Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationசீலத்திரு கச்சியப்ப முனிவர் இயற்றிய "பேரூர்ப் புராணம்" - படலம் 1-8 (1-627) > படலம் 8 - 18 (628-1276) >  படலம் 19 - 29 (1277 -1859) > படலம் 30 - 36 (1860 -2220)

சீலத்திரு கச்சியப்ப முனிவர்
இயற்றிய "பேரூர்ப் புராணம்" - படலம் 8 - 18 (628-1276)

pErUr purANam of kAcciyappa munivar - verses 628-1276


Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of Singapore for the preparation of this etext in Unicode (input and proof-reading). Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

10. தென்கயிலாயப் படலம்

628-702

11. வடகயிலாயப் படலம்

703-745

12 நிருத்தப்படலம்

746-883

13. அபயப்படலம்

884-923

14. மருதவரைப்படலம்

924-1070

15. சுமதி கதிபெறு படலம்

1071- 1134

16. முசுகுந்தன் முகம்பெறு படலம்

1135 -1188

17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம்

1189-1214

18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம்

1215-1276


    10. தென்கயிலாயப் படலம் (628-702)

    628

    கள்ளிவர் நீல மலர்ந்து விரைத்த கழிச்சூழல்
    துள்ளிய வாளை விழுந்து களச்சொரி செந்தேனால்
    பள்ளம டைப்பணை பைம்பொழில் சூழ்ந்து பரிந்தோம்பும்
    வள்ளிய கீழைச் சிதம்பர மென்றொரு வைப்புண்டால்.

    1

    629

    ஆரண மின்னு மளந்திது வென்றறி யாதெய்க்கும்
    பூரணன் மேலைச் சிதம்பர வைப்பது போலென்றும்
    வாரண வுந்தன மாதுமை காண மகிழ்ந்தாடு
    நேரண வுந்தவ ரல்லது காண நிகழ்ந்தானால்.

    2

    630

    அத்தகு மாநட னந்தரி சிப்ப வருட்டாதை
    உத்தம னேவ வியாக்கிர பாத னுவந்தேகிப்
    பத்தியினால்வழி பாடுகள் செய்து பயின்றியோகின்
    வைத்த கருத்தொடு வைகினன் வைகிய காலத்து

    3

    631

    தாரு வனத்தினர் கொள்கை தெரிந்து தடுத்தாள
    வாரு மதிக்கணி யுஞ்சடை வேய்ந்தழ லூடாடுங்
    காரு மலைத்த களத்தர் பயிக்க வுருக்கொண்டார்
    வாரு மலைத்தெழு பூண்முலை மாதுரு மால்கொண்டான்.

    4

    632

    வழிய தாரு வனத்திடை மற்றிரு வோருஞ்சென்
    றாழியி னான்முனி வோர்நிறை சிந்த வருட்செல்வன்
    தாழிரு ளோதியி னார்நிறை கொண்டு தவத்தோர்கள்
    பாழிய னைத்து மறுத்தவ ணாடல் பயின்றானே.

    5

    633

    ஆங்குட னின்றரு ளாடல் வணங்கிய மாலன்று
    வீங்கிய வல்லிரு ணீங்கிய காலை விழிக்கின்றான்
    பூங்கணு கப்புனன் மெய்முழு தும்புள கம்போர்ப்பத்
    தாங்கிய வன்பொடு சங்கர சங்கர வென்றார்த்தான்.

    6

    634

    அச்சுத கந்த னினுங்குளிர் சேட னடுத்தேத்தி
    அச்சுத மிட்ட வருச்சியி னான்விழி யான்முன்னாள்
    அச்சுதன் வெந்தவி ஞான்று மயர்த்திலை யிக்காலத்
    தச்சுத வென்கொ லயர்த்தனை யென்று வினாயன்னான்.

    7

    635

    மாதவர் சிந்தை மயக்க மறுத்து மகிழ்ந்தாடல்
    நாத னவின்றது மற்று முரைப்ப நடங்காண
    ஆதர வுற்றருள் பெற்றொளிர் மேரு வடுத்தன்பால்
    காதர மோட வருந்தவ முண்டிகை விட்டாற்றி.

    8

    636


    கானமர் கொன்றையி னாரெதிர் போந்து கருத்தோர்ந்து
    தேனமர் தில்லை வனம்புகு மாறுசெப் பிப்போத
    வான மரத்திரி வாழன சூயை மருங்கன்று
    தானமர் வுற்ற பதஞ்சலி யாய்த்தன தூர்நண்ணி.

    9

    637

    சில்பக லங்க ணிருந்து திகழ்ந்த பிலத்தூடு
    பல்பக னீங்க விவர்ந்து வியாக்கிர பாதன்சேர்ந்
    தல்பக லுந்தொழு தில்லை யடுத்தனை யானீயிங்
    கொல்பக னற்பக லென்று களிப்ப வுடங்கண்மி.

    10

    638

    பொன்னொடு பூசம் வரக்கதி ரோனடு வான்புல்ல
    மின்னொளிர் மன்றின் விளங்கிழை காண விடைப்பாகன்
    நன்னட மாட நயந்து பணிந்து நலங்கொண்டு
    மன்னி யிருந்தன னாடொறு மாடன் மகிழ்ந்தேத்தி.

    11

    639

    வேறு
    ஆய காலை யாழிப் பாயலான்
    போய சேடன் புரிவ தென்னெனத்
    தூய நெஞ்சிற் சூழு மெல்லையின்
    மேய வீணை முனிவன் விள்ளுவான்.

    12

    640

    மேரு மாட்டு மேவி மாதவ
    மாரு மாற்றற் கரிய தாற்றினான்
    ஓரு மீச னுருவு வேறுகொண்
    டீரு னார்வ மென்று பேதித்தான்.

    13

    641

    உறுதி நோக்கி யுமையொர் பாகனாய்
    மறுவி லாத வாய்மை கூறுபு
    நிறுவு தில்லை நிருத்தங் காட்டிடச்
    சிறுமை நீங்கிச் சேவை செய்யுமால்.

    14

    642

    இனைய வண்ண மியம்ப நாரதன்
    வனைது ழாயின் மௌளலி வானவன்
    அனைய னாயி னான்கொல் சேடனென்
    றனையன் னான தருளை முன்னினான்.

    15

    643

    ஈங்கி ருந்திட் டென்னை யெய்தினேன்
    ஆங்க வன்ற னோட டுத்துநான்
    பாங்கி னோற்பிற் பரத மற்றெனை
    நீங்க வீச னிகழ்த்து மேகொலாம்.

    16

    644

    ஏற தாக வேறி னானுருக்
    கூறு மாகக் கொள்ள கில்லனோ
    ஆறு சூடி யாடல் காண்பலென்
    றூறு மன்பி னொய்யென் றேகினான்.

    17

    645

    வேறு
    பொற்கோட் டிமய வரைப்புறத்துப் பொலிந்த கயிலை வரையடுத்துச்
    சொற்கோட் டமுமெள வியவுளமுந் துறந்த வடியார் தொழுமேரு
    விற்கோட் டியகைப் பெருமானை விரையார் மலர்தூஉய் மணியிமைக்குங்
    கற்கோட் டிமிலேற் றின்னிரைகள் காப்ப வெடுத்தோ னிறைஞ்சினான்,

    18

    646

    வேறு
    எழுந்துவலம் வந்தன னிருந்துதி விளைத்தான்
    கொழுந்துமதி வேய்ந்தகுழ காகுறு வார்கட்
    கழுந்துபடு வன்பிறவி யாழிகரை யேற்ற
    முழுந்துருளு முன்னுதவு மும்பர்பெரு மானே.

    19

    647

    வீமதிரி யம்பக விடங்கமல நாச
    வாமமக லாதவுமை மாதுமண வாள
    தாமமணி வேணிசசி கண்டவிட முண்ட
    சேமமணி கண்டசிவ லோகவடி போற்றி.

    20

    648

    புராதன நிராமய புரங்கள்பொடி செய்த
    தராதல நெடுஞ்சகட சங்கர சயம்பு
    கராசல வுரிக்கவய கச்சப வுரத்த
    அராவணி புயத்தவடி கேளடிகள் போற்றி.

    21

    649

    வாதுபுரி காளியை வணக்கிய நடத்த
    தீதுபுரி சண்டனுயிர் செற்றதிறா லாள
    போதுபுரி கொன்றைபுனல் புல்லறுகு வன்னை
    தாதுபுரி மத்தமிலை யுந்தலைவ போற்றி

    22

    650

    வேறு
    ஒருமுறை போற்றி யொன்ப தோடொரு முறைமை போற்றி
    தருசத முறைமை போற்றி சகத்திர முறைமை போற்றி
    வருமுறை யயுத நூறா யிரமுறை மலர்த்தாள் போற்றி
    குருபர கோடி கோடி கோடியி னளவும் போற்றி. .

    23

    651

    ஐயபொற் சடிலம் போற்றி யருள்பொழி கடைக்கண் போற்றி
    செய்யபங் கயங்கள் வென்ற திருமுகப் பொலிவு போற்றி
    பையர விணையாக் கொண்ட படர்செவிக் குழைகள் போற்றி
    கையமர் படைகள் போற்றி காலினூ புரங்கள் போற்றி.

    24

    652

    வரிப்புறத் தும்பி பாடு மதுமலர்க் கொன்றை மாலை
    எரிப்புறங் கண்ட வேணி யிசைத்தவ நின்முன் போற்றி
    வெரிப்புறம் போற்றி பக்க மேலொடு கீழும் போற்றி
    தெரிப்புறக் கொண்ட கோலத் திறமெலாம் போற்றி யென்னா.

    25

    653


    துதிபல விளைத்துத் தானைத் தொக்கிரு காலு ளாக்கி
    விதியுளி குடந்தம் பட்ட விண்டுவை யிறைவன் கூவி
    முதிருமன் புடையை யென்னா முதுகிடைக் கொம்மை கொட்டி
    மதியிடை வேட்ட தென்னே வழங்கென வழங்கு மாயன்.

    26

    654

    கண்ணடி மிளிரக் கொண்டாய் கங்காளந் தோளிற் கொண்டாய்
    வண்ணவென் பிறப்பிற் கோடு மருப்புரி பலவுங் கொண்டாய்
    பெண்ணென வணைத்துக் கொண்டாய் பேமதிற் கணையாக் கொண்டாய்
    திண்ணிய விமிலே றாகத் திருவுள மகிழ்ந்து கொண்டாய்.

    27

    655

    முழுதுல களிக்கு மாற்றன் முன்னெனக் கீந்தாய் பின்னர்
    விழுமிய படைக ளீந்தாய் வியத்தகு புதல்வ ரீந்தாய்
    கழுமணி யனைய மெய்யிற் காமரு வலப்பா லீந்தாய்
    வழுவுறு முனிவர் தாரு வனத்திடை நடன மீந்தாய்.

    28

    656

    நின்னருட் கிலக்க மாக நின்மல நீயிவ் வாறென்
    தன்னையு மடிமை கொண்ட தாயத்தாற் புலியும் பாம்பும்
    நன்னல மெய்தத் தில்லை நகர்வயிற் குயிற்றா நின்ற
    மன்னரு ணடமு மின்னே வழங்குவா யென்று போந்தேன்.

    29

    657

    அருந்தவம் பெரிது மாற்று மடுபுலித் தாள னோடும்
    வருந்திமெய் யரிதி னோற்ற வாளராத் தலைவ னோடும்
    இருந்துநின் னடனம் போற்ற விருந்தவஞ் செய்தே னல்லேன்
    திருந்திய வுலக வாழ்விற் சிக்கயாப் புண்டே னெந்தாய்.

    30

    658

    ஒருவர்தம் பொருட்டு மேலை யுஞற்றுத லுளதே லன்று
    திருநடங் காண்பே னென்னிற் சிந்தையு மமைந்த தில்லை
    மருவிய வுடல முன்னே மாய்தலு முளதா மற்றால்
    பொருவிலி நடனங் காட்டப் புரிதக வென்று தாழ்ந்தான்.

    31

    659

    அருள்பொழி முறுவல் சற்றே யரும்பியா லால மாந்தி
    இருள்பொழி மிடற்றுத் தேவன் வெயில்பொழி திகிரி யேவி
    மருள்பொழி சிஞ்சு மாரம் வெளவிய வும்பல் காத்தோன்
    தெருள்பொழி யுள்ளத் தார்வந் திருவுளஞ் செய்து சாற்றும்.

    32

    660

    வேறு
    பதஞ்சலி வியாக்கிர பாத ரென்பவர்
    இதஞ்சலி யாதுசெய் திடவ வர்க்குநாம்
    சிதம்பர நகர்வயிற் செய்யுந் தாண்டவம்
    சுதந்திர மாக்கினாம் பிறர்க்குத் துச்சிலாம்.

    33

    661

    மனைபடைக் கலமணி வாக னங்களாய்க்
    கனைகதி ரெமதுருக் கலப்பு மாகிய
    நினையவ ணாடக நிகழ்த்திக் காட்டுறின்
    முனைவனா நமக்கது முறைமை யன்றுகாண்.

    34

    662

    குணதிசைச் சிதம்பரங் குடவ ளைக்கையாய்
    மணமலி தில்லையங் கான மாதவந்
    திணிதரு குடதிசைச் சிதம்ப ரந்தவர்
    அணிபுரிந் திறைஞ்சிச்சூ ழச்சு வத்தகான்.

    35

    663

    தெள்ளொளிக் கனகமன் றிணர்த்த தில்லையுள்
    ஒள்ளிய நமதரு ளுருவின் வண்ணமாம்
    வெள்ளியம் பலம்விரி போதிக்காட்டினுள்
    வள்ளிய வெமதுரு வண்ண மாகுமால்.

    36

    664

    அல்லதூஉ மெவற்றினு மதிக நீரது
    நல்லொளி நமதுபா லத்து நண்ணுபு
    வில்லுடைக் காமனை விளிப்ப மேக்குநீண்
    டெல்லுமிழ் விழிவிழித் திடமண் வீழ்ந்ததே.

    37

    665

    வீழ்ந்தது வெள்ளியாய் விளைந்த தாதலின்
    போழ்ந்திருள் பொரித்தொளிர் மணிபொன் னேனவுந்
    தாழ்ந்தன மேன்மையிற் றகவு யர்ந்ததாற்
    சூழ்ந்தவ ருள்ளமுந் துலக்கும் வெள்ளியே.

    38

    666

    மணிவரை பொன்வரை மண்ணி யிருந்துநாந்
    தணிவறு காதலிற் றவள வெள்ளிவெற்
    பணிவளர் கோயில்கொண் டமர்ந்த வண்ணமுந்
    துணிவுறு மதனுடைத் தூய்மைத் தோற்றத்தால்.

    39

    667

    அரதன மன்றினு மம்பொன் மன்றினும்
    விரவிய மகிழ்வினு மகிழ்ச்சி மிக்கதாம்
    இரசத மன்றின்மற் றெமக்கெஞ் ஞான்றுமே
    புரவுகொண் டயன்றனைப் பூத்த வுந்தியோய்.

    40

    668

    அடிமையர் பலருளு மன்பு மிக்குறும்
    அடிமையை யாதலி னவரெ லாரினும்
    நெடியவ வுரிமையை நினக்கெ னக்குறி
    நெடிதுசெ யதனிடை நிருத்தங் காட்டுதும்.

    41

    669

    வாதுசெய் தூர்த்ததாண் டவத்தின் வார்முலை
    மீதுகண் ணுறத்தலை வெள்கிச் சாய்த்தவள்
    கோதுகு மாநந்த நடமுங் கும்பிடத்
    தீதுகு மாதவஞ் செய்தி ருக்குமால்.

    42

    670

    மூலவன் மலமற முருக்கி முத்திசேர்
    காலவ முனிவனுங் காமர் நாடக
    மேலவங் கினிதுறக் காணு மிச்சையிற்
    சாலவன் பியற்றுபு தங்கிப் போற்றுமால்.

    43

    671

    வேறு
    இலங்குவிராட் புருடனுக்குக் குணதிசையிற் சிதம்பரந்தா னிதய மாகும்
    நலங்கிளருங் குடதிசையிற் சிதம்பரநா ரணனயனாங் கிழமை பூண்ட
    துலங்கிடைப்பிங் கலைசுழுனை மூன்றுமரி யயன்வரைகள் சுடரும் வெள்ளிப்
    புலங்கிளர்நம் வரைமூன்று மாய்விந்துத் தானமெனப் பொலிந்த தாகும்.

    44

    672

    அன்னவிராட் புருடனுக்கங் கனவரத தாண்டவநா மாடிக் காட்டுந்
    தன்மையினா லெந்நாளு மிடையறா தொளிர்நாதந் தழங்கா நிற்கும்
    மன்னியமா தவர்கேட்பர் கேட்டவர்க்கு மாறாத வறிவா னந்தம்
    பன்னரிய முதன்மையுநித் தியமுமுறும் விகாரமுதற் பலவும் நீங்கும்

    45

    673

    அவ்வரைப்பி னெமைவழிபட் டசும்புமொளி யிரசதவம் பலத்தி னாடல்
    செவ்விபெறத் தரிசித்தோர் விந்துநா தந்தவிரத் திகழு ஞானத்
    தெவ்வமலி மலமூன்று மிரியவுயர் சிவபோக மினிது துய்ப்பர்
    இவ்வரநம் வரைமேலு மிரசதவம் பலங்காண்போ ரெய்து வாரால்

    46

    674

    மருத்துளரு மத்தகைய தென்கயிலை நமதுருவாய் வயங்கு மாற்றால்
    உருத்திரவெற் பெனும்பெயரு முறும்யோக வரையெனவு முரைப்பர் சான்றோர்
    திருத்தமுற நடம்பயின்று தெரித்துநடம் பயிற்றுவோர் செத்தெல் லோரும்
    கருத்தடங்கும் யோகுழப்ப நாமிருந்து தனியோகங் கைக்கொண் மாண்பால்.

    47

    675

    விண்ணவரிற் சாத்தியரின் விஞ்சையரிற் கருடரிற்காந் தருவர் தம்மின்
    மண்ணவரிற் பலரங்கண் யோகுழந்து நற்கதியை மருவி னோர்கள்
    திண்ணமுற விப்பொழுதும் யோகுழப்போர் தமையெண்ணிற் றெரிக்கொணாதால்
    வண்ணமுறு மதன்பெருமை தெரிக்கலுறின் வானவர்க்கும் வாழ்நாள்போதா.

    48

    676

    ஆவயிற்சென் றெமைப்பூசை புரிந்தமரர் சுரபியுரித் தாத லானுங்
    கோவடிவின் வருமைந்துங் கொண்டெமது முடிக்காட்டுங் கொள்கை யானுந்
    தூவடிவி னானுருவாய்த் தோற்றியற மெமைப்பரிக்குந் தொடர்பி னானுந்
    தேவரனை வருமுறுப்பிற் செறிந்தபசு நமக்குவகை செய்வ தாகும்.

    49

    677

    நீயுமொரு கோமுனியா யாங்கடுத்து நமைப்பூசை நிகழ்த்து கண்டாய்
    மாயிருவை யகம்வியப்பப் பொன்னுமிர வியுமீன மருவா நின்ற
    வேயுமொளிப் பூரணையுத் திரமாதி வாரமிவை யியைந்த வேலைப்
    பாயுமொளி யிரசதவம் பலத்தாடல் புரிதுமினிப் படர்க வென்றான்.

    50

    678

    வேறு
    குறைமதி முடியினர் குறைதப
    அறைதலு மறைகழ லடிமலர்
    நிறைமதி நெடியவ னேருற
    முறைமுறை தொழுதனன் முன்னுவான்.

    51

    679

    பூமுனி யாதுறை பொற்புடை
    மாமுனி வருமறு மாற்றினான்
    ஏமுனி முதலவி கந்தனன்
    கோமுனி யெனவுருக் கொண்டனன்

    52

    680

    பொற்கலை பூமி படுத்தனன்
    வற்கலை மான வுடுத்தனன்
    விற்கலின் மோலி விடுத்தனன்
    அற்கலில் வேணி யடுத்தனன்

    53

    681

    விரையொடு சாந்தம் வெறுத்தனன்
    புரைதபு பூதி பொருத்தனன்
    உரைகல னாதி யொறுத்தனன்
    சுரைபடு மக்கந் துறுத்தனன்.

    54

    682

    அந்தியி னருண்மனு விண்டனன்
    குந்திய நடையடிக் கொண்டனன்
    கந்தியல் கயிலைமுன் கண்டனன்
    உந்திய வொலிசெவி யுண்டனன்.

    55

    683

    பரவிய வரைவளம் பார்த்தனன்
    அரகர கரவென வார்த்தனன்
    விரவிய புளகமெய் போர்த்தனன்
    சிரமிரு கைத்தலஞ் சேர்த்தனன்

    56

    684

    தண்டென வடிவரை தாழ்ந்தனன்
    தொண்டுசெய் முறைபல சூழ்ந்தனன்
    மண்டிய வன்பிடை வாழ்ந்தனன்
    விண்டுவி னெஃகுதல் வீழ்ந்தனன்

    57

    685

    வேறு
    வருடையு மரைகளும் வழுவையு முழுவையும்
    எருமையு முளியமு மெறுழியுங் கவயமும்
    அரிணமும் புருடவன் மிருகமு மரிகளும்
    வெருண்மகண் மிருகமு மிடைசரி யொழுகினன்.

    58

    686

    வருக்கையுங் கதலியும் வகுளமு மகருவுந்
    துருக்கமுந் திமிசுந்திந் திருணியுங் குடசமு
    முருக்கரை திலகமுந் திரிகைகுங் கிலியமும்
    நெருக்கிய சிறுநெறி நெடியவ னொழுனன்.

    59

    687

    வெள்ளிலுஞ் சுள்ளியும் வில்லமு மில்லமும்
    கள்ளிவ ராண்களுங் கதமறு வேங்கையு
    மள்ளிலை யாரமு மலர்சொரி நாகமும்
    நள்ளிணர்ப் பொழில்பல நடைவயி னொருவினன்

    60

    688

    வஞ்சியர் நெஞ்சிவர் மஞ்சளு மிஞ்சியும்
    வஞ்சியுந் துஞ்சில வஞ்சில ழிஞ்சிலும்
    வஞ்சுள முஞ்செறி மஞ்சிவர் பஞ்சர
    வஞ்சமும் விஞ்சவ ருஞ்சலங் கொஞ்சினன்.

    61

    689

    வேறு
    விண்ணோங்கிய பணைநின்றுகு வெண்ணித்தில மணியும்
    பண்ணோங்கிய வரிவண்டுளர் பனிமென்மல ரினமும்
    தண்ணோங்கிய திரையிற்கொடு தள்ளித்தவ வுரறி
    மண்ணோங்கிய தவழ்காஞ்சியை மகிழ்ந்தானதிற் படிந்தான்.

    62

    690

    பனிநீர்மலர் விரைமென்கனி பலவுங்கர மருவிக்
    கனிநீர்மையி னுளமென்புகள் கரையப்புணர் விழியின்
    நனிநீர்மணி மருமத்துக நகநீண்முடி யேறித்
    தனிநீர்மையி னகலத்தலை வனதாண்மலர் தாழ்ந்தான்.

    63

    691

    கண்ணார்தரு மணியைத்தவர் கருதுஞ்சுட ரொளியைப்
    பண்ணார்தரு பயனைக்கனி பழனார்தரு சுவையைத்
    தண்ணார்புன னிழலொத்தமர் தமியேன்பெரு வாழ்வை
    விண்ணார்தரு மமிழ்தத்தினை விதியால்வழி பட்டான்.

    64

    692

    அமையாவுள மலமந்தவ ணரிதிற்பெயர் கிற்ப
    உமையாளையும் வழிபட்டவ ணொழிவுற்றுயர் சாரல்
    எமையாளவு மிமையோர்தொழ விறைவீற்றிருந் தருள்வார்
    தமையாலய முள்ளெய்துபு தாழ்ந்தான்விடை கொண்டான்.

    65

    693

    அடர்வெள்ளியின் வேய்ந்தொள்ளொளி யசும்பித்தனி விசும்பின்
    இடமல்கிய பலவைப்பியு மெழில்வெண்ணிற மாக்கு
    நடமல்கிய வருண்மன்றமு நயனத்தெதிர் காணாத்
    தொடர்மல்கிய வன்பாற்றொழு தெழுந்தான்மலை யிழிந்தான்.

    66

    694

    வேறு
    மாதிக் கானை தாங்கிய மண்ணுண் டவன்மாசு
    மோதிக் காம முற்றருள் காஞ்சி முதுகூலஞ்
    சோதிக் கான வன்பு துளும்பத் தொடர்வுற்றுப்
    67

    67

    695

    மாதவ ரானும் வானவ ரானு மண்ணானு
    மீதவன் வண்ண மென்னவோ ணாத விறைமுன்னர்ச்
    சீதர னென்னுங் கோமுனி சென்று திருவார்ந்த
    பாத மிறைஞ்சிப் பன்முறை சூழ்ந்து பரிவுற்றான்.

    68

    696

    துஞ்சுத லோடு முண்டி விடுத்துத் தொழுமந்நாள்
    எஞ்சிய காலைச் செய்கடன் முற்று மினிதாற்றி
    இஞ்சிகள் சூழ்ந்த வெம்பெரு மான்கோ யிலின்மாடே
    நெஞ்சுறு மன்பாற் றென்கயி லாய நிருமித்தான்.

    69

    697

    தென்கயி லாய மிருத்துமி லிங்கச் சிவனாரை
    நன்கருள் சக்கர தீர்த்த மெனப்புவி நாடத்தான்
    தன்கயி னாங்கொரு தீர்த்தம கழ்ந்தத் தடநீரால்
    என்கட னாட்டுத னின்கடனாடுத லென்றாட்டி.

    70

    698

    தூசவிர் சாந்தந் தூமணி யாரஞ் சுடர்மோலி
    வாசநன் மாலை மற்று மணிந்து மறையோதி
    ஆசக லாறு தீஞ்சுவை யுண்டி யயில்வித்துத்
    தேசவிர் தீப மாதி யளித்துச் சேவித்தான்.

    71

    699

    இன்னண நிச்சந் தென்கயி லாய மினிதேத்தி
    முன்னவ னாதி லிங்கமு மேத்தி முதிர்யோகந்
    தன்னினிலை கண்ட காலவ னோடுந் தவமாற்றி
    மன்னிய வெள்ளி மன்றும் வணங்கி வதிவுற்றான்.

    72

    700

    கோமுனி பூசை கொண்டவர் தென்கயி லாயத்தைத்
    தாமுறை யேத்துந் தன்மையர் செல்வந் தகவாழ்ந்திங்
    கேமுறு மின்ன லெய்துத லின்றி யிமையாருங்
    காமுறு நன்சிவ லோக மணைந்து களிகூர்வார்.

    73

    701

    நன்கயி லாய நன்னகர் முற்று நடுவைகுங்
    கொன்கயி லாய மாதிலிங் கத்தின் குடியென்று
    தென்கயி லாய மென்றுறு மாறுந் திருமார்பன்
    தன்கயி லாயக் கோயிலுக் கிட்டான் றனிநாமம்.

    74

    702

    மாதவர் கல்லி னாக்கிய வள்ளன் மகிழ்கூர
    மாதவ ரன்பார் தென்கயி லாய மிதுவாஞ்சை
    மாதவ ரம்பு ளாம்வட பாலிற் கயிலாய
    மாதவர் கேண்மி னென்று வலித்தான் மகிழ்சூதன்.

    75

    தென்கயிலாயப்படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் - 702
    -----------

    11. வடகயிலாயப் படலம் (703-745)

    703

    கொம்பே ரிடையாள் குடிகொண் மார்பன்
    வம்பார் தருபோ திவனம் வைகி
    நம்பா நடனந் தருக வென்னாப்
    பம்பா தரவிற் பணியு நாளில்.

    1

    704

    வண்டா மரைமா மலரி ருக்கை
    கொண்டா னிடையே குறுகி மொய்த்த
    மிண்டா கியநித் திரைவி டுத்தான்
    கண்டான் கழுவிச் சுசிமு டித்தான்.

    2

    705

    முன்போ லுலகாக் குதன்மு யன்றான்
    என்பார் மருமத் தவனி சைத்த
    வன்பார் மறையின் முறைம றப்பால்
    தன்பா லத்சார் விலது கண்டான்

    3

    706

    அந்தோ விதுவோ செயவ னந்தல்
    வந்தோ வியதென் றுளம தித்து
    நொந்தான் றொழினோன் மைகொள முந்தைத்
    தந்தா னவனே சரண மென்றான்

    4

    707

    எழுந்தா னிடையிற் கயிலை நண்ணிக்
    கொழுந்தோ டியவன் பினுளங் கொண்டு
    விழுந்தான் விமலே சர்சரண் மீது
    தொழுந்தோ றவர்தூ முறுவல் கொண்டார்

    5

    708

    சோகாந் தனையென் னிதுசொல் லென்று
    மாகாந் தன்வினா வமலர் வாணிக்
    கேகாந் தமதா னவெழி னாவன்
    காகாந் தியையென் றுகரை கிற்பான்.

    6

    709

    வேறு
    கொடுவினிகொ டனுகரண புவனமொடு போகமிவை கூட்டி டுமுனம்
    அடுமல வயிற்றினுறை கின்றதென நித்திரை யகட்டின்மருவிப்
    படுமுணர் வயர்ந்துமறை வித்தையு மயர்ந்துபணி யான தொழிலும்
    விடுதிபெற வெற்றவுடல் போன்றுநினை யேசரண மேவுதல் செய்தேன்.

    7

    710

    நல்வினை யியற்றுதலி னோடுகழி தீவினையு நண்ண வடியேன்
    தொல்வினை யுடற்கணுறு வித்தபரி சானினது சூழ ருளினால்
    ஒல்வினை முதற்றொழி லுஞற்றுநிய திப்பொழுதி னோங்கு துயிலாய்ப்
    புல்வினை யடுத்ததெனின் யானஃது போற்றும்வகை புல்லு றுவதோ.

    8

    711

    நின்னருளி னாலளிய னேன்பிழை பொறுத்துமறை நீதி யருளி
    நன்னருல கந்தமிய னேனினி துயிர்க்கும்வர நல்கு தியென
    முன்னவ னடித்தல முடித்தலைக டீட்டிமொழி மாது கணவன்
    பன்னரிய வன்பினுள நெக்குருக வின்றுதி பரப்புதல் செய்தான்.

    9

    712

    இந்திரனு நந்தணி கரத்தவனு மந்தரரு மேனை யவரும்
    வந்தடி பணிந்துநனி நொந்தன மிரங்குகென வல்விடமிடுங்
    கந்தர விதந்தரு சுதந்திர நிரஞ்சன கரந்தை யறுகு
    சந்திர னணிந்தசடி லத்தநினை யன்றுசர ணேது மிலனே.

    10

    713

    பராபர புராதன பராவுதல்செ யாருளம்வி ராவுதல் செயா
    நிராமய வலாணவ நிராகரண நெஞ்சிடை நிலாவு சரண
    விராறனொ டிராறுய ரிராறுசெயி ராகமதி ராத ருள்பவ
    தராதல மராதாரு மத்தநினை யன்றுசர ணேது மிலனே.

    11

    714

    ஆற்றல்புரி காலனுயிர் மாற்றிவழி பாடுநனை யாற்று சிறுவன்
    ஏற்றமிக மேலுலக மேற்றியருள் வாழ்வருளு மேற்றின் முதல்வ
    காற்றிரத மாரன்மது வூற்றுகணை யேவவுயிர் காற்று மிறைவ
    சாற்றுமறை தோற்றிய சதுர்த்தநினை யன்றுசர ணேதுமிலனே.

    12

    715

    சதங்கைசிறு கிண்கிணி தழங்கிட வொதுங்குதளர் மென்ன டையுறும்
    பதங்கழியு முன்னடு கதங்கொடிதி மைந்தர்கள் பதங்கள் கழிய
    விதங்கழிவி லங்கலு நுணுங்கமறல் கந்தனை யிலங்கி யதச
    சதங்கணிப தங்கொள வழங்கிநினை யன்றுசர ணேது மிலனே

    13

    716

    அந்திநிற முங்கருக வங்கிநிற முங்கருக வஞ்சு டர்விடுங்
    செந்துவர்க ளுங்கருக விந்துவொடு செம்பரிதி தேசு கருகச்
    சுந்தரமி குந்ததிரு மேனிவலம் வந்ததொடர் பாற்புற மெனைத்
    தந்திடல டாதருளு தந்தைநினை யன்றுசர ணேது மிலனே.

    14

    717

    வேறு
    என்றி ருந்துதி யியம்பு தாமரை யிருக்கை யானைமுக நோக்குபு
    கொன்றை துன்றுசடை யெம்பி ரானினிது கூறு வானுலகர் தாதைகேள்
    நன்று நின்விழைவு முற்ற வீண்டுவர நல்கி லேநமது வைப்பதாய்
    மன்ற வென்றுநிலை பெற்ற வாதிபுரி யுள்ள தங்கண்மது சூதனன்.

    15

    718

    வெள்ளி மன்றினட மாடல் காணவிழை வுற்று நம்மருளி னான்மறை
    தெள்ளு கோமுனிவ னாகி நோற்றருள் செறிந்த காலவ னொடுந்தவக்
    கள்ள வைம்பொறி கடிந்து பூசனை கடைப்பி டித்துவதி கின்றனன்
    நள்ளி யங்கணொரு நீயு மாடனனி காண்டி பின்புவர நல்குதும்.

    16

    719

    பட்டி நாதரென வெம்மை நீளுலகு பன்னு கின்றதிமை யார்பசு
    ஒட்டி வந்தனை புரிந்த வேதுவினவ் வும்ப ரார்பசுவும் வந்தனை
    சட்ட வாற்றியது நீயு றங்கிவிடு தன்மை சென்றமையி னாதலான்
    அட்ட திக்கினரு மேத்து பட்டிமுனி யாகி யங்குறுக வென்றனன்.

    17

    720

    ஆல மாந்தமல னார்கி ளத்தலு மலர்ந்த தாமரை யலங்கலான்
    சால நோற்றதவ மென்கொ லோபெரிய சாமி கொண்டருளு மோர்பெயர்
    ஏல யான்றழுவ வென்று வந்தடியி றைஞ்சி யன்புட னெழுந்துயர்
    மூல மாமனுந வின்று பட்டிமுனி யாகி யாதிபுர முன்னினான்.

    18

    721

    தண்டி னோடுகர கம்பி டித்தகர முந்த யங்குபொடி மேனிமேற்
    புண்ட ரந்திகழும் வண்மை யும்பொருவி லக்க மாலைபுரண் மார்பமுந்
    தொண்டி னாற்குழைவு கொண்ட வுள்ளம்வெளி தோற்று மாக்கையசை வுந்தகக்
    கண்டு கோமுனி களித்துவம் மெனவு கந்த பட்டிமுனி தாழ்ந்தனன்.

    19

    722

    இந்த வாறுவர வென்கொ னீயினி தியம்பு கென்னும்வளர் கோமுனிக்
    கந்தின் மோகமுற வாக்கு மாற்றலயர் வுற்றி டைக்கயிலை மேவியான்
    றந்தை மாலொடு மிருத்தி தாண்டவ மளித்து மென்றுவிடை தந்தனன்
    முந்தை மாதவ முதிர்ந்த தென்றுவகை முற்றி யுற்றதிவ ணென்றனன்.

    20

    723

    நாயி னுங்கடைய னேனை யும்பெரிய நாய கன்றிரு வுளஞ்செயு
    மாயி னுய்ந்தன னெனக்கசிந் தருளை யுன்னி நெக்குருகு கோமுனி
    தாயி னும்பரியு மாதி லிங்கமுறை தம்பி ரான்றிருமு னுய்த்தலும்
    வாயி னைந்துபத மல்க வந்தனை புரிந்து சூழ்ந்துமறை பாடினான்.

    21

    724

    வேறு
    மின்கொண்ட மேரு விலங்கற் சிலைதாங்கிக்
    கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவரென்பர்
    கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவராயின்
    புன்கன்றின் காலிற் பொதிர்ந்தவா றென்னே
    புனிற்று மருப்பிற் புழைபட்டா ரென்னே.

    22

    725

    உழக்குஞ் சமர்க்க ணொருவே லரக்கன்
    அழக்குன் றடியி னடர்த்தா ரிவரென்பர்
    அழக்குன் றடியி னடர்த்தா ரிவராயின்
    குழக்கன்றின் காலிற் குழைந்தவா றென்னே
    குருத்து மருப்பிற் குழிந்தார்மற் றென்னே.

    23

    726

    வள்ளி கணவன் மலிபொடிப்ப வாரிலைவேல்
    கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவரென்பர்
    கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவராயின்
    துள்ளினங் கன்றிற் சுவடுற்றா ரென்னே
    தோற்று மருப்பிற் றுளைபட்டா ரென்னே.

    24

    727

    வேறு
    பீடியல் கன்றி னாமடை யாளப் பெருமானை
    மூடிய வன்பாற் பாடிய பட்டி முனியிப்பால்
    கூடிய கோலக் கோமுனி கூறு நெறியானே
    பாடியல் பூசை யாதிக ளாற்றப் படர்குற்றான்.

    25

    728

    பொன்னொடு வெள்ளி வார்கரை யுந்திப் பொருதோடுந்
    தன்னிக ரில்லாத் தண்புனற் காஞ்சி நதிதாழ்ந்து
    நன்னடம் வல்லே நான்பெறு கென்னா நசையோடும்
    பன்னின னாடிச் செய்கடன் முற்றும் படிசெய்தான்.

    26

    729

    ஆலவ னத்திற் கொற்றவை கோட்ட மதன்கீழ்சார்
    காலவன் பூசை கண்டரு ளீசர் நகர்மேற்பால்
    கோலம றாத காஞ்சியின் றென்பாற் குளிர்பன்னீர்
    மூலலிங் கத்தி னுத்தர திக்கின் முன்னுற்றான்.

    27

    730

    தடவிய வங்கைக் குண்டகை யாங்குத் தரையுள்ளே
    இடவிய தீர்த்த மாக விருத்தி யிமையாரும்
    வடகயி லாய மென்று துதிப்ப வளரங்கி
    அடவியி னாடு மண்ணலை நூலா னமர்வித்தான்.

    28

    731

    குண்டிகை வாவித் தண்புன லானுங் குளிரார
    மண்டிய காஞ்சி வார்புன லானும் வளர்வேணி
    அண்டனை யாட்டி வண்டுப டாத வலர்சாத்தி
    உண்டிகள் நல்கி யொளிபிற காட்டி யுவப்பித்தான்.

    29

    732

    வடவனம் வாழுங் கொற்றவை பொற்றாண் மகிழ்கூரக்
    கடவிய பூசை காதலி னாற்றிக் கதிர்வெள்ளித்
    தடவரை யேகிச் சம்புவை யங்குந் தாழ்ந்தன்பால்
    சுடர்மணி வெள்ளி யம்பல நோக்கித் தொழுதானால்.

    30

    733

    நித்தலு மிவ்வா றாதிபு ரத்து நிமலற்காம்
    பத்திகள் செய்து காலவ னோடும் பசுவான
    உத்தம னோடும் போதிவ னத்தி னுறைநாளின்
    முத்தி யளிக்கும் யாகம் வளர்க்கு முறைபூண்டான்.

    31

    734

    வேறு
    விண்ணவர் வருகவிஞ் சையர்வருக
    புண்ணிய முனிவரர் புகுதகவென்
    றெண்ணிய முடங்கலுய்த் தெவ்வெவரும்
    நண்ணுற வவர்மகிழ் நலஞ்செய்தான்.

    32

    735

    வளமருள் காஞ்சியின் வடபாங்கர்க்
    களமறு விலதுகண் ணுறநாடி
    அளமறு பிறவிக ளவையேங்க
    உளமுவ கையினுற வுழுவித்தான்

    33

    736

    விண்டொடு சாலையும் விதியாற்றால்
    குண்டமும் வேதியும் குறித்திட்டுத்
    தண்டமும் யூபமுஞ் சமிதைமுதல்
    பண்டமுங் குறைவறப் பயில்வித்தான்.

    34

    737

    வரமலி வஞ்சுள மர்மீந்த
    அரணியின் ஞெலிதழ லதுமூட்டி
    இரணிய வுலகலு மெழுதூமம்
    பரவிய விருள்செயப் பாவித்தான்.

    35

    738

    துடுப்புநெய் முறைமுறை சொரிந்தங்கண்
    எடுப்பிய வங்கியி னிசைவித்த
    தடுப்பருந் தீஞ்சுவை தகுமுண்டி
    மடுப்பவர் மடுப்புற மடுப்பித்தான்.

    36

    739

    நல்வகைப் பயன்பிற நாடாமே
    பல்வகை வேள்வியும் பரனார்தம்
    எல்வகை மலரடி யிணைநாடி
    அல்வகை மலமற வாற்றினனால்.

    37

    740

    விண்ணவ ரனைவரும் வியப்புற்றார்
    மண்ணவ ரனைவரு மகிழ்கூர்ந்தார்
    அண்ணலுந் திருவரு ளினரானார்
    பண்ணிய முனிவனும் பரிவகன்றான்.

    38

    741

    வேறு
    அளவிடு சூழ்ச்சி யெல்லை யுயிர்கட் கடாத வறிவான சோதி யமலன்
    வளவிய பாத முன்னி மறைநான்கும் வல்ல மறுவென்ற பட்டி முன்வன்
    உளமலி யன்பு பொங்க வுலகேத்த வாற்று முயரோம குண்ட நினைவோர்
    விளர்தபு காம நல்கு திருநீற்று மேடி தெனநின்று மேன்மை தகுமே.

    39

    742

    முண்டக மேலி ருந்த பிரமன் சமைத்த முறையா லவன்பெ யரொடும்
    விண்டிடு தீர்த்த மான குண்டிகைத் தீர்த்தமாடி மிளிநீற்று மேட்டி னிதிபோன்
    மண்டிய பூதி மெய்யின் வதிவித் தெழுந்து வடபா லடுத்த கயிலை
    அண்டனை யன்பி னேத்து மவரே பிறந்த வறிவாள ரல்லர் பிறரே.

    40

    743

    வேறு
    மாதுக்க மாற்ற விழைவார்கண் மண்ணின் மகிழ்போக மெய்த லுறுவார்
    ஏதுக்க ளான பலகொண்டு விண்ணி னிமையார்க ளாதல் விழைவார்
    சாதுக்க ளாதல் விழைவாரு மன்பு தழைவுற்ற பட்டி முனிவன்
    போதுக்கண் மேவி வழிபட்ட செம்மல் புகலன்றி வேறு முளரோ.

    41

    744

    வேறு
    ஒலிதழ னாப்ப ணின்று நிறைநீரு முயர்கா னடைந்து முகிறோய்
    வலிகெழு குன்றி னுச்சி வதிவுற்று முண்டி வழுவித்தும் வைய முழுதுங்
    கலிகெழு சித்தி பெற்று மதியோர்க ளெய்து கதிமுற்று மொன்று பொழுதின்
    மலிதக நல்கு மென்ப வழிபாடு செய்யின் வடபா லிருந்த கயிலை.

    42

    745

    வடகயி லாய மேய மணிகண்டர் மேன்மை வரைசெய்து செப்ப லரிதே
    புடவியி லெய்து மார்வ மருவா தொழிந்த புரைதீர்ந்த நோன்மை யறிவீர்
    நடநட ராச னக்க ணொருமூவ ருக்குநயமல்க நல்கு திறன்மற்
    றுடலுறு நோய்கண் மாய வுரைசெய்து மென்ன வுயர்சூத னோத லுறுவான்.

    43

    வடகயிலாயப் படலம் முற்றிற்று.
    ஆகத்திருவிருத்தம் -745
    ----------------------------

    12 நிருத்தப்படலம் (746-883)

    746

    உரைத்தபரு வத்தினொடு முயர்கணவன் வரவுள்ளித்
    தரைத்தலையேக் கறுமடவார் தமைநேர விடைக்கயிலை
    வரைத்தலத்துத் தம்பெருமான் வரைந்தநா ளொடுநடமால்
    கரைத்தவுளத் திடைநாடி யிருந்தனர்கா லவன்முதலோர்.

    1

    747

    இவ்வாறு சிவபூசை யினிதாற்றி யிருக்குநாள்
    செவ்வாய்மைக் கோமுனிவன் சிவபெருமா னெம்மன்றும்
    ஒவ்வாத விரசதமன் றுளதென்றா னதுகாணும்
    அவ்வாய்மை பெற்றிலே னெனவயர்ந்து தியானித்தான்.

    2

    748

    அண்ணலார் திருவருளா லசரீரி வாக்கெழுந்து
    நண்ணியமுன் னம்பலத்தை நம்பர்மறைத் தருளினார்
    திண்ணமுற வவ்வயினீ செய்தொருமன் றதினுங்கள்
    பண்ணவன்மெய் யுருவமைத்துப் பணிகவெனப் பணித்ததே.

    3

    749

    விண்ணெழுந்த மொழிகேளா விம்மிதனாய்ப் பரவசனாய்
    மண்ணிடந்த கோமுனிவன் மாதவத்துக் காலவனைப்
    பண்ணரிய பெருந்தவத்துப் பட்டிமுனி யொடும்விளித்துப்
    புண்ணியன்மெய்த் திருவருளாற் போந்ததிது வெனமொழிந்தான்.

    4

    750

    மன்னுதிரு வருளதுவேல் வாழ்ந்தனம்வாழ்ந் தனமென்று
    பன்னியவர் தொழுதாடப் பண்ணவர்க ளுலகாளும்
    மன்னவனை வரக்கூவி வயங்கியகோ முனிநுங்கள்
    கம்மியனைத் தருகவெனக் காவலனுந் தருவித்தான்.

    5

    751

    மன்றுபுரி யிடங்காணார் மயங்கினர்நிற் குங்காலைக்
    கொன்றைசடை மிலைத்தபிரான் கோமளவல் லியினகன்று
    தொன்றுதொடு நடம்புரியுந் தொல்லையிடங் காட்டுதற்கு
    வென்றிமிகுஞ் சித்தனென வேற்றுருக்கொண் டாங்கடுத்தான்.

    6

    752

    கோதிலிர சதமன்றங் கோமுனிவன் முயலுற்றான்
    சோதிநடங் காண்டுமெனத் துன்னியவா னவரையர்
    வேதியரே னையர்பலரும் விம்மிதங்கொண் டகங்களிப்பப்
    போதிவனத் திடைச்சித்துப் புரிபாக்குப் புரிவுற்றான்.

    7

    753

    வேறு
    பருதி வானவன் காலையின் மேக்கெழப் பணிக்கும்
    அருவி மால்வரை துரும்பென வளியிடை யலைக்குங்
    கருவி மாமழை யின்றியே புனலுறை கஞற்றுந்
    தருணர் பாலரா மூத்தவர் தருணராச் சமைக்கும்.

    8

    754

    அரவின் வாயிடை யலகடற் சுவையமிழ் தெடுக்குங்
    கரளம் வான்சுதை யாகுமா கடைக்கணித் தருளும்
    பரவை விண்ணெழுந் தங்கணே பயில்வுறப் பயிற்றுஞ்
    சுரர்கண் மாநுடர் மாநுடர் சுரரெனத் தோற்றும். 9

    9

    755

    மண்ணு ளேசிவ லோகமும் வருவித்துத் தெரிக்கும்
    விண்ணு ளேநர ருலகமு மேவித்து மறைக்குந்
    திண்ண மாகிய வசரத்தைச் சரமெனத் திரிக்கும்
    வண்ண மாகிய சரத்தினை யசரமா வயக்கும்.

    10

    756

    கற்பின் மேதகு மாதருமுளநனி கலங்கப்
    பொற்பின் மேதகு மாடவர் தங்களைப் பூக்கும்
    வற்பின் மேதகு மாதவர் குழாங்களு மயங்க
    அற்பின் மேதகு மரிவையர் பலர்தமை யாக்கும்.

    11

    757

    கோடி யிந்திரர் கும்பிடக் கடைக்கணித் தருளுங்
    கோடி நான்முகர் கும்பிட முடிவறி தசைக்குங்
    கோடி நாரணர் கும்பிடக் குறுநகை காட்டுங்
    கோடி ருத்திரர் கும்பிட வருகெனக் கூறும்.

    12

    758

    அறையு மாயிர வாயிரந் தருமநூ லமைக்கும்
    பொறைகொ ளாயிர வாயிரம் பொருட்டுறை கிளக்குந்
    துறைகொ ளாயிர வாயிரங் காமநூ றொகுக்கும்
    மறைக ளாயிர வாயிரம் புதியன வகுக்கும்.

    13

    759

    எட்டுச் சித்தியும் வல்லவர் முடியினைப் பிரம்பால்
    தொட்டுச் தித்திக டொலைத்தவர்க் கறிவின்மை துரக்கும்
    எட்டுச் சித்தியுஞ் சிறுமகார் களுமெளி தியற்றத்
    தொட்டுச் செங்கையி னீறவர் மெய்யுறத் தூவும்.

    14

    760

    சித்திவ் வாறுபல் கோடிகள் விளைத்தலுஞ் சித்துக்
    கொத்தெ லாந்தெரிந் தவர்களு மும்பரார் குழுவும்
    பித்த ராகிய சித்தனா ரடியிணை பிரியாப்
    பித்த ராயினர் பெருகுமா னந்தமுட் டிளைப்ப.

    15

    761

    வேறு
    மட்டு விரியு நறுந்துளப மறைத்த நிறத்துக் கோமுனியும்
    பட்டி முனியுங் காலவனும் பல்லாற் றானு மிவனாரென்
    றொட்டி யுணரு முள்ளகமு முணர்ந்து தெளியா வகைமருட்டச்
    சட்ட வினாவி யறிதுமெனத் தழைத்த சித்தர் மருங்கணைந்தார்.

    16

    762

    படைத்தி யயனு மலையுலகம் பரித்தி யரியு மலையாங்கே
    துடைத்தி யரனு மலைமறைப்புச் சூழ்தி தொழுமீ சனுமல்லை
    தடைத்த மலநோய் நலியவரு டருதி யைந்து முகனுமலை
    கொடுத்தி பலநூன் மாதவர்க்குங் குருவுமலைநீ யாரென்றார்.

    17

    763

    முனிவர் வினவ முனிவருக்கு முனியாஞ் சித்த ரிறுக்கின்றார்
    துனியில் கேள்வி மாதவத்தீர் தொகுத்து மொழியக் கேண்மினோ
    நனிசித் திடையோ ரெவ்வெவரு நாடுமுதன்மைச் சித்தரேம்
    இனிய பெயருஞ் சித்தேச ரென்பதாகு மறிமினோ.

    18

    764

    காலங் கடந்து வினைகடந்து கருவி யனைத்துங் கடந்துமல
    மூலம் கடந்த தன்மையே முழுது முணர்பே ரறிவினேங்
    கோலங் கடந்த வுருவினேங் கோலமனைத்துங் குறிக்கொண்டேஞ்
    சீலங் கடந்த வறிவினர்க்குச் சேயே மல்லேந் தெளிமினோ.

    19

    765

    என்று கிளந்த சித்தேசர்க் கெதிர்கை தொழுது முனிவரர்கள்
    வென்ற வினையீர் காலத்தின் விகற்பங் கடந்து முழுதுணர்ந்த
    நன்றி யுடையீர் நீராகி னம்பன னடன நவில்கின்ற
    மன்றந் தெரிக்க வல்லீரேல் வகுத்த வுரைமெய் யாமென்றார்.

    20

    766

    பொம்ம லோதி யிடமறைத்துப் போந்த சித்தர் முறுவலித்துச்
    செம்ம லுடையீ ராதலினால் தேவ தேவன் திருமன்ற
    நும்மை யறிவித் திடுதுமென நுவன்றா ருய்ந்தோ மெனத்தாழ்ந்தார்
    வம்மி னெனக்கொண் டுடன்போந்தார் மணிப்பா துகைக ணிலந்தோய.

    21

    767

    ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள்
    காதி யிருந்த காலவனீச் சரத்துள் மூவ ருருவான
    போதி நிழலிற் புக்கருளிப் பொருந்தமன்ற மெழுகவெனச்
    சோதி மலரத் திருவாயாற் சொன்னார் மன்ற மெழுந்ததே.

    22

    768

    அண்ட முகட்டைப் பொதிர்ப்பனபோ லசும்பு மொளியின் கதிர்நிமிரப்
    பிண்ட மான கீழண்டப் பித்தி தொடுத்த வடியினதாய்க்
    கொண்ட திசைக ளோரெட்டுங் குறுகி யணிய வாய்க்கிடப்ப
    மண்டி யெழுந்த விரசதத்தின் மன்றின் பெருமை வகுப்பாரார்.

    23

    769

    பளிக்குச் சிலைத்திண் சுவர்நீடிப் பளிக்குச் சுவர்க்கு ளோவியங்கள்
    வெளிக்க ணமரர் நிற்பதுபோல் விளங்கி வெள்ளி மேல்வேய்ந்து
    களிக்குஞ் செம்பொன் வரைநிறமுங் கழிக்கும் பைம்பொற் றலமுள்ளால்
    துளிக்குங் கிரண வொளிமணிக டுவன்றிச் சுடர்ந்த தெழுமன்றம்

    24

    770

    மந்தா ரத்தின் மலர்கற்ப மலர்சந் தான மலர்தாருக்
    கொந்தார் மலரா தியிற்செய்த கோதை நவமா மணிமாலை
    சிந்தா மணியின் பலகோவை தெய்வ நிதித்தா மரைத்தெரிய
    னந்தா வொளிப்பொன் னரிமாலை யுள்ளும் புறம்பு நான்றனவே.

    25

    771

    பனிநீ ரளவித் தேன்விராய்ப் பசுந்தா தணவி மான்மதந்தோய்ந்
    தினிய புழுகார்ந் துரோசனைசேர்ந் திளகு நறுங்குங் குமச்சாந்தம்
    நனியெவ் விடனு மணிந்தைந்து நறிய புகையுந் தவழ்ந்தமண
    மனித ருலகும் விண்ணுலகும் வளர்மா திரமுங் கமழ்ந்ததே.

    26

    772


    கையிற் புனையா விசித்திரப்பொற் கலைப்பட் டனைத்தும் விதானித்து
    மையி னகன்ற வெழினியுமெல் வளர்கம் பலமும் விரித்திட்டு
    நெய்யின் றெரியு மணிவிளக்கு நெய்யுற் றெரியுந் தழல்விளக்கும்
    பொய்யின் றொளிர நிரைநிரையிற் பொருத்தி வனப்புப் பொலிந்ததே.

    27

    773

    வேறு
    மன்றங்க ணெழுந்து விளங்கலு நோக்கி வானோர்
    இன்றுய்ந்தன மென்றிணர் மாமலர் மாரி தூர்த்தார்
    நன்றிங்கிவர் செய்தி யெனத்துதி நாவி னார
    அன்றங்குறு மாதவர் சித்த ரடிக்கண் வீழ்ந்தார்.

    28

    774

    அருண்மல்கிய கோமுனி யாதிய ருந்த வத்தோர்
    தெருண்மல்கிய சித்த ரடித்தலந் தாழ்ந்து சொல்வார்
    இருண்மல்கிய யாங்களு முய்யவிங் குற்று நீரே
    பொருண்மல்கிய மன்ற மெடுத்தனிர் போற்றி வாழ்ந்தேம்.

    29

    775

    இன்னுந்தமி யேங்கண் மனக்குறை யீங்கொன் றுண்டு
    மின்னுந்தழல் போனிறத் தீரது விள்ளக் கேண்மின்
    மன்னுஞ்சபை நாயகர் மெய்யுரு வாய்ப்பச் செய்து
    கொன்னும்வழி பாடுக ளாற்றல் குறித்து ளேமால்.

    30

    776

    சிற்பந்தவி ராதடி கேள்புரி தெய்வ மன்றின்
    பொற்பின் றிறனுக் கியையப் புலவோர் கடச்சன்
    நற்பங்கயன் மான்முத லோருநன் றாக்க வல்லார்
    அற்பங்கவர் சிற்றறி வாளர்களான நீரால்.

    31

    777

    முழுதுங்கவர் பேரறி வாட்சியிர் யார்க்கு மூத்தீர்
    பழுதொன்றுமி லாதிர் பரம்பரை நூலும் வல்லீர்
    தொழுதும்மடி போற்றுதும் யாந்துளங் காமை யந்திப்
    பொழுதுதோன்றிய வேணியி னாருரு பொற்பச் செய்யீர்.

    32

    778

    என்றாரது கேட்டுயி ருக்குயி ராகி யெங்கும்
    நின்றார்திரை கோலுமி னென்றனர் நேர்வ ணங்கிப்
    பின்றாழ்சடை மாமுனி வோரது பேணிச் செய்ய
    ஒன்றாமுகுர்த் தத்தள வுந்திரை யுள்ளி ருந்தார்.

    33

    779

    இரண்டா முகுர்த் தத்தி னிடுந்திரை யோடு சித்தர்
    திரண்டாரறி யாமை மறைந்தனர் செய்த வத்தான்
    முரண்டாவிய மூவரு மொய்த்தவர் யாரு மாதோ
    டரண்டானென வாடும் பிரானுரு வாங்குக் கண்டார்.

    34

    780

    மருண்டார்வெருண் டார்வரு சித்தர்நம் வள்ள லென்று
    தெருண்டார்வியந் தார்சிவ காமியுந் தானுங் கண்டம்
    இருண்டானெதிர் நின்றமை நோக்கிய யாரு மேத்திச்
    சுருண்டார்தரு பங்கி முடித்தலை துன்னித் தாழ்ந்தார்.

    35

    781

    வேறு
    செம்பொன்மால் வரையும் புதுநிறம் படைப்பத் திகழொளி வெள்ளியங் கிரியும்
    உம்பரார் பணியும் வெள்ளியம் பலமு முலகுறு சராசர மனைத்தும்
    பைம்பொனார் நிறமா யதிசயம் விளைப்பப் படரொளிக் கிரணம்விட் டெறிக்குந்
    தம்பிரா னுருவ முனிவர்மூ வருந்தா பித்தருச் சனைசெய முயன்றார்.

    36

    782

    உம்பரார் பலருங் கோமுனி யேவ வுய்ந்தன மெனப்பணி முயன்றார்
    உம்பரார் தச்ச னாலய நகர மாதிக ளுவப்புறப் புரிந்தார்
    உம்பர்கோன் காம தேனுகற் பகமு முறுபொரு டரப்பணித் திட்டான்
    உம்பர்கோ னேவ வுலகமா ளரையர் தத்தமக் குறுபணி செய்தார்

    37

    783

    வடதிசைத் தலைவ னிரம்புபண் டாரம் வாய்திறந் திருநிதி போதந்
    திடனக னகர முழுவது நிறைத்தா னிடிஞ்சில்கள் கரகங்கள் கும்பம்
    படரொளி மணியான் மயனிரு மித்தான் பசுங்குசை சமிதைபற் பலவுங்
    கடனறி முனிவர் விதியுளி நாடிக் கவர்ந்தரு மறைகரைந் திறுத்தார்.

    38

    784

    வானவர்குரவ னாள்வரை யறுத்தான் மகதியாழ் முனிவனா கமத்தின்
    ஊனமில் விதியாற் குண்டமொன் பதும்வே திகைகளும் ஒளிபெற
    தேனமர் மலய மாதவன் பதிட்டை செய்யுமா சானென வமைந்து
    வேனவில் கரத்தோன் முன்வரும் பட்டி விநாயகன் பூசனை முடித்தான்.

    39

    785

    அங்குர மமைத்தன் முதல்வினை யனைத்து மாகம விதிப்படி யாற்றி
    மங்கல வியங்க ளியம்பவா னவர்கண் மலர்மழை பொழிதர மன்றின்
    அங்கண ருருவோ டம்மைதன் னுருவி னமத்தபொற் கும்பநீ ராட்டிப்
    பொங்கறு சுவையி னிவேதனம் பிறவும் பொற்புற முற்றுவித் தனனால்.

    40

    786

    கன்னிகை செம்பொ னிரசதங் கலைகள் கலனிலம் பரிகரி யிரதம்
    அன்னமற் றனைத்து மேற்பவர்க் குதவி யருந்தவக் கோமுனி முதலோர்
    பன்னருஞ் சிறப்பிற் றம்பெரு மானைப் படரொளி வெள்ளியம் பலத்துந்
    துன்னுறு தினங்க டொறுமறு காலந் துகளறு பூசனை புரிந்தார்.

    41

    787

    வேறு
    இவ்வகை செல்லு நாளி லெம்பிரா னடனங் காட்டு
    மவ்வரு நாளு மண்மைத் தாயதென் றறிந்து முன்னர்ச்
    செவ்விய பதிட்டைக் குற்றோ ரனைவருஞ் செல்லா தாங்கண்
    எவ்வமில் காலந் தோறு மேத்திவாழ்ந் திருந்தா ராக.

    42

    788

    பங்குனி மதியஞ் சாரப் பட்டிமா முனிவன் சென்று
    தங்குகோ முனிவன் பாதந் தாழ்ந்திது செப்பி னானால்
    நங்களை யாள நம்பர் நடம்புரி நாளு மிந்தத்
    திங்களின் வருவ தற்றாற் செய்வதொன் றுண்டு கேண்மோ.

    43

    789

    திருவிழா எடுத்து நாதர் திருநட நவிற்று மந்த
    ஒருவிழா நாளு மந்தத் துற்றிடு நாள தாக
    மருவியா நிற்றன் மாண்பாம் வரதவென் றியம்ப வன்னான்
    ஒருவியா மகிழ்ச்சி பொங்க வுவன்றனைத்தழுவிக் கொண்டான்.

    44

    790

    பட்டிமா முனிவ விந்தப் பணிசெயத் தக்க தாகும்
    இட்டமா முலகுக் கெல்லா மிறைவற்கு மிட்ட மாகும்
    முட்டிலா தியற்று கிற்பா முறையுளி யமரர்க் கெல்லாம்
    ஒட்டவீங் குறுவ யாவு முஞற்றுமா றியம்பு கென்றான்.

    45

    791

    விடைமுகத் தவன்சொற் கேட்டோன் விச்சுவ கன்மற் கூவி
    அடையலர் புரங்கள் செற்ற வடிகளார் விழாவுக் கேற்ற
    நடைநக மிரத மாதி நலத்தக வாக்கி வைவேற்
    படையவ னைங்கைப் புத்தேள் படிவமா தியுஞ்செய் யென்றான்.

    46

    792

    மயன்வரு கென்று கூவி வளநக ரால யங்கள்
    குயினுழை மாட மற்றுங் கோடணை புரிய வேவி
    வயமலி குலிச வேற்கை மன்னவற் கூவி வேட்ட
    பயன்மலி பரிசில் யார்க்கும் பண்புறக் கொடுக்க வென்றான்.

    47

    793

    அவரவ ராற்றற் கேற்ப வமலனார் பணிக ளேவி
    அவரவர் தந்தையான வருந்தவன் விடைமு கத்தோற்
    கவரவர் பணியி னிற்ப வறைந்தன னென்று தாழ்ந்தான்
    அவரவர் பணிகளாக வனைவரு மாற்றி னாரே

    48

    794

    தகட்டுடன் மீனாய் முன்னர்த் தவழ்ந்தகோ முனியு மண்ட
    முகட்டையுந் துளைக்கும் வைவேல் முனைவன்சண் டீச னாக
    மகட்டிடை யசைத்த பிள்ளை யாதியோ ருருவத் தோடும்
    பகட்டெழி லிரத மற்றும் பதிட்டைசெய் தமைத்துக் கொண்டான்.

    49

    795

    பங்குனிப் பருவஞ் சேர்முன் பக்கத்தி னிரண்டா நந்தை
    தங்குகார்த் திகைநாட் புல்லந் தடங்கொடி யேற்றி மைந்தர்
    மங்கையு மருங்கு போத மன்றிடை நடிக்கு மையர்
    மங்கல முழங்க வீதி வயினுலாப் போதச் செய்தான்.

    50

    796

    வேறு
    கொடிநீள் கதலியு முயர்பூ கமுமதி குயின்மே லிவர்தர மலைவித்துக்
    கடியார் புகையொளி கனிசந் தனமலர் கவினொன் றியபுன னிறைகும்பம்
    படிவே திகையொடு பயில்கா வணநிரை படர்தோ ரணநிரை நிறைவித்த
    முடிவா னவர்புகழ் மணிவீ தியினகர் முறையா லிறையவன் வலம்வந்தான்.

    51

    797

    கவிகைக் குளிர்நிழல் விரியக் கதிர்பொழி கவரித் திரளிரு புடைதுள்ளச்
    சவிவின் மணிவட மொளிர்சுற் றுடையன சாந்தாற் றிகள்பல ததைகிற்ப
    அவிர்விண் ணுடுவின தளவுங் குறைபட வடரத் தழனிமிர் தருபந்தங்
    குவிமென் முலையவர் நடனத் தொடுமிறை குலவீ தியினகர் வலம்வந்தான்.

    52

    798

    விண்ணா டுடையவ ரெதிதூ வியவெயில் விரியும் பலமணி திடர்செய்ய
    மண்ணா டுடையவர் பரிவாய் மதகரி வளர்கைத் துளையுமிழ் புனல்வாரித்
    தண்ணார் நதியென வொழுகச் சரண்பணி யிமையார் முடியொடு முடிதாக்கித்
    திண்ணார் மணிநிறை பொடிபட் டுகவணி திகழ்வீ தியினகர் வலம்வந்தான்.

    53

    799

    மணிமொய்த் தொளிவிடு கனகச் சிவிகைதண் மதிமண் டலமெறுழ் வளர்பூதம்
    பிணிவிட் டலர்மல ரிரதம் விடைகரி பிறைவந் திறைகொளும் இரதத்தோ
    டணிமெத் தியசிறை யன்னம் பரியெழி லமையிந் திரநல்வி மானத்துந்
    திணிகட் செவியணி முடியா னொன்பது தினம்வீ தியினகர் வலம்வந்தான்.

    54

    800

    ஒன்றோ வியவொரு பஃதென் றுரைபட வுறுநாள் கழியும்வை கறையிஞ்சி
    வென்றார் பொறிவலி வென்றார் பணிசெய விரைநீர் முதலபி டேகங்கொண்
    டின்றா னடநவில் பொழுதென் றனைவரு மெழுநீர் நதிமுழு கிச்சார்ந்து
    நன்றா மொருபஃ தெனுநாட் சபையெதிர் தகைமா மணிசெய்மண் டபநிற்ப.

    55

    801

    அரிதா கியபணி புரிகோ முனிமுதன் முனிமூ வருமரு கேநிற்ப
    வரிவீ ணையினிசை யுயர்நா ரதமுனி மகிழ்தும் புருவுட னெழுவிப்பத்
    திரியா வகைபல தாளங் குறுமுனி திகழா நந்தியு மினிதொத்த
    உரிதா முழவுமந் துவுநந் தியுமிரு தலையுங் கரமல ருறுவிப்ப.

    56

    802

    வருகந் தருவரு மலியுங் கருடரு மதுரத் துடனிசை பலபாட
    ஒருகந் தழிநிலை யருளா லருளென வுறுதா பதரர கரவென்னப்
    பெருகந் தரர்சிலர் வளர்சிந் தையின்மறை பெருவா ரிதியொலி படவோத
    அருகந் தர்கண்முத லியதுன் மதியரு மருள்கண் டடிதொழ வணைகிற்ப.

    57

    803

    ஆகா வென்பவ ரூகூ வென்பவ ரருகுற் றரியமெல் லிசைபாட
    ஏகா வென்மரும் யோகா வென்மரு மாகிச் சித்தர்க ளெதிரேத்தக்
    காகா வெனவுர கர்கள்பன் மணியொளி கஞலத் திசைதிசை தொழுதாடப்
    பாகா மொழியவள் பாகா விடையொரு பாகா வெனவவு ணர்கள்பம்ப.

    58

    804

    மன்றா டியகுரு மணியே யடியவர் மதியா டியகளி நறவேபொய்
    வென்றார் நுகர்சுவை யமிழ்தே பத்திமை விளைவார் விளைசிவ விளைவேபுன்
    கன்றா னெனவுயிர் களின்வைத் தருளிய கனிவே கருணைசெய் கனியேயென்
    றொன்றா தரவுட னுரையா விழியிணை யுறைசிந் திடவடி யவர்தாழ.

    59

    805

    ஒருபா லுமைதன துருவின் விரவுற வொருகைத் துடியொலி யெழவங்கி
    ஒருவா தொருகையி னொளிரக் கவிதர வொருகை யொருகர மமைவெய்த
    ஒருதாண் முயலகன் வெரிநிற் பதிவுற வொருதாள் குஞ்சித முறவீசி
    ஒருகா ளியின்முகம் விழிநோக் குறமணி யொளிரம் பலநட நவில்கின்றான்.

    60

    806

    தழலொத் தவிர்புரி சடையெண் டிசைதட வரவெண் மதியொடு புனறுள்ள
    அழகொன் றியகுழை யசையக் குறுநகை யலரப் புருவமு முரிவெய்தச்
    சுழல்கட் செவியர விழிவெண் டலைதிணி தோளிற் றுயல்வர வதள்பொங்க
    உழல்சில் லரிபயின் மணிநூ புரவொலி யுறழத் திருநட நவில்கின்றான்.

    61

    807

    பூதங் களுமுறழ் கரணங் களுமெழு பொறியும் பொறியினுள் ளொளியான
    பேதங் களும்வரு காலங் களுமொளி பில்குங் கலைகளு மொளிவிந்து
    நாதங் களுமவை தருபோ தங்களு நவில்வே தங்களு மறியாமே
    ஏதங் கொளுமுயிர் போதங் கெடவிர சதமன் றிடைநட நவில்கின்றான்.

    62

    808


    அளவா யளவத னளவா யளவத னளவுந் தணிதரு மளவாகி
    அளியா யளியத னளியா யளியத னளியுந் தணிதரு மளியாகி
    ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி
    வெளியாய் வெளியதன் வெளியாய் வெளியதன் வெளியின் வெளிநட நடவில்கின்றான்

    63

    809

    ஓரா ணவமுத லிருவல் வினைமல மூன்றும் முடன்முத லியநான்கும்
    ஆரா வுடலிடை யுறுசாக் கிரமுத லைந்தும் மநுமுதல் வழியாறுஞ்
    சாரா வகையெழு ஞானம் பெறவரு டகவெண் ணுநர்பணி யொன்பானுந்
    தேரா வருள்பணி பத்துந் திகழ்தரு திகழம் பலநட நவில்கின்றான்.

    64

    810

    ஒருபான் றிசைகளு மொன்பா னுருவமு மோரெண் வடிவமு முலகேழும்
    மருவா நின்றொளி ராறா தாரமும் வளரைந் தினைகளு மறைநான்குந்
    தருமூ வழல்களு மிருமைப் பயனொடு தானா கியவொரு தனிவீடுந்
    தெருள்வா ரிஃதல திலையென் றுணர்வுறு திகழம் பலநட நவில்கின்றான்.

    65

    811

    அஞ்சக் கரமென வெட்டக் கரமென வாறக் கரமென நான்கென்ன
    பிஞ்சக் கரமுத லுருமூன் றெனவளர் பேரக் கரமுதன் மூன்றென்ன
    நெஞ்சத் துறநவி லீரக் கரமென நிலையோ ரக்கர மெனநின்ற
    செஞ்சொற் றிறமிரு நான்கா கியும்பிற வாயுந் திருநட நவில்கின்றான்.

    66

    812

    நகரந் திருவடி மகரம் வயிறெழி னகுதிண் புயம்வக ரஞ்சீர்சால்
    சிகரந் திருமுகம் யகரந் திருமுடி சிகரந் துடிகவி தருசெங்கை
    வகரம் யகரம தபயந் தருகரம் வளர்தீ நகரநன் மகரங்கீழ்
    உகளும் முயலக னொளிர்வா சிகைபிர ணவமா யொருநட நவில்கின்றான்.

    67

    813

    தோற்றந் துடிதிதி யபயந் தொலைவெரி தோலா மறைவுநின் றிடுதாளி
    னாற்றுங் கழலினல் லருளுந் தகநனி நலிமா யையையுத றிக்கன்ம
    நீற்றிக் கருமல மிருவித் திருவரு ணிலையா லுயிர்களை வாங்கிக்கொண்
    டாற்றுஞ் சுகவடி வாக்கிப் பதிவுறு மருளம் பலநட நவில்கின்றான்.

    68

    814

    அருளோ விலையென மேலா கியவுயி ரருளான் முதன்மைய தாயங்கு
    மருளா லருள்புரி தொழில்செய் குவலென மதியுற் றதனையு மொருவிப்போய்ப்
    பொருளா கியவரு ளுருவா யதன்முதல் புகலென் றறிதல்செய் தருணின்றுந்
    தெருளார் சிவமுடன் விரவிச் சுகமுறு திருவம் பலநட நவில்கின்றான்.

    69

    815

    வேறு
    சோதி மல்கிய விரசத சபையிற் றுரியத் தேவளர் வல்லியுந் தாமும்
    போதி யம்பொழிற் புண்ணிய முதல்வர் பொருந்தி யத்தநா ரீசராய் நடிக்கும்
    வேத நூபுர வொலியும்பல் லியமும் விரிக்கு மின்னிசை செவித்துளை நிறைப்ப
    ஏத மில்லவ ரனைவருங் கேளா வேங்கி நின்றனர் திருநடங் காணார்.

    70

    816

    வெள்ளி யம்பலத் தாட்டயர் முதலே வேத நாடரும் விழுத்துணைப் பொருளே
    வள்ளி கேள்வனை யுயிர்த்தமாமணியே வான வர்க்ககறி யாதவா னவனே
    புள்ளி மான்கரத் தேந்துவித் தகனே புடைநெ ருங்குபூ தப்படை யானே
    தள்ளி யெம்வினை யருணடங் காட்டாய் சங்க ராசய போற்றியென் றிரந்தார்.

    71

    817

    விரையத் தாண்டவங் கண்ணுறா மெலிவும் விண்ணெ ழுந்துநீர் சுரந்தமா மேகம்
    புரையத் தாண்டவங் காட்டியல் லாது போது றானெனு மகிழ்வுங்கொண் டுள்ளங்
    கரையத் தாழ்ந்தவர் மறைப்பினை மாற்றிக் கருணை நோக்கெதிர் வழங்கினார் செய்ய
    வரையக் கார்த்தணி யூர்தொறு மிரந்துண் டம்ப லத்துநின் றாட்டயர் முதல்வர்.

    72

    818

    ஊன நாடக நவிற்றியெவ் வுயிர்க்கு முறுக ணாணவ வலிகெடுத் தருளி
    ஞான நாடக நவிலுமங் கணனார் ஞான நாட்டநன் றருளலு மலம்போய்
    மோன மாதவ முனிவரர் மூவ ராதி யோரனை வருமுதிர் நடனத்
    தான வானந்தங் கண்களாற் பருகி யறிவு ளேயறி வடங்கியொன் றானார்.

    73

    819

    உரையுங் காயமு முணர்வுமெட் டாத ஒருவ ரக்கர மைந்துமே யுறுப்பாய்
    விரைநி லாவிய போதிசூழ் வரைப்பின் வெள்ளி யம்பலத் திணர்த்தபூங் கூந்தல்
    வரைய ணங்கொடு மாட்டயர் நடன மணிபொன் வானிதி மனைவியிற் பெரிதும்
    பரைதன் பாலராய்ப் பேணுவார்க் குளதோ பவஞ்சி வாநந்தம் பருகுவ தல்லால்.

    74

    820

    பகீர தன்பெருந் தவத்தினாற் புவியிற் பரந்த வானதி யகிலமும் படர்ந்து
    முகேரெ னக்குடைந் தாடநின் றதுபோன் முதிர்ந்த மாதவ முனிவரே யல்லால்
    தகீர் கணீவிரென் றொழித்தல்செய் யாது சார்ந்த வர்க்கெலாஞ் சகசவா ணவநோய்
    உகீரென் றோம்புதாண் டவந்தெரித் தருளு மொருவர் தம்பெருங் கருணையார் தெரிப்பார்.

    75

    821

    அகில லோகமு நடுநடுத் திரங்க வன்று வாதுசெய் தூர்த்துவ நடன
    முகிலி னேர்மிடற் றிறையவர் காட்ட முகத்து நாட்டங்கண் முதிர்நறுங் களப
    நகிலி னாட்டிய காளியுந் தவத்தா னங்கை பார்ப்பதிக் கொப்பநல் லுழுவைத்
    துகிலி னார்முக நோக்கிநின் றருளுந் தூய தாண்டவங் கண்டுகொண் டிருந்தாள்.

    76

    822

    வேறு
    விழிநீருக மெய்யி னுரோம மிகப்பொ டிப்ப
    மொழிவாயின் விளங்க வெழாது முழங்க வங்கை
    ஒழியாது முகிழ்ப்ப வுஞற்றிய வாடல் கண்டோர்
    கழிகூர்மகிழ் வானட மாடுதல் கைக்கொண் டாரால்

    77

    823

    அயனாடின னாடின னாரண னாய்ந்த சூலப்
    புயனாடின னாடின னீள்புயல் வேணி யீசன்
    மயனாடின னாடினன் வானவர் தச்ச னைங்கைக்
    கயனாடின னாடின னாறிரு கையி னேந்தல்.

    78

    824

    விண்ணோர்முழு தாடினர் விஞ்சைய ராடி னார்கள்
    பண்வீணைய ராடினர் பன்னக ராடி னார்கள்
    எண்மாதிர ராடின ரெண்மரு மாடி னார்கள்
    மண்ணோர்முழு தாடினர் மாதவ ராடி னார்கள்

    79

    825

    இருகோடி மருத்துவ ரீரிரண் டோடு நான்கு
    வருகோடி வசுக்கள் வரைந்திடு பத்தொ டொன்று
    தருகோடி யுருத்திரர் சாரு மிராறு கோடி
    அருகாவொளி யாதவர் நால்வரு மாடி னார்கள்.

    80

    826

    அறுநான்கினி ராயிர மாமுனி வோர்கள் சித்தர்
    உறுசாத்தியர் பூத ரியக்க ருலப்பில் பேயர்
    தெறுதானவர் தெவ்வு மரக்கர் வேதாளர் கோள்கள்
    எறுழ்நாள்க ளிராசி யுடுக்களு மாட்ட யர்ந்தார்.

    81

    827

    மலையாடின வாரிதி யாடின மன்னு மீரேழ்
    உலகாடின வோங்கிய வண்ட மனைத்து மாட
    விலகாத விராட்புரு டப்பெயர் வேந்து மாடிற்
    றிலகீசுர னாடினா டாதவர் யாவ ரம்மா.

    82

    828

    வேறு
    நிருத்த நாடக நேருறக் காண்டொறுங்
    கருத்தின் மிக்க களியா லனைவருந்
    திருத்த மாகத்தஞ் சேவடி தூக்கிநின்
    றருத்தி கூர்தர வாட்டயர் வேலையில்.

    83

    829

    ஐய நாடக மாட்டயர் வேகத்தின்
    ஐயன் மெய்யி லணிந்த வராவினம்
    ஐயு ணர்வு மயர்ந்து வருத்தமுற்
    றைய வங்க ணுமிழ்ந்தன வாலமே.

    84

    830

    அரையி னன்றித் தனாக்கை முழுவதும்
    புரிவி னாற்புலித் தோலிறை போர்த்திட்டாங்
    கெரியை வென்றில குந்திரு மேனியின்
    வரிக ளாக வழிந்ததவ் வாலமே.

    85

    831

    மிண்டு மாலத்தின் வேக முடற்றலுங்
    கண்ட நின்ற கடுவெளிக் கொண்டதோ
    மண்டு பாப்பணி வாய்விட மோவென
    அண்ட ராதி யனைவரு மஞ்சினார்.

    86

    832

    இரிந்து ளார்சில ரேங்கின ரோர்சிலர்
    பரிந்து காஎன் றிரந்தனர் பற்பலர்
    திருந்து நாடகச் செவ்வியின் மாய்தலும்
    பொருந்த னன்றென் றிருந்தனர் பற்பலர்.

    87

    833

    ஒசிய வுள்ளமங் குள்ளவர் யாவர்க்கும்
    பசியுந் தாகமும் பம்பிய தன்னதைக்
    கசியு நெஞ்சினர் கண்ணக லாதமர்
    நொசியு நுண்ணிடைப் பார்ப்பதி நோக்கினாள்.

    88

    834

    வேறு
    தனதொரு கூற்றா லன்னபூ ரணியைத் தந்தன ளன்னபூ ரணியும்
    வனமுலை யன்னை மலரடி வணங்கி மற்றெனக் கருள்பணி யாவ
    தெனவுமை யம்மை யெம்பிரா னடத்துக் கெய்திய வனைவரும் பசியான்
    மனமடி வடைந்தா ரன்னநீ வழங்கி வளரெனத் திருவருள் பணித்தாள்.

    89

    835

    ஒருகரத் தேந்தும் பாத்திரத் தன்ன மொருகையிற் சராவத்தா னள்ளி
    இருள்வளர் கூந்த லன்னபூ ரணியங் கிட்டன ளொருமுறை யதுபொற்
    பெருவரை யென்ன வளர்ந்தது கண்டு பெருகிய மகிழ்ச்சியா னெவரும்
    மருவினர் முகந்து வாய்மடுத் துண்டு வன்பசி தணிந்தனர் மலிந்தார்.

    90

    836

    வரிமுகம் புழுங்கச் சுடரயில் விடுத்த வள்ளிதன் கேள்வனாரிரங்கி
    விரைகமழ் வேணீர் வியவரிற் கொணர்ந்து விடுத்தருந் தாகநோய் தணித்தார்
    புரையற வுடலின் விரவிய வெப்பம் புழைக்கைநீர் துளிக்குமா றுயிர்த்துத்
    தரையிடை யெவருங் குளிர்ப்பமேற் படுத்துத் தந்திமா முகத்தவன் றணித்தான்.

    91

    837

    அஞ்சலை யஞ்ச லென்றிரி குநரை யங்கையா லமைத்தனன் வீரன்
    எஞ்சலு றாமை யிரிந்தவர் வருகென் றிசைவுறக் கூவினன் வடுகன்
    தஞ்சமு றாமை யவரவர்க்கிடங்கள் சமைத்தனன் கேத்திர பாலன்
    மஞ்சிவர் நகரங் காவல்செய் தண்டி வருத்தங்கள் வினாயருள் புரிந்தான்.

    92

    838

    வேறு
    அனைவரு மகிழ்ச்சி கூர்ந்தா ரம்பலத் தாடு மையர்
    அனையவர் முகத்தி னோக்கி யருளினா லருளிச் செய்வார்
    வனைபுகழ் மன்ற மீதின் வயக்கிய நடன மென்றுங்
    கனைகட லுலகில் யாங்கு மொருவர்க்குங் காட்டி லேமால்.

    93

    839

    ஞானத்தா னம்மை யன்றி வேறொன்று நாடாச் சிந்தை
    மோனத்தா னுயர்ந்த தண்டி மொய்த்தநம் மருளா லென்றும்
    வானத்தார் வணங்கக் காவன் மருவுமிம் முத்தி வைப்பின்
    மீனத்தாம் விழவு நோக்கி வியந்தனி ராத லாலே.

    94

    840

    மும்மல மிரிய விந்த முதிர்சுவை நடனங் காணச்
    செம்மலும் பெற்றீ ரின்னுஞ் சிந்தையின் வேட்ட வெல்லாங்
    கொம்மென விரைந்து கொண்மி னென்றனர் குவளைக் கண்டர்
    தம்மடி வணங்கி யாருந் தனித்தனி வரங்கள் கொள்வார்.

    95

    841

    கரமலர் முகிழ்த்துத் தாழ்ந்து காலவ முனிவன் சொல்வன்
    அரவக லல்கு லார்த மாசையு நிலனு பொன்னும்
    புரவியல் போக முற்றும் புரையெனப் போக்கி யென்னை
    வரமலி யடியினீழல் வைத்தனை யேனு மெந்தாய்.

    96

    842

    இரவிமுன் விளக்குக் காட்டா தாயினு மிருக்குங் காறும்
    விரையு மதனைக் கண்கள் வித்தக மாகு மன்றே
    பரருறு பயத்த தாகும் படிவமு மெனக்கற் றாமாற்
    கரவுசெய் தருளல் வேண்டுங் கடல்புரை கருணை வாழ்வே.

    97

    843

    திருவருள் புரிந்த ஞான்றுஞ் சிறியனே னிரந்தே னீதன்
    றருடணங் காட்டிப் பின்ன ரறைந்தவா புரிது மென்னக்
    கருணையி னுரைத்தி யின்பக் காமர்நா டகமுங் கண்டேன்
    மருள்வள ருடல மின்னே மாற்றுதல் வழக்கே யென்றான்.

    98

    844

    புறக்கணி யாத வண்ணம் பூரணன் கடைக்க ணித்தான்
    சிறக்கணித் திட்ட யாக்கை தீர்ந்தது முனிவன் வல்லே
    மறக்கணித் தடர்ப்ப மேலே வருவினை யின்றி யொன்றாய்
    அறக்கணித் தருளு மின்பத் தவசமா யழுந்தி னானே.

    99

    845

    கவலையும் பிறவி வேலை கடந்திடுந் தொள்ள மான
    தவலரு வெள்ளி மன்றின் றனிநடங் காணும் பேறு
    சவலையி லாத சேடன் றன்னினாந் தகைமை யுண்ணிக்
    குவலய நிறத்து மேனிக் கோமுனி வியந்து பின்னர்.

    100

    846

    கடகரி யுரிவைப் போர்வைக் கண்ணுதல் பாதம்போற்றி
    நடனமிவ் வெள்ளி மன்றி னாடொறு மடிய னேற்கும்
    உடலிது கழிநாட் காறு முஞற்றுதல் வேண்டு மென்றான்
    அடலைகொண் டணிந்த பெம்மா னங்ஙன மாக வென்றான்.

    101

    847

    நாகத்தார் மருமத் தண்ண னடனமிங் கெய்தும் பேறு
    மோகத்தா னன்றே யென்று மோகத்தாள் பாத முன்னி
    மாகத்தார் வியப்ப மைநூற் றனையவார் கூந்தன் மங்கை
    பாகத்தான் சரணந் தாழ்ந்து பட்டிமா முனிவன் சொல்வான்.

    102

    848

    இத்தலத் திருக்கை யோர்க்கு மித்தலந் தரிசித்தோர்க்கும்
    உத்தம நடனங் காணு முறுதவத் தவர்க்கு மீளா
    முத்தியை யளிக்க நிற்றி முக்கணா வேட்டு ளார்கட்
    கத்தமும் பொருளு மின்பு மிவையுநன் றருளல் வேண்டும்.

    103

    849

    அள்ளலம் படுக ரான வணங்கினர் போக வாழ்க்கை
    எள்ளிநா னடன மொன்றே கண்டுகொண் டிருத்தல் வேண்டும்
    வள்ளலே யென்றி ரந்தான் வரமெலா மளித்து நீண்ட
    வெள்ளியம் பலத்து ளாடும் விகிர்தன்மற் றிதுவு நல்கும்.

    104

    850

    படைப்பினை வேட்டு நம்பாற் படர்ந்தனை யாத லாலே
    இடைப்படும் படைப்போர் கூற்றா னெய்துமுன் னுருவந் தாங்கிக்
    கடைப்படா தங்கி ருந்து கடைப்பட வாக்கு நந்தங்
    கொடிப்பெரு நடன நாளுங் கும்பிடிவ் வுருவி னீங்கே.

    105

    851

    மாயனுந் தொல்லை மேனி வாய்ப்புறக் கொண்டோர் கூற்றாற்
    பாயபல் லுயிரை யெல்லாம் பாற்கடல் துயின்று காத்துத்
    தூயவிவ் வடிவி னீங்குச் சுடரொளி வெள்ளி மன்றின்
    நேயநன் னடன நாளு நியதிகொண் டினிது காண்க.

    106

    852

    சூரனா லச்ச மெய்திச் சுரர்கள்வந் தபய மெய்த
    வாரநா மளித்துக் காத்து வதிவித்துச் சூர னாவி
    ஆரனாண் முலைப்பா லுண்ட வமரனால் விளித்தா மற்றால்
    தீரமாங் காஞ்சி வைப்பிற் சிவணுநர்க் கிடும்பை யில்லை.

    107

    853


    பகையினான் மண்ணை தன்னாற் பார்த்திவர் தம்மா னோயால்
    தகைசெயு மனுவால் வானோர் தங்களா லவுணர் தம்மான்
    மிகைசெயு மரக்க ரானும் விலங்குசெந் துக்க ளானும்
    புகையழ லானு மீங்குப் புல்லுநர்க் கச்ச மின்றே.

    108

    854

    எந்தமைக் குறித்து நீசெ யெரியழற் குண்டத் தென்றுங்
    கந்தவெண் பூதித் தோற்றங் கழிவின்றி வளர்வ தாக
    வந்தவெண் பூதி போற்று மவர்களும் வேட்ட தெய்திப்
    பந்தமுற் றிரியச் சொன்ன பொருளினாம் பயமுந் தீர்வார்.

    109

    855

    ஆனந்த நடன நோக்கி அனைவரு நம்மைப் போல
    ஆனந்த முளத்தி னீட வாட்டயர்ந் தனர்க ளன்றே
    ஆனந்த மருளு நம்மு னன்னண மாடு வோர்க்கும்
    ஆனந்த முறுக வேட்ட பொருள்களு மடுப்ப தாக.

    110

    856

    என்றிறை வரங்க ணல்க விட்டகா மியம்வேட் டோரும்
    ஒன்றுவேட் டோரு மன்றி னுறுநடம் வேட்டோர் யாரும்
    நன்றிசெய் முனிவர் வாங்கு நல்வர நமக்குஞ் சாலு
    மன்றவென் றிரந்து வேறு வரங்கொளா தமைதி பெற்றார்.

    111

    857

    ஒன்பதோ டேழு கையி னொளிர்படை தாங்கி நம்பன்
    மன்பதைக் கிரங்கி யாட மலர்புரை கரங்க ளெட்டின்
    மின்படை தாங்கி வாது விளைத்துமுன் னாணி நின்று
    பின்பரு ணடனங் கண்ட பெய்வளை வணங்கிக் கூறும்.

    112

    858

    தெவ்வரை முருக்குஞ் சூலத் தேவனே போதி சூழ்ந்த
    இவ்வரைப் பிடைநின் றோங்கு மிரசத மன்றி னாயேற்
    கொவ்வரு நடனங் காண்டன் முதன்மையை யுறுத்தா யன்றே
    எவ்வெவ நாளு மீங்கிம் முதன்மையா னுறுக வென்றான்.

    113

    859

    அன்னண மாக வென்றா ரமலனா ரதனைக் கேட்ட
    மின்னிழை யுமையாள் காளி மிளிர்முக நோக்கி யாடத்
    தன்னுளத் தரும்பு மூடல் புலவியாய் வரந்தா னல்கப்
    பின்னது துனியாய் நீடப் பெரிதுமற் றிதனைச் செய்தாள்.

    114

    860

    வேறு
    நாடகங் காண்டலின் முதன்மை நம்மது
    பாடகத் தளிரடிப் பாவை மற்றவள்
    பீடுறக் கொள்ளுமே யென்று பிஞ்ஞக
    னோடுசெம் பொன்னிக ருருவி னீங்கினாள்.

    115

    861

    பரிசனம் பரதங்கண் டிறைஞ்சு மாதவர்
    வரிசைசெ யமுதர்கண் மற்று ளோரையுங்
    கரிசிறன் கணங்களாற் காதிக் கொண்டுபோய்ப்
    புரிசடைக் கடவுளைப் புலம்பு செய்தனள்.

    116

    862

    வாயிலாற் றுனியினை மாற்றி தாதைநற்
    றாயிலா னயமொழி தந்து புல்லுறீஇ
    நீயிலா திருத்துமே நிகழ்முக் கோணமெய்க்
    கோயிலா யென்றவள் குளிர்ப்பக் கூறுமால்.

    117

    863

    பல்வகை மன்றினுட் பத்தர்க் கின்னருள்
    நல்வகை மன்றுநல் லனவ வற்றுளுஞ்
    சொல்வளர் நஞ்சிறார் தொழுது போற்றிய
    எல்வளர் மன்றெமக் கினிய வாகுமால்.

    118

    864

    எமதுருத் தோன்றியெஞ் சிறார்க ளாகிய
    கமலனு நேமியுங் கழிப்பி வல்வினை
    விமலதை யடைந்துமெய் நடனம் போற்றுறுந்
    தமரமன் றிதுதக வுயர்ந்த தாயினும்.

    119

    865

    ஓங்கிய விராத வோங்கன் மீமிசைத்
    தாங்கிய விரசத சபையை நேர்வதன்
    றாங்கது பிரமர்நா ரணர ளப்பிலார்
    நீங்கிய தொழிலராய்ப் போற்ற நின்றதே.

    120

    866

    ஆக்கலு மழித்தலு மாய வூழ்வினை
    நீக்கமில் லார்தொழ நின்ற விச்சபை
    ஊக்கிய நடமுவள் காண்க வச்சபைத்
    தாக்கரு நடனநீ தகவிற் காண்கவே.

    121

    867

    இச்சபை நாடகத் தின்று போலெறுழ்ப்
    பொச்சமில் காளிதான் போற்று மேல்வையின்
    முச்சகந் தொழுதெழு முதல்வி யென்றுநம்
    அச்சொடும் விரவியொன் றாதி தாழவே.

    122

    868

    என்னநல் வரமுமைக் கினிது நல்கினான்
    அன்னமும் பன்றியு மறிவொ ணாதவன்
    மின்னிய விரசத வெற்பி னூழியு
    மன்னிய விரசத மன்றிற் றோன்றினான்.

    123

    869

    எண்ணிலர் பிரமர்க ளெண்ணி னாரணர்
    எண்ணில ரிந்திர ரெவரும் போற்றுற
    எண்ணில்பல் லியநனி யியம்ப வாடினாள்
    எண்ணிலாக் கருணையெம் பிராட்டி காணவே.

    124

    870

    முழங்கின துந்துபி முனிவ ரார்த்தனர்
    தழங்கின சிலம்பொலி தாள மேங்கின
    வழங்கின நரம்பிசை வங்கி யத்திசை
    பழங்கணி லெதிரொலி பறம்பு செய்யவே. 5

    125

    871


    ஆடினர் சிலரெதி ராடி யாரணம்
    பாடினர் சிலர்மறை பாடி யின்னருள்
    கூடினர் சிலரருள் கூடி யானந்த
    நீடினர் சிலரிறை நிருத்தம் போற்றினார்.

    126

    872

    வரையெலாந் தாண்டவ நாத மல்கிபின்
    தரையெலாம் பரத்தலிற் றரையு ளார்சிலர்
    உரையெலாங் கடந்தொளி ரொருவன் குன்றினும்
    புரையெலாந் தபப்புகுந் தாடல் போற்றினார்.

    127

    873

    அன்றுபோ லென்றுமவ் விரண்டு மன்றினும்
    மன்றலங் கடுக்கைவார் சடிலத் தெம்பிரான்
    நின்றருள் நாடக நிகழ்த்து மாருயிர்க்
    கொன்றிய மலப்பிணி யோட்டந் தெய்க்கவே.

    128

    874

    இருசபை யிடத்தினு மீண்டு நாதங்கள்
    ஒருமுறை செவியுறத் தவமு ஞற்றினோர்க்
    கருள்பெற யோகுழந் தாங்குக் கேட்குமப்
    பொருவினா தமும்புறக் கணிக்கும் பெற்றித்தே.

    129

    875

    மன்றினைச் சேயிடை யிருந்து வாழ்த்தினும்
    ஒன்றிய திசையுற நோக்கித் தாழினும்
    நன்றெதிர் நோக்கினார் நவிற்றக் கேட்பினும்
    அன்றிய காதர மவர்கட் கில்லையே.

    130

    876

    அற்றைநா ளந்திவந் தணைய வண்ணலார்க்
    குற்றபூ சனைநனி யுஞற்றி மாதவர்
    பொற்றவெண் கயிலையம் பொருப்பி லேற்றினார்
    கொற்றவீ தியைவலங் கொள்ளச் செய்தனர்.

    131

    877

    மன்றிடைத் திருவுரு வரதன் வைகிய
    தன்றைவார் கொடிப்படப் பெற்றந் தாழ்த்தினார்
    வென்றபூங் கழலடி வேந்த ராதியோர்
    நன்றுதம் மிருக்கையை நண்ணி வாழ்ந்தனர்.

    132

    878

    பத்திசெய் கோமுனி பட்டி மாமுனி
    உத்தம ரிருவரு முறுதங் கூற்றினாற்
    கொத்துறு வையகங் குயிற்றிக் காத்தருள்
    வித்தக னடந்தொழு நியம மேவினார்.

    133

    879

    உலகமுற் றுயிர்த்தரு ளுமையுந் தானுமாய்
    அலகில்பல் லுயிர்க்குநல் லறிவு நண்ணுமா
    றிலகிய விரசத மன்றி னென்றுநந்
    தலைவனைந் தொழினடந் தரநின் றானரோ.

    134

    880


    நாயகன் விழவுநா டகமுங் கண்டுமுன்
    பாயமெய்த் தவத்தினர் பலரு முய்ந்தனர்
    ஆயவக் கதைபுகன் றடிய னேனுமின்
    றேயும்வல் வினைப்பவ மிரித்திட் டுய்ந்துளேன்.

    135

    881

    அளவினைக் கடந்தொளி ரமல னாடகத்
    தளவினை யென்னறிந் தறைந்து ளேனென்றான்
    துளவினை யணிந்தவ ணாய தூமுனி
    வளவினை தபுமடி வழுத்துஞ் சூதனே.

    136

    882

    உய்ந்தன மடியரே மெழுமைத் தோற்றத்தும்
    உய்ந்தன மெனப்பணிந் துறுவர் கூறுவார்
    மைந்துடைச் சூரினாம் வானு ளோர்பயஞ்
    சிந்திய தென்றுமுன் றெரிக்கப் பட்டதே.

    137

    883

    அக்கதை விளங்குமா றருள்வ தென்றனர்
    பொக்கமின் முனிவரர் புகறல் கேட்டலுங்
    கொக்கிற கணிந்தொரு கோலங் கொண்டருள்
    நக்கனை யுளத்துறீஇ நவிலுஞ் சூதனே.

    138


    நிருத்தப் படலம் முற்றியது.
    ஆகத் திருவிருத்தம் - 883
    ---------

    13. அபயப் படலம் (884-923)

    884

    முக்க ணக்கனை மும்மத வேழத்தின்
    தொக்க ணிந்த சுருதித்தலைவனை
    ம்க்கு வேற்றுமை செய்துவிண் ணோரொடுந்
    தக்க யாகஞ் சமைத்தனன் தக்கனே.

    1

    885

    மாறு பட்டமை நோக்கிய வள்லலார்
    ஏறு பட்ட வெறுழ்வலி வீரனால்
    ஊறு பட்டொழி வெய்தவிண் ணோர்மகம்
    நீறு பட்டற நிக்கிர கஞ்செய்தார்.

    2

    886

    பகைஞ னோடுடன் பட்டதொர் பாதக
    மிகைத ணிந்தது வீரன் சவட்டலால்
    தகைகொண் டெஞ்சிய பாதகத் தின்பயன்
    நுகர்வித் தெநொடிப் பானுளத் தெண்ணினார்.

    3

    887

    மாயை பாங்கர்மறுவறு காசிபன்
    நேய மாகி நிறையழி காதலில்
    தோயமூவரைத் தோற்ரினர் சூரனே
    சீய மாமுகன் றரகச் செம்மலே.

    4

    888

    மோஅ மாமல மூன்றுமொத் தன்னவர்
    பாக சாதன னெஞ்சம் பதைப்புற
    யாக மாக்க விசாரத் தியற்ரினார்
    ஏக நாத னிடைவரம் வாங்கினார்.

    5

    889

    எண்மர் வன்மை யிளக்கினர் மாலயன்
    திண்மை முற்ருஞ் சிதைத்தன ரிந்திரன்
    கண்ம லர்த்தலை வன்க ணுறுந்தொகை
    உண்மை யண்ட மொரானை செலுத்தினார்

    6

    890

    தான வர்க்குத் தகைமை பெருக்கினார்
    வான வர்க்கு வருத்தந் திருத்தினார்
    கான மல்க கற்பக நாடெலாம்
    உன மல்க வொலிதழ லூட்டினார்.

    7

    891

    இன்ன வாறவரின்னல் விளைத்தலிற்
    பன்ன கத்தின் பறைவிழத் தாக்கிய
    மன்ன னாதியர் வைகிட மற்றனர்
    கன்னி பாஅன் கயிலையைச் சார்ந்தனர்.

    8

    2

    வெள்ளி யங்கிரி வித்தக வெங்களை
    அள்ளி யுண்ணினல் லாற்கத மாறிலாத்
    தொள்லை யுள்லத்துச் சூரனை யஞ்சினேம்
    பொள்ளெ னப்புரட் டாயெனத் தாழ்ந்தனர்.

    9

    893

    கருடன் றாக்கிய கட்செவி போலவுந்
    தருமன் றாக்கு நரகர் தகையவும்
    வெருவு முள்ளத்த ராயவிண் ணோர்க்கெலாங்
    கருனை நாதர் கடைக்கணித் தோதுவார்.

    10

    894

    தக்க னோடு மகத்திற் றருக்கிய
    மிக்க பாவம் விளித்திலி ராதலால்
    தொக்க செல்லற் றுலைத்தனி ரிவ்வெலாம்
    பக்கு விட்டறப் பன்னுதுங் கேண்மினோ.

    11

    895

    வேறு
    மாயவனே நின்னாலும் மறையவனே நின்னாலு மலர்க்கண் மெய்யின்
    மேயவனே நின்னாலும் விண்னவரே நும்மாலும் விளியா வாற்றல்
    ஆயவனை யெவராலு மடர்ப்பரிது நமதுவிழி யழலிற் றோன்றுஞ்
    சேயவனை யல்லாது தேவர்கா ளவன்வருநா லளவு நீயிர்

    12

    896

    வீங்குபுக ழாதிபுரி யென்றொருவைப் புளததனில் விரவி வாழ்வார்க்
    கேங்கலுறு மிடரில்லைப் பிணியில்லைப் பயமில்லை யிலம்பா டில்லை
    தேங்கலுறும் புகழுண்டு வலியுண்டு நலமுண்டு தேக முண்டு
    தாங்கலுரும் ப்பேரின்ப முளதாகும் தயங்கியவத் தலத்தைச் சார்மின்

    13

    897

    ஆவயிற்சென் றடுத்தலொடு மரியபா தகநும்மை யகல்வ தாகு
    மாவலியி னவுணர்பிரான் றண்டமுநும் வயினினிமேன் மருவா சூட்டுச்
    சேவல்வல முயர்த்தவச்னுஞ் சிறுவரையி னுமக்கிரங்கித் தெவ்வைச் சாடு
    மேவலரை வலியழிக்கு மருதவரை யவணுளது வேக வென்றார்.

    14

    898

    வேறு
    வெள்ள நதியிற் பிள்லை வெண்மதி
    தொள்ள மென்ன நள்ளுந் தூமுடி
    வள்லல் விள்ள மருத மால்வரை
    கொள்ளு மொள்ளல் கூரு கென்றனர்.

    15

    899

    சிறகர் வண்டு சென்று வீழ்கலா
    நறவ மாலைநாறுந் தோளினார்க்
    குறவி னுள்ல மோகை கொள்ளமெய்
    அறவன் மேன்மை யறத லுற்றனன்.

    16

    900

    முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்
    உருகு மன்பர்க் குதவி செய்யவே
    பெருகு காமர்ப் பிறங்க லாயினான்
    அருகின் வேலு மருத மாயதே.

    17

    901

    மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்
    மருதம் பாட வாய்ந்த வேள்வரை
    மருத நின்ற மறுவில் காடிசியான்
    மருத வோங்அ லென்ன மன்னுமே. 8

    18

    902

    கால வங்கிக் கடவுள் வேணியிற்
    சால வைகுந் தண்பு னனதி
    ஞாலம் வ்ண்டு நண்ணும் வேர்வழி
    மூலம் வந்து முன்ன் கின்றதே.

    19

    903

    வேறு
    அத்தகு தீர்த்த வரவினைக் கேட்டோ ரணிவளர் நம்முல குறுவர்
    அத்தகு தீர்த்தங் கண்ணுறக் கண்டோ ரழகிய நமதரு கிருப்பர்
    அத்தகு தீர்த்தம் படிந்தவர் நந்த மழிவிலாத் திருவுரு வெடுப்பர்
    அத்தகு தீர்த்தம் பருகினோர் நந்த மடியிணை நீழல்விட் டகலார்.

    20

    904

    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          மகவிலார் மகவினைப் பெறுவர்
    கண்ணொளி யிகந்தார் கண்ணொளி படைப்பர்
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          கவினிலார் கவினுருத் திகழ்வர்
    பெண்ணல மிழந்தார் பெண்ணல முறுவர்
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          பிணியினர் பிணியில ராவர்
    எண்ணிய வரங்கள் எண்ணியாங் கியைவ
    மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
          ரெனைவரு மனையதீர்த் தத்தால்.

    21

    905

    கசியிலா ததனைத் தொட்டிடின் வறக்குஞ் சுசிசெயிற் பண்டுபோற் சுரக்குங்
    கசிவுறு முள்ளத் தடியவர்க் கெம்பாற் கலப்புறக் கரையழிந் தெழுந்த
    வரிபெறு மன்பி னுருப்ப்வை வேனில் வைகிய பொழுதும்வற் றாத
    நொசிவறு தீர்த்த மதுதனை மருத தீர்த்தமென் றகிலமு நொடிக்கும்.

    22

    906

    ஆங்கத னயலே கன்னிகை தீர்த்த மதனய லேகந்த தீர்த்தம்
    ஈங்கிவை மூன்றுந் தென்புறச் சார லிருப்பன வ்டபுறச் சாரல்
    ஓங்கிய வனும தீர்த்தமொன் றுளத லுமைமக னிருக்கையின் மேல்பால்
    தாங்கிய வுச்சி வரையிடை யுளது சரவணப் பொய்கையென் றொன்று.

    23

    907

    அருச்சுன தீர்த்தம் போலவே யுரைத்த தீர்த்தமு மறமுத னான்கும்
    வருத்தமொன் றின்றி யளிப்பன வாகும் வைகலு மவ்வரைச்சாரல்
    உருத்திகழ் காம தேனுவுற் றுலாவி யுறுபசி யிரிதர மேய்ந்து
    மருத்திகழ் தீர்த்தம் பருகிநீள் சோலை மலர்நிழ லயர்வுயிர்ப் பதுவே.

    24

    908

    உம்பர்கா ளந்த வரையினைக் கண்டோ ருவப்புறக் கேட்டவர் பணிந்தோர்
    வம்புலாங் கடப்பந் தாரினா னாங்கு வதிதரு முருவழி படுவோர்
    செம்பொனா திகளாற் றிருப்பணி பிறவுஞ் செய்பவ ரிவரெலாஞ் செயிர்தீர்ந்
    திம்பரி னெதிரில் செவரா யும்ப ரின்பெலாங் கைக்கொல்வ ரெளிதின்.

    25

    909

    உத்தம மாகி யொளிருநம் முகங்களோரைந்து முமைமுக மொன்றும்
    வித்தக மின்றி யவன்முக மாறாய் விளங்கின வாதலா னமரீர்
    சத்திய்ஞ் சிவமு மெனநினைந் தயில்வேற் சண்முகன் சரணமே சரணா
    அத்தகு வரையி னருந்தவம் புரிமி னவனருள் வழங்குவ னென்றான்.

    26

    910

    வேறு
    அண்ன லாரருள் செய்தலும்
    எண்ண முற்றிய தின்றென
    விண்ணு ளார்கள் வியந்தனர்
    மண்ணி னேக வலித்தனர்.

    27

    911

    விமல னார்விடை பெற்றனர்
    கமல வாவி கலந்ததோர்
    அமல னாதி புரத்தினைச்
    சமல நோயறச் சார்ந்தனர்.

    28

    912

    கான்சி மாநதி கண்டனர்
    வாஞ்சை யோடும் வணங்கினர்
    பான்ச சன்னிய பாணிய
    னஞ்சு ராதிப னாதியோர்.

    29

    913

    பரந்த தோயம் படிந்தனர்
    சுரந்த காத றுளும்பமெய்
    நிரந்த ரித்தனர் நீற்றணி
    அரந்தை தீர்கட னாற்றினார்.

    30

    914

    கோயி லைகுறு குற்றனர்
    வாயின் முன்னர் வணங்கினார்
    தாயி னுந்தயை யுய்த்தருள்
    நாய னாரெதிர் நண்ணினார்.

    31

    915

    அமிழ்த லிங்கத்தி னாதியை
    அமிழ்த ரானவ ரன்புகொண்
    டமிழ்த மெல்லிசை யாற்றுதித்
    தமிழ்த வின்னரு ளார்ந்தனர்.

    32

    916

    சூர னச்சந் தொலைத்தனர்
    வார மன்றும் வனங்கினர்
    சாரல் வெள்ளிச் சயிலமேல்
    நார வேணியை நண்ணினார். 3

    33

    917

    கண்டு கண்கள் கலுழ்ந்தனர்
    தண்டெ னத்தரை வீழ்ந்தனர்
    கொண்ட வன்பிற் குனித்தனர்
    அண்ட காவென் றரற்றினர்.

    34

    918

    நல்ல காஞ்சி நதிக்கரை
    எல்லை முற்று மிருக்கைகொண்
    டொல்லி லிங்க முறத்தழீஇ
    வல்ல பூசை வயக்குவார்.

    35

    919

    வேறு.
    நாரன னொருபாற் பூசை நடத்தின னளின மேய
    ஆரண னொருபாற் பூசை யமைத்தன னவிரும் வெள்ளை
    வாரன னொருபாற் பூசை வளர்த்தனன் மல்கு வானோர்
    சாரண னொருபாற் பூசை சமைத்தனர் தழைத்த வன்பால்.

    36

    920

    விஞ்சையர் கருடர் வீணை வித்தகர் யோகர் சித்தர்
    அஞ்சையு மடக்கு மாண்மை யருந்தவ முனிவர் யாரு
    நெஞ்சிடை யுறுதி யன்பி னிறையொடு வேறுவேறு
    தஞ்செய லடங்க வீசன் றனிச்செயற் பூசை செய்தார்.

    37

    921

    அவன்வரை யுமையா ளோங்க லவிரொளி வெள்ளி வெற்புப்
    புயனிகர் மேனிச் செல்வன் பொருப்புயர் மருதக் குன்றென்
    றியலுமைந் தடுக்கன் மாட்டு மிருகம்புனற் றீர்ஹ்ட்தந் தோறும்
    வயமரு ளிறைவ னார்த மலரடி பூசித் தாரால்

    38

    922

    துவன்றியன் னவர்க ளன்பிற் றொழுஞ்சிவக் குறியு ளொன்றிற்
    பவன்றனை நினைந்து போற்ரும் பண்பினர் பகையுந் தேயுங்
    கவன்றவுட் பயமுந் தீருங் கதியவர்க் கொல்லை யெய்தும்
    புவன்றன தடியி னீழற் பொருவில்வாழ்க் கையுமுண் டாமால்.

    39

    923

    விண்னவர்க் கபய நல்கி விமலனா ரச்சந் தீர்த்த
    வண்ணமீ தறிமி னென்று மாதவர்க் கியம்பிச் சூதன்
    பண்னவர்க் கிரங்கிச் சூரைப் பறந்தலைப் படுத்து மாட்டுந்
    திண்ணிய மணிவே லண்ணல் செயலினைத் தொகுக்க லுற்றான்.

    40

    அபயப் படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 923
    ----------------------

    14. மருதவரைப்படலம் (924-1070)

    61

    924

    கருது வார்க்குக் களிதர வல்லது
    பொருது வார்க்குப் புயவலி யீவது
    சுருதி நீண்முடி போல்வது தூய்மையின்
    மருத வோங்கல் வளத்திற் பெரியதே. 1

    1

    925

    காம னுக்குநற் கட்டழ குய்ப்பது
    நாம கட்குங் கலைநவில் விப்பது
    பூம கட்குஞ்செல் வம்புணர் விப்பது
    போர்ம கட்கும்வன் போர்த்திறஞ் சேர்ப்பது.

    2

    926

    எண்ணு வார்த மிடர்க டவிர்ப்பது
    கண்ணிற் கண்டோர் கருத்தி னிருப்பது
    விண்ணங் குத்தி மிளிர்ந்த முடியது
    பண்ணை வண்டு பயில்பொழி லுள்ளது.

    3

    927

    கால காலனுங் காமுற நிற்பது
    கோல மானவன் கும்பிடப் பட்டது
    ஞால மீன்றவ னாணுறத் தக்கது
    வேல னேயுரு வான வியப்பது.

    4

    928

    பத்தர் கோமுனி பட்டி முனிவனு
    நித்த நித்த நிரந்தரித் துள்ளது
    சித்தர் வானவர் திப்பிய மாதவர்
    சுத்த யோகியர் சூழ்ந்த பரப்பது.

    5

    929

    எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும்
    வண்மைத் தாக வரும்பய னுய்ப்பது
    திண்மைத் தாகிய தீமை பெருக்கினும்
    நுண்மைத் தாக நுவலுமுன் மாய்ப்பது.

    6

    930

    வாழை மென்கனி மந்திய யின்றுபோய்த்
    தாழை தாவச் சடசட வீழ்கனி
    கூழை வன்குரக் குக்குலங் கொண்டுகற்
    பூழை யூடு புகுதுமொர் பாலெலாம்.

    7

    931

    கன்னி காரங் கருத்துணர்ப் பாடலம்
    வன்னி கொன்றைமந் தாரங் குராமராப்
    புன்னை பிண்டி பொரியரைக் கூவிளம்
    மன்னு நந்த வனங்களொர் பாலெலாம்.

    8

    932


    மயிலை மாலதி மல்லிகை பித்திகை
    அயின்மு கைத்தள வங்குள விக்குலம்
    பயிலு மாதவி பம்பிய சூழலின்
    இயலும் வண்டி னிசையொரு பாலெலாம்.

    9

    933

    நரந்த மென்கனி நாவலந் தீங்கனி
    கரந்து மண்ணுட் கனிபல வின்கனி
    நிரந்த முந்திரி கைக்கனி நித்தலுஞ்
    சுரந்து வாசஞ் சுலாவுமொர் பாலெலாம்.

    10

    934

    ஏல மேயில வங்கங்கச் சோலந்தக்
    கோல மாஞ்சியுங் குங்கும முங்கடி
    கால நின்ற கருப்புர வாழையும்
    ஞாலம் வௌளவநன் றாகுமொர் பாலெலாம்.

    11

    935

    நாக நீண்முழை நாகங்கண் டச்சுற
    நாக தாளியி னன்கனி பாம்பெனத்
    தோகை மஞ்ஞை தொடர்ந்துமுன் கொத்திநின்
    றூக மோட வுலைக்குமொர் பாலெலாம்.

    12

    936

    சரோரு கங்களு நீலமுந் தங்கிய
    பரோடை நீரொடு மட்டை பருகுதோல்
    உரோம நீண்மரத் தொண்குழை வாய்மடுத்
    தரோக மெய்திய தீர்க்குமொர் பாலெலாம். 3

    13

    937

    கனையெ ருமைம ரங்கள் கனைத்தலுங்
    கனையெ ருமையெ னக்கதழ் வேங்கையங்
    கனைநல் லார்மனு வாற்கட்டப் பட்டன
    கனைம லர்ப்பொழில் காட்டுமொர் பாலெலாம்.

    14

    938

    காய வாழ்க்கையர் காய மிவையல
    மாய மென்கொலிவ் வன்மரம் வைகலுஞ்
    சாயை யில்லெனச் சார்ந்த வரையுறச்
    சாயை யில்லாத் தருக்களொர் பாலெலாம்.

    15

    939

    விடபத் தேறிநின் றார்க்கு விழாக்களுங்
    கடக வேழமுங் காமரு தேர்களுந்
    தொடர்பி னேனவுந் தோற்றி விடுத்திடி
    னடலை யாக்குநற் றாருவொர் பாலெலாம்.

    16

    940

    சருகு காய்கனை வௌளவத் தனாதுழை
    விரவு வாரை விளாரிற் றணிந்தடித்
    தரவிற் சீறிநல் லாவி மடித்திடு
    முரனி லாவும ரமொரு பலெலாம்.

    17

    941


    சுவானக் குட்டிக டொக்க வெனப்புக்க
    கவான்வ ரைத்தலைக் கண்ட புலிப்பறழ்
    சுவானக் குட்டியிற் காய்பல தோற்றிய
    சுவானக் குட்டிம ரமொரு பாலெலாம்.

    18

    942

    வழுத்தும் வேடம காரின மானுடம்
    பழுத்து நிற்பன பார்த்துக் கிலுத்தத்தைக்
    குழுக்கொண் டாடநும் பிள்ளையுங் கூட்டுகென்
    றொழுக்கத் தோடுமி ரப்பொரு பலெலாம்.

    19

    943

    தங்கு லத்துறுந் தையல ராமென
    வெங்கு லக்கொடு வில்லினர் பேதையர்
    மங்குல் சூழ்வரை யின்மகண் மாவைக்கண்
    டிங்கு வம்மின்க ளென்பதொர் பாலெலாம்.

    20

    944

    கருட வேகத்திற் காடு சுலாவுநர்
    இருடி யாமென்றி றைஞ்சி விடுத்தெழப்
    புருட வன்மிரு கம்புழை வைகிய
    வருடை யாடும்வ ரையொரு பாலெலாம்.

    21

    945

    வேறு
    இவ்வாறு பெருவளங்கொண் டேழோ டேழா
    மவ்வாய்மை யுலகனைத்து மணைந்து போற்றுஞ்
    செவ்வாய்மை மருதவரைத் தேத்துந் தேவர்
    ஒவ்வாத பகைமாய்ப்ப்ப வுன்னிச் சார்ந்தார்.

    22

    946

    மாலாதி வானவர்தம் வரவு கேளா
    ஆலால மனையவினை யகற்றி யங்கு
    வேலானை நினைந்திருக்கும் வீணைச் செல்வன்
    காலார நடந்தெதிர்போய்க் கண்டு தாழ்ந்தான்.

    23

    947

    வருகவரு கெனநெடுமால் வணங்கி னானை
    இருகரமு முறத்தழுவி யெடுப்பி யன்பான்
    முருகனருட் குரியையென முகமன் கூறி
    ஒருவவிது கேட்டியென வுரைக்க லுற்றான்.

    24

    948

    ஆயிரங்கண் ணனைவிண்ணி னகற்றி யன்னான்
    சேயிரங்கச் சிறைப்படுத்த தீயோ னச்ச
    மாயிருந்தண் போதிவனம் வந்து மென்பூத்
    தூயிரந்து பரனருளாற் றொலைத்தா மிப்பால்

    25

    949

    அழியாத வரம்படைத்த வவுணர் கோனை
    வழியோடுங் கெடுத்தெமக்கு வாழ்க்கை நல்க
    ஒழியாத வடிமையொரு முருகற் காற்றக்
    கழிகாத லொடுமிங்குக் கடிது புக்காம்.

    26

    950

    மாழாந்த வெமக்கிரங்கி மணிவே னம்பி
    தாழாது வினைமுடிக்கத் தக்க வாய்மை
    சூழாவொன் றுரைத்தியெனச் சொன்னான் சொன்ன
    ஏழாழி யுலகுண்டோற் கிருடி கூறும்.

    27

    951

    வேறு
    சிவதருமம் பலவற்றுட் சிறந்ததுபூ சனையதனுள்
    அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத்
    தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற்
    கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும்.

    28

    952

    ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத்
    தாங்குமருச் சனைநிவே தனமாகு மிவைதம்மை
    ஓங்கும்வகை யியற்றுவது முரைப்பக்கேண் மந்தரத்தின்
    வீங்குதிரைக் கடல்கலக்கி விண்ணவர்க்குச் சுதையளித்தோய்.

    29

    953

    பருதிகுணக் கெழுமுன்னர்ப் பன்னிரண்டு புதுச்சாலின்
    மருவுபுதுப் புனறுகிலான் வடித்தெடுத்து மணல்பரப்பி
    இருவிநிறை தொறுமேல முதலான திரவியங்கள்
    பெருகுவிரை மலரொடு பெய்துமனு வாலமைத்து

    30

    954

    அரம்பைநெடுங் கனிதிருத்தி யாயிரத்துக் காறுபடி
    சுரந்தமடிப் பசுவின்பால் சொரிந்துசெழுந் தேனறுநெய்
    பரந்தசுவை யக்கார மிவ்விரண்டு படியட்டி
    வரந்தழைபஞ் சாமிரத மணிக்கலத்தி னினிதமைத்து.

    31

    955

    பாங்கான பால்செந்தேன் பன்னியமூ வகையிளநீர்
    ஆங்கான வைந்தமிழ்த மருவிரைச்சந் தனக்குழம்பும்
    ஓங்காரத் துட்பொருளா மொருமுருக னுருவாட்டி
    நீங்காமை யிடையிடையே நிறைநீர்சங் கினிலாட்டல் 2

    32

    956

    இளநீரை யொருகலத்து மேலாமைத் தனித்தனியே
    அளவார வெடுத்தாட்டி னதிகபல னுறுமைந்தும்
    உளதான வபிடேகத் துயர்ந்தனவாம் விரையிரண்டாந்
    தளராத விலேபனமுந் தயங்குசுகந் தமுமென்ன.

    33

    957

    காசில்பனி நீர்பச்சைக் கருப்பூரங் குங்குமப்பூ
    மாசிலுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த
    வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத்
    தேசவிருந் திருமேனி முழுதுஞ்செறி தரக்கொட்டல்.

    34

    958

    முல்லையிரு வாட்சிபிச்சி முகைநெகிழ்மல் லிகைபன்னீர்
    நல்லமருக் கொழுந்துவெட்டி வேரிவைநற் சுகந்தங்கள்
    சொல்லுமிவை யோரேழுந் தொடுத்துருவந் தெரியாமை
    வல்லபடி யலங்கரித்தன் மணங்கமழப் புறமெல்லாம்.

    35

    959

    ஒருபடிநெய் கொளத்தகழி யுறவுயர மும்பர்பிரான்
    திருவிழியி னளவுமுறத் திகழுமிர சதத்தியற்றிக்
    குருமலியம் மணிவிளக்கங் கிருபாலுங் கொளவிருவிக்
    கருதுகபி லையதிலதேற் காராவி னெய்நிரப்பி.

    36

    960

    செம்பருத்தி வெண்பஞ்சிற் பசுங்கருப்பூ ரஞ்செறித்துப்
    பம்புவிரற் பருமையுறப் பண்ணுதிரி நுதிக்கொளுத்தும்
    வெம்புமெரிக் கொழுந்தெழுந்து பன்னிரண்டு விரலளவை
    வம்பிலதா யிருபகலும் வயங்குவதாம் விளக்கன்றே.

    37

    961

    செய்யதா மரைநூலிற் றிரிகோடல் சிறப்பினதாம்
    ஐயபசுங் கருப்பூர மகப்படா தொழிவுறினே
    கையமரு மாலத்திக் கருப்பூரந் திரிக்காகும்
    நெய்யுரைத்த திலதாய் னேர்ந்தபசு நெய்யுமாம்.

    38

    962

    வெள்ளியினான் மணிவிளக்கு விதிப்பரிதேல் விளக்கமுற
    வொள்ளியவெண் கலத்தானு முஞற்றுதலாம் பலவிளக்குத்
    தெள்ளுமுறை யுறுவிக்குந் திறனிலதே லொன்றேனும்
    வள்லலவன் றிருமுன்னர் வயக்குவது மரபாமால்.

    39

    963

    சேயிதழ்ப்பங் கயங்கொண்டு சேவல்வல முயர்த்தபிரான்
    ஆயிரநா மமுதநவின்றங் கருச்சிக்க வருச்சனையீ
    தேயுமல ரிலதாயி னிலகியவெண் டுளசியொடு
    தூயபசுங் கூவிளங்கள் தொகுத்தடியிற் றூவுதலாம்.

    40

    964

    பால்புரையு மரிசியொரு படிக்குப்பால் படிமூன்று
    சால்பசுநெய் படிகால்சர்க் கரைகழஞ்செண் பதிற்றிரட்டி
    ஏலமொடு சுக்கிடித்த விடிவீசம் படியிரதங்
    காலுமுய ரிளந்தெங்கின் கனியொன்று முறப்பெய்து.

    41

    965

    பாகமுறச் சமைத்ததற்பின் பசுங்கதலிக் கனிபதினைந்
    தோகையொடுந் தோலொருவி யொருங்குபடுத் தினிதெடுத்த
    மாகர்விழை பரமானம் வயங்கவருச் சித்தவுடன்
    ஏகனுக்கு நிவேதிக்க விதுநிவே தனமாமால்.

    42

    966

    வளமார விவையைந்தும் வருடமிரண் டுறவாற்றற்
    குளதாகும் பொருளில்லா ருருப்பவிரும் பின்பனியே
    இளவேனின் முதிர்வேனி லெனும்பருவ மூன்றினிலும்
    அளவாரச் செயினுரைத்த வவதியுமாற் றினராவார்.

    43

    967

    முப்பருவத் தினுமவற்றை முற்றுவிக்குந் திறனிலரேற்
    செப்பியவா றுள்ளகத்துச் செய்தொருசா ரினிதுவதிந்
    தொப்பரியான் மனுவயுத மொருநாளைக் குறக்கணிக்கின்
    எப்பொருளு மவர்க்கெய்து மிடர்முழுதும் விரைந்தறுமே. .

    44

    968


    எனமகதி யாழ்முனிவ னியம்புதலு முலகுண்டோன்
    மனமகிழ்ந்து கமலன்மக வானிமையோர் புடைசூழ
    அனகனுயர் வரையேறி யருச்சுனமூ லத்தினெழும்
    பனிவிரவு நறுந்தீர்த்தம் படிந்தாடிக் கடன்முடித்தான்.

    45

    969

    புரந்தரனை நான்முகனைப் புலவர்குழாத் தினைநோக்கி
    அரந்தைநமக் கறவேண்டி னருந்தவன்சொற் படிநீயிர்
    பரந்தபொருள் கொணர்ந்தேவற் பணிபுரிகென் றானன்னார்
    சுரந்தமகிழ் வினராகித் தொழிறலைநின் றனர்புரிய

    46

    970

    ஆராத பெருங்காத லகந்திளைப்ப மருதவரைச்
    சீராரும் பெருமானைத் தேவர்கள்சிந் தாமணியை
    வாராரு முலையுமையாள் மகிழ்தூங்குங் குலக்கொழுந்தைக்
    காராரு நிறத்தினான் கடப்பாட்டிற் பூசித்தான்.

    47

    971

    நாரதன்செப் பியமுறையே நாரணன்பூ சித்திருப்ப
    வாரணமும் பல்லியமு மரகரவோ தையு மயங்கப்
    போரணவும் வீரர்களும் பூதர்களும் புடைநெருங்கக்
    கூரணவும் படைவேற்கைக் குமரவே ளெதிர்நின்றான்.

    48

    972

    வேறு .
    ஓராறு மணிமுடியு மோராறு திருமுகமு மொராறு வாயும்
    ஈராறு மலர்விழியு மீராறு குழைச்செவியு மிராறு தோளும்
    போராரும் படிபலவுந் தராரும் வரைமார்பும் புலம்புந் தண்டைச்
    சீராருஞ் சேவடியு மழகெறிப்ப நின்றானைத் திருமால் கண்டான்.

    49

    973

    வானவர்தங் குலமுழுது முய்ந்தனவென் குலமுழுதும் வாழ்ந்ததின்றே
    தானவர்தங் குலமுழுதுஞ் சாய்ந்ததெனு மோகைதலை சிறப்ப வல்லே
    தேனறுந்தண் மலர்தூவிச் சேவடியின் மணிமோலி தீட்டி யும்பர்
    ஆனவர்கள் சிவசிவவென் றார்ப்பவலம் வந்துதுதி யாரச் செய்வான்.

    50

    974

    வேறு
    முரண்மணி யிமைக்கு மோலி முடிகெழு முருக போற்றி
    மரணமும் பிறப்பு நீத்தோர் மதிவள ரமுத போற்றி
    இரணவல் லவுண ராவி யிறுத்திடு மிறைவ போற்றி
    அரணென வெம்மைக் காக்கு மறைகழ லறவ போற்றி

    51

    975

    இருள்கெட விளங்கி யேற்றோர்க் கின்னருள் வழங்கி முத்தி
    மருவினர் கன்ம மோர்ந்து மறைமுடிப் பொருள்க ளெல்லாந்
    திருகற விளக்கி யொன்னார்ச் செற்றுவண் குறவர் மாதோ
    டருள்வளர் நகைகொண் டாடு மறுமுகத் தலைவ போற்றி.

    52

    976

    வேறு
    ஐயருக் கேந்தி யுக்கஞ்சேர்த் தூரு வமைத்தொளி ரங்குசங் கடாவி
    வையிலை யெஃகும் வட்டமுந் திரித்து மார்பொடு மமைந்துதா ரோடு
    தையுறப் பொலிந்து மீமிசைச் சுழன்று தடமணி யிரட்டிவான் பொழிந்து
    தெய்வமங் கையர்க்கு வதுவைசூட் டயர்ந்து திகழும்பன் னிருகர போற்றி.

    53

    977

    நிழல்சுளித் தெழுந்து குலாலன்சக் கரம்போ னேரலர் நெடுங்களத் தலமந்
    தழல்விழித் துருமிற் பிளிறிமும் மதமு மருவியிற் சலசல பொழிந்து
    சுழல்வளி யெழுப்பி முறச்செவி யசையத் துதிக்கையின் வளிநிலங் குழிப்பக்
    கழலடிப் பொருந ருயிருணுங் களிற்றிற் காட்சிதந் தருள்பிரான் போற்றி.

    54

    978

    முருகுகொப் பளிக்கு மடுக்கிதழ்ப் பொகுட்டு முளரியுங் குமுதமு மறியப்
    பொருகய லுகளுஞ் சரவணப் பொய்கை பொலிவுற யினிதுவீற் றிருந்தங்
    கருகுவந் தடுத்த மீன்முலை யருந்தி யாக்கையி னிளமையோ டியையத்
    திருகுவன் கோட்டுத் தகரிவர்ந் தூருஞ் செல்வநின் றிருவடி போற்றி.

    55

    979

    ஓமெனு மொழியி னுறுபொருள் வினாவி யுள்ளவா றுரைத்திட வல்லா
    நாமகள் கொழுநன் றனைச்சிறைப்படுத்து நறுமலர்க் கொடுங்கணைக் கழைவிற்
    காமனை முனிந்த கண்ணுதற் பரமன் காமுறக் குருமொழி கொடுத்த
    சேமமே மருத வரைவள ரமிழ்தே திருவருள் வழங்குக வென்றான்

    56

    980

    வேறு
    மதுவுயிர் குடித்தவன் வழுத்தி நிற்றலுங்
    கதுமெனத் திருவுளங் கருணை கூர்தர
    விதுவணி சடையவன் விழியிற் றோன்றிய
    முதுமறை முடியினன் மொழிகின் றானரோ.

    57

    981

    நமதுரு வாகிய நவிரத் திவ்வயின்
    நமதுரு வுளத்திடை நாட்டி வானுளீர்
    நமதடிப் பூசனை நன்றி யற்றினீர்
    நமதருள் வழங்குது நாட்டம் யாதென்றான்.

    58

    982

    கடம்பணி புயத்தினான் கரையக் கேட்டனர்
    இடம்படு வானவ ரெழுந்து துள்ளினார்
    உடம்பிடித் தடக்கையி னொருவ னின்புறக்
    குடம்படு கூத்தினான் குழைந்து கூறுவான்.

    59

    983

    வேறு
    பருதி வானவ னொளிகெட மூவிரு முகனும்பல் கதிர்வீசித்
    திருவெ லாந்தர நிற்பது காண்டலிற் றிசைகணான் கொடுமேல்கீழ்
    மருவு மூவிரு வைப்பினுஞ் சூரனால் வதிதரு கொடுங்கோன்மை
    இருளெ லாமிற்றை வைகலே யிற்றதென் றெண்ணின மிவணெந்தாய்.

    60

    984

    செம்மை யம்புயத் தேமலர் வென்றொளி திகழ்தரு முகந்தோறும்
    விம்மு தண்கரு ணைக்கட லூற்றெழ விளங்குமிவ் விருநாட்டம்
    அம்ம கண்ணுறக் காண்டலி னுரைத்தவா றிடத்தும்வா ழடியார்பால்
    இம்மை யும்மையென் றிரண்டுமார்ந் தனவென வெண்ணின மிவணெந்தாய்.

    985

    உருத்தி ரப்பெய ரண்ணலார் பதினொரு வருங்கொடி கணைகண்டை
    வருத்து தோமரம் வச்சிர மங்குசம் வனசம்வாண் மழுத்தண்டம்
    பருத்த வார்சிலை யாயருட் சத்தியே சத்தியாய்ப் பகர்நின்கை
    இருத்தல் காண்டலி னிறந்தன பகையென வெண்ணின மிவணெந்தாய்.

    62

    986

    கடிநி லாவிய வெட்சிமா லிகைமுடிக் கவினக்காண் டலின்வென்றிக்
    கொடிநி லாவிய தானவர் கோட்டத்துக் குரங்கியல் லாந்தன்னோ
    மிடிநி லாவிய சயந்தனை முதலிய விண்ணவர் குழாமென்னும்
    படிநி லாவிய பசுவுமீண் டனவெனப் படர்ந்தன மிவணெந்தாய்

    63

    987

    என்று நாரண னியம்பலு முருவலித் தெம்பிரா னெதிர்நோக்கி
    ஒன்று மஞ்சலி ரிற்றைநா ளேபடை யொடுநடந் தொன்னாரைக்
    கொன்று நும்பதி யருளுது மெனவிடை கொடுத்துவல் லெறுழ்ப்பூத
    வென்றி யம்படை யெழுகென வியவரின் வியன்முர சறைவித்தான்.

    64

    988

    அமரர் தச்சனை யழைத்துவீ ரர்கண்முத லாந்தலை வருக்கெல்லாஞ்
    சமர வன்பெருந் தேர்களுங் கரிகளுந் தாவுமான் களுமாக்கித்
    திமிர மன்னமெய் நிறத்தினர்க் கதிசயஞ் செய்வன கொடுவென்னாக்
    குமர நாயக னருளினன் யவனனுங் குயிற்றின னவர்க்கீந்தான்.

    65

    989

    வீர வாகுவை விளித்தனன் வீரர்க ளிலக்கத்தெண் மருமண்ட
    மார மாக்கினோன் முதலிய தலைவர்நூற் றெண்மரு மடுபோரிற்
    கோர மேபுரி யிராயிர வெள்ளமாங் குழிவிழிக் கணந்தாமும்
    யாரு நீவியங் கொளப்படு வாரென வீந்தன னதிகாரம்.

    66

    990

    வாழி முப்புரங் குறுநகை யாலெரி மடுத்தவன் சிறுமைந்தன்
    வாழி வேலவ னடியவர் குழாமெலாம் வாழிவை யகம்வாழி
    வாழி விண்ணவர் சூரன்மே னம்படை வகுப்பெலா மெழுகென்னா
    வாழி வண்முர செருக்கினர் வியவரி னுணர்ந்திடு மியவோரே.

    67

    991

    அலக்க ணித்தலும் வானவர்க் காற்றிய வவுனர்தம் படைமுற்றுங்
    கலக்கத் தக்கசா ரதர்களுங் சாரதத் தலைவருங் கவினார்ந்த
    விலக்கத் தொன்பதின் மரும்பரி கரியெழி லிரதம்பா கர்கள்பண்ணி
    நலக்கத் தந்தெதிர் தொழவவற் றிவர்ந்தனர் நாளொடு கோளஞ்ச.

    68

    992

    முருக வேளுடன் வருகவென் றருளலு முகுந்தனு மலர்த்தேவும்
    பெருக யாகநூ றியற்றிய வரையனும் பிறங்கிய சுரர்யாரும்
    உருகு காதலிற் றொழுதெழு முனிவரு முவந்துதத் தமக்கேற்ற
    திருகி லாதநற் சிறப்பொடு தோன்றினர் சயசய சயவென்றார்.

    69

    993


    மிக்க சாரதப் படையிரா யிரவெள்ளம் வீரர்விண் ணவர்யாருந்
    தொக்கு மேவுறக் கொண்டுபல் லாயிர வண்டமுந் துனைந்தோட
    முக்க ணாயகன் மனத்திடைத் தோற்றிய முழுமணிப் பொலந்தேரைத்
    தக்க மாருத வலவன்முன் றரவிவர்ந் தருளினான் தனிவள்ளல்.

    70

    994

    வேறு
    படகந் திண்டிமம் பணவமா னகங்கிணை பம்பை
    துடித டாரிசல் லரிதக்கை துந்துபி யுடுக்கை
    குடமு ழாமுர சாகுளி தொண்டகங் குளிரும்
    இடிப லாயிர முழங்கிய தெனவியம் பினவால்.

    71

    995

    மடைவ யிர்க்குலங் காகளம் பீலிவண் டாரை
    குடவ ளைக்குலங் குழலின மழையெனக் குமுற
    மிடையும் பல்வகை யாழ்களு மெல்லிசை யெழுப்ப
    உடைய நாயகன் விருதெழுந் துலம்பின முறையான்.

    72

    996

    வடிநெ டும்படை மிளிர்ந்தன மிளிர்ந்தன மணிப்பூண்
    கொடிநி ரைக்குலந் துவன்றின துவன்றின குடையுங்
    கடிகொள் சாமரை மறிந்தன மறிந்தகால் வட்டம்
    பிடியன் னார்நடைச் சிலம்புகள் சிலம்பின பெரிதும்.

    73

    997

    நிரந்து நால்வகைப் படைகளும் புடைவர நிமலன்
    பரந்த நானிலம் பொறாதெனப் பனிவிசும் பாறா
    விரைந்து முந்துறக் கிரவுஞ்ச விலங்கலை யடுத்தான்
    சுரந்த சேனையோ டெதிர்த்தனன் றாரகத் தோன்றல்

    74

    998

    படைக டூண்டியு மத்திரம் விடுத்தும்பட் டிமைகள்
    அடைய மாயைக ளாற்றியு மமர்த்ததா ரகனை
    உடைய நாயக னோங்கிய சிலம்பொடு மொறுத்துத்
    தடையெ லாந்தபச் சூரன்வாழ் நகர்ப்புறஞ் சார்ந்தான்.

    75

    999

    வரையி னோடுத னிளவலி னுயிர்தப மாட்டித்
    திரையு நீர்க்கடற் றடையெலாஞ் சிறுவரை கடந்து
    புரையி லாநகர்ப் புறத்துவே ளடுத்தமை கேளா
    வரைய னாகிய சூரனு மழலுயிர்த் தெழுந்தான்.

    76

    1000

    வேறு
    காசிபன் மாயையைக் கலந்து தோற்றிய
    வாசிறு மிருநூறா யிரவெள் ளத்தரும்
    பேசிய விவர்வழிப் பிறந்த வீரரும்
    ஏசின்முன் னுள்லவ ரெவரு மீண்டினார்.

    77

    1001

    இரதமுங் கரிகளு மிவுளிப் பந்தியும்
    விரவிய கொடிகளும் விளங்குந் தொங்கலும்
    வரமலி கவிகையு மாதி ரந்தொறும்
    பரவுறச் சூர்மகன் பரித் தேகினான்.

    78

    1002

    வஞ்சகன் வரவினை மதித்து வானவர்
    அஞ்சின ரமர்கோ னாகம் வேர்த்தனன்
    கஞ்சனுங் கலங்கினன் கலங்கு கின்றதோர்
    நெஞ்சினைத் தேற்றின னெடிய மாயனும்.

    79

    1003

    வேறு
    அறந்தலை திரிந்த பதகன்போர் புரிய வாடலம் படையொடு விரையப்
    பறந்தலை யடுத்தா னென்றுநா ரதன்போய்ப் பணிந்துநின் றுரைத்தமைகேளா
    நிறந்தழை கடப்பந் தாரினா னிரத நெரேலெனச் செலுத்திநே ரடுத்தான்.
    மறந்தழை திணிதோள் வீரரும் படையு மறலினர் தூசிமே னடந்தார்.

    80

    1004

    சூலம்வெங் கணைவே லபயமும் வலப்பாற் றொடிக்கையி னிடக்கையின் வரதஞ்
    சாலும்வண் கதைவில் பாசமுந் தயங்கச் சந்திரன் மணிமுடி யெறிப்பக்
    கோலமுற் றமைந்து மடங்கலூர்ந் திருபாற் குவிமுலை மாரிவ் விருவர்
    ஏலும்வண் பலகை வாளொடு மேவ லியற்றுசூ லினியுமு னடந்தாள்.

    81

    1005

    வேறு
    வெம்பு பசிக்கண் மெலிந்தவர் வெய்ய நறுஞ்சுதை கண்டெனப்
    பம்பை மலிந்த பறந்தலைப் பாடமர் முன்பு கிடைத்திடாத்
    தும்பை மலைந்தெழு மள்ளர்கள் சூழ்நெடுங் காலமும் வாழ்கெனத்
    தம்பர மாமிறை யோர்களைச் சாற்றினர் போர்கள் தொடங்கினார்.

    82

    1006

    கொடிக ணுடங்கவை யத்தொடு கொம்மென வைய மெதிர்ந்தன
    வெடிகொண் முழக்கொடு வேழமும் வேழமும் வேறு மலைந்தன
    படிசிதர் கொள்ள நடம்பயில் பரியொடு பரிக ளமர்த்தன
    வடிகழல் கட்டிய தானையுந் தானையு மாறுகொண் டேற்றன. 3

    83

    1007

    செல்பல வேழந் திமிங்கலந் திமிங்கல கலங்க ணிகர்த்தன
    பல்பரி யுந்திரை செத்தன பல்கிய கூர்ம நிகர்த்தன
    வெல்பல கைக்குலம் வாளைகள் வீழ்ந்தன வேலொடு வாள்களுந்
    தொல்படைத் தேர்கல னொத்தன சூழ்கட லொத்தது தானையே.

    84

    1008

    ஒள்ளிய பாய்விரி கூம்புக ளொத்தன வோடிர தக்கொடி
    விள்ளுடல் வார்குரு திப்புனல் வித்துரு மக்கொடி போன்றன
    தெள்ளிய வீரர் விழிப்பன சேர்வட வாமுகம் வென்றன
    மள்ளர் தெழித்தெழு மோதைகள் வாரிதி யோதை மலைந்தன.

    85

    1009

    ஆகமந் தாங்கிய மீனமு மாரண மீட்டருண் மீனமும்
    மாகர் நறுஞ்சுதை யுண்ணிய மந்தரந் தாங்கிய கூர்மமும்
    ஆகி யவுணத் தலைவர்க ளாடம ரிற்கைமி குந்துராய்
    வேக நெடும்படை சாரத வேலை துளும்ப வுழக்கினார்.

    86

    1010

    செங்கையின் வார்வலை வீசிய செம்ம லரிகர புத்திரன்
    ஐங்கர னொத்தவு ணப்படைக் கதிபர்த மாற்ற லழித்தெதிர்
    பொங்கிய தானவ மாக்கடல் போகுயர் மந்தர மத்தென
    வெங்கண் விறற்சிலைப் பாரிட வீரர் துளும்ப வுழக்கினார்.

    87

    1011

    தானவர் வேலை கலங்கலுந் தானவர் கோள்விறன் மைந்தர்கள்
    வானவர் மேலடர் நஞ்சென வன்மைகொள் பூதரை யோப்பினார்
    ஆனநஞ் சுண்டமர் தேவென வையென வீரவா குப்பெயர்
    மானவன் கைத்திறங் காட்டியம் மைந்தரை மாய்த்தொளி தோற்றினான்.

    88

    1012

    கணங்கண் மகிழ்ந்தெழுந் தாடின கவந்த மனந்தநின் றாடின
    துணங்கைகொண் டாடின பேயினந் துன்றின வன்கழு குக்குலம்
    வணங்கல கின்பருந் தின்குலம் வானுயர் பந்த ரியற்றின
    பிணங்கண் மலிந்த பறந்தலைப் பெட்பி னெருங்கின நாய்நரி.

    891

    1013

    எங்கு முடைந்த பொலஞ்சக டெங்கு முலந்த கடாக்கரி
    எங்கு மடிந்த வயப்பரி யெங்கு மடங்கிய மள்ளர்கள்
    எங்குந் துணிந்த திணிந்ததோ ளெங்குந் துமிந்த நிமிர்ந்ததாள்
    எங்குங் குறைந்த முடித்தலை யெங்குங் குரைக்குநெய்த் தோர்நதி

    90

    1014

    வேறு
    இன்ன வாறு சேனையோ டெதிர்த்த மைந்தர் வீழ்கள
    முன்னர் நோக்கி நன்றுநந்த மொய்ம்பி னாற்ற லின்னினி
    ஒன்ன லாரை யாவியுண் டொழிப்ப லென்று காய்ந்தகான்
    வன்னி யென்ன நேர்ந்துளான் மடங்கன் மாமு கத்தனே.

    91

    1015

    சுரிகை யாய்தங் கப்பணஞ் சூல நேமி யீட்டிவாள்
    பரசு பிண்டி பாலம்வேல் பாசங் குந்த முசுண்டிவச்
    சிரமெ ழுக்க ழுக்கடை சிலைகு யங்க லப்பைதண்
    டுரிமை கொண்ட பூதர்கண் டொல்லை மேல டர்த்தனர்.

    92

    1016

    வரைதி ரண்ட பலபுய மடங்கன் மாமு கத்தன்மேல்
    திரைதி ரண்ட வேலைவீழ் செல்லெ ழுந்து மேருவின்
    நிரைதி ரண்ட தாரைக ணிரப்பு கின்ற தாமென
    உரைதி ரண்ட பூதர்க ளொண்ப டைவ ழங்கினார்.

    93

    1017

    தேக முட்டி நோன்படை சிதர்ந்து வீழ நீண்முழை
    நாக நின்று சிங்கமொன்று நாக மேல டர்த்தெனப்
    பாக மல்கு தேரிழிந்து பல்லி தழ்ப்ப டுத்தவன்
    சாக ரத்தை யொத்தபூதர் தங்கண் மேற்ப டர்ந்தனன்.

    94

    1018

    வேறு
    மன்னி ரும்படை சுமந்த கைத்திரளின் மல்கு பூதர்சில ரைத்தழீஇச்
    செந்நெல் வாரி யெனத்த ரைக்கணுயிர் சிந்த மோதியயல் வீசிடு
    நன்னர் நெல்லுநவை வையும் வேறுற நடந்தி றுக்குமெரு மைத்திரள்
    என்ன வன்கழலி னாற்று கைத்துயி ரிறுக்கு மெற்றியு மொறுக்குமே.

    95

    1019

    நோக்கினாற் சிலரை மாய்க்கும் வன்மொழி நொடிப்பி னாற்சிலரை வீக்கும்வார்
    மூக்கி னீடிய வுயிர்ப்பி னாற்சிலரை மொத்து மத்தமிஉகு சிங்கமாய்த்
    தாக்கு மாயனு நடுங்க வீரர்கள் சழங்க நீளிரதம் யாவையும்
    ஓக்கி யொன்றன்மிசை யொன்றை யொய்யென வுடைக்கு மூழியழ லொத்துளான்.

    96

    1020

    இலக்க வீரருமொ ரெண்ம ருந்தலைவர் யாரு மேற்றபல பூதரும்
    நிலக்கண் வீழ்ந்தவச மாக நோக்கியய னின்ற வீரபுய னேர்ந்தவன்
    அலக்க ணெய்தசிலை யாயி ரங்களு மறுத்து நீடமர் விளைத்துயிர்
    கலக்க மெய்தின னறிந்து மைந்துமிகு கந்த வேளிரத முந்தினான்.

    97

    1021

    வேறு
    கண்டு சிங்கமுக னங்கிவிழி கால மொழிவான்
    அண்ட ராருயி ரளிக்கவரு கின்ற னையிதோ
    மண்டு போர்நுமரை மாய்த்தனை விடுத்து மிளமை
    கொண்டு ளாய்குறுகு நுந்தையிடை யென்ற னனரோ.

    98

    1022

    வெய்ய சிங்கமுக கேண்மொழியின் வெற்றி யுளதோ
    கையி னாலெமது வென்றிநனி காண்டி யினிநீ
    உய்ய வேண்டினிமை யார்சிறை யொழித்தி யிலையேல்
    ஒய்யெ னப்படை வழங்குரைய லென்ன முருகன்.

    99

    1023

    மான மேலெழ மடங்கன்முக னாயி ரநெடுங்
    கூனல் வான்சிலை குடங்கைகொடு வாளி சொரிய
    ஞான நாயக னகைத்தொருகை நாட்டு சிலையால்
    ஊன மாகவரு கோல்கணை யுறுத்தி னன்மிக.

    100

    1024

    மீட்டும் வெய்யவன் விடுந்தொறும் விராவு கணைகள்
    வீட்டி யன்னவன் விறற்சிலை விளங்கு துவசஞ்
    சேட்டு மாமணி முடித்திரள் செறித்த கவயம்
    ஓட்டு பாகிரதம் யாவையு மறுத்து ரறினான்.

    101

    1025

    மாம டங்கன்முகன் வஞ்சின முரைத்து வெகுளாத்
    தோம ரங்குலிச மாதிக டுறுத்தமர் செய்தான்
    ஆம னைத்தையு மடர்த்தமரர் தொல்ப டைகளு
    மேம மின்றியற வென்றன னிராறு புயனே.

    102

    1026

    இரண்டு பாணிசிர மொன்றுதக வேனை யசிரந்
    திரண்ட கைத்தொகுதி தீர்ந்தவன் விசாக னெதிர்போய்
    முரண்டி கழ்ந்தவிது வல்லையெனின் முன்னு தியெனத்
    திரண்ட தண்டமொரு கைக்கொடு சினந்த ணவினான்.

    103

    1027

    வல்லை யேலென வுரைத்தமை மதித்து முருகன்
    நல்ல வேற்படை விடுத்தில னகைத்தொ ருகரம்
    புல்லு வச்சிரம் விடுப்பவவன் போர்க்க தையினை
    ஒல்லை நுண்டுகள் படுத்துயிரு முண்ட ததுவே.

    104

    1028

    ஆயி ரந்தலை யிரட்டியுறு மங்கை யிளவன்
    மாயி ருஞ்சம ருழந்துயிர் மடிந்த தறியாக்
    கூயி ரங்கியொரு சூரனுயிர் கொண்டு வலிகொண்
    டேயி ரங்குவது மாங்கொலென வெண்ணி முனைவான்.

    105

    102

    வேறு
    இந்த வண்ட வரைப்பி னேழ்தலை யிட்ட வாயிர வண்டம்வாழ்
    வெந்தி றற்படை வீரர் சார விளம்பு வீரென விண்டனன்
    தந்தை நன்றென வொற்ற ரோடினர் சாற்ற யாரு மிறுத்தனர்
    அந்த ரம்புவி வேலை மாதிர மற்ற வெற்றிட மாதலே.

    106

    1030

    வந்து முந்தி யிறுத்த தானவர் வாய்தன் முட்டி நெருங்கிமேல்
    இந்த வண்ட நெடுஞ்சு வர்ப்புற னெல்லை முற்றுற வீண்டலின்
    அந்த வந்த வகன்ற வண்ட மிருந்து ளாரங் கிருந்துளார்
    முந்து தானவர் வாய்தல் விண்டபின் முன்னு வாமென வுன்னியே.

    107

    1031

    சிங்க மாமுக னொத்த வாண்மையர் சிற்சி லாயிரர் தாரகப்
    பைங்கண் வேழ முகத்த னொத்தவர் பற்ப லாயிரர் மைந்தனாம்
    வெங்க திர்ப்பகை யாற்றல் கொண்டவர் வேறு வேறுபல் லாயிரர்
    அங்கி மாமுக னொத்த வீர ரனேகர் தானவர் தானையுள்

    108

    1032

    முக்கண் வேழ முனிந்த வேழ முகத்த னொத்தவ ரெண்ணிலார்
    நக்கன் வென்ற கயத்தை யொத்திடு நாம வேலின ரெண்ணிலார்
    ஒக்க வண்டம் விழுங்கு கொக்கினை யொத்த நோன்மைய ரெண்ணிலார்
    மிக்கு யர்ந்த சலந்த ரப்பெயர் வீர னொத்தவ ரெண்ணிலார்.

    109

    1033

    அந்த காசுரன் முப்பு ரத்தவ ராண்மை விஞ்சுசு ராக்கன்வாள்
    விந்தை மாட்டிய தார காசுரன் வெய்ய பண்டன் மயிடனென்
    றிந்த மானவ ராதி யாமெறு ழாள ரொத்தவ ரல்லது
    மைந்து தாழ்ந்தவ ரில்லை யில்லை மலிந்த தானவர் தானையுள்.

    110

    1034

    அங்க ணங்க ணுரைத்த வண்ட மடுத்த வேதர்க ணாரணர்
    தங்கு வச்சிர ரும்பர் மாதவர் தங்க ளாற்ற லழித்தவர்
    நுங்கி டாதவ ரத்தர் மாயை நுனித்த றிந்தவர் விஞ்சையிற்
    சிங்கி டாதவர் மன்ன வர்க்குயிர் செத்து நன்றிசெய் சிந்தையோர்.

    111

    1035

    ஆய வாயிர மாயி ரங்கர மாயி ரஞ்சிர மந்தமா
    மேய வாக்கையர் வேங்கை மாமுகர் வேழ மாமுகர் யாளியோர்
    சீய மாமுக ரெண்கு மாமுகர் சிம்புண் மாமுகர் வன்பகை
    மாய வாடமர் செய்யு மேழக வன்மு கத்தரு மெண்ணிலார்.

    112

    1036

    வேறு
    மடங்கரிய தானவர்கண் மல்குதலை நோக்கி
    இடங்கழிகொள் வாருளர்கொ லெம்மவரி னென்னா
    உடங்கமரர் புள்ளுருவ மாகியொழி வுற்றார்
    தடங்கிரி முழைத்தொகுதி சார்ந்தயர்வு யிர்த்தார்.

    113

    1037

    பூதர்க ணடுங்கினர்கள் பூதர்தலை வோர்கள்
    வேதனை யுளத்திடை மிகுத்தன ரிலக்கர்
    ஆதபுதல் காண்டலரி தென்றுள மயர்த்தார்
    நாதனுள னென்றுநவ வீரர்வலி கொண்டார்.

    114

    1038

    இத்தகைமை யாதுமிறை நோக்கிநகை செய்து
    தத்துபரி பூண்டசக டத்தைநொடி முன்னர்
    எத்திசையு மேகவினி தூர்கவென விண்டான்
    அத்தனுரை கொண்டுவளி யங்ஙன முகைத்தான்.

    115

    1039

    மண்டில முறுத்தமணி வையமிசை நின்றே
    அண்டர்தொழு மாறுமுக னம்புபல கோடி
    கொண்டொரு தொடைக்கமைதி கொள்ளவமர் செய்தான்
    மிண்டியம ராடல்புரி வெய்யவர்கள் தம்மேல். 116

    116

    1040

    ஒறுத்தன பொலஞ்சக டொறுத்தகவி கைக்கா
    டறுத்தன முடித்தலை யறுத்தன வெறுழ்தோள்
    இறுத்தன பகட்டுர மிறுத்தன கழற்கால்
    கறுத்தவுண ராவிகளை கந்தன்விடு வாளி.

    117

    1041

    பக்குவிடு நீரன பசும்பொன்மனை மக்கள்
    ஒக்கலிவை யேயல வுடம்புமுட லின்கண்
    தொக்குறு முறுப்புமறி கென்றுதுணி வித்த
    புக்கவுண ராவிகள் புயக்குமிறை வாளி.

    118

    1042

    தீவினைய ரேனுமிறை செங்கையயி லம்பாற்
    சாவவர மாற்றினர்க டானவர்க டம்முட்
    சாவுடலை வாளிகொடு தள்ளவட வைக்கட்
    பூவுலகி னோற்றனர்கள் போரவுணர் சில்லோர்.

    119

    1043

    மக்களு மிவர்க்குதவு மார்க்கமில ராவர்
    இக்கொடி யரைக்கதியி னேற்றுது மெனத்தான்
    புக்கதென வேள்பகழி போரவுண ராக்கை
    மிக்குலவு கங்கைநதி யாதியிடை வீழ்க்கும்.

    120

    1044

    குய்யக வுலோகர்மகிழ் கொள்ளவவ ணுய்க்கு
    மையநெடு நேமிவரை யப்புற மிருந்து
    நையலகை யாதிநவை யோர்க்குமிரை யாக்கு
    மெய்யன்விடு வாளியுயிர் வீத்தசுரர் காயம்.

    121

    1045

    எண்டிசையு மண்டலமு மீண்டினரை யுண்டு
    விண்டல மிடைந்தவர்தம் வெவ்வுயிரை மாந்தி
    அண்டம்வளர் பித்திகையி னப்புற மலிந்த
    கண்டகரை யுங்கடித யின்றகுகன் வாளி.

    122

    1046

    ஒளிதழுவி நின்றவரை யண்ணலென வுன்னா
    திளையரென வெள்ளினவ ரின்னுயிரு நீப்பர்
    தெளிமினென யாவரையுந் தேற்றுவன போன்ற
    வளியிலரை யட்டுலவு மாறுமுகன் வாளி.

    123

    1047


    திண்ணிய படைத்தகுவர் தேகமுழு தட்டு
    வெண்ணிண மளைந்துகறை மெய்முழுது மாடித்
    துண்ணென வெழுந்துசுடர் வாளிதுரி சோவ
    வண்ணவரை தோருடலு ராவுவன மாதோ.

    124

    1048

    சிறுபடைய ரேனும்வலி மிக்கவர் சினந்தால்
    உறுபடைக ளாற்றுவது முண்டுகொல் சமர்க்கண்
    அறுமுக னொருத்தனொரு கைச்சிலையி னம்பான்
    முறைமுறை யிறுத்தபடை முற்றுமுயிர் மாய்ந்த.

    125

    1049

    பாதக ருடற்பரிச மானபழி தீரக்
    காதலொடு மாடுவ கடுப்பமுரு கேசன்
    கோதைபயில் வார்கணைகள் கொங்குகமழ் கங்கை
    ஓதமுத லானபல தீர்த்தமு முறந்த. 6

    126

    1050

    வேறு
    இறுத்த தானைக ளிறந்தபி னெங்குநெய்த் தோரும்
    அறுத்த பல்வகைத் துணிகளு மழனும்வா னளவும்
    வெறுத்தி டங்கெட வித்தக னோக்கின னகைத்தான்
    ஒறுத்த முப்புர மெனத்தழ லுண்டுநீற் றியதே.

    127

    1051

    தடைப்பட் டப்புறத் திருந்தவர் தடைதபு தலுமே
    மிடைத லுற்றனர் வெடிபட முழங்கிமுன் போல
    அடைத லுற்றவர் தம்மையு மறுத்தண்ட வழிவிற்
    படையி னோர்கணை தொடுத்தன னடைந்தனன் பகவன்.

    128

    1052

    அனைத்துந் தானைக ளிறந்தமை யவுணர்கோன் பாரா
    நினைத்தல் செய்குவா னின்மலன் வரமிருப் பதனால்
    எனைக்கொல் வாரிலை யிளையவன் றன்னையான் வென்று
    வினைக்கண் வீழ்ந்துளா ரையுமெழுப் புவலென வெகுண்டான்.

    129

    1053

    விரைந்து தேரினைச் செலுத்திமே லடர்ந்தனன் பூதர்
    வரைந்த பூதர்தந் தலைவர்க ளிலக்கர்வன் வீரர்
    நிரந்து வேறுவே றாடமர் விளைத்தனர் நீங்கக்
    கரந்தை வேய்ந்தவன் கான்முளை கடுகத்தே ருகைத்தான்

    130

    1054

    இருவ ருஞ்சிலை வாங்கின ரெறுழ்க்கணை தொடுத்தார்
    பொருது மாதிரஞ் சுற்றுவர் கடறொறும் புகுவார்
    கருவி வானென விசும்பிடைத் தோற்றுவர் கரப்பார்
    அருவி மால்வரை தொறுஞ்சம ராற்றியே யடுப்பார்.

    131

    1055

    மண்ணிற் கீழுல கனைத்தினு மரீஇச்சம ருழப்பார்
    விண்ணிற் பல்வகை யுலகமும் விராய்ப்படை தொடுவார்
    துண்ணென் றின்னண மமர்த்துழிச் சூரன்மே லண்ட
    வண்ண வாய்தலை வழக்கற வடைத்தமை கண்டான்.

    132

    1056

    இளையன் சூழ்ச்சியு மென்னென்ப தெனக்கனன் றங்கை
    வளைவில் வார்கணை பன்முறை தொடுத்தனன் வாய்தல்
    வெளிகண் டப்புறத் திருந்தவர் தங்களை விளித்தான்
    தெளிவி லான்செய லறிந்தனன் றேவரைப் புரப்போன்.

    133

    1057

    செங்கை வைகிய படைகளுட் சிலபடை நோக்கித்
    தங்கு மாயிரத் தேழெனு மண்டமுஞ் சாரா
    அங்க ணங்கண்வை கியவரட் டர்களுயிர் மாந்தி
    இங்கண் வம்மினென் றியம்பின னப்படை யெழுந்து.

    134

    1058

    வேறு வேறுபல் லுருக்கொடு விரைந்துபோய் விசாகன்
    கூறு மாயிரத் தேழெனு மண்டமுங் குறுகி
    நீறு செய்துவல் லவுணரை மீண்டுநின் மலன்கை
    ஏறி முன்புபோ லிருந்தன விதுகண்டு சூரன்.

    135

    1059

    ஆங்கு நின்றறை கூவிப்போ யப்புறத் தண்டத்
    தோங்கி னானுட னேகியங் குடன்றமர் புரிந்தான்
    காங்கெ யன்கடுஞ் சூரனம் முறையண்டந் தோறும்
    நீங்கி னானுட னேகினா னிமலனும் பொருது.

    136

    1060

    அண்ட மாயிரத் தெட்டினு மவுணர்கோ னுழைய
    விண்டி டாதுடன் புகுந்தமர் விளைப்பதும் வியப்போ
    மண்டு மாருயிர்க் குயிரதாய் வதிந்தண்டந் தோறுங்
    கொண்டு கொண்டுசெ லொருமுத லாகிய குமரன்.

    137

    1061

    கந்த வேளுந்த னுடன்வரச் சிலபகல் கழித்திட்
    டிந்த வண்டம்வந் திறுத்தனன் மாயைசூழ்ச் சியினால்
    அந்த மில்லதோ ரமிழ்தமந் தரமெனு மடுக்கல்
    வந்தி டுந்திற மியற்றினன் மாண்டவ ரெழுந்தார்.

    138

    1062

    தம்பி மைந்தர்க டானவத் தலைவர்தா னவர்கள்
    உம்ப ரச்சுற வனைவரு மொழிவின்றி யெழலுங்
    கம்ப மற்றிடுஞ் சூரன்மிக் குவகையிற் களித்தான்
    வம்பு முற்றிய கனவிதென் றுள்ளக மதியான்.

    139

    1063

    முருக வேளது நோக்கின்ன் முருவலித் தங்கை
    ஒருப டைக்கல முகைத்தன னுரையெழு முன்னர்ப்
    பொருத நின்றதா னவர்களைப் பொருப்பொடும் பொடித்த
    தருளி லாதவ னயர்ந்தன னாற்றினன் மாயை.

    140

    1064

    எண்ணின் மாயையு மெதிர்நிலா தழிதர வீற்றின்
    வண்ண மாமர மாயினன் வஞ்சகன் மணிவேல்
    அண்ண லேவின னதுகிழித் தந்தரப் புனலின்
    மண்ணி நீளுடன் முன்புபோன் மலர்க்கைவாழ்ந் ததுவே.

    141

    1065


    இருது ணிபடக் கிடந்தவ னெழுந்துகுக் குடமும்
    பொருவி மஞ்ஞையு மாய்ச்சமர்க் கெதிர்ந்தனன் புனிதன்
    வருக வென்றருள் விழிக்கடை வழங்கினன் மலம்போய்
    அருணி லைக்கிலக் காயின வாங்கிரு புள்ளும்.

    142

    1066

    சேவல் வண்கொடி யுயர்த்தினன் சிறைமயி லூர்ந்தான்
    மூவர் தம்முத லாகிய முக்கணான் புதல்வன்
    தேவர் பூமழை சொரிந்தனர் தேவர்தஞ் சிறையை
    நீவி விண்குடி யேற்றின னிலத்திடை மீண்டான். 3

    143

    1067

    கமலம் பூத்திடத் தீர்த்தமொன் றகழ்ந்துபே ரூரின்
    அமிழ்த லிங்கத்தி னருச்சனை புரிந்துசென் றமரர்
    தமது வைப்பெனப் போற்றுறு மருச்சுனச் சயிலங்
    குமர நாயக னமர்ந்தனன் குவலயம் போற்ற.

    144

    1068

    மருத வெற்பிடை வதிதரு முருகனைப் பணிவோர்
    பொருவி லன்னவன் புகழ்களைக் கேட்பவர் தாமும்
    ஒருவி வன்பகை வெறுக்கைபெற் றும்பரா யீற்றில்
    அருளொ டுங்கலந் தானந்தத் தவசராய்த் திளைப்பார்.

    145

    1069

    அங்கண் மாநிலஞ் சுமதியென் றறையுநான் மறையோன்
    பொங்கு தீவினை புரிந்தவன் புரையில்வான் கதியில்
    தங்கி னானெனி னாதிமா புரத்திடைத் தவத்தால்
    நங்க ணாதனை நாடுவார்க் குறாதது முளதோ.

    146

    1070

    என்று கூறலு முனிவரர் சூதனை யிறைஞ்சி
    நன்று கூறினை யுய்ந்தன நவைபயில் சுமதி
    ஒன்றும் வான்கதி யுற்றன னென்றனை விளங்க
    மன்றவோதுதி யெனவெதிர் வழங்குவன் சூதன்.

    147

    மருதவரைப்படலம் முற்றிற்று.
    ஆகத்திருவிருத்தம் - 1070
    -------------

    15. சுமதி கதிபெறு படலம் (1071- 1134)

    1071

    பங்கயப் பொய்கை யுகளும் பருவரால் பாய்ந்து முட்டத்
    துங்கக் கமுகின் மடறுமியப் பைங்கனி கள்சொரி யாநிற்குந்
    தெங்கு மிடைந்த மகாராட்டிர மென்னுந் தேயந் தன்னில்
    தங்கு மறையோ னொருவன் றகும்பெயர் மற்றெச்ச தேவன்.

    1

    1072

    அன்னா னெடுநா ளருந்தவங்க ளெச்சங்க ளாற்றி முக்கண்
    முன்னோ னருளான் மனைக்குரிமை பூண்ட முகிலன்ன கூந்தல்
    மின்னே ரிடையாண் முலைகறுப்ப்பக் கண்குழிய விளர்ப்ப மாமை
    நன்னா ளிடையே யுயிர்த்தா ளொருமைந் தனகர் கொண்டாட.

    2

    1073

    தமர்களுடன் மகிழ்ந்து தாதைசடங் கனைத்துந் தகவி னாற்றிச்
    சுமதி யெனுநாம மிட்டழைத்தான் றோன்றலுமப் பெயருக் கேற்பத்
    திமில மறைபயின்று தெள்ளிப் பலகலையுஞ் சீல மாதி
    அமைதி பெறவொழுகி யாறடுத்த வொருபதாண் டாயு ளுற்றான்.

    3

    1074

    தெய்வ மறையோன் சிவதாமா வென்றொருவன் சீர்சால் கற்பின்
    தையன் மனைவி வயிற்றுதித்த பேரழகின் றனயை தன்னை
    உய்யு நெறிபலவு முள்ளா னிவற்களித்த லூழா மென்று
    கையி னறும்புனலோ டீந்து கடியயருங் காட்சி கண்டான்.

    4

    1075

    திமிரப் பிழம்பைத் தெளித்தெடுத்து வார்த்தனைய தேம்பெய் கோதைக் கோலம்
    குமரி நலன்முழுதுங் கூட்டுண்டு வாழுநாட் குமர னான
    சுமதி யெனும்பெயரான் றோடவிழ்ந்த கொன்றையந்தார்த் தொல்லோன்
    அமரர் தொழும்விழவு நோக்கப் பருப்பதத்தை யடைத லுற்றான்.

    5

    1076

    வேறு
    மல்லி கார்ச்சுன மால்வரை நாயகன்
    புல்லம் வார்கொடி யேற்றிப் புவிதொழச்
    செல்லு நல்ல திருவிழ வின்வளம்
    எல்லி யும்பக லுந்தொழு தேத்துநாள்.

    6

    1077

    அமிழ்தந் துய்க்கு அமையத்துப் பித்துறீஇ
    உமிழ்தல் செய்து விடத்தையுண் டாலெனக்
    குமிழ்த ருங்கொடி நாசியொ ருத்திபால்
    இமிழ்த ரும்படி யெய்திய வூழினால்.

    7

    1078

    வீதி யின்வள நோக்கவெ ளிக்கொடு
    போது வான்கவி னாற்பொலி வுற்றொரு
    மாதர் வீதி வளங்கண்டு புக்குழி
    ஆத வன்கதி ராலயர் வெய்தினான்.

    8

    1079

    பந்தர் நீண்டு பனிப்புது நீருகுத்
    திந்தி ரன்புர மெய்திய தாமெனச்
    சுந்த ரங்க டொகுத்ததொர் மாளிகை
    முந்து றக்கண்டு முன்கடை நண்ணினான்.

    9

    1080

    மணமுஞ் சீதமும் வௌளவிச் சிறுவளி
    அணவி வெப்பம கற்ற வயர்வுயிர்த்
    துணர்வு மீக்கொ ளுவகைய னாய்மனைப்
    புணர்கின் றார்திறங் கேட்கப் புகன்றனன்

    10

    1081

    மழைத வழ்ந்தெழு மாளிகை யின்னதில்
    தழைவ ளத்தொடு தங்குகின் றார்தமை
    விழைகின் றேற்கு விளம்புதி யென்றனன்
    உழைநின் றானொரு வன்கிளப் பானரோ.

    11

    1082

    வேறு
    திருந்திய விந்நகர்த் தேத்துச் சீர்மிகுந்
    திருந்திடு மந்தண ரிருக்கை நாப்பணே
    பொருந்திய வாழ்க்கையோர் புனித வேதியன்
    அருந்தவத் துயிர்த்தவ ளழகி னெல்லையாள்

    12

    1083

    பொன்னொளி திகழ்தரு பொருவின் மாமையான்
    மன்னுமே மாங்கியென் றுரைக்கு மாண்பினாள்
    அன்னவ ளிந்நக ரமர்ந்த வாழ்க்கையோர்
    தொன்னெறி வேதியன் றுணைவி யாயினாள்.

    13

    1084

    இடைநில நாடொறு மினைந்து தேய்தரப்
    புடைபரந் தெழுந்தபூண் முலைகள் போர்மதன்
    கொடைபயி லிருநிதிக் குப்பை யாமென
    நடைபயின் மங்கையாம் பருவ நண்ணினாள்.

    14

    1085

    நாண்மட மச்சநற் பயிர்ப்புத் தோட்டியும்
    ஆண்மைசெய் பாகனு மணியுந் தூசமும்
    ஏண்மலி நிகளமு மிரியக் காமமாம்
    மாண்மதம் வீறலின் வரம்பி கந்தனள். 5

    15

    1086

    குருகைப் புழைக்கையால் வளைத்தக் குஞ்சரம்
    வருமுலைக் கோட்டினான் மார்ப ழுத்துபு
    மருமலி யுவளக வனத்தி லாடவர்
    திருவெனுங் கவளம்வாய் தெவிட்டிச் செல்லுமே.

    16

    1087

    மங்கையிற் பெருங்கவின் மருவ லான்வளை
    அங்கையா னாகிய வணங்குக் காற்றல்வீழ்
    துங்கமா தவரெனத் துறந்து ளோருளும்
    இங்கிவள் விழிவலைக்கிடர்ப்ப டாரிலை.

    17

    1088

    தந்தையே யாகநற் றமைய னாகவச்
    சுந்தரி விழிவலைத் துவக்குண் டானெனிற்
    பிந்துற வருவன வருகெ னாப்பிழைத்
    தந்தின்மென் முலைதழா தகறற் பாலனோ.

    18

    1089

    புனையிழை யிவள்செயல் புனலொ டேற்றவன்
    அனைவரும் புகறர வறிந்தும் பன்முறை
    மனைவயிற் கண்டுமென் மரபு குன்றிற்றென்
    றினைபவன் கோறலை யெண்ணி னானரோ.

    19

    1090

    கோறலுக் குடன்படுங் கொண்கன் செய்தியைத்
    தூறலுக் குடம்படுந் துணைவி முன்றெரிந்
    தாறலைத் திருநிலத் தடக்கிப் பொன்னினும்
    வேறலைச் செய்தனள் வீத்த வெம்பழி.

    20

    1091

    நாண்டகு மறையவர் நல்ல சேரியின்
    வேண்டியாங் கொழுகுமவ் வினைமுற் றாமையின்
    மாண்டகு பரத்தையர் வாழிவ் வீதியிற்
    காண்டகு மிம்மனை கவினச் செய்தனன்.

    21

    1092

    அரத்தகச் சீறடி யருப்புக் கொங்கையாள்
    பரத்தையர் தொழிலெலாம் பயின்று காளையர்
    வரத்தினை யேற்றிவண் வதிகின் றாளென
    விரித்தன னிதுவினா யிருக்கும் வேலையில்.

    22

    1093

    பரியக நூபுரம் பாதத் தேங்கிட
    விரியொளி மேகலை யரையின் மின்செய
    வரியளி குலங்கள்வார் குழலிற் சூழ்தரத்
    தெரியிழை மாதரா ளாங்குச் சென்றனள்.

    23

    1094

    சிறுவளி படர்வழித் தேம்பெய் கோதையின்
    உறுமன மெழவுகைத் தொல்கி நின்றனள்
    முறுவலித் தொருமுலை தோற்றி மூடினள்
    நறுமலர் விழிப்படை சிறிது நாட்டினாள்.

    24

    1095

    முறுகிய காதலின் மொத்துண் டாலென
    உறுவளி நாசியி னுயிர்த்துச் செம்மலைப்
    பெறுவதற் கருந்தவம் பெரிது மாற்றினேன்
    மறுமையு மிம்மையும் வழுவி லேனென்றாள்.

    25

    1096

    துடித்தன வெனக்கிடத் தோளுங் கொங்கையும்
    வடித்தவேல் விழியுநல் வரைப்பிற் பல்லியு
    நொடித்தன விரிச்சியு நுவலப் பட்டன
    கடைத்தலைக் குமரநிற் காண்டற் கென்றனள்.

    26

    1097


    நென்னலின் வைகறை நீங்கு மெல்லையில்
    தன்னிக ரில்லதோர் தரள மாலிகை
    கன்னியென் கரந்தரக் கனவி னேனிதோ
    நின்னையுய்த் தளித்தன ணிமலை யென்றனள்.

    27

    1098

    அயலவர் போற்கடைத் தலைய மர்ந்தனிர்
    வியன்மனை நுமதியா னும் வேறலேன்
    பயின்மனை யுவளகம் படர்கம் வம்மினென்
    றுயிரினு முரிமைசெய் தொண்கை பற்றினாள்.

    28

    1099

    வேறு
    ஏமாங்கி விழிக்கணை யோடெழின் மார னெய்த
    வீமாண் கணை பட்டுள மற்றுவி கார மென்னுந்
    தீமாந்த வருந்திய பூசுரன் செங்கை யன்னாள்
    தூமாண்கரத் தாற்றொடச் சோர்ந்தழி யாவி பெற்றான்

    29

    1100

    உருவத்திடை யோங்கி யுருக்கு முலப்பி னோய்க்கும்
    பருவத்தொடு நல்கு மருந்துபல் கோடி யுள்ள
    புருவச்சிலை கோலி விழிக்கணை பூட்டி மாதர்
    வருவித்திடு நோய்க்கவ ரல்லது மற்று முண்டோ.

    30

    1101

    விண்ணோங்கி வளர்ந்த பருப்பத மீது நெற்றிக்
    கண்ணோங்கிய நம்பன் விழாக்கவின் கண்ட பேறே
    பண்ணோங்கிய மென்மொழி யாள்கரம் பற்றிற் றென்னா
    எண்ணோங்கிய நெஞ்சோ டெழுந்துட னேகி னானே.

    31

    1102

    மலர்மெல்லணை மாதொடும் வைகினன் மாதி னேவல்
    அலர்மென்குழ லார்சிலர் சாந்த மலங்கன் மாலை
    பலவுங்கொடு முன்னுற வேந்தினர் பைம்பொ னங்கி
    குலவுஞ்சும திக்கணி யாக்கி டானுங் கொண்டாள்.

    32

    1103

    வேறு
    மாடகத் திவ்வு நல்லியாழ் மதுரமெல் லிசைகா தூட்டிப்
    பாடகத் தளிர்மென் பாதப் பைங்கிளி யரிய லூட்ட
    ஆடவர் திலக மன்னா னநங்கவேள் சரங்கள் பாய
    ஓடரித் தடங்க ணங்கை யுருவினைத் தழுவிக் கொண்டான்.

    33

    1104

    தாதிய ரெழினி வீழ்த்துத் தணந்தனர் புறத்துப் போத
    மாதினை யிடப்பான் முன்கை வலக்கையிற் சாய்த்துப் புல்லிப்
    போதிவர் கூந்தல் சோரப் புணர்முலை வருடிப் பின்னிச்
    சோதிவெண் டரளச் செவ்வாய்ச் சுவையமிழ் தாரத் துய்த்தான்.

    34

    1105

    ஓதியு நுதலு நீவி யோடரிக் கடைக்க ணக்கிச்
    சோதிய கவுள்கை மூல மாதிகள் சுவைத்டுக் கொங்கை
    ஆதிகள் புடைத்துக் கிள்ளி யங்கையாற் பிசைந்து தாள்கள்
    நீதியி னல்குன் மாட்டு நிகழ்த்துவ பலவுஞ் செய்தான்.

    35

    1106

    மூடிக மயூர பாத முழுமதி பாதித் திங்கள்
    தோடவி ழுற்ப லாதித் தொகுகுறி நகத்தாற் பல்லாற்
    பாடுறத் தோற்றிப் பூஞை பன்னகங் குக்கு டாதிப்
    பீடுறு கரண பேத நாடொறும் பிறங்கச் சேர்ந்தான்.

    36

    1107

    அறிந்தவ ரொருவ ரில்லா வயனக ராத லாலே
    பறிந்திட நாணுஞ் செய்யும் பற்பல வொழுக்கும் விட்டுச்
    செறிந்தொரு காலத்திற் றானுந் தெரிவையு மொருங்கு துய்த்துப்
    பிறிந்திலனாகிக் காமப் பித்தினிற் பெரியவ னானான்.

    37

    1108

    இன்பமுஞ் சுமதி தன்பா லின்பமுஞ் சமமாக் கொண்டும்
    பொன்பல வணியு மற்றும் புகழொடு மறிவி னோடுந்
    தன்பர மாக்கிக் கொண்டு தபனிய மில்லா ரென்மாட்
    டன்பின ராயி னென்னா மகல்கென்றாள் வளரே மாங்கி.

    38

    1109

    இளமையே கவினே கீர்த்தி யெறுழ்கலை யிங்கி தத்தின்
    வளமையே யன்பே நல்ல வருணமே யேக போகம்
    விளைவுசெய் திறனே மற்று மிக்குள ரேனும் பொன்னில்
    தளர்வின ராயி ஞ்சே யிருமனத் தைய லார்க்கு.

    39

    1110

    இருமனப் பெண்டுங் கவரு மேமமாந் திருவை நீக்குங்
    கருவியென் றறிஞ ரஞ்சக் கலங்கஞர் சுமதி யெய்திப்
    பொருவிறன் றாதை யானோன் புரோகித வுரிமை பூண்ட
    வெருளறு காசு மீர கண்டத்து வேந்தைச் சார்ந்தான்.

    40

    1111

    தெரிவுறு குரவன் மைந்தன் தேம்பிய வறுமை நோக்கி
    எரிமணிக் கலனுந் தூசு மிரணியக் குவையு நல்கி
    உரிமைசெய் தரைய னேவ வொய்யென மீண்டு காளை
    வரிசையி னொடுமே மாங்கி வளமனை யகத்துப் புக்கான்.

    41

    1112

    என்னுயிர் வந்த தோவென் றெதிர்கொடு வணங்கி யென்னே
    முன்னர்யா னசதி யாட மொய்பொருட் கேக லாமோ
    வன்னதுங் கவலை யின்றி யாடுதற் கேது வென்றே
    பின்னுறத் தடாமை நின்றேன் பெருமவந் தனையே யென்றால்.

    42

    1113

    நகையினா னல்ல வல்ல நவிற்றினும் பெரியோர் மாட்டுந்
    தொகைபடு மின்ன னம்பாற் சூழ்வதொன் றன்றொ வென்று
    தகையெழில் வாடு வேற்குன் றாமரை முகத்தைக் காட்டி
    மிகைவள மளித்தா யுய்ந்தே னென்றனள் விழிநீர் வாக்கி.

    43

    1114

    பருகுவ தன்ன காமர்ப் பைந்தொடி பொய்மெய் யாக
    உருகினன் வருந்த லென்னா வோடரித் தடங்க ணின்றும்
    பெருகிய புனலைத் தானைப் பெட்பொடுங் கரங்கொண் டொற்றி
    முருகிய கூந்தல் பின்னி முன்புபோ லிருந்தாள் சின்னாள்.

    44

    1115

    பூவிரைச் சாந்த மாதிப் பொருள்கொளா தொழிது மேனும்
    ஆவியி னன்ன காளா யமுதுணா திருத்த லாமோ
    நீவிரைந் தளித்த யாவு நீங்கின வென்றே மாங்கி
    ஓவியம் வாய்விண் டென்ன வுரைத்தனள் சுமதி கேட்டான்.

    45

    1116

    கரவிலர் தம்மைச் சார்ந்து காஞ்சன மிரந்து நல்கி
    விரவினன் சின்னாட் பின்னர் விடலைய ரோடுஞ் சென்று
    பரவுமுற் கலதே யத்திற் பகர்பர்க்க தேவ னில்லின்
    இரவிடைப் புகுந்து செம்பொ னாதிக ளெடுத்தா னன்றே.

    46

    1117

    எடுத்திடு மரவங் காதி னெய்தலும் விழித்துப் பார்ப்பான்
    அடுத்தனர் கள்ளர் கூவென் றகத்திடைத் துயில்கின் றாரைப்
    புடைத்தன னெழுப்ப வல்லே பூசுரன் றலையை வீட்டி
    மடுத்தபல் பொருளி னோடு மீண்டவள் மனையைச் சார்ந்தான்.

    47

    1118

    உடங்குபோய் மீண்ட தூர்த்த ருயிர்க்கொலை புரிந்து பாவந்
    தொடங்கிய சுமதிக் கன்று துராசார னெனும்பேர் நாட்டி
    விடங்கனி விழியி னாட்கும் வெங்கொலை கூற வன்னாள்
    குடங்கையிற் செவ்கள் பொத்திக் குழைந்துளத் திதனைக் கொண்டாள்.

    48

    1119

    வேறு
    கைதவ மிழைத்தலுங் களவு செய்தலும்
    ஐதுயிர் கோறலு மறத்தைக் கோறலும்
    பொய்தவ வுரைத்தலும் பொருளி ழத்தலும்
    எய்திய காமத்தி னன்றி யில்லையே.

    49

    1120

    நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
    வெம்றியைக் கோறலும் விவேகங் கோறலும்
    துன்றிய வொக்கலைத் துறந்து நிற்றலும்
    கன்றிய காமத்தி னன்றி யில்லையே.

    50

    1121

    பகையினை யாக்கலும் பாவ மாக்கலும்
    நகையினை யாக்கலு நவையை யாக்கலுந்
    திகைமன மாக்கலுஞ் சிறுமை யாக்கலும்
    அகைதரு காமத்தி னன்றி யில்லையே.

    51

    1122

    பிணிபல துறுத்தலும் பேது செய்தலுந்
    துணிதரு பெரியவர் தொடர்பு நீங்கலுந்
    தணிதரு சிறியவர் சார்புண் டாகலும்
    அணிதரு காமத்தி னன்றி யில்லையே.

    52

    1123

    உயிரினு மோம்பிடத் தகுவ யாவையும்
    அயர்வுசெய் தயர்வுசெய் தொழிக்கத் தக்கதாய்ச்
    செயிரின யாவையுஞ் செறிக்க வல்லதாய்ப்
    பயிலிய காமநோ யஞ்சற் பாலதே.

    53

    1124

    வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
    ஒருவியன் பனைச்செகுத் துலப்பி றீங்குமுன்
    மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
    வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ.

    54

    1125

    என்றுளத் தெண்ணியே மாங்கி யன்புமிக்
    கொன்றிய சுமதியை யொழிப மற்றவன்
    துன்றிய பெருநிதித் தோற்றங் காட்டினிம்
    மன்றலங் குழல்வய மாமென் றெண்ணினான். 5

    55

    1126

    தேங்குநீர் மாளவ தேயத் தெய்தினான்
    ஆங்குமோ ரந்தண னாவி மாற்றினான்
    வீங்கிய பொருளொடு மீண்டு சென்றுவிண்
    ஓங்குமே மாங்கிவா ழுறையு ளண்ணினான்.

    56

    1127

    தேவரும் விழைதகுந் திருவன் னாளிவன்
    நீவவு நீங்கல னீண்ட விந்நகர்
    பாவியின் பொருட்டுநாம் பற்றி யப்புறம்
    போவதே கடனெனப் போயி னாளரோ.

    57

    1128

    பிரிவுறு மன்றிலிற் பேதுற் றன்னவன்
    தெரிவையைக் காணுவான் றேடிச் செல்வுழிக்
    கரிபல திரியுந்தென் கயிலை யெல்லையின்
    விரியிணர்க் கானிடை விழுந்து மாய்ந்தனன்.

    58

    1129

    பருப்பதந் தாழ்ந்தவப் பரிசின் வெள்ளியம்
    பொருப்பய லிறந்தவன் புலாலு டம்பினை
    விருப்பொடு நாய்நரி மிசைய வீர்த்துப்போய்த்
    திருப்பொலி காஞ்சியந் தீர்த்தத் திட்டவே.

    59

    1130

    ஆதியம் புரத்திடை யாக்கை வீழ்ந்ததும்
    போதிவர் காஞ்சியம் புனலிற் றோய்ந்ததுங்
    கோதினை முழுவதுங் குமைத்தச் செம்மலைச்
    சோதிதன் சிவபுரச் சூழல் சேர்த்தவே.

    60

    1131

    வேண்டிய போகங்கள் வேண்டி யாங்குறீஇ
    ஆண்டகைச் சுமதியங் கமர்ந்து வாழ்ந்தனன்
    ஈண்டிய தீவினை யிடைவி லங்கினு
    மாண்டநல் வினையினர் வரத்திற் றாழ்வரோ.

    61

    1132

    வசுகுந்தப் பகைஞரை மறுக்கும் வாயுறீஇப்
    பசுகுந்தங் காத்தொசித் திட்ட பண்ணவன்
    சிசுகுந்த விழியினார்க் கென்னுந் தேசுற
    முசுகுந்த னென்பவன் முறையிற் பூசித்தான்.

    62

    1133

    அவையகத் துறுபழி யகற்ற வேண்டினு
    நவைபயில் தீவினை நசிக்க வேண்டினும்
    எவையெவை வேண்டினு மீய வல்லதே
    கவைபயில் போதிசூழ் கயிலை மாநகர்.

    63

    1134

    என்றுரை கிளத்தலு மிறைஞ்சி மாதவர்
    கொன்றையஞ் சடைமுடிக் குழகற் கன்புசெய்
    நன்றுயர் முசுகுந்த னடையெ லாம்விரித்
    தொன்றுற வுரையென வுரைக்குஞ் சூதனே.

    64

    சுமதி கதிபெறு படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1134
    ------------------------

    16. முசுகுந்தன் முகம்பெறு படலம் (1135 -1188)

    1135

    வள்ளவாய் நறுங்கமல மதுவுண்ட களிவண்டின்
    தெள்ளுதீஞ் சுவைப்பாட றிசைதிசையு மெழும்பொய்கை
    கள்ளறாப் பொழில்புடைசூழ் கலிங்கதே யத்தொருவன்
    துள்ளுமான் மறிக்கரத்தார் துணையடிப்பூ சனைபுரிவான்.

    1

    1136

    மறைமுழுதும் பயின்றுணர்ந்து மறைமுடிவுக் கெட்டாத
    பிறைவளருஞ் சடைமுடியார் பெய்கழற்சே வடிமறவா
    நிறைதருகா தலின்மறையோ னெடுந்தவத்தா லொருபுதல்வி
    அறைதருமற் றவன்மனைவி யகட்டிடைவந் தவதரித்தாள்.

    2

    1137

    சடங்கனைத்தும் விதியற்றாற் றகத்தாதை யிதத்தொழிலே
    தொடக்கவரு மகட்கியற்றிச் சுகுமாரி யென்றழைத்தான்
    அடங்கவரு நல்வினையி னங்குரம்போல் வளர்காலை
    மடங்கழுவும் பண்டுபுரி மாதவத்தின் பயனணைய. 3

    3

    1138

    தகுமாறி தன்றெனவே சகத்தினர்தம் வாழ்க்கையினை
    நகுமாறி ராறிரட்டி நவைவளர்தத் துவமயக்க
    முகுமாறி யானையுரித் தவரடிப்பூசனைபுரியச்
    சுகுமாரி தாதைகழல் தொழுதிரந்தா ளவன்மகிழா.

    4

    1139

    திரும்பியளற் றழுந்தாமந் திரவதிகா ரங்கொடுத்துக்
    கரும்புநுனி தொடுத்தருந்துங் கடப்பாட்டி னினித்தற்பின்
    விரும்புமர்ச் சனையதிகா ரங்கொடுத்தான் விழைந்தேற்றுச்
    சுரும்புளரு நறுங்கோதைச் சுகுமாரி பணிபுரிவாள்.

    5

    1140

    வேறு
    கனைகடன் முகட்டிற் கதிரவ னெழுமுன் கடிகையோ ரைந்தென விழித்துத்
    துனையமெய்ச் சுத்தி கூடிய தியற்றித் தூயவெண் ணீறுநன் கணிந்து
    வினைமுழு தகற்றுஞ் சதாசிவ னுருவம் விளங்கவுள் ளத்திடை நினைந்து
    மனையதன் புறம்போ யியக்கமோ ரிரண்டு மரபுளி யொருவிக்கோ றின்று. 6

    6

    1141

    கந்தமிக் கரும்பு மலர்த்தடம் படிந்து கமழ்ந்தவெண் ணீறுடல் வயக்கிச்
    சுந்தர மிகுந்த நந்தன வனத்துத் தூத்தகு பிடகைகொண் டேகி
    நந்தியா வட்ட மலரிமந் தார ஞாழனா கம்வழை வகுளங்
    கொந்தவிழ் செருந்தி பிண்டிபா திரிகூ தாளஞ்சம் பகங்கன்னி காரம்.

    7

    1142

    பொன்னிணர்க் கடுக்கை செம்மலர்க் கொன்றை புன்னைவெட் பாலைசெவ் வகத்தி
    நன்னிற வேங்கை கொக்குமந் தாரை நறியபொன் னாவிரை வெட்சி
    பன்னுபன் மத்த மாதுளை பட்டி பருத்திசெவ் வரத்தைபொற் காஞ்சி
    துன்னிய புரசு கடம்பெருக் கழிஞ்சி றும்பைபன் னீர்திரு வாத்தி.

    8

    1143


    மராமலர் கரிய செம்பைவெண் டிலோத்தம் வழுதுணை கண்டங்கத் திரிமா
    குராமலர் தாளி கூத்தனற் குதம்பை கோட்டம்பூ கஞ்சத குப்பை
    அராவணைக் கடவுள் காந்திசே வகன்பூ வாத்திகூ விளம்வன்னி யறுகு
    பராவுசெவ் வந்தி நாவல்பூந் துளசி பச்சைவெண் காக்கணம் பூளை.

    9

    1144

    கருவிளை வெள்ளைக் காசைபைந் தருப்பை காரைசெங் கீரைநீர் முள்ளி
    மருதிரு வேலி வேரிலா மிச்ச வேர்வெட்டி வேர்மஞ்ச ணாத்தி
    பருதியின் காந்தி யெலுமிச்சை நரந்தம் பாரிசா தகம்புலி தொடக்கி
    தருவளர் வல்லி சதகஞ் சங்க வர்த்தனஞ் சந்தனங் கிளுவை. 0

    10

    1145

    வெள்ளின்மா விலிங்கை யோரிதழ்க் கஞ்சம் வெண்மலர் நாணனா யுருவி
    எள்ளலர் கொட்டைக் கரந்தைநற் கரந்தை யிலந்தைதண் ணீர்மிட்டா னெல்லி
    ஒள்ளிய நொச்சி கேதகை வாகை யுச்சிப்புல் குச்சிப்புல் காந்தள்
    தள்ளருஞ் சாலிப் பயிர்கருங் காலி தான்றிபூங் குருந்துதாம் பூலம்.

    11

    1146

    மருமருக் கொழுந்து மாதவி மௌளவன் மல்லிகை மாலதி மயிலை
    முருகவிழ் குளவி குமுதமென் குவளை முண்டக நெய்தலும் பிறவுங்
    குருமணிக் குழையின் பாங்கிய ரோடு கொய்துமீண் டகன்மனை குறுகி
    அருவுரு வகன்ற சிவபரம் பொருளை யருச்சனை புரியுநா ளொருநாள்.

    12

    1147

    வேறு
    தாது கமழுந் திருப்பள்ளித் தாமங் கொய்ய முன்புபோற்
    போது விரியு முய்யானம் புகுங்காற் சுகுமா ரியைக்கண்டு
    காது மநங்கன் கணையலைப்பக் காதன் மிகுந்து விதூமனென
    ஓதுபெயரான் காந்தருவ னொருவ னவள்பா லடுத்துரைப்பான்.

    13

    1148

    பொன்னா னியன்ற வோவியமே போதா னியன்ற மாலிகையே
    மின்னா னியன்ற பாவையே வேலை யெழுந்த சுவையமிழ்தே
    என்னா ருயிரே நினையடுத்தே னெனக்கு மனைவாழ்க் கையளாகில்
    நின்னால் விழையப் படுபொருள்க ணிரப்பிப் பணிசெய் குவலென்றான்.

    14

    1149

    கன்னி யுரைப்பாள் காந்தருவக் காளாய் போகத் திடையார்வம்
    என்னு மிலன்முப் புரமெரித்த விறைவ னடிப்பூ சனைப்பத்தி
    மன்னு முடையே னாதலினின் மனையா ளாதற் கிசைகல்லேன்
    நன்னர் வனத்துட் புகுந்ததுந்தேர் நம்பற் கலர்கொய் வான்பொருட்டே.

    15

    1150

    தூயை யெனினீ யெனையீங்குத் தொடரா துனது பதிச்சென்மோ
    மாயை தொடராப் பரம்பொருட்கு மலர்கள் பறிப்பச் சேருமென
    வேயை நிகர்த்த தடந்தோளாய் விழிவே லேவி யுயிர்வெளவித்
    தீயை நிகர்த்த நெடுங்காமஞ் செறித்தாய் செறித்தாய் செறித்தாயால்

    16

    1151

    வாளா தேகல் வழக்கேயோ மருந்தா யளிக்கு மொருநீநின்
    ஆளா யொழிந்தே னெனக்கிரங்கா யணங்கே யென்றுவி தூமனெதிர்
    மீளான் மீட்டு மிரந்தானை வெய்து விழித்துச் சுகுமாரி
    காளாய் கவிபோற் பிடிவிடாய் கவியே யாதி யெனச்சபித்தாள்.

    17

    1152

    தீய பாலை யார்தடுப்பார் தெய்வ மகளிர் மனங்கவரும்
    காய வாழ்க்கைக் காந்தருவன் கலையாய் வரைதோ றுழிதருங்கால்
    தூய தான விமையவரைச் சூழ லணுகி வதிகின்றான்
    ஆய காலை யொருவைக லமலன் வில்லத் தடியமர்ந்தான்.

    18

    1153

    வேறு
    மைம்மெழுகி யன்னமுக மாமுசு வெழுந்து
    கைம்மிளிர் கனற்கடவுள் காமுற விருந்த
    வைம்முளணி கூவிளம ரத்துகள வல்லே
    பைம்மிளிரி லைச்சருகு பல்லவ முதிர்ந்த.

    19

    1154

    உதிர்ந்தசரு கண்ணலுரு வத்தினை மறைப்ப
    வதிர்ந்திட மிருந்தவ ளழன்றதனை நோக்கி
    எதிர்ந்தவர்க ளுய்தலரி யாவிறைவன் மெய்யின்
    முதிர்ந்தசரு கார்த்தமுசு வுக்கிது கிளந்தாள்.

    20

    1155

    மாதுபுரி சாபமு மறந்துலக நாதன்
    சோதியுரு விற்சருகு துன்னவினை செய்தாய்
    நீதிகொடு சாபமிது நீங்கவரு போது
    மோதுமுசு வின்முக முனக்கமைக வென்றாள்.

    21

    1156

    வண்ணவுரை கேட்டுமணி கண்டனருள் செய்வான்
    பெண்ணரசி யாரையிது பேசிமுனி கின்றாய்
    எண்ணரிய தீவினையு மீறுசெயும் வில்ல
    நண்ணவெம தின்னுருவ நல்வினைசெய் தன்றே.

    22

    1157

    அன்னதொரு நல்வினை யடுத்ததிற னோக்கி
    இன்னமுசு வுக்கிறைமை யீந்துலக மெல்லாந்
    தன்னிகரி லாதவொரு சக்கர நடாத்த
    மன்னிய வரம்பல வழங்கவிசை வுற்றாம்.

    23

    1158

    வேட்டைபுரி வேடனெழு வேங்கையினை யஞ்சி
    நாட்டமய ராதுநனி வில்லநம துச்சி
    போட்டுயர் கதிக்கணவன் புக்கதறி யாய்கொல்
    ஏட்டையுற நீவெகுள லென்றுகை யமைத்தான்.

    24

    1159

    மங்கையுமை கேட்டுமகிழ் கூர்ந்தருள் வழங்க
    அங்கணரும் வம்மென வழைத்துலக மெல்லாந்
    துங்கமுசு குந்தனெனத் தோன்றியர சாள்கென்
    றொங்குவர நல்கியுமை யோடவண் மறைந்தான்.

    25

    1160

    வேறு
    பசுவு யர்த்திய பரமனா ரருளிய வரத்தால்
    விசுவம் யாவையும் வெண்குடை நீழலிற் குளிர்ப்ப
    முசுமு கத்துடன் முறைபுரி யரையர்தங் குலத்துள்
    அசுவ மேதநூ றாற்றினோ னஞர்கெட வுதித்தான்.

    26

    1161

    வளர்ந்து பல்வகைக் கலைகளு மறைகளு மற்றும்
    அளந்து மல்கிய வைம்பெருஞ் சுற்றமுங் குழுவுந்
    தளர்ந்தி டாதபல் லுறுப்புமே வரத்தழீஇக் கலியைப்
    பிளந்து நீதியின் முசுகுந்தன் பேருல காண்டான்.

    27

    1162

    ஆளு நாள்களி னகிதவுட் டிரனெனு மவுணன்
    நீளு மாண்மையி னெடுவிசும் பமரை யுழக்கித்
    தோளி னாற்றலால் வலாரியைப் புறங்கண்டு துரக்க
    மூளு மாசிடை முழுகுறத் தாட்படுத் திருந்தான்.

    28

    1163

    அகித வுட்டிர னாலர சிழந்தவச் சிரத்தோன்
    துகிலி கைக்குல மாட்டயர் துறக்கநா டொழிந்து
    விகிர்த னுக்கொரு மாமனாம் விலங்கலி னொருசார்
    நெகிழு ளத்தினன் மறைந்துவாழ் நீர்மைய னொருநாள்.

    29

    1164

    முருகு பூம்பொழின் முதிர்ந்தவத் திருவரைச் சாரற்
    பெருகு மாதவ மிழைத்திடும் பிருகுமா முனிவன்
    தருகு மாரியைக் கண்டனன் றகையணங் குறுத்த
    அருகு போந்துகைப் பற்றியீர்த் தனனறந் துளங்க.

    30

    1165

    வேத மெய்ப்பொரு டெள்ளிய விழுத்தவ னறிந்து
    மாதர் தங்களை வன்மையிற் பற்றுத லரக்கர்
    நீதி யன்னது நிகழ்த்தலி னரக்கனா குதியென்
    றோதி விட்டன னும்பர்கோ னரக்கனா யுழன்றான்.

    31

    1166

    அரசி ழந்தன னரக்கனா உழன்றனன் வலாரி
    விரசு தீவினை விளைந்தவா றென்னென விம்மிப்
    பரசு பொன்னொடு தேவரும் பாரகத் திழிந்து
    முரசு கண்படா முசுகுந்தன் பேரவை யடுத்தார்.

    32

    1167

    ஆசி கூறினர் முகமனு மியம்பின ரவுணர்
    பாசி போன்றுநின் றுடற்றலிற் பாணிவச் சிரத்தோன்
    கூசி நீத்தது மரக்கனா யுழன்றதுங் குழைந்து
    பேசி வானகங் காவெனப் பெரிதிரந் தனரால்.

    33

    11680

    தேவர் தம்மிடர் தீர்த்திடே னாயினிச் செனனத்
    தாவ தென்னையென் றமரர்க ளுடன்விசும் பேகித்
    தாவ ரும்படை யகிதவுட் டிரனுயிர் சாடிப்
    பூவர் கற்பகப் பொழில்முசு குந்தன்காத் தனனால்.

    34

    1169

    வேறு
    இந்திரன் வலியிழந் தின்னல் கோட்படக்
    கந்தற நின்றுளங் கலங்கு மெங்களை
    வந்தனை புரந்தனை மன்ன விங்கிருந்
    தந்தமி லரசுசெய் தருளென் றார்சுரர்.

    35

    1170

    கடவுளர் மொழிகட வாமை மன்னவன்
    அடலரி யாதனத் தாங்கு வைகுபு
    புடவியு மேனைய பொழிலுங் காத்தனன்
    இடர்முழு தொழிந்தன வுலகி ரேழுமே.

    36

    1171

    இன்னண மரசுசெய் திருக்குங் காலத்து
    மன்னவ னொருதின மாகர் சூழ்தரப்
    பொன்னணை மீமிசைப் பொலிய வைகினா
    னென்னரு மவரவர் பணியி யற்றினார்.

    37

    1172

    நாடக மகளிர்க ணடிக்கப் புக்கனர்
    பாடகத் தளிரடிப் பாவை மார்களுள்
    ஆடகச் சிலம்பணி யரம்பை நோக்கினாள்
    பீடக மன்னவன் வதனப் பெற்றியே.

    38

    1173

    பாங்குறு மாதரைப் பார்த்துப் பையவே
    ஈங்கிவன் முசுகொலோ வென்ரறு நக்கனள்
    ஆங்கது குறிப்பினா லறிந்து மன்னவன்
    வீங்கிய சமழ்ப்புள மேவி னானரோ

    39

    1174

    வள்ளலாய் வீரனாய் வாய்மை யாளனாய்த்
    தெள்ளிய நூலனாய்ச் செல்வச் செம்மலாய்
    ஒள்ளிய பலகுண முடைய னாயினும்
    எள்ளிய நகையினா லிறைமை நீத்தனன்.

    40

    1175

    இழித்தகு முசுமுக மிகந்து மாநுடச்
    செழித்தநன் முகனுறச் சிந்தை செய்தனன்
    சுழித்தெழுங் கொழுந்தழ றுருத்தி டுங்குண்டத்
    துழித்திரள் வச்சிரத் தூணு றுத்தினான்.

    41

    1176

    நேரிய மதலையி னிவர்ந்து நின்றுதன்
    சீரிய குலம்வளர் தேவ னாகிய
    சூரியன் றனையுளந் தொழுது நோற்றனன்
    வீரிய முசுகுந்த னென்னும் வேந்தனே.

    42

    1177

    வழிபடு பரிதிமுன் வந்து சொல்லுமால்
    விழிசிவந் துமைமகள் விளைத்த சாபமீ
    தொழிவகை புரிதவ மொன்று மில்லைகாண்
    அழிவறு சிவபிரா னடித்தொண் டல்லதே.

    43

    1178

    கங்கையஞ் சடைமுடிக் கலைவெண் டிங்களார்
    தங்கிய தலந்தொறுஞ் சார்ந்து போற்றுறிற்
    பங்கமி லாநநம் பணிக்கு மென்றலும்
    அங்குறு தவத்தினை யகன்று மன்னவன்.

    44

    1179


    திரைதவழ் தீர்த்தங்கள் பலவுஞ் சென்றுதோய்ந்
    தரையர வசைத்தெரி யாடு மண்ணலார்
    தரைவளர் தலந்தொருஞ் சார்ந்து போற்றினான்
    வரைவளர் முசுமுக மாறக் கண்டிலான்.

    45

    1180

    கவலையுற் றென்னினிக் கைக்கொள் வாமெனச்
    சவலைய மனத்தனாய்த் தளரு மேல்வையின்
    அவலமுற் றழியலென் றடுத்து நாரதன்
    குவலயத் தானுளங் குளிர்ப்ப வோதுவான்.

    46

    1181

    வேறு
    நீரூர் கலிகன்ம நாசினி யென்றொரு நீனதிசேர்
    பேரூ ரெனுந்தலத் தேகுகண் டாய்பிழை யாதுவரம்
    பாரூர் பலவுந் தொழும்பட்டி நாதர் பணித்தருள்வார்
    காரூர் கொடைக்கரத் தாயென்று கூறிக் கரந்தனனே.

    47

    1182

    ஊனூற்றும் வேற்கை நரபதி யாங்குவந் தேகிநறுந்
    தேனூற்றும் பூநதிக் காஞ்சியி னாடிச் செழுங்கருங்கார்
    வானூற்றும் போதி வனத்தாதி நாதர் மலரடியிற்
    கானூற்றும் போதுக டூஉய்ப்பணிந் தாடிக் கசிந்தனனே.

    48

    1183

    வழிநாட் கலிகன்ம நாசினி தீரத்து மாமறையோர்
    பழிதீர நாடும் விதியா லிலிங்கப் பதிட்டைசெய்து
    கழிகா தலின்மிகப் பூசனை யாற்றிக் களித்திருந்தான்
    சுழிநீர் நதியிற் பின்னாளும் வழிபடத் தோய்ந்தனனே.

    49

    1184

    இருகால் விளைந்த வெறுழ்வலிச் சாப மிரண்டுவைகல்
    வருநீர் படிய மடிந்துமற் றோர்வைகன் மூழ்குதலால்
    ஒருவா முசுமுக நன்முக மாக வுவந்தரையன்
    அருளார் மறையவர்க் கார்த்தினன் செம்பொனு மாடையுமே.

    50

    1185

    அணிகலந் தூசு முதலாம் பொருளம லற்களித்துப்
    பணிபல வாற்றி விழாப்பங் குனிமதி யத்தெடுத்து
    மணிமருள் கண்டரைத் தென்கயி லாயம் வடகயிலைத்
    தணிவறு வைப்பினும் பூசனை சாலவி யற்றினனே.

    51

    1186

    தீர்த்தம் பலவும் படிந்தாடித் தீர்த்தன் றளிபலவும்
    பார்த்து வணங்கி மருதோங் கியபனி மால்வரைபோய்க்
    கூர்த்த நுதிவடி வேற்கரத் தானைக் குழைந்திறைஞ்சி
    ஆர்த்தி வளம்பொரு டன்பதி புக்குல காண்டனனே.

    52

    1187

    முருகார் கலிகன்ம நாசினி மூழ்கி முசுகுந்தனுக்
    கருளாங் கருள்சிவ லிங்கங்கண் டேத்தின ராக்கையிடை
    வெருளார் பிணிமுத லானவை தீர்ந்துவிண் ணோர்வியப்பப்
    பொருளார்ந் திரும்புக ழீட்டிமண் ணாண்டின்பம் பூணுவரே.

    53

    1188

    வேறு
    என்று கூறிய சூதனை மாதவ ரேத்தினார்
    நன்று கூறினை நாக மிழந்த வலாரிதான்
    அன்ற ரக்க வுருக்கொ டலைந்தன னென்றனை
    பின்றை யுற்றதும் பேசெனப் பேசுவன் சூதனே.

    54

    முசுகுந்தன் முகம்பெறு படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1188

    17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் (1189-1214)

    1189

    தாயி லாத தனிமக வென்னவுந் தண்ணிய
    தோய நீங்கு சுருள்விரி பைம்பயி ரென்னவு
    மேய வாருயிர் நீங்குட லென்னவும் விண்ணெலாந்
    தூய வேந்த னிலாமை வனப்புத் துறந்தவே.

    1

    1190

    விலாழி மும்மத நான்மருப் பேழுயர் வேழமூர்
    வலாரி நீங்கினன் மானவன் மாமுசு குந்தனுஞ்
    சுலாவு நாண்கொடு போயின னென்னினிச் சூழ்வெனக்
    குலால னேமியி னெஞ்சுகொண் டும்பர் குழைந்தனர்.

    2

    1191

    ஆய காலையி னரத னங்க ணடுத்தனன்
    நீயி ராகுலம் வீட்டுதிர் நீண்முடி வேந்தனைப்
    போய ணாவிப் புணர்ந்த வரக்க வுருத்தனைச்
    சாய நீவித் தருவலென் றவ்வயி னீங்கினான்.

    3

    1192

    மாலை வெள்ளரு வித்திர டூங்க மதுமலர்ச்
    சோலை சூழ்ந்த பனிவரைச் சாரலைத் துன்னினான்
    காலை மாலையும் யாமம்முங் கான்முக மேல்கறங்
    கோலை போலுழி தந்த வரக்கனை யுற்றனன்.

    4

    1193

    இடர்ப்ப டுந்தனக் கின்னுரை வெய்திய தாமென
    வடர்ப்ப மேல்வரு மிந்திர னாநநத் தங்கைசேர்
    கடத்து நீரொரு கையிடை வாங்கி யெறிந்தனன்
    மடத்தை நீற்று மனுவெனு மைந்தெழுத் தோதியே.

    5

    1194

    ஐந்தெ ழுத்து நவின்றற லாநநத் தெற்றலு
    முந்து றுத்த முரணடி பிந்துற வாங்கினான்
    மைந்து கொண்ட மயக்கம் வறிது தணந்தனன்
    இந்தி ரன்செயல் கண்டன னீர்ஞ்சடை நாரதன்.

    6

    1195

    வருக வென்று நடந்தனன் வேதியன் மன்னனும்
    பருகு பாற்பசு வைத்தொடர் கன்றிற் படர்ந்தனன்
    பொருவின் மேலைச் சிதம்பரத் தெல்லை புகுந்தனன்
    வெருவின் மாதவன் வேந்தனவ் வெல்லை மிதித்திலன்.

    7

    1196

    கண்டு நாரதனெந்தினிப் போக்கெனக் கையினால்
    அண்டர் கோன்கரம் பற்றின னீர்த்தரி தேகிநீர்
    மண்டு காஞ்சி நதியி னழுத்தினன் மன்னவன்
    கொண்ட சாப வரக்க வுருக்குலைந் தோடிற்றே.

    8

    1197

    வேறு
    உறங்கிக் கண்விழித் தாலென வும்பர்கோன்
    மறங்கி டந்த வடிவது நீங்கலும்
    பிறங்கு முன்னெழின் மேனியும் பெற்றியும்
    அறங்கி ளர்ந்த வறிவொடு மெய்தினான்.

    9

    1198

    இருந்த தெவ்வுழி யெவ்வுழி நின்றனம்
    பொருந்து செய்தியென் னோவெனப் புந்தியின்
    மருண்டு வார்சடை மாதவன் றாண்மலர்
    தெருண்ட சிந்தையி னான்சிரந் தீட்டினான்.

    10

    1199

    மகதி வீணை வடித்திசை தேக்குகைப்
    பகவ வீங்குப் படர்ந்ததென் னோதென
    நகைமு கத்தொடு நாரதன் றானவர்
    பகைஞ கேளெனப் பட்டது கூறுவான்.

    11

    1200

    அகித வுட்டிர னாலலைப் புண்டுநீ
    புகலி டமின்றிப் பொன்னிமி யம்புகுந்
    திகழின் வைகுழி யெய்து பிருகுவின்
    மகளைக் காமுற்று வண்கரம் பற்றினாய்.

    12

    1201

    சுரக்குங் கோபத்துத் தொன்முனி சீறலும்
    அரக்க னாயினை யைய ரதுதெரிந்
    திரக்க மாமுசு குந்தன்விண் ணெய்தினான்
    கரக்கக் காதினன் காழ்த்த வவுணரை.

    13

    1202

    வள்ள லங்கு வதிவுழி மாதராள்
    எள்ள விண்ண மிகந்தித் தடநதித்
    தெள்ளு நீரிற் படிந்த சிறப்பினால்
    நள்ளு மாநுட நன்முகங் கொண்டனன்.

    14

    1203

    விசும்பு தவ்வென வேந்தநிற் பற்றியா
    னிசும்பு மால்வரை கானகம் யாவுநீத்
    தசும்பு பைம்பொ னவிருமிக் காஞ்சியின்
    பசும்பு னற்படி வித்தனன் காண்டியால்.

    15

    1204

    அரக்க னாகிய சாப மகன்றது
    புரக்கு நின்னுருப் பூண்டனை யென்றலும்
    பரக்கு மோகைப் பரவை படிந்தனன்
    கரக்குன் றூருங் கடவுளர் வேந்தனே.

    16

    1205

    பொறியி லேனைப் பொருட்படுத் தாய்க்கும்விண்
    நெறியின் வைத்த நிருபற்கும் யான்செயுங்
    குறியெ திர்ப்பைக் குறித்திடி னில்லையால்
    அறிவ வென்றடி மீட்டும் வணங்கினான்.

    17

    1206

    கம்ப மீருங் கலிகன்ம நாசினி
    வம்பு லாவு புனலின் மறுவலும்
    பம்பு வேத முறையாற் படிந்தனன்
    தம்பி ரானடி சார்ந்து வணங்குவான்.

    18

    1207

    வேறு
    மாடகத் திவவு நல்யாழ் மாதவ னோடு சென்று
    பாடகத் தளிர்மென் பாதப் பைங்கொடி காண மன்றுள்
    நாடக நவிற்று முக்க ணம்பனா ரடியிற் செந்தேன்
    றோடகம் பொதிந்த போது தூய்ப்பணிந் தாடி னானே.

    19

    1208

    கள்ளகந் துறுத்த பல்வீ கமழ்நறும் பன்னீர் நீழல்
    உள்ளகந் தூய வன்ப ருறுபணி யியற்ற வைகுந்
    துள்ளிய மறிமா னங்கைத் துணைவனை யுமையா ளோடு
    மள்ளிலைக் குலிச வேற்கை யமரனன் பாரத் தாழ்ந்தான்.

    20

    1209

    தமனிய வுலகில் வாழுந் தச்சனைக் கூவிப் பேரூர்
    அமலனுக் குவகை யார வாலயப் பணியு மற்றுங்
    குமரிவல் லிருள்கால் சீக்குங் குருமணித் திரளிற் செய்வித்
    திமவரை மருகன் வைகுந் தளியெலா மிறைஞ்சி னானே.

    21

    1210

    நறையிதழ்க் கமலச் சேக்கை நான்முகன் குண்டத் தியாக
    முறையுளி யாற்றி விண்ணோர் முகந்துண வவிக ணல்கிப்
    பிறைவளர் சடையான் மாட்டுப் பெருவரம் பலவும் பெற்று
    நிறைவளந் தழைய விண்போய் நெடிதர சியற்றி வாழ்ந்தான்.

    22

    1211

    இந்திரன் சாபந் தீர்ந்த வீர்ந்துறை கரிகாற் சோழ
    மைந்தினன் றுறைக்கு மேல்பால் வயங்குமற் றாங்குச் செம்பொன்
    சுந்தர வெள்ளி கன்னி துகில்கல னன்ன மற்றுஞ்
    சிந்தையின் மகிழ்ந்து தானஞ் செய்பவர் துறக்க மாள்வார்.

    23

    1212

    அத்துறை நறுநீ ராடி யாலயம் புகுந்து தாழ்ந்து
    வித்தகன் றிருமு னானெய் விளக்கிடு வோர்கள் சுற்றக்
    கொத்தொடு மிருளி னீங்கிக் குருமணி விமானத் தேகி
    உத்தம சிவலோ கத்தி னுலப்பறு கற்பம் வாழ்வார்.

    24

    1213

    உரைத்தவத் துறைநீ ராடி யுமைமண வாளர்க் கன்பான்
    விரைத்தபூச் சாந்தஞ் செம்பொன் வெள்ளிமற் றுலோக மாடை
    டிரைத்தவெள் ளிலைக்கா யன்னஞ் செய்கரி புரவி கன்னி
    தரைத்தலை யிவற்று ளொன்று சார்த்துவோர் பயன்சொல் வாரார். 5

    25

    1214

    எனவகுத் துரைத்த சூத னிணையடி முனிவர் தாழ்ந்திட்
    டனகனே கரிகாற் சோழ வரையனற் றுறையொன் றாங்குப்
    புனனதி யிடத்துண் டென்னப் புகன்றனை யனைய சோழன்
    தனதுரு சரிதந் தன்னைச் சாற்றெனச் சாற்றுஞ் சூதன்.

    26

    இந்திரன் சாபந்தீர்த்த படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1214.
    ----------

    18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம் (1215-1276)

    1215

    பொன்னி மாநதி புரக்கும் பூம்பணை
    நன்னர் நாட்டினை நன்று காத்துவாழ்
    மன்னர் தங்குலம் வந்து தோன்றினான்
    தென்ன ரஞ்சுவிக் கிரம சிங்கனே. 1

    1

    1216

    அனைய மன்னவ னறத்தின் பேற்றினாற்
    கனைக டற்புவி கலியி னீங்குற
    இனைத லில்கலி கால னென்பவன்
    தனைய னாயவன் சார்பிற் றோன்றினான்.

    2

    1217

    மகமி யற்றிய மதலை யெண்ணில
    புகரில் கல்வியிற் பொருது வென்றுவென்
    றிகல்செய் வேலினா னெளிதி னாட்டிய
    புகழ்செய் தம்பமும் புகலொ ணாதவே.

    3

    1218

    வேங்கை வார்கொடி மேரு மால்வரை
    தாங்க வேற்றினான் சகமெ லாந்தொழுந்
    தீங்கில் காஞ்சிமா நகர்செ றிந்தகான்
    நீங்க நற்குடி நிறுவி னானரோ.

    4

    1219

    ஆறி லொன்றுகொள் கடமை யன்றினார்
    வீற வென்றுகொள் வெறுக்கை யுல்கினால்
    ஏறு வண்பொரு ளெய்தி டும்பொருள்
    கூறு நான்கினு மறங்கள் கூர்த்துளான்.

    5

    1220

    ஆக்க மில்குடிக் காறி லொன்றையுந்
    தேக்கி வையகஞ் செகிற்ப ரித்தனன்
    காக்கு நாளையிற் கானிற் பல்விலங்
    கூக்க நோக்குபு வேட்டைக் குன்னினான்.

    6

    1221

    வேறு
    தெள்ளிய மணிப்புனல் சென்று தோய்ந்தனன்
    ஒள்ளிய செய்கட னூழி னாற்றினான்
    அள்ளொளிப் பொற்கலத் தமுதந் துய்த்தனன்
    கொள்ளரு விலைக்கலன் கொண்ட ணிந்தனன் 7

    7

    1222

    உடுப்புவன் கவயங்கொண் டுடலம் போர்த்தனன்
    தொடுப்புறு கழல்கழற் றுலங்க யாத்தனன்
    தடுப்பரும் படைஞரும் வலையுந் தன்புடை
    அடுப்பவைங் கதிப்பரி மேல்கொண் டூர்ந்தனன்.

    8

    1223

    கானக மடுத்தனன் கதழ்ந்து வேயினர்
    மானம ரிடத்துரீஇ வந்து சொற்றனர்
    ஊனமில் வலைவளா யொடியெ றிந்தனர்
    வேனவி றோளினான் வியங்கொ ளாளரே.

    9

    1224

    செருக்கள மெனப்பறை தெழிக்க வெங்கணும்
    முருக்குவன் ஞமலியை முடுக்கி விட்டனர்
    மருக்கிளர் மலர்ப்புதல் வார்ந்த தண்டினால்
    எருக்கின ரார்த்தன ரெறுழ்ப்பு யத்தினார்.

    10

    1225

    வேறு
    முழங்கி வன்கொலை வேங்கை பாய்ந்தன மும்ம தக்கரி பாய்ந்தன
    தழங்கி யேனமொ டெண்கு பாய்ந்தன தாவு மான்கலை பாய்ந்தன
    பழங்க ணுற்றரி யேறு பாய்ந்தன பல்கும் யாளிகள் பாய்ந்தன
    வழங்கு மத்திர மன்ன முள்ளுடன் மல்கு மெய்யினம் பாய்ந்தன.

    11

    1226

    வேல்வ ழங்கின ரீட்டி விட்டனர் வெய்ய கப்பண முந்தினார்
    கோல்வழங்கினர் பிண்டி பாலமுங் குந்த முஞ்சில ரேவினார்
    பால்வ ளைந்தொளிர் நாந்த கம்பரு வச்சிரத்தடி யோச்சினார்
    கால்வ ழக்க மறக்க னன்றுகைப் பாசம் வீசினர் கண்ணிலார்.

    12

    1227

    தலைது மிப்பன வால றுப்பன தாளி றுப்பன வாருடல்
    நிலைகு ளிப்பன சோரி வீழ்ப்பன நீள்கு டர்சரி விப்பன
    வலைவி ழித்துணை சூன்று குப்பன வைது மார்பு பிளப்பன
    கொலைமு கத்தவர் மானின் மீது குறித்து றுத்த படைக்கலம்.

    13

    1228

    இரிந்து வீழ்வன காது வார்களை யெற்றி வீழ்வன வென்புகண்
    முரிந்து வீழ்வன வொன்றை யொன்றெதிர் முட்டி வீழ்வன வன்றலை
    திரிந்து வீழ்வன கூவி வீழ்வன சீறி வீழ்வன மீளியர்
    சொரிந்த வாய்த மனைத்தும் வெய்து தொடர்ந்து சாடிய மான்களே.

    14

    1229

    மடைவ யிர்க்குல மெங்கு மேங்கின மாடு பம்பை யிசைத்தன
    தடைப டுத்துளர் நாய்கு ரைத்தன சார்ந்து மள்ளர் தெழித்தனர்
    மிடைவ லைத்திரள் சூழ்ந்த சூழல் விறந்து மான்பல வீந்தன
    அடைய லர்க்குரு மேற னான்பல வாளி யாளி யடர்த்தனன்.

    15

    1230

    இளமை மான்க ளலைத்தி லார்பிணி யெய்து மான்க டொடர்ந்திலார்
    வளமை மிக்கதொர் சூலு டைப்பெண் வருத்தி லார்வளர் முப்பினால்
    தளர்வி லங்குகள் சாடி லாரிவை தப்ப மற்றைய மானெலாம்
    வெளிறில் கேள்வியர் கைப்ப டைக்கலம் வேறு வேறட மாண்டவே.

    16

    1231

    வேறு
    வேட்டைத்தலை நீங்கினன் மீளியர் பாங்கு போதக்
    காட்டிற்கரி கால்வள வன்கடி தேகு வானோர்
    தோட்டுக்கம லங்கள் விரிந்து சுகந்தம் வீசுஞ்
    சேட்டுக்கதிர் மாமணி யோடைகண் டாங்குச் சென்றான்.

    17

    1232

    புடைமாண்ட வளம்பல நோக்குபு பூத்த பல்வீ
    இடைமாண்ட நிழற்கய நோக்கியங் கெய்து முன்னர்
    நடைமாண்டொரு கேழ லடுத்து நன்னீர் குடிப்பத்
    தொடைமாண்ட வில்லிற்கணை யொன்று தொடுத்து விட்டான். 8

    18

    1233

    பட்டூடுரு விக்கணை பன்றி பதைத்து வீழக்
    கெட்டேனொரு பூத மெழுந்து கிளக்க லுற்ற
    தொட்டார்க்குரு மேறனை யாயொரு பன்றி யாமென்
    றட்டாயெனை யந்தண னான்வர லாறு கேட்டி.

    19

    1234

    தொல்லைத்தவத் தால்வினை நல்லன சூழ்ந்த வென்னைச்
    சொல்லிப்புவி யோர்கள் சுவிர்த்தி யெனத்து திப்பார்
    வல்லைத்தெறு பூண்முலை மாதுடன் வாழு நாளில்
    இல்லறத்தற நீத்து வனத்தற மெய்தி னேனால்

    20

    1235

    மனைமாதொடு சுற்றமு மென்னை வனத்தி னூடும்
    வினைபோற்றொடர் வுற்றனர் வெய்து வெகுண்டு நீவார்
    தனைநாடியொர் பன்றி யுருக்கொடு தம்மை வஞ்சித்
    தெனையாவருங் காண்டலுறாதிங் கிருந்து ளேனால். 1

    21

    1236

    அரிதாகிய விவ்வுட னீங்குதற் கோவ றியேன்
    பெரிதாகிய தாக முடற்றப் பெயர்ந்து போந்தேன்
    கரிகால் வளவா வெனையட்டனை காவல் பூண்ட
    உரிதாகிய நாடு முனக்கில தாகு மன்றே.

    22

    1237

    இப்பூத வுருக்கொடு நீயெவ ணுற்றி யேனும்
    அப்பாலு நினைத்தொடர் வேனக லேன்மன் யானென்
    றுப்பூத மடுத்தெதிர் தட்கு முளர்ந்து கொட்குந்
    தப்பாதுகை யெற்று மதிர்ந்து தணக்கு மீளும்.

    23

    1238

    நன்றாஞ்செய லுன்னு மனத்தை நடுக்கு நல்ல
    குன்றாவினை செய்திடின் வெய்து குலைக்கு நன்மை
    பொன்றாத்துதி செய்திடி னாப்பெய ராமை பூட்டும்
    ஒன்றாத கொலைப்பழி நோக்கி யுலைந்து மன்னன்.

    24

    1239

    மறையோர்தமைக் கூவியிவ் வல்வினைத் தீர்வு சொன்மின்
    அறைபோயதெ னுள்ள மெனத்தொழ வந்த ணாளர்
    பிறைநீரொடு வேணி முடித்த பெம்மான் றலங்கள்
    நிறைகாதலிற் சென்று வணங்குதி நீங்கு மென்றார்.

    25

    1240

    அரையன்மகிழ் வுற்றர னார்நட மாடு தில்லை
    விரைபொங்கிய சோலை விராவு குடந்தை யாரூர்
    வரையென்றயிர் மாட நிலாவுவண் காஞ்சி காசி
    புரையின்றுயர் சேது முதற்பல போற்றச் சென்றான்.

    26

    1241

    வேறு
    அன்ன செவ்வி யறிந்தொரு தானவ னாண்மையான்
    கன்ன சூல னெனக்கரை யப்படு நாமத்தான்
    வன்னி யோம்பி மனுக்கணித் தந்தணர் மல்கிய
    பொன்னி நாடுதன் றாட்படுத் தாணை புதுக்கினான்.

    27

    1242

    இனைய செய்கை நிகழ்ந்துழி யீர்ம்பனி மால்வரை
    தனையை யம்மலைச் சாரலிற் றன்னுயிர் நாயகன்
    புனைபு கழ்க்கழற் பூசனை யாற்றுந ளேவல்செய்
    நனைம லர்க்குழ லாரொரு நால்வர் மூவரும்

    28

    1243

    மாத ரன்னவ ரோர்தினம் வைகறை ஆர்மதுப்
    போது கொய்யப் புகுந்தனர் நந்தவ னத்திடை
    ஓத ருங்கவி னுற்றவன் காந்தரு வன்புகக்
    காதல் கொண்டு கலங்கினர் மாத ரெழுவரும்

    29

    1244

    நெடிது போது கலங்கிய நெஞ்ச நிறுத்தினர்
    கடிவி ராவிய பன்மலர் கொய்து கடுகினார்
    வடிகொள் சூலத்தர் பூசைசெய் காலம் வழுக்கலில்
    தொடியி னார்செயல் யாதெனப் பார்ப்பதி சூழ்ந்தனள்

    30

    1245

    நெகிழ்ந்த வுள்ளத்த ராகிமுன் னேர்ந்த வொருத்தனை
    மகிழ்ந்து காமுற்று மாழ்கின ரென்று மதித்தனள்
    முகிழ்ந்த பூண்முலை யீர்முதல் வன்பணி தாழ்த்தினிர்
    தெகிழ்ந்த காமத்துச் சிந்தனை செய்தனி ராதலான்.

    31

    1246

    தோற்றி மானுட மாதர்க ளாய்த்தொகு கற்புநூல்
    ஆற்றி னீங்கி யநங்கன் பதாகையன் னீர்நுமக்
    கேற்ற வாறு நடக்குக வென்று சபித்தனள்
    கோற்றொ டிக்கைக் குவிமுலைக் கூர்விழிப் பார்ப்பதி.

    32

    1247

    அஞ்சி லோதியம் மேநின தேவன்மிக் காற்றினேம்
    வஞ்ச மானுட ராகி மயங்குது மோவெனக்
    கஞ்ச நேர்பதங் கையிணை கூப்பி யிறைஞ்சினார்
    நெஞ்சு துட்கென வஞ்சுபு நேரிழை மாதரார்.

    33

    1248

    வேறு
    ஆர்ங்க டித்துண ரணிந்தவ ரிடப்பா
          லமர்ந்த நாயகி திருவருள் வழங்கிப்
    பீர்ங்கொ டிப்புது மலர்நிகர் நிறத்தீர்
          பேதுற் றஞ்சலிர் சீரங்க வரைப்பிற்
    சார்ங்க பாணியை வழிபடு மறையோன்
          சார்ங்க நன்முனி யெனும்பெய ருடையாற்
    கீர்ங்க ளோதியள் சந்திர வதியென்
          றியம்பு மாதராளில்லறம் பூண்டாள்.

    34

    1249

    நீர்ர் போயவண் மக்களா யுதித்து நிறைந்த போகங்க ணுகர்ந்திடு நாளிற்
    காயி லைக்கதிர் வேலுடைக் கரிகாற் காவ லன்கொலைப் பழிதனைக் கழுவ
    மாயி ரும்புவி முழுவது முய்ய வயங்கு வெள்ளியம் பலத்துணின் றாடுந்
    தீயி னன்னசெம் மேனியர் பேரூர் செல்லு வானும திரும்பதி வருமால்.

    35

    1250

    வந்த கோமக னுடனவ ணேகி வார்ந்த பூம்புனற் காஞ்சிமா நதியின்
    அந்த மாதியு மில்லவர் பாத மகத்து ணாடிநன் காடிமா னுடமாம்
    பந்த நீங்கியீண் டுறுகவென் றருளப் பசும்பொற் பூண்முலை மாதரவ் வாறே
    அந்த மார்பொழிற் சீரங்க வரைப்பிற் கலந்து மன்னவன் வரவுபார்த் திருந்தார்.

    36

    1251

    வேறு
    அந்தணர் விதியாற்றா னலைதவழ் பலதீர்த்த
    மந்திர நவின்வின்றாடி வளம்பயி றலந்தோறுஞ்
    சுந்தர வெண்ணீறு துலங்கிய திருமேனி
    எந்தையை வழிபட்டா னிலங்கயிற் கரிகாலன்.

    37

    1252

    குலவிய தலந்தோறுங் குறுகினன் வழிபட்டு
    மலமரு துயர்செய்யு மரும்பழி கழியாமே
    கலதிசெய் திடவுள்ளங் கவலையங் கடலாழ்ந்து
    நலனொடு புணர்நாளு நணுகுங்கொ லெனநைந்தான்.

    38

    1253

    நலிகெழு துயர்தேர்ந்து நாரத முனிசென்றான்
    வலிகெழு திரடிண்டோள் மன்னவன் கரிகாலன்
    ஒலிகெழு துதிசெப்பி யொண்சரண் முடிதாழ்த்தான்
    கலிகெழு மறைநாவன் கரிசற மொழிகிற்பான்.

    39

    1254

    மன்னவர் திறைவாங்கு மானவ கரிகால
    நின்னுளம் வெருவற்க நீடிய துயர்நீவி
    நன்னெறி தருசூழ்ச்சி நவிலுது மினிக்கேண்மோ
    என்னுள மகலாத விருந்தல மொன்றுண்டால்.

    40

    1255

    பிப்பில வனமென்றும் பேசுமப் பேரூரின்
    ஒப்பறு நதிகாஞ்சி யொழுகுவ தந்நீரின்
    முப்புரி மணிமார்பர் மொழிமறை யுளியாடி
    அப்பணி சடையார்தம் மடிதொழு கெனப்போனான்.

    41

    1256

    முனிவர னருள்செய்த மொழியுறு தியிற்பற்றி
    வனிதையர் மயல்கூரும் வனப்புடைக் கரிகாலன்
    புனிதமங் கலமல்கப் பூம்பணைப் பேரூரிற்
    கனிமொழி யுமைபாகன் கழறொழ வழிக்கொண்டான்.

    42

    1257

    சந்தனக் குறடுந்தித் தபனியப் பொடிசிந்திக்
    கொந்தலர் மலர்வாரிக் குளிர்நிறை காவேரி
    வந்திரு புடையுந்தண் வார்கழ றொழுநீலக்
    கந்தரத் தினரானைக் காவினைத் தொழப்புக்கான்.

    43

    1258

    மன்னவன் கரிகாலன் வரவினை யினிதோரா
    இன்னகைத் துவர்ச்செவ்வா யிடுகிடை யெழுமாதர்
    முன்னினர் தஞ்செய்கை மொழிந்தன ரிதுவோநம்
    அன்னைய தருளென்னா வகமகிழ் வினனானான்.

    44

    1259

    மாதவ னமக்குய்த்த வண்மொழிக் கிழுக்கில்லை
    மாதவன் வலமேய வரதர்தம் மிடநீங்கா
    மாதவ ளருள்செய்த வகையிது வெனவெழுவர்
    மாதர்சொற் றலினென்னா மகிழ்வுறு கரிகாலன்.

    45

    1260

    சிவிகைக ளெழுவர்க்குஞ் சேர்த்தினன் கொடுபோந்து
    கவியொடு முசுவுகளக் கனியுகு பூஞ்சோலைக்
    கவிழிணர் மலர்வாசங் காவதம் பலகமழும்
    அவிர்மணி நெடுமாடத் தாதியம் புரிசேர்ந்தான்.

    46

    1261

    கழுமல்செய் கொலைச்சாயை கழிகெனச் சங்கற்பஞ்
    செழுமறை முறையாற்றாற் செய்துயர் கரிகாலன்
    ஒழுகுதண் புனற்காஞ்சி யுந்தியிற் படிவுற்றான்
    முழுகினர் வருசாப முடிகென வெழுவோரும்.

    47

    1262

    ஆர்த்தினர் மணிசெம்பொன் னாடைகள் கதிர்ப்பைம்பூண்
    தூர்த்தனர் குருச்செங்கட் சுரபிகன் னியர்மற்றும்
    பார்த்தலை யிரப்போர்க்கும் பரமர்த மடியார்க்கும்
    ஓர்த்துணர் மறையோர்க்கு முரைத்தவெண் மருமாதோ.

    48

    1263

    கோயிலை யெண்மர்களுங் குறுகினர் பலநல்கிப்
    பாயின கலையல்குற் பசுமர கதவல்லி
    மேயினள் பிரியாத விகிர்தனை யடியார்க்குத்
    தாயினு மினியானைச் சயசய வெனத்தாழ்ந்தார்.

    49

    1264

    அகன்றது கொலைச்சாயை யரையனுக் கெழுமாதர்க்
    ககன்றது வருசாப மரமக ளிர்களானார்
    அகன்றழை மகிழ்பொங்க வாடினர் பலபாடி
    அகன்றரை யரசாளு மண்ணலு மடவாரும்.

    50

    1265


    அத்தின முணவோம்பி யடுதுயி லிரவெள்ளித்
    தத்தலை நெடுவேலைத் தழற்கதி ரெழுகாலைப்
    பைத்தெழு நதியாடிப் பவமது வாராமே
    நித்திய னருள்பெறுமா நினைந்தன ரிதுசெய்தார்.

    51

    1266

    மண்டப நிருமித்து மண்டில மெழிற்குண்டங்
    கண்டழல் வளர்வித்துக் காவலன் மடவாருங்
    கொண்டிரு சிவலிங்கங் குரைபுன னதிப்பாங்கர்
    எண்டிசை களுமுய்ய விருத்தினர் பூசித்தார்.

    52

    1267

    மருக்கிளர் மலர்சாந்த மஞ்சன மொளிதூபந்
    திருக்கிளர் கலனாடை திருவமு திவைமற்றும்
    ஒருக்கிய மனத்தானுய்த் துறுமுறை பூசிப்ப
    எருக்கணி பெருமானா ரெதிரவர்க் கெளிவந்தார்.

    53

    1268

    மான்மழுக் கரம்வைக வார்சடை மிளிர்கிற்பக்
    கான்மரு வியகூந்தற் காரிகை யிடமாக
    வான்முது கிடைத்தோற்று மமலனை யெதிர்நோக்கி
    வேன்மருள் விழிமாதர் வேந்தனோ டடிவீழ்ந்தார்.

    54

    1269

    வேண்டிய வரமென்னே விளம்புதி ரெனமுன்வந்
    தாண்டருள் பெருமானா ரருளலு மவர்விள்வார்
    மாண்டவல் வினைத்துன்பம் வருவது பிறவியினா
    மீண்டினிப் பிறவாத நெறியெமக் கருளென்றார்.

    55

    1270

    அந்தியின் மதிவேய்ந்த வழகரங் கருள்செய்வார்
    இந்தவைப் பிடையெம்மை யேத்துநர் பிறவார்கள்
    நுந்தரத் தினுமந்த நோன்மைகொள் வரஞ்சாலத்
    தந்தன மிதற்கான சான்றுமிங் குளவன்றே.

    56

    1271

    வித்தது முளையாத மேதகு புளியொன்றொன்
    றத்தகு சித்தேச மரமவை முறையானே
    உத்தர கயிலையினு மோங்குநம் மாலயத்தும்
    உத்தம நெறிநின்றீ ரோங்கின வறிகென்றார்.

    57

    1272

    அருளிய வரம்பெற்றங் கருட்பணி பலவாற்றி
    முருகுயிர் மலர்க்கொன்றை முடியவர் விடைபெற்றார்.
    ஒருவிய வுமைதன்பா லுற்றேழு மாதர்களுந்
    திருவிய லவளேவல் செய்தனர் வாழ்கின்றார். 8

    58

    1273

    பரிசனம் பலசூழப் படைபல புடைசூழ
    உரிய தனாடெய்தி யொன்னலன் முடிவீட்டிக்
    கரிசறு செங்கோலிற் கடலுல களித்திட்டான்
    வரிகழற் கழன்மன்னர் மன்னவன் கரிகாலன்.

    59

    1274

    வேறு
    அறமா தரிக்குங் கரிகால வரையன் றனக்கு மாதருக்கும்
    பிறவா நெறிதந் தருளுதலாற் பெருநீர்க் காஞ்சி நதிதனக்கும்
    உறவா யுயிர்கட் கருள்சுரக்கு முமையாள் கொழுநன் பேரூர்க்கு
    மறவா துரைக்கு மூவுலகும் வழங்கும் பிறவா நெறிநாமம்.

    60

    1275

    கள்ளு மறுகாற் புள்ளினமுங் கஞலு மலரு நவமணியுந்
    தெள்ளு நிறைநீர் நதிக்காஞ்சித்தீர்த்தத் திடையே கரிகால
    வள்ளல் படிந்த துறைதனக்கு வழங்கு நாம மனத்தகத்துத்
    தொள்ளை யகன்ற வையகத்தோர் சோழன் றுறையென் றுரைப்பாரால்.

    61

    1276

    பிறவா நெறியிற் படிந்திருக்கும் பேரன் புடையார்க் கேயன்றிப்
    பிறவா நெறியென் றுரைத்தவர்க்கும் பிறவா நெறிதந் தருளுமெனப்
    பிறவா நெறியின் றிறந்தெரித்துப் பிறங்கு சூதன் முனிவரர்க்குப்
    பிறவா நெறியார் பள்ளனுமாம் பெற்றி தெரிய வகுத்துரைப்பான்.

    62

    கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்த்த படலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் – 1276

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home