சிவாயம் அஞ்செழுத்திலே
தெளிந்துதேவ ராகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள் சிவாயம் அஞ்செழுத்துளே
தெளிந்துகொள்ளும் உண்மையே.
|
201 |
பொய்க்குடத்தில்
ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் இச்சடமும் இந்திரியமும் நீருமேல்
அலைந்ததே அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல் இச்சடம்
சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே.
|
202 |
பட்டமும் கயிறுபோல்
பறக்கநின்ற சீவனைப் பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;
திட்டவும் படாதடா, சீவனை விடாதடா கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
|
203 |
அல்லிறந்து பகலிறந்து
அகப்பிரமம் இறந்துபோய் அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச் சொல்லியாற என்னில்வேறு
துணைவரில்லை ஆனதே.
|
204 |
ஐயிரண்டு திங்களாய்
அடங்கிநின்ற தூமைதான்; கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும் துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற
தூமையே.
|
205 |
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று
எழுத்தினும் சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும் பங்குகொண்ட யோகிகள்
பரமவாசல் அஞ்சினும் சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே.
|
206 |
அசவை - அசுபா மந்திரம்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும்
மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்; அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து
அவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே.
|
207 |
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக
மங்களும் மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை ஏதுபுக்
கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ? சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.
|
208 |
அக்கரம் அனாதியோ, ஆத்துமா
அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ? தக்கமிக்க
நூல்களும் சதாசிவம் அனாதியோ? மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே.
|
209 |
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள்
இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான
பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில்
ஆழ்ந்தமைந்து இருப்பதே.
|
210 |
அள்ளிநீரை இட்டதேது?
அங்கையில் குழைந்ததேது? மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது? மெள்ளவே குருக்களே,
விளம்பிடீர் விளம்பிடீர்.
|
211 |
அன்னைகர்ப்பத் தூமையில்
அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே; உன்னிதொக்
குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும்
பித்தரே.
|
212 |
அழுக்கறத் தினங்குளித்து
அழுக்கறாத மாந்தரே, அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம்.
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கிலாதது சோதியோடு
அணுகிவாழ லாகுமே.
|
213 |
அணுத்திரண்ட கண்டமாய்
அனைத்துபல்லி யோனியாய் மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய் நினைப்பதுஏது? நிற்பதுஏது;
நீர்நினைந்து பாருமே.
|
214 |
ஆதியாகி அண்டரண்டம்
அப்புறத்தும் அப்புறம் சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள், சாதிபேதம் என்பதொன்று
சற்றுமில்லை இல்லையே!
|
215 |
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா
ரணத்திலே நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய் ஏக்கறுத்தி
ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல் பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம்
பரப்பிரம்மம் ஆகுமே.
|
216 |
அஞ்சும்அஞ்சும்
அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே
அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.
|
217 |
அஞ்செழுத்தி னாதியாய்
அமர்ந்துநின்றது ஏதடா? நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான்
பிரித்துரைக்க வேண்டுமே.
|
218 |
உயிரிருந்தது எவ்விடம்?
உடம்பெடுப்பு தன்முனம்? உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா? உயிரையும்
உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா? உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி
சொல்லடா.
|
219 |
சுழித்தவோர் எழுத்தையும்
சொன்முகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே ஆறுபங்க யம்கலந்து அப்புறத்
தலத்துளே.
|
220 |
உருத்தரிப்ப தற்குமுன்
உயிர்புகுந்த நாதமும் கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம் குறித்தறிந்து கொள்ளுவீர்
குணங்கெடும் குருக்களே.
|
221 |
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல்
புகுந்தபின் பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார் எங்கள்தெய்வம்
உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ? உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு
இல்லையே?
|
222 |
அரியுமாகி அயனுமாகி
அண்டமெங்கும் ஒன்றதாய்ப் பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே, அறிவினோடு பாரும்இங்கும் அங்கும்
ஒன்றதே.
|
223 |
வெந்தநீறு மெய்க்கணிந்து
வேடமும் தரிக்கிறீர் சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம்
முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ, எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து
இயங்குமே?
|
224 |
அகாரகார ணத்திலே அனேகனேக
ரூபமாய் உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன் மகாரகார ணத்திலே
மயங்குகின்ற வையகம் சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.
|
225 |
அவ்வெழுத்தில் உவ்வுவந்து
அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும் மிவ்வையொத்த ஞானிகாள்,
விரித்துரைக்க வேணுமே.
|
226 |
மிவ்வை - நற்குணம்
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும் சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற
ரெண்டிலும் நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை ஆதியான தொன்றுமே
அற்றதஞ் செழுத்துமே.
|
227 |
வானிலாதது ஒன்றுமில்லை
வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமில்லை
தயங்கி ஆடுகின்றதே!
|
228 |
சுழித்ததோர் எழுத்தைஉன்னி
சொல்லுமுகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து
வெளியிலே.
|
229 |
விழுத்தகண் குவித்தபோ
தடைந்துபோய் எழுத்தெலாம் விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை
யாருமில்லை ஆனதே.
|
230 |
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி
ஓடுறீர் நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே எல்லைமஞ்
சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால் தில்லைமேவும் சவனும் சிவபதத்துள் ஆடுமே.
|
231 |
உயிர்அகத்தில் நின்றிடும்
உடம்பெடுத்த தற்குமுன் உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம் உயிரினால் உடம்புதான்
எடுத்தவாறு உரைக்கினேன்.
|
232 |
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி
உழலவே பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே எண்திசை கடந்துநின்ற
இருண்டசத்தி உழலவே அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.
|
233 |
உருவநீர் உறுப்புகொண்டு
உருத்தரித்து வைத்திடும் பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து
கொள்ளுமே.
|
234 |
பண்ணிவைத்த கல்லையும்
பழம்பொருள் அதென்றுநீர் எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த
ஒன்றைநெஞ்சில் உண்ணுமே.
|
235 |
நாலதான போனியும்
நவின்றவிந்தும் ஒன்றதாய் ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் மேலதான ஞானிகாள் விரித்துரைக்க
வேணுமே.
|
236 |
அருவமாய் இருந்தபோது
அன்னைஅங்கு அறிந்திலை உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம் பருவமான போதலோ பரப்பிரமம்
ஆனதே.
|
237 |
பிறப்பதும் இறப்பதும்
பிறந்திடாது இருப்பதும் மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும் பிறப்பதும் இறப்பதும்
பிறந்தவீடு அடங்குமே.
|
238 |
கண்ணிலே இருப்பனே கருங்கடல்
கடைந்தமால் விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே தன்னுளே இருப்பனே
தராதலம் படைத்தவன் என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே.
|
239 |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை
தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ? ஓடிஇட்ட
பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து
நிற்குமே.
|
240 |
எள்இரும்பு கம்பளி
இடும்பருத்தி வெண்கலம் அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால் மெள்ளவந்து நோய் அனைத்தும்
மீண்டிடும் சிவாயமே.
|
241 |
ஊரிலுள்ள மனிதர்காள்
ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும்
பாருமே.
|
242 |
மருள்புகுந்த சிந்தையால்
மயங்குகின்ற மாந்தரே குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும் பருத்திபட்ட பன்னிரண்டு
பாடுதான் படுவரே.
|
243 |
அன்னைகர்ப்ப அறைஅதற்குள்
அங்கியின்பிர காசமாய் அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய் தங்கநற் பெருமைதந்து
தலைவனாய் வளர்ந்ததே.
|
244 |
உன்னையற்ப நேரமும்
மறந்திருக்க லாகுமோ உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்
பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே பொன்னடிப் பிறப்பில்லாமை
என்றுநல்க வேணுமே.
|
245 |
பிடித்ததண்டும் உம்மதோ
பிரமமான பித்தர்காள் தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல் திடுக்கமுற்ற ஈசனைச்
சென்றுகூட லாகுமே.
|
246 |
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின்
ஓசைநீ சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ முத்திநீ முதலும்நீ
மூவரான தேவர்நீ அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
|
247 |
சட்டையிட்டு மணிதுலங்கும்
சாத்திரச் சழக்கரே பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம் பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?
|
248 |
உண்மையான சுக்கிலம் உபாயமாய்
இருந்ததும் வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும் தண்மையான காயமே
தரித்துஉருவம் ஆனதும் தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
|
249 |
வஞ்சகப் பிறவியை மனத்துளே
விரும்பியே அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள் வஞ்சகப்
பிறவியை வதைத்திடவும் வல்லீரேல் அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள
லாகுமே.
|
250 |
காயிலாத சோலையில் கனியுகந்த
வண்டுகள் ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர் பாயிலாத கப்பலேறி
அக்கரைப் படுமுனே வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.
|
251 |
பேய்கள்பேய்கள் என்கிறீர்
பிதற்குகின்ற பேயர்காள், பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ காயமான பேயலோ கணக்கறிந்து
கொண்டதே.
|
252 |
மூலமண்ட லத்திலே முச்சதுரம்
ஆதியாய் நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம் கோலிஎட்டு இதழுமாய்
குளிர்ந்தலர்ந்த தீட்டமாய் மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.
|
253 |
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை
நீரிலே சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி ஆதிகூடி நெற்பறித்தது
அகாரமாதி ஆகமம் பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.
|
254 |
பாங்கினோடு இருந்துகொண்டு
பரமன்அஞ் செழுத்துளே ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில் ஆய்ந்தநூலில்
தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே.
|
255 |
புண்டரீக மத்தியில்
உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல் கண்டகோயில் தெய்வம்என்று
கையெடுப்ப தில்லையே.
|
256 |
புண்டரீகம் - தாமரை
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி
வீரனே அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே உம்பருக்கு உண்மையாய்
நின்றஉண்மை உண்மையே.
|
257 |
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த
மந்திரம் தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன் கண்ணனாக வந்ததன் காரணத்
துதித்தவன் ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்?
|
258 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி
நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்? உள்ளதும்
புறம்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம்.
|
259 |
ஆரலைந்து பூதமாய் அளவிடாத
யோனியும் பாரமான தேவரும் பழுதிலாத பாசமும் ஓரொணாத அண்டமும் உலோகலோக
லோகமும் சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே?
|
260 |
என்னகத்துள் என்னைநான்
எங்குநாடி ஓடினேன்? என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின் என்னகத்துள் என்னைஅன்றி
யாதுமொன்று மில்லையே.
|
261 |
விண்ணினின்று மின்னெழுந்து
மின்னொடுங்கு மாறுபோல் என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக்
கையால் கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால் என்னுள்நின்ற
என்னையும் யானறிந்தது இல்லையே.
|
262 |
அடக்கினும் அடக்கொணாத
அம்பலத்தின் ஊடுபோய் அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும் நடக்கினும் இடைவிடாத
நாதசங் கொலிக்குமே.
|
263 |
மட்டுலாவு தண்துழாய்
அலங்கலாய் புனற்கழல் வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக் கட்டிவீடி லாதுவைத்த
காதலின்பம் ஆகுமே.
|
264 |
ஏகமுத்தி மூன்றுமுத்தி
நாலுமுத்தி நன்மைசேர் போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி
தேவனே.
|
265 |
மூன்றுமுப்பது ஆறினோடு
மூன்றுமூன்று மாயமாய் மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய் ஏன்றெனாவின் உள்புகுந்த
தென்கோலோ நம்ஈசனே.
|
266 |
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
அல்லவற்றுள் ஆயுமாய் ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை
யாவர்காண வல்லரே.
|
267 |
ஆறும்ஆறும் ஆறுமாய்
ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும்
எட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறும்ஓசை
யாய்அமர்ந்த மாயமாம் மாயனே.
|
268 |
எட்டும்எட்டும் எட்டுமாய்
ஓர்ஏழும் ஏழுமாய் எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே எட்டெழுத்தும் ஓதுவார்கள்
அல்லல்நீங்கி நிற்பரே.
|
269 |
பத்தினோடு பத்துமாய்
ஓர்ஏழினோடு ஒன்பதாய் பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்
பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால் பத்தர்கட் கலாதுமுத்தி
முத்திமுத்தி யாகுமே.
|
270 |
வாசியாகி நேசம்ஒன்றி
வந்தெதிர்த்த தென்னுக நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில் வீசிமேல்
நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல் ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல்
ஆகுமே.
|
271 |
எளியதாக காயமீதில் எம்பிரான்
இருப்பிடம் அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும் கொளுகையான சோதியும்
குலாவிநின்றது அவ்விடம் வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.
|
272 |
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்
என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும்
அப்பொருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே.
|
273 |
பொய்யுரைக்க போகமென்று
பொய்யருக் கிருக்கையால் மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க்
கிலாமையால் வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன் நையவைத்தது
என்கொலோ நமசிவாய நாதனே!
|
274 |
ஒன்றைஒன்று கொன்றுகூட
உணவுசெய்து இருக்கினும் மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல் அன்றுதேவர் உம்முளே
அறிந்துணர்ந்து கொள்ளுமே.
|
275 |
மன்று - கடை
மச்சகத்
துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக்
கொள்விரேல் இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே அச்சகத்
துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின்.
|
276 |
வயலிலே முலைத்தநெல் களையதான
வாறுபோல் உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே விரகிலே
முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய் நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட
பாடதே.
|
277 |
விரகு - விரகதாபம்
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர் தேடுகின்ற பாவிகாள்,
தெளிந்தஒன்றை ஓர்கிலீர்; காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
|
278 |
ஆடுகின்ற அண்டர்கூடும்
அப்புறம திப்புறம் தேடுநாலு வேதமும் தேவரான மூவரும் நீடுவாழி பூதமும்
நின்பதோர் நிலைகளும் ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே.
|
279 |
ஆவதும் பரத்துளே அழிவதும்
பரத்துளே போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே தேவரும் பரத்துே
திசைகளும் பரத்துளே யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே.
|
280 |
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு
வெற்புடன் சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும் ஆழிமால்
விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும் ஊழியான் ஒளிக்குளே உதித்துடன்
ஒடுங்குமே.
|
281 |
கயத்துநீர் இறைக்குறீர்
கைகள்சோர்ந்து நிற்பதேன்? மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல் நினைத்திருந்த சோதியும்
நீயும்நானும் ஒன்றலோ?
|
282 |
நீரிலே பிறந்திருந்து
நீர்சடங்கு செய்கிறீர் ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும் சீரைஉன்ன வல்லீரேல்
சிவபதம் அடைவிரே.
|
283 |
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல
வக்கரம் முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே மத்தசித்த
ஐம்புலன் மாகரமான கூத்தையே அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே.
|
284 |
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத
சோதியைக் குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம் முணமுணென்று
உம்முளே விரலைஒன்றி மீளவும் தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.
|
285 |
மூலமான அக்கரம் முகப்பதற்கு
முன்னெலாம் மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே காலனான அஞ்சுபூதம்
அஞ்சிலே ஒடுங்கினால் ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?
|
286 |
முச்சதுர மூலமாகி முடிவுமாகி
ஏகமாய் அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய் மெய்ச்சதுர மெய்யுளே
விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே.
|
287 |
வண்டுலங்கள் போலும்நீர்
மனத்துமாசு அறுக்கிலீர் குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான், கண்டிருக்கும் உம்முளே
கலந்திருப்பர் காணுமே.
|
288 |
நின்றதன்று இருந்ததன்று
நேரிதன்று கூறிதன்று பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே
உரைப்பதே.
|
289 |
பொருந்துநீரும் உம்முளே
புகுந்துநின்ற காரணம் எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர் குருவிருந்து உலாவுகின்ற
கோலம்என்ன கோலமே?
|
290 |
அம்பரத்துள் ஆடுகின்ற
அஞ்செழுத்து நீயலோ? சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் எம்பிரானும் நானுமாய்
இருந்ததே சிவாயமே.
|
291 |
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது
தற்பரம் ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர் காரொளிப் படலமும்
கடந்துபோன தற்பரம் தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.
|
292 |
கொள்ளொணாது மெல்லொணாது
கோதாறக் குதட்டடா தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே தெள்ளொணாது
தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது
எங்ஙனே?
|
293 |
வாக்கினால் மனத்தினால்
மதித்தகார ணத்தினால் நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில் நோக்கொணாத நோக்குவந்து
நோக்கைஎங்கண் நோக்குமே.
|
294 |
உள்ளினும் புறம்பினும்
உலகமெங்கணும் பரந்து எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின் வள்ளலென்ன
வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே?
|
295 |
வேதமொன்று கண்டிலேன்
வெம்பிறப்பு இலாமையால் போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய் ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே
சிவாயமே.
|
296 |
சாண்இரு மடங்கினால்
சரிந்தகொண்டை தன்னுளே பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல் காணிகண்டு கோடியாய்க் கலந்ததே
சிவாயமே.
|
297 |
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே
அடங்கினால் நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே அஞ்சுநாலு
மூன்றதாகி உம்முளே அடங்கினால் அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.
|
298 |
அக்கரந்த அக்கரத்தில்
உட்கரந்த அக்கரம் சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான் உள்கரந்து நின்றநேர்மை
யாவர்காண வல்லரே.
|
299 |
ஆகமத்தின் உட்பொருள்
அகண்டமூலம் ஆதலால் தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம்
வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.
|
300 |
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம்
ஆகியே நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம் கோலம்ஒன்றும்
அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.
|
301 |
சுக்கிலத் தடியுளே
சுழித்ததோர் எழுத்துளே அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ உக்கரத்
தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.
|
302 |
குண்டலத்து ளேயுளே
அறுத்தகத்து நாயகன் கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் கண்டுகொண்ட மண்டலம்
சிவாயமல்லது இல்லையே.
|
303 |
சுற்றும்ஐந்து கூடமொன்று
சொல்லிறந்த தோர்வெளி சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம் பித்தர்காள் அறிந்திலீர்
பிரான்இருந்த கோலமே.
|
304 |
மூலம்என்ற மந்திரம் முளைத்த
அஞ்செழுத்துளே நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே ஆலம்உண்ட
கண்டனும் அரிஅயனும் ஆதலால் ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.
|
305 |
தத்துவங்கள் என்றுநீர்
தமைக்கடிந்து போவீர்காள் தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?
முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின் அத்தனாரும் உம்முளே
அறிந்துணர்ந்து கொள்ளுமே.
|
306 |
மூன்றுபத்து மூன்றையும்
மூன்றுசொன்ன மூலனே தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை என்றுவைத்த
வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும் தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி
காணுமே.
|
307 |
உம்பர் வானகத்தினும் உலகபாரம்
ஏழினும் நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும் செம்பொன் மாடம்
மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான் எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை
இல்லையே.
|
308 |
பூவலாய் ஐந்துமாய்
புனலில்நின்ற நான்குமாய் தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய் நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண
வல்லரே?
|
309 |
அந்தரத்தில் ஒன்றுமாய்
அசைவுகால் இரண்டுமாய் செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச் சிந்ததையில் தெளிந்தமாயை
யாவர்காண வல்லரே.
|
310 |
மனவிகாரம் அற்றுநீர்
மதித்திருக்க வல்லீரேல் நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்;
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல் கனவுகண்டது உண்மைநீர்
தெளிந்ததே சிவாயமே.
|
311 |
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு
வேதம் ஏதடா? சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா? முட்டிநின்ற
தூணிலே முளைத்தெழுந்த சோதியைப் பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
|
312 |
நீரிலே முளைத்தெழுந்த
தாமரையின் ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் பாரிலே
முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம் பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு
இருப்பீரே.
|
313 |
உறக்கிலென், விழிக்கிலென்,
உணர்வுசென்று ஒடுங்கிலென் சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள்
ஒன்றிலென்? புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே.
|
314 |
ஓதுவார்கள் ஓதுகின்ற
ஓர்எழுத்தும் ஒன்றதே வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே! ஏதுமின்றி நின்றதொன்றை
யான்உணர்ந்த நேர்மையே
|
315 |
பொங்கியே தரித்தஅச்சுப்
புண்டரீக வெளியிலே தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம் அங்கியுள்
சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த
கோலமே.
|
316 |
மண்ணுளோரும் விண்ணுளோரும்
வந்தவாறது எங்கெனில் மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும் மண்ணினோடு கொடுத்தழிப்
பாரொடேழும் இன்றுமே.
|
317 |
ஒடுக்குகின்ற சோதியும்
உந்திநின்ற ஒருவனும் நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் அடுத்துநின்ற அறிமினோ
அனாதிநின்ற ஆதியே.
|
318 |
உதித்தமந் திரத்தினும்
ஒடுங்கும் அக்கரத்தினும் மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,
மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின் சிரித்தமண் டலத்துளே சிறந்ததே
சிவாயமே.
|
319 |
திருத்திவைத்த சற்குருவைச்
சீர்பெற வணங்கிலீர் குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும் பருத்திபட்ட
பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.
|
320 |
விழித்தகண் துதிக்கவும்
விந்துநாத ஓசையும், மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே யானும்நீயு மேகலந்த
தென்னதன்மை ஈசனே.
|
321 |
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று
அறிந்தபின், பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின், நானும்நீயும்
உண்டடா நலங்குலம் அதுஉண்டடா, ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே.
|
322 |
ஐம்புலனை வென்றவர்க்கு
அன்னதானம் ஈவதால் நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ ஐம்புலனை
வென்றிடாது அவத்துமே உழன்றிடும் வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும்
அவத்தமே.
|
323 |
ஆணியான ஐம்புலன்கள்
அவையும்மொக்குகள் ஒக்குமோ? யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல் ஊண்உறக்க போகமும்
உமக்கெனக்கும் ஒக்குமே.
|
324 |
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ்
செழுத்துளே நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள் கூடுகின்ற பண்டித
குணங்கள்மூன்று எழுத்துளே ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.
|
325 |
புவனசக்க ரத்துளே பூதநாத
வெளியிலே, பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத் தவனசோமர்
இருவரும் தாம்இயங்கும் வாசலில் தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.
|
326 |
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி
மெள்ளவே வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின் அவனும்நானும்
மெய்கலந்து அனுபவித்த அளவிலே அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.
|
327 |
வாளுறையில் வாளடக்கம்
வாயுறையில் வாய்வடக்கம் ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும் நாளுறையில் நாளடக்கம் நானும்
நீயும் கண்டதே.
|
328 |
வழுத்திடான் அழித்திடான்
மாயரூபம் ஆகிடான் கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான் சுவன்றடான் உரைத்திடான்
சூட்சசூட்ச சூட்சமே.
|
329 |
ஆகிகூவென் றேஉரைத்த
அட்சரத்தின் ஆனந்தம் யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய் ஏகம்ஏக மாகவே
இருப்பர்கோடி கோடியே.
|
330 |
கோடிகோடி கோடிகோடி
குவலயத்தோர் ஆதியை நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த் தேடிதேடி
தேடிதேடித் தேகமும் கசங்கியே கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே.
|
331 |
கருத்திலான் வெளுத்திலான்
பரன்இருந்த காரணம் இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் கருத்தில்கீயும்
கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.
|
332 |
வாதிவாதி வாதிவாதி வண்டலை
அறிந்திடான் ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான் வீதிவீதி வீதிவீதி
விடைஎருப் பொறுக்குவான் சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான்.
|
333 |
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை
ஆண்மைகூறும் அசடரே காண்மையான வாதிரூபம் காலகால காலமும் பாண்மையாகி
மோனமான பாசமாகி நின்றிடும் நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும்
அங்குமே.
|
334 |
மிங்குஎன்ற அட்சரத்தின்
மீட்டுவாகிக் கூவுடன் தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால் கங்குலற்றுக் கியானமுற்றுக்
காணவாய் சுடரொளி.
|
335 |
சுடரெழும்பும் சூட்சமும்
கழிமுனையின் சூட்சமும் அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும் கடலெழும்பு சூட்சமும்
கண்டறிந்தோன் ஞானியே.
|
336 |
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள்
கோடிகோடியே வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே தானிலா சாகரத்தின்
தன்மைகாணா மூடர்கள் மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
|
337 |
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச்
சுடரிலே வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே கூச்சமான கொம்பிலே
குடிஇருந்த கோவிலே தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.
|
338 |
பொங்கிநின்ற மோனமும்
பொதிந்துநின்ற மோனமும் தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும் திங்களான மோனமும் சிவனிருந்த
மோனமே.
|
339 |
மோனமான வீதியில்
முனைச்சுழியின் வாலையில் பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில், ஓனமான செஞ்சுடர் உதித்ததே
சிவாயமே.
|
340 |
உதித்தெழுந்த வாலையும்
உயங்கிநின்ற வாலையும் கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும் கொதித்தெழுந்து கும்பலாகி
கூவும்கீயும் ஆனதே.
|
341 |
கூவும்கீயும் மோனமாகி
கொள்கையான கொள்கையை மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே
நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம் ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே.
|
342 |
ஆண்மைகூறும் மாந்தரே
அருக்கனோடும் வீதியை காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே நாண்மையான வாயிலில் நடித்துநின்ற
நாதமே.
|
343 |
நாதமான வாயிலில் நடித்துநின்ற
சாயலில் வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே கீதமான கீயிலே
கிளர்ந்துநின்ற கூவிலே பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.
|
344 |
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின்
ஆவியே மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர் வாவிவாவி வாவிவாவி
வண்டர்கள் அறிந்திடார் பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.
|
345 |
வித்திலே முளைத்தசோதி
வில்வளையின் மத்தியில் முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே நத்திலே
திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார் வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.
|
346 |
மாலையோடு காலையும்
வடிந்துபொங்கும் மோனமே மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே மூலையான
கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர் தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
|
347 |
மோனமான வீதியில் முடுகிநின்ற
நாதமே ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே கானமான மூலையில் கனிந்திருந்த
வாலையில் ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.
|
348 |
உச்சிமத்தி வீதியில்
ஒழிந்திருந்த சாதியில் பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.
|
349 |
அஞ்சுகொம்பில் நின்றுநாதம்
ஆலைபோல் எழும்பியே பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.
|
350 |
சடுதியான கொம்பிலே
தத்துவத்தின் இயலிலே அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே இடுதிஎன்ற
சோலையில் இருந்தமுச் சுடரிலே நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே.
|
351 |
அமையுமாலின் மோனமும்
அரன்இருந்த மோனமும் சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும் தமையறிந்த மாந்தரே
சடத்தைஉற்று நோக்கிலார்.
|
352 |
பாய்ச்சலூர் வழியிலே
பரன்இருந்த சுழியிலே காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே மூச்சினோடு மூச்சைவாங்கு
முட்டிநின்ற சோதியே.
|
353 |
சோதிசோதி என்றுநாடித்
தோற்பவர் சிலவரே ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே வாதிவாதி
என்றுசொல்லும் வம்பரும் சிலவரே நீதிநீதி நீதிநீதி நின்றிடும்
முழுச்சுடர்.
|
354 |
சுடரதாகி எழும்பியங்குத்
தூபமான காலமே இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன் படரதாக
நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.
|
355 |
நின்றிருந்த சோதியை
நிலத்தில்உற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார் கன்றிஅற்று நாலைபொங்கி
நாதமும் மகிழ்ந்திடும்.
|
356 |
வயங்குமோனச் செஞ்சுடர்
வடிந்தசோதி நாதமும் கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை நயங்கள்கோவென் றேநடுங்கி
நங்கையான தீபமே.
|
357 |
தீபஉச்சி முனையிலே
திவாகரத்தின் கழியிலே கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே தாபமான
மூலையில் சமைந்துநின்ற சூட்சமும் சாபமான மோட்சமும் தடிந்துநின்று
இலங்குமே.
|
358 |
திவாகரம் - சூரிய ஒளி
தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில் வேசமோடு வாலையில் வியன்இருந்த
மூலையில் நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில் வீசிவீசி நின்றதே
விரிந்துநின்ற மோனமே.
|
359 |
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற
நந்தியை விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில் முட்பொதிந்தது
என்னவே முடுகிநின்ற செஞ்சுடர் கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற
காட்சியே.
|
360 |
உந்தியில் சுழிவழியில்
உச்சியுற்ற மத்தயில் சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் கிந்துபோல கீயில்நின்று
கீச்சுமூச்சு என்றதே.
|
361 |
செச்சையென்ற மூச்சினோடு
சிகாரமும் வகாரமும் பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே இச்சையான
ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.
|
362 |
ஆறுமூலைக் கோணத்தில்
அமைந்தஒன்ப தாத்திலே தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்
கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே பாறுகொண்டு நின்றது பரந்ததே
சிவாயமே.
|
363 |
பறந்ததே கறந்தபோது
பாய்ச்சலூரின் வழியிலே பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ இறந்தபோதில் அன்றதே இலங்கிடும்
சிவாயமே.
|
364 |
அருளிருந்த வெளியிலே
அருக்கன்நின்ற இருளிலே பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே குருவிருந்த வழியினின்று
ஊவும்ஈயும் ஆனதே.
|
365 |
ஆனதோர் எழுத்திலே
அமைந்துநின்ற ஆதியே கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே;
தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில் ஏனலோடு மாறுபோல் இருந்ததே
சிவாயமே.
|
366 |
ஆறுகொண்ட வாரியும்
அமைத்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும் மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே
சிவாயமே.
|
367 |
வாயில்கண்ட கோணமில்
வயங்கும்ஐவர் வைகியே சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும் பாயும்என்று சென்றதும்
பறந்ததே சிவாயமே.
|
368 |
பறந்ததே துறந்தபோது
பாய்ச்சலூர் வழியிலே மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே பிறந்ததே
இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.
|
369 |
வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல
அனலையே மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும் முடிவுமுத்தி
ரைப்படுத்தி மூலவீணா தண்டினால் முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம்.
|
370 |
அடிதொடக்கி முடியளவும் ஆறுமா
நிலம்கடந்து அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை உடுபதிக்கண்
அமுதருந்தி உண்மைஞான உவகையுள் உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.
|
371 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி
நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர் உள்ளதும்
பிறப்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.
|
372 |
முத்திசித்தி தொந்தமாம்
முயங்குகின்ற மூர்த்தியை மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம் உச்சரித்து உளத்திலே
அறிந்துணர்ந்து கொண்மினே.
|
373 |
மூன்றிரண்டும் ஐந்துமாய்
முயன்றெழுந்த தேவராய் மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த் தோன்றும்ஓர் எழுத்தினோடு
சொல்லலொன்றும் இல்லையே.
|
374 |
வெளியுருக்கி அஞ்செழுத்து
விந்துநாத சந்தமும் தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின் வெளிகடந்த தன்மையால்
தெளிந்ததே சிவாயமே.
|
375 |
மந்திரங்கள் கற்றுநீர்
மயங்குகின்ற மாந்தரே மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே மந்திரங்கள் ஆவது
மனத்தின்ஐந்து எழுத்துமே.
|
376 |
முப்புறத்தில் அப்புறம்
முக்கண்ணன்வினைவிலே சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே
தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின் இப்புறம் ஒடுங்குமோடி
எங்கும்லிங்கம் ஆனதே.
|
377 |
ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச
பூதமோ கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ? நாடுகண்டு நின்றதோ,
நாவுகற்ற கல்வியோ? வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.
|
378 |
உருத்தரித்த போதுசீவன்
ஒக்கநின்ற உண்மையும் திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.
இருத்துநின்று உறுத்தடங்ி ஏகபோகம் ஆனபின் கருத்தினின்று உதித்ததே
கபாலம்ஏந்தும் நாதனே.
|
379 |
கருத்தரித்து உதித்தபோது
கமலபீடம் ஆனதும் கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க் கருத்தினின்று உதித்ததே
கபாலம் ஏந்தும் நாதனே.
|
380 |
ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு
எட்டிலே ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும் ஆனசோதி
உண்மையும் அனாதியான உண்மையும் ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும்.
|
381 |
ஈன்றெழுந்த எம்பிரான்
திருவரங்க வெளியிலே நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின் ஈன்றெழுந்த அவ்வினோசை
எங்குமாகி நின்றதே.
|
382 |
எங்கும்எங்கும் ஒன்றலோ
ஈரேழ்லோகமும் ஒன்றலோ? அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ?
தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ? உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே
சிவாயமே.
|
383 |
அம்பரத்தில் ஆடும்சோதி
யானவன்னி மூலமாம் அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே அம்பரக்
குழியிலே அங்கமிட்டு ருக்கிட அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.
|
384 |
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை
நாவிலே ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் ஆடிஆடி அங்கமும்
அகப்படக் கடந்தபின் கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.
|
385 |
விட்டடி விரைத்ததோ
அவ்வேர்உருக்கி நின்றதோ எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?
தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர்
ஆவரோ.
|
386 |
வானவர் நிறைந்தசோதி மானிடக்
கருவிலே வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் வானகமும் மண்ணகமும்
வட்டவீடு அறிந்தபின் வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே.
|
387 |
பன்னிரண்டு கால்நிறுத்தி
பஞ்சவண்ணம் உற்றிடின் மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும் பன்னிஉன்னி ஆய்ந்தவர்
பரப்பிரம்மம் ஆனதே.
|
388 |
உச்சகண்டு கண்கள்கட்டி
உண்மைகண்டது எவ்விடம்? மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும் பச்சைமாலும் ஈசனும் பரத்ததே
சிவாயமே.
|
389 |
வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்
தொலியிலே கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும் ஆயிலிட்ட
காயமும் அனாதியிட்ட சீவனும் வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.
|
390 |
அட்சரத்தை உச்சரித்து
அனாதியங்கி மூலமாய் அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின் அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே
சிவாயமே.
|
391 |
கோயிலும் குளங்களும்
குறியினிற் குருக்களாய் மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல் தாயினும் தகப்பனோடு
தான்அமர்ந்தது ஒக்குமே.
|
392 |
கோயில் எங்கும் ஒன்றலோ,
குளங்கள்நீர்கள் ஒன்றலோ? தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ? காயம்ஈதறிந்த பேர்கள்
காட்சியாவர் காணுமே.
|
393 |
காதுகண்கள் மூக்குவாய்
கலந்தவாரது ஒன்றலோ? சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?
ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ? நாதவீடு அறிந்தபேர்கள்
நாதர்ஆவர் காணுமே.
|
394 |
அவ்வுதித்த அட்சரத்தின்
உட்கலந்த அட்சரம் சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள், உவ்வுதித்தது அவ்வுமாய்
உருத்தரித்தது உண்மையே.
|
395 |
அகாரமென்னும் அக்கரத்தில்
அக்கரம் ஒழிந்ததோ? அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ? விகாரமற்ற ஞானிகாள்,
விரிந்துரைக்க வேணுமே.
|
396 |
சத்தியாவது உன்னுடல்,
தயங்குசீவன் உட்சிவம் பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.
சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி சத்திசிவமும் ஆகிநின்று
தண்மையாவது உண்மையே.
|
397 |
சுக்கிலத் துளையிலே சுரோணிதக்
கருவுளே முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில் மெய்ச்சதுர
மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே.
|
398 |
அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம்
அனாதிஅல்ல புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல தக்கமிக்க
நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண்
அனாதியே.
|
399 |
மென்மையாகி நின்றதேது
விட்டுநின்று தொட்டதேது? உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?
பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை உண்மையாய் உரைக்கமுத்தி
உட்கலந்து இருந்ததே.
|
400 |
அடக்கினால் அடங்குமோ
அண்டம்அஞ் செழுத்துளே? உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால் விடக்குநாயு மாயவோதி வேறுவேறு
பேசுமோ?
|
401 |
உடக்கு - உள்மர்மம்
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் தண்மையான காயமும் தரித்தரூபம்
ஆனதும் வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும் உண்மையான ஞானிகாள்
விரிந்துரைக்க வேணுமே.
|
402 |
எள்ளகத்தில் எண்ணெய்போல்
எங்குமாகி எம்பிரான் உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல் வள்ளலாகி நின்றசோதி
காணலாகும் மெய்மையே.
|
403 |
வேணும் என்ற ஞானமும்
விரும்புகின்ற நூலிலே தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே காணும்அன்றி வேறுயாவும்
கனாமயக்கம் ஒக்குமே.
|
404 |
வழக்கிலே உரைக்கிறீர்
மனத்துளே தவக்கிறீர் உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே வழக்கிலே உரைக்கிறீர்
மனத்துள்ஈசன் மன்னுமே.
|
405 |
அகாரமானது அம்பலம் அனாதியானது
அம்பலம் உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம் மகாரமானது அம்பலம்
வடிவானது அம்பலம் சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.
|
406 |
சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல்
பலகையாய் செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும் உக்கிலே
ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப் புக்கிலே புகுந்தபோது போனவாறது
எங்ஙனே?
|
407 |
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை
மாயமென்று எண்ணிநீர் அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல் களங்கமற்று நெஞ்சுளே
கருத்துவந்து புக்குமே.
|
408 |
நாலுவேதம் ஓதுகின்ற
ஞானம்ஒன்று அறிவீரோ? நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய் ஆலம்உண்ட
கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச் சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.
|
409 |
சுற்றும்என்று சொல்வதும்
சுருதிமுடிவில் வைத்திடீர் அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது
எவ்விடம்? பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது, பித்தரே,
இதைக்கருதி பேசலாவது எங்ஙனே?
|
410 |
எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு
நின்றுதான் எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல் அங்ஙனே
இருந்தருளும் ஆதியான தற்பரம் சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள்
அற்றவே.
|
411 |
அற்றவுள் அகத்தையும் அலகிடும்
மெழுக்கிடும் மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே நற்றவம்
புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும்
உம்முளே.
|
412 |
பார்த்துநின்றது அம்பலம்
பரமன்ஆடும் அம்பலம் கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம் சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே
சிவாயமே.
|
413 |
சென்றுசென்று இடந்தொறும்
சிறந்தசெம்பொன் அம்பலம் அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம் ஒன்றிஒன்றி நின்றதுள்
ஒனிந்ததே சிவாயமே.
|
414 |
தந்தையாய் தருமம்நீ சகலதே
வதையும்நீ சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ விந்துநீ
விளைவுநீ மேலதாய் வேதம்நீ எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே.
|
415 |
எப்பிறப்பி லும்பிறந்து
இறந்துஅழிந்த ஏழைகாள் இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல் செப்புநாத ஓசையில்
தெளிந்துகாணல் ஆகுமே.
|
416 |
அப்பு - நீர்
எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும் எட்டுஅக்க ரத்துளே உகாரமும்
அகாரமும் விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் அட்ட
அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே.
|
417 |
பிரான்பிரான் என்றுநீர்
பிதற்றுகின்ற மூடரே பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய் பிரானிலே முளைத்தெழுந்த
பித்தர்காணும் உம்முடல்.
|
418 |
அந்த - முடிவு ஆதியில்லை
அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும் ஆதிகண்டு கொண்டபின்
அஞ்செழித்தும் இல்லையே.
|
419 |
அம்மையப்பன் அப்பன்நீர்
அமர்ந்தபோது அறிகிலீர் அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே அம்மையப்பன்
நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின் அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை
இல்லையே.
|
420 |
முந்தஓர் எழுத்துளே
முளைத்தெழந்த செஞ்சுடர் அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும் அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து
கொள்ளுமே.
|
421 |
கூட்டம்இட்டு நீங்களும்
கூடிவேதம் ஓதுறீர் ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே ஆட்டகத்துள் ஆடிடும்
அம்மைஆணை உண்மையே.
|
422 |
ஆட்டகம் - ஆனந்த தாண்டவம்
ஆடுகின்ற இடம்.
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய் ஏக்கைநோக்க அட்சரம்
இரண்டெழுத்தும் ஏத்திடில் பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம்
ஆனதே.
|
423 |
ஏக்கை - ஏக்கம்
ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை
மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?
|
424 |
ஓட்டுவைத்துக் கட்டிநீர்
உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ?
எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டம்இட்ட யவ்விலே
வைத்துணர்ந்து பாருமே.
|
425 |
இந்தஊரில் இல்லைஎன்று
எங்குநாடி ஓடுறீர்? அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை அந்தமான சீயில்அவ்வில்
அறிந்துணர்ந்து கொள்ளுமே.
|
426 |
புக்கிருந்த தும்முளே
பூரியிட்ட தோத்திரம் தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார் மிக்கசோதி அன்புடன்
விளம்பிடாது பின்னையே.
|
427 |
பின்னழுந்த மாங்கிசத்தைப்
பேதையர் கண்பற்றியே பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ அன்பராய் இருந்தபேர்கள்
ஆறுநீந்தல் போல்வீடே.
|
428 |
விட்டிருந்த தும்முளே
விசனமற்று இருக்கிறீர் கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த் திட்டமான ஈசனைத் தெளியுமாங்
கிசத்துளே.
|
429 |
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான
அப்பொருள் ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல் பாகுசேர்மொழி
உமைக்குப் பாலனாகி வாழலாம் வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர்.
|
430 |
வாகு - வலிமை
பாலகனாக
வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல் நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு
அடுத்ததால் மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண ஏலவார் குழலியூடே
ஈசர்பாதம் எய்துமே.
|
431 |
எய்துநின்னை அன்பினால்
இறைஞ்சி ஏத்தவல்லீரேல் எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன் செய்தவல் வினைகளும்
சிதறும்அஃது திண்ணமே.
|
432 |
பங்கன் - பார்வதியை
இடப்பாகத்தில் உடையவன் வாசி - காற்று
திண்ணம்என்று சேதிசொன்ன
செவ்வியோர்கள் கேண்மினோ அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில் நண்ணிஎங்கள் ஈசனும்
நமதுகடலில் இருப்பனே.
|
433 |
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே
இருந்துவேற தாகுவன் நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக் குருப்புனலில் மூழ்கினார்
குறித்துணர்ந்து கொள்வரே.
|
434 |
கொள்ளுவார்கள் சிந்தையில்
குறிப்புணர்ந்த ஞானிகள் அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி
ஏத்தினால் உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.
|
435 |
தெளிந்தநற் சரியைதன்னில்
சென்று சாலோகம்பெறும் தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம் தெளிந்தஞானம் நான்கிலும்
சேரலாம் சாயுச்யமே.
|
436 |
சேருவார்கள் ஞானம்என்று
செப்புவர் தெளிவுளோர் சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர் சேருமாறு கண்டுநாலும்
செய்தொழில் திடப்படே.
|
437 |
திறமலிக்கு நாலுபாதம்
செம்மையும் திடப்படார் அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல் வெறிகமழ் சடையுடையோன்
மெய்ப்பதம் அடைவரே.
|
438 |
அடைவுளோர்கள் முத்தியே
அறிந்திடாத மூடரே, படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ? மடைதிறக்க
வாரியின் மடையில் ஏறு மாறுபோல் உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.
|
439 |
ஊன்றிஏற்றி மண்டலம்
உருவிமூன்று தாள்திறந்து ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் ஆன்றியும் உயிர்ப்பரம்
பொருந்திவாழ் வதாகவே.
|
440 |
தந்தி - நாடி
ஆகமூல
நாடியில் அனல்எழுப்பி அன்புடன் மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல் ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார்
அறிவரே.
|
441 |
அறிந்துநோக்கி உம்முளே
அயந்தியானம் உம்முளே பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார் செறிந்துமேலை வாசலைத்
திறந்துபாரும் உம்முளே.
|
442 |
சோதியாக உம்முளே
தெளிந்துநோக்க வல்லீரேல் சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டுகொள்
பிராணனைத் திருத்தியே.
|
443 |
திருவுமாகிச் சிவனுமாகித்
தெளிந்துளோர்கள் சிந்தையில் மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம் பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி
பாருமே.
|
444 |
பரிதி - சூரியன் அங்கி -
நெருப்பு
பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர் சேருமே
நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரையும் முடியையும் விரைந்துதேடி
மால்அயன் பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே.
|
445 |
மால் - திருமால் பார் - உலகம்
இடந்து - தோண்டி
கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ? தொண்டுமட்டும் அன்புடன்
தொழுதுநோக்க வல்லீரேல் பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே.
|
446 |
முற்றுமே அவன்ஒழிந்து
முன்பின்ஒன்றும் காண்கிலேன் பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ? பெற்றபேரை அன்புடன் பிரியமாகக்
கேளுமே.
|
447 |
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த
காலந்தன்னுளே வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் வீட்டிலே
வெளியதாகும் விளங்கவந்து நேரிடும் கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு
எழுப்புமே.
|
448 |
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த
லாகுமோ மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல் சுழுத்தியும்
கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை
ஐயனே.
|
449 |
அல்லதில்லை என்றுதான் ஆவியும்
பொருளுடல் நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் தொல்லையாம் வினைவிடென்று
தூரதூரம் ஆனதே.
|
450 |
ஆனதே பதியது உயிர் அற்றதே
பசுபாசம் போனவே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தில்
இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ? ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.
|
451 |
உலாவும் உவ்வும் அவ்வுமாய்
உதித்தடர்ந்து நின்றதும் உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம் உலாவும் எங்கள் ஈசனைக்
குறித்துணர்ந்து கும்பிடே.
|
452 |
கும்பிடும் கருத்துளே
குகனைஐங் கரனையும் நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட எம்பிரானும்
அம்மையும் இருத்தியே நடுவனைத் தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி
நீங்குமே.
|
453 |
நீங்கும்ஐம் புலன்களும்
நிறைந்தவல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத் தூங்காஈசர் சொற்படி
துணிந்திருக்க சுத்தமே.
|
454 |
கருக்கலந்த காலமே கண்டுநின்ற
காரணம் உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது விரக்கில்என்
மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது
நீயும்நானும் ஒன்றலோ?
|
455 |
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான
யோகிகாள், ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர் ஞானம்ஆகி நின்றதோர்
நாதனை அறிந்தபின் ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே
|
456 |
கருத்தரிப்ப தற்குமுன்
காயம்நின்றது எவ்விடம்? உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது
எவ்விடம்? மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்?
விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.
|
457 |
கருவினில் கருவதாய் எடுத்தஏழு
தோற்றமும் இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும் மறுவினைப்
பிறவிமூன்று காலமும் வகுத்தபின் உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி
சொல்லுமே.
|
458 |
வாயில்எச்சில் போகவே
நீர்குடித்துத் துப்புவீர் வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்? நாயினை அறிந்தபோது
நாடும்எச்சில் ஏதுகொல்?
|
459 |
தொடக்கதென்று நீர்விழத்
தொடங்குகின்ற ஊமர்காள் தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல் தொடக்கிலாத சோதியைத்
தொடர்ந்துகாண லாகுமே.
|
460 |
மேதியோடும் ஆவுமே விரும்பியே
புணர்ந்திடில் சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே வேதம்ஓது
வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.
|
461 |
மேதி - எருமை
வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்குலங்
கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின் மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று
கண்டிலீர் நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.
|
462 |
ஓதும்நாலு வேதமும் உரைத்த
சாத்திரங்களும் பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும் சாதிபேத
உண்மையும் தயங்குகின்ற நூல்களும் பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.
|
463 |
அங்கலிங்கம் பூண்டுநீர்
அகண்டபூசை செய்கிறீர் அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர் செங்கல்செம்பு கல்லெலாம்
சிறந்துபார்க்கும் மூடரே.
|
464 |
தீட்டம்தீட்டம் என்றுநீர்
தினமும்மூழ்கும் மூடரே தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே
சிவாயமே.
|
465 |
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி
வாயமாம் சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே மூந்தவந்து நம்முளே
மூலநாடி ஊடுபோய் அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.
|
466 |
வன்னிமூன்று தீயினில்
வாழும்எங்கள் நாதனும் கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று உன்னியுன்னி நம்முளே
உய்த்துணர்ந்து பாருமே.
|
467 |
தொண்டுசெய்து நீங்களும்
சூழஓடி மாள்கிறீர் உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும் பண்டுபோல நும்முளே
பகுத்திருப்பன் ஈசனே.
|
468 |
பரம்உனக்கு எனக்குவேறு
பயம்இல்லை பாரையா கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை
உண்மையே.
|
469 |
என்அகத்தில் என்னைநான்
எங்கும்ஓடி நாடினேன் என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல் என்அகத்துள் ஈசனோடு
யானும்அல்ல தில்லையே.
|
470 |
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே
இட்டபீட மீதிலே அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்? அடங்குகின்றது எவ்விடம்?
அறிந்துபூசை செய்யுமே.
|
471 |
புத்தகங் களைசுமந்து
பொய்களைப் பிதற்றுவீர். செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல் உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம்
ஆகுமே.
|
472 |
அருளிலே பிறந்துநின்று
மாயைரூபம் ஆகியே இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ. பொருளிலே
தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல் மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே
சிவாயமே.
|
473 |
தன்மசிந்தை ஆம்அளவும்
தவமறியாத் தன்மையாய்க் கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை நன்மையாக உம்முளே நயந்துகாண
வேணுமே.
|
474 |
கள்ளவுள்ள மேயிருக்கக்
கடந்தஞானம் ஓதுவீர் கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல் தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே
சிவாயமே.
|
475 |
காணவேண்டும் என்றுநீர்
கடல்மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே? வேணும் என்று
அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் தாணுவாக நின்ற சீவன் தான்சிவம்
அதாகுமே.
|
476 |
தாணு - பரம்பொருள்
அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக் குணமதாக உம்முளே குறித்துநோக்கின்
முத்தியாம் மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த் துணிவிலாத
படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.
|
477 |
எச்சில்எச்சில் என்றுநீர்
இடைந்திருக்கும் ஏழைகாள் துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ? கைச்சுதாடல் வைத்துடன்
கறந்தபாலும் எச்சிலே!
|
478 |
சுதா - பசுவின் முலைக்காம்பு
தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே தீர்த்தலிங்கம்
உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண
வல்லீரேல் தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே.
|
479 |
ஆடுகொண்டு கூறுசெய்து
அமர்ந்திருக்கும் ஆறுபோல் தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன
பூசையோ?
|
480 |
என்னை அற்பநேரமும் மறக்கிலாத
நாதனே ஏகனே இறைவனே இராசராச ராசனே உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க
லாகுமே உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே.
|
481 |
எல்லையற்று நின்றசோதி ஏகமாய்
எரிக்கவே வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே நல்லஇன்பம் மோனசாக
ரத்திலே அழுத்தியே நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள்.
|
482 |
ஆனவாற தாயிடும் அகண்டமான
சோதியை ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல் ஊனகாயம் ஆளலாம்
உலகபாரம் ஆளலாம் கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.
|
483 |
நித்தமும் மணிதுலக்கி
நீடுமூலை புக்கிருந்து வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ? அத்தனுக்கிது ஏற்குமோ
அறிவிலாத மாந்தரே?
|
484 |
எட்டிரண்டும் கூடியே
இலிங்கமான தேவனை மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல் கட்டமான
பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம் இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர்
காண்மினே.
|
485 |
உண்மையான மந்திரம் ஒளியிலே
இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே வெண்மையான
மந்திரம் விளைந்துநீற தானேதே உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.
|
486 |
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம்
தலங்களாய் முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர் வச்சிரம்
அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்? இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது
எங்ஙனே?
|
487 |
481. ஏகன் - தனிமுதன்மையானவன்
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும் சொல்லும்வாசல் ஓர்ஐந்தும்
சொல்லவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.
|
488 |
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த
தேன்எலாம் உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க் கண்டுகண்டு
வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல் பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.
|
489 |
ஓரெழுத்தில் லிங்கமாக
ஓதும்அக் கரத்துளே ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை நாலெழுத்து நாவுளே நவின்றதே
சிவாயமே.
|
490 |
தூரதூர தூரமும்
தொடர்ந்தெழுந்த தூரமும் பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல் தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல்
ஆகுமே.
|
491 |
குண்டலங்கள் பூண்டுநீர்
குளங்கள்தோறும் மூழ்குறீர் மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல் பண்டைமால் அயன்தொழப் பணிந்து
வாழலாகுமே.
|
492 |
மண்டுகம் - தவளை
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல் ஆடிரண்டு கன்றைஈன்ற
அம்பலத்துள் ஆடுதே; மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.
|
493 |
நட்டகல்லைத் தெய்வம் என்று
நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்! சுட்டசட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ?
|
494 |
நானும்அல்ல நீயும்அல்ல
நாதன்அல்ல ஓதுவேன் வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ? தானதான தந்தான தாதனான தானனா.
|
495 |
நல்லதல்ல கெட்டதல்ல
நடுவில்நிற்பது ஒன்றுதான் நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் நல்லதென்ற நாடிநின்று
நாமம்சொல்ல வேண்டுமே.
|
496 |
பேய்கள்கூடிப்
பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே நாய்கள்சுற்ற நடனமாடும்
நம்பன்வாழ்க்கை ஏதடா? தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.
|
497 |
நம்பன் - பரமேசுவரன்
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ அப்பியாசை
கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும்
மனமேகேள்; ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே.
|
498 |
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு
பேதைமக்கள் தெரிகிலாது றப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ? நிறப்பும்பொந்தி
அழிந்தபோது நேசமாமோ ஈசனே.
|
499 |
சுட்டெரித்த சாந்துபூசும்
சுந்தரப்பெண் மதிமுகத் திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ? கட்டவிழ்த்துப்
பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்?
|
500 |
வேதம்ஓது வேலையோ வீணதாகும்
பாரிலே! காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ? ஆதிநாதன் வெண்ணெய்
உண்டஅவனிருக்க நம்முளே? கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.
|
501 |
பரம்இலாதது எவ்விடம்?
பரம்இருப்பது எவ்விடம்? அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;
கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது பரம்இலாத சூனியமாம்
பாழ்நரகம் ஆகுமே.
|
502 |
மாதர்தோள் சேராததேவர்
மானிலத்தில் இல்லையே! மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் மாதராகும் நீலிகங்கை
மகிழ்துகொண்டான் ஈசனே.
|
503 |
நீலிகங்கை - நீல நிறம் உடைய
கங்கை.
சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்! சித்தர்இங்கு
இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ? அத்தன்நாடும் இந்தநாடும்
அவர்களுக்கெலா மொன்றே.
|
504 |
மாந்தர்வாழ்வு மண்ணிலே
மறந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்
வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம் கூந்தலம்மை கோணல்ஒன்றும்
குறிக்கொணாதி துண்மையே. மன்று - மன்றம்; சபை; விமலன் - மலமற்றவன்
|
505 |
சருகு - உதிர்ந்த இலை.
சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்! சருகருந்தில்
தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை
சுகிப்பிரேல் வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.
|
506 |
காடுமேடு குன்றுபள்ளம்
கானின்ஆறு அகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் வீடுபெற்ற அரன்பதத்தில்
வீற்றிருப்பர் இல்லையே.
|
507 |
கட்டையால்செய் தேவரும்
கல்லினால்செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்டவெளிய தன்றிமற்று
வேறுதெய்வம் இல்லையே.
|
508 |
தங்கள்தேகம் நோய்ப்பெறின்
தனைப்பிடாரி கோயிலில் பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய் உங்கள்குலத்துத்
தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே.
|
509 |
ஆசைகொண்டு அனுதினமும்
அன்னியர் பொருளினை மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் பூசையோடு
நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர் காசினியில் எழுநரகைக் காத்திருப்பது
உண்மையே.
|
510 |
நேசமுற்றுப் பூசைசெய்து
நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் வேசரிகளம் புரண்டவெண்
ணீறாகும் மேனியே.
|
511 |
வாதம்செய்வேன் வெள்ளியும்
பொன்மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச்
சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே காததூரம் ஓடிச்செல்வர்
காண்பதும் அருமையே.
|
512 |
யோகசாலை காட்டுவார் உயரவும்
எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகம்கொண்டு
மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர்போல் பேருலகில்
சாவரே.
|
513 |
காயகாயம் உண்பதாகக் கண்டவர்
மதித்திட மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர் நேரமாகக்
கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில்
அலைவரே.
|
514 |
நீரினில் குமிழிஒத்த
நிலையிலாத காயம்என்று ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென நேரினில் பிறர்பொருளை
நீளவும்கைப் பற்றுவார்.
|
515 |
காவியும் சடைமுடி கமண்டலங்கள்
ஆசனம் தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள் தேவியை அலையவிட்டுத்
தேசம்எங்கும் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.
|
516 |
முத்திசேரச் சித்திஇங்கு
முன்னளிப்பேன் பாரெனக் சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே பத்தியாய்ப் பணம்பறித்துப்
பாழ்நரகில் வீழ்வரேல்.
|
517 |
செம்மைசேர் மரத்திலே
சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல் இம்மலமும் மும்மலமும்
எம்மலமும் அல்லவே.
|
518 |
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி
எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பத்தியோடு
அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்; முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து
அலைவரே.
|
519 |
கல்லுவெள்ளி செம்பிரும்பு
காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்? இல்லைஇல்லை இல்லைஇல்லை
ஈசன்ஆணை இல்லையே.
|
520 |
இச்சகம் சனித்ததுவும்
ஈசனைஐந்து எழுத்திலே மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே நிச்சயமெய்ஞ் ஞானபோதம்
நிற்கும்ஐந் தெழுத்திலே.
|
521 |
சாத்திரங்கள்
பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் நேத்திரங்கெட வெய்யோனை
நேர்துதிசெய் மூடர்காள் பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே.
|
522 |
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை
மாடுகள் சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத் தினந்தினம்
ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர் இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற
பாவிகள்.
|
523 |
சிவாயவசி என்னவும் செபிக்கஇச்
சகம்எலாம் சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் சிவாயவசி
என்னவும் செபிக்கவானம் ஆளலாம் சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
|
524 |