உள்ளுறை
 
 
	
 
 
      
	 
2.61 திருவெண்காடு 
          பண் - காந்தாரம்
         திருச்சிற்றம்பலம்
	
| 
 655    | 
 உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா 
என்றுள்கித்  
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்  
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்  
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே.                              | 
	 01  | 
 
 656    |   
 நாதன் நம்மை ஆள்வான் என்று 
நவின்றேத்திப்  
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்  
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்  
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.                        | 
 02
   | 
 657      |  
 தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் 
றனையுன்னிக் 
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்  
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்  
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.                                | 
 03
   | 
 658  |    
 நரையார் வந்து நாளுங் குறுகி 
நணுகாமுன்  
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே  
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்  
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே.                                    | 
 04
   | 
 659    |  
 பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் 
பெம்மானென்  
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்  
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்  
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.                                              | 
 05
   | 
 660    |  
 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்  
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்  
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்  
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.                                      | 
 06
   | 
 661    |  
 கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் 
குறிப்பினால்  
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்  
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்  
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.                                | 
 07
   | 
 662  |   
 வளையார் முன்கை மலையாள் வெருவ 
வரையூன்றி  
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்  
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்  
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.                                                  | 
 08
   | 
 663    |  
 கரியா னோடு கமல மலரான் காணாமை  
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்  
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்  
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.                                              | 
 09
   | 
 664      | 
 பாடும் அடியார் பலருங் கூடிப் 
பரிந்தேத்த  
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி  
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத   
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.                                                  | 
 10
   | 
 665  |  
 விடையார் கொடியான் மேவி யுறையும் 
வெண்காட்டைக்  
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்  
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்  
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.                                      | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.62 திருமீயச்சூர்  
    
 	
      
	
  பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 666  | 
 காயச் செவ்விக் காமற் காய்ந்து 
கங்கையைப்  
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி  
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்  
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.                                                        | 
	 01  | 
 
 667    |  
 பூவார் சடையின் முடிமேற் புனலர் 
அனல்கொள்வர்  
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி  
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி  
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.                                                    | 
 02
   | 
 668      | 
 பொன்னேர் கொன்றை மாலை புரளும் 
அகலத்தான்  
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்  
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்  
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே.                                                  | 
 03
   | 
 669      | 
 வேக மதநல் லியானை வெருவ 
வுரிபோர்த்துப்  
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட  
நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்  
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.                                                  | 
 04
   | 
 670      | 
 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் 
பிறைவேடம்  
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்  
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்  
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.                                              | 
 05
   | 
 671      | 
 குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல 
மார்கொன்றை  
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி  
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்  
மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.                                                      | 
 06
   | 
 672  |  
 நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்  
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்  
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்  
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.                                                                        | 
 07
   | 
 673    |  
 புலியின் உரிதோ லாடை பூசும் 
பொடிநீற்றர்  
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச  
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை  
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.                                                                | 
 08
   | 
 674      | 
 காதின் மிளிருங் குழையர் கரிய 
கண்டத்தார்  
போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்  
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி  
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.                                                                            | 
 09
   | 
 675    |  
 கண்டார் நாணும் படியார் கலிங்க 
முடைபட்டைக்  
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்  
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்  
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.                                                                  | 
 10
   | 
 676    |  
 வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்  
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்  
பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி  
ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.                                        | 
 11
   | 
	> இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர் 
     
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 677  | 
 மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் 
விளங்கவே  
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்  
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு  
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.                              | 
	 01  | 
 
 678    | 
 மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்  
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்  
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்  
பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.                                                        | 
 02
   | 
 679      | 
 பல்லார் தலைசேர் மாலைசூடிப் 
பாம்பும்பூண்  
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்  
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்  
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.                                                                  | 
 03
   | 
 680      | 
 வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற  
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்  
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய  
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.                                              | 
 04
   | 
 681    |  
 என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை  
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்  
அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்  
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.                            | 
 05
   | 
 682      | 
 வள்ளி முலைதோய் குமரன் தாதை 
வான்தோயும்  
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்  
தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்  
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.                                                        | 
 06
   | 
 683      | 
 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் 
நீர்மையான்  
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்  
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் 
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.                                                        | 
 07
   | 
 684      | 
 இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் 
என்றேந்தும்  
பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்  
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான  
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.                                                      | 
 08
   | 
 685  |   
 முள்ளார் கமலத் தயன்மால் முடியோ 
டடிதேட  
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்  
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்  
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.                                                  | 
 09
   | 
 686    |  
 கையார் சோறு கவர்குண் டர்களுந் 
துவருண்ட  
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல  
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்  
ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.                                                        | 
 10
   | 
 687  |   
 நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்  
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்  
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்  
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.                                                  | 
 11
   | 
	இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.64 திருமுதுகுன்றம்
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 688  | 
 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் 
பெரியோனே  
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்  
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி  
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.                                      | 
	 01  | 
 
 689    |    
 எந்தை யிவனென் றிரவி முதலா 
இறைஞ்சுவார்  
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை  
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு  
முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே.                                                  | 
 02
   | 
 690    |    
 நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந்  
தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்  
பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த  
மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே.                                                | 
 03
   | 
 691    |    
 தெரிந்த அடியார் சிவனே யென்று 
திசைதோறுங்  
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி  
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்  
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.                                        | 
 04
   | 
 692    |   
 வைத்த நிதியே மணியே யென்று 
வருந்தித்தஞ்  
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்  
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும்  
முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.                                      | 
 05
   | 
 693            |   
 வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி  
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்  
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்  
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.                                    | 
 06
   | 
 
  |      
 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.                   
                     | 
 07
   | 
 694    |    
 வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை 
வாழ்வேந்தை  
நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்  
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த  
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.                                                              | 
 08
   | 
 695    |    
 அல்லி மலர்மேல் அயனும் அரவின் 
அணையானுஞ்  
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்  
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட  
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.                                          | 
 09
   | 
 696    |    
 கருகும் உடலார் கஞ்சி யுண்டு 
கடுவேதின்  
றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில்  
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி  
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.                                  | 
 10
   | 
 697  |          
 அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் 
சம்பந்தன்  
முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக்  
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்  
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.                        | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.65 திருப்பிரமபுரம் 
  
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 698  | 
  கறையணி வேலிலர் போலுங் கபாலந் 
	தரித்திலர் போலும்  
	மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்  
	பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்  
	பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.                                  | 
	 01  | 
 
 699  |   
 கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் 
இறகிலர் போலும்  
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்  
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்  
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.                                          | 
 02
   | 
 700    |  
 சித்த வடிவிலர் போலுந் தேசந் 
திரிந்திலர் போலுங்  
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்  
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்  
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.                                          | 
 03
   | 
 701      | 
 நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் 
மிடற்றிலர் போலுங்  
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்  
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்  
பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.                                      | 
 04
   | 
 702      | 
 தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் 
பிடித்திலர் போலும்  
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்  
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்  
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.                                          | 
 05
   | 
 703    |  
 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி 
யழித்திலர் போலும்  
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்  
வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்  
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.                | 
 06
   | 
 704    |  
 பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் 
கருளிலர் போலுங்  
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்  
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்  
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.                                        | 
 07
   | 
 705  |   
 பரசு தரித்திலர் போலும் படுதலை 
பூண்டிலர் போலும்  
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்  
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்  
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.                    | 
 08
   | 
 706    |  
 அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் 
போலுங்  
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்  
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்  
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.                                          | 
 09
   | 
 707    |  
 வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட 
நின்றிலர் போலும்  
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்  
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்  
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.                    | 
 10
   | 
 708  |  
 பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் 
மேய  
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே  
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்  
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.                                          | 
 11      
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் 
      
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 709  | 
 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு  
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு  
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு  
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.                      | 
	 01  | 
 
 710      | 
 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் 
தீர்ப்பது நீறு  
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு  
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு  
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.                        | 
 02
   | 
 711    |  
 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு  
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு  
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு  
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.                                            | 
 03
   | 
 712    |  
 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு  
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு  
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு  
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.                                              | 
 04
   | 
 713  |   
 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு  
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்  
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு  
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.                                            | 
 05
   | 
 714      | 
 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு  
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு  
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு  
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.                    | 
 06
   | 
 715      | 
 எயிலது அட்டது நீறு இருமைக்கும் 
உள்ளது நீறு 
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு  
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு  
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.                        | 
 07
   | 
 716    |  
 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது 
நீறு  
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு  
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு  
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.                                            | 
 08
   | 
 717  |   
 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு  
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு  
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு  
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.                                              | 
 09
   | 
 718  |   
 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் 
கூட்டமுங் கூட  
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு  
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு  
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.                          | 
 10
   | 
 719  |  
 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு 
நீற்றைப்  
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்  
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்  
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.                          | 
 11                
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.67 திருப்பெரும்புலியூர் 
     
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 720  | 
  மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக 
	முடையார்  
	விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்  
	கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்  
	பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.                  | 
	 01  | 
 
 720            | 
 துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் 
டோ ள்கள்  
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக்  
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த  
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                    | 
 02
   | 
 
  | 
 * கங்கைக்கன்னிகளின் புனையோடு - 
என்பதனுக்கு கங்கை 
   யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.
   | 
 722    |   
 கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக 
ஏந்தித்  
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்  
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற  
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                                  | 
 03
   | 
 723  |   
 ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா 
றங்கம்  
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்  
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி  
பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.                      | 
 04
   | 
 724    |  
 தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி 
யாரன லாடக்  
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த  
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த  
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                    | 
 05
   | 
 725      | 
 கற்ற துறப்பணி செய்து காண்டுமென் 
பாரவர் தங்கண்  
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்  
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்  
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.                                  | 
 06
   | 
 726    |  
 மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி 
சேர்வார்  
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்  
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்  
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.            | 
 07
   | 
 727    |  
 உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் 
வீடெளி தாகித் 
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி  
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்  
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                                  | 
 08
   | 
 728      | 
 சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை 
சேரும்  
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்  
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய  
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                    | 
 09
   | 
 729      | 
 உரிமை யுடையடி யார்கள் உள்ளுற 
வுள்கவல் லார்கட்  
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்  
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்  
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.                                  | 
 10
   | 
 730  |  
 பிறைவள ரும்முடிச் சென்னிப் 
பெரும்புலி யூர்ப்பெரு மானை  
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்  
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி  
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.                                        | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.68 திருக்கடம்பூர் 
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 731  | 
   வானமர் திங்களும் நீரும் மருவிய 
	வார்சடை யானைத்  
	தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்  
	கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்  
	தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.                | 
	 01  | 
 
 732  |   
 அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் 
வேங்கை யதளும்  
விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப்  
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்  
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே.                                    | 
 02
   | 
 733  |  
 *இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் 
மேலிசைந் தேறத்  
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்  
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்  
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே.                  | 
 03
   | 
 
  |          
 * இளி - என்பது ஏழிசையிலொன்று.        
   | 
 734      | 
 பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி 
சேர்நெடு மாடங்  
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்  
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்  
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.                | 
 04
   | 
 735    |  
 தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி 
கொண்டிடு காட்டில்  
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்  
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்  
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.                                    | 
 05
   | 
 736    |  
 தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை 
மேலனம் வைகக்  
கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்  
பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்  
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.                                          | 
 06
   | 
 737    |  
 பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட 
லறாத  
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்  
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்  
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.                  | 
 07
   | 
 738      | 
 பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி 
யப்புறங் காட்டில்  
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்  
மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித்  
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.                        | 
 08
   | 
 739      | 
 திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல 
ரோனும்  
இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்  
கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்  
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.                                            | 
 09
   | 
 740    |  
 ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் 
அந்துவராடைச்  
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்  
வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்  
காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.                                                  | 
 10
   | 
 741            | 
 விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி 
சேர்நெடு மாடங்  
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி  
நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்  
படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே.                                  | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
        
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 742  | 
   பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு 
	செஞ்சடை யாருங்  
	கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்  
	எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்  
	பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.                            | 
	 01  | 
 
 743    |  
 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு 
வாரவர் தங்கள்  
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்  
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்  
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.              | 
 02
   | 
 744    |  
 சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் 
ணீறணிந் தாரும்  
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்  
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்  
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.    | 
 03
   | 
 745  |   
 நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் 
லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி  
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை  
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.                          | 
 04
   | 
 746    |  
 போகமு மின்பமு மாகிப் போற்றியென் 
பாரவர் தங்கள்  
ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்  
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்  
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.                                              | 
 05
   | 
 747    |  
 கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை 
யாரும்  
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்  
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்  
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.                          | 
 06
   | 
 748    |  
 ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் 
கென்றுழல் வாருந்  
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்  
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்  
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.                                              | 
 07
   | 
 749      | 
 புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் 
றேத்த நின்றாரும்  
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்  
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்  
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.                                | 
 08
   | 
 750  |   
 திருமகள் காதலி னானுந் திகழ்தரு 
மாமலர் மேலைப்  
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்  
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே  
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.                        | 
 09
   | 
 751    |  
 புத்தரும் புந்தியி லாத சமணரும் 
பொய்ம்மொழி யல்லால்  
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்  
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு  
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.          | 
 10
   | 
 752  |  
 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் 
ஞானசம் பந்தன்  
பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்  
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து  
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.                        | 
 11
   | 
	இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று 
   
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 753  | 
 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் 
பெருநீர்த் தோணி  
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை  
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய  
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.                                                                                            | 
	 01  | 
 
 754    |         
 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு 
வெங்குரு வெள்ளத் தோங்குந்  
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி  
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்  
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.                                                                                        | 
 02
   | 
 755    |         
 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை 
புறவங் காழி  
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்  
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்  
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.                                                                                            | 
 03
   | 
 756    |         
 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை 
வெள்ளங் கொள்ளத் 
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி 
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் 
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.                                                                                          | 
 04
   | 
 757              |  
 தொன்னீரில் தோணிபுரம் புகலி 
வெங்குருத் துயர்தீர் காழி  
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை  
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல  
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.                                                                                                  | 
 05
   | 
 758              |  
 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை 
தலைமுன் ஆண்ட  
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி  
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து  
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.                                              | 
 06
   | 
 759    |         
 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் 
சண்பையொடு புறவ நல்ல  
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி  
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி  
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.                                                                                                | 
 07
   | 
 760    |         
 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் 
சண்பைமிகு புகலி காழி  
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்  
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து  
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.                                                                                            | 
 08
   | 
 761    |         
 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் 
காழி சாயாப்  
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்  
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத  
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.                                                                                            | 
 09
   | 
 762              |  
 செழுமலிய பூங்காழி புறவஞ் 
சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய  
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய  
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்  
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.                                                                            | 
 10
   | 
 763              |  
 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு 
புறவங் காழி  
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்  
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்  
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.                                                                                                  | 
 11
   | 
 764              |  
 காவி மலர்புரையுங் கண்ணார் 
கழுமலத்தின் பெயரை நாளும்  
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை  
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன  
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.                                                                    | 
 12
   | 
	இது பாண்டியராசனுடைய 
	சுரப்பிணிதீர்க்கச்சென் 
	றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை 
	நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று 
	திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம். 
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.71 திருக்குறும்பலா 
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 765  | 
  திருந்த மதிசூடித் தெண்ணீர் 
	சடைக்கரந்து தேவி பாகம்  
	பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்  
	இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்  
	குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.                    | 
	 01  | 
 
 766    |         
 நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் 
பொடியணிந்த நம்பான் நம்மை  
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்  
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட  
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.                              | 
 02
   | 
 767              |  
 வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் 
வலித்து வீக்கி  
ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்  
பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்  
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.                                                                  | 
 03
   | 
 768              |  
 பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் 
பெண்கலந்து பாடி யாடிக்  
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்  
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்  
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.                                                                      | 
 04
   | 
 769    |         
 தலைவாண் மதியங் கதிர்விரியத் 
தண்புனலைத் தாங்கித் தேவி  
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த  
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்  
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.                                                                                  | 
 05
   | 
 770    |         
 நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் 
தண்மதியர் நெற்றிக் கண்ணர்  
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்  
ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்  
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.                                                                              | 
 06
   | 
 771    |  
 பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் 
புனலுஞ் சூடிப்  
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி  
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்  
குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.                                                                              | 
 07
   | 
 772    |         
 ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை 
மால்வரைக்கீழ் அடர வூன்றிச்  
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்  
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்  
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.                                                                            | 
 08
   | 
 773    |         
 அரவின் அணையானும் நான்முகனுங் 
காண்பரிய அண்ணல் சென்னி  
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்  
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த  
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.                                                                                              | 
 09
   | 
 774    |         
 மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் 
பின்கூ றுண்டு  
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்  
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்  
கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.                                                                                | 
 10
   | 
 775    |         
 கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய 
கொல்லேற் றண்ணல்  
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன  
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்  
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.                                                                              | 
 11
   | 
	இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
	இதுவே திருக்குற்றாலம்.
	சுவாமிபெயர் - குறும்பலாநாதர்,
	தேவியார் - குழன்மொழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.72 திருநணா  
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 776  | 
  பந்தார் விரல்மடவாள் பாகமா  
     நாகம்பூண் டேற தேறி  
	அந்தார் அரவணிந்த அம்மா  
     னிடம்போலும் அந்தண் சாரல்  
	வந்தார் மடமந்தி கூத்தாட  
     வார்பொழிலில் வண்டு பாடச்  
	செந்தேன் தெளியொளிரத் தேமாக்  
     கனியுதிர்க்குந் திருந ணாவே.                                                                      | 
	 01  | 
 
 777              |  
 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்  
     மற்றொருகை வீணை யேந்தி  
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா  
     னிடம்போலு மிலைசூழ் கானில்  
ஓட்டந் தருமருவி வீழும்  
     விசைகாட்ட முந்தூ ழோசைச்  
சேட்டார் மணிகள் அணியுந்  
     திரைசேர்க்குந் திருந ணாவே.                                                                      | 
 02
   | 
 778    |         
 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்  
     பாகமாய் ஞால மேத்த  
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்  
     கிடம்போலும் விரைசூழ் வெற்பில்  
குன்றோங்கி வன்றிரைகள் மோத  
     மயிலாலுஞ் சாரற் செவ்வி  
சென்றோங்கி வானவர்க ளேத்தி  
     அடிபணியுந் திருந ணாவே.                                                                                            | 
 03
   | 
 779    |         
 கையில் மழுவேந்திக் காலிற்  
     சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு  
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்  
     கிடம்போலு மிடைந்து வானோர்  
ஐய ரவரெம் பெருமா  
     னருளென்றென் றாத ரிக்கச்  
செய்ய கமலம் பொழிதே  
     னளித்தியலுந் திருந ணாவே.                                                                        | 
 04
   | 
 780    |         
 முத்தேர் நகையா ளிடமாகத்  
     தம்மார்பில் வெண்ணூல் பூண்டு  
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா  
     ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த  
அத்தேன் அளியுண் களியா  
     லிசைமுரல ஆலத் தும்பி  
தெத்தே யெனமுரலக் கேட்டார்  
     வினைகெடுக்குந் திருந ணாவே.                                                                      | 
 05
   | 
 781    |           
 வில்லார் வரையாக மாநாகம்  
     நாணாக வேடங் கொண்டு  
புல்லார் புரமூன் றெரித்தார்க்  
     கிடம்போலும் புலியு மானும்  
அல்லாத சாதிகளு மங்கழல்மேற்  
     கைகூப்ப அடியார் கூடிச்  
செல்லா வருநெறிக்கே செல்ல  
     அருள்புரியுந் திருந ணாவே.                                                                          | 
 06
   | 
 782              |    
 கானார் களிற்றுரிவை மேல்மூடி  
     ஆடரவொன் றரைமேற் சாத்தி  
ஊனார் தலையோட்டி லூணுகந்தான்  
     றானுகந்த கோயி லெங்கும்  
நானா விதத்தால் விரதிகள்நன்  
     னாமமே யேத்தி வாழ்த்தத்  
தேனார் மலர்கொண் டடியார்  
     அடிவணங்குந் திருந ணாவே.                                                                            | 
 07
   | 
 783              |    
 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்  
     வலிதொலைய விரலா லூன்றி  
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்  
     கிடம்போலும் முநனைசேர் சீயம்  
அன்னீர் மைகுன்றி அழலால்  
     விழிகுறைய வழியு முன்றில்  
செந்நீர் பரப்பச் சிறந்து  
     கரியொளிக்குந் திருந ணாவே.                                                                    | 
 08
   | 
 784    |           
 மையார் மணிமிடறன் மங்கையோர்  
     பங்குடையான் மனைக டோ றும்  
கையார் பலியேற்ற கள்வன்  
     இடம்போலுங் கழல்கள் நேடிப்  
பொய்யா மறையானும் பூமி  
     யளந்தானும் போற்ற மன்னிச்  
செய்யார் எரியாம் உருவ  
     முறவணங்குந் திருந ணாவே.                                                                            | 
 09
   | 
 785              |    
 ஆடை யொழித்தங் கமணே  
     திரிந்துண்பார் அல்லல் பேசி  
மூடு உருவம் உகந்தார்  
     உரையகற்றும் மூர்த்தி கோயில்  
ஓடு நதிசேரும் நித்திலமும்  
     மொய்த்தகிலுங் கரையில் சாரச்  
சேடர் சிறந்தேத்தத் தோன்றி  
     யொளிபெருகுந் திருந ணாவே.                                                                      | 
 10
   | 
 786    |         
 கல்வித் தகத்தால் திரைசூழ்  
     கடற்காழிக் கவுணி சீரார்  
நல்வித் தகத்தால் இனிதுணரும்  
     ஞானசம் பந்தன் எண்ணுஞ்  
சொல்வித் தகத்தால் இறைவன்  
     திருநணா ஏத்து பாடல்  
வல்வித் தகத்தான் மொழிவார்  
     பழியிலரிம் மண்ணின் மேலே.                                                                      | 
 11
   | 
	இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது 
	பவானி நதி 
	காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் 
	பெயர் வழங்கப்படுகின்றது.
	சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,
	தேவியார் - வேதமங்கையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று 
   
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 787  | 
   விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்  
     புகலிவெங் குருமேற் சோலை  
	வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்  
     சிரபுரம்வண் புறவ மண்மேல்  
	களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்  
     கொச்சைகழு மலமென் றின்ன  
	இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்  
     பகையெறிவித் திறைவ னூரே.                                                                      | 
	 01  | 
 
 788      |    
 திருவளருங் கழுமலமே கொச்சைதே  
     வேந்திரனூர் அயனூர் தெய்வத்  
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்  
     காழிதகு சண்பை யொண்பா  
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்  
     தோணிபுரம் உயர்ந்த தேவர்  
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்  
     கண்டத்தோன் விரும்புமூரே.                                                                            | 
 02
   | 
 789        |   
 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்  
     பூந்தராய் சிலம்பன் வாழூர்  
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்  
     காழியிறை கொச்சை யம்பொன்  
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய  
     மிக்கயனூர் அமரர் கோனூர்  
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ  
     தரன்நாளும் அமரு மூரே.                                                                                                | 
 03
   | 
 790    |    
 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்  
     புகலிதராய் தோணிபுரம் வான்  
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே  
     கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்  
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்  
     சிலம்பனூர் காழி சண்பை  
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்  
     பயன்நுகர்வோர் பரவு மூரே.             
        
          | 
		 04
   | 
 
  | 
 *தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி  
  
   | 
 791    |    
 வயங்கொச்சை தயங்கு பூமேல்  
   விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்  
     விண்ணவர்தங் கோனூர் வென்றித்  
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்  
     வம்பெருகு தோணிபுரஞ் சீர்  
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்  
      உலகத்தில் உயர்ந்த வூரே.                                                                          | 
 05
   | 
 792        |   
 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு  
     சிரபுரம்பூங் காழி சண்பை  
 எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி  
     பூந்தராய் தோணிபுரஞ் சீர்  
 வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்  
     கொச்சைவா னவர்தங் கோனூர்  
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை  
     யுதைத்துகந்த அப்ப னூரே.                                                                              | 
 06
   | 
 793        |   
 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்  
     கோனூர்வண் புகலி யிஞ்சி  
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு  
     சண்பைவியன் காழி கொச்சை  
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்  
     தோணிபுரம் பூந்தராய் சீர்ப்  
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்  
     பால்வண்ணன் பயிலு மூரே.                                                                              | 
 07
   | 
 794        |   
 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்  
     சிலம்பனூர் காழி மூதூர்  
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை  
     வேணுபுரங் கமல நீடு  
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி  
     தராய்தோணி புரங்கூ டப்போர்  
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்  
     செற்றமலைச் சிலைய னூரே.                                                                          | 
 08
   | 
 795      |    
 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்  
     பூந்தராய் சிலம்பன் தன்னூர்  
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்  
     தயனூர்சீர்த் தேவர் கோனூர்  
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி  
     லாச்சண்பை காழி கொச்சை  
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்  
     தணர்வேத மறாத வூரே.                                                                                                | 
 09
   | 
 796        |   
 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்  
     கொச்சையிந் திரனூர் மெய்ம்மை  
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்  
     குருப்புகலி தராய்தூ நீர்மேல்  
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்  
     சிலம்பனூர் செருச்செய் தன்று  
மாலோடும் அயனறியான் வண்காழி  
     சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.                                                      | 
 10
   | 
 797      |   
 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்  
     கொச்சைகழு மலமன் பானூர்  
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்  
     சிரபுரமொண் புறவ நண்பார்  
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்  
     புகலிவெங் குருவு மென்பர்  
சாக்கியரோ டமண்கையர் தாமறியா  
     வகைநின்றான் தங்கு மூரே.                                                                            | 
 11
   | 
 798      |    
 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்  
     தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்  
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்  
     புகழ்க்காழி சண்பை தொல்லூர்  
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்  
     வேணுபுரம் அயனூர் மேலிச்  
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன  
     தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.                                                            | 
 12
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி 
   
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 799  | 
  பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்  
           குறைவிலாப் புகலி பூமேல்  
	மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்  
     பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்  
	சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை  
     புகழ்ச்சண்பை காழி கொச்சை  
	காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்  
     கழுமலம்நாங் கருது மூரே.                                                                                              | 
	 01  | 
 
 800        |   
 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்  
     தோணிபுரம் கனக மாட  
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா  
     யுலகாருங் கொச்சை காழி  
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்  
     செங்கமலத் தயனூர் தெய்வத்  
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை  
     முடியண்ணல் தங்கு மூரே.                                                                                                  | 
 02
   | 
 801      |    
 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை  
     யொளிமருவு காழி கொச்சை  
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்  
     தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்  
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்  
     புறவம்அய னூர்பூங் கற்பத்  
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்  
     குருக்கங்கை தரித்தோ னூரே.                                                                        | 
 03
   | 
 802        |   
 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்  
     தோணிபுரந் தரியா ரிஞ்சி  
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்  
     தராய்புகலி யிமையோர் கோனூர்  
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி  
     சண்பைசெழு மறைக ளெல்லாம்  
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ  
     னூருலகில் விளங்கு மூரே.                                                                                              | 
 04
   | 
 803      |    
 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை  
     வேணுபுரம் மேக மேய்க்கும்  
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி  
     யெழிற்புகலி புறவம் ஏரார்  
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்  
     சிரபுரம்வன் னஞ்ச முண்டு  
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா  
     மன்னுடலங் காய்ந்தோ னூரே.                                                                          | 
 05
   | 
 804        |   
 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்  
     கழுமலமாத் தோணிபுரஞ் சீர்  
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்  
     இருங்கமலத் தயனூர் இன்பம்  
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்  
     தராய்கொச்சை காழி சண்பை  
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்  
     பகைகெடுத்தோன் திகழு மூரே.                                                                      | 
 06
   | 
 805    |     
 திகழ்மாட மலிசண்பை பூந்தராய்  
     பிரமனூர் காழி தேசார்  
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்  
     வயங்கொச்சை புறவம் விண்ணோர்  
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்  
     குருவெம்போர் மகிடற் செற்று  
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்  
     பணிந்துலகில் நின்ற வூரே.                                                                          | 
 07
   | 
 806      |    
 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி  
     புரநிகழும் வேணு மன்றில்  
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி  
     சண்பைவளர் புறவ மோடி  
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்  
     தராய்புகலி தேவர் கோனூர்  
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்  
     தாங்காக்க மிக்க வூரே.                                                                                              | 
 08
   | 
 807        |   
 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற  
     வஞ்சண்பை காழி கொச்சை  
  தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்  
      பூந்தராய் சிலம்பன் சேரூர்  
  மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி  
        வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்  
 ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ  
     டழித்துகந்த எம்மா னூரே.                                                                            | 
 09
   | 
 808          |  
 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் 
சிலம்பனூர்  
     கழுமலநற் புகலி யென்றும்  
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்  
     தரனூர்நற் றோணிபுரம் போர்க்  
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய  
     னூர்தராய் சண்பை காரின்  
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்  
     விளங்கியஎம் இறைவ னூரே.                                                                          | 
 10
   | 
 809      |   
 இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய  
     னூர்இமையோர்க் கதிபன் சேரூர்  
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி  
     புரங்குணமார் பூந்தராய் நீர்ச்  
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்  
     கொச்சைகழு மலந்தே சின்றிப்  
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்  
     பரிசறியா அம்மா னூரே.                                                                                            | 
 11
   | 
 810        |   
 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்  
     குருக்கொச்சை புறவ மஞ்சீர்  
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி  
     தோணிபுரந் தேவர் கோனூர்  
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்  
     வழிமுடக்கு மாவின் பாச்சல்  
தம்மானொன் றியஞான சம்பந்தன்  
     தமிழ்கற்போர் தக்கோர் தாமே.                                                                                  | 
 12
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.75 சீகாழி 
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 811  | 
   விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி 
	யுஞ்சடைப்  
	பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்  
	கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்  
	மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.                                                  | 
	 01  | 
 
 812      |   
 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்  
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்  
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்  
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.                                                      | 
 02
   | 
 813        |  
 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் 
வெண்டலைத்  
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்  
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்  
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே.                                                  | 
 03
   | 
 814        |  
 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை  
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்  
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்  
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.                                      | 
 04
   | 
 815      |   
 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் 
பூசிப்போய்  
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்  
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்  
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.                                        | 
 05
   | 
 816      |   
 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை 
யாகவே  
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்  
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்  
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.                                                                  | 
 06
   | 
 817      |   
 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி 
வர்தொழ  
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்  
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்  
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.                              | 
 07
   | 
 818        |  
 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் 
தோள்முடி  
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்  
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே  
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே.                                      | 
 08
   | 
 819        |  
 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்  
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்  
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை  
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.                                                      | 
 09
   | 
 820      |   
 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்  
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்  
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்  
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.                          | 
 10
   | 
 821    |  
 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் 
காழியுள்  
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்  
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்  
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.                                    | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.76 திருஅகத்தியான்பள்ளி    
 
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 822  | 
  வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்  
	நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி  
	ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்  
	பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.                                                | 
	 01  | 
 
 823      |   
 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் 
ணீற்றினான்  
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்  
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை  
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.                                                  | 
 02
   | 
 824        |   
 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் 
துண்பதுங்  
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்  
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.                                                          | 
 03
   | 
 825      |    
 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் 
கண்ணினால்  
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை 
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.                                                            | 
 04
   | 
 826    |     
 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் 
தோலுடை  
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்  
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.                                                            | 
 05
   | 
 827        |   
 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் 
சென்றுடன்  
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை  
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.                                    | 
 06
   | 
 828      |    
 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு 
ளாகிமெய்ச்  
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்  
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை  
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.                                                    | 
 07
   | 
 829        |   
 செறுத்ததுவுந் தக்கன் 
வேள்வியைத்திருந் தார்புரம்  
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்  
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.                                        | 
 08
   | 
 830      |    
 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் 
கொன்றையும்  
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்  
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை  
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.                                    | 
 09
   | 
 831      |   
 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி  
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி  
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்  
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.                                            | 
 10
   | 
 832              |   
 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் 
மாமயில்  
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்  
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய  
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.                                    | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அகத்தீசுவரர்,
	தேவியார் - மங்கைநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.77 திருஅறையணிநல்லூர் 
        
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 833  | 
  பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் 
	தீதிலா  
	வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி  
	சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்  
	ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.                            | 
	 01  | 
 
 834    |         
 இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை 
யோர்தொழ  
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்  
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்  
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.                    | 
 02
   | 
 835    |         
 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி 
யுச்சியான்  
பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று  
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்  
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.                        | 
 03
   | 
 836    |         
 விரவுநீறுபொன் மார்பினில் 
விளங்கப்பூசிய வேதியன்  
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்  
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்  
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.                                        | 
 04
   | 
 837    |         
 தீயினார்திகழ் மேனியாய் 
தேவர்தாந்தொழும் தேவன்நீ  
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்  
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்  
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.                                            | 
 05
   | 
 838              |   
 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் 
வீக்கிய  
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்  
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்  
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.                      | 
 06
   | 
 839              |   
 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்  
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை  
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்  
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.                          | 
 07
   | 
 840    |         
 தக்கனார்பெரு வேள்வியைத் 
தகர்த்துகந்தவன் தாழ்சடை  
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ  
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்  
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.                        | 
 08
   | 
 841    |         
 வெய்யநோயிலர் தீதிலர் 
வெறியராய்ப்பிறர் பின்செலார்  
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்  
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்  
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.                      | 
 09
   | 
 842    |         
 வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை 
செய்யன்மின்  
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி  
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்  
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.                      | 
 10
   | 
 843              |   
 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் 
தொல்பதிப்  
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்  
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்  
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.                        | 
 11
   | 
	இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.78 திருவிளநகர்
   
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 844  | 
  ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் 
	கோவணஆடையர்  
	குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி  
	நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்  
	மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.                                          | 
	 01  | 
 
 845        |   
 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் 
ஆமைபூண்  
டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்  
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய  
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.                                                                  | 
 02
   | 
 846        |   
 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய 
வம்பின்வேய்த்  
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட  
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்  
மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.                                                                  | 
 03
   | 
 847        |   
 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய 
வேலினார்  
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்  
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்  
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.                          | 
 04
   | 
 848        |   
 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் 
காவிரித்  
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்  
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்  
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.                                                | 
 05
   | 
 849      |    
 தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள 
தெய்வமும்  
யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்  
மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்  
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.                                                  | 
 06
   | 
 850      |    
 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் 
சடைமுடியினார்  
கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்  
மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்  
விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.                                                | 
 07
   | 
 851    |     
 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி 
பரவுவார்  
அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்  
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்  
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.                                                  | 
 08
   | 
 852      |    
 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி 
காலினார்  
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்  
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்  
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.                            | 
 09
   | 
 853        |   
 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி 
வண்ணனும்  
உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்  
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்  
உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.                        | 
 10
   | 
 854    |         
 மென்சிறைவண் டியாழ்முரல் 
விளநகர்த்துறை மேவிய  
நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்  
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்  
துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.                                                  | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.79 திருவாரூர் 
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 855  | 
  கவனமாய்ச் சோடையாய் நாவெழாப்  
     பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு  
	சிவனதாட் சிந்தியாப் பேதைமார்  
     போலநீ வெள்கி னாயே  
	கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்  
     தேறிய காள கண்டன்  
	அவனதா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
	 01  | 
 
 856    |         
 தந்தையார் போயினார் தாயரும்  
     போயினார் தாமும் போவார்  
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்  
     பார்க்கின்றார் கொண்டு போவார்  
எந்தநாள் வாழ்வதற் கேமனம்  
     வைத்தியால் ஏழை நெஞ்சே 
அந்தணா ரூர்தொழு துய்யலா  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                        |       
 02
   | 
 857    |         
 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்  
     ஆக்கைதான் நிலாய தன்றால்  
குணங்களார்க் கல்லது குற்றம்நீங்  
     காதெனக் குலுங்கி னாயே  
வணங்குவார் வானவர் தானவர்  
     வைகலும் மனங்கொ டேத்தும்  
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 03
   | 
 858    |         
 நீதியால் வாழ்கிலை நாள்செலா  
     நின்றன நித்த நோய்கள்  
வாதியா ஆதலால் நாளும்நாள்  
     இன்பமே மருவி னாயே  
சாதியார் கின்னரர் தருமனும்  
     வருணனும் ஏத்து முக்கண்  
ஆதியா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 04
   | 
 859              |   
 பிறவியால் வருவன கேடுள  
     ஆதலாற் பெரிய இன்பத்  
துறவியார்க் கல்லது துன்பம்நீங்  
     காதெனத் தூங்கி னாயே  
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்  
     தீர்த்தநீர் மல்கு சென்னி  
அறவனா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 05
   | 
 860    |         
 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்  
     தேரையாய்ச் சிறு பறவை  
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற  
     லாமென்று கருதி னாயே  
முடிகளால் வானவர் முன்பணிந்  
     தன்பரா யேத்து முக்கண்  
அடிகளா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 06
   | 
 861    |         
 ஏறுமால் யானையே சிவிகையந்  
     தளகமீச் சேர்ப்பி வட்டில்  
மாறிவா ழுடம்பினார் படுவதோர்  
     நடலைக்கு மயங்கி னாயே  
மாறிலா வனமுலை மங்கையோர்  
     பங்கினர் மதியம் வைத்த  
ஆறனா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 07
   | 
 862    |         
 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்  
     சுவரெறிந் திதுநம் இல்லம்  
  புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்  
     லாமையான் முகடு கொண்டு  
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்  
     குரம்பையின் மூழ்கி டாதே  
அன்பனா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 08
   | 
 863              |   
 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்  
     புத்திரர் தார மென்னும்  
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்  
     கில்லெனப் பற்றி னாயே  
வெந்தநீ றாடியார் ஆதியார்  
     சோதியார் வேத கீதர்  
எந்தையா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 09
   | 
 864    |         
 நெடியமால் பிரமனும் நீண்டுமண்  
     ணிடந்தின்னம் நேடிக் காணாப்  
படியனார் பவளம்போல் உருவனார்  
     பனிவளர் மலையாள் பாக  
வடிவனார் மதிபொதி சடையனார்  
     மணியணி கண்டத் தெண்டோ ள்  
அடிகளா ரூர்தொழு துய்யலாம்  
     மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.                                                                        | 
 10
   | 
 865              |   
 பல்லிதழ் மாதவி அல்லிவண்  
     டியாழ்செயுங் காழி யூரன்  
நல்லவே நல்லவே சொல்லிய  
     ஞானசம் பந்தன் ஆரூர்  
எல்லியம் போதெரி யாடுமெம்  
     மீசனை யேத்து பாடல்  
சொல்லவே வல்லவர் தீதிலார்  
     ஓதநீர் வைய கத்தே.                                                                                                                  | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.80 திருக்கடவூர்மயானம் 
        
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 866  | 
   வரிய மறையார் பிறையார் மலையோர் 
	சிலையா வணக்கி  
	எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்  
	கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
	பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே.                      | 
	 01  | 
 
 867        |    
 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் 
றேந்திக்  
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்  
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.                        | 
 02
   | 
 868        |    
 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்  
காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்  
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.                              | 
 03
   | 
 869    |      
 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா 
லுடையார்  
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்  
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்  
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.                  | 
 04
   | 
 870          |   
 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ 
டொருகா திலங்கத்  
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்  
கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.  |         
 05
   | 
 871          |   
 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் 
கொன்றை புனைந்தார்  
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்  
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்  
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.      | 
 06
   | 
 872        |    
 பாச மான களைவார் பரிவார்க் கமுதம் 
அனையார்  
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்  
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.                              | 
 07
   | 
 873        |    
 செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் 
விரலாற்  
கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்  
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்  
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.  |         
 08
   | 
 874      |     
 வருமா கரியின் உரியார் வளர்புன் 
சடையார் விடையார்  
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்  
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.            | 
 09
   | 
 875      |     
 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய 
மதில்கள்  
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்  
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்  
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.                          | 
 10
   | 
 876              |   
 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் 
அமர்ந்த  
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப்  
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை  
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.                                            | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.81 திருவேணுபுரம் 
  
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 877  | 
   பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் 
	தாரினீர் 
	ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து 
	வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் 
	பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.                                                    | 
	 01  | 
 
 878        |    
 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் 
கோவணந்தோல் 
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம் 
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும் 
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.                                                | 
 02
   | 
 879      |     
 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் 
செற்றுகந்தீர் 
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர் 
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப் 
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.                                                  | 
 03
   | 
 880        |    
 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் 
பாம்பினொடும் 
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே 
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக் 
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.                                                  | 
 04
   | 
 881      |     
 ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு 
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் 
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் 
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.                                    | 
 05
   | 
 882      |     
 மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு 
மகிழ்ந்திருந்தீர் 
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர் 
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத் 
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.                                                | 
 06
   | 
 883        |    
 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் 
சடையினீர் 
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர் 
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங் 
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.                                            | 
 07
   | 
 884        |    
 இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் 
னிலங்கையர்கோன் 
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற் 
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார் 
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.                                                      | 
 08
   | 
 885        |    
 தீயோம்பு மறைவாணர்க் காதியாந் 
திசைமுகன்மால் 
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் 
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு 
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.                          | 
 09
   | 
 886    |         
 நிலையார்ந்த வுண்டியினர் 
நெடுங்குண்டர் சாக்கியர்கள் 
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே 
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும் 
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.              |       
 10
   | 
 
  |       
 இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் 
சிதைந்து போயிற்று.                 
                   | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.82 திருத்தேவூர் 
    
 	பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 887  | 
   பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் 
	பெருமான் 
	விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி 
	தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் 
	அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே.                                  | 
	 01  | 
 
 888        |   
 ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு 
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் 
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் 
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                    | 
 02
   | 
 889      |   
 மறைக ளான்மிக வழிபடு மாணியைக் 
கொல்வான் 
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் 
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் 
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                                  | 
 03
   | 
 890      |    
 முத்தன் சில்பலிக் கூர்தொறும் 
முறைமுறை திரியும் 
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள் 
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர் 
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                                  | 
 04
   | 
 891      |    
 பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் 
தன்பால் 
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் 
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் 
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                      | 
 05
   | 
 892        |   
 பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் 
பொருப்பின் 
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் 
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர் 
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.                                  | 
 06
   | 
 893    |     
 வன்பு யத்தவத் தானவர் புரங்களை 
யெரியத் 
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க 
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் 
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                                  | 
 07
   | 
 894      |    
 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் 
நெரிந்து 
வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் 
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர் 
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.                                    | 
 08
   | 
 895      |    
 முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் 
காணா 
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான் 
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர் 
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                | 
 09
   | 
 896        |   
 பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் 
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு 
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர் 
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.                                      | 
 10
   | 
 897    |         
 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் 
கதிபன் 
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் 
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த் 
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.                                              | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - தேவகுருநாதர், தேவியார் - தேன்மொழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.83 திருக்கொச்சைவயம் 
       
 	பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 898  | 
  நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த  
     நெடுமா வுரித்த நிகரில்    
	சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்  
     திகழ்தேவன் மேவு பதிதான்          
	வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை  
     விழவோசை வேத வொலியின்    
	சாலநல் வேலையோசை தருமாட வீதி  
     கொடியாடு கொச்சை வயமே.                                                                        | 
	 01  | 
 
 899        |    
 விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல  
     விகிர்தத் துருக்கொள் விமலன் 
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்  
     தகவைத்த சோதிபதி தான் 
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து  
     கமலத்து வைகும் வயல்சூழ் 
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்  
       வளர்கின்ற கொச்சை வயமே.                                                                    | 
 02
   | 
 900        |    
 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை  
     களைவிக்கும் எங்கள் பரமன் 
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்  
     இடமாய வேர்கொள் பதிதான் 
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்  
     நளிர்சோலை கோலு கனகக் 
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல  
               மறையோது கொச்சை வயமே.                                                                    | 
 03
   | 
 901      |     
 எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து  
     முயல்வுற்ற சிந்தை முடுகி 
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு  
     பணிவுற்ற பாதர் பதிதான் 
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி  
     வயல்பாய வாளை குழுமிக் 
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன  
          வளர்கின்ற கொச்சை வயமே.                                                                              | 
 04
   | 
 902      |     
 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர  
     னொடுதோழ மைக்கொள் பகவன் 
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்  
     இறைவன் இடங்கொள் பதிதான் 
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்  
     வளர்தூம மோடி யணவிக் 
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து  
         நிறைகின்ற கொச்சை வயமே.                                                                              | 
 05
   | 
 903      |     
 புலியதள் கோவணங்கள் உடையாடை யாக  
     வுடையான் நினைக்கு மளவில் 
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்  
     நலமா இருந்த நகர்தான் 
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை  
     யுடையார் நிறைந்து வளரப் 
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு  
     வரைமேவு கொச்சை வயமே.                                                                          | 
 06
   | 
 
  | 
 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.                        
                          | 
 07
   | 
 904        |    
 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்  
     முடியோடு தோள்கள் நெரியப் 
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ  
     டுடனாடி மேய பதிதான் 
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட  
     விடுமூச லன்ன கமுகின் 
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்  
     அடிதேடு கொச்சை வயமே.                                                                                            | 
 08
   | 
 905        |    
 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்  
     முழுதுண்ட மாலும் இகலிக் 
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்  
     அறியாத சோதி பதிதான் 
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து  
     விரைதேரப் போது மடுவிற் 
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து  
         வயல்மேவு கொச்சை வயமே.                                                                                  | 
 09
   | 
 906        |    
 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் 
குண்டர்  
     இடுசீவ ரத்தி னுடையார் 
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல  
     விகிர்தத் துருக்கொள் விமலன் 
பையுடை நாகவாயில் எயிறார மிக்க  
     குரவம் பயின்று மலரச் 
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து  
       மணநாறு கொச்சை வயமே.                                                                        | 
 10
   | 
 907          |   
 இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை  
     உலகங்க ளேழு முடனே 
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி  
     இனிதா இருந்த மணியைக் 
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த  
     தமிழ்மாலை பாடு மவர்போய் 
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்  
     அழகா இருப்ப தறிவே.                                                                                                | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.84 திருநனிபள்ளி 
   
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 908  | 
  காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை  
     படர்தொடரி கள்ளி கவினிச் 
	சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த  
     சிவன்மேய சோலை நகர்தான் 
	தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை  
     குதிகொள்ள வள்ளை துவள 
	நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்  
          நனிபள்ளி போலு நமர்காள்.                                                                              |       
	 01  | 
 
 909        |    
 சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்  
     வளர்திங்கள் கண்ணி அயலே 
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை  
     யிறைவன்னி டங்கொள் பதிதான் 
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து  
     மணநாறும் நீல மலரும் 
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை  
           நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                            | 
 02
   | 
 910          |   
 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு 
செய்யல்  
     ஒழிபாடி லாத பெருமான் 
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை  
     யிடமாய காதல் நகர்தான் 
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்  
     விடுபோ தலர்ந்த விரைசூழ் 
நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 03
   | 
 911      |     
 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு  
     தலைமாலை யோடு குலவி 
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக  
     வுடையா னுகந்த நகர்தான் 
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட  
     பெடைவண்டு தானும் முரல 
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 04
   | 
 912        |    
 தோடொரு காதனாகி யொருகா திலங்கு  
     சுரிசங்கு நின்று புரளக் 
காடிட மாகநின்று கனலாடு மெந்தை  
     யிடமாய காதல் நகர்தான் 
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று  
     வெறிநீர் தெளிப்ப விரலால் 
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 05
   | 
 913        |    
 மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து  
     மலையான் மடந்தை மணிபொன் 
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை  
     பெருமான் அமர்ந்த நகர்தான் 
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப  
     அகிலுந்தி யொண்பொன் இடறி 
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும்  
     நனிபள்ளி போலு நகர்காள்.                                                                                        | 
 06
   | 
 914    |     
 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்  
     கொடுகொட்டி வீணை முரல 
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த  
     பெருமான் உகந்த நகர்தான் 
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்  
     பணிவார்கள் பாடல் பெருகி 
*நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 07
   | 
 
  | 
 * பாலை நெய்தல் பாடியது - இந்த 
நான்காவது  
  சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில்,  
  முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா 
  லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப்  
  பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.
   | 
 915        |    
 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று  
     மதியா அரக்கன் வலியோ 
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த  
     பெருமான் உகந்த நகர்தான் 
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை  
     எனநின்ற நீதி யதனை 
நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 08
   | 
 916      |     
 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி 
நின்ற  
     தொருநீர்மை சீர்மை நினையார் 
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்  
     அறியாத அண்ணல் நகர்தான் 
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை  
     புனைகொன்றை துன்று பொதுளி 
நறவிரி போதுதாது புதுவாச நாறும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 09
   | 
 917      |     
 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்  
     இடவுண்டு பட்ட அமணும் 
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்  
     குணமின்றி நின்ற வடிவும் 
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்  
     விடையா னுகந்த நகர்தான் 
நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்  
     நனிபள்ளி போலு நமர்காள்.                                                                                        | 
 10
   | 
 918        |    
 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்  
     கமழ்காழி என்று கருத 
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த  
     பதியான ஞான முனிவன் 
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி  
     னிசையா லுரைத்த பனுவல் 
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க  
     வினைகெடுதல் ஆணை நமதே.                                                                          | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.85 கோளாறு திருப்பதிகம் 
     
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 919  | 
  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்  
     மிகநல்ல வீணை தடவி 
	மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
	ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி  
     சனிபாம்பி ரண்டு முடனே 
	ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
	 01  | 
 
 920      |     
 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க  
     எருதேறி யேழை யுடனே 
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
   *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்  
     உடனாய நாள்க ளவைதாம் 
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 02
   | 
 
  |  
 *இரண்டாவது தேவாரம் மூன்றாவது 
சரணத்தில் பிரயாணத் துக்காகாத  
12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.  
விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.  
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது  
நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய  
நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது 
மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.  
12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,  
கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,  
ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
   | 
 921      |     
 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  
     உமையோடும் வெள்ளை விடைமேன் 
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  
     திசை தெய்வ மானபலவும் 
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 03
   | 
 922    |      
 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து  
     மறையோது மெங்கள் பரமன் 
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்  
     கொடுநோய்க ளான பலவும் 
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 04
   | 
 923          |   
 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்  
     விடையேறும் நங்கள் பரமன் 
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு  
     மிகையான பூத மவையும் 
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 05
   | 
 924      |     
 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்  
     மடவாள் தனோடு முடனாய் 
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்  
     கொடுநாக மோடு கரடி 
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 06
   | 
 925        |    
 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக  
     விடையேறு செல்வ னடைவார் 
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்  
     வினையான வந்து நலியா 
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 07
   | 
 926      |     
 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து  
     மடவாள் தனோடும் உடனாய் 
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்  
     இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 08
   | 
 927        |    
 பலபல வேடமாகும் பரனாரி பாகன்  
     பசுவேறும் எங்கள் பரமன் 
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்  
     வருகால மான பலவும் 
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 09
   | 
 928          |   
 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு  
     குணமாய வேட விகிர்தன் 
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்  
     உளமே புகுந்த அதனால் 
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்  
     திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல  
     அடியா ரவர்க்கு மிகவே.                                                                                              | 
 10
   | 
 929        |    
 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் 
துன்னி  
     வளர்செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து  
     மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து  
     நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்  
     அரசாள்வர் ஆணை நமதே.                                                                                              | 
 11
   | 
 	இப்பதிகம் பாண்டிநாட்டுக் 
	கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.86 திருநாரையூர் 
   
 	பண் - பியந்தைக்காந்தாரம்   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 930  | 
    உரையினில் வந்தபாவம் உணர்நோய்க 
	ளும்ம  
     செயல்தீங்கு குற்ற முலகில் 
	வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்  
     மிகவேத்தி நித்தம் நினைமின் 
	வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து  
     வளர்கங்குல் நங்கை வெருவ 
	திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
	 01  | 
 
 931      |     
 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற  
     பிணிநோ யொருங்கும் உயரும் 
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி  
     விதியான வேத விகிர்தன் 
கானிடை யாடிபூதப் படையா னியங்கு  
     விடையான் இலங்கு முடிமேல் 
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 02
   | 
 932        |    
 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்  
     துயருற்ற தீங்கு விரவிப் 
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை  
     ஒழிவுற்ற வண்ண மகலும் 
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று  
     புகழ்வானு ளோர்கள் புணருந் 
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 03
   | 
 933        |    
 தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்  
     வினைசெற்ற வுற்ற உலகின் 
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்  
     நிலையாக நின்று மருவும் 
பேயுற வாயகானில் நடமாடி கோல  
     விடமுண்ட கண்டன் முடிமேல் 
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 04
   | 
 934        |    
 வசையப ராதமாய வுவரோத நீங்குந்  
     தவமாய தன்மை வரும்வான் 
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு  
     விரிநூலர் விண்ணும் நிலனும் 
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி  
     யமையாத காத லொடுசேர் 
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 05
   | 
 935        |    
 உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் 
வண்ணம்  
     உணர்வாக்கும் உண்மை உலகில் 
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்  
     நிறைவாற்று நேசம் வளரும் 
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்  
     அரவார்த்த அண்ணல் கழலே 
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 06
   | 
 936        |    
 தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் 
குழந்து  
     வருதிக் குழன்ற உடலின் 
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று  
     நினைவொன்று சிந்தை பெருகும் 
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்  
     சரமுன் றெரிந்த அவுணர் 
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 07
   | 
 937      |     
 உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் 
கூற்றம்  
     நனியஞ்சு மாத லுறநீர் 
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்  
     அழிபா டிலாத கடலின் 
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்  
     அழியத் தடக்கை முடிகள் 
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 08
   | 
 938          |   
 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க  
     பகைதீர்க்கு மேய வுடலில் 
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற  
     கரவைக் கரந்து திகழுஞ் 
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்  
     திருமாலும் நேட எரியாய்ச் 
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 09
   | 
 939        |    
 மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு 
முள்ளம்  
     வெளியாக்கு முன்னி யுணரும் 
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்  
     ஒலிபாடி யாடி பெருமை 
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்  
     உரைமாயும் வண்ணம் அழியச் 
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழவே.                                                                        | 
 10
   | 
 940          |   
 எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை  
     பெருமானை உள்கி நினையார் 
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்  
     திருநாரை யூர்கை தொழுவான் 
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்  
     உரைமாலை பத்தும் மொழிவார் 
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க  
     துளதென்பர் செம்மை யினரே.                                                                        | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.87 திருநறையூர் 
    
 	பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 941  | 
   நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி  
     யரியான்மு னாய வொளியான் 
	நீரியல் காலுமாகி நிறைவானு மாகி  
     யுறுதீயு மாய நிமலன் 
	ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த  
     நலகண்டு பண்டு சுடலை 
	நாரியோர் பாகமாக நடமாட வல்ல  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
	 01  | 
 
 942        |    
 இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை  
     யெதிர்நாணி பூண வரையிற் 
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து  
     அமரர்க் களித்த தலைவன் 
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்  
     மனம்நின்ற மைந்தன் மருவும் 
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 02
   | 
 943      |     
 சூடக முன்கைமங்கை யொருபாக மாக  
     அருள்கார ணங்கள் வருவான் 
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு  
     படுபிச்ச னென்று பரவத் 
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு  
     குழைதாழ வேழ வுரியன் 
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 03
   | 
 944        |    
 சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி  
     கதியாக நின்ற கடவுள் 
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்  
     இருளாய கண்டன் அவனித் 
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு  
     மலையின்கண் வந்து தொழுவார் 
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 04
   | 
 945        |    
 நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி  
     நிகழம் பலத்தின் நடுவே 
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்  
     எமர்சுற்ற மாய இறைவன் 
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து  
     விடையேறி இல்பலி கொள்வான் 
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 05
   | 
 946        |    
 கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி 
கொன்றை  
     மலர்துன்று செஞ்சடை யினான் 
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு  
     பலவாகி நின்ற பரமன் 
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்  
     பொருளான ஆதி யருளான் 
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 06
   | 
 947        |    
 ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க  
     மவையார ஆட லரவம் 
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்  
     விகிர்தன் விடங்கொள் மிடறன் 
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்  
     எழிலார வென்றி யருளும் 
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 07
   | 
 948          |   
 அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்  
     எதிருஞ் சிலம்பொ டிசையக் 
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்  
     முனிவுற் றிலங்கை யரையன் 
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்  
     இசைகேட் டிரங்கி யொருவாள் 
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 08
   | 
 949      |    
 குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்  
     எதிர்கூடி நேடி நினைவுற் 
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த  
     பெரியா னிலங்கு சடையன் 
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச  
     வருமைத் திகழ்ந்த பொழிலின் 
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 09
   | 
 950        |    
 துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற  
     வவர்தாமு மல்ல சமணுங் 
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த  
     பெருமான் பிறங்கு சடையன் 
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண  
     முறைமாதர் பாடி மருவும் 
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட  
     நறையூரின் நம்ப னவனே.                                                                                              | 
 10
   | 
 951      |     
 கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி  
     மிகுபந்தன் முந்தி யுணர 
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த  
     நறையூரின் நம்ப னவனை 
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த  
     தமிழ்மாலை பத்தும் நினைவார் 
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று  
     வழிபாடு செய்யும் மிகவே.                                                                                          | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.88 திருமுல்லைவாயில் 
 
 	பண் - பியந்தைக்காந்தாரம்    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 952  | 
  துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்  
     நடமன்னு துன்னு சுடரோன் 
	ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த  
     உமைபங்க னெங்க ளரனூர் 
	களிமண்டு சோலை கழனிக் கலந்த  
     கமலங்கள் தங்கு மதுவின் 
	தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
	 01  | 
 
 953    |      
 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்  
     அயனைப் படைத்த பரமன் 
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு  
     மரவிக்க நின்ற அரனூர் 
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி  
     யவையோத மோத வெருவித் 
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 02
   | 
 954      |     
 வாராத நாடன் வருவார்தம் வில்லின்  
     உருமெல்கி நாளு முருகில் 
ஆராத வின்ப னகலாத அன்பன்  
     அருள்மேவி நின்ற அரனூர் 
பேராத சோதி பிரியாத மார்பின்  
     அலர்மேவு பேதை பிரியாள் 
தீராத காதல் நெதிநேர நீடு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 03
   | 
 955      |     
 ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ 
டைந்தும்  
     இருமூன்றொ டேழு முடனாய் 
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்  
     அறியாமை நின்ற அரனூர் 
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று  
     கொடியொன்றொ டொன்று குழுமிச் 
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 04
   | 
 956      |     
 கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்  
     விடைநாளும் ஏறு குழகன் 
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்  
     மதியேறு சென்னி அரனூர் 
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்  
     அணிகோபு ரங்க ளழகார் 
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 05
   | 
 957          |   
 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி  
     ஒளியேறு கொண்ட வொருவன் 
ஆனேற தேறி யழகேறு நீறன்  
     அரவேறு பூணு மரனூர் 
மானேறு கொல்லை மயிலேறி வந்து  
     குயிலேறு சோலை மருவி 
தேனேறு மாவின் வளமேறி யாடு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 06
   | 
 958        |    
 நெஞ்சார நீடு நினைவாரை மூடு  
     வினைதேய நின்ற நிமலன் 
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்  
     அனலாடு மேனி யரனூர் 
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்  
     உளதென்று வைகி வரினுஞ் 
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 07
   | 
 959        |    
 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்  
     முடிபத்து மிற்று நெரிய 
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி  
     உமைபங்கன் எங்க ளரனூர் 
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து  
     மிளிர்கின்ற பொன்னி வடபால் 
திரைவந்து வந்து செறிதேற லாடு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 08
   | 
 960        |    
 மேலோடி நீடு விளையாடல் மேவு  
     விரிநூலன் வேத முதல்வன் 
பாலாடு மேனி கரியானு முன்னி  
     யவர்தேட நின்ற பரனூர் 
காலாடு நீல மலர்துன்றி நின்ற  
     கதிரேறு செந்நெல் வயலிற் 
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 09
   | 
 961        |    
 பனைமல்கு திண்கை மதமா வுரித்த  
     பரமன்ன நம்ப னடியே 
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்  
     அமண்மாய நின்ற அரனூர் 
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு  
     முகுளங்க ளெங்கு நெரியச் 
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு  
     திருமுல்லை வாயி லிதுவே.                                                                                          | 
 10
   | 
 962    |   
 அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த  
     அருள்செய்த எந்தை மருவார் 
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி  
     திருமுல்லை வாயி லிதன்மேல் 
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான  
     மிகுபந்தன் ஒண்டமிழ் களின் 
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்  
     அகல்வானம் ஆள்வர் மிகவே.                                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - கோதையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.89 திருக்கொச்சைவயம் 
 
 	பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 963  | 
  அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை 
	தன்மேற் 
	பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் 
	மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத 
	குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.                        | 
	 01  | 
 
 964    |         
 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் 
துன்னிய பூதக் 
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் 
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் 
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.                          | 
 02
   | 
 965              |  
 பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை 
தாழ 
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர் 
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் 
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.                                          | 
 03
   | 
 966    |         
 கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை 
நெடுமுடிக் கணிவர் 
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர் 
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து 
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.                      | 
 04
   | 
 967    |         
 ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ 
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் 
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் 
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.                          | 
 05
   | 
 968              |  
 மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை 
தன்மேற் 
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக 
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற் 
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.                      | 
 06
   | 
  
   |     
	 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் 
	சிதைந்து போயிற்று.                   
	                     | 
 07
   | 
 969              |  
 அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை 
நால்வர்க் கருளிப் 
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை 
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய் 
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.                          | 
 08
   | 
 970    |         
 சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா 
லென்றிவ ரேத்த 
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் 
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் 
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.    | 
 09
   | 
 971        |  
 குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் 
கொள்கை யினார்கள் 
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர் 
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் 
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.                      | 
 10
   | 
 972      |   
 கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் 
மேய 
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் 
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் 
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.                          | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை  
      
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
  973  | 
  எந்தை ஈசனெம் பெருமான்  
     ஏறமர் கடவுளென் றேத்திச் 
	சிந்தை செய்பவர்க் கல்லால்  
     சென்றுகை கூடுவ தன்றாற் 
	கந்த மாமல ருந்திக்  
     கடும்புனல் நிவாமல்கு கரைமேல் 
	அந்தண் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
	 01  | 
 
 974    |         
 ஈர வார்சடை தன்மேல்  
     இளம்பிறை யணிந்த எம்பெருமான் 
சீருஞ் செல்வமும் ஏத்தாச்  
     சிதடர்கள் தொழச்செல்வ தன்றால் 
வாரி மாமல ருந்தி  
     வருபுனல் நிவாமல்கு கரைமேல் 
ஆருஞ் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 02
   | 
 975    |         
 *பிணிக லந்தபுன் சடைமேற்  
     பிறையணி சிவனெனப் பேணிப் 
பணிக லந்துசெய் யாத  
     பாவிகள் தொழச்செல் வதன்றால் 
மணிக லந்துபொன் னுந்தி  
     வருபுனல் நிவாமல்கு கரைமேல் 
அணிக லந்தநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 03
   | 
 
  |  
 *பிணி - கட்டுதல்        
   | 
 976              |  
 துன்ன ஆடையொன் றுடுத்துத்  
     தூயவெண் ணீற்றி னராகி 
உன்னி நைபவர்க் கல்லால்  
     ஒன்றுங்கை கூடுவ தன்றாற் 
பொன்னும் மாமணி யுந்திப்  
     பொருபுனல் நிவாமல்கு கரைமேல் 
அன்ன மாருநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 04
   | 
 977              |  
 வெருகு ரிஞ்சுவெங் காட்டி  
     லாடிய விமலனென் றுள்கி 
உருகி நைபவர்க் கல்லால்  
     ஒன்றுங்கை கூடுவ தன்றால் 
முருகு ரிஞ்சுபூஞ் சோலை  
     மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந் 
தருகு ரிஞ்சுநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 05
   | 
 978              |  
 உரவு நீர்சடைக் கரந்த  
     வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப் 
பரவி நைபவர்க் கல்லாற்  
     பரிந்துகை கூடுவ தன்றால் 
குரவ நீடுயர் சோலைக்  
     குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் 
அரவ மாருநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 06
   | 
 979              |  
 நீல மாமணி மிடற்று  
     நீறணி சிவனெனப் பேணுஞ் 
சீல மாந்தர்கட் கல்லாற்  
     சென்றுகை கூடுவ தன்றால் 
கோல மாமல ருந்திக்  
     குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் 
ஆலுஞ் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 07
   | 
 980              |  
 செழுந்தண் மால்வரை யெடுத்த  
     செருவலி இராவணன் அலற 
அழுந்த ஊன்றிய விரலான்  
     போற்றியென் பார்க்கல்ல தருளான் 
கொழுங் கனிசுமந் துந்திக்  
     குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் 
அழுந்துஞ் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                        | 
 08
   | 
 981              |  
 நுணங்கு நூலயன் மாலும்  
     இருவரும் நோக்கரி யானை 
வணங்கி நைபவர்க் கல்லால்  
     வந்துகை கூடுவ தன்றால் 
மணங்க மழ்ந்துபொன் னுந்தி  
     வருபுனல் நிவாமல்கு கரைமேல் 
அணங்குஞ் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 09
   | 
 982              |  
 சாக்கி யப்படு வாருஞ்  
     சமண்படு வார்களும் மற்றும் 
பாக்கி யப்பட கில்லாப்  
     பாவிகள் தொழச்செல்வ தன்றால் 
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்  
     பொருபுனல் நிவாமல்கு கரைமேல் 
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்  
     அரத்துறை யடிகள்தம் அருளே.                                                                          | 
 10
   | 
 983              |  
 கறையி னார்பொழில் சூழ்ந்த  
     காழியுள் ஞான சம்பந்தன் 
அறையும் பூம்புனல் பரந்த  
     அரத்துறை யடிகள்தம் அருளை 
முறைமை யாற்சொன்ன பாடல்  
     மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப் 
பறையும் ஐயுற வில்லை  
     பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.                                                                      | 
 11
   | 
	இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
	நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.
	இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.91 திருமறைக்காடு 
    
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 984  | 
  பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் 
	திரைதவழ் முத்தங் 
	கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந் 
	திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும் 
	எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.                                        | 
	 01  | 
 
 985              |  
 கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை 
யாடை 
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங் 
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் 
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.                        | 
 02
   | 
 986    |    
 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் 
திலங்கு பொன்மார்பிற் 
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் 
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக் 
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.                | 
 03
   | 
 986    |         
 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் 
கருதித் 
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம் 
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின் 
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.                                            | 
 04
   | 
 987              |  
 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் 
தழுவிய அடியும் 
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான் 
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட் 
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.                              | 
 05
   | 
 989        |  
 பல்லி லோடுகை யேந்திப் பாடியும் 
ஆடியும் பலிதேர் 
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் 
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் 
மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே.                              | 
 06
   | 
 990      |   
 நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு 
மத்தாகப் 
பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய 
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட 
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.                  | 
 07
   | 
 991      |   
 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு 
பெருமையை ஓரான் 
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க 
நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன் 
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.                      | 
 08
   | 
 992    |    
 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை 
யானும் 
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான் 
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப 
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.                                                | 
 09
   | 
 993      |   
 பெரிய வாகிய குடையும் பீலியும் 
அவைவெயிற் கரவாக் 
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள் 
அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள் 
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.                        | 
 10
   | 
 994      |   
 மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் 
காடமர்ந் தாரைக் 
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன் 
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப் 
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.                      | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
  
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 995  | 
   பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் 
	சுடர்விடு பாணி 
	நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில் 
	புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி 
	வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.                                            | 
	 01  | 
 
 996        |  
 முயல் வளாவிய திங்கள் வாண்முகத் 
தரிவையில் தெரிவை 
இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான் 
கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும் 
வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.                                            | 
 02
   | 
 997    |    
 தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் 
சாந்தமும் புகையுங் 
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங் 
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் 
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.                            | 
 03
   | 
 998      |   
 பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத 
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம் 
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த 
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.      | 
 04
   | 
 999    |    
 ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் 
பெருமான் 
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில் 
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் 
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.                                            | 
 05
   | 
 1000        |  
 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய 
வண்டேறிக் 
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் 
உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல் 
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.                      | 
 06
   | 
 1001        |  
 தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி 
யெழில்நரம் பெடுத்துத் 
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் 
அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த 
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.                                              | 
 07
   | 
 1002      |   
 சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் 
பரவும் 
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக் 
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார் 
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.                                            | 
 08
   | 
 1003      |   
 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக 
னோடு 
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் 
ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால் 
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.                                      | 
 09
   | 
 1004        |  
 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி 
னாற்றம் 
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற் 
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் 
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.                | 
 10
   | 
 1005      |  
 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி 
பொழிற் புகலூரில் 
மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத் 
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும் 
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே.                              | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.93 திருத்தெங்கூர்   
  
 	பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1006  | 
  புரைசெய் வல்வினை தீர்க்கும் 
	புண்ணியர் விண்ணவர் போற்றக் 
	கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் 
	இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர் 
	விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.            | 
	 01  | 
 
 1007            |  
 சித்தந் தன்னடி நினைவார் செடிபடு 
கொடுவினை தீர்க்குங் 
கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன் 
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த 
வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.              | 
 02
   | 
 1008      |  
 அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை 
மழுவாட் 
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் 
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் 
விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.  |     
 03
   | 
 1009    |   
 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் 
நெறியருள் பயப்பார் 
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர் 
வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி 
விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.                | 
 04
   | 
 1010    |   
 சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் 
காலனைக் காலால் 
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக 
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.                                  | 
 05
   | 
 1011      |  
 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் 
பொடியணி சுவண்டர் 
எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச் 
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற 
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.                  | 
 06
   | 
 1012      |  
 நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் 
வினைகெட நின்றார் 
முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப் 
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி 
வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.    | 
 07
   | 
 1013      |  
 எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் 
மால்வரை யெடுக்கக் 
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர் 
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் 
விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.                | 
 08
   | 
 1014      |  
 தேடித் தானயன் மாலுந் திருமுடி 
யடியிணை காணார் 
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால் 
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் 
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.    | 
 09
   | 
 1015      |  
 சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் 
சமணர் சொல்தவிர 
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக் 
கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த 
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே      | 
 .10
   | 
 1016      |  
 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் 
குன்றமர்ந் தாரைக் 
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் 
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.                                                  | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.94 திருவாழ்கொளிபுத்தூர்
        
 	பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1017  | 
  சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ 
	துடையார் 
	ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் 
	தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் 
	வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.                            | 
	 01  | 
 
 1018    |        
 எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் 
அறங்கள் 
கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார் 
பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார் 
வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                        | 
 02
   | 
 1019            |  
 நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் 
நோக்கும் 
வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் 
முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார் 
வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                        | 
 03
   | 
 1020    |        
 பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி 
யுடையார் 
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார் 
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார் 
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.      | 
 04
   | 
 1021    |        
 பரவு வாரையும் உடையார் பழித்திகழ் 
வாரையும் உடையார் 
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் 
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் 
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                        | 
 05
   | 
 1022    |        
 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் 
கருவியும் புறவில் 
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார் 
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை 
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                        | 
 06
   | 
 1023      |   
 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் 
மதிற்பரி சறுத்தார் 
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த 
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த 
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                      | 
 07
   | 
 1024      |   
 ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட 
அடர்த்து 
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார் 
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க 
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                      | 
 08
   | 
 1025        |  
 வென்றி மாமல ரோனும் விரிகடல் 
துயின்றவன் றானும் 
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி 
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை 
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.                          | 
 09
   | 
 1026      |   
 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் 
சமணர் 
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல 
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும் 
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.                      | 
 10
   | 
 1027      |   
 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் 
ஞான சம்பந்தன் 
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை 
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார் 
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.                    | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.95 திருஅரைசிலி 
  
 	பண் - பியந்தைக்காந்தாரம்  
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1028  | 
  பாடல் வண்டறை கொன்றை பால்மதி 
	பாய்புனற் கங்கை 
	கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி 
	வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல் 
	ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.                          | 
	 01  | 
 
 1029      |   
 ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை 
யெற்றி 
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த 
ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் 
ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.                            | 
 02
   | 
 1030        |  
 கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள 
வனமென் 
கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன் 
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து 
அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே.                          | 
 03
   | 
 1031      |   
 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை 
விழித்துப் 
புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை 
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை 
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே.                            | 
 04
   | 
 1032      |   
 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு 
மருவித் 
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து 
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி 
ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.                            | 
 05
   | 
 1033      |   
 பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு 
மத்தாகப் 
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் 
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு 
அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.                                            | 
 06
   | 
 
  |       
 இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் 
சிதைந்துபோயிற்று.                    
                      | 
 07
   | 
 1034        |  
 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் 
லரக்கன் 
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப் 
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு 
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே.                            | 
 08
   | 
 1035        |  
 குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் 
றானும் 
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ் 
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண 
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.                      | 
 09
   | 
 1036        |  
 குருளை யெய்திய மடவார் நிற்பவே 
குஞ்சியைப் பறித்துத் 
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் 
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் 
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.                            | 
 10
   | 
 1037    |        
 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி 
யடிகளைக் காழி 
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ் 
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த 
வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே.                          | 
 11
   | 
	இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அரைசிலிநாதர், தேவியார் - பெரியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.96 சீகாழி  
      
 	பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1038  | 
  பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை 
	மார்பனெம் பெருமான் 
	செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் 
	பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்  
	தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.                            | 
	 01  | 
 
 1039    |   
 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் 
நிறுவி 
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு 
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் 
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.                      | 
 02
   | 
 1040      |   
 கரியின் மாமுக முடைய கணபதி தாதை 
பல்பூதந் 
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் 
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி 
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.                          | 
 03
   | 
 1041      |   
 சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய 
சென்னி 
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந் 
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து 
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.                        | 
 04
   | 
 1042    |    
 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி 
யேந்திய கையான் 
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் 
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க 
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.                        | 
 05
   | 
 1043    |    
 நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய 
நம்பன் 
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் 
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் 
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.                    | 
 06
   | 
 1044      |   
 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் 
காட்டில் 
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம் 
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் 
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.                                            | 
 07
   | 
 1045      |   
 கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் 
திறலினைக் கருதி 
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச் 
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் 
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.        | 
 08
   | 
 1046      |   
 மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய 
மனத்தாற் 
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் 
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய 
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.                        | 
 09
   | 
 1047        |  
 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ 
லடியிணை காணுஞ் 
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் 
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு 
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.                            | 
 10
   | 
 1048        |  
 ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி 
லோங்கு 
      ---- ---- ---- ---- 
      ---- ---- ---- ---- 
      ---- ---- ---- ----                      | 
 11
   | 
 
  |  
 * இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் 
பின்மூன்றடிகள்  
      சிதைந்துபோயின.
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.97 சீகாழி - திருவிராகம்  
  
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1049  | 
  நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை 
	செய்துநீர் 
	அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் 
	உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை 
	நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.                                              | 
	 01  | 
 
 1050      |   
 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி 
நித்தலும் 
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர் 
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந் 
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.                                                  | 
 02
   | 
 1051    |    
 சோறுகூறை யின்றியே துவண்டுதூர 
மாய்நுமக் 
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் 
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் 
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.                      | 
 03
   | 
 1052      |   
 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல 
நாளையும் 
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் 
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் 
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.                    | 
 04
   | 
 1053    |    
 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் 
றலாதநோய் 
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் 
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் 
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.                                                | 
 05
   | 
 1054      |   
 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே 
பிறந்துநீர் 
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ 
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் 
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.                                            | 
 06
   | 
 
  |       
 இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் 
சிதைந்துபோயிற்று.                    
                      | 
 07
   | 
 1055        |  
 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு 
சொல்லுநீர் 
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் 
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் 
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.                                                                | 
 08
   | 
 1056      |  
 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம 
நோய்தனால் 
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் 
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா 
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.                                                | 
 09
   | 
 1057      |   
 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் 
புதல்வர்கள் 
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் 
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் 
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.                      | 
 10
   | 
 1058    |        
 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை 
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை 
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் 
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.                        | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.98 திருத்துருத்தி - திருவிராகம் 
       
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1059  | 
   வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் 
	உந்திவந் 
	திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் 
	கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் 
	உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.                              | 
	 01  | 
 
 1060      |   
 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை 
கூவிளந் 
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக் 
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம் 
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.                                                  | 
 02
   | 
 1061        |  
 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு 
செஞ்சடைச் 
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் 
பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக் 
கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.                            | 
 03
   | 
 1062      |   
 கருத்தினாலோர் காணியில் 
விருத்தியில்லை தொண்டர்தம் 
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும் 
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய் 
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.                                                | 
 04
   | 
 1063      |   
 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் 
திருந்தடி 
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல் 
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட் 
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.                            | 
 05
   | 
 1064        |  
 வெயிற்கெதிர்ந் திடங்கொடா 
தகங்குளிர்ந்த பைம்பொழில் 
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய் 
மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ 
வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.                                | 
 06
   | 
 1065      |   
 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் 
கொழிந்தசீர் 
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் 
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல் 
மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.                            | 
 07
   | 
 1066      |   
 சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய 
மன்மதன் 
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய் 
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை 
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.                    | 
 08
   | 
 1067      |   
 களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் 
மாலுமாய் 
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார் 
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி 
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.                                                | 
 09
   | 
 1068        |  
 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த 
பொய்தனை 
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந் 
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம் 
பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.                                        | 
 10
   | 
 1069    |        
 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் 
தருந்தமிழ் 
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால் 
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே 
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.                                      | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வேதேசுவரர், தேவியார் - முகிழாம்பிகையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.99 திருக்கோடிகா - திருவிராகம்   
     
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1070  | 
  இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற 
	இச்சையால் 
	பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் 
	மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் 
	கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.                            | 
	 01  | 
 
 1071      |   
 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் 
திராதுநீர் 
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ 
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங் 
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.                        | 
 02
   | 
 1072    |    
 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் 
துறந்துநீர் 
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் 
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் 
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.                                                  | 
 03
   | 
 1073      |   
 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை 
உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ 
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக் 
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.                                              | 
 04
   | 
 1074      |   
 முன்னைநீர்செய் பாவத்தான் 
மூர்த்திபாதஞ் சிந்தியா 
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ 
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான் 
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.                                              | 
 05
   | 
 1075      |   
 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் 
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக் 
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் 
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.                                              | 
 06
   | 
 1076      |   
 ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் 
றிருந்துநீர் 
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ 
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் 
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.                            | 
 07
   | 
 1077      |   
 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் 
தவிர்ந்துநீர் 
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ 
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர் 
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.                                                  | 
 08
   | 
 1078    |    
 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் 
சொல்லுவன் 
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா 
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர் 
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.                                            | 
 09
   | 
 1079        |   
 தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும் 
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை 
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங் 
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.                                                  | 
 10
   | 
 1080            |  
 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய 
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை 
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் 
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம் 
       
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1081  | 
   படைகொள்கூற்றம் வந்துமெய்ப் 
	பாசம்விட்ட போதின்கண் 
	இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே 
	குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் 
	விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.                          | 
	 01  | 
 
 1082      |   
 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் 
கால்நிமிர்த் 
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர் 
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்  
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.                                            | 
 02
   | 
 1083      |   
 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ 
தறிதிரேல் 
அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே 
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் 
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.                            | 
 03
   | 
 1084        |  
 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி 
குன்மமும் 
இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் 
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் 
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.                            | 
 04
   | 
 1085        |  
 உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த 
போதின்கண் 
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே 
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் 
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.                                              | 
 05
   | 
 1086      |   
 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து 
நாடொறும் 
ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங் 
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் 
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.                                              | 
 06
   | 
 1087        |  
 உரையும்பாட்டுந் தளர்வெய்தி 
உடம்புமூத்த போதின்கண் 
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால் 
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் 
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.                  | 
 07
   | 
 1088      |   
 ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை 
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல் 
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் 
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.                                              | 
 08
   | 
 1089      |   
 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு 
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில் 
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் 
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.                                                  | 
 09
   | 
 1090      |   
 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் 
டார்களும் 
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல் 
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில் 
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.                      | 
 10
   | 
 1091            |  
 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான 
சம்பந்தன் 
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால் 
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில் 
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.                        | 
 11
   | 
	இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.101 திருவாரூர் - திருவிராகம்  
       
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1092  | 
  பருக்கையானை மத்தகத் தரிக்குலத் 
	துகிர்ப்புக 
	நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் 
	கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி 
	அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.                    | 
	 01  | 
 
 1093      |  
 விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை 
மத்தமும் 
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர் 
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் 
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.                                        | 
 02
   | 
 1094      |  
 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் 
இன்னுயிர் 
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர் 
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி 
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.                                    | 
 03
   | 
 1095      |  
 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி 
மேனியில் 
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர் 
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை 
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.                                | 
 04
   | 
 1096      |  
 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு 
வார்மனத் 
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர் 
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம் 
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.                                      | 
 05
   | 
 1097      |  
 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் 
டருத்தியோ 
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர் 
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் 
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.                                    | 
 06
   | 
 1098      |  
 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் 
காமனை 
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர் 
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் 
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.                                                  | 
 07
   | 
 1099      |  
 வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் 
முரத்தொடும் 
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர் 
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை 
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.                                                  | 
 08
   | 
 1100      |  
 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் 
பறந்துமெய் 
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர் 
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா 
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.                                                  | 
 09
   | 
 1101      |  
 பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி 
யார்தவம் 
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர் 
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல் 
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.                                                        | 
 10
   | 
 1102    |     
 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா 
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை 
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை 
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.                                                | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.102 திருச்சிரபுரம்  
 
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1103  | 
  அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை 
          அமரர்தம் பெருமானார் 
	மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் 
          வைத்தவர் வேதந்தாம் 
	பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் 
          சிரபுரத் தார்சீரார் 
	பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் 
          வினையொடும் பொருந்தாரே.                                                                              | 
	 01  | 
 
 1104  |     
 கோல மாகரி உரித்தவர் அரவொடும் 
          ஏனக்கொம் பிளஆமை 
சாலப் பூண்டுதண் மதியது சூடிய 
          சங்கர னார்தம்மைப் 
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் 
          பொருகடல் விடமுண்ட 
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் 
          தொழவினை நில்லாவே.                                                                                    | 
 02
   | 
 1105  |     
 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் 
          தவங்கெட மதித்தன்று 
கானத் தேதிரி வேடனா யமர்செயக் 
          கண்டருள் புரிந்தார்பூந் 
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் 
          சிரபுரத் துறையெங்கள் 
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை 
          குற்றங்கள் குறுகாவே.                                                                                          | 
 03
   | 
 1106    |    
 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் 
          காலனை உதைசெய்தார் 
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் 
          பிணக்கறுத் தருள்செய்வார் 
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் 
          சிரபுரத் தமர்கின்ற 
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் 
          கருவினை யடையாவே.                                                                                        | 
 04
   | 
 1107  |     
 பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் 
          பனிமதி ஆகாசம் 
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் 
          தலைவனு மாய்நின்றார் 
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி 
          செழும்புனற் கோட்டாறு 
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் 
          அடியவர் வருந்தாரே.                                                                                                          | 
 05
   | 
 1108  |     
 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ் 
          வுலகங்க ளவைமூட 
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக 
          அந்தரத் துயர்ந்தார்தாம் 
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை 
          இன்பன்எம் பெருமானார் 
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ 
          வல்வினை அடையாவே.                                                                                        | 
 06
   | 
 1109  |     
 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய 
          பிணமிடு சுடுகாட்டில் 
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம் 
          ஆடும்வித் தகனாரொண் 
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் 
          தகுசிர புரத்தார்தாந் 
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் 
          தொழுமவர் தளராரே.                                                                                        | 
 07
   | 
 1110  |     
 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன் 
          எழில்கொள்வெற் பெடுத்தன்று 
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி 
          நெரியவைத் தருள்செய்தார் 
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன் 
          றதனிடைப் புகுந்தாருங் 
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு 
          தெழவினை குறுகாவே.                                                                                        | 
 08
   | 
 1111    |    
 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் 
          மாயனென் றிவரன்று 
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க் 
          கிளறியும் பறந்துந்தாம் 
பண்டு கண்டது காணவே நீண்டவெம் 
          பசுபதி பரமேட்டி 
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ 
          வினையவை கூடாவே.                                                                                          | 
 09
   | 
 1112  |     
 பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் 
          பார்மிசைத் துவர்தோய்ந்த 
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் 
          தேவர்கள் பெருமானார் 
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில் 
          மூழ்கிட இளவாளை 
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை 
          விட்டிடும் மிகத்தானே.                                                                                      | 
 10
   | 
 1113    |    
 பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் 
          பையர வோடக்கு 
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை 
          நித்திலப் பெருந்தொத்தை 
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை 
          விண்ணவர் பெருமானைப் 
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் 
          பரமனைப் பணிவாரே.                                                                                        | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.103 திரு அம்பர்த்திருமாகாளம்  
 
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1114  | 
    புல்கு பொன்னிறம் புரிசடை 
	நெடுமுடிப் 
          போழிள மதிசூடிப் 
	பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் 
          பிணையல்செய் தவர்மேய 
	மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
	அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க் 
          கருவினை அடையாவே.                                                                                        | 
	 01  | 
 
 1115    |    
 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் 
          அங்கையில் அனலேந்தி 
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக 
          ளிசைவன பலபூதம் 
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் 
          பயன்தலைப் படுவாரே.                                                                                        | 
 02
   | 
 1116    |    
 குணங்கள் கூறியுங் குற்றங்கள் 
பரவியுங் 
          குரைகழ லடிசேரக் 
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் 
          கருத்தறிந் தவர்மேய 
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை 
          வல்வினை அடையாவே.                                                                                        | 
 03
   | 
 1117    |    
 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் 
          இழைவளர் நறுங்கொன்றை 
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் 
          தாமகிழ்ந் தவர்மேய 
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளங் 
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர் 
          காதன்மை யுடையாரே.                                                                                        | 
 04
   | 
 1118    |    
 நெதியம் என்னுள போகமற் றென்னுள 
          நிலமிசை நலமாய 
கதியம் என்னுள வானவர் என்னுளர் 
          கருதிய பொருள்கூடில் 
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் 
          டேத்துதல் புரிந்தோர்க்கே.                                                                                                | 
 05
   | 
 1119    |    
 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் 
          கனல்விடு சுடர்நாகந் 
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை 
          திகழவைத் தவர்மேய 
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் 
          வுலகினில் உயர்வாரே.                                                                                      | 
 06
   | 
 1120  |     
 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் 
          சுடர்விடு நறுங்கொன்றை 
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் 
          புகழ்புரிந் தவர்மேய 
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற் 
          பெருமையைப் பெறுவாரே.                                                                    |       
 07
   | 
 1121  |     
 பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப் 
          பருவரைக் கீழூன்றி 
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த 
          இறையவன் உறைகோயில் 
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளங் 
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை 
          கனலிடைச் செதிளன்றே.                                                                                    | 
 08
   | 
 1122    |    
 உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின் 
          ஒளிகிளர் மலரோனும் 
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் 
          பரவநின் றவர்மேய 
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளங் 
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் 
          கவலையுங் களைவாரே.                                                                                        | 
 09
   | 
 1123    |    
 பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும் 
          பீலிகொண் டுழல்வாருங் 
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங் 
          கழறநின் றவர்மேய 
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை 
          வருபுனல் மாகாளம் 
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் 
          பரவுதல் செய்வோமே.                                                                                        | 
 10
   | 
 1124  |     
 மாறு தன்னொடு மண்மிசை யில்லது 
          வருபுனல் மாகாளத் 
தீறும் ஆதியு மாகிய சோதியை 
          ஏறமர் பெருமானை 
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம் 
          பந்தன தமிழ்மாலை 
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் 
          குற்றங்கள் குறுகாவே.                                                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,
	தேவியார் - பட்சநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.104 திருக்கடிக்குளம்  
      
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1125  | 
  பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் 
          புலியுரி யதளாடை 
	கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு 
          குரைகழல் சிலம்பார்க்கக் 
	கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் 
          துறையுங்கற் பகத்தைத்தம் 
	முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை 
          முன்வினை மூடாவே.                                                                                                            | 
	 01  | 
 
 1126  |     
 விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா 
          விகிர்தனை விழவாரும் 
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் 
          வள்ளலை மருவித்தங் 
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் 
          துறைதரு கற்பகத்தைப் 
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் 
          பழியிலர் புகழாமே.                                                                                                        | 
 02
   | 
 1127    |    
 பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது 
          புலியதள் அழல்நாகந் 
தங்க மங்கையைப் பாகம துடையவர் 
          தழல்புரை திருமேனிக் 
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் 
          துறைதரு கற்பகத்தை 
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை 
          இடும்பைவந் தடையாவே.                                                                                      | 
 03
   | 
 1128  |     
 நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் 
          தொத்தினை நிகரில்லாப் 
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை 
          பசும்பொன்னை விசும்பாருங் 
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் 
          துறையுங்கற் பகந்தன்னைச் 
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை 
          தேய்வது திணமாமே.                                                                                                          | 
 04
   | 
 1129    |    
 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு 
          துன்னிய தழல்நாகம் 
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல 
          கொண்டடி யவர்போற்றக் 
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் 
          துறைதரு கற்பகத்தை 
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் 
          விதியுடை யவர்தாமே.                                                                                      | 
 05
   | 
 1130    |    
 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ 
          டலைபுனல் அழல்நாகம் 
போதி லங்கிய கொன்றையும் மத்தமும் 
          புரிசடைக் கழகாகக் 
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் 
          துறைதரு கற்பகத்தின் 
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை 
          பற்றறக் கெடுமன்றே.                                                                                                          | 
 06
   | 
 1131    |    
 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் 
          குழாம்பல குளிர்பொய்கை 
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் 
          பூவைசே ருங்கூந்தல் 
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் 
          துறையுங்கற் பகத்தைச்சீர் 
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை 
          நிற்ககில் லாதானே.                                                                                                        | 
 07
   | 
 1132  |     
 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் 
          மதியிலா மையிலோடி 
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற 
          இறையவன் விரலூன்றக் 
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் 
          கடிக்குளந் தனில்மேவிக் 
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் 
          குணமுடை யவர்தாமே.                                                                                          | 
 08
   | 
 1133  |     
 நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு 
          நிகழடி முடிகாணார் 
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் 
          பவளத்தின் படியாகிக் 
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் 
          துறையுங்கற் பகத்தின்றன் 
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத் 
          தீவினை யடையாவே.                                                                                        | 
 09
   | 
 1134    |    
 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் 
          குறியினில் நெறிநில்லா 
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் 
          கொள்ளன்மின் விடமுண்ட 
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் 
          துறைதரும் எம்மீசர் 
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் 
          தூநெறி எளிதாமே.                                                                                                          | 
 10
   | 
 1135  |     
 தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் 
          மன்னன்நற் சம்பந்தன் 
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் 
          மாலதாய் மகிழ்வோடுங் 
கனம லிகட லோதம்வந் துலவிய 
          கடிக்குளத் தமர்வானை 
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் 
          இறைவனோ டுறைவாரே.                                                                                      | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கற்பகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.105 திருக்கீழ்வேளூர் 
  
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1136  | 
  மின்னு லாவிய சடையினர் விடையினர் 
          மிளிர்தரும் அரவோடும் 
	பன்னு லாவிய மறைஒலி நாவினர் 
          கறையணி கண்டத்தர் 
	பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் 
          புகழ்மிகு கீழ்வேளூர் 
	உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை 
          யோடிட வீடாமே.                                                                                                            | 
	 01  | 
 
 1137  |     
 நீரு லாவிய சடையிடை யரவொடு 
         மதிசிர நிரைமாலை 
வாரு லாவிய வனமுலை யவளொடு 
          மணிசிலம் பவையார்க்க 
ஏரு லாவிய இறைவன துறைவிடம் 
          எழில்திகழ் கீழ்வேளூர் 
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் 
          பிணியொடு வினைபோமே.                                                                                                | 
 02
   | 
 1138    |    
 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு 
          வெள்ளெருக் கலர்மத்தம் 
பண்ணி லாவிய பாடலோ டாடலர் 
          பயில்வுறு கீழ்வேளூர்ப் 
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் 
          கோயிலெம் பெருமானை 
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்  
          உலகினில் உள்ளாரே.                                                                                        | 
 03
   | 
 1139  |     
 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் 
          தொங்கவைத் தழகாக 
நாடு லாவிய பலிகொளும் நாதனார் 
          நலமிகு கீழ்வேளூர்ப் 
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் 
          கோயிலுட் பிரியாது 
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் 
          நிலைமிகப் பெறுவாரே.                                                                                    | 
 04
   | 
 1140    |    
 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை 
          வடமணி சிரமாலை 
மன்று லாவிய மாதவ ரினிதியன் 
          மணமிகு கீழ்வேளூர் 
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் 
          நிமலனை நினைவோடுஞ் 
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை 
          தேய்வது திணமாமே.                                                                                                          | 
 05
   | 
 1141    |    
 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் 
          கூத்தனை மகிழ்ந்துள்கித் 
தொத்து லாவிய நூலணி மார்பினர் 
          தொழுதெழு கீழ்வேளூர்ப் 
பித்து லாவிய பத்தர்கள் பேணிய 
          பெருந்திருக் கோயில்மன்னும் 
முத்து லாவிய வித்தினை யேத்துமின் 
          முடுகிய இடர்போமே.                                                                                        | 
 06
   | 
 1142    |    
 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் 
          வன்னியுந் துன்னாரும் 
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர் 
          காதல்செய் கீழ்வேளூர் 
மறைநி லாவிய அந்தணர் மலிதரு 
          பெருந்திருக் கோயில்மன்னும் 
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் 
          நினைபவர் வினைபோமே.                                                                                                  | 
 07
   | 
 1143    |    
 மலைநி லாவிய மைந்தனம் மலையினை 
          யெடுத்தலும் அரக்கன்றன் 
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் 
          உறைதரு கீழ்வேளூர்க் 
கலைநி லாவிய நாவினர் காதல்செய் 
          பெருந்திருக் கோயிலுள் 
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் 
          நினையவல் வினைபோமே.                                                                                                  | 
 08
   | 
 1144    |    
 மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு 
          மலரவன் காண்பொண்ணாப் 
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி 
          பாகனைப் பரிவோடுஞ் 
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் 
          மல்கிய கீழ்வேளூர் 
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் 
          நடலைகள் நணுகாவே.                                                                                          | 
 09
   | 
 1145  |     
 சீறு லாவிய தலையினர் நிலையிலா 
          அமணர்கள் சீவரத்தார் 
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் 
          சுரும்பமர் கீழ்வேளூர் 
ஏறு லாவிய கொடியனை யேதமில் 
          பெருந்திருக் கோயில்மன்னு 
பேறு லாவிய பெருமையன் திருவடி 
          பேணுமின் தவமாமே.                                                                                                          | 
 10
   | 
 1146    |    
 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை 
          அழகமர் கீழ்வேளூர்த் 
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் 
          கோயிலெம் பெருமானை 
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு 
          புகலிமன் சம்பந்தன் 
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி 
          பெறுவது திடமாமே.                                                                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.106 திருவலஞ்சுழி  
       
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1147  | 
  என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே 
          யிருங்கடல் வையத்து 
	முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை 
          முழுமணித் தரளங்கள் 
	மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி 
          வாணனை வாயாரப் 
	பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் 
          வழிபடும் அதனாலே.                                                                                                          | 
	 01  | 
 
 1148    |    
 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை 
          விரிகடல் வருநஞ்சம் 
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய 
          இறைவனை உலகத்தில் 
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை 
          வலஞ்சுழி யிடமாகக் 
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ 
          டினிதிருந் தமையாலே.                                                                                      | 
 02
   | 
 1149  |     
 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன 
          விறலின்கண் அடியாரைப் 
பரிந்து காப்பன பத்தியில் வருவன 
          மத்தமாம் பிணிநோய்க்கு 
மருந்து மாவன மந்திர மாவன 
          வலஞ்சுழி யிடமாக 
இருந்த நாயகன் இமையவ ரேத்திய 
          இணையடித் தலந்தானே.                                                                                        | 
 03
   | 
 1150    |    
 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் 
நிறத்தினர் 
          அறத்திற முனிவர்க்கன் 
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் 
          தினிதருள் பெருமானார் 
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி 
          யிடமகிழ்ந் தருங்கானத் 
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய 
          அற்புதம் அறியோமே.                                                                                        | 
 04
   | 
 1151  |     
 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் 
          எரியுரு வொருபாகம் 
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் 
          பெருங்கடற் பவளம்போல் 
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் 
          பரிபவர் மனம்புக்க 
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் 
          இணையடி தொழுவாரே.                                                                                        | 
 05
   | 
 1152    |    
 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் 
          மேனியர் மடமாதர் 
இருவ ராதரிப் பார்பல பூதமும் 
         பேய்களும் அடையாளம் 
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் 
          தகந்தொறும் பலிக்கென்று 
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே 
          வரிவளை கவர்ந்தாரே.                                                                                      | 
 06
   | 
 1153    |    
 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் 
          குலவிய நெய்த்தானம் 
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர் 
          இமையவர் பணிகேட்பார் 
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் 
          வலஞ்சுழி யரனார்பால் 
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று 
          சேயிழை தளர்வாமே.                                                                                        | 
 07
   | 
 1154  |     
 குயிலின் நேர்மொழிக் கொடியிடை 
வெருவுறக் 
          குலவரைப் பரப்பாய 
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி 
          தோளிரு பதுமூன்றி 
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் 
          வலஞ்சுழி யெம்மானைப் 
பயில வல்லவர் பரகதி காண்பவர் 
          அல்லவர் காணாரே.                                                                                                            | 
 08
   | 
 1155    |    
 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் 
          அரவணைத் துயின்றானுங் 
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் 
          மாண்பமர் தடக்கையில் 
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி 
          வலங்கொடு பாதத்தால் 
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு 
          துன்பங்கள் களைவாரே.                                                                                        | 
 09
   | 
 1156    |    
 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் 
          தவம்புரிந் தவஞ்செய்வார் 
நெறிய லாதன கூறுவர் மற்றவை 
          தேறன்மின் மாறாநீர் 
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி 
          மருவிய பெருமானைப் 
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் 
          அளவறுப் பொண்ணாதே.                                                                                        | 
 10
   | 
 1157    |    
 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய 
          மருந்தினை வயற்காழி 
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் 
          நவிற்றிய தமிழ்மாலை 
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் 
          கேட்டுகந் தவர்தம்மை 
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் 
          வருத்தம்வந் தடையாவே.                                                                                      | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - சித்தீசநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.107 திருக்கேதீச்சரம்  
      
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1158  | 
  விருது குன்றமா மேருவில் நாணர 
          வாவனல் எரியம்பாப் 
	பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் 
          றுறைபதி யெந்நாளுங் 
	கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் 
          பொழிலணி மாதோட்டங் 
	கருத நின்றகே தீச்சரங் கைதொழக் 
          கடுவினை யடையாவே.                                                                                        | 
	 01  | 
 
 1159    |    
 பாடல் வீணையர் பலபல சரிதையர் 
          எருதுகைத் தருநட்டம் 
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் 
          சுண்டிருள் கண்டத்தர் 
ஈட மாவது இருங்கடற் கரையினில் 
          எழில்திகழ் மாதோட்டம் 
கேடி லாதகே தீச்சரங் கைதொழக் 
          கெடுமிடர் வினைதானே.                                                                    |       
 02
   | 
 1160  |     
 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் 
          அறைகழல் சிலம்பார்க்கச் 
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் 
          அகந்தொறும் இடுபிச்சைக் 
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் 
          உயர்தரு மாதோட்டத் 
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் 
          கருவினை யடையாவே.                                                                                        | 
 03
   | 
 1161  |     
 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் 
          விரிதரு கரத்தேந்தும் 
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் 
          மறிகடல் மாதோட்டத் 
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் 
          பரிந்தசிந் தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் 
          மொய்த்தெழும் வினைபோமே.                                                                              | 
 04
   | 
 1162  |     
 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் 
          மடைந்தவர்க் கருளீய 
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் 
          மலிகடல் மாதோட்டத் 
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் 
          இராப்பகல் நினைந்தேத்தி 
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் 
          அன்பராம் அடியாரே.                                                                                                          | 
 05
   | 
 1163    |    
 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் 
          பொருந்தவைத் தொருபாகம் 
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய 
          பொருளினர் குடிவாழ்க்கை 
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற 
          மருவிய மாதோட்டக் 
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே 
          தீச்சரம் பிரியாரே.                                                                                                      | 
 06
   | 
 1164  |     
 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் 
          லுலகினில் உயிர்வாழ்க்கை 
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் 
         காதலித் துறைகோயில் 
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை 
          நடமிடு மாதோட்டந் 
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே 
          தீச்சர மதுதானே.                                                                                                            | 
 07
   | 
 1165    |    
 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் 
          தெடுத்தவன் முடிதிண்டோ ள் 
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த 
          தலைவனார் கடல்வாயப் 
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் 
          பொருந்திய மாதோட்டத் 
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே 
          தீச்சரத் துள்ளாரே.                                                                                                          | 
 08
   | 
 1166    |    
 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் 
          புவியிடந் தெழுந்தோடி 
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா 
          வித்தக மென்னாகும் 
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா 
          தோட்டநன் னகர்மன்னித் 
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் 
          திருந்தஎம் பெருமானே.                                                                                      | 
 09
   | 
 1167    |    
 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் 
          புறனுரைச் சமணாதர் 
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய 
          ஏழைமை கேலேன்மின் 
மத்த யானையை மறுகிட உரிசெய்து 
          போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே 
          தீச்சரம் அடைமின்னே.                                                                                      | 
 10
   | 
 1168    |    
 மாடெ லாமண முரசெனக் கடலின 
          தொலிகவர் மாதோட்டத் 
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் 
          தடிகளை யணிகாழி 
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் 
          நவின்றெழு பாமாலைப் 
பாட லாயின பாடுமின் பத்தர்காள் 
          பரகதி பெறலாமே.                                                                                                          | 
 11
   | 
	இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கேதீச்சுவரர், தேவியார் - கௌரிநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.108 திருவிற்குடிவீரட்டானம்  
   
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1169  | 
  வடிகொள் மேனியர் வானமா மதியினர் 
          நதியினர் மதுவார்ந்த 
	கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் 
          உடைபுலி யதளார்ப்பர் 
	விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை 
          விற்குடி வீரட்டம் 
	அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை 
          அருவினை யடையாவே.                                                                                        | 
	 01  | 
 
 1170    |    
 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி 
மதியமுங் 
          கடிகமழ் சடைக்கேற்றி 
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் 
          பொருகரி யுரிபோர்த்து 
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை 
          விற்குடி வீரட்டம் 
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 
          வருத்தம தறியாரே.                                                                                                          | 
 02
   | 
 1171  |     
 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி 
        மார்பினர் வலங்கையில் 
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் 
          தாடிய வேடத்தர் 
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி 
          விற்குடி வீரட்டம் 
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் 
          பேணுவ ருலகத்தே.                                                                                                              | 
 03
   | 
 1172  |     
 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் 
          பொலிதர நலமார்ந்த 
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு 
          கடலெழு விடமுண்டார் 
வேத மோதிய நாவுடை யானிடம் 
          விற்குடி வீரட்டஞ் 
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி 
          தீவினை கெடுமாறே.                                                                                                        | 
 04
   | 
 1173    |    
 கடிய ஏற்றினர் கனலன மேனியர் 
          அனலெழ வூர்மூன்றும் 
இடிய மால்வரை கால்வளைத் தான்றன 
          தடியவர் மேலுள்ள 
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை 
          விற்குடி வீரட்டம் 
படிய தாகவே பரவுமின் பரவினாற் 
          பற்றறும் அருநோயே.                                                                                          | 
 05
   | 
 1174    |    
 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் 
          கையினர் மெய்யார்ந்த 
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் 
          அரியவர் அல்லார்க்கு 
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி 
          விற்குடி வீரட்டம் 
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் 
          கிடர்கள்வந் தடையாவே.                                                                                    | 
 06
   | 
 
  | 
 இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து 
போயிற்று.                        
                          | 
 07
   | 
 1175    |    
 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை 
          யிகலழி தரவூன்று 
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு 
          பொருளினன் இருளார்ந்த 
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி 
          விற்குடி வீரட்டந் 
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் 
          துன்பநோ யடையாவே.                                                                                        | 
 08
   | 
 1176  |     
 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் 
          திருவடி யறியாமை 
எங்கு மாரெரி யாகிய இறைவனை 
          யறைபுனல் முடியார்ந்த 
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் 
          விற்குடி வீரட்டந் 
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்  
         தவமல்கு குணத்தாரே.                                                                                            | 
 09
   | 
 1177    |    
 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ 
          ராடைய ரவர்வார்த்தை 
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் 
          பரிவுறு வீர்கேண்மின் 
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் 
         விற்குடி வீரட்டங் 
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் 
          கருத்துறுங் குணத்தாரே.                                                                                        | 
 10
   | 
 1178  |     
 விலங்க லேசிலை யிடமென வுடையவன் 
          விற்குடி வீரட்டத் 
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை 
          யெழில்திகழ் கழல்பேணி 
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் 
          பந்தனற் றமிழ்மாலை 
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் 
          மற்றது வரமாமே.                                                                                                              | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.109 திருக்கோட்டூர் 
 
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1179  | 
   நீல மார்தரு கண்டனே நெற்றியோர் 
          கண்ணனே ஒற்றைவிடைச் 
	சூல மார்தரு கையனே துன்றுபைம் 
          பொழில்கள்சூழ்ந் தழகாய 
	கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
	சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் 
          தாங்குவர் பாங்காலே.                                                                                        | 
	 01  | 
 
 1180  |     
 பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு 
          மெல்விர லரவல்குல் 
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென 
          மிழற்றிய மொழியார்மென் 
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு 
        அருள்பெறல் எளிதாமே.                                                                                          | 
 02
   | 
 1181    |    
 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் 
          அடியவர் தமக்கெல்லாஞ் 
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் 
          செல்வமல் கியநல்ல 
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ 
          டமர்ந்தினி திருப்பாரே.                                                                                                | 
 03
   | 
 1182  |     
 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா 
          மாங்கனி பயில்வாய 
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் 
          அன்னஞ்சேர்ந் தழகாய 
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை 
          நீடிய புகழாரே.                                                                                                              | 
 04
   | 
 1183  |     
 உருகு வாருள்ளத் தொண்சுடர் 
தனக்கென்றும் 
          அன்பராம் அடியார்கள் 
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு 
          பத்திசெய் தெத்திசையுங் 
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் 
          அவனருள் பெறலாமே.                                                                                          | 
 05
   | 
 1184    |    
 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் 
          துன்னெருக் கார்வன்னி 
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் 
          புலியுரி யுடையாடை 
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவாரை 
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை 
          ஏதம்வந் தடையாவே.                                                                                          | 
 06
   | 
 1185  |     
 மாட மாளிகை கோபுரங் கூடங்கள் 
          மணியரங் கணிசாலை 
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் 
          பரிசொடு பயில்வாய 
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் 
          கெழுவுவர் புகழாலே.                                                                                                          | 
 07
   | 
 1186    |    
 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை 
          யெடுத்தலும் உமையஞ்சிச் 
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு 
          நாளவற் கருள்செய்த 
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
          கொழுந்தினைத் தொழுவார்கள் 
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் 
          தவமுடை யவர்தாமே.                                                                                          | 
 08
   | 
 1187  |     
 பாடி யாடுமெய்ப் பத்தர்கட் 
கருள்செயும் 
          முத்தினைப் பவளத்தைத் 
  தேடி மாலயன் காணவொண் ணாதவத் 
          திருவினைத் தெரிவைமார் 
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற் 
          கொழுந்தேயென் றெழுவார்கள் 
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் 
          நிகழ்தரு புகழாரே.                                                                                                          | 
 09
   | 
 1188    |    
 கோணல் வெண்பிறைச் சடையனைக் 
கோட்டூர்நற் 
          கொழுந்தினைச் செழுந்திரளைப் 
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா 
          மெய்யன்நல் லருளென்றுங் 
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் 
          டாக்கர்சொற் கருதாதே 
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் 
          பெருமையைப் பெறுவாரே.                                                                                    | 
 10
   | 
 1189    |    
 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் 
          பாவையோ டுருவாருங் 
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் 
          கொழுந்தினைச் செழும்பவளம் 
வந்து லாவிய காழியுள் ஞானசம் 
          பந்தன்வாய்ந் துரைசெய்த 
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் 
          தாங்குவர் புகழாலே.                                                                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.110 திருமாந்துறை    
      
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1190  | 
  செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் 
          செருந்திசெண் பகமானைக் 
	கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை 
          குருந்தலர் பரந்துந்தி 
	அம்பொன் நேர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை யுறைகின்ற 
	எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ 
          லேத்துதல் செய்வோமே.                                                                                      | 
	 01  | 
 
 1191  |     
 விளவு தேனொடு சாதியின் பலங்களும் 
          வேய்மணி நிரந்துந்தி 
அளவி நீர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை உறைவானத் 
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் 
          சுடவிழித் தவனெற்றி 
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை 
          யன்றிமற் றறியோமே.                                                                                      | 
 02
   | 
 1192  |     
 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் 
          கூந்தலின் குலைவாரி 
ஓடு நீர்வரு காவிரி வடகரை  
          மாந்துறை யுறைநம்பன் 
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் 
          வானவர் மகிழ்ந்தேத்துங் 
கேடி லாமணி யைத்தொழ லல்லது 
          கெழுமுதல் அறியோமே.                                                                                      | 
 03
   | 
 1193  |     
 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை 
          இளமரு திலவங்கங் 
கலவி நீர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை யுறைகண்டன் 
    அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் 
          ஆடர வுடன்வைத்த 
மலையை வானவர் கொழுந்தினை யல்லது 
          வணங்குதல் அறியோமே.                                                                                      | 
 04
   | 
 1194  |     
 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி 
          குரவிடை மலருந்தி 
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை யுறைவானைப் 
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் 
          பாட்டவி மலர்சேர்த்தித் 
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் 
          தலைப்படுந் தவத்தோரே.                                                                                    | 
 05
   | 
 1195  |     
 பெருகு சந்தனங் காரகில் பீலியும் 
          பெருமரம் நிமிர்ந்துந்திப் 
பொருது காவிரி வடகரை மாந்துறைப் 
          புனிதனெம் பெருமானைப் 
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் 
          பார்மன்னர் பணிந்தேத்த 
மருத வானவர் வழிபடு மலரடி 
          வணங்குதல் செய்வோமே.                                                                                      | 
 06
   | 
 1196    |    
 நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் 
          நாண்மல ரவைவாரி 
இறவில் வந்தெறி காவிரி வடகரை 
          மாந்துறை யிறைஅன்றங் 
கறவ னாகிய கூற்றினைச் சாடிய 
          அந்தணன் வரைவில்லால் 
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் 
          நிரைகழல் பணிவோமே.                                                                                    | 
 07
   | 
 1197    |    
 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட 
          மந்திகள் மாணிக்கம் 
உந்தி நீர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை யுறைவானை 
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை 
          நெரித்திடு விரலானைச் 
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது 
          தீநெறி யதுதானே.                                                                                                          | 
 08
   | 
 1198    |    
 நீல மாமணி நித்திலத் தொத்தொடு 
          நிரைமலர் நிரந்துந்தி 
ஆலி யாவரு காவிரி வடகரை 
          மாந்துறை யமர்வானை 
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா 
          மலரடி யிணைநாளுங் 
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் 
          கூற்றுவன் நலியானே.                                                                                          | 
 09
   | 
 1199  |     
 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் 
          நெடுங்கழை நறவேலம் 
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் 
          நாணலின் நுரைவாரி 
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை 
          மாந்துறை யொருகாலம் 
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது 
          அதுவவர்க் கிடமாமே.                                                                                        | 
 10
   | 
 1200    |    
 வரைவ ளங்கவர் காவிரி வடகரை 
          மாந்துறை யுறைவானைச் 
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் 
          செழுமறை நிறைநாவன் 
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் 
          பந்தனன் புறுமாலை 
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் 
          பாவமும் இலர்தாமே.                                                                                                          | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - ஐராவணேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.111 திருவாய்மூர்     
      
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1201  | 
  தளிரிள வளரென உமைபாடத்  
        தாள மிடவோர் கழல்வீசிக் 
	கிளரிள மணியர வரையார்த்  
        தாடும் வேடக் கிறிமையார் 
	விளரிள முலையவர்க் கருள்நல்கி  
        வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் 
	வளரிள மதியமொ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
	 01  | 
 
 1202    |    
 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி  
        விரிதரு கோவண வுடைமேலோர் 
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்  
        பலபல கடைதொறும் பலிதேர்வார் 
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்  
        செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ 
வந்தனை பலசெய இவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 02
   | 
 1203  |     
 பண்ணிற் பொலிந்த வீணையர்  
        பதினெண் கணமு முணராநஞ் 
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்  
        உள்ள முருகி லுடனாவார் 
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்  
        சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வண்ணப் பிறையோ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 03
   | 
 1204    |    
 எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்  
        எறிபொறி யரவினொ டாறுமூழ்க 
விரிகிளர் சடையினர் விடையேறி  
        வெருவவந் திடர்செய்த விகிர்தனார் 
புரிகிளர் பொடியணி திருவகலம்  
        பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும் 
வரியர வரைக்கசைத் திவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 04
   | 
 1205    |    
 அஞ்சன மணிவணம் எழில்நிறமா  
        வகமிட றணிகொள வுடல்திமில 
நஞ்சினை யமரர்கள் அமுதமென  
        நண்ணிய நறுநுதல் உமைநடுங்க 
வெஞ்சின மால்களி யானையின்தோல்  
        வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே 
வஞ்சனை வடிவினோ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 05
   | 
 1206    |    
 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்  
        கழலிணை யடிநிழ லவைபரவ 
எல்லியம் போதுகொண் டெரியேந்தி  
        யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் 
சொல்லிய அருமறை யிசைபாடிச்  
        சூடிள மதியினர் தோடுபெய்து 
வல்லியந் தோலுடுத் திவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 06
   | 
 1207  |     
 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்  
        கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் 
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்  
        முறைமுறை பலிபெய முறுவல்செய்வார் 
பொடியணி வடிவொடு திருவகலம்  
        பொன்னென மிளிர்வதோர் அரவினொடும் 
வடிநுனை மழுவினொ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 07
   | 
 1208    |    
 கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்  
        கண்ணியர் வீணையர் தாமுமஃதே 
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா  
        இறைவனா ருறைவதோ ரிடம்வினவில் 
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்  
        பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வட்டணை யாடலொ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 08
   | 
 1209  |     
 ஏனம ருப்பினொ டெழிலாமை  
        யிசையப் பூண்டோ ரேறேறிக் 
கானம திடமா வுறைகின்ற  
        கள்வர் கனவில் துயர்செய்து 
தேனுண மலர்கள் உந்திவிம்மித்  
        திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வானநன் மதியினோ டிவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 09
   | 
 1210    |    
 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்  
        சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் 
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்  
        பாம்பொடு நூலவை பசைந்திலங்கக் 
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்  
        குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்  
        வாய்மூ ரடிகள் வருவாரே.                                                                                        | 
 10
   | 
 1211    |    
 திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்  
        தேனலங் கானலந் திருவாய்மூர் 
அங்கமோ டருமறை யொலிபாடல்  
        அழல்நிற வண்ணர்தம் மடிபரவி 
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல  
        ஞானசம் பந்தன் தமிழ்மாலை 
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்  
        தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.                                                      | 
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.112 திருஆடானை  
    
 	பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1212  | 
   மாதோர் கூறுகந் தேற தேறிய 
	ஆதியா னுறை ஆடானை 
	போதினாற் புனைந் தேத்து வார்தமை 
	வாதியா வினை மாயுமே.                                                                                                              | 
	 01  | 
 
 1213    |    
 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் 
றாடலா னுறை ஆடானை 
தோடுலா மலர் தூவிக் கைதொழ 
வீடும் நுங்கள் வினைகளே.                                                                                                              | 
 02
   | 
 1214  |     
 மங்கை கூறினன் மான்ம றியுடை 
அங்கை யானுறை ஆடானை 
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் 
மங்கு நோய்பிணி மாயுமே.                                                                                                            | 
 03
   | 
 1215  |     
 சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை 
அண்ண லானுறை ஆடானை 
வண்ண மாமலர் தூவிக் கைதொழ 
எண்ணு வாரிடர் ஏகுமே.                                                                                                                  | 
 04
   | 
 1216  |     
 கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய 
ஐயன் மேவிய ஆடானை 
கைய ணிம்மல ரால்வ ணங்கிட 
வெய்ய வல்வினை வீடுமே.                                                                                                              | 
 05
   | 
 1217    |    
 வானி ளம்மதி மல்கு வார்சடை 
ஆனஞ் சாடலன் ஆடானை 
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த 
ஊன முள்ள வொழியுமே.                                                                                                                  | 
 06
   | 
 1218    |    
 துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை 
அலங்க லானுறை ஆடானை 
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் 
வலங்கொள் வார்வினை மாயுமே.                                                                                      | 
 07
   | 
 1219    |    
 வெந்த நீறணி மார்பிற் றோல்புனை 
அந்த மில்லவன் ஆடானை 
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் 
சிந்தை யார்வினை தேயுமே.                                                                                          | 
 08
   | 
 1220    |    
 மறைவல் லாரொடு வான வர்தொழு 
தறையுந் தண்புனல் ஆடானை 
உறையும் ஈசனை யேத்தத் தீவினை 
பறையும் நல்வினை பற்றுமே.                                                                                            | 
 09
   | 
 1221  |     
 மாய னும்மல ரானுங் கைதொழ 
ஆய அந்தணன் ஆடானை 
தூய மாமலர் தூவிக் கைதொழ 
தீய வல்வினை தீருமே.                                                                                                                | 
 10
   | 
 1222  |     
 வீடி னார்மலி வேங்க டத்துநின் 
றாட லானுறை ஆடானை 
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் 
பாட நோய்பிணி பாறுமே.                                                                                                            | 
 11
   | 
	இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.113 சீகாழி 
    
 	பண் - செவ்வழி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1223    | 
  பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி 
	யதளினர் 
	அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம் 
	இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக் 
	கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.                                                  | 
	 01  | 
 
 1224  |     
 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் 
தொண்டர்கள் 
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் 
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே 
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.                                    | 
 02
   | 
 1225  |     
 கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் 
காதினர் 
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர் 
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் 
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.                            | 
 03
   | 
 1226    |    
 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி 
தீர்ப்பவர் 
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் 
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் 
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.                                          | 
 04
   | 
 1227    |    
 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி 
சடையினார் 
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது 
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் 
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.                        | 
 05
   | 
 1228    |    
 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் 
பார்மலர்ப் 
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது 
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் 
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.                                                  | 
 06
   | 
 1229    |    
 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் 
மூன்றெரித் 
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் 
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் 
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.                          | 
 07
   | 
 1230  |     
 முழுதிலங்கும் பெரும்பாருள் 
வாழும்முரண் இலங்கைக்கோன் 
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன் 
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது 
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.                                                  | 
 08
   | 
 1231    |    
 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு 
மகள்தனை 
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந் 
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங் 
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.                                                  | 
 09
   | 
 1232  |     
 உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் 
தவத்தார் 
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம் 
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர 
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.                                              | 
 10
   | 
 1233    |    
 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் 
காழியுள் 
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் 
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் 
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.                            | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.114 திருக்கேதாரம்  
    
 	பண் - செவ்வழி  
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1234  | 
  தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் 
	சுரும்பார்மலர் 
	இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால் 
	வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் 
	கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.                              | 
	 01  | 
 
 1235    |    
 பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் 
தேத்தவே 
வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந் 
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங் 
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.                                                    | 
 02
   | 
 1236  |     
 முந்திவந்து புரோதாய மூழ்கிம் 
முனிகள்பலர் 
எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால் 
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் 
கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.                                                  | 
 03
   | 
 1237    |    
 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு 
காலர்கள் 
எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால் 
பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க் 
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.                  | 
 04
   | 
 1238  |     
 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் 
பொருள்களால் 
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால் 
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய 
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.                                                | 
 05
   | 
 1239  |    
 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் 
வரைதன்மேல் 
தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால் 
ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங் 
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.                            | 
 06
   | 
 1240  |     
 மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி 
வானோர்தொழத் 
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால் 
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல் 
கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே.                                              | 
 07
   | 
 1241    |    
 அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு 
வரைதனால் 
வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால் 
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் 
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.                                                    | 
 08
   | 
 1242  |     
 ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல 
மந்தவர் 
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால் 
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் 
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.                                                | 
 09
   | 
 1243    |    
 கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் 
மாசுடம்பினர் 
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால் 
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக் 
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.                                                | 
 10
   | 
 1244    |    
 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் 
காழியான் 
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை 
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் 
வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே.                                                      | 
 11
   | 
	இத்தலம் வடதேசத்திலுள்ளது.
	சுவாமிபெயர் - கேதாரேசுவரர்,
	தேவியார் - கௌரியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.115 திருப்புகலூர்  
  
 	பண் - செவ்வழி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1245  | 
  வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி 
	விரவுநீர்ப் 
	பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் 
	திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய 
	எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.                                                | 
	 01  | 
 
 1246  |     
 வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை 
யறிதிரேல் 
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள் 
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே 
சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே.                                                | 
 02
   | 
 1247    |    
 மடையின்நெய்தல் கருங்குவளை 
செய்யம்மலர்த் தாமரை 
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள் 
தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை 
அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.                                    | 
 03
   | 
 1248    |    
 பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக 
லூரையே 
நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால் 
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம் 
ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே.                          | 
 04
   | 
 1249  |     
 அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி 
நடையவாய்ப் 
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் 
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் 
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே.                                          | 
 05
   | 
 1250    |    
 குலவராகக் குலம்இலரு மாகக்குணம் 
புகழுங்கால் 
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன் 
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள் 
நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.                                                  | 
 06
   | 
 1251    |    
 ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர 
வாரமாப் 
பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான் 
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் 
பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.                                                | 
 07
   | 
 1252    |    
 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய 
ரிலங்கைக்கோன் 
கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால் 
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம் 
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.                                    | 
 08
   | 
 1253  |     
 நேமியானும் முகநான் குடையந்நெறி 
யண்ணலும் 
ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான் 
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ 
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே.                                                  | 
 09
   | 
 1254    |    
 வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் 
டுழல்வார்களும் 
போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள் 
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால் 
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.                              | 
 10
   | 
 1255  |     
 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக 
லூர்தனுள் 
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை 
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம் 
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.                                                | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.116 திருநாகைக்காரோணம்  
     
 	பண் - செவ்வழி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1256  | 
   கூனல்திங்கட் குறுங்கண்ணி 
	கான்றந்நெடு வெண்ணிலா 
	வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை 
	வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது 
	கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                                                | 
	 01  | 
 
 1257  |     
 விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் 
வீட்டினான் 
இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது 
மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற் 
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                              | 
 02
   | 
 1258  |     
 வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி 
பூம்பொழில் 
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர் 
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது 
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                          | 
 03
   | 
 1259    |    
 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி 
யோடுடன் 
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள் 
உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம் 
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                                                | 
 04
   | 
 1260    |    
 வார்கொள்கோலம் முலைமங்கை 
நல்லார்மகிழ்ந் தேத்தவே 
நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே 
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது 
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                          | 
 05
   | 
 1261  |     
 விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர் 
படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர் 
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது 
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                        | 
 06
   | 
 1262    |    
 பொய்துவாழ்வார் மனம்பாழ் 
படுக்கும்மலர்ப் பூசனை 
செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார் 
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது 
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                                                | 
 07
   | 
 1263    |    
 பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி 
பத்திற 
அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது 
மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல் 
கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                              |       
 08
   | 
 1264    |    
 நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் 
கத்தினால் 
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது 
மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல் 
கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                                                | 
 09
   | 
 1265  |     
 உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் 
வார்களும் 
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும் 
நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது 
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.                          | 
 10
   | 
 1266    |    
 மல்குதண்பூம் புனல்வாய்ந் 
தொழுகும்வயற் காழியான் 
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன் 
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் 
சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.                        | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.117 திரு இரும்பைமாகாளம் 
      
 	பண் - செவ்வழி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1267  | 
  மண்டுகங்கை சடையிற் கரந்தும் 
	மதிசூடிமான் 
	கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம் 
	எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் 
	வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.                                            | 
	 01  | 
 
 1268  |     
 வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின 
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின 
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள் 
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.                                            | 
 02
   | 
 1269  |    
 வெந்தநீறு மெலும்பும் மணிந்த 
விடையூர்தியான் 
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள் 
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் 
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.                            | 
 03
   | 
 1270  |     
 நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் 
மலையான்மகள் 
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் 
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் 
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.                                            | 
 04
   | 
 1271  |     
 பூசுமாசில் பொடியான் விடையான் 
பொருப்பன்மகள் 
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி 
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள் 
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.                            |       
 05
   | 
 1272  |     
 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் 
குனித்தான்வினை 
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை 
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் 
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.                            | 
 06
   | 
 1273    |    
 பொங்குசெங்கண் ணரவும் மதியும் 
புரிபுன்சடைத் 
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம் 
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் 
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.                                              | 
 07
   | 
 1274    |    
 நட்டத்தோடு நரியாடு கானத் 
தெரியாடுவான் 
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே 
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள் 
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.                            |       
 08
   | 
 1275  |     
 அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி 
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான் 
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் 
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.                            |       
 09
   | 
 1276    |    
 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி 
யடியும்முடி 
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங் 
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள் 
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.                          | 
 10
   | 
 1277    |    
 எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை 
யிரும்பைதனுள் 
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் 
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம் 
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.                                              | 
 11
   | 
	இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம்     
 
 	பண் - செவ்வழி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1278  | 
  பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் 
	காலையே 
	அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங் 
	கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி 
	வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே.                              | 
	 01  | 
 
 1279    |    
 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு 
சாந்துங்கமழ் துணையலுங் 
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந் 
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி 
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.                              | 
 02
   | 
 1280  |     
 அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம 
ரர்தொழக் 
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந் 
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி 
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே.                                              | 
 03
   | 
 1281    |    
 கங்கைதிங்கள் வன்னிதுன் 
னெருக்கின்னொடு கூவிளம் 
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ் 
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி 
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.                                            | 
 04
   | 
 1282    |    
 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் 
தேரினான் 
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் 
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் 
மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே.                                                        | 
 05
   | 
 1283    |    
 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு 
பாகமும் 
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந் 
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி 
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.                                    | 
 06
   | 
 1284    |    
 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் 
பொற்றொடி 
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால் 
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி 
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.                                                                  | 
 07
   | 
 1285  |     
 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு 
வரைதனை 
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது 
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய் 
மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே.                                                        | 
 08
   | 
 1286  |     
 படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை 
யின்மிசை 
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந் 
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி 
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே.                                                    | 
 09
   | 
 1287    |    
 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் 
வீறிலாப் 
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம் 
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி 
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே.                                                      | 
 10
   | 
 1288    |    
 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி 
முத்தமேற் 
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம் 
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச் 
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே.                              |       
 11
   | 
	இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.119 திருநாகேச்சரம்  
       
 	பண் - செவ்வழி   
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1289    | 
  தழைகொள்சந்தும் மகிலும் 
	மயில்பீலியுஞ் சாதியின் 
	பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை 
	நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் 
	தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.                                                | 
	 01  | 
 
 1290  |     
 பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் 
பேணிய 
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார் 
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங் 
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.                                  | 
 02
   | 
 1291    |    
 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை 
கொண்டும்மணி குலவுநீர் 
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை 
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் 
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.                      | 
 03
   | 
 1292  |     
 கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை 
குற்றமும் 
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் 
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் 
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.                                            | 
 04
   | 
 1293    |    
 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் 
கொண்டுநீர் 
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை 
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் 
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.                            | 
 05
   | 
 1294    |    
 காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் 
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் 
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் 
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.                          | 
 06
   | 
 1295    |    
 வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் 
பும்விராய் 
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை 
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் 
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.                                              | 
 07
   | 
 1296    |    
 இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் 
தோள்களும் 
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய 
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம் 
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.                              |       
 08
   | 
 1297    |    
 கரியமாலும் அயனும் மடியும்முடி 
காண்பொணா 
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா 
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் 
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.                                          | 
 09
   | 
 1298    |    
 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் 
சாக்கியர் 
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை 
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் 
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.                                                      | 
 10
   | 
 1299    |    
 கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை 
கண்ணுதல் 
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் 
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் 
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.                                  |       
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.120 திருமூக்கீச்சரம்     
        
 	பண் - செவ்வழி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1300  | 
  சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை 
	வைத்தவர் 
	காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம் 
	ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ 
	வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.                  | 
	 01  | 
 
 1301    |    
 வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து 
விரிசடைக் 
கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா 
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் 
கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.                                                  | 
 02
   | 
 1302    |    
 மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் 
மதலையை 
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் 
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த 
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.                                              | 
 03
   | 
 1303  |     
 அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே 
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந் 
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான் 
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.                          | 
 04
   | 
 1304    |    
 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை 
வீக்கியே 
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் 
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் 
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.                          | 
 05
   | 
 1305  |     
 வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் 
வீங்கிருள் 
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் 
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய 
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.                                            | 
 06
   | 
 1306    |    
 அரையிலாருங் கலையில்லவ னாணொடு 
பெண்ணுமாய் 
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ 
விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான் 
அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.                        | 
 07
   | 
 1307  |     
 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற 
துங்கூற்றை யுதைத்ததுங் 
கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும் 
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல் 
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.                      | 
 08
   | 
 1308  |     
 நீருளாரும் மலர்மேல் உறைவான் 
நெடுமாலுமாய்ச் 
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் 
சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன் 
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.                        | 
 09
   | 
 1309    |    
 வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை 
யுழல்பவர் 
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் 
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் 
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.                      | 
 10
   | 
 1310  |     
 மல்லையார்மும் முடிமன்னர் 
மூக்கீச்சரத் தடிகளைச் 
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் 
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன 
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.                                                      | 
 11
   | 
 	
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.121 திருப்பாதிரிப்புலியூர்  
   
 	பண் - செவ்வழி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1311  | 
   முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் 
	செய்துநீள் 
	புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் 
	தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் 
	பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.                                              | 
	 01  | 
 
 1312    |    
 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் 
குழைந்தாடவே 
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம் 
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை 
உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.                                    | 
 02
   | 
 1313  |     
 மருளினல்லார் வழிபாடு செய்யும் 
மழுவாளர்மேல் 
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான் 
வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின் 
அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.                                                      | 
 03
   | 
 1314    |    
 போதினாலும் புகையாலும் உய்த்தே 
யடியார்கள்தாம் 
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள் 
ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை 
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.                                                | 
 04
   | 
 1315    |    
 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் 
அழலைந்தலை 
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் 
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள் 
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.                                                        | 
 05
   | 
 1316  |     
 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் 
கானல்வாய்ப் 
புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும் 
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள் 
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.                                |       
 06
   | 
 1317  |     
 கொங்கரவப் படுவண் டறைகுளிர் 
கானல்வாய்ச் 
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் 
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் 
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.                                    | 
 07
   | 
 1318    |    
 வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் 
கல்லிடை 
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் 
பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை 
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.                                        | 
 08
   | 
 1319    |    
 அன்னந்தாவும் மணியார் பொழின்மணி 
யார்புன்னை 
பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள் 
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன் 
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.                                                        | 
 09
   | 
 1320    |    
 உரிந்தகூறை யுருவத் தொடுதெரு 
வத்திடைத் 
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும் 
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின் 
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.                                              | 
 10
   | 
 1321    |    
 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம் 
பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள் 
சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல் 
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.                                                      | 
 11
   | 
	இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
	சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.
 
  திருச்சிற்றம்பலம்
	
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
	
  
      
	 
2.122 திருப்புகலி 
  
 	பண் - செவ்வழி    
திருச்சிற்றம்பலம் 
	
| 
 1322  | 
  விடையதேறி வெறியக் கரவார்த்த 
	விமலனார் 
	படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது 
	கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் 
	புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.                            | 
	 01  | 
 
 1323    |    
 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் 
கண்டனார் 
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது 
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் 
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.                                          | 
 02
   | 
 1324    |    
 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ 
றுகந்தார்மதித் 
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது 
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி 
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.                                                                  | 
 03
   | 
 1325    |    
 திரியும்மூன்று புரமும் மெரித்துத் 
திகழ்வானவர்க் 
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது 
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் 
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.                                |       
 04
   | 
 1326    |    
 ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் 
னருள்செய்தவர் 
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது 
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் 
பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.                                                | 
 05
   | 
 1327    |    
 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் 
தையலாளொடும் 
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது 
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் 
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.                                              | 
 06
   | 
 
  | 
 இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் 
சிதைந்துபோயிற்று.                  
                    | 
 07
   | 
 1328  |     
 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் 
தொலைவித்தவன் 
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது 
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் 
பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.                                            | 
 08
   | 
 1329    |    
 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் 
கேழலன்னமாய்க் 
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது 
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் 
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.                                      | 
 09
   | 
 1330    |    
 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு 
சாக்கியர் 
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது 
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் 
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.                                      | 
 10
   | 
 1331  |     
 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் 
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் 
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் 
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.                                                | 
 11
   | 
	
                 திருச்சிற்றம்பலம்
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த 
               தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்.