"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடல்கள் ( 1 - 330 ) > பாடல்கள் (331-670) > பாடல்கள் (671- 1000) > பாடல்கள் ( 1001- 1326 )
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
இரண்டாம் பாகம், பாடல்கள் (331-670)
Acknowledgements:
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (http://www.kaumaram.com/)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding.
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
� Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாடல் 331 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ..........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் ...... தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் ...... பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக்
கொக்கைத்
துட்கத் திட்கப் ...... பொரும்வேலா
சுத்தப் பத்திச்
சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே
கற்றைப்
பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் ...... களைவோனே
கற்புச்
சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பாடல் 332 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ...........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் ...... டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் ...... துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் ...... பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற்
கொக்கைக்
கைத்தச் சத்திப் ...... படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பாடல் 333 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் -
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் ...... தனதான
கொக்குக் கொக்கத் தலையிற்
பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக்
குக்கிக் கக்கிக்
கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச்
சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச்
சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ
அக்கிட்
டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் ......
பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட்
டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக்
கச்சிக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 334 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத்
...... தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் ...... கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் ...... பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் ...... றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் ...... தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் ......
பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக்
...... கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத்
தையொழித் ...... திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் ...... பெருமாளே.
பாடல் 335 ( காஞ்சீபுரம் )
ராகம் - பஹுதாரி; தாளம் - திஸ்ர ரூபகம் (5)
(எடுப்பு - /3 0)
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
த்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத்
தத்துக் ...... குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற்
சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப்
...... பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச்
செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப் ......
பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட்
சொக்கப் ...... பெருமாளே.
பாடல் 336 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ......
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
தனனத்தத் தனனத்தத் ...... தனதான
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற்
பலநச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப்
புளுகிச்சொற் பலகற்பித்
திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே
சுருதிப்பொற்
பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
தொழுசெச்சைக் கழல்பற்றிப் ......
பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத்
திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப்
...... பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.
பாடல் 337 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ........
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத்
தனதன ...... தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் ......
மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு ......
மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல ......
இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது
...... தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி
...... லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல
...... கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய
...... திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித்
துணிசெய்த ...... பெருமாளே.
பாடல் 338 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ........
தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன
தானாந்தன ...... தனதான
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி
டாய்போம்படி
கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்
தெமதுயிர்
நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக
வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய ...... மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர
ஏகாம்பர
அதுலன நீலாம்பர ...... மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை
யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே
விமலகி
ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ
விரிகடல் தநமுண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய ......
பெருமாளே.
பாடல் 339 ( காஞ்சீபுரம் )
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் (15 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் ...... தனதான
கரும மானபி றப்பற வொருகதி
காணா
தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா
வர்க்கக் ...... கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக்
...... கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் ......
புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்
குலவு தோர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் ...... பெருமாளே.
பாடல் 340 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ........
தனதன தத்தத் தாந்த தானன
தனதன
தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான
கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ......
பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த
ஆலிலை
கனதன பொற்பிட் டோ ங்கு மார்பொடு ...... வடமாடச்
சலசல சச்சச்
சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த
வாள்விழி ...... சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி
லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி
திரிபுவ னத்தைக்
காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப
வீஅமை ...... யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு
குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.
பாடல் 341 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - .....
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா
...... தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் ...... செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் ...... புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ...... எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் ...... கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் ...... குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் ...... பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் ...... தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பாடல் 342 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ......
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்
கோலக்
கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித்
...... திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா
மாணிக்
கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ
கச்சிப் ...... பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ......
பெருமாளே.
பாடல் 343 ( காஞ்சீபுரம் )
ராகம் - தர்பர்; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான
தத்தனத் ...... தனதான
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி
சேர அற்புதக் கோல
மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக்
...... கறியாமற்
பாசம் விட்டுவிட் டோ டி போனதுப்
போது மிப்படிக்
காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப்
பார
டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை
யேதரித் ...... தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை
வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ......
தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா
காசி முத்தமிழ்க்
கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மைக்
காடு பொற்கிரிக் காழி
யாருர்பொற் ...... புலிவ்ளுர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச
முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.
பாடல் 344 ( காஞ்சீபுரம் )
ராகம் - கானடா; தாளம் - ஆதி
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த
...... தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
நத்திரைவ ழங்கு ...... கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து ...... மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச ...... லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு ...... முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த ...... கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த ......
கதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த ......
பெருமாளே.
பாடல் 345 ( காஞ்சீபுரம் )
ராகம் - சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி- 3 1/2
தனன
தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
படிறொ ழுக்கமு மடம
னத்துள
படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி கட்குள மகழ
மெய்ப்பொருள்
பலகொ டுத்தற ...... உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை
சுட்டிய
விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு
விட்டிரு
வினைய றப்பத ...... மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய ...... பெருமாளே.
பாடல் 346 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ........
தனனத்தத் தானத் தானன
தனனத்தத்
தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தந்ததான
மகுடக்கொப் பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய
மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
யிதழிற்சொற் சாதிப் பாரியல்
மதனச்சொற்
பாடுக் கோகில ...... ரம்பைமாதர்
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை
பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
மிதயச்சுத் தீனச் சோலிகள்
பலரெச்சிற்
காசைக் காரிகள் ...... சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித்
தீதித் தோதிமி
தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலையிற்றிட்
டாடப் போர்புரி ...... கின்றவேலா
திகிரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை
சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.
பாடல் 347 ( காஞ்சீபுரம் )
ராகம் - லதாங்கி ; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன ...... தனதான
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவோ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற்
போதுப கீரதி ...... மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப்
பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெருபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப்
பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 348 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - .......
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த
...... தனதான
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற ...... மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற ...... நுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை ...... வளையாலும்
அறிவே யழிந்து அயர்வாகி நைந்து
அடியேன் மயங்கி ...... விடலாமோ
மயிலேறி யன்று நொடி போதி லண்டம்
வலமாக வந்த ...... குமரேசா
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
மலைமாது தந்த ...... முருகேசா
நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவே நிறைந்த ...... மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 349 ( காஞ்சீபுரம் )
பாடல் 349 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ......
தத்த
தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த ...... தனதான
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் ......
வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர்
...... நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட
முற்ற கூட்டர் ...... விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த
நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ
தித்தி மித்தி
மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்து
...... விடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர்
பித்தர் கூத்தர் ...... குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி
வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.
பாடல் 350 ( காஞ்சீபுரம் )
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி - 2 களை
(எடுப்பு 1/4 இடம்)
தந்த
தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் ...... தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் ...... திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் ...... றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு
மன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில்
கொண்டொரு
வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்
வென்ற பார்த்திப
பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா
கம்ப
ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் ...... தவறாதே
கம்பை
யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பாடல் 351 ( காஞ்சீபுரம் )
ராகம் - .....; தாளம் - ..........
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன
தானன தானன
தாந்தத்தன தானன தானன ...... தனதானா
வாய்ந்தப்பிடை நீடு குலாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லுர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ
ரானபொ
லாய்ந்துப்பாணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி போகினு மோர்மொழி
...... மறவேனே
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி
லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே
தாந்தக்கிட தாகிட
தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு
மான்முரு காவொரு ...... பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 352 ( காஞ்சீபுரம் )
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2,
தகிட-1 1/2
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
தனதனாத் தந்த தந்த ...... தனதான
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க்
கத்தர் நன்றி ...... யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு
கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச்
சிறிதுகூட்
டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து
...... அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன்
வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ
...... லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட்
டித்தி ரிந்த ...... தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு
ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 353 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - ........
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன
தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன ...... தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ......
நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ
ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம
ருட்கொடுக்கவு ...... மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன்
முக்கண்விக்ரம ...... கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்த சடானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை
யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா
துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு
தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.
பாடல் 354 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - .......
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை
மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா
அன்புட னாவிற்
பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை
வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச்சேர்வையில்
மங்கியெ யேழைப்
பாவியெ ...... னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி ...... யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி
வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா
செம்பவ
ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண ......
மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை
...... பெருமாளே.
பாடல் 355 ( திருவானைக்கா )
ராகம் - பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ரநடை) (6)
எடுப்பு - அதீதம்
தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான ...... தனதான
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைதலந வாயு வோடாத ......
வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி
யாகாமல் ...... மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக
நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த
நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர ......
வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய
...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த
சாமி யேதேவர் ...... பெருமாளே.
பாடல் 356 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - .....
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத்
...... தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் ...... துறவோரை
ஆசைமட லுர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் ...... தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் ...... கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் ...... புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் ...... பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் ...... சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் ...... புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
பாடல் 357 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - ..........
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன
தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள்
சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர்
...... தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய
ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய்
மேலி ளைப்புமு
சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி
திப்படி ...... யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு
ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற
லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ......
குடனாட
ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு
ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே
ஏழி
சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி
ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
பாடல் 358 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - ........
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பாரி லொப்பார்கள் ...... கண்டிலேன்யான்
குரைக்கான வித்யா கவிப்பூ
பருக்கே
குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா
திபொற்று செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்
அனற்கே புனற்கேவ ......
ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ
...... மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யான
முற்றோர்சி ...... லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
பாடல் 359 ( திருவானைக்கா )
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகிட-1
1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த
தந்தன
தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல மறைக ளறைகின்ற
வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும்
புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு
முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ......
னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ......
களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை
புனையும் ரணரங்க புங்கவ ...... வயலுரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ......
த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
பாடல் 360 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - .........
தனதனதன தானத் தானன
தனதனதன தானத்
தானன
தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக்
காரிகள் ...... மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக்
காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண
வாளக் கோலமு ...... முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு
வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா
அரவணைதனி
லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக்
காணவும் ...... அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.
பாடல் 361 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - .....
தானத் தான தான தனதன
தானத் தான தான
தனதன
தானத் தான தான தனதன ...... தனதான
காவிப் பூவை யேவை
யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன ......
இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மப மிவை ...... சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான
ஞான நெறிதனை ...... யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார
பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ
கூவிக் கோழி வாழி
யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் ......
விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக்
கால மாக அமர்செய்த ...... வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத்
தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே
ஆசைத்
தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய
...... பெருமாளே.
பாடல் 362 ( திருவானைக்கா )
ராகம் - ரஞ்சனி; தாளம் - அங்கதாளம் (8) (புத்தகத்தில் -6 ??)
தகதிமி-2,
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானந்த தான தந்தன
தனதன
தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதிபு லாலென்பு தொன
ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை
யென்பன ...... பொதிகாயக்
குடிலிடை யோந்து னேரைம்புல
அடவியி
லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு
நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான
அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்க லாவி
யின்புற ...... வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி
கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம்
வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
பாடல் 363 ( திருவானைக்கா )
ராகம் - சுத்த ஸாவேரி; தாளம் - அங்கதாளம் (6)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகதிமிதக-3
தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச்
சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத்
...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ......
பெருமாளே.
பாடல் 364 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - ......
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன
தானான தானன
தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான
நிறைந்த துப்பிதழ்
தேனுறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜநமுத
நேரென ...... நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு
நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை
யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய
வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய ......
மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி
யோராத தேதுசொல்
மானங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப
டிக்குரை யாய்பார் பலாகவ ...... மென்றுபேசி
அறந்த ழைத்துநு மானோடு
மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ......
மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா
யுதாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 365 ( திருவானைக்கா )
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3
1/2
(எடுப்பு -1/2 இடம்)
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு
...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி
வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை
யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது
போங்க பாடனை ...... மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ......
மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை
களிமயில் சிவனுடன்
வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி
...... யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு
னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ
மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 366 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - ......
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன
தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
வேலைப் போல்விழி யிட்டும
ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர
மட்டைகள் ...... முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத்
தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ......
களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயல
ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ
லைப்பட ...... லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித்
யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ணசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே
ஆலைச் சாறுகொ
தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய
செய்ப்பதி ...... யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு
...... பெருமாளே.
பாடல் 367 ( திருவானைக்கா )
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குமர குருபர குணதர
நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி
குமரி சுதபகி ரதிசுத சுரபதி ......
குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை
யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய
கலவி யளறிடை துவளுறும் வெளிறனை
...... யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர
வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
தமர
மிகுதிரை யெறிவளை கடல்குடல்
மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
சமுக முககண
பணபணி பதிநெடு ...... வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
கனக
கிரிதிரி தரவெகு கரமலர்
தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன்
அளவு
நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை யறிவது பொருளென அருளிய ......
பெருமாளே.
பாடல் 368 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .......
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன
தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
அருவ மிடையென வருபவர்
துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு
...... மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய
கலவியு மலமல ...... முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு
மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர
சரணமு மவுனமு ...... மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென ......
மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி
தெருவு நகரியு
நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல்
நகைகொடு ......முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும
அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.
பாடல் 369 ( திருவருணை )
ராகம் - ஹம்ஸா நந்தி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
...... தனதான
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம
றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக்
கலக
லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை
விழிபுனல் வரமொழி ...... குழறாவன்
புருகி யுனதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள
...... றதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை
யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே
தருண சததள
பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி
...... ரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய
பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி
அருண ரவியினு மழகிய
ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி ......
புயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.
பாடல் 370 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .......
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன
தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
துகிலு ம்ருகமத பரிமள
அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை
துவள மனிதரு மமரரு முநிவரு ......
முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல்
பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட
மறுகு தொறுமுல வியினிய கலவியை ......
விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின
நெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே
முகிலு
மதியமும் ரவியெழு புரவியு
நெடிய குலைமிட றிடறமு துககன
முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதிள்களு
முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே
அகிலு மருதமு
முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு
மபரி மிதமத கரிகளு
மரிகளு ...... முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை
முநிதரு புனிதையை
அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.
பாடல் 371 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
மகர மெறிகடல்
விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும்
வளமை யினுமுக நிலவினு மிலவினு ......
நிற்முசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு
நிலையினும்
வனச பரிபுர மலரினு முரினு ...... மவர்நாமம்
பகரு
கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு
பகடி
யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய
பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல
கனக கனகுவ டடியொடு
முறிபட ...... முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர்
பொடிபட நடவிய
கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே
தகன
கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள
சயன வனசரர் கதிபெற முனிபெறு
...... புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத
தனகிரி
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.
பாடல் 372 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன
தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலை யிகல்பொரு
முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ......
யென்முவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை
மொழிதனை
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப்
பகலு
மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
பழுது மறஅவர்
பரிவுற இதமது ...... பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யென அருள் ......
பகர்வாயே
புகல வரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப்
புரமு மெரியெழ
நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
புடவி வழிபட புதை
பொருள் விரகொடு ...... புகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில
மொழிதரு புலவரு முலகினி
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ
அருணை
நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.
பாடல் 373 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ...........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல்
சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர் ......
முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ
ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம்
மருவி
யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி
நிலைமையில் கபடியர் ...... வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது
கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி
...... மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு
சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது
பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
பாடல் 374 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
விடமு மமுதமு
மிளிர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென
விரைசெய் ம்ருகமத அளகமு
முகிலல ...... வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித்
தடமு மடுவல படுகுழி
யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை
சயில மலகொலை யமனென முலைமிசை ......
புரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு
சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே
அடவி வனிதையர்
தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட
அசல மிசைவிளை புனமதி லினிதுறை
...... தனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத
வளகர
அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங்
கடக புளகித
புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும்
...... எரிதீயுங்
கருக வொளிவிடு தனுபர கவுதம
புநித முநிதொழ அருணையி
லறம்வளர்
கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.
பாடல் 375 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .........
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன
தனதன
தனன தனதன தனன தனதன ...... தனதான
கமரி மலர்குழல் சரிய
புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை ......
நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக
தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக ......
ளித்ழுறல்
திரையி லமதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய்
குமர குருபர குமர
குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர ...... எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய
விருதொலி
டமட டமடம டமட டமவென
குமுற திமிலைச லரிகி னரிமுத ......
லிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர்
பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.
பாடல் 376 ( திருவருணை )
ராகம் - சிவரஞ்சனி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதனத் தானனத்
தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கயல்விழித் தேனெனைச் செயலழித்
தாயெனக்
கணவகெட் டேனெனப் ...... பெறுமாது
கருதுபுத் ராஎனப்
புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற் ...... றலைமீதே
பயில்குலத்
தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும்
பரியகைப்
பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத் ...... தரவேணும்
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத் ...... துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க் ......
கெளியோனே
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப்
...... புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
பொருமுழுச்
சேவகப் ...... பெருமாளே.
பாடல் 377 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .........
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
திலகுகட் சேல்களிப் ...... புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற்
பேசியுட்
களவினிற் காசினுக் ...... குறவாலுற்
றுறுமலர்ப் பாயலிற்
றுயர்விளைத் தூடலுற்
றுயர் பொருட் கோதியுட் ...... படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட்
டேனுயிர்ப்
புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ
மறையெடுத்
தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற் ...... றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத் ......
துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச சேவகப்
...... பெருமாளே.
பாடல் 378 ( திருவருணை )
ராகம் - ஸாரமதி ; தாளம் - கண்டசாபு
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் ...... படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற்
றேமிகப்
பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத்
தாளெனப்
பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற்
றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக் ...... கழலோர்முன்
கலைவகுத்
தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
கருணையிற் கோபுரத் ......
துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப்
...... பெருமாளே.
பாடல் 379 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ..........
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ
திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை
பேச முற்று
மருவுமென தாவி சற்று ...... மழியாதே
மகுடமணி வாரி
சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி ......
மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த
...... கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை
மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 380 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .....
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன
தான தத்த ...... தனதான
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்
மொழியுமட மாத ருக்கு
மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு
ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே
புணரும்வகை தானி
னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி
...... லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத
சித்ர ...... மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த ...... குருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல
தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.
பாடல் 381 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .......
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வடவையன லுடு புக்கு முழுகியெழு மாம
திக்கு
மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு
வரைதிசைவி டாது
சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத
ருக்கு
நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர
நினைவினொடு பீலி
வெற்றி மரகத லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட ......
அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த ......
குருநாதா
இடையரிவு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபு
ரத்தி ...... லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.
பாடல் 382 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ........
தானதன தானத் தானதன தானத்
தானதன
தானத் ...... தந்ததான
ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக் ...... கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற் ...... கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத் ...... துன்ப்முழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற் ......
கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக் ......
கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக் ......
கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத் ...... தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
பாடல் 383 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ........
தானதன தானத் தானதன தானத்
தானதன
தானத் ...... தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் ...... தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் ...... கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் ...... சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் ...... கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
பாடல் 384 ( திருவருணை )
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமி-2
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தனன தானன தானன
தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
அமுத மூறுசோ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது
தானதில் வாருமெ ...... னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ......
னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய
சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக
தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி
சமர
நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி
...... பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ
யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா
திமித மாடுசு
ராரிநி சாசரர்
முடிக டோ றுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண
...... விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந
வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.
பாடல் 385 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - .........
தனன தானன தானன தானன
தனன தானன தானன
தானன
தனன தானன தானன தானன ...... தனதான
உருகு மாமெழு காகவு
மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி
லுரிய மேடையில் வார்குழல் நீவிய
...... வொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு
முவமை
மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங்
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேநெறி
கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத
கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி
கணவ னேயுன
தாளிணை மாமலர் ...... தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர்
பரவு
கேசனை யாயுத பாணிநல்
துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராிடு
சுடரின்
வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர
னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
ளதிரு மாரண வாரண வீதியு
ளருணை மாநகர்
மேவியு லாவிய ...... பெருமாளே.
பாடல் 386 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ...........
தனதன தனன தனந்த தானன
தனதன தனன
தனந்த தானன
தனதன தனன தனந்த தானன ...... தனதான
கரியுரி அரவ மணிந்த மேனியர்
கலைமதி சலமு நிறைந்த வேணியர்
கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ......
கஞ்சமாதின்
கனமுலை பருகி வளர்ந்த காமனை
முனிபவர் கயிலை யமர்ந்த
காரணர்
கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள
விரிவென
வுனது ளுகந்த வேலென
மிகவிரு குழையு டர்ந்து வேளினை
யனையவ ருயிரை
விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும்
வினைவிழி மகளிர் தனங்கள்
மார்புற
விதமிகு கலவி பொருந்தி மேனியு
மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ......
ழிந்திடாதோ
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
றிருபிறை சயில மிரண்டு
தோள்முகி
லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ
தெனவிழ
முதுகு பிளந்து காளிக
ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
எதிர்பொரு துதிர
முகந்த வேகமு ...... கைந்தவேலா
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
அருணையி லறவு முயர்ந்த கோபுர
மதினுறை குமர அநந்த வேதமொ ......
ழிந்துவாழும்
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
அடவியி லரிவை
குயங்கள் தோய்புய
அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
பாடல் 387 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ...........
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன
தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தநததான
கனைகடல் வயிறுகு ழம்பி
வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு ......
யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல
வினைமத கரிகளு மெண்டி
சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு
...... நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு
பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ
முனைபெற வளையஅ ணைந்த
மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக ......
னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட
கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ......
ருங்குமால்கொண்
டடவியில் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி
ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.
பாடல் 388 ( திருவருணை )
ராகம் - குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் ...... தனதான
இரவியு மதியுந்
தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன் ...... றிடுமாதும்
எழில்புதல்
வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம் ...... பலகூறக்
கருகிய
வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங் ...... கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும் ...... படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் ...... திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன் ...... றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும் ...... பெருமாளே.
பாடல் 389 ( திருவருணை )
ராகம் - முகாரி; தாளம் - மிஸ்ர சாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் ...... தனதான
விரகொடு வளைசங்
கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங் ...... கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு
நெறியின்
றெனவிதி வழிவந் ...... திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன
மொடுமங்
கையருற வினர்கண் ...... புனல்பாயுங்
கலகமும் வருமுன்
குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே
பரவிடு
மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண் ...... டுயில்மாலம்
பழமறை
மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண் ...... டெருதேறி
அரவொடு
மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங் ...... கையில்மேவ
அரிவையு
மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும் ...... பெருமாளே.
பாடல் 390 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் - ........
தனதன தனன தனதன தனன
தனதன தனதன
...... தந்ததான
இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையெழு ...... திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு ...... தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண ...... நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின ...... லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
வளரிள முலையைம ...... ணந்தமார்பா
அடலணி
விகட மரகத மயிலி
லழகுட னருணையி ...... னின்றகோவே
அருமறை விததி
முறைமுறை பகரு
மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.
பாடல் 391 ( திருவருணை )
ராகம் - ......; தாளம் - .......
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா
...... தனதான
கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் ...... வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் ...... மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே ...... யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே ...... தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் ...... மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் ...... முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா ...... விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார் ...... பெருமாளே.
பாடல் 392 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் -
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா
தனத்தத் ...... தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித்
...... தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே
தகப்பட் ...... டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் ...... பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால்
மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே
உரத்தோ
ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் ......
பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற் ......
பெருமாளே.
பாடல் 393 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனனா தனனத் தனனா தனனத்
தனனதா தனனத் ......
தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் ...... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் ...... டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் ...... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் ...... கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா
உறைமா டவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் ...... புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் ...... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் ...... பெருமாளே.
பாடல் 394 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் -
தனதனா தானனத் தனதனா தானனத்
தனதனா தானனத்
...... தனதான
அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக்
கவசமா யாதரக் ......
கடலுடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத் ......
திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரியஆ தேசபுற்
...... புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப்
...... புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா
றாயினத் ...... தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா
யூரவித் ...... தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் ...... பெருமாளே.
பாடல் 395 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத்
தானதனத் ...... தனதானா
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத்
தாசைபொருட்
டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற்
சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர்
தோதகமுற்
றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் சூரைவதைத் ......
திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத்
தாடுபவர்க் ...... கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத்
தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.
பாடல் 396 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன
...... தனதான
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு
...... மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி
...... நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத்
தனிவீசிய ...... கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப்
பொருசூரனை
மடியச் சுடஏவிய ...... வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய ...... மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி ...... லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக்
கிமையாவிழி
அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.
பாடல் 397 ( திருவருணை )
ராகம் - ஸரஸ்வதி; தாளம் - மிஸ்ரஜம்பை (10)
தனதாதன தானன தத்தம் ......
தனதான
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
இளவாடையு மூருமொ றுக்கும்
...... படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
தனிமானுயிர்
சோரும தற்கொன் ...... றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் ......
குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன்
...... றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.
பாடல் 398 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன
தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
.... தனதனத் தனதான
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலீலை
யுற்று இடைநூல் நுடங்க
..... வுளமகிழ்ச் சியினோடே
இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த
அளக மவிழவளை களுமேக லிக்க நயனார விந்த
லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே
யருந்த
..... உரையெழப் பரிவாலே
புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு
மொன்றி
.... அதிசுகக் கலையாலே
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயா தரிக்க வுயிர்போ லுகந்து
பொருள தளவுமரு வுறுமாய
வித்தை விலைமாதர் சிங்கி
..... விடஅருட் புரிவாயே
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ந சலராசி கொண்ட
படியை முழுதுமொரு நொடியே மதித்து
வலமாக வந்து
..... சிவனிடத் தமர்சேயே
பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா
வினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்
பதிய
முதியகதி யதுநா யெனுக்கு முறவாகி நின்று
..... கவிதையைப் புனைவோனே
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகார ரென்ற
அசுரர் படையையடை யவும்வே
ரறுத்த அபிராம செந்தி
..... லுரகவெற் புடையோனே
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த
அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில்
வடபா லமர்ந்த
..... ஆறுமுகப் பெருமாளே.
பாடல் 399 ( திருவருணை )
ராகம் - ஸாமா; தாளம் - கண்டசாபு (2 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
தனதனனத்
தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ......
தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப்
பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப்
...... பெருமாளே.
பாடல் 400 ( திருவருணை )
ராகம் - ஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட தகதிமி-3 1/2
தனன
தனனா தனன தனனா
தனன தனனா ...... தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ
...... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா ......
னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா ...... கரமேதோ
பரம
குருவா யணுவி லசைவாய்
பவன முதலா ...... கியபூதப்
படையு முடையாய்
சகல வடிவாய்
பழைய வடிவா ...... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் ...... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் ...... பெருமாளே.
பாடல் 401 ( திருவருணை )
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச
மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக
முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர்
சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந
டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட
...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய்
...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த
...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குர மங்கை
அமளிந லங்கொள்
...... பெருமாளே.
பாடல் 402 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த
தந்த ...... தனதான
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும் ...... கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது
தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய
கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்
றுலகுட
னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து
...... தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ
சார்ங்க கண்டன் ...... மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர
கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்
கலபக
கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள் ......
பெருமாளே.
பாடல் 403 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் -
தனதனன தனதனன தான தத்த தந்த
தனதனன தனதனன தான
தத்த தந்த
தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான
இருளளக மவிழமதி போத
முத்த ரும்ப
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
இளகஇடை துவளவளை பூச
லிட்டி ரங்க ...... எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
இதழமுது பருகியுயிர் தேக மொத்தி
ருந்து ...... முனிவாறி
மருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து
...... விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
பழுதில்மறை
பயிலுவஎ னாத ரித்து நின்று
முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ......
மறவேனே
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
கிழவடிவு கொடுமுடுகி வாச
லிற்பு குந்து
உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே
அரியவுடு
பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
அமரரொடு
பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக
அருளுமரி திருமருக வார
ணத்தை யன்று
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
அருணகிரி நகரிலெழு
கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 404 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
இறுகு மணிமுலை மருவு தரளமு
மெரியு முமிழ்மதி ...... நிலவாலே
இரவி
யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட ...... லலையாலே
தறுகண் ரதிபதி
மதனன் விடுகொடு
சரமி லெளியெனு ...... மழியாதே
தருண மணிபொழி லருணை
நகருறை
சயில மிசையினில் ...... வரவேணும்
முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர் ...... குருநாதா
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
முடுகு மரகத ...... மயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதன
குவடு
படுமொரு ...... திருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக
விடவல ...... பெருமாளே.
பாடல் 405 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தனதனன தத்த தனதனன தத்த
தனதனன தத்த ......
தனதான
உலையிலன லொத்தா வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி ...... யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி ...... நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து ...... நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
திருடனென வெட்கி ...... யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட ...... கதிர்வேலா
கருதலரின் முட்டி கருகிவரு துட்ட
கதவமண ருற்ற ...... குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.
பாடல் 406 ( திருவருணை )
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (10)
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2,
தகிடதகதிமி-3 1/2
தனதனன தனந்த தானன ...... தந்ததான
கடல்பரவு தரங்க மீதெழு
...... திங்களாலே
கருதிமிக மலந்தை மார்சொல்வ ...... தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந ......
லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ
...... றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே
அரிபிரம
புரந்த ராதியர் ...... தம்பிரானே.
பாடல் 407 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத்
தனதனனத் ...... தனதான
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக்
கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங்
குமரிதனத் திதமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக் ......
கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக்
...... குறவாமோ
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம்
செககணசெக் கணகதறத்
திடுதிடெனக் கொடுமுடியெட்
டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட்
டலகையுணத் ...... தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக்
களவுமயற்
சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.
பாடல் 408 ( திருவருணை )
ராகம் - .....; தாளம் -
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத்
தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான
கமல மொட்டைக் கட்ட
ழித்துக் குமிழியை
நிலகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
கலச வர்க்கத்
தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப்
பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
கரிம ருப்பைப் புக்கொ
டித்துத் திறல்மத ...... னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட்
பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
னடல்ப டைத்தச் சப்ப
டுத்திச் சபதமொ ...... டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
மபிந வச்சித் ரத்த னத்துத்
திருடிக ...... ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ
குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட
...... எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ளுட்செக்
கச்சி வத்துக் குறளிகள்
தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ......
கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அசுர ரத்தத் திற்கு ளித்துத்
திமியென
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே.
பாடல் 409 ( திருவருணை )
ராகம் - மத்யமாவதி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனத் தனதனத் தனதனத்
தனதனத்
தனதனத் தனதனத் ...... தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற்
பகமதக்
கஜமுகத் தவுணனைக் ...... கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற்
கனிபலக்
கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த்
திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப்
பொருதுவெற்
றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா
நரிமிகுக்
கிளைகளைப் பரியெனக் கடிவளக்
கையில்பிடித் தெதிர்டத் ...... திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற் ...... கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த் ......
திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற்
சரவணப் ...... பெருமாளே.
பாடல் 410 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனன தந்தனம் தனதன தனதன
தனன தந்தனம் தனதன
தனதன
தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான
கருநி றஞ்சிறந்
தகல்வன புகல்வன
மதன தந்திரங் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன்
செருவை
முண்டகஞ் சிறுவன வுறுவன
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
தெனன தெந்தனந்
தெனதென தெனதென ...... எனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
திருகு கின்றமங் கையர்வச மழிதலை
...... யொழிவேனோ
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
கலக லன்கலின்
கலினென இருசரண்
மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி
அருகு சென்றடைந்
தவள்சிறு பதயுக
சதத ளம்பணிந் ததிவித கலவியு
ளறம ருண்டுநெஞ் சவளுடன்
மகிழ்வுட ...... னணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
அருணை வந்துதென் திசைதனி லுறைதரு
...... பெருமாளே.
பாடல் 411 ( திருவருணை )
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (16)
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4,
தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தானான தான
தானான தான
...... தந்ததான
காணாத தூர நீணாத வாரி
காதார வாரம ......
தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு ......
னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
நாடோ ர்க ளேசஅ ......
ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
நாடோ றும் வாடிம ...... யங்கலாமோ
சோணாச
லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா
தோலாத வீர வேலால
டாத
சூராளன் மாளவெ ...... குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி ...... றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 412 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான
காரா டக்குழ லாலா லக்கணை
கண்கள் சுழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள்
கலந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
யின்ப ரசங்குட மார்ப
ளிங்கொளி ...... கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர்
கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல்
நெகிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்ப நடம்புரி வாரு டன்செயல் ......
மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
வந்து கலந்துயி ரோட
வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டு குரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி ......
யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார்
சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி
போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ
மாரோன்
முப்புர நிறா யுற்றிட
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ
யேகா சர்ச்சடை
கங்கை யிளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா
மாலோ னுக்கிளை
யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத
வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பண
மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி
...... கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட
கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.
பாடல் 413 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன
...... தந்த தனதான
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு ......
ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை
...... அஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு
வந்தெனது ...... சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி
யுஞ்சடைய
ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு
மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும் ...... அஞ்ச
விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ
ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.
பாடல் 414 ( திருவருணை )
ராகம் - திலங் ; தாளம் - அங்கதாளம் (8)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1
1/2, தகதிமிதக-3
தான தனான தத்த ...... தனதான
கீத விநோத மெச்சு ...... குரலாலே
கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ......
முழலாதே
நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க
...... பொருசூரா
சோண கிணயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ
ருச்சொ ...... லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
பாடல் 415 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத்
தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான
குரவநறு மளககுழல் கோதிக்
காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
குமுதமல ரொளிபவள
வாயைக் காட்டியெ ...... குழையாத
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ
...... கொடியேன்யான்
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையனிவ
னெனவுலக மேசப் போக்கென
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை
நீள்கர்த்தாவென
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே
அழகுசெறி
குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே
சுரருலவ அசுரர்கள்
மாளத் தூட்பட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட
...... முனிவோனே
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி
னணுிதினை காவற் காத்தனை
சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ......
பெருமாளே.
பாடல் 416 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான
தானன ...... தனதான
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு
கிழவனு மாயாவி போய்விட
விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப்
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
பரிவிலி வானாலை நாடொறு ......
மடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
பதியழி யாவீடு
போயினி ...... யடைவேனோ
எழுகடல் தநமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி
யோடிட ...... முதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத
மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி
அமரினை மேவாத சூரரை
அமர்செயும் வேலாயு தாவுயர்
அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.
பாடல் 417 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தானதன தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த
...... தனதான
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தானஅற்ப ......
நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக
வேநினைக்கும் ...... வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம
தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே
நீதிநெறி யேயழித்த
தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி
னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு ...... மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி ......
லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை
வாளெடுத்த ...... பெருமாளே.
பாடல் 418 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தானான தனதான ...... தனதான
கோடான
மடவார்கள் ...... முலைமீதே
கூர்வேலை யிணையான ...... விழியூடே
ஊடாடி யவரோடு ...... முழலாதே
ஊராக திகழ்பாத ...... மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோ டி மயில்மீது ...... வருவோனே
சூடான தொருசோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 419 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
தானதன தத்த
தத்த ...... தனதான
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை
வாளெரிகொ ளுத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற
வெற்பு
நீறெழமி தித்த நித்த ...... மனதாலே
நீபமலர் பத்தி மெத்த
வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்
ஆடலணி
பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில்
...... அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி
டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.
பாடல் 420 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த
தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சிலைநுதல்
வைத்துச் சிறந்த குங்கும
தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ்
...... தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி
வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப்
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம்
புகழ்நல மெத்தப்
புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும்
நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனோ
கலைமதி வைத்துப் புனைந்து
செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட
...... நடமாடுங்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற்
றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து
வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே
அடியவ
ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 421 ( திருவருணை )
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ......
தனதான
சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொ ரு பமதாய்
திகைலோ கமெலா ...... மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ
னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ கமெலா
முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள் படஏழ்
கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ வடிவாள்
குறமா துடன்மால்
கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன் மிடிதூள்
படநோய் விடவே
கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
பாடல் 422 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன
தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான
சினமுடுவல் நரிகழுகு
டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
செடமளறு
மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன்
பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
சிறுமணலை யளவிடினு
மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி
யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே
கலவிநல மருவிவடி
வஞ்சிறந் துன்பதம்
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
கனகமலர் பொழியஉன தன்புகந்
தின்றுமுன் ...... சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங்
குந்தடர்ந் ...... தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண்
டுண்டுடுண்
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ்
சன்குலஞ் ...... சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
செகமுழுது மகிழஅரி அம்புயன்
தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின்
பங்குறுங்
கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
திருவருண கிரிமருவு சங்கரன்
கும்பிடுந் ...... தம்பிரானே.
பாடல் 423 ( திருவருணை )
ராகம் -....., தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த
தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சுக்கி
லச்சுரொணி தத்தி லுற்றநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை
...... வந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
வட்ட மிட்டுடல
வெப்ப முற்றுமதி
சொற்ற பத்தின் மறியக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக்
கற்று வெற்றறிவு
பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
கட்டி யிப்படிபி
றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ......
மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று
நத்தமிகு
சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்ட திசை
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா
தத்தை வித்ருமநி
றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
தக்கு நத்தஅரு ணைக்கி
ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே.
பாடல் 424 ( திருவருணை )
ராகம் -...; தாளம் -
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன
தானன
தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான
செஞ்சொற் பண்பெற்
றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ
மஞ்சொக் குங்கொத்
தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி
லேயென ...... முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக்
கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே
நந்தக் கொந்திச்
சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி
யேதென ...... மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற்
பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.
பாடல் 425 ( திருவருணை )
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனனாத் தனதன
தனனத்
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய
அருணாத் திரிநம சிவயத் ...... தி முலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ......
தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத்
திரிசெய செயனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக்
கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ......
சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத்
திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட
மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற்
சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற்
...... பெருமாளே.
பாடல் 426 ( திருவருணை )
ராகம் - ஆனந்த பைரவி ; தாளம் - அங்கதாளம் (9)
தகதிமி-2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
..... தனதனத் தனதான
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த
கொம்பு
...... முளகதக் கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க
.... மரணபக் குவமாநாள்
கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு
நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
..... தமுமடற் சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
...... வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி
லங்கு
...... மியல்நிமிர்த் திடுவோனே
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி
ளந்த
...... அயிலுடைக் கதிர்வேலா
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த
..... அடியவர்க் கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
..... அறுமுகப் பெருமாளே.
பாடல் 427 ( திருவருணை )
ராகம் -....; தாளம் -
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன
தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல்
வாய்ந்ததிசெந்
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந்
தனபாரமு
மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை
மாந்துளிரின்
சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக்
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடிணை செவியாடுச
லாங்கள பூங்கமுகங்
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ......
கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
சரணுபுர குரலோசையு
மேந்திடு மாண்டலையின்
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ......
தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு
தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோ டிமி டிமிடோ டிமி டாங்குட டிந்தகமென்
...... றியல்பேரி
திநச்முடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
சிரமீள்பட குவடோ துகள் வான்பெற
வாங்கியவண் ...... கதிர்வேலா
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர்
தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ
ளீன்றருள்மென் ...... குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட
தீண்டியவொண்
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
கலைநூலுடை முருகாவழ லோங்கிய
வோங்கலின்வண் ...... பெருமாளே.
பாடல் 428 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
தனன
தனத்தத் தனந்த ...... தனதான
தலையை மழித்துச் சிவந்த துணியை
யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை
சதிரொடு வப்பப் புனைந்து
விரகொடு கற்கப் புகுந்து
தவமொரு சத்தத் தறி்து ...... திருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக்
கமர்ந்த ...... எழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற்
றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே
அலைகட லிற்கொக் கரிந்து
மருவரை யைப்பொட் டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
மறிவு ளபத்தர்க்
கிரங்கு ...... மிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச்
சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம்
மதலை புனத்திற் புகுந்து
நரவடி வுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.
பாடல் 429 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன
தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு வாணிப
விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள்
...... மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு
மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ......
விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு
கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனே
தரித்த தோகண தக்கண
செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு
...... எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்கந
டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம்
அருக்க
னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரந்த மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி
ணத்தையெ டுத்துண ...... அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள்
...... பெருமாளே.
பாடல் 430 ( திருவருணை )
ராகம் - ..........; தாளம் -
தானன தான தத்த தானன தான தத்த
தானன தான
தத்த ...... தனதான
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ
மொய்த்த ...... மலராலே
சீறும ராவெ யிற்றி லுறிய காளம் விட்ட
சீதநி
லாவெ றிக்கு ...... மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி
குத்த
பூவையை நீய ணைக்க ...... வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது
பச்சை
மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா
வானவர் சேனை முற்றும்
வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை ...... மணவாளா
மேதினி யோர்த
ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட ......
பெருமாளே.
பாடல் 431 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த
...... தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச ......
மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க
...... ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெ
றிந்து ...... பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல்
மிக்க செஞ்சொல் ...... தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த ...... முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச
ணிந்த
கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண
வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 432 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தான தனதன தத்தம் ...... தனதான
பாண
மலரது தைக்கும் ...... படியாலே
பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
நானு மயலி லிளைக்குந் ......
தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
தேவர் மகுட மணக்குங்
...... கழல்வீரா
காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
பாடல் 433 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் ......
கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீடற் ...... றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக் ...... குடில்மாசு
தோயா
மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக் ...... கடவேனோ
ஞாலா மேலா வேதா
போதா
நாதா சோதிக் ...... கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப்
...... பொருளோனே
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் ...... கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப் ...... பெருமாளே.
பாடல் 434 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த
தான ...... தனதான
பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
பொறியுட லிறந்து போன
...... தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு
முகங்க ளாறு
மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை
வரிபர வநந்த
கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும்
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல
பரிவுகொ டுகந்து வேத
...... மதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
படைகட
லிறந்து போக ...... விடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள்
போல
அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி
யெனதிட ரெரிந்து போக
அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.
பாடல் 435 ( திருவருணை )
ராகம் - ஸிந்து பைரவி ; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன்
...... முமுடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி
போய்வீழு ...... மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி ...... குலபாதன்
நினது தாளை நாடோ று மனதி லாசை
வீடாமல்
நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி
ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி ...... யொருசீதை
சிறையி லாம
லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் ...... மருகோனே
அலைய
மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை ...... மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.
பாடல் 436 ( திருவருணை )
ராகம் -...; தாளம் -
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
தானனத்
தத்ததனத் ...... தத்த தனதான
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும்
போதுடைப் புத்திரரைப்
போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத்
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட் ...... டுக்க
விகள்பாடித்
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வலைப் பட்டடிமைப்
...... பட்டு விடலாமோ
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
ாதரிக்
கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத்
துத்தரதிக்
காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே
தோகையைப்
பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச்
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
சூரனைப் பட்டுருவத்
...... தொட்ட பெருமாளே.
பாடல் 437 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த
தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
மானை விடத்தைத்
தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ......
வடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி
டித்தவர்
மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும்
ஊன
விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை
யூது பிணத்தைக்
குணத்ர யத்தொடு ...... தடுமாறும்
ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு
பாதியை யொப்பித் துனிப்ப வத்தற
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ......
தெளியாதோ
சானகி கற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப்ப
டுத்திய
தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ
ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
தாரை தனைச்சுக் ரிவற்க
ளித்தவன் ...... மருகோனே
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை
மதத்துக் கிடக்கு மற்புத
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்
சூரனை வெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.
பாடல் 438 ( திருவருணை )
ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா
தனதன
தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான
முகத்து லக்கிக
ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள்
...... முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும்
விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்ற்முடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா
சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த
லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ
தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ......
தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ
எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும்
அகத்தி
யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி
ரானே அருணையில் ...... நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ......
தம்பிரானே.
பாடல் 439 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன ...... தனதான
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர்
தோகை பக்ஷிநடை யார்ப
தத்திலிடு
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
சோர நற்றெருவு டேந
டித்துமுலை ...... விலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவரு
வோரை
நத்திவிழி யால்ம ருட்டுமயல்
தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத
கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ......
விடும்வேலா
ஆதி மத்திபல கார ணத்தியெனை
யீண சத்திஅரி ஆச னத்திசிவ
னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே
ஆர ணற்குமறை தேடி
யிட்டதிரு
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ்
...... பெருமாளே.
பாடல் 440 ( திருவருணை )
ராகம் - ...:; தாளம் -
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
தனதன தந்ததத்த
...... தனதான
மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கி
முடியவ ளைந்தரற்று ......
கடலாலும்
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
முழுகியெ
ழுந்திருக்கு ...... நிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே
மரகத துங்கவெற்றி விகடந
டங்கொள்சித்ர
மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்
அழகிய
மென்குறத்தி புளகித சந்தனத்தி
னமுதத னம்படைத்த ...... திருமார்பா
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
மருணைவ ளம்பதிக்கு ......
மிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
எழுசயி லந்தொளைத்த
...... சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
ரிவர்கள்ப
யந்தவிர்த்த ...... பெருமாளே.
பாடல் 441 ( திருவருணை )
ராகம் - கெளரி மனோஹரி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதான தத்ததன தனதான
தத்ததன
தனதான தத்ததன ...... தனதான
வலிவாத பித்தமொடு களமாலை
விப்புருதி
வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை
கக்குகளை
வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல்
புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி ...... முடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை ...... யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை ......
யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி
சித்தனருள் ...... முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க
ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை ...... பெருமாளே.
பாடல் 442 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தனதன தானாதன தனதன தானாதன
தனதன தானாதன ......
தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென ......
வுரையாடும்
விரகுட னுறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல
...... முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும்
...... வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது
...... மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர்
தோள்தோய்தரு ...... மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச
தாகாலமு ...... மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய
வாரார்கலி ...... வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி
வேலேவிய ...... பெருமாளே.
பாடல் 443 ( திருவருணை )
ராகம் - ஆஹிரி ...; தாளம் - அங்கதாளம் (14 1/2)
தகிடதகதிமி-3 1/2, தகிட-1
1/2, தகிட-1 1/2
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானனா
தனன தானனம் ...... தனதான
விதிய தாகவெ பருவ மாதரார்
விரகி
லேமனந் ...... தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந்
...... திமுடன்
முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் ......
திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் ......
தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் ...... சமராடிச்
சகல
லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் ...... குமரேசா
அதிக வானவர் கவரி
வீசவே
அரிய கோபுரந் ...... தனில்மேவி
அருணை மீதிலே மயிலி லேறியே
அழக தாய்வரும் ...... பெருமாளே.
பாடல் 444 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத்
தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன
--------- 3
முறை ----------- ...... தனதான
விந்துப் புளகித இன்புற் றுருகிட
சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர
மென்பற் றுருகிமு
கந்திட் டனைமுலை
யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல
சலத்தொ டுழைகிடை
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள
தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச்
சத்தித்
துறவொடு பஞ்சிட் டணைமிசை
கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
டணைத்து மலரிதழ்
கடித்து இருகர
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு
பொங்கக் குழல்மலர்
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி
லெறிப்ப மதிநுதல்
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய
லின்பத் திருள்கொடு
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து
வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ......
நரைமேவித்
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
உந்திக் கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு
...... முடலாமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக்
கிடுபிடி
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு
டுடுடுடு
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடமுழ
வுந்தப் புடன்மணி
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர்
துதிப்ப முநிவர்கள்
களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
மறைப்ப
நரிகண மிகுப்ப குறளிகள்
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற்
பவளமு டங்கிக் கமர்விட
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு
முரகனு முழக்கி விடபட
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
கங்கைப் பணிமதி கொன்றைச்
சடையினர்
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
மிகுத்த புரமதை யெரித்த
நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
தொந்திக் கடவுளை
தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
நிறத்தி முயலக பதத்தி
அருளிய ...... முருகோனே
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
ரம்பைக்
கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு
முகத்தொ டுறமயல்
செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
மம்பொற் சசியெழ
சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
டைஞ்சற் பொடிபட முன்புற்
றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள்
மருவிய ...... பெருமாளே.
பாடல் 445 ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ......
தனதான
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
மேருகிரி யானகொடு ......
தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட ......
லிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட ...... னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத ...... மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத ...... மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை ...... யருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண ...... மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.
பாடல் 446 ( திருக்காளத்தி )
ராகம் - கல்யாணி;தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிடதக-2 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா
தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான
சரக்கே றித்தப் பதிவாழ்
தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே
விந்தச் ...... செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ......
குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்
குறித்தே முத்திக்
குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா
னம்பொற் ...... கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ......
றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே
திருக்கா
னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக்
கழல்வா வென்பப் ...... புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப்
...... பெருமாளே.
பாடல் 447 ( திருக்காளத்தி )
ராகம் - கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
(எடுப்பு - அதீதம்), (விச்சில்
1/2 இடம்)
தனத்தா தத்தத் ...... தனதான
சிரத்தா னத்திற் ...... பணியாதே
செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ......
துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க்
...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
பாடல் 448 ( திருக்காளத்தி )
ராகம் - ...; தாளம் -
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த
தானன
தந்தன தானத் தனந்த தானன தனதான
பங்கய னார்பெற் றிடுஞ்ச
ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர
...... உருவாயே
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து
நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி
தந்தடி யேனைப் புரந்தி டாயுன
...... தருளாலே
சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித்
தருஞ்சு தாபத
தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
திண்சிலை
சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார்
சிந்துவி லேயுற் றெழுந்து
காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர்
திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய
...... குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய
சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன்
செங்கதி ரோனைக் கடிந்த
தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள்
...... பெருமாளே.
பாடல் 449 ( சிதம்பரம் )
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதனன தான
தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
பாடல் 450 ( சிதம்பரம் )
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான
...... தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் ......
பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப்
...... பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி
லாதப் ...... பெருமாள்காண்
தித்திமிதி தீதே னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.
பாடல் 451 ( சிதம்பரம் )
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதானா
இருவினையின் மதிம யங்கித்
...... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே
பரமகுரு
அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ......
கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
சிவனருளு முருக செம்பொற்
...... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
கனகசபை
மருவு கந்தப் பெருமாளே.
பாடல் 452 ( சிதம்பரம் )
ராகம் - வஸந்தா ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு
நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய
நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண
சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ......
டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள்
பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்
ககன மறைபட ஆடிய
செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத்
...... தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ
கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 453 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான
வண்டையொத் துக்கயல்
கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற்
றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ணவம்
மந்தரத் தைக்கட
பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத்
திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே
கொண்டழைத் துத்தழு
வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற்
கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல்
கொண்டுசத் திக்கட
லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத்
திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட
டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண
கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப்
பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர
ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர்
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித்
துக்கையி ...... லங்குவேலால்
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை
...... தம்பிரானே.
பாடல் 454 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான
தந்தன
தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான
கங்கு லின்குழற்
கார்மு கஞ்சசி
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ......
செம்பொனாரம்
கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ
னுங்கிரி
கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல
அங்க
மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
அண்சி
லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும்
அஞ்சு கங்குயிற் பூவை
யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களோ
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ......
தென்றுபோமோ
சங்கு பொன்தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட
திர்ந்திட
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம்
சந்தி
ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் ார்பொ ழிந்திட
தந்தி ரம்புயத்
தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச்
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர்
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.
பாடல் 455 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு
பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப
முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ......
மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி
முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ
தந்த னந்தன
தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு
துந்துமி ...... பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு
டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே
சிந்த
வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை
யெங்கு மண்டிட ...... விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு
கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.
பாடல் 456 ( சிதம்பரம் )
ராகம் -.... தாளம் -
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
------------ 3 தரம் ----- ...... தந்ததான
மந்தர மென்குவ டார்த
னங்களி
லார மழுந்திட வேம ணம்பெறு
சந்தன குங்கும சேறு டன்பனி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்விழி செங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி
யார்நு டங்கிடை
வாடந டம்புரி வார்ம ருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி
ளங்குயில்
மோகன வஞ்சியர் போல கம்பெற
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்ததெ னாம யங்கிட ......
இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாருமெ னும்படி யால
கங்கொடு
பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ......
மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபுழு வுஞ்சல மோடி
றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலைமி குந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழி விடும்படி சீர்ப தம்பெறு ......
விஞ்சைதாராய்
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத
விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர்த வம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணிய ணங்கவ ளோட ருந்தவர் ......
தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவுர கன்புவி யோர்கள்
மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீததி திந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னாவெ னும்பறை
செந்தவில் சங்குட னேம
ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில்
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
தாளழ கங்கையின் வேலு டன்புவி
செம்பொனி
னம்பல மேல கம்பிர
காரச மந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.
பாடல் 457 ( சிதம்பரம் )
ராகம் - தர்பார்; தாளம் - ஆதி - 4 களை (32)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான
தந்ததன் ...... தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோ ட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ......
வங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தோஷித் தாளு
கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ
எந்தன்
வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ......
மந்திமேவும்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத
பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய்
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு
யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை
தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை
யுந்திவிடு ...... செங்கைவேலா
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ......
கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல
ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.
பாடல் 458 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக் ......
குழலார்பின்
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங்
கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்
பதித்துத்தந்
தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பிப்பொன் தரப்பற்றிப்
...... பொருள்மாளப்
பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண்
களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ
கதித்துக்கொண்
டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென்
றுழக்கித்துக் ...... கசுரோரைக்
கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்
செவிக்குச்செம்
பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப்
...... பெருமாளே.
பாடல் 459 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன
தானன
தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான
சிரித்துச் சங்கொளி
யாமின லாமென
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
செணத்திற் சம்பள மேபறி காரிகள்
...... சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச்
செந்துகி லால்வெளி யாயிடை
திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ......
மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை
அசைத்துக் கொந்தள
வோலைக ளார்பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
னமைத்துப் பஞ்சணை மீதணை
மாதர்க ...... ளுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக்
கந்தசு வாமிப ராபர
மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா
சிரித்திட் டம்புர
மேமத னாருட
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
திகழ்ப்பொற் சுந்தரி
யாள்சிவ காமிநல் ...... கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
திருச்சிற் றம்பல மேவியு லாவிய ......
பெருமாளே.
பாடல் 460 ( சிதம்பரம் )
ராகம் - ....; தாளம் -
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந்
தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான
தத்தையென் றொப்பிடுங் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப்
புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச்
சக்கரம்
பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர்
சுத்திடும்
பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால்
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித்
தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட்
டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற்
கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந்
தாடிநிர்த் தங்கள்புரி
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ......
மெங்கள்கோவே
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன்
பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர்
...... தம்பிரானே.
பாடல் 461 ( சிதம்பரம் )
ராகம் - ....; தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந்
தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
----- 2 முறை -------- ...... தனதான
தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டணைத்துச்சங்
கிலிக்கொத்தும்
பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந்
தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண்
பகப்புட்பங் ...... குழல்மேவித்
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
தகைப்பட்டுந் தரித்துப்பின்
சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங்
கலப்புத்தன் கரத்துக்கொண்
டணைத்துச்சம்
ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப்
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங்
குலைத்துப்பின் புயத்தைக்கொண்
டணைத்துப்பின் சுகித்திட்டின்
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர்
புணர்ப்பித்தும்
பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
திணிக்கட்டுஞ்
சிதைத்துக்கண்
சிறுப்பப்புண் பிடித்தப்புண்
புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ
சினத்துக்கண்
சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங்
குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண்
சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச்
செழித்துப்பொன்
சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ்
சிறக்கப்பண் சிரத்திற்கொண்
டிறைத்துச்செம் பதத்திற்கண்
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே
பனித்துட்கங்
கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண்
புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன்
பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன்
றடற்பித்தன் ...... தருவாழ்வே
படைத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண்
கடிப்புட்பங் கலைச்சுற்றும்
பதத்தப்பண்
புறச்சிற்றம்
பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண்
...... பெருமாளே.
பாடல் 462 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த
தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான
திருடிக ளிணக்கிச்
சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள்
...... சதிகாரர்
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள்
பிணக்கிட் டும்பு றம்பிகள்
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ......
வெகுமோகக்
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட்
டும்பி ணங்கிகள்
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு
சண்டிகள்
குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
மிமையவ
ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர்
இபமொடு வெதித்தச் சிங்க
மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட
...... விடும்வேலா
அரிகரி யுரித்திட் டங்க சன்புர
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே
அமரர்த மகட்கிட்
டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
அழகிய திருச்சிற் றம்ப
லம்புகு ...... பெருமாளே.
பாடல் 463 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
கொண்ட
நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை
தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்
தந்தி யின்குவ டின்த னங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
தங்க
டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ......
எந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
டங்கோ ளுந்திரு மங்கை
பங்கினன்
வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன்
உந்தி
யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புக
ழொண்பு ரம்பொடி கண்ட
எந்தையர் ...... பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த
னென்றய னும்பு கழ்ந்திட
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.
பாடல் 464 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை
திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன்
தெளிந்துன்றன்
பழந்தொண்டென் ...... றுயர்வாகப்
புயங்கந்திங் களின்துண்டங்
குருந்தின்கொந் தயன்றன்கம்
பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய்
இயம்புஞ்சம்
புகந்துன்றுஞ்
சுணங்கன்செம் பருந்தங்கங்
ிணங்குஞ்செந் தடங்கண்டுங்
...... களிகூர
இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன்
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா
தயங்கும்பைஞ்
சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ......
சிறுகூரா
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும்
ப்ரியங்கொண்டுந்
தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.
பாடல் 465 ( சிதம்பரம் )
ராகம் - ....; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந்
தனத்த தந்த ...... தனதான
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி
ரண்டு
பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை
மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந்
துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்
பொறிகண்
சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்ச ......
ருறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை
...... வனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த
அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த
...... பெருமாளே.
பாடல் 466 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந்
தனத்த தந்த ...... தனதான
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி
ரண்டு
வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம்
வளைசெங் கையிற்சி றந்த
வொளிகண் டுநித்தி லங்கு
வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார்
விதவிங் கிதப்ரி யங்கள்
நகைகொஞ் சுதற்கு ணங்கள்
மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
மிகவிஞ் சுபொற்ப தங்கள்
...... தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம்
பருற்றி ருந்த ...... கயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ
டங்கம்
நவதுங் கரத்ந முந்து ...... திரடோ ளுஞ்
சிதையும் படிக்கொ ரம்பு
தனைமுன் தொடுத்த கொண்டல்
திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
திருவம் பலத்த மர்ந்த
...... பெருமாளே.
பாடல் 467 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன
தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
முகசந்திர
புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட
முழவங்கர
கமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத்
துகிரின்கொடி
யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித்
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட
மயல்கொண் டணைகீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில்
வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி
கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ......
திகழ்வோனே
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி
விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ......
கதிர்வேலா
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற
மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப்
...... பெருமாளே.
பாடல் 468 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன ...... தந்ததான
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங்
கந்தரர் தேமலு
மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய
...... ரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி
னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே
இந்திர
லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி
றந்திட ...... கண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச
டாதரன் வாச வன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை
வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவு மகாசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.
பாடல் 469 ( சிதம்பரம் )
ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் (19)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தான தான தான தானன தான
தந்த
தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான
காய மாய வீடு மீறிய
கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங்
காசி லாசை தேடி
வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி ......
நொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி
யொன்று ...... தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர
மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை
பாட வஞ்சே
ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ
ஆதி நாத ராடு
நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.
பாடல் 470 ( சிதம்பரம் )
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதிமி-2, தகதிமி-2,
தகதகிட-2 1/2, தகதிமி-2
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன ...... தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை
யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ......
வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத
னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள
லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட
...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில்
மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானய் நமோநம
திசையினு மிசையினும்
வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ......
தம்பிரானே.
பாடல் 471 ( சிதம்பரம் )
ராகம் - முகாரி; தாளம் - ஆதி 4 களை (32)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
...... தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி
கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல்
வெண்பொடிகொ ...... டசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து
வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ......
முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத
என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ
ழிந்தகுரு ...... முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி
ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ......
விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு
மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே
செட்டி
யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி
யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.
பாடல் 472 ( சிதம்பரம் )
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத்
தேடியுனை
நங்களப் பாசரண ...... மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற்
பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார்
உன்றனக்
கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு ......
செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை
...... பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற்
பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
பாடல் 473 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தந்ததன ...... தனதான
செங்கலச ......
முலையார்பால்
சிந்தைபல ...... தடுமாறி
அங்கமிக ...... மெலியாதே
அன்புருக
...... அருள்வாயே
செங்கைபிடி ...... கொடியோனே
செஞ்சொல்தெரி ......
புலவோனே
மங்கையுமை ...... தருசேயே
மன்றுள்வளர் ...... பெருமாளே.
பாடல் 474 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன ...... தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ......
துண்டமாதர்
கமுக க்ணவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇணை யுங்குவ டார்கர
கமல
வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை
வரிய பாளித முந்துடை யாரிடை
துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல்
மணமு லாவிய ரம்பையி னார்பொருள் ......
சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய
லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய்
சரியி லாத சயம்பவி
யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள் ......
கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா
அரிய மேனி
யிலங்கை யிராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெழு முண்டவன்
மாமரு ...... கண்டரோதும்
அழகு சோபித அங்கொளு மானன
விபுதை மோகி
குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.
பாடல் 475 ( சிதம்பரம் )
ராகம் - ....; தாளம் -
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த
தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான
கூந்த லாழவி
ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ......
கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது
வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்
சாந்து
வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை
யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ......
மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்
சேண்சு லாமகு
டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு
நடம்பயில் ...... கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு
வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
பாடல் 476 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன
தய்ய ...... தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ
...... ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை
வல்ல ...... படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த
னென்ன வுள்ள ...... முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி
னுள்ளு
தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி
துன்னு கைய
சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு
ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா
பச்சை
வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
பாடல் 477 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய
...... தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு ......
மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி
...... யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி
னெல்லை ...... நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி
யல்லல் ...... செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
பாடல் 478 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத்
தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான
முல்லைமலர் போலுமுத்
தாயுதிர்ந தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர்
மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம்
மொள்குசிலை வாணுதற்
பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு
கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை
வல்லகுவ டாலிலைப் போலுசந்
தானவயி
றுள் ளதுகில் நூலிடைக் காமபண் டார அல் குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந்
தாடுபரி ...... புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை
யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ......
லுறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோ டநய
வுள்ளமுற வாகவைத்
தாளுமெந் தாதைமகி
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
என்னுடைய தாய்வெண்முத் தார்கடம்
பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோ டதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா
தெள்ளுதமிழ்
பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே.
பாடல் 479 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத்
தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான
அடப்பக்
கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு
அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழுறல்க ...... ளதுகோதி
அணிப்பொற்
பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே
படிச்சித்
தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப்
பரத்தைக்
குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை
பரத்துற் றண்பதத்துப் போதக் மீதென ...... அருள்தாராய்
தடக்கைத்
தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா
தகட்டுப்
பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா
திடத்திற்
றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல்
திமித்தத்
திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே.
பாடல் 480 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன ...... தனதான
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பனி நிர்மயிர் தோல்குடி
லப்புச் சீபுழு வோடடை யார்தசை
...... யுறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல
மேவிளை யூளைகொ
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
தொக்குத்
தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன
டீகுட டாடுடு ...... வெனதாளந்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
சத்திக் கேயிரை யாமென வேவிடு ......
கதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்
செப்பொற் பீலியு
லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
தெற்குக் கோபுர வாசலில்
மேவிய ...... பெருமாளே.
பாடல் 481 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன ...... தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு
ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர்
ஆருக் கேபொரு
ளாமென வேநினை ...... வதனாலே
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடணி
காதொடு மோதிய
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே
காதற் சாகர மூழ்கிய
காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
காமத் தோடுற வாகையி லாவருள்
...... புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம
தேறிய
தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன
சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய
மேகத்
தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய ......
பெருமாளே.
பாடல் 482 ( சிதம்பரம் )
ராகம் -....; தாளம் -
தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான
தத்த ...... தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு ......
மதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவனத்தி
னீழற் கேத ருக்கி
...... விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற்றேபெ ருத்த
சேலொத் தேவ
ருத்தும் ...... விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை
வெட்டி
மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா
வீதித் தேர்ந டத்து
தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ்
மேலைக்
கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.
பாடல் 483 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன ...... தனதான
கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே
உள்ள நோவைத் தேயுற
வாடியர்
அல்லை நேரோப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக் காரிகள் மாயையி ......
லுழல்நாயேன்
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக
மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே
கள்ள மாயத் தாருகன்
மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு
கையின் வேல்தொட் டேவிய சேவக ......
முருகோனே
கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை
கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே
தெள்ளி யேமுற் றீரமு னோதிய
சொல்வ ழாமற் றானொரு வானுறு
செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர
தில்லை
மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.
பாடல் 484 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன ...... தனதான
தாது மாமலர் முடியா லேபத
ாத
நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய
விலையா லேமயல் ...... தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு
வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே
காத
லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால்
நாரணன் ...... மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே
வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே
வேத நூன்முறை
வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புநன்மு வாயிர
மேன்மை வேதியர் மிகவே
பூசனை ...... புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை
யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.
பாடல் 485 ( சிதம்பரம் )
ராகம் - சிந்து பைரவி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனத்தத் தானன
தானன தானன
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை
மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை
இளைப்புச்
சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல
மூலவி யாதியொ ...... டண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ......
கண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல்
நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய்
கெலிக்கப்
போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட்
டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ......
பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல்
கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.
பாடல் 486 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தான தானன தான தானன
தான தானன தான தானன
தான
தானன தான தானன ...... தனதான
நீல மாமுகில் போலும் வார்குழ
லார்கள் மாலைகு லாவ வேல்கணை
நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட
நீடு மார்பணி யாட வோடிய
கோடு போலிணை யாட நூலிடை
நேச பாளித சோலை மாமயி
...... லெனவேகிக்
காலி னுபுர வோசை கோவென
ஆடி மால்கொடு நாணி யேவியர்
காய மோடணு
பாகு பால்மொழி ...... விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி
யேழ்நர காழு மூடனை
காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே
கோல
மாமயி லேறி வார்குழை
யாட வேல்கொடு வீர வார் கழல்
கோடி கோடிடி யோசை
போல்மிக ...... மெருதூளாய்க்
கோடு கோவென ஆழி பாடுகள்
தீவு தாடசு
ரார்கு ழாமொடு
கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா
நாலு
வேதமு டாடு வேதனை
யீண கேசவ னார்ச கோதரி
நாதர் பாகம்வி டாள்சி காமணி
...... உமைபாலா
ஞான பூமிய தான பேர்புலி
யூரில் வாழ்தெய்வ யானை
மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.
பாடல் 487 ( சிதம்பரம் )
ராகம் - கானடா; தாளம் - ஆதி 4 களை (32)
அமைப்பு
தகிட-1 1/2, தகிட-1
1/2, தக-1
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான
தத்ததன ...... தந்ததான
வாத பித்தமொடு சூலை விப்புருதி
யேறு
கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லுசல் பற்சனியொ ...... டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
டூமை கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல
முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்
...... சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி
யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ
வேலை விட்டபுக ...... ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
யார்க
ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள்
ஓது வித்தமைய ...... றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
மேவி
சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
பாடல் 488 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த
தனதான ...... தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற
குளிர்வாடை ...... யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு
செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை ......
தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துற்ற மடமானி
...... னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி
யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே
இனந்துற்ற
வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.
பாடல் 489 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன
தானன
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
இணங்கித் தட்பொடு பால்மொழி
பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
இளஞ்சொற் செப்பிகள் சாதனை
வீணிகள் ...... கடிதாகும்
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள்
...... எவரேனும்
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே
பதந்துய்த் துக்கொடு
தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட
...... அருள்வாயே
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட
வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே
மதம்பட்
டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட்
டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா
பிணம்பற் றிக்கழு கோடுபல்
கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ......
முருகோனே
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
சிலம்பத் தக்கழல் சேரவெ
நாடிடு
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 49 0 ( சிதம்பரம் )
ராகம் - சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிட-1 1/2, தக-1,
தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன
தானன
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
விடுங்கைக் கொத்தக
டாவுடை யானிட
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப் பட்டற வேயற
லோதியர் ...... விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத்
தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி
யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம்
நீதர ...... இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச்
சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக்
குத்திர ராவண னார்முடி ...... அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ......
விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 491 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ......
டையென்மேகம்
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர்
தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச்
சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ......
செயல்தீராய்
அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி
அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட
வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே
செங்குற மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ......
பெருமாளே.
பாடல் 492 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம் ...... தனதான
நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின்
நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர்
நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின்
நவிலா லெத்திகள்
தோகைப்பைங் ...... குழல்மேகச்
சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா
லெத்திகள் பாடிப்பண்
திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே
சிலர்கூ டிக்கொடு
ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
செயலா லற்புத ஞானத்தின் ......
கழல்தாராய்
பகையா ருட்கிட வேலைக்கொண்
டுவரா ழிக்கிரி நாகத்தின்
படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா
பணநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிககொரு பாகத்தன்
பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ்
சுடர்பா
தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா
சுகரே சத்தன பாரச்செங்
குறமா
தைக்கள வால்நித்தஞ்
சுக்முழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
பாடல் 493 ( சிதம்பரம் )
ராகம் - அடாணா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர்
பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக
...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு ......
மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு ...... பெருமாளே.
பாடல் 494 ( சிதம்பரம் )
ராகம் - வலஜி ; தாளம் - அங்கதாளம் (14)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2,
தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2
தனதன தனன தனதன தனன
தனதன
தனனாத் ...... தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு
விசிறீக் ...... கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு
பலசாத் ...... திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தநல்முச்
...... சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற்
...... கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப்
...... பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க்
...... குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப்
...... பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப்
...... பெருமாளே.
பாடல் 495 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன
தானனந் தனன
----- 3 முறை ----- ...... தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா
ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா
ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ
லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ண வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந்
தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின்
பரச ...... தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ்
வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ
துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ்
சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில்
போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற
வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ
ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி
யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ
டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ......
யெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடு வாய் விட்டமரர்
முநிவரா
டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேந டங்குலவு ...... கந்தவேளே
அரசுமா கற்பகமொ
டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே
கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர்
...... சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம்
புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந்
தபுகழ்
அருண்ரு பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந்
துபுணர் ...... தம்பிரானே.
பாடல் 496 ( சிதம்பரம் )
ராகம் - வாசஸ்பதி ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானன
தனன தானன ...... தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம
தேறியெ ...... னிருநோயும்
எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக ......
வொளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென ...... தளவாக
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை ...... யடிதாராய்
பரம
தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி ...... தவழ்வேணிப்
பவள மேனியர்
எனது தாதையர்
பரம ராசியர் ...... அருள்பாலா
மருவி நாயெனை யடிமை
யாமென
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.
பாடல் 497 ( சிதம்பரம் )
ராகம் - மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் ...... தனதான
காவி
யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் ...... தடுமாறிக்
காயகனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் ...... திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் ...... பரஞான
தீப
விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் ...... தருவாயே
பாவ நிறத்தின்
தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் ...... தருவீரா
பாணிகள் கொட்டும்
பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா
தூவிகள்
நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் ...... புலியூரா
சூரர்
மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் ...... பெருமாளே.
பாடல் 498 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன
தானன
தானத் தானத் தாந்தன தானன ...... தனதான
கோதிக் கோதிக்
கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ......
குயில்போலக்
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப்
பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ......
வருமோவென்
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றுங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர்
ஓருச் சேரச்
சேர்ந்திடு வார்கலி
சூளைக் காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத்
தீம்பிடு வார்செய ...... லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல்
...... விடும்வேலா
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச்
சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக்
காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை
ஞானப் பால்முத் தேன்சுரு
பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி
யூர்மகிழ் ...... பெருமாளே.
பாடல் 499 ( சிதம்பரம் )
ராகம் -...; தாளம் -
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன ...... தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோ ல் பலவொலி
சதளம்பொற் றடிகா
ரருமிவை ...... புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே
வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும்
விருமஞ்சித் திரமமா
மிதுநொடி
மறையும் பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி
...... தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ
திகுதிகு
திகுர் தஞ்செச் செகசே செககண ...... எனபேரிக்
திமிர்தங்கற்
குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட
...... விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா
ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே
அமுர்தம்பொற் குவடோ
டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள் செம்பொற் புலியூர்
மருவிய ...... பெருமாளே.
பாடல் 500 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
------ 3 முறை ------ ...... தனதான
சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
கமுகடைந்தண் டமுதகண்டந்
தரளகந்தந்
தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ......
திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண்
டாரம்பொன் ...... தொடர்பாவை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந்
தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ......
கடைநாயேன்
புகழடைந்துன் கழல்பணிந்தொண்
பொடியணிந் தங்காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின்
றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய்
திகுடதிந்திந் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண்
டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோ டிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோ
ர்சங்கஞ்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் ......
கதிர்வேலா
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண்
டறுமுகம்பொன்
சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால்
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங் கொண் டோ தந்தம்
புனைகுறம்பெண்
சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண்
டார்கந்தம் ...... பெருமாளே.
பாடல் 501 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன
...... தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம ......
தணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்த நுராகசுக
காந்தமொ டூசியென
...... மடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஓர்ந்துண
ராவுணர்வி ...... லடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின ...... முளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக
ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய ...... னறியாது
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச
டாமகுட
மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி
யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.
பாடல் 502 ( சிதம்பரம் )
ராகம் - கெளளை; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு ...... முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்தரமொ டெழில்தோகை ...... மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர
ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட ...... வரவேணும்
விடைபரவி அயன்மாலொ
டமரர்முநி கணமோட
மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன்
மினலனைய
இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பி
...... னணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள்
புகழ்ஞான ...... பெருமாளே.
பாடல் 503 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன
தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
தத்தைமயில் போலுமியல்
பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம்
வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல
தைச்சரச மோடுறவெ யாடியக
மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி
நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னுறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி
...... யுடைசோர
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு
வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ......
செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை
யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே
துத்திதன
பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை
யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா
சுத்தவம காதவசி காமணியெ
னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை
தேவர்புகழ் ...... பெருமாளே.
பாடல் 504 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன ...... தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பினாடிட ......
மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம
னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்
தத்தை
பட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு லாவும்
வேசிய ...... ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல்
விக்கல்கொ ளூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி
பேரிகை ...... தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு
விட்டிடு சேசெ சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ காமி
யாரருள் ...... முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத
ணன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 505 ( சிதம்பரம் )
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2)
தகதிமி-2, தகிட-1
1/2, தக-1
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி ......
வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன
...... தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி
நிற்குமெனை ...... அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா
வெமக்கமிர்த
தோழா கடப்பமல ...... ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா
தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ...... மணவாளா
ஈசா தனிப்புலிசை
வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
பாடல் 506 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன
தத்த தந்தன ...... தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி
லங்கியை
நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே
நாரண புரத்தி
லிந்துவி னுடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை
மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங்
கூடிய
முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை ......
யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணர்
தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி
யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே
வேலதை யெடுத்து
மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட ......
லுண்டவேலா
வேசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி
சைந்தருள் ...... தம்பிரானே.
பாடல் 507 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன
தானத்தன ...... தனதான
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை
யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர்
நீலக்கய
லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ
ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ
ஆசைப்பத
மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி
...... தனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி
னாள்நிஷ்கள ...... உமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே
சோதிப்பிர காசச்செய
லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.
பாடல் 508 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ......
தனதான
பனிபோ லத்துளி சலவா யுட்கரு
பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
பயில்வா ருத்தியில் ......
சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
சதிகா ரச்சமன்
...... வருநாளிற்
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
தளர்மா யத்துய
...... ரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
விகடா ருக்கிட
...... விடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
மிகவே குட்டிய
...... குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
நிழலாள் பத்தினி
...... மணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
நிறைவே பத்தர்கள்
...... பெருமாளே.
பாடல் 509 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன ...... தனதான
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லுட்டியும் ......
வலைவீசும்
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே
இகலிய பிரமக பால
பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
மிதழியை யழகிய வேணி
யார்த்ததும் ...... விருதாக
எழில்பட மழுவுடன் மானு மேற்றது
மிசைபட
இசைதரு ஆதி தோற்றமு
மிவையவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர்
பாடு பாட்டென ...... மறைபாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி
கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு
மரனவ னுடனெழு
காளி கூட்டமு ...... மகலாதே
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
மரிதென முறைமுறை யாடல் காட்டிய ......
பெருமாளே.
பாடல் 510 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த
தாத்த ...... தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம்
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த
வாழ்க்கை
மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை
எய்ச்சி ளைச்ச
பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு ......
புலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு
...... புனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர்
சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.
பாடல் 511 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய
கன்ப டாகமொ ...... ரென்றுசேறுங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர
நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங்
கருணை யிந்திரி
யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்து நாதமொ
...... டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ
டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்
அதிக
விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி
சங்கு தாரைகள் ...... பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு
மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
வுரகு
னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.
பாடல் 512 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
--------- 3 முறை
--------- ...... தனதான
மருவு கடல்முகி லனைய குழல்மதி
வதன
நுதல்சிலை பிறைய தெணும்விழி
மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
ழொப்பக்
கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
தரள மெனுநகை
மிடறு கமுகென
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
மெனவு மிகலிய குவடு மிணையென
வட்டத்
துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ......
முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மமிர்த கழைரச
மட்டுப்
பொற்கம லத்திற் சக்கிரி
துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு
தொடையிணை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
வட்டப் புத்தக
மொத்துப் பொற்சர
ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
தித்தித்
துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
பலவில் சுளையென வுருக வுயர்மயல்
சிக்குப்
பட்டுடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ......
நரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசல
மொழுக பலவுரை குழற தடிகொடு
தெத்திப்
பித்தமு முற்றித் தற்செய
லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள்
முதுவுடல் வினவு பொழுதினி
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
செப்பற்
றுப்பிண மொப்பித் துப்பெய
ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன
மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
சிற்றிக் குக்கிரை
யிட்டிட் டிப்படி
நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்
குதிரை கொளவரு நிறைத வசிதலை
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
அருண வுழைமழு மருவு திருபுயர்
கொட்டத்
துப்புரர் கெட்டுப் பொட்டெழ
விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர
னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
கொட்டத் துட்டரை
வெட்டித் தட்கட
லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர எனவோ தமரர்கள்
கொட்பப்
புட்பமி றைத்துப் பொற்சர
ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு
நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திர
மிட்டுப் பொற்கக
னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
கடைய நெடியவர் திருவு மழகியர்
தெற்குத்
திக்கில ரக்கர்க் குச்சின
முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு
மனவலி சிலைகை கொடுகர
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
திக்கெட் டைக்கக
னத்தர்க் குக்கொடு
பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே
திலத மதிமுக அழகி மரகத
வடிவி பரிபுர நடனி மலர்பத
சித்தர்க்
குக்குறி வைத்திட் டத்தன்
முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
னரிய மகனென புகழ்பு லிநகரில்
செப்புப்
பொற்றன முற்றப் பொற்குற
தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.
பாடல் 513 ( சிதம்பரம் )
ராகம் - கல்யாணி; தாளம் - ஆதி
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா
தனத்ததன ...... தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழி ......
தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக ......
மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிடடுமல
நிலைவே ரறுக்கவல ......
பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது
...... வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ
ளொரொப்புமிலி ...... நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ
லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள்
தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
பாடல் 514 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன ...... தனதான
முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை
முத்து வாரணி பொற்குவ டார்முலை ......
விலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு
வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர்
...... மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற
வேபொருள்
செப்பி யாறும கப்பரி வோடுணர் ...... வருள்வாயே
தத்த னானத
னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட
...... விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு
ணாகர
தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி
மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன்
...... மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயி
லுற்று மேவிய ருட்புலி
யூர்வளர்
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.
பாடல் 515 ( சிதம்பரம் )
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
தனதனன தானத்
...... தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் ...... பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
கருவுதனி லுறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் ......
பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் ......
பெருமாளே.
பாடல் 516 ( சிதம்பரம் )
ராகம் - ...; தாளம் -
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான
தானன ...... தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே
காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச
மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே
பந்தியாய் வானு
ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் ......
சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர
...... முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா
னாளு மேமகிழ் ...... புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக
வேவரு
குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே.
பாடல் 517 ( கயிலைமலை )
ராகம் - ...; தாளம் -
தனதன தனனத் தான தனதன தனனத் தான
தனதன தனனத்
தான ...... தனதான
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோ டி
சிவவழி யுடனுற் றேக
...... பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர
மெரியத் தீயி ...... னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென
மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே
பரிபுர கழலெட்
டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல ...... மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி ......
அடியொர்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக ......
ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர்
கயிலைக் கான ...... பெருமாளே.
பாடல் 518 ( கயிலைமலை )
ராகம் - தோடி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன ...... தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங்
கருப்பிளநிர்
சீரும் பழத்தசிவ ...... ம ளுறத்
தீதும் பிடித்தவினை
யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப ...... மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப
தற்றுவெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த
சித்தியொடெ
நாளுங் களிக்கபத ...... மருள்வாயே
வானந் தழைக்கஅடி
யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலை ...... விடமாள
வாருங்
கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் ...... முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல ...... ரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் ......
பெருமாளே.
பாடல் 519 ( கயிலைமலை )
ராகம் - ...; தாளம் -
தனத்த தனத்த தனத்த தனத்த
தனத்த தனத்த ......
தனதான
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி ......
லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து ......
மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து
...... வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு
கலைக்குள் ...... விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த
கனத்த ...... தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த
பொருப்பி ...... லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.
பாடல் 520 ( கயிலைமலை )
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன ...... தனதான
பனியின் விந்துளி போலவே
கருவினுறு
மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
பனைதெ னங்கனி போலவே
பலகனியின் ...... வயறாகிப்
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி
மனவி தந்தெரி யாமலே
மலசலமொ
டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
மயம யின்றொரு பாலனா
யிகமுடைய ...... செயல்மேவி
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
அறம
றந்தக மீதுபோய் தினதினமு
மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய்
தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி
தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ......
மவுணோர்கள்
சினம ழிந்திட தேர்கள் தோலரிபரிகள்
குருதி யெண்டிசை
மூடவே அலகைநரி
சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா
சிவன்ம கிழ்ந்திரு ளானைமா முகன்மருவி
மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... ெருமாளே.
பாடல் 521 ( கயிலைமலை )
ராகம் - அடானா; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில்வித் ...... தகர்போல
அமர்தகவித் ...... தொடைபாட
அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.
பாடல் 522 ( கயிலைமலை )
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
தனத்தத் தனத்த தத்த ...... தனதான
முகத்தைப் பிலுக்கி மெத்த
மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே
முழுக்கக் கழப்பி யெத்தி
மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி
றுக்கி ...... யணைவார்பால்
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க
வைத்து
நயத்துக் தியக்கி நித்த ...... மழிவேனோ
செகக்கச் செகக்க
செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும்
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக்
கினித்த சித்தி ...... யருள்வோனே
மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப்
பொறுத்த ரக்கன்
மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய
மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
மிதித்துத் துகைத்து
விட்ட ...... பெருமாளே.
பாடல் 523 ( ஸ்ரீ சைலம் திருமலை )
ராகம் - பிலஹரி ; தாளம் - ஆதி
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தனதன
தனதன
தனதன தனதன ...... தனதான
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை ...... பெருமாளே.
பாடல் 524 ( திருவேங்கடம் )
ராகம் - முகாரி ; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமிதக-3, தகதிமி-2,
தகிட-1 1/2
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த
...... தனதான
கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள்
குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறுப லடைய
விழுந்து ...... தடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்பு
குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படுமவர் தொண்டு ......
புரிவேனோ
சிறுத்தசெலு வதன ளிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனோ டறிந்து
செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை
விஜய முகுந்தன் ...... முருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர
குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.
பாடல் 525 ( திருவேங்கடம் )
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா; தாளம் - ஆதி
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன ......
தனதான
சரவண பவநிதி யறுமக குருபர
சரவண பவநிதி யறுமக குருபர
சரவண
பவநிதி யறுமக குருபர ...... எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ......
வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர்
துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
திரிபுர மெரிசெயு
மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ......
வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு
மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
அரவணை
மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை
உமையவ ளருளிய ...... முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு லனமரு மரகர சிவசிவ ......
பெருமாளே.
பாடல் 526 ( திருவேங்கடம் )
ராகம் - ...; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத்
தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
...... தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர ...... நெடிதாடி
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி ...... நுதன்மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல
திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை ...... யருள்வாயே
நச்சுத்
துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி விடத்தை
யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை
...... மணிமார்பன்
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப்
பொருமாய
னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு ...... மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி ...... யணிமார்பா
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட
மலையுறை ...... பெருமாளே.
பாடல் 527 ( திருவேங்கடம் )
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன
...... தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும் ......
இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர்
போல்வடிவும் ...... மிகநாடிப்
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங
னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே
பாங்கியும் வேடுவரும்
ஏங்கிட மாமுநியும்
வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்முக
பாண்டிய னீறணிய ...... மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்யு மானும்வளர்
வேங்கட மாமலையி ......
லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு ......
பெருமாளே.
பாடல் 528 ( திருவேங்கடம் )
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன
...... தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம ...... யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென ......
மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோயந்துரு காவறிவு
...... தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி
போய்விடுவ ...... தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர ...... வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் ...... மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி ...... லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.
பாடல் 529 ( திருவேங்கடம் )
ராகம் - சக்ரவாஹம் ; தாளம் - திஸ்ர த்ருபுடை
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன ...... தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே
வளர்கோங்கிள மாமுகை
யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல்
நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள்
...... பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள்
சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய
நேமிய னாமரி ...... ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட
மாமலை மேவிய ...... பெருமாளே.
பாடல் 530 ( வள்ளிமலை )
ராகம் - தர்பாரி கானடா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
தய்யதன
தானத் ...... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
பாடல் 531 ( வள்ளிமலை )
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத்
...... தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் ...... பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் ......
கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் ......
தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற் ......
புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் ......
றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் ......
பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் ......
தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ......
பெருமாளே.
பாடல் 532 ( வள்ளிமலை )
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த
தான தந்த ...... தனதான
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு
கண்டு ...... மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு
பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன்
உள்ளப்பெ
றாக நின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை ......
புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப
தாகை கொண்ட ...... திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த
வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
பாடல் 533 ( வள்ளிமலை )
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த
தான தந்த ...... தனதான
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி
யின்ப ...... முயலாநீள்
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி
வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான
எல்லைக்கு மார
ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை
...... யொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை
வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு
...... புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
பாடல் 534 ( வள்ளிமலை )
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த
...... தனதான
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க ......
யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை ......
பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி ......
சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை
...... தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி
மாற்கு ...... மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு
நோக்க
வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
பாடல் 535 ( வள்ளிமலை )
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த
...... தனதான
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க ......
ருதும்வேளால்
வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத்
துறாக்க ...... வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
நல்லிற்
பொறாச்ச ...... மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்த ...... லையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த ...... இளையோனே
அல்லுக்கு மாற்றி னெல்லுக்க
மேற்புல்
கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே
வல்லைக்கு மேற்றர்
தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே
வள்ளிக்கு
ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
பாடல் 536 ( வள்ளிமலை )
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி 2 களை (16)
தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த ...... தனதான
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு
கனலெழ மொழிக்தரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை ...... சுமவாதே
யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
&