| Holy Bible - Old Testament Book 29 
(Joel), 30 (Amos); 31 (Obadiah);
 Book 32 (Jonah); 33 (Micah); 34 (Nahum);
 Book 35 (Habakkuk); 36 
(Zephaniah); 37 (Haggai)
 and Book 38 (Zachairah)
 
			விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 
			31(ஒபதியா);
 புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்)
 புத்தகம் 35 (அபகூக்கு); 36 
			(செப்பனியா); 37 - ஆகாய்
 & புத்தகம் 38 (செக்கரியா)
 
 
	
		Acknowledgements:Our sincere 
		thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai 
		for providing us with the"bamini" Tamil font e-version of this work and 
		for his help in proof-reading of the TSCII version. PDF and Web versions 
		Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2007. 
		Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to 
		preparation of electronic texts of tamil literary works and to 
		distribute them free on the Internet. Details of Project Madurai are 
		available at the website 
		
		http://www.projectmadurai.org/  You are welcome to freely 
		distribute this file, provided this header page is kept intact. 
	 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடு புத்தகம் 29 
- யோவேல்அதிகாரம் 1.
1.      
பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: 2.      
முதியோரே, இதைக் கேளுங்கள்: நாட்டிலிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி 
கொடுங்கள்: உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையரின் நாள்களிலாவது இதுபோன்று 
நடந்ததுண்டோ ?
 3.      இதைக் குறித்து உங்கள் 
பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்: உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்: 
அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.
 4.      
வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது: இளம் வெட்டுக்கிளி 
தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது: துள்ளும் வெட்டுக் கிளி தின்று 
எஞ்சியதை வளர்த்த வெட்டுக்கிளி தின்றழித்தது.
 5.      
குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்: திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் 
அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்: ஏனெனில், அது உங்கள் 
வாய்க்கு எட்டாமற் போயிற்று.
 6.      ஆற்றல்மிக்க, 
எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி 
இருக்கின்றது: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்: பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் 
அதற்கு உண்டு..
 7.      
என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று: அத்தி மரங்களை முறித்துப் போட்டது: 
அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது: அவற்றின் கிளைகள் வெளிறிப் 
போயின.
 8.      கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு 
உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
 9.      
ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. 
ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.
 10.       
வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் 
அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ 
மரங்கள் பட்டுப் போயின:
 11      உழவுத் தொழில் 
செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், 
கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
 12.       திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: 
அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, போணந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் 
யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது.
 13.       
குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்: பலிபீடத்தில் பணிபுரிவோரே! 
அலறிப் புலம்புங்கள்: என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் 
கழியுங்கள்: ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் 
இல்லாமற் போயின.
 14.       உண்ணா நோன்புக்கென 
நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்: ஊர்ப் பெரியோரையும் 
நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் 
கூடிவரச் செய்யுங்கள்: ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்..
 15.       மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் 
நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்:
 16.       
உணவுப் பொருளெல்லாம் பாழாய்ப் போனதை நம் கண்கள் காணவில்லையா? நம் கடவுளின் 
இல்லத்திலிருந்து மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமற்போனதை நாம் பார்க்கவில்லையா?
 17.       விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின: 
பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன: களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன: கோதுமை விளைச்சல் 
இல்லாமற் போயிற்று.
 18.       காட்டு 
விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து 
நிற்கின்றன: ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன!
 19.       
ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் 
தீக்கிரையாயின: வயல்வெளியிலிருந்தே மரங்கள் அனைத்தையும் நெருப்பு 
சுட்டெரித்துவிட்டது.
 20.       நீரோடைகள் 
வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன: பாலைநிலத்திலிருந்த 
மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.
 
 
 அதிகாரம் 2.  
 1.      
சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: என்னுடைய திரு மலைமேலிருந்து 
கூக்குரலிடுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், 
ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்: அது வந்து விட்டது.
 2.      
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்: மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்: 
விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் 
பெருங்கூட்டம் வருகின்றது: இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை: இனிமேல் தலைமுறை 
தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.
 3.      அவை 
வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் 
தோட்டம் போலிருக்கும்: அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்: அவற்றுக்கு எதுவுமே 
தப்பமுடியாது.
 4.      பார்வைக்கு அவை குதிரைகள் 
போலிருக்கின்றன: போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.
 5.      
அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் 
நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் 
மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்.
 6.      
அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்: அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் 
போகும்..
 7.      அவை 
போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன: படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன: 
ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது: தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.
 8.      ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை: ஒவ்வொன்றும் தன் 
வழி தவறாது செல்கின்றது: போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை 
கலையாமல் முன்னேறுகின்றன.
 9.      நகருக்குள் பாய்ந்து செல்கின்றன: மதில்மேல் 
ஓடுகின்றன: வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன.
 10.       அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது: 
வானம் அசைகின்றது: கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன: விண்மீன்களும் ஒளி இழந்து 
போகின்றன.
 11.       ஆண்டவர் தம் படைகள்முன் 
முழக்கம் செய்கின்றார்: அவரது பாளையம் மிக மிகப் பெரிது: அவர் தம் வாக்கை நிறைவேற்ற 
ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது: அச்சம் தர வல்லது, அதைக் 
தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்?
 12.      "இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது 
புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் " என்கிறார் 
ஆண்டவர்.
 13.      "நீங்கள் உங்கள் உடைகளைக் 
கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் 
திரும்பி வாருங்கள்" அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய 
பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் 
மாறுகின்றவர்.
 14.       ஒருவேளை அவர் தம் மனத்தை 
மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் 
படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?.
 15.       சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: 
புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.
 16.       மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித 
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், 
பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் 
அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.
 17.       
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே 
நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை 
வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர் " எனச் 
சொல்வார்களாக!.      "அவர்களுடைய கடவுள் எங்கே? " என 
வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?.
 18.       
அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை 
காட்டினார்..
 19.       
ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: "நான் உங்களுக்குக் 
கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்: நீங்களும் நிறைவு பெறுவீர்கள்: 
இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். "
 20.       
வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்: அதனை 
வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் 
கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண 
நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்: ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் 
புரிந்தது.
 21.       நிலமே நீ அஞ்சாதே: 
மகிழ்ந்து களிகூரு: ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்..
 22.       காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்: 
ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன: மரங்கள் கனி தருகின்றன: 
அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன..
 23.       சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் 
கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை 
நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் 
பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.
 24.       
போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்: ஆலைகளில் திராட்சை இரசமும் 
எண்ணெயும் வழிந்தோடும்.
 25.       நான் 
உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் 
வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை 
அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்.
 26.       
நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி 
வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் 
ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டா்கள்.
 27.       
இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் 
என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: இனிமேல் என் 
மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
 28.       
அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் 
புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் 
இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
 29.       
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்..
 30.       இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு 
செயல்களைச் செய்து காட்டுவேன்: எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், 
புகைப்படலமாகவும் இருக்கும்..
 31.       
அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்: நிலவோ 
இரத்தமாக மாறும்..
 32.       
அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்: 
ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் 
வாழ்வு அடைவர்: ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள்.
 
 
 அதிகாரம் 3. 1.       
அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த 
நிலைமைக்கே கொண்டுவருவேன்:
 2.      அப்பொழுது நான் 
வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் 
செய்வேன்: அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு 
அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்: ஏனெனில், அவர்கள் என் மக்களை 
வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்: எனது நாட்டைத் தங்களுக்குள் 
பங்கிட்டுக்கொண்டார்கள்:.
 3.      
என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்: ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் 
கொடுத்தார்கள்: பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் 
குடித்தார்கள்..
 4.      
தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் 
உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? 
அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் 
தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
 5.      
நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்: விலையுயர்ந்த 
பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.
 6.      
யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்: 
இவ்வாறு அவர்கள் தங்கள நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.
 7.      
நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: 
நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்..
 8.      உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா 
மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் 
விற்றுவிடுவார்கள்: " இதைக் கூறுவது ஆண்டவரே..
 9.      வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்: 
போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்ததெழச் செய்யுங்கள்: படை வீராகள் 
அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.
 10.       
உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்: கதிரறுக்கும் 
அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக் கொள்ளுங்கள்: வலுவற்றவனும் "நானொரு போர்வீரன் " 
என்று சொல்லிக் கொள்ளட்டும்.
 11.       சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று 
நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்: வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் 
கூடுங்கள்: ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.
 12.       
வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்: கிளர்ந்தெழுந்து யொசபாத்து 
பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்: ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் 
அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன்.
 13.       
அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது: திராட்சைப் பழங்களை மிதித்துப் 
பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன: அவர்கள் செய்த 
கொடுமை மிகப் பெரிது.
 14.       திரள் திரளாய் 
மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், 
ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.
 15.       
கதிரவனும் நிலவும் இருளடைகின்றன: விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.
 16.       
சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் 
முழங்குகின்றார்: விண்ணும் மண்ணும் அதிர்கின்றன: ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் 
புகலிடம்: இஸ்ரயேலருக்கு அரணும் அவரே..
 17.       
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் 
குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்: எருசலேம் பயதாய் 
இருக்கும்: அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்..
 18.       அந்நாளில் மலைகள் இனிய, புது 
இரசத்தைப் பொழியும்: குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்: யூதாவின் 
நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்: ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று 
ஒன்று கிளம்பும்: அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும்.
 19.       
எகிப்து பாழ்நிலமாகும்: ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்: ஏனெனில், அவர்கள் 
யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்: அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற 
இரத்தத்தைச் சிந்தினார்கள்..
 20.       
யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்: எருசலேமில் எல்லாத் 
தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள்.
 21.       
சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்: குற்றவாளிகளைத் தண்டியாமல் 
விடேன்: ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
30: ஆமோஸ்
 அதிகாரம் 1.  
 1.       
தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை 
உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் 
ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு 
கூறியவை பின்வருமாறு:
 2.       சீயோனிலிருந்து 
ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: 
இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் 
காய்ந்து போகின்றது'
 3.       ஆண்டவர் கூறுவது 
இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் 
திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு 
போராடித்தார்கள்.
 4.       ஆதலால் அசாயேல் 
வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும்.
 5.       
தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவரகளையும் 
பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு 
நாடுகடத்தப்படுவார்கள்' என்கிறார் ஆண்டவர்.
 6.       ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா நகரினர் 
எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். 
அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்:
 7.       
ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை 
விழுங்கிவிடும்.
 8.       அஸ்தோதில் 
குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: 
எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் 
அழிந்திடுவர்' என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர்.
 9 ஆண்டவர் கூறுவுது இதுவே: 
"தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை 
மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் 
கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.
 10.       
ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை 
விழுங்கிவிடும். "
 11.       ஆண்டவர் கூறுவது 
இதுவே: "ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை 
மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் 
சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் 
காட்டி வந்தான்:
 12.       ஆதலால் தேமான்மேல் 
நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும்.
 13.       
ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் 
கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு 
எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் 
கிழத்தார்கள்.
 14.       ஆதலால், இராபாவின் கோட்டை 
மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, 
போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும்.
 15.       
அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு 
போகப்படுவார்கள்' என்கிறார் ஆண்டவர்.
 
 
 அதிகாரம் 2. 1.       
ஆண்டவர் கூறுவது இதுவே: "மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த 
தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் 
சுட்டுச் சாம்பலாக்கினான்.
 2.       ஆதலால், 
மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்: 
இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு 
மடிந்திடுவான்.
 3.       அந்நாட்டின் ஆட்சியாளனை 
அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்: அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து 
விடுவேன்' என்கிறார் ஆண்டவர்.
 4.       ஆண்டவர் 
கூறுவது இதுவே: "யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் 
தீர்ப்பை மாற்றவேமாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை 
புறக்கணித்தார்கள்: அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை: அவர்களுடைய தந்தையர் 
பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன.
 5.       
ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது எருசலேமின் கோட்டைகளை 
விழுங்கிவிடும்."
 6.       ஆண்டவர் கூறுவது 
இதுவே: "இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை 
மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு 
காலணிக்கும் விற்கின்றார்கள்.
 7.       ஏழைகளின் 
தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோ ரின் நெறியைக் 
கெடுக்கின்றார்கள்: மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் 
களங்கப்படுத்துகின்றார்கள்.
 8.       
கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் 
முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்"த மதுவினைத் தங்கள் கடவுளின் 
இல்லத்தில் குடிக்கின்றார்கள்.
 9.       நானோ 
கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் 
முன்பாக அழித்துவிட்டேன்: மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் 
அழித்துவிட்டேன்:
 10.       மேலும், எகிப்து 
நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை 
வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன்.
 11.       உங்கள் புதல்வர்களுள் சிலரை 
இறைவாக்கினராய் உயர்த்தினேன்: உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் 
தேர்ந்துகொண்டேன்: இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்"றோ?" என்கிறார் ஆண்டவர்.
 12.       
ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்: இறைவாக்கினருக்கு "இறைவாக்கு 
உரைக்கக்கூடாது" என்று கட்டளையிட்டீர்கள்.
 13.       
வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் 
இடத்திலேயே அழுத்துவேன்.
 14.       
விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது: வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்: 
வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.
 15.       
வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் 
காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.
 16.       அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் 
கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் பக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.
 
 
 அதிகாரம் 3. 1.       
இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்: உங்களுக்கு எதிராக-ஆம், எகிப்து நாட்டினின்று நான் 
அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக-ஆண்டவர் உரைக்கும் இந்த 
வாக்கைக் கேளுங்கள்:
 2.       உலகத்திலுள்ள 
எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், 
உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.
 3.       
தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
 4.       
இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் 
பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழுக்கம் செய்யுமோ?
 5.       
வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ ? 
ஒன்றுமே சிக்காதிருக்கும்போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ ?
 6.       
நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் 
அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?
 7.       
தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய 
ஆண்டவர் ஏதும் செய்வதில்லை.
 8.       சிங்கம் 
கர்ச்சனை செய்கின்றது: அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, 
இறைவாக்கு உரைக்காதவர் எவர்?
 9.       
"அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு 
இவ்வாறு பறைசாற்று: சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்: அங்கு ஏற்படும் 
குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.
 10.       
நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரியவதில்லை" என்கிறார் ஆண்டவர். "அவர்கள் தங்கள் 
கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்."
 11.       
ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து 
கொள்வான்: அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்: உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.
 12.       ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் 
வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி 
எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து 
இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும். "
 13.       
"கேளுங்கள்: யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்," என்கிறார் 
தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.
 14.       
"இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை 
அழிப்பேன்: பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும்.
 15.       
குளிர்கால வேனிற்"கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்: தந்தத்தாலான வீடுகள் அழிந்து 
போகும்: மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்," என்கிறார் ஆண்டவர்.
 
 
 அதிகாரம் 4. 1.       
சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்: ஏழைகளை ஒடுக்கி, 
வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, "கொண்டுவாருங்கள், 
குடிப்போம்" என்று சொல்கிறீர்கள்.
 2.       
இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: "உங்களுக்கு 
அந்த நாள்கள் வருகின்றன: அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் 
எஞ்சியிருப்போரைத் பண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள்.
 3.       
நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் 
வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.
 4.       
"வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்: கில்காலுக்கு வந்து 
குற்றங்களைப் பெருக்குங்கள்: நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு 
வாருங்கள்: மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
 5.       
புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்: 
நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் 
செய்வதுதானே உங்கள் விருப்பம் ", என்கிறார் ஆண்டவர்.
 6.       
"உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்: நீங்கள் 
குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்: ஆயினும் 
நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
 7.       "நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் 
இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்: ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து 
அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு 
வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று.
 8.       
ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு 
நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை: இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் 
பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
 9.       
"வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் 
திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்: அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் 
வெட்டுக்கிளி தின்றது: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை," என்கிறார் 
ஆண்டவர்.
 10.       "எகிப்தின்மீது அனுப்பிய 
கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்: உங்கள் இளைஞர்களை வாளால் 
வெட்டி வீழ்த்தினேன்: உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின: உங்கள் பாளையங்களில் 
செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்: ஆயினும் நீங்கள் என் 
பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.
 11.       
"சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். 
நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்: ஆயினும் 
நீங்கள் என்பக்கம் திரும்"பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
 12.       
"ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் 
போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு! "
 13.       
ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே: காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே: தம் எண்ணத்தை 
மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே: காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் 
அவரே: நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் 
என்பதே அவரது பெயராகும்.
 
 
 அதிகாரம் 5. 1.       
இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்:
 2.       "இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் 
விழுந்துகிடக்கிறாள், இனி எழவேமாட்டாள்: தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்: 
அவளைத் பக்கிவிடுவார் யாருமில்லை."
 3.       
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் மறு பேரே 
எஞ்சியிருப்பர்: மறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்: இஸ்ரயேல் 
வீட்டாரின் கதி இதுவே."
 4.       இஸ்ரயேல் 
வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்:
 5.       ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள், கில்"காலில் 
காலெடுத்து வைக்காதீர்கள்: பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்: ஏனெனில் 
கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்: பெத்தேல் பாழாக்கப்படும்.
 6.       
ஆண்டவரைத் தேடுங்கள்: நீங்கள் வாழ்வீர்கள்: இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் 
தீ மூளச் செய்வார். அந்நெருப்பு அதை விழுங்கிவிடும், பெத்தேலில் அந்நெருப்பை 
அணைக்கக்கூடியவர் எவருமிரார்.
 7.       அவர்கள் 
நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்: நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.
 8.       
ஆனால், அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்: காரிருளைக் 
காலைப்பொழுது ஆகச் செய்பவர்: பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்: கடல் நீரை 
அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்: அவரது பெயர் "ஆண்டவர் ".
 9.       
வலிமை மிக்க தளங்கள்மேல் அவர் அழிவை அனுப்புவதால் அவை அழிவைக் காண்கின்றன.
 10.       
அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு தங்களைக் கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள்: உண்மை 
பேசுபவனை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.
 11.       
நீங்கள் ஏழைகளை நசுக்கி, அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு நன்கு 
செதுக்கிய கற்களால் வீடு கட்டினீர்கள்: அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை: 
அருமையான திராட்சைத் தோட்டங்களை அமைத்தீர்கள்: அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் 
குடிக்கப் போவதில்லை.
 12.       உங்கள் குற்றங்கள் எவ்வளவு 
மிகுதியானவை என்றும் உங்கள் பாவங்கள் எத்துணைக் கொடியவை என்ும் நான் அறிவேன்: 
நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், நகர் வாயிலில் 
வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள்.
 13.       
அது கெட்ட காலம் என்பதால், அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.
 14.       
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்: அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் 
கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
 15.       
தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்: நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்: 
அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் 
எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.
 16.       
ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பொதுவிடங்கள் 
எங்கும் அழுகுரல் கேட்கும், எல்லா வீதிகளிலும், "ஜயோ! ஜயோ!" என்ற புலம்பல் 
எழும்பும்: வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்: ஒப்பாரி பாடத் 
தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.
 17.       திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே 
அழுகையாய் இருக்கும்: ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென் ", என்கிறார் 
ஆண்டவர்.
 18.       ஆண்டவரின் நாளைப் பார்க்க 
விரும்புவோரே, உங்களுக்கு ஜயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது 
ஒளிமிக்க நாளன்று: இருள் சூழந்த நாளாகத் தான் இருக்கும்.
 19.       
அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று 
எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் 
சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!
 20.       
ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று: அது இருள் கவிந்தது அல்லவா? வெளிச்சமில்லாத 
காரிருள் அல்லவா?
 21.       "உங்கள் 
திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்: உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் 
எனக்கு விருப்பமே இல்லை.
 22.       எரிபலிகளையும் 
தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்: கொழுத்த 
விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்"போது நான் ஏறெடுத்தும் 
பார்க்கமாட்டேன்.
 23.       என் முன்னிலையில் 
நீங்க்ள இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை 
நான் கேட்க மாட்டேன்.
 24.       மாறாக, நீதி 
வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
 25.       
"இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் 
காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?
 26.       
நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் 
கொண்டீர்கள்: அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்: அந்தச் 
சிலைகளை நீங்கள் பக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.
 27.       
உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன் ", என்கிறார் ஆண்டவர்: 
அவரது பெயர் "படைகளின் கடவுள். "
 
 
 அதிகாரம் 6. 1.       
"சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் 
கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் 
மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஜயோ கேடு!
 2.       
கல்னேக்குப் போய்ப் பாருங்கள்: அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்: 
பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்: அந்த அரசுகள் உங்கள் அரசுகளை 
விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?
 3.       தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் 
நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.
 4.       தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து 
கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் 
கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஜயோ கேடு!
 5.       
அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்"போல புதிய 
இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.
 6.       
கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் 
தடவிக்கொள்கின்றார்கள்.
 7.       ஆகையால் 
அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் 
இல்லாதொழியும்.
 8.       தலைவராகிய ஆண்டவர் 
தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்: 
யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்: அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன். 
நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.
 9.       
ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.
 10.       
வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்: 
ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், "உன்னுடன் வேறு யாரேனும உளரோ?" 
என்று கேட்க, அவன், இல்லை" என்று பதில் சொல்லி "பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் 
கூடாது" என்பான்.
 11.       ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்: பெரிய 
மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்: சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
 12.       
பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ ? நீங்கள் நீதியை 
நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.
 13.       லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப் 
பூரிப்பு அடைகிறீர்கள்: "நம் சொந்த வலிமையால் கர்னாயிமைப் பிடித்து நமதாக்கிக் 
கொள்ளவில்லையா?" என்கிறீர்கள்.
 14.       
இஸ்ரயேல் வீட்டாரே! உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் பண்டிவிடுவேன். அவர்கள் 
ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் 
துன்புறுத்துவார்கள் ", என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
 
 
 அதிகாரம் 7. 1.       
தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "அரசனுக்கென முதல் புல்லறுப்புச் 
செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் 
வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
 2.       
நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் 
"இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: யாக்கோபு 
எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறயவன் அல்லவா!" என்றேன்.
 3.       
ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: "இது நிகழாது," என்றார் தலைவராகிய 
ஆண்டவர்."
 4.       தலைவராகிய ஆண்டவர் எனக்குக் 
காட்டிய காட்சி இதுவே: "தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை 
வருவித்தார்: அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் 
கொண்டிருந்தது.
 5.       நான், "தலைவராகிய 
ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்: யாக்கோபு எப்படி 
நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!" என்றேன்.
 6.       
ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: "இதுவும் நிகழாது," என்றார் தலைவராகிய 
ஆண்டவர்."
 7.       ஆண்டவர் எனக்குக் காட்டிய 
காட்சி இதுவே: "பக்கு மல் குண்டின் துணைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு மதில் அுகில் அவர் 
நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பக்கு மல் குண்டு இருந்தது.
 8.       
"ஆமோஸ்! நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது 
பக்கு மல் குண்டு" என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: "பக்கு மல் குண்டை என் 
மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்: இனி நான் அவர்கள் நடுவே 
ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை ".
 9.       
ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும்: இஸ்ரயேலின் புனித இடங்கள் பாலைவெளி 
ஆக்கப்படும்: எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்."
 10.       
பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு 
இவ்வாறு சொல்லியனுப்பினான்: "இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி 
செய்கிறான்.
 11.       அவன் சொல்வதை எல்லாம் 
இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், "எரொபவாம் வாளால் மடிவான்: அவனது 
நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்" என்று ஆமோஸ் சொல்லுகிறான்."
 12.       பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, 
"காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் 
இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.
 13.       
பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், 
அரசுக்குரிய இல்லம்" என்று சொன்னான்.
 14.       
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினன் 
இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், 
காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
 15.       ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை 
ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு" 
என்று அனுப்பினார்.
 16.       எனவே, இப்பொழுது 
ஆண்டவரின் வாக்கைக் கேள்: "இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே: ஈசாக்கின் 
வீட்டாருக்கு எதிராகப் பேசாதே" என்று நீ சொல்கிறாய்!
 17.       
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்: உன் புதல்வர் 
புதல்வியர் வாளால் மடிவர்: உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும், நீயோ 
புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்: இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் 
கொண்டு போகப்படும். "
 
 
 அதிகாரம் 8. 1.       
தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று 
கண்டேன்.
 2.       அவர், "ஆமோஸ்! என்ன 
காண்கிறாய்?" என்று கேட்டார்: நான், "கனிந்த பழங்கள் உள்ள கூடை" என்றேன். ஆண்டவர் 
என்னிடம் தொடர்ந்து பேசினார்: "என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி 
அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
 3.       
அந்நாளில் "கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய 
மரியாதையின்றித் பக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!" என்கிறார் தலைவராகிய 
ஆண்டவர்.
 4.       "வறியோரை நசுக்கி, நாட்டில் 
உள்ள ஒடுக்கப்பட்டோ ரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:
 5.       
"நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு 
விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் 
கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்:
 6.       
வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் 
பதர்களையும் விற்கலாம்" என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?
 7.       
ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: "அவர்களுடைய இந்தச் 
செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
 8.       
இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு 
முழுவதும் நைல்"நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் 
நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?
 9.       
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து 
பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.
 10.       
உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்"பலாகவும் மாற்றுவேன்: 
எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் 
செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நிங்களும் புலம்புமாறு 
செய்வேன்: அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்."
 11.       
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: "இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் 
பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: 
ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.
 12.       
ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று 
அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் 
கண்டடையமாட்டார்கள்.
 13.       அந்நாளில் அழகிய 
கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
 14.       
சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, "தாண் நாடே! வாழும் உன் 
கடவுள்மேல் ஆணை!" எனவும் "பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!" எனவும் 
சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்: மீண்டும் எழவே மாட்டார்கள்.
 
 
 அதிகாரம் 9. 1.       
பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: பணின் முகட்டை 
இடித்துப் போடு: மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்: மக்கள் அனைவருடைய தலையிலும் அதை 
உடைத்துத் தள்ளு: அவர்களுள் எஞ்சியிருப்போரை நான் வாளால் கொன்றுபோடுவேன்: அவர்களில் 
எவரும் ஓடிப்போக மாட்டார்: ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.
 2.       
பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும் அங்கிருந்தும் என் கை அவர்களை இழுத்து வரும்: 
வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும், அங்கிருந்தும் நான் அவர்களைப் பிடித்து 
வருவேன்:
 3.       கர்மேல் மலையுச்சியில் ஓடி 
ஒளிந்துகொண்டாலும், அவர்களைத் தேடிப் பிடித்து அங்கிருந்து கொண்டு வருவேன்: என் 
கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி 
பாம்புக்குக் கட்டளையிடுவேன்.
 4.       தங்கள் 
பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி 
வாளுக்கு ஆணையிடுவேன்: அவர்களுக்கு நன்மை செய்யாது தீங்கு செய்வதிலேயே நான் 
கண்ணாயிருப்பேன்.
 5.       படைகளின் கடவுளாகிய ஆண்டவர் தொட 
மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது: அதில் வாழ்வோர் அனைவரும் புலம்புகின்றனர்: நாடு 
முழுவதும் நைல்நதியின் வெள்ளமென சுழற்றியெறியப்படுகின்றது: எகிப்து நாட்டின் 
நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.
 6.       
அவர் வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகின்றார்: வானின் வளைவை நிலத்தில் 
அடித்தளமிட்டு நாட்டுகின்றார்: கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின்மேல் 
பொழிகின்றார்: "ஆண்டவர்" என்பது அவரது பெயராம்.
 7.       
"இஸ்ரயேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள்தானே? இஸ்ரயேல் 
மக்களை எகிப்து நாட்டினின்றும், பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும், சிரியரைக் 
கீரிலிருந்தும் நான் அழைத்து வரவில்லையா?" என்கிார் ஆண்டவர்.
 8.       
தலைவராகிய ஆண்டவரின் கண்கள் பாவம் செய்யும் அரசை உற்றுப் பார்க்கின்றன: "மண்ணுலகில் 
இராதபடி அதை நான் அழித்து விடுவேன். ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நான் முற்றிலும் 
அழிக்கமாட்டேன்" என்கிறார் ஆண்டவர்.
 9.       
நான் ஆணை பிறப்பிப்பேன்: எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ரயேல் வீட்டாரைச் 
சல்லடையில் தானியத்தைச் சலிப்பதுபோலச் சலிக்கப் போகின்றேன்: ஆயினும் கோதுமை மணி 
ஒன்றும் தரையில் விழாது.
 10.       "தீமை எங்களை 
அணுகாது, எங்கள்மேல் வராது" என்று என் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ, 
அவர்கள் அனைவரும் வாளால் மடிவார்கள்.
 11.       
"அந்நாள்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். 
அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் 
இருந்ததுபோல் மீண்டும் கட்டியெழுப்புவேன்.
 12.       
அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற 
இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்," என்கிறார் இதைச் 
செயல்படுத்தும் ஆண்டவர்.
 13.       "இதோ! 
நாள்கள் வரப்போகின்றன: அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை 
விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்: மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்: 
குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்," என்கிறார் ஆண்டவர்.
 14.       
"என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன்: அவர்கள் பாழடைந்த 
நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்: திராட்சைத் தோட்டங்களை 
அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத்தோட்டங்கள் அமைத்து அவற்றின் 
கனிகளை உண்பார்கள்.
 15.       அவர்களைத் தங்கள் 
நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்: நான் அவர்களுக்கு அளித்திருக்கும் 
நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்படமாட்டார்கள்," என்கிறார் உங்கள் 
கடவுளாகிய ஆண்டவர்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
31: ஒபதியா
 அதிகாரம் 1.  
 1.       
ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்து இவ்வாறு சொல்கின்றார்: 
"விழித்தெழுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!" என்று 
அறிவிக்கத் பதன் ஒருவனை வேற்றினத்தாரிடையே ஆண்டவர் அனுப்பினார், என்பதாக 
ஆண்டவரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம்.
 2.       
நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்: நீ பெரும் நிந்தைக்கு 
ஆளாக்கப்படுவாய்.
 3.       பாறை இடுக்குகளில் 
வாழ்பவனே! உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே! "என்னைத் தரை மட்டும் தாழத்தக் 
கூடியவன் யார்?" என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை 
ஏமாற்றிவிட்டது.
 4.       நீ கழுகைப் போல் உயர 
உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் 
உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
 5.       
உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின், கொள்ளைக்காரர்கள் இரவில் வருவார்களாயின் 
தங்கள் தேவைக்கு அதிகமாகத் திருடுவார்களோ? திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள் 
உன்னிடம் வந்தால் திராட்சைப் பழங்களில் சிலவற்றையாவது விட்டுவைக்க மாட்டார்களா? 
நீயோவெனில் முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்!
 6.       
ஏசா எவ்வளவாய்க் கொள்ளையடிக்கப்பட்டான்! மறைத்து வைக்கப்பட்ட அவனுடைய கருவூலங்கள் 
சூறையாடப்பட்டன.
 7.       உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் 
யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்: அவர்கள் உன்னை எல்லை வரை விரட்டி விட்டார்கள்: 
உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்: உன்னோடு 
உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்: உன்னைக் 
குறித்து "அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை எங்கே?" என்றார்கள்.
 8.       
அந்நாளில் நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் மலைமேல் உள்ள அறிவாளிகளையும் 
அழிக்காமல் விடுவேனா? என்கிறார் ஆண்டவர்.
 9.       
தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள் திகிலடைவார்கள்: ஆதலால் ஏசாவின் மலைமேல் உள்ள 
யாவரும், வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள்.
 10.       
உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு, நீ வெட்கி 
நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.
 11.       
அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில்- வெளிநாட்டார் அவன் 
வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில்- 
நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
 12.       
நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது 
இருந்திருக்க வேண்டும்: யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் 
களிப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது 
இருந்திருக்க வேண்டும்:
 13.       என் மக்கள் 
துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்: 
அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க 
வேண்டும். அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது 
இருந்திருக்க வேண்டும்.
 14.       அவர்களுள் 
தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது 
இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் 
காட்டிக்கொடுக்காது இருந்திருக்க வேண்டும்.
 15.       
ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும் வரப்போகின்றது: நீ 
செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்: நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும்.
 16.       என் திரு மலையில், நீங்கள் என் 
தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். 
மேலும்குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்: குடித்து 
மயங்கிக்கிடப்பார்கள்.
 17.       ஆனால், தப்பிப் 
பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்: சீயோன் மலையும் பய்மையாய் இருக்கும்: 
யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர்.
 18.       
யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்: யோசேப்பின் குடும்பத்தார் 
தீப்பிழம்பாய் இருப்பர்: ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்: அவர்கள் 
இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்: ஏசாவின் குடும்பத்தாருள் 
எவருமே தப்பமாட்டார்: ஆண்டவரே இதைக் கூறினார்.
 19.       
நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் 
சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், 
சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்: பென்யமினோ கிலயாதைத் தனக்குச் 
சொந்தமாக்கிக் கொள்வான்.
 20.       
இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து 
சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்: எருசலேமிலிருந்து செபராதுக்கு 
நாடுகடத்தப்பட்டோ ர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர்.
 21.       
விடுதலை பெற்றோர் ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்: அரசாட்சி 
ஆண்டவருக்கே உரித்தாகும்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
32 - யோனா
 அதிகாரம் 1.  
 1.       
அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
 2.       
அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று 
அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" 
என்றார்.
 3.       யோனாவோ ஆண்டவரிடமிருந்து 
தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே 
தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்: உடனே கட்டணத்தைக் கொடுத்து 
விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் 
இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.
 4.       
ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு 
உண்டாயிற்று: கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.
 5.       
கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தெய்வத்தை 
நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த 
சரக்குகளைக் கடலில் பக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் 
போய்ப் படுத்து அயர்ந்து பங்கிக் கொண்டிருந்தார்.
 6.       
கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது? இப்படித் பங்கிக் கொண்டிருக்கிறாயே! 
எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது 
நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.
 7.       
பிறகு கப்பலில் இருந்தவர்கள், "நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று 
கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். 
அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.
 8.       
சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, "இப்பொழுது சொல். 
இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் 
நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.
 9.       
அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய 
ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார்.
 10.       
மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் 
மிகவும் அஞ்சி, "நீ ஏன் இப்படிச் செய்தாய்," என்று கேட்டார்கள்.
 11.       
கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், "கடல் 
கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
 12.       அதற்கு அவர், "நீங்கள் என்னைத் பக்கிக் 
கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்: நீங்கள் பிழைத்துக் 
கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது 
எனக்குத் தெரியும்" என்றார்.
 13.       ஆயினும், 
அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்: ஆனால் அவர்களால் 
இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.
 14.       அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் 
கதறி, "ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்: 
குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது சுமத்தவேண்டாம். ஏனெனில், 
ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி 
மன்றாடினார்கள்.
 15.       பிறகு அவர்கள் 
யோனாவைத் பக்கிக் கடலில் எறிந்தார்கள்: கடல் கொந்தளிப்பும் தணிந்தது.
 16.       
அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் 
ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்: பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள்.
 17.       
ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா 
மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.
 
 
 அதிகாரம் 2.  
 1.       
யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:
 2.       "ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் 
நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். 
பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்: என் கூக்குரலுக்கு நீர் 
செவிகொடுத்தீர்:
 3.       நடுக் கடலின் 
ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்: தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது. நீர் 
அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.
 4.       
அப்பொழுது நான், "உமது முன்னிலையிலிருந்து இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் 
போகிறேன்" என்று சொல்லிக்கொண்டேன்.
 5.       
மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று: ஆழ்கடல் என்னைச் சூழ்ந்"தது: 
கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.
 6.       
மலைகள் புதைந்துள்ள ஆழம் வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் 
இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய 
ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.
 7.       
என் உயிர் ஊசாலிக் கொண்டிருந்த போது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். 
உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.
 8.       
பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.
 9.       ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு 
நன்றிப் பலி செலுத்துவேன்: நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு 
அளிப்பவர் ஆண்டவரே" என்று வேண்டிக்கொண்டார்.
 10.       
ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.
 
 
 அதிகாரம் 3.  
 1.       
இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர்,
 2.       
"நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை
 3.       
அங்குள்ளோருக்கு அறிவி" என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி 
நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக்
 4.       
கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்தபின், 
உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று அறிவித்தார்.
 5.       நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை 
நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் 
சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.
 6.       இந்தச் 
செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் 
களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்காந்தான்.
 7.       
மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். இதனால் 
அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் 
சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ 
தண்ணீர் குடிககவோ கூடாது.
 8.       மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை 
உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்: தம் 
தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
 9.       
இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்: அவரது 
கடுஞ்சினமும் தணியும்: நமக்கு அழிவு வராது."
 10.       
கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை 
அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் 
சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
 
 
 அதிகாரம் 4.  
 1.       
ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் 
முறையிட்டார்.
 2.       "ஆண்டவரே, நான் என் ஊரை 
விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு 
ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் 
அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்: பிறகு 
உம் மனத்தை மாற்றிக் கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும்.
 3.       
ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது" 
என்று வேண்டிக் கொண்டார்.
 4.       அதற்கு 
ஆண்டவர், "நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.
 5.       
யோனாவோ நகரைவிட்டு வெளியேறினார்: நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்துகொண்டார். 
பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக்கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் 
பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.
 6.       
கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது 
வளாந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் 
செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
 7.       
ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறு நாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து 
அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.
 8.       
கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. 
கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. "வாழ்வதை 
விடச் சாவதே எனக்கு நல்லது" என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று 
வேண்டிக் கொண்டார்.
 9.       அப்பொழுது கடவுள் 
யோனாவை நோக்கி, "ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங் கொள்வது முறையா?" 
என்று கேட்டார். அதற்கு யோனா, "ஆம், முறைதான்: செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் 
கொள்வது முறையே" என்று சொன்னார்.
 10.       
ஆண்டவர் அவரை நோக்கி, அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் 
அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை.
 11.       
அதை வளர்க்கவுமில்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் 
இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை 
எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிருந்த 
கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?" என்றார்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
33 - மீக்கா
 அதிகாரம் 1.  
 1.       
யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் 
சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் 
எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
 2.       
மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்: நிலவுலகே, அதில் உள்ளவையே, 
செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் 
சான்றுபகரப் போகிறார்.
 3.       இதோ! ஆண்டவர் 
தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்: அவர் இறங்கிவந்து நிலவுலகின் 
மலையுச்சிகள் மிதிபட நடப்பார்.
 4.       
நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் 
வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்: பள்ளத்தாக்குகள் 
பிளந்துபோகும்.
 5.       யாக்கோபின் குற்றத்தை 
முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் 
நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்"குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் 
தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ!
 6.       
ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் 
செய்திடுவேன்: அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் 
வெளியிலே தெரியும்"படி செய்வேன்.
 7.       அதன் 
செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்: அதன் பணயங்கள் எல்லாம் 
நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்: அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் 
ஆக்குவேன்: ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன: விலைமகளுக்குரிய 
பணயமாகவே அவை போய்விடும்.
 8.       இதை 
முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்: வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்: 
குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்: நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.
 9.       ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது: 
யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது: என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து 
எட்டியுள்ளது.
 10.       காத்தில் இதை 
அறிவிக்கவேண்டாம்: கதறியழவும் வேண்டாம்: பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து 
புரளுங்கள்.
 11.       சாபீரில் குடியிருப்போரே, 
ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்: சானானில் குடியிருப்போரும் வெளியே 
வருவதில்லை: பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் 
கிடைக்காது.
 12.       மாரோத்தில் 
குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றன: ஏனெனில், தீமை ஆண்டவரிடம் 
இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.
 13.       
இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்: மகள் 
சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே: இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது 
உங்களிடம்தான்.
 14.       ஆதலால், 
மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்: அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை 
ஏமாற்றி விடும்.
 15.       மாரேசாவில் 
குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்: 
இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.
 16.       
உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை 
மொட்டையடித்துக்கொள்ளுங்கள்: கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். 
ஏனெனில் அவர்கள் உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.
 
 
 அதிகாரம் 2.  
 1.       
தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய 
முயல்பவர்களுக்கு ஜயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் 
அதைச்செய்து முடிக்கின்றார்கள்.
 2.       வயல் 
வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்: வீடுகள்மேல் இச்சை 
கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்: ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் 
உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
 3.       
ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: "இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் 
திட்டமிடுகிறேன்: அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது: நீங்கள் 
ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்: ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும்.
 4.       
அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, "அந்தோ! நாங்கள் அழிந்து 
ஒழிந்தோமே: ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே! நம்முடைய நிலங்களைப் 
பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே! என்று ஒப்பாரி வைத்துப் 
புலம்புவார்கள்.
 5.       ஆதலால், மல்பிடித்துப் 
பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
 6.       
அவர்கள் பிதற்றுவது: "சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்: அவற்றைக் குறித்துப் 
பேசவேண்டாம்: மானக்கேடு நம்மை அணுகாது.
 7.       
யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ? இவற்றைச் செய்பவர் 
அவர்தாமோ? நேர்மையாய் நடப்போரிடம் அவர் பரிவுடன் பேசமாட்டாரோ? "
 8.       
ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப் பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்! போரில் நாட்டம் 
கொள்ளாமல், அமைதியை நாடுவோரின் மேலாடையைப் பறிக்கின்றீர்கள்: இதனால், அவர்களின் மன 
அமைதியைக் கெடுக்கின்றீர்கள்:
 9.       என் 
மக்களின் கூட்டத்திலுள்ள பெண்களை அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து 
விரட்டுகின்றீர்கள்: அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம் என் மாட்சி என்றும் 
விளங்காதவாறு செய்துவிடுகின்றீர்கள்.
 10.       
எழுந்து அகன்றுபோங்கள்: இது இளைப்பாறும் இடம் அல்ல: நாட்டில் தீட்டு 
ஏற்பட்டுவிட்டது: அது அழிவைக் கொண்டுவரும். அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.
 11.       "திராட்சை இரசத்தையும் மதுவையும்பற்றி 
உங்களுக்கு உரையாற்றுவேன் " என்று கூறி, வீண் சொற்களையும் பொய்களையும் 
பிதற்றுகிறவன்தான் இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!
 12.       
யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்: இஸ்ரயேலில் எஞ்சியயோலை 
ஒன்றாகத் திரட்டுவேன்: இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை ஆடுகளைக் கிடையில் மடக்குவது 
போலவும்: மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும் ஒன்றாகச் சேர்ப்பேன்.
 13.       அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் 
தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்: அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து 
செல்வார்: ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார். "
 
 
 அதிகாரம் 3.  
 1.       
அப்பொழுது நான் கூறியது: "யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை 
ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!
 2.       
நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்: என் மக்களின் தோலை உயிரோடே 
உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்:
 3.       
என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்:அவர்களின் 
எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் 
கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்.
 4.       அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் 
கூக்குரலிடுவீர்கள்: ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் 
அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்: ஏனெனில், உங்களின் செயல்கள் 
தீயனவாய் இருக்கின்றன. "
 5.       
இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் என் மக்களைத் தவறான 
வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ஓஅமைதி உண்டாகுக!ஓ 
என உரக்கச் செல்கின்றார்கள்: வாய்க்குத் தீனி போடாதவரிடம் ஓபுனிதப் போர் வரும்"ஓ 
எனக் கூறுகின்றார்கள். "
 6.       ஆதலால் 
"இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது: முன்னுரைத்தல் இராது: 
காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்: இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது: பகலும் 
உங்களுக்கு இருளாய் இருக்கும். "
 7.       
காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்: முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்: 
அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து 
மறுமொழி ஏதும் வராது.
 8.       ஆனால், நான் 
யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, 
வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.
 9.       யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, 
இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்: நீங்கள் நீதியை 
அருவருக்கிறீர்கள்: நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.
 10.       
இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.
 11.       அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு 
வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்: அதன் குருக்கள் கூலிக்காகப் 
போதிக்கின்றனர்: இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்: ஆயினும் ஆண்டவரது 
துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது 
" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.
 12.       
ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்: எருசலேம் பாழடைந்த 
மண்மேடாக மாறும்: கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்". "
 
 
 அதிகாரம் 4.  
 1.       
"இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை: மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் 
நிலைநிறுத்தப்படும்: குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதை 
நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.
 2.       
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, "புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் 
செல்வோம்: யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்: அவர் தம் வழிகளை நமக்குக் 
கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் " என்பார்கள்: ஏனெனில் சீயோனிலிருந்து 
திருச்சட்டம் வெளிப்படும்: எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
 3.       
அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்: 
தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்: அவர்களோ தங்கள் 
வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் 
அடித்துக் கொள்வார்கள்: ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: 
அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.
 4.       
அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்தி மரத்தின் 
அடியிலும் அமர்ந்திருப்பர்: அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை: ஏனெனில், படைகளின் 
ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது.
 5.       
மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும். நாமோ, நம் கடவுளாகிய 
ஆண்டவரின் பெயருக்கு என்றென்றும் பணிந்திருப்போம்.
 6.       
அந்நாளில், "நான் முடமாக்கப்"பட்டோ ரை ஒன்று சேர்ப்பேன்: விரட்டியடிக்கப்பட்டோ 
ரையும் என்னால் தண்டிக்கப்பட்டோ ரையும் ஒன்றுகூட்டுவேன் " என்கிறார் ஆ்டவர்.
 7.       
முடமாக்கப்பட்டோ ரை எஞ்சியோராய் ஆக்குவேன்: விரட்டியடிக்கப்பட்டோ ரை வலியதோர் இனமாக 
உருவாக்குவேன்: அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து 
அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.
 8.       மந்தையின் 
காவல் மாடமே! மகள் சீயோனின் குன்றே! முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்: மகள் 
எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.
 9.       
இப்போது நீ கூக்குரலிட்டுக் கதறுவானேன்? பேறுகாலப் பெண்ணைப்போல் ஏன் 
வேதனைப்படுகின்றாய்? அரசன் உன்னிடத்தில் இல்லாமற் போனானோ? உனக்கு அறிவு புகட்டுபவன் 
அழிந்தொழிந்தானோ?
 10.       மகளே சீயோன்! 
பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு: ஏனெனில், இப்பொழுதே 
நீ நகரைவிட்டு வெளியேறுவாய்: வயல்வெளிகளில் குடியிருப்பாய்: பாபிலோனுக்குப் போவாய்: 
அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்: உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை 
மீட்டருள்வார்.
 11.       இப்பொழுது, 
வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்: "சீயோன் 
தீட்டுப்படட்டும்: அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும் " என்று 
சொல்லுகின்றார்கள்.
 12.       ஆனால் அவர்கள் 
ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை. 
ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல் அவர் அவர்களைச் 
சேர்த்து வைத்திருக்கின்றார்.
 13.       மகள் 
சீயோனே, நீ எழுந்து புணையடி: நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்: உன்னுடைய 
குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்: மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப் போடுகிறாய்: 
அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்: அவர்களது செல்வங்களை 
அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய். "
 
 
 அதிகாரம் 5.  
 1.       
அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து 
கொள்ளுங்கள்: உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது: இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் 
கன்னத்தில் அடி பெறுவான்.
 2.       நீயோ, 
எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் 
இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்: உன்னிடமிருந்தே 
தோன்றுவார்: அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
 3.       
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு 
விடுவார்: அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் 
திரும்பி வருவார்கள்.
 4.       அவர் வரும்போது, 
ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் 
மந்தையை மேய்ப்பார்: அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்: ஏனெனில், உலகின் இறுதி 
எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்:
 5.       
அவரே அமைதியை அருள்வார். அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் 
அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் 
தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
 6.       
அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் 
தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்: அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் 
போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து 
விடுவிப்பார்கள்.
 7.       அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் 
ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காக காத்திராமலும்" மானிடர்க்காகத் 
தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே 
இருப்பார்கள்.
 8.       மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் 
காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து 
யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் 
போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
 9.       
உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்: உன்னுடைய எதிரிகள் அனைவரும் 
அழிந்தொழிவார்கள்.
 10.       அந்நாளில், "நான் 
உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்: உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன் " 
என்கிறார் ஆண்டவர்.
 11.       "உன் நாட்டிலுள்ள 
நகர்களைத் தகர்த்தெறிவேன்: உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
 12.       
உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்: குறிசொல்லுவோர் உன்னிடம் 
இல்லாதொழிவர்.
 13.       நீ செய்து 
வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்: உன் கைவினைப் 
பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
 14.       
நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்: உன் நகரங்களை 
அழித்தொழிப்பேன்.
 15.       எனக்குச் செவி கொடாத 
வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன். "
 
 
 அதிகாரம் 6.  
 1.       
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் 
சொல்: குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.
 2.       
மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்: 
ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு: இஸ்ரயேலோடு அவர் வாதாடப் 
போகின்றார்.
 3.       என் மக்களே, நான் 
உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி 
கூறுங்கள்.
 4.       நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து 
அழைத்து வந்தேன்: அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்: உங்களுக்கு முன்பாக 
மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.
 5.       
என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்: 
பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் 
கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்: அப்போது ஆண்டவரின் மீட்புச் 
செயல்களை அறிந்து கொள்வீர்கள்.
 6.       
ஆண்"டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து 
பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் 
வரவேண்டுமா?
 7.       ஆயிரக்கணக்கான 
ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் 
மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், 
என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
 8.       
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் 
கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக 
தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
 9.       ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் 
கூக்குரலிடுகின்றது: உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் 
கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்:
 10.       
"கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட 
மரக்காலையும் நான் மறப்ேனோ?
 11.       கள்ளத் 
தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் 
கொள்வேனோ?
 12.       உங்களிடையே உள்ள செல்வர்கள் 
கொடுமை நிறைந்தவர்கள்: அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்: அவர்கள் வாயிலிருந்து 
வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.
 13.       
ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்: நீங்கள் 
பாழாய்ப் போவீர்கள்.
 14.       நீங்கள் 
உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்: பசி உங்கள் வயிற்றைக் 
கிள்ளிக்கொண்டிருக்கும்: நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், 
இழப்பீர்கள்: அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு 
இரையாக்குவேன்.
 15.       நீங்கள் 
விதைப்பீர்கள்: ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்: ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு 
ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்: திராட்சைப் பழம் 
பிழிவீர்கள்: ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.
 16.       
ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்: ஆகாசு குடும்பத்தாரின் 
செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி 
நடந்தீர்கள்: ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்: உங்களிடையே 
குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்: மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள்.
 
 
 அதிகாரம் 7.  
 1.       
ஜயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்: திராட்சை 
பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்: அப்பொழுது தின்பதற்கு ஒரு 
திராட்சைக் குலையும் இல்லை: என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட 
இல்லை:
 2.       நாட்டில் இறைப்பற்றுள்ளோர் 
அற்றுப்போனார்: மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் 
பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்: ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து 
வேட்டையாடுகின்றனர்.
 3.       தீமை செய்வதில் 
அவர்கள் கைதேர்ந்தவர்கள்: தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்: பெரிய 
மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்: இவ்வாறு நெறிதவறி 
நடக்கின்றனர்.
 4.       அவர்களுள் சிறந்தவர் 
முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் 
அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டு: இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
 5.       
அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்: தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க 
வேண்டாம். உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் 
பூட்டுப்போடு!
 6.       ஏனெனில், மகன் தன் 
தந்தையை அவமதிக்கின்றான்: மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் 
மாமியாரை எதிர்க்கின்றாள்: ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
 7.       
நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்: என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் 
காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.
 8.       
என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே: ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் 
எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.
 9.       நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்: 
ஆதலால், அவரது கடும் சினத்தை, அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, 
தாங்கிக்கொள்வேன்: அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்: அவரது நீதியை நான் 
காண்பேன்.
 10.       அப்போது, என்னோடு 
பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்: "உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே? " என்று 
என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்: என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, 
தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.
 11.       
உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது: அந்நாளில், நாட்டின் எல்லை வெகு 
தொலைவிற்கு விரிந்து பரவும்.
 12.       
அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை, எகிப்திலிருந்து பேராறு 
வரை, ஒரு கடல்முதல் மறுகடல் வரை, ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும் 
உன்னிடம் திரும்புவார்கள்.
 13.       நிலவுலகம் 
அங்குக் குடியிருப்போரின் செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.
 14.       
ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது 
கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து 
வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் 
மேயட்டும்!
 15.       எகிப்து நாட்டிலிருந்து 
நீங்கள் புறப்பட்டுவந்து நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் 
காண்பிப்பேன்.
 16.       வேற்றினத்தார் இதைப் 
பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்: அவர்கள் தங்கள் வாயைக் 
கையால் மூடிக்கொள்வார்கள்: அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.
 17.       
அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்: தங்கள் 
எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்: நம் கடவுளாகிய ஆண்டவர் 
முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.
 18.       
உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது 
உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்: உமக்கு நிகரானவர் 
யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்: ஏனெனில், அவர் 
பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்:
 19.       
அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்: நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்: நம் 
பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
 20.       
பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல யாக்கோபுக்கு 
வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்மையும் காட்டியருள்வீர்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
34 - நாகூம்
 அதிகாரம் 1.  
 1 .       
நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நு¡ல்.
 2 
.       ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்: 
பழிவாங்குபவர்: ஆண்டவர் பழிவாங்குபவர்: வெகுண்டெழுபவர்: தம் எதிரிகளைப் 
பழிவாங்குபவர்: தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.
 3 .       
ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் 
குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் 
புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற 
புழுதிப்படலம்!
 4 .       அவர் கடலை அதட்டி 
வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப் போகச் செய்கின்றார்: பாசானும் 
கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.
 5 .       
அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் 
குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.
 6 .       
அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் 
நிற்பவன யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு 
பொடியாகின்றன.
 7 .       ஆண்டவர் நல்லவர்: 
துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்: அவா¢டம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்.
 8 
.       தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் 
நடுவே முற்றிலும் அழித்திடுவார்: தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.
 9 .       ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? 
அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைது¡க்காது.
 10 .       
குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் 
காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.
 11 .       
ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து 
தோன்றினான்.
 12 .       ஆண்டவர் கூறுவது இதுவே: 
அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு 
அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் 
துன்புறுத்தமாட்டேன.
 13 .       இப்பொழுதே, 
உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.
 14 .       ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு 
இதுவே: உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்: உன் தெய்வங்களின் கோவிலில் 
உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு 
அங்குப் புதை குழி வெட்டுவேன்: ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.
 15 .       
வெற்றி! வெற்றி! என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் 
தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை 
நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்: அவன் முற்றிலும் 
அழிந்து விட்டான்.
 
 
 அதிகாரம் 2.  
 1 .       
உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்: கோட்டை மதில்களில் வீரர்களை 
நிறுத்து: வழிகளில் காவலர்களை அமர்த்து: உம் இடையே வா¢ந்து கட்டிக்கொள்: உன் படை 
வலிமையை மிகுதிப்படுத்து.
 2 .       இஸ்ரயேலின் 
மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்: 
கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்யையடித்தனர்: அவர்களின் திராட்சைக் கொடிகளையும் 
அழித்துப்போட்டனர்.
 3 .       எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் 
சிவப்பானவை: அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்: போர் அணியில் இயங்கும் 
தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது: குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.
 4 .       வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் 
ஓடுகின்றன: திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன: தீப்பந்தங்களைப்போலச் 
சடர்விடுகின்றன: மின்னலைப்போலப் பாய்கின்றன.
 5 .       
படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்: அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்: 
கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்: காப்புக் கருவி அமைத்தாயிற்று.
 6 .       
ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது.
 7 .       
அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்: அவளுடைய பணிப்பெண்கள் 
புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்பகின்றார்கள்.
 8 .       
உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்: நில்லுங்கள், நில்லுங்கள்! என அவர்கள் 
அலறுகிறார்கள்: ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
 9 .       வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்: 
பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்: கருவூலங்கள் மிகப்பொ¢யவை: அங்குள்ள விலையுயர்ந்த 
பொருள்களுக்கு அளவே இல்லை.
 10 .       வெறுமை! 
பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது: கால்கள் தள்ளாடுகின்றன: திகில் அனைவரையும் 
முற்றிலும் ஆட்கொள்கிறது: முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன.
 11 .       
சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி 
இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?
 12 .       
சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் 
கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் 
நிரப்பிற்று.
 13 .       இதோ! படைகளின் ஆண்டவர் 
கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்: உன் தேர்களைச் சுட்டுச் 
சாம்பலாக்குவேன்: உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்: நாட்டில் உனக்கு இரை 
இல்லாதபடி செய்வேன்: உன் து¡தர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.
 
 
 அதிகாரம் 3.  
 1 .       
இரத்தக்கறை படிந்த நகருக்கு ஜயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் 
கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை!
 2 .       
சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! 
உருண்டோடும் தேர்கள்!
 3 .       குதிரை வீரர்கள் 
பாய்ந்து தாக்குகின்றனர்: வாள் மின்னுகின்றது: ஈட்டி பளபளக்கின்றது: 
வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்: பிணங்கள் குவித்து கிடக்கின்றன: 
செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை: அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.
 4 .       அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் 
வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும் தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் 
ஏமாற்றிய அந்த விலைமகளின் எணண்ற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்!
 5 .       
இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கெதிராக நான் எழும்புவேன்: நீ 
உடுத்தியிருக்கும் ஆடையை உன் முகத்துக்கு மேலாகத் து¡க்குவேன்: மற்ற வேற்றினத்தார் 
உன் திறந்த மேனியையும் அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன்.
 6 .       
அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்: உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் 
ஆக்குவேன்.
 7 .       உன்னை நோக்குவோர் 
எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, நினிவே பாழாய்ப் போனது: அவளுக்காகப் 
புலம்புவோர் யாரேனும் உண்டோ? என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்?
 8 .       நைல் நதியின் கரையருகில் நீரால் 
சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று 
இருந்தாயோ?
 9.       எத்தியோப்பியாவும் எகிப்தும் 
அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன: அதன் வலிமைக்கோ எல்லை இல்லை: பூத்தும் லிபியாவும் 
அதற்குத் துணையாய் இருந்தன.
 10.       
இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்: 
அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்: அதன் உயர்குடி மக்கள் மேல் 
சீட்டுப் போடப்பட்டது: அதன் பொ¢ய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் 
கட்டப்பட்டனர்.
 11.       நீயும் குடிவெறியில் 
மயங்கிக் கிடப்பாய்: நீயும் உன் பகைவா¢டமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.
 12.       உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் 
நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை: அத்தி மரங்களைப் பிடித்து உலுக்கும்போது 
பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.
 13.       
உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் 
பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன: உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
 14.       முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து 
வை: உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து: களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு: செங்கல் 
அறுக்கச் சட்டங்களை எடு.
 15.       ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்: 
வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்: வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்: 
வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்: பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.
 16.       விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் 
பெருகச் செய்தாய்: இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும்.
 17.       உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் 
உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்: குளிர்ந்த நாளில் அவை 
வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன: கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன: அதன்பின் 
அவை இருக்குமிடம் யாருக்கும் தொ¢யாது.
 18.       
அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்: உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் 
ஆழ்ந்தனர்: கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர்.
 19.       உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் 
குணமாகாது: உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்: ஏனெனில், உன் 
இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
35 - அபகூக்கு
 அதிகாரம் 1.  
 1.       
இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:
 2.       
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்: நீரும் 
செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு 
உம்மிடம் அழுது புலம்பவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?
 3.       
நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? 
கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன.
 4.       ஆதலால் திருச்சட்டம் வலுவற்று பயனற்றுப் 
போகின்றது. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் 
கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.
 5.       
நீங்கள் உங்களைச் சூழந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்: கவனித்து 
வியப்பும் திகைப்பும் அடையுங்கள்: ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் 
செய்திடுவேன்: விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.
 6.       
நான் கல்தேயர் இனத்தை எழுப்பவிருக்கிறேன்: அது பரபரப்பும் கொடுமையும் "உடைய இனம்: 
தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒருமுனை முதல் மறுமுனைவரை 
சுற்றித் திரியும் இனம்.
 7.       அவர்கள் 
அச்சமும் திகிலும் உண்டாக்குகின்றவர்கள்: தங்களுடைய நீதியையும் பெருமையையும் 
தாங்களே உருவாக்குகின்றவர்கள்.
 8.       
வேங்கையைவிட அவர்களின் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன: அவை மாலை வேளையில் திரியும் 
ஓநாய்களைவிடக் கொடியவை: அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றார்கள். 
இரைமேல் பாயும் கழுகைப்போல் பறந்து வருகின்றார்கள்.
 9.       
அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்: அவர்கள் முன்னேறும்போது 
எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள். மணல்போல எண்ணற்ற மக்களைச் 
சிறைப்படுத்துகின்றார்கள்.
 10.       அரசர்களை 
அவர்கள் ஏளனம் செய்கின்றார்கள்: அதிகாரிகளை எள்ளி நகையாடுகின்றார்கள்: அரண்களை 
எல்லாம்" பார்த்து நகைக்கின்"றார்கள்: மண்மேடுகளை எழுப்பி அவற்றைப்" 
பிடிக்கின்றார்கள்.
 11.       அவர்கள் காற்றைப் 
போல் விரைவாகக் கடந்து போகின்றார்கள்: மறைந்து விடுகின்றார்கள். தங்கள் வலிமையைக் 
கடவுளாகக் கருதியதே அவர்கள் செய்த குற்றம்.
 12.       
ஆண்டவரே, என் கடவுளே, என் பயவரே தொன்று தொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் 
காண்பதில்லை: ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே: 
புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே.
 13.       
தீமையைக் காண நாணும் பய கண்களை உடையவரே, கொடுமையைப் "பார்க்கத் தாங்காதவரே, 
கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை 
விழுங்கும்போது நீர் ஏன் மெளனமாய் இருக்கின்றீர்?
 14.       
நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்.
 15.       கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் 
பண்டிலால் பிடிக்கின்றார்கள்: வலையால் வாரி இழுக்கின்றார்கள்: தங்கள் பறியிலே 
சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.
 16.       
ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்: பறிக்குத் பபம் 
காட்டுகின்றார்கள்: ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்: அறுசுவை 
உணவைப் பெறுகின்றார்கள்.
 17.       அப்படியானால் 
அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி மக்களினங்களை இரக்கமின்றி 
இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ?
 
 
 அதிகாரம் 2.  
 1.       
நான் காவல் மாடத்தில் நிற்"பேன்: கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்: என் வாயிலாக 
ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் 
என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.
 2.       
ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை: விரைவாய் ஓடுகிறவனும் 
படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது.
 3.       
குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை 
நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் 
தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்"த்தாது.
 4.       இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் 
இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
 5.       
மேலும் செல்வம் ஏமாற்றிவிடும்: ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்: அவர்களது பேராசை 
பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது: சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு 
அடைவதில்லை: வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் 
கொள்கின்றனர்: மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர்.
 6.       
ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் 
இப்படிப் புனைவார்கள்: "தமக்குரியது அல்லாததைக் தமக்"கெனக் குவித்துக் 
கொள்கின்றவருக்கு ஜயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? 
அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்! "
 7.       
உமக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ? உன்னைத் திகிலடையச் 
செய்கின்றவர்கள் விழித்தெழ மாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் 
பொருள் ஆவாய்.
 8.       நீ பல நாட்டினரைச் 
சூறையாடினாய்: மனித இரக்கத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும், நகர்களுக்கும் அங்குக் 
குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்: இவற்றிற்காக, மக்களினங்களுள் 
எஞ்சியோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்.
 9.       
தீமையின் ளுவிலிருந்து தப்ப, தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க, தன் 
குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில் பொருள் சேர்க்கிறவனுக்கு ஜயோ "கேடு!
 10.       
உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்: மக்களினங்கள் 
பலவற்றை அழித்தமையால், உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.
 11.       
சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்: கட்டடத்தின் உத்திரம் அதை 
எதிரொலிக்கும்
 12.       இரத்தப்பழியால் நகரைக் 
கட்டி எழுப்பி, அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஜயோ கேடு!
 13.       
மக்களினங்களின் உழைப்பு நெருப்புக்கு இரையாவதும், வேற்றினத்தாரின் களைப்பு வீணாகப் 
போவதும் படைகளின் ஆண்டவரது திருச்செயல் அன்றோ?
 14.       
தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு 
நிறைந்திருக்கும்.
 15.       அடுத்திருப்பவர் 
மீது கொண்ட சினத்தினால் அவர்களைக் குடிவெறியர்களாக்கி அவர்களது திறந்த மேனியின் 
அலங்கோலத்தைக் காணும்வரை குடிக்கச் செய்பவனுக்கு ஜயோ கேடு!
 16.       
நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்: நீயும் குடி, 
குடித்துவிட்டுத் தள்ளாடு: ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் 
திரும்பிவரும்: அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மாறும்.
 17.       
லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்: நீ வெட்டி வீழ்த்திய 
விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்: ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்: 
நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்.
 18.       சிற்பி செதுக்கிய சிலையாலும், 
வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! 
ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான்.
 19.       மரக்கட்டையிடம், "விழித்தெழும் " என்றும் 
ஊமைக் கல்லிடம் "எழுந்திரும் " என்றும் சொல்கிறவனுக்கு ஜயோ கேடு! அவை ஏதேனும் 
வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்"ளே 
சிறிதளவும் உயிரில்லையே!
 20.       ஆனால் 
ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்: அவர் திருமுன் மண்ணுலகெங்கும் 
மெளனம் காப்பதாக.
 
 
 அதிகாரம் 3.  
 r> 1.       
இறைவாக்கினர் அபக்கூக்கு "சிகாயோன் " பண்களில் பாடிய மன்றாட்டு:
 2.       
ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்: ஆண்டவரே, உம் செயலைக் கண்டு 
அச்சமடைகிறேன்: எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்: காலப்போக்கில் 
அதை அனைவரும் அறியும்படி செய்யும்: சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.
 3.       தேமானிலிருந்து இறைவன் வருகிறார்: 
பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார். (சோலா) அவரது மாட்சி விண்ணுலகை 
மூடியிருக்கின்றது: அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.
 4.       
அவரது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது: அவர் கையினின்ற ஒளிக்கதிர்கள் 
புறப்படுகின்றன: அங்கேதான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.
 5.       
அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது: அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து 
கொள்ளைநோய் புறப்படுகின்றது.
 6.       அவர் 
நின்றால், நிலம் அதிர்கின்றது, அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்: 
தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன. பண்டைக் காலக் குன்றுகள் 
அமிழ்ந்து விடுகின்றன. அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.
 7.       
கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்: மிதியான நாட்டுக் 
கூடாரத்திரைகள் நடுநடுங்கின.
 8.       ஆண்டவரே, 
நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர்மேலும் ஏறிவரும் போது, நீரோடைகள்மீதா 
உம் கோபத்தீ மூண்டது? ஆறுகள்மீதா உம் சினம் பெருகியது? கடல்மீதா உம் சீற்றம் 
மிகுந்தது?
 9.       நீர் உம் வில்லைக் 
கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்: அம்பறாத் பணியை அம்புகளால் நிரப்புகின்றீர்: (சேலா) 
நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.
 10.       
மலைகள் உம்மைக் கண்டு நடுங்கின்றன: பெரும் வெள்ளங்கள் பீறிட்டுப் பாய்கின்றன: 
ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது: அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
 11.       
கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் 
அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் 
தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.
 12.       
சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்: சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை 
நசுக்குகின்றீர்.
 13.       உம் மக்களை மீட்கவும், நீர் 
திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் 
குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் 
அழித்து விடுகின்றீர். (சேலா)
 14.       அவன் படைத்தலைவனின் தலையை அவன் 
ஈட்டிகளைக் கொண்டே பிளக்கின்றீர்: அவனோ, ஒடுக்கப்பட்டவனை மறைவாக விழுங்கி மகிழ்வது 
போல மகிழ்ந்து, சூறாவளிக் காற்றென என்னைச் சிதறடிக்கப் பாய்ந்து வருகின்றான்.
 15.       ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆட்கடலை 
மிதித்து, பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.
 16.       
இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது: அப்போரொலியைக் கேட்பதனால் என் 
உதடுகள் துடிதுடிக்கின்றன: என் எலும்புகள் உளுத்துப் போகின்றன: என் காலடிகள் 
நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன: எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் 
நாள்வரை அமைதியாய்க் காத்திருப்பேன்.
 17.       
அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், 
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் 
ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
 18.       
நான் ஆண்டவரில் களிகூர்வேன்: என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
 19.       
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை: அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் 
போலாக்குவார்: உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
36 - செப்பனியா
 அதிகாரம் 1.  
 1.       
ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்வரின் 
வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் 
கெதலியாவின் மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார்.
 2.       
"மண்ணுலகில் எதுவும் இராதவாறு
 3.       
அனைத்தையும் அழித்துவிடுவேன், " என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் 
அழிப்பேன்: வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்: கொடியவர்களை 
இடறிவிழச் செய்வேன்: மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன், " 
என்கிறார் ஆண்டவர்.
 4.       யூதாவுக்கும் 
எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் 
எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து 
விடுவேன்.
 5.       வீட்டின் மேல்தளத்திிருந்து 
வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் 
பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன்.
 6.       
ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது 
இருப்போரையும் அழித்துவிடுவேன்.
 7.       
தலைவராகிய ஆண்டவர் திருமுன் மெளனமாயிருங்கள்: ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் 
உள்ளது: பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்: தாம் அழைத்தவர்களை அவர் 
புனிதப்படுத்தியுள்ளார்
 8.       ஆண்டவரது 
பலியின் நாளில் தலைவர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன்.
 9.       வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, 
தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் 
தண்டிப்பேன்.
 10.       ஆண்டவர் கூறுகின்றார்: 
"அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் 
பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.
 11.       நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்"போரே! 
கதறி அழுங்கள்: ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது: பணம் படைத்தவர் 
அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்:
 12.       
அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்: 
ஓஆண்டவர் நன்மையும் செய்யார்: தீமையும் செய்யார்ஓ என்று தங்கள் உள்ளங்களில் 
சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
 13.       
அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்: வீடுகள் பாழாக்கப்படும்: அவர்கள் வீடுகள் 
கட்டிக்கொள்வார்கள்: ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை: திராட்சைத் 
தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை. "
 14.       
ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது: அது விரைந்து நெருங்கிக் 
கொண்டிருக்கிறது: ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்: மாவீரனையும் கலங்கி 
அலறும்படி செய்யும்.
 15.       அந்த நாள் கடும் 
சினத்தின் நாள்: துன்பமும் துயரமும் நிறைந்த நாள்: பேரழிவும் பேரிழப்பும் கொண்டு 
வரும் நாள்: இருட்டும் காரிருளும் கவிந்த நாள்:
 16.       
அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் 
முழக்கமும் கேட்கும் நாள்.
 17.       மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்: 
பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் 
செய்தனர்: அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்: சதைப்பிண்டம் சாணம்போல் 
எறியப்படும்.
 18.       ஆண்டவரது சினத்தின் 
நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது 
வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும்" அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் 
முற்றிலும் அழித்துவிடுவார்.
 
 
 அதிகாரம் 2.  
 1.       
பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.
 2.       
பதரைப்போல் நீங்கள் பற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, 
ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,
 3.       
நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் 
ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது 
சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.
 4.       
காசா குடியற்றுப்போகும்: அஸ்கலோன் பாழடைந்துபோகும்: அஸ்தோது நண்பகலில் 
விரட்டியடிக்கப்படும்: எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும்.
 5.       
கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஜயோ கேடு! ஆண்டவரின் 
வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது: பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் 
குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன்.
 6.       
இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே 
ஏற்றதாகும்.
 7.       அந்தக் கடற்கரை யூதாவின் 
குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்: அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை 
மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்: ஏனெனில் அவாகளுடைய 
கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை 
உயர்த்துவார்.
 8.       மோவாபின் 
பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்: அவர்கள் என் மக்களை 
இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் 
கேட்டேன்.
 9.       ஆதலால், படைகளின் ஆண்டவரும், 
இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்: மோவாபு சோதோமைப்போல் 
ஆகும்: அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்: இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் 
காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் 
எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்: என் மக்களுள் தப்பியோர் அவர்களை 
அடிமைகளாக்கிக் கொள்வர்.
 10.       அவர்களுடைய 
இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே: ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு 
எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்: வீம்பு பேசினார்கள்.
 11.       
ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்: நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் 
குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து 
கொண்டு அவரையே வணங்குவர்.
 12.       
எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.
 13.       
வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே 
நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.
 14.       
அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: பண்களின் உச்சியில் 
கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: 
நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் 
அழிக்கப்படும்.
 15.       "நான் ஒப்புயர்வு 
அற்றவன் " என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு 
விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் 
சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.
 
 
 அதிகாரம் 3.  
 1.       
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஜயோ கேடு!
 2.       
எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை: கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை: 
ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை: தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
 3.       
அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள், மாலையில் 
கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
 4.       அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் 
வஞ்சகமிக்க மனிதர்: அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை 
உதறித் தள்ளுபவர்கள்.
 5.       அதனுள் இருக்கும் 
ஆண்டவரோ நீதியுள்ளவர்: அவர் கொடுமை செய்யாதவர்: காலைதோறும் அவர் தமது தீர்ப்பை 
வழங்குகின்றார்: வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்: ஆனால் கொடியவனுக்கு வெட்கமே 
இல்லை.
 6.       வேற்றினத்தாரை நான் வெட்டி 
வீழ்த்திேன்: அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்: அவர்களுடைய தெருக்களை 
வெறுமையாக்கினேன்: அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை: யாரும் இராதபடி, எவரும் 
குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.
 7.       
"உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்: எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்: நான் 
வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்"டாய் " என்று நான் எண்ணினேன்: 
அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
 8.       
ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: "நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த 
நாளுக்காகக் காத்திரு: வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, 
என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் 
திட்டமிட்டுள்ளேன்: ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.
 9.       
அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் பய நாவினை அருள்வேன்: அப்போது அவர்கள் 
அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.
 10.       எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் 
அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு 
வருவார்கள்.
 11.       எனக்கு எதிராக எழுந்து நீ 
செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்: ஏனெனில், அப்பொழுது 
இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்: இனி ஒருபோதும் 
எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய்.
 12.       
ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை 
கொள்வார்கள்.
 13.       இஸ்ரயேலில் எஞ்சியோர் 
கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் 
யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள். "
 14.       
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்: மகளே எருசலேம்! உன் 
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
 15.       
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை 
அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ 
இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
 16.       
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்சவேண்டாம்: உன் கைகள் 
சோர்வடைய வேண்டாம்.
 17.       உன் கடவுளாகிய 
ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்: உன்பொருட்டு 
அவர் மகிழ்ந்து களிகூருவார்: தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்: உன்னைக் 
குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
 18.       
அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்: ஆகவே, இனி நீ 
இழிவடையமாட்டாய்.
 19.       இதோ!, உன்னை 
ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்: கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்: 
ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்: அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் 
புகழும் பெறச்செய்வேன்.
 20.       அக்காலத்தில் 
உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்: ஆம், 
உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா 
மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன் " என்கிறார் ஆண்டவர்.
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
37 - ஆகாய்
 அதிகாரம் 1.  
 1.       
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் 
ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் 
மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் 
அருளப்பட்ட செய்தி:
 2.       "படைகளின் ஆண்டவர் 
கூறுவது இதுவே: ஓஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் 
வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.
 3.       
அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.
 4.       
இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் 
குடியிருக்கலாமா?ஓ
 5.       ஆதலால், இப்பொழுது 
படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: ஓஉங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் 
பாருங்கள்.
 6.       நீங்கள் விதைத்தது மிகுதி, 
அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்: ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. 
நீங்கள் குடியிருக்கிறீர்கள்: ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்: 
ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய 
பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.
 7.       
உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்ஓ என்று சொல்கிறார் படைகளின் 
ஆண்டவர்.
 8.       ஓஎனவே, மலைக்குச் சென்று மரம் 
கொண்டு வாருங்கள்: என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்: அது எனக்கு உகந்ததாய் 
இருக்கும்: அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்ஓ என்று சொல்கிறார் ஆண்டவர். 
மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.
 9.       
ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் 
ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் 
ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.
 10.       
எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது: நிலமும் விளைச்சல் தர 
மறுத்துவிட்டது.
 11.       மேலும் நாடும் மலையும், கோதுமையும் 
திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் 
உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன். "
 12.       
அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் 
மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய 
ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் 
சொற்களுக்கும் செவிகொடுத்தனர்: மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர்.
 13.       
அப்போது ஆண்டவரின் பதரான ஆகாய் மக்களிடம், "ஓநான் உங்களோடு இருக்கிறேன்ஓ என்கிறார் 
ஆண்டவர் " என்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.
 14.       
அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செலுபாபேலின் 
உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் 
மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் 
சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை 
மேற்கொண்டார்கள்.
 15.       அந்நாள் தாரியு 
அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.
 
 
 அதிகாரம் 2.  
 1.       
ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் 
வாயிலாக அருளப்பட்டது:
 2.       "யூதாவின் 
ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும யோசதாக்கின் 
மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் 
இவ்வாறு சொல்:
 3.       ஓஇந்தக் கோவிலின் 
முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது 
இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் 
இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா?
 4.       ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,ஓ 
என்கிறார் ஆண்டவர். ஓதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன 
உறுதியோடிரு: நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்: பணியைத் தொடருங்கள்: 
ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர். "
 5.       
"நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த 
வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது: அஞ்சாதீர்கள்.
 6.       ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது 
இதுவே: ஓஇன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை 
நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.
 7.       
வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் 
விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்: இந்தக் கோவிலை நான் மாட்சியால் 
நிரப்பவேன்ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 8.       
ஓவெள்ளி எனக்க உரியது, பொன்னும் எனக்கு உரியதுஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 9.       ஓஇந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் 
பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்ஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர். ஓஇந்த இடத்தில் 
நான் நலம் நல்குவேன்ஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர். "
 10.       
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஒன்பதாம் மாதம், இருபத்து நான்காம் நாள், 
இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
 11.       
"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குருக்களிடம் சென்று இவற்றிற்குத் 
திருச்சட்டத்தைத் தீர்ப்பைக் கேள்:
 12.       "ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் 
அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு 
அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ 
தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா? " அதற்குக் குருக்கள், "இல்லை " 
என்று விடை கூறினர்.
 13.       மீண்டும் ஆகாய், 
"பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் 
தீட்டப்பட்டது ஆகுமா? " என்று கேட்டார். அதற்குக் குருக்கள், "ஆம், தீட்டுப்பட்டது 
ஆகும் " என்றனர்.
 14.       தொடர்ந்து ஆகாய் அவர்களிடம் இவ்வாறு 
சொன்னார்: "அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும், " என்கிறார் 
ஆண்டவர். அவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது. அவர்கள் அங்கே 
கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.
 15.       
இன்றுவரை நிகழ்ந்ததை இப்பொழுது நினைத்துப் பாருங்கள். ஆண்டவரது கோவிலில் 
கல்லின்மேல் கல் வைக்கப்படுமுன் நீங்கள் இருந்த நிலை என்ன?
 16.       
தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி நீங்கள் வந்து பார்க்கையில் 
பத்துதான் இருந்தது: ஜம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் 
இருந்தது.
 17.       ஓஉங்களையும் உங்கள் 
உழைப்பின் பயனையும் வெப்பு நோயாலும் நச்சுப் பனியாலும் கல்மழையாலும் வதைத்தேன்: 
ஆயினும் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லைஓ, என்கிறார் ஆண்டவர்.
 18.       
ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று ஆண்டவரின் கோவிலுக்கு 
அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.
 19.       விதை இனியும் களஞ்சியத்திலேயே 
இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் 
தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்.
 20.       
மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறையாக ஆகாய்க்கு 
அருளப்பட்டது:
 21.       "யூதாவின் ஆளுநனாகிய 
செருபாபேலிடம் இவ்வாறு சொல்: ஓநான் விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒருங்"கே அசைக்கப் 
போகிறேன்:
 22.       அரசுகளின் அரியணையைக் 
கவிழ்க்கப்போகிறேன்: வேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்: தேர்களையும் 
அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்: குதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் 
மற்றவரது வாளுக்கு இரையாவர்.ஓ
 23.       படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: 
ஓஅந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் 
தேர்ந்தெடுப்பேன்,ஓ என்கிறார் ஆண்டவர். ஓஉன்னை என் அரச இலச்சினையாய் 
அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,ஓ என்கிறார் படைகளின் 
ஆண்டவர். "
 
 
 
 விவிலியம் /பழைய ஏற்பாடுபுத்தகம் 
38 - செக்கரியா
 அதிகாரம் 1.  
 1.       
தாரிபு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில் இத்தோவின் பேரனும், 
பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
 2.       "ஆண்டவர் உங்கள் மூதாதையர்மேல் கடுஞ்சினம் 
கொண்டிருந்தார்.
 3.       ஆகவே நீ அவர்களை 
நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஎன்னிடம் திரும்பி 
வாருங்கள்,ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 4.       
உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்: முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி, 
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஉங்களுடைய தீய நெறிகளையும் 
தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்ஓ என்று முழக்கமிட்டனர். ஆனால் ஓஅவர்கள் 
எனக்குச் செவி சாய்க்க வில்லை: என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை " என்கிறார் 
ஆண்டவர்.
 5.       உங்கள் மூதாதையர் இப்போது 
இருக்கிறார்களா? இறைவாக்கினரும் என்றென்றும் உயிரோடிருப்பார்களா?
 6.       
உன் ஊழியராகிய இறைவாக்கினருக்கு நான் கட்டளை இட்ட என் வாக்குகளும் நியமங்களும் 
உங்கள் மூதாதையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, ஓபடைகளின் 
ஆண்டவர் எங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் ஏற்ப எங்களுக்குச் செய்யத் 
திருவுளங்கொண்டு அவ்வாறு செய்தார்ஓ என்று சொல்லவில்லையா? "
 7.       
அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின் பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி 
நான்காம் நாளன்று, இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் 
செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:
 8.       
இதோ, சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு கண்டேன்: அவர் ஒரு 
பள்ளத்தாக்கின் நடுவே நறுமணம் வீசும் பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்தார்: 
அவருக்குப் பின்னால் சிவப்புக் குதிரைகளும் இளம் சிவப்புக் குதிரைகளும் நின்றன.
 9.       அப்பொழுது நான், "என் தலைவரே, இவை எதைக் 
குறிக்கின்றன? " என்று கேட்க, என்னோடு பேசிய பதர், "இவை எதைக் குறிக்கின்றன என்று 
உனக்குக் காட்டுவேன் " என்றார்.
 10.       பசும் 
செடிகள் இடையே நின்று கொண்டிருந்த அவர் மறுமொழியாக, "இவை உலகெங்கும் சுற்றி 
வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன " என்றார்.
 11.       
பசும் செடிகள் இடையே நின்று கொண்டிரு்த ஆண்டவருடைய பதரிடம் அவர்கள், "நிலவுலகம் 
முழுவதும் நாங்கள் சுற்றிவந்தோம்: மண்ணுலகம் முழுவதும் அமைதியில் ஆழந்துள்ளது " 
என்று கூறினார்கள்.
 12.       ஆண்டவரின் பதர், 
"படைகளின் ஆண்டவரே, இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும் யூதாவின் 
நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்? இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் 
காட்டினீரே " என்று பதில் அளித்தார்.
 13.       
அதற்கு ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் 
மொழிகளையும் கூறினார்.
 14.       ஆகவே, என்னோடு பேசிக் கொண்டிருந்த 
பதர் என்னை நோக்கி, "நீ உரக்கக் கூவி அறிவிக்க வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது 
இதுவே: நான் எருசலேம்மீதும் சீயோன்மீதும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளேன்.
 15.       
ஆனால் அமைதியுடன் இனிது வாழ்கின்ற வேற்றினத்தார்மேல் கடும் சினம் கொண்டுள்ளேன். 
நான் சிறிதே சினமுற்றிருந்தபோது அவர்கள் பெரிதும் தீவினை செய்தார்கள்.
 16.       
ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன், " என்கிறார் ஆண்டவர். 
"அங்கே என் இல்லம் கட்டப்படும்: எருசலேமின்மேல் அளவு மல் பிடிக்கப்படும், " 
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 17.       மீண்டும் 
உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக: படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே: என் 
நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும். ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்: 
எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.
 18.       
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன்.
 19.       
என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரை நோக்கி, "இவை எதைக் குறிக்கின்றன? " என்று நான் 
வினவினேன். அதற்கு அவர், "இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த 
கொம்புகள் " எனப் பதிலளித்தார்.
 20.       
அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார்.
 21.       
"இவர்கள் எதற்காக வருகிறார்கள்? " என்று நான் கேட்டேன். அதற்கு அத்பதர், "எவரும் 
தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே: யூதா நாட்டைச் 
சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை 
உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன " என்று 
பதிலுரைத்தார்.
 
 
 அதிகாரம் 2.  
 1.       
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த 
ஒருவரைக் கண்டேன்.
 2.       "எங்கே போகிறீர்? " 
என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், "எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் 
எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன் " என்றார்.
 3.       
என்னோடு பேசிக்கொண்டிருந்த பதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு பதர் அவருக்கு எதிரே 
வந்தார்.
 4.       வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு 
சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: "எருசலேமில் எண்ணிறந்த 
மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் 
இருக்கும்!
 5.       ஏனெனில் அதைச் சுற்றிலும் 
நானே நெருப்புச் சுவராய் அமைவேன்: அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன், " 
என்கிறார் ஆண்டவர்.
 6.       "எழுந்திருங்கள், 
வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்: உலகின் நான்கு திசைகளுக்கும் 
உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர்.
 7.       
பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.
 8.       
என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த 
வேற்றினத்தாரைக் குறித்து, ஓஉங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்ஓ 
என்கிறார். "
 9.       இதோ, அவர்களுக்கு எதிராக 
என் கையை ஓங்கப் போகிறேன்: தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் 
ஆவார்கள்: அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து 
கொள்வீர்கள்.
 10.       மகளே, சீயோன்! 
அகமகிழ்ந்து ஆர்ப்பரி: இதோ நான் வருகிறேன்: வந்து உன் நடுவில் குடிகொள்வேன் " 
என்கிறார் ஆண்டவர்.
 11.       அந்நாளில், 
வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்: அவர்கள் அவருடைய மக்களாய் 
இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்: நீங்களும், படைகளின் ஆண்டவரே 
என்னை அறிந்து கொள்வீர்கள்.
 12.       ஆண்டவர் 
யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை 
மீண்டும் தேர்ந்துகொள்வார். "
 13.       
மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்: ஏனெனில் அவர்தம் 
புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.
 
 
 அதிகாரம் 3.  
 1.       
பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் பதர் 
முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது 
வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான்.
 2.       
அப்பொழுது ஆண்டவரின் பதர் சாத்தானை நோக்கி, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து 
கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து 
எடுத்த கொள்ளியல்லவா இவர்? " என்றார்.
 3.       
யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் பதர்முன் நின்று கொண்டிருந்தார். பதர் 
தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி,
 4.       
"அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள் " என்றார். பின்பு அவரிடம், 
"உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்: நீ உடுத்திக் கொள்வதற்குப் 
பட்டாடைகளை அளிப்பேன் " என்றார்.
 5.       
மேலும், "பய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள் " என்றார். அவ்வாறே 
அவர்கள் பய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் பதர் 
அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
 6.       
ஆண்டவரின் பதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே:
 7.       
"நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் 
இல்லத்தை ஆள்வாய்: என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்: இங்கே நிற்கும் 
பதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன் " என்று படைகளின் ஆண்டவர் 
கூறுகிறார்.
 8.       தலைமைக் குரு யோசுவாவே! 
நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான 
மனிதர்கள்: இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்:
 9.       
யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்: இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்: 
அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 10.       
ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: 
அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் 
அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார்.
 
 
 அதிகாரம் 4.  
 1.       
என்னோடு பேசிய பதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் 
என்னை எழுப்பி,
 2.       "நீ என்ன காண்கிறாய்? " 
என்று என்னைக் கேட்க, நான், "இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் 
காண்கிறேன்: அதன் உச்சியில் கிண்ணம் ஒனறு உள்ளது: அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் 
இருக்கின்றன: மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன:
 3.       
விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் 
இருக்கின்றன " என்றேன்.
 4.       அப்போது 
என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரை நோக்கி, நான், "என் தலைவரே! இவை எதைக் 
குறிக்கின்றன? " என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த பதர்,
 5.       
இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? " எனக் கேட்டார். நான் "என் 
தலைவரே! எனக்குத் தெரியாது " என்றேன்.
 6.       
மீண்டும் அவர் என்னிடம், "செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே: உனது 
ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல: ஆனால் எனது ஆவியாலே ஆகும், " என்கிறார் 
படைகளின் ஆண்டவர்.
 7.       மாபெரும் மலையே! 
செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்: அவரே தலையாய கல்லைக் 
கொண்டு வருவார்: அப்போது அதன்மேல் ஓஅருள்பொழிக! அருள்பொழிக!ஓ என்ற ஆரவாரம் 
ஒலிக்கும் " என்றார்.
 8.       ஆண்டவரின் வாக்கு 
மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
 9.       
"செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன. அவர் கைகளே இவ்வேலையை 
முடித்துவைக்கும். என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே என்பதை அப்போது 
அறிந்துகொள்வீர்கள். "
 10.       வேலை தொடங்கிய 
நாளை அவமதித்தவர்கள் யாரோ அவர்கள் செருபாபேலின் கையில் இரு பக்கு மற்குண்டு 
இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள்.
 11.       
"அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள் " 
என்றார். அப்போது நான், "விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள 
இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன? " என வினவினேன்.
 12.       
மீண்டும் நானே அவரிடம், "எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு 
பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன? " எனக் 
கேட்டேன்.
 13.       அதற்கு அவர், "இவை எதைக் 
குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா, " என்றார். நான், "தெரியாது என் தலைவரே " 
என்றேன்.
 14.       அதற்கு அவர், "இவை 
அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் 
குறிக்கின்றன " என மறுமொழி பகர்ந்தார்.
 
 
 அதிகாரம் 5.  
 1.       
மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,
 2.       
பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். "நீ காண்பது என்ன? " என்று அத்பதர் 
என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்: அதன் நீளம் 
இருபது முழம், அகலம் பத்து முழம் " என்று பதிலளித்தேன்.
 3.       
அப்போது அவர் என்னிடம், "அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது: ஒருபுறம் 
எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்: மறுபுறம் 
எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும் தண்டனைக்குத் தப்பவே மாட்டான்.
 4.       
நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன் " என்கிறார் படைகளின் ஆண்டவர். "அது திருடரின் 
வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, 
அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும்.
 5.       
பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த பதர் வெளியே வந்து என்னிடம், "உன் கண்களை 
உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார் " என்றார்.
 6.       
"அது என்ன? " என்று நான் திருப்பிக் கேட்க, "வெளிவரும் ஒரு மரக்கால்! " என்றார். 
தொடர்ந்து அவர், "இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல் " என 
மொழிந்தார்.
 7.       அதன் ஈய மூடி பக்கி 
உயர்த்தப்பட்டது. இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
 8.       
அப்போது அத்பதர், "இவளே அக்கொடுமை " எனக் கூறி, அவளை அந்த மரக்காலுக்குள் 
திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.
 9.       
மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது இதோ, வெளிவருகின்ற இரண்டு 
பெண்களைக் கண்டேன்: அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன. 
அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது: அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் 
விண்ணுக்கும் இடையில் பக்கிக் கொண்டு போனார்கள். என்னோடு பேசிக் கொண்டிருந்த 
பதரிடம்,
 10.       "இவர்கள் மரக்காலை எங்கே 
கொண்டு போகிறார்கள்? " என்று நான் கேட்டேன்.
 11.       அதற்கு அவர், "சீனார் நாட்டிலே 
அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி 
மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள் " என்றார்.
 
 
 அதிகாரம் 6.  
 1.       
மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து 
நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்: அம்மலைகள் வெண்கல மலைகள்.
 2.       
முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும்,
 3.       மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், 
நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.
 4.       என்"னோடு பேசிக்கொண்டிருந்த பதரிடம் நான் 
"என் தலைவரே! இவை என்ன? " என்று கேட்டேன்.
 5.       
அத்பதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற 
வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள்.
 6.       
கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது: வெண்ணிறக் 
குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன: கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை 
நோக்கிச் செல்கின்றன " என்று கூறினார்.
 7.       
வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் "துடித்தன. 
அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள் " என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் 
சுற்றித் திரிந்தன.
 8.       பின்பு அவர் என்னை 
நோக்கிக் கூக்குரலிட்டு, "இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை அந்நாட்டில் எனது 
உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன " என்றார்.
 9.       
மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
 10.       
நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, 
எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்: அன்"றைக்கே செப்பனியாவின் 
மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.
 11.       அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட பொன் 
வெள்ளியைக் கொண்ட முடி செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் 
தலையில் அதைச் சூட்டு:
 12.       சூட்டியபின் 
இவ்வாறு சொல்: "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, "தளிர் " என்னும் பெயர் கொண்ட 
மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்: ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்:
 13.       ஆண்டவரின் கோவிலைக் 
கட்டியெழுப்புவதுமன்றி, அரச மாண்பைக் கொண்டவராய், அரியணையில் வீற்றிருந்து அவர் 
ஆட்சி செலுத்துவார்: ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்.
 14.       
அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் 
கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் 
யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.
 15.       தொலைவில் இருப்போரும் வந்து ஆண்டவரின் 
கோவிலை் கட்டியெழுப்பத் துணைபுரிவர்: அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் 
அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் 
குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும். "
 
 
 அதிகாரம் 7.  
 1.       
அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் 
நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
 2.       
பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும் இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும் 
ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும்
 3.       
படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும் இறைவாக்கினர்களையும் கண்டு, 
"நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல் ஜந்தாம் மாதத்தில் நோன்பிருந்து 
புலம்"ப வேண்டுமா? " என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.
 4.       
அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
 5.       
நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது: "இந்த எழுபது 
ஆண்டுகளாக ஜந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு 
அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள்?
 6.       நீங்கள் உணவருந்தியபோதும் 
குடித்தபோதும் உங்களுக்காகத்தானே உணவருந்தினீர்கள்? உங்களுக்காகத்தானே 
குடித்தீர்கள்?
 7.       எருசலேமில் மக்கள் 
குடியேறிய போதும், அந்நகர் சீரும் சிறப்புமாய் இருந்தபோதும், அதைச் சூழ்ந்திருந்த 
நகர்கள் தென்நாடு, சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், முன்னாளைய 
இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா? "
 8.       
மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.
 9.       
"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்: ஒருவர்க்கொருவர் 
அன்பும் கருணையும் காட்டுங்கள்:
 10.       
கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்: உங்களுக்குள் 
எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். "
 11.       
ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்: இறுகிய மனத்துடன் முகத்தைத் 
திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.
 12.       
படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த 
திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் 
கடினப்படுத்திக் கொண்டார்கள்: ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.
 13.       
"நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் 
கேட்கவில்லை, " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 14.       
"ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்: இவ்வாறு 
அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று: போவார் வருவார் எவருமே அங்கில்லை: 
இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள். "
 
 
 அதிகாரம் 8.  
 1.       
படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது 
இதுவே:
 2.       "சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் 
நான் கனன்று கொண்டிருக்கின்றேன்: அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் 
சினமுற்றிருக்கின்றேன்.
 3.       "ஆண்டவர் 
கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்: எருசலேம் நடுவில் 
குடியிருக்கப் போகிறேன்: எருசலேம் ஓஉண்மையுள்ள நகர்ஓ என்றும், படைகளின் ஆண்டவரது 
மலை ஓதிருமலைஓ என்றும் பெயர்பெற்று விளங்கும்.
 4.       
படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் 
மீண்டும் அமர்ந்திருப்பார்கள்: வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் 
கோல் வைத்திருப்பார்கள்:
 5.       நகரின் 
தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்: அவர்கள் அதன் தெருக்களில் 
விளையாடிக்கொண்டிருப்பார்கள். "
 6.       படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 
"இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் 
தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ? " என்கிறார் படைகளின் 
ஆண்டவர்.
 7.       படைகளின் ஆண்டவர் கூறுவது 
இதுவே: "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை 
விடுவிப்பேன்:
 8.       அவர்களை அழைத்துக் கொண்டு 
வருவேன்: அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்: அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்: 
உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: "
 9.       
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி 
அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் 
செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
 10.       
ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை: போவார் 
வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு 
எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.
 11.       
இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்"போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல 
இருக்கமாட்டேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 12.       
ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் 
கொடுக்கும்: வயல் நிலம் தன் விளைவைத் தரும்: வானம் பனியைப் பொழியும்: நானோ 
இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.
 13.       யூதா குடும்பத்தாரே! இஸ்"ரயேல் 
குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்: 
இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்: நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்: 
அஞ்சாதீர்கள்: உங்கள் கைகள் வலிமை பெறட்டும். "
 14.       
ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் 
செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன், " 
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 15.       அவ்வாறே 
இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் 
திட்டமிட்டுள்ளேன்: ஆகையால் அஞ்சாதீர்கள்.
 16.       
நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே: ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்: 
உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு 
வழிகோலுவதாயும் இருக்கட்டும்:
 17.       
ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்: பொய்யாணை 
இடுவதை விரும்பாதீர்கள்: ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன், " என்கிறார் 
ஆண்டவர்.
 18.       படைகளின் ஆண்டவரது வாக்கு 
எனக்கு மீண்டும் அருளப்பட்டது:
 19.       
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் நோன்பும், ஜந்தாம் மாதத்தின் 
நோன்பும், ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும் யூதா 
குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த மாபெரும் திருவிழா நாள்களாக 
மாறிவிடும். ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.
 20.       
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட 
வருவார்கள்.
 21.       ஒருநகரில் குடியிருப்போர் 
மற்றொரு நகரினரிடம் சென்று, "நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை 
வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்: நாங்களும் வருகிறோம் " 
என்று சொல்வார்கள்.
 22.       மக்களினங்கள் 
பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை 
மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
 23.       
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் 
வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ஓகடவுள் உங்களோடு 
இருக்கின்"றார்ஓ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் 
என்பார்கள். "
 
 
 அதிகாரம் 9.  
 1.       
ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது 
தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே 
சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.
 2.       
அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே 
சொந்தம்.
 3.       தீர் தன்னைச் சுற்றிலும் அரண் 
ஒன்றைக் கட்டியெழுப்பியது: பசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் 
பொன்னையும் சேமித்தது.
 4.       இதோ என் தலைவர் 
அவற்றைப் பறிமுதல் செய்வார்: அதன் அரணைக் கடலுக்குள் பக்கி எறிவார்: அந்நகரும் 
நெருப்புக்கு இரையாகும்.
 5.       அஸ்கலோன் 
இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்: காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்: அவ்வாறே 
எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்: 
அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
 6.       அஸ்தோதில் 
கலப்பினத்தார் குடியிருப்பார்கள்: பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.
 7.       இரத்தம் வடியும் இறைச்"சியை அவர்கள் 
வாயினின்று அகற்றுவேன்: அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்: 
அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்: அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். 
எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்:
 8.       
அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் 
இறங்குவேன்: ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்: 
ஏனெனில் என் கண்"களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
 9.       
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் 
வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், 
கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.
 10.       
அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்: எருசலேமில் குதிரைப்படையை அறவே 
ஒழித்து விடுவார்: போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு 
அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் 
நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
 11.       
உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, 
சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.
 12.       நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் 
கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்: இருமடங்கு நன்மைகள் நான் 
உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
 13.       
நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்: எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்: 
சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் 
ஆக்குவேன்.
 14.       அப்போது அவர்கள்மீது 
ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்: தலைவராகிய 
ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்: அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து 
வருவார்.
 15.       படைகளின் ஆண்டவர் 
அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்: அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, 
அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்: திராட்சை இரசத்தைப்போல் அவர்களது 
குருதியைக் குடிப்பார்கள்: கிண்ணம்"போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் 
கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.
 16.       அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய 
ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்: 
அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.
 17.       ஆம், அக்காட்சி எத்துணை இனியது: எத்துணை 
அழகியது: கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் 
செய்யும்.
 
 
 அதிகாரம் 10.  
 1.       
இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஆண்டவரே மின்னல்களை 
உண்டாக்குபவர்: மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்: வயல்வெளிகளில் பயிரினங்களை 
முளைப்பிப்பவரும் அவரே:
 2.       குலதெய்வங்களை 
வீணானதையே கூறுகின்றன: குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்: அவர்கள் போலிக் 
கனவுகளை எடுத்துரைக்கின்றனர்: வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்: ஆதலால், 
மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்: ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.
 3.       
ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது: தலைவர்களை நான் தண்டிக்கப் 
போகின்றேன்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் 
கண்காணிக்கிறார்: அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.
 4.       
அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்: கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் 
அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.
 5.       
அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.
 6.       .       
"யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை 
மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி 
வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், 
நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி 
அளிப்பேன்.
 7.       எப்ராயிம் மக்கள் 
ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் 
அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு 
மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
 8.       
சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை 
மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
 9.       
மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் 
நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
 10.       
நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து 
அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு 
வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.
 11.       
எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: 
பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து 
நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.
 12.       
ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் 
பெருமைகொள்வார்கள், " என்கிறார் ஆண்டவர்.
 
 
 அதிகாரம் 11.  
 1.       
லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை: நெருப்பு உன் கேதுரு மரங்களைச் 
சுட்டெரிக்கட்டும்.
 2.       தேவதாரு மரங்களே! 
புலம்பியழுங்கள்: ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன: ஓங்கி வளர்ந்த மரங்கள் 
பாழாயின: பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்: ஏனெனில், அடர்ந்த 
காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
 3.       அவர்கள் 
அலறியழும் குரல் கேட்கின்றது: ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது: இளம் 
சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது: ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.
 4.       என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே: 
வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக!
 5.       
விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்: ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது 
சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, "ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் 
சேர்ந்தது " என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை.
 6.       .       
"இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன், " என்கிறார் ஆண்டவர். 
இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் 
சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் 
கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.
 7.       
அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற 
ஆயானானேன்: நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு "இனிமை " என்றும், 
மற்றதற்கு "ஒன்றிப்பு " என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன்.
 8.       
ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்: நான் அவர்களைப் 
பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்: அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
 9 
அப்போது, "இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை: சாவது சாகட்டும்: அழிவது 
அழியட்டும்: மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துக் தின்னட்டும் "
 10.       
என்று நான் சொன்னேன். "இனிமை " என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் 
நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன்.
 11.       
அன்"றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறெ என்னைக் கூர்ந்து கவனித்துக் 
கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர்.
 12.       
அப்போது நான் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் 
கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள் " என்றேன். அவர்கள் எனக்குக் 
கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக்" கொடுத்தார்கள்.
 13.       ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி 
அதைத் பக்கி எறி: இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு! " என்றார். 
அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் 
இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.
 14.       
யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி 
"ஒன்றிப்பு " என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.
 15.       
பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, "அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை 
எடுத்துக்கொள் " என்றார்.
 16.       ஏனெனில் இதோ 
நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்: அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டேன். 
சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்: எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்: 
நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்: ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்: 
அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.
 17.       
ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஜயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் 
வாள் வந்து விழட்டும்: அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்: அவனது வலக்கண் 
இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.
 
 
 அதிகாரம் 12.  
 1.       
ஓர் இறைவாக்கு: இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்க: விண்வெளியை 
விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் 
தோற்றுவித்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
 2.       
இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் 
மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்: எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் 
யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும்.
 3.       
அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்: அதைத் 
பக்கும் எவரும் காயமடைவது திண்ணம்: உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு 
எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.
 4.       
அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் 
பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
 5.       
யூதா குடும்பத்தாரைக் கடைக்கண்ணோக்கி மக்களினங்களின் அனைத்துக் குதிரைகளின் 
கண்களையும் குருடாக்குவேன். அப்போது யூதா நாட்டின் குடும்பத்தலைவர்கள், எருசலேமில் 
குடியிருப்போரின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய படைகளின் ஆண்டவரில்தான் இருக்கிறது 
என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்.
 6.       
அந்நாளில் நான் யூதாவின் குடும்பத் தலைவர்களை விறகுகளுக்கிடையில் "வைத்த 
நெருப்புச்சட்டிபோலும், வைக்கோல் கட்டுகளுக்குள் தீப்பந்தம் போலும் ஆக்குவேன்: 
அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களினங்கள் அனைத்தையும் வலப்பக்கமும் 
இடப்பக்கமுமாய் அழித்தொழிப்பார்கள்: எருசலேம் மக்களோ முன்பு இருந்த இடமாகிய 
எருசலேமிலேயே குடியிருப்பார்கள்.
 7.       தாவீது 
குடும்பத்தாரின் மேன்மையும் எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும் யூதாவின் 
மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே முதலில் விடுதலை 
அளிப்பார்.
 8.       அந்நாளில் எருசலேமில் 
குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்: அந்நாளில் அவர்களுள் காலுன்றி 
நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிப்பர். தாவீதின் குடும்பித்தார் 
கடவுளைப்போலும் அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் பதரைப்போலும் இருப்பர்.
 9.       
அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க 
வகைதேடுவேன்.
 10.       நான் தாவீது 
குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் 
மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் 
குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்: அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து 
ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் 
மனம் கசந்து அழுவார்கள்.
 11.       அந்நாளில் 
எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் 
பெரிதாயிருக்கும்.
 12.       நாடு முழுவதும் 
குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்: தாவீது குடும்பத்தாரின் 
குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், 
நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் 
மற்றொரு புறம் தனித்தும்,
 13.       லேவி 
குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு 
புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் 
மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.
 14.       
எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும் 
அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.
 
 
 அதிகாரம் 13.  
 1.       
"அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் பய்மையாக்கும் நீரூற்று தாவீதின் 
குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும்" தோன்றும்.
 2.       
அந்நாளிலே நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்துவிடுவேன்: 
அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது: மேலும் போலி இறைவாக்கினரையும் 
அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து விரட்டி விடுவேன் " என்கிறார் படைகளின் ஆண்டவர்.
 3.       எவனாவது மீண்டும் இறைவாக்கினனாகத் 
தோன்றுவானாகில் அவனைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும், "ஆண்டவரின் பெயரால் பொய் 
பேசுவதால் நீ உயிர்வாழக்கூடாது " என்று அவனிடம் சொல்வார்கள். அவன் இறைவாக்கு 
உரைக்கும்போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று 
போடுவார்கள்.
 4.       அந்நாளில் இறைவாக்கினருள் 
ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும் போது தான் கண்ட காட்சியைக் குறித்து 
வெட்கமடைவான்: ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக் கொள்ளமாட்டான்.
 5.       ஆனால், "நான் இறைவாக்கினன் அல்ல: நிலத்தைப் 
பயிரிடுகிற உழவன்: என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன் " என்று சொல்வான்.
 6.       "உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு 
ஏற்பட்டன? " என ஒருவன் வினவினால், "என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை 
ஏற்பட்டன " என மறுமொழி பகர்வான்.
 7.       "வாளே 
எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு என்கிறார் 
படைகளின் ஆண்டவர். ஓஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்: சிறியோர்க்கு 
எதிராக என் கையை ஓங்குவேன்.
 8.       நாட்டு 
மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்: மூன்றில் ஒரு பங்கினரே 
எஞ்சியிருப்பர்ஓ, என்கிறார் ஆண்டவர்.
 9.       
இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் பய்மைப்படுத்துவது 
போல் பய்மைப்படுத்துவேன்: பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்: அவர்கள் என் பெயரை 
நினைத்து மன்றாடுவார்கள்: நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்: 
ஓஇவர்கள் என் மக்கள்ஓ என்பேன் நான், ஓஆண்டவர் எங்கள் கடவுள்ஓ என்பார்கள் அவர்கள். "
 
 
 அதிகாரம் 14.  
 1.       
இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் 
உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.
 2.       
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று 
கூட்டப்போகிறேன்: நகர் பிடிபடும்: வீடுகள் கொள்ளையிடப்படும்: பெண்கள் 
மானபங்கப்படுத்தப்படுவார்கள்: நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு 
கடத்தப்படுவாகள்: ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.
 3.       பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, 
முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.
 4.       
அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் 
நிற்கும்: அப்போது ஒலிவமலை கிழக்குமேற்"காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு 
ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் 
மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.
 5.       
அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்: மலைகளின் 
பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்: நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் 
காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்: அப்போது 
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.
 6.       
அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது.
 7.       
அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு 
வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.
 8.       
அந்நாளில் வற்றாத நீரூற்று ஒன்று எருசலேமிலிருந்து தோன்றி ஓடும்: அதன் ஒரு பாதி 
கீழ்க்கடலிலும் மறு பாதி மேற்கடலிலும் சென்று கலக்கும். கோடைக்காலத்திலும் 
குளிர்காலத்திலும் அது ஓடிக்கொண்டேயிருக்கும்.
 9.       
ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார். அந்நாளில் ஆண்டவர் ஒருவர் 
மட்டுமே இருப்பார்: அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.
 10.       
கேபாவிலிருந்து எருசலேமுக்குத் தெற்கில் உள்ள ரிம்மோன்"வரை உள்ள நாடு முழுவதும் 
சமவெளியாக்கப்படும்: எருசலேமோ தான் இருந்த இடத்திலேயே ஓங்கி உயர்ந்து பென்யமின் 
வாயிலிருந்து முன்னைய வாயில் இருந்த இடமான மூலைவாயில் வரையிலும், அனனியேல் காவல் 
மாடத்திலிருந்து அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையிலும் மக்கள் குடியேற்றத்தால் 
நிறைந்திருக்கும்.
 11.       அங்கே மக்கள் 
குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள். எருசலேம் அச்சமின்றி 
வாழும்.
 12.       எருசலேமுக்கு எதிராகப் 
போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை 
நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் 
அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் 
வாய்க்குள்ளேயே அழுகி விடும்.
 13.       
அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்: அப்போது 
அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்: அடுத்திருப்பாருக்கு 
எதிராகக் கையை ஓங்குவர்.
 14.       யூதாவும்கூட 
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்: அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் 
செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும்.
 15.       அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது 
போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், 
கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.
 16.       
பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் 
படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் 
அங்கே போவர்.
 17.       உலகின் இனத்தார் 
எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் 
அவர்கள் நாட்டில் மழை பெய்யாது.
 18.       எகிப்து நாட்டினர் அவரை வழிபட 
வரவிலலையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட 
வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.
 19.       
இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா 
வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.
 20.       
அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் "ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை " 
என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் 
முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்.
 21.       
யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஒவ்வொரு பானையும் படைகளின் ஆண்டவருக்கே 
அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்கும்: பலி செலுத்துவோர் எல்லாரும் பலி இறைச்சியைச் 
சமைப்பதற்காக அவற்றை எடுக்க முன்வருவார்கள். மேலும், அந்நாள் முதல் படைகளின் 
ஆண்டவரது கோவிலில் வணிகர் எவரும் இருக்கமாட்டார்.
 |