.

43

(42. இவ்வேதமாம் - இந்தத் துன்பத்திற்குரிய.
45. ஓர் இறுதி - ஒரு அழிவுக் காலத்தினை.
46. நிந்தியா - நிந்தித்து. 48. சாடுஉறு - கொலைபுரிகின்ற.)

43

1436


வேறு
கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள்
கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி
அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான்.

50

1437

அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன்அங் கையினால்
பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்
திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலுஞ் செந்தீ
மற்றொர் மாத்திரைல் போதினில் மிசைந்தது மன்னோ.

51

1438

மெல்ல வேயெரி யத்தலை நுகர்தலும் வேத
வல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மகளிர்
சில்லி ருங்குழல் தாழ்வரச் செங்கரங் குலைத்தே
ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார்.

52

1439

அந்த வேலையின் மறைக்கொடி தன்னைமுன் னணுகி
முந்தி வார்குழை இறுத்தனன் ஏனையர் முடியுந்
தந்த நங்கையர் சென்னியும் வாள்கொடு தடிந்து
கந்து கங்கள்போல் அடித்தனள் பத்திர காளி.

53

1440

காளி யாம்பெயர்த் தலைவியுங் கருதலர் தொகைக்கோர்
ஆளி யாகிய வீரனும் ஏனைஅண் டர்களைக்
கேளி ராகிய முனிவரைத் தனித்தனி கிடைத்துத்
தாளில் ஆர்ப்பினில் தடக்கையில் படைகளில் தடிந்தார்.

54

1441

மருத்தும் ஊழியில் அங்கியும் உற்றென மாதும்
உருத்தி ரப்பெரு மூர்த்தியும் வந்தென உயர்சீர்
தரித்த வீரனும் பத்திர காளியுந் தக்கன்
திருத்தும் வேளவியைத் தொலைத்தனர் தனித்தனி தெரிந்தே.

55

1442

அண்ணல் தன்மையுந் தேவிதன் நிலைமையும் அயரும்
விண்ணு ளோர்சிலர் நோக்கியே யாங்கணும் விரவி
அண்ணு கின்றனர் யாரையுந் தொலைக்குநர் அம்மா
எண்ணி லார்கொலாம் வீரனும் இறைவியும் என்றார்.

56

1443

இற்றெ லாம்நிகழ் வேலையில் வீரன திசையால்
சுற்று தானையர் இத்திறம் நோக்கியே சூழ்ந்த
பொற்றை போலுயர் காப்பினை வீட்டியுள் புகுந்து
செற்ற மோடுசென் றார்த்தனர் வானுளோர் தியங்க.

57

1444

சூர்த்த நோக்குடைப் பூதருங் காளிகள் தொகையும்
ஆர்த்த காலையின் முனிவருந் தேவரும் அயர்ந்து
பார்த்த பார்த்ததோர் திசைதொறும் இரிதலும் படியைப்
போர்த்த வார்கட லாமென வளைந்தடல் புரிய.

(50. தண்டம் - தண்டனை. 51. அலமரும் - சுழலுகின்ற.
பாவகன் - அக்கினி. ஈது திற்றி - இதனைத் தின்னுவாய்.
52. சில் - தலையில் அணியும் ஓர் ஆபரணம்.
53. வார்குழை - நீண்ட காதினை. கந்துகம் - பந்து.
54. ஆளி - சிங்கம். கேளிர் - சுற்றத்தினர்.
57. காப்பினை வீட்டி - மதிலினை இடித்து. 58. சூர்த்த - அச்சம் தரும்.)

58

1445


வேறு
தியக்குற்றனர் வெருளுற்றனர் திடுக்கிட்டனர் தெருள்போய்த்
துயக்குற்றனர் பிறக்குற்றனர் தொலைவுற்றனர் மெலியா
மயக்குற்றனர் கலக்குற்றனர் மறுக்குற்றனர் மனமேல்
உயக்குற்றனர் இமையோர்களும் உயர்மாமுனி வரரும்.

59

1446

அளிக்கின்றனர் தமைத்தம்முனை அருண்மக்களை மனையைக்
களிக்கின்றதொ ரிளையோர்தமைச் சுற்றந்தனைக் கருதி
விளிக்கின்றனர் பதைக்கின்றனர் வெருக்கொண்டனர் பிணத்தூ
டொளிக்கின்றனர் அவன்வேள்வியில் உறைகுற்றதொர் மறையோர்.

60

1447

அலக்கட்படும் இமையோர்களும் அருமாமுனி வரரும்
நிலக்கட்படு மறையோர்களும் நெடுநீர்க்கட லாகக்
கலக்குற்றனர் வரையாமெனக் கரத்தாற்புடைத் துதிர்த்தார்
உலக்கிற்றிர ளாகச்சினத் துயர்மால்கரி ஒத்தே.

61

1448

முடிக்குந்திறல் பெருங்கோளரி முழங்கிற்றென முரணால்
இடிக்கின்றனர் கலைமானென இமையோர்தமை விரைவில்
பிடிக்கின்றனர் அடிக்கின்றனர் பிறழ்பற்கொடு சிரத்தைக்
கடிக்கின்றனர் ஒடிக்கின்றனர் களத்தைப்பொரு களத்தில்.

62

1449

முறிக்கின்றனர் தடந்தோள்களை முழுவென்புடன் உடலங்
கறிக்கின்றனர் அடிநாவினைக் களைகின்றனர் விழியைப்
பறிக்கின்றனர் மிதிக்கின்றனர் படுக்கின்றனர் சங்கங்
குறிக்கின்றனர் குடிக்கின்றனர் குருதிப்புனல் தனையே.

63

1450

எடுக்கின்றனர் பிளக்கின்றனர் எறிகின்றர் எதிர்போய்த்
தடுக்கின்றனர் உதைக்கின்றறர் தடந்தாள்கொடு துகைத்துப்
படுக்கின்றனர் தலைசிந்திடப் படையாவையுந் தொடையா
விடுக்கின்றனர் மடுக்கின்றனர் மிகுமூனினைப் பகுவாய்.

64

1451

நெரிக்கின்றனர் சிலர்சென்னியை நெடுந்தாள்கொடு மிதியா
உரிக்கின்றனர் சிலர்யாக்கையை ஒருசிற்சிலர் மெய்யை
எரிக்கின்றனர் மகத்தீயிடை இழுதார்கடத் திட்டே
பொரிக்கின்றனர் கரிக்கின்றனர் புகைக்கின்றனர் அம்மா.

65

1452

அகழ்கின்றனர் சிலமார்பினை அவர்தங்குடர் சூடி
மகிழ்கின்றனர் நகைக்கின்றனர் மதர்க்கின்றனர் சிவனைப்
புகழ்கின்றனர் படுகின்றதொர் புலவோர்தமைக் காணா
இகழ்கின்றனர் எறிந்தேபடை ஏற்கின்றனர் அன்றே.

66

1453

கரக்கின்றதொர் முனிவேர்களைக் கண்டேதொடர்ந் தோடித்
துரக்கின்றனர் பிடிக்கின்றனர் துடிக்கும்படி படிமேல்
திரக்குன்றுகொ டரைக்கின்றனர் தெழிக்கின்றனர் சிலவூன்
இரக்கின்றதொர் கழுகின்றொகைக் கீகின்றனர் மாதோ.

(61. அலக்கண் - துன்பம். 62. பெருங் கோளரி - பெருஞ் சிங்கம்.
களத்தை - கழுத்தை. 63. கறிக்கின்றனர் - மெல்லுகின்றனர்.
சங்கங் குறிக்கின்றனர் - வெற்றிச் சங்கு ஊதுகின்றனர்.
67. தெழிக்கின்றனர் - பேரொலி செய்கின்றனர்.)

67

1454

நெய்யுண்டனர் ததியுண்டனர் பாலுண்டனர் நீடுந்
துய்யுண்டனர் இமையோர்கடந் தொகைக்காமென உய்க்கும்
ஐயுண்டதொர் அவியுண்டனர் மகவேள்வியில் வந்தே
நையுண்டவர் உயிர்கொண்டிடு நாளுண்டவ ரெல்லாம்.

68

1455

உலகத்துக்கடை அனலைக்கடல் உவர்நீர்தணித் தெனவே
மகத்தில்திரி விதவேதியில் வைகுங்கனல் அதனை
மிகத்துப்புர வுளதென்றுகொல் வியப்பார்தம துயிரின்
அகத்துப்புனல் விடுத்தேவிரைந் தவித்தார்மகம் அழித்தார்.

69

1456

தடைக்கொண்டதொர் சிறைதோறுள சாலைக்கத வெல்லாம்
அடைக்கின்றனர் தழலிட்டனர் அவணுற்றவர் தம்மைத்
துடைக்கின்றனர் கலசத்தொடு தொடர்கும்பமும் விரைவால்
உடைக்கின்றனர் தகர்க்கின்றனர் உதிர்க்கின்றனர் உடுவை.

70

1457

தவக்ககண்டகத் தொகையார்த்திடத் தனிமாமகத் தறியில்
துவக்குண்டய ரணிமேதகு துகடீர்பசு நிரையை
அவிழ்க்கின்றனர் சிலர்கங்கையின் அலையிற்செல விடுவார்
திவக்கும்படி வானோச்சினர் சிலவெற்றினர் படையின்.

71

1458

பங்கங்கள் படச்செய்திடு பதகன்மகந் தனிற்போய்க்
கங்கங்களை முறிக்கின்றனர் கவின்சேரா மகளிர்
அங்கங்களைக் கறிக்கின்றனர் அறுக்கின்றனர் அதனை
எங்கெங்கணும் உமிழ்கின்றனர் எறிகின்றனர் எவரும்.

72

1459

படுகின்றவர் வருமூர்தியும் படர்மானமுந் தேருஞ்
சுடுகின்றனர் அவர்கொண்டிடு தொலைவில்படைக் கலமும்
இடுகுண்டல முடிகண்டிகை எவையுந்தழல் இட்டே
கடுகின்றுக ளாகப்பொடி கண்டார்திறல் கொண்டார்.

73

1460

அடிக்கொண்டதொர் மகச்சாலையுள் அமர்வேதியை அடியால்
இடிக்கின்றனர் பொடிக்கின்றனர் இருந்தோரணத் தொகையை
ஒடிக்கின்றனர் பெருந்தீயினை உமிழ்கின்றனர் களிப்பால்
நடிக்கின்றனர் இசைக்கின்றனர் நமனச்சுறுந் திறத்தோர்.

74

1461

தருமத்தினை அடுகின்றதொர் தக்கன்றனக் குறவா
மருமக்களைப் பிடிக்கின்றனர் வாயாற்புகல் ஒண்ணாக்
கருமத்தினைப் புரிகின்றனர் கரத்தாலவர் உரத்தே
உருமுற்றெனப் புடைக்கின்றனர் உமிழ்வித்தனர் அவியே.

(68. ததி - தயிர். துய் - சோறு.
69. உகத்துக் கடை அனல் - ஊழிக் காலத்துப் பிரளயாக்கினி.
திரிவித வேதி - மூவகை வேதிகை. உயிர் - இங்கு ஆண் குறி.
அகத்துப்புனல் - இங்குச் சிறுநீர். 70. உடுவை - ஆடுகளை.
71. தவக்கண்டகத்தொகை ஆர்த்திட - மிகவும் கழுத்தில் கண்ணுள்ள
மணிகள் ஒலிக்கவும்; (யாகத்திற்குரிய ஆடுகளின் கழுத்தில் உணவுக்காக,
காரை முதலிய முட்செடிகளைக் கட்டுதல் மரபு ஆதலின், ஆடுகளுக்குத்)
தவத்திற்குரிய காரை முட்செடிகளை உண்பிக்க. தவக்கண்டகத் தொகை
ஆர்த்திட்ட - மந்திர செபம் செய்தலாகிய தவத்துடன் தோயலிடப்பட்ட
வாளாயுதத்தல் அறுத்தற்கு. கண்டகம் - வாள். மகத்தறி - யூபஸ்தம்பம்.
பசு என்றது யாகத்திற்குரிய ஆடுகளை. 72. பங்கம் - இழிவு.
பதகன் - கீழ்மகன்; தக்கன். கங்கம் - பருந்து.)

75

1462

தறிக்கின்றனர் சிலதேவரைத் தலைமாமயிர் முழுதும்
பறிக்கின்றனர் சிலதேவரைப் பாசங்கொடு தறியில்
செறிக்கின்றனர் சிலதேவரைச் செந்தீயிடை வதக்கிக்
கொறிக்கின்றனர் சிலதேவரைக் கொலைசெய்திடுங் கொடியோர்.

76

1463

நாற்றிக்கினும் எறிகின்றனர் சிலர்தங்களை நல்லூன்
சேற்றுத்தலைப் புதைக்கின்றனர் சிலர்தங்களைச் செந்நீர்
ஆற்றுக்கிடை விடுக்கின்றனர் சிலர்தங்களை அண்டப்
பாற்றுக்கிரை இடுகின்றனர் சிலர்தங்களைப் பலரும்.

77

1464

இடைந்தாரையும் விழுந்தாரையும் எழுந்தாரையும் எதிரே
நடந்தாரையும் இரிந்தாரையும் நகையுற்றிட இறந்தே
கிடந்தாரையும் இருந்தாரையுங கிளர்ந்தாரையும் விண்மேல்
படர்ந்தாரையும் அவர்க்கேற்றதொர் பலதண்டமும் புரிந்தார்.

78

1465

உலக்குற்றிடு மகங்கண்டழு துளம்நொந்தனர் தளரா
மலக்குற்றிடும் அணங்கோர்தமை வலிதேபிடித் தீர்த்துத்
தலக்கட்படு மலர்ப்பொய்கையைத் தனிமால்கரி முனிவால்
கலக்கிற்றெனப் புணர்கின்றனர் கணநாதரில் சிலரே.

79

1466

குட்டென்பதும் பிளவென்பதும் கொல்லென்பதும் கடிதே
வெட்டென்பதும் குத்தென்பதும் உரியென்பதும் விரைவில்
கட்டென்பதும் அடியென்பதும் உரையென்பதும் களத்தே
எட்டென்பதொர் திசையெங்கணும் எவரும்புகல் வனவே.

80

1467

கையற்றனர் செவியற்றனர் காலற்றனர் காமர்
மெய்யற்றனர் நாவற்றனர் விழியற்றனர் மிகவும்
மையுற்றிடு களமற்றனர் அல்லாமலர் அயன்சேய்
செய்யுற்றிடு மகத்தோர்களில் சிரைவற்றவர் இலையே.

81

1468

வேறு
இத்திறம் யாரையும் ஏந்தல் தானையும்
பத்திரை சேனையும் பரவித் தண்டியா
மெத்துறும் அளைகெழு வேலை யில்பல
மத்துறு கின்றென மகத்தை வீட்டவே.

82

1469

செழுந்திரு வுரத்திடை தெருமந் துற்றிடத்
தொழுந்திறல் பரிசனந் தொலைய மாயவன்
அழுந்திடு கவலொடும் அயர்வு யிர்த்தவண்
எழுந்தனன் மகம்படும் இறப்பு நோக்கினான்.

83

1470

திருத்தகும் வேள்வியைச் சிதைவின் றாகயான்
அருத்தியிற் காத்ததும் அழகி தாலெனாக்
கருத்திடை உன்னினன் கண்ணன் வௌ¢கியே
உருத்தனன் மானநின் றுளத்தை ஈரவே.

(76. தறித்தல் - வெட்டுதல். பாசம் - கயிறு. தறி - தூண்.
77. பாற்று - பாறு - பருந்து. 78. மலக்கு - கலக்கம்.
அணங்கு - தேவமாதர். 82. ஏந்தல் - வீரபத்திரன்.
83. செழுந்திரு - இலக்குமி. உரம் - மார்பு.
84. திருத்தகும் - செல்வமிகுந்த. கண்ணன் - திருமால்.)

84

1471

பரமனை இகழ்ந்திடு பான்மை யோர்க்கிது
வருவது முறையென மனத்துட் கொண்டிலன்
தெருமரு முணர்வினன் திறல்கொள் வீரன்மேல்
பொருவது கருதினன் பொருவில் ஆழியான்.

85

1472

உன்னினன் கருடனை உடைந்த தாதலுந்
தன்னுறு சீற்றமாந் தழலை ஆங்கொரு
பொன்னிருஞ் சிறையபுள் ளரசன் ஆக்கலும்
அன்னது வணங்கியே அரிமுன் நின்றதே.

86

1473

நிற்றலும் அதன்கையின் நீல மேனியான்
பொற்றடந் தாள்வையாப் பொருக்கென் றேறியே
பற்றினன் ஐம்பெரும் படையும் வேள்வியுள்
முற்றுறு பூதர்மேல் முனிவுற் றேகினான்.

87

1474

எடுத்தனன் சங்கினை இலங்கு செந்துவர்
அடுத்திடு பவளவாய் ஆரச் சேர்த்தியே
படுத்தனன் பேரொலி பரவைத் தெண்டிரைத்
தடக்கட லுடைந்திடு தன்மை போலவே.

88

1475

மீச்செலும் அமரர்கள் புரிந்த வேள்வியந்
தீச்சிகை உதவிய சிலையை வாங்கியே
தாச்செலும் வசிகெழு சரங்கள் எண்ணில
ஓச்சினன் வீரன துரவுத் தானைமேல்.

89

1476

காளிகள் தொகைகளுங் கழுதின் ஈட்டமுங்
கூளிகள் தொகைகளுங் குழுமி யேற்றெழீஇ
வாளிகள் தொகைசொரீஇ மாயற் சூழ்வுறா
நீளிகல் புரிந்தனர் நிகரில் வன்மையார்.

90

1477

தண்டுள வலங்கலந் தடம்பொற் றோளுடை
அண்டனுந் தன்படை அனைத்து நேர்கொடு
மண்டமர் புரிதலை மற்ற எல்லையில்
கண்டனன் நகைத்தனன் கடவுள் வீரனே.

91

1473

வெருவரும் பெருந்திறல் வீரன் தண்டுழாய்
அரியொடு போர்செய ஆதி நாயகன்
திரைகடல் உலகமுற் சிறிது தானென
ஒருபெருந் தேரினை உய்த்திட் டானரோ.

(85. ஆழியான் - திருமால். ஆழியான் மனத்துட் கொண்டிலன் என்க.
86. உடைந்தது - வீரபத்திரனுக்குப் பயந்து ஓடியது. புள்ளரசன் - கருடன்.
அரி - திருமால். 89. தீச்சிகை - யாகாக்கினி. சிலை - வில்.
தாச் செலும் - தாவிச் செல்லுகின்ற. வசி - வன்மை.
90. கழுது - பேய். சொரீஇ - விடுத்து.
92. ஆதிநாயகன் - சிவபெருமான்.)

92

1479

பாயிரந் தானெனப் பகரும் வேதமா
மாயிரம் புரவிகள் அளப்பில் கேதனங்
காயிரும் படைகள்மீக் கலந்த தாகிய
மாயிருந் தேரவண் வல்லை வந்ததே.

93

1480

தேரவண் வருதலுந் திறல்கொள் வீரனால்
பாரிடை வீழ்ந்தயர் பங்க யாசனன்
ஆருயிர் பெற்றென அறிவு பெற்றெழீஇ
நேரறு மகம்படு நிகழ்ச்சி நோக்கினான்.

94

1481

அரிபொரு நிலைமையும் ஆடல் வீரன
துருகெழு செற்றமும் உம்பர் தன்னிடை
இர தம்வந் திட்டதும் யாவும் நோக்கியே
கருதினன் யானுயுங் கால மீதெனா.

95

1482

விண்ணிழி தேரிடை விரைவில் நான்முகன்
நண்ணினன் வலவனின் நகைமுட் கோல்கொடு
துண்ணென நடத்தியே தொழுது வீரனாம்
புண்ணியன் தனக்கிது புகறல் மேயினான்.

96

1483

நீறணி பவளமெய் நிமலன் நிற்கிதோர்
வீறணி தேர்தனை விரைவில் உய்த்தனன்
தேறலர் தமையடுந் திறல்கொள் வீரநீ
ஏறுதி துணைவியோ டென்று போற்றினான்.

97

1484

போற்றினன் இரத்தலும் பொருவில் வேதன்மேல்
சீற்றமுள் ளதிலொரு சிறிது நீங்கியே
ஆற்றல்கொள் வீரன்எம் மன்னை தன்னுடன்
ஏற்றமொ டதன்மிசை இமைப்பின் மேவினான்.

98

1485

மேவிய காலையில் வெலற்க ருந்திறல்
சேவக அடியனேன் திறத்தைக் காண்கெனத்
தாவகல் தேரினைத் தண்டு ழாய்முடிக்
காவலன் முன்னுறக் கடாவி உய்ப்பவே.

99

1486

வரனுறு நான்முக வலவன் உய்த்திடு
திருமணித் தேர்மிசைத் திகழ்ந்த வீரன்முன்
ஒருதனி வையமேல் உம்பர்க் காகவே
புரமட வருவதோர் புராரி போன்றனன்.

100

1487

எல்லையில் பெருந்திறல் இறைவன் ஏறுதேர்
அல்லியங் கமலமேல் அண்ணல் உய்த்திடச்
சொல்லருந் தானையின் தொகையை நீக்கியே
வல்லைசென் றிறுத்ததம் மாயன் முன்னரே.

(93. கேதனம் - கொடி. 95. உம்பர் தன்னிடை - ஆகாயத்தில்.
97. போற்றினான் - (பிரமன்) வணங்கினான்.
98. ஏற்றமொடு - கவுரவத்துடன்.
99. தாஅகல் - குதிரைகளை மிகுதியாகப் பூட்டிய.
தா - பாய்தல்; குதிரை : ஆகுபெயர். 100. வலவன் - சாரதி.
புராரி - சிவபெருமான். 101. அல்லி - அகவிதழ்.)

101

1488

பாருல களவினும் பரந்த பைம்பொனந்
தேரவண் எதிர்தலுந் திருவு லாவிய
காருறழ் மேனியங் கண்ணன் கண்ணுதல்
வீரனை நோக்கியோர் மொழிவி ளம்பினான்.

102

1489

வேறு
தெழித்த வார்புனற் கங்கையஞ் சடைமுடிச் சிவனைப்
பழித்த தக்கனை அடுவதல் லாலவன் பாலில்
இழுக்கில் தேவரை அடுவதென் வேள்வியை எல்லாம்
அழித்த தென்னைநீ புகலுதி யாலென அறைந்தான்.

103

1490

பாடல் சான்றிடு மாலிது புகறலும் பலரும்
நாடு தொல்புகழ வீரன்நன் றிதுவென நகையா
ஈடு சேர்இமில் ஏற்றுடன் வயப்புலி யேறொன்
றாடல் செய்தல்போல் ஒருமொழி உரைத்தனன் அன்றே.

104

1491

எல்லை இல்லதோர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும்
மல்லல் வேள்வியில் அவிநுகர்ந் தோர்க்கெலாம் மறைமுன்
சொல்லுந் தண்டமே புரிந்தனன் நின்னையுந் தொலைப்பாம்
வல்லை யேல்அது காத்தியென் றனன்உமை மைந்தன்.

105

1492

வீரன் இங்கிது புகறலுஞ் செங்கண்மால் வெகுண்டு
பார வெஞ்சிலை குனித்தனன் நாணொலி படுத்தி
யாரும் விண்முகில் ஒன்றுதன் வில்லொடும் அப்பு
மாரி பெய்தெனப் பகழியால் பூதரை மறைத்தான்.

106

1493

கணங்கள் தம்மிசை மால்சரம் பொழிதலுங் காணூஉ
அணங்கு தன்னொடு நகைசெய்து வீரனாம் அமலன்
பணங்கொள் ப·றலைப் பன்னகக் கிறைவனாற் படைத்த
குணங்கொள் மேருவே அன்னதோர் பெருஞ்சிலை குனித்தான்.

107

1494

செற்ற மீக்கொள ஐயன்வில் வாங்கினன் சிறிதே
பற்றி நாணொலி எடுத்தலும் ஒடுங்கின பரவை
பொற்றை யாவையுங் கீண்டன துளங்கின புவனம்
இற்றை வைகலோ இறுதியென் றயர்ந்தனர் எவரும்.

108

1495

கோளி லாகிய புற்றிடை ஓரராக் குறுகி
மீளில் வெஞ்சினக் குழவிகொண் டேகலின் வீரன்
தோளில் வாங்கிய சிலையினில் தூணியில் துதைந்த
வாளி வாங்கியுய்த் தொருதனி மாயனை மறைத்தான்.

109

1496

செங்க ணான்தனை மறைத்தபின் மற்றவன் செலுத்துந்
துங்க வெங்கணை யாவையும் பொடிபடத் தொலைப்ப
அங்கொ ராயிரம் பகழியை ஐதெனப் பூட்டி
எங்கள் நாயகன் திருமணிப் புயத்தின்நேர் எய்தான்.

110

1497

எய்யும் வெங்கணை யாவையும் வீரருள் இறையாம்
ஐயன் ஆசுகம் ஆயிரம் ஓச்சினன் அகற்றி
ஒய்யெ னக்கரி யோன்நுதல் மீமிசை ஒருதன்
வெய்ய பொத்திரம் ஏவினன் அவனுளம் வெருவ.

111

1497

ஏவு தொல்கணை மாயவன் நுதலிடை இமைப்பின்
மேவு கின்றுழி அனையவன் தளர்தலும் வீரன்
வாவு தேர்மிசை ஊன்றினன் சிலையைவார் கணையுந்
தூவு கின்றிலன் மாலிடர் நீங்குறுந் துணையும்.

112

1497

இன்னல் அத்துணை யகன்றுமால் எதிர்தலும் எமது
மன்னும் நேர்ந்தனன் இருவரும் வரிசிலை வளையாப்
பொன்னின் வாளிகள் பொழிந்தனர் முறைமுறை பொருதார்
அன்ன பான்மையர் செய்தபோர் யாவரே அறைவார்.

113

1497

மாறு கொண்டபோர் இவ்வகை புரிதலும் வயத்தால்
வீறு கொண்டுயர் முக்கணான் வெய்யதீ வடவைக்
கூறு கொண்டதோர் படையினை ஓச்சலுங் குவட்டில்
ஏறு கொண்டலை அனையவன் உரத்தில்எய் தியதே.

114

1501

எய்து காலையில் உளம்பதை பதைத்திட இரங்கி
வெய்து யிர்ப்புடன் உணர்வொரீஇ உளம்நனி மெலிந்து
நொய்தின் மையலை நீங்கலும் முகுந்தனை நோக்கிச்
செய்தி போரென உரைத்தனன் சரபமாந் திறலோன்.

115

1502

மெய்வ தத்தினை யாவர்க்கும் விரைவினில் இழைக்குந்
தெய்வ தப்படை முழுவதுஞ் செங்கண்மால் செலுத்த
அவ்வ னைத்தையும் அனையஅப் படைகளால் அகற்றிக்
கவ்வை முற்றினன் நுதல்விழி அளித்திடுங் கடவுள்.

116

1503

வேறு
தேன்றிகழ் பங்கயத் திருவின் நாயகத்
தோன்றல்தன் படைக்கலந் தூண்ட எங்கணுஞ்
சான்றென நின்றவன் தனயன் வீரமாம்
வான்திகழ் படைதொடா வல்லை மாற்றவே.

117

1504

பொருகணை அளப்பில பொழிய மாற்றியோர்
சரமது செலுத்திமால் சார்ங்கம் ஒன்றையும்
இருதுணி படுத்தினன் இறைவன் மைந்தனே.

114. கொண்டலை அனையவன் - திருமால்.
115. சரபமாம் திறலோன் - வீரபத்திரன்.
சரபம் - எண் கால்களையுடைய ஒரு பறவை.
116. மெய்வதம் - உடல் அழிவு. கவ்வை - அட்டகாசம்;
பேரொலியுமாம். 118. சார்ங்கம் - சாரங்கம் - வில்;
இது திருமால் வில்.)

118

1505

பின்னுமத் துணைதனில் பெருந்தி றற்பெயர்
முன்னவன் இருகணை முறையின் ஓச்சியே
பன்னக மிசைத்துயில் பகவன் ஊர்திதன்
பொன்னிருஞ் சிறையினைப் புவியில் வீட்டினான்.

119

1506

ஆயதோர் அமைதியில் ஆழி யங்கையான்
மாயவன் ஆதலின் வரம்பில் கண்ணரை
மேயின காதலின் விதிப்ப வீரன்முன்
பாயிருள் முகிலெனப் பரம்பி னாரரோ.

120

1507

அங்கவர் யாரையும் அமலன் வெய்யகட்
பொங்கழல் கொளுவிநுண் பொடிய தாக்கலும்
பங்கய விழியினான் பரமன் அன்றருள்
செங்கையில் ஆழியைச் செல்கென் றேவினான்.

121

1508

விடுத்ததோர் திகிரியை வீரன் அங்கையால்
பிடித்தவண் விழுங்கினன் பெயர்த்து மாயவன்
எடுத்திடு கதையினை எறிய அன்னது
தடுத்தனன் தனதுகைத் தடம்பொற் றண்டினால்.

122

1509

வேறு
சங்கார் செங்கைப் புங்கவன் ஏவுந் தண்டம்போய்
மங்கா அங்கண் வீழ்வது காணா வாள்வாங்கிப்
பொங்கா நின்றே உய்த்திட எய்தும் பொழுதின்கண்
உங்கா ரஞ்செய் திட்டனன் அம்மா உமைமைந்தன்.

123

1510

ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ்
செய்யுங் காலத் தோவியம் என்னச் செயனீங்கிக்
கையும் வாளு மாய்அவண் நின்றான் கடலூடே
வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன்.

124

1511

சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை
மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த
ஆன்றதொர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே
தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே.

125

1512

அந்தர மீதே வந்திடு சொல்லங் கதுகேளா
எந்தை மனங்கொள் வெஞ்சினம் நீங்கி யிடுபோழ்தில்
அந்தின் மணித்தேர் உய்த்திடு பாகன் அதுநோக்கி
வந்தனை செய்தே போற்றியொர் மாற்றம் வகுப்பானால்.

125

(120. வரம்பில் கண்ணரை - அளவற்ற திருமால்களை.
121. பங்கயவிழியினான் - திருமால்.
126. அந்தரமீதே வந்திடு சொல் - அசரீரி.

126

1513


வேறு
அறத்தினை யொருவிச் செல்லும் அழிதகன் உலக மெல்லாம்
இறத்தலை யெய்த இங்ஙன் இயற்றிய மகத்தின் மேவிப்
பெறத்தகும் அவியை நுங்கும் பேதையேன் பிழையை யெல்லாம்
பொறுத்தனை கொண்மோ என்னாப் பொன்னடிக் கமலம் பூண்டான்.

127

1514

பூண்டிடும் உலகந் தந்த புங்கவன் தன்னை நோக்கி
ஆண்டகை வீரன் அ·தே ஆகவென் றருள லோடும்
நீண்டதோர் மாயன் அன்னான் நீடருள் நிலைமை காணூஉ
ஈண்டிது காலம் என்னா ஏத்தினன் இயம்ப லுற்றான்.

128

1515

பாரவெஞ சிலையும் வீட்டிப் பல்படைக் கலமுஞ் சிந்திச்
சேரலர் உயிர்கள் உண்ட திகிரியுஞ் செல்ல நுங்கிப்
போரிடை எனையும் வென்று புகழ்புனைந் திடுதி யென்றால்
வீரநின் றகைமை யாரே முடிவுற விளம்ப வல்லார்.

129

1516

ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகன் இயற்று கின்ற
பூசனை விரும்பி வேள்வி புகுந்தனன் புந்த யில்லேன்
மாசறு புகழாய் நின்னால் மற்றிது பெற்றேன் அந்தோ
ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எணணம் மிக்கோர்.

130

1517

ஆதிநா யகனை ஒல்லார் அனையவர்ச் சேர்ந்தார்க் கெல்லாம்
வேதமே இசையா நிற்கும் வியன்பெருந் தண்டம் அன்றோ
ஈதெலாம் எம்ம னோர்பால் இயற்றிய இனைய தன்மை
நீதியால் எம்பால் அன்றி நின்கணோர் குறையும் உண்டோ.

131

1518

விழிதனில் முறுவல் தன்னில் செய்துயிர்ப் பதனில் ஆர்ப்பின்
மொழிதனில் புவன மெல்லா முதலொடு முடிக்க வல்லோய்
பழிபடு வேள்வி தன்னில் பலரையும் படையி னோடும்
அழிவுசெய் திட்ட தம்மா அடிகளுக் காடல் அன்றோ.

132

1519

உறுநர்தந் தொகைக்கு வேண்டிற் றுதவிய முதல்வன் ஏவும்
முறையதை உன்னி வேள்வி முடிப்பதோர் ஆடல் ஆகச்
சிறிதெனும் அளவை தன்னில் சிதைத்தனை அன்றி எந்தாய்
இறுதிசெய் திடநீ யுன்னின் யார்கொலோ எதிர்க்கும் நீரார்.

133

1520

இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
அறைதரு சத்தி நான்காம் அரன்தனக் கையை காளி
முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியும் மறைகள் பேசும்.

1343

1521

அன்னதோர் பரிசால் ஈசன் அரும்பெருஞ் சத்தி என்னில்
பின்னமன் றவற்கி யானும் ரெ¤துமன் புடையேன் முக்கண்
முன்னவன் தன்பால் ஈண்டென் மொய்ம்புடன் இழந்த நேமி
இன்னுமங் கவன்தாள் அர்ச்சித் திமைப்பினில் எய்து கின்றேன்.

133

(129. நுங்கி - விழுங்கி. 121. ஒல்லார் - பகைத்தவர்.
132. ஆர்ப்பு - அட்டகாசம். முதலொடு அடியொடு.
133. உறுநர் - அடியடைந்த அன்பர்.
134. இறுதிசெய்திடல், சீற்றம், இன்பம், ஆண்மை இவை
நான்கும் இறைவனுக்கு துர்க்கை, காளி, கௌரி, திருமால்
என்னும் சக்திகளாகும். யான் - இங்குத் திருமால்.)

135

1522

முனிவுடன் அடிகள் ஈண்டு முறைபுரிந் ததனுக் கின்னல்
மனனிடை கொள்ளேன் இன்னான் மற்றிது பெறுத லாலே
புனிதமாக் கொள்வன் தண்டம் புரிந்தனை பொறுத்தி குற்றம்
இனியருள் புரிதி என்னா இணையடி இறைஞ்ச லோடும்.

136

1523

வீரருள் வீரன் மாலோன் விளம்பிய மாற்றங் கேளா
நாரணற் கன்பு செய்து நணியதோர் காலை தன்னில்
பாரிடஞ் சூழ நந்தி பரவிட உமையா ளோடு
மூரிமால் விடை மேற் கொண்டு தோன்றினன் முடிவிலாதான்.

137

1524

தேங்கிய கங்கை சூடுஞ் செஞ்சடைக் கடவுள் தோன்ற
ஆங்கது தெரிந்த வீரன் அச்சமோ டங்கை கூப்பிப்
பாங்குற நிற்ப மாலும் பங்கயத் தயனுந் தாழா
நீங்கிய தாயை நேருங் குழவியின் நிலைய ரானார்.

138

1525

கண்டனன் கவுரி வேள்விக் களத்திடைக் கழலுங் கையும்
துண்டமும் தலையும் மார்பும் தோள்களும் துணிந்து வீழ
அண்டருந் தக்கன் தானும் ஆவிபோய்க் கிடந்த தன்மை
கொண்டதோர் சீற்றம் நீங்கி அருள்வரக் கூறு கின்றாள்.

139

1526

வேறு
பொன்னார் சடையெம் புனிதன்தனை நோக்கி
முன்னா கியபொருட்டு முன்னோனே வேள்விக்கு
மன்னா னவற்கும் இமையோர்க்கும் மற்றெவர்க்கும்
என்னால் முடிவெய்திற் றென்றுரைக்கும் இவ்வுலகே.

140

1527

மற்ற வர்கள்புந்தி மயக்குற் றுனதுதொல்சீர்
சற்று முணராது தவறுசெய்த தன்மையினால்
செற்ற மிகுவீரத் திருமகனால் இஞ்ஞான்று
பெற்றன ரேயன்றோ பெறத்தக்க தோர்பரிசே.

141

1528

முந்தும் இவரை முடித்தியென வெ·தியதும்
தந்து முடித்தாய் தனிவீர னாலனையர்
உய்ந்து குறைபோய் உயிர்பெற் றெழும்வண்ணம்
இந்த வரமும் எனக்கருளாய் எங்கோவே.

142

1529

என்று தொழுதாங் கெமையுடையாள் கூறுதலும்
நன்றுன் னருளென்று நகைசெய்து தன்பாங்கர்
நின்ற திறலோனை நேர்நோக்கி இம்மாற்றம்
ஒன்று பகர்ந்தான் உயிர்க்குயிராய் உற்றபிரான்.

143

1530

ஈண்டை மகத்தில் எமையிகழந்து நின்சினத்தான்
மாண்டு சிதைவுற்ற வலியிலோர் தம்முயிரை
மீண்டு அளித்துருவு மேனா ளெனப்புரிதி
ஆண்டகை நீயென்றே அரனருளிச் செய்தலுமே.

(137. முடிவிலாதான் - அழிவில்லாத சிவபெருமான்.
139. கழலும் - காலும். துண்டம் - மூக்கு. துணிந்து - துண்டுபட்டு.
142. முந்தும் - முன்னரும். முடித்தி - அழித்தி.)

144

1531

வீர னதற்கிசைந்து மேனா ளெனஇறந்தீர்
யாரும் எழுதி ரெனஉரைப்ப வானவர்கள்
சோரு முனிவர் மறையோர் துயிலுணர்ந்த
நீர ரெனஉயிர்வந் தெய்த நிலத்தெழுந்தார்.

145

1532

தண்டம் இயற்றுந் தனிவீர னாற்சிதைந்த
பிண்ட முழுதுருவும் பெற்றார் மகம்புக்கு
விண்ட செயலுமுயிர் மீண்டதுவுங் கங்குலிடைக்
கண்ட புதிய கனவுநிலை போலுணர்ந்தார்.

146

1533

அந்தண் முனிவோர் அனைவோரும் வானவரும்
இந்திர னேயாதி இமையோர் களும்வெருவிச்
சிந்தை மருண்டு சிவனை இகழ்ந்ததனால்
வந்த பழியுன்னி வருந்திமிக வௌ¢கினரால்.

147

1534

பாணார் அளிமுரலும் பைந்தார் புனைவீரன்
மாணா கத்தன்னோர் மருங்காகத் தேவியுடன்
பூணார் அரவப் புரிசடையெம் புண்ணியனைச்
சேணார் ககனந் திகழுஞ் செயல்கண்டார்.

148

1535

துஞ்சல் அகன்ற சுரரும் முனிவரரும்
நஞ்ச மணிமிடற்று நாயகனைக் கண்ணுற்றே
அஞ்சி நடுங்க அதுகண் டெவர்இவர்க்குத்
தஞ்சம் எமையல்லால் என்றுதள ரேலென்றான்.

149

1536

என்றாங் கிசைத்த இறைவன் அருள்நாடி
நன்றா லிதென்று நனிமகிழ்ந்து முன்னணித்தாய்ச்
சென்றார் தொழுதார் திசைமுகன்மா லாதியராய்
நின்றார் எவரும் நெறியால் இவைஉரைப்பார்.

150

1537

சிந்தை அயர்வுற்றுச் சிறுவிதிதன் வேள்விதனில்
எந்தை நினையன்றி இருந்தேங்கள் கண்முன்னும்
வந்து கருணை புரிந்தனையால் மைந்தர்க்குத்
தந்தை யலது பிறிதொருவர் சார்புண்டோ.

151

1538

அற்றமில் அன்பில்லா அடியேங்கள் பாலடிகள்
செற்ற மதுபுரியிற் செய்கைமுத லானசெயல்
பற்றி முறைசெய் பதமுளதோ அஞ்சலென
மற்றொர் புகலுளதோ மன்னுயிருந் தானுளதோ.

152

1539

வேதத் திறங்கடந்த வேள்விப் பலியருந்தும்
பேதைச் சிறியேம் பெரும்பகலுந் தீவினையில்
ஏதப் படாமே இமைப்பி லதுதொலைத்த
ஆதிக் கெவன்கொல் அளிக்கின்ற கைம்மாறே.

(147. அம் - அழகிய. தண் - தண்ணளியினையுடைய.
உன்னி - நினைத்து. வௌ¢கினர் - வெட்கமுற்றார்கள்.
149. துஞ்சல் - இறத்தல். 152. அற்றம் - அழிவு.
இல் - இல்லாத. செய்கை முதலான செயல் - படைப்பு முதலிய
தொழில்கள். 153. வேள்விப்பலி - அவி.)

153

1540

இங்குன் னடிபிழைத்தோம் எல்லோரும் வீரனெனுஞ்
சிங்கந்தன் கையாற் சிதைபட்ட வாறெல்லாம்
பங்கங்கள் அன்றே பவித்திரமாய் மற்றெங்கள்
அங்கங் கட்கெல்லாம் அணிந்த அணியன்றோ.

154

1541

கங்கை முடித்ததுவுங் காய்கனலை ஏந்தியதும்
வெங்கண் மிகுவிடத்தை மேனாள் அருந்தியதும்
நங்கை யுமைகாண நடித்ததுவும் முற்பகலும்
எங்கண் மிசைவைத்த அருளன்றோ எம்பெருமான்.

155

1542

ஐய பலவுண் டறிவிலேம் நின்றனக்குச்
செய்ய வருபிழைகள் சிந்தைமிசைக் கொள்ளாமல்
உய்யும் வகைபொறுத்தி உன்னடியேம் என்றலுமே
தைய லொருபங்கன் தணிந்தனமால் அ·தென்றான்.

156

1543

ஏற்றுத் தலைவன் இயம்புந் திருவருளைப்
போற்றித் தொழுதுதம் புந்தி தளிர்ப்பெய்திக்
கூற்றைத் தடிந்த குரைகழற்றாள் முன்னிறைஞ்சித்
தேற்றத் துடன்பாடி யாடிச் சிறந்தனரே.

157

1544

அன்ன பொழுதத் தயன்முதலாந் தேவர்கள்மேல்
உன்ன அரிய ஒருவனருட் கண்வைத்து
நுந்நும் மரசும் நுமக்கே அளித்தனமால்
முன்ன ரெனவே முறைபுரிதி ரென்றுரைத்தான்.

158

1545

மாலயனே யாதியராம் வானவர்கள் எல்லோரும்
ஆல மிடற்றண்ணல் அருளின் திறம்போற்றி
ஏல மகிழ்வெய்த இறந்தெழுந்தோர் தங்குழுவில்
சீலமிலாத் தன்மகனை காணான் திசைமுகனே.

159

1546

மாண்டதொரு தக்கன் வயவீரன் தன்னருளால்
ஈண்டுசனந் தன்னோ டெழாவச் செயல்நோக்கிக்
காண்டகைய நாதன் கழலிணைமுன் வீழ்ந்திறைஞ்சி
ஆண்டு கமலத் தயன்நின் றுரைக்கின்றான்.

160

1547

வேறு
ஐயநின் வாய்மை எள்ளி அழல்கெழும் மகத்தை யாற்றுங்
கையன தகந்தை நீங்கக் கடிதினில் தண்டஞ் செய்து
மையுறு நிரயப் பேறு மாற்றினை அவனும் எம்போல்
உய்யவே அருளு கென்ன உமாபதி கருணை செய்தான்.

(154. பங்கங்கள் அன்றே - குற்றங்கள் அன்றாம்.
பவித்திரம் - பரிசுத்தம். 157. ஏற்றுத்தலைவன் - சிவபெருமான்.
159. திசைமுகன் தன் மகனைக் காணான் - பிரமன் தன் மகனான
தக்கனைக் கண்டிலன். 160. மாண்ட - இறந்த. ஆண்டு - அங்கே.
161. கையன் - கீழ்மகனான தக்கன்.)

161

1548

இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை
அறைகழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப
பொறியுள தென்று தக்கன் புன்றலை புகுத்த வுன்னாக்
குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான்.

162

1549

வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர்
உய்த்தலும் அதன்மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த
மைத்தலை கண்ட சேர்த்தியெழு கென்றான் மறைகள் போற்றும்
அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா.

163

1550

என்றலும் உயிர்பெற் றங்கண் எழுந்தவத் தக்கன் முன்னம்
நின்றதோர் வீரற் கண்டு நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்
தன்றக விழந்து பெற்ற தலைகொடு வணங்கி நாணி
அன்றுசெய் நிலைமை நாடி அரந்தையங் கடலுட் பட்டான்.

164

1551

அல்லல்கூ£ந் திரங்கு கின்ற அசமுகன் அடல்வௌ¢ ளேற்றின்
மெல்லிய லோடு முற்ற விமலன் துருவங் காணூஉ
ஒல்லென வெருக்கொண் டாற்ற உற்றனன் அச்ச மற்றவ்
வெல்லையில் இறைவன் தக்கா அஞ்சலை இனிநீ என்றான்.

165

1552

அஞ்சலென் றருள லோடும் அசமுகத் தக்கன் எங்கோன்
செஞ்சரன் முன்னர்த் தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை
நெஞ்சினும் அளக்கொ ணாதால் நினைதொறுஞ் சுடுவ தையா
உஞ்சனன் அவற்றை நீக்கி உனதருள் புரிந்த பண்பால்.

166

1553

அடியனேன் பிழைத்த தேபோல் ஆர்செய்தார் எனினும் என்போல்
படுவதே சரத மன்றோ பங்கயத் தயனை நல்கும்
நெடியவன் துணையென் றுன்னி நின்பெரு மாயை யாலே
அடிகளை இகழ்ந்தேன் யாதும் அறிகிலேன் சிறியேன் என்றான்.

167

1554

காலையங் கதனில் அம்மை காளிதன் னோடு போற்றிப்
பாலுற நின்ற வீர பத்திரன் தனைவம் மென்றே
வேலவன் றேவி யென்ன வெரிந்புறம் நீவி அன்னார்க்
கேலநல் வரங்கள் ஈந்தாள் ஈசனுக் கன்பு மிக்காள்.

168

1555

மீத்தகு விண்ணு ளோரும் வேள்வியந் தேவும் மாலும்
பூத்திகழ் கமலத் தோனும் புதல்வனு முனிவர் தாமும்
ஏத்தினர் வணங்கி நிற்ப எம்மையா ளுடைய முக்கண்
ஆத்தனங் கவரை நோக்கி இவைசில அருளிச் செய்வான்.

169

1556

வம்மினோ பிரம னாதி வானவர் மகஞ்செய் போழ்தில்
நம்மைநீர் இகழ்ந்தி யாரு நவைபெறக் கிடந்த தெல்லாம்
உம்மையில் விதியாந் தண்டம் உமக்கிது புரிந்த வாறும்
இம்மையின் முறையே நாணுற் றிரங்கலீர் இதனுக் கென்றான்.

170

(162. தாழாப் பொறியுளது - குறையாத அடையாளம் உளது;
கெடாத குறிப்பு ஒன்றுளது எனினுமாம்.
பானு கம்பன் - சிவகணங்களில் ஒருவன்.
163. வீந்த - இறந்த. மைத்தலை - ஆட்டின் தலை.
165. அசமுகன் - ஆட்டு முகத்தனான தக்கன்.
167. சரதம் - உண்மை. நெடியவன் - திருமால்.
168. வேலவன் தேவி என்ன - குமரக் கடவுளையும் அவன்
தேவியையும் போல. வெரிந் - முதுகு. நீவி - தடவி.
169. வேள்வியந் தேவும் - யாகத் தெய்வமும்.)

1557


வேறு
இனைத்தருள் புரிதலும் எண்ண லாரையும்
நினைத்தருள் புரிதரு நிமலன் தாள்தொழாச்
சினத்தொடு மகத்தைமுன் சிதைத்து ளோனையும்
மனத்தகும் அன்பினால் வணங்கிப் போற்றவே.

171

1558

வீரரில் வீரனும் விசய மேதகு
நாரியும் அயல்வர நந்தி முன்செலப்
பாரிடம் எங்கணும் பரவ மாதொடே
போரடல் விடையினான் பொருக்கென் றேகினான்.

172

1559

கயிலையி லேகியே கவுரி யோடரன்
வியனகர் மன்றிடை வீற்றி ருந்துழி
வயமிகு வீரற்கு வான மேக்குற
இயலுமோர் பதமளித் திருத்தி யாங்கென.

173

1560

இருவர்தந் தாளையும் இறைஞ்சி அன்னவர்
தருவிடை பெற்றன னாகித் தக்கன
துரியதோர் மகம்அடும் உலப்பில் பூதர்கள்
திரைகட லாமெனத் திசைதொ றீண்டவே.

174

1561

தந்தைமுன் விடுத்ததோர் தடம்பொற் றேரயல்
வந்ததங் கதன்மிசை வயங்கொள் ஆடலான்
பைந்தொடி யொடும்புகாப் பானு கம்பன
துந்திட அரனருள் உலகிற் போயினான்.

175

1562

போயினன் அதனிடைப் பொருவில் தொல்பெருங்
கோயிலின் எய்தியே குழுக்கொள் சாரதர்
மேயினர் சூழ்தர வீர பத்திரன்
ஏயதோர் துணைவியோ டினிது மேவினான்.

176

(172. விசயமே தகு நாரி - பத்திரகாளி. 173. பதம் - பதவி.
174. இருவர் - உமாதேவியும் சிவபெருமானும் ஆகிய இருவர்.
175. பானு கம்பன் அது உந்திட - பானு கம்பன் சாரதித் தொழில் செய்ய.)

ஆகத் திருவிருத்தம் - 1562

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home