திருத்தங்குமாமுல்லைவாயிற்பிரானிருசேவடிநீர்த்
திருத்தங்குமார்க்கத்திற்செல்லாமலாடப்பெற்றேமினிமால்
திருத்தங்குமாரனென்றோதிப்பிறரைப்பின்சென்றுநின்று
திருத்தங்குமாதுமுனிந்தாலுநைந்துளந்தேம்பிலமே. |
1 |
தேங்கொன்றையாரணவுஞ்சடைவாழ்வைத்திசையனைத்துந்
தேங்கொன்றையாரணவல்லாரெமைச்சினஞ்செய்துபொறி
தாங்கொன்றையாரணஞ்செய்யாதுமுல்லைத்தலத்திறைவா
தாங்கொன்றையாரணவென்றிரந்தேத்துந்தவம்பெறினே. |
2 |
தவலரும்பல்கலைதேர்முல்லைவாயிற்சயிலவில்லார்
சுவலரும்பல்கலைதந்திடக்கொண்டவர்தூயமதி
நுவலரும்பல்கலைநீர்முடியாரைநுவன்றறியா
வவலரும்பல்கலைவேண்டியென்வீணிலலைவதுவே. |
3 |
அலைவனமந்தரங்காற்றங்கிமண்ணெனுமைந்துமல்லாத்
திலைவனமந்தரங்கத்தானமாத்திருமுல்லையின்வாழ்
தலைவனமந்தரங்காட்டுநஞ்சுண்டுதருவிசும்பிற்
கலைவனமந்தரங்காப்பினைமாற்றுங்கருணையென்னே. |
4 |
கருமமலங்கொடுமாயையுநீக்கிக்கதிர்த்துவரா
றருமமலங்கொடுபாய்தடஞ்சூழ்முல்லைதன்னிலொன்னார்
மருமமலங்கொடுசெற்றோன்பரசவரும்பெருமா
னருமமலங்கொடுமாமாசிலாமணியாண்டகையே. |
5 |
கைதவநாடகங்காட்டியறிவைக்கமரகத்தே
பெய்தவநாடகவாக்கழித்தாய்புகழ்பெற்றதொண்டைச்
செய்தவநாடகமுல்லைப்பிரான்பதஞ்சிந்தைசெய்தே
கைதவநாடகமேயெங்குளானெங்கணம்பனென்றே. |
6 |
எங்கணம்பன்பரசேரடியாரினிணைமலர்த்தா
ளங்கணம்பன்பரசேமுல்லையாயருளென்றமரர்
தங்கணம்பன்பரசேய்கரத்தான்முல்லைதன்னிறையாஞ்
செங்கணம்பன்பரசேதனன்பாதமென்சிந்தையதே. |
7 |
சிந்தைத்திருக்குமரமுங்களவுஞ்செறிந்தவஞ்ச
கந்தைத்திருக்குமரநேர்விழியவர்காமங்களு
முந்தைத்திருக்குமரன்மாயமுமுடித்தாளுமொரு
விந்தைத்திருக்குமரபறியாமுல்லைமெய்ப்பொருளே. |
8 |
பொருப்புக்குழைத்தகரத்தார்வமுல்லைப்புரத்ததியான்
கருப்புக்குழைத்தகரத்தார்நகக்கலங்காதருளும்
விருப்புக்குழைத்தகரத்தார்மலர்குழன்மெல்லியலா
மருப்புக்குழைத்தகரத்தார்தலைமைத்தென்வாழ்முதலே. |
9 |
வாரம்படைத்தகருநீலக்கண்மயில்பாகரயில்
வாரம்படைத்தகருவந்தகோன்றொழுமன்னர்செய்யின்
வாரம்படைத்தகருவறுப்பார்க்கிடம்வண்டொழில்செய்
வாரம்படைத்தகருவாற்குலைசெய்வளமுல்லையே. |
10 |
முல்லைப்பதிகமஞ்சூற்கொண்டல்சூழ்முதுகின்றினும்வாழ்
தில்லைப்பதிகமடமார்பன்மூவர்திருத்தமிழின்
சொல்லைப்பதிகமலர்த்தொடையன்றன்றுணைமலர்த்தா
ளொல்லைப்பதிகமனத்தேயமன்வருமுப்பொழுதே. |
11 |
தேங்கடம்புந்திகழுமலர்ச்சென்னிச்செவ்வேளைப்பெற்றோய்
தாங்கடம்புந்திகழுமலக்கோன்றமிழ்சூடியடி
யோங்கடம்புந்திகழுமலற்றோங்கவுயர்முல்லையா
யாங்கடம்புந்திகழுமலத்தெவ்வறவாணைகொண்டே. |
12 |
கொண்டலங்கண்டருமால்போலுமுல்லைக்குழகர்முன்னாள்
விண்டலங்கண்டருமாலுழந்தேங்கவெகுண்டெழுநஞ்
சுண்டலங்கண்டருமாபதியார்முடியூடுமதித்
துண்டலங்கண்டருமாவாவெனைத்தொண்டுகொண்டனரே. |
13 |
கொண்டானனங்கனஞ்சக்கொடும்பார்வைகுரைகடனஞ்
சுண்டானனங்கனம்வாவியுங்காவுமுலாவுமுல்லைக்
கண்டானனங்கனகம்புத்திமுத்தியுங்காட்டவஞ்சு
பிண்டானனங்கனற்கண்ணொடுவாழும்பெருமையென்னே. |
14 |
பெரும்புங்கவருமகிழ்ந்தேத்துமுல்லைப்பெம்மான்களவே
விரும்புங்கவருமதியாளர்நட்பைவிழையும்வெறுந்
துரும்புங்கவருமனமிதுதீர்த்தென்றுரிசுளத்தே
யரும்புங்கவருமவைகளுமாயவரும்பொருளே. |
15 |
அருவினையேனையெவர்புரப்பாரென்றழுங்கிநெஞ்சே
கருவினையேனைகாமின்றித்தென்முல்லைகாவலன்றாண்
மருவினையேனைவினைகளுநீங்கினைமாற்றினையிவ்
வுருவினையேனையுறுதியினியுனக்கென்குறையே. |
16 |
குறைமதியாதவமாற்றுநர்கேண்மைவெங்கோளர்பொய்ம்மை
மறைமதியாதவமாமோபரதமமார்க்கமிந்த
மிறைமதியாதவமாதவர்வாழ்முல்லைமேவுமன
னிறைமதியாதவமால்விழியாரைநினைநெஞ்சமே. |
17 |
நெஞ்சகங்கோடிமறமேபயின்றுநன்னீர்மையின்றி
வஞ்சகங்கோடிசெய்தாலும்பொறுத்தருள்வாயையனே
யஞ்சகங்கோடிரிந்தும்பர்குன்றாமலமுதுசெய்த
நஞ்சகங்கோடிவளைமுத்தமீன்முல்லைநாயகனே. |
18 |
நாயகங்கைக்கிளைதாந்தெங்கங்காயுறினாயென்செயுந்
தூயகங்கைக்கிளைமீனமெல்லாமச்சுவைகொள்ளுமோ
தீயகங்கைக்கிளையார்சேர்கிலாமுல்லைத்திண்பதியேந்
தாயகங்கைக்கிளையாற்பயன்கோடலத்தன்மையதே. |
19 |
தன்னகராவதுதென்முல்லையேதன்பணிமணிகண்
மின்னகராவதுவைப்பெண்கொடியிடைவெள்விடைநஞ்
சன்னகராவதுசெற்றதுவாமன்பர் நால்வர்க்கறஞ்
சொன்னகராவதுலாவென வேத்துநந்தோன்றலுக்கே. |
20 |
தோன்றற்கரியபொரு ளெளிதேவந்துதோன்றிநற
வூன்றற்கரியகுழன்மாதொடு முல்லையுள்ளிருந்து
கூன்றற்கரியல்பறியா முடிபுண்மைகூறியென்னை
யேன்றற்கரியயனேனோ ரழுக்கறுத்தென்பயனே. |
21 |
என்பதிகந்தனையேந்துங் குடங்கையிறைவனரு
ளென்பதிகந்தனைமுல்லையிற் சேர்ந்திலையித்துடக்கா
மென்பதிகந்தனையன்புவி பொன்பொருளென்றழிவ
தென்பதிகந்தனையைய கொல்லோபுகலேழைநெஞ்சே. |
22 |
சேவடிவானவரேத்தத்திசை
முகன்றேர்செலுத்தச்
சேவடிவானரிதாங்கப் புரஞ்செற்றதென்முல்லையாய்
சேவடிவானரமேவுங் கயிலைச்சிலம்பினர்
சேவடிவானறுந்தீந்தமிழ் பாடவுஞ்செய்தருளே. |
23 |
அருளாதரித்திரந்தன்பு
செய்வேங்கட்கமருலகோர்
பொருளாதரித்திரந்தானிற்குமோமுல்லைப்பொன்னையுள்ளா
மருளாதரித்திரந்தேர்ந்தறியா ரம்மடவரையே
வெருளாதரித்திரந்தோ வினைகாளிங்குமேவரிதே. |
24 |
மேவருந்தென்றலுக்காற்றா
தென்மான்வெம்பிநைந்துதனி
யேவருந்தென்றனக்கார்துணையாவரென்றேங்கியிந்த
நோவருந்தென்றயனேன் விதித்தானென்றுநொந்தழுமாற்
பாவருந்தென்றமிழ்முல்லைப்பிரானருள்பாலிப்பையே. |
25 |
பாலிவடகரைகோடியுமொன்
றெனப்பார்ப்பவர்வாழ்
பாலிவடகரைமுல்லைப் பிரான்பழிதீரவருள்
பாலிவடகரைவேலெம ரென்னினைப்பாரெனுமைம்
பாலிவடகரையன்னையர் நேர்ந்தும்பசப்புறினே. |
26 |
உறுமாசிலாமணிமாயையென்றேகொள்ளுயிர்க்கிவற்றைத்
தெறுமாசிலாமணிவள்ளல்வெற்பாவனைத்தேடிக்கண்ண
ரறுமாசிலாமணிவைத்த மண்பாவையன்னேனெனுஞ்சீர்
பெறுமாசிலாமணிகேட்குமுன் சோருமிப்பேதையின்றே. |
27 |
இன்றகலங்கலவாதொழிந் தாலுமெடுத்தசிலைக்
குன்றகலங்கநன்கொன்றையேனுங்கொடுத்தியன்றேன்
மன்றகலங்கலனேதூணிகட்புனல்வராவிடா
நின்றகலங்கலர்காணாத முல்லைநிருமலனே. |
28 |
நிருதியமனைவிந்திரனாதியர்நேர்த்திறைஞ்சிக்
கருதியமனனர்ச்சிக்க நல்குங்கடிமுல்லைத்தலை
வருதியமனனல்காதி யுலாவரைவாழ்த்துவமிம்
பருதியமனனயப் பேமலமலப்பாழ்ங்குழிக்கே. |
29 |
verses 30, 31 missing |
30, 31 |
வந்தனையாற்றமவாக்கொண்டு
தாளிணைவாழ்த்துமெய்த்த
வந்தனையாற்றமர்வார்க்கருள்வான் றருமையல்கொண்டு
வந்தனையாற்றமர்காணிலென்னா மென்றுவைதெனைத்தை
வந்தனையாற்றமருண்டே னருண்முல்லைவான்பொருளே. |
32 |
பொருதவிசாகரஞ்சத்தியுங்
கும்பனும்பொற்பழிக்க
விருதவிசாகரந்தானும் வருத்துமெய்யன்பருள்ள
மொருதவிசாகரந்தென்முல்லை யாவுடையாரருளா
ரிருதவிசாகரநெஞ்சே யல்லாற்செயலியாதுனக்கே. |
33 |
யாதவமாதவனாரணனா ரின்னுநாடியறி
யாதவமாதவடன்பால் வளரெழின்முல்லையினை
யாதவமாதவமன்றோ வென்னேரிரங்காதிருத்தல்
யாதவமாதவர்வெற்பா வறியவியம்புகவே. |
34 |
இயம்புகவேதனையா
மந்திரப்பொருளென்றுசிறைக்
கயம்புகவேதனைவீழ்த்தோன் புகழ்முல்லைக்கண்ணிருவர்
பயம்புகவேதனை நாடரிதாவளர்பண்ணவன்கா
வியம்புகவேதனையுற்றேற் கருண்மிகவைப்பதென்றே. |
35 |
வைப்பதுமத்தகமீதோர் விழிமுல்லைமாநகர்வ
சிப்பதுமத்தகயத்துரி போர்ப்பதுதேவிசா
ணப்பதுமத்தகம்வைப்பார்க் கறுப்பதுநான்கிரண்டு
முப்பதுமத்தகவாளர்க் கென்னோமயன்மூண்டதுவே. |
36 |
மூண்டவிக்காமன்றனக்
கம்பலர்மொழிநாணரிவின்
னிண்டவிக்காமன்னவைத்தமை போர்நெடுங்காமமகத்
தீண்டவிக்காமன்வருத்தாதெமைக்கொக்கிறான்மிடற்றிற்
றீண்டவிக்காமன்மிசைதடஞ்சூழ்முல்லைச்சிற்பரனே. |
37 |
பரம்பரன்பண்டரங்கன்முல்லைவாணனெண்பாற்குணமு
நிரம்பரன்பண்டரங்கன்றேட நீண்டநிமலனெண்டிக்
கொரம்பரன்பண்டரங்கண்டோதும் பத்திரவுத்தமயாழ்
நரம்பரன்பண்டரங்கஞ் சேரருட்கடனந்தெய்வமே. |
38 |
நந்தமருமந்தமெய்வாழ்வுமற்றைநலங்களுந்தி
கந்தமருமந்தவான்புகழ்சேர்முல்லைக்கண்ணிருந்த
பந்தமருமந்தமெல்விரல்பாகன்பகைவருரஞ்
சிந்தமருமந்தனைப்போழுஞ்சூலத்திருக்கரனே. |
39 |
திருமுல்லைவாயின்
மருவுமெந்தாயிளஞ்சேய்க்கழகு
தருமுலைவாயின்வைத்தாலன்றி யுண்ணுந்தகுதியுண்டே
வருமுலைவாயினற்பட்டழுந்தா தெமையாண்டுமன
மிருமுலைவாயின்மெழுகாயுருகச் செய்தேன்றுகொள்ளே. |
40 |
கொள்ளுந்திகம்பரமுல்லைப்பிரான்பைங்குழவிநிலா
வெள்ளுந்திகம்பரவுஞ்சடையான்வெற்பினீர்ச்சுழியைத்
தள்ளுந்திகம்பரநேர்களங்கண்ணிதருநலத்திற்
குள்ளுந்திகம்பரமெல்லாமதிப்பினுமொப்பல்லவே. |
41 |
அல்லியந்தாமரையாளிடமோர்பொழுதவ்வளம்போய்
வல்லியந்தாமரையாளிடமாமதைவாழ்த்திடன்மின்
பல்லியந்தாமரையாமத்தினுங்கண்படாமுல்லையார்ப்
புல்லியந்தாமரையாசையின்வாழ்த்தும்புலவர்களே. |
42 |
புலத்தலைவாவினியாற்றேமென்றெய்துநர்புந்திவெந்தீப்
புலத்தலைவாவினுங்கைகொடுப்பார்முல்லைப்பூவைவிடு
புலத்தலைவாவிநன்னீர்விளையாடிப்புணருதும்வா
புலத்தலைவாவிங்ஙனென்றருள்வாய்மலர்ப்பூங்கொடியே. |
43 |
கொடியானையந்தநல்லூரனையாண்டநங்கோனைமதக்
கொடியானையந்தகனைச்சீறிமுல்லையுட்கோவைமுல்லைக்
கொடியானையந்தபவாண்டானையீண்டுறற்குக்கரைந்தாற்
கொடியானையந்தமுள்ளாய்க்கிடுவேன் கொளுமூன்பலியே |
44 |
ஊன்காளத்திக்குச்சுவையுளதோதிண்ணுடற்கறைக்கா
னான்காளத்திக்குத்தெளிவுளதோமுல்லைநாயகனெங்
கோன்காளத்திக்குத்தரனலம்யானறிகொள்கையல்லான்
மான்காளத்திக்குக்கியாராவர்போலுமற்றெங்கையரே. |
45 |
கைக்கவிகமகநைந்தழுங்கிக்கலங்காதருள்சேர்
கைக்கவிகமகவாதியிலாசைகருத்துள்ளுக
கைக்கவிகமகனாதியர்வாழ்முல்லைகாவலன்புன்
கைக்கவிகமகவுங்கொடுபாய்கழுங்குன்றனையே. |
46 |
குன்றத்தஞ்சாதிமலர்க்கூந்தன்மாதிடங்கொண்டிருந்த
னன்றத்தஞ்சாதிவழாமுல்லைவாணனடித்தனன்றென்
மன்றத்தஞ்சாதிநெஞ்சேநமக்கென்குறைவாழ்வுபெற்றேம்
பின்றத்தஞ்சாதிரிமாயாயென்றேவெற்றிபேசுவமே. |
47 |
பேசித்திருந்தநம்முல்லையில்வந்தெமைப்பேணித்தொண்டீர்
பூசித்திருந்தம்வினைதீர்த்துமென்றருள்பொற்பர்வெற்பி
னேசித்திருந்தண்புனலீர்க்கும்போதுற்றுநேர்ந்தெடுத்தா
ராசித்திருந்தபடிபோலொருவரஞ்சாதியென்றே. |
48 |
சாதிப்பரியதவத்தார்க்குமுல்லைத்தலத்தினுண்மை
போதிப்பரியனலம்பாடுதும்புல்லறிவுபரம்
பாதிப்பரியமனைதோறும்வண்டுபகர்ந்ததுமுன்
காதிப்பரியகளிற்றுரிபோர்த்ததுங்கட்டுரைத்தே |
49 |
கட்டோம்புதலெனக்காமாதியாறுங்கரிசறுத்தோ
முட்டோம்புதவுதிறந்தின்பவீடுபுக்குச்சரித்தோஞ்
சிட்டோம்புதல்விமண்ணோருந்திகஞ்சந்தெளிவின்முன்பின்
விட்டோம்புதலுறுநள்ளெழுத்தான்முல்லைமேவப்பெற்றே. |
50 |
பெற்றவரம்பலவுங்குன்றயான்பிணைபோல்வெருள
வுற்றவரம்பலங்கோதவென்பேதையொருதனியே
முற்றவரம்பலசெய்தகன்றாளென்னைமுல்லைப்பிரான்
கற்றவரன்பலவற்பணியாரிற்கடுஞ்சுரமே |
51 |
கடுத்தியம்பாம்பன்மலரானையாதுகவலைநெஞ்சே
விடுத்தியம்பாம்பனல்வாயாற்புகழ்ந்தின்றுமேவுதுமுட்
படுத்தியம்பாம்பலுரிபிறைமான்வெம்பரசொடுந்து
வடுத்தியம்பாம்பணிமுல்லையுளம்பலவாணனையே. |
52 |
அம்பலவாணன்மடவார்விழியென்றழிந்துழலு
மம்பலவாணங்கனையலியாகியமர்ந்தருளு
மம்பலவாணன்றிருமுல்லைவாயிலழகன்றில்லை
யம்பலவாணன்வழியினில்லா வென்னறிவுகளே. |
53 |
அறிவறியாகமெதுவதுவாகமல்லாதவென்னாங்
குறிவறியாகடிமுல்லையிற்சேர்புழுக்கூட்டைவிண்டு
தறிவறியாகஞ்செயன்பாலெனையர்ச்சனைசெயுன்பாற்
செறிவறியாகந்தருவலென்றாண்டனன்சின்மயனே. |
54 |
மயங்காதுவரையும்பொய்ப்பொருளியாவும்வரையச்செய்ய
பயங்காதுவரையுண்மால்போற்றுமுல்லைநம்பாவிழிப்பங்
கயங்காதுவரையுநீள்சீர்க்கொடியிடைகாதலசூர்
சயங்காதுவரையுமைங்கரனாரையுந்தந்தவனே. |
55 |
தவத்துக்கணிகலனட்டோனென்றறோரிற்றவறுமவை
பவத்துக்கணிகலனெஞ்சேயிவைவிடப்பார்வடிவ
கவத்துக்கணிகலன்மாவாக்குமுல்லையினானரியா
யவத்துக்கணிகலந்தோர்பான்மருவுமெம்மண்ணலையே. |
56 |
அண்ணலந்தோயமனைவீட்டிமுல்லையிலார்ந்ததுவு
மெண்ணலந்தோயமுடித்ததுமற்றெம்மிறைவியைப்போ
லுண்ணலந்தோயவிழைந்திரந்தேங்கியுளைந்துநந்தம்
பெண்ணலந்தோயவெளிவந்தருளுமெய்ப்பேறன்றியே. |
57 |
அன்றினங்காதரமாய்நின்றுகத்துமலைகடலெம்
முன்றினங்காதரவத்துக்களவிலைமூரிமதன்
கன்றினங்காதரவாருளரோவிருகண்ணுந்துஞ்சா
வின்றினங்காதரமாமுல்லைவாணமற்றெங்களையே. |
58 |
களைகண்டனம்புயமாமுல்லைக்கோன்வெற்பகாதன்மிக்க
கிளைகண்டனம்புயன்மேவுந்தடவரைக்கீழொருசார்
விளைகண்டனம்புயங்கஞ்சேல்வல்வேய்சொன்னடைநிதம்பந்
திளைகண்டனம்புயமாக்கொண்டுநிற்குமொர்தீங்கரும்பே. |
59 |
தீங்கரும்புங்கவறாடிப்பயனிலைசெப்பின்மின்னார்
தாங்கரும்புங்கவலாக்கனியும்மெனச்சாற்றியந்தோ
நீங்கரும்புங்கவசையுறுவீர்முல்லைநீணகரின்
பாங்கரும்புங்கவரும்போற்றுமீசனைப்பாடுமினே. |
60 |
பாடகமன்னவருந்துயர்தீரப்பரன்புகழ்வாய்
பாடகமன்னவருங்குணம்போனலம்பார்த்தெடுத்துப்
பாடகமன்னவருளான்றன்பாற்பைங்கொடியிடையென்
பாடகமன்னவரும்போற்றவாழ்முல்லைப்பண்ணவனே. |
61 |
பண்ணகங்காரிகைபான்முல்லைவாயும்பதிந்திருந்தோய்
வண்ணகங்காரிகைமற்றுமென்போற்பகர்வாரிலையென்
றெண்ணகங்காரிகைதூவாதியற்றுமிருவினையாந்
திண்ணகங்காரிகைதீண்டுமெந்தாய்கெடச்செய்தருளே. |
62 |
செய்தவமாயத்தன்செல்வமுநீயெனச்சிந்தைசெய்யா
தெய்தவமாயத்தன்மங்களைமாற்றியியற்றுமென்றன்
கைதவமாயத்தன்மைக்கோரளவில்லைகண்ணருளாற்
பொய்தவமாயத்தன்முல்லையுள்ளாய்நலம்போதிப்பையே. |
63 |
திப்பியமாவடுதண்டுறைக்கண்ணுந்திருந்துநிலை
தப்பியமாவடுத்தீர்முல்லையூரினுஞ்சந்தமுலை
யம்பியமாவடுவார்கண்ணிபாகனமர்ந்துபுகழ்
பப்பியமாவடுநாமமொன்றாக்கொண்டுபாரிப்பதே. |
64 |
பாரகந்தைக்குமரும்புகழ்சேர்முல்லைப்பாலவருள்
பாரகந்தைக்குமதியார்பின்சென்றுதண்பாலிநதிப்
பாரகந்தைக்கும்வழியின்றிவாடும்பரிசுநன்றோ
பாரகந்தைக்குமைக்குங்கயஞ்செற்றபராபரனே. |
65 |
பரங்கிரியாவிகள்சூழ்முல்லைபோற்பரிந்தென்னுளமா
மரங்கிரியாவிடையாரருளுண்மையறிவினின்ற
வரங்கிரியாவியினுள்ளேயழுத்தும்வகையறியேன்
சிரங்கிரியாவிதியாற்றுஞ்செல்லேனுய்யுஞ்செய்கையென்னே. |
66 |
செய்வசித்தாந்தமிழ்முல்லையுளீசசெவ்வேமநய
வைவசித்தாந்தம்பொருளைந்துடையவவற்றிரண்டு
நைவசித்தாந்தவிர்மூன்றுமொன்றொன்றினணுகுமென்னுஞ்
சைவசித்தாந்தநெறியுபதேசந்தனையெமக்கே. |
67 |
தனையரியானனநான்கானுந்தேடிடத்தான்முடியாஞ்
சினையரியானனமார்தடஞ்சூழ்முல்லைச்சிற்பரனென்
வினையரியானனருள்சேர்ந்துநீயொருமின்னின்விழி
யினையரியானனனேர்மெழுகாயினென்னாம்பிறிதே. |
68 |
தேவருந்தானவருங்காரி
கண்டஞ்சித்தீவினையா
னேவருந்தானவனாம் பகுப்பற்றவர்நேர்முல்லைநம்
பாவருந்தானவவென்றோ லிடப்பண்டருந்தியுமந்
தோவருந்தானவமீதறியார் சிலர்தொண்டர்களே. |
69 |
தொண்டையநாடுகடீரச்செய்யாமற்றுவரிதழ்வாய்த்
தொண்டையனாடுமலர்க்கூந்தலார்க்குடைந்தும்பிழைத்தேன்
றொண்டையனாடுபுகழோங்குமுல்லையிற்றோன்றுமுருத்
தொண்டையனாடுமலரடிக்கீழின்றிதொண்டுசெய்தே. |
70 |
செய்யுடையல்குலைக்காட்டிமய்க்குநர்தீமைகெடச்
செய்யுடையல்குலைப்பால்வளைவெண்ணித்திலம்பரப்புஞ்
செய்யுடையல்குலையாவளமுல்லையிற்சேர்ந்துபகர்
செய்யுடையல்குலைத்தாரானைப்பால்வைத்ததேவைநெஞ்சே. |
71 |
நெஞ்சலமந்திரங்கக்கூற்றந்
தோன்றினுநெக்குருகி
யஞ்சலமந்திரந்தான் முதலாறுமற்றேமறுத்தேஞ்
சஞ்சலமந்திரம்பெற்றுள முல்லைத்தலத்தழகு
துஞ்சலமந்திரந்தன்னிலெங் கோனைத்துதிக்கப்பெற்றே. |
72 |
பெற்றத்திருந்துறுவாழ்
வெமக்கீயப்பெருகுவள
முற்றத்திருந்துறுமுல்லையின் முல்லையின்முல்லியில்வாழ்
நற்றத்திருந்துறுநீர்வேணியீர் நள்ளுமன்பரென்னுஞ்
சுற்றத்திருந்துறுகண்டீர்த் தெமைத்தொண்டுகொள்ளுமினே. |
73 |
மின்பங்கம்பொன்றுந்துமேருவில்
லோடமர்வேதியவென்
றன்பங்கம்பொன்றுந்துறைகாட்டி முத்தியிற்சாரவரு
ளன்பங்கம்பொன்றுந்துபியோசை யென்றுமறாமுல்லையா
யின்பங்கம்பொன்றுந்துவர்க்கையற் கீந்தருளென்னரசே. |
74 |
அரங்கந்திருவம்பலமுக்கணானுக்கமர்விடஞ்சீ
ரிரங்கந்திருவம்பலர்தொறும் வாழவிலங்கும்பிர
மரங்கந்திருவம்பலபாடும் வாவிகண்மல்குமுல்லைப்
புரங்கந்திருவம்பலங்குங் கொடியிடைப்பூண்முலையே. |
75 |
பூண்டிலஞ்சித்தத்துமெய்யன்பெவ்வாறினிப்பொன்பெண்ம
ண்ணாந், தூண்டிலஞ்சித்தத்துவங்கடந்தானந்தந்தோய்வுற
லூர்,பாண்டிலஞ்சித்தத்துவாத்துடக்கொக்கப்பறித்தருள்வா,
யாண்டிலஞ்சித்தத்துநீர்புடைசூழ்முல்லையங்கணனே. |
76 |
அங்கங்கரகரவென்றோதம்போலொலியார்ப்பவன்பர்
சங்கங்கரகரகத்தோர்துதிக்கத்தண்ணீற்றினொளி
பொங்கங்கரகரமுல்லையுள்ளாரெனைப்பொத்திக்கொண்ட
பங்கங்கரகரநின்றாலுனைப்பற்றிக்கொல்லுவரே. |
77 |
பற்றிக்கொல்லாதொழிவேனோவினிமலப்பாவமறங், கற்றிக்
கொல்லாருலைவேற்கண்ணிபால்கவர்முல்லைப்பிரான்,
பெற்றிக்கொல்லாதவர்போலென்றனையெண்ணும்பேதையெண்ண,
முற்றிக்கொல்லாம்வருகின்றனைபாரின்றென்முன்னர்வந்தே. |
78 |
வந்தியன்றேவரைநின்னன்றியான்முல்லைவாணவென்னோ
வந்தியன்றேவரையாதருளாமைமண்முற்றும்பெற்றும்
வந்தியன்றேவரைமாமாதுநீயுமவ்வாறுநின்செவ்
வந்தியன்றேவரைவாட்கரித்தான்கெடவைத்தவனே. |
79 |
வைத்தலைவாளிநிகர்விழியான்மதனம்புடல்சு
வைத்தலைவாளினியாற்றகில்லாண்மன்னச்செய்தியருள்
வைத்தலைவாளினிதார்முல்லைவாண்மதிக்குடைக்கோ
வைத்தலைவாளினிலேற்றன்றிச்சாந்தம்வார திவட்கே. |
80 |
வட்காதகைதவரூரெரித்தாயுன்னைவாஞ்சித்தவி
வட்காதகைதவமிக்கோர்புகழ்மணிவார்த்தைநிறை
யுட்காதகைதவவாணர்கள்வாழ்முல்லையுத்தமனே
யுட்காதகைதவன்கைப்பிரம்பாலடியுண்டவனே. |
81 |
உண்டாயினந்தமயல்செய்வதென்னினியோடுநஞ்ச
முண்டாயினந்தமதாண்டவன்முல்லையுறாருறும்புன்
கண்டாயினந்தமர்போல்வந்தெம்மான் கண்ணருள்புரிந்தான்
கண்டாயினந்தமமேயுனக்கீங்கென்னகாரியமே. |
82 |
மேதக்கசிந்தனைத்தாபதர்வாழ்முல்லைமேவுநம்ப
வாதக்கசிந்தனைத்தாவீரமென்றட்டுமன்மதனைக்
காதக்கசிந்தனைத்துங்குடியார்முடிக்கண்ணுதலென்
றோதக்கசிந்தனைக்கென்னெஞ்சமேகுறையோதுதியே. |
83 |
துதிப்பருந்தாதவிழ்பூம்பொய்கைசூழ்முல்லைத்தொன்னகாவாழ்
மதிப்பருந்தாதகிகொன்றைச்சடாதரவானியங்குங்
கதிப்பருந்தாதரவாயென்னுடம்பிற்கசியும்புலாற்
குதிப்பருந்தாதமுன்வந்தென்றனைத்தொண்டுகொண்டருளே. ) |
84 |
அருந்துதியானன்பினேத்தவைத்தாரருள்கற்பினல
மருந்துதியானம்புவிக்களித்தாரகுளாரமுதை
யருந்துதியானம்புரிமனமேவிரைந்தாள்வரெம்மை
யருந்துதியானன்கவர்முல்லைக்கேசொல்லுமவ்வெண்ணமே. |
85 |
எண்ணப்படிகடியாதன்பர்க்கீந்தெழின்முல்லையினுங்
கண்ணப்படிகடியானத்துந்தோன்றுமிக்கான்கழற்கீழ்
நண்ணப்படிகடிநெஞ்சேயவனம்பிழையெண்ணினுந்
தண்ணப்படிகடிதாறுதல்போலுமத்தன்மையனே. |
86 |
அத்தன்மையர்ந்தெரியற்குழலாரமர்முல்லைநில
யத்தன்மையாந்தெரிமூழ்காமலுண்மையருவுருக்கா
ரத்தன்மையாந்தெரியக்குருவாய்வந்தனைத்துமல்லா
வத்தன்மையாந்தெரிவைபாகத்தாமறியென்றனனே. |
87 |
அறிவென்றவவழிச்செல்லார்தமையுமடக்குங்கண்ணாய்
குறிவென்றவவடியேற்களித்தாயிணைக்கூற்றின்மையாற்[வை
பொறிவென்றவர்பெறும்பேற்றையொக்குமிப்பொன்னுரு[ச்
செறிவென்றவவலியென்றோவெம்மான்முல்லைத்தீங்கரும்பே. |
88 |
கருப்பந்தங்குங்குறியான்முல்லைவாணகதிகடொறுந்
திருப்பந்தங்குங்குமலமால்போன்றுதெரிவையரைப்
பொருப்பந்தங்குங்குமக்கொங்கையென்றோதிப்பொய்யாதொழிப்பா
யுருப்பந்தங்குங்குலியக்கலயன்றொழிமுத்தமனே. |
89 |
தமக்கடியாகமையொன்றித்தவஞ்செய்யுந்தன்மையிலா
தமக்கடியாகமுதவாரைச்சாரத்தகுமுனக்குத்
தமக்கடியாகமறையாளர்முல்லைத்தலத்திறைவர்
தமக்கடியாகமெய்த்தொண்டுசெய்வேங்களைச்சார்வரிதே. |
90 |
சார்வருந்திப்பியமால்கொள்வதென்னைதண்முல்லைநகர்ச்
சார்வருந்திக்குடையார்செயல்கேட்டிதகுவர்கட
மூர்வருந்திக்கெடப்புன்மூரல்கொள்ளுவரோரெருதை
யூர்வருந்திப்புனல்சூடுவராடுவரொண்ணுதவே. |
91 |
ஒண்ணுதலங்கனைமாரிடந்தோறுமுவந்துநடம்
பண்ணுதலங்கனையக்குழைத்தார்முல்லைப்பாடியினை
யண்ணுதலங்கனையானைத்தொழலிவையன்றிநெஞ்சின்
கண்ணுதலங்கனைமுன்நீருலகிற்கருமங்களே. |
92 |
மங்களமேவியன்முல்லைப்பிரானின்றுவைத்தனன்கா
மங்களமேவியனாட்டத்தவர்பொய்மலமதங்கன்
மங்களமேவியசெய்தெனைவாட்டுமனமினிநீ
மங்களமேவியபுன்புதன்மானவலியிழந்தே. |
93 |
இழவாதென்போதமிழப்பித்தமுல்லைக்கிறையவனைத்
தெழவாதென்போதகங்கைக்கொண்டென்றன்மைத்துரிசுகளி
னுழவாதென்போதமெய்யன்புசெய்வீணிலுழலுமிந்தப்
பழவாதென்போதவிர்நெஞ்சேயுனக்கிதுபண்பல்லவே. |
94 |
அல்லாக்குமாரிருணெஞ்சேதொழும்பர்க்கடித்தொழில்செ
யல்லாக்குமாரியென்றேத்தேலகிலமுமீன்றுமுதிர்
வல்லாக்குமாரிதன்பங்காளனீலவரங்கமெல்லை
யல்லாக்குமாரியமுல்லைப்பிரானடிக்கன்புசெய்யே. |
95 |
அன்புடையாளியங்காக்குறுங்கானத்திவல்சியெனத்
தன்புடையாளியங்காக்குமதர்தனியெய்தவிவ
டுன்புடையாளியங்காக்குமொலிமுல்லைத்தோன்றலதள்
வன்புடையாளியங்காக்குமிடறன்னவல்லிருளே. |
96 |
வல்லியம்போதகவண்டோடொலிக்கும்வளமுல்லைவாழ்
வல்லியம்போதகமாய்த்தபிரான்வரைமேலிடையோ
வல்லியம்போதகவாம்விழிதாமிந்தவார்முலையோ
வல்லியம்போதகரக்குழலாய்திருவாய்மலர்ந்தே. |
97 |
வாயானஞ்சக்கரமால்விடையாவைத்தமுல்லைப்பிரான்
வாயானஞ்சக்கரமோதித்தொழாதவறியர்க்கெய்த
வாயானஞ்சக்கரமீதுணவேந்திமயிலைத்துறை
வாயானஞ்சக்கரவாதழலாய்வருமம்புலியே. |
98 |
அம்பவளவளவாயெனக்கும்முல்லையாளர்வில்லி
னம்பவளவளவாம்விழியெங்கைக்குமன்புவைத்த
நம்பவளவளவாச்சொரிபாலொக்குநட்பறியாய்
நம்பவளவளவாவேதகுமிங்குநண்ணலையே. |
99 |
நண்ணத்திருவளவானந்தவீட்டினயந்தெண்ணிடு
மெண்ணத்திருவளகத்திகழ்ந்தேகிரியிரும்பரிதி
வெண்ணத்திருவளர்கையேந்திகாணரும்வேந்தனமர்
திண்ணத்திருவளமுல்லையிற்சேர்மின்றிருத்தகவே. |
100 |