"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடல்கள் ( 1 - 330 ) > பாடல்கள் (331-670) > பாடல்கள் (671- 1000) > பாடல்கள் ( 1001- 1326 )
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
முதல் பாகம், பாடல்கள் ( 1 - 330 )
Acknowledgements:
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (http://www.kaumaram.com/)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding.
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
� Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாடல் 1 -- விநாயகர் துதி
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தத்தன தனதன
தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ......
அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை
...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு
திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ்
மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண
மணமருள் ...... பெருமாளே.
பாடல் 2 விநாயகர் துதி
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு
குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ
னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி
பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனமுலம்
மிக்கஅடி சிற்கடலை
பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி
லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
பாடல் 3 விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ......
கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப்
...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக்
காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ......
பெருமாளே.
பாடல் 4 விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன த்ததன
தத்தன
தனன தனதன த்ததன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி
இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத
லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ......
செறமுளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக
ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு
துத்ததென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு
டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ......
பெருமாளே.
பாடல் 5 விநாயகர்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை
அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார
விதமுமுடை மாதர்
வினையின் விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு
பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன்
இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை
திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி
யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
பாடல் 6 (நூல்)
ராகம் - கெளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச்
சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும்
...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப்
பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர
தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்
தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக்
களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென
...... முதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக்
குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
பாடல் 7 (திருப்பரங்குன்றம்)
ராகம் - .....; தாளம் - .........
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி
வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை
தடவியும் ...... இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென
...... மிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை
மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய ......
முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த
உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ......
தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்
றிலக்க ணங்களும்
இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ்
விதமொடு புயமிசை ...... புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ......
குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல் 8 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ......
தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக
ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல்
ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய
மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர்
...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி
குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன
எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி
தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல் 9 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் (7)
(திஸ்ரத்ருபுடை)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ......
வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கரறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச
தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து
...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று
சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன்
வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த
னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு
டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி
றந்த ...... பெருமாளே.
பாடல் 10 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ....; தாளம் - .......
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை
அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை
அழுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ......
கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய ...... மிடறுடே
நடித்தெ ழுங்குரல்
குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன
சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ......
வரைபோலும்
நிவத்த திண்திகழ் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க ருங்குழல்
உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி
யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு
ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல் 11 (திருப்பரங்குன்றம்)
ராகம் - சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை (7)
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சி அநந்தவி
தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு
...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப
ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக
லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் ......
புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட
இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி
டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட
...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி
கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி
ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி
வந்தருள் ...... பெருமாளே.
பாடல் 12 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ....; தாளம் - .......
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட ருங்கயல் கொண்டிசைந்
தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங்
கும்பொழு ...... தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு
...... மயலாலே
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர்
பின்திரிந் துந்தன
மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்
போதிலு றைந்தருள்
கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ ளஞ்சிவ சங்கரன்
கொண்டிட ...... மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ணவம
டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள முந்தும
ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப
ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
பாடல் 13 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதகிட-2
1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனந் தத்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ......
றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப்
...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங்
கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
பாடல் 14 (திருப்பரங்குன்றம்)
ராகம் - .....; தாளம் - ....
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட
மங்கையர் கண்களின் ...... வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே
இரவும்பகல் அந்தியு
நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும்
...... அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய
வஞ்சகன்
இனியுன் றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்
திரிகின்றவன்
மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ......
முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
பாடல் 15 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2) (எடுப்பு -
அதீதம்)
தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1
தனத்தத் தந்தனந் தனத்தத்
தந்தனந்
தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம்
கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத்
துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற்
சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ......
பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந்
...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற்
கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
பாடல் 16 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ......; தாளம் - .........
தனத்ததந் தந்தத்
தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன
தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருந்துயர்ந் தண்டத் திற்றலை
முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள்
துதித்துமுன்
கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
குதித்துவெண்
சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங்
...... கதிர்வேலா
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ்
சஞ்சொற் பொச்சையி டைக்குங்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ......
குகுகூகூ
திதித்திதிந் திந்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண்
சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ......
கொலைவேடர்
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந்
தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ......
பெருமாளே.
பாடல் 17 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ...... ; தாளம் -
தனத்தனந் தந்தன தனத்தனந்
தந்தன
தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர்
பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந்
தங்கவிர்
முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகும்
அருத்திடுஞ்
சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் ......
அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங்
கும்பிடு ...... கந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங்
கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு
தினைப்புனம்
பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
பாடல் 18 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ......; தாளம் - .......
தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலங்
கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங்
கங்குழைய
உந்தியென் கின்றமடு ...... விழுவேனை
உன்சிலம் புங்கனக
தண்டையுங் கிண்கிணியும்
ஒண்டகம் பும்புனையும் ...... அடிசேராய்
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி ......
பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன்
தம்பியெனும் ...... வயலுரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண்
கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களுஞ்
செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
பாடல் 19 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ...........; தாளம் - .........
தனத்த தந்தன
தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு
மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு
வியுமுடல் ...... தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு
தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான்
குடத்தை
வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க
ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்க ருங்கடல்
திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட
ஒருகணை விடுமரி ...... மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு ......
முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு
மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
பாடல் 20 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ..... ; தாளம் -
தனத்தனந் தந்ததான தனத்தனந்
தந்ததான
தனத்தனந் தந்ததான ...... தனதான
வரைத்தடங் கொங்கை
யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும்
மதர்த்திடுங் கெண்டையாலும் ...... அனைவோரும்
வடுப்படுந் தொண்டை
யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும்
மருட்டிடுஞ் சிந்தை மாதர் ......
வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ணகம் ...... அருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட
கோளம் ...... அளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட
வேலை ...... விடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட
மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே
தினைப்புனஞ் சென்று
லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
பாடல் 21 (திருச்செந்தூர்)
ராகம் - .........; தாளம் - ......
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன
தானா தானா
தந்த தந்தன தானா தானா ...... தனதான
அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று
மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா
திங்கு நின்றதென் வீடே வாண
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப
சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே
மங்கு லின்புறு வானாய் வானு
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட
லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே
ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
பாடல் 22 (திருச்செந்தூர்)
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)
தக-1,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான
அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு
சங்கதந் தவிரமுக் ...... குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் ...... தணியாத
சிந்தையு மவிழ்ந்தழிந்
துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ......
படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடிய அம்பொனின்
திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங்
குழைகளிற் ...... ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு
சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி
சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
பாடல் 23 (திருச்செந்தூர்)
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதனன தனதனன தந்தத்
தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் ......
தனதான
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர்
வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை
அதுவருகு மளவிலுயி
ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற
உந்திச் சந்தித் ...... தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக்
...... கெனநாடா
திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத்
தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி
புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ......
கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென
முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா
திரளுமணி தரளமுயர்
தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிழுவு
செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 24 (திருச்செந்தூர்)
ராகம் - .........; தாளம் - ......
தந்தத் தனனத் தந்தத்
தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ......
பொரும்வேலா
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப்
...... பெருமாளே.
பாடல் 25 (திருச்செந்தூர்)
ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் (24)
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தான தானன தனதனன தான தானன
தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான
அருணமணி மேவு பூஷித
ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அம்பொற் கும்பத் ...... தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான
வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் ...... றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி
யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் ...... குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக
போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 26 (திருச்செந்தூர்)
ராகம் - கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனதன தந்தாத்
தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற்
றழிதரு திண்டாட்
டஞ்சற் ...... றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த்
தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும்
பதறிய அங்காப்
பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் ......
றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல
ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு
கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச்
சிவவடி
வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக்
...... கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட்
டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 27 (திருச்செந்தூர்)
தனன தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
அளக பாரம லைந்துகு லைந்திட
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
அவச
மோகம் விளைந்துத ளைந்திட ...... அணைமீதே
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
அதர பானம ருந்திம டுங்கிற ......
முலைமேல்வீழ்ந்
துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
மகளிர் தோதக
இன்பின்மு யங்குதல்
ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்
துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
உபய சீதள
பங்கய மென்கழல் ...... தருவாயே
இளகி டாவளர் சந்தன குங்கும
களப பூரண
கொங்கைந லம்புனை
இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும்
இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
ஹரஹ ராசிவ சங்கர சங்கர
எனமி காவரு
நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா
வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
பாடல் 28 (திருச்செந்தூர்)
ராகம் - காம்போதி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனன
தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய
மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை ...... யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர ...... மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக
மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி யலரிமதி
நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை
யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு ......
மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை
...... பெருமாளே.
பாடல் 29 (திருச்செந்தூர்)
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின்
தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்
அருக்கன் போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவி யிடேறிட ...... நெறிபாரா
வினைச்சண் டாளனை
வீணணை நீணிதி
தனைக்கண் டானவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை
யோர்மொழி ...... பகராதே
விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின்
பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ
முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே
முளைக்குஞ் சீதநி
லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு
ளால்வரு ...... முருகோனே
தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந்
தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.
பாடல் 30 (திருச்செந்தூர்)
ராகம் - மோகனம்; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த ...... தனதான
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ
டர்ந்து ...... பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப
லம்பு
மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர
விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர
மறைசதுர்
விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த
...... திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் ...... மயில்வீரா
இனியகனி மந்தி சிந்து
மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று ...... மிளையோனே
எழுகடலு
மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை யஞ்ச லென்ற ......
பெருமாளே.
பாடல் 31 (திருச்செந்தூர்)
ராகம் - ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2,
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதான
இயலிசையி லுசித வஞ்சிக்
...... கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை
புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்
...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ
னிளைய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 32 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தனதன தனந்த தந்தன தனதன தனந்த
தந்தன
தனதன தனந்த தந்தன ...... தனதான
இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலைநெ
ரிந்தெ ழுந்திட ...... அணைமீதே
இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு
லைந்திட
இதழமுத ருந்த சிங்கியின் ...... மனமாய
முருகொடுக லந்த
சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டெ ழுந்தொறு ...... முருகார
முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந லம்பி
றந்திட ...... அருள்வாயே
எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த
கங்கையு
மிதழியொட ணிந்த சங்கரர் ...... களிகூரும்
இமவரைத ருங்க
ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி ......
பெருவாழ்வே
அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணிச
தங்கை கொஞ்சிட ...... மயில்மேலே
அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர
முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய ...... பெருமாளே.
பாடல் 33 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - .........
தனதன தனன தனத்தத்
தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான
இருள்விரி குழலை
விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை
விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே
இலைபிள வதனை நடித்துக்
கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு
...... மெங்கள்வீடே
வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல
ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ......
நிந்தையாலே
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித்
தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ
குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநநருர்
குழிபடு கலுழி
வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ
லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா
முருகவிழ் துணர்க ளுகுத்துக்
காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
முகிழ்முலை யிளைய
குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே
முளையிள மதியை யெடுத்துச்
சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர்
...... தம்பிரானே.
பாடல் 34 (திருச்செந்தூர்)
ராகம் - கீரவாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன ......
தந்ததான
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென ......
வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய்
வனமழியு மங்கை
மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது ......
சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு
ரந்த பாலமுத ...... முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத
வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
பாடல் 35 (திருச்செந்தூர்)
ராகம் - ......; தாளம் - .........
தனத்தந் தானன தானன
தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான
உருக்கம் பேசிய நீலியர்
காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்வையர் மாபழி
காரிகள் ...... மதியாதே
உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந்
தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யணைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே
அழைத்துஞ் சேதிகள்
பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு
ளாலுட ...... னினிதாள்வாய்
இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ்
சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி
இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா
திருக்குந் தாபதர்
வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடைய நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய
மாதவன் ...... மருகோனே
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ்
சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ......
பெருமாளே.
பாடல் 36 (திருச்செந்தூர்)
ராகம் - வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி
(எடுப்பு - 3/4
இடம்)
தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை
மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை
...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை
...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம
நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி
னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே.
பாடல் 37 (திருச்செந்தூர்)
ராகம் - பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை
தானா தந்தத் தானா
தந்தத்
தானா தந்தத் ...... தனதானா
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் ...... டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் ...... டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் ...... குலையாதே
கோடார் செ்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் ...... கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் ...... தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவா றெந்தைக் ...... கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் ...... பெருமாளே.
பாடல் 38 (திருச்செந்தூர்)
ராகம் - மனோலயம் (மத்யமஸ்ருதி); தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட
நடை (35)
/4/4/4 0 - நடை தக தகிட
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு விட்டுத்
தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
பட்டுருவி
நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண்
டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே.
பாடல் 39 (திருச்செந்தூர்)
ராகம் - காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை
யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுவளம்வ ருந்தி நொந்து
மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள்
தந்து ...... புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல்
கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் ...... மிக்முழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த
...... மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர் அஞ்சவென்று
குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 40 (திருச்செந்தூர்)
ராகம் - ஆனந்த பைரவி (மத்யம ஸ்ருதி); தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
கமல
மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள
கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய
ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ......
அருள்தானே
அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு
லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்
குமரி காளிப
யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி
குண்டலி ...... எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம
சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மமவி
நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு
சிந்தையு கந்தருள் ...... இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாது நெருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ......
பெருமாளே.
பாடல் 41 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண்
கறுப்புந்தன்
சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர்
கணைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங்கண்
கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச்
சரக்குஞ்சம்
புடைக்கும்பொன்
றுகிற்றந்தந் தரிக்குந்தன்
சடத்தும்பண் பிலுக்குஞ்சம்
...... பளமாதர்
சலித்தும்பின் சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண்
பசப்பும் பெண்
தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ
சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண்
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத்
துவைத்தும்பந்
தடித்துஞ்சங்
கொலித்துங்குன் றிடித்தும்பண்
சுகித்துங்கண்
களிப்புங்கொண் ...... டிடும்வேலா
சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
சிவப்பண்புந்
தவப்பண்புந் ...... தருவோனே
தினைத்தொந்தங் குறப்பெண்பண்
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ......
பெருமாளே.
பாடல் 42 (திருச்செந்தூர்)
ராகம் - ..........; தாளம் - .........
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கருப்பந்தங் கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச்
செருத்தண்டந்
தரித்தண்டம்
புகத்தண்டந் தகற்கென்றுந்
திகைத்தந்திண் செகத்தஞ்சுங்
...... கொடுமாயும்
தியக்கங்கண் டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ்
சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே
அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண்
பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா
அணிச்சங்கங் கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா
புரக்குஞ்சங்
கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
புதுக்குங்கங் கையட்குந்தஞ்
...... சுதனானாய்
புனைக்குன்றந் திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன்
குறக்கொம்பின்
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே.
பாடல் 43 (திருச்செந்தூர்)
ராகம் - ......; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
களபம்
ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர்
...... எவரோடுங்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை
வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப்
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே
பிணமும்
அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை
யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே
அளையில் உறைபுலி பெறுமக
வயிறரு
பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ......
உருகாநீள்
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள்
பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள நிலம்வர ...... விரல்சேரேழ்
தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதியுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே
துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநகர் உறைதரு ......
பெருமாளே.
பாடல் 44 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தனந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள்
கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து
...... களிகூரக்
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப்
பொனின்கு டங்க ளஞ்சு மென்த
னங்க ளும்பு யங்க ளும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப்
புணர்ந்து டன்பு லர்ந்து
பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ
அனங்க னெந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி ருண்ட
கண்டர் தந்த ...... அயில்வேலா
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச
வெஞ்ச மம்பு
ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே
சினங்கள் கொண்டி
லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரத்தெ
ரிந்த வன்ப ரிந்த இன்ப ......
மருகோனே
சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
செந்தில் வந்த
கந்த எங்கள் ...... பெருமாளே.
பாடல் 45 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - ......
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
கஞ்சமுகை மேவு ...... முலையநலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் சூடு ...... மதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத ...... ருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை ...... யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்றகும ரேச ...... குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.
பாடல் 46 (திருச்செந்தூர்)
ராகம் - ஸஹானா / திலங்; தாளம் - ஆதி கண்டநடை (20)
தானனா
தந்தனம் தானனா தந்தனம்
தானனா தந்தனம் ...... தனதான
காலனார்
வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் ...... கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா
ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ்
சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்
தூயதாள்
தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் ...... மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் ......
பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும்
...... பெருமாளே.
பாடல் 47 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தனன தானனத் தனதன தனனாத்
தந்தத் தந்தத் ...... தனதான
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் ......
தட்முழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக்
...... குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக்
...... கடலுடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக்
...... கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப்
...... புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப்
...... புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத்
...... தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற்
கந்தப் ...... பெருமாளே.
பாடல் 48 (திருச்செந்தூர்)
ராகம் - குந்தல வராளி ; தாளம் - அங்கதாளம் (14 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2,
தகதிமி-2, தகிட-1 1/2,
தகதிமி-2, தகதிமி-2
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தானாந்தனனா
குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள் ...... தோடோ ய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட
அண்டர்
தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர
சண்ட
சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.
பாடல் 49 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
குழைக்குஞ்சந் தனச்செங்குங்
குமத்தின்சந் தநற்குன்றங்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே
உழைக்குஞ்செங்
கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங்
...... குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ்
சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய்
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
சடைக்கண்டங் கியைத்தங்குந்
தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார்
தனிப்பங்கின்
புறத்தின்செம்
பரத்தின்பங் கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங் கரிக்கென்றும்
...... பெருவாழ்வே
கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
கலைக்கொம்புங்
கதித்தென்றுங்
கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.
பாடல் 50 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய
டைந்தகுழல் ...... வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ
னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும்
வெங்கயல்மி ரண்டவிழி
அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ ......
டண்டஆளாய்
சங்கமுர சந்திமிலை துந்தமித தும்பவளை
தந்தனத னந்தவென
...... வந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா
சங்கரனு கந்தபரி வின்குருவெ
னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள்
சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே.
பாடல் 51 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - ......
தந்தத் தனனத் தந்தத்
தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழலிற் ......
கொடிதான
கொன்றக் கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற் ......
றுறவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச் ......
சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் ......
தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ......
கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ......
றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ......
பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப்
...... பெருமாளே.
பாடல் 52 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - .......
தனதனன தனதனன தந்தனந்
தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
...... தந்ததானா
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு
திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக்
கொடியவிரல்
நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல்
விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர்
வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ......
செஞ்செநீடும்
வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள
முருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ......
தன்புறாதோ
படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்
துதறுமொரு
கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ......
சிந்தும்வேலா
படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை
யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண்
...... கங்கைமான்வாழ்
சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ னமுமொழிக தங்குறங்
கங்கியும் ...... பொங்கிநீடும்
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
தமிழ்விரக உயர்பரம சங்கரன்
கும்பிடுந் ...... தம்பிரானே.
பாடல் 53 (திருச்செந்தூர்)
ராகம் - கரஹரப்ரியா; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) (ஏடுப்பு 3/4
இடம்)
தந்தன தானான தானன
தந்தன தானான தானன
தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனை
யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார
சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோநம
எம்பெரு மானே
நமோநம
ஒண்டொடி மோகா நமோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட
னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர
மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ
...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான
வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலுரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
பாடல் 54 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தனதன தனதன தனதன தன
தந்தத் ...... தனதானா
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத்
...... தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் ......
றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் ......
றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் ...... றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற்
...... சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற் ......
பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் ......
புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் ...... பெருமாளே.
பாடல் 55 (திருச்செந்தூர்)
ராகம் - .....;தாளம் - ......
தந்தனா தந்தனத் தந்தனா
தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
சந்தமோ கின்பமுத் ......
தெனவானிற்
றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
பென்றுதாழ்
வொன்றறுத் ...... துலகோரைத்
துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே
துன்பநோய் சிந்தநற் கந்தவே
ளென்றுனைத்
தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே
வெங்கண்வ்யா
ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்
துண்டுமே லண்டருக் ...... கமுதாக
விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே ரம்பலத் ......
தினிலாடி
செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா டுந்திறற்
...... கதிராழித்
திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பாடல் 56 (திருச்செந்தூர்)
ராகம் - ......; தாளம் - .......
தந்தனா தந்தனா தந்தனா
தந்தனா
தந்தனா ...... தந்ததான
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா ...... ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா ...... நந்தமாயன்
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ ...... யன்பிலாள்வாய்
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே ...... சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ ......
தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ்
...... தம்பிரானே.
பாடல் 57 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான ...... தனதான
சத்தமிகு மேழுகட லைத்தேனை
யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
சத்திதனை
மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு
தக்கமணம் வீசுகம லப்பூவை
மிக்கவிளை வானகடு வைச்சீறு
தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர்
மத்தகிரி போலுமொளிர் வித்தார
முத்துவட மேவுமெழில் மிக்கான
வச்சிரகி
ணடநிகர் செப்பான ...... தனமீதே
வைத்தகொடி தானமயல் விட்டான
பத்திசெய ஏழையடி மைக்காக
வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே
சித்ரவடி வேல்பனிரு கைக்கார
பத்திபுரி வோர்கள்பனு வற்கார
திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது
சித்தஅநு ராககல விக்கார
துட்டஅசு ரேசர்கல கக்கார
சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள்
முத்திபெற வேசொல்வச னக்கார
தத்தைநிகர் தூயவநி தைக்கார
முச்சகர்ப
ராவுசர ணக்கார ...... இனிதான
முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபுரி சைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர் ......
பெருமாளே.
பாடல் 58 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - ......
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான ...... தனதான
சந்தனச
வாதுநிறை கற்பூர
குங்குமப டீரவிரை கத்தூரி
தண்புழுக ளாவுகள பச்சீத
...... வெகுவாச
சண்பகக லாரவகு ளத்தாம
வம்புதுகி லாரவயி ரக்கோவை
தங்கியக டோ ரதர வித்தார ...... பரிதா
மந்த்ரம தானதன மிக்காசை
கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள்
வந்தியிடு மாயவிர கப்பார்வை
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம யூரதுர கக்கார
என்றுமக
லாதஇள மைக்கார ...... குறமாதின்
இன்பஅநு போகசர சக்கார
வந்தஅசு
ரேசர்கல கக்கார
எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்
திங்கள்முடி நாதர்சம
யக்கார
மந்த்ரவுப தேசமகி மைக்கார
செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ......
பெருமாளே.
பாடல் 59 (திருச்செந்தூர்)
ராகம் - சுருட்டி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2
தானத் தானன தானத் தானன
தானத் தானன ...... தந்ததான
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும ...... நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத்
தேமிக ...... அன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி
...... கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும ......
தென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு ......
யங்ககால
நீலக் ணபக லாபத் தேர்விடு
நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு ...... மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 60 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - .......
தனதனன தாந்த தந்தத்
தனதனன தாந்த தந்தத்
தனதனன தாந்த தந்தத் ...... தனதான
தகரநறை
பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளருமிடை யேந்து தங்கத்
...... தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து
மந்த்ரச்
சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும்
புகலரிய தாந்த்ரி
சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்
புநிதமிலி மாந்தர்
தங்கட்
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
புளகமலர் பூண்டு வந்தித் ......
திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான
தனனதன தாந்த னந்தத்
தெனநடன
மார்ந்த துங்கத்
தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா
திசையசுரர் மாண்ட ழுந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச்
சிமையவரை யீன்ற
மங்கைக் ...... கொருபாலா
திகழ்வயிர மேந்து கொங்கைக்
குறவனிதை காந்த
சந்த்ரச்
சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.
பாடல் 61 (திருச்செந்தூர்)
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
(எடுப்பு
- அதீதம்)
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோ ய்
வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் ...... கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் ...... குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் ...... கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் ...... புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா
செந்திற் ...... பெருமாளே.
பாடல் 62 (திருச்செந்தூர்)
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி
தாளம் - கண்டசாபு (2
1/2)
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ......
தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி
லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ......
றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ்
...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர
என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந்
தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ......
கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி
கும்பிடுந் ...... தம்பிரானே.
பாடல் 63 (திருச்செந்தூர்)
ராகம் - ஆரபி; தாளம் - ஆதி
தந்த தனதனன தந்த தனதனன
தந்த தனதனன ...... தனதானா
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி ...... பகர்கோடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
பாடல் 64 (திருச்செந்தூர்)
ராகம் - ஆபோகி; தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை (14)
(எடுப்பு - அதீதம்)
தனத்தந்தன தனத்தந்தன
தனத்தந்தன ...... தனதானத்
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய ...... பெருமாளே.
பாடல் 65 (திருச்செந்தூர்)
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தந்தந்தந்
தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான
துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண்
சஞ்சல மென்பதி ...... லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி ...... யருள்வாயே
நின்பங்கொன் றுங்குற
மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு ......
மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு
வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
பாடல் 66 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - ......
தனத்த தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததானா தனனா
தெருப்பு றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்து ருக்கித் தருக்கியே ......
பண்டைகூள மெனவாழ்
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக்
கனத்தபேர்
தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே
இருப்ப
கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப்
பசப்பியே ...... கொண்டுகாசு தணியா
திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை
தவிராய்
பொருப்பை யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த
பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு
மருகா
வரப்பை யெட்டி குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ்
வயற்பு
றத்துப் புவிக்குள்நீள்
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத்
துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
பாடல் 67 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - .......
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதான
தொடரிய
மன்போற் றுங்கப்
படையைவ ளைந்தோட் டுந்துட்
டரையிள குந்தோட் கொங்கைக்
...... கிடுமாயத்
துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்
துளைவிர குஞ்சூழ்த் தண்டித்
துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற்
கிடைகொடு சென்றீட்
டும்பொற்
பணியரை மென்றேற் றங்கற்
றனையென இன்றோட் டென்றற் ......
கிடுமாதர்க்
கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
படுமன முன்றாட் கன்புற்
றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே
நெடிதுத வங்கூர்க் குஞ்சற்
புருடரும் நைந்தேக் கம்பெற்
றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும்
நிகரில்ம தன்தேர்க் குன்றற்
றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்
சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன்
திடமுறு அன்பாற்
சிந்தைக்
கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்
கிடர்களை யும்போர்ச் செங்கைத்
...... திறல்வேலா
தினவரி வண்டார்த் தின்புற்
றிசைகொடு வந்தேத்
திஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 68 (திருச்செந்தூர்)
ராகம் - தோடி/அடாணா
தாளம் - அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)
தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகதா-2,
தகிடதக-2 1/2
தந்த தனன தனனா தனனதன
தந்த
தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி சரிய
மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல்
வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு
னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த
ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ......
வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக
எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க
வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர்
கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த
குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
பாடல் 69 (திருச்செந்தூர்)
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி (எடுப்பு 3/4 இடம்)
தானன
தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் ......
தனதான
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி
ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான
தூதொடு
நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறு காளையர்
வாசல்தொ றும்புக் ...... கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக
லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற் ...... றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய
மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப்
பாவியி ராவண னார்தலை
சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ......
கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென
முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள்
கிளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப்
...... பெருமாளே.
பாடல் 70 (திருச்செந்தூர்)
ராகம் - கோதார கெளளை; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான
தந்த தான தான
தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக
...... மதனுடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி
டாம லேக ...... வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக
லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து
பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி
னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
ஆல மொன்று
வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான ......
பெருமாளே.
பாடல் 71 (திருச்செந்தூர்)
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமி-2,
தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு - அதீதம்)
தனத்தத் தந்தனந் தனத்தத்
தந்தனம்
தனத்தத் தந்தனம் ...... தனதான
நிதிக்குப் பிங்கலன்
பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை
நிலத்திற்
றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன்
றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்
புலத்திற்
சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் ......
றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற்
சந்தமொன் ...... றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன்
புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
பாடல் 72 (திருச்செந்தூர்)
பாடல் 72 (திருச்செந்தூர்)
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் -
மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன ......
தனதான
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ......
மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள்
...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடுவேற் குரிய ......
நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ......
மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை ...... விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித ...... வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய ...... பெருமாளே.
பாடல் 73 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் - .......
தனத்தந் தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான
நிறுக்குஞ் சூதன மெய்த்தன
முண்டைகள்
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
நிழற்கண் காணவு ணக்கிம
ணம்பல ...... தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ......
யெனவோதி
உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே
உலப்பின் றாறெனு
மக்கர முங்கமழ்
கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
உளத்தின் பார்வையி
டத்தினி னைந்திட ...... அருள்வாயே
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ......
மருகோனே
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
திருச்செங் கோடு இடைக்கழி
தண்டலை
களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம் ...... அமர்வோனே
சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ
நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன்
செருக்குஞ் சூரக
லத்தை யிடந்துயிர்
குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
திருச்செந்
தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே.
பாடல் 74 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் - ........
தந்தனா தந்தனத் தந்தனா
தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
பங்கமே வும்பிறப் பந்தகா
ரந்தனிற்
பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப்
பஞ்சபா ணம்படப் புண்படா
வஞ்சகப்
பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர்
தங்களா லிங்கனக்
கொங்கையா கம்படச்
சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே
தண்டைசூழ்
கிண்கிணிப் புண்டாண கந்தனை
தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா
பங்கெடுத்
தண்டவே தண்டமுட் ...... படவேதான்
அஞ்சவே திண்டிறற்
கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே
திங்களார்
கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ......
பெருமாளே.
பாடல் 75 (திருச்செந்தூர்)
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
பஞ்ச
பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
பங்க வாண்முக
முடுகிய நெடுகிய ...... திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி
லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ......
னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு
மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை
...... யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள்
தடமுலை
மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை
குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி
தொழுதுயர் ...... மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும்
வழிவழி நெறிபெறு
செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 76 (திருச்செந்தூர்)
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு
1/2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன ......
தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு
வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை
யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகை
வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு
மதுரகவி ராஜ னானென்
வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத ......
விர்ந்திடாதோ
அடல்பொருது பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக
சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ
ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோ ர மாச லந்தர ......
னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக்
குதவியம கேசர் பால
இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் ......
தம்பிரானே.
பாடல் 77 (திருச்செந்தூர்)
ராகம் - ..........; தாளம் -
தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான
பதும இருசரண் கும்பிட் டின்பக்
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ......
கயல்போலும்
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
குழைகள் பொரமருண்
டின்சொற் கொஞ்சிப்
பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப்
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
தினிது வரையவெண் சந்தத் திந்துப்
புருவ
வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி
பொடிசெய் தருள்மதன்
தந்த்ரப் பந்திக்
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
பொருளின் மகளிர்தம்
மன்புப் பண்பைத் ...... தவிரேனோ
திதிதி ததததந் திந்திந் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தரரவென் றென்றொப் பின்றித்
திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச்
சதியில் வருபெருஞ்
சங்கத் தொங்கற்
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
தலைகொ டடிபணிந்
தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென்
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ......
பெருமாளே.
பாடல் 78 (திருச்செந்தூர்)
ராகம் - தேவகாந்தாரி ; தாளம் - சதுஸ்ர அட (12)
(எடுப்பு 1/2
இடம்)
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
பரிமள களபசு
கந்தச் சந்தத் ...... தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல்
கொங்குக் கங்குற் ...... குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ......
றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
அலைகுமு
குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக்
குஞ்சற் ...... குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 79 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத்தந்தத் தினைத்தந்திட்
டிருக்குங்கச் சடர்த்துந்திப்
பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ......
தனமானார்
பரிக்குந்துற் சரக்கொன்றத்
திளைத்தங்குற் பலப்பண்பைப்
பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும்
துரைச்செங்கட்
கடைக்கொன்றிப்
பெருத்தன்புற் றிளைத்தங்குத்
துணிக்கும்புத்
தியைச்சங்கித் ...... தறியேனைத்
துணைச்செம்பொற் பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருட்டங்கத்
தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ......
படியாள்வாய்
தருத்தங்கப் பொலத்தண்டத்
தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன்
சமர்க்கெஞ்சிப்
படித்துஞ்சக்
கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
தலத்தும்பர்ப் பதிக்கன்புற்
...... றருள்வோனே
திருக்கஞ்சத் தனைக்கண்டித்
துறக்கங்குட்
டிவிட்டுஞ்சற்
சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே
செயத்துங்கக் கொடைத்துங்கத்
திருத்தங்கித் தரிக்கும்பொற்
றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே.
பாடல் 80 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தான தானனந் தானனந் தானதன
தான
தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை ......
வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங்
காரகுழல்
பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே
மாதர்
கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும்
வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல்
வாச பாசகஞ் சூதுபந்
தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்
...... சந்தமாமோ
தீத தோதகந் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண்
டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ
சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா
தாதை காதிலங் கோதுசிங்
காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி ......
யெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங்
காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே.
பாடல் 81 (திருச்செந்தூர்)
ராகம் - ரஞ்சனி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தனனத்
தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான
புகரப் புங்கப்
பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்
பொருவிற் றஞ்சச்
சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்
திகிரிச்
செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்
திரியப் பொங்கித் திரையற்
றுண்டுட்
டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்
தகரத் தந்தச் சிகரத்
தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக்
கின்பத்
தையளித் தன்புற் ...... றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக்
குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா
பவளத் துங்கப்
புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 82 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தானன தான தந்த தானன தான தந்த
தானன தான தந்த தானன தான தந்த
தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான
பூரண வார கும்ப சீதப
டீர கொங்கை
மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
போதவ மேயி ழந்து போனது
மான மென்ப ...... தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
பாதக
னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ......
மயல்தீரக்
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு
பாவக மாயி ருந்து
காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி
னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ
ணங்கு
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே
ஆர்கலி
யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
ரானவர்
கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா
வாரண மூல மென்ற போதினி
லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி
ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில்
வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த
...... பெருமாளே.
பாடல் 83 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ......
பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ......
தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண்
களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந்
...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண்
டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ்
செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும்
...... பெருமாளே.
பாடல் 84 (திருச்செந்தூர்)
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தந்த
தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மங்கை சிறுவர் தங்கள்
கிளைஞர்
வந்து கதற ...... வுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய ...... விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு ...... மொருபாச
விஞ்சை
விளைவு மன்று னடிமை
வென்றி யடிகள் ...... தொழவாராய்
சிங்க முழுவை
தங்கு மடவி
சென்று மறமி ...... னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர்
புகழு
செந்தி லுறையு ...... முருகோனே
எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு ...... முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று
மிளைய ...... பெருமாளே.
பாடல் 85 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
வண்டு புண்டரி கங்களை யும்பழி
......சிந்துபார்வை
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை
தங்க வண்டர
ளம்பதி யும்பலு
மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர்
கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
கந்த
சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங்
கஞ்ச மண்டுளி னின்றிர
சம்புகு
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை
...... நம்புவேனோ
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
தந்த
னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை
சம்பு வின்கும ரன்புல
வன்பொரு
கந்த னென்றிடு துந்தமி யுந்துவ
சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ......
விஞ்சவேகண்
டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
டன்ற டங்கலும் வெந்துபொ
ரிந்திட
அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே
அம்பு யந்தண
ரம்பைகு றிஞ்சியின்
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
அண்ட ருந்தொழு
செந்திலி லின்புறு ...... தம்பிரானே.
பாடல் 86 (திருச்செந்தூர்)
ராகம் - பேகடா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2
தனத்தந்தந் தனத்தந்தந்
தனத்தந்தந் தனத்தந்தந்
தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா
மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன்
மலர்ச்செங்கண்
கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழித்தின்றிங் குறத்தங்கும்
...... பலவோரும்
எனக்கென்றிங் குனக்கேன்றங்
கினத்தின்கண்
கணக்கென்றென்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங்
கரத்தின்கண் தரித்தெங்குங்
கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்
பனைத்துங்குன் றிடச்சந்தங்
களிக்குஞ்சம்
புவுக்குஞ்செம் ...... பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
சிறுப்பெண்குங் குமக்கும்பந்
திருச்செம்பொன் புயத்தென்றும் ......
புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
பாடல் 87 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதானா
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற ......
நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று ......
வருமாயக்
கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப ......
மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற
...... தியல்போதான்
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி
ளந்த ...... கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ
ருந்த ...... முருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு
கொங்கை ...... புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த ...... பெருமாளே.
பாடல் 88 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தான தானன தந்தன தந்தன
தான
தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய
வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தொறுந
டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல்
வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற
பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும்
நேய மேகவி கொண்டுசொல்
மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ......
ளவர்தாய்மார்
நீலி நாடக மும்பயில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு
தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ
பாயு மாமத
தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்ற பெருங்கதை
பார மேருவி லன்று வரைந்தவ
...... னிளையோனே
பாவை யாள்குற மங்கை செழுந்தன
பார மீதில ணைந்து
முயங்கிய
பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா
சீய மாயுரு
வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்து பசுங்குடர்
சேர வாரிய ணிந்த
நெடும்புயன் ...... மருகோனே
தேனு லாவுக டம்ப மணிந்தகி
ணட சேகர
சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.
பாடல் 89 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன்
கோடு செப்பெனு ...... முலைமாதர்
வாங்காத்திண் டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ்
சாறு மெய்த்திடு ...... மொழியாலே
ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ......
முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ
கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே
தீம்பாற்கும் பாகு
சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள்
...... புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோ து
முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.
பாடல் 90 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தனனாதன தனனந் தாத்த
தனனாதன
தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனு மளகங்
காட்டி
மதிபோலுயர் நுதலுங் காட்டி
முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு
மொழியாகிய மதுரங் காட்டி
விழியாகிய கொடியுங் காட்டி
முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே
வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை
வளையுங் காட்டி ...... யிதமான
மணிசேர்கடி தடமுங் காட்டி
மிகவேதொழி
லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனே
நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலநேயரு ளமர்செந்
தூர்க்கு ...... ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின்
சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே
அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை
முழுதுங் காத்த ...... பெருமாளே.
பாடல் 91 (திருச்செந்தூர்)
ராகம் - செஞ்சுருட்டி; ளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1
1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2)
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான ...... தனதானா
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை
யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில்
மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு
வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற
மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
பாடல் 92 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தனன தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த ...... தனதான
முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த
...... கனிவாயும்
முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு
மின்ப சிங்கி ...... விழிவேலும்
சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர்
பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ
மலைமு கஞ்சு மந்த
புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை ...... வடிவேலா
வளர்பு
னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த ...... புயவேளே
அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே
அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த ......
பெருமாளே.
பாடல் 92 (திருச்செந்தூர்)
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - ஆதி - 2 களை
தாத்தத்
தத்தன தாத்தத் தத்தன
தாத்தத் தத்தன ...... தனதான
மூப்புற்
றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி
முர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி ...... யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச்
செற்றிடு
கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்
கூற்றத் தத்துவ
நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே
காப்புப்
பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் ...... குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர ...... மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர ......
முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர்
...... பெருமாளே.
பாடல் 94 (திருச்செந்தூர்)
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - அங்கதாளம் (9)
தகிட-1
1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தானதன தான தானந்த
தானந்த
தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த ...... தனதான
மூளும்வினை சேர மேல்கொண்டி
டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
முடிநெறி நீதி யேதுஞ்செ
யாவஞ்சி ...... யதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய
ஞேயங்க ளாய்நின்ற
முலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லுடு போயொன்றி வானின்க
ணாமமதி
மீதி லுறுங்க லாஇன்ப ...... அமுதூறல்
நாடியதன் மீது போய்நின்ற அநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற
...... தொருநாளே
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு
காதிமுதிர் வான
மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர்
தாம்வந்து ...... தொழுமாது
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ......
யிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.
பாடல் 95 (திருச்செந்தூர்)
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன ...... தனதான
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவே
குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி
னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ......
வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிண்முளை
உண்டுங்கண் டுஞ்சில
கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்
...... மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை
யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே
சங்கங்கஞ்
சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுநி
தந்தங்குஞ் செந்திலில்
வாழ்வுயர் ...... பெருமாளே.
பாடல் 96 (திருச்செந்தூர்)
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - 2 களை
தந்தத் தனதன
தந்தத் தனதன
தந்தத் தனதன ...... தனதான
வஞ்சத் துடனொரு நெஞ்சிற்
பலநினை
வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்
வந்திப் புதல்வரும்
அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு ...... வகைகூர
அஞ்சக் கலைபடு
பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென ...... வுடன்மேவ
அண்டிப் பயமுற
வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை ...... தரவேணும்
கஞ்சப் பிரமனை
அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு ...... மயில்வீரா
கண்டொத்
தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய ...... திருமார்பா
செஞ்சொற்
புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக ...... ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல ...... பெருமாளே.
பாடல் 9 7 (திருச்செந்தூர்)
ராகம் - சிந்து பைரவி; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ......
தனதான
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை
தங்கு பங்க ...... யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த
ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு
குந்து கண்டி ...... றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த
கந்த ரங்க
லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா
அம்பு
னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு
...... தம்பிரானே.
பாடல் 98 (திருச்செந்தூர்)
ராகம் - காம்போதி / ஸஹானா; தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தனனா தனந்த ...... தனதான
வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகவா சைதொந்த ......
மதுவாகி
இருபோ துநைந்து ...... மெலியாதே
இருதா ளினன்பு ......
தருவாயே
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே சுரன்ற ......
னருள்பாலா
அரிகே சவன்றன் ...... மருகோனே
அலைவா யமர்ந்த ......
பெருமாளே.
பாடல் 99 (திருச்செந்தூர்)
ராகம் - .....; தாளம் -
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி ......
யிளைஞோர்தம்
விரிவான சிந்தை யுருவாி நொந்து
விறல்வேறு சிந்தை
...... வினையாலே
இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று ......
மொழிமாதர்
இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் ......
ஒழியாதோ
மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு ......
விடையேறி
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா
அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
பாடல் 100 (திருச்செந்தூர்)
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தந்தன தான தந்தன தான
தந்தன தான ...... தனதான
விந்ததி னுறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ
ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத ......
மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள் சுவாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் ...... பெருமாளே.
பாடல் 101(திருச்செந்தூர்)
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த ...... அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த ...... பெருமாளே.
பாடல் 101 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.
பாடல் 103 (திருச்செந்தூர்)
ராகம் - ....; தாளம் -
தந்த தானன தானன
தந்த தானன
தானன
தந்த தானன தானன ...... தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய
லோநெடு
வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன்
வெந்து போன புராதன சம்ப
ராரி புராரியை
வென்ற சாயக மோகரு ...... விளையோகண்
தஞ்ச மோயம
தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர் பயோதர ...... மதில்மூழ்கு
சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ
வானவர்
பண்டு போலம ராவதி ...... குடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச
லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே
செஞ்ச டாடவி
மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய
...... பெருமாளே.
பாடல் 104 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
தனதன தத்தா தத்தன ...... தனதான
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா
ரத்தன ...... மவிகார
அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன்
பகலிர விற்போ திற்பணி
பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின்
பழநித
னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ ......
தொருநாளே
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு
புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர துரகமு
கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே
இகல்படு
நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர்
...... மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.
பாடல் 105 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் ...... கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் ...... கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் ...... தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் ...... றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் ...... திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 106 ( பழநி )
ராகம் - .....; தாளம் - ........
தனன தனதனன தந்தத்த
தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன ......
தந்ததான
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென
...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறைஅயனஅ
ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட
விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி
ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த
குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த
தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில
நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ......
துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை
வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ......
தம்பிரானே.
பாடல் 107 ( பழநி )
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் (8) (எடுப்பு 1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதான தந்தனத் ......
தனதான
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ......
குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ......
பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ......
தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப்
...... பெருமாளே.
பாடல் 108 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான
தனத்தத் ...... தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித
கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின்
சுரத விநோதப்
பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத்
தொழிலிடு தோளுக் கேறவ
ரித்திட் ...... டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்
றுயரற வேபொற் பாதமெ னக்குத் ......
தருவாயே
கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக
ளிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் ...... தொடுவோனே
கெருவித
கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளிதெய்வ யானைக்
கேபுய வெற்பைத் ...... தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகைம யிற்பொற் ...... பரியோனே
பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்
பழநியில்
வாழ்பொற் கோமள சத்திப் ...... பெருமாளே.
பாடல் 109 ( பழநி )
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1
1/2 தகதிமி-2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமிதக-3
(எடுப்பு - அதீதம்)
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
அடுத்த பேர்களு
மிதமுறு மகவோடு ...... வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது ......
நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே
எருத்தி
லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ......
ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
பதிக்கொ
ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.
பாடல் 110 ( பழநி )
ராகம் - பெளளி; தாளம் - அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து
...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை
யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி
வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ......
மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ......
வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந
டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 111 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனா தனதத்த தனதனா தனதத்த
தனதனா தனதத்த ...... தனதான
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து ......
விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை
...... வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே
மெழுகொத்த ...... மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனா டகபித்து
ஒழியுமா
றொருமுத்தி ...... தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி
லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா
பறைகள்பே
ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
பாடல் 112 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
ஆதா
ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு ...... மொழியாலே
ஆழ்சீ ரிளநகை
யாலே துடியிடை
யாலே மணமலி ...... குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை ...... யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா
வகையருள் ...... புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா
தெதிருற ...... மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு
...... திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய ......
குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் ...... பெருமாளே.
பாடல் 113 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
...... தனதான
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி
ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை
ஆர வாணைமெ
யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி
...... விதமாகச்
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டும
ருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர்
தாக போகமொ
ழித்துஉனக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி
னைத்திட ...... அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத
ரித்தச டைத்திரு
வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே
மாய
மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய
மற்புய னச்சுதன் ...... மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை
நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண
சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
பாடல் 114 ( பழநி )
ராகம் - மோகனம் / நாட்டைகுறிஞ்சி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ
வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ
லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண
னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ
கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
பாடல் 115 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன ......
தனதனதான
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுத
கேவிக்
கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொடு மெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி
இக்கார்
சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
ிக்கோடு திக்குவரை மட்டோ டி மிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற்
றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
முழ்கிக் கிடந்துமய லாகித்
துளைந்துசில ...... பிணியமுடிச்
சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர்கள் சுற்றியழ
வுற்றார்கள் மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா
திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென
...... எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச்
சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற்
படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தை யின்றுதர ...... இனிவரவேணும்
தித்தா
திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத்த செந்திகுத தீதத்த செந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்
திட்டே
ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக்
கடம்பமலர் ...... அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய ...... மருமகனாகி
வற்றா
மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழவுக் குகந்தடிய ராவிக்குள்
நின்றுலவி ...... வருபெருமாளே.
பாடல் 116 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன
தானான தனதனன ...... தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி
...... லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி
யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ......
வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோ த அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு
மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத
வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய
மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி
திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி
யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.
பாடல் 117 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான
தானதன தந்த ...... தனதான
இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின
பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி
னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல்
பெருகியொரு காசேகொ டாதவரை
யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ......
நிலைகாணாப்
பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி
ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ
கருணையுமை
மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு
காளிமலை மங்கை ...... யருள்பாலா
கருடனுடன் வீறான கேதானம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ......
புரிவோனே
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா
பலமலர்க ளேதூவி யாரணந
வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி
றைஞ்சு ...... பெருமாளே.
பாடல் 118 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் ......
திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக்
...... குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக்
கடிசுற் ...... றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற்
றுழலக் ...... கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத்
திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக்
கிளையைப் ...... பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற்
றறியப் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக்
குமரப் ...... பெருமாளே.
பாடல் 119 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
...... தனதான
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம
கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை
விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி
லென்று மேவிய ...... பெருமாளே.
பாடல் 120 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான
இலகுகனி
மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு ...... மயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து ...... படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த ...... கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த ...... குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே.
பாடல் 121 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனத்தான தனதனன தனத்தான தனதனன
தனத்தான தனதனன ...... தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு
நெகிழ்வதிலை ...... யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவயம
துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல்
அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை ......
வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி
...... மருகோனே
தமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி
வருகுழகர் ...... தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி
மமர்பொருது
செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே
தினைக்காவல்
புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
பாடல் 122 ( பழநி )
ராகம் - ஸெளராஷ்டிரம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதக-3
தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு பாச
தொந்த ...... மதுவான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு
வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ......
மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த
...... பெருமாளே.
பாடல் 123 ( பழநி )
ராகம் - பேகடா; தாளம் - அங்கதாளம் (11)
தகதகிட-2 1/2,
தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தனதனன
தானத் தானத் ...... தனதான
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ......
துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே
பெருபுவி
லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத்
...... தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
விறன்மறவர்
சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
பாடல் 124 ( பழநி )
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (5)
தக திமி-2,
தகிட-1 1/2, தகிட-1 1/2 (திஸ்ர ரூபகம்)
தனதன தனன தான தனதன தனன தான
தனதன தனன தான ...... தனதான
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத
...... பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில்
வீழ்வ ...... ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல ...... மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத ...... மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய
மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ் வதிம
யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருள நாத ...... னருள்பாலா
சுரர்பதி
யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளேழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு ......
பெருமாளே.
பாடல் 125 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
...... தனதான
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ
தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி
நீடு வாச
நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில்
நேச மாகி யணைத்தசி
றுக்கிக ...... ளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி
னிலத்ததி வட்கையி
னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்
கோடு லாவிய முத்துநி ரைத்தவை
காவுர் நாடத னிற்பழ நிப்பதி
கோதி லாதகு
றத்திய ணைத்தருள் ...... பெருமாளே.
பாடல் 126 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ......
பவனுணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத்
தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி
அடலைச்
செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட்
கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம்
அலறப் பணிரத் நமணிக்
குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட்
கடையிற் ...... படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட்
டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ......
பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரக மெய்ப்
பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான
படலத்
துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற்
றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற்
கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற்
பினில்நிற் குமரப் ...... பெருமாளே.
பாடல் 127 ( பழநி )
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஆதி
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின
குடவுதர ...... விபாணத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது
...... துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வரு மரகத
...... மயில்வீரா
மகபதி தருசுதை குறமினொ டிருவரு
மருவு சரசவித
...... மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரகர சரவண ...... பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதி
வரநதி ...... அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி
மலையில்வரு ...... பெருமாளே.
பாடல் 128 ( பழநி )
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகிட-1
1/2, தகதிமி-2
தனன தனத்த தாதத தனன தனத்த தானன
தனன தனத்த தானன
...... தனதான
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன
வெற்பு மேல்மிகு ...... மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு ...... முகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு
...... முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமு ...... மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து
வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய ...... குணமான
இளையவ னுக்கு நீண்முடி
அரசது பெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே
பதினொரு
ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவோடு நிற்கு மீசுர ...... சுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய
...... பெருமாளே.
பாடல் 129 ( பழநி )
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி (திஸ்ர நடை) (12)
தனன தனன
தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய வரவி ...... யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய
வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே
பழன முழவர் கொழுவி
லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே
அரிய மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய
...... பெருமாளே.
பாடல் 130 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத தானன தானன தானன
தனனத தானன தானன தானன
தனனத தானன தானன தானன
...... தனதான
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை
யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை ......
மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக
மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ
ரூபம கேசுர னீடிய ...... தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர்
வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர்
மாதவ னார்திரு ...... மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி
னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.
பாடல் 131 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் ......
பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத்
...... தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித்
தேபொருட் ...... பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதபத் தேபதித் ...... தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச்
சீர்நகைச்
சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே
திரைகடற் கோவெனக்
குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோ டவிட் ...... டிடும்வேலா
பரிமளப்
பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் ...... கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் ......
பெருமாளே.
பாடல் 132 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
கருகி
யகன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று ...... துதிபேசிக்
கலைசுரு
ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு ...... பலநாளும்
விரகுறு சண்ட
வினையுடல் கொண்டு
விதிவழி நின்று ...... தளராதே
விரைகமழ் தொங்கல்
மருவிய துங்க
விதபத மென்று ...... பெறுவேனோ
முருக கடம்ப குறமகள்
பங்க
முறையென அண்டர் ...... முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற ...... வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித
வென்றி ...... மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய
மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 133 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன
தனத்தனா தனதன
...... தனதான
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு
தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் ...... மருளாமே
ஒருப்படுதல்
விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும் விருத்திபெற
அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்து பொருள்
உணர்த்துநா ளடிமையு
...... முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு ...... முருகோனே
பதித்தமர
கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி
...... வயலுரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி
மலைக்குளுறை
திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
பாடல் 134 ( பழநி )
ராகம் - விஜயநாகரி; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
(எடுப்பு - 1/2 தள்ளி)
தனதனன தான தந்த
தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து
...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை
யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள்
மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட
மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ......
வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ
ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
பாடல் 135 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா
...... தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும்
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி
னாரே பாண ...... ரெனமாதர்
இருகண் மாயையி ல்முழ் காதே
யுனது காவிய
நூலா ராய்வே
னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்
அலைவி
லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய்
நீபார் ...... மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ்
கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா
வலபை கேள்வர்பி
னானாய் கானார்
குறவர் மாதும னாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா ......
மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர
வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
பாடல் 136 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
...... தனதான
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு
பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருளைப் படியெனை
யாளவு மேயருள் ...... தரவேணும்
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்முயி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய ......
வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை
காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய
...... சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி
யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே
பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித்
தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ......
பெருமாளே.
பாடல் 137 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத்
தனந்த தந்தன ...... தந்ததான
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு ......
மின்ப்முறிக்
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
மவச மிகுத்துப்
பொருந்தி யின்புறு
கலகம் விளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க்
குறிதரு
வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
கொடிய
மயற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த
னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ......
கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப்
ப்ரசண்டம் விண்டுறு
மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப்
பலதிசை மெச்சத்
தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித் துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற்
றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
பாடல் 138 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர்பக ரக்க
ணாதர் ...... உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது
செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்
தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறு
திருவடி யெனக்கு நேர்வ ......
தொருநாளே
கெலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு
குரகத முகத்தர் சீய ......
முகவீரர்
குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட
வெற்றி வேலை ...... விடுவோனே
பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு ...... மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை
யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
பாடல் 139 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
தனதனன தத்த தந்த ...... தனதான
களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த
கண்கள் ...... குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப
விழந்து
கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ
முழுமதி யெனச்சி றந்த
நகைமுக மினுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி
...... மெலிவேனோ
இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவ
மருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே
குழகென எடுத்து
கந்த உமைமுலை பிடித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா
குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்த
குரவர்மக ளைப்பு ணர்ந்த
...... பெருமாளே.
பாடல் 140 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன
தந்தத் ...... தனதான
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த
சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்பைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச்
சிறுத்த களமிகு
மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள்
பங்கச் ...... சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி
யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா
பருத்த அசுரர்க ளுடன்மலை
துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட
னங்கொட் ...... கதிர்வேலா
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவரிகொ ளும்பொற் ......
றிருபாதா
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.
பாடல் 141 ( பழநி )
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
...... தந்ததான
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு
ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும
கொங்கை யானையை ...... யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும
டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டு துவண்ட வாசையில் ...... நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி
யெம்பி ரானருள் ...... தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு
டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி
கிண்கி ணாரமு ...... முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய
டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி
யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய ......
தம்பிரானே.
பாடல் 142 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
...... தனதான
கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத்
திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்
தனத்தியர்கட்
கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற்
...... றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ
புனத்தின்மலைக்
குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக்
...... குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா
சினத்தெதிர்துட்
டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத்
...... துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக்
கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
பாடல் 143 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
தனனா தனந்தனத் ...... தனதான
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் ......
திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே
யிழந்துவிட் ...... டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் லுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் ...... கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய்
துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ
புனவேடர் தந்தபொற் குறமாது
இன்புறப்
புணர்காதல் கொண்டஅக் ...... கிழவோனே
புனலேழு மங்கவெற்
பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா
தினமேவு
குங்குமப் புயவாச கிண்கிணிச்
சிறுகீத செம்பதத் ...... தருளாளா
சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் ...... பெருமாளே.
பாடல் 144 ( பழநி )
ராகம் - ...; தாளம் -
தான தந்ததனத் தான தந்ததனத்
தான தந்ததனத் ...... தனதான
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் ......
தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத்
...... தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற்
...... கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ
டைந்துலையத் ...... தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் ...... குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
பாடல் 145 ( பழநி )
ராகம் - கெளளை; தாளம் - ஆதி - 2 களை (16)
தனந்த தனதன
தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல
...... கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி
யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த
ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு ......
மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர
விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட
குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ
டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய பெருமாளே.
பாடல் 146 ( பழநி )
ராகம் - கேதார கெளளை; தாளம் - மிஸ்ர சாபு (3 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி
மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு
முளைசளி ...... யுடலுடே
குடிக ளெனபல குடிகை வலிகொடி
குமர வலிதலை
வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி
மருவி
மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு
மலைதனில் ...... மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு
கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர்
பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெரிய கிரிகட லெரிய வுருவிய ......
கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே
பருதி மதிகனல் விழிய
சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ
...... ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
பாடல் 147 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
குழல டவிமுகில்
பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு ...... றுவலாரம்
குழைம கரம்வளை
மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை ...... கிரிசூது
விழிக யலயில்ப கழிவ
ருணிகரு
விளைகு வளைவிட ...... மெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ
றிகள்சொலி
வெறிது ளம்விதன ...... முறலாமோ
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் ...... மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை
தொளைசெய்த ...... கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு
...... கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் ......
பெருமாளே.
பாடல் 148 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குழல்கள்
சரிய மொழிகள் பதற விழிகளுலவ
கொலைகள் செயவெ ...... களவோடே
குலவு
கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி ...... னொலிமீற
இளநி
ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய ...... மயில்போல
இனிய
அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் ...... அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி ...... யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ ...... முடையோனே
பழன
வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு ...... பெருமாளே.
பாடல் 149 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
...... தனதான
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத்
திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே
பொறித்ததனத்
தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித்
...... திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப்
ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக்
கழுக்கள்புகத் ...... திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத்
தருட்கருணைப் ...... பெருவாழ்வே
திகழ்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
பாடல் 150 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன ...... தனதான
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத
மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக
வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை
புரிபவர் ...... விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தந்
பொருளுள
தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன்
புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ்
சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந்
தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ......
மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ......
யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி
வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை
...... புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ்
சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி
னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர
விடுகவி புகல்தரு ...... திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன்
முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு
சிவகிரி மருவிய ...... பெருமாளே.
பாடல் 151 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா
தனனா ...... தனதான
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத்
தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்
திந்தித் திமிதிமி
திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப் படிபயில் நடமா டியபா
...... விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு
மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே
விஞ்சைக் குடையவர்
தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே
...... லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட்
கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமகள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
பாடல் 152 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன
தத்தம் ...... தனதான
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன
வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு
கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை
சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் ......
பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோ து கின்றதி ருப்புகழ்
நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே
தால முன்புப டைத்தப்ர
புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந்
...... தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட
யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா
ஆல
முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத
கப்பனு கக்குங் ...... குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினை னிற்கும் ......
பெருமாளே.
பாடல் 153 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
...... தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி
வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல
மிடவளைகள் ...... கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக
போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார்
காதல் புரியுமநு போக
நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது
...... மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர
வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே
நாடி
யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம்
வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக ......
மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி
புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.
பாடல் 154 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற்
பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான
தனதுத்திப்
படிகப் பொற்பிற்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற்
பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப்
பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற்
சுழலர்ச்சக்
கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக்
கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ
திகுடத்திக் குகுடட்
டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத்
தகுடத் தட்டுட் ...... டிடிபேரி
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக்
கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர் பொற்புச் சொரியக்
கைத்தொட் ...... டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட்
டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக்
கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் ......
தருள்வோனே
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற்
பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்ுப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
பாடல் 155 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன
தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக் மாலைமு டித்துப் பண்புள ......
தெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச்
சிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர்
வந்தவ
ராரென ழைத்துக் கொங்கையை
யன்பூற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடி
னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ......
மருள்வாயே
இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட்
டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி
இன்கன தேரைந டத்திச்
செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத்
தன்திரு ...... மருகோனே
சந்திர சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில்
வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா
சம்ப்ரப மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.
பாடல் 156 ( பழநி )
ராகம் - ஜோன்புரி / சங்கராபரணம்; தாளம் - கண்டசாபு (2 1/2)
தக-1, தகிட-1 1/2 (எடுப்பு 1/2 தள்ளி)
தனனா தனந்ததன தனனா தனந்ததன
தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய்
...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி
ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ
லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின்
மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி
னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
பாடல் 157 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன
தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான
சிறுபறையு முரசுதுடி சத்தக்
கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு
நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை
கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே
மறைமுறையி
னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே
வருதுரக
மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே
நறையிதழி யறுகுபல
புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற
அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி
நவநதிகள் குமுகுமென
வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள்
உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே
குறவர்முனை கெடமனது
வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா
குறுமுநிவ
னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத்
தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே.
பாடல் 158 ( பழநி )
ராகம் - வலஜி; தாளம் - ஆதி (4 களை) (32)
தகிட-1 1/2, தக-1,
தகிட-1 1/2
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிர
மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு
காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடந ரம்பு தானிவைபொ திந்து ......
நிலைகாணா
ஆயுதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி
டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி
யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை
யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது
மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண
இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு
ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ......
பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
பாடல் 159 ( பழநி )
ராகம் - ஹம்ஸநாதம்; தாளம் - ஆதி
தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை
புரிகபடி ...... பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை
சிறிதுமிலி ...... எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள
னறிவிலியு ...... னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும்
வகைமையருள் ...... புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை
யுளமவுலி ...... புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி
யெனவுடைய ...... முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு
மொருபெருமை ...... யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.
பாடல் 160 ( பழநி )
ராகம் - நாட்டகுறிஞ்சி; தாளம் - சதுஸ்ர த்ருவம்
( எடுப்பு
/4/4/40 ), கண்டநடை (35)
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த
தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே
துரியநிலை
யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக
மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி
பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே
கலகமிட
வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட
சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ
தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த
போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய
மாகவரு ...... குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே
பணியுமடி
யார்சிந்தை மெய்ப்பொரு தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
பாடல் 161 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி
ளங்கு ...... மதனுலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து
மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ
னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த ......
அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து
...... பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி
ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத
கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
பாடல் 162 ( பழநி )
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2
தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன
தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி ......
யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட
...... அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்
னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள்
பொடிய நீல
காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண
வேலம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
பாடல் 163 ( பழநி )
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
...... தனதான
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித
விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே
தனயர்
அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின்
முழுகியெ யிடர்படு ...... துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன ......
திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு
பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் ......
மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன்
முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே
பகர
புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர
இமகிரி தருமயில் ...... புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் ......
பெருமாளே.
பாடல் 164 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் ...... பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் ...... கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் ...... றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் ...... திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் ...... குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 165 ( பழநி )
ராகம் - ஹமீர் கல்யாணி; தாளம் - ஆதி (12)
தனன தனன தனன
தனன
தனன தனன ...... தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல
விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி
...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ......
மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு
நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.
பாடல் 166 ( பழநி )
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - சதுஸ்ர த்ருவம்
எடுப்பு
/4/4/40, கண்டநடை (35)
தனதனன தத்தான தானான தானதன
தனதனன தத்தான
தானான தானதன
தனதனன தத்தான தானான தானதன ...... தனதான
தலைவலி
மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு
விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வய துக்கேது தாணர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவறவி
ருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடியி
னிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு
பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார
மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி
துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது
பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை
குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள்
துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் ......
பெருமாளே.
பாடல் 167 ( பழநி )
ராகம் - பந்துவராளி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான
செயலிலிமெய்த்
தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற்
கியல்பிலிநற் ...... றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ......
பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே
படர்சடையிற்
புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ......
பெருமாளே.
பாடல் 168 ( பழநி )
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர ஏகம் (3) (எடுப்பு - 1/2 இடம்)
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள
தருளி யெனையு மனதோ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர்
தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர
அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன்
...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ......
பெருமாளே.
பாடல் 169 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன
தானான தானதன ...... தனதான
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ......
துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாணரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன்
ஆகமுற வேநகம
தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத
னீதியிலி ...... யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லர்முட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள்
...... தருவாயே
மாகமுக டோ டகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில்
வாருமென வேயொருவர்
நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு
மாமாய னாரினிய ...... மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ......
துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை
சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.
பாடல் 170 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
...... தனதான
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத
தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம
...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ
குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர
நாடாளு நாயக ...... வயலுரா
ஆத ரம்பயி லர்ருரர் தோழமை
சேர்தல்
கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி
வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 171 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு
வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க
நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று
வேறொரு ...... நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை
நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது
சிறியகர பங்க யத்து
நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள்
...... கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த
நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மல்ருபம்
வரவரம னந்தி கைத்த
பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ ......
பெருமாளே.
பாடல் 172 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன
தனத்த தானன ...... தனதான
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர்
...... மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி
விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமே
உச்சித மெய்ப்புற
அனைத்து யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை
யெனக்கு நீதர ...... வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண ......
னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த
வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும்
நற்றவ
ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன்
மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ......
பெருமாளே.
பாடல் 173 ( பழநி )
ராகம் - வஸந்தா; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமிதக-3,
தகிட-1 1/2, தகதிமி-2
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
தனனத்தன
தான தந்தன ...... தனதான
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி
யங்களை ......யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய்
மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே
சகரக்கடல் சூழ மம்புவி
மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக
வந்தருள் ...... புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை
யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே
நுதிவைத்தக
ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் ......
மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய
பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
பாடல் 174 ( பழநி )
ராகம் - ஹுஸேனி; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1
தந்த தானனந் தானதன
தானதன
தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லுடுநுழை ......
பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன்
தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி
யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை
யாடஅருள் ...... புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க
வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ......
முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா
கொஞ்சு மாசுகம்
போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம்
பாவையவல் தீரவர ...... அணைவோனே
கொண்டல் சூழமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர
...... பெருமாளே.
பாடல் 175 ( பழநி )
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2,
தகிட-1 1/2, தக-1,
தகிட-1 1/2, தகதிமி-2
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த
தானன ...... தனதான
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி
சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக
சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் ......
வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய
னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான
நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை
வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
பாடல் 176 ( பழநி )
ராகம் - சாருகேசி ; தாளம் - ஆதி - 2 களை
தனனத் தனதன
தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக் கணிதுகி லெனவள
ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்
...... சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத்
தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனமுவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக் ...... குருநாதா
எதிருற் றசுரர்கள்
படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்
...... கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட்
டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா
படியிற் பெருமித
தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு
ளும்பொற் ...... பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத்
தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
பாடல் 177 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் ...... திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் ...... டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் ...... கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் ......
புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் ......
கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் ......
பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் ......
புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் ......
பெருமாளே.
பாடல் 178 ( பழநி )
ராகம் -....; தாளம் -
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
...... தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித
கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான
பிறையதோ
வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம்
விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த
பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ......
மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட
மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமரர்புரி கின்ற கூரிய ......
வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை
யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு
வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியே
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன்
...... மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு
லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.
பாடல் 179 ( பழநி )
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் (8)
தகிட-1 1/2,
தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
...... தனதான
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா
நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே
நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி
சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானாடு
சேர்தர ...... அருள்வோனே
பாதி சந்தர னேசூடும் வேணியர்
சூல சங்கர
னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர் ...... கயிலாயர்
ஆதி
சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி
...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ
யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 180 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த ......
தனதான
மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள்
விலைமாதர் தங்கள் ...... மனைதேடி
எஞ்சிமன முழலாம லுன்றன்
அன்புடைமை
மிகவே வழங்கி
என்றனையு மினிதாள இன்று ...... வரவேணும்
விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மேவு மெந்தை ...... புதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா
யணைந்த ...... முருகோனே
சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனைசெய்
சரணார விந்த
செந்தமிழ் லுனையே வணங்கு ...... குருநாதர்
தென்றல்வரை
முநிநாத ரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த ......
பெருமாளே.
பாடல் 181 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த ...... தனதான
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து
முன்பெய் ...... வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு
பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று ......
பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி
டுங்கு ரங்கை ...... நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச
கங்கள்
செறிவுடன் றிந்து வென்ற ...... பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி
றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த
...... பெருமாளே.
பாடல் 182 ( பழநி )
ராகம் - கேதாரகெளளை; தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு
1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை யேது
மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள்
தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக
மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று
னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை
வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த
மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 183 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத்
தனத்த தானன ...... தனதான
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக
...... மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக்
குடத்தி லேமிக
வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே
நிதமிய லுந்தர்க்
குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ......
மதிகேடாய்
அலையநி னைந்துற் பநத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி
லேவர
அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ
அசடனை வஞ்சச்
சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்கணாடிய
மலர்கொடு நின்பொற் பதத்தை
யேதொழ ...... அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ
லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.
பாடல் 184 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத்
தனந்த தந்தன ...... தந்ததான
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய
...... ரங்கமீதே
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை
செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக்
கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற்
றிரங்கு மன்பொத ...... ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ......
மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே
பகலிர வற்றிட்
டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச்
செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ
ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்
...... தம்பிரானே.
பாடல் 185 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார ......
மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது
மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக
மெழவாகி ...... மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான ...... மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய
மயிலேறி
வருபவனிரு கரதீர ...... முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு ...... மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
பாடல் 186 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனன தனன தனத்த தனன தனன தனத்த
தனன தனன தனத்த ...... தனதான
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள்
கயத்தி ...... னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப
முலைக்கு
வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய
மனதை யுடைய அசட்டு
மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே
சதுரன்
வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த ...... தகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன்
...... மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர்
சிறையை விடுத்து ...... வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
பாடல் 187 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத்
தத்தன ...... தனதான
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
முற்பக்கத் திற்பொற் புற்றிட ......
நுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத்
தித்திக்கச் சொற்சொற்
றுப்பிதழ்
நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக் கக்கச் சுப்பெறு
...... தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத்
தொட்டுயிர்
சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே
வித்தைக்குக்
கர்த்ருத் தற்பர
முக்கட்சித் தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக்
கத்திகை ...... புனைவோனே
நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக்
குக்குட் பட்டவர்
நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.
பாடல் 188 ( பழநி )
ராகம் - பேஹாக்; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தானந்தன
தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ
டாடிய ...... முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய
வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ
...... மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே
சூலங்கலை மான்மழு
வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு ......
முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி
மேவிய ...... பெருமாளே.
பாடல் 189 ( பழநி )
ராகம் - சுப பந்துவராளி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான
மூல
மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான
மிங்கிலை ...... மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத
முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத
கோல முங்குண
வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட
...... நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி
ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே
பீலி வெந்துய
ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு
...... ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர
வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வேன்றிடு ...... முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி
வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
பாடல் 190 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ ......
அநுராகம்
முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு
...... துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ
இருகயல்கள் ...... குழையேற
அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை ...... மறவேனே
நிருதனொடு வருபுரியு மடுகரியும்
ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு
பரகுமர
நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே
வருமருவி நவமணிகள்
மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு ......
பெருமாளே.
பாடல் 191 ( பழநி )
ராகம் - .....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
...... தனதான
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென
இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை
முளரி
மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென
முகமெழில் மதியென ...... மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை ......
யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே
அரவ மலிகடல் விடமமு
துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ ......
னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர்
சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு
குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு
...... முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய
மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 192 ( பழநி )
ராகம் - ரஞ்சனி ; தாளம் - அங்கதாளம் (7)
(சதுஸ்ர ஜம்பை) /40
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3
தனதனன தாத்த ...... தனதான
வசன மிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வோலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
பாடல் 193 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான
தந்தன ...... தனதான
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர்
தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள்
கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ
கஞ்சன்வி டுஞ்சக டாசு
ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு
...... முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய
நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென
வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ......
பெருமாளே.
பாடல் 194 ( பழநி )
ராகம் - ராமப்ரியா; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா
திகளால் ...... நவலோக
மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத
பரதே
வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே.
பாடல் 195 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள
லைந்து ...... புவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள்
வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்ு ...... பொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற ......
னருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித
ழூற லுண்ட ...... புலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த ...... வடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி
சண்டி
பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று
அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
பாடல் 196 ( பழநி )
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - 2 களை
தானந் தத்தன
தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்தமி லாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணுறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்
சூழ்துன்
சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலே மாயைசெய்
சோரம் பொய்க்குடி
லேசுக மாமென ...... இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுக லாயுல
கேழும்
பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ......
மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர்
காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம
காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய ......
பெருமாளே.
பாடல் 197 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
...... தனதான
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார
மாரொளி
வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மோலான வாயித ...... ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர
னாடாள வேயயில் ...... விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த
ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே
ஆர
ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி
...... விடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது
மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
பாடல் 198 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
...... தனதான
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு
ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக
விரிகு
ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி
விரக மொங்கிய மாமுலை
யாலெதி ...... ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர்
வீதியி லேவர
எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே
எனது சிந்தையும்
வாடிவி டாவகை
அருள்பு ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலெனை யாள்வது
...... மொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ
வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா
மதுர இன்சொலி
மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி
...... சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு
மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா
பருதி
யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி
மீதினில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 199 ( பழநி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
தனதனன தனன தந்த ...... தனதான
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க
...... அதிமோக
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால்
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய
வுருகு மந்த
இருளகல வுனது தண்டை ...... யணிபாதம்
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது
னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய்
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகினொடு தழுவு கொண்டல்
...... மருகோனே
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட
...... வடிவேலா
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும்
பரமரரு ளியக டம்ப முருகஅறு
முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 200 ( பழநி )
ராகம் - வராளி; தாளம் - மிஸ்ர சாபு (3 1/2)
தகிட-1 1/2,
தகதிமி-2
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான
வேயி
சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத
கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ
மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ
லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய
...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ
ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி
லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் ......
மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி
பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி ......
யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.
பாடல் 201 ( சுவாமி மலை )
ராகம் - ஜோன்புரி; தாளம் - அங்கதாளம் (18)
தகிடதக-2
1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தகதிமிதக-3
தனாதன தனாதன
தனாதன தனாதன
தனாதனன தானந் ...... தனதானா
அவாமரு வினாவசு
தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக
ரவாதையு றுதேரேக திநாடும
றிவாகியுள மால்கொண் டதனாலே
சிவாயவெ
னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பாடல் 202 ( சுவாமி மலை )
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானன தானதன தந்த தானன
தானதன தந்த தானன ...... தனதான
ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலன
ஆரமுது கண்டு தேனென
...... இத்ழுறல்
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
ஆனையுர
மெங்கு மோதிட ...... அபிராம
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து
கீடமில்
மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன்
வாரிஜப தங்கள் நாயடி
யேன்முடிபு னைந்து போதக
வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
ஈடழிய வென்று வானவர் ......
குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
ராசதம றிந்த கோமள ......
வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
தோளுடைய
கந்த னேவய ...... லியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி
சூழ்தரு
ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.
பாடல் 202 ( சுவாமி மலை )
ராகம் - நாட்டகுறிஞ்சி ; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தனதனத் தான
தனதன
தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன ...... தந்ததான
ஆனாத பிருதிவிப் பாச
நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய ......
டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத
பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார
விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம
...... சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற்
சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய
நாலாறு மணிமுடிப்
பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக
...... டம்பவேலா
கானாளு மெயனர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ்கருத்
தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ணதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
பாடல் 204 ( சுவாமி மலை )
ராகம் - ....; தாளம் -
தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் ......
விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும்
...... இளைஞோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை
கூறும் ...... மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி
ஞானந் ...... தருவாயே
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்
குடாவியிட வேலங் ...... கெறிவோனே
துராலுமிக தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள்
சேருஞ்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பாடல் 205 ( சுவாமி மலை )
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த
தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக ...... மல்முட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு ......
மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத
...... மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை
சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு
மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை
...... யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை
விளங்கு தேவர் ...... பெருமாளே.
பாடல் 205 ( சுவாமி மலை )
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த
தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக ...... மல்முட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு ......
மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத
...... மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை
சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு
மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை
...... யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை
விளங்கு தேவர் ...... பெருமாளே.
பாடல் 207 ( சுவாமி மலை )
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2
1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன
தான தந்தனம் ...... தனதான
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி
முன்செய்வஞ் ...... சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந்
...... திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
செவியிணையி
னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென்
கருணைபொழி கமலுமுக மாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு
ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத
சிவயநம நமசிவய கார
ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவின் மகிழெனது
தாய்ப யந்திடும் ...... புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ......
திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக
லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.
பாடல் 208 ( சுவாமி மலை )
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர்ருபகம் (5)
தனாதனன தானம்
தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
கடாவினிடை வீரங்
கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்
கடாவிவிடு தூதன்
கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்
இடாதுபல
தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் ...... படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட
னாடும்
வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர்
வாழ்வும்
விநாசமுற வேலங் ...... கெறிவோனே
தொடாதுநெடு தூரந்
தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்
சுபானமுறு ஞானந்
தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பாடல் 209 ( சுவாமி மலை )
ராகம் - கமாஸ், தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா
தனத்த தந்த ...... தனதான
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த ...... தெடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட ......
கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான
துற்று கந்து ...... பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு
கந்து
மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு
வப்ப என்று
னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே
அடியேனு ரைத்த
புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து ...... வரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க ......
ணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த
...... பெருமாளே.
பாடல் 210 ( சுவாமி மலை )
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தான தனதனன தந்த தான
தனதனன தந்த தான ...... தனதான
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய
...... மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந
டந்து தேயும் ...... வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து
கூடு
மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே
இசையொடுபு கழந்த போது
நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை ......
மல்ருடே
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
மதிநிழலி டுஞ்சு
வாமி ...... மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே
அடைவொடுல கங்கள் யாவு
முதவிநிலை கண்ட பாவை
அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.
பாடல் 211 ( சுவாமி மலை )
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - அங்கதாளம்
தகதகிட-2 1/2,
தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் தனதான
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச
னங்க ளால்மறித் ...... தனலுதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு
சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக்
குறைவறந