உள்ளுறை
 
 
	
 
 
     
      
	 
3.001. கோயில் 
 
         
         பண் - காந்தாரபஞ்சமம்    
         திருச்சிற்றம்பலம்
	
| 
 1    | 
  ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்  
 அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் 
	நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே 
	பாடினாய்மறை யோடுபல் கீதமும்  
 பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் 
	சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.          | 
	 01  | 
 
 2.              | 
 கொட்டமேகம ழுங்குழ லாளொடு  
 கூடினாயெரு தேறினாய் நுதல் 
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா 
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை  
 நல்லவர்பிரி யாதசிற் றம்பலம் 
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ.                                | 
 02
   | 
 3.  |   
 நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல  
 நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று 
சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார் 
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்  
 சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் 
கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே.                              | 
 03
   | 
 4.              | 
 கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்  
 கோலவாண்மதி போல முகத்திரண் 
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான் 
கம்பலைத்தெழு காமுறு காளையர்  
 காதலாற்கழற் சேவடி கைதொழ 
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.                    | 
 04
   | 
 5.  |   
 தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்  
 தூமணிமிட றாபகு வாயதோர் 
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா 
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்  
 சேர்தலாற்கழற் சேவடி கைதொழ 
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே.                                  | 
 05
   | 
 6.  |   
 ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்  
 அங்கையாய்அம ரர்க்கம ராஉமை 
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா 
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்  
 மன்னினாய்மழு வாளினாய் அழல் 
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே.                                  | 
 06
   | 
 7.  |   
 சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய  
சங்கவார்குழை யாய்திக ழப்படும் 
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள் 
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்  
அங்கையாற்றொழ வல்லடி யார்களை 
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே.                                                        | 
 07
   | 
 8.              | 
 வேயினார்பணைத் தோளியொ டாடலை  
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு 
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே 
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த  
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம் 
மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே.                      | 
 08
   | 
 9.  | 
 தாரினார்விரி கொன்றை யாய்மதி  
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல 
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட் 
சீரினால்வழி பாடொழி யாததோர்  
செம்மையாலழ காயசிற் றம்பலம் 
ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே.                            | 
 09
   | 
 10.            | 
 வெற்றரையுழல் வார்துவ ராடைய  
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின் 
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார் 
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்  
காதலாற்கழற் சேவடி கைதொழ 
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே.                              | 
 10
   | 
 11.  |  
 நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்  
நாண்மறைவல்ல ஞானசம் பந்தன் 
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள் 
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்  
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை 
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.                                                        | 
 11
  | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
     
     
     உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
  	
  
     
     
      
		 
	3. 002 திருப்பூந்தராய் 
 
 
 பண் - காந்தாரபஞ்சமம்
		திருச்சிற்றம்பலம் 
	
| 
 12  | 
  பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்  
	வாயினாள்பனி மாமதி போல்முகத் 
	தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான் 
	வந்துசேர்விடம் வானவ ரெத்திசை  
	யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர் 
	புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.        | 
	 01  | 
 
 13.  |  
 காவியங்கருங் கண்ணி னாள்கனித்  
தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத் 
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள் 
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்  
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி 
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.                      | 
 02
   | 
 14.  |  
 பையராவரும் அல்குல் மெல்லியல்  
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத் 
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ் 
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்  
தேறலூறலின் சேறுல ராதநற் 
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே.                          | 
 03
   | 
 15.            | 
 முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்  
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந் 
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை 
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்  
மேவினார்பதி வீமரு தண்பொழிற் 
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே.                  | 
 04
   | 
 16.            | 
 பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்  
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர் 
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார் 
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு  
நீலமல்கிய காமரு வாவிநற் 
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே.      | 
 05
   | 
 17.            | 
 வாணிலாமதி போல்நுத லாள்மட  
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை 
பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ் 
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்  
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ் 
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.                            | 
 06
   | 
 18.            | 
 காருலாவிய வார்குழ லாள்கயற்  
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை 
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய் 
நீருலாவிய சென்னி யன்மன்னி  
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி 
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.          | 
 07
   | 
 19.  |  
 காசைசேர்குழ லாள்கய லேர்தடங்  
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத் 
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத் 
தீசன்மேவும் இருங்கயி லையெடுத்  
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி 
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.                            | 
 08
   | 
 20.  |  
 கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை  
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை 
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய் 
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்  
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு 
பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே.              | 
 09
   | 
 21.            | 
 கலவமாமயி லார்இய லாள்கரும்  
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற் 
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால் 
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்  
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற் 
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.                              | 
 10
   | 
 22.  |  
 தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன  
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர் 
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென் 
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை  
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண் 
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.                                | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 003 திருப்புகலி  
  
    நாலடிமேல் வைப்பு 
 	பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 23  | 
  இயலிசை யெனும்பொரு ளின்திறமாம் 
	புயலன மிடறுடைப் புண்ணியனே 
	கயலன அரிநெடுங் கண்ணியொடும் 
	அயலுல கடிதொழ அமர்ந்தவனே 
     கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள் 
     நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.      | 
	 01  | 
 
 24.  |  
 நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம் 
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம் 
மலையினில் அரிவையை வெருவவன்தோல் 
அலைவரு மதகரி யுரித்தவனே 
     இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி 
     உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.                      | 
 02
   | 
 25.            | 
 பாடினை அருமறை வரல்முறையால் 
ஆடினை காணமுன் அருவனத்திற் 
சாடினை காலனைத் தயங்கொளிசேர் 
நீடுவெண் பிறைமுடி நின்மலனே 
     நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர் 
     தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.        | 
 03
   | 
 26.            | 
 நிழல்திகழ் மழுவினை யானையின்தோல் 
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே 
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல 
முழவொடும் அருநட முயற்றினனே 
     முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி 
     அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.                              | 
 04
   | 
 27.            | 
 கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட 
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன் 
பெருமையை நிலத்தவர் பேசினல்லால் 
அருமையில் அளப்பரி தாயவனே 
     அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப் 
     பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.  | 
 05
   | 
 28.            | 
 அடையரி மாவொடு வேங்கையின்தோல் 
புடைபட அரைமிசைப் புனைந்தவனே 
படையுடை நெடுமதிற் பரிசழித்த 
விடையுடைக் கொடிமல்கு வேதியனே 
     விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித் 
     தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.      | 
 06
   | 
 29.  |  
 அடியவர் தொழுதெழ அமரரேத்தச் 
செடியவல் வினைபல தீர்ப்பவனே 
துடியிடை அகலல்குல் தூமொழியைப் 
பொடியணி மார்புறப் புல்கினனே 
     புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர் 
     நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.        | 
 07
   | 
 30.  |  
 இரவொடு பகலதாம் எம்மானுன்னைப் 
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன் 
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த 
அரவிரி சடைமுடி ஆண்டகையே 
     அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை 
     இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.        | 
 08
   | 
 31.            | 
 உருகிட வுவகைதந் துடலினுள்ளால் 
பருகிடும் அமுதன பண்பினனே 
பொருகடல் வண்ணனனும் பூவுளானும் 
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய் 
     உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ் 
     வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.                          | 
 09
   | 
 32.  |  
 கையினி லுண்பவர் கணிகைநோன்பர் 
செய்வன தவமலாச் செதுமதியார் 
பொய்யவ ருரைகளைப் பொருளெனாத 
மெய்யவ ரடிதொழ விரும்பினனே 
     வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி 
     உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.  | 
 10
   | 
 33.  |  
 புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர் 
விண்ணவ ரடிதொழ விளங்கினானை 
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை 
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார் 
     நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம் 
     இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.                        | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 004 திருவாவடுதுறை  
    
        நாலடிமேல் வைப்பு 
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 34    | 
  இடரினுந் தளரினும் எனதுறுநோய் 
	தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் 
	கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை 
	மிடறினில் அடக்கிய வேதியனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.                  | 
	 01  | 
 
 35.    |         
 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் 
வீழினும் உனகழல் விடுவேனல்லேன் 
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் 
போழிள மதிவைத்த புண்ணியனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.                                  | 
 02
   | 
 36.    |                 
 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை 
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் 
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த 
கனலெரி யனல்புல்கு கையவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.    | 
 03
   | 
 37.    |         
 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் 
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் 
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் 
மும்மதிள் எரியெழ முனிந்தவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.    | 
 04
   | 
 38.    |         
 கையது வீழினுங் கழிவுறினுஞ் 
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் 
கொய்யணி நறுமலர் குலாயசென்னி 
மையணி மிடறுடை மறையவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.                    | 
 05
   | 
 39.              | 
 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் 
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா 
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த 
சந்தவெண் பொடியணி சங்கரனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.                    | 
 06
   | 
 40.    |         
 வெப்பொடு விரவியோர் வினைவரினும் 
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா 
ஒப்புடை யொருவனை உருவழிய 
அப்படி அழலெழ விழித்தவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.                    | 
 07
   | 
 41.    |         
 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் 
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் 
ஏருடை மணிமுடி இராவணனை 
ஆரிடர் படவரை யடர்த்தவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.                    | 
 08
   | 
 42.    |         
 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் 
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் 
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் 
அண்ணலும் அளப்பரி தாயவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.                  | 
 09
   | 
 43.    |         
 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் 
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் 
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் 
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.                                  | 
 10
   | 
 44.    |         
 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த 
இலைநுனை வேற்படை யெம்மிறையை 
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன 
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் 
     இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
     அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.                                    | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 005 திருப்பூந்தராய்  
        
       ஈரடிமேல் வைப்பு 
 	பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 45  |  
  தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் 
	மிக்க செம்மை விமலன் வியன்கழல் 
    சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி 
    நன்ற தாகிய நம்பன்தானே.                                    | 
	 01  | 
 
 46.              | 
 புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் 
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ 
    ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி 
    மூல மாய முதல்வன்தானே.                                                        | 
 02
   | 
 47.    |         
 வேந்த ராயுல காள விருப்புறிற் 
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல் 
    நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச் 
    சாதி யாவினை யானதானே.                                  | 
 03
   | 
 48.    |         
 பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் 
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச் 
    சிந்தை நோயவை தீர நல்கிடும் 
    இந்து வார்சடை யெம்மிறையே.                                                | 
 04
   | 
 49.    |         
 பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய் 
மலிந்த புந்திய ராகி வணங்கிட 
    நுந்தம் மேல்வினை யோட வீடுசெய் 
    எந்தை யாயஎம் ஈசன்தானே.                                                    | 
 05
   | 
 50.    |         
 பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய் 
நாதன் சேவடி நாளும் நவின்றிட 
    நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல் 
    பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.                                | 
 06
   | 
 51.    | 
 புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய் 
பற்றி வாழும் பரமனைப் பாடிடப் 
    பாவ மாயின தீரப் பணித்திடுஞ் 
    சேவ தேறிய செல்வன்தானே.                                  | 
 07
   | 
 52.    |         
 போத கத்துரி போர்த்தவன் பூந்தராய் 
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால் 
    அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள் 
    பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.                              | 
 08
   | 
 53.              | 
 மத்த மான இருவர் மருவொணா 
அத்த னானவன் மேவிய பூந்தராய் 
    ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை 
    மாளு மாறருள் செய்யுந்தானே.                                                  | 
 09
   | 
 54.    |         
 பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந் 
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப் 
    பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை 
    ஏந்து மான்மறி யெம்மிறையே.                                                | 
 10
   | 
 55.    |         
 புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய் 
அந்த மில்லெம் மடிகளை ஞானசம் 
    பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும் 
    பந்த மார்வினை பாறிடுமே.                  | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 006 திருக்கொள்ளம்பூதூர்  
     
     ஈரடிமேல் வைப்பு 
 	பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 56  | 
  கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் 
	நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                                          | 
	 01  | 
 
 57.  |          
 கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர் 
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                          | 
 02
   | 
 58.  |          
 குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர் 
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 03
   | 
 59.            |  
 குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த் 
தவள நீறணி தலைவனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 04
   | 
 60.  |          
 கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர் 
நின்ற புன்சடை நிமலனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 05
   | 
 61.  |          
 ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர் 
ஆடல் பேணிய அடிகளை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 06
   | 
 62.            |  
 ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர் 
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 07
   | 
 63.  |          
 குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர் 
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 08
   | 
 64.            |  
 பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர் 
இருவர் காண்பரி யான்கழ லுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 09
   | 
 65.            |  
 நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த் 
தேர மண்செற்ற செல்வனை யுள்கச் 
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
    நல்கு மாறருள் நம்பனே.                                                                          | 
 10
   | 
 66.            |  
 கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர் 
நன்று காழியுள் ஞானசம் பந்தன் 
    இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய் 
    என்றும் வானவ ரோடிருப்பாரே.                                                                                | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வில்வவனேசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
	இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
	கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3.007 திருப்புகலி 
 
 	பண் - காந்தாரபஞ்சமம்<  
திருச்சிற்றம்பலம் 
	
| 
 67    | 
  கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ 
	லார்க்கவே 
	பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும் 
	புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப் 
	பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.        | 
	 01  | 
 
 68.  |          
 சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை 
யின்மிசைப் 
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும் 
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர் 
காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே.                                                  | 
 02
   | 
 69.            |     
 கருப்புநல் வார்சிலைக் காமன்வே 
வக்கடைக் கண்டானும் 
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும் 
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர் 
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.                                        | 
 03
   | 
 70.  |          
 அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ 
காகவே 
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப் 
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர் 
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.                                | 
 04
   | 
 71.  |          
 சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித 
கர்த்தானும் 
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும் 
பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க் 
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.                                                  | 
 05
   | 
 72.  |          
 இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை 
யோர்தொழச் 
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும் 
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர் 
அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.                                | 
 06
   | 
 73.  |          
 சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் 
பாலன்மேல் 
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை 
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர் 
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.                                | 
 07
   | 
 74.            |     
 கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் 
கண்டானும் 
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு 
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர் 
அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.                  | 
 08
   | 
 75.  |          
 பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் 
புக்குழித் 
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும் 
புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர் 
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.                            | 
 09
   | 
 76.  |          
 பிண்டியும் போதியும் பேணுவார் 
பேச்சினைப் பேணாததோர் 
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான் 
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர் 
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.                                  | 
 10
   | 
 77.  |  
 பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக 
லிந்நகர்ப் 
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை 
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர் 
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.                            | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 008 திருக்கடவூர்வீரட்டம்  
  
 	பண் - காந்தாரபஞ்சமம்   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 78  | 
  சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி 
	கோவண 
	உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங் 
	கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள் 
	விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.                  | 
	 01  | 
 
 79.            |     
 எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு 
தேறியும் 
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே 
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள் 
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.                                | 
 02
   | 
 80.  |          
 நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் 
போதின்கண் 
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங் 
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே 
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.                    | 
 03
   | 
 81.  |          
 மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.                | 
 04
   | 
 82.            |     
 சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா 
னுஞ்சுழல் வாயதோர் 
படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங் 
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள் 
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.    | 
 05
   | 
 83.            |     
 பண்பொலி நான்மறை பாடியா டிப்பல 
வூர்கள்போய் 
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய 
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள் 
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.                | 
 06
   | 
 84.  |          
 செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ 
மூர்த்தியும் 
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங் 
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள் 
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.                    | 
 07
   | 
 85.            |     
 அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது 
தோள்தச 
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங் 
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள் 
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.                                | 
 08
   | 
 86.  |          
 வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் 
போதின்கண் 
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே 
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள் 
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.                            | 
 09
   | 
 87.  |          
 தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி 
யாததோர் 
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான் 
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள் 
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.                                    | 
 10
   | 
 88.  |          
 வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை 
வேந்தனை 
அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான் 
சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம் 
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.                                                  | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 009 திருவீழிமிழலை
       
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 89    | 
  கேள்வியர் நாடொறும் ஓதும்நல் 
	வேதத்தர் கேடிலா 
	வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார் 
	வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம் 
	ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.                              | 
	 01  | 
 
 90.            |     
 கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் 
தேத்திய 
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார் 
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின் 
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.                                  | 
 02
   | 
 91.  |          
 நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக 
னைச்செற்ற 
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார் 
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய 
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.                  | 
 03
   | 
 92.  |  
 கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை 
குண்டலம் 
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார் 
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் 
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.              | 
 04
   | 
 93.            |     
 பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை 
நச்சியே 
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார் 
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள் 
இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.          | 
 05
   | 
 94.  |          
 வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய் 
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார் 
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத் 
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.                        | 
 06
   | 
 95.            |     
 சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் 
மூவிரு தொன்னூலர் 
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார் 
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ 
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.                  | 
 07
   | 
 96.  |          
 எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் 
வீழ்தர 
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார் 
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக் 
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.  | 
 08
   | 
 97.  |          
 திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் 
தேடிட 
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார் 
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும் 
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.                              | 
 09
   | 
 98.  |          
 துற்றரை யார்துவ ராடையர் துப்புர 
வொன்றிலா 
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார் 
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான் 
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.                                | 
 10
   | 
 99.  |          
 வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய 
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந் 
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர் 
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.                                        | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 010 திருஇராமேச்சுரம் 
  
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 100      | 
  அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை 
	முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி 
	இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம் 
	தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.          | 
	 01  | 
 
 101.  |         
 தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச 
மாமுகன் 
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற 
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.                                          | 
 02
   | 
 102.  |         
 மானன நோக்கிவை தேகிதன் னையொரு 
மாயையால் 
கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன் 
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.                              | 
 03
   | 
 103.  |         
 உரையுண ராதவன் காமமென் னும்முறு 
வேட்கையான் 
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய 
விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத் 
தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.              | 
 04
   | 
 104.  |         
 ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல 
வூர்தொறும் 
வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர் 
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம் 
பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.                            | 
 05
   | 
 105.  |         
 அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி 
செய்தவன் 
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய 
இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந் 
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.                              | 
 06
   | 
 106.          | 
 சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல 
தீயன 
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட 
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.                      | 
 07
   | 
 107.  |         
 பெருவரை யன்றெடுத் தேந்தினான் 
தன்பெயர் சாய்கெட 
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும் 
இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத் 
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.                                  | 
 08
   | 
 
  |     
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.    
      | 
 09
   | 
 108.          | 
 சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு 
மாற்றத்தார் 
வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால் 
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.                              | 
 10
   | 
 109.  |         
 பகலவன் மீதியங் காமைக்காத் தபதி 
யோன்தனை 
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம் 
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் 
அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.                      | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 011 திருப்புனவாயில் 
     
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 110      | 
  மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி 
	நூலினன் 
	பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய் 
	அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம் 
	புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.            | 
	 01  | 
 
 111.  |                 
 விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை 
யேறிப்போய் 
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங் 
கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப் 
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.                              | 
 02
   | 
 112.  |                 
 விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் 
பாரிடம் 
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற் 
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப் 
படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.                                                | 
 03
   | 
 113.  |         
 சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே 
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே 
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற் 
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.            | 
 04
   | 
 114.  |                 
 கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் 
கண்டனும் 
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில் 
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும் 
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.                              | 
 05
   | 
 115.          |     
 வாருறு மென்முலை மங்கைபா டநட 
மாடிப்போய்க் 
காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர் 
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற் 
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.                    | 
 06
   | 
 116.  |                 
 பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் 
காட்டிடைத் 
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப் 
பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில் 
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.              | 
 07
   | 
 117.  |                 
 மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட 
வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய 
இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய 
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.            | 
 08
   | 
 118.          |     
 திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் 
பாற்கடற் 
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம் 
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய 
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.              | 
 09
   | 
 119.          |     
 போதியெ னப்பெய ராயினா ரும்பொறி 
யில்சமண் 
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின் 
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில் 
வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.            | 
 10
   | 
 120.  |         
 பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன 
வாயிலைக் 
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான் 
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால் 
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.                              | 
 11
  | 
	
	இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்,தேவியார் - கருணையீசுவரியம்மை.
 
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 012 திருக்கோட்டாறு 
     
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 121      | 
  வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் 
	கும்மறை 
	ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி 
	கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் 
	ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.                        | 
	 01  | 
 
 122.          | 
 ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம 
வான்மகள் 
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங் 
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள் 
ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.                                      | 
 02
   | 
 123.  |         
 இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை 
யோர்தொழ 
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங் 
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் 
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.                                    | 
 03
   | 
 124.  |         
 ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை 
பங்கனும் 
வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந் 
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் 
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.                    | 
 04
   | 
 125.  |         
 வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் 
மைந்தனுஞ் 
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங் 
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள் 
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.            | 
 05
   | 
 126.          | 
 பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு 
பாகமா 
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங் 
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் 
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.                          | 
 06
   | 
 127.  |         
 துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் 
வண்ணனும் 
வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந் 
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் 
அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.                      | 
 07
   | 
 128.  |         
 இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் 
கைக்கிறை 
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன் 
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் 
அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.                                  | 
 08
   | 
 129.          | 
 ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை 
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற் 
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள் 
ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.                        | 
 09
   | 
 130.  |         
 கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் 
லாததோர் 
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள் 
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள் 
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.          | 
 10
   | 
 131.  |         
 கொடியுயர் மால்விடை யூர்தியி 
னான்திருக் கோட்டாற்றுள் 
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக் 
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற் 
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.                                          | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்,
	தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
 
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 013 திருப்பூந்தராய்  
     
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 132      | 
  மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந் 
	துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர் 
	புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர் 
	அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.                  | 
	 01  | 
 
 133.          | 
 மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை 
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர் 
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர் 
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.                              | 
 02
   | 
 134.          | 
 தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப் 
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர் 
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க் 
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.                                              | 
 03
   | 
 135.  |         
 நாகமும் வரையுமே நாணும் வில்லுமா 
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் 
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப் 
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.          | 
 04
   | 
 136.  |         
 வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர் 
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர் 
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க் 
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.                | 
 05
   | 
 137.  |         
 துங்கியல் தானவர் தோற்ற மாநகர் 
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர் 
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர் 
அங்கய லனகணி அரிவை பங்கரே.                                    | 
 06
   | 
 138.  |         
 அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக் 
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார் 
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர் 
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.                            | 
 07
   | 
 139.  |         
 மாசின அரக்கனை வரையின் வாட்டிய 
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார் 
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க் 
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.            | 
 08
   | 
 140.          | 
 தாமுக மாக்கிய அசுரர் தம்பதி 
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும் 
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க் 
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே                              | 
 09
   | 
 141.  |         
 முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் 
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண் 
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க் 
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.                              | 
 10
   | 
 142.          | 
 புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப் 
பரமலி குழலுமை நங்கை பங்கரைப் 
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர் 
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.                            | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 014 திருப்பைஞ்ஞீலி 
     
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 143    | 
  ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால் 
	ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம் 
	நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும் 
	பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.      | 
	 01  | 
 
 144.  |         
 மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை 
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான் 
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத் 
திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.                        | 
 02
   | 
 145.  |         
 அஞ்சுரும் பணிமலர் அமுதம் 
மாந்தித்தேன் 
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான் 
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர் 
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.                          | 
 03
   | 
 146.  |         
 கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல் 
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார் 
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர் 
ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே.                    | 
 04
   | 
 147.  |         
 விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை 
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான் 
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான் 
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.    | 
 05
   | 
 148.  |         
 விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப் 
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான் 
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச் 
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.                          | 
 06
   | 
 149.  |         
 தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற் 
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா 
மேயவன் வேய்புரை தோளி பாகமா 
ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.        | 
 07
   | 
 150.          | 
 தொத்தின தோள்முடி யுடைய வன்றலை 
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான் 
முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப் 
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.                                                  | 
 08
   | 
 151.  |         
 நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச் 
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர் 
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய 
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.                        | 
 09
   | 
 152.  |         
 பீலியார் பெருமையும் பிடகர் 
நூன்மையுஞ் 
சாலியா தவர்களைச் சாதி யாததோர் 
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ் 
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.                          | 
 10
   | 
 153.  |         
 கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம் 
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன் 
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார் 
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.            | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - விசாலாட்சியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 015 திருவெண்காடு
        
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 154    | 
  மந்திர மறையவை வான வரொடும் 
	இந்திரன் வழிபட நின்ற எம்மிறை 
	வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய 
	அந்தமு முதலுடை அடிக ளல்லரே.                                        | 
	 01  | 
 
 155.  |         
 படையுடை மழுவினர் பாய்புலித் தோலின் 
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர் 
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய 
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.                                            | 
 02
   | 
 156.  |         
 பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர் 
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர் 
மேலவர் பரவுவெண் காடு மேவிய 
ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே.      | 
 03
   | 
 157.  |         
 ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் 
புன்னையுந் 
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில் 
வேழம துரித்தவெண் காடு மேவிய 
யாழின திசையுடை இறைவ ரல்லரே.                                | 
 04
   | 
 158.  |         
 பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர் 
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை 
வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய 
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.              | 
 05
   | 
 159.  |         
 மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் 
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை 
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய 
அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே.                                | 
 06
   | 
 160.  |         
 நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன் 
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல் 
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய 
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.                                    | 
 07
   | 
 161.  |         
 மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி 
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர் 
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய 
அலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே.              | 
 08
   | 
 162.  |         
 ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த் 
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார் 
வேடம துடையவெண் காடு மேவிய 
ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே.                    | 
 09
   | 
 163.  |         
 போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள் 
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார் 
வேதியர் பரவுவெண் காடு மேவிய 
ஆதியை யடிதொழ அல்ல லில்லையே.                | 
 10
   | 
 164.  |         
 நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன் 
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற் 
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர் 
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.                | 
 11
 
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 016 திருக்கொள்ளிக்காடு 
    
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 165    | 
  நிணம்படு சுடலையின் நீறு பூசிநின் 
	றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம் 
	உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங் 
	குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.      | 
	 01  | 
 
 166.  |         
 ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான் 
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள் 
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை 
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.  | 
 02
   | 
 167.  |         
 அத்தகு வானவர்க் காக மால்விடம் 
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே 
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல் 
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.    | 
 03
   | 
 168.  |         
 பாவணம் மேவுசொன் மாலை யிற்பல 
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் 
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங் 
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.      | 
 04
   | 
 169.  |         
 வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ் 
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர் 
நாரணி சிலைதனால் நணுக லார்எயில் 
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.                        | 
 05
   | 
 170.  |         
 பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் 
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும் 
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை 
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.                          | 
 06
   | 
 171.  |         
 இறையுறு வரிவளை இசைகள் பாடிட 
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர் 
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக் 
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.          | 
 07
   | 
 172.          | 
 எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் 
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப் 
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங் 
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.  | 
 08
   | 
 173.  |         
 தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி 
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர் 
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங் 
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.      | 
 09
   | 
 174.  |         
 நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர் 
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல 
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங் 
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.                              | 
 10
   | 
 175.  |         
 நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன் 
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச் 
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக் 
கற்றவர் கழலடி காண வல்லரே.        | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.
 
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 017 திருவிசயமங்கை  
    
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 176      | 
  மருவமர் குழலுமை பங்கர் வார்சடை 
	அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங் 
	குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் 
	விரவிய பொழிலணி விசய மங்கையே.                          | 
	 01  | 
 
 177.  |         
 கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர் 
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர் 
கோதனம் வழிபடக் குலவு நான்மறை 
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.                            | 
 02
   | 
 178.  |         
 அக்கர வரையினர் அரிவை பாகமாத் 
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர் 
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும் 
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.                            | 
 03
   | 
 179.  |         
 தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு 
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர் 
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள் 
விடைமலி கொடியணல் விசய மங்கையே.                          | 
 04
   | 
 180.  |         
 தோடமர் காதினன் துதைந்த நீற்றினன் 
ஏடமர் கோதையோ டினித மர்விடங் 
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர் 
வேடம துடையணல் விசய மங்கையே.                                  | 
 05
   | 
 181.  |         
 மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல் 
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர் 
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர் 
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.              | 
 06
   | 
 182.  |         
 இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால் 
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர் 
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும் 
விரும்பிய சடையணல் விசய மங்கையே.                            | 
 07
   | 
 183.  |         
 உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங் 
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத் 
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன் 
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.      | 
 08
   | 
 184.          | 
 மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை 
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் 
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு 
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.                            | 
 09
   | 
 185.  |         
 கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை 
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார் 
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர் 
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.                          | 
 10
   | 
 186.  |         
 விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை 
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன் 
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் 
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.  | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - விசயநாதேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.
  
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 018 திருவைகன்மாடக்கோயில்  
  
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 187      | 
  துளமதி யுடைமறி தோன்று கையினர் 
	இளமதி யணிசடை எந்தை யாரிடம் 
	உளமதி யுடையவர் வைக லோங்கிய 
	வளமதி தடவிய மாடக் கோயிலே.                                | 
	 01  | 
 
 188.  |         
 மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் 
மையகண் மலைமக ளோடும் வைகிடம் 
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் 
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.                            | 
 02
   | 
 189.          | 
 கணியணி மலர்கொடு காலை மாலையும் 
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் 
தணியணி உமையொடு தாமுந் தங்கிடம் 
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.                        | 
 03
   | 
 190.  |         
 கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் 
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் 
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் 
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.                  | 
 04
   | 
 191.  |         
 விடம்அடை மிடற்றினர் வேத நாவினர் 
மடமொழி மலைமக ளோடும் வைகிடம் 
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் 
குடதிசை நிலவிய மாடக் கோயிலே.                                                            | 
 05
   | 
 192.  |         
 நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை 
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி 
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் 
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.    | 
 06
   | 
 193.          | 
 எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் 
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் 
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை 
வருமுகி லணவிய மாடக் கோயிலே.                                                | 
 07
   | 
 194.  |         
 மலையன இருபது தோளி னான்வலி 
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் 
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் 
வலம்வரு மலையன மாடக் கோயிலே.                | 
 08
   | 
 195.  |         
 மாலவன் மலரவன் நேடி மால்கொள 
மாலெரி யாகிய வரதர் வைகிடம் 
மாலைகொ டணிமறை வாணர் வைகலில் 
மாலன மணியணி மாடக் கோயிலே.                                                                | 
 09
   | 
 196.  |         
 கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் 
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம் 
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர் 
வடமலை யனையநன் மாடக் கோயிலே.              | 
 101
   | 
 197.  |         
 மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் 
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் 
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை 
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.                        | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வைகனாதேசுவரர், தேவியார் - வைகலம்பிகையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 019 திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்  
    
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 198      | 
  எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் 
	நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் 
	அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் 
	குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.      | 
	 01  | 
 
 199.  |         
 மையகண் மலைமகள் பாக மாயிருள் 
கையதோர் கனலெரி கனல ஆடுவர் 
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர் 
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.      | 
 02
   | 
 200.  |         
 மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் 
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர் 
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர் 
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.                                            | 
 03
   | 
 201.  |         
 இரவுமல் கிளமதி சூடி யீடுயர் 
பரவமல் கருமறை பாடி யாடுவர் 
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர் 
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே.            | 
 04
   | 
 202.  |         
 சங்கணி குழையினர் சாமம் பாடுவர் 
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர் 
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச் 
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே.      | 
 05
   | 
 203.          | 
 கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர் 
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர் 
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில் 
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.              | 
 06
   | 
 204.  |         
 இகலுறு சுடரெரி இலங்க வீசியே 
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர் 
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ் 
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே.              | 
 07
   | 
 205.  |         
 எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன 
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர் 
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு 
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.                              | 
 08
   | 
 206.  |         
 வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற் 
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும் 
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர் 
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.      | 
 09
   | 
 207.  |         
 வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய 
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ 
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர் 
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.  | 
 10
   | 
 208.          | 
 அழகரை யடிகளை அம்பர் மேவிய 
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை 
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின் 
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.    | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - பிரமபுரிநாதேசுவரர், தேவியார் - பூங்குழனாயகியம்மை.    
  	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 020 திருப்பூவணம் 
   
       ஈரடிமேல் வைப்பு 
 	பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 209    |  
  மாதமர் மேனிய னாகி வண்டொடு 
	போதமர் பொழிலணி பூவ ணத்துறை 
	வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த 
	நாதனை யடிதொழ நன்மை யாகுமே.                                  | 
	 01  | 
 
 210.  |         
 வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு 
தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை 
ஆனநல் லருமறை யங்கம் ஓதிய 
ஞானனை யடிதொழ நன்மை யாகுமே.                  | 
 02
   | 
 211.  |         
 வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர் 
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை 
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய 
நந்தியை யடிதொழ நன்மை யாகுமே.                | 
 03
   | 
 212.  |         
 வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப் 
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை 
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை 
நாசனை யடிதொழ நன்மை யாகுமே.                  | 
 04
   | 
 213.  |         
 குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை 
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை 
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த 
பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.                                        | 
 05
   | 
 214.          | 
 வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய 
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை 
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன் 
நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே.  | 
 06
   | 
 215.          | 
 பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன் 
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை 
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன் 
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.            | 
 07
   | 
 216.  |         
 வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி 
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன் 
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப் 
பரவிய அடியவர்க் கில்லை பாவமே.                                | 
 08
   | 
 217.  |         
 நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச் 
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர் 
போர்மல்கு மழுவினன் மேய பூவணம் 
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.              | 
 09
   | 
 218.  |         
 மண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங் 
குண்டருங் குணமல பேசுங் கோலத்தர் 
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங் 
கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே.                | 
 10
   | 
 219.  |         
 புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை 
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள் 
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன் 
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.                          | 
 11
  | 
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 021 திருக்கருக்குடி   
       
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 220  | 
  நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி 
	நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன் 
	கனைகடல் வையகந் தொழு கருக்குடி 
	அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.                                            | 
	 01  | 
 
 221.          | 
 வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் 
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன் 
காதியல் குழையினன் கருக்கு டியமர் 
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.                | 
 02
   | 
 222.  |         
 மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி 
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார் 
அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே 
வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.      | 
 03
   | 
 223.          | 
 ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர் 
கானிடை யாடலான் பயில் கருக்குடிக் 
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் 
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.                        | 
 04
   | 
 224.          | 
 சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் 
கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி 
பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள் 
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.      | 
 05
   | 
 225.          | 
 இன்புடை யாரிசை வீணை பூணரா 
என்புடை யாரெழில் மேனி மேலெரி 
முன்புடை யார்முத லேத்தும் அன்பருக் 
கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.                | 
 06
   | 
 226.  |         
 காலமும் ஞாயிறுந் தீயு மாயவர் 
கோலமும் முடியர வணிந்த கொள்கையர் 
சீலமும் உடையவர் திருக் கருக்குடிச் 
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.                  | 
 07
   | 
 227.  |         
 எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை 
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார் 
கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி 
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.          | 
 08
   | 
 228.  |         
 பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர் 
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி 
ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி 
நாமன னினில்வர நினைதல் நன்மையே.            | 
 09
   | 
 229.  |         
 சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி 
ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக் 
காக்கிய அரனுறை யணிக ருக்குடிப் 
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.          | 
 10
   | 
 230.  |         
 கானலில் விரைமலர் விம்மு காழியான் 
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி 
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய 
ஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.                          | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - சற்குணலிங்கேசுவரர், தேவியார் - சர்வாலங்கிரதமின்னம்மை.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம் 
  
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 231    | 
  துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் 
	நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் 
	வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் 
	றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.                                      | 
	 01  | 
 
 232.  |         
 மந்திர நான்மறை யாகி வானவர் 
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன 
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் 
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.                | 
 02
   | 
 233.  |         
 ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் 
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் 
தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர் 
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.                        | 
 03
   | 
 234.          | 
 நல்லவர் தீயரெ னாது நச்சினர் 
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ 
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத் 
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.    | 
 04
   | 
 235.  |         
 கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத் 
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில் 
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை 
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.  | 
 05
   | 
 236.          | 
 தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் 
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் 
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் 
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.                  | 
 06
   | 
 237.  |         
 வீடு பிறப்பை யறுத்து மெச்சினர் 
பீடை கெடுப்பன பின்னை நாடொறும் 
மாடு கொடுப்பன மன்னு மாநடம் 
ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.                          | 
 07
   | 
 238.  |         
 வண்டம ரோதி மடந்தை பேணின 
பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன 
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் 
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.                    | 
 08
   | 
 239.          | 
 கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் 
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் 
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் 
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.                                      | 
 09
   | 
 240.  |         
 புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் 
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின 
வித்தக நீறணி வார்வி னைப்பகைக் 
கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.                      | 
 10
   | 
 241.  |         
 நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை 
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய 
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் 
துற்றன வல்லவர் உம்ப ராவரே.                                        | 
 11
  | 
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 023 திருவிற்கோலம்   
  
 	பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 242    | 
  உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் 
	திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் 
	வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய 
	செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.    | 
	 01  | 
 
 243.  |         
 சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில் 
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால் 
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் 
செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.                        | 
 02
   | 
 244.          | 
 ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும் 
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் 
பையர வல்குலாள் பாக மாகவுஞ் 
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.                        | 
 03
   | 
 245.          | 
 விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை 
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப் 
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ் 
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.  | 
 04
   | 
 246.  |         
 முந்தினான் மூவருள் முதல்வ னாயினான் 
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான் 
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை 
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.                      | 
 05
   | 
 247.          | 
 தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம் 
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான் 
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் 
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.      | 
 06
   | 
 248.  |         
 விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந் 
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற 
எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச் 
சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.                    | 
 07
   | 
 
 
 
  |  
 இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.               
                 | 
 08
   | 
 249.  |         
 திரிதரு புரமெரி செய்த சேவகன் 
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமன தாற்ற லால்உருத் 
தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.                                      | 
 09
   | 
 250.  |         
 சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் 
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் 
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ் 
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.                        | 
 10
   | 
 251.          | 
 கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய 
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை 
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன 
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.                                              | 
 11
  | 
	இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - புராந்தகேசுவரர், தேவியார் - புராந்தரியம்மை.
	இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 024 திருக்கழுமலம்   
    
 	பண் - கொல்லி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 252    | 
  மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் 
	எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் 
	கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் 
	பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.                | 
	 01  | 
 
 253.  |         
 போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் 
லாதெனத் 
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் 
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.                    | 
 02
   | 
 254.          | 
 தொண்டணை செய்தொழில் துயரறுத் 
துய்யலாம் 
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் 
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் 
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.                    | 
 03
   | 
 255.  |         
 அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே 
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங் 
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் 
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.                    | 
 04
   | 
 256.  |         
 அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே 
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங் 
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் 
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.                                  | 
 05
   | 
 257.  |         
 மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல 
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் 
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.    | 
 06
   | 
 258.  |         
 குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே 
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் 
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.                    | 
 07
   | 
 259.  |         
 அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட 
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே 
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப் 
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.                  | 
 08
   | 
 260.  |         
 நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர் 
அடியொடு முடியறி யாவழல் உருவினன் 
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.    | 
 09
   | 
 261.  |         
 தாருறு தட்டுடைச் சமணர்சாக் 
கியர்கள்தம் 
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின் 
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் 
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.      | 
 10
   | 
 262.  |         
 கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் 
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை 
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் 
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.  | 
 11
  | 
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 025 திருந்துதேவன்குடி  
    
 	பண் - கொல்லி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 263    | 
  மருந்துவேண் டில்லிவை மந்திரங் 
	கள்ளிவை 
	புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை 
	திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய 
	அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.      | 
	 01  | 
 
 264.  | 
 வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன 
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன 
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய 
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.              | 
 02
   | 
 265.  | 
 மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன 
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன 
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி 
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.                  | 
 03
   | 
 266.  |         
 செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன 
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன 
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி 
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.            | 
 04
   | 
 267.          | 
 விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி 
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி 
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி 
அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.                | 
 05
   | 
 268.  |         
 பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா 
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந் 
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி 
அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.            | 
 06
   | 
 269.          | 
 கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக் 
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர் 
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி 
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.  | 
 07
   | 
 270.  |         
 உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி 
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின 
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி 
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.                | 
 08
   | 
 271.          | 
 துளக்கமில் லாதன தூயதோற் றத்தன 
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில் 
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால் 
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.        | 
 09
   | 
 272.  |         
 செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள் 
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல் 
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி 
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.                  | 
 10
   | 
 273.          | 
 சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை 
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான் 
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன 
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.    | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர், தேவியார் - அருமருந்துநாயகியம்மை.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 026 திருக்கானப்பேர்   
   
 	பண் - கொல்லி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 274    | 
  பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா 
	மலர்தழீஇ 
	விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங் 
	கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின் 
	அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.          | 
	 01  | 
 
 275.          | 
 நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் 
மெல்லடிப் 
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான் 
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர் 
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.  | 
 02
   | 
 276.  |         
 வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங் 
காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை 
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர் 
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.                  | 
 03
   | 
 277.  |         
 நிறையுடை நெஞ்சுளும் நீருளும் 
பூவுளும் 
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங் 
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் 
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.    | 
 04
   | 
 278.  |         
 ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் 
டீறிலா 
ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய 
கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர் 
வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.                | 
 05
   | 
 279.  |         
 பள்ளமே படர்சடைப் பாற்படப் 
பாய்ந்தநீர் 
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான் 
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் 
உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.                            | 
 06
   | 
 280.          | 
 மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக் 
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர் 
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின் 
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.                            | 
 07
    | 
 281.  |         
 வாளினான் வேலினான் மால்வரை 
யெடுத்ததிண் 
டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய 
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் 
நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.                  | 
 08
   | 
 282.  |         
 சிலையினால் முப்புரந் தீயெழச் 
செற்றவன் 
நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான் 
கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர் 
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.      | 
 09
   | 
 283.  |         
 உறித்தலைச் சுரையொடு குண்டிகை 
பிடித்துச்சி 
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள் 
மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி 
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.      | 
 10
   | 
 284.  |         
 காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர் 
கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான் 
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன 
பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.                                  | 
 11
  | 
	இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - காளையீசுவரர், தேவியார் - மகமாயியம்மை.
	இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 027 திருச்சக்கரப்பள்ளி  
  
 	பண் - கொல்லி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 285    | 
  படையினார் வெண்மழுப் பாய்புலித் 
	தோலரை 
	உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர் 
	விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல் 
	சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.                                      | 
	 01  | 
 
 286.  |         
 பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச் 
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும் 
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச் 
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.                                                              | 
 02
   | 
 287.  |         
 மின்னினார் சடைமிசை விரிகதிர் 
மதியமும் 
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந் 
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை 
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.                                            | 
 03
   | 
 288.  |         
 நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் 
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை 
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி 
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.                            | 
 04
   | 
 289.  |         
 வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் 
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர் 
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி 
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.          | 
 05
   | 
 290.  |         
 பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை 
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட 
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் 
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.                      | 
 06
   | 
 291.          | 
 பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் 
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி 
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் 
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.                                                            | 
 07
   | 
 292.  |         
 முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள் 
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால் 
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய 
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.          | 
 08
   | 
 293.  |         
 துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர் 
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர் 
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந் 
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.                            | 
 09
   | 
 294.  |         
 உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள் 
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல் 
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந் 
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.                | 
 10
   | 
 295.  |         
 தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங் 
கண்ணுத லவனடி கழுமல வளநகர் 
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல் 
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.                      | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
	சக்கரப்பள்ளியினிற் சார்ந்த அல்லியங்கோதை, 
	சொற்கிரங்கு மாலந்துறையானே என்னுஞ் 
	சிவநாமப் பஃறொடையானு முணர்க.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 028 திருமழபாடி    
   
 	பண் - கொல்லி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 296    | 
  காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ் 
	சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே 
	வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம் 
	மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.                                                              | 
	 01  | 
 
 | 
 297. கறையணி மிடறுடைக் கண்ணுதல் 
நண்ணிய 
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர் 
துறையணி குருகினந் தூமலர் துதையவே 
மறையணி நாவினான் மாமழ பாடியே.                                              | 
 02
   | 
 298.  |         
 அந்தணர் வேள்வியும் அருமறைத் 
துழனியுஞ் 
செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப் 
பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம் 
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.                                                                | 
 03
   | 
 299.          | 
 அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன் 
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் 
பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும் 
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.                                            | 
 04
   | 
 300.  |         
 கங்கையார் சடையிடைக் கதிர்மதி 
யணிந்தவன் 
வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச் 
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம் 
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.                                                            | 
 05
   | 
 301.  |         
 பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங் 
காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான் 
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம் 
மாலினார் வழிபடு மாமழ பாடியே.                                                | 
 06
   | 
 302.  |         
 விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் 
தேத்தவே 
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் 
கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம் 
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.            | 
 07
   | 
 303.  |         
 கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன 
சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா 
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும் 
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.                            | 
 08
   | 
 304.          | 
 ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் 
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம் 
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில் 
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.                                                              | 
 09
   | 
 305.  |         
 உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு 
சாக்கியர் 
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின் 
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான் 
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.                              | 
 10
   | 
 306.  |         
 ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ் 
சீலத்தான் மேவிய திருமழ பாடியை 
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல் 
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.                        | 
 11
  | 
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 029 மேலைத்திருக்காட்டுப்பள்ளி  
       
 	பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 307        | 
  வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன் 
	ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை 
	காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
	நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.          | 
	 01  | 
 
 308.          |     
 நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி 
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப் 
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.                | 
 02
   | 
 309.                          |  
 பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர் 
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி 
அண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே.                            | 
 03
   | 
 310.          |     
 பணங்கொள்நா கம்மரைக் கார்ப்பது பல்பலி 
உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக் 
கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளி 
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தந் நீர்மையே.                  | 
 04
   | 
 311.          |     
 வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக் 
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித் 
திரையுலாங் கங்கையுந் திங்களுஞ் சூடியங் 
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.                          | 
 05
   | 
 312.                          |  
 வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன் 
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக் 
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.                          | 
 06
   | 
 313.                          |  
 மையினார் மிடறனார் மான்மழு வேந்திய 
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித் 
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய 
ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே.        | 
 07
   | 
 314.          |     
 சிலைதனால் முப்புரஞ் செற்றவன் 
சீரினார் 
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான் 
கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி 
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.                                              | 
 08
   | 
 315.                          |  
 செங்கண்மால் திகழ்தரு மலருறை 
திசைமுகன் 
தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான் 
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி 
அங்கையால் தொழுமவர்க் கல்லலொன் றில்லையே.  | 
 09
   | 
 316.          |     
 போதியார் பிண்டியா ரென்றஅப் 
பொய்யர்கள் 
வாதினால் உரையவை மெய்யல வைகலுங் 
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி 
ஏரினால் தொழுதெழ இன்பம்வந் தெய்துமே.        | 
 101
   | 
 317.          |     
 பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன் 
அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல் 
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி 
பரவிய தமிழ்சொல்லப் பறையும்மெய்ப் பாவமே.                                | 
 11
  | 
	
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - தீயாடியப்பர், தேவியார் - வார்கொண்டமுலையம்மை.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 030 திருஅரதைப்பெரும்பாழி 
  
 	பண் - கொல்லி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 318    | 
  பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி 
	மொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடை 
	நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி 
	பித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                      | 
	 01  | 
 
 319.          |     
 கயலசே லகருங் கண்ணியர் நாடொறும் 
பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார் 
இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும் 
பெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                                      | 
 02
   | 
 320.                          |  
 கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் 
மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை 
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய 
பீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                        | 
 03
   | 
 321.          |     
 மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார் 
விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள் 
பண்ணர்பா டலுடை யாரொரு பாகமும் 
பெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                      | 
 04
   | 
 322.          |     
 மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக் 
கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும் 
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் 
பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                    | 
 05
   | 
 323.                          |  
 புற்றர வம்புலித் தோலரைக் கோவணந் 
தற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு 
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப் 
பெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                      | 
 06
   | 
 324.                          |  
 துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி 
இணையிலேற் றையுகந் தேறுவ ரும்மெரி 
கணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில் 
பிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.    | 
 07
   | 
 325.                          |  
 சரிவிலா வல்லரக் கன்தடந் தோள்தலை 
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல் 
அரிவைபா கம்மமர்ந் தாரடி யாரொடும் 
பிரிவில்கோ யில்லர தைப்பெரும் பாழியே.                  | 
 08
   | 
 326.          |     
 வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும் 
எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர் 
கரியமா லோடயன் காண்பரி தாகிய 
பெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.    | 
 09
   | 
 327.          |     
 நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் 
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் 
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர் 
பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.          | 
 10
   | 
 328.          |     
 நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் 
பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச் 
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய் 
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.                | 
 11
  | 
	
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - பரதேசுவரர், தேவியார் - அலங்காரநாயகியம்மை.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 031 திருமயேந்திரப்பள்ளி   
 
 	பண் - கொல்லி  
திருச்சிற்றம்பலம் 
	
| 
 329    | 
   திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங் 
	கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் 
	வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் 
	அரவரை அழகனை அடியிணை பணிமினே.                                            | 
	 01  | 
 
 330.          |     
 கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை 
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும் 
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் 
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.                                                | 
 02
   | 
 331.          |     
 கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் 
புன்னையுந் 
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு 
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள் 
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.                          | 
 03
   | 
 332.          |     
 வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு 
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும் 
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் 
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.                                          | 
 04
   | 
 333.          |     
 நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் 
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் 
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள் 
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.              | 
 05
   | 
 334.          |     
 சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் 
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன் 
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் 
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.          | 
 06
   | 
 335.          |     
 சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட 
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு 
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள் 
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.      | 
 07
   | 
 336.                          |  
 சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் 
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் 
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.          | 
 08
   | 
 337.          |     
 நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன் 
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர் 
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.  | 
 09
   | 
 338.          |     
 உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும் 
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர் 
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள் 
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.                                | 
 10
   | 
 339.          |     
 வம்புலாம் பொழிலணி மயேந்திரப் 
பள்ளியுள் 
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் 
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர் 
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.      | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - திருமேனியழகர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 032 திருஏடகம் 
       
 	பண் - கொல்லி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 340    | 
  வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் 
	பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு 
	மன்னிய மறையவர் வழிபட அடியவர் 
	இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.                                              | 
	 01  | 
 
 341.          |     
 கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி 
வடிவுற அமைதர மருவிய ஏடகத் 
தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால் 
இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.        | 
 02
   | 
 342.          |     
 குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை 
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி 
செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங் 
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.        | 
 03
   | 
 343.          |     
 ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங் 
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ் 
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ் 
சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.                            | 
 04
   | 
 344.          |     
 வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக் 
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன் 
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய 
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.                          | 
 05
   | 
 345.          |     
 பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் 
தென்றலார் 
வைகையின் வடகரை மருவிய ஏடகத் 
தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும் 
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.                          | 
 06
   | 
 
  | 
 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.        
          | 
 07
   | 
 346.                          |  
 தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர் 
படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான் 
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் 
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.          | 
 08
   | 
 347.                          |  
 பொன்னுமா மணிகளும் பொருதிரைச் 
சந்தகில் 
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற 
அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும் 
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.        | 
 09
   | 
 348.                          |  
 குண்டிகைக் கையினர் குணமிலாத் 
தேரர்கள் 
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் 
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும் 
இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.          | 
 10
   | 
 349.                          |  
 கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர் 
ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை 
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன 
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.                | 
 11
  | 
 	திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
3. 033 திருஉசாத்தானம்  
    
 	பண் - கொல்லி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 350        | 
  நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் 
	சாம்புவான் 
	பேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக் 
	காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம் 
	சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.                                        | 
	 01  | 
    
    | 
 351. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் 
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் 
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ் 
தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.    | 
 02
   | 
 352.          |     
 தாமலார் போலவே தக்கனார் வேள்வியை 
ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக் 
காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல் 
சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.          | 
 03
   | 
 353.                          |  
 மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான் 
குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ 
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய் 
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.                      | 
 04
   | 
 
  |     
 இப்பதிகத்தில் 5-ம், 6-ம் செய்யுட்கள் 
மறைந்து போயின.       
         | 
 05-06
   | 
 354.          |     
 பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள் 
தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக் 
கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந் 
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.        | 
 07
   | 
 355.                          |  
 மடவரல் பங்கினன் மலைதனை மதியாது 
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர 
அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான் 
திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.                        | 
 08
   | 
 356.                          |  
 ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங் 
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் 
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ் 
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.                          | 
 09
   | 
 357.                          |  
 கானமார் வாழ்க்கையான் காரமண் 
தேரர்சொல் 
ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில் 
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில் 
தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே.                      | 
 10
   | 
 358.          |   
 வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் 
திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை 
உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார் 
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.                      | 
 11
  | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - மந்திரபுரீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
		
			
 திருச்சிற்றம்பலம் 
 
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
	
   
      
	 
3. 034 திருமுதுகுன்றம்         
 	பண் - கொல்லி  
திருச்சிற்றம்பலம்  
	
 
| 
 359        | 
  வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட 
	அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம் 
	விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் 
	திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.                            | 
	 01  |  
    
 360.  |         
 வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு 
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன் 
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ் 
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.                            | 
 02
    | 
 361.  |         
 ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை 
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல் 
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந் 
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.          | 
 03
    | 
 362.  |         
 உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும் 
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம் 
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த் 
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.        | 
 04
    | 
 363.  |         
 கடியவா யினகுரல் களிற்றினைப் 
பிளிறவோர் 
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி 
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ் 
செடியதார் புறவணி திருமுது குன்றமே.                              | 
 05
     | 
 364.  |         
 கானமார் கரியின்ஈர் உரிவையார் 
பெரியதோர் 
வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம் 
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந் 
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.                          | 
 06
   | 
 365.  |         
 மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட 
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே 
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச் 
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.  | 
 07
    | 
 366.          | 
 காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை 
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற 
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ் 
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.          | 
 08
    | 
 367.  |         
 ஆடினார் கானகத் தருமறை யின்பொருள் 
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி 
ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந் 
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.        | 
 09
     | 
 368.  |         
 மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் 
சாக்கியர் 
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின் 
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத் 
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.                            | 
 10
     | 
 369.  |         
 திண்ணினார் புறவணி திருமுது குன்றரை 
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல் 
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப் 
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.  | 
 11
  |  
 	திருச்சிற்றம்பலம் 
 
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 
	 
   
      
	 
3. 035 திருத்தென்குடித்திட்டை     
 	பண் - கொல்லி  
திருச்சிற்றம்பலம்  
	
 
| 
 370        | 
  முன்னைநான் மறையவை முறைமுறை 
	குறையொடுந் 
	தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம் 
	மன்னுமா காவிரி வந்தடி வருடநற் 
	செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.      | 
	 01  |  
   
 371.    |  
 மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை 
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம் 
பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ் 
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.  | 
 02
    | 
 372.                          |  
 கருவினா லன்றியே கருவெலா மாயவன் 
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம் 
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந் 
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.                  | 
 03
    | 
 373.          |     
 உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை 
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர் 
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந் 
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.    | 
 04
     | 
 374.          |     
 வருந்திவா னோர்கள்வந் தடையமா 
நஞ்சுதான் 
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர் 
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந் 
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.              | 
 05
     | 
 375.          |     
 ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் 
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர் 
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய் 
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.                      | 
 06
    | 
 376.                          |  
 கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள் 
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந் 
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை 
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.          | 
 07
     | 
 377.          |     
 மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந் 
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங் 
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால் 
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.  | 
 08
    | 
 378.          |     
 நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க் 
காரணன் அடிமுடி காணவொண் ணானிடம் 
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச் 
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.          | 
 09
     | 
 379.          |     
 குண்டிகைக் கையுடைக் குண்டரும் 
புத்தரும் 
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும் 
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார் 
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.        | 
 10
       | 
 380.          |  
 தேனலார் சோலைசூழ் தென்குடித் 
திட்டையைக் 
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் 
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ் 
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.                | 
 11
  |  
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
	சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை. 
  |