Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDFகலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி, விளக்கக் குறிப்புகள் >  பாடல் 1 & 2பாடல்கள் 3-10 > பாடல்கள் 11-18 > பாடல்கள் 19-25 > பாடல்கள் 25-35 > பாடல் 36 - 50 >
 

 
Kalevala - A Finland Epic

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
நூல் அமைப்பு, அறிமுகம், பாடல் 1 & 2

தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)

Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola



குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்: Index to Songs
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்


Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

C: Project Madurai 1999  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


NOTE - I  


Transliteration used in this e-text:

அ - a; ஆ - aa; இ - i; ஈ - ii; உ - u; ஊ -uu; எ - e; ஏ- ee; ஐ - ai; ஒ - o;
ஓ- oo; ஔ - au.

க் - k; ங் - ng; ச் - c; ஞ் - nj; ட் - t; ண் - N; த் - th; ந் - n-; ப் - p; ம் -
m; ய் - y; ர் - r; ல் - l; வ் - v; ழ் - z; ள் - L;
ற் - R; ன் - n.

NOTE - II



There are two additional vowels in Finnish Language. They are two dots
above "a" ("A") and two dots above "o" ("O"). They are written in this
e-text as a* (A*) and o* (O*) respectively.



பொருளடக்கம்  - Index

பாடல்கள்

அடிகள்

1. வைனாமொயினனின் பிறப்பு

344

2. வைனாமொயினனின் விதைப்பு

378

3. பாடற்போட்டி

580

4. ஜனோவின் முடிவு

518

5. கடற்கன்னி

241

6. சகோதரனின் பழிவாங்கல்

234

7. வைனாமொயினனும் லொவ்ஹியும்

368

8. வைனாமொயினனின் காயம்

282

9. இரும்பின் மூலக்கதை

586

10. சம்போவைச் செய்தல்

510

11. லெம்மின்கைனனின் விவாகம்

402

12. சத்தியம் தவறுதல்

504

13. பிசாசின் காட்டெருது

270

14. லெம்மின்கைனனின் மரணம்

460

15. லெம்மின்கைனனின் மீட்சி

650

16. மரண உலகத்தில் வைனாமொயினன்

412

17. வைனாமொயினனும் அந்தெரோ விபுனனும்

628

18. வைனாமொயினனும் இல்மரினனும் வடநாடு செல்லுதல்

706

19. வடநில மங்கையை இல்மரினனுக்கு மணம் செய்ய நிச்சயித்தல்

518

20. விவாக விருந்துக்குப் பொ஢ய எருது கொல்லப்படுதல்

614

21. திருமணக் கொண்டாட்டம்

438

22. மணமகளின் பி஡஢வுத்துயர்

522

23. மணமகளுக்கு அறிவுரை

850

24. மணமகனும் மணமகளும் புறப்படுதல்

528

25. மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல்

738

26. லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம்

776

27. வடநாட்டில் போரும் குழப்பமும்

420

28. லெம்மின்கைனனும் அவனது அன்னையும்

294

29. லெம்மின்கைனனின் அஞ்ஞாத வாசமும் துணிகரச் செயல்களும்     

602

30. லெம்மின்கைனனும் உறைபனி மனிதனும்

500

31. குலப்பகையும் அடிமை வாழ்வும்

374

32. குல்லர்வோவும் இல்மா஢னனின் மனைவியும்

548

33. இல்மா஢னனின் மனைவியின் மரணம்

296

34. குல்லர்வோவும் அவனுடைய பெற்றோரும்

246

35. குல்லர்வோவும் அவனுடைய சகோதரியும்

372

36. குல்லர்வோவின் மரணம்

360

37. பொன்னிலும் வெள்ளியிலும் மணமகள்

250

38. வடநாட்டிலிருந்து இல்மரினனின் புதிய மணமகள்

328

39. வடநாட்டின் மீது படையெடுப்பு

426

40. வைனாமொயினனின் கந்தலே என்னும் யாழ்

342

41. வைனாமொயினன் கந்தலே என்னும் யாழை இசைத்தல்

266

42. வடநாட்டிலிருந்து சம்போவைத் திருடுதல்

562

43. சம்போவுக்காக நடைப்பெற்ற கடற்போர்

434

44. வைனாமொயினனின் புதிய யாழ்

334

45. கலேவலா மாகாணத்தில் கொள்ளை நோய்

362

46. வைனாமொயினனும் கரடியும்

644

47. சூ஡஢ய சந்திரர் திருடப்படுதல்

364

48. நெருப்பை மீட்க வலை வீசுதல்

372

49. இல்மரினனின் வெள்ளிச் சூ஡஢யனும் தங்க நிலவும்

422

50. கன்னி மர்யத்தாவின் மகன் கரேலியாவின் அரசனாதல்

620

மொத்த அடிகள்

22,795



காவிய மாந்தர்களின் பெயர்கள்

(தமிழ், பின்னிஷ் மொழிகளில ஒரே பாத்திரத்தின் மற்றைய பெயர்களும் தமிழ் அகர வா஢சைப்படி வெவ்வேறு இடங்களில் வருகின்றன.
மேலதிக விபரங்களுக்குச் சொற்றொகுதியைப் பார்க்க.)

அந்தரோ விபுனன்

Antero Vipunen

                                            

தூலிக்கி

Tuulikki

அய்யோ

A*ijo*

 

தெல்லர்வோ

Tellervo

அன்னிக்கி

Annikki

 

நுயீ஡஢க்கி

Nyyrikki

அஹ்தி

Ahti

 

பெல்லர்வொயினன்

Pellervoinen

அஹ்தோ

Ahto

 

மர்யத்தா

Marjatta

இக்கு-துர்ஸோ

Iku-Turso

 

மிமெர்க்கி

Mimerkki

இல்போ மகள்

Ilpotar

 

மியெலிக்கி

Mielikki

இல்மா஢னன்

Ilmarinen

 

யொவுகாஹைனன்

Joukahainen

உந்தமோ

Untamo

 

லூலிக்கி

Lyylikki

ஐனிக்கி

Ainikki

 

லெம்பி

Lempi

ஐனோ

Aino

 

லெம்மின்கைனன்

Lemminkainen

கலர்வோ

Kalervo

 

லொக்கா

Lokka

குய்ப்பன

Kuippana

 

லொவ்ஹி

Louhi

குயி(ல்)லி, குயில்லிக்கி

Kylli, Kyllikki

 

லொவியத்தார்

Loviatar

குல்லர்வோ

Kullervo

 

விபுனன்

Vipunen

கெளப்பி

Kauppi

 

விரோகன்னாஸ்

Virokannas

சம்சா

Sampsa

 

வெல்லமோ

Vellamo

தப்பியோ

Tapio

 

வைனா, வைனோ

Va*ina*, Va*ino

தியேரா

Tiera

 

வைனாமொயினன்

Va*ina*mo*inen

தூ஡஢

Tuuri

 

றுவோத்துஸ்

Ruotus


 



Kalevala the national epic of Finland: An introduction
By Asko Parpola (University of Helsinki)

Kalevala and the ancient Finnish folk poetry

Kalevala, the Finnish national epic and one of the great heroic poems of world literature, took its definitive shape in 1849, but it is directly based on oral poetry that mainly came into being during the first millennium of the Christian era. The work was compiled by the great philologist Elias Lonnrot (1802-1884) from the best and most complete variants of ancient folk songs that he himself and other pioneers of Finnish folklore had collected in the backwoods of Karelia.

Karelia, a vast area now mainly on the Russian side of Finland's eastern border, formed a periphery of Finnish-Karelian culture that was cut off from the centres of civilization by long distances and scarcely inhabited forests. The old folk poetry was preserved there in an oral tradition until the nineteenth and even twentieth century, because the Orthodox Church prevailing in Russia was more tolerant than the Roman Catholic Church current in other parts of Finland until the reformation and the Lutheran Christianity, which after the reformation systematically worked for the eradication of pagan traditions in Finland. While Kalevala on the whole reflects the pre-Christian religion and heroic legends of the Finnish-speaking peoples, its last canto has as its theme the triumph of Christianity, which the Swedish conquerors forced onto Finland in AD 1155.

Mikeal Agricola's translation of New Testament, printed in 1548, is the oldest directly surviving book in the Finnish language. Very short samples of the closely related Karelian language are three centuries older; they consist of spells written on birchbark, found near the Russian city of Novgorod. The folk poems, though collected only in the nineteenth century, largely go back to pre-Christian times, come from widely different areas and comprise a great bulk of material; they are thus, in effect, among the most important monuments relating to the early stages of the Finnish language and religion.

Comparative linguistics has shown Finnish to be an offshoot of the Uralic language family, whose speakers nowadays number in all about twenty million (the principal languages being Hungarian, Finnish and Estonian, with fourteen, five and one million speakers respectively; the other languages are spoken by small minorities in Russia). I shall briefly discuss this linguistic background of Kalevala also because there are interesting connections with Indian languages.

Genetic relationship between the Uralic and Dravidian languages?

Speakers of the Proto-Uralic language livied around 6000-4000 BC as hunters and fishermen in the forest regions of the northeastern Europe, on both sides of Ural mountains. While the Samoyeds of Siberia represent the eastern branch of the Uralic language family, the Proto-Finno-Ugrians, who lived about 4000-2500 BC in central Russia, form its western branch.

The Uralic language family (or rather its Finno-Ugric branch) has repeatedly been mentioned among the most distant relatives of the Dravidian language family. Indeed, several among the most famous Dravidologists, such as Robert Caldwell (who spoke of Scythian languages), Thomas Burrow (1943-46) and M.S.Andronov, have been supporters of this hypothesis. Being a Finnish student of Dravidian, I naturally took an interest in this question, and years ago accumulated a lot of material for a book on the subject. I never finished the work, however, because I became convinced of the impossibility of proving by linguistics means any genetic relationship as distant as it is in this case assumed to be. Genetic affinity can be proved only by means of establishing regular phonetic correspondences between the two protolanguages, and to be able to do this in a convincing manner that allows some crosschecking, one needs atleast about one hundred good etyma. In other words, to start with, one needs minimally a hundred word pairs that on both sides can be reconstructed for the protolanguages and in which the respective reconstruction resemble each other reasonably closely both phonetically and semantically. As the reconstruction of the Uralic family itself is based on only about 140 accepted etymologists shared by both Proto-Finno-Urgic and Proto-Samoyedic (Janhunen 1981), one cannot a priori expect the number of etyma surviving from an even older hypothetic Uralo-Dravidian phylum to be much more than around 20, which would be much too few to prove the hypothesis. This does not, of course, disprove the hypothesis - after all, it is possible that all languages are ultimately related: L.L.Cavalli-Sforza has recently compared their tentative family tree to the spread of human populations around the globe as deduced by biology.

(One paragraph omitted here due to difficulties in typing characters with special diacritical markers.)

In addition, the Proto-Uralic and Proto-Dravidian resemble each other typologically in a number of features, such as the agglutinative morphology and the relatively simple syllable structure (no initial consonant clusters). Even some grammatical morphemes are similar: *n as the possessive (U) or oblique case (Dr) marker, or *i as a past tense marker (on the Uralic side in Proto-Finno-Ugric only: the Samoyedic verbal suffix *y does not seem to mark any tense).

Ancient contacts between Finno-Ugrians and early Aryans

The Proto-Finno-Ugrians, who lived about 4000-2500 BC in the forests of central Russia, had as their neighbours in the steppes of southern Russia the speakers of the Proto-Indo-European language (c. 4500-2800 BC), and then the speakers of one of its daughter languages, the Proto-Aryans (c. 2800-2000), whose descendents brought Sanskrit to India soon after 2000 BC. (Parpola in press.) The Finnish language preserves some ancient Aryan loanwords, such as 'sata' `hundred`, nearly identical with the corresponding Sanskrit word sata `hundred`. It is possible that even the early Finnish religion was influenced by Aryan ideas. Thus the principal Finnish word for `god`, jumala, may come from the ancient Aryan word dyumat `shining`, which the Rgvedic hymns apply to Indra, the god of war and thunder. Indra occupied the highest position in the ancient Indo-Aryan pantheon as did Ukko, the god of thunder, among the ancient Finnish deities. Another example is the miraculous mill in Kalevala, called sampo (colour plate 2). Its standing epithet `having a speckled cover` suggested that the idea of this wonder-mill may have come from the star-speckled cosmic `mill` of the revolving heavens. The word sampohas a variant form, sammas, which means `pillar`, and this in turn suggests a relationship with Sanskrit skambha or stambha, which occurs in the Veda as the name for the cosmic pillar that upholds the sky.

Proto-Finns and Lapps

By the first millennium BC at the latest, the Balto-Finnic offshoot of the Uralic language family had reached the Baltic region and Finland and divided into two major branches. Proto-Lapps occupied the northern areas, probably most parts of Finland, while Proto-Finns (whose present-day linguistic descendents include the speakers of Estonian, Finnish and Karelian) were settled in Estonia, Karelia and southernmost Finland. The poems of Kalevala belong to the Proto-Finnish branch. The Proto-Finns were engaged in primitive farming and had a more advanced material culture, which they had adopted - along with loanwords and ideas - from the neighbouring Indo-European-speaking peoples, including Germanic (Nordic or Scandinavian), Baltic (Latvian and Lithuanian) and Slavic (Russian) tribes. The songs of Kalevala reflect the northward expansion of the Proto-Finns and their hostility towards the Lapps, their linguistic relatives, who nowadays survive as a small minority in the northernmost fringes of Scandinavia near the Artic Ocean. Traditionally the Lapps have been hunters and nomadic reindeer herders. It is probably the Lapps that the Roman author Tacitus meant in AD 98. When in his description of the northernmost borders of Europe he spoke of a people called Fenni who lived by hunting and food-gathering, with no permanent homes.

Contents of Kelavala

The war expeditions of Kalevala, which also have as their historical background the Viking raids of the late first millennium A.D., form the backbone of the poems, as does war between the Paandavas and the Kauravaas in the Mahaabhaarata, or Raama's expedition to Lanka in the Raamaayana. But the poems are by no means limited to warring themes. Wooing with physical feats of the would-be-groom, is another popular heroic theme, comparable to the svayamvaras of the Indian epics. The Kalevala poems also deal with many other aspects of everyday life like agriculture (see fig. 2) and herding (colour plate 6), and all kinds of folk customs like marriage and healing rituals, or the pastimes of the youth, and, of course, with the world view and religion. One gets a fairly comprehensive description of the ancient Finnish culture, somewhat in the manner that all the facets of ancient Tamil culture are presented in Cilappatikaaram (we must not forget, however, that the Finnish culture was completely rural and much simpler than the sophisticated and largely urban culture of the Tamils). The most ancient religion of the peoples speaking Uralic languages was probably shamanistic, but the religion reflected in Kalevala has been much influenced by the other peoples with whom the Baltic Finns had been in contact. In fact there are many world views in Kalevala: myths going back to the Stone Age, like the poems of creation and the felling of the grat oak (discussed below), legends connected with the adventurers of the Viking Age and with Chirstianity, and the poems by farmers, shamans and women.

The great oak and its felling

As an illustration of Kalevala's contents I would like to discuss in some detail the second song, which follows upon the myth of the world's creation in the first song. The wise sage Va*ina*mo*inen wants to have trees sown upon the bare islands and mainland that rise from the primeval ocean. This is done by the spirit guarding the fertility of the soil, Sampsa Pellervoinen. The seeds of all trees flourish excepting that of the oak. Only after the demigods of the sea burn some hay and an acorn falls on these ashes, does the oak start to grow. But it grows up to the sky, into an enormous tree that prevents the sun and the moon from shining. The whole world is doomed to darkness. Va*ina*mo*inen looks in vain for a feller for the giant tree, and finally prays to his mother, the maiden of the sea. She sends a tiny man, of the length of a thumb, whose appearance makes Va*ina*mo*inen laugh and ridicule him, rather like the demon Bali who was misled by the looks of God Visnu in his dwarf incarnation. Just like Vamana, howver, the little coppery man (undoubtedly a personification of the ruddy rising morning sun) suddenly grows into an enormous size and fells the terrible tree by hitting it three times with his axe. Nature is now freed from the evil of darkness and starts to blossom. (One is reminded of the relief of the world when god Indra destroyed the demon 'Vrtra' and released all the waters that this monster had been retaining.) Splinters of the fallen oak scatter happiness throughout the world. This last mentioned motif seems to be connected with rituals of brewing beer around the central oak in the sacred grove, and of making beer cups out of oak wood, which had magic powers. The rest of the song describes swidden agriculture, the normal method of cultivation in ancient times, which is no longer in use (in fact it is prohibited): it invloves cutting all trees in a large area and burning them before the seed is sown in the ashes. (Fig. 2.) Va*ina*mo*inen saves, however, one birch tree for the cuckoo bird to sit on.

Kalevala

The name Kalevala ends in the Finnish place name suffix -la. The remining stem Kaleva has been understood as the proper name of the most ancient ancestor of the Finns, who had twelve sons, among them such heroes of Kalevala as Vainamoinen and Ilmarinen. In Finnish, the word Kaleva occurs in several names of stars ( the belt of Orion is called `the sword of Kaleva`) and other heavenly phenomena like thunderbolts (`fires of Kaleva`), and the sons of Kaleva are said to have been giants who destroyed forests as superpowerful masters of swidden agriculture (where trees are burnt to make fields, fig. 2). The etymology of the name is uncertain, but the most likely explanation connects it with the Lithunian word 'kalvis' `smith` and the ancient Baltic smith god Kalevias.

Ilmarinen, the divine smith

One of the principal heroes of Kalevala, Ilmarinen, is specifically a smith. Among his main feats are the taming of iron, the forging of the miraculous mill sampo (colour plate 2), ploughing a field full of vipers (colour plate 5), the making of a golden maiden and releasing the heavenly lights from the rock of the north. In ancient folk poems Ilmarinen has forged the heavenly vault as well as the sampo. Depicted on a shamanic drum from Lapland dating from 1692 is an anthropomorphic god, called Ilmaris, who is said to regulate the air and the wind. The Finnish word ilma means `air` and the Votyaks living in Russia still worship a sky god called Inmar or Ilmar.

Va*ina*mo*inen and the power of songs

The main actor of Kalevala, Va*ina*mo*inen, is a many-sided figure with both divine and human features. Lo*nnrot seems to have favoured the latter at the expense of mythological characteristics. In the first song he is the creator god born in the primeval sea, and also his name, derived from va*ina* meaning `a broad, deep and slow-flowing river` suggets that originally he might have been a deity connected with waters, somewhat like Varuna in the Indian mythology. Va*ina*mo*inen also acts as a culture hero: he is the first builder of a boat and the first maker of a zither, who enchants the entire nature with his music. Va*ina*mo*inen's epithets emphasis his age and wisdom: he is a mighty sage possessed of supermundane knowledge, who performs his feats by means of magic songs and powerful words. Like a shaman, he descends to the netherworld to fetch the missing mantras from a dead ancient giant. Although Va*ina*mo*inen often appears as a warrior, his capacities as a fighter are not appreciated nearly as much as is his knowledge. It is interesting to note in this connection that the Finnish word for `hero`, 'sankari', goes back to the Old Nordic word 'sangare' `singer`. In a singing contest, Va*ina*mo*inen's mighty words make his adversary sink into a swamp. Different scholars have come forward with widely different and controversial results in their efforts to comprehend in simplistic terms the character of Va*ina*mo*inen. The same applies to many other figures of Kalevala. A similar situation prevails in the study of the Indian epics: the five Pandavas, for instance, have been interpreted as incarnations of various deities already in ancient times, while other scholars take them to be historical human heroes.

Elias Lo*nnrot

Although Kalevala is based on ancient folk songs, we must not forget that its compiler also has a considerable share in its formation. It remains the work of Elias Lo*nnrot (1802-1884), son of a poor villiage tailor, who started his career as a medical doctor, but who became a Professor of the Finnish language with as extraordinarily wide range of cultural activities. On elven long treks through largely roadless wildernesses, Lo*nnrot travelled by foot some twenty thousand kilometers and collected about 65,000 lines of Kalevala-type folk songs. After a doctoral dissertation on the poems dealing with Va*ina*mo*inen (1822), he published the first edition of Kalevala, the so calleed "Old Kalevala", in 1835; the second and final edition, nearly twice the length of the first, comprising 50 songs and 22,795 lines in all, came out in 1849. An anthology of lyric folk poetry called Kanteletar was published by Lo*nnrot in 1840-41. The original sources of these publications still exist, and afford a clear idea of its relationship to the genuine folklore. Lonnrot gave Kalevala its overall shape and structure, and in linking the various originally independent episodes composed himself about 600 lines which have no parallel in the folk material.

A large body of the original folk poetry on which Kalevala and Kanteletar are based has been published in 33 thick volumes of Suomen kansan vanhat runot (`The ancient poems of the Finnish people`) in 1908-1948. Even this huge work does not exhaust the rich collections that hundreds of scholars and volunteer collectors of folklore have accumulated in the archives of the Finnish Literature Society. Established in 1831, the Finnish Literature Society is one of oldest and largest collections of oral tradition in the world. In 1977, these collections comprised some 86,800 songs in Kalevala metre; 129,400 rhymed folk-songs; 52,400 incantations; 336,000 spells, beliefs and omens; 187,400 games; 9,300 nonsense verse and laments; 96,000 fairy tales; 1,600 religious legends; 103,200 supernatural tales and memorates; 77,800 historical and local tales; 7,700 aetiological stories and myths; 766,500 proverbs (complemented by 1,425,000 proverb variants in the collections of Helsinki University); 117,300 riddles; 23,200 folk tunes; and 54,000 ethnographic descriptions.

Kalevala as the national epic of the Finns

Lo*nnrot's work, particularly the publication of Kalevala, had an immerse effect on the self-awareness and national feeling of the Finns, who had been dominated by the Swedes from 1155 to 1809 and then (after a war between Sweden and Russia, which Sweden lost) by the Russians from 1809 to 1917, when Finland finally obtained independence. Lo*nnrot's service to world literature in salvaging the ancient heritage from the destruction can be compared with that rendered by the famous resurrector of the Old Tamil Cankam literature, Uu. Vee. Caaminaathaiyar. The famous Finnish composer Jean Sibelius (1865-1957) introduced many themes of Kalevala to world music. His music has in the hearts of the Finns a position comparable to the music of Thiyaagaraajar among the Tamils. The poems of Kalevala have greatly inspired also the greatest Finnish visual artists, above all Akseli Gallen-Kallela (1865-1931). The vignettes at the beginning and end of each poem have been taken from his artistic Kalevala edition, and a small selection of his Kalevala paintings and frescoes are reproduced in the frontispiece and on the eight colour plates. It is hoped that they can also mediate some impression of Finnish nature, still today characterized by lakes and forests; they render this artist's view of the cultural milieu that created the poems.

The Tamil translation by Mr. R. Sivalingam

Oxford University Press has recently published a new English translation of Kalevala by Keith Bosley in its series `The World's Classics` (1989). This translation, the earlier English renderings by W.F.Kirby (1907, reprinted in Gallen-Kallela 1985) and F.B.Magoun, Jr. (1963), together with some other English translations have been taken into consideration in the present Tamil interpretation. The translator, Mr R. Sivalingam of Jaffna, Sri Lanka, is an experiened writer well known to Tamil readers through his numerous novels and short stories published under the pen name Udayanan. His two novels Ponnaana malarallavoo and An-taranka kiitam were published by the Express Newspapers (Ceylon) Ltd. in Colombo in their series of `Virakesari Publications`. Having lived in Finland for more than ten years, he has become acquainted with the Finnish culture and language and has been able to base his rendering of Kalevala directly on the Finnish-Karelian original. He has carefully polished its form with the help of his Sri Lankan poet friend, S. Krishnapillai (`Thimilaithumilan`).

Naturally, it has been impossible to retain all the poetic peculiarties of the original. The Kalevala metre consists basically of trochaic tetrametres (-v / -v / -v / -v ), with two such lines usually forming a pair: the second line repeats in different words the message conveyed by the first line. Instead of rhyme at the end of the line, there is often alliteration: two or more words within a line begin with the same sound. It has been possible to imitate this latter device in the Tamil translation. Compare the Finnish original and the Tamil translation of the initial verses of the work reproduced below:

Mieleni minun tekevi, enath uLLaththil uLLuNarvu ippoo viLikkiRatu
aivoni ajattelevi, enathuLLe uyirpeRRu ezukiRahtu eNNamellaam
la*htea*ni laulamahan, paatalaiyaan pakkuvamaayp paatuthaRku van-thitteen
saa ani sanelemahan, paatalaiyaan paNNutanee palapeerkkum pakarukiReen
sukuvirtta* suoltamahan, cuRRaththin varalaarraic cuvaiyaakac colvathaRku
lajivirtta* laulamahan. uRRatoru peerinaththin pazangkathaiyai oothuthaRku;
Sanat suussani sulavat, vaarththaikaloo vaayinilee van-hu nekizkiRathu
puhe'et putoelevat, neerttimiku coRRotarkaL neeraayc corikiRathu
kielelleni kerkia'va*t, n-aavile n-ayamaaka nanRaakap puraLkiRathu
hampahilleni hajoovat. paavaakip paRkaLitaip patamaay uruaLkiRathu.
   
Veli kulta veikkoseni, anpaana cootaranee, ariya en-Ran toozarkaLe!
kaunis kasvinkumppalini, ennoote valan-tuyarn-tha ezil mikun-tha naNparkaLee!
lahe nyt kanssa laulamahan, ippoothu vanthitunkal inainthonraayp paatituvom
saa kera sanelemahan, naRcuvaiyaayc colluthRrku nalluLaththaith thaarungaL
yhtehen yhyttyamme onRaakak kuuti yuLLoom onRaakac can-thippoom
kahta alta kaytyamme! nanraay iruveeRu itamirun-thu naamvanthoom.
Harvoin yhtehen yhymme, arithaakak kuutituvoom aritaakac can-thippoom
saamme toinen toisihimme, arithaaka oruvarinai oruvar n-aam can-thippoom
na*illa* raukoilla rajoilla, vaRitaakip pooyviiNe mayangkukinRa ellaikaLiL
poloisilla Pohjan mailla. teriyumvata paaln-ilaththil cezippizan-tha puumiyin kaN.
   
Lyo*ka*mme ka*si katehen, karaththootu karam ceerththuk kanivaakak kai koorththu
sormet sormien lomahan, viralotu viral ceerththu viralai yazakaayk koorththu
Lauloaksemme hyvia*, nanraaynaam paatituvoom nayamtikazp paatituvoom
parahia pannaksemms, onric ciir koNtavaRRai uvakaiyootu paatituvoom
kuulla noien kultaisien, ponnaana nallithayam pataiththavarkaL keetkattum
tieta* mielitehtoisien, inimaiyuRu n-ann-enjam iyaintavarkal aRiyattum
nuorisossa nousevassa, ezucci mikuntoongkum iLainjarkaLin mattiyilum
kansassa kasuavassa: vaLarn-thuvarum teeciiya makkaLavar maththiyilum
moita saamia sanoja, yaam aRin-thu koNtuLLa nalliyalpuc coRkaLaiyum
virsia* viritta*mia*, namatuLaththil uuRukinRa naRcuvaiceer kathaikaLaiyum
vyo*lta vanhan Va*ina*mo*isen, muthiya vainamoyinan araikkaccaNiyi leeyirun-thu
alta ahjon Ilmarisen, ilmarinan uuthulaiyin iyai aazaththee yirun-thu
pa*a*sta kalvan Kaukmielen, tuuranenjcinan vaaLin thotukuur munai yirun-thu
Joukahaisen jousen tiesta*, yovukaahainan kurukku villinathu vaziyirun-thu
Pohjan peltojen perilta*, vatapaal nilattuRRa vayalkaLilee taan-irun-thu
Kalevalan kankahilta. kaleevalap pakuthiyathan kanaveLikaL utirun-htu.
   
(Figure 5 and its explanation omitted here)

These initial lines contain typical stock phrases with which the folk singers used to introduce their performance. It was common for two persons to sing together, hand in hand (fig. 3), slowly rocking their bodies from side to side. Musical accompaniment was provided with a zither, called kantele (fig. 4). The Kalevala type poetry was sung in simple melodies known in two main varieties (fig. 5). Though the melodies are simple, the best singers could vary and repeat them in so many ways that they never seemed monotonous.

Of course, the translation of a work reflecting a totally different geographic and cultural milieu from that of Tamil Nadu and Sri Lanka has posed many problems. Let us remember that snow and skiing, for example, were totally unfamiliar to the Tamils before the development of modern communication. And how to render the names of plants and berries not growing in southern Asia? All such problems could perhaps not be fully solved, but the Tamil reader is given additional information concerning proper names and problematic expressions (marked in the translation with single and double asterisks respectively) in the glossaries and explanations at the end of the work.

I know Tamils to be avid readers and consumers of culture, who are proud to possess great epics of much the same age as the Kalevala poetry: the Cilappathikaaram, MaNimeekalai, Ciivakacin-thamaNi and Kampa-raamaayaNam. I am convinced that they will appreciate the service done by R. Sivalingam to the cause of Tamil culture and literature as he has enriched it with a direct and outstanding rendering of one of the great epics of the world, just as we Finns feel happy that our ancient heritage can now reach lovers of good literature on the other side of the globe. Tamil is now the 30th language into which Kalevala has so far been translated in its entirety; abbreviated translations have been made into a dozen or so further languages.

Supporters of the project

The Department of Asian and African Studies at the University of Helsinki (this writer) and the Finnish Literature Society (Secretary General, Mr Urpo Vento) have coordinated the applications for financial support to the Tamil Kalevala project. We gratefully acknowledge the schlorship to Mr Sivalingam and a very substantial subsidy covering most of the printing expenses that have been granted by the Finnish Ministry of Education; special thanks are due to Mr Kalervo Siikala and Mr Matti Gustafson, the Director and Assistant Director of the Department of International Affairs, and to Ms Marita Savola, Counsellor of Educational Affairs. The special employment funds administrated by the City of Helsinki and the University of Helsinki have also been a most important resource for the translation. Ms Aivi Gallen-Kallela and her husband Dr Matti Siren, Werner Soderstrom Osakeyhtio (WSOY) and its Managing Director, Dr Jorma Kaimio, and former Director Mr Hannu Tarmio, and Mr Taumo Homma, Manager WSOY's Printing plant in Porvoo, have all been most helpful in matters concerning Akseli Gallen-Kallela's Kaleval illustrations. Mr Sivalingam has himself taken care of the typesetting and proofreading of the Tamil text, and of the translation of this introduction. Mr Petteri Koskikallio has been of great help in the finalization of the layout. We cordially thank Mr Kaarlo Schepel, Director of the Alternative Press, Hong Kong, for publishing this translation in an attractive manner and securing its distribution at a price that should be within in the reach of the literature loving Tamils.

Department of Asian and African Studies,
POB 13 (Meritullinkatu 1),
00014 University of Helsinki,
Finland.
1 November 1994



கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்: ஓர் அறிமுகம்


அஸ்கோ பார்பொலா (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்)
(ஆங்கில அறிமுகத்தின் தமிழாக்கம்)

கலேவலாவும் பின்லாந்தின் ஆதிகால நாட்டுப் பாடல்களும்

உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றான கலேவலா என்னும் பின்லாந்தின் தேசீய காவியம் 1849ல் ஒரு சரியான உருவத்தைப் பெற்றது. ஆனால் இது நேரடியாக வாய்மொழிப் பாடல்களின் அடிப்படையிலிருந்து கிறிஸ்துவின் வரலாற்றுக் காலத்தின் முதலாவது ஆயிரம் வருடப் பகுதியில் உருவம் கொண்டது. சிறந்ததும் முற்றிலும் பாட பேதங்கள் நிறைந்ததுமான தொன்மையான நாட்டுப் பாடல்களிலிருந்து சிறந்த மொழிநூல் வல்லுரான எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot, 1802 - 1884) அவர்களாலும் மற்றும் பின்லாந்தின் நாடோ டி இலக்கியத்தின் முன்னோடிகளாலும் கரேலியாவின் காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டன.

கரேலியா ஒரு மிகப் பெரிய பிரதேசம். இப்பொழுது அதன் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது; (படம் 1, வர்ணப் படம் 1). இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இருபதாம் நூற்றாண்டு வரைகூட, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்தன; ஏனென்றால், புனரமைத்தலும் லுத்தரன் கிறிஸ்தவ இயக்கமும் (Lutheran Christianity) ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த ஆர்தடக்ஸ் தேவாலயம் (Orthodox Church) பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே காரணமாகும்; இதுவே பின்னாளில் புறச் சமயப் பரம்பரையை அழித்தொழிக்க முறைப்படி இயங்கலாயிற்று. கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனைக் கதைகளையும் பிரதிபலித்தாலும், இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி.1155ல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறிஸ்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.

1548ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மிக்கல் அகிரிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் நிலைத்திருக்கும் பழைய நேரடித் தொடர்புடைய நூலாகும். நெருங்கிய உறவுடைய கரேலிய மொழியில் காணப்படும் மிகச் சிறிய மாதிரிக் குறிப்புகள் முன்று நூற்றாண்டுகள் பழமையானவை. மிலாறு மரப்பட்டையில் எழுதப்பட்டிருந்த இந்த மந்திரக் குறிப்புகள் ரஷ்ஷியாவில் வொவ்கொறட் (Novgorod) நகரில் காண்பட்டன. இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் சேகரிக்கப்பட்ட போதிலும், இவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம்வரை செல்வதோடு வெவ்வேறு பரந்த பிரதேசங்களில் பெறப்பட்ட பேரளவு கருப்பொருட்களைக் கொண்டவை; இவை பின்னிஷ் மொழியினதும் மதத்தினதும் ஆதிகால கட்டங்களுடன் தொடர்புடைய மிக முக்கியமான நினைவுச் சின்னங்களாகும்.

இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டு கோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தின் (Uralic language family) கிளைமொழியே பின்னிஷ் மொழி என்று தகுதி வாய்ந்த பன்மொழி வல்லுநர் காட்டியுள்ளனர். (இதில் அதிகம் மக்களால் பேசப்படும் மொழிகள் ஹங்கேரிய, பின்னிஷ், எஸ்தோனிய மொழிகளாகும்; முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்ஷியாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன). கலேவலாவின் மொழியியலின் பின்னணி பற்றியும் இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன்; ஏனெனில் இது இந்திய மொழிகளுடன் சுவையான தொடர்புகளைக் கொண்டது.

யூராலிக் - திராவிட மொழிக் குடும்பங்களிடையே மரபுவழியுறவு?

கி.மு. 6000-4000க்கு முன் பின்னாக, 'முன்-யூரல்' மொழி பேசியவர்கள் (Speakers of the Proto-Uralic language) ஐரோப்பாவின் வடகீழ்ப் பிரதேசத்துக் காட்டுப் பகுதிகளில், யூரல் மலைகளின் இரு பக்கங்களிலும் வேடராகவும் மீனவராகவும் வாழ்ந்தனர். சைபீரியாவின் சமோயெட்ஸ (Samoyeds) என்னும் மொழி யூரல் மொழிக் குடும்பத்தின் கிழக்குக் கிளையை பிரதிநிதித்துவம் செய்த அதே வேளையில், கி.மு.4000-2500க்கு முன்பின்னாக மத்திய ரஷ்ஷியாவில் வாழ்ந்த பின்னிஷ் - உகிரியர்களின் ஆதிமுன்னோர் (Proto - Finno - Ugrians) இதன் மேற்குக் கிளையை உருவாக்கினர்.

திராவிட மொழிக் குடும்பத்தின் தூரத்து உறவுகளாக இருக்கக்கூடிய சாத்தியங்களில் யூராலிக் மொழிக் குடும்பம் (அல்லது அதன் பின்னோ-உகிரிக் கிளை Finno - Ugric branch) திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தேசக் கோட்பாட்டை ஆதரித்த மிகப் பிரபலமான திராவிட இயல் அறிஞர்கள் பலரில் ('சிதியன்' Scythian மொழிகள் பேசிய) றொபேட் கால்ட்வெல் (Robert Caldwell), தோமஸ் புறோவ் (Thomas Burrow 1943-46), எம்.எஸ். அன்ட்றோனொவ் (M.S.Andronov) போன்றோரும் அடங்குவர். நான் திராவிட இயலின் பின்லாந்து மாணவனாக இருப்பதால், இயல்பாகவே இதில் அக்கறை கொண்டதோடு பல வருடங்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதக்கூடிய அளவு விடயங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். எனினும் இந்த விடயத்தில் கருதப்பட்டபடி தூரத்து மரபுவழியுறவை மொழி வழியாக உறுதிப்படுத்த முடியாது என்று நம்பியதால், இவ்வேலையை நான் முடிக்கவேயில்லை. இரண்டு ஆதி மொழிகளுக்கிடையே உள்ள ஒழுங்கான குரலொலித் தொடர்புகளை நிலைநாட்டுவதன் முலம் மட்டுமே மரபுவழியுறவை உறுதிப்படுத்த முடியும். இதை நம்பக்கூடிய வகையில் செய்வதனால், இரண்டு மொழிகளுக்குமிடையே ஒப்பு நோக்குவதற்குக் குறைந்தது நூறு சொல்லாக்க விளக்கங்களாவது தேவை. வேறு விதமாகச் சொல்லப் போனால், இந்த வேலையைத் தொடங்கி ஆதி மொழிகளுக்காக இரண்டு பக்கங்களிலும் புனரமைப்புச் செய்து பார்ப்பதற்குக் குறைந்தது நூறு சொற்களின் சோடிகளாவது தேவை; அத்துடன் இத்தகைய புனரமைப்புகள் குரலொலி சொற்பொருள் இரண்டிலும் நியாயமாகவும் நெருக்கமாகவும் ஒன்றோடொன்று ஒத்திருத்தல் வேண்டும். 'முன்-பின்னோ-உகிரிக்' மற்றும் 'முன்-சமோயேதிக்' மொழிகளும் (Proto-Finno-Ugric and Proto-Samoyedic [Janhunen 1981]) பகிர்ந்து கொண்ட சுமார் 140 ஏற்கப்பட்ட சொல்லாக்க விளக்கங்களில் மட்டும் யூராலிக் குடும்பத்தின் புனரமைப்புகளே அமைந்திருக்கின்றன. மிகப் பழமையான உத்தேச யூராலோ-திராவிட மொழிகளின் (Uralo-Dravidian) பெரும்பிரிவில் சுமார் 20க்கு மேற்பட்ட சொல்லாக்க விளக்கங்கள் இருக்கலாம் என்று யாருமே விதிமுறைப்படி எதிர்பார்க்க முடியாது; இவை உத்தேசக் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் அளவுக்குப் போதியன அல்ல. ஆயினும் இவை உத்தேசக் கோட்பாட்டை நிச்சயமாக மறுப்பவையல்ல. முடிவில் எல்லா மொழிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக வரலாம்; பூகோளத்தைச் சுற்றிப் பரவியுள்ள மனித இனத்தின் உத்தேசக் குடும்ப மரத்தை உயிரியலிலிருந்து வருவித்த முடிவுடன் எல். எல். கவல்லி-ஸ்பொர்ஸா (L. L. Cavalli-Sforza) சமீபத்தில் ஒப்பிட்டிருக்கிறார்.

(எழுத்துக் குறியீடுகள் அமைப்பதில் ஏற்பட்ட சிரமத்தினால் இதில் ஒரு பந்தி தவிர்க்கப்பட்டது)

மேலும், 'முன்-யூராலிக்' 'முன்-திராவிட' மொழிகள் அமைப்பிலும் பல விதங்களில் ஒத்திருக்கின்றன; உதாரணமாகப் பகுதி நிலையிலே இணையும் இயல்புடைய சொல் வடிவ அமைப்பையும் அதன் தொடர்பான (தொடக்க மெய்யெழுத்துச் சேர்க்கையற்ற) தனியசை அமைப்பையும் கூறலாம். சில இலக்கண வடிவங்களும் ஒத்திருக்கின்றன. 'இன்' உடைமையைக் குறிக்கும் உருபாகவும் (யூ.) அல்லது எழுவாயொழிந்த வேற்றுமை வடிவாகவும் (திரா.) அல்லது 'இ' இறந்த கால அமைப்பாகவும் இருப்பதைக் கூறலாம்; (இது 'முன்-பின்னோ-உகிரிக்' (Proto-Finno-Ugric) பகுதியில் யூராலிக் பிரிவுக்கு மட்டுமே பொருந்தும்; சமொயேடிக் வினை விகுதியான (Samoyedic Verbal suffix) 'y' எந்தக் காலங்களையும் குறிப்பதாகத் தெரியவில்லை.)

பின்னோ-உகிரியருக்கும் முற்கால ஆரியருக்கும் இடையிலான ஆதிகாலத் தொடர்புகள்

சுமார் கி.மு. 4000-2500 ஆண்டுகளில் மத்திய ரஷ்ஷியாவின் காடுகளில் வாழ்ந்த 'முன்-பின்னோ-உகிரியரு'க்கு (the Proto-Finno-Ugrians) தென் ரஷ்ஷியாவின் சமவெளிகளில் வாழ்ந்த 'முன்-இந்தோ-ஐரோப்பிய' (the Proto-Indo-European) மொழி பேசியோர் அயலவராக இருந்தனர் (சுமார் 4500-2800 கி.மு.); பின்னர் அதன் வழிவந்த மொழிகளில் ஒன்றைப் பேசிய 'முன்-ஆரியரின்' (the Proto-Aryans) (சுமார் 2800-2000 கி.மு.) வழித் தோன்றல்கள் கி.மு. 2000ஐ அடுத்து சமஸ்கிருதத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் (பார்பொலாவின் ஆக்கம் - அச்சில்). சில பழைய சமஸ்கிருத இரவல் சொற்கள் பின்னிஷ் மொழியில் பாதுகாக்கப்படுகிறது; ஓர் எடுத்துக்காட்டாக, 'நூறு' என்னும் பொருளுடைய 'sata' 'சத' என்ற பின்னிஷ் சொல், 'sata' என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் கிட்டத்தட்டச் சரியாக ஒத்திருக்கிறது. ஆதியில் இருந்த பின்னிஷ் மதம் ஆரியக் கொள்ளைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு 'கடவுள்' என்னும் பொருளுடைய 'jumala' என்ற பின்னிஷ் மூலச் சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் 'பிரகாசித்தல்' என்னும் பொருளுடைய 'dyumat' என்ற பழைய ஆரியச் சொல்லில் இருந்து வந்திருக்கலாம். இந்திய ஆரியர்களின் தெய்வங்களில் இந்திரன் உயர்ந்த நிலையைப் பெற்றார்; பின்னிஷ் பழைய தெய்வங்களில் இடிமுழக்கத்தின் தெய்வமான 'உக்கோ' (Ukko)வும் அவ்வாறே கருதப்பட்டார். இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் 'சம்போ' என்னும் அற்புத ஆலையாகும். சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப் புள்ளிகளுடைய இயலுலக அண்டத்துக்குரிய 'ஆலை'யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சம்போவின் 'புள்ளிகளுள்ள மூடி' என்ற நிலையான அடைமொழி கருத வைக்கிறது. 'சம்போ' (sampo) என்னும் சொல்லில் இருந்து வரும் 'தூண்' என்னும் பொருளுள்ள திரிபுரு sammas என்பது, skambha அல்லது stambha என்ற சமஸ்கிருதச் சொல்லின் தொடர்பை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குரிய தூணைக் குறிக்கிறது.

பின்லாந்தியரின் முன்னோரும் லாப்பியரும்

கிறிஸ்துவுக்கு முந்திய முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் யூராலிக் மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைவிட்ட பால்டோ -பின்னிக் (Balto-Finnic), பால்டிக் பிரதேசத்தையும் பின்லாந்தையும் அடைந்து இரு பெரும் கிளைகளாகப் பிரிந்தது. லாப்பியரின் முன்னோர் வட பகுதிகளில், பெரும்பாலும் பின்லாந்தின் பெரும் பகுதிகளில் தங்கிய காலத்தில், பின்லாந்தியரின் முன்னோர் எஸ்தோனியாவிலும் கரேலியாவிலும் பின்லாந்தின் தென் பகுதிகளிலும் குடியேறினர்; (இவர்களுடைய இன்றைய மொழிவழித் தோன்றல்கள் எஸ்தோனியா, கரேலியா, பின்னிஷ் மொழிகளைப் பேசுபவர்களில் அடங்குவர்.) கலேவலாக் கவிதைகள் 'முன்-பின்னிஷ்' (Proto-Finnish) கிளையைச் சேர்ந்தது. பின்லாந்தியரின் முன்னோர் பண்டைய விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததோடு, ஜெர்மானிய (நோர்டிக் அல்லது ஸ்கன்டினேவிய), பால்டிக் (லத்வியன் + லித்துவேனிய), ஸ்லாவிய (ரஷ்ய) இனத்தவர் உட்பட்ட இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களிடமிருந்து பெற்ற இரவல் சொற்கள், கொள்களிலிருந்து அபிவிருத்தி அடைந்த முன்னேற்றமான கலாசார அடிப்படையையும் கொண்டிருந்தனர். கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியரின் முன்னோரின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்தையும், லாப்பியர்பால் இருந்த பகைமையையும், மொழித் தொடர்புகளையும் எடுத்துக்காட்டுகிறது; இந்த லாப்பியர் இப்பொழுது வட சமுத்திரத்துக்கு அருகில் ஸ்கன்டினேவியாவின் வடபுற எல்லையில் ஒரு சிறிய சிறுபான்மையினராகக் காலம் தள்ளுகின்றனர். லாப்பியர் பரம்பரை பரம்பரையாக வேட்டைக்காரராகவும் கலைமான் மந்தைகளை வளர்க்கும் நாடோ டிகளாகவும் இருந்தனர். கி. பி. 98ல் றோமன் நூலாசிரியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப் பற்றி விபரிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகரித்து, நிரந்தரமான வீடுகளில்லாத 'பென்னி' (Fenni) என்ற ஒரு இனத்தவரைப் பற்றிக் கூறியிருக்கிறார்; இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.

கலேவலாவின் உள்ளடக்கம்

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரினைப் போல அல்லது இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு மேற்கொண்ட படையெழுச்சியைப் போல, கிறிஸ்துவுக்கு பிற்பட்ட முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் நிகழ்ந்த ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியுமுடைய கலேவலாவின் போர் நடவடிக்கைகள் இப்பாடல்களின் முதுகெலும்பாக அமைந்தன. ஆனால் எக்காரணம் கொண்டும் இப்பாடல்கள் போர்க் கருப்பொருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவையல்ல. இந்தியாவின் காவியங்களில் வரும் சுயம்வரங்களைப் போல, மாப்பிள்ளையாகப் போகிறவர் பெண்ணை நயந்து பெறுதலும் மக்கள் விரும்பும் ஒரு காவியக் கருவாகும். விவசாயம் (படம் 2), கால்நடை வைத்திருத்தல் (வர்ணப் படம் 6), விவாகங்கள், மருத்துவச் சடங்குகள் போன்ற எல்லா வகையான கிராமீய வழக்கங்கள், அல்லது இளம் மக்களின் பொழுதுபோக்குகள் என்பவற்றோடு உலக நோக்கும் மதமும் கூட உட்பட்ட நாளாந்த வாழ்க்கையின் பல்வேறு பண்புகள் பற்றியும் கலேவலா கூறுகிறது. பண்டைய தமிழரின் கலாசாரத்தின் எல்லாப் பக்கங்களையும் சிலப்பதிகாரத்தில் அளித்திருப்பது போல, பண்டைய பின்லாந்தியரின் கலாசாரத்தின் சிறந்த விரிவான வர்ணனையைக் கலேவலாவில் காணலாம். (இருப்பினும் தமிழ் மக்களுடைய நேர்த்தி நுட்பமானதும் பெருமளவில் நகரப் பண்பானதுமான கலாசாரத்திலும் பார்க்க, பின்லாந்தியரின் கலாசாரம் முற்றிலும் கிராமீயமானதும் மிகவும் எளிமையானதுமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.) யூராலிக் மொழிகள் பேசும் மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாக 'ஷமானிசம்' (Shamanism) ஆக இருந்திருக்கலாம்; ஆனால் பால்டிக்-பின்லாந்தியர் தொடர்பு கொண்டிருந்த பிற மக்களின் விளைவாட்சிக்கு உட்பட்ட மதமே கலேவலாவில் பிரதிபலிக்கிறது. உண்மையில், கலேவலாவில் பல உலக நோக்குகளைக் காணலாம்; அவை உலகப் படைப்புப் பற்றிய பாடல்கள், பெரிய சிந்துரம் (great oak) வீழ்த்தப் படுதல் (இது பற்றிக் கீழே கூறப்படுகிறது), ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் சாகசச் செயல்கள் பற்றியும் கிறிஸ்துவம் பற்றியும் பரம்பரைக் கதைகள், விவசாயிகள், மந்திரக்காரர்கள், மந்திரக்காரிகளின் பாடல்கள் ஆகியவை அடங்கிய கற்காலம் வரை பின்நோக்கிச் செல்லக்கூடிய பெளராணிகக் கருத்துகளாகும்.

மாபெரும் சிந்தூரமும், அது வீழ்தலும்

கலேவலாவின் உள்ளடக்கத்துக்கு ஓர் உதாரணமாக அதன் இரண்டாவது பாடலைச் சற்று விரிவாகக் கூற விரும்புகிறேன்; முதலாவது பாடலில் வரும் உலகம் படைக்கப்பட்ட புராணக் கதையைத் தொடர்ந்து இப்பாடல் வருகிறது. ஆதியில் தோன்றிய சமுத்திரத்தில் எழுந்த தீவுகளிலும் தலைநிலப் பரப்பிலும் மரங்களை விதைத்து உண்டாக்க விரும்புகிறான் பேரறிவு படைத்த ஞானியான வைனாமொயினன். மண்வளத்தைக் காக்கும் தேவசக்தியான சம்ஸா பெல்லர்வொயினனால் இது நடைபெறுகிறது. சிந்தூர மரத்தைத் தவிர மற்ற எல்லா விதைகளும் முளைத்துச் செழிக்கின்றன. கடலின் உபதேவதைகள் கொஞ்ச வைக்கோலை எரித்து, அதன் சாம்பர்மேல் சிந்தூர மரத்தின் வித்து விழுந்த பின்னர் தான் சிந்தூரம் முளைக்கத் தொடங்குகிறது. ஆனால் அது ஒரு மாபெரும் விருட்சமாக வானம் வரை வளர்ந்து சூரியனும் சந்திரனும் ஒளிர்வதைத் தடுக்கிறது. முழு உலகமே இருளில் அமிழ்கிறது. வைனாமொயினன் இந்த இராட்சச மரத்தை வீழ்த்தக் கூடிய ஒருவனைத் தேடிக் கிடைக்காமல், கடைசியில் தனது தாயான கடல்மகளை வணங்குகிறான். அவள் பெருவிரல் அளவு நீளமான ஒரு சின்னஞ்சிறிய மனிதனை அனுப்புகிறாள்; விஷ்ணு பகவான் குறள் வடிவில் அவதாரம் எடுத்த போது பலி என்னும் அரக்கன் அவரைத் தவறாக நினைத்ததைபோல, இந்தக் குறள் மனிதனையும் பார்த்து வைனாமொயினன் சிரித்து ஏளனம் செய்கிறான். ஆயினும், வாமனனைப் போல இந்தச் சின்னஞ்சிறிய செப்பு மனிதனும் திடீரென மாபெரும் அளவு உருவத்தைப் பெற்று, அந்தப் பயங்கர மரத்தைக் கோடாரியால் மும்முறை தாக்கி வீழ்த்துகிறான்; (இந்தத் தோற்றம் சென்னிறமான உதயக்கால சூரியனின் உருவகமே என்பதில் சந்தேகமில்லை). இயற்கை இப்பொழுது இருள் என்னும் கேட்டிலிருந்து விடுபட்டு மலர்ச்சியடையத் தொடங்குகிறது. (தேவன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று, இந்த அரக்கன் தடுத்து வைத்திருந்த மழை முகில்களை எல்லாம் விடுவித்து உலகத்துக்கு விடுதலை தந்ததை இங்கு நினைவு கூறலாம்). வீழ்ந்த சிந்தூர மரத்தின் துண்டுகள் உலகெல்லாம் இன்பத்தைப் பரப்புகிறது. இதன் நோக்கம் மந்திர சக்தி வாய்ந்த, புனிதமான சோலை மத்தியில் சிந்தூரத்தைச் சுற்றி 'பீர்' என்னும் பானம் வடிக்கும் சடங்குகள், சிந்தூர மரத்தில் 'பீர்'ப் பானக் கிண்ணங்கள் இயற்றுதல் போன்றவற்றைத் தொடர்புபடுத்துவதாகத் தெரிகிறது. பாடலின் ஏனைய பகுதி ஆதிகாலத்தில் சாதாரணமாகக் கையாளப்பட்ட காடுகளை எரித்தழித்துச் செய்த விவசாயம் பற்றிக் கூறுகிறது; இது இப்பொழுது வழக்கிலில்லை; (சரியாகச் சொல்லப் போனால் தடைசெய்யப்பட்டுள்ளது); அதாவது சாம்பலில் விதைகளை விதைப்பதற்கு முன்னால் பெரும் பிரதேசத்தில் உள்ள எல்லா மரங்களையும் முற்றாக எரிப்பது (படம் 2). எனினும், குயில் வந்து அமர்வதற்காக வைனாமொயினன் ஒரு மிலாறு மரத்தைப் பாதுகாக்கிறான்.

கலேவா

கலேவலா Kalevala என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -la என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் எஞ்சிய அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர்; கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது; [மான்தலை விண்மீன்குழுவை (the belt of orion) 'கலேவாவின் வாள்' என்று அழைப்பர்.] இடியேறு போன்ற வானுலகக் காட்சியை 'கலேவலாவின் நெருப்பு' என்பர். கலேவாவின் ஆண் மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காக (மரங்களை எரித்துச்) சுட்டழித்த காட்டு விவசாயத்துறையின் அதிசக்தி வாய்ந்த பூதங்கள் என்பர். கலேவா என்னும் பெயரின் சொல்லாக்க விளக்கம் உறுதியாக சொல்வதற்கில்லை. 'கொல்லன்' என்னும் பொருள் வரும் kalvis என்ற லித்துவேனியன் சொல்லும் பழைய பால்டிக் கொல்வேலைத் தெய்வம் kalevias என்பதும் தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருங்கிய விளக்கமாகும்.

இல்மரினன் என்னும் தேவ கொல்லன்

கலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மரினன் கொல்லன் என்னும் தனிச் சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படிமானமாக்குதல், சம்போ என்னும் அற்புத ஆலையை உலையில் உருவாக்குதல் (வர்ணப்படம் 2), பாம்புகள் நிறைந்த வயலை உழுதல் (வர்ணப்படம் 5), தங்கத்தில் ஒரு மங்கையை இயற்றுதல், விண்ணுலக ஒளிகளை வடநிலப் பாறைகளிலிருந்து விடுவித்தல் என்பனவாம். பழைய நாடோ டிப் பாடல்களின்படி, இல்மரினன் சம்போவைப் போலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்திருக்கிறான். லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ம் காலத்தைய 'ஷமானிஸ' மதகுருவின் முரசின்படி (drum) இல்மரிஸ் என்னும் மன்புனைவான தெய்வம் காற்றையும் காற்றுவீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னிஷ் மொழியில் ilma என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்ஷியாவில் வாழும் 'வொத்யாக்ஸ்' (Votyaks) இனத்தவர் இன்னமும் 'இன்மர்' Inmar அல்லது 'இல்மெர்' Ilmer என்னும் விண்ணுக்குரிய தெய்வத்தை வழிபடுகின்றனர்.

வைனாமொயினனும் பாடல்களின் சக்தியும்

கலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் மனிதச் சிறப்பு தெய்வச் சிறப்பு ஆகிய இரண்டும் கொண்ட ஒரு பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொண்ரொத் (Lo*nnrot) பின்னதற்கே சாதகமாக இருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதி காலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான்; அவனுடைய பெயர் 'அகன்று ஆழமானதும் மெதுவாகப் பாய்வதுமான ஆறு' என்னும் பொருளில் உள்ள va*ina* என்னும் சொல்லில் இருந்து வந்ததால், ஆதியில் தண்ணீரோடு தொடர்புடைய கடவுளாகவும் இந்தியாவின் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று கருதவைக்கிறது. வைனாமொயினன் ஒரு கலாசார நாயகனாகவும் கருதப்படுகிறான்; ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே; ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் மயக்கியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப் பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக் கூறுகின்றன; அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த ஒரு வல்லமைமிக்க ஞானி; மந்திரப் பாடல்களாலும் சக்தி வாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்துபவன். ஒரு பழைய இறந்த பூதத்திடம் தேவையான மந்திரச் சொற்களைப் பெறுவதற்காக ஒரு மந்திர சூனிய மதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் செல்பவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப் போல அடிக்கடி காட்சியளித்தாலும், அவனுடைய போர்வீரனுக்குரிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன் வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நோர்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்கிறதைக் கவனித்தல் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின் சக்தி வாய்ந்த சொற்கள் எதிராளியைச் சேற்றில் அமிழ வைக்கிறது (முகப்பு படத்துக்கான விளக்கம் பார்க்க). வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தெரிந்துக் கொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான மாறுபாடான முடிவுகளையே தந்தன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இது பொருந்தும். இந்தியாவின் காவியங்களின் ஆய்விலும் இத்தகைய நிலமை நிகழ்வதைக் காணலாம்: உதாரணமாக, ஏற்கனவே முற்காலத்தில் இருந்த பல்வேறு தேவர்களின் மறுபிறப்பே பஞ்சபாண்டவர்கள் என்று கூறப்பட்ட அதே வேளையில், வேறு கல்விமான்கள் அவர்களை வரலாற்று மனித நாயகர்கள் என்று கருதுகிறார்கள்.

எலியாஸ் லொண்ரொத்

கலேவலா பழைய நாடோ டிப் பாடல்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அதன் அமைப்பில் அதன் தொகுப்பாசிரியருக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இது எலியாஸ் லொண்ரொத்தின் (Elias Lo*nnrot, 1802-18884) ஆக்கமாகவே நிலைத்திருக்கிறது; ஒரு கிராமத்து ஏழைத் தையற்காரரின் மகனான இவர், ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கி, சிறந்த மிகப் பெரிய அளவிலான கலாசாரச் செயல்கள் முலமாகப் பின்னிஷ் மொழியின் பேராசிரியர் ஆனார். பதினொரு நெடுந்தூரப் பயணங்களில், பெரும்பாலும் தெருக்களே இல்லாத காட்டுப் பிரதேசங்கள் வழியாக, இருபதினாயிரம் கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று, கலேவலா நாட்டுப் பாடல்கள் அமைப்பில் உள்ள 65,000 பாடல் அடிகளை லொண்ரொத் சேகரித்தார். வைனாமொயினன் தொடர்பான பாடல்கள் பற்றிய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்குப் பின்னர் (1822), "பழைய கலேவலா" என்று அழைக்கப்படும் கலேவலாவின் முதலாவது பதிப்பை 1835ல் வெளியிட்டார். இரண்டாவதும் முழுமையானதுமான பதிப்பு, முதலாவது பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளத்தில், மொத்தமாக 22,795 அடிகள் கொண்ட ஐம்பது பாடல்களுடன் 1849ல் வெளிவந்தது. 1840-41ல் லொண்ரொத் 'கந்தலேதார்' (Kanteletar) என்னும் யாழிசைப் பாடல் தொகுதி ஒன்றை வெளியிட்டார். இந்த வெளியீடுகளுக்கான முலப் பிரதிகள் இன்னமும் இருந்து, உண்மையான நாடோ டிப் பாடல்களின் தொடர்பு பற்றிய ஒரு தெளிவான கருத்தைத் தருகின்றன. நாடோ டி இலக்கியத்தில், பல்வேறு உண்மையான சுதந்திரமான கிளைக் கதைகளைத் தொடர்புபடுத்தும் இணையற்ற சுமார் 600 அடிகளை லொண்ரொத் தாமே இயற்றிக் கலேவலாவுக்கு ஒரு முழுமையான அமைப்பையும் வடிவத்தையும் கொடுத்தார்.

கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக உள்ள மூல நாடோ டிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி Suomen Kansan vanhat runot ('பின்னிஷ மக்களின் பண்டைய பாடல்கள்') என்ற பெயரில் 33 பெரிய பாகங்களாக 1908-1948ல் வெளியிடப்பட்டது. இந்தப் பெரிய செயற்பாடுகூட நூற்றுக்கணக்கான கல்விமான்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகரிப்புச் செல்வங்களை வற்றச் செய்ய முடியவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள பரம்பரை பரம்பரையாக வந்த வாய்மொழிப் பாடல்களின் பழையதும் பெரியதுமான சேகரிப்புகளில் 1831ல் நிறுவப்பட்ட பின்னிஷ் இலக்கிய மன்றமும் ஒன்று. இந்த சேகரிப்புகளில் 1977ல் பின்வருவன அடங்கியிருந்தன: கலேவலாப் பாடல்களின் சீரில் அமைந்த 86,800 பாடல்கள்; மற்றும் சந்த ஒழுங்கில் அமைந்த 129,400 நாடேடிப் பாடல்கள்; 52,400 மந்திரப் பாடல்கள்; 336,000 மந்திரங்கள், நம்பிக்கைகள், சகுனங்கள்; 187,400 விளையாட்டுகள்; 9,300 அர்த்தமற்ற பாடல்களும் புலம்பல்களும்; 103,200 தெய்வீக ஆற்றல் கதைகளும் நினைவாற்றல் கதைகளும்; 77,800 வரலாற்றுக் கதைகளும் உள்ளுர்க் கதைகளும்; 7,700 காரண காரியக் கதைகளும் புராணக் கதைகளும்; 766,500 பழமொழிகள் (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் சேகரித்த 1,425,000 திரிபுருப் பழமொழிகளில் இருந்து பெறப்பட்டவை); 117,300 விடுகதைகள்; 23,200 நாடோ டிப் பாடல் மெட்டுகள்; 54,000 மானிடவியல் வர்ணனைகள்.

கலேவலா, பின்லாந்தியரின் தேசீய காவியம்

லொண்ரொத்தின் ஆக்கங்கள், குறிப்பாகக் கலேவலா வெளியீடு 1155 தொடக்கம் 1809 வரை சுவீடிஷ்காரராலும், அதன் பின்னர் (சுவீடிஷ்காரருக்கும் ரஷ்யருக்கும் ஏற்பட்ட போரில் சுவீடிஷ்காரர் தோல்வி கண்ட பின்) 1809ல் இருந்து கடைசியாகச் சுதந்திரம் பெற்ற 1917 வரை ரஷ்ஷியராலும் ஆளப்பட்டு வந்த பின்னிஷ் மக்களின் சுயவிழிப்புணர்விலும் தேசீய உணர்விலும் ஒரு பாரிய விளைபயனை ஏற்படுத்தியது. பழைய பரம்பரைச் செல்வங்களை அழிவிலிருந்து காப்பாற்றி உலக இலக்கியத்துக்கு லொண்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிருட்டியவரான பிரபல டாக்டர் உ. வே. சாமிநாதையரின் சேவைக்கு ஒப்பிடலாம். ஜெயன் சிபெலியுஸ் [Jean Sibelius (1865-1957)] அவர்கள் கலேவலாவின் பல பாடல்களை உலகளாவிய இசைக்கு அறிமுகம் செய்தார். இவரால் இசையமைக்கப்பட்டு பின்னிஷ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற கலேவலாப் பண்கள், தமிழ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கு இணையாகும். கலேவலா பாடல்கள் மாபெரும் பின்னிஷ் ஓவியர்களுக்கும் அதிகப்படியான உளக்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன; இந்த வரிசையில் எல்லாருக்கும் மேலாக அக்செலி கல்லேன்-கல்லேல [Akseli Gallen-Kallela (1865-1931)]வைக் குறிப்பிடலாம். இந்நூலில் பாடல்களின் தொடக்கத்திலும் முடிவிலும் காணப்படும் கொடிவரைப் பின்னணிப் பிரதிமைகள் இவருடைய கலேவலா சித்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; இவருடைய கலேவலா ஓவியங்கள் சுவர்க்கோலங்களில் சில தெரிந்தெடுக்கப்பட்டு வர்ணப்படங்களாக இந்நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் ஏரிகளாலும் காடுகளாலும் தனிச் சிறப்பு அளிக்கும் இக்காட்சிகள் பின்லாந்தின் இயற்கை பற்றிய சில அழுத்தமான பதிவுகளை உள்ளத்தில் ஏற்படுத்தத் துணை நிற்கும் என்று நம்பப்படுகிறது; இப்பாடல்களைப் படைக்க ஆதாரமாயிருந்த கலாசாரச் சூழல் பற்றிய ஓவியரின் நோக்கு இந்த ஓவியங்களில் பிரதிபலிக்கின்றது.

ஆர். சிவலிங்கம் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு

கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவரின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை 'உலகளாவிய இலக்கியங்கள்' என்ற வரிசையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University Press) சமீபத்தில் வெளியிட்டுள்ளது (1989). இந்த மொழிபெயர்ப்புடன் இதற்கு முன் வந்த W.F. கிர்பி (W.F. Kirby 1907, மறுபதிப்பு Gallen-Kallela, 1985), F.B மகோன் jr. (F.B. Magoun jr.- 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளும் வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இந்தத் தமிழாக்கத்துக்குப் பயன்படுத்தபட்டுள்ளன. இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளரான இலங்கையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; 'உதயணன்' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய 'பொன்னான மலரல்லவோ', 'அந்தரங்க கீதம்' ஆகிய இரண்டு நாவல்களை கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட். நிறுவனம் 'வீரகேசரிப் பிரசுரங்கள்' என்ற வரிசையில் வெளியிட்டன. பத்து வருடங்களுக்கு மேலாகப் பின்லாந்தில் வாழ்ந்து வரும் இவர், பின்னிஷ் மொழியுடனும் பின்னிஷ் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், பின்னிஷ்-கரேலிய முலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தர முடிந்தது. இவர் தனது நண்பரும் இலங்கை கவிஞருமான எஸ். கிருஷ்ணபிள்ளை ('திமிலைத்துமிலன்') அவர்களின் உதவியுடன் இதன் அமைப்புக்குக் கவனமாக மெருகூட்டியுள்ளார்.

மூல நூலில் இருக்கும் எல்லாக் கவிதைச் சிறப்புகளையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது சாத்தியமானதல்ல. கலேவலாப் பாடல்கள் நெடில்குறில் ஈரசையாலான நாற்சீரடிகளாக இருக்கின்றன (-v / -வv / -v / -v / ); வழக்கமாக ஒரு சோடியாக அமையும் இத்தகைய இரண்டு அடிகளில், முதல் அடியில் சொல்லப்பட்ட செய்தியையே இரண்டாவது அடி வேறு வார்த்தைகளில் திருப்பிச் சொல்லும். பாடலடியின் கடைசி ஒலியியைபில் அமைவதற்குப் பதிலாக முதலெழுத்துகள் ஒன்றிவரும் மோனைத்தொடையில் பெரும்பாலும் இருக்கின்றன; ஒரு அடியில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரே ஒலியில் தொடங்கும். கடைசியாகக் கூறியதைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பின்பற்றக் கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மூல நூலிலும் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வரும் தொடக்கப் பாடல் அடிகளைக் கீழே தருகிறேன்.

Mieleni minun tekevi,

எனதுளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது

aivoni ajattelevi,

எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்

la*htea*ni laulamahan,

பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்

saa'ani sanelemahan,

பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்

sukuvirtta* suoltamahan

சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு

lajivirtta laulamahan.

உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு;

Sanat suussani sulavat,

வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது

puhe'et putoelevat,

நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது

kielelleni kerkia*va*t,

நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது

hampahilleni hajoovat.

பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது.

   

Veli kulta veikkoseni,

அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே!

kaunis kasvinkumppalini,

என்னோடே வளர்ந்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !

la*he nyt kanssa laulamahan,

இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்

saa kera sanelemahan,

நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுளத்தைத் தாருங்கள்

yhtehen yhyttya*mme

ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்

kahta'alta ka*ytya*mme!

நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம்;

Harvoin yhtehen yhymme,

அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்

saamme toinen toisihimme,

அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்

na*illa* raukoilla rajoilla,

வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்

poloisilla Pohjan mailla.

தெரியும்வட பால்நிலத்தில் செழிப்பிழந்த பூமியின்கண்.

   

Lyo*ka*mme ka*si ka*tehen,

கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து

sormet sormien lomahan,

விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து

Lauloaksemme hyvia*,

நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்

parahia pannaksemme,

ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையொடு பாடிடுவோம்

kuulla noien kultaisien,

பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்

tieta* mielitehtoisien,

இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்

nuorisossa nousevassa,

எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்

kansassa kasuavassa:

வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்

noita saamia sanoja,

யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்

virsia* viritta*mia*,

நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும்

vyo*lta* vanhan Va*ina*mo*isen,

முதியவைனா மொயினனரைக் கச்சணியி லேயிருந்து

alta ahjon Ilmarisen,

இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து

pa*a*sta* kalvan Kaukmielen,

தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து

Joukahaisen jousen tiesta*,

யொவுகாஹை னன்குறுக்கு வில்லினது வழியிருந்து

Pohjan peltojen perilta*,

வடபால் நிலத்துற்ற வயல் களிலே தானிருந்து

Kalevalan kankahilta.

கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.

(படம் 5ம் அதன் விளக்கமும் இவ்விடத்தில் தவிர்க்கப்பட்டது)

நாட்டுப் பாடல்களைப் பாடுபவர்கள் தங்கள் நிகழ்ச்சியை அறிமுகம் செய்யப் பயன்படுத்தும் ஒரே மாதிரியான நிலையான சொற்றொடர்களே இந்த ஆரம்ப அடிகள். இருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு உடல்களை அக்கம்பக்கமாக ஆட்டியசைத்துப் பாடுவது வழக்கம் (படம் 3). 'கந்தலே' (kantele) என்னும் நரம்பிசைக் கருவியின் இசையும் பக்க வாத்திய இசையாக வழங்கப்பட்டது (படம் 4). இரண்டு பிரதான வகைகளாகக் கூறப்படும் எளிமையான இன்னிசைப் பாடல்களாகக் கலேவலா போன்ற பாடல்கள் பாடப்பட்டன (படம் 5). இன்னிசைப் பாடல்கள் எளிமையாக இருப்பினும், திறமையுள்ள பாடகர்கள் அவற்றை தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசையிலேயே பலவிதமாக மாற்றியும் திருப்பியும் பாட வல்லவர்கள்.

உண்மையில், தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட மொழிபெயர்ப்பு வேலை ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடிய ஒன்று. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகளாகும் என்பதை இங்கு நினைவுகூர்வோம். அத்துடன் தென் ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறு பழங்களுக்கும் எப்படிப் பெயர் கூறுவது? இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் முற்றிலும் தீர்க்கப்படவில்லை; எனினும், இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக பொதுப் பெயர்களுக்கும் சிக்கலான சொல்லமைப்புகளுக்கும் (மொழிப்பெயர்ப்பில் ஒற்றை இரட்டைப் புள்ளி அடையாளங்கள் இட்டு) நூலின் கடைசியில் முறையே சொற்றொகுதியிலும் விளக்கக் குறிப்புகளிலும் தமிழ் வாசகர்களுக்கு மேலதிக விபரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள், கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றை வைத்திருப்பதற்காகப் பெருமைப் படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றைச் சிறப்பாகவும் முனைப்பாகவும் அளித்துத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமுட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ் மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல பின்னிஷ் மக்களாகிய நாங்களும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் எங்களுடைய பண்டைய பாரம்பரியச் செல்வம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிரியர்களை அடைய முடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். கலேவலா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட வகையில் தமிழ் முப்பதாவது மொழியாகும்; சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.

இந்த வேலைத் திட்டத்துக்கு உதவியோர்

ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களமும் பின்னிஷ் இலக்கிய மன்றமும் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] இணைந்து, கலேவலா தமிழ் வேலைத் திட்டத்தின் நிதியுதவி விண்ணப்பங்களைக் கையாண்டன. திரு. சிவலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட புலமைப் பரிசிலுக்காகவும் அச்சுவேலை மானியமாக தரப்பட்ட கணிசமான தொகைக்காகவும் பின்லாந்தின் கல்வி அமைச்சுக்கு நன்றி கூறுகிறோம்.

திரு. கலெர்வோ சீக்கலாவுக்கும் (Mr. Kalevaro Siikala) சர்வதேச அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குனரும் உதவி இயக்குனருமான திரு. முத்தி குஸ்தவ்ஸனுக்கும் (Mr. Matti Gustafson) அத்துடன் கல்வி அலுவல்கள் ஆலோசகர் Ms. மரீத்தா சவோலாவுக்கும் (Ms. Marita Savola) விசேடமான நன்றியைத் தெரிவிக்கிறோம். விசேட தொழில் நிதியை நிர்வகிக்கும் ஹெல்சிங்கி மாநகரமும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகமும் இம்மொழிபெயர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்தன. Ms. ஐவி கல்லேன்-கல்லேல (Ms. Aivi Gallen-Kallela), அவருடைய கணவர் டாக்டர் மத்தி சிரேன் (Dr. Matti Siren), 'வெர்னர் ஸொடர்ஸ ஒஸாகே உக்தியோ' (Werner So*derstro*m Osakeyhtio* [WSOY]) என்னும் நிறுவனமும் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் யொர்மா கைமியோவும் (Dr. Jorma Kaimio), முன்னால் இயக்குனர் திரு. ஹன்னு தர்மியோவும் (Mr. Hannu Tarmio), பொர்வோவில் இருக்கும் WSOY அச்சக மேலாளர் திரு. தவுனோ ஹொம்மா (Mr. Tauno Homma)- இவர்கள் எல்லோரும் அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela)வின் ஓவியங்கள் தொடர்பாக மிகவும் உதவி புரிந்தனர். இந்த நூலின் கணனி அச்சமைப்பையும் சரிபிழைபார்த்தலையும் இந்த அறிமுக உரையின் மொழிபெயர்ப்பையும் திரு சிவலிங்கம் தானே பொறுப்பேற்றுச் செய்து தந்தார். இந்த நூலின் அமைப்பை முற்றுப் படுத்தும் வேலைகளில் திரு. பெத்தரி கொஸ்கிகல்லியோ (Mr. Petteri Koskikallio) பெரிதும் உதவியாக இருந்தார். இந்த நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கிய பிரியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வெளியிட்ட ஹொங்கொங், ஆல்டனேற்றிவ் அச்சக (Alternative Press, Hong Kong) அதிபர் திரு. கார்லோ ஸ்கெபெல் (Mr. Kaarlo Schepel)லுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறோம்.

Department of Asian and African Studies,
POB 13 (Meritullinkatu 1),
00014 University of Helsinki,
Finland.
1 November 1994


என்னுரை
வணக்கம்

பழைய தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் திட்டத்துடன் தான் நான் 1986ல் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றேன். அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டிற்குமான எனது பங்களிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், அவற்றை வெளியிடுவதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஒரு நூலைக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் 'கலேவலா' என்ற இந்த உலகளாவிய காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடங்கப்பட்டது. மூன்றாண்டு கால முழு நேர உழைப்பின் பலன் இந்த மொழிபெயர்ப்பு. பின்னிஷ் மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வந்த முதலாவது நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. அதே நேரம் ஒரு நீண்ட பிற மொழிக் காவியத்தை தமிழாக்கிய மனநிறைவு எனக்கும் உண்டு.

கலேவலா

இந்த காவியம்பற்றி அறிமுக உரையில் விபரமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 'கலேவா' என்பது ஒரு முதாதையரின் பெயரிலிருந்து வந்த ஓர் இனத்தவரின் பெயர். கலேவா இனத்தவர் வாழ்ந்த இடத்தைக் கலேவலா என்று அழைப்பர். அதுவே இந்நூலின் பெயருமாயிற்று. வாய் மொழிப்பாடல்களாக இருந்ததாலும் இதில் அடங்கியுள்ள மந்திரப் பாடல்களாலும் இதை ஓர் இதிகாச நூல் என்பர் சிலர். ஆனால் இதை தொகுத்து அளித்த முறையிலும் தற்போதைய அமைப்பிலும் இது இதிகாசம் என்ற எல்லையைக் கடந்து உலக இலக்கியம் என்ற தரத்தைப் பெற்றுவிட்டது என்பர் அறிஞர். பின்லாந்தின் தலைசிறந்த புகழ் பூத்த இசைக்கலைஞரான ஜெயன் சிபெல்லியுஸ் (Jean Sibelius) இப்பாடல்கள் சிலவற்றுக்கு இசையமைத்து உலக அளவில் அரங்கேற்றியதும் இந்தக் காவியம் 'உலக இலக்கியம்' என்ற தரத்தைப் பெற ஒரு காரணமாகும். லண்டன் பீபீசீ (BBC) நிலையம் பல தடவைகள் பல வடிவங்களில் இக்காவியத்தின் பகுதிகளை ஒலிபரப்பி உலகளவில் அறிமுகம் செய்தது. பின்லாந்தைப் பொறுத்த வரையில் இது ஒரு தேசீய காவியமாக அங்கீகாரம் பெற்றது. கல்லூரிகளில் பாட நூலாக ஏற்கப்பட்டது. 1835ல் வெளியான முதலாவது பதிப்பின் முன்னுரையின் திகதியான பெப்ரவரி 28 'கலேவலா தினம்' என அரசால் பிரகடனம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மொழிபெயர்ப்பு

இம்மொழிபெயர்ப்பு முற்றுப் பெற்றபொழுது நான் இந்நாட்டுக்கு வந்து பதினோரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. எனவே இவ்வேலையைத் தொடங்கிய சமயம் எனக்கு இந்நாட்டு வாழ்க்கையும் மொழியும் கலாசாரமும் ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன. அந்த துணிச்சலில் தான் இப்பாரிய பணியைத் தொடங்கினேன். ஆனால் போகப் போகத்தான் அதன் சுமை தெரிந்தது. இந்தியாவிலோ இலங்கையிலோ அன்றேல் உலகின் வேறெந்த முலையிலோ வாழும் ஒரு வாசகருக்கு இம்மொழிபெயர்ப்புக் கிடைக்குமாயின், அவ்வாசகர் முன்பின் கண்டு கேட்டு அறியாத இந்த நாட்டுப் பழக்க வழக்கங்களை, தாவரங்களை, உயிரினங்களைப் பற்றி எவ்வாறு புரிய வைக்கப் போகிறேன் என்ற மலைப்பு ஏற்பட்டது. இன்று இந்த நாட்டில் அறுபது, எழுபது தமிழர்கள் வரையில் நாடெங்கும் சிதறி வாழ்கின்ற போதிலும், அவர்களிடையே தமிழறிவுடையோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இங்கு தமிழர்கள் ஒரு நூறு பேர்கூட இல்லாத நிலையில், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களத்தின் நூல் நிலையத்தைத் தவிர வேறு எங்கேயுமே தமிழ் நூல்கள், அகராதிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கில்லை. இந்த நூல் நிலையத்திலுள்ள தமிழ் மொழி, கலாசாரம் பற்றிய ஐம்பது, நூறு தமிழ், ஆங்கில நூல்களிலும் பெரும்பாலானவை பழைய பதிப்புகள். அதனால் கடந்த ஐந்து பத்தாண்டுகளில் தமிழ் மொழியில் வழக்குக்கு வந்த சொற்களை அறியும் வாய்ப்பும் எனக்கு மிக மிக அரிது. இந்நிலையில் கலேவலா காவியம் தொடர்பாக பின்னிஷ் ஆங்கில மொழிகளில் பெறக்கூடிய அத்தனை நூல்களையும் வாங்கிப் பரப்பி வைத்துக்கொண்டு தனியனாய்த் துணிந்து தொடங்கினேன்.

'ஸ்ரோபரி' (strawberry) என்று ஆங்கிலப் பெயரையே சொன்னால், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு முலையில் வாழும் ஒரு வாசகர் அதை ஒரு பழம் என்று ஊகிக்கலாம்; ஆனால் பலாப்பழம் போன்ற பெரிய பழமா? இலந்தைப்பழம் போன்ற சிறிய பழமா? என்று ஊகிக்க முடியாமல் போகலாம். மாம்பழம் போன்று இனிமையானதா? வாழைப்பழம் போன்று சுவையானதா? அல்லது வேறு ஏதோ ஒரு விதமானதா? என்று உணர முடியாமல் போகலாம். இதற்கு நானே ஒரு புதிய தமிழ்ப் பெயரையும் கண்டுப்பிடித்துக் கூறினால் குழப்பம் இன்னும் அதிகமாகலாம். அதனால் 'ஒரு பழம்' 'ஒரு செடி', 'ஒரு மரம்' என்று மொழிபெயர்ப்பில் ஆங்காங்கு கூறி, அவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்கள் அனைத்தையும் 'விளக்கக் குறிப்புகளில்' தந்திருக்கிறேன். தவிர, ஆம்பல், குவளை, அரசு, சிந்தூரம், சூரை, பேரி போன்ற தாவரங்களின் பெயர்களையும் குயில், அன்னம், கீரி போன்ற பிராணிகளின் பெயர்களையும் வாசகர்கள் ஆங்காங்கு காணலாம். ஆனால் நமது நாடுகளில் வளரும் அசல் ஆம்பல் மலரோ அரச மரமோ அல்லது அங்கே வசிக்கும் அதே குயிலோ கீரியோ இங்கேயும் இருக்கிறது என்று கற்பனை செய்ய வேண்டாம். வருடத்தில் ஆறு மாதங்கள் உறைபனியால் முடப்பட்டிருக்கும் இந்நாட்டில் அந்தத் தாவரங்கள் அப்படியே வளர்வதும் சாத்தியமில்லை; அந்த பிராணிகள் வசிப்பதும் சாத்தியமில்லை. இந்த நாட்டின் தட்பவெப்ப நிலையில் வளரக் கூடிய அதே இனத்தைச் சார்ந்த அதே குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரம் அல்லது பிராணி என்று விளங்கிக் கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்களையும் தந்திருக்கிறேன். 'கலேவலா'வின் பின்னிஷ் நூலில் உள்ள சில பின்னஷ் சொற்கள் தற்கால வழக்கில் இல்லை என்பதையும் அவை தற்கால அகராதிகளில் கூட இடம் பெறவில்லை என்பதையும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதனால் ஒரே சொல்லை மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இப்படியான சிலவற்றையும் விளக்கக் குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சில ஒற்றுமைகள்

நாடு, மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றால் மக்கள் வேறுபட்டு இருந்தாலும், உலகெல்லாம் வாழும் மனித இனத்திடையே மனத்தளவில் சிந்தனையில் நம்பிக்கைகளில் ஓர் ஒற்றுமை இருப்பதை இக்காவியத்தைப் படித்து அறிந்து கொள்ளலாம். மனத்தின் அடியாழத்தில் இருக்கக்கூடிய ஒருமைப்பாடு மனிதக் குலத்துக்குப் பொதுவானது. கனவு, சகுனம், குறி பார்த்தல் போன்றவை நமது புராணங்களிலும் இலக்கியங்களிலும் வருகின்றன. ஒரு காலத்தில் இவையெல்லாம் எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவரிடமும் இருந்தன என்பதற்கு இது ஒரு சான்று. இந்தக் 'கலேவலா' என்னும் காவியத்தில் வரும் சில சம்பவங்கள் இதோ:

லெம்மின்கைனன் என்னும் அஹ்தி வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அவனுடைய மனைவி குயிலி ஒரு கனவு கண்டு அவனது பயணத்தைத் தடுக்கிறாள். அவள் கனவு கண்டு பயந்தது போலவே அவனுக்கு மரணம் வருகிறது. இந்தக் கட்டத்தில் குயிலியின் கூற்று 'வீரபாண்டிய கட்டப்பொம்மனி'ல் வரும் "போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொற்பனம் நானும் கண்டேன்" என்ற அடிகளை நினைவூட்டுகிறது:

"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:

உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது." - பாடல் 12.

தடுத்தது அவனுடைய மனைவி குயிலி மட்டுமல்ல; தாயும் தடுத்தாள். அந்நேரம் தலை சீவிக் கொண்டிருந்த லெம்மின்கைனன், அந்தச் சீப்பைச் சுவரில் எறிந்துவிட்டு, "எனக்கு ஏதாவது கெடுதி நேர்ந்தால் இந்த சீப்பிலிருந்து இரத்தம் வடியும்" என்றான். அப்படியே வடநாட்டில் அவன் இறந்தபோது இங்கே சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. அதைக் கண்ட தாய் பதறிக் கொண்டு புறப்பட்டுப் போனாள்.

அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்கள் தெரிந்த ஒரு பூதம். தனது வயிற்றில் இருக்கும் வைனாமொயினனை ஒரு ஆவி என்று எண்ணி அதை வெளியேற்ற மந்திரம் செபிக்கிறான். அது ஒரு நீண்ட செபம். இடையே அந்த ஆவி தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்ததற்கு ஓர் அடையாளம் காட்டும்படி இப்படிக் கேட்கிறான்:

அங்குவந் ததற்கோர் அடையா ளம்மிடு
சார்ந்த(தற் கி)ரகசியச் சைகையைக் காட்டு
அடையா ளம்மிடு அதிர்இடி முழக்கமாய்
மின்னலாய் மின்னி வெளியிடு சைகையை
தோட்டக் கதவைத் தொட்டுவீழ்த் துதைத்து
சாளரக் கதவைத் தான்தகர்த் தெறிந்திடு! - பாடல் 17.

தமிழ் மக்களிடையே இருந்த எத்தனையோ வைத்தியம், சோதிடம், வர்மம், மாந்திரீகம் போன்ற அரிய கலைகளில் சில அழிந்துவிட்டன; அல்லது அவை தமது முழுமையை இழந்து குறுகிவிட்டன என்றும் சொல்லலாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாணவன் தன்னை மிஞ்சிவிடக் கூடாதே என்ற குறுகிய நோக்கில் குரு முழுக் கலையையும் மாணவனுக்குக் கற்பிப்பதில்லை. தன்னை இனம்காட்ட ஏதாவது ஒன்று தனக்கு மட்டும்தான் தெரிந்திருக்க வேண்டும் என்ற சுயநலத்தில் எதையாவது மறைத்து விடுவார்; அந்த மாணவன் தான் பெற்ற மகனாக இருந்தாலும் இந்தச் சுயநலத்துக்கு விதிவிலக்கில்லை. இப்படியே ஆளுக்கொன்றாய் மறைக்கப் போய் அடியோடு அழிந்ததுமுண்டு. சிலர் தமது வயோதிப காலத்தில் சில ஏட்டுச் சுவடிகளை ஆற்றில் விட்டதாகவும் நெருப்பில் எரித்ததாகவும் அறிந்திருக்கிறோம். இக்காவியத்தில் வைனாமொயினன் வாய்மொழியாக வரும் இந்த அடிகளைப் பாருங்கள்:

"... மந்திரச் சொற்கள் மறைத்தல்ஆ காது
பகர்மந் திரமொழி பதுக்குதல் ஆகா(து)
நிலத்துக் கடியிலே புதைத்தலும் ஆகா(து)
மந்திரவாதிகள் மறைந்துபோ னாலும். - பாடல் 17.

இராவணன் யாழ் மீட்டிச் சிவனை மகிழ வைத்தது தொடக்கம் இசை இயற்கையையே நெகிழ வைத்ததுவரை இசையின் சக்தியை நாம் அறிவோம். இந்தக் காவியத்திலும் வைனாமொயினன் 'கந்தலே' என்னும் யாழை மீட்டி இசையின்பம் அளிப்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் காண்கிறோம். ஆனால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடும்போது நிகழ்ந்தவை வருமாறு:

பாடலைக் கேட்கப் பகலவன் நின்றனன்
நின்றே தங்க நிலவும் கேட்டது
அலைகள்நீர்ப் பரப்பில் அசையா நின்றன
அவ்விதம் கரையிலும் அலைகள் நின்றன
அருவிகள் ஓடா(து) அமைந்தே நின்றன
நிமிர்நுரை உறுத்தியா நீர்வீழ்ச்(சி) நின்றது
வுவோக்சிநீர் வீழ்ச்சிப் பாய்ச்சலும் நின்றது
அவ்விதம் யோர்தான் ஆறதும் நின்றது. -பாடல் 17.

வைனாமொயினன் இரண்டாவது தடவை கந்தலே என்னும் யாழை மீட்டியபோது நடந்தவை வருமாறு:

மீட்டினன் வைனா மொயினன் விரலால்
கந்தலே நரம்புகள் கனிவா யொலித்தன
பன்மலை முழுங்கின பாறைகள் மோதின
உயர்குன் றங்கள் ஒருங்கசைந் தாடின
கற்பா(றை) வீழ்ந்து கனதிரைத் தெறித்தன
கூழாங் கற்கள் குளிர்புனல் நகர்ந்தன
தேவ தாருகள் திளைத்தன மகிழ்ச்சியில்
கவின்புற் றரைமரக் கட்டைகள் துள்ளின.
கலேவாப் பெண்கள் கவின்மைத் துனிமார்
சித்திரத் தையலின் மத்தியி லிருந்தனர்
நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர்
அருவியைப் போலவே அனைவரு மோடினர்
நகைத்த வாயிள நங்கைய ரோடினர்
மகிழ்ந்த மனத்துடன் மனைவியர் கூடினர்
யாழினை மீட்பதை நலமாய்க் கேட்கவே
இசையின் பத்தை இனிதே நுகர.
மருங்கினில் நின்ற மனிதர்கள் அனைவரின்
கரங்களி லிருந்தன கவிழ்த்தவர் தொப்பிகள்;
பக்கம் முதிய பாவையர் யாவரும்
கன்னம் தாங்கிக் கைகளில் நின்றனர்
நிலத்தூன்(றி) முழங்கால் நின்றனர் மைந்தர்
கந்தலே இசையினைக் கவினுறக் கேட்க
இசையின் பத்தை இனிதே நுகர - பாடல் 44.

பாடல் 9ல் வைனாமொயினனுக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருகுகிறது. இப்பாடலிலும் பெரும்பகுதி மந்திரம் சொல்வதாகவே அமைந்து விட்டது. இரத்தப் பெருக்கை நிறுத்த மந்திரத்தால் ஆணையிடும் சில அடிகள்:

இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல்!
மிகுசோரி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென!
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீழ்ச்சி யில்உறு நெடுங்கல் எனநில்!

வைனாமொயினன் தான் மணம் செய்வதற்கு வட நாட்டு மங்கையைக் கேட்பதற்காக ஒரு படகில் புறப்பட்டுச் செல்கிறான். இதையறிந்த இல்மரினன் தனும் ஒரு சறுக்கு வண்டியில் விரைகிறான். ஒரே பெண்ணுக்குப் போட்டியிட்ட இரு மாப்பிள்ளைகளும் வழியில் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். இருவரது மனநிலையும் எப்படி இருந்திருக்கும்? இதோ இது வைனாமொயினனின் கூற்று:

"நட்புடன் படிக்கை நான்ஒன் றமைப்பேன்
பெண்பல வந்தமாய் பெயர்த்தெழல் இல்லை
அவள்நசைக் கெதிர்மணம் ஆவதும் இல்லை,
அவனுக் கேபெண் அளித்திடல் வேண்டும்
அவனுக் கேஅவள் எவனை விரும்பிலும்,
வெறுப்பி ல்லாமல் மிகநீள் காலம்
பல்லாண் டகவை பகையில் லாமல்." - பாடல் 18.

தூரத்தில் மக்கள் கூட்டமாக வருவதை வடநிலத் தலைவி காண்கிறாள். அவள் தனது அடிமைப் பெண்ணுக்குச் சொல்கிறாள்: "பேரிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு. அதிலே இரத்தம் ஊற்றெடுத்தால் எம்மைத் தேடி ஒரு போர் வருகிறது என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றெடுத்தால், அது போரல்ல; நாங்கள் அமைதியாய் வாழலாம்." ஆனால் இரத்தமோ தண்ணீரோ ஊற்றெடுக்கவில்லை; தேன் சுரந்தது. அதற்கு ஒரு முதியவள் பலன் சொல்கிறாள்: "மணப்பெண்ணைக் கேட்டு மாப்பிள்ளையும் குழுவினரும் வருகிறார்கள்" என்று. (பாடல் 18)

இரு மாப்பிள்ளைகளும் போட்டி போட்டுக் கொண்டு வருவதை அறிந்த வடநிலத் தலைவி, "முதிய வைனாமொயினன் நிறைந்த செல்வத்துடன் படகில் வந்து கொண்டிருக்கிறான். நீ அவனையே தேர்ந்து மணந்து கொள்!" என்று மகளுக்கு ஆலோசனை கூறுகிறாள். அதற்கு மகளின் மறுமொழி இது:

"எனைச்சுமந் தவளே,ஓ,என் அம்மா!
எனைவளர்த் தவளே,ஓ,என் அன்னாய்!
வருசெல் வந்தனை மணப்பதற் கில்லை
உயர்மா னிடஅறி வொருபொரு ளல்ல
இனிநான் மணப்பது எழில்நுத லுடையோன்
அங்கம் முழுவதும் அழகு படைத்தோன்;
இதுநாள் வரையில் ஏந்திழை யாரையும்
வியன்பொரு ளுக்காய் விற்றதே இல்லை
மங்கையைத் தானமாய் வழங்குதல் நல்லது ... ..." ஖ பாடல் 18.

சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் கல்கி அல்லது ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் படித்த ஒரு தமிழ் நாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறது. இது ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம் பெற்றது. அந்த நாட்டுப் பாடலில் சில அடிகள் இவை தான் என்று நினைக்கிறேன்: "ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே; நல்ல பாம்பு வேடம் கொண்டு நடுச்சாமம் வந்தாயானால் ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்; ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் செம்பருந்து வேடம் கொண்டு வெந்தூக்காய்த் தூக்கிடுவேன் ... ..." 'கலேவலா' காவியத்தில் வரும் இந்த அடிகள் எப்படி?

"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலோச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிபின் தொடர்வேன்." - பாடல் 38

பின்னிஷ் மொழியில் vilja 'வில்யா' என்ற சொல்லுக்குத் தானியம் என்று பொருள். இந்தச் சொல் இதே பொருளில் இன்றும் வழக்கில் இருக்கிறது. ஆனால் 'கலேவலா' காவியத்தில் இச்சொல் பல இடங்களில் 'செல்வம்' என்ற பொதுச் பொருளில்தான் வருகிறது. ஆங்காங்கு இந்தச் செல்வம் என்ன என்று பார்த்தால் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் அது குறிக்கும்: தானியம், கால்நடை, வேட்டையின் இலக்கு. வாழ்க்கைக்கு முக்கியமான தானியம் என்னும் 'வில்யா' மனிதனின் செல்வமாயிற்று. பின்னர் வாழ்க்கைக்கு முக்கியமான எல்லாம் [உ.ம். கால்நடை] செல்வம் vilja என்று கருதப்பட்டது.

தமிழரும் பண்டைக் காலத்தில் கால்நடையைச் செல்வமாகவே கருதினர். மாடு என்றால் செல்வம் என்ற ஒரு பொருளும் உண்டு. அந்தக் காலத்திலேயே செல்வப் பொருளாகக் கால்நடைகள் அமைந்த காரணத்தினாலேயே அது சமுதாயத்திலே போருக்குக் காலாயமைந்தது. பசுவைக் கவருவோரும், கவருவோரைத் தடுக்க முனைபவரும் மூர்க்கமான போரில் ஈடுபட்டனர் என்று சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. இக்காவியத்திலும் வடநிலத் தலைவிக்கும் கலேவலா இனத்தவருக்கும் பகை ஏற்பட்ட கட்டத்தில் கலேவலாப் பகுதியின் பயிர்களையும் கால்நடைகளையும் அழிப்பேன் என்று வடநிலத் தலைவி கூறி அவ்விதமே செய்யவும் முயல்கிறாள். அவள் கூற்று வருமாறு:

"கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்புவேன்
பெரியபற் பிராணியை நறுந்தேவ தாருவில்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கால்நடை யாவையும் கவிழ்த்தே வீழ்த்திட
பசுவினம் முழுதையும் பரப்பிடச் சிதறி;
அனைத்துமக் களையும் அழிப்பேன் நோயினால்
உன்றன் இனத்தை ஒன்றிலா தொழிப்பேன்,
என்றுமே இந்த எழில்நில வுளவரை
அவர்களைப் பற்றி அவனியில் பேச்செழா(து)." - பாடல் 43.

'சம்போ'வை இழந்ததால் ஆத்திரம் கொண்ட வடநிலத் தலைவி கலேவலா மக்களுக்குப் பலவிதமான தொல்லைகளைக் கொடுக்கிறாள். முதலில் வழக்கத்தில் இல்லாத கொடிய நோய்களை அனுப்புகிறாள். அடுத்து ஒரு கரடியை ஏவி விடுகிறாள். முன்றாவதாகச் சூரிய சந்திரர்களைத் திருடி ஒரு மலையில் ஒளித்து விடுகிறாள். அதனால் இரவு வந்தது; இடைவிடா திருந்தது. இருள் நிறைந்தது; இரவதே நீண்டது. கலேவலாப் பகுதியில் கடுமிருளானது. சூரிய சந்திரர்கள் எங்கே மறைந்தனர் என்றே தெரியாத நிலையில், வைனாமொயினன் திருவுளச் சீட்டு முலம் உண்மையை அறிய முற்படுகிறான். பூர்ச்ச மரத்தில் துண்டுகள் சீவி, அவற்றை ஒழுங்காக அடுக்கித் திருப்பி, இறைவனைப் பிரார்த்தித்து உண்மையை அறிகிறான். இது வைனாமொயினன் கூற்று:

"ஆண்டவ ரிடமொரு அனுமதி கேட்கிறேன்
ஆம்,சரி யாம்பதில் அதுவொன் றவசியம்:
இறைவனின் சீட்டே இயம்புவாய் உண்மை
தேவனின் திருவுளச் சீட்டே யுரைப்பாய்
செங்கதிர் எமைவிட் டெங்கே சென்றது
எங்கே மறைந்தது எமைவிட் டேமதி?
என்றுமே வாழ்வில் இல்லையே அவைகள்
இல்லை அவற்றைவான் என்றும் காணுதல்.

உள்ளதை உள்ளவா றுரைப்பாய் சீட்டே!
மனிதனின் விருப்புபோல் மற்றுநீ உரையேல்
உண்மைச் செய்தியை உடனிங் கருள்வாய்
விதித்தது எதுவோ விளம்புவாய் அதனை!
திருவுளச் சீட்டுச் செப்பினால் பொய்யுரை
சீட்டின் மகிமைச் சிறப்பதால் குறையும்
திருவுளச் சீட்டேத் தீயிடை வீசுவர்
மனிதரின் ராசிகள் மற்றெரி படலாம்." -பாடல் 49

இக்காவியத்தில் கடவுள் நம்பிக்கை வெளிப்படையாகவே தெரிகிறது. காடு, கடல், சேற்று நிலம் போன்றவற்றின் சக்திகள் அல்லது அதிபதிகள் சிறு தெய்வங்களாவார். உதாரணமாகக் காட்டின் அதிபதி தப்பியோ; அவரது மனைவி மியெலிக்கி; மகன் நுயீரிக்கி; பெண்கள் தெல்லர்வோவும் தூலிக்கியும். காட்டில் ஒரு சம்பவம் நிகழும் போது இவர்களை அழைத்து முறையிட்டு உதவி கோருவதைக் காணலாம். இப்படியான சிறு தெய்வங்களுக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார். இவரை முன்னாளில் 'உக்கோ' Ukko என்று பின்னிஷ் மொழியில் அழைத்தார்கள். 'உக்கோ' என்றால் கிழவன் என்றும் ukko/nen என்றால் முழக்கம் என்றும் பொருள். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் Old man என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். கடவுளைக் "கிழவா!" என்று விளிக்க எனது மனம் ஒப்பவில்லை. அத்துடன் பெயரில்லாமல் 'முதியவன்' என்று அழைக்கப்பட்ட சில பாத்திரங்களும் காவியத்தில் இடையிடையே வருகின்றன. எனவே 'முது மனிதன்' என்றும், மனுக் குலத்தின் முதல்வன் என்ற பொருளில் 'மனு முதல்வன்' என்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். முது மனிதன், உயர்மா தெய்வம், காற்றுகளையும் இடி முழக்கங்களையும் ஆள்பவர், நீலக் காலுறையும் குதி உயர்ந்த காலணிகளும் அணிந்து முகில்களின் மேல் நடப்பவர் என்றெல்லாம் கடவுள் வர்ணிக்கப்படுகிறார். வெவ்வேறு இடங்களில் வரும் சில அடிகளைச் சேர்த்துக் கீழே தருகிறேன்:

"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
மனுமா முதல்வனே மாபெரும் தேவே!
வானகம் வதியும் மாமுது தந்தையே
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
முழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே
வாயுவின் வழியாய் வாக்குரைப்பவனே!
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்
நிலைபெறும் சுவர்க்கமாள் நேசத் தந்தை

வருவாய் அழைக்கும் தருணத் திங்கே
கூவி உழைக்கையில் குறைநீக்க வருக
அனல்உமிழ் அலகுறும் அரியவா ளுடன்வா!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . ."

நாம் பிரார்த்தனை செய்யும்போது கடவுளிடம் பொதுவாகச் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்பது வழக்கம். வைனாமொயினனும் ஓரிடத்தில் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்கிறான்; அடுத்த அடியில் "மேன்மையான மரணம்" வேண்டும் என்றும் கேட்கிறான். இதோ அந்த அடிகள்:

தந்தருள் கர்த்தனே, தந்தருள் இறைவா!
தந்தருள் பாக்கியம் தான்நிறை வாழ்வை
என்றும் சிறப்பாய் இனிதுவாழ் வரத்தை
தந்தருள் மேன்மை தான்மிகு மரணம்
இப்பின் லாந்து இனிமையாம் நாட்டில்
கவின்நிறைந் திடுமிக் கர்யலாப் பகுதியில்.-பாடல் 43.

இந்தக் காவியம் முழுவதிலும் எனக்குப் பிடித்த பகுதி எதுவென்று கேட்டால், இல்மரினனின் திருமணத்தின் பின்னர், மணமகனும் மணமகளும் இல்மரினனின் வீட்டுக்குப் புறப்பட்ட சமயம், அவர்களுக்குத் தனித்தனியே கூறப்பட்ட அறிவுரை தான். அதில் சில அடிகளை மட்டும் இங்கு கூறுவது சாத்தியமில்லை; முழுவதையுமே வாசகர்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு, முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் யாவும் சேர்ந்து சுமார் ஆயிரம் பக்கங்கள் வந்தன. இதை ஓர் உயர்தர பதிப்பாகவும் வெளியிட விரும்பினோம். ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூல் சிறந்த முறையிலும் பதிப்பிக்கப்பட்டால், ஒரு சராசரி வாசகன் அதை வாங்க முடியாத விலையில் விற்க நேரிடும். அதனால் கொஞ்சம் பெரிய அளவு காகிதத்தில், ஒரு பக்கத்தில் இரண்டு பத்திகளில் (columns) சிறிய எழுத்துகளில் பாடல்களை வெளியிட்டுப் பக்கங்களை 500 அளவில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இந்நூல் வெளியீட்டுக்கு ஒரு மானியம் கோரி பின்னிஷ் இலக்கிய மன்றத்தையும் அவர்கள் மூலமாகக் கல்வி அமைச்சையும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகம் அணுகியது. நூறு தமிழர்கள் கூட வாழாத இந்த நாட்டில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் நூலை வெளியிட அவர்கள் உற்சாகத்துடன் உதவிக்கு வந்தார்கள்.

இவ்வளவுக்கும் பின்னணியில் நின்று எல்லாவற்றையும் இயக்கி நிறைவு படுத்தியவர் பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr. Asko Parpola) அவர்கள். இவரே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் 'ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்கள'த்தின் இந்தியவியல் சம்பந்தப்பட்ட கல்விக்குப் பொறுப்பானவர். இம்மொழிபெயர்ப்புக்கு மனமுவந்து ஓர் அறிமுக உரை எழுதியிருக்கிறார். எனது இனிய நண்பர்.

இந்தக் காவியத்தின் வேறு மொழிபெயர்ப்புகளில் சில உரைநடையிலும் சில கவிதை நடையிலும் வெளிவந்திருக்கின்றன. தமிழிலும் உரைநடையாக வெளியிடுவது என்ற திட்டத்துடன்தான் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னிஷ் நூல் கவிதையடிகளாக இருந்ததால், அந்தச் சிறிய அடிகளைத் தமிழில் ஆக்கியபோது, தமிழ் மொழிபெயர்ப்பும் இயல்பாகவே கவிதைநடையில் அமைந்துவிட்டது. ஆனால் பல இனப் பாக்களும் கலந்து இருந்தன.

கவிஞர் திமிலைத்துமிலன் இந்த மொழிபெயர்ப்பு முழுவதையும் படித்துப் பார்த்து மரபுக் கவிதைகளாக அமைக்கச் செய்த உதவி மகத்தானது. யாப்பமைதியோடு இருந்த மொழிபெயர்ப்பு அடிகள் தவிர, ஏனைய ஏராளமான அடிகளை யாப்புக்கேற்பத் திருத்திச் சீர்களுள் சரிவர அமைத்துத் தந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்லாந்துக்கு வந்திருந்த சமயம் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பாடல்களைப் பார்வையிட்டுத் தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் அன்புடன் கூறினார்.

அலுவகத்துக்குப் போய் மணிக்கூட்டைப் பார்த்துக்கொண்டு எட்டு மணி நேர வேலை செய்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுதும் முடிந்திராது. இதன் பெரும் பகுதியை வீட்டில் இருந்தே செய்து முடித்தேன். சனி, ஞாயிறு, விடுமுறை என்ற ஓய்வில்லாமல் காலை நாலு மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை உழைத்த நாட்கள் எத்தனையோ. அப்பொழுதெல்லாம் தேவையான ஒத்துழைப்பைத் தந்து என்னை ஊக்கப்படுத்திய என் மனைவியையும் மக்களையும் இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

மேற்கூறிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

காணிக்கை

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த நாட்டுக்கு வந்தபோது சந்தித்த முதல் மனிதர் இன்னமும் எனது நெஞ்சில் முதலாம் இடத்திலேயே இருக்கிறார். இவர் பல நாடுகளில் பல இன மக்களோடு சேர்ந்து வாழ்ந்து, அன்புக்கும் பண்புக்கும் அர்த்தம் சொல்லிவிட்டு இங்கே வந்தவர். மனித நேயத்தின் இலக்கணத்தைச் செயலில் காட்டுபவர். எனது உள்ளத்தைத் துடைத்துத் தூய்மையாக்கி அதிலே நட்புக்கு நயம் எழுதி வைத்தவர். 'இறைவனே உயர்ந்தவர் ' என்பது கொள்கை. 'எல்லோரும் நல்லவரே' என்பது கோட்பாடு. பிறப்பால் அமெரிக்கர். வயது எழுபது. இவர் பெயர் டாக்டர் லொயிட் சுவான்ஸ (Dr. Lloyd Swantz). இவருக்கு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தரங்க சுத்தியுடன் அர்ப்பணம் செய்கிறேன்.

முடிவாக ...

மொழி, கலை, கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட ஒரு காவியத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பதே சிரமம். அதையும் மரபு கவிதையில் சொல்வது மிக மிகச் சிரமம். பின்னிஷ் மொழியில் உள்ள ஒரு வரியை தமிழில் ஒரு சொல்லில் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தது; ஒரு சொல்லை விளக்கத் தமிழில் நான்கு வரிகள் தேவை என்ற நிலையும் வந்தது. 'விளக்கக் குறிப்புகள்' என்ற பின்னிணைப்பு இவ்வளவு நீளமாக அமைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மொழிபெயர்ப்பது, கணனிக்கு ஊட்டுவது, கணனியின் அச்சுப் பிரதிகளில் சரிபிழை பார்ப்பது, திருத்தங்களை செய்வது போன்ற சகல வேலைகளையும் நான் ஒருவனே செய்ய வேண்டியிருந்ததால் ஆங்காங்கு சில பிழைகள் இருக்கலாம். குற்றம் குறைகளை மன்னியுங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்; திருத்தங்களை எழுதுங்கள்.

அன்புடன்,
ஆர். சிவலிங்கம்
(உதயணன்)

Laakavuorentie 4 C 41,
00970 Helsinki,
Finland.
10.09.1994


சொற்றொகுதி

[பெயர்கள் முதலில் தமிழிலும் அடுத்து பின்னிஷ் மொழியிலும் (அவசியமான இடங்களில் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும்) இடம் பெற்றுள்ளன].

அசுரமலை:

இம்மலை தீய ஆவிகள் உறைவதாகக் கருதப்படும் ஒரு மலை. Horna என்னும் பின்னிஷ் சொல்லுக்கு தீய ஆவி, அசுரன், பூதம் என்று பொருள். இம்மலை கல்லவெசி ஏரிக்கு தென்கிழக்கில், பின்லாந்தின் பெரிய தீவான சொய்ஸலோவில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

அந்தரோவிபுனன்:

Antero Vipunen: மந்திரம் தெரிந்த ஒரு பெளராணிக பூதம்.

அமைதிநீர் மனிதன்:

அமைதி நீரினன், நன்னீர் மனிதன் ஆகியன வைனாமொயினனின் சிறப்புப்பெயர்கள்.

அய்யோ:

A*ijo*: இக்கு - துர்சோவின் தந்தை; பார்க்க 'இக்கு - துர்சோ'.

அலுவே:

Alue: ஒரு ஆதி காலத்து நதியின் பெயர்.

அன்னிக்கி:

Annikki: கொல்லன் இல்மரினனின் சகோதரி. 'நற்பெயருடையாள்' என்பது அவளுடைய சிறப்புப் பெயர். இரவிலும் அதிகாலையிலும் வீட்டுக் கடமைகளைச் செய்வதால் இரவின் நங்கை, வைகறை வனிதை என அழைக்கப் படுபவள்.

அஹ்தி:

Ahti: லெம்மின்கைனனின் இன்னொரு பெயர்.

அஹ்தொலா:

Ahtola: அஹ்தோவின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்.

அஹ்தோ:

Ahto: அலைகளின் அதிபதி; கடலுக்கும் நீருக்கும் அதிபதி; அஹ்தோவின் மனைவியின் பெயர் வெல்லமோ.

அஹ்தோலைனன்:

Ahtolainen: அஹ்தொலாவில் வசிப்பவர்.

ஆழத்துலகம்:

துவோனலா என்னும் மரண உலகத்தின் இன்னொரு பெயர். பாதாள உலகம்.

இக்கு - துர்சோ:

Iku-Turso: கடலரக்கன், கடற்பூதம், கடலின் மாபெரும் சக்தி (sea monster)

இங்கிரியா:

Inkeri: பின்லாந்தின் குடாக் கடலுக்கு தென்கிழக்கில் உள்ள ஓர் இடம். ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. சென்ற், பீற்றர்ஸ் பேர்க் ( St. Petersberg ) [முந்திய லெனின் கிராட்] மாநிலத்தில் இருக்கிறது.

இடுகாட்டு ஆவி:

Kalma: மரணம், மரண சக்தி, மரணத்தின் ஆவி என்னும் பொருளில் இடுகாடு உருவகப் படுத்தப்பட்டது.

இமாத்ரா:

Imatra: வுவோக்ஸி நதியில் வீழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி; இப்பொழுது இந்த இடம் இமாத்ரா என்ற பெயரில் ஒரு நகரமாக மாறியிருக்கிறது. இங்கே தான் பின்லாந்தின் மிகப் பெரிய காகித ஆலையும் நீராற்றல் மின்சக்தி நிலையமும் அமைந்துள்ளன.

இல்போ[வின்] மகள்:

Ilpotar: லொவ்ஹியின் இன்னொரு பெயர்.

இல்மத்தார்:

Ilmatar: (air spirit) வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்; வைனாமொயினனின் கன்னித்தாய்.

இல்மரி, இல்மரினன்:

Ilmari, Ilmarinen: இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன்.
அழிவில்லாத ஆதிகாலத்து உலோக வேலைக் கலைஞன். இவனைக் "கொல்லன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நமது வழக்கில் "கொல்லன்" என்றால் இரும்பு வேலைத் தொழிலாளியையே குறிக்கும். அதே நேரத்தில் "பொற்கொல்லன்" என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. பின்னிஷ் மொழியில் seppo என்றால் உலோகத் தொழிலாளி என்று பொருள். எந்த வகையான உலோகத்திலும் வல்லமையுடைய கலைஞன் என்றே பொருள். இதை ஆங்கிலத்தில் smith என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

வடநாட்டில் சம்போ என்னும் சாதனத்தைச் செய்த திறமை மிக்க தேவ கொல்லன். வானத்தைச் செய்தவன், விண்ணுலகின் மூடியைச் செய்தவன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவன். பின்னிஷ் மொழியில் Ilma என்றால் காற்று, ஆகாயம், வானம் என்று பொருள். இச்சொல்லில் இருந்து இப்பெயர் வந்தது. இப்பெயர் இன்னமும் பின்னிஷ் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இல்மரினனைப்பற்றிப் படிக்கும் பொழுது இந்திய மரபுப்படி புராணங்களில் வரும் தேவதச்சன் விசுவகருமாவும் அசுரதச்சன் மயனும் நினைவுக்கு வரலாம்.

இல்மரினனின் சகோதரி அன்னிக்கி.

வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைத் திருமணம் செய்தவன். அடுத்த மகளைக் கவர்ந்து சென்று கடல் பறவையாகச் சபித்தவன்.

இல்மரினனின் தலைவி:

Ilmarisen ema*nta*: இல்மரினனின் மனைவி; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹியின் மூத்த மகள்; விவாகத்துக்கு முன்னர் வடநில மங்கை என்றும் பின்னர் இல்மரினனின் தலைவி என்றும் அழைக்கப்பட்டவள்; பெயர் கூறப்படவில்லை.

இல்மா:

Ilma: (i) இல்மரினனின் தோட்டம், (ii) இல்மரினனின் வசிப்பிடம், (iii) இல்மரினன் என்ற பெயரின் சுருக்கம்.

ஈயநெஞ்சாள்:

Tinarinta: ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பெறுமதி குறைந்த நகைகளை அணியும் கன்னிப் பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள் என்னும் பொருளில் `ஈய நெஞ்சாள்`, `ஈயத்துநெஞ்சாள்`, `தகர நெஞ்சாள்`, `ஈய மார்பினள்`, `தகர மார்பினள்` என அழைத்தனர். பொதுவாக விவாகமாகாத ஒரு கன்னிப் பெண்ணையே இவ்விதம் அழைத்தனர் என்ற கருத்தும் உண்டு.

உக்கோ:

Ukko: முதியவன் என்று பொருள். முகில்களின் அதிகாரம் கொண்ட சுவர்க்கத்தை ஆளும் கடவுள் என்ற கருத்தில் "உக்கோ" என்று ஆதிகாலத்தில் அழைத்தனர்.

உந்தமோ:

Untamo: 5ம் பாடலில் கனவின் சக்தி, கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்ற பொருளிலும் 26ம் பாடலில் ஓநாய்களை உடையவன் என்னும் பொருளிலும் கூறப்பட்டது. ஆனால் கலர்வோ என்பவனின் சகோதரனாக 31,34, 36ம் பாடல்களில் கூறப்படுகிறது.

உந்தாமொயினன்:

Untamoinen: பார்க்க `உந்தமோ`.

உந்தோ:

Unto: `உந்தமோ`வின் சுருக்கம்; பார்க்க `உந்தமோ`.

உப்பு - நீரிணை:

Suolasalmi: ( the salt sound, the Sound); ஒரு உப்புக் கடற்கால்வாய், கடலுட் கால்வாய், தொடுவாய், நீரோட்டம். 46ம் பாடலில் கூறப்பட்ட இந்த நீரிணை தென் சுவீடனுக்கும் டென்னிஷ் தீவான சீலந்துக்கும் Sjaelland (Zealand) நடுவே அமைந்தது. இந்த நீரிணையின் இன்றைய பின்னிஷ் பெயர் Juutinrauma (`Jutland current`).

உறுத்தியா:

Rutja: நோர்வேயின் வடகோடியில் லாப்லாந்தில் உள்ள இடம்; இதன் தற்போதைய பின்னிஷ் பெயர் உறுய்யா Ruija.

உறைபனி மனிதன்:

Pakkanen: (Jack Frost); வடபுலத் தலைவி தனது பாதுகாப்புக்காக மந்திர சக்தியால் கொடிய உறைபனிக் குளிரை உண்டாக்கவல்ல ஒரு சக்தியை உருவாக்கி அதை லெம்மின்கைனன் மீது ஏவிவிடுகிறாள். இவன் உறைபனி மனிதன், உறைபனியோன், உறைபனி மைந்தன், பனிப் பையன் என்றும் அழைக்கப்படுகிறான். பின்னிஷ் மொழியில் புஹுரியின் மைந்தன்;
புஹுரி Puhuri என்பது கடுங் காற்றின் உருவகப் பெயர்.

எஸ்த்தோனியா:

Viro: (Estonia); முன்னர் சோவியத் யூனியனைச் சேர்ந்திருந்தது; இப்பொழுது ஒரு தனிநாடு.

ஐனிக்கி:

Ainikki: லெம்மின்கைனனின் சகோதரி.

ஐனோ:

Aino: யொவுகாஹைனனின் சகோதரி; வைனாமொயினனுக்கு மனைவியாக்க வாக்களிக்கப்பட்டவள்; கடைசியில் நீரில் மூழ்கி இறக்கிறாள். இதிலிருந்து நீரில் மூழ்கி இறப்பவர்கள் பின்னர் நீரின் ஆவியாக/சக்தியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஒஸ்மோ:

Osmo: ஒரு பெளராணிக இடம்; கலேவாவின் இன்னொரு பெயர்.

ஒஸ்மொலா:

கலேவலாவின் இன்னொரு பெயர்.

ஒஸ்மொயினன்:

Osmoinen: கலேவாவின் சந்ததியினன் என்ற பொருளில் வைனாமொயினனைக் குறிக்கும்.


கந்தலே:

kantale: ஒருவகை நரம்பிசைக் கருவி; ஆரம்பத்தில் ஐந்து நரம்புகளைக் கொண்டது. பல நூறு வருடங்களாகப் பின்லாந்து மக்களால் இசைக்கப்பட்டு வரும் ஒருவகை யாழ்.

கந்தலேதார்:

Kanteletar: யாழிசைக் கருவியின் தேவதை; கலேவலா நூலின் தொகுப்பாசிரியர் லொண்ரொத் "கந்தலேதார்" என்ற பெயரில் ஒரு இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

கர்யலா:

Karjala: பார்க்க `கரேலியா`.

கரேலியா:

Karelia: ரஷ்யா - பின்லாந்து எல்லையின் இரு புறமும் பரந்துள்ள பெரிய நிலப்பகுதி. இந்நூலின் பெரும்பாலான பாடல்கள் இங்குதான் சேகரிக்கப் பட்டன. இப்பகுதி கர்யலா Karjala என்றும் அழைக்கப்படும். Karja 'கர்யா' என்ற பின்னிஷ் சொல்லுக்குக் கால்நடை ( = ஆடுமாடுகள்) என்று பொருள். 'கர்யலா' என்பதை 'கால்நடை நாடு' 'கால்நடைப் பகுதி' என்று சொல்லலாம்.

கல்மா:

Kalma: இடுகாடு; மரணத்தின் உருவகப் பெயர்; இதன் வேறு பெயர்கள்: துவோனி, மனா.

கலர்வோ:

Kalervo: குல்லர்வோவின் தந்தை; உந்தமோவின் சகோதரன்.

கலர்வொயினன்:

Kalervoinen: குல்லர்வோவின் ஒரு சிறப்புப் பெயர்.

கலேவா:

Kaleva: இந்தக் காவியத்தின் நாயகர்களின் மூதாதையரின் பெயர்; ஆனால் இவர் ஒரு காவிய நாயகனாக இக்காவியத்தில் இடம்பெறவில்லை. இவர் வழி வந்தவரை கலேவா இனத்தவர் என்பர். இந்தக் கலேவா இனத்தவர் வாழ்ந்த இடம் கலேவலா என அழைக்கப்பட்டது. பாடல்களில் கலேவாவின் மைந்தர், கலேவாவின் மக்கள், கலேவாவின் பெண்கள் என வருவதைக் காணலாம்.

கலேவலா:

Kalevala: ஒரு மாகாணப் பெயர்; அதுவே இந்நூலின் பெயரும் ஆயிற்று. 'கலேவா' என்பது ஓர் இனத்தவரின் பெயர். இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களான வைனாமொயினன், இல்மரினன், லெம்மின்கைனன் ஆகியோரின் மூதாதையர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஓரிடமே/நாட்டின் ஒரு பகுதியே 'கலேவலா'.

-லா -la அல்லது -la* என்பது வதிவிடங்களைக் குறிக்கும் ஒரு விகுதி. 'தப்பியோ' Tapio என்பவன் காட்டு அரசன். 'தப்பியோ'வின் வசிப்பிடம் 'தப்பியோலா' Tapiola. 'துவோனி' Tuoni என்பவன் மரண உலகின் தலைவன். 'துவோனி'யின் வசிப்பிடம் 'துவோனலா' Tuonela.

கலேவைனன், கலேவலைனன்:

Kalevainen, Kalevalainen: கலேவாவின் வழித் தோன்றல்கள். பாடல் 4: 94ல் வைனாமொயினனைக் குறிக்கும்.

கலேவத்தார் அல்லது ஒஸ்மத்தார்:

Kalevatar/Osmotar: ஆதிகாலத்து "பீர்" என்னும் பானம் வடித்த கலேவாவின் பெண்கள்.

கனவுலகம்:

பின்னிஷ் மொழியில் 'உந்தமோ' Untamo நித்திரைக்கும் கனவுகளுக்கும் அதிபதி. 'உந்தமொலா' Untamola உந்தமோவின் உறைவிடம். பார்க்க 'உந்தமோ'.

கா

காத்ரா:

Kaatra, Kaatrakoski: ஒரு கற்பனை நீர்வீழ்ச்சியின் பெயர்.

கி

கிம்மோ:

Kimmo: (i) ஒரு பசுவின் பெயர் (ii) ஒரு பாறைக் கல்லின் பெயர்.

கு

குய்ப்பன:

Kuippana: காட்டு அரசன் தப்பியோவின் இன்னொரு பெயர்; பார்க்க 'தப்பியோ'.

குயிலி, குயில்லி, குயிலிக்கி:

Kylli, Kyllikki: லெம்மின்கைனன் கடத்திச் சென்று மணம்
முடித்த மங்கை; ஒரு தீவைச் சேர்ந்தவள்; தீவின் மலர் என அழைக்கப்பட்டவள்.

குல்லர்வோ:

Kullervo, Kullervoinen: கலர்வோவின் மகன். சிறு வயதில் தவறாக வளர்க்கப் பட்டதால் மன வளர்ச்சி இல்லாதவன் என்று கருதப் பட்டவன்.

கெ

கெமி:

Kemi, Kemijoki: வட பின்லாந்திலிருந்து பொத்னியாக் குடாக் கடலில் பாயும் ஓர் ஆறு. பின்னிஷ் மொழியில் joki என்றால் ஆறு. இங்கேயுள்ள ஒரு நகரமும் கெமி என்று அழைக்கப்படும்.

கெள

கெளப்பி:

Kauppi: லாப்லாந்தைச் சேர்ந்த பனிக் கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவன்.

சக்ஸா:

Saksa: 'சக்ஸா' என்ற பின்னிஷ் சொல்லின் பொதுவான பொருள் ஜேர்மனி (நாடு) என்பதாகும். வர்த்தகம், வெளிநாடு என்றும் இந்நூல் தொடர்பாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாதணிகள், உப்பு, சவர்க்காரம், பலகைகள் தொடர்பாகவும் இச்சொல் சில இடங்களில் வருகிறது. எனவே பாடல் 18:137ல் வர்த்தகத் தொடர்புடைய ஒரு நீர்ப்பகுதி என்று கருதப்படுகிறது. பாடல் 21:168ல் இச்சொல்லுக்கு வெளிநாட்டுப் பலகைகள் என்று பொருள் கொள்ளலாம்.

சம்போ:

Sampo: ஒரு மந்திரப் பொருள், மர்மப் பொருள். மாய சக்தி படைத்த சாதனம். செல்வச் செழிப்பின் சின்னம். இது மூன்று முகங்கள் அல்லது பக்கங்கள் கொண்ட மூன்று சக்தி படைத்த ஓர் ஆலை என்றும் கருதப்படுகிறது. இப்பக்கங்கள் முறையே தானியத்தையும் உப்பையும் காசையும் அளவில்லாமல் அரைத்துக் கொண்டு அல்லது செய்து கொண்டே இருக்கும். வடநாட்டுத் தலைவியின் மகளை மணம் செய்வதற்காகத் தேவ கொல்லன் இல்மரினனால் செய்யப்பட்டது. சம்போவைப் பற்றிச் சொல்லும் இடங்களில் அதன் பிரகாசமான அல்லது பல வர்ண அல்லது ஒளிப் புள்ளிகளுள்ள மூடியும் கூறப்படுகிறது. வடநிலத் தலைவி இதனை வடக்கில் ஒரு குகையில் நிறுவுகிறாள். அங்கே இது மூன்று வேர்கள் விட்டு நிற்கிறது. இதுபோல் மீண்டும் ஒன்றைச் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. சம்போவைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் வந்துள்ளன. ஆயினும் இதன் வடிவம் பற்றியும் இயல்பு பற்றியும் நூற்றுக் கணக்கான ஊகங்கள் சொல்லப்படுகின்றன.

சம்ஸா:

Sampsa: விவசாயத்துக்குரிய ஆவி, சக்தி; முழுப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen.

சரா:

Sara: வடநாட்டின் இன்னொரு பெயர்.

சரியொலா, ஸரியோலா:

Sariola: வடநாட்டின் இன்னொரு பெயர்.

சவுனா, செளனா:

sauna: நீராவிக் குளியல்; நீராவிக் குளியல் செய்யும் இடத்தையும் குறிக்கும். நீராவிக் குளியலுக்கென்று அந்த நாட்களில் ஒரு தனிக் குடிசையும் இந்த நாட்களில் வசிக்கும் வீட்டோ டு சேர்ந்த தனி அறையும் கட்டப்படுவது உண்டு. உள்ளே விறகுகளால் தீ மூட்டி அந்தத் தணலின் மேல் கற்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இந்த நாட்களில் மின் அடுப்புகளில் கற்களை அடுக்கிப் பயன்படுத்தினாலும் கிராமப் புறங்களில் இன்னமும் பழைய முறையையே விரும்பி அனுபவிக்கிறார்கள். இப்படி அடுக்கப்பட்ட கற்கள் கனன்று கொண்டிருக்கும். நீராவிக் குளியலைப் பெறுபவர் நீரை அள்ளி அக்கற்களில் எறியும் போது நீராவி எழுந்து அந்த அறையை நிறைப்பதோடு குளிப்பவரின் உடலிலும் படியும். நீராவியில் உள்ள வெப்பம் குறையும் போது மீண்டும் மீண்டும் நீரை எற்றுவார்கள். இடைக்கிடை இலைக் கட்டினால் விசிறி மெதுவாக உடலில் அடித்துக் கொள்வதும் வழக்கம். கடும் குளிர்ப் பிரதேசங்களான இந்நாடுகளில், இந்த நீராவிக் குளியல் அந்தக் காலத்தில் ஒரு மருத்துவ அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் சவுனாக் குடிசைகளையே சுகப் பிரசவங்களுக்காகப் பயன்படுத்தினார்கள். பாடல் 45ல் லொவியத்தார் என்னும் பெண்ணும் பாடல் 50ல் மர்யத்தாவும் பிரசவத்துக்குச் சவுனாவுக்குச் செல்வது கவனிக்கத்தக்கது.

சவோ:

Savo: பின்லாந்தின் கீழ் மத்திய பகுதியில் கரேலியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு மாவட்டம். இப்பொழுது குவோப்பியோ மாகாணத்தில் ஒரு பகுதி; பின்னிஷ் பெயர் Kuopio.

சுவோமி:

Suomi: (Finland); பின்லாந்தின் பின்னிஷ் (மொழிப்) பெயர்.

தப்பியோ:

Tapio: காட்டின் காவலன்; காட்டின் அரசன்; காட்டில் நடக்கும் ஆடல்களைத் தலைமை தாங்கி நடத்தும் வன தேவதை.

தப்பியோலா:

Tapiola: தப்பியோவின் வதிவிடம்.

தனிக்காக் கோட்டை:

Tanikkan linna: எஸ்த்தோனியாவின் தலைநகரமும் துறைமுகமுமான தல்லினாவைக் குறிக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் டென்மார்க்கைச் சேர்ந்த கடல் வீரர்கள் கண்டுபிடித்த இந்த நகரம் டென்மார்க்கின் கோட்டை என்று அழைக்கப்பட்டது. டென்மார்க்கின் கோட்டை என்பது பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கான் லின்னா' Tanskan linna எனப்படும். பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கா' Tanska என்றால் டென்மார்க் (என்னும் நாடு) (gen: Tanskan) என்றும் 'லின்னா' என்றால் கோட்டை என்றும் பொருள். இதுவே பிற்காலத்தில் மருவி தனிக்காவின் கோட்டை என்னும் பொருளுள்ள Tanikkan linna ஆயிற்று என்று கருதப்படுகிறது. அதுவே இப்போது தல்லினா எனவும் வழங்குகிறது. Tanskan linna >Tanikkan linna >Taninlinna >(Est.) Tallinn > (Finn.) Tallinna. எஸ்த்தோனியாவின் பின்னிஷ் பெயர் `விரோ` Viro.

தி

தியேரா:

Tiera: (snow - foot); லெம்மின்கைனனின் தோழன். பனிப்பாத மனிதன், வெண் பனிப்பாத மனிதன், உறைபனிப் பாதங்களை உடையவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவன். பனிமழை பொழிந்து பாதங்கள் உறைந்து போகும் அளவுக்குப் பூமியில் குவிந்து கிடந்தாலும் அதைத் தாங்கும் தன்மையும் வன்மையும் உடையவன் என்று பொதுவாகக் கருதப்படுபவன்.

து

துர்யா:

Tyrja*, Tyrja*n koski: வடக்கில் இருந்ததாகக் கற்பனையாகக் கூறப்படும் ஒரு நீர்வீழ்ச்சி. லாப்லாந்தின் இன்னொரு பெயர். வடக்கில் கொடிய மாந்திரீகரின் வசிப்பிடம்.

துர்யா மனிதர்:

லாப்லாந்து மக்கள்.

துர்யா மொழி:

லாப்லாந்தியரின் மொழி; லாப்லாந்தியரின் மந்திரச் சொற்கள் என்ற பொருளிலும் சில இடங்களில் காணலாம்.

துவோனலா:

Tuonela: ஒரு பெளராணிக இடம். மரண உலகம், இறப்புலகம் என்று பொருள். துவோனியின் வதிவிடம்.

துவோனி:

Tuoni: மறு உலகத்து அல்லது மரண உலகத்துத் தலைவன்.

துவோனியின் மகள்:

Tuonetar, Tuonen tytto*: மரண உலகத்துத் தலைவனின் மகள். வைனாமொயினன் ஆற்றைக் கடந்து மரண உலகம் செல்ல முயன்ற போது அவனைத் தடுத்து வாதாடுபவள்.

தூ

தூர நெஞ்சினன், தூர நாட்டினன்:

Kaukomieli, Kaukolainen: லெம்மின்கைனன் என்ற பாத்திரத்தின் சிறப்புப் பெயர்கள்.

தூரி:

Tuuri: ஒரு தேவதையின் பெயர். இது இடி முழக்கத்தின் அதிபதியான `தொர்` (Thor) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வேறோர் இடத்தில் கடவுளை இடி முழக்கங்களின் தலைவர் என்று வர்ணிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

தூலிக்கி:

Tuulikki: தப்பியோவின் மகள்; காற்றின் சக்தி, காற்றின் ஆவி என்று பொருள் உண்டு.

தெ

தெல்லர்வோ:

Tellervo: தப்பியோவின் மகள்.

நகத்து நீர்வீழ்ச்சி:

Kynsikoski: மரண உலகில் இருப்பதாகக் கற்பனை செய்யப்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி. இந்த பின்னிஷ் சொல்லை ஆங்கிலத்தில் claw rapid என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

நனைந்த தொப்பி, நனைந்த தொப்பியன்:

Ma*rka*hattu: (soppy-hat); ஈரமான தொப்பியை அணிந்திருப்பவன்; ஒரு குருட்டு இடையன் லெம்மின்கைனன் மரண ஆற்றில் இறப்பதற்குக் காரணமானவன்.

நு

நுயீரிக்கி:

Nyyrikki: தப்பியோவின் மகன்.

நெ

நெவாநதி:

Neva: முன்னர் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் பின்னர் 'பீட்ரோகிராட்' (Petrograd) என்றும் [ இடைக்காலத்தில் 'லெனின்கிராட்' ( Leningrad) என்றும்] இப்பொழுது மீண்டும் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் அழைக்கப்படும் பிரதேசத்தில் 'லடோ கா' என்னும் ஏரியிலிருந்து நாற்பது மைல் தொலைவில் பாயும் ஒரு நதி.

பனிப்பாத மனிதன்:

லெம்மின்கைனனின் தோழன். தியேரா என்பவனின் இன்னொரு பெயர். பார்க்க: 'தியேரா'.

பி

பிஸா மலை:

Pisanma*ki, Pisanvuori: நில்ஸியா (Nilsia*) என்னும் இடத்திலுள்ள மலை. அந்நாளைய வழக்கு மொழியில் பேய் மலை என்று பொருள்.

பு

புகார் மகள்:

பூமியில் பனிப்புகாரை உண்டாக்கக் கூடிய சக்தி, தேவதை; முகில் மகள் என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.

புதிய கோட்டை:

Uusi Linna: இந்த பின்னிஷ் சொல்லுக்கு புதிய கோட்டை என்பதே பொருள். ஆங்கிலத்தில் சிலர் Novgorod என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தச் சொல்லுக்கும் புதிய கோட்டை, புதிய நகரம் என்று தான் பொருள். ரஷ்ய மொழியில் 'Nov' என்றால் 'புதிய' என்றும் + 'gorod' என்றால் 'அடைக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட இடம்' என்றும் பொருள். இதுவே பின்னாளில் 'கோட்டை' என்றும் 'நகரம்' என்றும் மாறிற்று. இது ஆதியில் சுவீடன் நாட்டுக் கடலோடிகள் ரஷ்யாவில் குடியேறிய இடம்.

பெ

பெல்லர்வொயினன்:

Pellervoinen: சம்ஸாவின் இன்னொரு பெயர்; முழுப்பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen.

பொஹ்யொலா:

Pohjola: வடநாடு; கலேவலாவுக்கு வடக்கே இருந்த இருள் நிறைந்த நாடு; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹி என்பவளின் நாட்டையும் கோட்டையையும் இப்பெயரால் அழைப்பர்.

மர்யத்தா:

Marjatta: கன்னித்தாய்; கிறீஸ்துவ மதத்துக் கன்னி மேரியுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டது. மரியா என்ற பெயரே திரிந்து மர்யத்தா ஆகியது என்பர். ஆங்கிலத்தில் Mary என்பதை பின்னிஷ் மொழியில் Maria என்றே எழுதுவர். கன்னி மேரி என்பதை ஆங்கிலத்தில் Virgin Mary என்றும் பின்னிஷ் மொழியில் Neitsyt Maria என்றும் எழுதுவர். பின்னிஷ் மொழியில் marja என்றால் சிறுபழம் (berry) என்றும் பொருள் உண்டு. ஒரு சிறு பழத்திலிருந்து கர்ப்பம் ஆன கன்னிப் பெண்ணாகையால் இப்பெயர் ஏற்பட்டது என்று கருதுவோரும் உளர்.

மரண ஆறு:

துவோனலா என்னும் மரண உலகத்தின் கறுப்பு நிற ஆறு.

மரணத்தின் மகன்:

மரண உலகின் மகன், துவோனியின் மகன். பார்க்க 'துவோனி'.

மனா:

Mana: மனா என்றால் மரண உலகின் அதிபதி. Manala என்பது மரண உலக அதிபதியின் உறைவிடம்; ஒரு பெளராணிக இடம். மரண உலகம் என்று பொருள்.

மி

மிமெர்க்கி:

Mimerkki: காட்டுத் தலைவி மியெலிக்கியின் இன்னொரு பெயர்; காட்டுத் தலைவன் தப்பியோவின் மனைவி.

மியெலிக்கி:

Mielikki: அன்பானவளே, மனதுக்கு உகந்தவளே என்று பொருள். காட்டுத் தலைவியின் இன்னொரு பெயர். தப்பியோவின் மனைவி.

மூ

மூரிக்கி:

Muurikki: ஒரு பசுவின் பெயர்.

யொ

யொவுகோ, யொவுகாஹைனன்:

Jouko, Joukahainen: ஓர் இளைஞன். வைனாமொயினனுடன் போட்டியாக மந்திரப் பாடல்கள் பாடித் தோற்பவன். தோல்வியின் காரணமாகத் தன் சகோதரியை வைனாமொயினனுக்கு மனைவியாக்குவதாக வாக்களிப்பவன். வைனாமொயினனின் குதிரையை எய்து கொல்பவன்.

யொவுகொலா:

Joukola: யொவுகாஹைனனின் இடம்.

யோ

யோர்தான்:

Juortanin joki: ஒரு கற்பனை நதி.

லா

லாப்பியர், லாப்லாந்தியர், லாப்புலாந்தியர்:

lappalainen: (Lappish); லாப்லாந்தில் வாழும் மக்கள்.

லாப், லாப்லாந்து, லாப்புலாந்து:

Lappi: ( Lapland); பின்லாந்தில் வட பகுதியில் உள்ள ஒரு மாகாணம்; மந்திரவாதிகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஓர் இடம்.

லூ

லூலிக்கி:

Lyylikki: பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவனான கெளப்பியின் இன்னொரு பெயர்.

லெ

லெம்பி:

Lempi (gen.: Lemmen): லெம்மின்கைனனின் தந்தை. 'லெம்பி' என்ற பின்னிஷ் சொல்லுடன் ஆறாம் வேற்றுமை உருபு (genitive case) சேரும் பொழுது வல்லினம் மெல்லினமாகி லெம்பியின் என்ற பொருளில் 'லெம்மின்' என்று வரும். அதனால் தான் மகனுடைய பெயர் 'லெம்மின்'கைனன் ஆயிற்று. தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னாரின் மகன் என்று கூற வேண்டிய இடங்களில் லெம்பியின் மைந்தன் என்றும் பெயரைக் குறிப்பிடும் இடங்களில் லெம்மின்கைனன் என்றும் வருகிறது.

"லெம்பி" என்றால் 'அன்பு' 'பிரியம்' என்று பொருள். இது சமீப காலம் வரை ஓர் ஆண்பால் பெயராகவே இருந்தது. இன்று பெண்பால் பெயராக வழக்கில் உள்ளது.

லெம்போ:

Lempo: ஒரு தீய சக்தி; ஹீசியின் இன்னொரு பெயர்.

லெம்மின்கைனன்:

Lemminka*inen: மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன். லெம்பியின் மகனாகையால் லெம்மின்கைனன் என்று பெயர் பெற்றவன். குறும்பன்,போக்கிரி என்று வர்ணிக்கப்படுபவன். பெண்களில் அதிக நாட்டம் உள்ளவன். தூர நெஞ்சினன், அஹ்தி, தீவின் அஹ்தி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுபவன்.

இவனுடைய சகோதரி ஐனிக்கி. துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இவனை உயிர்த்தெழ வைத்த இவனுடைய தாய் இவன் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறாள்.

லெம்மின்கைனனின் தாய்:

Lemminka*isen a*iti: இவளின் பெயர் கூறப்படவில்லை.

லொ

லொக்கா:

Lokka: இல்மரினனின் தாய்; கலேவாவின் ஒரு பெண் சந்ததியாள் என்பதால் 'கலேவாவின் மகள்' 'கலேவத்தார்' Kalevatar ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவள். பின்னிஷ் மொழியில் 'தார்' (-tar) என்பது ஒரு பெண்பால் விகுதி.

லொவ்ஹி:

Louhi: வட நாட்டுத் தலைவி. திறமை மிக்க மந்திரவாதி. இல்மரினனின் இரு மனைவியரின் தாய். நீண்ட பல்லுடையவள், நீக்கல் பல்லுடையவள் என்று வர்ணிக்கப்படுபவள்.

லொவியத்தார்:

Loviatar: துவோனலா என்னும் மரண உலகில் இருக்கும் ஒரு குருட்டு வயோதிபப் பெண். இவளே கொள்ளை நோயை உண்டாக்குபவள் என்று பாடல் 45ல் கூறப்படுகிறது.

வடக்கு:

வடக்கு, வடபகுதி, வடநிலம், வடபால் நிலம் என்ற வருபவை யாவும் பின்லாந்தின் வட பகுதியைக் குறிக்கும். வடநாட்டின் இன்னொரு பெயர் லாப்லாந்து. வேறொரு பெயர் சரியொலா; வடநாடு பொதுவாக இருண்ட நாடு, புகார் படிந்த நாடு என்று வர்ணிக்கப்படுகிறது.

வடநிலத் தலைவன்:

Pohjolan isa*nta*: லொவ்ஹியின் கணவன். லெம்மின்கைனனால் தலை
வெட்டப்படுபவன். பெயர் கூறப்படவில்லை.

வடபுல நங்கை:

Pohjolan / Pohjan neiti: மற்றும் வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருபவை வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைக் குறிக்கும். இல்மரினனை மணந்த பின்னர் 'இல்மரினனின் தலைவி' என்று அழைக்கப்பட்டாள். பெயர் கூறப்படவில்லை.

வா

வாயுமகள்:

Ilmatar: வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்; வைனாமொயினனின் கன்னித்தாய்.

பாடல் 47:141ல் வைனாமொயினனும் இல்மரினனும் நெருப்பைத் தேடிச் செல்லும் வழியில் சந்திக்கும் பெண்ணும் வாயுவின் மகள், காற்றின் கன்னி Ilmatar என்றுதான் அறிமுகமாகிறாள். ஆனால் இவர்களின் உரையாடலிலிருந்து இவள் வைனாமொயினனுக்கு முற்றிலும் புதியவளாகத் தெரிகிறது.

வி

விபுனன்:

Vipunen: அந்தரோவிபுனனைப் பார்க்க.

விரோகன்னாஸ்:

Virokannas: பாடல் 20ல் விவாகக் கொண்டாட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட பெரிய எருதைக் கொல்வதற்கு எஸ்த்தோனியாவிலிருந்து வந்த ஒரு அறிஞனின் பெயராகக் கூறப்பட்டது. மீண்டும் ஐம்பதாம் பாடலில் திருமுழுக்குச் செய்பவராக வருகிறது. கிறிஸ்துவ மதத்தினரின் புதிய ஏற்பாட்டில் வரும் யோவான் என்னும் திருமுழுக்குநரை இப்பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர்.

வு

வுவோக்ஸி:

Vuoksi: பின்லாந்தின் கிழக்குப் பகுதியின் ஒரு பெரிய நதி; சைமா ஏரிகளிலிருந்து ரஷ்யாவின் லடொகா ஏரிக்குப் பாய்கிறது.

வெ

வெண்கடல்:

Vienanmeri: ரஷ்யாவின் கரேலியா ( Russian Karelia) பகுதியில் உற்பத்தியாகும் 'வியன்னன்யொக்கி' Vienanjoki ( Northen Dvina river) என்னும் ஆறு
பாயும் இடம் வெண்கடல். ( White sea).

வெல்லமோ:

Vellamo: கடலுக்கும் நீருக்கும் அதிபதியான அஹ்தோவின் மனைவி.

வை

வைனா, வைனோ:

Va*ina*, Va*ino*: வைனாமொயினன் என்ற பெயரின் சுருக்கம்.

வைனாமொயினனன்:

Va*ina*mo*inen: வாயுமகளின் புத்திரன். இல்மரினன், லெம்மின்கைனன் உட்பட்ட மூன்று முக்கிய நாயகர்களில் முதன்மையானவன். அமானுஷ்ய சக்தி படைத்த பாவலன். 'கந்தலே' என்னும் இசைக்கருவியை இசைப்பதில் வல்லவன். 'நிலையானவன்' 'முதியவன்' என்பவை இவனுடைய தனித்தன்மை. நீண்ட காலம் கர்ப்பத்தில் இருந்ததால் பிறக்கும்போதே முதியவன் என்று பெயர் பெற்றவன்.

இவனுடைய அறிவையும் ஆற்றலையும் கூறும் பின்னிஷ் சொல் tieta*ja*. இதனை ஆங்கிலத்தில் wise man என்று மொழிபெயர்த்துள்ளனர். இதன் நேரடிப் பொருள் '[மந்திரமும் மாயமும்] அறிந்தவன்/தெரிந்தவன்' என்பதாகும். இச்சொல் வரும் அடி தமிழில் வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: "நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்".

யேசுநாதர் பிறந்த சமயத்தில், அவரைத் தரிசிக்கக் கிழக்கிலிருந்து வந்த மூன்று
அறிஞர்களைப்பற்றிக் கிறீஸ்துவ வேதாகமத்தில் கூறுமிடத்தில் tieta*ja* என்ற பின்னிஷ் சொல்லும் wise man என்ற ஆங்கில சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

வைனொலா:

Va*ino*la*: வைனாமொயினன் வாழ்ந்த இடம்.

று

றுவோத்துஸ்:

Ruotus: ஒரு கொடிய கிராமத் தலைவனின் பெயர். கிறீஸ்துவ வேதாகமத்தில் யேசுநாதரை விசாரணை செய்தவன் எனக் கூறப்பட்ட ஏரோது ( Herod) என்ற பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர்.

றுவோத்துஸின் தலைவி:

Ruotuksen ema*nta*: றுவோத்துஸின் மனைவி; பெயர் கூறப்படவில்லை.

ஹமே:

Ha*me: தென் மத்திய பின்லாந்தில் ஒரு மாகாணம்.

ஹல்லா:

Ha*lla*pyo*ra*: ஹமே மாகாணத்தில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு நீர்ச்சுழி.

ஹீசி:

Hiisi: ஒரு தீய சக்தி.

ஹீத்தொலா:

Hiitola: ஹீசியின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்.

ஹெர்மிக்கி:

Hermikki: ஒரு பசுவின் பெயர்.


விளக்கக் குறிப்புகள்

(உதாரணம்: 1:31 = பாடல்1; அடி 31;
உதாரணம்: பார்க்க 2:22 = விளக்கக் குறிப்புகளில் 2:22 பார்க்க;
அடைப்புக் குறிக்குள் இருப்பவை ஆங்கிலப் பெயர்கள்.)


1:31

அணியிலிருந்து: அரைக் கச்சிலிருந்து, இடுப்புப் பட்டியிலிருந்து என்றும்
மொழிபெயர்க்கலாம்.

1:34

குறுக்குவில்: கணை அல்லது கல் எறிவதற்காக ஒரு காலத்தில் கையாண்ட
வில் போன்ற படைக்கலப் பொறி; இதற்கு வக்கிரதனு என்றும் ஒரு
பெயர் உண்டு. இதன் பின்னிஷ் சொல் jousi, kaari; (cross bow, arch).

1:35

வடபால் நிலம், வடபுலம், வட நாடு என்று வருபவை யாவும் பின்லாந்தின்
வடக்கில் உள்ள லாப்புலாந்தைக் குறிக்கும்; இருளான இடம், புகார்
படிந்த இடம் என்னும் பொருளில் சரியொலா என்றும் அழைக்கப் படும்.

1:40

துணி நெய்யும் தறியில் நூல் சுற்றும் தண்டு.

1:43

வாயிலிருந்து வழிந்து தாடி போலத் தெரியும் பாலைத் துடைக்கத் தெரியாத
சிறுபிராயம்.

1:44

இந்நூலில் பல இடங்களில் 'புளித்த பால்' 'தயிர்' என்ற சொற்கள் வருகின்றன.
புளித்த பால் என்றால் கெட்டுப் போன பால் என்றும் தமிழர் வாழும் சில
இடங்களில் கருதப்படுகிறது. ஆனால் மேல் நாடுகளில் பெரிதும் விரும்பிப்
பருகும், பாலில் இருந்து செய்யப்பட்ட ஒரு பானத்தை இப்படி அழைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இதனைத் தயிர் என்னும் பொருளில் curd என்றும் sour milk என்றும்
butter milk என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் இது தயிருமல்லாத
மோருமல்லாத ஒரு புளிப்புச் சுவையுள்ள சத்து நிறைந்த பானம். இதன் பின்னிஷ்
பெயர் 'பீமா' piima*.

1:73

பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் வண்டி; இதன் பின்னிஷ் பெயர்கள் kelkka,
reki (sledge, sleigh). இதன் மேல் வண்டி என்று வரும் இடங்களில் இச்சறுக்கு
வண்டியையே குறிக்கும்.

1:93

ரொட்டி, 'பாண்' (bread) செய்யப் பயன்படும் ஒருவகைத் தானியம். கம்புவகை,
புல்லரிசி; இதன் பின்னிஷ் சொல் ruis (rye, Secale cereale).

1:94

உணவுக்கும் மதுபானம் வடிப்பதற்கும் பயன்படும் ஒரு வகைத் தானியம்; பார்லி;
இதன் பின்னிஷ் பெயர் ohra (barley); பார்லியிலிருந்து வடிக்கும் பானம் 'பீர்'
(beer); இதன் பின்னிஷ் சொல் 'ஒளுத்' olut.

1:169

இந்நாட்டு மக்கள் முன்னாளில் கடவுளை 'உக்கோ' Ukko என்று அழைத்தனர்.
'உக்கோ' என்றால் கிழவன், முதியவன், வயோதிபன் என்றும் இடிமுழக்கத்தின்
அதிபதி என்றும் பொருள். இதையே சில இடங்களில் முது மனிதன், மானிட
முதல்வன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1:179(i)

நேரான பறவை: நேராகப் பறக்கும் பறவை.

1:179(ii)

ஒரு வாத்து இனப்பறவை. இதன் பின்னிஷ் சொல் 'சொத்கா', sotka; (pochard,
scaup, [duck], Aythya).

1:272

வஞ்சிர மீனினம். இதன் பின்னிஷ் சொல் பெயர் 'லொஹி', lohi (salmon,
Salmo salar).

1:285

மலைகள் பாறைகளில் இயற்கையாகத் தோன்றும் சித்திர வடிவங்கள்.

1:304

வட துருவத்திற்கு அருகில் காணப்படும் ஏழு மீன்கள் அல்லது சத்தரிஷிகள் என
அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம். (Great Bear, the constellation Ursa major,
alias the Plough, alias Charle's Wain). இது தாரகைக் குழு, தாரகைக்குலம்,
விண்மீன் குலம் என்றும் பாடலில் வெவ்வேறு இடங்களில் வருகின்றது. துருவ
மண்டலம், சப்த மண்டலங்களில் ஒன்றான துருவ நட்சத்திரப் பிரதேசம். இதன்
பின்னிஷ் சொல் Otava.

1:342

பாவலன், பாடகன் என்று பல இடங்களில் சொல்லப்படுகின்றது. இது சபித்து
அல்லது வாழ்த்தி அல்லது ஏதோ ஒன்று நிகழ வேண்டும் என்று மந்திரப்
பாடல்களைப் பாடும் திறனுடையோரைக் குறிக்கும்; அகவர், அகவுநர், பாணர்.

2:21

இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம்.
இதன் பின்னிஷ் சொல் ma*nty, (pine, Pinus).

2:22

இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' என்னும் மரத்தை. இதுவும் தேவதாரு
இனத்தைச் சேர்ந்தது. இது ஊசியிலை மரம் என்றும் சொல்லப்படும். இதன்
பின்னிஷ் சொல் 'கூசி', kuusi, (spruce, Picea).

2:23

இது ஒரு குட்டையான புதர்ச்செடி வகை. இதன் பின்னிஷ் பெயர் 'கனெர்வா',
kanerva (heath[er], ling, Calluna vulgaris),

2:25

இது மிலாறு, பூர்ச்ச மரம் என்னும் மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ்
சொல் 'கொய்வு', koivu (birch, Betul).

2:26

'அல்டர்' மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் leppa*
(alder, Alnus).

2:27

இவ்வடியில் கூறப்பட்டது ஒரு சிறுபழ வகை; இதன் பின்னிஷ் சொல் tuomi
(bird cherry, Prunus padus).

2:28

இது அலரி இனத்தைச் சேர்ந்த ஒருவகைச் சிறிய மரம். இதன் பின்னிஷ் சொல்
raita (sallow, goat willow, great sallow, Salix caprea).

2:29

இது 'ரொவன்' என்னும் சிறிய பழங்கள் காய்க்கும் மரம்; ஒருவகைச் செந்நிறப்
பழம்; பேரி இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் pihlaja (rowan,
mountain ash, Sorbus aucuparia).

2:30

இது 'வில்லோ' என்னும் சிறிய மரம். இதுவும் அலரி இனத்தைச் சேர்ந்தது.
இதன் பின்னிஷ் சொல் paju (willow, Salix).

2:31

இது 'ஜுனிப்பர்' என்னும் பழச்செடி. இது சூரைச்செடி இனத்தைச் சேர்ந்தது.
இதன் இன்னொரு பெயர் உரோதமம். இதன் பின்னிஷ் சொல் kataja (juniper,
Juniper communis).

2:32

இது சிந்தூர மரவினம்; இதன் தமிழ்ப் பெயர்களாவன சிந்தூர மரம், கருவாலி
மரம், அல்லோன் விருட்சம். இதன் பின்னிஷ் சொல் 'தம்மி', tammi (oak, Quercus).

2:35

பார்க்க 2:22

2:38

பார்க்க 2:26

2:39

பார்க்க 2:27

2:42

பார்க்க 2:27

2:67

வைனாமொயினனுக்கு உதவ வந்த ஒரு நீர்விலங்கு. இதன் பின்னிஷ் சொற்கள்
Tursas, turska; இதை நீர்ப் பாம்பு என்றும், வெட்ட வெட்ட முளைக்கவல்ல பல
தலைகளையுடைய நீர்ப்பாம்பு என்றும் சொல்வதுண்டு. இதனைக் கடற்குதிரை,
கடல்யானை என்றும் சில மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன (octopus, water
monster, Hydra, Octopodida).

2:79

இந்த அடியில் கூறப்பட்டது மஞ்சள் விதைகளையுடைய சிறிய சிவந்த சதைப்
பற்றுள்ள பழம். இதன் பின்னிஷ் சொல் 'மன்ஸிக்கா', 'மன்ஸிமர்யா' mansikka,
mansimarja (strawberry, Fragaria).

2:122

பரசு

2:172

ஈரல் நிறத்து மண்ணில் என்பது மூலபாடம்.

2:206

வடபுல நங்கை, வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருவதெல்லாம்
வட நாட்டுத் தலைவியின் மகளைக் குறிக்கும். இந்த வடநிலத் தலைவியின்
பெயர் லொவ்ஹி; இவளுடைய மகளுக்குப் பெயர் கூறப்படவில்லை. எனவே
வடநிலத் தலைவியும் வடநில மங்கையும் ஒருவரல்ல என்பது கவனிக்கத்தக்கது.

2:230

இது குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை; இதன் பின்னிஷ் சொல் 'குக்கூ'
kukku (cuckoo).

2:245

இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல் na*a*ta*
(marten, pine marten, Martes martes).

2:253

இது ஒரு புல்லரிசித் தானிய வகை; இதன் பின்னிஷ் சொல் kaura (oats,
Avena sativa).

2:292

இது பட்டிழை மயிர்த் தோலையுடைய கீரிவகை விலங்கு; இராஜ கீரி,
மரநாய் என்றும் சொல்வதுண்டு; இதன் பின்னிஷ் சொல் ka*rppa* (stoat,
ermine, weasel, Mustela erminea).

2:372

ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட நகைகளை அணியும் கன்னிப்
பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள்
என்னும் பொருளில் 'ஈய நெஞ்சாள்', 'ஈயத்து நெஞ்சாள்', 'தகர நெஞ்சாள்'
'ஈய மார்பினள்' 'தகர மார்பினள்' என அழைத்ததை இக்காவியத்தின் பல
இடங்களில் காணலாம். (இந்த அடியில் குயிலை விளித்து 'ஈய நெஞ்சால்
பாடு!' என்று கேட்கப் படுகிறது.)

3:45

பாடல்கள் என்னும்போது அது மந்திரப் பாடல்களையே குறிக்கும்.
இக்காவியத்தின் நாயகர்கள் ஏதேனும் ஓர் உயிரினம் அல்லது ஓர் உயிரற்ற
பொருள் உண்டாகும்படி, உருவாகும்படி பாடிய சந்தர்ப்பங்களைப் பின்னால்
காண்போம். பாடல் 1:342 ஐயும் பார்க்க.

3:105

வளைந்த மரத்தினால் செய்யப்பட்ட குதிரையின் கழுத்திலுள்ள கண்ட வளையம்.

3:159

இது நீண்ட ஒடுங்கிய வாயும் கூரிய பற்களையுமுடைய பெரிய நன்னீர் மீனினம்;
கோலாச்சி மீன்; இதன் பின்னிஷ் சொல் hauki (pike, Esox lucius).

3:161

இந்த அடியில் கூறப்பட்டது 'பேர்ச்' என்னும் மீனை; இதன் பின்னிஷ் சொல்
ahven (perch, Perca fluviatilis).

3:168

இது ஒரு மான் இனம்; கலைமான், வட தேசத்து மான்; இதன் பின்னிஷ் சொல்
poro (reindeer, Rangifer tarandus).

3:170

இது காட்டெருது, காட்டுப் பசு, கடம்பை என்றும் அழைக்கப் படும்; மூல
பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் tarvas; தற்கால பாவனையில் உள்ள பின்னிஷ்
சொல் hirvi (elk, Alces alces).

3:191

இது ஒரு சிறு பறவையினம்; இதன் பின்னிஷ் சொல் tiainen (tit, tomtit,
titmouse, Paridae).

3:193

விரியன் பாம்பு; இதன் பின்னிஷ் சொல் ka*a*rme (snake, viper, Ophiclia l.
Serpentes).

3:194

இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும்; இதன் பின்னிஷ்
சொல் kiiski (ruff, Acerina cernua).

3:304(i)

இழுவைப்பட்டி

3:304(ii)

பார்க்க 2:28.

3:322

இது ஒரு பூவினம்: அல்லி, ஆம்பல், நீராம்பல், குவளை; இதன் பின்னிஷ் சொல்
lumme (lily, water lily, Nymphaea). valkealumme: வெள்ளாம்பல் (white water
lily, Nymphaea alba). பாடல் 9:412ல் வருவது பொன்னாம்பல்; இதன் பின்னிஷ்
சொல் kultalumme.

3:330

கக்கம்

3:553

கூந்தலையுடைய பெண்கள், நீண்ட கூந்தலையுடைய பெண்கள், பின்னிய
கூந்தலையுடைய பெண்கள் என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த
நாட்களில் விவாகம் ஆகும்வரை பெண்கள் நீண்ட கூந்தலை வளர்த்தனர்
என்றும் விவாகம் ஆனவுடன் கூந்தலை வெட்டித் தலைக்கு முக்காடு இட்டனர்
என்றும் கலேவலா அகராதி கூறுகிறது. அதனால் கூந்தலையுடைய பெண்
என்றால் பொதுவாக விவாகம் ஆகாத பெண் என்று கருதப்பட்டது. இதன்படி
விவாகம் ஆனதும் தான் தனது கூந்தலை இழக்க நேரிடும் என்பதும் இங்கே
ஐனோவின் கவலைக்கு ஒரு காரணம் ஆகலாம்.

3:576

பார்க்க 2:79.

3:580

எரிந்த நிலம்.

4:4

சவுனா (செளனா) sauna (sauna) எனப்படும் நீராவிக் குளியலின்போது உடலை
விசிறிக் கொள்ளப் பயன்படும் ஒருவகை இலைக்கட்டு (whisk). சொற்றொகுதியில்
பார்க்க 'சவுனா'.

4:10

பார்க்க 2:26.

4:25

கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட துணிவகைகள்.

4:123

பன்றியிறைச்சி.

4:186

இது ஒருவகைச் சிறுபழம்; மூலநூலில் உள்ள பின்னிஷ் சொல் vaapukka; தற்காலப்
பெயர்கள் vadelma, vattu (raspberry, Rubus idaeus).

4:215

கீல், தார் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும்
பொருள் (tar).

4:309

பார்க்க 2:30.

4:310

இது ஓர் அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு; இதன்
பின்னிஷ் சொல் haapa (aspen, European aspen, Populus tremula).

4:327

வீட்டில் உள்ள ஒருவரை (செல்லமாகக்) கோழி என்று அழைப்பதாகத் தெரிகிறது.
சிலர் புறா, வாத்து, பறவை என்றும் மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்கள் மயில்,
கிளி என்று அழைப்பது போல.

4:406

நீண்ட செவிகளையுடைய முயல்.

4:408

சிலுவை போன்ற வடிவமான வாயையுடைய முயல்.

4:422

வட்டமான விழிகளையுடைய முயல்.

4:428

பார்க்க 2:372.

4:430

செப்பினால் செய்யப்பட்ட ஒரு பட்டி வீணே ஆழ்ந்து போயிற்று.

4:450

பாக்கியமில்லாக் கன்னங்கள் மீது.

4:474

ஓடுகின்ற ஆறாக உருக்கொள்ளத் தொடங்கி -

4:513

இது ஒரு பயறு வகை; இதன் பின்னிஷ் சொல் herne (pea, Pisum).

4:514

இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் சொல் papu (bean, Phaseolus).

5:17

Untamo 'உந்தமோ' என்ற பின்னிஷ் சொல் கனவு, நித்திரை என்னும் பொருள்படும்
uni என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். எனவே இவ்விடத்தில் கனவின் சக்தி,
கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்றும் மொழி
பெயர்க்கலாம். உந்தமோ என்ற இச்சொல் பாடல் 31ல் ஒரு கதாபாத்திரத்தின்
பெயராகவும் வருகிறது.

5:36

சில இடங்களில் கப்பல் என்றும் அதே மரக்கலத்தைப் பின்னர் படகு, தோணி,
ஓடம் என்றும் வருவதைக் காணலாம். ஏனைய மொழிபெயர்ப்பாளர்களைப்
போன்று மூல நூலில் உள்ளது அப்படியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

5:63

இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் பெயர் siika (powan, whitefish,
Coregonus lavaretus).

5:64

இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் சொல் kuuja, kuujanen, ja*rvilohi;
(trout, lake-trout, salmon, Salmo trutta). இதை ஆங்கிலத்தில்
lake-trout என்றும் salmon-trout என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.

5:65

பார்க்க 3:159.

5:69

கடற்கன்னி, நீரரமகள்; பழம் பெளராணிக மரபுகளில் அரைக்கு மேல்
பெண்ணாகவும் அரைக்குக் கீழ் மீன் வாலாகவும் அமைந்த அரை மனித
உரு (mermaids).

5:71

இது ஒரு மீனினம்; வஞ்சிர மீன்; இதன் பின்னிஷ் சொல் merilohi (salmon,
Salmo trutta).

5:72

பார்க்க 3:161.

5:121

'பீர்' என்னும் பானக் கலயம்; பார்க்க 1:94.

5:149

நீரிணை: ஜலசந்தி, கால்வாய், தொடுவாய் (strait).

6:5

வைக்கோல் நிறத்து.

6:6

பார்க்க 4:513.

6:37

பின்னிஷ் மொழியில் Hiisi எனப்படும் தீய சக்தி; பேய், பிசாசு, கூளி,
அலகை, நரகம் என்று பொருள் (the devil).

6:38

பின்னிஷ் மொழியில் Lempo எனப்படும் தீய சக்தி; தீய ஆவி, பிசாசு,
அலகை என்றும் பொருள் (the devil).

6:43

இந்த அடியிலிருந்து அடி 46 வரை வில்லின் அலங்கார வர்ணனை;
வில்லின் முதுகுப்புறத்தில் ஒரு குதிரை நின்றது; அடிப்புறத்தில் பாயும்
பாவனையில் ஒரு குதிரைக் குட்டி நின்றது; வில்லின் வளைவிலே ஓர்
இளம்பெண் உறங்கினள்; மேற்புறத்தில் ஒரு முயல் படுத்திருந்தது.

6:50

மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால் (resin, gum, exudation from
certain trees). அம்புகளின் முனைகள் பிசினுள்ள மரத்தினால் என்றும்
மொழிபெயர்க்கலாம்.

6:53

இக்குருவி தூக்கணங்குருவி, தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்;
இதன் பின்னிஷ் சொல் pa*a*sky[nen] (swallow, Hirundinidae).

6:54

இக்குருவி ஊர்க்குருவி, சிட்டுக்குருவி, இல்லுறைக் குருவி, அடைக்கலாங்குருவி,
தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்; இதன் பின்னிஷ் சொல் varpunen
(sparrow, Passer).

6:62

அமைதிநீர் மனிதன், நன்னீர் மனிதன் என்பன வைனாமொயினனின்
சிறப்புப்பெயர்கள்.

6:93

வைக்கோல் நிறத்து.

6:120

விவாகத் தொடர்பால் சகோதரியின் கணவன், மனைவியின் சகோதரன்.

6:127

பின்னிஷ் மொழியில் Manala 'மணல' எனப்படும் ஒரு பெளராணிக இடம்.
மரண உலகம் என்று பொருள் (abode of the dead, the underworld, Hades).

6:128

பின்னிஷ் மொழியில் Tuonela 'துவோனலா' எனப்படும் ஒரு பெளராணிக
இடம். மரண உலகம் என்று பொருள். சொற்றொகுதியில் துவோனி,
துவோனலா என்ற சொற்களைப் பார்க்க; (Hades, the underworld).

6:177

பார்க்க 3:170.

7:67

Luotola - பின்னிஷ் மொழியில் luoto என்றால் பாறை, பாறைத்தீவு என்று
பொருள்; luotolaவை விரிகுடா, தீவு, தீவவுத்தோட்டம் எனலாம்.

7:68

Joukola - யொவுகாஹைனனின் இடம்; யொவுகாஹைனனின் தோட்டம்.

7:133

பார்க்க 2:206.

7:188

பார்க்க 2:27.

7:285

இந்த அடியிலிருந்து அடி 288 வரை: அன்னிய நாட்டில் தங்கக்
கிண்ணத்தில் தேன் அருந்துவதிலும் பார்க்க, சொந்த நாட்டில் மிலாறு
மரத்துக் காலணியில் இருக்கும் நீரைக் குடிப்பது சிறந்தது. ('மிலாறு
மரத்தின் காலணி பதிந்த தடத்தில் தேங்கிய நீரைக் குடிப்பது' என்றும்
மொழிபெயர்க்கலாம்).

7:312

சம்போவின் மூடியைப் 'பல நிறங்கள்' கொண்ட மூடி என்றும் 'ஒளிப்
புள்ளிகள்' உடைய மூடி என்றும் சிலர் விளங்கியுள்ளனர். 'ஒளிமிக்க'
என்பதே பலரது விளக்கம். 'சம்போ'வைச் சொற்றொகுதியில் பார்க்க.

7:350

பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour).

8:1

பார்க்க 2:206.

8:58

மாரிகாலத்தை மேல்நாடுகளில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை.
இதன் பின்னிஷ் பெயர் kynto*rastas, ra*ka*ttirastas (fieldfare,
Turdus pilaris).

8:74

பின்லாந்து போன்ற நாடுகளில் குளிர் கொடுமையானது. 'அதனிலும்
குளிராம்' என்பதை 'அதனிலும் கொடிதாம்' என்று பொருள் கொள்ளலாம்.

8:152

பார்க்க 6:37.

8:153

பார்க்க 6:38.

8:161

பார்க்க 6:38.

8:162

பார்க்க 6:37.

8:172

ஊசிபோன்ற இலைகளையுடைய மரம். இதன் பின்னிஷ் பெயர் honka.
இதைப் 'பைன்' மரம் என்றும் சொல்வதுண்டு. 2:21யும் பார்க்க.

8:191

இந்த அடியிலும் அடுத்த இரு அடிகளிலும் வரும் பொருள் வருமாறு:
அங்கே எந்த மண் மேடும் இல்லை இரத்த வெள்ளத்தில் மூழ்கா
நிலையில், தடையில்லாது பாய்ந்த குருதியில் மூழ்கித் தாழா நிலையில்.

9:31

உடன்பிறப்புகள் எல்லோரிலும் இரும்பே இளையவன்.

9:80

ஒளித்தல் அபயம் பெறுதல் ஆகிய இரண்டையும் பெற்றது.

9:99

உறைந்த சேற்றில் ஓர் ஓநாய் ஓடியது.

9:101

ஓநாய் கால் வைத்த அடித் தடத்தில் சேறு ஊர்ந்தது.

9:234

மிலாறுப் பட்டை - வீட்டுக்கூரையில் மிலாறு மரப்பட்டையின் கீழே
இருந்து பார்த்தது.

9:297

பார்க்க 3:170.

9:298

இது ஒரு மான் இனம்; கலைமான், வடதேசத்து மான்; இதன்
பின்னிஷ் சொல் poro (reindeer, Rangifer tarandus). இந்த அடியில்
பயன்படுத்தப்பட்ட பின்னிஷ் சொல் peura; இதைக் காட்டுக்கலை
என்றும் மொழிபெயர்க்கலாம்.

9:349

கடலில் நிற்கும் வாள் போல் நிற்பாய்! இது ஒரு கோரைப் புல்லினம்.
இதன் இலை அதாவது தாள் வாளின் அலகு போல நீரில் நிமிர்ந்து
நிற்கும் தன்மையுடையது. இதன் பின்னிஷ் பெயர் kurjenmiekka.
பின்னிஷ் மொழியில் miekka என்றால் வாள் என்று பொருள்
(iris, Iris pseudacorus).

9:412

பார்க்க 3:322.

9:458

அவை நூறு பயணத்து வழிகளில் சேர்க்கப்பட்டவை.

9:467

பல கிளைகள் பரந்த அரச மரமொன்று.

9:525

இந்த அடியும் அடுத்த அடியும்: நோவை ஒரு மலையில் ஏற்றி
அழிப்பதாக நம்பப்பட்டதால் 'நோவின் குன்று' என்றும் 'நோ மலை'
என்றும் பெயர்கள் வந்தன.

9:527

நோவை அங்கே கற்களில் திணித்தான்.

10:2

பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour).

10:12

பார்க்க 2:29.

10:42

பார்க்க 1:304.

10:58

நிலக்கரிக் குடிசையிலிருந்து வந்த கலகலத்த ஒலியைக் கேட்டனன்.

10:91

பார்க்க 1:304.

10:346

படகுத்துடுப்புக்கு உகைப் பாதாரமான அமைவு; படகின் விளிம்பில்
துடுப்பிற்கு நெம்பு விசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய
பள்ளப்பகுதி; இதைத் துடுப்பு நெம்புவிசைக் குவடு, மிண்டுக்குழி,
உகை மிண்டு, மிண்டுக்குவடு என்றும் அழைப்பர் (rowlock, tholepin).

10:429

மூல நூலில் yhdeksa*n sylen syva*ha*n என்பதை to a depth of nine
fathoms என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். Fathom என்பது
ஆறடி நீளம். அதனாலேயே தமிழில் இங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்நூலில் வேறு சில இடங்களிலும் இந்த fathom என்னும் அளவை
கூறப்படுகிறது. அந்த இடங்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாறே
அடிக்கணக்கில் கூறப்பட்டுள்ளது.

10:450

இது ஒரு வகைப் புதர்ச்செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்; இதன் பின்னிஷ்
சொற்கள் puna-puola, puolukka, puola (cranberry, mountain cranberry,
cowberry, lingonberry, Vaccinium vitis-idaea).

11:10

பார்க்க 3:161.

11:54

காய்கறிகள், மீன் , இறைச்சி வகைகள் வெந்த சாறு, ரசம் (soup).

11:58

இந்த மெல்லிய மரக்குச்சிகள் மெழுகுவர்த்திபோல எரிக்கப் பயன்படுத்தப்பட்டன.

11:148

பார்க்க 3:553.

11:174

பார்க்க 2:372.

11:195

குயிலிக்கி ஏனைய பெண்களுக்கு மேலாகச் சிறப்பாக இருந்தனள்.

11:264

இந்த அடியிலிருந்து அடி 266 வரை: பின்னிஷ் மொழியில் Muurikki,
Mansikki, Puolukka 'மூரிக்கி', 'மன்ஸிக்கி', 'புவோ லுக்கா' என்பன இந்த
அடிகளில் பசுக்களின் பெயர்கள். 'மூரிக்கி' அந்த நாட்களில் வழக்கிலிருந்த
பசுவின் பெயர்தான். ஆனால் 'மன்ஸிக்கா' ('மன்ஸிக்கி' அல்ல), புவோலுக்கா
என்ற பெயர்களில் சிறு பழங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. பார்க்க 2:79,
10:450. (ஓர் ஆய்வாளரின் கருத்து இது: "லெம்மின்கைனன் பசுக்களை
வைத்திருக்க முடியாத அளவுக்கு ஏழை. சில பூக்களுக்கும் இப்பெயர்கள்
இருந்தன. குயிலிக்கி பசுக்கள் என்று நினைக்கட்டும் என்ற எண்ணத்தில்
இங்கு பூக்களின் பெயர்களை இரு பொருளில் கூறுகிறான்.")

11:385

பனிக்கட்டிப் பறவை; இவ்வடியில் கூறப்பட்டது lumi-sirkku, pulmunen என
பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒரு சிறுகுருவி (bunting, snowbunting,
Plectrophenax nivalis, Emberiza nivalis).

11:393

கூடத்தின் நிலப்பரப்பைப் பெரிதாக்கி அமை.

12:63

'பீர்' என்னும் பானம்; பார்க்க 1:94.

12:69

இங்கு கூறப்பட்டது 'அல்டர்' என்னும் மரத்தினால் செய்த பீப்பாவை. பார்க்க 2:26.

12:94

மூல பாடத்தில் ஒரு பென்னி என்று இருக்கிறது; 12:101ஐயும் பார்க்க.

12:101

Markka 'மார்க்கா' என்பது பின்னிஷ் நாணயம்.

12:145

பாம்புகள் சபித்தன.

12:154

துளை கருவி, துறப்பணம், கன்னக்கோல் என்றும் பொருள் வரும்.

12:206

தலைமயிரை வார (அல்லது கோதப்) பயன்படும் கருவி, 'பிரஷ்' (brush).

12:349

Kymmenia* என்ற பின்னிஷ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'tens' என்று பொருள்.
அதையே தமிழில் 'பதின்மர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

12:363

இங்கே சுடுதலுக்கு அம்பு எய்தல் என்று பொருள்.

12:390

பாசி படர்ந்த இடத்திலிருந்து; பாசி படர்ந்த மரக்கட்டைகளிலிருந்து என்றும்
மொழிபெயர்ப்புகள் உண்டு.

12:462

பார்க்க 3:161.

13:29

பனிக்கட்டியில் சறுக்குதல்; சறுக்கிச் செல்லுதல். இதன் பின்னிஷ் சொல்
hiihta*a* (ski [along a skiing track]).

13:39

பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (இடது) சறுக்கணி. இதன் பின்னிஷ்
சொல் lyly (the longer ski [formerly used on the left foot]).

13:40

பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (வலது) சறுக்கணி. இதன் பின்னிஷ்
சொல் kalhu (short[er] ski, kick ski).

13:69

பனிக்கட்டியில் சறுக்கும் போது ஊன்றிச் செல்லும் தண்டுகள். இதன் பின்னிஷ்
சொல் sauva (staff).

13:70

ஊன்றிச் செல்லும் தண்டு தரையைத் தொடும் நுனிப் புறத்தில் இருக்கும் வளையம்.
இதன் பின்னிஷ் சொல் sompa (ring [ on a ski stick]).

13:75

ஆறுகளில் வாழும் மீன் உண்ணும் பிராணி. நீந்துவதற்கு வசதியாக விரல்கள்
ஒன்றோடொன்று இணைந்த நான்கு பாதங்களையும் தட்டையான வாலையும்
தடித்த பழுப்பு நிற உரோமத்தையும் உடையது. இது நீர்க்கீரி என்றும்
அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் saukko 'சவுக்கோ' (common otter,
Lutra lutra).

13:106

இந்த அடியில் பின்னிஷ் மொழியில் பயன்படுத்தப்பட்ட சொல் Juutas. இது
ஆங்கில Judas என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் காட்டிக் கொடுப்பவன்
என்பதாகும். கிறிஸ்தவ வேதாகமத்தில் யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த
ஜூதாஸ் (Judas Iscariot) என்பவனின் பெயரிலிருந்து வந்ததாகும். சில ஆங்கில
மொழிபெயர்ப்பாளர்கள் 'ஜூதாஸ்' என்றே மொழிபெயர்த்துள்ளனர்; சிலர் கொடிய
பிராணி என்றும் தீய சக்தி என்றும் மொழி பெயர்த்துள்ளனர்.

13:108

பார்க்க 13:106.

13:110

இது ஒரு வகைச் சிறிய மரம்; இந்த மரத்துக் கிளைகளின் கவர்த்தடிகளைக்
கொண்டு கொம்புகள் செய்தன. இதன் பின்னிஷ் சொல் raita (sallow, goat willow,
great willow, Salix caprea).

13:152

இடுகாட்டு ஆவியின் மேட்டிலும் சென்றான்.

13:219

இந்த அடியில் கூறப்பட்டது ஒருவகை மரம். இதன் பின்னிஷ் சொல் vaahtera
(maple, Acer)

13:239

பார்க்க 13:219.

14:34

உச்சியை அவன் அடைய உடன்வழி நடத்துவீர்.

14:102

வேட்டை: மூல பாடத்தில் பின்னிஷ் சொல் vilja என்பதன் பொதுப்பொருள் தானியம்.
இந்நூலில் பல இடங்களில் 'செல்வம்', 'சொத்து' என்ற பொருளில் இச்சொல்
வருகிறது. சந்தர்ப்பத்திற்கேற்ப தானியம், கால்நடை, வேட்டை, வன விளையாட்டு
என்பனவற்றை இச்சொற்கள் குறிக்கின்றன. பாடல் 14:102ல் வேட்டைச்
செல்வத்துக்குரிய முதிய பெண்கள் கிடந்தனர் என்று பொருள்.

14:117

இந்த அடியையும் அடுத்த அடியையும் சேர்த்து இப்படிப் பொருள் கொள்க:
ஒவ்வொரு கோட்டையின் மூலையிலும் பொன்னால் அமைந்த ஆறு சாளரங்கள் இருந்தன.

14:138

பூர்ச்ச மரப்பட்டையால் செய்யப்பட்ட பாதணிகள்; பார்க்க 2:25.

14:154

தளிரிலைகளில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே.

14:158

'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26.

14:160

பார்க்க 2:22.

14:161

தாரு என்பது மரத்தின் பொதுப் பெயர்; தேவதாருவையும் குறிக்கும்.
இவ்வடியில் கூறப்பட்டது ஊசியிலை மரத்தை (fir). பார்க்க 8:172.

14:162

பார்க்க 2:21.

14:167

பார்க்க 2:22.

14:168

பார்க்க 2:21.

14254

பசும் புற்புதர்களில் வாழும் அழகானவனே.

14:331

இந்த அடியும் அடுத்த அடியும்: பொன் வளையத்தினுள்ளே வெள்ளி
மணிகளின் நடுவே தலையைத் திணிப்பாய். இப்படியே அடிகள் 347,
348க்கும் பொருள் கொள்க.

14:377

அன்னம்: நீண்ட கழுத்துடைய ஒரு நீர்ப்பறவை. இதன் பின்னிஷ் சொல்
joutsen (swan, Cygnus).

14:399

இந்த அடியிலும் அடிகள் 402, 403லும் குருடன் எனக் கூறப்பட்ட நனைந்த
தொப்பியன் 'கண்டான்' 'பார்த்தான்' என்று மூலப் பாடத்தில் வருவது
கவனிக்கத்தக்கது.

14:408

நீர்க்குழல்: குழல் போன்ற தோற்றத்தில் நீரில் வாழும் பாம்பு.

14:434

அரத்தம்: இரத்தம் (blood)

15:104

Jalopeura என்னும் பின்னிஷ் சொல் வலிய விலங்கு, சிங்கம் என்று
பொருள் தரும்; இந்த அடியில் வலிய விலங்கான (சிங்கம் போன்ற)
கலை மான்.

15:119

பார்க்க 13:75.

15:120

நிலத்தில் வளை தோண்டி வாழும் கரடியினம். இதன் பின்னிஷ் சொல்
mauriainen (pismire, badger, Lasius niger); இதைக் கீரியினம் (weasel)
என்றும் சில நூல்களில் காணலாம்.

15:121

குளவி; இதன் பின்னிஷ் சொல் neuliainen, ampiainen (wasp).

15:203

முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429.

15:204

கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் (five hundred fathoms).

15:285

இது ஒரு காக்கையினம். நீர்க்காகம் என்றும் சொல்வதுண்டு. இதன்
பின்னிஷ் சொல் korppi (raven, Corvus corax).

15:291

மனிதனைக் கடலுக்குள் போக விடுவாய்.

15:293

இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் turska; இச்சொல்லுக்கு தற்கால
வழக்கில் ஆங்கிலத்தில் 'கொட்' (cod, Gadus morhua) என்று அழைக்கப்படும்
மீனும் ஒரு பொருள். அதனால் சிலர் இந்த அடியில் மட்டும் ஒரு வகை மீன்
என்று மொழிபெயர்த்துள்ளனர். பார்க்க 2:67.

15:531

மிருகங்களின் கொம்புகள் (horn).

15:532

அடர்த்தியான கட்டுகள் (bundle).

15:580

நீண்ட நகங்களையும் சிறகுகளையும் கொண்ட நெருப்பைக் கக்கக்கூடிய
ஒரு கற்பனைப் பிராணி. இதைத் தமிழில் பறக்கும் நாகம், குக்குட சர்ப்பம்
என்று சில தமிழ் அகராதிகள் கூறுகின்றன. பறக்கும் முதலை என்றும்
சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் சொல் lapokyy (dragon).

15:581

பாக்கியமற்ற என் மேல் அவன் ஏவினான்.

15:593

இது நீண்ட வாலுள்ள வாத்தினம். இதன் பின்னிஷ் சொல் alli (squaw,
long tailed duck, Clangula hyemalis).

15:594

இது ஒரு வகைக் கடற் பறவை; இதன் பின்னிஷ் சொல் meripa*a*sky
(sea swallow); pa*a*sky[nen] (swallow, Hirundinidae).

15:595

இதன் பின்னிஷ் சொல் Syo*ja*ta*r. இந்த சொல்லில் syo*ja* என்றால்
உண்பது, உண்ணும் சக்தியுடையது என்று பொருள். -ta*r என்பது
பெண்பால் விகுதி. (i) புராணங்களில் வரும் நரமாமிசம் உண்ணும் கொடிய
பயங்கரமான பூதம் அல்லது அரக்கி அல்லது பயங்கரமான உருவம் கொண்ட
பிராணி என்று இதற்குப் பொருள். இதனை ஆங்கிலத்தில் ogress (இதன்
ஆண்பால் ogre) என்று மொழிபெயர்த்துள்ளனர். (ii) புராணக் கதைகளில்
வரும் நரமாமிசம் புசிப்பவளான ஓர் அரக்கி. (iii) ஒரு பெண்ணின் தலை,
உடலுடன் இறக்கைகளும் நகமும் கொண்ட ஒரு கொடிய பிராணி (harpy).

16:6

'ஆறு வங்கக் கால்களையுடைய தோணி என்னிடமிருந்து வராது' என்று
இந்த அடிக்குப் பொருள். தோணியின் பக்கவளை வரிக்கட்டை; இதை
வங்கக்கால், வங்கக்கட்டை என்றும் சொல்வதுண்டு.

16:136

அவன் ஒரு சொல்லையும் பெறவில்லை; பாதிச் சொல்லையும் பெறவில்லை.

16:155

பார்க்க 2:27.

17:20

பெண்களின் ஊசி நுனியில் ஓடிச் செல்லுதல் வேண்டும்.

17:22

ஆண்களின் வாள்களின் முனையில் நடந்து செல்லுதல் வேண்டும்.

17:33

காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).

17:75

அணில்கள் சேர்ந்த தாருவைப் புருவத்திலிருந்து வீழ்த்தினான்.

17:121

வைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் ஒரு கத்தி இருந்தது.

17:236

கவிநிலை: காலநிலை.

17:278

பார்க்க 13:106.

17:301

சுவர்க்கத்தின் துருவத்தில் இருக்கும் முதியவனே!

17:406

பார்க்க 3:161.

17:407

அங்கே உனக்கு ஓர் இடம் கிடைக்காவிடில் -

17:495

முன்னர் படைக்கப்பட்ட பேய்க்கு முடிவு வந்தது.

18:114

பார்க்க 5:64.

18:225

நெசவு செய்யும் கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.

18:295

பார்க்க 4:4.

18:359

அதன் பின்னர் வீட்டிலே தைக்கப்பட்ட நீண்ட மேலங்கி.

18:363

ஆயிரம் தெறிகளோடு (buttons) தைக்கப்பட்ட புதிய கம்பளியாடை.

18:370

பார்க்க 3:553.

18:388

எம்மிடத்தில் ஆறு குதிரைகள் இருக்கின்றன.

18:389

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.

18:395

குயில்போல் ஒலிக்கும் ஆறு மணிகளைச் சறுக்கு வண்டியில் கட்டு!

18:396

நீலப் பறவைகள் போல் ஒலிக்கும் ஏழு மணிகளைக் கட்டு!

18:403

பார்க்க 2:67, 15:293.

18:523

குவியல்கள் பெரியவை; விறகுச் சுள்ளிகள் நல்லவை.

18:532

கதம்: கோபம்.

18:545

நாட்டின் சிறந்தது ஏன் உறுமிற்று என்று.

18:548

காதலர் சந்திக்கும் கடற்கரையிலுள்ள குடா நாடு எனக் கற்பனையாகக்
கருதப்பட்ட இடம்.

18:565

பார்க்க 2:29.

19:12

எனக்கு மனைவியாகி எனது சொந்தமாக வரப்போகும் பெண்ணை.

19:76

சலசலத்திரையும் மண்டையோடுகளைக் கண்டான்.

19:155

பார்க்க 3:159.

19:172

மரண உலகின் மாய்வில்லாத/ அழிவில்லாத அருவியில்.

19:209

ஒரு சிறகு கடலைக் கலக்கிற்று.

19:217

நீரில் இருந்தொரு நீர்ச்சக்தி எழுந்தது.

19:227

இரண்டு கோடரிகளின் கைப்பிடி நீளத்தில் அதன் நாக்கு இருந்தது.
இரண்டு கோடரிகளின் அலகளவு நாக்கு என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
விளங்கியுள்ளனர்.

19:287

வீசிய காற்றில் காற்றின் மணம் இல்லை; ஏனென்றால் அடுத்த அடியைப்
பார்க்க: 'பறந்து கொண்டிருந்த கழுகின் பெரிய இறகுகளினால்'.

19:369

செழிப்பான தோட்டங்களில் நாடோ டித் தொழிலாளர்களில் ஆண்களுக்கு
வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் வதிவிடங்கள் இருந்தன. இரும்புத்
தொப்பி அணிந்த ஆண்களிலும் பார்க்க, செப்பில் தலையணி அணிந்த
பெண்களிலும் பார்க்க, சணற் துணியில் கைத்துண்டையுடைய கன்னியரே
முன்வந்து விருந்தாளிகளை வரவேற்றனர்.

19:381

சணற்றுணிக் கூரையில் கன்னியர் கோட்டை.

19:457

கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.

19:458

பார்க்க 2:292.

19:461

கைத்தறியில் நூலைப் பரப்பி இழையோடும் சட்டம். இப்படி இழை
யோடுதலைப் பாவோடுதல் என்றும் சொல்வதுண்டு.

19:480

நான்கு ஊடிழை நூலின் கீச்சொலியோடு.

19:484

இரு வார வயதுடைய குழந்தை இவ்வாறுரைத்தது.

19:507

அடிகள் 507, 508, 509, 510 மூல நூலில் உள்ளபடி சரியாகவே தமிழில்
இப்படி மொழிபெயர்க்கபட்டுள்ளன:

"தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான்
இளமையில் திருமணம் செய்து கொள்பவன்
பிள்ளைப் பருவம் பிள்ளை பெறுபவன்
சிறுபிரா யத்தில் பெறுபவன் குடும்பம்."

இந்த அடிகளைப் படிக்கும்போது கிடைக்கும் பொதுவான விளக்கம் வருமாறு:
"இளமையில் திருமணம் செய்பவனும் பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப்
பெறுபவனும் சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும் தனது கருமங்கள்
எல்லாவற்றிற்கும் வருந்துவான்." ஆனால் இந்த மூன்றும் செய்யத் தகாதன அல்ல;
அதற்காக வருந்த வேண்டியதும் இல்லை. எனவே அந்த அடிகளுக்கு வேறு
உட்பொருள் இருக்க வேண்டும் என்பது அறிஞரின் கருத்து. இந்த நான்கு
அடிகளையும் விளங்கிக் கொள்வதில் மொழிபெயர்ப்பாளரிடையே கருத்து
வேறுபாடும் உண்டு. சிலர் இப்படியும் விளங்கியுள்ளனர்: "இளமையில் திருமணம்
செய்தல், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப் பெறுதல், சிறு பிராயத்தில்
குடும்பத்தை அடைதல் ஆகியவற்றிற்கு எவன் வருந்துகிறானோ அவன் தன்
கருமம் அனைத்துக்கும் வருந்துவான்." பலர் ஏற்றுக் கொண்ட பொருள் இதுவாகும்:
"இளமையில் திருமணம் செய்பவனும், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப்
பெறுபவனும், சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும், இவை தவிர்த்த மற்ற
எல்லாக் கருமங்களுக்கும் வருந்துவான்." இந்தக் கட்டத்தில் வைனாமொயினன்
தான் இளமையில் விவாகம் செய்யாததையிட்டு வருந்தியே அவ்வடிகளைக்
கூறுகிறான் என்பது கவனிக்கத் தக்கது.

20:27

பார்க்க 6:53.

20:31

ஒரு மாத காலம் ஓடித் திரிந்த ஒரு கோடையணில் -

20:115

பதன் செய்யப்பட்ட இறைச்சி; இதன் பின்னிஷ் பெயர் makkara (sausage).

20:140

இது கொத்துக் கொத்தாய்ப் பூக்கும் ஒரு தழுவிப் படரும் செடி. இதன் காய்ந்த
பூக்கள் (அல்லது காய்கள்) 'பீர்' பானத்திற்குக் கசப்புச் சுவையுட்டப்
பயன்படுத்தபடும். முசுக்கட்டை இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல்
humala (hop, Humulus lupulus)

20:143

remu என்ற பெயர் அடியிலிருந்து வந்த remunen என்ற பின்னிஷ் சொல்லுக்கு
ஆரவாரமான சத்தம், மகிழ்ச்சிக் கூக்குரல், இரைச்சல் என்று பொருள். இந்தச்
செடி கலந்த புளித்த மதுபானத்தை வடிக்கும் பொழுது ஏற்படும் இரைச்சலை
இவ்விதம் கூறியிருக்கலாம். இந்தச் சொல்லை ஆங்கிலத்தில் revel, hubbub
என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிலர் மொழிபெயர்ப்புச் சிரமத்தினால்
remunen என்ற பின்னிஷ் சொல்லை அப்படியே ஆங்கிலத்திலும் பயன்
படுத்தியிருக்கிறார்கள்.

20:146

இது பூனைக்காஞ்சொறிச் செடி வகை; இந்தச் செடி காஞ்சோன்றி என்றும்
அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் viholainen, nokkonen (nettle, Urtica).

20:197

மரத்திலிருந்து அல்லது ஏதாவது உலோகத்திலிருந்து சீவிக் கழிக்கப்பட்ட
அல்லது கிழிந்து கழிபட்ட சிராய்/சீவல் துண்டு.

20:223

இந்த அடியும் அடுத்த அடியும்: தேவதாரு இனமான ஊசியிலை மரங்களின்,
பசுமை மரங்களின் (fir, pine, cedar) காய். வட்டமான அடிப்புறத்திலிருந்து
குறுகி வந்து நுனியில் கூராக முடியும் வடிவமுள்ளவை; அதன் மேற்புறத்தில்
செதிள் போன்று பட்டை பட்டையாக மரத்தோல் இருக்கும். இதன் பின்னிஷ்
சொல் ka*py (cone).

20:228

சடை வாலையுடைய அணில்.

20:231

இந்த அடியும் அடுத்த அடியும்: அந்த அணில் ஒரு சோலையை முடித்தது:
அடுத்த சோலையைக் கடந்தது; மூன்றாம் சோலையையும் குறுக்கே கடந்தது.

20:265

பார்க்க 20:197.

20:289

புளித்த மாவினுறை, புரையுட்டும் பொருள், மாவைப் புளிக்க வைக்கும் பொருள்,
மதுபானங்களைப் புளித்துப் பொங்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரை,
நொதி, காடிச்சத்து (yeast, leaven).

20:308

பாதத்திலும் பின்னர் படிபுரை சேர்த்தது.

20:329

இளம் பயற்றங் கன்று (pea pod).

20:467

அவனே அஹ்தி, அந்தத் தீவின் அரிய மகன்.

20:509

குமிழ்கள் எழும்பக் கொதிக்க வைத்து -

20:510

சலசலவென ஓசை எழும்பச் சட்டிகளைக் கையாண்டனள்.

21:43

இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம், நீர்க்காகம்
என்றும் சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் பெயர் kaarne (raven, crow).

21:44

சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பெளராணிக
விலங்கு; இதன் பின்னிஷ் பெயர் lieve (griffin, griffon, gryphon).

21:72

வார்: பட்டி(belt).

21:93

கோடைக்கோதுமையில் சமைத்த உணவை; அடு - தல் சமை - த்தல்.

21:94

ஒரு வகைத் தானியம் (rye). பார்க்க 1:93.

21:104(i)

Kappa 'கப்பா' என்னும் பின்னிஷ் சொல் அந்த நாட்களில் தானியங்களை
அளக்கப் பயன்படுத்திய ஒரு முகத்தலளவையைக் குறிக்கும். இது சுமார்
ஒரு 'கலன்' அல்லது அரை 'பெக்' அல்லது நாலரை லிற்றருக்குச் சமமான
அளவை (gallon, half a peck).

21:104(ii)

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.

21:150

வாங்கு = வாங்குப் பலகை, பலகையாசனம் (bench, wooden seat)

21:161

Osma, ahma 'ஒஸ்மா' 'அஹ்ம' என்பன பின்னிஷ் மொழிச் சொற்கள்.
பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை; கீரியினத்துப் பிராணி
என்றும் சொல்வர் (gluton, wolverine, Gulo gulo).

21:166

இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் lahna (bream, Abramis
brama). நன்னீரில் வாழும் மஞ்சள் நிறமுடைய மீன்வகை. கெண்டை
மீனினத்தைச் சேர்ந்தது.

21:174

அடுப்பின் வாய்ப்புறத்தில் அல்லது புகைபோக்கி மூலயின் அருகில் அமைந்த
ஆசனம்.

21:190

கீல் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும்
பொருள்; தார் (tar). இந்த இடத்தில் வெளிச்சத்திற்காக விளக்குகள்
போலப் பயன்படுத்தப்பட்ட கீல் பூசப்பட்ட மரப்பலகைகள் / கம்புகள் என்று
பொருள்.

21:218

கடலில் அல்லது சேற்றில் வளரும் ஒரு வகை நாணல், இதன் பின்னிஷ்
சொல் kaisla (bulrush, club rush, Scirpus).

21:258

அழிவற்ற பாடலுக்கு ஆதாரமாக விளங்கும் தூண் அவன்.

21:280

அயர்வு = நிகழ்ச்சி, செய்கை < அயர்-தல்.

21:281

பார்க்க 21:150.

21:349

இந்த அடியில் முளை நிலம் எனப்படுவது மரங்கள் தறிக்கப்பட்ட பின்னர்
அடிக்கட்டைகளுடன் காணப்படும் காட்டுநிலம்; அறுவடையின் பின்னர்
முளைகளுடன் காணப்படும் வயல் நிலம் போன்றது. வயலில் மண்கட்டிகளை
உடைத்துப் பரவுவதற்குப் பயன்படும் கருவி பரம்பு; இதைப் பலுகுக் கட்டை,
பலகொழுத்தட்டு என்றும் அழைப்பர்.

21:394

கடற்கூழாங்கற்களைப் பயற்றம் மணிகளாகவும்; பார்க்க 4:513.

21:395

i. மதுவகை செய்வதற்காக நீரில் ஊறப்போட்டு முளைகட்டி உலர்த்திய
வாற்கோதுமை முதலிய தானிய வகை, மாவூறல் (malt, wort).
[ii. ஊறிய தானியமும் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ஊறற் பானம்
(malted milk)].

21:405

தலையில் கொம்புகளையுடைய கால்நடைகள்.

21:411

இது புள்ளியுள்ள உரோமமும் குறுகிய வாலும் கூர்மையான பார்வையும்
கொண்ட பூனையினக் காட்டு விலங்கு; இதன் பின்னிஷ் சொல் ilves
(lynx, Lynx lynx).

21:412

தலைவியருக்கு அகலத் துணிகளில் மேலாடை.

22:78

பார்க்க 2:79.

22:93

அன்னையின் மண்ணில் விளைந்த ஒரு சிறுபழம் போல்.

22:94

இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.

22:106

கதவு வழியால் கன வாயில் வழியால்.

22:224

பார்க்க 4:215.

22:259

இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' அல்லது 'பைன்' என்னும் மரத்தின்
கிளையை / சுள்ளியை (spruce, pine).


22:260

லாப்புலாந்தில் கலைமான் இழுக்கும் சறுக்கு வண்டி.

22:261

'களஞ்சிய கூடத்தின் வாயிற்படி' என்றும் மொழி பெயர்ப்பு உண்டு.

22:293

இந்த அடியும் அடுத்த அடியும்: 'பெண்ணே, நீயொரு வளர்ந்த கோழி
போன்ற பருவத்தில் இருப்பதால், உண்மையிலேயே எண்ணிப்
பார்த்ததுண்டா?'

22:331(i)

வஞ்சிர மீன் (salmon); பார்க்க 1:272.

22:331(ii)

இது ஒருவகை நன்னீர் மீன் (ruff). பார்க்க 3:194.

22:332

பார்க்க 3:161.

22:333(i)

இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும்.
இதன் பின்னிஷ் சொல் sa*rki(i. roach, Rutilus rutilus; ii. cyprinid
[fish], Cyprinidae).

22:333(ii)

இது ஒருவகைச் சிறுமீன்; ஒருவகை வெண்ணிற ஆற்று மீன்;
இதன் பின்னிஷ் சொல் salakka (bleak, Alburnus alburnus).

22:334

இது கடல் வாத்துவகை; இதன் பின்னிஷ் சொல் meriteeri
(Glangula glaucion); பின்னிஷ் மொழியில் telkka* என்னும் கடல்
வாத்து இனத்தைச் சேர்ந்தது (golden-eye, Bucephala clangula).

22:340

'கடிப்பவர்' 'தேய வைப்பர்' 'அரித்தெடுப்பவர்' என்றும் பொருள்
கொள்ளலாம். அடிகள் 335ல் இருந்து 340 வரை பொருள் வருமாறு:
"தாயார் பெற்ற பெண்களில், பெற்றோர் பேணி வளர்த்த பெண்களில்
ஒருவரும் அறியமாட்டார், ஒன்பது பேரும் அறியமாட்டார் தம்மை(க்
கணவராக வந்து ) உண்பவர் எங்கே பிறப்பார் என்பதை; தம்மை(க்
கணவராக வந்து) கடிப்பவர் எங்கே வளர்வார் என்பதை".

22:382

துணிகளை அடித்துத் தோய்க்கும் தடியொன்று கையினில் இருக்கும்.

22:393

இவ்வடியில் கூறப்பட்டது sirkku 'சிர்க்கு' என பின்னிஷ் மொழியில்
அழைக்கப்படும் ஒரு சிறு இசைக்குருவி (bunting, Emberiza).
ஆங்கிலத்தில் 'பிஞ்' (finch) என்னும் பறவை இனத்தைச் சேர்ந்தது.

22:477

இவ்வடியில் கூறப்பட்டது மேல் நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை;
பெரும்பாலும் பழுப்பு நிற முதுகும் புள்ளிகள் உள்ள நெஞ்சும் உடையது;
இதன் பின்னிஷ் சொல் rastas (thrush, Turdus).

22:484

எதற்குமே வேண்டாம் இனிய தாயின் மகளே.

22:521

இந்த அடியும் அடுத்த அடியும்: கூழாங் கற்களைப்போல பண
நாணயங்களும் சிறு கற்களைப்போல சில்லறை நாணயங்களும்
குவிந்திருக்கும்.

23:20

பார்க்க 2:79.

23:22

வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம் பட்டுத் துணி வகை (velvet).

23:28

மற்றவர் மத்தியில் மறு ஆளாய் வருகிறாய்.

23:47

சிறுபெண்ணின் இயல்புகள் தூரிகைப் பிடியில் தங்கட்டும்.

23:104

விளம்பும் சொற்களையும் செய்யும் செயல்களையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல்.

23:121

பார்க்க 1:304.

23:148

ஒவ்வொரு தண்டிலும் மும் மூன்று இலைகளைக் கொண்ட சிறிய செடி;
அரிதாக ஒரு தண்டில் நான்கு இலைகள் உண்டாகும்; இந்த நான்கிலைத்
தண்டைக் காண்பவருக்கு அதிர்ஷ்டம் வரும் நம்பிக்கையும் உண்டு.
இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்சிவப்பு அல்லது வெள்ளை நிறமாக
இருக்கும். கால்நடை உணவுக்காக இதைப் பயிரிடுவார்கள். மணப்புல்
என்றொரு பெயரும் உண்டு. இதன் பின்னிஷ் பெயர் 'அபிலா' apila
(clover,Trifolium).

23:178

பார்க்க 4:4.

23:217

கைத்துண்டு, கைக்குட்டை, லேஞ்சி (kerchief).

23:222

பார்க்க 2:29.

23:235

பார்க்க 2:31.

23:306

காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).

23:320

பார்க்க 4:310.

23:352

பார்க்க 4:4.

23:360

கும்மலி - த்தல் குதித்து விளையாடுகை.

23:374

சுற்றியுள்ள பாதுகாப்பு அகழி.

23:376

நெய்தற்குரிய பாவு நூல்.

23:386

தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.

23:446

குளிர் காலத்திலிருந்து அது இரண்டு மடங்காகவே கிடைக்கும்.

23:487

மூல பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் vaahtokuu; வழக்கிலுள்ள
பின்னிஷ் சொல் maaliskuu; இது ஆங்கில 'மார்ச்' (March) மாதத்தைக்
குறிக்கும்.

23:499

இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல்
kiuru 'கியுறு' (skylark, lark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்:
'கணவனின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'.

23:505

இவ்வடியில் கூறப்பட்டது mesimarja என பின்னிஷ் மொழியில்
அழைக்கப்படும் ஒருவகைச் சிறு பழம் (arctic bramble, Rubus arcticus).

23:510

இவ்வடியில் கூறப்பட்டது sirkku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும்
ஒரு குருவி (bunting). பார்க்க 22:393.

23:529

இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்;
இதன் பின்னிஷ் சொல் puola (cranberry, cowberry). பார்க்க 10:450.

23:530

பார்க்க 2:79.

23:532

இது 'அல்டர்' (alder) என்னும் மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது;
பார்க்க 2:26.

23:534

இது அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு (aspen).
பார்க்க 4:310.

23:544

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats);
பார்க்க 2:253.

23:547

"காசுகள்" என்பதற்கு "நல்ல சொற்கள்" , "புகழ்ந்து கூறும் வார்த்தைகள்"
என்ற விளக்கமும் உண்டு. அடிகள் 559, 560ஐப் பார்க்கும்போது இந்த
விளக்கமும் பொருத்தமாகவே அமைகிறது. அதாவது: அவள் எதிர்பார்த்துச்
சென்றது புகழ்ச்சியான சொற்களை; ஆனால் பெற்றதோ இகழ்ச்சியான
சொற்களை.

23:606

உணவுக்கான ஒருவகைச் சிறிய மீன்; இதன் பின்னிஷ் சொல் kuore
(smelt, Osmerus eperlanus).

23:614

குதிரை இலாயத்திலுள்ள எருவை வாருவதற்குப் பயன் படுத்தப்படும்
கவர்க்கோல்; வைக்கோல்வாரி.

23:690

இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைச் சிறிய மரம்; இம்மரத்தின்
கவர்த்தடியினால் கால்களும் அமைத்து என்று மொருள் (sallow,
goat willow). பார்க்க 2:28.

23:758

இது கறுப்பு - வெள்ளை இறகுகளையும் நீண்டொடுங்கிய வாலையும்
உடைய இசைபாடும் ஓர் ஐரோப்பியப் பறவை வகை; இது பிரகாசமான
சிறிய பொருட்களைக் கண்டால் கொத்திக் கொண்டு பறந்து விடும்.
இது புறா இனத்தைச் சேர்ந்தது என்றும் சொல்வர்; இதன் பின்னிஷ் சொல்
harakka (magpie, Pica pica).

23:809

இவ்வடியில் கூறப்பட்டது முட்டைக்கோசுவில் / முட்டைக் கோவாவில்
செய்யப்பட்ட ரசத்தை (cabbage soup).

24:11

பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பழுப்பு நிறமான இசைபாடும்
சிறு பறவை; மூல நூலில் உள்ள பின்னிஷ் சொல் linnanlintu; பேச்சு
மொழியில் hemppo (linnet, hemp-bird, Carduelis cannabina).

24:40

பார்க்க 20:223.

24:56

இது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்புச் சுவையுள்ள இலைகளையுடைய
ஒருவகைப் பூண்டு; இதன் பின்னிஷ் சொல் suolaheina* (sorrel, Rumex).
இதைத் தமிழில் புளியாரை என்றும் சொல்வர் (yellow wood-sorrel,
Oxalis corniculata).

24:83

பார்க்க 1:304

24:91

பார்க்க 6:54.

24:92

பார்க்க 24:11.

24:119

இது சேம்பையினத்தைச் சேர்ந்த ஒரு செடி; இதன் பின்னிஷ் சொல் vehka
(arum, Calla palustris, Araceae).

24:121

பின்லாந்தில் குறிப்பாக வட பகுதியில் கடும் குளிராகையால் வருடத்தில்
சில மாதங்களே பயிர் செய்யக் கூடியதாக இருந்தது. அதனால்
முற்காலத்தில் பஞ்ச நாட்களில் வைக்கோல், மரப்பட்டை, சேம்பை
இனத்தைச் சேர்ந்த சில கிழங்கு வகைகள் ஆகியவற்றை அரைத்து ரொட்டி
சுட்டுச் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது. (அடுத்து வரும் அடிகளில்
இத்தகைய வேலைகள் மணப் பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை
என்று சொல்வதால் அது ஒரு வசதியான வீடு என்று அர்த்தமாகிறது.)

24:148

பார்க்க 24:11.

24:176

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.

24:178

பார்க்க 24:11.

24:183(i)

ஒரு முகத்தலளவை; பார்க்க 21:104.

24:183(ii)

இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் பெயர் pappu (bean, Phaseolus).
பயற்றம் இன விதை என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.

24:184

இந்த அடியும் அடுத்த அடியும்: ஒரு படி அவரை (/ பயறு) விதைத்து அதன்
விளைச்சலைப் பங்கிட்டால் ஒருவருக்கு ஒரு மணிதான் கிடைக்கும்;
ஏனெனில் அப்பெண்ணுக்கு அவ்வளவு இனசனம். அடிகள் 24:286, 187க்கும்
இப்படியே பொருள் கொள்க.

24:212

அப்பிள் (ஆப்பிள்) பழம்; இதன் பின்னிஷ் பெயர் omena (apple).

24:221

இது நீர்க்கரையில் வளரும் ஒரு புல்லினம்; நாணற் புல் வகை; கோரைப்
புல்வகை; இதன் பின்னிஷ் சொல் ruoko (reed, Phragmites communis).

24:222

(i)இது குதிரைவால் போன்ற குறிமறையினச்செடி; இதன் பின்னிஷ் சொல்
korte (horse-tail, Equsetum). (ii) குதிரை வாலிப்புல்: ஒரு புல்வகை
(A species of grass, Panicum brizoides).

24:242

வீடு கட்டப் பயன்படுத்தப் பட்ட பலகைகளின் பொருத்துகளில் பாசியை
வைத்து அடைத்து நீர் புகாதவாறு செய்தல். இந்த அடியில் 'சப்தம்
வெளியேறாதவாறு பாசியால் மூடப்பட்ட அறையில்' என்று பொருள்.

24:271

இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல்
kiuru, leivo[nen] (skylark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்:
'பெண்களின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'.
23:499யும் பார்க்க.

24:375

இது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26.

24:384

பார்க்க 21:411.

24:414

இளமைப் பருவத்தில் அதற்கு நீர் அருந்த வைத்தேன்.

24:471

பார்க்க 2:27.

24:492

காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).

24:495

இது ஒரு வகைப் பாத்திரம் (cup, wide-mouthed vessel).

25:36

பார்க்க 13:219.

25:43

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறுபழம்; பார்க்க 2:79.

25:85

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats);
பார்க்க 2:253

25:108

இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் lehmus என்னும் ஒருவகை
மரத்தை / மரத்தின் பலகையை (linden, Tilia).

25:122

சணல் போன்ற பிடர் மயிரை உடைய பொலிக்குதிரை.

25:125

கோழிக் குஞ்சை இங்கு அழைத்து வந்ததனால்.

25:168

சிறந்த மேலங்கியணிந்த அழகான ஒருவருக்கு.

25:228

இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி (marten); பார்க்க 2:245.
இந்த அடியில் மணமகளைக் குறிக்கிறது.

25:241

இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் tuomi என்ற சிறு
பழச்செடியை (bird cherry, Prunus padus).

25:242

பார்க்க 25:241.

25:255

இது சேற்று நிலங்களில் வாழும் ஒரு காக்கையினம்; இதன் பின்னிஷ்
சொல் varis (crow, Corvus, hooded crow, Corvus corone cornix).

25:256

பார்க்க 23:758.

25:264

இற்கு: இல்லுக்கு.

25:266

பெரிய / நீண்ட செவிகளையுடைய சுண்டெலி.

25:282

மிகச் சிறந்த நாட்டினால் கொண்டு வரப்பட்டவள்.

25:283

இது ஒருவகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450.

25:284

இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79.

25:286

இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79.

25:341

பார்க்க 1:44.

25:372

இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93.

25:400

Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம் செலுத்திக் கொள்வனவு
செய்யபடாத தேன்.

25:417

"வாய்க்கு வாய்" என்பதே சரியான மொழிபெயர்ப்பு; இதனை "உதட்டுக்கு
உதடு" என்றும் "நேர்க்கு நேர்" என்ற கருத்தில் "முகத்துக்கு முகம்" என்றும்
சிலர் மொழி பெயர்த்துள்ளனர்.

25:420

தாய் பெற்ற மக்கள் தோளொடு தோளாய் நிற்பதும் அரிது. இந்த அடியில்
"தோளொடு தோளாய்" என்பதற்கு அருகருகாய், அக்கம் பக்கமாய்
என்று பொருள்.

25:427

'Sineta*r' என்னும் பின்னிஷ் சொல்லில் 'sini' நீல வர்ணத்தைக் குறிக்கும்.
'-ta*r' என்பது பெண்பால் விகுதி. அதனால்தான் 'நீலமகளார்' என்று
தமிழில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. இதனைச் 'சாயத் தொழிலின்
தேவதை' என்றும் துணிகளுக்குச் சாயம் போடும் பெண்கள் என்ற பொருளில்
'சாய மகளார்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.

25:428

இதிலும் பின்னிஷ் மொழியில் துணி என்னும் பொருளுள்ள 'kangas' என்ற
சொல்லும் -ta*r' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'தறிமகளார்',
'துணி மகளார்', 'நெய்தற் தொழிலின் தேவதை' என்று மொழிபெயர்ப்புகள் உண்டு.

25:440

பார்க்க 24:121.

25:485

பார்க்க 2:27.

25:550

காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).

25:606

Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம்.

25:623

ஒருவகைச் சிறுபழம்; பார்க்க 2:79.

25:624

இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola;
பார்க்க 10:450.

25:630

கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.

25:732

முனையில் மணிகள் கட்டிய சவுக்கால் அடியாமலே குதிரை விரைந்தது.

26:45

இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை.
இதன் பின்னிஷ் சொல் peiponen (chaffinch, finch, Fringilla coelebs).

26:46

இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய பறவை.
இதன் பின்னிஷ் சொல் pulmonen (snow bunting, Plectrophenax nivalis).
பார்க்க 11:385.

26:60

பார்க்க 21:411.

26:139

பார்க்க 2:26.

26:146

இது சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட
பழங்கதைக் கற்பனை விலங்கு. கழுகரி என்றும் சொல்லப்படும்.
இதன் பின்னிஷ் சொல் vaakalintu (giant bird, [eagle], griffin).

26:232

இது பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல்
sisilisko (lizard, Lacertidae). 'பல்லி இனப் பிராணிகளின் கூட்டத்தால்
கட்டப்பட்ட வேலி' என்பது இந்த அடியின் பொருள்.

26:281

வார்: இடுப்புப்பட்டி.

26:308

இது ஒரு வகை முட்செடி; மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள
இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை; இதன் பின்னிஷ்
பெயர் koirankieli (dogstongue, Cynoglossum officinale).

26:347

பார்க்க 2:31.

26:555

அந்த நாட்களில் வழக்கிலிருந்த ஒரு நீட்டல் அளவை; பின்லாந்தில்
1069 மீற்றரும் ரஷ்ஷியாவில் 1067 மீற்றரும் கொண்ட நீட்டல்
அளவையாகக் கருதப்பட்டது; இதன் பின்னிஷ் சொல் virsta (verst).

26:693

பார்க்க 15:595.

26:744

வார்: இடுப்புப்பட்டி.

26:761

இது ஒருவகைப் பூடு பார்க்க 223.

27:19

பார்க்க 25:108.

27:40

முளைகள்: முள்ளுகள், கொளுவிகள்; அடிகள் 56, 57ன் படி கையுறைகள்
முள்ளுகளிலும் கொளுவிகளிலும் தொங்கவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கலயங்கள் தொங்கவிடப்படும் கொளுவிகள் என்றும் ஒரு மொழிபெயர்ப்பு
உண்டு.

27:111

இது தானியங்களை அளக்கும் ஒரு முகத்தலளவை; பதினெட்டுக் 'கப்பா'
கொண்டது. இதன் பின்னிஷ் சொல் ma*a*ra*, 21:104யும் பார்க்க.

27:112

மூடைக் கணக்கில், 'தொன்' (ton) கணக்கில், அரையரை மூடையாய்,
அரையரைத் தொன்னாய் என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.

27:120

பின்னிஷ் நூலில் leiviska* என்று சொல்லப் படுகிறது; இது பழைய காலத்தில்
பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுத்தல் அளவை. சுமார் பத்துக் கிலோவுக்குச்
சமமானது என்று கருதப்படுகிறது. இதனைக் காற்பங்கு என்றும், ஒரு
இறாத்தல் என்றும், இருபது இறாத்தல் என்றும் வெவ்வேறு விதமாக
மொழிபெயர்த்துள்ளனர்.

27:135

இந்த அடியில் கூறப்பட்டது வெள்ளை அல்லது வெள்ளை ஊதா நிறங்கள்
சேர்ந்த வட்டமான ஒரு வகைக் கிழங்கு. இதன் பின்னிஷ் பெயர் nauris
'நெளறிஸ்' (turnip, Brassica rapa).

27:215

'பெண்கள் வளர்த்த' என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.

27:226

வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடி ஓநாயைத் தோன்றச் செய்தான்.

27:248

அழகான உரோமத்தையுடைய கீரி.

27:250

வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடிக் கோழியைத் தோன்றச் செய்தனன்.

27:255

நகப்புள்: நகங்களையுடைய பறவை.

27:300

இது அந்த காலத்தில் இருந்த ஒரு போர்முறை. சண்டை செய்பவர்கள்
சண்டையைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் வாள்களை அளந்து
பார்ப்பர். எவருடைய வாள் நீளமாக இருக்கிறதோ அவரே முதலில்
வாளை வீச வேண்டும்.

27:326

'வயதான பெண்களிடம் வாதாடும் செயலும்' என்றும் ஒரு மொழிபெயர்ப்பு உண்டு.

27:382

பார்க்க 27:135.

28:140

லெம்மின்கைனன் தனது பயணத்துக்கு உணவையும் உணவுப் பொருட்களையும்
உப்பையும் கட்டும்படி தாயிடம் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. யாராவது
வீடு குடிபுகு விழாவுக்கு அழைத்தால், அழைப்பை ஏற்றுச் செல்பவர்கள் பரிசுப்
பொருட்களாக உப்பும் ரொட்டியும் கொண்டு செல்வது இன்றைக்கும்
இந்நாட்டில் வழக்கத்தில் உள்ளது.

28:212

இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைப் புதர்ச் செடியின் சிறுபழம். இதன்
பின்னிஷ் பெயர் puolukka (cowberry, lingonberry, mountain cranberry,
Vaccinium vitis-idaea). பார்க்க 10:450.

28:213

பார்க்க 2:79.

28:214

இது ஒரு கருநீல நிறமுள்ள சிறுபழம். இதன் பின்னிஷ் சொல் mustikka
(bilberry, blueberry, whortleberry, Vaccinium myrtillus).

28:218

ஈய நெஞ்சத்து ஒண்டொடி ஒடித்து எடுப்பர்.

29:14

பார்க்க 21:411.

29:41

"சொற்கள் இல்லாத தீவு" என்பதே சரியான மொழிபெயர்ப்பு. சொற்கள்
இல்லாத தீவு என்பதால் குடிமக்கள் இல்லாத தீவு என்றும் பெயரில்லாத தீவு
என்றும் சில பொழிபெயர்ப்பாளர் விளங்கியுள்ளனர்.

29:128

அந்த நாட்களில் இருந்த ஓர் அளவை; இதன் பின்னிஷ் சொல் karpio;
பத்துக் 'கப்பா' அளவு கொண்டது; இந்த அடியில் நிலத்தின் அளவையாக
வரும் 'கப்பா' என்பது தானியங்களை அளக்கும் முகத்தலளவையாக முன்னர்
கூறப்பட்டது. ஆங்கிலத்தில் 'bushel' என்றும் 'five-peck' என்றும் மொழி
பெயர்த்துள்ளனர். ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் இந்த அடியை
"ஒரு 'புஷல்' பெறுமதியான நிலமும் இல்லை" என்கிறார்.
மேலே 21:104யும் பார்க்க.

29:153

பார்க்க 2:29.

29:266

குக்கடக் குஞ்சு: கோழிக் குஞ்சு; பின்னிஷ் மூல நூலில் 'கோழியின்
பிள்ளை' என்று சொல்லப் பட்டது.

29:268

'சிரிக்க வைத்தனன்' 'நகைக்க வைத்தனன்' 'புன்னகையூட்டினன்' என்பதே
நேரடி மொழிபெயர்ப்பு. சிலர் அப்படியே மொழிபெயர்த்துள்ளனர்.
ஆனால் 'தன்வசப்படுத்தினன்', 'இன்பமூட்டினன்' 'கற்பழித்தனன்',
'அவமதித்தனன்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.

29:344

இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம்
என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43.

29:373

ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79.

29:374

ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.

29:459

பார்க்க 2:21.

29:460

பார்க்க 2:22.

29:464

இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறிய பழச்செடி; பார்க்க 2:27.

29:494

இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம்
என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43.

29:523

பார்க்க 26:555.

29:574

பார்க்க 29:41.

29:582

பார்க்க 2:23.

29:585

பார்க்க 2:22.

29:586

இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம்.
இதன் பின்னிஷ் சொல் peta*ja* (pine, Pinus silvestris).

29:595

பானை வயிறுடைய எளிய பிறவிகள்.

30:103

இந்த அடியிலிருந்து அடி 106 வரை ஈட்டியின் அலங்கார வர்ணணை:
ஈட்டியின் முனையில் ஒரு குதிரை நின்றது; அலகின் அருகில் ஒரு முயல்
குதிக்கும் பாவனையில் நின்றது; பொருத்தில் ஓநாய் ஊளையிட்டது;
ஈட்டியின் குமிழில் கரடி உறுமிக் கொண்டிருந்தது.

30:156

கடலின் கரையோரத்து நீரைப் பனிக்கட்டிகளாக்கிக் கடினமாக்கினான்.

30:159

இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை.
(chaffinch); பார்க்க 26:45.

30:160

வாலாட்டிக் குருவியின் பின்னிஷ் பெயர் va*sta*ra*kki (wagtail, Motacilla).

30:165

நாண்: நாணம்.

30:167

விசை: சக்தி.

30:252

பார்க்க 2:23.

30:327

கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதியே கடல்முனை எனப்படும்; இங்கே
'பசிக்கடல்முனை' என வர்ணிக்கப்பட்ட இடம் உணவுப் பஞ்சமுள்ள
பிரதேசம் எனச் சில ஆய்வாளர் கூறுகின்றனர்.

30:339

நெருப்பே, இந்த மூடக் கோட்டையை எரிப்பாய்!

31:4

அந்தத் தாய் அன்னங்களை ஆற்றுக்குக் கொண்டு வந்தாள். மேலே
14:377ஐயும் பார்க்க.

31:35

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.

31:95

பார்க்க 25:108.

31:148

தமக்குத் தெரிந்த தார் வடியும் மரங்களை.

31:156

இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் saarrnipuu (ashwood). இதை
'ஸார்னி மரம்' என்று அல்லது 'ஸார்னிப் பலகை' என்று சொல்லலாம்.
எனவே இந்த அடிக்கு "saarni 'ஸார்னி' (ash, Fraxinus) மரங்கள்/
பலகைகள் நூறு கையளவு" என்று பொருள்.

31:282

எனது சீழ்க்கை ஒலி இங்கிருந்து உருண்டு போய்ச் சேரும் தொலை வரை.

31:311

பார்க்க 8:172.

31:313

முழுத் தாருவை அப்படியே கொண்டு வந்து. பார்க்க 2:22.

31:316

பார்க்க 2:29.

31:321

ஒரு பறவைக்குச் சமமான உயிரினம் அல்லாமல்.

31:343

பார்க்க 1:93.

31:349

எசமானரும் அந்த வழியாக வந்தாரப்பா.

32:23

இந்த அடியும் அடுத்த அடியும்: ரொட்டியைச் சுடும்பொழுது மேற்படையில்
ஒரு வகைப் புல்லரிசித் தானியத்தையும் (oats) கீழ்ப்படையில்
கோதுமையையும் (wheat) வைத்து இரண்டுக்கும் நடுவில் கல்லை வைத்தாள்.
2:253யும் பார்க்க.

32:57

வெளிக்கணும் = வெளியிடத்திலும்.

32:65

பார்க்க 2:30.

32:66

பார்க்க 2:26.

32:67

பார்க்க 2:29.

32:68

பார்க்க 2:27.

32:83

கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே!

32:87

பேரிச் செடி மகளே! பார்க்க 2:29.

32:88

சிறுபழச் செடிச் சேய்! பார்க்க 2:27.

32:117

கொம்பு, குழல் (horn, trump).

32:134

வெள்ளி போன்ற புல்லின் தாள்களால் மிகுந்த உணவை ஊட்டுங்கள்.

32:157

பசுவின் மடியில் பால் வற்றியவுடன், வெறுப்புடைய நெஞ்சங்கள் அல்லது
தீய நினைவுடைய விரல்கள் செய்த சாபத்தினாலோ சூனியத்தினாலோ
மடியில் இருந்த பால் 'மனா' எனப்படும் மரண உலகம் போய்விட்டதாகக்
கருதப்பட்டது.

32:165

பார்க்க 1:44.

32:171

பார்க்க 1:44.

32:206

மரத்தின் வாளி என இவ்வடியில் கூறப்பட்டது 'ஜுனிப்பர்' என்னும்
மரத்தினால் செய்யப்பட்ட கொள்கலம்; மேலே 2:31ஐயும் பார்க்க.

32:207

கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே!

32:209

பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் syo*tikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு
'உண்ணும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் உண்பது, உண்பவன்,
உண்பவள், உண்பவர் என்று மொழிபெயர்க்கலாம். இது உண்ணு - தல்
என்னும் பொருளுடைய syo*/da* என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த
வினையாலணையும் பெயர் (participal noun).

32:210

பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் juotikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு
'பருகும்/குடிக்கும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் பருகுவது/
குடிப்பது, பருகுபவன்/குடிப்பவன், பருகுபவள்/குடிப்பவள், பருகுபவர்/குடிப்பவர்
என்று மொழிபெயர்க்கலாம். இது பருகு-தல்/ குடி-த்தல் என்னும் பொருளுடைய
juo/da என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த வினையாலணையும் பெயர்
(participal noun).

32:211

இந்த அடியிலிருந்து அடி 214 வரை; நரம்புளாள், புதியவள், இனியவள்,
அப்பிளாள் (=அப்பிள் பழம் போன்றவள்) என்பனவும் பசுக்களின் பெயர்கள்.
Hermikki, Tourikki, Mairikki, Omena என்ற பின்னிஷ் சொற்களின்
தமிழ் மொழிபெயர்ப்பு.

32:214

பார்க்க 1:44.

32:223

முகிலில் உறையும் பாலாடைப் பெண்களில் இருந்து. 'முகிலில் உறையும்
தயிர்ப்பெண்களிலிருந்து' என்றும் மொழிபெயர்க்கலாம் (புகார்: முகில்).

32:289

பார்க்க 2:22.

32:290

பார்க்க 29:586.

32:303

பார்க்க 2:29.

32:304

பார்க்க 2:31.

32:310

பார்க்க 2:27.

32:315

அப்பிள் [ஆப்பிள்] எல்லோராலும் விரும்பப்படும் ஓர் இனிய பழம். இதன்
பின்னிஷ் பெயர் omena (apple). இந்த அடியில் 'காட்டுப் அப்பிள்' என்பது
காட்டில் வாழும் கரடிக்கு ஒரு செல்லப் பெயர்.

32:316

முன் வளைந்த முதுகையுடைய கரடியே, தேன் போன்ற பாதங்களையுடைய கரடியே.

32:317

இப்பொழுது நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்வோம்.

32:321

விரிந்த குளம்புகளையுடைய கால்நடை.

32:326

எக்காளம் என்பது ஒருவகை ஊதுகுழல்.

32:372

பார்க்க 32:321.

32:406

எனது கால்நடைகளுக்காக நான் தங்கியிருக்கும் (நம்பியிருக்கும்)
வைக்கோலைத் தவிர்த்து.

32:425

கோடை காலம் வரும்பொழுது, சதுப்பு நிலத்தில் உறைந்திருந்த நீர்
உருகும் பொழுது.

32:450

தேன் போன்ற பாதங்களையுடைய கரடி.

32:454

கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் அடைப்புகள் வேறு உண்டே.

32:481

கிரியாவும் கரியாவும் பசுக்களின் பெயர்கள்.

32:490

பார்க்க 32:321.

32:525

பேரியில் செய்த கழுத்து வளையம்; பார்க்க 2:29.

32:533

காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).

33:20

ஆண்டவன் கைச் சக்கரமே, அதிகனன்று ஒளிர்வாய்!

33:31

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் இதன்
பின்னிஷ் பெயர் kaura; பார்க்க 2:253.

33:33

வைக்கோலை அரைத்து அந்த மாவினால் சுட்ட ரொட்டியை.

33:34

தேவதாரு மரப்பட்டையில் சுட்ட ரொட்டி; மேலே 24:121ஐயும் பார்க்க.

33:35

இந்த அடியும் அடுத்த அடியும்: மிலாறுவின் கூம்பு வடிவமான காய்களில்
செதிள் போன்ற தோல் இதழ்கள் உண்டு. இத்தகைய சிறிய அகப்பையில்
ஈரமான புல்மேட்டின் உச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட நீர்.

33:54

இந்த அடியில் கூறப்பட்ட கீரை முட்டைக்கோசு. இதைக் கோசுக்கீரை,
கோவிக்கீரை, முட்டைக்கோவா என்றும் அழைப்பர்.(cabbage, Brassica)

33:56

பின்னிஷ் மொழியில் musta என்றால் கறுப்பு நிறம். இந்த அடியில் வரும்
நாய்க்கு Musti என்று பெயர். இதனைச் சிலர் ஆங்கிலத்தில் Blackie என்று
மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் இதனைக் கறுப்பன், கறுப்பி, கறுப்பு
என்று சொல்லலாம்.

33:57

புள்ளிகளையுடைய நாய்க்குப் புள்ளி என்ற பெயர் வந்தது. இதன் பின்னிஷ்
சொல் merkki.

33:58

பழுப்புநிற நாய்க்குப் பழுப்பு என்ற பெயர் வந்தது. இதை நரை நிற நாய்
என்றும் விளங்கியுள்ளனர். இதன் பின்னிஷ் பெயர் Halli.

33:105

இடுப்புப்பட்டியில் அல்லது காலணியில் இருக்கும் வளையத்தைக்
(buckle) குறிக்கிறது.

33:111

சாணம் பட்ட தொடைகளையுடைய பசுக்கள்.

33:117

சின்னவள்: பசுவின் பெயர்.

33:118

வெண்முதுகாள்: பசுவின் பெயர்.

33:142

பால் கறக்கும் நேரம் வந்தது; பால் கறக்கும் நேரம் வரக் கூடியதாகக்
கதிரவன் விரைந்து சென்றனன்.

33:155

துவோமிக்கி: பின்னிஷ் மொழியில் tuomi என்னும் சிறு பழத்தின்
பெயரிலிருந்து வந்தது. இந்த அடியில் இச்சொல் ஒரு பசுவின் பெயர்;
பார்க்க 2:27.

33:156

பன்னிறத்தாள்: பசுவின் பெயர்.

33:283

அவள் தன் இடத்தை மாற்றி அமையாது அதே இடத்தில் வீழட்டும்.

33:288

கலயத்திலிருந்து கீழே விழும் கரிக்கறை போல அவள் வீழ்ந்தாள்.

33:296

ஓர் இனிமையான மணமகளாக 22ம் பாடலில் வர்ணிக்கப்பட்ட ஒரு பெண்
பெரிய கொடுமைக்காரியாக இப்பாடலில் கூறப்படுவதற்கான விளக்கம்
எங்கேனும் தரப்படவில்லை. விவாகத்தின் முன்னர் அல்லது விவாகத்தின்
போது அப்படி இருந்த ஒரு பெண் பின்னர் இப்படி மாறுவது ஒரு மனித
இயல்பு என்பதை இது உணர்த்துவதாக இருக்கலாம் என்று ஓர்
உரையாசிரியர் கருதுகிறார்.

34:35

பார்க்க 4:215.

34:63

இது கடல் பறவைகளில் பெரிய நீண்ட சிறகுகளையுடைய ஓர் இனம்.
பெரும்பாலும் வெள்ளையும் கறுப்பும் அல்லது வெள்ளையும் சாம்பர்
நிறமும் கொண்ட இறகுகளை உடையன. இதன் பின்னிஷ் சொல்
kajava, lokki (gull, seagull, sea-mew, Laridae).

34:64

இது ஒரு வகைக் கடற் பறவை; பார்க்க 34:63.

34:65

பார்க்க 6:53.

34:66

பார்க்க 6:54.

34:73

இது பின்னிஷ் மொழியில் telkka* என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு வாத்து.
பார்க்க 22:334.

34:74

இது நிலத்தில் உணவுண்ணும் தாரா வகை; இதன் பின்னிஷ் சொல் sorsa
([wild] duck, mallard, Anatinae).

34:75

இது ஒருவகைக் கடல்வாத்து; இதன் பின்னிஷ் சொல் tavi ([common] teal,
Anas crecca).

34:76

இது ஒருவகை நீர்வாத்து; இதன் பின்னிஷ் சொல் koskelo (merganser, Mercus).

34:192

பின்னிஷ் மொழியில் solki எனப்படும் இந்த ஆபரணம் தொப்பி, காலணி,
இடுப்புப் பட்டி ஆகியவற்றில் இருக்கும் பதக்கம் போன்றது. பெண்கள்
அணியும் `புறூச்` எனப்படும் பதக்கம் போன்ற மார்புசியையும் குறிக்கும்.

34:214

இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.

35:26

பார்க்க 10:346.

35:61

என்றுமே நீ மீன் அடிப்பவன் ஆகமாட்டாய்.

35:220

இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.

35:221

இது ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79.

35:222

இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.

35:254

பார்க்க 10:450.

35:296

இந்த அடியிலிருந்து 307ம் அடிவரை:

"அன்னையே, அன்றைக்கு என்னை நீ ஈன்ற பொழுது, அந்த நாள் என்னை
நீ அரிதீன்ற பொழுது, சவுனா அறையில் புகையை நிரப்பிக் கதவைப் பூட்டி
அந்தப் புகையில் என்னை மூச்சடைக்க வைத்து ஈர்இரா வயதில் என்னை
அழித்திருந்தால் -

முரட்டு படுக்கைத் துணியில் என்னைச் சுற்றிக் கொண்டு வந்து நீருக்குள்
ஆழ்த்தியிருந்தால்-

எனது தொட்டிலைக் கொழுத்தி அடுப்பில் இட்டிருந்தால் -

(அப்பொழுதே இறந்து போயிருப்பேன்; இந்த கொடுமை நிகழ்ந்திருக்காது)"

35:311

இந்த அடியிலிருந்து அடி 314 வரை: `நான் சவுனாவில் தானிய முளைகளில்
இருந்து சுவையான பானம் வடித்துக் கொண்டு இருந்த நேரத்தில் தொட்டில்
நெருப்பில் எரிந்து போய் விட்டது` என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
இந்த நான்கு அடிகளையும் விளங்கியுள்ளனர்.

35:372

முன்னொரு நாள் குல்லர்வோ உந்தமோவிடம் அனுபவித்த கொடிய
செயல்களையே இங்கு இகழ்ச்சியாக `நற்செயல்கள்` என்று கூறுகிறான்.
உந்தமோ தனக்குச் செய்தவற்றை அவன் இப்போது எண்ணிப் பார்க்கவில்லை.
ஆனால் தன் தந்தை தாய்க்குச் செய்த கொடுமைக்கே பழி வாங்க
நினைக்கிறான். 34ம் பாடலில் அடிகள் 98, 99, 100ஐயும் பார்க்க.

36:77

இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்;
இதன் பின்னிஷ் சொல் karpalo (cranberry, Oxycoccus quadripetalus).

36:79

இது `வில்லோ` (willow) என்னும் சிறிய மரம். அலரி இனத்தைச் சேர்ந்தது.
பார்க்க 2:28.

36:99

பார்க்க 36:77.

36:101

பார்க்க 36:79.

36:121

பார்க்க 36:77.

36:123

இம்மலரின் பின்னிஷ் பெயர் lumme; பார்க்க 3:322.

36:124

பார்க்க 13:219.

36:225

அதன்பின் பட்டுத் துணியினால் நன்கு சுற்றட்டும்.

36:287

பார்க்க 33:56.

37:23

இந்த அடியும் அடுத்த இரண்டு அடிகளும்: "நான் மாலைப் பொழுதுக்காக
ஏக்கம் கொள்ளவில்லை; காலை வேளைக்காக மனத்துயர் கொள்ளவில்லை;
மற்றைய வேளைகளுக்காக மனத்துயர் கொள்ளவில்லை. (ஆனால்-)

37:172

சிறிய பறவையைப் போன்ற பொற்பாவையைக் குளிப்பாட்டினான்.
இவ்வடியில் மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய இசைப்பறவையை ஒப்பிட்டுக்
கூறப்பட்டது (chaffinch, finch). பார்க்க 26:45.

37:173

இவ்வடியில் கூறப்பட்டது ஒரு இசைப்பறவையை. அந்த இசைப் பறவை
போன்ற பொற்பாவை என்று பொருள் (snow bunting, Plectrophenax nivalis).
பார்க்க 11:385.

37:216

மாயாரூபம், பிசாசுத்தோற்றம், வெருளி என்றும் மொழிபெயர்க்கலாம்.

38:63

இவ்வடியில் கூறப்பட்ட மீன், விலாங்கு போன்று தட்டையான தலையும்
கீழ்த் தாடையில் மெல்லிய நீண்ட தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர்
மீன்வகை. பெரும்பாலும் வட ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. இதன் பின்னிஷ்
சொல் matikka, made (burbot, Lota lota).

38:127

பார்க்க 36:77.

38:128

பார்க்க 24:119.

38:144

செம்பினாலான பட்டியை அணிந்த அவள் முறையிட்டாள்.

38:162

பார்க்க 2:292.

38:166

பார்க்க 13:75.

38:196

வளைந்த காலையுடைய முயல்.

38:233

ஓரி: நரி.

38:244

நீண்ட முகத்தையுடைய ஓநாய்.

38:255

பார்க்க 29:268.

38:282

இது ஒரு கடற்பறவை. 34:63.

39:19

9 x 6 = 54 அடி ஆழம். பார்க்க 10:429

39:40

வலிக்கும் தண்டுகளை உள்ளங் கைகள் பற்றியிருக்கும்.

39:47

பரந்த நீர்ப்பரப்பை மின்னச் செய்வது.

39:87

அதனை உலையிலிருந்து எடுத்துப் பட்டடைக் கல்லுக்குக் கொண்டு வந்தான்.

39:88

(தொடர்ந்து) சம்மட்டிகளுக்கும் சுத்தியல்களுக்கும்.

39:103

இந்த அடியிலிருந்து அடி 108 வரை வாளின் அலங்கார வர்ணனை:
வாளின் முனையில் சந்திரன் திகழ்ந்தது; வாளின் பக்கத்தில் சூரியன்
பிரகாசித்தது; வாளின் கைப்பிடியில் நட்சத்திரங்கள் மின்னின; வாளின்
அலகில் ஒரு குதிரை கனைக்கும் பாவனையில் நின்றது; வாளின் குமிழில்
ஒரு பூனை 'மியாவ்' என்று கத்தும் பாவனையில் நின்றது; வாளின்
உறையில் ஒரு நாய் குரைக்கும் பாவனையில் நின்றது.

39:132

சணல் போன்ற பிடர் மயிரையுடைய குதிரை.

39:140

பார்க்க 2:22.

39:164

பார்க்க 10:346.

39:170

பார்க்க 4:215.

39:193

என்னை ஒருவரும் பயன்படுத்தாதபடியால், என்னைச் செதுக்கிய
பின் மிஞ்சிய கழிவுத் துண்டுகளில் கிடந்து நான் உழுத்துப் போகிறேன்.

39:247

நிற்கு: நினக்கு, உனக்கு.

39:283

வார்: பட்டி, இடுப்புப்பட்டி (belt).

39:319

பார்க்க 2:29.

39:329

கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதி கடல்முனை எனப்பட்டது.

39:338

கப்பலின் அடிப்புறம், அடித்தளம். ஏராக்கட்டை என்றும் சொல்லப்படும் (keel).

39:416

கவனிப்பு, அதாவது படகின் பாதுகாப்புப் பற்றிய கவனம் படகைக் கவிழ்க்க மாட்டாது.

39:417

வைக்கோல் போருக்கு ஆதாரமாக நிற்கும் மரமே வைக்கோலைச் சிந்தும்
வேலையைச் செய்யாது.

40:16

தார்பூசப்பட்ட படகு போகின்ற வழியில்.

40:;48

சிலைவலு மகனே: கற்சக்தி மகனே: நீர்வீழ்ச்சியின் அடியில் கப்பல்கள்
செல்லும் பாதையில் இருக்கும் பயங்கரமான பாறைகளுக்குத் தலைவன் என்றும்,
இத்தலைவன் கற்களின் சக்தியின் அல்லது பாறைகளின் ஆவியின் மகன்
என்றும் கூறப்படுகிறது.

40:58

'சலப்பை' 'சுவாசப்பை' என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு.

40:132

எலும்பை அழிக்கும் சக்தியுடைய வாளைப் பக்கத்திலிருந்து (உருவினான்).

40:139

வேலை: கடல் (sea, ocean).

40:240

பிசாசு போன்ற வீரமடக்கிய குதிரையின் சடைமயிரினால் நரம்புகள்
கட்டப்பட்டன.

40:308

தந்திகளாகக் கட்டப்பட்ட குதிரையின் சடைமயிர் பின்னி முறினின.

41:19

கோலாச்சி மீனின் எலும்புகளால் செய்யப்பட்ட யாழ்க் கருவியை.

41:39

பார்க்க 2:292.

41:41

காட்டெருது, காட்டுப்பசு; கடம்பை என்றும் அழைக்கப்படும் (elk). பார்க்க 3:170.

41:42

பார்க்க 21:411.

41:45

பார்க்க 29:586.

41:46

பார்க்க 2:22.

41:53

பார்க்க 2:22.

41:54

பார்க்க 29:586.

41:68

இவ்வடியில் கூறப்பட்டது `அல்டர்` (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.

41:85

பார்க்க 15:593.

41:87

பார்க்க 26:45.

41:89

பார்க்க 22:393.

41:90

இது வான்மபாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல் kiuru,
leivo[nen] (skylark, lark, Alauda arvenis).

41:106

தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.

41:119

இந்த அடியில் கூறப்பட்டது மீன் சிறகுகளை. இதன் பின்னிஷ் சொல் eva* (fin).

41:127(i)

பார்க்க 3:194.

41:127(ii)

பார்க்க 22:333.

41:128

இது muje, muikku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒருவகைச் சிறுமீன்
(vendace, Coregonus albula).

41:143

இது வாத்து என்னும் பறவையின் சக்தி. பாடல் 1:179ல் எங்கிருந்தோ ஒரு வாத்துப் பறந்து
வந்து நீரன்னையின் முழங்காலில் முட்டைகள் இட்டதிலிருந்து பூமி உண்டானது என்ற கூற்று இங்கு நினைவு
கூரத்தக்கது.

41:189

பார்க்க 36:77.

41:190

ஒரு பயறுவகை (pea). பார்க்க 4:513.

41:239

பார்க்க 15:285.

42:74

பையன்கள் தரையில் முழங்கால்களில் இருந்தனர்.

42:144

பார்க்க 10:429.

42:258

பார்க்க 6:62.

42:348(i)

மூலபாடத்தில் A*ijo* என்று வரும் சொல்லை முதுமகன், முதியவன் என்று
மொழிபெயர்க்கலாம். சிலர் இதனை " 'அய்யோ'வின் மகனே" என்றே மொழிபெயர்த்துள்ளனர்.

42:348(ii)

மூலபாடத்தில் வரும் Iku-Turso என்ற பின்னிஷ் சொல்லை கடலரக்கன், கடற்பூதம்,
கடலின் மாபெரும் சக்தி (sea-monster) என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். சில
மொழிபெயர்ப்பாளர்கள் அப்படியே 'இக்கு துர்ஸோ' என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றனர்.

42:532

வெல்லமோ, நீரின் இனத்தோரை அமைதிப்படுத்து! சொற்றொகுதியில் 'வெல்லமோ'
பார்க்க.

42:533

கப்பல் பக்கத்தின் மேல் பாகம்; கப்பலின் முன்னணியத்தின் விளிம்பு (gunwale).

42:534

கப்பலின் ஒரு பகுதி; சட்டம், சட்டக்கட்டு என்றும் மொழிபெயர்க்கலாம் (frame, rib).

43:14

கப்பல்களின் பாய் தூக்கும் மரம்; இதை வியாழ்மரம் என்றும் கூறுவர் (yard arm).

43:31

கவிநிலை: காலநிலை. இந்த பாடலின் 45, 337, 356, 422ம் அடிகளில் வரும் இந்தச்
சொல்லுக்கும்
இதே பொருள்.

43:59

பார்க்க 4:310.

43:118

நூறு துடுப்பு வளையங்கள் கொண்ட படகு பிளக்கட்டும்.

43:180

பார்க்க 26:146.

43:249

மற்ற வலிய நகங்கள் நொருங்கி விழுந்தன.

43:366

ஊசியிலை மரத்தடியில் இருக்கும் பற்களின் இடைவெளி அகன்று நீக்கல் விழுந்துள்ள மிருகத்தை.

43:378

முழுச் சம்போவிலும் முயன்று இல்லம் கொணர்ந்தவை.

43:398

இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93.

44:33

முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429.

44:34

கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் ( five hundred fathoms).

44:86

வெள்ளை நிறத்தில் இடுப்புப் பட்டியை அணிந்த மரமே!

44:117

ஐந்து கத்திகளால் கீறிக் கிழிப்பர்.

44:128

பார்க்க 4:4.

44:186

சிந்தூர மரத்தின் பழம், விதை (acorn).

44:216

கால்களில் காலணி அணியாது நகர்ந்தனன்.

44:217

காலுறைக்குப் பதிலாகப் பாதத்தை/விரல்களைத் துணியால் சுற்றும் வழக்கம் இருந்ததாகத்
தெரிகிறது.


44:238

தனது முழங்காலில் யாழின் தோளை அழுத்தி வைத்தனன்.

44:323

பார்க்க 2:22.

44:324

பார்க்க 29:586.

44:327

'ஸ்புறூஸ்' (spruce) மரத்தின் காய்; 20:223ஐயும் பார்க்க.

44:328

சுள்ளிகள், கிளைகள், ஊசி போன்ற இலைகள் என்றும் சிலர் மொழி பெயர்துள்ளனர்.

45:36

கவிநிலை: காலநிலை.

45:112

வீட்டில் தயாரித்த `பீர்'ப் பானத்தால் பிணையல்களை நனைத்தனள். (அகத்து `பீரை`ப்
பெய்து பிணையல்களை நனைத்தனள்.)

45:123

பார்க்க 3:161.

45:124

பார்க்க 38:63.

45:182

வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள்.

45:203

இலைக் கட்டுத் தூரிகை வெப்பமாக்கினான்; பார்க்க 4:4.

45:204

நூறு இலைகள் கொண்ட தூரிகையை மென்மையாக்கினன்.

45:215

புனிதமான தீப்பொறிகளைத் துடைத்து நீக்குக.

45:221

நீரெறிதல் பற்றி சொற்றொகுதியில் 'சவுனா'வைப் பார்க்க.

45:229

காரணம் எதுவும் இல்லாமல் நாம் உண்ணப்பட்டு அழிக்கப்படமாட்டோ ம்.

45:282

Kivutar என்னும் பின்னிஷ் சொல்லில் kipu (gen. kivun) நோவைக் குறிக்கும்.
'-tar' என்பது பெண்பால் விகுதி. அதனால் தான் 'நோவின் மகள்' என்று தமிழில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை 'நோவின் பெண், நோவின் சக்தி, நோவின் தேவதை' என்றும் சிலர்
மொழி பெயர்த்துள்ளனர்.

45:283(i)

இதிலும் பின்னிஷ் மொழியில் ஊனம், காயம், சேதம் என்னும் பொருள்களுள்ள vamma
என்ற சொல்லும் '-tar' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'ஊனத்தின் சக்தி, ஊனத்தின்
தேவதை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

45:283(ii)

ஓர்ந்து தேர்ந்தவளே: தேர்ந்தெடுத்த பெண்ணே, தெரிவான பெண்ணே; சிறந்த பெண்ணே,
நல்ல பெண்ணே என்றும் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

46:6

வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள்.

46:36

இதிலிருந்து அடி 40 வரை ஈட்டியின் வர்ணனை: ஈட்டியின் நுனியில் ஓநாய் நின்றது;
ஈட்டியின் உருக்கினாலான அலகில் கரடி நின்றது; ஈட்டியின் பொருத்தில் காட்டெருது சறுக்கிச் செல்வது
போல நின்றது; கைப்பிடி வழியாக ஒரு குதிரைக்குட்டி செல்லும் பாவனையில் நின்றது; கைப்பிடி
முனையில் ஒரு காட்டுக் கலைமான் நின்றது.

46:56

இந்த அடியில் "அழகு" என்பது கரடியைக் குறிக்கும்.

46:61

இந்த அடியில் கூறப்பட்டது நறுமணமுள்ள மஞ்சள் மலர்களையுடைய ஒரு கொடியை; இதன் பின்னிஷ்
பெயர் kuusama ( honeysuckle, woodbine, Lonicera).

46:63

இந்த அடியில் "கானகத்து அப்பிள்" என்பதும் கரடியைக் குறிக்கும்.

46:64

இந்த அடியில் "தேன் தோய்ந்த பாதம்" என்பதும் கரடியைக் குறிக்கும்.

46:71

இந்த அடியில் "இணையில்லாத அன்பு" என்பதும் கரடியைக் குறிக்கும்.

46:75

பார்க்க 2:21.

46:76

பார்க்க 8:172.

46:105

இந்த அடியில் "பொன்" என்பதும் கரடியைக் குறிக்கும்.

46:177

இந்த அடியில் "பொற்குயில்" என்றும், அடி 118ல் "சடைத்த உரோமப் பிராணி" என்றும்,
அடிகள் 123, 124, 125, 126ல் முறையே "புகழ் நிறைந்தது", "அடவியின்சிறப்பு", "கனமில்லாக்
காலணி", "நீலக் காலுறை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும்.

46:157

இந்த அடியில் கூறப்பட்டது காடுகளில் வாழும் ஒருவகைச் சிறிய குருவியை. இதன் பின்னிஷ்
பெயர் ka*pylintu (crossbill, Loxia).

46:173

பார்க்க 13:75.

46:245

இந்த அடியில் "இனிய பறவை" என்றும், அடிகள் 246, 251, 252ல் முறையே "பொதி"
என்றும், "கறுப்புக் காலுறை" என்றும், "துணிக் காற்சட்டை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும்.

46:246

ka*a*ro* 'கேரோ' என்னும் பின்னிஷ் சொல்லை கட்டு, சுமைக்கட்டு, சிப்பம் என்றும்
மொழிபெயர்க்கலாம் (bundle, pack, roll).

46:253

இந்த அடியில் கூறப்பட்டது ஒரு சிறு பறவையினம், பார்க்க 3:91.

46:254

பார்க்க 6:54.

46:262

உரோமம் நிறைந்த வாயையுடைய கரடி.

46:265

இந்த அடியில் "நாயகன்" என்றும், அடிகள் 266, 268, 275, 276ல் முறையே "ஆடவன்"
என்றும் "திரட்சியானவர்" என்றும், "மனிதன்" என்றும் "பெரிய பையன்" என்றும் வருபவை கரடியையே
குறிக்கும்.

46:272

சுருங்கிய காலுறை அணிந்தோர்க்கு அழிகலீர்! (அழிகலீர்:வருந்தாதீர்).

46:287

வாங்கு = வாங்குப்பலகை, பலகையாசனம் ( bench, wooden seat)

46:317

இவ்வடியில் "கொள்ளைச் செல்வம்" என்பதுவும் கரடியைக் குறிக்கும்.

46:318

பார்க்க 46:157. இவ்வடியில் "சிறுகுருவி" என்பதுவும் கரடியைக் குறிக்கும்.

46:385

பார்க்க 13:219.

46:423

பார்க்க 2:29.

46:424

பார்க்க 2:31.

46:426

பார்க்க 6:50.

46:429

இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் honka (fir); 8:172ஐயும் பார்க்க.

46:430

இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் kuusi (spruce); 2:22ஐயும்
பார்க்க.

46:436

அடி 434ல் `நகங்களை ஆக்கினள்` என்று வருவதால், அடிகள் 435, 436ன்படி 'நகங்களை
எப்படி தாடை எலும்பிலும் பல் முரசிலும் இணைக்கலாம்?' என்ற கேள்வி எழுகிறது. எனவே அடி 434க்கு
'நகங்களையும் பற்களையும் ஆக்கினள்' என்று பொருள் கொள்ள வேண்டும்.

46:635

தப்பியோவின் எக்காளம் எக்காளமிட்டிட.

47:99

மூடப் பெண்ணின் கையிலிருந்து நெருப்பு வீழ்ந்தது.

47:213

இது பனிக்கட்டியை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கூர்மையான கருவி; இதன் பின்னிஷ் சொல்
tuura, ja*a*tuura ( ice pick, [chisel]).

47:238

இந்த அடியிலும் அடிகள் 240, 242லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161.

47:244

பார்க்க 3:194.

47:245

இந்த அடியிலும் அடி 247லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161.

47:248

இந்த மீனுடைய பெயர் வெண்மீன்; பின்னிஷ் பெயர் siika 'சீக்கா' (powan,
white-fish, Coregonus lavaretus); அதன் நிறம் நீலம்.

47:349

இந்த அடியில் கூறப்பட்டது கெண்டை இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மீனை.
இதன் பின்னிஷ் பெயர் sa*yne (ide, ide-fish, Leuciscus idus).

48:67

பார்க்க 10:429.

48:68

பார்க்க 10:429.

48:80

பார்க்க 3:194.

48:81

பார்க்க 3:161.

48:82

ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் பெயர்
sa*rki; பார்க்க 22:333(i).

48:91

சிறை: மீன்பிடி வலையின் ஒரு பக்கக்கூறு.

48:100

பார்க்க 3:161.

48:101

இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் taimen (trout, Salmo trutta).

48:102

பார்க்க 21:166.

48:110

பார்க்க 10:429.

48:111

பார்க்க 10:429.

48:124

நீரில் வளரும் கோரைப்புல்.

48:138

42 அடி நீளமுள்ள கம்பம்.

49:13

(அதே போல) கப்பலின் ஒரு நாள் பயணத்தைக் காற்றும் அறியும்.

49:52

இந்த அடியில் "ஆறு" என்பது எண்ணைக் குறிக்கும். அதாவது "பிரகாசிக்கின்ற ஆறு மூடிகளின்
மேல்" என்று பொருள். "ஒளிரும் சுவர்க்கத்தின் மூடிகளின் மேல்" என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
விளங்கியுள்ளனர்.

49:83

இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.

49:130

பார்க்க 2:22.

49:213

இதிலிருந்து அடி 216 வரை வாளின் அலங்கார வர்ணனை: வாளின் கூரான முனையில் சந்திரன்
திகழ்ந்தது; கைப்பிடியில் சூரியன் ஒளிர்ந்தது; அதன் மேற்புறத்தில் ஒரு குதிரை நின்றது; வாள்களைத்
தொங்க விடுவதற்காக ஒரு முளை இருக்கும்; அந்த முளையின் வழியில் `மியா மியா` என்று கத்தும்
பாவனையில் ஒரு பூனை நின்றது.

49:217

இது அந்தக் காலத்தில் இருந்த ஒரு போர்முறை. பார்க்க 27:300.

49:228

பார்க்க 27:135.

49:246

ஒரு செங்குத்தான பாறையில் ஒரு செயற்கையான கோடு இருந்தது. இரகசியமான கோடு என்றும்
மொழிபெயர்ப்பு உண்டு.

49:256

பார்க்க 21:395.

49:275

இந்த அடியும் அடுத்த அடியும்: "அவன் கை முட்டியால் கதவைத் திறக்க முயன்றான்; சொல்
வலிமையால் பூட்டைத் திறக்க முயன்றான்."

49:282

இந்த அடியில் சொல்லப்பட்ட ஆயுதத்தின் பின்னிஷ் பெயர் kuokka. இதனை மண்வெட்டி,
மண்கொத்தி, உழவாரப் படை என்று தான் மொழிபெயர்க்கலாம் (hoe). 49:304ல் 'மும் முனையுள்ள'
என்றுவருவதால் திரிசூலம் (trident) என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

49:304

பார்க்க 49:282.

49:305

பார்க்க 47:213.

50:9

அவள் ஒளி வீசிய பாவாடைகளை அணிந்து திரிந்ததால், அவ்வொளி பட்டு வாயிற்படிகளில்
பாதி மங்கிப் போய்விட்டன. வாயிற்படி என்றும் களஞ்சியக்கூடம் என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு.

50:52

இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.

50:64

ஜேர்மன் நாட்டு 'ஸ்ரோபரி'ப் பழமே! பார்க்க 2:79.

50:82

ஒரு வகைச் சிறிய பழம். இதன் பின்னிஷ் சொல் puolukka. பார்க்க 10:450.

50:87

இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகை நத்தையை. இதன் பின்னிஷ் பெயர் etana (slug,
snail).

50:104

ஒரு வகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450.

50:105

இந்த அடியும் அடுத்த அடியும்: "அந்தப் பழம் நிலத்திலிருந்து பறித்து உண்ண முடியாத அளவு
உயரத்தில் இருந்தது; (ஆனால்) ஏறிப் பறிக்க முடியாத அளவு மரம் தாழ்வாக இருந்தது."

50:172

இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola; பார்க்க 10:450.

50:179

இந்த அடிகளில் 'குளியல்' என்று வருவது சவுனா நீராவிக் குளியலையே குறிக்கும்;
சொற்றொகுதியில் 'சவுனா' பார்க்க.

50:208

பின்னிஷ் மொழியில் saraoja என்ற சொல்லே 'புல்வளர் அருவி' என்று இந்த அடியில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே சொல் saraja என்றும் சில இடங்களில் வருகிறது. தற்காலத்தில்
வழக்கில் இல்லாத தற்கால அகராதிகளில் இடம் பெறாத சொற்களில் இதுவும் ஒன்று. இந்தச்
சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. உதாரணமாக
18:116ல் இச்சொல் 'மரண ஆறு' என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதைக் காணலாம். 'இருண்ட
வடநாடு' என்ற பொருளில் வரும் sariola என்ற சொல்லின் திரிபே இது என்றும் சிலர்
கூறியுள்ளனர். இதற்குமேல் தெளிவான விளக்கத்தைப் பெற முடியவில்லை.

50:220

பார்க்க 50:208.

50:239

மேசை ஒன்றின் தலைப்பக்கம் அமர்ந்திருந்தனன்.

50:301

அடி வைத்துக் கடிதாய் அவளும் விரைந்தனள்.

50:304

இங்குள்ள குதிரை லாயத்தில் மர்யத்தா குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இதைத் தப்பியோ
மலை, தப்பியோ குன்றம் என்றும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

50:338

சாணைச் சீலை: கைக்குழந்தைகளை மூடிப் பொதியும் சீலை (swaddling clothes;
perh. ஏணை).

50:466

வாய்மொழிப் பாடல்களாகவே பலகாலம் இருந்து, பின்னர் சேகரிக்கப்பட்ட தொகுப்புகளில்
சில முரண்பாடுகள் குழப்பங்கள் வருவது இயல்பு. மூன்றாம் பாடலில் தன் தாய் பெற்ற, தன் சொந்தச்
சகோதரியான ஐனோவைக் கொடுப்பதாக வாக்களித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்வந்தவன்
யொவுகாஹைனன்; வைனாமொயினன் அல்ல.

50:563

இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன்பின்னிஷ் சொல் kiuru 'கியுறு'
(skylark, lark, Alauda arvenis).

50:564

இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப் பறவை; (thrush); பார்க்க
22:477.


ஆதார நூல்கள் (Bibiliography for the Introduction and translation)

ஆங்கிலத்தில் - In English:

  1. Bosely, Keith (transl.), 1989. See Lo*nnrot 1989.

  2. Burrow, Thomas. 1943-46, Dravidian studies IV: The body in Dravidian and Uralian. Bulletin of the School of Oriental and African Studies 11: 328-356.

  3. Cowie, A.P., (chief ed.) 1989. Oxford Advanced learner's English dictionary. Fourth edition. London: Oxford University Press.

  4. Deutsch, Babette, 1940. Heroes of Kalevala: Finland's Saga, Illustrated by Fritz Eichenberg. New York: Julien Messner, Inc. 238 p. Reprinted, 1960.

  5. Gallen-Kallela, Aivi (ed.), 1985, See Lo*nnrot 1985.

  6. Haavio, Martti, 1952. Va*ina*mo*inen: Eternal sage. Porvoo and Helsinki: Werner So*derstro*m Osakeyhtio*. 277 pp., with 36 figures and 1 map.

  7. Honko, Lauri (ed.), 1990. Religion, myth, and folklore in the world's epics: The Kalevala and its predecessors. (Religion and Soceity 30.) Berlin & New York: Mouton de Gruyter. xii, 587 pp.

  8. Honko, Lauri, Senni Timonen and Michael Branch (eds.) 1993. The Great Bear: A thematic anthology of oral poetry in Finno-Ugrian languages. (Publications of the Finnish Literature Society 533.) Helsinki: The Finnish Literature Society. 787 pp. illustrated.

  9. Hurme, Raija, Riitta-Leena Malin & Olli Syva*oja 1984. Uusi suomi-englanti suursanakirja, Finnish-English general dictionary. Porvoo, Helsinki & Juva: Werner So*derstro*m Osakeyhtio*. xxiv, 1446 pp.

  10. Jarvenpa, Aili and Michael G. Karni (eds.) 1989. Sampo, the magic mill: A collection of Finnish-American writing. (Many Minnesotas Project, 5.) New York: New Rivers Press. 405 pp., illustrated.

  11. Kalevala 1835-1985: The national epic of Finland. (Books from Finland.) Helsinki: Helsinki University Library, 1985. iii, 80 p., illustrated.

  12. Kaplan, Irma, 1973. Heroes of Kalevala. Illustrated byBarbara Brown. London: Frederick Muller Ltd. 63 pp. [Translations of selected episodes of Kalevala.]

  13. Kirby, W.F. (transl.) 1907. See Lo*nnrot 1907.

  14. Kirkinen, Heikki, and Hannes Sihvo, [1985]. The Kalevala: An epic of Finland and all mankind. Helsinki: Finnish-American Cultural Institute. 80 pp.. with many colour and black-and-white illustrations.

  15. Kolehmainen Johnson, Aili (transl.), 1950. See Lo*nnrot 1950.

  16. Kuusi , Matti, Keith Bosley and Michael Branch (eds. and transl.) 1977. Finnish folk poetry -- Epic: An anthology in Finnish and English. (Publications of the Finnish Literature Society 329.) Helsinki. Finnish Literature Society. 607 pp., 46 photographs.

  17. Lo*nnrot, Elias, 1907. Kalevala: the land of (the) heroes, I-II. Translated from the Finnish by W.F.Kirby. Introduction by J.B.C.Grundy. (Everyman's Library, 259-260.) London: J. M. Dent & Sons Ltd., and New York: E.P.Dutton & Co. inc. viii, 328 + viii, 285 pp. Reissued with an introduction and annotations by Michael Branch, London: The Athlone Press, 1985; and in Lo*nnrot 1985.

  18. [Lo*nnrot, Elias,] 1950. Kalevala. A prose translation from the Finnish by Aili Kolehmainen Johnson. Illustrated by Elizabeth Halvary and L.W. Leskinen. Hancock, Michigan: Book Concern. 278p.

  19. Lo*nnrot, Elias, 1963. The Kalevala, or Poems of the Kaleva District, compiled by Elias Lo*nnrot. A prose translation with foreword and appendices by Francis Peabody Magoun Jr. Cambridge, Mass.: Harward University Press. xxiv, 413 pp.

  20. Lo*nnrot. Elias, 1985. Kalevala with the Kalevala art of Akseli Gallen-Kallela.Translated by W.F.Kirby (1907). Edited by Aivi Gallen-Kallela. Porvoo and Helsinki: Werner So*derstro*m Oy. 4:o,

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home