Galatians 
	- கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்
	1. அதிகாரம் 
கலா. 1:1 கலாத்திய மாநிலத்தில் உள்ள திருச்சபைகளுக்கு எந்த ஒரு தனி 
	மனிதராலோ மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல்
கலா. 1:2 மனித இயேசு 
	கிறிஸ்துவாலும் இறந்த அவரை உயிர்த்தெழச் செய்த தந்தையாம் கடவுளாலும் 
	திருத்தூதனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும் என்னுடன் இருக்கும் சகோதரர் 
	அனைவரும் எழுதுவது: 
	
கலா. 1:3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு 
	கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக. 
கலா. 
	1:4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத 
	காலத்தினின்று நம்மை விடுவிக்கமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே 
	ஒப்புவித்தார். 
கலா. 1:5 தந்தையாம் கடவுளுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக. ஆமென். 
கலா. 1:6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை 
	விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே. 
	எனக்கே வியப்பாய் இருக்கிறது. 
கலா. 1:7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது 
	என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் 
	கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. 
	கலா. 1:8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை 
	நாங்களோ விண்ணிலிருந்து வந்த தூதரோ யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக. 
	கலா. 1:9 ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்: நீங்கள் பெற்றுக்கொண்ட 
	நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் 
	சபிக்கப்படுக. 
கலா. 1:10 இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய 
	நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா 
	பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் 
	கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது. 
கலா. 1:11 சகோதர 
	சகோதரிகளே உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு 
	அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. 
கலா. 1:12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை: எந்த 
	மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய 
	வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. 
கலா. 1:13 நான் 
	யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி 
	நீங்கள் கேள்விப்பட்டிருப்பாகள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் 
	துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். 
கலா. 1:14 மூதாதையர் மரபுகளில் ஆர்வம் 
	மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து 
	விளங்கினேன். 
கலா. 1:15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் 
	தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள். 
கலா. 1:16 
	தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை 
	எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் 
	போய்க் கலந்து பேசவில்லை. 
கலா. 1:17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் 
	போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு 
	நகருக்குத் திரும்பினேன். 
கலா. 1:18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் 
	கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு 
	தங்கியிருந்தேன். 
கலா. 1:19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர 
	திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. 
கலா. 1:20 
	நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை: இதற்குக் கடவுளே சாட்சி. 
	கலா. 1:21 பிறகு நான் சிரியா சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன். 
கலா. 
	1:22 ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் 
	ஆகாமலேயே இருந்தேன். 
கலா. 1:23 "ஒரு காலத்தில் தங்களைத் 
	துன்புறுத்தியவன் தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது 
	நற்செய்தியாக அறிவிக்கிறான்" என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 
	கலா. 1:24 அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். 
	2. அதிகாரம் 
கலா. 2:1 பதினான்கு ஆண்டுகளு்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு 
	பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். 
கலா. 2:2 நான் போக 
	வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்ட படியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் 
	நடுவில் நான் அறிவித்து வந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். 
	செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் 
	பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப் போகக் கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு 
	செய்தேன். 
கலா. 2:3 என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் 
	விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 
	கலா. 2:4 திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் 
	விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி 
	உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு 
	வருவதே அவர்களது நோக்கம். 
கலா. 2:5 உங்கள் பொருட்டு நற்செய்தியின் 
	உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு 
	அடிபணியவில்லை. 
கலா. 2:6 செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் 
	கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் 
	பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் 
	பார்த்தா செயல்படுகிறார். 
கலா. 2:7 ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி 
	அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே பிற இனத்தாருக்கு அதை 
	அறிவிக்கும் பணி என்னிடம் அவர்கள் கண்டுகொண்டார்கள். 
கலா. 2:8 ஆம் 
	யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார். 
கலா. 
	2:9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் 
	கருதப்பட்ட யாக்கோபு கேபா யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் 
	பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு 
	நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோ ம். 
கலா. 
	2:10 ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் 
	கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன். 
	கலா. 2:11 ஆனால் கேபா அந்தினேயாக்கிடயாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்டமுறை 
	கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். 
	கலா. 2:12 அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு 
	வந்தார்: ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை 
	விட்டுவிட்டார். 
கலா. 2:13 மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு 
	சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்துவிட்டது. 
	கலா. 2:14 இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் 
	கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் "நீர் யூதராயிருந்தும் யூத 
	முறைப்படி நடவாமல் பிற இனத்தின் முறைப்படி நடக்கிறீர்களே. அப்படியிருக்க பிற 
	இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் 
	கட்டாயப்படுத்தலாம்? என்று கேட்டேன். 
கலா. 2:15 பிறப்பால் நாம் 
	யூதர்கள்: பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல. 
கலா. 2:16 
	எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல இயேசு கிறிஸ்துவின் மீது 
	கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் 
	அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல 
	நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்படையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை 
	கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு 
	ஏற்புடையவர் ஆவதில்லை. 
கலா. 2:17 கிறிஸ்து வழியாக இறைவனுக்கு 
	ஏற்புடையவராவதற்கு முயலும் நாமும் பாவிகளே என்றால் கிறிஸ்து பாவத்திற்குத் 
	துணைபோகிறார் என்றாகுமே. இப்படி எப்போதும் இருக்கமுடியாது.
கலா. 2:18 
	நான் இழுத்துத் தகர்த்ததை நானே மீண்டும் கட்டி எழுப்பினால் சட்டத்தை மீறினவன் 
	என்பதற்கு நானே சான்று ஆவேன். 
கலா. 2:19 திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு 
	அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் 
	அறையப்பட்டிருக்கிறேன். 
கலா. 2:20 எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: 
	கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் 
	அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். 
	எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். 
கலா. 2:21 நான் கடவுளின் அருள் 
	பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் 
	இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே. 
	3. அதிகாரம் 
கலா. 3:1 அறிவிலிகளான காலத்தியரே உங்களை மயக்கியோர் 
	யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் 
	பிடித்துக் காட்டப்படவில்லையா? 
கலா. 3:2 உங்களிடம் ஒன்றுமட்டும் 
	கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? 
	திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை 
	கொண்டதாலா? 
கலா. 3:3 தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை 
	இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு 
	நீங்கள் அறிவிலிகளா? 
கலா. 3:4 நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? 
	வீணாகத் தான் முடியுமா? 
கலா. 3:5 உங்களுக்குத் தூய ஆவியை அளித்து 
	உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? 
	நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு 
	நம்பிக்கை கொண்டதாலா? 
கலா. 3:6 ஆபிரகாமைப் பாருங்கள்."அவர் கடவுள்மீது 
	நம்பிக்கை கொண்டார்: அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்." 
கலா. 
	3:7 ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து 
	கொள்ளுங்கள். 
கலா. 3:8 நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு 
	ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல்"உன் வழியாக மக்களினங்கள் 
	அனைத்தும் ஆசி பெறும்" என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. 
கலா. 3:9 ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை 
	கொள்வோரும் பங்குபெறுவர். 
கலா. 3:10 திருச்சட்டம் சார்ந்த செயல்களையே 
	நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்: ஏனெனில்"திருச்சட்டத்தின் 
	வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்." என்று 
	எழுதியுள்ளது. 
கலா. 3:11 சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் 
	ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில்"நேர்மையுடையோர் தம் 
	நம்பிக்கையால் வாழ்வடைவர்." 
கலா. 3:12 திருச்சட்டம் நம்பிக்கையை 
	அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக"சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் 
	அவற்றால் வாழ்வு பெறுவர்" என்று எழுதியுள்ளது. 
கலா. 3:13"மரத்தில் 
	தொங்கவிடப்பட்டோ ர் சபிக்கப்பட்டோ ர்" என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து 
	சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். 
	கலா. 3:14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற 
	இனத்தார்க்கும் கிடைக்கவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் 
	வழிாய்ப் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார். 
கலா. 3:15 சகோதர சகோதரிகளே. உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக் காட்டுத் 
	தருகிறேன். மனிதர் முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை யாரும் 
	செல்லாததாக்கவோ அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது. 
கலா. 3:16 
	வாக்குறுதிகள் ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன. பலரைக் 
	குறிக்கும் முறையில்"வழி மரபினர்களுக்கு" என்று இல்லாமல் ஒருவரையே குறிக்கும் 
	முறையில்"உன் மரபினருக்கு" என்று உள்ளது. அந்த மரபினர் கிறிஸ்துவே. 
	கலா. 3:17 என் கருத்து இதுவே: கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த 
	உடன்படிக்கையை நானுற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம் 
	செல்லாததாக்கிவிட முடியாது: அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் 
	முடியாது. 
கலா. 3:18 திருச்சட்டம் சார்ந்த செயல்களால் உரிமைப்பேறு 
	கிடைப்பதாய் இருந்தால் அது வாக்குறுதியால் தரப்படுவது இல்லை என்றாகிறது. ஆனால் 
	கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார். 
கலா. 3:19 
	அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன? குற்றங்களை எடுத்துக்காட்ட அது 
	பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை 
	அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்கள் மூலம் அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் 
	வழியாய்க் கொடுக்கப்பட்டது. 
கலா. 3:20 நேரிடையாய் ஒருவர் 
	செயலாற்றும்கோது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே 
	நேரிடையாய்ச் செயல்பட்டார். 
கலா. 3:21 அப்படியானால் திருச்சட்டம் 
	கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு 
	சட்டம் தரப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு 
	ஏற்புடையவர் ஆகியிருக்கலாம். 
கலா. 3:22 ஆனால் இயேசு கிறிஸ்துவின்மீது 
	நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் 
	என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் 
	கூறுகிறது. 
கலா. 3:23 நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் 
	ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த 
	நம்பிக்ககையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. 
கலா. 3:24 இவ்வாறு 
	நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக 
	நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் 
	செயல்பட்டது. 
கலா. 3:25 இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி 
	நாம் வழித்துணைவின் பொறுப்பில் இல்லை. 
	
கலா. 3:26 ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் 
	நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். 
கலா. 3:27 
	அவ்வாறெனில் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் 
	அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். 
கலா. 3:28 இனி உங்களிடையே 
	யூதர் என்றும் கிரேக்கர் என்றும் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் 
	இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு 
	இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். 
கலா. 3:29 நீங்கள் 
	கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். 
	வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறார்கள். 
	4 . அதிகாரம் 
கலா. 4:1 நான் சொல்வது இதுவே: தந்தையின் சொத்து அனைத்துக்கும் 
	உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு 
	எதுவும் இல்லை: 
கலா. 4:2 தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள் 
	மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். 
கலா. 4:3 அவ்வாறே நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகின் பஞ்சபூதங்களுக்கு 
	அடிமைப்பட்டிருந்தோம். 
கலா. 4:4 ஆனால் நாலம் நிறைவேறியபோது 
	திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 
கலா. 4:5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு 
	உட்பட்டவராகவும் அனுப்பினார். 
கலா. 4:6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் 
	கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த 
	ஆவி"அப்பா தந்தையே" எனக் கூப்பிடுகிறது. 
கலா. 4:7 ஆகையால் இனி நீங்கள் 
	அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் 
	இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே. 
கலா. 4:8 ஒரு காலத்தில் நீங்கள் 
	கடவுளை அறியாதிருந்தீர்கள்: அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் 
	இருந்தீர்கள். 
கலா. 4:9 ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்: 
	உண்மையில் கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் 
	வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் 
	ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்? 
கலா. 4:10 நாள் மாதம் காலம் ஆண்டு 
	என்று பார்க்கிறீர்கள். 
கலா. 4:11 உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது 
	வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது. 
கலா. 4:12 சகோதர சகோதரிகளே 
	உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்: நான் உங்களைப்போல 
	ஆனேன் அல்லவா? நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை. 
கலா. 4:13 
	என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு 
	வாய்ப்பு அளித்தது. இது உங்களுக்குத் தெரியுமே. 
கலா. 4:14 என் 
	உடல்நிலையை முன்னிட்டு என்னைப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்கும் சோதனை 
	உங்களுக்கு வரவில்லை. அதற்கு மாறாக கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வதுபோல் ஏன் 
	கிறிஸ்து இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல் என்னை ஏற்றுக் கொண்டீர்கள். 
	கலா. 4:15 என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள். அந்த 
	மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் 
	பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள். உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் 
	சொல்லமுடியும். 
கலா. 4:16 இப்போது உங்களுக்கு உண்மையைச் சொன்னதால் 
	உங்கள் பகைவன் ஆனேனா? 
கலா. 4:17 முன்பு நான் குறிப்பிட்டவர்கள் 
	உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானது அல்ல: 
	நீங்களும் அதே ஆர்வம் காட்ட வேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து 
	பிரிக்க விரும்புகிறார்கள். 
கலா. 4:18 உங்கள் நடுவில் நான் இருந்தாலும் 
	இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே: 
	ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும். 
கலா. 4:19 என் 
	பிள்ளைகளே உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால 
	வேதனையுறுகிறேன். 
கலா. 4:20 உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. 
	இப்பொழுது உங்களோடு இருந்து வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும். 
கலா. 4:21 திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே அச்சட்டம் 
	சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா? 
கலா. 4:22 ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் 
	இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்: மற்றவன் உரிமைப்பெண்ணிடம் 
	பிறந்தவன் என்று எழுதியுள்ளது. 
கலா. 4:23 அடிமைப் பெண்ணின் மகன் 
	இயல்பான முறைப்படி பிறந்தவன்: உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் 
	பிறந்தவன். 
	
கலா. 4:24 இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு 
	உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் 
	செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது. 
கலா. 4:25 அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு 
	அடையாளம். ஏனெனில் இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது. 
	கலா. 4:26 மேலே உள்ள எருசலேமா உரிமைப்பெண்: நமக்கு அன்னை. 
கலா. 4:27 
	ஏனெனில்"பிள்ளைபெறாத மலடியே மகிழ்ந்து பாடு. பேறுகால வேதனை அறியாதவளே 
	அக்களித்துப் பாடி முழங்கு. ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு 
	வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. 
	கலா. 4:28 ஆகவே சகோதர சகோதரிகளே நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின் படி 
	பிறந்த பிள்ளைகள். 
கலா. 4:29 ஆனால் இயல்பான முறைப்படி பிறந்தவன் தூய ஆவியின் ஆற்றலால் 
	பிறந்தவனை அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது. 
கலா. 4:30 
	எனினும் மறைநூல் கூறுவதென்ன?"இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்தி 
	விடும்: ஏனெனில் அடிமைப் பெண்ணின் மகன் உரிமைப் பெண்ணின் பங்காளியாக 
	இருக்கக்கூடாது." 
கலா. 4:31 ஆகவே சகோதர சகோதரிகளே நம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல: உரிமைப்
	பெண்ணின் மக்கள். 
5. அதிகாரம் 
கலா. 5:1 கிறிஸ்து 
	அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: 
	அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் 
	ஏற்றுக்கொள்ளாதீர்கள். 
கலா. 5:2 பவுலாகிய நான் உங்களுக்குச் 
	சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் 
	பயனே இல்லை. 
கலா. 5:3 விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 
	திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் 
	வற்புறுத்திக் கூறுகிறேன். 
கலா. 5:4 திருச்சட்டம் சார்ந்த செயல்களால் 
	இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக இயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் 
	போய்விட்டீர்கள். 
கலா. 5:5 ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் 
	நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படவோம் என்னும் 
	எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். 
கலா. 5:6 கிறிஸ்து 
	இயேசுவோடு இணைந்து வாழ்வோர் விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து 
	கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அதன்பின் வழியாய்ச் செயலாற்றும் 
	நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. 
கலா. 5:7 நீங்கள் நன்றாகத்தானே முன்னேறி வந்தீர்கள். அப்படியிருக்க 
	உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி இப்போது உங்களைத் தடுத்தவர் யார்? 
கலா. 
	5:8 இவ்வாறு செய்யத் தூண்டியவர் உங்களை அழைத்த இறைவன் அல்ல. 
கலா. 5:9 
	சிறிதளவு புளிப்புமாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. 
	கலா. 5:10 மாறுபட்ட கொள்கை எதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்னும் உறுதியான 
	நம்பிக்கையை ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார். ஆனால் உங்கள் உள்ளத்தைக் 
	குழப்புவோர் எவராய் இருந்தாலும் அவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள். 
	கலா. 5:11 சகோதர சகோதரிகளே விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பதாய் 
	இருந்தால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்பட வேண்டும்? நான் அவ்வாறு 
	அறிவித்தால் சிலுவை ஒரு தடையாக இருக்க இடமில்லையே. 
கலா. 5:12 உங்கள் 
	உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அலிகளாகவே ஆக்கிக் 
	கொள்ளட்டும். 
கலா. 5:13 அன்பர்களே நீங்கள் உரிமை வாழ்வுக்கு 
	அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்: அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு 
	வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் 
	அடிமைகளாய் இருங்கள். 
கலா. 5:14"உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு 
	அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் 
	திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. 
கலா. 5:15 ஆனால் நீங்கள் 
	ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் 
	அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை. 
கலா. 5:16 எனவே நான் சொல்கிறேன் தூய 
	ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற 
	மாட்டீர்கள். 
கலா. 5:17 ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய 
	ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் 
	நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. 
கலா. 5:18 
	நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் 
	இருக்கமாட்டீர்கள். 
கலா. 5:19 ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் 
	தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை கெட்ட நடத்தை காமவெறி 
கலா. 5:20 
	சிலைவழிபாடு பில்லி சூனியம் பகைமை சண்டை சச்சரவு பொறாமை சீற்றம் கட்சி 
	மனப்பான்மை பிரிவினை பிளவு 
கலா. 5:21 அழுக்காறு குடிவெறி களியாட்டம் 
	முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக 
	அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் 
	சொல்கிறேன். 
	
கலா. 5:22 ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு மகிழ்ச்சி அமைதி பொறுமை பரிவு 
	நன்னயம் நம்பிக்கை 
கலா. 5:23 கனிவு தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள 
	இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. 
கலா. 5:24 கிறிஸ்து இயேசுவுக்கு 
	உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் 
	சிலுவையில் அறைந்துவிட்டார்கள். 
கலா. 5:25 தூய ஆவியின் துணையால் நாம் 
	வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயெ நடக்க முயலுவோம். 
கலா. 
	5:26 வீண் பெருமையைத் தேடாமலும் ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும் 
	ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக. 
6. அதிகாரம் 
	கலா. 6:1 சகோதர சகோதரிகளே ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய 
	ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்: 
	அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
	கலா. 6:2 ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்: இவ்வாறு 
	கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். 
கலா. 6:3 பெருமைக்குரியோராய் 
	இல்லாதிருந்தும் தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மையே ஏய்த்துக் 
	கொள்ளுகின்றனர். 
கலா. 6:4 ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து 
	பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல் தாம் 
	செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும். 
கலா. 6:5 
	ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ளட்டும். 
	
கலா. 6:6 இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் 
	கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும். 
	கலா. 6:7 ஏமாந்து போகவேண்டாம்: கடவுளைக் கேலிசெய்ய முடியும் என 
	நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார். 
கலா. 6:8 
	தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை 
	செய்வர். ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவி அருளும் 
	நிலைவாழ்வை அறுவடை செய்வர். 
கலா. 6:9 நன்மைசெய்வதில் 
	மனம்தளாரதிருப்போமாக. நாம் தளர்ச்சி அடையாதிருந்தால். தக்க காலத்தில் அறுவடை 
	செய்வோம். 
கலா. 6:10 ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே 
	எல்லாருக்கும் சிறப்பாக நம்பிக்கை கொண்டோ ரின் குடும்பத்தினருக்கும் நன்மை 
	செய்ய முன்வருவோம. 
கலா. 6:11 இப்பொழுது என் கைப்பட நான் உங்களுக்கு 
	எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் பாருங்கள். 
	கலா. 6:12 உலகின் முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே விருத்தசேதனம் 
	செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் 
	சிலுவையைமுன்னிட்டுக் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் 
	செய்கிறார்கள். 
கலா. 6:13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே 
	திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் செய்யப்படும் 
	அறுவையை முன்னிட்டுத் தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே நீங்கள் 
	விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். 
	
கலா. 6:14 நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு 
	எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே என்னைப் 
	பொறுத்தவரையில் உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் 
	நானும் சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறேன். 
கலா. 6:15 விருத்தசேதனம் 
	செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே 
	இன்றியமையாதது. 
கலா. 6:16 இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் 
	கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக. 
	கலா. 6:17 இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில் உன் உடலில் 
	உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். 
கலா. 6:18 
	சகோதர சகோதரிகளே நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு
இருப்பதாக. 
	ஆமென். 
	
	
	
	
	Ephesians 
	- எபேசியருக்கு எழுதிய திருமுகம் 
1. 
	அதிகாரம் 
எபே. 1:1 இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும் எபேசு 
	நகர இறைமக்களுக்கு கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாயிருக்கும் பவுல் 
	எழுதுவது: 
	
எபே. 1:2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு 
	கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக. 
எபே. 
	1:3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி. அவர் 
	விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது 
	பொழிந்துள்ளார். 
எபே. 1:4 நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் 
	தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். 
எபே. 1:5 அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான 
	பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவந்தார். இதுவே அவரது விருப்பம்: 
எபே. 1:6 இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக 
	நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். 
எபே. 1:7 கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு 
	அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். 
எபே. 1:8 அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து அனைத்து ஞானத்தையும் 
	அறிவுத்திறனையும் தந்துள்ளார். 
எபே. 1:9 அவர் தமது திருவுளத்தின் 
	மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் 
	விரும்பிச் செய்த தீர்மானம். 
எபே. 1:10 கால நிறைவில் விண்ணிலுள்ளவை 
	மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற 
	திட்டமோ அம்மறைபொருள். 
எபே. 1:11 கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் 
	செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்து 
	வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். 
எபே. 1:12 இவ்வாறு 
	கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் 
	புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். 
எபே. 1:13 நீங்களும் 
	உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு 
	அவர்மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் 
	முத்திரையிடப்பட்டீர்கள். 
எபே. 1:14 அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை 
	உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் 
	விளங்கும். 
எபே. 1:15 ஆகவே ஆண்டவராகிய இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள 
	நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் 
	கேள்வியுற்று 
எபே. 1:16 நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை 
	நினைவுகூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை. 
எபே. 1:17 
	நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை 
	முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும் வெளிப்பாடும் தரும் தூய ஆவியை 
	உங்களுக்கு அருள்வராக. 
எபே. 1:18 கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது 
	என்றும் இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது 
	என்றும் 
	
எபே. 1:19 அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற 
	அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு 
	உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக. கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை 
	எபே. 1:20 கிறிஸ்துவிடம் செயல்படுத்தி இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து 
	விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். 
எபே. 1:21 அதன்மூலம் 
	ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் வல்லமை உடையோர் தலைமை தாங்குவோர் ஆகிய 
	அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் 
	உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோ யிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். 
	எபே. 1:22 அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து அனைத்துக்கும் மேலாக 
	அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். 
எபே. 1:23 திருச்சவையே 
	அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு 
	பெறுகின்றது. 
2. அதிகாரம் 
எபே. 2:1 உங்களுடைய 
	குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். 
	எபே. 2:2 அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி வான்வெளியில் அதிகாரம் 
	செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத 
	மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். 
	எபே. 2:3 இந்நிலையில் தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய 
	ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து உடலும் மனமும் விரும்பியவாறு 
	செயல்பட்டு மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆனானோம். 
	எபே. 2:4 ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த 
	அன்புகொண்டுள்ளார். 
எபே. 2:5 குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த 
	நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் 
	மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. 
எபே. 2:6 இயேசு கிறிஸ்துவோடு 
	இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் 
	செய்தார். 
எபே. 2:7 கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த 
	நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் 
	எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். 
எபே. 2:8 நீங்கள் அந்த 
	அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் 
	அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. 
எபே. 2:9 இது மனிதச் செயல்காளல் ஆனது 
	அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. 
எபே. 2:10 ஏனெனில் நாம் 
	கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் 
	படைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் 
	முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். 
எபே. 2:11 எனவே பிறப்பால் பிற 
	இனத்தாராய் இருக்க நீங்கள் உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள். ஊடலில் 
	கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் 
	எனக்கூறி இகழ்ந்தார்கள். 
எபே. 2:12 அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை 
	ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும் 
	வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும் எதிர்நோக்கு 
	இல்லாதவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள். 
எபே. 2:13 ஒரு காலத்தில் 
	தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது 
	இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். 
எபே. 2:14 
	ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற 
	பகைமை என்னும் சுவரை தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து 
	அவர்களை ஒன்றுபடுத்தினார். 
எபே. 2:15 பல கட்டளைகளையும் விதிகளையும் 
	கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் 
	புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். 
	எபே. 2:16 தூமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு 
	இனத்தவரையும் ஓரடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். 
	எபே. 2:17 அவர் வந்து தொலைவில் இருந்த உங்களுக்கும் அங்கிருந்த அவர்களுக்கும் 
	அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். 
	
எபே. 2:18 அவர் வழியாகவே இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் 
	தந்தையை அணுகும்பேறு பெற்றிருக்கிறோம். 
எபே. 2:19 எனவே இனி நீங்கள் 
	அன்னியர் அல்ல: வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் 
	குடிமக்கள்: கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 
எபே. 2:20 
	திருத்தூதர்கள் இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும் கிறிஸ்து இயேசுவையே 
	மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். 
எபே. 
	2:21 கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி ஆண்டவருக்கென்று 
	தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. 
எபே. 2:22 நீங்களும் அவரோடு இணைந்து 
	தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். 
	3. அதிகாரம் 
எபே. 3:1 இதன் காரணமாக பிற இனத்தவராகிய உங்களுக்காகக் கிறிஸ்து 
	இயேசுவின் பொருட்டுப் பவுலாகிய நான் கைதியாக இருக்கிறேன். 
எபே. 3:2 
	உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் 
	கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். 
எபே. 3:3 ஆந்த மறைபொருள் 
	எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் 
	ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 
எபே. 3:4 அதை 
	நீங்கள் வாசிக்கும்போது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் 
	என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். 
எபே. 3:5 அந்த மறைபொருள் மற்ற 
	தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போது தூய ஆவி 
	வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 
	எபே. 3:6 நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் 
	உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் 
	ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். 
எபே. 3:7 கடவுள் வல்லமையோடு 
	என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப அந்த நற்செய்தியின் 
	தொண்டன் ஆனேன். 
எபே. 3:8 கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்பற்றிய நற்செய்தியை பிற 
	இனத்தாருக்கு அறிவிக்கவும் 
எபே. 3:9 எல்லாவற்றையும் படைத்த 
	கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென 
	யாவருக்கும் தெளிவுபடுத்தவும் இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய 
	எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. 
எபே. 3:10 அதன்மூலம் பலவகையில் 
	விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர் வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் 
	ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. 
எபே. 
	3:11 இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு 
	கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். 
எபே. 3:12 கிறிஸ்துவின் மீது நாம் 
	கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை நம்பிக்கையின் வழியாகக் கடவுளை 
	உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது. 
	எபே. 3:13 ஆகவே உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களைக் கண்டு நீங்கள் 
	மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்குப் 
	பெருமையாக அமையும். 
எபே. 3:14 இதன் காரணமாக விண்ணுலகிலும் மண்ணுலகிலும் 
	உள்ள ஒவ்வொரு குடும்பமும் 
எபே. 3:15 உண்மையிலேயே குடும்பமாய் 
	விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். 
	எபே. 3:16 அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் 
	ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக. 
எபே. 3:17 நம்பிக்கையின் வழியாக கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் 
	குடிகொள்வாராக. அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக. 
எபே. 3:18 இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம் 
	நீளம் உயரம் ஆழம் என்னவென்று உணர்ந்து அறிவுக்கு எட்டாத இந்த அன்பை 
	அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக. 
எபே. 3:19 அதன் மூலம் கடவுளின் 
	முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக. 
எபே. 3:20 நம்முள் 
	வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக 
	அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே 
எபே. 3:21 திருச்சபையில் 
	கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக. 
	ஆமென். 
4. அதிகாரம் 
எபே. 4:1 ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக 
	இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட 
	அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். 
எபே. 4:2 முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் 
	பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி 
எபே. 4:3 அமைதியுடன் 
	இணைந்து வாழ்ந்து தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சி 
	செய்யுங்கள். 
எபே. 4:4 நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 
	ஒரே எதிர்நோக்கு இருப்பது போல உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. 
எபே. 
	4:5 அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு 
	ஒன்றே. 
எபே. 4:6 எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் 
	மேலானவர்: எல்லார் மூலமாகவம் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர். 
எபே. 4:7 கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் 
	அருள் அளிக்கப்பட்டுள்ளது. 
எபே. 4:8 ஆகையால்தான்"அவர் உயரே ஏறிச் 
	சென்றார்: அப்போது சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்: மனிதருக்குப் 
	பரிசுகளை வழங்கினார்" என்று மறைநூல் கூறுகிறது. 
எபே. 4:9"ஏறிச் 
	சென்றார்" என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் 
	இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? 
எபே. 4:10 கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா 
	வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். 
எபே. 4:11 அவரே சிலரைத் 
	திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும் வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் 
	ஏற்படுத்தினார். 
எபே. 4:12 திருத்தொண்டாற்ற இறைமக்களை 
	ஆயத்தப்படுத்தவும் கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் 
	ஏற்படுத்தினார். 
எபே. 4:13 அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய 
	அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட 
	நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். 
எபே. 4:14 ஆகவே இனி 
	நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் 
	சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி அவர்களுடைய 
	போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் 
	அலைக்கழிக்கப்படக்கூடாது. 
எபே. 4:15 மாறாக அன்பின் அடிப்படையில் உண்மை 
	பேசி தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும். 
	எபே. 4:16 அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை 
	நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே 
	குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று அன்பால் கட்டமைப்புப் 
	பெற்று வளர்ச்சியடைகிறது. 
எபே. 4:17 ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் 
	வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் 
	வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். 
	எபே. 4:18 அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் 
	விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் 
	புறம்பானவர்களாக இருக்கிறார்கள். 
எபே. 4:19 அவர்கள் உள்ளம் 
	மரத்துப்போய்ப் பேராசை கொண்டு ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் 
	தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள். 
எபே. 4:20 ஆனால் நீங்கள் 
	கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. 
எபே. 4:21 உண்மையில் 
	நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள 
	உண்மைக்கேற்பவே இருந்தது. 
எபே. 4:22 எனவே உங்களுடைய முந்தின நடத்தையை 
	மாற்றி தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் 
	களைந்துவிடுங்கள். 
எபே. 4:23 உங்கள் மனப்பாங்கு 
	புதுப்பிக்கப்படவேண்டும். 
எபே. 4:24 புதிய மனிதருக்குரிய இயல்பை 
	உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். 
எபே. 4:25 ஆகவே பொய்யை 
	விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் 
	உறுப்புகளாய் இருக்கிறோம். 
எபே. 4:26 சினமுற்றாலும் பாவம் 
	செய்யாதிருங்கள்: பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். 
எபே. 
	4:27 அலகைக்கு இடம் கொடாதீர்கள். 
எபே. 4:28 திருடர் இனித் திருடாமல் 
	இருக்கட்டும். மாறாக தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் 
	பொருள் இருக்கும் வகையில் தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு 
	உழைக்கட்டும். 
எபே. 4:29 கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று 
	வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி தேவைக்கு ஏற்றவாறு அருள் வளர்ச்சிக்கேற்ற 
	நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். 
எபே. 4:30 கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு 
	நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். 
எபே. 4:31 மனக்கசப்பு சீற்றம் சினம் கூச்சல் பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை 
	அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். 
எபே. 4:32 ஒருவருக்கொருவர் 
	நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல 
	நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். 
5. அதிகாரம் 
எபே. 5:1 ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் 
	ஆகுங்கள். 
எபே. 5:2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் 
	பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல 
	நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். 
எபே. 5:3 பரத்தமை அனைத்து 
	ஒழுக்கக்கேடுகள் பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. 
	இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. 
எபே. 5:4 அவ்வாறே வெட்கங்கெட்ட செயல் 
	மடத்தனமான பேச்சு பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை: நன்றி சொல்லுதலே தகும். 
	எபே. 5:5 ஏனெனில் பரத்தமையில் ஈடுபடுவோர் ஒழுக்கக் கேடாக நடப்போர் சிலை 
	வழிபாடாகிய பேராசை கொண்டோ ர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய 
	அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 
எபே. 
	5:6 வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய 
	செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது. 
	எபே. 5:7 எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம். 
எபே. 
	5:8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் 
	இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். 
எபே. 5:9 ஏனெனில் 
	ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. 
எபே. 
	5:10 ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். 
எபே. 5:11 
	பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை 
	குற்றமென எடுத்துக்காட்டுங்கள். 
எபே. 5:12 அவர்கள் மறைவில் 
	செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. 
எபே. 5:13 அவர்கள் 
	செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை 
	வெளியாகிறது. 
எபே. 5:14 அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. 
	ஆதலால்"தூங்குகிறவனே விழித்தெழு: இறந்தவனே உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது 
	ஒளிர்ந்தெழுவார்" என்று கூறப்பட்டுள்ளது. 
எபே. 5:15 ஆகையால் உங்கள் 
	நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் 
	ஞானத்தோடு வாழுங்கள். 
எபே. 5:16 இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை 
	முற்றும் பயன்படுத்துங்கள்: 
எபே. 5:17 ஆகவே அறிவிலிகளாய் இராமல் 
	ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள். 
எபே. 5:18 
	திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு 
	வழிகோலும். மாறாக தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். 
எபே. 5:19 உங்கள் 
	உரையாடல்களில் திருப்பாடல்கள் புகழ்ப்பாக்கள் ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை 
	இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். 
எபே. 5:20 நம் 
	ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் 
	தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். 
எபே. 5:21 கிறிஸ்துவுக்கு 
	அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். 
எபே. 5:22 திருமணமான பெண்களே 
	ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். 
	எபே. 5:23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் 
	மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். 
	எபே. 5:24 திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல மனைவியரும் தங்கள் 
	கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். 
எபே. 5:25 திருமணமான 
	ஆண்களே கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் 
	மனைவியிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு 
	செலுத்தி அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். 
எபே. 5:26 வார்த்தையாலும் 
	நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். 
எபே. 5:27 
	அத்திருச்சபை கறை திரையோ வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் 
	மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். 
எபே. 5:28 அவ்வாறே 
	கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் 
	கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர் தம்மீதே அன்பு 
	கொள்கிறவராவார். 
எபே. 5:29 தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் 
	பேணி வளர்க்கிறார். அவ்வாறே கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து 
	வருகிறார். 
எபே. 5:30 ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். 
	எபே. 5:31"இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு ஒன்றித்திருப்பார்: 
	இருவரும் ஒரே உடலாயிருப்பர்" என மறைநூல் கூறுகிறது. 
எபே. 5:32 இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் 
	கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன். 
எபே. 5:33 எப்படியும் 
	உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு 
	செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும். 
6. 
	அதிகாரம் 
	
எபே. 6:1 பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். 
	ஆண்டவின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. 
எபே. 6:2"உன் தந்தையையும் 
	தாயையும் மதித்து நட" என்பதே வாக்குறதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. 
	எபே. 6:3"இதனால் நீ நலம் பெறுவாய் : மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்" என்பதே 
	அவ்வாக்குறுதி. 
எபே. 6:4 தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் 
	மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி 
	அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். 
	
எபே. 6:5 அடிமைகளே நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் 
	இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் 
	நடுக்கத்தோடும் முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள். 
எபே. 6:6 
	மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் 
	கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். 
	எபே. 6:7 மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல நல்மனத்தோடு வேலை 
	செய்யுங்கள். 
எபே. 6:8 அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும் நன்மை செய்யும் 
	ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் 
	அன்றோ. 
	
எபே. 6:9 தலைவர்களே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து 
	கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் 
	உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் 
	செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். 
எபே. 6:10 இறுதியாக 
	நீங்கள் ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் 
	பெறுங்கள். 
எபே. 6:11 அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் 
	வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். 
	எபே. 6:12 ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர் 
	அதிகாரம் செலுத்துவோர் இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர் 
	வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம். 
எபே. 6:13 
	எனவே பொல்லாத நாள் வரும் போது எதிர்த்து நின்று அனைத்தின் மீதும் வெற்றிபெற்று 
	நிலைநிற்க வல்லமைபெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும்
	எடுத்துக்கொள்ளுங்கள். 
எபே. 6:14 ஆகையால் உண்மையை இடைக்கச்சையாகக் 
	கட்டிக் கொண்டு நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்: 
எபே. 6:15 அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் 
	காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். 
எபே. 6:16 எந்நிலையிலும் 
	நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் 
	தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும். 
எபே. 6:17 மீட்பைத் 
	தலைச்சீராகவும் கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் 
	கொள்ளுங்கள். 
எபே. 6:18 எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் 
	இறைவனிடம் எழுப்புங்கள்: எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் 
	செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து விழிப்பாருங்கள்: இறைமக்கள் 
	அனைவருக்காகவும் மன்றாடுங்கள். 
எபே. 6:19 நான் பேசும்போது 
	நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் 
	கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள். 
எபே. 6:20 
	நான் விலங்கிடப்பட்டிருந்தும் இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன். நான் 
	பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள். 
	எபே. 6:21 என்னைப்பற்றிய செய்திகளையும் நான் என்ன செய்கிறேன் என்பதையும் 
	நீங்களும் அறிந்திருக்கும்படி என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு 
	எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார். ஆவர் ஆண்டவரது பணியில் 
	நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர். 
எபே. 6:22 எங்களைப்பற்றிய செய்திகளை 
	உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி 
	வைக்கிறேன். 
எபே. 6:23 தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு 
	கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும் சகோதரர் சகோரிகள் 
	அனைவருக்கும் உரித்தாகுக. 
எபே. 6:24 நம் ஆண்டவராகிய இயேசு 
	கிறிஸ்துவின்மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக.
 
	
	
	Colossians - கொலோசையருக்கு எழுதிய திருமுகம்
	
1. அதிகாரம் 
கொலோ. 1:1 
	கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாகிய வாழும் நகர இறை மக்களுக்குக் 
	கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் 
	சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது: 
கொலோ. 1:2 நம் தந்தையாம் 
	கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக. 
கொலோ. 1:3 
	உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் 
	தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். 
கொலோ. 1:4 கிறிஸ்து 
	இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் 
	செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். 
கொலோ. 1:5 இவை 
	இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை 
	எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக 
	அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள். 
கொலோ. 1:6 உலகம் 
	முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் 
	அருளைப்பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணாந்து கொண்டீர்கள். அந்நாள் 
	முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது. 
கொலோ. 1:7 எம் 
	அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக் 
	கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர். 
	கொலோ. 1:8 தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர் தாம் எங்களிடம் 
	எடுத்துரைத்தார். 
கொல. 1:9 எனவே நாங்கள் இச்செய்தியைக் கேள்விப்பட்ட 
	நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் 
	கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் 
	பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப்பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். 
	கொலோ. 1:10 நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு 
	ஏற்புடையர்வளாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் 
	அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும். 
கொலோ. 1:11 
	நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு 
	ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். 
	மகிழ்ச்சியோடு 
	
கொலோ. 1:12 தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் 
	இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் 
	தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார். 
கொலோ. 1:13 அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் 
	அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். 
கொலோ. 1:14 அம்மகனால்தான் 
	நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். 
கொலோ. 1:15 அவர் 
	கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு. 
கொலோ. 1:16 
	ஏனெனில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்வுலனாகுபவை கட்புலனாகாதவை அரியணையில் 
	அமர்வோர் தலைமை தாங்குவோர் ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் ஆகிய அனைவரும் அவரால் 
	படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. 
	கொலோ. 1:17 அனைத்துக்கும் முந்தியவர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து 
	நிலைபெறுகின்றன. 
கொலோ. 1:18 திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் 
	தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் 
	அவர் தலைப்பேறு ஆனார். 
கொலோ. 1:19 தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் 
	கடவுள் திருவுளம் கொண்டார். 
கொலோ. 1:20 சிலுவையில் இயேசு சிந்திய 
	இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் 
	அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். 
கொலோ. 
	1:21 முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்: அவரைப் பகைக்கும் 
	உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். 
கொலோ. 1:22 
	இப்பொழுது நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு 
	ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் 
	கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். 
கொலோ. 1:23 நீங்கள் 
	நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை 
	அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் 
	படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் 
	இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன். 
கொலோ. 1:24 இப்பொழுது 
	உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் 
	உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் 
	உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். 
	
கொலோ. 1:25 என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் 
	பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். 
கொலோ. 1:26 நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக தலைமுறை தலைமுறையாக 
	மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு 
	வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
கொலோ. 1:27 மக்களினங்களிடையே அது அளவற்ற 
	மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் 
	திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். 
	மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். 
கொலோ. 1:28 
	கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து 
	ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி 
	முழுஞானத்தோடு கற்பித்து வருகிறோம். 
கொலோ. 1:29 இதற்காகவே வல்லமையோடு 
	என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்தி பாடுபட்டு உழைக்கிறேன். 
	2. அதிகாரம் 
கொலோ. 2:1 உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர 
	மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் மிகவும் 
	வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். 
	கொலோ. 2:2 என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் 
	ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்: அந்த அறிவுத் திறனால் உறுதியான நம்பிக்கையை 
	அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம். 
கொலோ. 2:3 
	ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன. 
	கொலோ. 2:4 திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றிவிடக்கூடாதென்றே நான் இதை 
	உங்களுக்குச் சொல்லுகிறேன். 
கொலோ. 2:5 உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தில் உங்களுடன் 
	இருக்கிறேன். உங்களிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் உறுதியான நம்பிக்கையையும் 
	கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன். 
கொலோ. 2:6 கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக 
	ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள். 
கொலோ. 2:7 அவரில் 
	வேருன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். 
	நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். 
கொலோ. 2:8 
	போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள 
	விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல மனித மரபுகளையும் உலகின் பஞ்சபூதங்களையும் 
	சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள். 
கொலோ. 2:9 இறைத் 
	தன்மையின் முழுநிறைவும் உடலுருகில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. 
	கொலோ. 2:10 அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள். 
	ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். 
	கொலோ. 2:11 நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல: 
	கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு 
	ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள். 
கொலோ. 2:12 நீங்கள் திருமுழுக்குப் 
	பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் 
	செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் 
	உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். 
கொலோ. 2:13 உடலில் விருத்தசேதனம் செய்து 
	கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் 
	இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் 
	குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். 
கொலோ. 2:14 நமக்கு எதிரான 
	ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் 
	சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார். 
கொலோ. 2:15 தம் 
	சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோ ர் ஆகியோரின் 
	படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு 
	ஆவலமாக இழுத்துச் சென்றார். 
கொலோ. 2:16 எனவே உண்பது குடிப்பது மற்றும் 
	திருவிழா அமாவாசை ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் 
	குறைகூற வேண்டியதில்லை. 
கொலோ. 2:17 இவை எல்லாம் வர இருந்தவற்றின் 
	வெறும் நிழலே: கிறிஸ்துவே உண்மை. 
கொலோ. 2:18 போித் தாழ்மையையும் வான 
	யூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க 
	இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் 
	போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள். 
	
கொலோ. 2:19 அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப் பிடித்து கொள்ளவில்லை. 
	அவரால்தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு 
	ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது. 
கொலோ. 2:20 
	கிறிஸ்துவோடு இறந்து நீங்கள் உலகின் பஞ்சபூதங்களிலிருந்து விடுவிக்கப் 
	பட்டீர்கள் அல்லவா. 
கொலோ. 2:21 இன்னும் 
	ஏன்"தொடாதே""சுவைக்காதே""தீண்டாதே" எனச் சொல்லும் உலகப்போக்கிலான 
	விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்? 
கொலோ. 2:22 பயன்படுத்தும்போது அழிந்துபோகும் பொருள்கள் பற்றியவை 
	அவ்விதிகள். அவை மனிதர் உருவாக்கின் கட்டளைகளும் போதனைகளுமோ. 
கொலோ. 
	2:23 மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள் போலித் தாழ்மை உடல் 
	ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் 
	தணிப்பதற்குப் பயன்படா. 
	
3. அதிகாரம் 
கொலோ. 3:1 நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் 
	பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து 
	கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 
கொலோ. 3:2 இவ்வுலகு 
	சார்ந்தவை பற்றி அல்ல மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 
கொலோ. 3:3 
	ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து 
	கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 
கொலோ. 3:4 கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு 
	அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் 
	தோன்றுவீர்கள். 
கொலோ. 3:5 ஆகவெ உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை ஒழுக்கக்கேடு 
	கட்டுக்கடங்காத பாலுணர்வு தீய நாட்டம் சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை 
	ஒழித்துவிடுங்கள். 
கொலோ. 3:6 இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவளின் 
	சினத்தை வரவழைக்கின்றன. 
கொலோ. 3:7 இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது 
	நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள். 
கொலோ. 3:8 ஆனால் இப்பொழுது 
	நீங்கள் சினம் சீற்றம் தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள். பழிப்புரை 
	வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. 
கொலோ. 
	3:9 ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் 
	அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு 
கொலோ. 3:10 புதிய மனித இயல்பை 
	அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் 
	புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். 
	கொலோ. 3:11 புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும் யூதர் என்றும் 
	விருத்தசேதனம் பெற்றவர் என்றும் விருத்தசேதனம் பெறாதவர் என்றும் நாகரிகம் 
	அற்றோர் என்றும் சீத்தியர் என்றும் அடிமை என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் 
	வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார். 
கொலோ. 
	3:12 நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் அவரது அன்பிற்குரிய 
	இறைமக்கள். எனவே அதற்கிசைப பரிவு இரக்கம் நல்லெண்ணம் மனத்தாழ்மை கனிவு பொறுமை 
	ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். 
கொலோ. 3:13 ஒருவரை ஒருவர் 
	பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் 
	மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். 
	கொலோ. 3:14 இவையனைத்துக்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே 
	இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். 
	
கொலோ. 3:15 கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை 
	நெறிப்படுத்துவதாக. இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க 
	அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள். 
கொலோ. 3:16 
	கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக. முழு 
	ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் 
	புகழ்ப்பாடல்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் 
	கடவுளைப் போற்றுங்கள். 
கொலோ. 3:17 எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் 
	அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் 
	கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். 
கொலோ. 3:18 திருமணமான பெண்களே உங்கள் 
	கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே 
	தகும். 
கொலோ. 3:19 திருமணமான ஆண்களே உங்கள் மனைவியிடம் அன்பு 
	செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். 
கொலோ. 3:20 
	பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் 
	சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். 
கொலோ. 3:21 பெற்றோர்களே உங்கள் 
	பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து 
	போவார்கள். 
கொலோ. 3:22 அடிமைகளே இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு 
	முற்றிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வெரை செய்வதாகக் 
	காட்டிக்கொள்ளாமல் ஆண்டவருக்கு அஞ்சி முமழுமனத்தோடு வேலை செய்யுங்கள். 
கொலோ. 3:23 நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: 
	ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். 
கொலோ. 
	3:24 அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது 
	தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள். 
	கொலோ. 3:25 ஏனெனில் ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது 
	நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார். 
4. 
	அதிகாரம் 
கொலோ. 4:1 தலைவர்களே உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி 
	நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு 
	என்பதை நினைவிற்கொள்ளுங்கள். 
கொலோ. 4:2 தொடர்ந்து இறைவனிடம் 
	வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள். 
கொலோ. 
	4:3 நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு 
	அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள். அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை 
	நாங்கள் எடுத்துரைக்க முடியும். இம்மறை பொருளின் பொருட்டே நான் 
	சிறைப்பட்டிருக்கிறேன். 
கொலோ. 4:4 நான் பேசவேண்டிய முறையில் பேசி இம்மறை பொருளை வெளிப்படுத்தும் 
	ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள். 
கொலோ. 4:5 திருச்சபையைச் 
	சேராதவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள். காலத்தை நன்கு பயன்படுத்துங்கள். 
	கொலோ. 4:6 உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக. 
	ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும். 
	கொலோ. 4:7 என்னைப்பற்றிய செய்திகளையெல்லாம் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு 
	உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் என் உடன்பணியாளர் 
	நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர். 
கொலோ. 4:8 எங்களைப்பற்றிய செய்திகளை 
	உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்கள ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி 
	வைக்கிறேன். 
கொலோ. 4:9 நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும் அவரோடு 
	அனுப்பிவைக்கிறேன். அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இங்கு 
	நடப்பவை அனைத்தையும் உங்ளுக்குத் தெரிவிப்பார்கள். 
கொலோ. 4:10 என் 
	உடன்கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்க உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் 
	ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். இவருக்கு 
	நீங்கள் செய்ய வேண்டிவைப்பற்றி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். இவர் உங்களிடம் 
	வந்தால் வரவேற்பு அளியுங்கள். 
கொலோ. 4:11 யுஸ்து என்னும் இயேசுவும் 
	உங்களை வாழ்த்துகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே 
	இறையாட்சிக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாயிருந்து 
	வருகின்றார்கள். 
கொலோ. 4:12 கிறிஸ்து இயேசுவின் பணியாளரும் உங்கள் 
	திருச்சபையைச் சேர்ந்தவருமான எப்பப்பிரா உங்களை வாழ்த்துகிறார். எல்லாச் 
	சூழ்நிலைகளிலும் கடவுளின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நீங்கள் 
	தேர்ச்சிபெற்றவர்களாயும் நிலைத்து நிற்பவர்களாயும் இருக்கவேண்டுமென இவர் 
	எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வருந்தி வேண்டி வருகிறார். 
	
கொலோ. 4:13 இவர் உங்களுக்காகவும் லவோதிக்கேயா எராப்பொலி நகரத்தைச் 
	சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி. 
	கொலோ. 4:14 அன்பார்ந்த மருத்துவர் லுக்காவும் தேமாவும் உங்களை 
	வாழ்த்துகின்றனர். 
கொலோ. 4:15 லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும் நிம்பாவுக்கும் 
	அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். 
	கொலோ. 4:16 இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் 
	வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் 
	திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள். 
கொலோ. 4:17 ஆண்டவரது பணியில் 
	தாம் பெற்றுள்ள திருத்தொண்டை தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் 
	கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள். 
கொலோ. 4:18 பவுலாகிய 
	நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன். சிறைப்பட்டிருக்கும் என்னை 
	நினைத்துக் கொள்ளுங்கள். இறையருள் உங்களோடிருப்பதாக.  
	
	
	
	Thessalonians 1 
	- தேசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்
	
1. அதிகாரம் 
1 தெச. 1:1 
	தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற 
	தெசலோனிக்க சபைக்கு பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு 
	அருளும் அமைதியும் உரித்தாகுக. 
1 தெச. 1:2 நாங்கள் இறைவனிடம் 
	வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் 
	கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். 
1 தெச. 1:3 செயலில் வெளிப்பட்ட உங்கள் 
	நம்பிக்கையையும் அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும் ஆண்டவர் இயேசு 
	கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் 
	நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூறுகிறோம். 
1 தெச. 1:4 கடவுளின் 
	அன்புக்குரிய சகோதர சகோதரிகளே. நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது 
	எங்களுக்குத் தெரியும். 
1 தெச. 1:5 ஏனெனில் நாங்கள் நற்செய்தியை 
	உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள 
	உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு 
	நடந்துகொண்டோ ம் என்பதும் உங்களுக்குத் தெரியும். 
1 தெச. 1:6 மிகுந்த 
	வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை 
	ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் 
	நடப்பவரானீர்கள். 
1 தெச. 1:7 மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள 
	நம்பிக்கை கொண்டோ ர் அனைவருக்கும் முன் மாதிரியானீர்கள். 
1 தெச. 1:8 
	எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது 
	நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல 
	எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது. எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல 
	வேண்டிய தேவையே இல்லை. 
1 தெச. 1:9 நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு 
	நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு 
	சிலைகளை விட்டுவிட்டு உண்மையான வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் 
	திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். 
1 தெச. 1:10 இவ்வாறு 
	நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். 
	அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை 
	உயிர்த்தெழச் செய்தார். 
2. அதிகாரம் 
1 தெச. 2:1 
	சகோதர சகோதரிகளே. நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது 
	உங்களுக்கே தெரியும். 
1 தெச. 2:2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகில் 
	நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோ ம் என்பது உங்களுக்குத் தெரியும். 
	இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு 
	அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். 
1 தெச. 2:3 எங்கள் 
	அறிவுரைகள் தவற்றையோ கெட்ட எண்ணத்தையோ வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல. 
	1 தெச. 2:4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் 
	ஒப்படைத்தார். அதற்கேற்ப நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல எங்கள் 
	இதயங்களைச் சோதித்தறிவும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். 
	1 தெச. 2:5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது 
	உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் 
	பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி. 
1 தெச. 2:6 கிறிஸ்துவின் 
	திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக 
	எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ 
	மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. 
1 தெச. 2:7 மாறாக நாங்கள் 
	உங்களிடையே இருந்தபொழுது தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல் கனிவுடன் 
	நடந்து கொண்டோ ம். 
1 தெச. 2:8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய் 
	கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் 
	இருந்தோம்: ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 
	1 தெச. 2:9 அன்பர்களே. நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் 
	பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி எங்கள் பிழைப்புக்காக இராப் 
	பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். 
	1 தெச. 2:10 நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் 
	நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி கடவுளும் 
	சாட்சி. 
1 தெச. 2:11 ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை 
	நடத்தினோம். 
1 தெச. 2:12 தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற 
	உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை 
	வழங்கினோம்: உங்களை ஊக்குவித்தோம்: வற்புறுத்தினோம். இவையெல்லாம் உங்களுக்குத் 
	தெரிந்தவையே. 
1 தெச. 2:13 கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து 
	கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் 
	கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். 
	உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்: அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் 
	செயலாற்றுகிறது. 
1 தெச. 2:14 சகோதர சகோதரிகளே. இயேசு கிறிஸ்துவின் 
	உறவில் யூதேயாவில் வாழம் கடவுளின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் 
	நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டது போலவே நீங்களும் உங்கள் 
	சொந்த இனத்தாரால் துன்புறுத்தப்பட்டீர்கள். 
1 தெச. 2:15 அந்த யூதரே 
	ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் 
	துரத்திவிட்டார்கள். அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள் அல்ல: மனித இனத்திற்கே 
	எதிரிகள். 
1 தெச. 2:16 ஏனெனில் பிற இனத்தார் மீட்புப் பெறுமாறு நாங்கள் 
	அவர்களிடம் பேசுவதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களை என்றும் 
	பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இறுதியில் கடவுளின் சினம் அவர்கள்மேல் 
	வந்துவிட்டது. 
1 தெச. 2:17 அன்பர்களே. நாங்கள் உள்ளத்தால் அல்ல உடலால் 
	மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம். உங்கள் முகத்தைக் காண 
	பேராவலோடு ஏங்கியிருந்தோம். 
	
1 தெச. 2:18 ஆகையால் நாங்கள் உங்களிடம் வர விரும்பினோம். அதிலும் 
	பவுலாகிய நான் ஒருமுறை அல்ல இருமுறை உங்களிடம் வரத் திட்டமிட்டேன். ஆனால் 
	சாத்தான் எங்களைத் தடுத்து விட்டான். 
1 தெச. 2:19 நம் ஆண்டவர் 
	இயேசுவின் வருகையின்போது அவர்முன் உங்களைத்தானே நாங்கள் எதிர்நோக்கி இருக்கப் 
	போகிறோம்? நீங்கள்தானே எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையோடு சூடப்போகும் 
	வெற்றிவாகையுமாய் இருக்கப் போகிறீர்கள்? உங்களைத் தவிர வேறு யார் இருக்க 
	முடியும்? 
1 தெச. 2:20 ஆம் உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் 
	மகிழ்ச்சியும் கிடைக்கும். 
3. அதிகாரம் 
1 தெச. 3:1 
	ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் போனதால் நாங்கள் ஏதென்சு நகரில் 
	தனிமையாக இருக்க முடிவு செய்தோம். 
1 தெச. 3:2 நம் சகோதரரும் 
	கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய 
	திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம். 
1 தெச. 3:3 நீங்கள் படும் 
	துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு உங்கள் நம்பிக்கையை 
	உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம். துன்பங்கள் வந்தே தீரும் 
	என்பது உங்களுக்குத் தெரியும். 
1 தெச. 3:4 நாம் துன்பப்படத்தான் 
	வேண்டும் என்று நாங்கள் உங்களோடு இருந்தபொழுதே உங்களுக்குச் சொன்னோம். அவ்வாறே 
	நடந்திருக்கிறது: இதுவும் உங்களுக்குத் தெரியும். 
1 தெச. 3:5 ஆகவே நமது 
	பிரிவைத் தாங்க முடியாமல் உங்கள் நம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள 
	திமொத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில் சோதிப்பவன் உங்களைச் சோதனைக்குட்படுத்தி 
	விட்டானோ என்றும் அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டதோ என்றும் அஞ்சினேன். 
	1 தெச. 3:6 ஆனால் இப்பொழுது திமொத்தேயு உங்களிடமிருந்து திரும்பி எங்களிடம் 
	வந்துவிட்டார்: உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி 
	சொன்னார். நாங்கள் உங்களைக் காண ஏங்குவதுபோல நீங்களும் எங்களைக் காண 
	விழைவதாகவும் எப்பொழுதும் எங்களை அன்போடு நினைவுகூறுவதாகவும் அறிவித்தார். 
	1 தெச. 3:7 ஆகையால் அன்பர்களே. எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது 
	நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். 
1 தெச. 3:8 
	நீங்கள் ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் 
	எங்களுக்கு உயிர் வந்தது. 
1 தெச. 3:9 நம் கடவுள் முன்னிலையில் உங்களால் 
	நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை 
	அவருக்குக் கைம்நூறாகக் காட்ட இயலும்? 
1 தெச. 3:10 நாங்கள் உங்கள் 
	முகத்தைக் காணவும் உங்கள் நம்பிக்கையில் குறைவாகவுள்ளவற்றை நிறைவாக்கவும் 
	அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம். 
1 தெச. 3:11 
	இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும் நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் 
	வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக. 
1 தெச. 3:12 உங்கள் 
	மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல நீங்கள் ஒருவர் 
	ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் 
	பெருகச் செய்வாராக. 
1 தெச. 3:13 இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய 
	தூயோர் அனைவரோடும் வரும்பொழுது நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் 
	தூய்மையாக இருக்குநூறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக. 
	4. அதிகாரம் 
1 தெச. 4:1 சகோதர சகோதரிகளே. நீங்கள் கடவுளுக்கு 
	உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்: அப்படியே 
	வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய 
	இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். 
1 தெச. 
	4:2 ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை 
	நீங்கள் அறிவீர்கள். 
1 தெச. 4:3 நீங்கள் தூயோராவதே கடவுளுடைய 
	திருவுளம்: பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும். 
1 தெச. 4:4 உங்களில் 
	ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி மதிப்புடன் நடத்த அறிந்திருக்க 
	வேண்டும். 
1 தெச. 4:5 கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் 
	கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது. 
1 தெச. 4:6 இதில் 
	எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய செயல்கள் 
	அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் 
	எடுத்துரைத்திருக்கிறோம்: எச்சரித்தும் இருக்கிறோம். 
1 தெச. 4:7 கடவுள் 
	நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல தூய வாழ்வுக்கே அழைத்தார். 
1 தெச. 4:8 
	எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர் மனிதரை அல்ல தம்முடைய தூய ஆவியை 
	உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர். 
1 தெச. 4:9 சகோதர 
	அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் 
	அன்பு செலுத்த கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். 
	1 தெச. 4:10 உண்மையிலேயே நீங்கள் நூசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் 
	அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே. இதில் இன்னும் முன்னேற 
	வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். 
1 தெச. 4:11 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதுபோல உங்கள் வேலையை மட்டுமே 
	பார்த்துக் கொண்டு உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் 
	நோக்கமாயிருங்கள். 
1 தெச. 4:12 அப்பொழுது திருச்சபைக்கு வெளியே 
	இருப்பவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்: பிறர் கையை நம்பாதபடி வாழ்வீர்கள். 
1 தெச. 4:13 சகோதர சகோதரிகளே. இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க 
	வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் 
	நீங்களும் துயருறக் கூடாது. 
1 தெச. 4:14 இயேசு இறந்து 
	உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால் இயேசுவோடு இணைந்த 
	நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். 
1 தெச. 4:15 
	ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவெ: 
	ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம் இறந்தோரை முந்திவிட மாட்டோ ம். 
	1 தெச. 4:16 கட்டளை பிறக்க தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க கடவுளுடைய எக்காளம் 
	முழங்க ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது கிறிஸ்து மீது நம்பிக்கை 
	கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். 
1 தெச. 4:17 
	பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம் அவர்களோடு மேகங்களில் எடுத்துக் 
	கொண்டுபோகப்பட்டு வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு 
	எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். 
1 தெச. 4:18 எனவே 
	இவ்வார்த்தைகளைச் ொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள். 
5. 
	அதிகாரம் 
1 தெச. 5:1 சகோதர சகோதரிகளே. இவை நடக்கும் காலங்களையும் 
	நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை . 
1 தெச. 5:2 
	ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே 
	திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். 
1 தெச. 5:3"எங்கும் அமைதி ஆபத்து 
	இல்லை" என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது கருவுற்றிருப்பவருக்கு வேதனை 
	வருவதுபோல திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. 
	1 தெச. 5:4 ஆனால் அன்பர்களே. நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் 
	திருடனைப் போல் உங்களுக்கு வராது. 
1 தெச. 5:5 நீங்கள் எல்லாரும் 
	ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. 
	1 தெச. 5:6 ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் 
	தெளிவோடும் இருப்போம். 
1 தெச. 5:7 உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்: 
	குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர். 
	
1 தெச. 5:8 ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். 
	நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும் மீட்புபெறுவோம் என்னும் 
	எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம். 
1 தெச. 5:9 ஏனெனில் 
	கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து 
	வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். 
1 தெச. 5:10 நாம் 
	இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு 
	இறந்தார். 
1 தெச. 5:11 ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல 
	ஒருவருக்கொருவர் ஊக்க மூட்டுங்கள்: ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள். 
	1 தெச. 5:12 சகோதர சகோதரிகளே. உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை 
	வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் 
	கொள்கிறோம். 
1 தெச. 5:13 அவர்கள் பணியின்பொருட்டு அவர்களை உயர்வாகவும் 
	அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும். 
1 தெச. 5:14 
	அன்பர்களே. நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவெ: சோம்பேறிகளுக்கு அறிவு 
	புகட்டுங்கள்: மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: வலுவற்றோர்க்கு 
	உதவுங்கள்: எல்லாரோடும் பொறுமையாயிருங்கள். 
1 தெச. 5:15 எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் 
	கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி எல்லாருக்கும் எப்பொழுதும் 
	நன்மை செய்யவே நாடுங்கள். 
1 தெச. 5:16 எப்பொழுதும் மகிழ்ச்சியாக 
	இருங்கள். 
1 தெச. 5:17 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். 
1 தெச. 5:18 எல்லாச் 
	சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் 
	கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவெ. 
1 தெச. 5:19 தூய ஆவியின் 
	செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். 
1 தெச. 5:20 இறைவாக்குகளைப் 
	புறக்கணிக்க வேண்டாம். 
1 தெச. 5:21 அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக் 
	கொள்ளுங்கள். 
1 தெச. 5:22 எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். 
1 தெச. 5:23 அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் 
	தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய 
	உள்ளம் ஆன்மா உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக. 
1 
	தெச. 5:24 உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார். 
	1 தெச. 5:25 சகோதர சகோதரிகளே. எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள். 
	1 தெச. 5:26 தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் 
	வாழ்த்துங்கள். 
1 தெச. 5:27 அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை 
	வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன். 
1 தெச. 
	5:28 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக. 
	
	
	Thessalonians 2 
	- தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
1. அதிகாரம் 
	2 தெச. 1:1 நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் 
	உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: 
	2 தெச. 1:2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு 
	கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக. 
2 
	தெச. 1:3 சகோதர சகோதரிகளே. உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி 
	செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் 
	நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது: நீங்கள் எல்லாரும் 
	ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது. 
2 தெச. 1:4 
	ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி 
	வருகிறோம்: உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் 
	இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் 
	முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம். 
2 தெச. 1:5 இவை, கடவுளின் தீர்ப்பு 
	நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் 
	இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் 
	துன்புறுகிறீர்கள். 
2 தெச. 1:6 ஏனெனில் உங்களைத் 
	துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் 
	துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றே. 
	2 தெச. 1:7 நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து 
	வெளிப்படும் போது இப்படி நிகழும். 
2 தெச. 1:8 அப்பொழுது அவர் 
	தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் 
	இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார். 
2 தெச. 1:9 
	இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய திருமுன்னிருந்து 
	அகற்றப்பட்டு, முடிவில்லை அழிவைத் தண்டனையாகப் பெறுவர். 
2 தெச. 1:10 
	அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்: நம்பிக்கை 
	கொண்டோ ர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி 
	ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள். 
2 தெச. 1:11 இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் 
	வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் 
	தகுதியுள்ளவராக்குவாராக. உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் 
	தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக. 
2 
	தெச. 1:12 இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் 
	அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் 
	உங்களுக்கும் மோன்மை உண்டாகுக. 
2. அதிகாரம் 
2 தெச. 
	2:1 சகோதர சகோதரிகளே. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் 
	அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: 
	2 தெச. 2:2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ 
	நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே 
	மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்: திகிலுறவும் வேண்டாம். 
2 தெச. 2:3 
	எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில் இறைவனுக்கு எதிரான 
	கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட 
	வேண்டும். அவன் அழிவுக்குரியவன். 
2 தெச. 2:4 தெய்வம் என 
	வழங்கப்படுவதையும் வழிபாட்டுக்குரி அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் 
	தன்னை அவன் உயர்த்திக் கொள்வான். அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு, 
	தன்னைக் கடவுளாகவும் காட்டிக் கொள்வான். 
2 தெச. 2:5 நான் உங்களோடு 
	இருந்த பொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா? 
	
2 தெச. 2:6 அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, 
	இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே. 
2 தெச. 2:7 நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு 
	வருகிறது. ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை, அது 
	இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும். 
2 தெச. 2:8 பின்னரே நெறிகெட்டவன் 
	தோன்றுவான். ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார்: அவர் வரும் போது 
	அவரது தோற்றமோ அவனை அழித்துவிடும். 
2 தெச. 2:9 அவன் சாத்தானின் 
	ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் 
	அருஞ்செயல்களையும் செய்வான். 
2 தெச. 2:10 அழிந்து போகிறவர்களை 
	முற்றிலும் ஏமாற்றித் தீங்கிழைப்பான். ஏனெனில் அவர்கள் தங்களை மீட்க வல்ல 
	உண்மையின்பால் ஆர்வம் காட்ட மறுத்தனர். 
2 தெச. 2:11 ஆகவே பொய்யானதை 
	அவர்கள் நம்பும்வண்ணம் கடவுள் அவர்களை வஞ்சக ஆற்றலுக்கு உட்படுத்தினார். 
	2 தெச. 2:12 இவ்வாறு உண்மையைப் பற்றிக்கொண்டு வாழாது தீமையில் இன்பம் காணும் 
	அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவர். 
2 தெச. 2:13 ஆண்டவரால் அன்புகூரப்பட்ட சகோதர சகோதரிகளே. நாங்கள் கடவுளுக்கு 
	உங்கள்பொருட்டு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் தூய 
	ஆவியால் தூய்மையாக்கப்பட்டு, நீங்கள் உண்மையை நம்பி மீட்பு அடையும்படி, கடவுள் 
	உங்களை முதன்முதலாகத் தேர்ந்துகொண்டார். 
2 தெச. 2:14 நம் ஆண்டவர் இயேசு 
	கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங்கள் அறிவித்த 
	நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். 
2 தெச. 2:15 ஆகவே 
	அன்பர்களே. எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட 
	முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். 
2 தெச. 2:16 நம் 
	ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான 
	ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் 
2 தெச. 2:17 
	உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை 
	உறுதிப்படுத்துவார்களாக. 
3. அதிகாரம் 
2 தெச. 3:1 
	சகோதர சகோதரிகளே. இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய 
	வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் 
	புகழ்பெறவும், 
2 தெச. 3:2 தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் 
	விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்: ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. 
	2 தெச. 3:3 ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, 
	தீயோனிடமிருந்து காத்தருள்வார். 
2 தெச. 3:4 நாங்கள் உங்களுக்குக் 
	கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்: இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான 
	நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். 
2 தெச. 3:5 கடவுளின் 
	அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் 
	தூண்டுவாராக. 
2 தெச. 3:6 அன்பர்களே. எங்களிடமிருந்து நீங்கள் 
	பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லா சகோதரர் 
	சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் 
	பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 
2 தெச. 3:7 
	எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே 
	இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. 
	
2 தெச. 3:8 எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் 
	எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். 
2 
	தெச. 3:9 எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக 
	நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு 
	செய்தோம். 
2 தெச. 3:10"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே 
	இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். 
2 தெச. 3:11 
	உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, 
	பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். 
2 தெச. 3:12 
	இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக 
	உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு 
	அறிவுறுத்துகிறோம். 
2 தெச. 3:13 சகோதர சகோதரிகளே. நன்மை செய்வதில் 
	நீங்கள் மனந்தளர வேண்டாம். 
2 தெச. 3:14 இத்திருமுகத்தில் நாங்கள் 
	எழுதியவற்றிற்குக் கீழ்ப்படியாதோரைக் குறித்துவைத்துக்கொண்டு, அவர்களோடு 
	பழகாதிருங்கள். அப்பொழுதாவது அவர்களுக்கு வெட்கம் வரும். 
2 தெச. 3:15 
	ஆனாலும், அவர்களைப் பகைவர்களாகக் கருதாது, சகோதரர் சகோதரிகளாக எண்ணி, 
	அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். 
2 தெச. 3:16 அமைதியை அருளும் 
	ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக. ஆண்டவர் 
	உங்கள் அனைவரோடும் இருப்பாராக. 
2 தெச. 3:17 இவ்வாழ்த்தைப் பவுலாகிய 
	நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே 
	அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. 
2 தெச. 3:18 நம் ஆண்டவர் 
	இயேசுகிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. 
	
	
	Philemon 
	- பிலமோனுக்கு எழுதிய திருமுகம் 
1. அதிகாரம் 
பில. 
	1:1 கிறிஸ்து இயேசுவின் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுல், சகோதரர் 
	திமொத்தேயு ஆகிய நாங்கள் எங்கள் உடன் உழைப்பாளரான அன்பார்ந்த பிலமோனுக்கும், 
பில. 1:2 சகோதரி அப்பியாவுக்கும், எங்கள் போராட்டத்தில் பங்குபெறும் 
	அர்க்கிப்புக்கும் பிலமோன் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் எழுதுவது: 
	பில. 1:3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு 
	கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக. 
பில. 
	1:4 என் வேண்டல்களில் உம்மை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறேன். 
	பில. 1:5 ஏனெனில், ஆண்டவராகிய இயேசுவின் மீது நீர் கொண்டுள்ள நம்பிக்கையையும் 
	இறைமக்கள் அனைவர்மீதும் நீர் கொண்டுள்ள அன்பையும் பற்றிக் கேள்விப்படுகிறேன். 
	பில. 1:6 கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவால் நமக்குண்டான எல்லா 
	நன்மைகளைப் பற்றியும் நீர் அறிந்துணர்வீர். இதனால் நாம் கொண்டுள்ள 
	நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற 
	வேண்டுகிறேன். 
பில. 1:7 உம் அன்பைக் குறித்து நான் பெரு மகிழ்வும் 
	ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் 
	பெற்றுள்ளது. 
பில. 1:8 எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, 
	கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், 
பில. 1:9 அன்பின் 
	பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, 
	அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் 
	
பில. 1:10 பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக 
	உம்மிடம் வேண்டுகிறேன். 
பில. 1:11 முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த 
	அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். 
பில. 1:12 அவனை 
	உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புது என் இதயத்தையே அனுப்புவது 
	போலாகும். 
பில. 1:13 நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் 
	எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். 
	பில. 1:14 ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் 
	செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் 
	விரும்பவில்லை. 
பில. 1:15 அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் 
	சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும். 
பில. 1:16 இனி அவனை நீர் 
	அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக 
	ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் 
	என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை 
	மேலாக உம் அன்புக்குரியவனாகிறான். 
பில. 1:17 எனவே, நமக்குள்ள 
	நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக் கொள்ளும். 
	பில. 1:18 அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் 
	அது என் கணக்கில் இருக்கட்டும். 
பில. 1:19"நானே அதற்கு ஈடு செய்வேன்" 
	எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் 
	செலுத்த வேண்டுமென நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. 
பில. 1:20 ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். 
	கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும். 
பில. 1:21 
	என் சொல்லுக்கு நீர் இணங்குவீர் என்னும் நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன். நான் 
	கேட்பதற்கு மேலாகவே நீர் செய்வீர் என்பது எனக்குத் தெரியும். 
பில. 1:22 
	மேலும் நான் தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யும். நீங்கள் இறைவனிடம் 
	வேண்டுவதால், அவர் அருள்கூர்ந்து, நான் மீண்டும் உங்களிடம் வரச் செய்வார் என 
	எதிர்
பார்க்கிறேன் 
பில. 1:23 கிறிஸ்து இயேசுவின் பொருட்டு என் உடன் 
	கைதியாயிருக்கிற எப்பப்பிரா, 
பில. 1:24 என் உடன் உழைப்பாளர்களான 
	மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லுக்கா ஆகியோர் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 
	பில. 1:25 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.
	
	
	Hebrews 
	-  
 
	 
	எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 
 
	 
	1. அதிகாரம் 
எபி. 1:1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் 
	மூதாதையரிடம் பேசிய கடவுள், 
எபி. 1:2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் 
	வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் 
	வழியாக உலகங்களைப் படைத்தார். 
எபி. 1:3 கடவுளுடைய மாட்சிமையின் 
	சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் 
	வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் 
	பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க 
	கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 
எபி. 1:4 இவ்வாறு இறைமகன் 
	வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப 
	அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். 
எபி. 1:5 ஏனெனில், கடவுள் வானதூதர் 
	எவரிடமாவது"நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்றும்,"நான் 
	அவருக்குத் தந்தையாயிருப்பேன், என்றும் எப்போதாவது கூறியதுண்டா? 
எபி. 
	1:6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது,"கடவுளின் தூதர் 
	அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார். 
எபி. 1:7 வானதூதரைக் குறித்து அவர்"தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் 
	பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்றார். 
எபி. 1:8 தம் 
	மகனைக் குறித்து,"இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் 
	வளையாத செங்கோல். 
எபி. 1:9 நீதியே உமது விருப்பம்: அநீதி உமக்கு 
	வெறுப்பு: எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது 
	அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார்" என்றார். 
	எபி. 1:10 மீண்டும்"ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். 
	விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ. 
எபி. 1:11 அவையோ 
	அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: 
	எபி. 1:12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்: ஆடையைப்போல் அவற்றை 
	மாற்றிவிடுவீர். உமது காலமும் முடிவற்றது" என்றார் அவர். 
எபி. 1:13 
	மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது,"நான் உம் பகைவரை உமக்குக் 
	கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கூறியதுண்டா? 
	எபி. 1:14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை 
	உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா? 
	2. அதிகாரம் 
எபி. 2:1 எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று 
	வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
எபி. 
	2:2 ஏனெனில் வானதூதர் வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது. அதை 
	மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர். 
	எபி. 2:3 அவ்வாறிருக்க, இத்தகைய ஒப்பற்ற மீட்பைப்பற்றி நாம் 
	அக்கறையற்றிருப்போமானால், தண்டனையிலிருந்து எப்படி தப்பமுடியும்? இம்மீட்புச் 
	செய்தியை முதன்முதல் அறிவித்தவர் ஆண்டவரே. இதைக் கேட்டவர்களும் இதனை நமக்கு 
	உறுதிப்படுத்தியுள்ளனர். 
எபி. 2:4 கடவுளும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், பல்வேறு வல்ல செயல்கள் 
	மூலமாகவும், தம் திருவுளப்படி தூய ஆவியின் கொடைகளைப் பகிர்ந்தளித்ததன் 
	மூலமாகவும் இதற்குச் சான்று பகர்ந்துள்ளார். 
எபி. 2:5 வரவிருக்கும் 
	உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் 
	செய்யவில்லை. 
எபி. 2:6 இதற்குச் சான்றாக மறைநூலில் இடத்தில் சொல்லப் பட்டுள்ளது 
	இதுவே:"மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் 
	ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? 
எபி. 2:7 ஆயினும் 
	நீர் அவர்களை வானதூதரை விடச்சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் 
	மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றுக்கு 
	மேலாக அவர்களை நியமித்தீர். 
எபி. 2:8 எல்லாவற்றையும் அவர்கள் 
	பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்." அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் 
	செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், 
	அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம். 
எபி. 2:9 நாம் காண்பதோ 
	சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் 
	துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் 
	காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு 
	உட்பட வேண்டியிருந்தது. 
	
எபி. 2:10 கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், 
	மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது 
	மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது 
	ஏற்ற செயலே. 
எபி. 2:11 தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் 
	அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் 
	என்று அழைக்க வெட்கப்படவில்லை. 
எபி. 2:12"உமது பெயரை என் சகோதரர் 
	சகோதரிகளுக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்" என்று 
	கூறியுள்ளார் அன்றோ. 
எபி. 2:13 மேலும்,"நான் அவர்மேல் என் நம்பிக்கையை நிலை நிற்கச் செய்வேன்" 
	என்றும்,"இதோ, நானும் கடவுள் எனக்கு அளித்த குழந்தைகளும்" அவ்வாறு செய்வோம் 
	என்றும் அவர் கூறியுள்ளார். 
எபி. 2:14 ஊனம் இரத்தமும் கொண்ட 
	அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் 
	ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். 
எபி. 
	2:15 வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை 
	விடுவித்தார். 
எபி. 2:16 ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை 
	நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. 
	எபி. 2:17 ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் 
	குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் 
	சகோதர் சகோதரிகளைப்பொல் ஆக வேண்டிதாயிற்று. 
எபி. 2:18 இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் 
	சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர்வல்லவர். 
3. அதிகாரம் 
எபி. 3:1 எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு 
	கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான 
	இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள். 
எபி. 3:2 கடவுளின் குடும்பத்தினர் 
	அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இவரும் தம்மை 
	நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 
எபி. 3:3 ஒரு 
	வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு. அதுபோல, 
	இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார். 
எபி. 3:4 
	ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் 
	கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்: அவர் கடவுளே. 
எபி. 3:5 ஊழியன் 
	என்னும் முறையில் மோசே கடவுளின் குடும்பத்தார் அனைவரிடையேயும் 
	நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். கடவுள் பின்னர் அறிவிக்கவிருந்தவற்றுக்குச் 
	சான்று பகர்வதே அவரது ஊழியமாயிருந்தது. 
எபி. 3:6 ஆனால், கிறிஸ்து மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார் 
	மேல் அதிகாரம் பெற்றுள்ளார். பெருமையையும் நாம் எதிர்நோக்கோடு கூடிய 
	பெருமையையும் நாம் உறுதியாகப்பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் 
	இருப்போம். 
எபி. 3:7 எனவே, தூய ஆவியார் கூறுவது:"இன்று நீங்கள் அவரது குரலைக் 
	கேட்பீர்களென்றால், 
எபி. 3:8 பாலை நிலத்தில் சோதனை நாளன்று 
	கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் 
	கொள்ளாதீர்கள். 
	
எபி. 3:9 அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் 
	கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். 
எபி. 3:10 எனவே, 
	அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு,"நீ எப்போதும் இவர்களது உள்ளம் 
	தவறுகிறது: என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்: எனவே நான் சினமுற்று 
எபி. 
	3:11"நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று 
	ஆணையிட்டுக் கூறினேன்" என்றார் கடவுள்." 
எபி. 3:12 அன்பர்களே, 
	நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய 
	உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 
எபி. 3:13 
	உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு 
	நாளும்"இன்றே" என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். 
	எபி. 3:14 தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் 
	பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம். 
எபி. 
	3:15"இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், கிளர்ச்சியின்போது 
	இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்." என்று 
	கூறப்பட்டுள்ளது. 
எபி. 3:16 அவரது குரலைக் கேட்டும் கிளர்ச்சி 
	செய்தவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து வெளியேறினவர்கள் 
	அனைவரும் அல்லவோ? 
எபி. 3:17 நாற்பது ஆண்டுகள் கடவுள் சீற்றம் கொண்டது 
	யார் மீது? பாவம் செய்தவர்கள் மீதல்லவோ? அவர்களுடைய பிணங்கள் பாலை நிலத்தில் 
	விழுந்து கிடந்தன அல்லவோ? 
எபி. 3:18"நான் அளிக்கும் இளைப்பாற்றியின் 
	நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்? 
	கீழ்ப்படியாதவர்களைப் பற்றியன்றோ? 
எபி. 3:19 அவர்கள் நம்பிக்கை 
	கொண்டிராததால் தான் அதை அடைய முடியாமற்போயிற்று என்பது தெரிகிறது. 
4. அதிகாரம் 
எபி. 4:1 ஆதலின், கடவுள் தரும் ஓய்வைப் 
	பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைதிருப்பதால், உங்களுள் 
	எவரேனும் அதை அடையத் தவறிவிடக்கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் 
	கவனமாயிருப்போமாக. 
	
எபி. 4:2 ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் 
	நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் 
	அளிக்கவில்லை: ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை. 
	எபி. 4:3 இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் 
	குறித்தே,"நான் சினமுற்று,"நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் 
	நுழையவே மாட்டார்கள்" என்று ஆணையிட்டுக் கூறினேன்" என 
	எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய 
	வேலைகள் முடிந்துவிட்டன. 
எபி. 4:4 ஏனெனில் மறைநூலில் இடத்தில் 
	ஏழாம்நாள் பற்றி,"கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, 
	ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. 
எபி. 4:5 
	மேலும், மேற்சொன்ன சொற்றொடரில்,"அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் 
	நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்றிருக்கிறது. 
எபி. 4:6 எனவே, 
	இந்த ஓய்வைப் பெறவேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால், அந்நற்செய்தியை 
	முன்னர் கேட்டவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த ஓய்வைப் பெறவில்லை. 
	எபி. 4:7 ஆகவேதான் முன்பு கூறப்பட்டதுபோலவே,"இன்று நீங்கள் அவரது குரலைக் 
	கேட்பீர்களென்றால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்" என்று 
	நீண்டகாலத்திற்குப்
பின்பு தாவீதின் வழியாக அவர் எடுத்துரைத்து"இன்று" என 
	வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். 
எபி. 4:8 யோசுவா அவர்களை ஓய்வுபெறச் 
	செய்திருந்தார் என்றால், அதன்பின் கடவுள் வேறொரு நாளைப் பற்றிப் பேசியிருக்க 
	மாட்டார். 
எபி. 4:9 ஆதலால், கடவுளுடைய மக்கள் ஓய்வெடுக்கும் காலம் 
	இனிமேல்தான் வரவேண்டியிருக்கிறது. 
எபி. 4:10 ஏனெனில், கடவுள் தம் 
	வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது போலவே, கடவுள் தரும் ஓய்வைப் 
	பெற்றுவிட்டவர் தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கிறார். 
எபி. 
	4:11 ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் 
	வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெனற முழு முயற்சி செய்வோமாக. 
எபி. 
	4:12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் 
	வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் 
	அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே 
	ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் 
	பார்க்கிறது. 
எபி. 4:13 படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் 
	இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் 
	இருக்கின்றன. நாம் அவருக்கே கணககுக் கொடுக்கவேண்டும். 
எபி. 4:14 எனவே, 
	வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் 
	குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவரை விடாது பற்றிக்கொள்வோமாக. 
எபி. 4:15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் 
	காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: 
	எனினும் பாவம் செய்யாதவர். 
எபி. 4:16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், 
	ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் 
	துணிவுடன் அணுகிச் செல்வோமாக. 
5. அதிகாரம் 
எபி. 5:1 
	தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 
	பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் 
	சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். 
எபி. 5:2 அவர் 
	தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி 
	நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். 
எபி. 5:3 அவர் 
	மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் 
	பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். 
எபி. 5:4 
	மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு 
	வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும். 
எபி. 5:5 அவ்வாறே 
	கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை."நீர் என் 
	மைந்தர்: இன்று நான்உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று அவரிடம் கூறியவரே அந்த 
	மேன்மையை அவருக்கு அளித்தார். 
எபி. 5:6 இவ்வாறே 
	மற்றோரிடத்தில்,"மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் 
	கூறப்பட்டுள்ளது. 
எபி. 5:7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் 
	சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்தகுரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, 
	மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, 
	கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 
எபி. 5:8 அவர் இறைமகனாயிருந்தும், 
	துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 
எபி. 5:9 அவர் 
	நிறைவுள்ளவராகி,"தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் 
	காரணமானார். 
எபி. 5:10"மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக்குரு" 
	என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார். 
எபி. 5:11 இதைப்பற்றிப் 
	பேசுவதற்கு நிறைய உள்ளது: ஆனால் விளக்கம் கூறுவது இது. ஏனெனில் உங்கள் அறிவு 
	மழுங்கிப் போய்விட்டது. 
எபி. 5:12 இவ்வளவு காலத்திற்குள் ஆசியர்களாய் 
	இருந்திருக்க வேண்டிய நீங்கள் இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் இச்சுவடியையே 
	கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது 
	தேவைப்படுவது பால்தான் : கெட்டியான உணவு அல்ல. 
எபி. 5:13 குடிக்கும் 
	நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் 
	தேர்ச்சி அற்றவர். 
எபி. 5:14 முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட 
	உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் 
	பயிற்சி பெற்றவர்கள். 
6. அதிகாரம் 
	
எபி. 6:1 ஆதலின், கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே 
	நின்றுவிடாமல், நாம் முதிர்ச்சி நிலையை அடையவேண்டும். 
எபி. 6:2 
	சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனம்மாற்றம், கடவுள் மீது 
	நம்பிக்கை, முழுக்குகள், கையமர்த்தல் பற்றிய படிப்பினை, இறந்தோரின் உயிர்ப்பு, 
	என்றும் நிலைக்கும் தீர்ப்பு ஆகிய தொடக்க நிலைப் படிப்பினைகளைக் கற்பித்து 
	மீண்டும் அடித்தளம் இடத் தேவையில்லை. 
எபி. 6:3 கடவுள் திருவுளம் 
	கொள்வாராயின் இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம். 
எபி. 
	6:4 ஏனெனில் ஒருமுறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய 
	ஆவியைப் பெற்றவர்கள் ஆவர். 
எபி. 6:5 கடவுளின் நல்ல வார்த்தையையும் 
	வரவிருக்கும் உலகின் வல்லமையையும் சுவைத்த இவர்கள் நெறி பிறழ்ந்துவிடின், 
	இவர்களை மனம் மாற்றி, மீண்டும் புத்துணர்வு பெறச் செய்வது இது. 
எபி. 
	6:6 ஏனெனில், இவர்கள் அறைமகனைத்"தாங்களே சிலுவையில் அறைந்து, வெளிப்படையாக 
	இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர். 
	
எபி. 6:7 நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை 
	செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி 
	பெற்றதாகும். 
எபி. 6:8 மாறாக, முட்செடிகளையும் முட்புதர்களையும் 
	முளைப்பிக்குமாயின், அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு 
	இரையாக்கப்படும் 
எபி. 6:9 அன்பார்ந்தவர்களே, இவ்வாறு நாங்கள் 
	பேசினாலும், உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் மேலான வழியில் நடந்து, 
	மீட்புக்குரியவர்களாய் இருக்கிறீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 
	எபி. 6:10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு 
	தொண்டாற்றி வந்தீர்கள்: இப்போதும் தொண்டு செய்துவருகின்றீர்கள். எனவே கடவுள் 
	பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்க மாட்டார். 
	எபி. 6:11 நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் 
	ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதி வரை காட்டவேண்டும் என 
	மிகவும் விரும்புகிறோம். 
எபி. 6:12 இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் 
	கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் 
	பெற்றவர்களைப் போல் வாழுங்கள். 
எபி. 6:13 ஆபிரகாமுக்குக் கடவுள் 
	வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற 
	இயலாததால் தம் மீதே ஆணையிட்டு, 
எபி. 6:14"நான் உன்மீது உண்மையாகவே 
	ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்" என்றார். 
எபி. 6:15 
	இதன் படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் 
	பெற்றுக்கொண்டார். 
எபி. 6:16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் 
	மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். 
	அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும். 
எபி. 6:17 அவ்வாறே, கடவுளும் தம் 
	வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை 
	மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார். 
	எபி. 6:18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது 
	பொய்யாதிருக்க முடியாது. அடைக்கலம் தேடும்நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை 
	விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். 
எபி. 
	6:19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் 
	போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீரைக்கு அப்பால் சென்று நேர்ந்திருக்கிறது. 
	எபி. 6:20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் 
	சென்று நேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு 
	என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார். 
	7. அதிகாரம் 
	
எபி. 7:1 இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்: உன்னத கடவுளின் 
	குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் 
	அவருக்கு ஆசி அளித்தார். 
எபி. 7:2 ஆபிரகாம் தம்மிடமிருந்த 
	எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் 
	என்து இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாவேமின் அரசர். அமைதியின் அரசர் 
	என்பது இதற்குப் பொருள். 
எபி. 7:3 இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை: 
	தலைமுறை வரலாறு இல்லை: இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை: முடிவும் இல்லை. 
	இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: குருவாக என்றும் நிலைத்திருப்பவர். 
	எபி. 7:4 நம் குலமுதல்வர் ஆபிரகாமே தாம் போரில் கைப்பற்றிய பொருள்களுள் பத்தில் 
	ஒரு பகுதியை இவருக்கு அளித்தார் என்றால் இவர் எத்துணை பெரியவர் என்பதை எண்ணிப் 
	பாருங்கள். 
எபி. 7:5 லேவியின் குலத்தவருள் குருத்துவப் பணி ஏற்பவர்கள் 
	மக்களிடமிருந்து திருச்சட்டபடி பத்தில் ஒரு பங்கு பெறவேண்டும் என்ற ஒரு கட்டளை 
	உண்டு. அம்மக்கள் ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர் சகோதரிகளாயிருந்தும் 
	அவர்களிடமிருந்தும் இதைப் பெறுகின்றனர். 
எபி. 7:6 ஆனால், அவர்களுடைய 
	தலைமுறையைச் சாராத மெல்கிசதேக்கு ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் 
	பெற்றார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே அவர் ஆசி அளித்தார். 
	எபி. 7:7 பெரியோர் சிறியோருக்கு ஆசி அளிப்பதே முறை. இதற்கு யாரும் எதிர்ப்புத் 
	தெரிவிக்க முடியாது. 
எபி. 7:8 மேலும் பத்தில் ஒரு பங்கு பெறும் 
	லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்: மெல்கிசதேக்கோ,"வாழ்பவர்" எனச் 
	சான்றுபெற்றவர். 
எபி. 7:9 அன்றியும், பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியும் கூட, ஆபிரகாமின் 
	வழி, பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார் என்று சொல்லலாம். 
எபி. 7:10 
	ஏனெனில், மெல்கிசதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் மூதாதையாகிய 
	ஆபிரகாமுக்குள் இருந்தார் எனலாம். 
எபி. 7:11 லேவியின் குருத்துவமுறை 
	வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள். அதன் வழியாக அவர்கள் நிறைவு 
	அடையக்கூடுமாயின், ஆரோனின் முறையிலன்றி மெல்கிசதேக்கின் முறையில் வேறொரு குருவை 
	ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன? 
	
எபி. 7:12 ஏனெனில் குருத்துவமுறை மாற்றம் அடையும்போது, திருச்சட்டமும் 
	கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் அல்லவா? 
எபி. 7:13 இவையெல்லாம் யாரைக் 
	குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு குலத்தைச் சேர்ந்தவர். பிடத்தில் பணி 
	செய்யத் தம்மை அர்ப்பணித்தது இல்லை. 
எபி. 7:14 நம் ஆண்டவர் யூதாவின் 
	குலத்தில் தோன்றினார் என்பது தெளிவாகத் தெரிந்தது தானே? குருக்களைப் பற்றிப் 
	பேசியபோது, மேசே அக்குலத்தைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை. 
எபி. 
	7:15 மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது 
	இன்னும் அதிகத்தெளிவாகிறது. 
எபி. 7:16 இவர் திருச்சட்டத்தின் 
	கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் 
	தோன்றினார். 
எபி. 7:17 இவரைப்பற்றி,"மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் 
	குருவே" என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது. 
எபி. 7:18 இவ்வாறு, 
	முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால், அது நீக்கப்பட்டு விட்டது. 
	எபி. 7:19 ஏனெனில், திருச்சட்டம் எதையும் முழுநிறைவுள்ளதாய் ஆக்கவில்லை. 
	இப்போதோ, அதைவிடச் சிறந்ததொரு எதிர்நோக்கு அளிக்கப்படுகிறது. இந்த எதிர்நோக்கு 
	வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம். 
எபி. 7:20 இவரதுகுருத்துவப் பணியோ 
	ஆணையிட்டு அளிக்கப்பட்டு ஒன்று: லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் 
	இடப்படவில்லை. 
எபி. 7:21"நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். 
	அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்" என்று கடவுள் அவரிடம் ஆணையிட்டுக் கூறினார் 
	அன்றோ. 
எபி. 7:22 இவ்வாறு இயேசு எவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்குக் 
	காப்புறுதி அளிப்பவராயிருக்கிறார்.
எபி. 7:23 மேலும், அந்தக் குருக்கள் 
	சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு 
	பலர் தொடர்ந்து குருக்களாயினர். 
எபி. 7:24 இவரோ, என்றென்றும் 
	நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். 
எபி. 7:25 
	ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க 
	வல்லவராயிருக்கிறார்: அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் 
	வாழ்கிறார். 
எபி. 7:26 இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். 
	இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 
	வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். 
எபி. 7:27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய 
	பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் 
	தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார். 
எபி. 
	7:28 திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். 
	ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் 
	என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். 
	8. அதிகாரம் 
எபி. 8:1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் 
	என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் 
	பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 
	எபி. 8:2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய 
	தூயகத்தில் ஊழியம் செய்கிறார். 
எபி. 8:3 ஒவ்வொரு தலைமைக் குருவும் 
	காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி 
	செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். 
	எபி. 8:4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். 
	ஏனெனில், திருச்சட்டத்தின் படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் 
	குருமார்கள் இருக்கிறார்கள். 
எபி. 8:5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் 
	கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது,"மலையில் உனக்குக் 
	காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" என்று 
	கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது. 
எபி. 8:6 ஆனால், இவரோ 
	அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணிணைப் 
	பெற்றிருக்கிறார். ஏனெனில் சிரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, 
	இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட 
	சிறப்புமிக்கது. 
எபி. 8:7 முதல் உடன்படிக்கை குறையற்ற தாய் 
	இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. 
எபி. 
	8:8 ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிக் சொன்னது இதுவே:"இதோ, 
	நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய 
	உன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்" என்கிறார் ஆண்டவர். 
எபி. 8:9 
	எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்த 
	பொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், 
	நான் அவர்ளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்: நானும் 
	அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை." என்கிறார் ஆண்டவர். 
எபி. 
	8:10"அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் 
	உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் 
	எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் 
	இருப்பார்கள்" என்கிறார் ஆண்டவர். 
எபி. 8:11 இனிமேல் எவரும்"ஆண்டவரை 
	அறிந்து கொள்ளும்" எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத் தர 
	மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர்முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை 
	அறிந்துகொள்வர். 
எபி. 8:12 அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு 
	மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்." 
	எபி. 8:13"புதியதோர் உடன்படிக்கை" என்பதால், முன்னையதை அவர் 
	பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரையில் மறையவேண்டியதே. 
	9. அதிகாரம் 
எபி. 9:1 முன்னைய உடன்படிக்கையின் படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் 
	மண்ணுலகைச் சார்ந்த திரு உறைவிடமும் இருந்தன. 
எபி. 9:2 அத்திரு 
	உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் 
	தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத்"தூயகம்" 
	என்பது பெயர். 
	
எபி. 9:3 இரண்டாம் திரைக்குப் பின்,"திருத்தூயகம்" என்னும் கூடாரம் 
	இருந்தது. 
எபி. 9:4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு 
	வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னர் வைக்கப்பட்டிருந்த 
	பொற்சாடியும் ஆரொனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 
எபி. 9:5 பேழையின்மேலே மாட்சிமிகு கெருபுகள் இரக்கத்தின் இருக்கைக்கு 
	நிழலிட்டுக் கொண்டிருந்தன. இவை பற்றி இப்போது விரிவாய்க் கூற இயலாது. 
	எபி. 9:6 இவை இவ்வாறு அமைந்திருக்க, குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை 
	நிறைவேற்ற முன்கூடாரத்தில் மட்டுமே எப்போதும் நுழைவார்கள். 
எபி. 9:7 
	இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார். 
	அப்போது அவர் தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைக்காகவும் இரத்தத்தைக் 
	கொண்டு போய்ப் படைப்பார். 
எபி. 9:8 மேற்கூறியவற்றின்மூலம் தூய ஆவியார், 
	முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் 
	வெளிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டுகிறார். 
எபி. 9:9 இக்கூடாரம் 
	இக்கால நிலையை கூட்டிக் காட்டுகிறது. ஏனெனில் இக்காலத்தில் செலுத்தப்படும் 
	காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவரின் மனச்சான்றை நிறைவுக்குக் கொண்டுவர 
	இயலாதனவாகும். 
எபி. 9:10 இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே. உண்பது பற்றியும் குடிப்பது 
	பற்றியும் பல்வேறு வகையான தூய்மைப்படுத்தும் சடங்குகள் பற்றியும் எழுந்த இவை 
	சீரமைப்புக் காலம் வரைதான் நீடிக்கும். 
எபி. 9:11 ஆனால், இப்போது 
	கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் 
	கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு 
	மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல: அதாவது, படைக்கப்பட்ட 
	இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. 
எபி. 9:12 அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக்கடாக்கள், 
	கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே 
	ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு 
	என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். 
எபி. 9:13 
	வெள்ளாட்டுக்காடாக்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கடியின் சாம்பலும் 
	தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை 
	பெறுகிறார்கள். 
எபி. 9:14 ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் 
	கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் 
	செயல்களிலிருந்து நம் மனச் சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது. 
	ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம் மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் 
	கொடுத்தவர் அவரே. 
எபி. 9:15 இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் 
	இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட 
	என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. 
	இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை 
	மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது. 
எபி. 9:16 ஏனெனில் விரும்ப ஆவணம் ஒன்று இருக்கிறது என்றால் அதனை எழுதியவர் 
	இறந்துவிட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும். 
எபி. 9:17 சாவுக்குப் 
	பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும். அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது 
	செல்லுபடியாகாது. 
எபி. 9:18 அதனால்தான் முன்னைய உடன்படிக்கையும் 
	இரத்தம் சிந்தாமல் தொடங்கப்படவில்லை. 
எபி. 9:19 திருச்சட்டத்திலுள்ள 
	கட்டளைகளையெல்லாம் மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின், 
	கன்றுக்குட்டிகளே, வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து 
	கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை 
	ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்: 
எபி. 9:20 
	தெளிக்கும்போது,"கடவுள் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" 
	என்றார். 
எபி. 9:21 அவ்வாறே, கூடாரத்தின் மீதும் வழிபாட்டுக் கலன்கள் 
	அனைத்தின்மீதும் அவர் இரத்தத்தைத் தெளித்தார். 
எபி. 9:22 உண்மையில் திருச்சட்டத்தின் படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் 
	தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. 
	எபி. 9:23 ஆதலின், விண்ணகத்தில் உள்ளவற்றின் சாயல்களே இத்தகைய சடங்குகளால் 
	தூய்மை பெறவேண்டுமென்றால், மண்ணகத்தில் உள்ளவை இவற்றிலும் சிறந்த பலிகளால் 
	அல்லவா தூய்மை பெறவேண்டிருக்கும். 
எபி. 9:24 அதனால்தான் கிறிஸ்து 
	மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் 
	இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே 
	நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் 
	நிற்கிறார்.