campantar tEvAram  
tirumuRai
1 part II
  (verses 722 -1469)
   திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த  
 தேவாரப் பதிகங்கள்  
 முதல் திருமுறை - இரண்டாம் பகுதி 
	-
 பாடல்கள்  (722 - 1469) 
 
 
 
  
 
	
		Acknowledgements: Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues, 
		Institute of Indology and Tamil Studies, Univ of Koeln   Germany. 
		Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a 
		Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. 
	Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland 
		? Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of 
		electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
		Details of Project Madurai are available at the website 
		http://www.projectmadurai.org/ 
		You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. 
	 
 
  
 
 
     
 
1.67 திருப்பழனம்        
பண் - தக்கேசி   
 
 
| 
 722    | 
 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப் 
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார் 
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று 
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.      
        | 
	 1.67.1  |  
 
 723  | 
 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப் 
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால் 
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும் 
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.       
         | 
 1.67.2
   | 
 724  | 
 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் 
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன் 
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய் 
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.         
           | 
 1.67.3
   | 
 725  | 
 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில் 
இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப் 
பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும் 
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.   
     | 
 1.67.4
   | 
 726  | 
 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல் 
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி 
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப் 
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.              
                | 
 1.67.5
   | 
 727  | 
 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா 
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார் 
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின் 
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.              
                | 
 1.67.6
   | 
 728  | 
 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி 
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார் 
கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும் 
பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.   
     | 
 1.67.7
   | 
 729  | 
 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள் 
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார் 
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும் 
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.  
    | 
 1.67.8
   | 
 730  | 
 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண் 
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய 
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத 
படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.        
          | 
 1.67.9
   | 
 731  | 
 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை 
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட 
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு 
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.  | 
 1.67.10
   | 
 732  | 
 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள் 
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன் 
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை 
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.      
        | 
 1.67.11
  |  
 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.  
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்,    தேவியார் - பெரியநாயகியம்மை.  
   திருச்சிற்றம்பலம் 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
 
1.68 திருக்கயிலாயம்
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 733  | 
 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில் 
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர் 
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல் 
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.         
           | 
	 1.68.1  |  
 
 734  | 
 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை 
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார் 
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த 
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.              
                | 
 1.68.2
   | 
 735  | 
 மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல் 
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந் 
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர் 
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.    
      | 
 1.68.3
   | 
 736  | 
 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன் 
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார் 
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு 
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.    
      | 
 1.68.4
   | 
 737  | 
 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார் 
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந் 
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக் 
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.       
         | 
 1.68.5
   | 
 738  | 
 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் 
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும் 
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த 
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.      
        | 
 1.68.6
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.   
     | 
 1.68.7
   | 
 734  | 
 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால் 
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார் 
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக் 
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.   
     | 
 1.68.8
   | 
 740  | 
 ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம் 
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம் 
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக் 
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.      
        | 
 1.68.9
   | 
 741  | 
 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர் 
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய் 
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள் 
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.              
                | 
 1.68.10
   | 
 742  | 
 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன் 
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல் 
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல் 
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.              
                | 
 1.68.11
  |  
 
சுவாமிபெயர் - கயிலாயநாதர்,  தேவியார் - பார்வதியம்மை.  
   திருச்சிற்றம்பலம் 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
 
1.69 திரு அண்ணாமலை
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 743  | 
 
 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் 
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார் 
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும் 
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.               
                 | 
	 1.69.1  |  
 
 744  | 
 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார் 
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும் 
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி 
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.      
        | 
 1.69.2
   | 
 745  | 
 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் 
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும் 
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண் 
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.       
         | 
 1.69.3
   | 
 746  | 
 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் 
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார் 
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம் 
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.    
      | 
 1.69.4
   | 
 747  | 
 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் 
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார் 
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம் 
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.  | 
 1.69.5
   | 
 748  | 
 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார் 
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில் 
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத 
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.       
         | 
 1.69.6
   | 
 749  | 
 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு 
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில் 
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல் 
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.      
        | 
 1.69.7
   | 
 750  | 
 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் 
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார் 
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட 
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.     
       | 
 1.69.8
   | 
 751  | 
 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை 
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு 
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென் 
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.  
    | 
 1.69.9
   | 
 752  | 
 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும் 
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள் 
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில் 
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.       
         | 
 1.69.10
   | 
 753  | 
 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை 
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன் 
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று 
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.      
        | 
 1.69.11
  |   
 
   திருச்சிற்றம்பலம் 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
      
 
1.70 திரு ஈங்கோய்மலை
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 754  | 
 
 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் 
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக் 
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த 
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.             
               | 
	 1.70.1  |  
 
 755  | 
 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் 
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே 
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார் 
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.               
                 | 
 1.70.2
   | 
 756  | 
 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் 
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு 
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார் 
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.  | 
 1.70.3
   | 
 757  | 
 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் 
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப் 
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் 
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.    
      | 
 1.70.4
   | 
 758  | 
 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார் 
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப் 
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும் 
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.  | 
 1.70.5
   | 
 759  | 
 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும் 
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ் 
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை 
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.   
     | 
 1.70.6
   | 
 760  | 
 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை 
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு 
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும் 
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.   
     | 
 1.70.7
   | 
 761  | 
 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய 
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால் 
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த 
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.  
    | 
 1.70.8
   | 
 762  | 
 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும் 
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி 
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ 
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.  | 
 1.70.9
   | 
 763  | 
 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும் 
மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும் 
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி 
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.  | 
 1.70.10
   | 
 764  | 
 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள் 
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன் 
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன் 
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.       
         | 
 1.70.11
  |   
 
   திருச்சிற்றம்பலம் 
 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
      
 
1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 765  | 
 
 765 
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர் 
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர் 
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச் 
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.  
    | 
	 1.71.1  |  
 
 766  | 
 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே 
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக் 
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச் 
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.            
              | 
 1.71.2
   | 
 767  | 
 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் 
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் 
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக் 
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                
                  | 
 1.71.3
   | 
 768  | 
 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி 
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர் 
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ் 
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                 
                   | 
 1.71.4
   | 
 769  | 
 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் 
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே 
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச் 
சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.         
           | 
 1.71.5
   | 
 770  | 
 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை 
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந் 
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந் 
தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.            
              | 
 1.71.6
   | 
 771  | 
 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் 
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர் 
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக் 
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.             
               | 
 1.71.7
   | 
 772  | 
 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை 
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி 
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார் 
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.          
            | 
 1.71.8
   | 
 773  | 
 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய் 
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும் 
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன 
செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.         
           | 
 1.71.9
   | 
 774  | 
 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் 
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள் 
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச் 
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.            
              | 
 1.71.10
   | 
 775  | 
 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை 
செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை 
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன் 
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.                       
                         | 
 1.71.11
  |   
    திருச்சிற்றம்பலம் 
 
  
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
      
 
1.72 திருக்குடந்தைக்காரோணம் 
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 776  | 
 
 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை 
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண் 
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற் 
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.      
        | 
	 1.72.1  |  
 
 777  | 
 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும் 
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக் 
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங் 
கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.              
                | 
 1.72.2
   | 
 778  | 
 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் 
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின் 
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார் 
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.   
     | 
 1.72.3
   | 
 779  | 
 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந் 
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின் 
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார் 
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே. 
   | 
 1.72.4
   | 
 780  | 
 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் 
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக் 
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை 
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே. 
   | 
 1.72.5
   | 
 781  | 
 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி 
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில் 
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக் 
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.               
                 | 
 1.72.6
   | 
 782  | 
 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை 
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை 
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற் 
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.              
                | 
 1.72.7
   | 
 783  | 
 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும் 
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும் 
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங் 
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.            
              | 
 1.72.8
   | 
 784  | 
 கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய் 
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார் 
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற் 
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.           
             | 
 1.72.9
   | 
 785  | 
 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் 
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ் 
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக் 
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.   
     | 
 1.72.10
   | 
 786  | 
 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் 
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன் 
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் 
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.                     
                       | 
 1.72.11
  |  
 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.  
சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை. 
 
 திருச்சிற்றம்பலம் 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
 
   
      
 
1.73 திருக்கானூர் 
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 787  | 
 
 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத் 
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி 
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார் 
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.          
            | 
	 1.73.1  |  
 
 788  | 
 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர் 
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார 
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங் 
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.                  
                    | 
 1.73.2
   | 
 789  | 
 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை 
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார் 
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார் 
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.            
              | 
 1.73.3
   | 
 790  | 
 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித் 
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ 
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான் 
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.             
               | 
 1.73.4
   | 
 791  | 
 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி 
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து 
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார் 
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.             
               | 
 1.73.5
   | 
 792  | 
 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய் 
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத் 
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில் 
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.            
              | 
 1.73.6
   | 
 793  | 
 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே 
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் 
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர் 
தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.           
             | 
 1.73.7
   | 
 794  | 
 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல 
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் 
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் 
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.            
              | 
 1.73.8
   | 
 795  | 
 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான் 
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான் 
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான் 
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.             
               | 
 1.73.9
   | 
 796  | 
 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண் 
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார் 
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ் 
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.              
                | 
 1.73.10
   | 
 797  | 
 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப் 
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே 
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின் 
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.                   
                     | 
 1.73.11
  |  
 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.  
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர்,   தேவியார் - சிவயோகநாயகியம்மை. 
	
		
திருச்சிற்றம்பலம் 
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
   
      
 
1.74 திருப்புறவம்
     
 
 பண் - தக்கேசி 
  
 
| 
 798  | 
 
 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால் 
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான் 
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த 
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.              
                | 
	 1.74.1  |  
 
 799  | 
 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம் 
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால் 
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக 
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.              
                | 
 1.74.2
   | 
 800  | 
 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் 
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி 
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி 
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.    
      | 
 1.74.3
   | 
 801  | 
 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் 
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப் 
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக 
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.           
             | 
 1.74.4
   | 
 802  | 
 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் 
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை 
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக 
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.              
                | 
 1.74.5
   | 
 803  | 
 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய் 
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து 
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக 
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.            
              | 
 1.74.6
   | 
 804  | 
 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர் 
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல் 
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக 
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.    
      | 
 1.74.7
   | 
 805  | 
 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் 
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய 
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக 
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.           
             | 
 1.74.8
   | 
 806  | 
 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப் 
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற் 
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக 
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.    
      | 
 1.74.9
   | 
 807  | 
 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் 
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும் 
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக 
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.             
               | 
 1.74.10
   | 
 808  | 
 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக 
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத் 
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை 
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.                       
                         | 
 1.74.11
  |  
 
திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர். 
  |    | 
 
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.75 திருவெங்குரு
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 809        | 
 
 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்  
    கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் 
ஓலம திடமுன் உயிரொடு மாள  
        உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான் 
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி  
        மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி 
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந்  தாரே. 
   | 
	 1.75.1  | 
 
 810  | 
    பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்  
        பிறையொடும் அரவினை யணிந் தழகாகப் 
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்  
        பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி 
மண்ணினை மூடி வான்முக டேறி  
        மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து 
விண்ணள வோங்கி வந்திழி கோயில்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
	    | 
 1.75.2
   | 
 811  | 
 ஓரியல் பில்லா உருவம தாகி  
        ஒண்டிறல் வேடன துருவது கொண்டு 
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்  
        கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான் 
நேரிசை யாக அறுபத முரன்று  
        நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து 
வேரிக ளெங்கும் விம்மிய சோலை  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.          
            | 
 1.75.3
   | 
 812  | 
 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்  
        மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க 
கொண்டணி சடையர் விடையினர் பூதங்  
        கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் 
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்  
        பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் 
வெண்பிறை சூடி உமையவ ளோடும்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.4
   | 
 813  | 
 சடையினர் மேனி நீறது பூசித்  
        தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக் 
கடைதொறும் வந்து பலியது கொண்டு  
        கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப் 
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி  
        உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து 
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.5
   | 
 814  | 
 கரைபொரு கடலில் திரையது மோதக்  
        கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி 
உரையுடை முத்தம் மணலிடை வைகி  
        ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும் 
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்  
        புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த 
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.6
   | 
 815  | 
 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை  
        மறுகிட வருமத களிற்றினை மயங்க 
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்  
        கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில் 
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப  
        நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு 
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.7
   | 
 816  | 
 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்  
        பலதலை முடியொடு தோளவை நெரிய 
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே  
        ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய 
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்  
        கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர் 
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.8
   | 
 817  | 
 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண  
        அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச் 
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்  
        செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண் 
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்  
        கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த 
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.9
   | 
 818  | 
 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்  
        பயில்தரு மறவுரை விட்டழ காக 
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்  
        எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்  
        கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய 
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  
    | 
 1.75.10
   | 
 819  | 
 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்  
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை 
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்  
        நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும் 
பண்ணியல் பாகப் பத்திமை யாலே  
        பாடியு மாடியும் பயில வல்லார்கள் 
விண்ணவர் விமானங் கொடுவர வேறி  
        வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.         
           | 
 1.75.11
  | 
இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.
 
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.76 திரு இலம்பையங்கோட்டூர்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 820      | 
 
 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு  
        மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் 
நிலையினான் எனதுரை தனதுரை யாக  
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் 
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்  
        கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும் 
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  
    | 
	 1.76.1  | 
 
 821  | 
 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்  
        தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை 
நிருமல னெனதுரை தனதுரை யாக  
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் 
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை  
        கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.2
   | 
 822  | 
 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்  
        பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங் 
காலனாம் எனதுரை தனதுரை யாகக்  
        கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள் 
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய  
        நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும் 
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.          
            | 
 1.76.3
   | 
 823  | 
 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்  
        ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல் 
விளம்புவா னெனதுரை தனதுரை யாக  
        வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் 
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்  
        கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள 
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.4
   | 
 824  | 
 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்  
        தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில் 
வானுமா மெனதுரை தனதுரை யாக  
        வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன் 
கானமான் வெருவுறக் கருவிர லூகங்  
        கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல் 
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ  தியல்பே. 
   | 
 1.76.5
   | 
 825  | 
 மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற  
        வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர் 
தனமிலா னெனதுரை தனதுரை யாகத்  
        தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன் 
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்  
        பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும் 
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.6
   | 
 826  | 
 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்  
        நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் 
ஊருளான் எனதுரை தனதுரை யாக  
        ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன் 
பாருளார் பாடலோ டாடல றாத  
        பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் 
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.7
   | 
 827  | 
 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை  
        வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில் 
ஆருலா மெனதுரை தனதுரை யாக  
        ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல் 
வாருலா நல்லன மாக்களுஞ் சார  
        வாரண முழிதரும் மல்லலங் கானல் 
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.8
   | 
 828  | 
 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்  
        கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா 
உளமழை யெனதுரை தனதுரை யாக  
        வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன் 
வளமழை யெனக்கழை வளர்துளி சோர  
        மாசுண முழிதரு மணியணி மாலை 
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.9
   | 
 829  | 
 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி  
        உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள் 
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்  
        பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான் 
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்  
        களிமுக வண்டொடு தேனின முரலும் 
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்  
        இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.          
            | 
 1.76.10
   | 
 830  | 
 கந்தனை மலிகனை கடலொலி யோதங்  
        கானலங் கழிவளர் கழுமல மென்னும் 
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்  
        நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் 
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்  
        இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய் 
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்  
        வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.                        
                          | 
 1.76.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சந்திரசேகரர்,  தேவியார் - கோடேந்துமுலையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.77 திருஅச்சிறுபாக்கம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 831  | 
 
 பொன்றிரண் டன்ன புரிசடை புரள  
        பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் 
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்  
        குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் 
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை  
        மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி 
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
	 1.77.1  | 
 
 832  | 
 தேனினு மினியர் பாலன நீற்றர்  
        தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார் 
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்  
        உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார் 
வானக மிறந்து வையகம் வணங்க  
        வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார் 
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.2
   | 
 833  | 
 காரிரு ளுருவ மால்வரை புரையக்  
        களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி 
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி  
        நீறணிந் தேறுகந் தேறிய நிமலர் 
பேரரு ளாளர் பிறவியில் சேரார்  
        பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ 
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.3
   | 
 834  | 
 மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்  
        மலைமக ளவளொடு மருவின ரெனவும் 
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்  
        சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார் 
தம்மல ரடியொன் றடியவர் பரவத்  
        தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர 
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.4
   | 
 835  | 
 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்  
        விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும் 
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்  
        பலபுக ழல்லது பழியில ரெனவும் 
எண்ணலா காத இமையவர் நாளும்  
        ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற 
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.5
   | 
 836  | 
 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க  
        நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித் 
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய  
        சுடலையி லாடுவர் தோலுடை யாகக் 
காடரங் காகக் கங்குலும் பகலுங்  
        கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த 
ஆடர வாட ஆடுமெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.6
   | 
 837  | 
 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி  
        இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக் 
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்  
        குளிரிள மதியமுங் கூவிள மலரும் 
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்  
        மகிழிள வன்னியும் இவைநலம் பகர 
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                         
                           | 
 1.77.7
   | 
 838  | 
 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்  
        கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும் 
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய  
        பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப் 
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்  
        பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித் 
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.                 
                   | 
 1.77.8
   | 
 839  | 
 நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்  
        நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக் 
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்  
        எய்தலா காததோர் இயல்பினை யுடையார் 
தோற்றலார் மாலும் நான்முக முடைய  
        தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள் 
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.9
   | 
 840  | 
 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்  
        நல்வினை நீக்கிய வல்வினை யாளர் 
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்  
        உள்கலா காததோர் இயல்பினை யுடையார் 
வேதமும் வேத நெறிகளு மாகி  
        விமலவே டத்தொடு கமலமா மதிபோல் 
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்  
        அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.                 
                   | 
 1.77.10
   | 
 841  | 
 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய  
        மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப் 
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்  
        பதியவ ரதிபதி கவுணியர் பெருமான் 
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்  
        கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் 
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்  
        அன்புடை யடியவர் அருவினை யிலரே.                                   
                                     | 
 1.77.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.78 திரு இடைச்சுரம்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 842  | 
 வரிவள ரவிரொளி யரவரை தாழ  
        வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் 
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்  
        கனலெரி யாடுவர் காடரங் காக 
விரிவளர் தருபொழில் இனமயி லால  
        வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் 
எரிவள ரினமணி புனமணி சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.                   
                     | 
	 1.78.1  | 
 
 843  | 
 ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்  
        அழகினை யருளுவர் குழகல தறியார் 
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்  
        நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார் 
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை  
        செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி 
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.2
   | 
 844  | 
 கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்  
        காதலர் தீதிலர் கனல்மழு வாளர் 
வானமும் நிலமையும் இருமையு மானார்  
        வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் 
நானமும் புகையொளி விரையொடு கமழ  
        நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர் 
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.3
   | 
 845  | 
 கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்  
        காதலர் தீதிலர் கனல்மழு வாளர் 
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்  
        வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர் 
வடமுலை யயலன கருங்குருந் தேறி  
        வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும் 
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.4
     | 
 844  | 
 கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்  
        கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை 
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்  
        நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர் 
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்  
        செழும்புன லனையன செங்குலை வாழை 
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.5
   | 
 845  | 
 தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்  
        சுடலையி னாடுவர் தோலுடை யாகப் 
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்  
        பேயுட னாடுவர் பெரியவர் பெருமான் 
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி  
        குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் 
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.6
   | 
 846  | 
 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்  
        கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர் 
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி  
        ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர் 
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்  
        மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும் 
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.7
   | 
 847  | 
 தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்  
        திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி 
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி  
        வேறுமோர் சரிதையர் வேடமு முடையர் 
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்  
        தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி 
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.8
   | 
 850  | 
 பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்  
        பலபுக ழல்லது பழியிலர் தாமுந் 
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்  
        தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர் 
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர  
        மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல் 
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.9
   | 
 851  | 
 பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற  
        பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா 
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்  
        அன்புடை யடியவர்க் கணியரு மாவர் 
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்  
        கயலினம் வயலிள வாளைகள் இரிய 
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்  
        இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.           
             | 
 1.78.10
   | 
 852  | 
 மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்  
        மருவிய வயல்தனில் வருபுனற் காழிச் 
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்  
        சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன் 
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்  
        புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த 
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்  
        இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.                
                  | 
 1.78.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர்,  தேவியார் - இமயமடக்கொடியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.79 திருக்கழுமலம்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 853  | 
 
 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்  
        அரவமும் மதியமும் விரவிய அழகர் 
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்  
        மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் 
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்  
        பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர் 
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
	 1.79.1  | 
 
 854  | 
 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்  
        கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் 
பண்டல  ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்  
        படர்சடை யடிகளார் பதியத னயலே 
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்  
        மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற் 
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.792
   | 
 855  | 
 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்  
        எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் 
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்  
        வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் 
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்  
        பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட 
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.3
   | 
 856  | 
 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்  
        ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித் 
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்  
        தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி 
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச  
        மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த 
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.4
   | 
 857  | 
 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக  
        உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர் 
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்  
        படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம் 
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்  
        நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக் 
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.5
   | 
 858  | 
 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி  
        முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப் 
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த  
        பேரரு ளாளனார் பேணிய கோயில் 
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்  
        சாந்தமு மேந்திய கையின ராகிக் 
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.6
   | 
 859  | 
 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்  
        குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் 
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்  
        நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் 
மலைக்கணித் தாவர வன்றிரை முரல  
        மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் 
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.7
   | 
 860  | 
 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்  
        பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள் 
பயம்பல படவடர்த் தருளிய பெருமான்  
        பரிவொடு மினிதுறை கோயில தாகும் 
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்  
        வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக் 
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.8
   | 
 861  | 
 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்  
        வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் 
பலங்களால் நேடியும் அறிவரி தாய  
        பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் 
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்  
        மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து 
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.         
           | 
 1.79.9
   | 
 862  | 
 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்  
        அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் 
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த  
        மூதுரை கொள்கிலா முதல்வர்  தம்மேனிச் 
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்  
        தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் 
காம்பன தோளியொ டினிதுறை கோயில்  
        கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.                 
                   | 
 1.79.10
   | 
 863  | 
 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்  
        கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல் 
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்  
        வருங்கலை ஞானசம் பந்தன தமிழின் 
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்  
        உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல் 
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்  
        விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.                         
                           | 
 1.79.11
  | 
 
 
  திருச்சிற்றம்பலம்
 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.80 கோயில்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 864  | 
 
 கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே 
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே 
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.               
                 | 
	 1.80.1  | 
 
 865  | 
 பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் 
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை 
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.             
               | 
 1.80.2
   | 
 866  | 
 மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் 
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள் 
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் 
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.  
    | 
 1.80.3
   | 
 867  | 
 நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் 
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச் 
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய 
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.               
                 | 
 1.80.4
   | 
 868  | 
 செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் 
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற 
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.             
               | 
 1.80.5
   | 
 869  | 
 வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் 
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய 
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம் 
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.              
                | 
 1.80.6
   | 
 870  | 
 அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் 
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச் 
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் 
தலையால் வணங்குவார் தலையா னார்களே.            
              | 
 1.80.7
   | 
 871  | 
 கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் 
சீரா லேமல்கு சிற்றம் பலமேய 
நீரார் சடையானை நித்த லேத்துவார் 
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.            
              | 
 1.80.8
   | 
 872  | 
 கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் 
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் 
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த 
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.              
                | 
 1.80.9
   | 
 873  | 
 பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும் 
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே 
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.    
      | 
 1.80.10
   | 
 874  | 
 ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் 
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய 
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை 
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.              
                | 
 1.80.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர், 
 தேவியார் - சிவகாமியம்மை.
  திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.81 சீர்காழி 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 875  | 
 
 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் 
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த 
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் 
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.           
             | 
	 1.81.1  | 
 
 876  | 
 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் 
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி 
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங் 
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.                  
                    | 
 1.81.2
   | 
 877  | 
 ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் 
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால் 
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் 
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.                    
                      | 
 1.81.3
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின.    
      | 
 1.81.4-7
   | 
 878  | 
 இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும் 
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும் 
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங் 
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.           
             | 
 1.81.8
   | 
 879  | 
 மாலும் பிரமனும் அறியா மாட்சியான் 
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன் 
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங் 
காலம் பகராதார் காழிந் நகர்தானே.                                     
                                       | 
 1.81.9
   | 
 880  | 
 தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் 
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் 
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் 
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.            
              | 
 1.81.10
   | 
 881  | 
 வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த 
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன் 
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப் 
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.             
               | 
 1.81.11
  | 
 
 
  திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.82 திருவீழிமிழலை
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 882  | 
 
 இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில் 
திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில் 
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் 
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.               
                 | 
	 1.82.1  | 
 
 883  | 
 வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர 
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில் 
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும் 
வேதத் தொலியோவா வீழி மிழலையே.           
             | 
 1.82.2
   | 
 884  | 
 பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு 
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில் 
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும் 
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.          
            | 
 1.82.3
   | 
 885  | 
 இரவன் பகலோனும் எச்சத் திமையோரை 
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில் 
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை 
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.           
             | 
 1.82.4
   | 
 886  | 
 கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில் 
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.           
             | 
 1.82.5
   | 
 887  | 
 மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி 
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில் 
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள் 
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.            
              | 
 1.82.6
   | 
 888  | 
 மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான் 
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில் 
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள் 
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.         
           | 
 1.82.7
   | 
 889  | 
 எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக் 
கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில் 
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை 
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.           
             | 
 1.82.8
   | 
 890  | 
 கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது 
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில் 
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல் 
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.  
    | 
 1.82.9
   | 
 891  | 
 சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் 
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில் 
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு 
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.    
      | 
 1.82.10
   | 
 892  | 
 மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள் 
ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி 
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன் 
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.        
          | 
 1.82.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.83 திரு அம்பர்மாகாளம்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 893  | 
 
 அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து 
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய 
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ் 
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.   
     | 
	 1.83.1  | 
 
 894  | 
 தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி 
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை 
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.       
         | 
 1.83.2
   | 
 895  | 
 திரையார் புனலோடு செல்வ மதிசூடி 
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும் 
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே.     
       | 
 1.83.3
   | 
 896  | 
 கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு 
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய 
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த 
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.      
        | 
 1.83.4
   | 
 897  | 
 அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய் 
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய 
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும் 
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.    
      | 
 1.83.5
   | 
 898  | 
 பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி 
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக் 
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.    
      | 
 1.83.6
   | 
 899  | 
 மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி 
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய 
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத் 
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.     
       | 
 1.83.7
   | 
 900  | 
 கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி 
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய 
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும் 
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.               
                 | 
 1.83.8
   | 
 901  | 
 சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட 
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய 
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா 
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே.       
         | 
 1.83.9
   | 
 902  | 
 மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார் 
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல 
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.             
               | 
 1.83.10
   | 
 903  | 
 வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள் 
திருமா மறைஞான சம்பந் தனசேணார் 
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி 
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.          
            | 
 1.83.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,   தேவியார் - பட்சநாயகியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.84 திருக்கடனாகைக்காரோணம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 904  | 
 
 புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய 
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி 
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் 
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.            
              | 
	 1.84.1  | 
 
 905  | 
 பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி 
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான் 
மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக் 
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.    
      | 
 1.84.2
   | 
 906  | 
 பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும் 
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான் 
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த 
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.    
      | 
 1.84.3
   | 
 907  | 
 மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் 
அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப் 
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் 
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.    
      | 
 1.84.4
   | 
 908  | 
 ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் 
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான் 
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் 
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.     
       | 
 1.84.5
   | 
 909  | 
 ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு 
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் 
ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக் 
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.     
       | 
 1.84.6
   | 
 910  | 
 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு 
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல் 
வரையார் வனபோல வளரும்வங்கங்கள் 
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.           
             | 
 1.84.7
   | 
 911  | 
 வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள் 
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான் 
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக் 
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.  
    | 
 1.84.8
   | 
 912  | 
 திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப் 
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச் 
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த 
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.            
              | 
 1.84.9
   | 
 913  | 
 நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற 
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான் 
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் 
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.            
              | 
 1.84.10
   | 
 914  | 
 கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய 
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன் 
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங் 
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.                   
                     | 
 1.84.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,  தேவியார் - நீலாயதாட்சியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.85 திருநல்லம்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 915  | 
 
 கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென் 
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த 
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த 
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.            
              | 
	 1.85.1  | 
 
 916  | 
 தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத் 
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் 
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும் 
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.             
               | 
 1.85.2
   | 
 917  | 
 அந்தி மதியோடும் அரவச் சடைதாழ 
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி 
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும் 
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.     
       | 
 1.85.3
   | 
 918  | 
 குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ 
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில் 
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய் 
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.  | 
 1.85.4
   | 
 919  | 
 மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு 
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் 
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த 
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.  | 
 1.85.5
   | 
 920  | 
 வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் 
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை 
ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு 
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.     
       | 
 1.85.6
   | 
 921  | 
 அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக் 
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக 
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும் 
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.   
     | 
 1.85.7
   | 
 922  | 
 பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு 
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால் 
எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி 
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.     
       | 
 1.85.8
   | 
 923  | 
 நாகத் தணையானும் நளிர்மா மலரானும் 
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும் 
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும் 
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.    
      | 
 1.85.9
   | 
 924  | 
 குறியில் சமணோடு குண்டர் வண்தேரர் 
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே 
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும் 
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 
   | 
 1.85.10
   | 
 925  | 
 நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய 
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு 
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன 
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.    
      | 
 1.85.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - உமாமகேசுவரர்,  தேவியார் - மங்களநாயகியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.86 திருநல்லூர் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 926  | 
 
 கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி 
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை 
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு 
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.      
        | 
	 1.86.1  | 
 
 927  | 
 ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும் 
வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன 
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் 
கூறு மடியார்கட் கடையா குற்றமே.         
           | 
 1.86.2
   | 
 928  | 
 சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ 
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை 
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப் 
பாடும் மடியார்கட் கடையா பாவமே.               
                 | 
 1.86.3
   | 
 929  | 
 நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை 
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக் 
காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு 
தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.           
             | 
 1.86.4
   | 
 930  | 
 ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ 
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் 
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர் 
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.           
             | 
 1.86.5
   | 
 931  | 
 கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச 
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் 
செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச் 
சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.     
       | 
 1.86.6
   | 
 932  | 
 எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும் 
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா 
தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல் 
தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.            
              | 
 1.86.7
   | 
 933  | 
 காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன் 
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை 
ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர் 
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.              
                | 
 1.86.8
   | 
 934  | 
 வண்ண மலரானும் வையம் அளந்தானும் 
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத் 
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த 
எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.             
               | 
 1.86.9
   | 
 935  | 
 பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர் 
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை 
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை 
எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.    
      | 
 1.86.10
   | 
 936  | 
 தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன் 
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை 
வண்ணம் புனைமாலை வைகலேத்துவார் 
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.            
              | 
 1.86.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்,  தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.87 திருவடுகூர்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 937  | 
 
 சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் 
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் 
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் 
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.                 
                   | 
	 1.87.1  | 
 
 938  | 
 பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி 
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக் 
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம் 
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.   
     | 
 1.87.2
   | 
 939  | 
 சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல் 
ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச 
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு 
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.  | 
 1.87.3
   | 
 940  | 
 துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் 
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் 
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் 
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.  
    | 
 1.87.4
   | 
 941  | 
 துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் 
தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார் 
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த 
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.                
                  | 
 1.87.5
   | 
 942  | 
 தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் 
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர் 
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட 
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே. 
   | 
 1.87.6
   | 
 943  | 
 நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் 
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார் 
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட 
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.  
    | 
 1.87.7
   | 
 944  | 
 பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் 
மறையும் பலபாடி மயானத் துறைவாரும் 
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங் 
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 
   | 
 1.87.8
   | 
 945  | 
 சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு 
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை 
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார் 
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.  
    | 
 1.87.9
   | 
 946  | 
 திருமா லடிவீழத் திசைநான் முகனாய 
பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர் 
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா 
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.  
    | 
 1.87.10
   | 
 947  | 
 படிநோன் பவையாவர் பழியில் புகழான 
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப் 
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் 
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.       
         | 
 1.87.11
  | 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வடுகேசுவரர்,   தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.88 திரு ஆப்பனூர் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 948  | 
 
 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன் 
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான் 
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப் 
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.    
      | 
	 1.88.1  | 
 
 949  | 
 குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் 
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின் 
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப் 
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.   
     | 
 1.88.2
   | 
 950  | 
 முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன் 
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின் 
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப் 
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.           
             | 
 1.88.3
   | 
 951  | 
 பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் 
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான் 
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப் 
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  
    | 
 1.88.4
   | 
 952  | 
 தகர மணியருவித் தடமால்வரை சிலையா 
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான் 
அகர முதலானை அணியாப்ப னூரானைப் 
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.            
              | 
 1.88.5
   | 
 953  | 
 ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக் 
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில் 
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப் 
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.            
              | 
 1.88.6
   | 
 954  | 
 இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக் 
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட 
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப் 
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.           
             | 
 1.88.7
   | 
 955  | 
 கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் 
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி 
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப் 
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.           
             | 
 1.88.8
   | 
 956  | 
 கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும் 
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல் 
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப் 
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.                
                  | 
 1.88.9
   | 
 957  | 
 செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள் 
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை 
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப் 
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.         
           | 
 1.88.10
   | 
 958  | 
 அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய 
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை 
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன் 
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.            
              | 
 1.88.11
  | 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர்,  தேவியார் - அம்பிகையம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.89 திரு எருக்கத்தம்புலியூர் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 959  | 
 
 படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை 
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச் 
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் 
விடையான் அடியேத்த மேவா வினைதானே.                   
                     | 
	 1.89.1  | 
 
 960  | 
 இலையார் தருசூலப் படையெம் பெருமானாய் 
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த 
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற் 
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.           
             | 
 1.89.2
   | 
 961  | 
 விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ 
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி 
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற 
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.           
             | 
 1.89.3
   | 
 962  | 
 அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை 
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி 
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற 
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.          
            | 
 1.89.4
   | 
 963  | 
 வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச் 
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான் 
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை 
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.          
            | 
 1.89.5
   | 
 964  | 
 நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப் 
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத் 
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே 
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.        
          | 
 1.89.6
   |  
    | 
 (*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.        
          | 
 1.89.7
   | 
 965  | 
 ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத் 
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட 
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற் 
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.             
               | 
 1.89.8
   | 
 966  | 
 மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி 
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே 
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட 
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.               
                 | 
 1.89.9
   | 
 967  | 
 புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச் 
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும் 
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய 
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.              
                | 
 1.89.10
   | 
 968  | 
 ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச் 
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன் 
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார் 
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.            
              | 
 1.89.11
  | 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நீலகண்டேசுரர்,   தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
  969  | 
 அரனை உள்குவீர், பிரம னூருளெம் 
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.                       
                         | 
	 1.90.1  | 
 
 970  | 
 காண உள்குவீர், வேணு நற்புரத் 
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.       
         | 
 1.90.2
   | 
 971  | 
 நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல் 
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.         
           | 
 1.90.3
   | 
 972  | 
 அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன் 
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.  
    | 
 1.90.4
   | 
 973  | 
 வாணி லாச்சடைத், தோணி வண்புரத் 
தாணி நற்பொனைக், காணு மின்களே.              
                | 
 1.90.5
   | 
 974  | 
 பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும் 
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.     
       | 
 1.90.6
   | 
 975  | 
 கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம் 
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.     
       | 
 1.90.6
   | 
 976  | 
 நறவ மார்பொழிற், புறவம் நற்பதி 
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.       
         | 
 1.90.8
   | 
 977  | 
 தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன் 
அன்று நெரித்தவா, நின்று நினைமினே.    
      | 
 1.90.9
   | 
 978  | 
 அயனும் மாலுமாய், முயலுங் காழியான் 
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.            
              | 
 1.90.10
   | 
 979  | 
 தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன் 
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.            
              | 
 1.90.11
   | 
 980  | 
 தொழும னத்தவர், கழும லத்துறை 
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.            
              | 
 1.90.12
  | 
பிரம்மபுரமென்பது சீகாழி.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 981  | 
 
 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப் 
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.         
           | 
	 1.91.1  | 
 
 982  | 
 பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை 
மறவா தேத்துமின், துறவி யாகுமே.               
                 | 
 1.91.2
   | 
 983  | 
 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர் 
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.        
          | 
 1.91.3
   | 
 984  | 
 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக் 
கையி னாற்றொழ, நையும் வினைதானே.            
              | 
 1.91.4
   | 
 985  | 
 பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக் 
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.      
        | 
 1.915
   | 
 986  | 
 பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர் 
வாச மலர்தூவ, நேச மாகுமே.           
             | 
 1.91.6
   | 
 987  | 
 வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர் 
செய்ய மலர்தூவ, வைய முமதாமே.         
           | 
 1.91.7
   | 
 988  | 
 அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர் 
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே.            
              | 
 1.91.8
   | 
 989  | 
 துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை 
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.   
     | 
 1.91.9
   | 
 990  | 
 கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர் 
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.  
    | 
 1.91.10
   | 
 991  | 
 சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன 
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.       
         | 
 1.91.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வன்மீகநாதர்,    தேவியார் - அல்லியங்கோதையம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 992  | 
 
 வாசி தீரவே, காசு நல்குவீர் 
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.             
               | 
	 1.92.1  | 
 
 993  | 
 இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் 
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.    
      | 
 1.92.2
   | 
 994  | 
 செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் 
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.      
        | 
 1.92.3
   | 
 995  | 
 நீறு பூசினீர், ஏற தேறினீர் 
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.        
          | 
 1.92.4
   | 
 996  | 
 காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் 
நாம மிழலையீர், சேமம் நல்குமே.       
         | 
 1.92.5
   | 
 997  | 
 பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் 
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.        
          | 
 1.92.6
   | 
 998  | 
 மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.    
      | 
 1.92.7
   | 
 999  | 
 அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் 
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.  | 
 1.92.8
   | 
 1000  | 
 அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் 
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.  | 
 1.92.9
   | 
 1001  | 
 பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் 
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.        
          | 
 1.92.10
   | 
 1002  | 
 காழி மாநகர், வாழி சம்பந்தன் 
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.   
     | 
 1.92.11
  | 
இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1003  | 
 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை 
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.      
        | 
	 1.93.1  | 
 
 1004  | 
 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் 
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.  | 
 1.93.2
   | 
 1005  | 
 ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று 
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.        
          | 
 1.93.3
   | 
 1006  | 
 ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் 
வாச மலர்தூவப், பாச வினைபோமே.              
                | 
 1.93.4
   | 
 1007  | 
 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் 
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.  
    | 
 1.93.5
   | 
 1008  | 
 மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் 
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.      
        | 
 1.93.6
   | 
 1009  | 
 விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் 
படையா யினசூழ, உடையா ருலகமே.  | 
 1.93.7
   | 
 1010  | 
 பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் 
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.  | 
 1.93.8
   | 
 1011  | 
 இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை 
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.  | 
 1.93.9
   | 
 1012  | 
 தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான் 
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.     
       | 
 1.93.10
   | 
 1013  | 
 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் 
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.   
     | 
 1.93.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1014  | 
 
 நீல மாமிடற், றால வாயிலான் 
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.        
          | 
	 1.94.1  | 
 
 1015  | 
 ஞால மேழுமாம், ஆல வாயிலார் 
சீல மேசொலீர், காலன் வீடவே.       
         | 
 1.94.2
   | 
 1015  | 
 ஆல நீழலார், ஆல வாயிலார் 
கால காலனார், பால தாமினே. 
   | 
 1.94.3
   | 
 1017  | 
 அந்த மில்புகழ், எந்தை யாலவாய் 
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.    
      | 
 1.94.4
   | 
 1018  | 
 ஆட லேற்றினான், கூட லாலவாய் 
பாடி யேமனம், நாடி வாழ்மினே.         
           | 
 1.94.5
   | 
 1019  | 
 அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை 
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.              
                | 
 1.94.6
   | 
 1020  | 
 அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல் 
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.                        
                          | 
 1.94.7
   | 
 1021  | 
 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் 
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.          
            | 
 1.94.8
   | 
 1022  | 
 அருவன் ஆலவாய், மருவி னான்றனை 
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.               
                 | 
 1.94.9
   | 
 1023  | 
 ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த் 
தேர மண்செற்ற, வீர னென்பரே.                 
                   | 
 1.94.10
   | 
 1024  | 
 அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன் 
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.                    
                      | 
 1.94.11
  | 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி,  தேவியார் - மீனாட்சியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1025  | 
 
 தோடொர் காதினன், பாடு மறையினன் 
காடு பேணிநின், றாடு மருதனே.                         
                           | 
	 1.95.1  | 
 
 1026  | 
 கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர் 
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.                        
                          | 
 1.95.2
   | 
 1027  | 
 எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை 
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.                 
                   | 
 1.95.3
   | 
 1028  | 
 விரியார் சடைமேனி, எரியார் மருதரைத் 
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.   
     | 
 1.95.4
   | 
 1029  | 
 பந்த விடையேறும், எந்தை மருதரைச் 
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.       
         | 
 1.95.5
   | 
 1030  | 
 கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத் 
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.  | 
 1.95.6
   | 
 1031  | 
 பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை 
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.  | 
 1.95.7
   | 
 1032  | 
 எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத் 
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.  | 
 1.95.8
   | 
 1033  | 
 இருவர்க் கெரியாய, உருவ மருதரைப் 
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.      
        | 
 1.95.9
   | 
 1034  | 
 நின்றுண் சமண்தேரர், என்று மருதரை 
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.   
     | 
 1.95.10
   | 
 1035  | 
 கருது சம்பந்தன், மருத ரடிபாடிப் 
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.     
       | 
 1.95.11
  | 
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1036  | 
 
 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை 
அன்னி யூரமர், மன்னு சோதியே.         
           | 
	 1.96.1  | 
 
 1037  | 
 பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க் 
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.  | 
 1.96.2
   | 
 1038  | 
 நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச் 
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.  | 
 1.96.3
   | 
 1039  | 
 பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச் 
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.       
         | 
 1.96.4
   | 
 1040  | 
 நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர் 
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.      
        | 
 1.96.5
   | 
 1041  | 
 இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர் 
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.       
         | 
 1.96.6
   | 
 1042  | 
 அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர் 
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.               
                 | 
 1.96.7
   | 
 1043  | 
 தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர் 
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.      
        | 
 1.96.8
   | 
 1044  | 
 இருவர் நாடிய, அரவன் அன்னியூர் 
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.      
        | 
 1.96.9
   | 
 1045  | 
 குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த் 
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.             
               | 
 1.96.10
   | 
 1046  | 
 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால் 
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.            
              | 
 1.96.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்,   தேவியார் - பெரியநாயகியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.97 திருப்புறவம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1047  | 
 
 எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த 
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச் 
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும் 
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.   
     | 
	 1.97.1  | 
 
 1048  | 
 மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற 
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும் 
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப் 
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.       
         | 
 1.97.2
   | 
 1049  | 
 வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே 
புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர் 
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் 
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.               
                 | 
 1.97.3
   | 
 1050  | 
 துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து 
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப் 
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் 
பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.  | 
 1.97.4
   | 
 1051  | 
 தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் 
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு 
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் 
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.    
      | 
 1.97.5
   | 
 1052  | 
 கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் 
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப் 
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் 
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.      
        | 
 1.97.6
   | 
 1053  | 
 எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் 
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப் 
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர் 
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.  | 
 1.97.7
   | 
 1054  | 
 பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் 
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் 
அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற் 
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.     
       | 
 1.97.8
   | 
 1055  | 
 மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் 
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் 
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர் 
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.  | 
 1.97.9
   | 
 1056  | 
 வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் 
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம் 
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் 
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.   
     | 
 1.97.10
   | 
 1057  | 
 பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து 
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற 
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் 
இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.      
        | 
 1.97.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.98 திருச்சிராப்பள்ளி 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1058  | 
 
 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே 
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் 
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் 
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.  | 
	 1.98.1  | 
 
 1059  | 
 கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் 
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி 
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ 
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.  | 
 1.98.2
   | 
 1060  | 
 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் 
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் 
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் 
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.  | 
 1.98.3
   | 
 1061  | 
 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் 
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் 
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் 
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.  | 
 1.98.4
   | 
 1062  | 
 கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ் 
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் 
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் 
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.  | 
 1.98.5
   | 
 1063  | 
 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது 
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் 
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் 
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.  | 
 1.98.6
   | 
 1064  | 
 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் 
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார் 
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் 
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 
   | 
 1.98.7
   | 
 1065  | 
 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் 
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் 
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் 
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.      
        | 
 1.98.8
   | 
 1066  | 
 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் 
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த 
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் 
இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே.  | 
 1.98.9
   | 
 1067  | 
 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை 
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல் 
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் 
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.      
        | 
 1.98.10
   | 
 1068  | 
 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த 
கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன் 
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் 
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.   
     | 
 1.98.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர்,  தேவியார் - மட்டுவார்குழலம்மை. 
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.99 திருக்குற்றாலம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1069  | 
 
 வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் 
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம் 
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை 
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.     
       | 
	 1.99.1  | 
 
 1070  | 
 பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் 
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங் 
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் 
அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.             
               | 
 1.99.2
   | 
 1071  | 
 செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் 
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் 
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக 
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.             
               | 
 1.99.3
   | 
 1072  | 
 பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன் 
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம் 
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும் 
நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.      
        | 
 1.99.4
   | 
 1073  | 
 மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி 
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் 
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த 
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.                
                  | 
 1.99.5
   | 
 1074  | 
 மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக் 
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங் 
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் 
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.        
          | 
 1.99.6
   | 
 1075  | 
 நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக் 
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங் 
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ் 
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.   
     | 
 1.99.7
   | 
 1076  | 
 போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக் 
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம் 
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த 
நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.      
        | 
 1.99.8
   | 
 1077  | 
 அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று 
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் 
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் 
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.           
             | 
 1.99.9
   | 
 1078  | 
 பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் 
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் 
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப 
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.           
             | 
 1.99.10
   | 
 1079  | 
 மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் 
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் 
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் 
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.              
                | 
 1.99.11
  | 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர்,  தேவியார் - குழல்வாய்மொழியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.100 திருப்பரங்குன்றம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1080  | 
 
 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச் 
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் 
ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் 
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.    
      | 
	 1.100.1  | 
 
 1081  | 
 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து 
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் 
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி 
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.  | 
 1.100.2
   | 
 1082  | 
 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச் 
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய 
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப் 
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.  | 
 1.100.3
   | 
 1083  | 
 வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் 
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந் 
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம் 
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.  | 
 1.100.4
   | 
 1084  | 
 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் 
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை 
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை 
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.        
          | 
 1.100.5
   | 
 1085  | 
 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் 
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில் 
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் 
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.        
          | 
 1.100.6
   | 
 1086  | 
 அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால் 
எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும் 
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப் 
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.    
      | 
 1.100.7
   | 
 1087  | 
 மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் 
பத்தினதிண்டோ  ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் 
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று 
நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.       
         | 
 1.100.8
   | 
 1088  | 
 முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி 
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும் 
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி 
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.  | 
 1.100.9
   | 
 1089  | 
 குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து 
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல 
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத் 
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.  | 
 1.100.10
   | 
 1090  | 
 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் 
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத் 
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி 
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.                
                  | 
 1.100.11
  | 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர்,  தேவியார் - ஆவுடைநாயகியம்மை. 
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.101 திருக்கண்ணார்கோயில் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1091  | 
 
 தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் 
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத 
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் 
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.      
        | 
	 1.101.1  | 
 
 1092  | 
 கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் 
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் 
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு 
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.       
         | 
 1.101.2
   | 
 1093  | 
 பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் 
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர் 
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் 
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.  | 
 1.101.3
   | 
 1094  | 
 தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் 
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க் 
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் 
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.       
         | 
 1.101.4
   | 
 1095  | 
 மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் 
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட 
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் 
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.     
       | 
 1.101.5
   | 
 1096  | 
 விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக 
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் 
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை 
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. 
   | 
 1.101.6
   | 
 1097  | 
 முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் 
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் 
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் 
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.  
    | 
 1.101.7
   | 
 1098  | 
 பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் 
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த 
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த 
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.        
          | 
 1.101.8
   | 
 1099  | 
 செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் 
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான் 
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத் 
தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.   
     | 
 1.101.9
   | 
 1100  | 
 தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் 
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் 
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர் 
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.            
              | 
 1.101.10
   | 
 1101  | 
 காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த 
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன் 
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் 
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே. 
   | 
 1.101.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர்,  தேவியார் - முருகுவளர்கோதையம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.102 சீகாழி 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1102  | 
 
 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங் 
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி 
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த 
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.    
      | 
	 1.102.1  | 
 
 1103  | 
 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் 
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி 
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே 
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.  | 
 1.102.2
   | 
 1104  | 
 இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக் 
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி 
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென் 
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.  | 
 1.102.3
   | 
 1105  | 
 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக் 
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப் 
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு 
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.  
    | 
 1.102.4
   | 
 1106  | 
 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக் 
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி 
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக் 
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.  | 
 1.102.5
   | 
 1107  | 
 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு 
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி 
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை 
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 
   | 
 1.102.6
   |  
    | 
 * இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 
   | 
 1.102.7
   | 
 1108  | 
 உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு 
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி 
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த 
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.  | 
 1.102.8
   | 
 1109  | 
 ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் 
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப் 
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும் 
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.   
     | 
 1.102.9
   | 
 1110  | 
 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங் 
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித் 
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா 
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 
   | 
 1.102.10
   | 
 1111  | 
 வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் 
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி 
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன் 
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.  | 
 1.102.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.103 திருக்கழுக்குன்றம் 
    
 
      பண் - குறிஞ்சி   
   
| 
 1112  | 
 
 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ 
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் 
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங் 
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.         
           | 
	 1.103.1  | 
 
 1113  | 
 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை 
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை 
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங் 
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.         
           | 
 1.103.2
   | 
 1114  | 
 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை 
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் 
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங் 
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 
   | 
 1.103.3
   | 
 1115  | 
 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை 
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம் 
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக் 
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.              
                | 
 1.103.4
   | 
 1116  | 
 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற 
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை 
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த 
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.         
           | 
 1.103.5
   | 
 1117  | 
 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை 
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் 
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங் 
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.                
                  | 
 1.103.6
   |  
    | 
 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  
    | 
 1.103.7
   | 
 1118  | 
 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் 
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் 
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் 
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.       
         | 
 1.103.8
   | 
 1119  | 
 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் 
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் 
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் 
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.       
         | 
 1.103.9
   | 
 1120  | 
 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே 
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ் 
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர் 
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.        
          | 
 1.103.10
   | 
 1121  | 
 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை 
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை 
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார் 
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.             
               | 
 1.103.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்,  தேவியார் - பெண்ணினல்லாளம்மை. 
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.104 திருப்புகலி 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1122  | 
 
 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை 
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான் 
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த 
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.     
       | 
	 1.104.1  | 
 
 1123  | 
 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று 
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய 
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல 
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.     
       | 
 1.104.2
   | 
 1124  | 
 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ 
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன் 
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற 
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.                
                  | 
 1.104.3
   | 
 1125  | 
 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங் 
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் 
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப் 
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.          
            | 
 1.104.4
   | 
 1126  | 
 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம் 
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன் 
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர் 
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.     
       | 
 1.104.5
   | 
 1127  | 
 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து 
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் 
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் 
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.       
         | 
 1.104.6
   | 
 1128  | 
 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள் 
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ் 
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம் 
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 
   | 
 1.104.7
   | 
 1129  | 
 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும் 
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன் 
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் 
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.  
    | 
 1.104.8
   | 
 1130  | 
 தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி 
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம் 
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த 
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 
   | 
 1.104.9
   | 
 1131  | 
 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும் 
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல் 
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த 
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.          
            | 
 1.104.10
   | 
 1132  | 
 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் 
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் 
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் 
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.                            
                              | 
 1.104.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.105 திருஆரூர் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1133  | 
 
 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் 
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் 
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி 
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.              
                | 
	 1.105.1  | 
 
 1134  | 
 சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த 
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில் 
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம் 
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.         
           | 
 1.105.2
   | 
 1135  | 
 உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே 
கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும் 
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய 
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.      
        | 
 1.105.6
   | 
 1136  | 
 வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின் 
ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப் 
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம் 
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.          
            | 
 1.105.7
   | 
 1137  | 
 வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய 
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி 
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று 
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.             
               | 
 1.105.8
   | 
 1138  | 
 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில் 
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும் 
அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர் 
தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே.        
          | 
 1.105.6
   | 
 1138  | 
 நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட 
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான் 
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண் 
ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே.          
            | 
 1.105.7
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.        
          | 
 1.105.8
   | 
 1140  | 
 வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த 
நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான் 
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப் 
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.                
                  | 
 1.105.9
   | 
 1141  | 
 செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன 
இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல் 
அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த் 
தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே.  
    | 
 1.105.10
   | 
 1142  | 
 நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல 
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை 
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் 
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.  | 
 1.105.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.106 திருஊறல்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1143  | 
 
 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று 
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில் 
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த 
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.        
          | 
	 1.106.1  | 
 
 1144  | 
 மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால் 
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம் 
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம் 
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.  | 
 1.106.2
   | 
 1145  | 
 ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங் 
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம் 
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை 
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.  | 
 1.106.3
   | 
 1146  | 
 நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று 
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின் 
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை 
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே. 
   | 
 1.106.4
   | 
 1147  | 
 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு 
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில் 
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை 
உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.  | 
 1.106.5
   | 
 1148  | 
 (*) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  | 
 1.106.6
   | 
 1149  | 
 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி 
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் 
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று 
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.        
          | 
 1.106.7
   | 
 1150  | 
 நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று 
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில் 
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம் 
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.   
     | 
 1.106.8
   | 
 1151  | 
 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர் 
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில் 
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை 
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே.  | 
 1.106.9
   | 
 1152  | 
 கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச 
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல் 
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல 
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.      
        | 
 1.106.10
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது. 
சுவாமிபெயர் - உமாபதீசுவரர்,  தேவியார் - உமையம்மை.
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1152  | 
 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல 
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் 
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.  | 
	 1.107.1  | 
 
 1153  | 
 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் 
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக் 
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 
   | 
 1.107.2
   | 
 1154  | 
 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல 
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் 
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் 
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 
   | 
 1.107.3
   | 
 1155  | 
 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங் 
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச் 
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.          
            | 
 1.107.4
   | 
 1156  | 
 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல 
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக் 
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில் 
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.   
     | 
 1.107.5
   | 
 1157  | 
 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி 
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து 
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த 
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.        
          | 
 1.107.6
   | 
 1158  | 
 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை 
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் 
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.  | 
 1.107.7
   | 
 1159  | 
 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று 
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக் 
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய 
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.  | 
 1.107.8
   | 
 1160  | 
 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற 
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான் 
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய 
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.  | 
 1.107.9
   | 
 1161  | 
 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் 
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள் 
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.  
    | 
 1.107.10
   | 
 1162  | 
 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந் 
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன் 
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும் 
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 
   | 
 1.107.11
  | 
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர்,   தேவியார் - அர்த்தநாரீசுவரி.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.108 திருப்பாதாளீச்சரம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1163  | 
 
 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல 
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் 
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும் 
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.  | 
	 1.108.1  | 
 
 1164  | 
 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத் 
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான் 
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம் 
பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.       
         | 
 1.108.2
   | 
 1165  | 
 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம் 
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான் 
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப் 
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.       
         | 
 1.108.3
   | 
 1166  | 
 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் 
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில் 
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப் 
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.   
     | 
 1.108.4
   | 
 1167  | 
 பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று 
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத் 
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப் 
பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.        
          | 
 1.108.5
   | 
 1168  | 
 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும் 
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும் 
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் 
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.       
         | 
 1.108.6
   | 
 1169  | 
 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ் 
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான் 
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை 
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.        
          | 
 1.108.7
   | 
 1170  | 
 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால் 
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான் 
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன் 
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.       
         | 
 1.108.8
   | 
 1171  | 
 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக் 
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார் 
பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல 
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 
   | 
 1.108.9
   | 
 1172  | 
 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று 
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி 
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த 
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.  | 
 1.108.10
   | 
 1173  | 
 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் 
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் 
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன 
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.     
       | 
 1.108.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.109 திருச்சிரபுரம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1174  | 
 வாருறு வனமுலை மங்கைபங்கன் 
நீருறு சடைமுடி நிமலனிடங் 
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார் 
சீருறு வளவயற் சிரபுரமே.     
       | 
	 1.109.1  | 
 
 1175  | 
 அங்கமொ டருமறை யருள்புரிந்தான் 
திங்களொ டரவணி திகழ்முடியன் 
மங்கையொ டினிதுறை வளநகரஞ் 
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.        
          | 
 1.109.2
   | 
 1176  | 
 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித் 
திரிந்தவர் புரமவை தீயின்வேவ 
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத் 
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.  | 
 1.109.3
   | 
 1177  | 
 நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையினன் அணியிழையோர் 
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ் 
சேறணி வளவயல் சிரபுரமே.    
      | 
 1.109.4
   | 
 1178  | 
 அருந்திறல் அவுணர்கள் அரணழியச் 
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர் 
குருந்தொடு கொடிவிடு மாதவிகள் 
திருந்திய புறவணி சிரபுரமே.  
    | 
 1.109.5
   | 
 1179  | 
 கலையவன் மறையவன் காற்றொடுதீ 
மலையவன் விண்ணொடு மண்ணுமவன் 
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த 
சிலையவன் வளநகர் சிரபுரமே.  
    | 
 1.109.6
   | 
 1180  | 
 வானமர் மதியொடு மத்தஞ்சூடித் 
தானவர் புரமெய்த சைவனிடங் 
கானமர் மடமயில் பெடைபயிலுந் 
தேனமர் பொழிலணி சிரபுரமே.  | 
 1.109.7
   | 
 1181  | 
 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் 
கறுத்தவன் காரரக் கன்முடிதோள் 
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன் 
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.  
    | 
 1.109.8
   | 
 1182  | 
 வண்ணநன் மலருறை மறையவனுங் 
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய் 
விண்ணுற வோங்கிய விமலனிடம் 
திண்ணநன் மதிலணி சிரபுரமே.  
    | 
 1.109.9
   | 
 1183  | 
 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார் 
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப் 
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச் 
செற்றவன் வளநகர் சிரபுரமே.   
     | 
 1.109.10
   | 
 1184  | 
 அருமறை ஞானசம் பந்தனந்தண் 
சிரபுர நகருறை சிவனடியைப் 
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார் 
திருவொடு புகழ்மல்கு தேசினரே. 
   | 
 1.109.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.110 திருவிடைமருதூர்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1185  | 
 
 மருந்தவன் வானவர் தானவர்க்கும் 
பெருந்தகை பிறவினொ டிறவுமானான் 
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் 
இருந்தவன் வளநகர் இடைமருதே.   
     | 
	 1.110.1  | 
 
 1186  | 
 தோற்றவன் கேடவன் துணைமுலையாள் 
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த 
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல் 
ஏற்றவன் வளநகர் இடைமருதே.    
      | 
 1.110.2
   | 
 1187  | 
 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் 
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம் 
முடைதலை இடுபலி கொண்டுழல்வான் 
இடைமரு தினிதுறை யெம்மிறையே.  | 
 1.110.3
   | 
 1188  | 
 பணைமுலை உமையொரு பங்கனொன்னார் 
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக் 
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற 
இணையிலி வளநகர் இடைமருதே.  
    | 
 1.110.4
   | 
 1189  | 
 பொழிலவன் புயலவன் புயலியக்குந் 
தொழிலவன் துயரவன் துயரகற்றுங் 
கழலவன் கரியுரி போர்த்துகந்த 
எழிலவன் வளநகர் இடைமருதே.   
     | 
 1.110.5
   | 
 1190  | 
 நிறையவன் புனலொடு மதியும்வைத்த 
பொறையவன் புகழவன் புகழநின்ற 
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட 
இறையவன் வளநகர் இடைமருதே.   
     | 
 1.110.6
   | 
 1191  | 
 நனிவளர் மதியொடு நாகம்வைத்த 
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் 
முனிவரொ டமரர்கள் முறைவணங்க 
இனிதுறை வளநகர் இடைமருதே.   
     | 
 1.110.7
   | 
 1192  | 
 தருக்கின அரக்கன தாளுந்தோளும் 
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன் 
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும் 
எரித்தவன் வளநகர் இடைமருதே.  
    | 
 1.110.8
   | 
 1193  | 
 பெரியவன் பெண்ணினொ டாணுமானான் 
வரியர வணைமறி கடற்றுயின்ற 
கரியவன் அலரவன் காண்பரிய 
எரியவன் வளநகர் இடைமருதே.   
     | 
 1.110.9
   | 
 1194  | 
 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன 
புந்தியில் உரையவை பொருள்கொளாதே 
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா 
எந்தைதன் வளநகர் இடைமருதே.     
 
(*) ஓத்து என்பது வேதம்.  | 
 1.110.10
   | 
 1195  | 
 இலைமலி பொழிலிடை மருதிறையை 
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன 
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் 
உலகுறு புகழினொ டோ ங்குவரே.          
            | 
 1.110.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.111 திருக்கடைமுடி 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1196  | 
 அருத்தனை அறவனை அமுதனைநீர் 
விருத்தனைப் பாலனை வினவுதிரேல் 
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங் 
கருத்தவன் வளநகர் கடைமுடியே.   
     | 
	 1.111.1  | 
 
 1197  | 
 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் 
அரைபொரு புலியதள் அடிகளிடந் 
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் 
கரைபொரு வளநகர் கடைமுடியே.  
    | 
 1.111.2
   | 
 1198  | 
 ஆலிள மதியினொ டரவுகங்கை 
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி 
ஏலநன் மலரொடு விரைகமழுங் 
காலன வளநகர் கடைமுடியே.  | 
 1.111.3
   | 
 1199  | 
 கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் 
மையணி மிடறுடை மறையவனூர் 
பையணி யரவொடு மான்மழுவாள் 
கையணி பவனிடங் கடைமுடியே.   
     | 
 1.111.4
   | 
 1200  | 
 மறையவன் உலகவன் மாயமவன் 
பிறையவன் புனலவன் அனலுமவன் 
இறையவன் எனவுல கேத்துங்கண்டங் 
கறையவன் வளநகர் கடைமுடியே.   
     | 
 1.111.5
   | 
 1201  | 
 படவர வேரல்குற் பல்வளைக்கை 
மடவர லாளையொர் பாகம்வைத்துக் 
குடதிசை மதியது சூடுசென்னிக் 
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.   
     | 
 1.111.6
   | 
 1202  | 
 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல் 
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங் 
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர் 
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.    
      | 
 1.111.7
   | 
 1203  | 
 நோதல்செய் தரக்கனை நோக்கழியச் 
சாதல்செய் தவனடி சரணெனலும் 
ஆதர வருள்செய்த அடிகளவர் 
காதல்செய் வளநகர் கடைமுடியே.  
    | 
 1.111.8
   | 
 1204  | 
 அடிமுடி காண்கிலர் ஓரிருவர் 
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச் 
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங் 
கடைமுடி யதனயல் காவிரியே.   
     | 
 1.111.9
   | 
 1205  | 
 மண்ணுதல் பறித்தலு மாயமிவை 
எண்ணிய காலவை யின்பமல்ல 
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த 
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.    
      | 
 1.111.10
   | 
 1206  | 
 பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர் 
சென்றடை கடைமுடிச் சிவனடியை 
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன 
இன்றமி ழிவைசொல இன்பமாமே. 
   | 
 1.111.11
  | 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர்,   தேவியார் - அபிராமியம்பிகை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.112 திருச்சிவபுரம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1207  | 
 இன்குர லிசைகெழும் யாழ்முரலத் 
தன்கரம் மருவிய சதுரன்நகர் 
பொன்கரை பொருபழங் காவிரியின் 
தென்கரை மருவிய சிவபுரமே.           
             | 
	 1.112.1  | 
 
 1208  | 
 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப் 
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர் 
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள் 
சென்றடி வீழ்தரு சிவபுரமே.            
              | 
 1.112.2
   | 
 1209  | 
 மலைமகள் மறுகிட மதகரியைக் 
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர் 
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே 
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.  
(*) அரிசில் என்பது ஒரு நதி. 
   | 
 1.112.3
   | 
 1210  | 
 மண்புன லனலொடு மாருதமும் 
விண்புனை மருவிய விகிர்தன்நகர் 
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச் 
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.                
                  | 
 1.112.4
   | 
 1211  | 
 வீறுநன் குடையவள் மேனிபாகங் 
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான் 
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித் 
தேறலுண் டெழுதரு சிவபுரமே.            
              | 
 1.112.5
   | 
 1212  | 
 மாறெதிர் வருதிரி புரமெரித்து 
நீறது வாக்கிய நிமலன்நகர் 
நாறுடை நடுபவர் உழவரொடுஞ் 
சேறுடை வயலணி சிவபுரமே.            
              | 
 1.112.6
   | 
 1213  | 
 ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு 
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான் 
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச் 
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.         
           | 
 1.112.7
   | 
 1214  | 
 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் 
முழுவலி யடக்கிய முதல்வன்நகர் 
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து 
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 
   | 
 1.112.8
   | 
 1215  | 
 சங்கள வியகையன் சதுர்முகனும் 
அங்கள வறிவரி யவன்நகர்தான் 
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ் 
செங்கனி நுகர்தரு சிவபுரமே.   
     | 
 1.112.9
   | 
 1216  | 
 மண்டையின் குண்டிகை மாசுதரும் 
மிண்டரை விலக்கிய விமலன்நகர் 
பண்டமர் தருபழங் காவிரியின் 
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.         
           | 
 1.112.10
   | 
 1217  | 
 சிவனுறை தருசிவ புரநகரைக் 
கவுணியர் குலபதி காழியர்கோன் 
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார் 
நவமொடு சிவகதி நண்ணுவரே.           
             | 
 1.112.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.113 திருவல்லம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1218  | 
 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத் 
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் 
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு 
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.      
        | 
	 1.113.1  | 
 
 1219  | 
 தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் 
தூயவன் தூமதி சூடியெல்லாம் 
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ் 
சேயவன் உறைவிடந் திருவல்லமே.         
           | 
 1.113.2
   | 
 1220  | 
 பார்த்தவன் காமனைப் பண்பழியப் 
போர்த்தவன் போதகத் தின்னுரிவை 
ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று 
சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.  | 
 1.113.3
   | 
 1221  | 
 கொய்தஅம் மலரடி கூடுவார்தம் 
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் 
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச் 
செய்தவன் உறைவிடந் திருவல்லமே.  | 
 1.113.4
   | 
 1222  | 
 சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் 
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் 
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே 
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.       
         | 
 1.113.5
   | 
 1223  | 
 பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் 
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று 
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று 
சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.      
        | 
 1.113.6
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  | 
 1.113.7
   | 
 1224  | 
 இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங் 
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம் 
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே 
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.  | 
 1.113.8
   | 
 1225  | 
 பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய 
அரியவன் அருமறை யங்கமானான் 
கரியவன் நான்முகன் காணவொண்ணாத் 
தெரியவன் உறைவிடந் திருவல்லமே.  | 
 1.113.9
   | 
 1226  | 
 அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் 
குன்றிய அறவுரை கூறாவண்ணம் 
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ் 
சென்றவன் உறைவிடந் திருவல்லமே.        
          | 
 1.113.10
   | 
 1227  | 
 கற்றவர் திருவல்லங் கண்டுசென்று 
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன 
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் 
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.  
    | 
 1.113.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வல்லநாதர்,  தேவியார் - வல்லாம்பிகையம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.114 திருமாற்பேறு 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1228  | 
 
 குருந்தவன் குருகவன் கூர்மையவன் 
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன் 
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும் 
மருந்தவன் வளநகர் மாற்பேறே.  | 
	 1.114.1  | 
 
 1229  | 
 பாறணி வெண்டலை கையிலேந்தி 
வேறணி பலிகொளும் வேட்கையனாய் 
நீறணிந் துமையொரு பாகம்வைத்த 
மாறிலி வளநகர் மாற்பேறே.   
     | 
 1.114.2
   | 
 1230  | 
 கருவுடை யாருல கங்கள்வேவச் 
செருவிடை ஏறியுஞ் சென்றுநின் 
றுருவுடை யாளுமை யாளுந்தானும் 
மருவிய வளநகர் மாற்பேறே.    
      | 
 1.114.3
   | 
 1231  | 
 தலையவன் தலையணி மாலைபூண்டு 
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான் 
கலைநவின் றான்கயி லாயமென்னும் 
மலையவன் வளநகர் மாற்பேறே.  | 
 1.114.4
   | 
 1232  | 
 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும் 
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன் 
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற 
மறையவன் வளநகர் மாற்பேறே.  | 
 1.114.3
   | 
 1233  | 
 பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக் 
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன் 
விண்ணவர் தானவர் முனிவரொடு 
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.   
     | 
 1.114.4
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  | 
 1.114.5
   | 
 1234  | 
 தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் 
நீதியால் வேதகீ தங்கள்பாட 
ஆதியா னாகிய அண்ணலெங்கள் 
மாதிதன் வளநகர் மாற்பேறே.  | 
 1.114.8
   | 
 1235  | 
 செய்யதண் தாமரைக் கண்ணனொடுங் 
கொய்யணி நறுமலர் மேலயனும் 
ஐயன்நன் சேவடி அதனையுள்க 
மையல்செய் வளநகர் மாற்பேறே.  
    | 
 1.114.9
   | 
 1236  | 
 குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங் 
களித்துநன் கழலடி காணலுற்றார் 
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி 
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.  
    | 
 1.114.10
   | 
 1237  | 
 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல 
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச் 
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார் 
எந்தைதன் கழலடி எய்துவரே.  | 
 1.114.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.115 திரு இராமனதீச்சரம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1238  | 
 
 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே 
அங்கிடு பலிகொளு மவன்கோபப் 
பொங்கர வாடலோன் புவனியோங்க 
எங்குமன் இராமன தீச்சுரமே.     
       | 
	 1.115.1  | 
 
 1239  | 
 சந்தநன் மலரணி தாழ்சடையன் 
தந்தம தத்தவன் தாதையோதான் 
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல 
எந்தவன் இராமன தீச்சுரமே.        
          | 
 1.115.2
   | 
 1240  | 
 தழைமயி லேறவன் தாதையோதான் 
மழைபொதி சடையவன் மன்னுகாதிற் 
குழையது விலங்கிய கோலமார்பின் 
இழையவன் இராமன தீச்சுரமே.      
        | 
 1.115.3
   | 
 1241  | 
 சத்தியு ளாதியோர் தையல்பங்கன் 
முத்திய தாகிய மூர்த்தியோதான் 
அத்திய கையினில் அழகுசூலம் 
வைத்தவன் இராமன தீச்சுரமே.   
     | 
 1.115.4
   | 
 1242  | 
 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் 
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் 
பாய்ந்தகங் கையொடு படவரவம் 
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.      
        | 
 1.115.5
   | 
 1243  | 
 சரிகுழல் இலங்கிய தையல்காணும் 
பெரியவன் காளிதன் பெரியகூத்தை 
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும் 
எரியவன் இராமன தீச்சுரமே.   
     | 
 1.115.6
   | 
 1244  | 
 மாறிலா மாதொரு பங்கன்மேனி 
நீறது ஆடலோன் நீள்சடைமேல் 
ஆறது சூடுவான் அழகன்விடை 
ஏறவன் இராமன தீச்சுரமே.        
          | 
 1.115.7
   | 
 1245  | 
 தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் 
படவர வாட்டிய படர்சடையன் 
நடமது வாடலான் நான்மறைக்கும் 
இடமவன் இராமன தீச்சுரமே.       
         | 
 1.115.8
   | 
 1246  | 
 தனமணி தையல்தன் பாகன்றன்னை 
அனமணி அயன்அணி முடியுங்காணான் 
பனமணி அரவரி பாதங்காணான் 
இனமணி இராமன தீச்சுரமே.       
         | 
 1.115.9
   | 
 1247  | 
 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் 
அறிவோரால் நாமம் அறிந்துரைமின் 
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை 
எறிபவன் இராமன தீச்சுரமே.      
        | 
 1.115.10
   | 
 1248  | 
 தேன் மலர்க் கொன்றை யோன்........ 
........      முந்தமக்கூனமன்றே.                         
                           | 
 1.115.11*
  | 
(*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 
   
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர்,   தேவியார் - சரிவார்குழலியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.116 திரு நீலகண்டம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1249  | 
 
 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் 
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே 
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் 
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     
       | 
	 1.116.1  | 
 
 1250  | 
 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் 
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் 
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் 
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.   
     | 
 1.116.2
   | 
 1251  | 
 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் 
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் 
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் 
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.   
     | 
 1.116.3
   | 
 1252  | 
 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் 
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே 
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் 
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.   
     | 
 1.116.4
   | 
 1253  | 
 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் 
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ 
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் 
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.     
       | 
 1.116.5
   | 
 1254  | 
 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் 
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் 
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் 
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.    
      | 
 1.116.6
   |  
    | 
 (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.   
     | 
 1.116.7
   | 
 1255  | 
 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே 
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் 
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே 
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.   
     | 
 1.116.8
   | 
 1256  | 
 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து 
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் 
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் 
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.       
         | 
 1.116.9
   | 
 1257  | 
 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் 
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் 
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் 
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.      
        | 
 1.116.10
   | 
 1258  | 
 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் 
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் 
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் 
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.       
         | 
 1.116.11
  | 
இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1259  | 
 
 காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் 
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர் 
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர் 
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.   
     | 
	 1.117.1  | 
 
 1260  | 
 கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை 
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண் 
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும் 
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 
   | 
 1.117.2
   | 
 1261  | 
 கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது 
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம் 
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின் 
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.       
         | 
 1.117.3
   | 
 1262  | 
 உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை 
எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச் 
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல் 
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.    
      | 
 1.117.4
   | 
 1263  | 
 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன 
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின் 
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான் 
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. 
   | 
 1.117.5
   | 
 1264  | 
 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் 
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும் 
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார் 
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.       
         | 
 1.117.6
   | 
 1265  | 
 காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு 
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் 
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச் 
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே. 
   | 
 1.117.7
   | 
 1266  | 
 நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண் 
மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் 
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ் 
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே. 
   | 
 1.117.8
   | 
 1267  | 
 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள் 
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது 
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச் 
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. 
   | 
 1.117.9
   | 
 1268  | 
 அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன் 
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர் 
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர் 
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. 
   | 
 1.117.10
   | 
 1269  | 
 கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர் 
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு 
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய 
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.        
          | 
 1.117.11
   | 
 1270  | 
 கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை 
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச் 
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ் 
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.       
         | 
 1.117.12
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.118 திருப்பருப்பதம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1271  | 
 
 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான் 
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி 
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் 
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.    
      | 
	 1.118.1  | 
 
 1272  | 
 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில் 
நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே 
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப் 
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.         
           | 
 1.118.2
   | 
 1273  | 
 துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால் 
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல் 
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும் 
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.  
    | 
 1.118.3
   | 
 1274  | 
 கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான் 
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம் 
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த 
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே. 
   | 
 1.118.4
   | 
 1275  | 
 துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி 
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் 
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா 
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.   
     | 
 1.118.5
   | 
 1276  | 
 சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் 
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல் 
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால் 
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.    
      | 
 1.118.6
   | 
 1277  | 
 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத் 
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற 
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான் 
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.     
       | 
 1.118.7
   | 
 1278  | 
 நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே 
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக் 
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன் 
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே. 
   | 
 1.118.8
   | 
 1279  | 
 மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல் 
திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும் 
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே 
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.         
           | 
 1.118.10
   | 
 1279  | 
 சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர் 
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் 
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின் 
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. 
   | 
 1.118.11
   | 
 1280  | 
 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான் 
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை 
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல 
ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.  
    | 
 1.118.12
  | 
இத்தலம் வடதேசத்திலுள்ளது.  ஸ்ரீசைலமென்றும் 
மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர்,   தேவியார் - பருப்பதமங்கையம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.119 திருக்கள்ளில் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1282  | 
 
 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை 
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த 
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் 
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.        
          | 
	 1.119.1  | 
 
 1283  | 
 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் 
ஓடலாற் கலனில்லான் உறை பதியால் 
காடலாற் கருதாத கள்ளில் மேயான் 
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.      
        | 
 1.119.2
   | 
 1284  | 
 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் 
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி 
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான் 
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.      
        | 
 1.119.3
   | 
 1285  | 
 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் 
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த 
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் 
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.      
        | 
 1.119.4
   | 
 1286  | 
 விரையாலும் மலராலும் விழுமை குன்றா 
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் 
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் 
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.     
       | 
 1.119.5
   | 
 1287  | 
 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல 
வலனாய மழுவாளும் வேலும் வல்லான் 
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் 
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.           
             | 
 1.119.6
   | 
 1288  | 
 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங் 
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங் 
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான் 
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.       
         | 
 1.119.7
   | 
 1289  | 
 திருநீல மலரொண்கண் தேவி பாகம் 
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் 
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் 
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.         
           | 
 1.119.8
   | 
 1290  | 
 வரியாய மலரானும் வையந் தன்னை 
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் 
கரியானும் அறியாத கள்ளில் மேயான் 
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.     
       | 
 1.119.9
   | 
 1291  | 
 ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் 
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் 
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் 
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 
   | 
 1.119.10
   | 
 1292  | 
 திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு 
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல 
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் 
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.       
         | 
 1.119.11
  | 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர்,  தேவியார் - ஆனந்தவல்லியம்மை.
 
  
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.120 திருவையாறு - திருவிராகம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1293  | 
 
 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத் 
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில் 
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண் 
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.        
          | 
	 1.120.1  | 
 
 1294  | 
 கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப் 
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் 
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை 
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.         
           | 
 1.120.2
   | 
 1295  | 
 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர் 
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல் 
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள 
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.        
          | 
 1.120.3
   | 
 1296  | 
 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை 
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல் 
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம் 
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.         
           | 
 1.120.4
   | 
 1297  | 
 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு 
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் 
மானன மென்விழி மங்கையொர் பாகமும் 
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.           
             | 
 1.120.5
   | 
 1298  | 
 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும் 
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ் 
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும் 
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.           
             | 
 1.120.6
   | 
 1299  | 
 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை 
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில் 
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் 
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.                 
                   | 
 1.120.7
   | 
 1300  | 
 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும் 
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது 
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை 
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.        
          | 
 1.120.8
   | 
 1301  | 
 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல் 
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட 
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய 
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.         
           | 
 1.120.9
   | 
 1302  | 
 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா 
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந் 
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா 
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.         
           | 
 1.120.10
   | 
 1303  | 
 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ் 
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக் 
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக 
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.                        
                          | 
 1.120.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1304  | 
 
 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த 
படைமரு தழலெழ மழுவல பகவன் 
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய 
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.              
                | 
	 1.121.1  | 
 
 1305  | 
 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை 
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன் 
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர் 
இழைநுழை புரியணல் இடமிடை மருதே.               
                 | 
 1.121.2
   | 
 1306  | 
 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன் 
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன் 
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின் 
இருமையும் உடையணல் இடமிடை மருதே.       
         | 
 1.121.3
   | 
 1307  | 
 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு 
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன் 
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர் 
எரிவளர் சடையணல் இடமிடை மருதே.       
         | 
 1.121.4
   | 
 1308  | 
 வருநல மயிலன மடநடை மலைமகள் 
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான் 
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர் 
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.                
                  | 
 1.121.5
   | 
 1309  | 
 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை 
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன் 
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ 
டிலையுடை படையவன் இடமிடை மருதே.               
                 | 
 1.121.6
   | 
 1310  | 
 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள் 
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு 
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி 
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.         
           | 
 1.121.7
   | 
 1311  | 
 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு 
துறையவன் எனவல அடியவர் துயரிலர் 
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை 
இறையவன் உறைதரும் இடமிடை மருதே.               
                 | 
 1.121.8
   | 
 1312  | 
 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும் 
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக் 
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர் 
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.                
                  | 
 1.121.9
   | 
 1313  | 
 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும் 
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல் 
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும் 
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.                
                  | 
 1.121.10
   | 
 1314  | 
 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன் 
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த 
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை 
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.            
              | 
 1.121.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.122 திருவிடைமருதூர் - திருவிராகம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1315  | 
 
 விரிதரு புலியுரி விரவிய அரையினர் 
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த 
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல் 
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.         
           | 
	 1.122.1  | 
 
 1316  | 
 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர் 
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர் 
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில் 
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 
   | 
 1.122.2
   | 
 1317  | 
 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள் 
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர் 
இலரென இடுபலி யவரிடை மருதினை 
வலமிட வுடல்நலி விலதுள வினையே. 
   | 
 1.122.3
   | 
 1318  | 
 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி 
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் 
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர் 
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 
   | 
 1.122.4
   | 
 1319  | 
 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர் 
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை 
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம் 
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 
   | 
 1.122.5
   | 
 1320  | 
 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும் 
அழகிய முடியுடை அடிகள தறைகழல் 
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு 
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.  | 
 1.122.6
   | 
 1321  | 
 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும் 
நிலையினர் சலமகள் உலவிய சடையினர் 
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர் 
இலைமலி படையவர் இடமிடை மருதே.      
        | 
 1.122.7
   | 
 1322  | 
 செருவடை யிலவல செயல்செயத் திறலொடும் 
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர 
இருவகை விரனிறி யவரிடைமருதது 
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.      
        | 
 1.122.8
   | 
 1323  | 
 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி 
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ 
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல் 
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.       
         | 
 1.122.9
   | 
 1324  | 
 குடைமயி லினதழை மருவிய வுருவினர் 
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை 
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் 
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.     
       | 
 1.122.10
   | 
 1325  | 
 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு 
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப் 
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர் 
விரவிலர் வினையொடு வியனுல குறவே.    
      | 
 1.122.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.123 திருவலிவலம் - திருவிராகம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1326  | 
 
 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் 
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள் 
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர் 
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.  
    | 
	 1.123.1  | 
 
 1327  | 
 இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு 
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு 
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர் 
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.   
     | 
 1.123.2
   | 
 1328  | 
 உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் 
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி 
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு 
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.   
     | 
 1.123.3
   | 
 1329  | 
 அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு 
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும் 
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை 
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.      
        | 
 1.123.4
   | 
 1330  | 
 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் 
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.            
              | 
 1.123.5
   | 
 1331  | 
 தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக 
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து 
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில் 
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.           
             | 
 1.123.6
   | 
 1332  | 
 நலிதரு தரைவர நடைவரும் இடையவர் 
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு 
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர் 
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.     
       | 
 1.123.7
   | 
 1333  | 
 இரவணன் இருபது கரமெழில் மலைதனின் 
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து 
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி 
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.      
        | 
 1.123.8
   | 
 1334  | 
 தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும் 
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி 
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி 
வானணை மதில்வலி வலமுறை யிறையே.             
               | 
 1.123.9
   | 
 1335  | 
 இலைமலி தரமிகு துவருடை யவர்களும் 
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது 
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன் 
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.            
              | 
 1.123.10
   | 
 1336  | 
 மன்னிய வலிவல நகருறை யிறைவனை 
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை 
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை 
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.    
      | 
 1.123.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.124 திருவீழிமிழலை - திருவிராகம் 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1337  | 
 
 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் 
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர் 
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ் 
நிலமலி மிழலையை நினையவ லவரே.     
       | 
	 1.124.1  | 
 
 1338  | 
 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர் 
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில் 
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு 
நிருபமன் மிழலையை நினையவ லவரே.     
       | 
 1.124.2
   | 
 1339  | 
 கலைமகள் தலைமகன் இவனென வருபவர் 
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை 
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர் 
நிலைமலி மிழலையை நினையவ லவரே.    
      | 
 1.124.3
   | 
 1340  | 
 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர் 
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை 
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் 
நீடமர் மிழலையை நினையவ லவரே.      
        | 
 1.124.4
   | 
 1341  | 
 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை 
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர் 
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு 
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.     
       | 
 1.124.5
   | 
 1342  | 
 1342 
அன்றினர் அரியென வருபவர் அரிதினில் 
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி 
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற 
நின்றவன் மிழலையை நினையவ லவரே.     
       | 
 1.124.6
   | 
 1343  | 
 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர் 
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர் 
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி 
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.   
     | 
 1.124.7
   | 
 1344  | 
 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர் 
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது 
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு 
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.   
     | 
 1.124.8
   | 
 1345  | 
 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் 
கடிமலர் அயனரி கருதரு வகைதழல் 
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு 
நெடியவன் மிழலையை நினையவ லவரே.             
               | 
 1.124.9
   | 
 1346  | 
 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர் 
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர் 
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ் 
நின்மலன் மிழலையை நினையவ லவரே.     
       | 
 1.124.10
   | 
 1347  | 
 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் 
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி 
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு 
கற்றுவல் லவருல கினிலடி யவரே.                 
                   | 
 1.124.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1348  | 
 
 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன் 
முலைமலி தருதிரு வுருவம துடையவன் 
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ 
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.           
             | 
	 1.125.1  | 
 
 1349  | 
 படரொளி சடையினன் விடையினன் மதிலவை 
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி 
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம் 
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.     
       | 
 1.125.2
   | 
 1350  | 
 வரைதிரி தரவர வகடழ லெழவரு 
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ் 
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம் 
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.  | 
 1.125.3
   | 
 1351  | 
 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு 
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர் 
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய 
மணிமிட றனதடி இணைதொழு மவரே.       
         | 
 1.125.4
   | 
 1352  | 
 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் 
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன் 
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம் 
உறைவென உடையவன் எமையுடை யவனே.  | 
 1.125.5
   | 
 1353  | 
 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் 
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன் 
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி 
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.  | 
 1.125.6
   | 
 1354  | 
 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர் 
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன் 
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம் 
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.  | 
 1.125.7
   | 
 1355  | 
 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன் 
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை 
பரனென அடியவர் பணிதரு சிவபுர 
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.        
          | 
 1.125.8
   | 
 1356  | 
 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர் 
சென்றள விடலரி யவனுறை சிவபுரம் 
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர் 
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.  | 
 1.125.9
   | 
 1357  | 
 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை 
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம் 
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம் 
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.  | 
 1.125.10
   | 
 1358  | 
 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் 
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை 
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை 
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.                      
                        | 
 1.125.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1359  | 
 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்  
       பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் 
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்  
       சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் 
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் 
       தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் 
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் 
       காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.       
         | 
	 1.126.1  | 
 
 1360  | 
 பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்  
       பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும் 
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே 
       றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை 
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்  
       வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் 
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்  
       காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.            
              | 
 1.126.2
   | 
 1361  | 
 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்  
       சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ 
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்  
       பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் 
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்  
       போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் 
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்  
       காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.        
          | 
 1.126.3
   | 
 1362  | 
 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்  
       தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம் 
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்  
       மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய 
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்  
       மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங் 
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்  
       காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.       
         | 
 1.126.4
   | 
 1363  | 
 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்  
       சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே 
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்  
       போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் 
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்  
      தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் 
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்  
       காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.        
          | 
 1.126.5
   | 
 1364  | 
 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்  
       சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் 
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்  
       கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப் 
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்  
       பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங் 
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்  
       காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.               
                 | 
 1.126.6
   | 
 1365  | 
 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்  
       பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா 
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்  
       மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் 
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்  
       சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங் 
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்  
       காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.       
         | 
 1.126.7
   | 
 1366  | 
 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்  
       சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் 
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்  
       பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட் 
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் 
       காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் 
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்  
       காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.      
        | 
 1.126.8
   | 
 1367  | 
 பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்  
       பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள 
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ  
       னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ் 
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்  
       றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் 
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்  
       காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.        
          | 
 1.126.9
   | 
 1368  | 
 தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்  
       தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும் 
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்  
       கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் 
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்  
       போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் 
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்  
       காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.        
          | 
 1.126.10
   | 
 1369  | 
 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்  
       கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் 
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை  
       தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் 
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்  
       டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா 
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்  
    மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.            
              | 
 1.126.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.127 சீகாழி - திருஏகபாதம்
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1370  | 
 
 பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.       
         | 
	 1.127.1  | 
 
 1371  | 
 விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.     
       | 
 1.127.2
   | 
 1372  | 
 புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.       
         | 
 1.127.3
   | 
 1373  | 
 விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.  | 
 1.127.4
   | 
 1374  | 
 சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.  | 
 1.127.5
   | 
 1375  | 
 பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி 
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.  | 
 1.127.6
   | 
 1376  | 
 செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.  | 
 1.127.7
   | 
 1377  | 
 பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.  | 
 1.127.8
   | 
 1378  | 
 தசமுக னெறிதர வூன்று சண்பையான் 
தசமுக னெறிதர வூன்று சண்பையான் 
தசமுக னெறிதர வூன்று சண்பையான் 
தசமுக னெறிதர வூன்று சண்பையான்.  | 
 1.127.9
   | 
 1379  | 
 காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே. 
   | 
 1.127.10
   | 
 1380  | 
 கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.  | 
 1.127.11
   | 
 1381  | 
 கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.       
         | 
 1.127.12
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.128 திருவெழுகூற்றிருக்கை 
    
 
   பண் - வியாழக்குறிஞ்சி    
    
| 
 1382  | 
 
 ஓருரு வாயினை மானாங் காரத் 
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் 
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் 
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை 
இருவரோ டொருவ னாகி நின்றனை        
          | 
	 05  | 
  
    | 
 ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் 
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி 
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை 
இருநதி யரவமோ டொருமதி சூடினை 
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்  
    | 
 10
   |  
    | 
 நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம் 
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் 
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை 
ஒருதனு இருகால் வளைய வாங்கி 
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்  
    | 
 15
   |  
    | 
 கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை 
ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் 
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர் 
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ 
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து  | 
 20
   |  
    | 
 நான்மறை யோதி ஐவகை வேள்வி 
அமைத்தா றங்க முதலெழுத் தோதி 
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் 
பிரமபுரம் பேணினை 
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை      
        | 
 25
   |  
    | 
 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை 
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை 
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த 
தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி 
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை  | 
 30
   |  
    | 
 வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை 
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன் 
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை 
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் 
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை      
        | 
 35
   |  
    | 
 ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் 
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை 
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை 
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் 
மறை முதல் நான்கும்           
             | 
 40
   |  
    | 
 மூன்று காலமுந் தோன்ற நின்றனை 
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் 
மறுவிலா மறையோர் 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்  | 
 45
   |  
    | 
 அனைய தன்மையை யாதலின் நின்னை 
நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே. 
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.129 திருக்கழுமலம் 
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1383  | 
  சேவுயருந் திண்கொடியான் திருவடியே  
       சரணென்று சிறந்தவன்பால் 
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்  
        வழிபட்ட நலங்கொள்கோயிற் 
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்  
        செங்குமுதம் வாய்கள்காட்டக் 
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்  
        கண்காட்டுங் கழுமலமே.     
	       | 
	 1.129.1  | 
 
 1384    | 
 பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய  
        மலைச்செல்வி பிரியாமேனி 
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்  
        அமரர்தொழ வமருங்கோயில் 
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்  
        இறைவனது தன்மைபாடிக் 
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்  
        பாட்டயருங் கழுமலமே.             
               | 
 1.129.2
   | 
 1385    | 
 அலங்கல்மலி வானவருந் தானவரும்  
        அலைகடலைக் கடையப்பூதங் 
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி  
        கண்டத்தோன் கருதுங்கோயில் 
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்  
        கூன்சலிக்குங் காலத்தானுங் 
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய  
       மெய்யர்வாழ் கழுமலமே.             
               | 
 1.129.3
   | 
 1386    | 
 பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்  
        சயமெய்தும் பரிசுவெம்மைப் 
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு  
        சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில் 
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்  
        சூளிகைமேல் மகப்பாராட்டக் 
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு  
        மகிழ்வெய்துங் கழுமலமே.           
             | 
 1.129.4
   | 
 1387  | 
 ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க  
       ளொடுவன்னி மத்தமன்னும் 
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்  
        செஞ்சடையான் நிகழுங்கோயில் 
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி  
        மலையென்ன நிலவிநின்ற 
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு  
        சுதைமாடக் கழுமலமே.             
               | 
 1.129.5
   | 
 1388    | 
 தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து  
        தழலணைந்து தவங்கள்செய்த 
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ  
        ழமையளித்த பெருமான்கோயில் 
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப  
        அதுகுடித்துக் களித்துவாளை 
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய  
        அகம்பாயுங் கழுமலமே.             
               | 
 1.129.6
   | 
 1389    | 
 புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்  
        நிலனைந்தாய்க் கரணம்நான்காய் 
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு  
        வாய்நின்றான் அமருங்கோயில் 
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு  
        கொம்புதைப்பக் கொக்கின்காய்கள் 
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்  
        புள்ளிரியுங் கழுமலமே.            
              | 
 1.129.7
   | 
 1390  | 
 அடல்வந்த வானவரை யழித்துலகு  
        தெழித்துழலும் அரக்கர்கோமான் 
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்  
        பணிகொண்டோ ன் மேவுங்கோயில் 
நடவந்த உழவரிது நடவொணா  
        வகைபரலாய்த் தென்றுதுன்று 
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்  
        கரைகுவிக்குங் கழுமலமே.           
             | 
 1.129.8
   | 
 1391    | 
 பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு  
        கேழலுரு வாகிப்புக்கிட் 
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா  
        வகைநின்றான் அமருங்கோயில் 
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்  
        கொண்டணிந்து பரிசினாலே 
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து  
        நின்றேத்துங் கழுமலமே.            
              | 
 1.129.9
   | 
 1392    | 
 குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை  
        மெய்த்தவமாய் நின்றுகையில் 
உணல்மருவுஞ் சமணர்களு முணராத  
        வகைநின்றான் உறையுங்கோயில் 
மணமருவும் வதுவையொலி விழவினொலி  
       யிவையிசைய மண்மேல்தேவர் 
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க  
        மேல்படுக்குங் கழுமலமே.    
      | 
 1.129.10
   | 
 1393    | 
 கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து  
        ளீசன்றன் கழல்மேல்நல்லோர் 
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்  
        பந்தன்றான் நயந்துசொன்ன 
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்  
        தூமலராள் துணைவராகி 
முற்றுலக மதுவாண்டு முக்கணான்  
        அடிசேர முயல்கின்றாரே.   
     | 
 1.129.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.130 திருவையாறு 
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1394  | 
 
 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி  
        அறிவழிந்திட் டைம்மேலுந்தி 
அலமந்த போதாக அஞ்சேலென்  
        றருள்செய்வான் அமருங்கோயில் 
வலம்வந்த மடவார்கள் நடமாட  
        முழவதிர மழையென்றஞ்சிச் 
சிலமந்தி யலமந்து மரமேறி  
        முகில்பார்க்குந் திருவையாறே.       
         | 
	 1.130.1  | 
 
 1395    | 
 விடலேறு படநாகம் அரைக்கசைத்து  
        வெற்பரையன் பாவையோடும் 
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்  
        பலியென்னு மடிகள்கோயில் 
கடலேறித் திரைமோதிக் காவிரியி  
        னுடன்வந்து கங்குல்வைகித் 
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்  
        கீன்றலைக்குந் திருவையாறே.        
          | 
 1.130.2
   | 
 1396    | 
 கங்காளர் கயிலாய மலையாளர்  
        கானப்பே ராளர்மங்கை 
பங்காளர் திரிசூலப் படையாளர்  
        விடையாளர் பயிலுங்கோயில் 
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்  
        இறகுலர்த்திக் கூதல்நீங்கி 
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்  
        இரைதேருந் திருவையாறே.  
    | 
 1.130.3
   | 
 1397    | 
 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்  
        பலிக்குழல்வார் உமையாள்பங்கர் 
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்  
        தழலுருவர் தங்குங்கோயில் 
மான்பாய வயலருகே மரமேறி  
        மந்திபாய் மடுக்கள்தோறுந் 
தேன்பாய மீன்பாய செழுங்கமல  
        மொட்டலருந் திருவையாறே.  | 
 1.130.4
   | 
 1398  | 
 நீரோடு கூவிளமும் நிலாமதியும்  
        வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத் 
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த  
        தத்துவனார் தங்குங்கோயில் 
காரோடி விசும்பளந்து கடிநாறும்  
        பொழிலணைந்த கமழ்தார்வீதித் 
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்  
        நடம்பயிலுந் திருவையாறே.  | 
 1.130.5
   | 
 1399    | 
 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்  
        நெறிகாட்டும் விகிர்தனாகிப் 
   பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த  
        புண்ணியனார் நண்ணுங்கோயில் 
காந்தார மிசையமைத்துக் காரிகையார்  
        பண்பாடக் கவினார்வீதித் 
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்  
        நடமாடுந் திருவையாறே.   
     | 
 1.130.6
   | 
 1400    | 
 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு  
        புரமூன்றும் நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி  
        மலையாளி சேருங்கோயில் 
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச  
        மலர்பாய்ந்து வாசமல்கு 
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு  
        கண்வளருந் திருவையாறே.   
     | 
 1.130.7
   | 
 1401    | 
 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த  
        அரக்கர்கோன் தலைகள்பத்தும் 
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்  
        கருள்புரிந்த மைந்தர்கோயில் 
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ  
        இளமேதி இரிந்தங்கோடிச் 
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல  
        வயல்படியுந் திருவையாறே.  
    | 
 1.130.8
   | 
 1402    | 
    மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை  
        மிகவகழ்ந்து மிக்குநாடும் 
மாலோடு நான்முகனு மறியாத  
        வகைநின்றான் மன்னுங்கோயில் 
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்  
        குவிமுலையார் முகத்தினின்று 
சேலோடச் சிலையாடச் சேயிழையார்  
        நடமாடுந் திருவையாறே.           
	             | 
 1.130.9
   | 
 1403    | 
 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு  
        சாக்கியருங் குணமொன்றில்லா 
மிண்டாடு மிண்டருரை கேளாதே  
        யாளாமின் மேவித்தொண்டீர் 
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்  
        இறைவரினி தமருங்கோயில் 
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்  
       வந்தலைக்குந் திருவையாறே.          
            | 
 1.130.10
   | 
 1404    | 
 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்  
        பெருமானை அந்தண்காழி 
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான  
        சம்பந்தன் மருவுபாடல் 
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்  
        ஈசனடி யேத்துவார்கள் 
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்  
        றெய்துவார் தாழாதன்றே.                           
                             | 
 1.130.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.131 திருமுதுகுன்றம்
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1405  | 
 
 மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்  
       எண்குணங்களும் விரும்பும்நால்வே 
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்  
        பளிங்கேபோல் அரிவைபாகம் 
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்  
        கருதுமூர் உலவுதெண்ணீர் 
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா  
        ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.        
          | 
	 1.131.1  | 
 
 1406    | 
 வேரிமிகு குழலியொடு வேடுவனாய்  
        வெங்கானில் விசயன்மேவு 
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்  
        புரிந்தளித்த புராணர்கோயில் 
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல  
        மலருதிர்த்துக் கயமுயங்கி 
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்  
        புகுந்துலவு முதுகுன்றமே.     
       | 
 1.131.2
   | 
 1407    | 
 தக்கனது பெருவேள்வி சந்திரனிந்  
        திரனெச்சன் அருக்கன்அங்கி 
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே  
        தண்டித்த விமலர்கோயில் 
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு  
        குயர்தெங்கின் குவைகொள்சோலை 
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா  
        நீள்வயல்சூழ் முதுகுன்றமே.  | 
 1.131.3
   | 
 1408  | 
 வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய  
        விறலழிந்து விண்ணுளோர்கள் 
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்  
        தேவர்களே தேரதாக 
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்  
        அரியெரிகால் வாளியாக 
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த  
        முதல்வனிடம் முதுகுன்றமே.   
     | 
 1.131.4
   | 
 1409    | 
 இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்  
        ஒருபாலா யொருபாலெள்கா 
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்  
        பிடமென்பர் உம்பரோங்கு 
கழைமேவு மடமந்தி மழைகண்டு  
        மகவினொடும் புகவொண்கல்லின் 
முழைமேவு மால்யானை இரைதேரும்  
        வளர்சாரல் முதுகுன்றமே.    
      | 
 1.131.5
   | 
 1410  | 
 நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த  
        நாதனிடம் நன்முத்தாறு 
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு 
        கரையருகு மறியமோதி 
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு  
        நீர்குவளை சாயப்பாய்ந்து 
முகையார்செந் தாமரைகள் முகம்மலர  
        வயல்தழுவு முதுகுன்றமே.     
       | 
 1.131.6
   | 
 1411    | 
 அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்  
        இருந்தருளி யமரர்வேண்ட 
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்  
        ஒன்றறுத்த நிமலர்கோயில் 
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்  
        கெழிற்குறவர் சிறுமிமார்கள் 
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி  
        முத்துலைப்பெய் முதுகுன்றமே.  
    | 
 1.131.7
   | 
 1411  | 
 கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்  
        இலங்கையர்கோன் கண்ணும்வாயும் 
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை  
        மலையைநிலை பெயர்த்தஞான்று 
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்  
        றூன்றிமறை பாடவாங்கே 
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்  
        வாய்ந்தபதி முதுகுன்றமே.   
     | 
 1.131.8
   | 
 1413    | 
 பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்  
        பூந்துழாய் புனைந்தமாலும் 
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்  
        துறநாடி யுண்மைகாணாத் 
தேவாருந் திருவுருவன் சேருமலை  
        செழுநிலத்தை மூடவந்த 
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ  
        மேலுயர்ந்த முதுகுன்றமே.    
      | 
 1.131.9
   | 
 1414    | 
 மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்  
        டுடையாரும் விரவலாகா 
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்  
        உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர் 
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை  
       முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று 
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து  
        தவம்புரியும் முதுகுன்றமே.   
     | 
 1.131.10
   | 
 1415    | 
 முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்  
        முதுகுன்றத் திறையைமூவாப் 
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய  
        கழுமலமே பதியாக்கொண்டு 
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான  
        சம்பந்தன் சமைத்தபாடல் 
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்  
        நீடுலகம் ஆள்வர்தாமே.                    
                      | 
 1.131.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.132 திருவீழிமிழலை
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1416  | 
 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்  
        கீரிருவர்க் கிரங்கிநின்று 
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்  
       நெறியளித்தோன் நின்றகோயில் 
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்  
        பயின்றோது மோசைகேட்டு 
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்  
        பொருள்சொல்லும் மிழலையாமே.  | 
	 1.132.1  | 
 
 1417    | 
 பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்  
        தாகப்புத் தேளிர்கூடி 
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட  
        கண்டத்தோன் மன்னுங்கோயில் 
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு  
        மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல் 
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்  
        வீற்றிருக்கும் மிழலையாமே.     
       | 
 1.132.2
   | 
 1418    | 
 எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்  
        புரமூன்றும் எழிற்கண்நாடி 
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்  
        சிலைவளைத்தோன் உறையுங்கோயில் 
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்  
        முகங்காட்டக் குதித்துநீர்மேல் 
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்  
        வாய்காட்டும் மிழலையாமே.    
      | 
 1.132.3
   | 
 1419    | 
 உரைசேரும் எண்பத்து நான்குநூ  
        றாயிரமாம் யோனிபேதம் 
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்  
        அங்கங்கே நின்றான்கோயில் 
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல  
        நடமாட வண்டுபாட 
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்  
        கையேற்கும் மிழலையாமே.    
      | 
 1.132.4
   | 
 1420    | 
    காணுமா றரியபெரு மானாகிக்  
        காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப் 
பேணுமூன் றுருவாகிப் பேருலகம்  
        படைத்தளிக்கும் பெருமான்கோயில் 
தாணுவாய் நின்றபர தத்துவனை  
        உத்தமனை இறைஞ்சீரென்று 
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப  
        போலோங்கு மிழலையாமே. 
	   | 
 1.132.5
   | 
 1421    | 
 அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்  
        றைம்புலனும் அடக்கிஞானப் 
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்  
        துள்ளிருக்கும் புராணர்கோயில் 
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்  
        கந்திகழச் சலசத்தீயுள் 
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட  
        மணஞ்செய்யும் மிழலையாமே.  
    | 
 1.132.6
   | 
 1422    | 
 ஆறாடு சடைமுடியன் அனலாடு  
        மலர்க்கையன் இமயப்பாவை 
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்  
        குணமுடையோன் குளிருங்கோயில் 
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி  
        மதுவுண்டு சிவந்தவண்டு 
வேறாய உருவாகிச் செவ்வழிநற்  
        பண்பாடும் மிழலையாமே.    
      | 
 1.132.7
   | 
 1423    | 
 கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்  
        கைமறித்துக் கயிலையென்னும் 
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்  
        நெரித்தவிரற் புனிதர்கோயில் 
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த  
        சக்கரத்தை வேண்டியீண்டு 
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி  
        விமானஞ்சேர் மிழலையாமே. 
   | 
 1.132.8
   | 
 1424    | 
 செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்  
        ஏனமொடு அன்னமாகி 
அந்தமடி காணாதே அவரேத்த  
        வெளிப்பட்டோ ன் அமருங்கோயில் 
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி  
        நெய்சமிதை கையிற்கொண்டு 
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்  
        சேருமூர் மிழலையாமே.     
       | 
 1.132.9
   | 
 1425    | 
 எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்  
        சாக்கியரும் என்றுந்தன்னை 
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்  
        கருள்புரியும் நாதன்கோயில் 
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்  
        பாராட்டும் ஓசைகேட்டு 
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ  
        டும்மிழியும் மிழலையாமே.  
    | 
 1.132.10
   | 
 1426    | 
 மின்னியலும் மணிமாடம் மிடைவீழி  
        மிழலையான் விரையார்பாதஞ் 
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்  
        செழுமறைகள் பயிலும்நாவன் 
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்  
        பரிந்துரைத்த பத்துமேத்தி 
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்  
        ஈசனெனும் இயல்பினோரே.                   
                     | 
 1.132.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.133 திருவேகம்பம் 
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1427  | 
 
 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக் 
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள் 
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி 
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே. 
   | 
	 1.133.1  | 
 
 1428    | 
 வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச் 
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம் 
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந் 
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.  | 
 1.133.2
   | 
 1429    | 
 வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து 
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம் 
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள் 
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 
   | 
 1.133.3
   | 
 1430    | 
 தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து 
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம் 
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள் 
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.  | 
 1.133.4
   | 
 1431    | 
 தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து 
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ 
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி 
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.  | 
 1.133.5
   | 
 1432    | 
 சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய் 
தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து 
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள் 
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.      
        | 
 1.133.6
   |   
     | 
 (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  | 
 1.133.7
   | 
 1433    | 
 வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து 
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந் 
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர் 
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.  
    | 
 1.133.8
   | 
 1434    | 
 பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான் 
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம் 
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள் 
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.  | 
 1.133.9
   | 
 1435    | 
 குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும் 
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின் 
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக் 
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.  | 
 1.133.10
   | 
 1436    | 
 ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை 
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள் 
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார் 
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.   
     | 
 1.133.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம் 
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1437  | 
 
 கருத்தன் கடவுள் கனலேந் தியாடும் 
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன் 
திருத்த முடையார் திருப்பறி யலூரில் 
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.  | 
	 1.134.1  | 
 
 1438    | 
 மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் 
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான் 
திருந்து மறையோர் திருப்பறி யலூரில் 
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.   
     | 
 1.134.2
   | 
 1439    | 
 குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் 
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான் 
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.                
                  | 
 1.134.3
   | 
 1440    | 
 பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் 
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன் 
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில் 
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.              
                | 
 1.134.4
   | 
 1441  | 
 கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி 
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும் 
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.         
           | 
 1.134.5
   | 
 1442    | 
 அரவுற்ற நாணா அனலம்ப தாகச் 
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான் 
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில் 
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.     
       | 
 1.134.6
   | 
 1443    | 
 நரையார் விடையான் நலங்கொள் பெருமான் 
அரையா ரரவம் அழகா வசைத்தான் 
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில் 
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.  
    | 
 1.134.7
   | 
 1444    | 
 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ் 
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம் 
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில் 
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.    
      | 
 1.134.8
   | 
 1445    | 
 வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன் 
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான் 
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும் 
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.   
     | 
 1.134.9
   | 
 1446    | 
 சடையன் பிறையன் சமண்சாக் கியரோ 
டடையன் பிலாதான் அடியார் பெருமான் 
உடையன் புலியின் உரிதோல் அரைமேல் 
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.   
     | 
 1.134.10
   | 
 1447    | 
 நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன் 
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப் 
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க் 
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.               
                 | 
 1.134.11
  | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
 
1.135 திருப்பராய்த்துறை
    
 
  பண் - மேகராகக்குறிஞ்சி      
      
| 
 1448  | 
 
 நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை 
கூறுசேர்வதொர் கோலமாய்ப் 
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை 
ஆறுசேர்சடை அண்ணலே.                 
                   | 
	 1.135.1  | 
 
 1449    | 
 கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை 
வந்தபூம்புனல் வைத்தவர் 
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை 
அந்தமில்ல அடிகளே.          
            | 
 1.135.2
   | 
 1450  | 
 வேதர்வேதமெல் லாமுறையால்விரித் 
தோதநின்ற ஒருவனார் 
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை 
ஆதியாய அடிகளே.   
     | 
 1.135.3
   | 
 1451  | 
 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு 
நூலுந்தாமணி மார்பினர் 
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை 
ஆலநீழல் அடிகளே.   
     | 
 1.135.4
   | 
 1452  | 
 விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல் 
இரவில்நின்றெரி யாடுவர் 
பரவினாரவர் வேதம்பராய்த்துறை 
அரவமார்த்த அடிகளே. 
   | 
 1.135.5
   | 
 1453  | 
 மறையுமோதுவர் மான்மறிக்கையினர் 
கறைகொள்கண்ட முடையவர் 
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை 
அறையநின்ற அடிகளே. 
   | 
 1.135.6
   | 
 1454  | 
 விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர் 
சடையிற்கங்கை தரித்தவர் 
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை 
அடையநின்ற அடிகளே.  | 
 1.135.7
   | 
 1455  | 
 தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை 
நெருக்கினார்விர லொன்றினால் 
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை 
அருக்கன்றன்னை அடிகளே.        
          | 
 1.135.8
   | 
 1456  | 
 நாற்றமாமல ரானொடுமாலுமாய்த் 
தோற்றமும் மறியாதவர் 
பாற்றினார்வினை யானபராய்த்துறை 
ஆற்றல்மிக்க அடிகளே.  | 
 1.135.9
   | 
 1457  | 
 திருவிலிச்சில தேரமண்ஆதர்கள் 
உருவிலாவுரை கொள்ளேலும் 
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை 
மருவினான்றனை வாழ்த்துமே.  | 
 1.135.10
   | 
 1458  | 
 செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் 
செல்வர்மேற் சிதையாதன 
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ் 
செல்வமாமிவை செப்பவே.                      
                        | 
 1.135.11
 
 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.  
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர்,   தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை. 
 
 | 
 
 
  
திருச்சிற்றம்பலம்
   
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  
      
1.136 திருத்தருமபுரம் 
    
 
       பண் - யாழ்மூரி       
       
| 
 1459  | 
 மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் 
  
        
	நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் 
	
        
	 அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் 
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 
	
        
	 இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே 
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை 
	
        
	 எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 
	   | 
	 1.136.1  | 
 
 1460  | 
 பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண் 
        
	பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள 
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர் 
	
        
	 வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர் 
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந் 
	
        
	 தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல் 
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின் 
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.         
           | 
 1.136.2
   | 
 1461  | 
 விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ 
        
	டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக் 
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர் 
	
        
 கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப் 
   பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ் 
        
 வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார் 
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் 
        
	கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.             
               | 
 1.136.3
   | 
 1462  | 
 வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர் 
 
        
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர் 
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர் 
        
 கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர் 
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர் 
        
 படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார் 
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர் 
        
 தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.           
             | 
 1.136.4
   | 
 1463  | 
 நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக் 
 
        
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர் 
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப் 
        
 பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார் 
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ் 
        
	 வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல் 
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை 
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.              
                | 
 1.136.5
   | 
 1464  | 
 கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல் 
  
        
	குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய் 
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர் 
	
        
 வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள் 
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந் 
        
	 துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற் 
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப் 
	
        
 புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.             
               | 
 1.136.6
   | 
 1465  | 
 தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித் 
 
        
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய 
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை 
        
 தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர் 
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங் 
        
 கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே 
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர் 
        
 வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.             
               | 
 1.136.7
   | 
 1466  | 
 தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல் 
 
        
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர் 
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர் 
        
	 கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர் 
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக் 
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர் 
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங் 
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.     
       | 
 1.136.8
   | 
 1467  | 
 வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் 
  
        
	வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர் 
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை 
	
        
 குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர் 
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம் 
        
 மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார் 
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந் 
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.            
              | 
 1.136.9
   | 
 1468  | 
 புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம் 
 
        
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர் 
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர் 
        
 நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர் 
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி 
        
 புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார் 
   தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந் 
        
 தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.          
            | 
 1.136.10
   | 
 1469  | 
 பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி 
 
        
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற் 
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ 
        
 துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப் 
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை 
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார் 
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் 
    
 உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.                   
                     | 
 1.136.11
  | 
திருச்சிற்றம்பலம்
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த 
          தேவாரப் பதிகங்கள் 
   முதல் திருமுறை முற்றும்.