| 
			நீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்
 கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ
 னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே.
 | 1  | 
		
			| 
			உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணுமிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனே
 யுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கை
 வரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே.
 | 2  | 
		
			| 
			மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழா
 யாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்
 பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே.
 | 3  | 
		
			| 
			பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்
 முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்
 புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே.
 | 4  | 
		
			| 
			புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமாதுரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்கு
 வரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளே
 நிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே.
 | 5  | 
		
			| நின்றபிராணன்கழலுமுன்னே 
			நெஞ்சமே நினையாய்சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கை
 துன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்
 கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே.
 | 6  | 
		
			| 
			கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்தி
 வாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்
 வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே.
 | 7  | 
		
			| 
			வித்தகரும்பர்க்கரசானவனும்விதியுங்கங்கைமத்தகரும்பரவும்மலங்காரர்மழைகொண்டகா
 ரொத்தகரும்பரஞ்சோதியர்நாமமுரைத்தன்னைமீ
 ரித்தகரும்பரதெய்வமுங்கூத்தும்விட்டேத்துமினே.
 | 8  | 
		
			| 
			ஏத்துமின்பத்தியெனாலெட்டெழுத்துமிணையடிக்கேசாத்துமின்பத்திரத்தண்ணந்துழாய்மதிதாங்கிக்கஞ்சம்
 பூத்துமின்பத்திசெய்யும்பச்சைமாமுகில்போலழகர்
 காத்துமின்பத்திலிருத்தியும்வைப்பர்கருணைசெய்தே.
 | 9  | 
		
			| 
			செய்தவராகவருந்தியுந்தீர்த்தத்துறைபடிந்துங்கைதவராகமங்கற்றுமென்னாங்கடற்பார்மருப்பிற்
 பெய்தவராகனைமாலலங்காரனைப்பேரிலங்கை
 யெய்தவராகவவென்றேத்தநீங்குமிருவினையே.
 | 10  | 
		
			| 
			வினைக்குமருந்தளிக்கும்பிணிமூப்புக்கும்வீகின்றவேதனைக்குமருந்தன்னதாளழகாசெய்யதாமரையங்
 கனைக்குமருந்தமுதேயருளாய்நின்னைக்காதலித்து
 நினைக்குமருந்ததிதன்னுயிர்வாழ்க்கைநிலைபெறவே.
 | 11  | 
		
			| 
			நிலையாமையானவுடலுமுயிருநினைவுந்தம்மிற்கலையாமையானங்கலக்குமுன்னேகங்கைவைத்தசடைத்
 தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழக
 னலையாமையானவன்மாலிருஞ்சோலையடைநெஞ்சமே.
 | 12  | 
		
			| 
			நெஞ்சமுருக்குமுயிருக்குந்தொல்லைநீள்வினையின்வஞ்சமுருக்கும்பவமுருக்கும்வண்டுழாயழகர்
 கஞ்சமுருக்குமலர்வாய்த்திருநண்பர்கஞ்சனுக்கு
 நஞ்சமுருக்குவளையாழியன்னவர்நாமங்களே.
 | 13  | 
		
			| 
			நாமங்களாவிநழுவுந்தனையுநவின்றவரைத்தாமங்களாவிமனத்துள்வைப்பார்தண்டலையினகிற்
 றூமங்களாவிமணநாறுமாலிருஞ்சோலையன்பர்
 சேமங்களாவின்களியனையார்பதஞ்சேருவரே.
 | 14  | 
		
			| 
			சேராதகாதநரேகேழ்தலைமுறைசேர்ந்தவர்க்கும்வாராதகாதம்வசைபிணிபாவமறிகடன்முன்
 றூராதகாதங்கடூர்த்தானைமாலிருஞ்சோலையிற்போ
 யாராதகாதலுடன்பணிவீரென்னழகனையே.
 | 15  | 
		
			| 
			அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல்வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளுமறுத்ததுண்டேற்
 குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக்கோதைநல்லீர்
 சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்றுசாற்றுமினே.
 | 16  | 
		
			| 
			சாற்றுக்கரும்பனைக்கூற்றென்னுமாசைத்தமிழ்மலயக்காற்றுகரும்பனையுங்கண்படாளலங்காரற்கண்ட
 ரேற்றுக்கரும்பனையக்கொங்கையாள்கொண்டவின்னலுக்கு
 மாற்றுக்கரும்பனையல்லாதுவேறுமருந்தில்லையே.
 | 17  | 
		
			| 
			மருந்துவந்தார்தொழுமாலிருஞ்சோலைமலையழகரருந்துவந்தாரணியென்றயின்றாரடலாயிரவாய்
 பொருந்துவந்தார்பணிப்பாயார்விதுரன்புதுமனையில்
 விருந்துவந்தாரடியார்க்கில்லைநோயும்வெறுமையுமே.
 | 18  | 
		
			| 
			வெறுத்தவரைக்கஞ்சனைச்செற்றுளார்விடைவெற்பற்வெங்கட்கறுத்தவரைக்கஞ்சலென்றுவந்தார்கனகாம்பரத்தைப்
 பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச்
 சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென்செய்புவதே.
 | 19  | 
		
			| 
			செப்போதனஞ்செழுந்துவபோசெவ்வாயென்றுசேயிழையார்க்கொப்போதனஞ்சுருகித்திரிவீர்கனலூதைமண்வி
 ணப்போதனமென்றமுதுசெய்தாரலங்காரர்பொற்றா
 ளெப்போதனந்தறவிர்ந்தேத்தநீங்களிருக்கின்றதே.
 | 20  | 
		
			| 
			இருக்கந்தரத்தனைவோர்களுமோதியிடபகிரிநெருக்கந்தரத்தனையேத்தநின்றானைநிறத்ததுப்பி
 னுருக்கந்தரத்தனைத்துன்பொழித்தானையுலகமுண்ட
 திருக்கந்தரத்தனையல்லாதெண்ணேனொருதெய்வத்தையே.
 | 21  | 
		
			| 
			தெய்வம்பலவவர்நூலும்பலவவைதேர்பொழுதிற்பொய்வம்பலவென்றுதோன்றும்புல்லோர்கட்குப்போதநல்லோ
 ருய்வம்பலனுமவனேயென்றோதியுணர்வர்நெஞ்சே
 கொய்வம்பலர்சொரியுஞ்சோலைமாமலைக்கொண்டலையே.
 | 22  | 
		
			| 
			கொண்டலையாநிற்குமைம்புலக்கோண்மகரங்களினீர்ப்புண்டலையார்பிறவிக்கடன்மூழ்குவருத்தமனைத்
 தண்டலையார்திருமாலிருஞ்சோலைத்தனிச்சுடரைப்
 புண்டலையால்வணங்காரணங்கார்வினைபோகவென்றே.
 | 23  | 
		
			| 
			என்றுதரங்கலந்தேனற்றைநான்றுதொட்டிற்றைவரைநின்றுதரங்கிக்கின்றேற்கருள்வாய்நெடுங்கான்கடந்து
 சென்றுதரங்கக்கடறூர்த்திலங்கையிற்றீயரைக்
 கொன்றுதரங்குவித்தாய்சோலைமலைக்கோவலனே.
 | 24  | 
		
			| 
			கோவலன்பார்ப்புடன்கேகயஞ்சூழ்குளிர்சோலைமலைக்காவலன்பாற்கடற்கண்டுயின்மாமலங்காரனென்றே
 பாவலன்பாற்பணிவாரணிவானவராகிமறை
 நாவலன்பார்ப்பதிநாதனண்ணாப்பதநண்ணுவரே.
 | 25  | 
		
			| 
			நன்னினனாகமுடிமேனடித்தென்னைநாசமறப்பண்ணினனாகமும்பாருமளந்தனபண்டுதம்பி
 மண்ணினனாகவனிம்போயினவளர்சோலைமலைக்
 கண்ணினனாகங்கரியான்சிவர்தகழலிணையே.
 | 26  | 
		
			| 
			கழலப்புகுந்தவளையறியாரென்கருத்தறியாரழலப்புகன்றொறுப்பாரன்னைமாரறுகாற்சுரும்பு
 சுழலப்புனைந்ததுழாய்மார்பர்மாலிருஞ்சோலையென்னார்
 தழலப்புவரென்றனங்களிலேசந்தனங்களென்றே.
 | 27  | 
		
			| 
			தனத்துக்கராவியவேல்விழிக்கேக்கற்றுத்தையாலராற்றினத்துக்கராகித்திரிவார்பலர்சிலர்செங்கமல
 வனத்துக்கராசலங்காத்தாற்குச்சோலைமலையினின்ற
 கனத்துக்கராவணையாற்கெம்பிராற்குள்ளங்காதலரே.
 | 28  | 
		
			| 
			காதலைப்பத்தினிமேல்வைத்தநீசக்கருநிருதன்மாதலைப்பத்தியைமண்ணிலிட்டாய்நின்னைவாழ்த்தித்தொண்டர்க்
 கீதலைப்பத்தியைச்செய்வோர்கள்வாழுமிடபவெற்பா
 தீதலைப்பத்தியங்கித்திரிவேற்கருள்செய்தருளே.
 | 29  | 
		
			| 
			அருடருமங்கைவிடாதேத்துமன்பருக்கன்பரெல்லிலிருடருமங்கையெறியாழியாரிசைக்கின்னரருங்
 கெருடருமங்கையரும்வாழிடபகிரியிற்கல்லா
 முருடருமங்கையலெய்திலன்றேயலர்முத்தரன்றே.
 | 30  | 
		
			| 
			முத்தரன்றேநின்கழலொருகாற்கைமுகிழ்க்கப்பெற்றோர்பித்தரன்றேநினக்கேபித்தராகிற்பிரமன்கங்கை
 வைத்தரன்றேய்துயர்தீர்த்தாய்நின்சோலைமலைமருவும்
 பத்தரன்றேபரிவாலென்னையாளும்பரமர்களே.
 | 31  | 
		
			| 
			பரந்தாமரைத்திருமாலிருஞ்சோலைப்பரமரைக்கால்கரந்தாமரையன்னகார்நிறத்தாரைக்கடல்கடக்குஞ்
 சரந்தாமரைதிரிகான்போயிலங்கைத்தலைவன்பத்துச்
 சிரந்தாமரைக்கணத்தெய்தாரையெய்தற்குத்தேர்மனமே.
 | 32  | 
		
			| 
			நேராயிரவுபகலிரைதேடுவைதீமைநன்மைபாராயிரங்குவைபாவையராற்பண்டுமாவலிபாற்
 சோராயிருந்தவனைத்திருமாலிருஞ்சோலைநின்ற
 பேராயிரமுடையானைநெஞ்சேயென்றுபேணுவையே.
 | 33  | 
		
			| 
			பேணிக்கவித்தவரைக்குடையாய்பெரியோர்பதின்மராணிக்கவித்ததமிழ்மாலைகொண்டாயழகாகரிய
 மாணிக்கவித்தகமாமலையேவண்டுளவுக்கல்லாற்
 பாணிக்கவித்தடங்காதுவெங்காமப்படர்கனலே.
 | 34  | 
		
			| 
			படராகுவால்குவியக்குழலூதியபாலரையமடராகுவாகன்ன்றாதைக்கிட்டாரலங்காரர்துழாய்க்
 கிடராகுவார்பலர்காண்டமியேனையெரிப்பதென்னீ
 விடராகுவாய்க்கொண்டுடல்சுட்டுக்கான்றிட்டவெண்டிங்களே.
 | 35  | 
		
			| 
			திங்களப்பாநின்றசெந்தீக்கொழுந்திற்செழுஞ்சங்குபோலுங்களப்பாவையுருகுவதோர்கிலரும்பரெல்லா
 மெங்களப்பாவெமைக்காவாயெனவுலகீரடியா
 லங்களப்பான்வளர்ந்தார்சோலைமாமலையாதிபரே.
 | 36  | 
		
			| 
			ஆதியராவிற்றுயிலலங்காராழகரன்பாம்வேதியராவுதிவீற்றிருப்பாரண்டமீதிருக்குஞ்
 சோதியராவின்பின்போந்தாரையன்றித்தொழேனுடலைக்
 காதியராவினும்பொன்மாமகுடங்கவிக்கினுமே.
 | 37  | 
		
			| 
			கவித்தானைமன்னற்குநட்பாய்முடிகவித்தானையன்றுபுவித்தானைவற்றப்பொழிசரத்தானைப்பொருதிலங்கை
 யவித்தானைமாலிருஞ்சோலைநின்றானையழகனைமுன்
 றவித்தானைவாவெனவந்தானைப்பற்றினென்றஞ்சமென்றே.
 | 38  | 
		
			| 
			தஞ்சந்தனமென்றுதேடிப்புல்லோர்தையலார்கடைக்கண்வஞ்சந்தனங்கொள்ளவாளாவிழப்பர்மதியுடையோர்
 செஞ்சந்தனப்பொழின்மாலிருஞ்சோலைத்திருநெடுமா
 னெஞ்சந்தனக்குவப்பாகநல்காநிற்பர்நேர்படினே.
 | 39  | 
		
			| 
			பேராயவேதனைநெஞ்சிடந்தாய்நெடுஞ்சோலைமலைக்காராயவேதனைமுன்படைத்தாய்நின்கழற்குத்தொண்டென்
 றாராயவேதனைப்புன்பிறப்போயுமவர்வழியிற்
 பேராயவேதனையில்லுழைப்போரும்பிழைப்பர்களே.
 | 40  | 
		
			| 
			பிழைத்தலையானெண்ணிப்பேசுகின்றேனிப்பிணிமற்றொன்றான்மழைத்தலைவார்குழலீர்தணியாதுவருணனைமு
 னழைத்ததலையங்கடைத்தாநலங்கனல்கீர்
 முழைத்தலைநின்றுமலயாநிலம்வந்துமோதுமுன்னே.
 | 41  | 
		
			| 
			மோதாகவந்தனைமூட்டிலங்கேசன்முடிந்துவிண்ணின்மீதாகவந்தனைவில்லெடுத்தேவிடைவெற்பினின்ற
 நாதாகவந்தனைச்செற்றாயுனையன்றிநான்மறந்துந்
 தீதாகவந்தனைசெய்யேன்புறஞ்சிலதேவரையே.
 | 42  | 
		
			| 
			தேவரையாதன்மனிதரையாதல்செழுங்கவிதைநாவரையாமனவிலுகிற்பீர்நம்மையாளுஞ்செம்பொன்
 மேவரையானையிருஞ்சோலைவேங்கடமெய்யமென்னு
 மாவரையானையொருவனையேசொல்லிவாழுமினே.
 | 43  | 
		
			| 
			வாழுமின்பங்கயச்சுந்தரவல்லிமணாளன்வெற்பைச்சூழுமின்பந்தித்ததொல்வினைதீர்ந்துய்யத்தொங்கல்சுற்றுந்
 தாழுமின்பஞ்சணைமேன்மடவார்தடமாமுலைக்கே
 வீழுமின்பங்கருதித்துன்பயோனியில்வீழ்பவரே.
 | 44  | 
		
			| 
			வீழமராமரமெய்தார்மதிதவழ்வெற்பைநெஞ்சேதாழமராடச்சமன்குறுகானிச்சரீரமென்னும்
 பாழமராமற்பரகதியேற்றுவர்பார்க்கில்விண்ணோர்
 வாழமராவதியுந்நரகாமந்தமாநகர்க்கே.
 | 45  | 
		
			| 
			நகரமுனாடும்புரந்தவர்நண்ணலரால்வனமுஞ்சிகரமுனாடுஞ்சிறுமைகண்டோமஞ்ஞைதேனிசைகள்
 பகரமுனாடும்பனிச்சோலைவெற்பினிற்பார்க்குக்கஞ்சன்
 றகரமுனாடுகைத்தார்க்கறிந்தீர்கள்சரண்புகுமே.
 | 46  | 
		
			| 
			சரணியனாகத்தனைநினைந்தாரைத்தன்போலவைக்குமரணியனாகத்தணையானரங்கனழகனெங்கோ
 னிரணியனாகமிடந்தான்கதையன்றியீனர்தங்கண்
 முரணியனாகத்தும்புன்குரலோரிமுதுக்குரலே.
 | 47  | 
		
			| 
			முதுவிருந்தாவனத்தானிரைமேய்த்தவர்முன்விதுரன்புதுவிருந்தானவர்மால்லங்காரர்பொலுங்கழலா
 மதுவிருந்தாமரைக்களாயிரார்க்குமதிநுட்பநூ
 லெதுவிருந்தாலுமதனால்விடாவிங்கிருவினையே.
 | 48  | 
		
			| 
			வினையாட்டியேன்கொண்டவெங்காமநோய்வெறியாட்டினுமிச்சினையாட்டினுந்தணியாதன்னைமீர்செய்யபூங்கமல
 மனையாட்டிநாயகன்மாலிருஞ்சோலைமலைச்சிலம்பாற்
 றெனையாட்டிவாருஞ்சொன்னேனெந்தநோயுமெனக்கில்லையே.
 | 49  | 
		
			| 
			எனக்காவியங்குமுடலிங்குமாகியிருப்பதைச்சந்தனக்காவியங்குந்தமரவண்டீர்சொல்லுந்தத்துவநூல்
 கனக்காவியங்கவிவல்லோர்புகழலங்காரனுக்கு
 வனக்காவியங்கண்ணிமாமலராண்மணவாளனுக்கே.
 | 50  | 
	
	
		
			| 
			மணவாளராவிநிகர்திருமாதுக்குமாலழகர்பணவாளராவிற்கண்பள்ளிகொள்வார்திருப்பாதமெண்ணக்
 குணவாளராவிரின்யேபுயிர்காளும்மைக்கூற்றுவனார்
 நிணவாளராவியறுக்குமப்போதுநினைப்பரிதே.
 | 51  | 
		
			| 
			நினைப்பரியாயெளியாயும்பர்யார்க்குநின்னன்பருக்கும்வினைப்பரியானவன்வாய்பிளந்தாய்வியன்சோலைமலை
 தனைப்பரியாநின்றதாளழகாமுற்சனனத்துள்ளு
 முளைப்பரியாமலன்றோபரித்தேனிவ்வுடலத்தையே.
 | 52  | 
		
			| 
			உடலம்புயங்கத்துரிபோல்விடுமன்றுவணப்புள்ளினடலம்புயமிசைநீவரவேண்டுமையானனற்கு
 மடலம்புயற்கும்வரந்தருஞ்சோலைமலைக்கரசே
 கடலம்புயர்வரையாலடைத்தாயென்னைக்காப்பதற்கே.
 | 53  | 
		
			| 
			காப்பவனந்தமலரோனையுங்கறைக்கண்டனையும்பூப்பவனந்தரம்போக்கவைப்பான்புனல்பார்விசும்பு
 தீப்பவனந்தருந்தெய்வசிகாமணிசேவடியை
 நாப்பவனந்தப்புகழ்வார்க்கொப்பில்லைநவகண்டத்தே.
 | 54  | 
		
			| 
			கண்டாகனன்கண்ணனல்லாற்கதியின்மைகண்டடைந்ததுண்டாகனம்பவொட்டாதுங்களூழ்வினையுண்மையறிந்
 தண்டாகவனவண்ணனேயருளாயென்றழகனுக்கே
 தொண்டாகனன்னெஞ்சினாலுரைப்பீர்பிறர்தொண்டர்களே.
 | 55  | 
		
			| 
			தொண்டுபடார்திருமாலிருஞ்சோலையிற்சோதிக்கன்புகொண்டுபடாமலரிட்டிறைஞ்சார்மடக்கோதையரைக்
 கண்டுபடாமுலைதோயனுராகங்கருதியிரா
 வுண்டுபடாநிற்கும்போதுநைவாரெங்ஙனுய்வதுவே.
 | 56  | 
		
			| 
			உய்வந்தொழும்புசெய்தென்றிருப்போமையுய்யாமலைவர்பெய்வந்தொழுவினைக்கேயென்பராற்பெருந்தேன்சிகரந்
 தைவந்தொழுகுமலையலங்காரசதுமுகத்துத்
 தெய்வந்தொழுந்தெய்வமேயென்கொலோவுன்றிருவுளமே.
 | 57  | 
		
			| 
			திருவிளையாடுதிண்டுடாட்செங்கண்மால்பலதேவருடன்மருவிளையான்றிருமாலிருஞ்சோலைமலையெனவோ
 ருருவிளையாமற்பிறப்பார்பலர்புகழோதிச்சிலர்
 கருவிளையாநிற்கவித்தாவர்முத்தியிற்காமமற்றே.
 | 58  | 
		
			| 
			காமத்தனைப்பொய்யழுக்காறுகோபங்களவுகொலையாமத்தனையுமுடையேனையாளுங்கொலான்பொருப்பாந்
 தாமத்தனைவரும்போற்றநின்றான்பண்டுதாமரையோன்
 பூமத்தனைச்செய்தநோய்துடைத்தானடிப்போதுகளே.
 | 59  | 
		
			| 
			போதகத்தானும்வெண்போதகத்தானும்புராந்தகனுந்தீதகத்தானதுதீந்தருங்காலைத்திருவரைசேர்
 பீதகத்தாயழகாவருளாயென்பர்பின்னையென்ன
 பாதகத்தான்மறந்தோதனிநாயகம்பாவிப்பரே.
 | 60  | 
		
			| 
			பாவிக்கமலவிரிஞ்சற்கிறையவர்பத்தர்தங்களாவிக்கமலத்துவீற்றிருப்பாரளிப்பாடல்கொண்ட
 வாவிக்கமலமணநாறுஞ்சோலைமலையைக்கண்ணாற்
 சேவிக்கமலமறுமனமேயெழுசெல்லுதற்கே.
 | 61  | 
		
			| 
			செல்லுக்குவளைகுழனாட்டமென்றுதெரிவையர்பாற்பல்லுக்குவளைமுதுகாந்தனையும்புன்பாட்டுரைப்பீ
 ரல்லுக்குவளையுழும்பாண்டிநாட்டையடைந்துநுங்கள்
 சொல்லுக்குவளையுண்டார்க்கலங்காரர்க்குக்கூட்டுவினே.
 | 62  | 
		
			| 
			சூட்டோதிமஞ்சென்றுசொல்லாதென்காதலைத்தும்பியிசைப்பாட்டோதிமங்கையரும்பணியார்பண்டுகன்மழைக்காக்
 கோட்டோதிமமெடுத்தார்சோலைமலைக்கோவலனார்
 மாட்டோதிமஞ்சினங்காளுரைப்பீர்மறுவாசகமே.
 | 63  | 
		
			| 
			வாசம்பரந்ததுழாயுமென்பாடலுமாலையொளிவீசம்பரம்பசும்பொன்னுமென்வேட்கையும்வீற்றிருக்குந்
 தேசம்பரமபதமுமென்சிந்தையுந்தீவளியா
 காசம்பரவைமண்கண்டுண்டமாலலங்காரனுக்கே.
 | 64  | 
		
			| 
			அலங்காரன்சுந்தரத்தோளனழகனணிமுடியிவிலங்காரனேறுதிருவுடையானெட்டெழுத்துங்கற்றார்
 கலங்காரனங்கன்கணையாலெச்செல்வமுங்காதலியார்
 மலங்காரருந்துயர்மேவினுமாகுவர்வானவரே.
 | 65  | 
		
			| 
			வானவதாரணிசுந்தரந்தோளன்முன்மாவலியைத்தானவதாரணிதாவென்றமாயன்றராதலத்து
 மீனவதாரமுதலானவைவினையின்றியிச்சை
 யானவதாரறிவாரவரேமுத்தராமவரே.
 | 66  | 
		
			| 
			ஆமவரைப்பணித்தாள்வாரழகரயனுமையாள்வாமவரைப்பணியான்பணிபாதத்தைவாழ்த்துங்கொங்கை
 யேமவரைப்பணிபூணாள்சந்தேந்திழையாளுரைத்தால்
 வேமவரைப்பணியாதேயெனுமெங்கண்மெல்லியலே.
 | 67  | 
		
			| 
			மெல்லியலைப்பரியங்கனையாரும்வெறுத்துவசைசொல்லியலைப்பரியங்கவொட்டார்சுடர்மாமலையைப்
 புல்லியலைப்பரியங்கத்திலேறும்புயல்பதின்மர்
 நல்லியலைப்பரியங்கழற்றாமநயந்தபின்னே.
 | 68  | 
		
			| 
			பின்னிறப்பும்பிறப்புந்நரைமூப்பும்பிணியுமனைமுன்னிறப்பும்பிரித்தானிருந்தானவர்மூதிலங்கை
 மன்னிறப்புங்கக்கணைதொட்டசோலைமலையழகன்
 மென்னிறப்புண்டரிகத்திருத்தாளன்றிப்போற்றிலமே.
 | 69  | 
		
			| 
			போற்றியிராமவென்னார்சோலைமாமலைபோதவிடார்மாற்றியிராவைப்பகலாக்கிலார்வண்டுழாய்குழன்மே
 லேற்றியிராசதமாகவையாரென்னிடரையெல்லா
 மாற்றிபிராரன்னைமாரென்னைவாய்வம்பளக்கின்றதே.
 | 70  | 
		
			| 
			அளப்பதுமங்கையினீரேற்பதுந்தந்தளிப்பதும்பின்பிளப்பதுமங்கையில்வெண்கோட்டிற்கொள்வதும்பேருணவாக்
 கிளப்பதுமங்கையெனத்தோள்புணர்வதுங்கேட்கில்வையம்
 வளப்பதுமங்கையஞ்சேர்சோலைமாமலைமாதவரே.
 | 71  | 
		
			| 
			மாதவராலும்பராலறியார்மதுரைப்பிறந்தயாதவராலிலைமேற்றுயின்றாரிருந்தாழ்சுனையிற்
 போதவராலுகண்மாலிருஞ்சோலையிற்போம்பிறவித்
 தீதவராலன்றியெத்தேவராலுந்தெறலரிதே.
 | 72  | 
		
			| 
			அரியவரந்தந்தயன்முதலோர்க்கருள்செய்தவரைப்பெரியவரந்தமில்வாழ்வினராக்கித்தம்பேரருளாற்
 கரியவநந்தணர்கைதொழுமாலலங்காரர்வையத்
 துரியவரந்தரங்கத்துயர்தீர்க்கவுலாவுவரே.
 | 73  | 
		
			| 
			உலகுதிக்கும்படிசிந்தித்துத்தந்திவ்வுலகிலுறுநலகுதிக்கும்படிநின்றபிரானிடநானிலமு
 மிலகுதிக்கும்விசும்புந்தொழவோங்கியிறால்வருடை
 பலகுதிக்குந்தோறுந்தேன்பாயுஞ்சோலைப்பருப்பதமே.
 | 74  | 
		
			| 
			பருப்பதந்தாமன்னிநிற்பதுபாற்கடல்பள்ளிகொள்வதிருப்பதந்தாமம்பண்டிப்பேரதெலாமிளஞாயிறன்ன
 வுருப்பதந்தாமதர்க்கீயாமலன்பர்க்குதவழகர்
 திருப்பதந்தாமரைபோல்வாருகப்பதென்சிந்தனையே.
 | 75  | 
		
			| 
			சிந்திக்கலாங்கொழிக்குந்திருச்சிலம்பாற்றழகும்பந்திக்கலாபமயிலாடுஞ்சாரலும்பங்கயனோ
 மந்திக்கலாமதியாற்கரியாருறையான்பொருப்பும்
 வந்திக்கலாமெனிற்சந்திக்கலாமுயர்வைகுந்தமே.
 | 76  | 
		
			| 
			வைதாரையுமுன்மலைந்தாரையுமலர்த்தாளில்வைத்தாய்மொய்தாரையத்தனைத்தீங்கிழைத்தேனையுமூதுலகிற்
 பெய்தாரைவானிற்புரப்பானிடபப்பெருங்கிரியாங்
 கொய்தாரைவேய்ந்ததிருவடிக்கீழ்த்தொண்டுகொண்டருளே.
 | 77  | 
		
			| 
			கொண்டமருந்துங்கடைவாய்வழியுகக்கோழைவந்துகண்டமருந்துபராம்போதுன்பாதங்கருதறியேன்
 வண்டமருந்துளவோனேதென்சோலைமலைக்கரசே
 யண்டமருந்தும்பிரானேயின்றேயுன்னடைக்கலமே.
 | 78  | 
		
			| 
			அடைக்கலந்தானையிரந்தாள்புகலவவள்பொருட்டாற்படைக்கலந்தானைத்தருமன்கெடாமல்வெம்பாரதப்போ
 ரிடைக்கலந்தானையலங்காரனைச்சரணென்றடைந்தேன்
 முடைக்கலந்தானையுமப்போதயர்ப்பினுமுத்தியுண்டே.
 | 79  | 
		
			| 
			உண்டிறக்கும்புவனங்களைமீளவுமிழ்ந்திலையேற்பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந்தழல்போற்
 கண்டிறக்குஞ்சங்கரன்முதலோர்களைக்கண்டவரார்
 திண்டிறக்குஞ்சரஞ்சேர்சோலைமாமலைச்சீதரனே.
 | 80  | 
		
			| 
			சீரரிதாழ்பெரழின்மாலிருஞ்சோலையிற்செல்வர்செங்கட்போரரிதாள்புனைதாரரிதாகிற்றண்பூந்துளலின்
 றாரரிதாவுந்தழையரிதாகிற்றழைதொடுத்த
 நாரரிதாகிற்பிழைப்பதரிதாமெங்கணன்னுதற்கே.
 | 81  | 
		
			| 
			நன்னுதலைப்பணிபூண்மார்பில்வைத்துவிண்ணாட்டிருப்பார்மின்னுதலைப்பணிமேற்றுயில்வார்விடைவெற்பினிற்பார்
 மன்னுதலைப்பணியன்பரைவைக்குமலரடிக்கீழ்த்
 துன்னுதலைப்பணிசெய்வதெஞ்ஞான்றென்னுயர்தொலைந்தே.
 | 82  | 
		
			| 
			தொலைந்தானையோதுந்தொலையானையன்னைசொய்லான்மகுடங்கலைந்தானைஞானக்கலையானையாய்ச்சிகலைத்தொட்டிலோ
 டலைந்தானைப்பாலினலையானைவாணன்கையற்றுவிழ
 மலைந்தானைச்சோலைமலையானைவாழ்த்தென்மடநெஞ்சமே.
 | 83  | 
		
			| 
			நெஞ்சிலம்பாற்றமுடியாதுவேளெய்துநீளிரவுந்துஞ்சிலம்பாற்றுளியுந்நஞ்சமாஞ்சொரிகன்மழையை
 யஞ்சிலம்பாற்றடுதாரலங்காரரடிவிளக்குஞ்
 செஞ்சிலம்பாற்றருகேகிடத்தீருயிர்தேற்றுதற்கே.
 | 84  | 
		
			| 
			தேற்றுவித்தாற்புனறேற்றுநர்போற்றிருவெட்டெழுத்தான்மாற்றுவித்தானென்மயக்கமெல்லாமண்ணும்விண்ணுமுய்யப்
 போற்றுவித்தாரப்புயலலங்காரன்பொன்மேருவைப்போற்
 றேற்றுவித்தாரணியுஞ்சுந்தரத்திருத்தோளண்ணலே.
 | 85  | 
		
			| 
			அண்ணலைவான்மதிதோய்சோலைமாமலையச்சுதனைத்தண்ணலைவானவனைத்தெயவநாதனைத்தாளடைவா
 னெண்ணலைவான்பகையாமைவரோடிசைந்தின்னமுடற்
 புண்ணலைவானெண்ணினாய்மனமேயுன்புலமைநன்றே.
 | 86  | 
		
			| 
			புலமையிலேநிமிர்ந்தற்பரைப்போற்றிப்பொதுமகளைக்குலமையிலேகுயிலேகொடியேயென்றுங்கூர்விழியாம்
 புலமையிலேயென்றும்பாடாமற்பாடுமின்பாவலர்கா
 ணலமையிலேய்முத்தமார்சோலைமாமலைநம்பனையே.
 | 87  | 
		
			| 
			நம்பிநின்றேனுன்சரணாரவிந்தத்தைநன்னெஞ்சென்னுஞ்செம்பிநின்றேபொறித்தேனுனக்காளென்றுதெய்வக்குழாம்
 பம்பிநின்றேசெறிக்கும்பதங்காணப்பதறுகின்றேன்
 கொம்பிநின்றேன்சொரியுஞ்சோலைமாமலைக்கொற்றவனே.
 | 88  | 
		
			| 
			கொற்றவிராவணன்பொன்முடிவீழக்கொடுங்கண்டுஞ்சலுற்றவிராவணன்மாளயெய்தோனொண்பரதனிக்குச்
 சொற்றவிராவணன்மாலிருஞ்சோலைதொழுதுவினை
 முற்றவிராவணனற்றமிழ்மாலைமொழிந்தனனே.
 | 89  | 
		
			| 
			மொழித்தத்தைகொஞ்சமலையலங்காரமுன்னூற்றுவரையழித்தத்தைமைந்தர்க்கரசனித்தோன்டிநாட்டொடர்ந்தென்
 னுழித்தத்தைச்செய்தன்றிப்போகாவினையையொருநொடியிற்
 கழித்தத்தையென்சொல்லுகேன்றனக்காட்பட்டகாலத்திலே.
 | 90  | 
		
			| 
			காலமலைக்கும்புவனங்களைக்கரந்தாயுதிரங்காலமலைகுமைத்தாயழகாகமலத்துப்பஞ்சரர்
 காலமலைக்கும்புவிக்குமன்பாவுயிர்காயம்விடுங்
 காலவலைக்குங்கடுங்கூற்றைக்காய்ந்தென்னைக்காத்தருளே.
 | 91  | 
		
			| 
			அருளக்கொடியிடைப்பூமாதுநீயும்வந்தரளினுமமிருளக்கொடியநமன்வருங்காலத்திகழினுமாங்
 கருளக்கொடியழகாவலங்காரவன்கஞ்சனெஞ்சத்
 துருளக்கொடியவுதைத்தாயெனதுயிருன்னுயிரே.
 | 92  | 
		
			| 
			உயிர்க்கும்படிக்குமுன்னாயிரம்பேரென்றெறுத்தன்னைமார்செயிர்க்கும்படிக்குநின்றேனென்செய்கேன்செழுந்தேவர்களு
 மயிர்க்கும்படிக்குறளாமழகாவலங்காரநெய்க்குந்
 தயிர்க்கும்படிக்குஞ்செவ்வாய்மலர்ந்தாய்நின்னைத்தாள்பணிந்தே.
 | 93  | 
		
			| 
			பணிபதிவாடநின்றாடினநூற்றுவர்பாற்சென்றனபணிபதினாலுபுவனமுந்தாயினபாப்பதின்மர்
 பணிபதியெங்குமுவந்தனபங்கயப்பாவையுடன்
 பணிபதிமார்பனலங்காரன்பொற்றிருப்பாதங்களே.
 | 94  | 
		
			| 
			பாதகரத்தனைபேருங்கனகனும்பன்னகத்தாலேதகரத்தனையற்கருளாளியையெட்டெழுத்து
 ளோதகரத்தனைசுந்தரத்தொளுடையானைநவ
 நீதகரத்தனைச்சேர்ந்தார்க்குத்தேவருநேரல்லரே.
 | 95  | 
		
			| 
			அல்லலங்காரையுஞ்சேர்விக்குமைம்புலவாசையென்றும்பல்லலங்காநைந்துகோலூன்றியும்பற்றறாதுகண்டாய்
 மல்லலங்காரிகையார்மருடீர்ந்துவணங்குநெஞ்சே
 தொல்லலங்காரனைத்தென்றிருமாலிருஞ்சோலையிலே.
 | 96  | 
		
			| 
			சோலையிலாமையில்சேர்திருமாலிருஞ்சோலைநின்றான்வேலையிலாமையில்வேடங்கொண்டான்புயமேவாப்பெறாச்
 சோலையிலாமையிலங்குகண்ணாளவன்றேய்வத்துழாய்
 மாலையிலாமையின்மாலையுற்றாளந்திமாலையிலே.
 | 97  | 
		
			| 
			மாலைக்கரும்புசிறுகாறுகைக்கவருந்துமெங்களாலைக்கரும்புதன்னாசையெல்லாஞ்சொல்லிலாயிரந்தோட்
 டோலைக்கரும்புண்டொடமுடமாமதியூர்குடுமிச்
 சோலைக்கரும்புயலேயருளாயுன்றுளவினையே.
 | 98  | 
		
			| 
			துளவிலையார்பொன்னடிமுடிசூட்டித்தொண்டாக்கியென்னைவளவிலையாக்கொண்டநீகைவிடேன்மங்கலகுணங்க
 ளளவிலையாவலங்காரசமயிகளாய்ந்தவண்ண
 முளவிலையாயுருவாயருவாயவொருமுதலே.
 | 99  | 
		
			| 
			ஒருபாலமரரொருபான்முனிவருடனிருந்தெனிருபார்வையுங்கொண்டுவப்பதென்றேவிடபக்கிரிக்கும்
 பொருபாற்கடற்குமயோத்திக்கும்பொற்றுவராபதிக்கு
 நிருபாவைகுந்தமுநீவீற்றிருக்கின்றநீர்மையுமே.
 | 100  | 
		
			| 
			அலங்காரருக்குப்பரமச்சுவாமிக்கழகருக்குக்கலங்காப்பெருநகரங்காட்டுவார்க்கருத்தன்பினா
 னலங்காதசொற்றொடையந்தாதியைப்பற்பநாபப்பட்டன்
 விலங்காதகீர்த்திமணவாளதாசன்விளம்பினனே.
 | 101  |