|  civanjAna cittiyAr of aruNanti civam
 (para paksham, supaksham)
 
 சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)
 (ஆசிரியர் : அருணந்தி சிவாச்சாரியார்)
 
 
 
	
		Acknowledgements:Our sincere thanks to Mr. Subramanian Ganesan and
		Shaivam.org 
		volunteers for their help in the preparation of this etext.PDF and Web 
		versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 
		2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative 
		devoted to preparation of electronic texts of tamil literary works and 
		to distribute them free on the Internet. Details of Project Madurai are 
		available at the website 
		http://www.projectmadurai.org/  You are welcome to freely 
		distribute this file, provided this headerpage is kept intact. .
 
 
 உ
 திருச்சிற்றம்பலம்
 
 
 திருத்துறையூர் - அருணந்தி சிவாசாரியார்காப்புஅருளிச் செய்த
 சிவஞானசித்தியார் பரபக்கம்
 
	
		
			| ஒருகோட்டன் இருசெவியன் 
			மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்,
 உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்,
 திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே.
 | 1 |  
			| மங்கல வாழ்த்து சிவபெருமான்
 ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி
 அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற,
 மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர்
 மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப்,
 பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப்
 படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத்,
 தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத்
 தளராத பேரன்பு வளரா நிற்பாம்.
 | 2 |  
			| சத்திஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம்.
 இலயமொடு போகமதி கார மாகித்,
 தேசருவம் அருவுருவம் உருவ மாகித்
 தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்,
 பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம்
 அவைய ளித்துப் பிறப்பினையும் 
			ஒழித்திட்(டு),
 ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும்
 அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
 | 3 |  
			| விநாயகக் கடவுள்இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல்
 இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்,
 தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற
 தலைவனார் மலைமாது தன்னோ டாடிப்,
 பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு
 பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய 
			பண்டிக்,
 கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக்
 கருத்திலுற விருத்திமிகக் காதல் 
			செய்வாம்.
 | 4 |  
			| சுப்பிரமணியக் கடவுள்அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல்
 தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் 
			அருட்குருவாங் குருளை,
 திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன்
 சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் 
			தெய்வம்,
 பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில்
 பூநீர்கொண் டோவாது போற்றும் அடி 
			யார்கள்,
 கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன்
 கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் 
			வைப்பாம்.
 | 5 |  
			| மெய்கண்டதேவ நாயனார்பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன்
 ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து 
			நாறக்,
 கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங்
 கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் 
			கதிரோன்,
 விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய்
 மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
 புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம்
 எப்போதும் போற்றல் செய்வாம்.
 | 6 |  
			| அவையடக்கம்
 மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம்
 வையகத்தா கமம்வேத மற்று முள்ள,
 நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே
 நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு 
			மாறு,
 வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி
 வேறேழு மொன் றாகி நின்ற போது,
 சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற
 சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ.
 | 7 |  
			| நீடுபுகழ் உலகுதனில் 
			மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில்,
 கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும்
 குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் 
			போற்றி,
 மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர்
 அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென்,
 பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல்
 பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.
 | 8 |  நூற்சிறப்பு 
 
	
		
			| சுத்தவடி வியல்பாக வுடைய 
			சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும்,
 ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப்
 பலநெறிக ளுளவா னாற்அ£ற்,
 பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப்
 பின்னொருகால் அறிவின்றிப் பேதை 
			யோராய்க்,
 கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர்
 கனகவரை குறித்துப்போய்க் கடற்கே 
			வீழ்வார்.
 | 9 |  
			| நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும்
 
 போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே
 பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் 
			செல்ல,
 ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா
 ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி,
 கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல
 யத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு,
 தீதகல எமக் களித்த ஞான நூலைத்
 தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.
 | 10 |  
			| நூற்கருத்து
 இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும்
 ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் 
			செய்தி,
 முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா
 மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே,
 சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச்
 செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத்
 துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித்
 துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.
 | 11 |  1. உலகாயுதன் மதம் (12 -63) 
	
		
			| இந்திர புரோகிதன் 
			இயம்பும்ஒரு நூலின் தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல்
 சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க
 உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான்.
 | 12 |  
			| ஈண்டளவை காட்சிமன மாதிஇரு 
			மூன்றாய் வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா
 பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந்
 தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே.
 | 13 |  
			| சாற்றுபெய ரானவை 
			தலம்புனல் கனற்பின் காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின்
 நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும்
 போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே.
 | 14 |  
			| ஒத்துறு புணர்ச்சியின் 
			உருக்கள்பல வாகும் வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
 புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
 இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.
 | 15 |  
			| பூதமதின் ஒன்றுபிரி 
			யப்புலன் இறக்கும் நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல்
 ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால்
 ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே.
 | 16 |  
			| இப்படி யன்றிக் கன்மம் 
			உயிர்இறை வேறுண் டென்று செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
 ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
 தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே.
 | 17 |  
			| சேய்திடும் கன்ம மெல்லாம் 
			செய்தவர் தம்மைப் பற்றி எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
 மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
 ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.
 | 18 |  
			| மாய்ந்துபின் வயலி லிட்ட 
			வைதழை பலிக்கு மாபோல் ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி
 ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால்
 வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய்.
 | 19 |  
			| உருவமும் உணர்வும் செய்தி 
			ஒத்திரா கன்மம் என்னின் மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி
 வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய்
 பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
 | 20 |  
 
		
			| இன்பொடு துன்ப மெல்லாம் 
			எய்துவ கன்ம மென்னில் நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா
 மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை
 என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே.
 | 21 |  
			| காயத்தின் குணம தன்றிக் 
			கண்டதான் மாவுண் டாயின் மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும்
 நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை
 தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே.
 | 22 |  
			| அருவமே இறைவ னாகில் 
			அறிவின்றா காய மாகும் உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும்
 மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல்
 இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே.
 | 23 |  
			| பூதத்தே அன்ன மாகி 
			அன்னத்தால் உடம்பு புத்தி பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று
 வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம்
 கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே.
 | 24 |  
			| போகத்தை மண்ணிற்கண்டு 
			விட்டுப்போய் விண்ணிற்கொள்ள மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம்
 தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச்
 சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ.
 | 25 |  
			| வாழவே வல்லை வாமி 
			வலக்கைதா வென்னு யிர்க்குத் தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்
 கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே
 சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே.
 | 26 |  
			| ஈசனார் அயனார் மாலோ 
			டிந்திரன் தெரிவை மார்பாற் பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£
 ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின்
 வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின்.
 | 27 |  
			| தையலார் ஊட லாடத் தாமவ 
			ரோடுங் கூடிச் செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி
 மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா
 மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே.
 | 28 |  
			| வாசமார் குழலி னார்கள் 
			மணிஅல்குல் தடத்தே மூழ்கி நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு
 தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே
 மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ.
 | 29 |  
			| மதிநிலா நுதலா ரோடு 
			மணிநிலா முன்றி லேறி முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த
 கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும்
 புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே.
 | 30 |  
			| ஊடுவ துணாவ துற்ற கலவிமங் 
			கையரை யுள்கி வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
 கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய்
 நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர்.
 | 31 |  
			| வீட்டினை உளதென் றோடி 
			மெலிவதிங் கென்னை வீடு காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர்
 நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும்
 ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே.
 | 32 |  
 
		
			| உலகாயதன்மத மறுதலை
 உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ,
 பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக்,
 கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய்,
 மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே.
 | 33 |  
			| இடித்து மின்னி இருண்டு 
			மேக மெழுந்த போதிது பெய்யுமென், றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண்,
 டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று,
 முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே.
 | 34 |  
			| காண்ட லோஅநு மான மாவதும் 
			காட்சி மன்னதும் காட்சியேல்,பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை,
 மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென்,
 றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே.
 | 35 |  
			| பழுதி லாமறை கண்ட நூல்பழு 
			தின்றி யுண்டது பாரின்மேன், மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே,
 அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின்,
 எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே.
 | 36 |  
			| பூத மானவை நித்த மென்று 
			புகன்ற தென்னை உருக் களாய், ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும்,
 காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம்,
 சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே.
 
 | 37 |  
			| நீரின் வந்தெழு கொப்புள் 
			நீரது வாயெ ழும்நிகழ் பூதமும் ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும்
 தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும்
 பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே.
 | 38 |  
			| கூறு சேர்வையின் வந்த 
			போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென்,
 நூறு காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ,
 தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே.
 | 39 |  
			| ஆன ஐம்பொறி உண்டி 
			நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல்,
 வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய்,
 யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே.
 | 40 |  
			| ஐந்து நான்கொரு மூன்றி 
			ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம்,
 புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான்,
 தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா.
 | 41 |  
			| அறிவு பூதம தென்னில் வேறு 
			புறத்த தறிந்தமை கண்டடிலம் செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ
 குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ
 பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே.
 | 42 |  
			| அறிவு டற்குண மென்னில் 
			ஆனைய தததி அந்தம் எறும்பதா உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே
 சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும்
 பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே.
 | 43 |  
			| போத மம்மெலி வவகி யும்மலி 
			பூத மானவை கூடலிற் பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின்
 ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும்
 நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே.
 | 44 |  
			| இயல்பு காண்இவை யென்னில் 
			வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து செனிப்பதென்,
 இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால்,
 மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே.
 | 45 |  
			| கார ணம்அவை யென்ற தென்னை 
			கடாதி போல்நிகழ் காரியம், நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம்,
 போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும்,
 நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே.
 | 46 |  
			| பூத மேவு புணர்ச்சி 
			யேபுரி காய காரண மாகுமேல் காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ
 ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்)
 நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே.
 | 47 |  
			| கந்தம் வெம்மை கலந்தி 
			டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர்
 தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும்
 சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே.
 | 48 |  
			| இன்பம் எய்தி இருந்து 
			நீவினை இல்லை இங்கியல் பென் றிடில், துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல்,
 முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந்,
 தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே.
 | 49 |  
			| அநாதி யேலமை வின்றெ 
			னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன் அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா
 அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து)
 அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே.
 | 50 |  
			| காணொ ணாகர ணங்க 
			ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில் காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே
 காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக்
 காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே.
 | 51 |  
			| அங்கி யானது தானு மொன்றை 
			அணைந்து நின்று நிகழ்ந்திடும் பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து)
 எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும்
 அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே.
 | 52 |  
			| அறிவு தானுட லத்தின் 
			வேறது வாயி றந்து பிறந்திடின் அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின்
 அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந்
 தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண்.
 | 53 |  
			| இறந்தி டும்அறி வேபி 
			றந்திடு மென்ப திங்கிசை யாதெனின், உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர்,
 பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின்,
 மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே.
 | 54 |  
			| கரணம் வாயு விடத்த டங்க 
			அடங்கி வந்தெழு காரியம் மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல்
 கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும்
 தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே.
 | 55 |  
			| பூத மானவை காரி யங்கள் 
			பொலிந்து மன்னி அழிந்திடும் ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே
 பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில்
 போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே.
 | 56 |  
			| வேதன் நாரணன் ஆர ணம்மறி 
			யாவி ழுப்பொருள் பேதைபால், தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு),
 ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ,
 காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே.
 | 57 |  
			| பொன்கு லாவு மணிக்க 
			லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா, மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள்,
 புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம்,
 என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே.
 | 58 |  
			| தோலி ரத்தம் இறைச்சி மேதை 
			யெலும்பு மச்சை சுவேதநீ ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம்
 நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம்
 சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே.
 | 59 |  
			| ஆசை யுற்றுழல் சூக ரங்கள் 
			அசுத்த மேவி அளைந்துதின் றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ
 மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண்
 ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே.
 | 60 |  
			| குரோத மேகுண மாயி 
			ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார் அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார்
 பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ
 விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே.
 | 61 |  
			| காம மாதி குணங்க ளைச்சுக 
			மென்று கொண்டனை காதலால் தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும்
 நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம்
 சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே.
 | 62 |  
			| படிக்கு நூல்கள் சிவாக 
			மம்பசு பாசமொடு பதித்திறம், எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே,
 விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள்,
 முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே.
 | 63 |  2. சௌத்திராந்திகன் மதம் (64-134)
	
		
			| நீதியார் வேத நூலின் 
			நெறியலா அறங்கள் நாளும் ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப்
 போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச்
 சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும்.
 | 64 |  
			| முழுதுணர்ந் துலகிற் 
			கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித்
 தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான
 வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான்.
 | 65 |  
			| மருவிய அளவை காட்சி 
			மானமென் றிரண்டி வற்றறல் கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம்
 வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித்
 தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே.
 | 66 |  
			| உருஇயல் பூத மோடங் 
			குபாதாய ரூப மாகும் அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின்
 மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின்
 இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே.
 | 67 |  
			| மண்புனல் அனல்கால் பூதம் 
			வலிகந்தம் இரதம் வன்னம் எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி
 உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக்
 கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே.
 | 68 |  
			| குற்றவீ டராக மாதி 
			குணங்களைக் குறைதத லாகும் மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும்
 சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய்
 உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம்.
 | 69 |  
			| ஒருவனென் றோதப் பட்டான் 
			உருவாதி ஐந்தும் கூடி வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும்
 உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று
 தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே.
 | 70 |  
			| காரண காரி யத்தின் 
			தொடர்ச்சியாய்க் கால மூன்றின் சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை
 ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று
 தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே.
 | 71 |  
			| தோன்றிய பொருள்க ளெல்லாம் 
			நாசமாம் என்று சொல்லும் மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை
 போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து
 வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே.
 | 72 |  
			| உள்வழக் கில்வ ழக்குள் 
			ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த
 உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம்
 உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே.
 | 73 |  
			| உணர்வுசார்ந் துணர்வு 
			திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை
 உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை
 உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே.
 | 74 |  
			| சொன்னநால் வகையு மின்றிச் 
			சொல்லிடும் பொருள்க ளெல்லாம் என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா
 மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு)
 உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே.
 | 75 |  
			| ஈங்குவவன் செயற்கு வாரா 
			இயம்பிய பொருள்க ளெல்லாம் தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல்
 ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம்
 நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே.
 | 76 |  
			| போதமுண் டுயிர்கட் 
			கென்னில் வாயிலைம் புலனும் நூலும் ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில்
 ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது
 கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே.
 | 77 |  
			| அறிந்திடா வாயி லின்றேல் 
			அறிவின்றாம் ஐந்தும் பற்றி அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக
 அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை
 அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே.
 | 78 |  
			| ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு 
			என்று சொல்ல ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும்
 தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப்
 போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே.
 | 79 |  
			| உயிரினை அருவ தென்னில் 
			உருவுடன் உற்று நில்லா(து) உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து)
 உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும்
 உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே.
 | 80 |  
			| எங்குமாய் நின்ற தான்மா 
			என்றிடின் எங்கும் இன்றாம் தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின்
 மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே
 அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே.
 | 81 |  
			| சாற்றிய காலம் இங்குத் 
			தங்கிய வாறி தென்னை(னில்) தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென்
 போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம்
 தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே.
 | 82 |  
			| எனக்குநீ கிழக்கி ருந்தா 
			யாகின்மேற் கென்றா யென்பால் எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத்
 தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத்
 தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே.
 | 83 |  
			| உலகினைப் படைத்தான் 
			என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து)
 உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம்
 உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே.
 | 84 |  
			| உள்ளது கடாதி போல 
			உதிப்பித்தான் என்று ரைக்கின் மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது
 வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே
 தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே.
 | 85 |  
			| இல்லது கருணை யாலே 
			இயற்றினன் இறைவன் என்னில் கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற
 வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம்
 பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே.
 | 86 |  
			| பெறுவதிங் கென்பபடத்துப் 
			பெற்றது விளையாட் டென்னில் சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின்
 உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை
 அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே.
 | 87 |  
			| உருவொடு நின்றா னென்னின் 
			உருவமுன் படைத்தார் வேண்டும் உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும்
 உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின்
 உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே.
 | 88 |  
			| அருவெனில் பவத்தி 
			னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி
 பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும்
 கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே.
 | 89 |  
			| எங்கள்நூல் அநாதி யயக 
			இறைவனுண் டென்னு மென்னின் உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும்
 அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே
 இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே.
 | 90 |  
			| உற்றெழு மரங்க ளாதி 
			உயிரின்றிப் பூத ரூபம் பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப்
 புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும்
 மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே.
 | 91 |  
			| கொண்றிட லாகா தென்றும் 
			கொன்றவை கொண்டு நாளும் தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம
 ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ
 சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே.
 | 92 |  
			| ஓங்கிய உருவ மோடும் வேதனை 
			குறிப்பி னோடும் தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப்
 பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்
 அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம்.
 | 93 |  
			| அழித்திடும் அராக மாதி 
			அகற்றிநல் லறங்கள் பூரித்(து) இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப்
 பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம்
 ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே.
 | 94 |  
			| சௌத்திராந்திகன் மத 
			மறுதலை
 அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ
 னென்றிங் கறியாது புத்தநீ அறைந்தா 
			யென்றும்,
 அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை
 ஒன்றொன்றா அனைத்தினையும் அறிந்தா 
			னென்னின்,
 அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா
 அளவிலா ஞானத்தால் அறியின் ஞானம்,
 அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி
 அழிதலால் அறிந்த மையின் றாகு மன்றே.
 | 95 |  
			| சிலபொருளை அறிந்தவற்றின் 
			திறத்தே யொட்டிச் சிந்திப்பன் எப்பொருளும் என்னிற் 
			சென்று,
 பலபொருளாய் ஒன்றுபல பேத மாகிப் பயின்றுவரு
 மாதலாற் பார்க்கு மாறென்,
 உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின்
 உற்றுணர்தல் ஆராய்தல் தௌ¤த லுண்டாய்,
 நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின்
 நின்றிடா நின்பையெல்லாம் நினைப்ப 
			தெங்கே.
 | 96 |  
			| முத்திநிலம் கண்டறங்கள் 
			மொழிந்தா னாயின்முதல் முழுதும் பொன்றிப்பின் மொழிந்த 
			வண்ணம்,
 ஒத்திடுந்தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன்
 ஒருவன் உலகினில்வந் திதுதீதென் 
			றுரைத்தால் ஒக்கும்,
 செத்ததுபின் னென் றுரைக்கில் கதியில்
 செல்லாத் தேரனுரை நீர்பெருகிச் சென்றா 
			றாகும்,
 அத்தினள வறியாதிக் கரையோர் தம்மை
 யக்கரைக்கே செல்லவிடும் ஆசை யாமே.
 | 97 |  
			| நீர்போல நின்றுயிர்கட் 
			களித்தி டாதே நெருப்பாய துயர்ப்பிறப்பின் நிகழ்ந்து 
			நின்று,
 பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட
 பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி
 நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா
 லொக்கும் நீள்பாவக் குழியில்விழு 
			நீர்மை யாகும்,
 ஆரோவிங் கவனொப்பார் அறத்தை
 யாக்கப் பிறந்தறமாக் கினனென்னில் அடங்க 
			வாமே.
 | 98 |  
			| அலகிறந்த யோனிகளில் 
			புகுந்த தெல்லாம் அறத்தை அளித் திடவென்னில் அவற்றி 
			னெல்லாம்,
 நிலவுவது கன்மத்தா லாகு மன்றி
 நினைந்ததோர் இச்சையினால் நிகழ்ந்தா 
			னாகில்,
 உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும்
 ஒருத்தி வயிற் றினிலிருந்தங் குதரந் 
			தள்ளித்,
 தலமதில்வந் தானென்னில் தாயைக்
 கொன்றான் தருமத்தை யின்றெனக்குச் 
			சாற்றி டேலே.
 | 99 |  
			| அரியினொடு நரிஉழுவை ஆதி 
			யாக ஆனபோ தறந் திரிந்து கோற லாதி,
 பரிவினொடும் செய்தனனாம் இல்லை
 யாகிற் பசிதனக்குத் தின்பதவன் பழுதை 
			யோதான்,
 கருதிலவன் பரதுக்க துக்க னாகிற்
 கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித்,
 திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன்
 செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.
 | 100 |  
			| ஒருபொருளைத் தேடிஅதற் 
			குரையுந் தேடி உரைப்பதன்முன் உணர்விறக்கும் உனக்கு 
			நூலென்,
 மருவிவருஞ் சந்தான வழியில் என்னில்
 வாயுரைத்த தேயுரைத்து வழங்குமாகும்,
 பெருகுவது கெட்டென்னில் அதுபோ
 லாம்பின் பித்துரைத்த தறியாது பேதை 
			சொல்லும்,
 தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ
 டிறுதி தான் விருத்த மின்றியது சாற்றி 
			டாயே.
 | 101 |  
			| முன்னாகப் பலஅறங்கள் 
			பூரித்தெம் இறைவன் முழு துணர்ந்திங் கருளினால் உயிர்கள் 
			முத்தி அடையப்,
 பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று
 பேசினாய் இவன்முன்பு பேரறங்கள் 
			புரிநூல்,
 சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன்
 என்னில் அவனுக்குச் சொன்னாரார் 
			எனத்தொடர்ச்சியாகி,
 அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன்
 இன்றாம் ஆரோஉன் பாழியிருப் பார்இதனை 
			அறையே.
 | 102 |  
			| இந்நூலைச் சொன்னவன்தான் 
			இங்கிருந்தா னென்னில் இவனிருத்தி யேத்துமவன் 
			எங்கிருந்தா னெவனோ,
 அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை
 அடைவுதரின் முடிவின்கண் அநாதி போதன்,
 சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ்
 சுருக்கியூன் தவம்புரியச் சொல்லுவ 
			தெல்லோரும்,
 உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன்
 புலாலோ டுண்பானோர் ஊன்பிரிய 
			னுரைத்ததொரு நூலோ.
 | 103 |  
			| முன்நூலும் வழிநூலும் 
			சார்பு நூலும் மூன்றாகும். உலகத்து மொழிந்த நூல்கள்,
 இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில்
 இந்நூல்கா ணென்நூலென் றியம்ப மாட்டாய்,
 உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே
 உலட்டுநூல் பருத்திநூல் சிலம்பி 
			நூல்கள்,
 அந்நூலு மல்லாதே பொய்ந் நூல்
 கொண்டிங் கறநோற்றுத் திரிந்தவா றழகி 
			தாமே.
 | 104 |  
			| புத்தனவன் பொன்றக்கெட் 
			டுப்போனா னென்று போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் 
			புத்தா,
 செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச்
 செய்தவர்க்கும் புண்ணியமா மென்று 
			செப்பின்,
 நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி
 நினைந்துதரு வானுமுளன் உனக்கிவ்வா 
			றில்லை,
 வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா
 லதற்கு மருவுதிரி நெய் கூட்டு 
			மதிகேடுன் வழக்கே.
 | 105 |  
			| நூலுரைத்தான் ஒருவனுளன் 
			என்றநுமா னத்தால் நூல்கொண்டிங் கறிந்தாற்போல் 
			நூலா நூலின்,
 பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான
 மென்னிற் பரலோக பாதாள லோகங்க ளொருசொல்,
 லாலுரைத்த நூலின்றி அறையா யின்றேல்
 அவையறிந்த படியெனுன தநுமான மன்றே,
 மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை
 காட்சி யநுமானம் விட்டபொருள் 
			விளக்குவதா கமமே.
 | 106 |  
			| எப்பொருளும் அநித்தமென 
			இயம்பிடுவை அநித்தம் இல்லதற்கோ உள்ளதற்கோ உளதிலதா 
			னதற்கோ,
 செப்பி டின்இல் லதற்கில்ல தென்று மில்லை
 சென்றடைவ துள்ளதற்கேல் உள்ளதென்று 
			முண்டாம்,
 அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக்
 கென்னில் உளதிலதா காதிலதும் உள்ள தாகா,
 திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக்
 காட்டாய் எனில்தோன்றும் பொருள்நின்றிங் 
			கிறுதி யாமே.
 | 107 |  
			| அங்குரம்வித் 
			தின்கேட்டில் தோன்றுமது போல அனைத்துருவுங் கெட்டுவழி யாகு 
			மென்னின்,
 அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம்.
 அநித்தமெனும் உரைமறந்தாய் அருகனுமா 
			னாய்நீ,
 இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச்
 செல்லா திறந்ததே எழுந்தபடி நில்லா 
			தென்னின்,
 மங்கியிடா தேபால தருணவிருத் தையாய்
 வரும்வடிவு திரிந்து நின்று மாயுங் 
			காணே.
 | 108 |  
			| உடல்பூத மெனில்ஒன்றுக் 
			கொன்றுபகை ஒன்றா வுதிரசுக் கிலமென்னின் 
			மரத்தினுளுக் கல்லி,
 னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய்
 இருவினைகா ணெனின்வினைக ளிரண் டுருவாய் 
			நிற்கும்,
 திடமாக வன்னமுரு வெனின்உண்ண
 வுண்ணச் சென்றுவள ருங்காயந் தேயமுணர் 
			வென்னின்,
 மடவோனே அருவுணர்விங் கசேதனமாய்
 உருவாய் வளராது வருமில்லா 
			தெனின்மலர்வான் வருமே.
 | 109 |  
			| என்றுமிலா தொன்றின்றாய் 
			வருமுருவம் வித்தின் எழுரம்போ லெனின்வித்தி 
			னுண்டாய்நின் றெழுங்காண்,
 நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை
 யென்னின் நெற்கமுகாய் நீளாது நெல்லாயே 
			நீளும்,
 ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா
 ரணம்பெற் றுதிப்பதுகா ரியமதுவ 
			முன்னதாகும்,
 மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து
 மருவியுள தெனும்உரையும் மறந்தனையோ 
			இன்றே.
 | 110 |  
			| உருவமெலாம் பூதவுபா தாய 
			சுத்தாட் டகவுருவ மென்னின் நீ உலவத்துக்கு,
 மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம்
 வன்னம்இலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந்,
 தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண்
 கந்தந் தானில்லைத் தலத்தினுக்குச் 
			சலமனல்கால் கூடி,
 வருவதிலை இந்திரிய விடயமான
 மாபூதங் களுமறியாய் மதிகெட்டாயே.
 | 111 |  
			| மருத்தெண்ணெய் 
			தனின்மருந்து நின்றாற் போல மறைந்தெட்டும் சூக்குமமாய் மருவு 
			மென்னில்,
 திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற்
 போலச் சேர்ப்ப வன்வே றுண்டெல்லா 
			வுருவும் எட்டும்,
 பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க
 ளொன்றின் குணமொன்றிற் புகாதறைகை 
			பொருளறியாய் பூத,
 உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு
 காட்டா யுபாதாயம் பூதகுணங் குண குணியா 
			முலகே.
 | 112 |  
			| அழிந்துணர்வை உணர்வுதரு 
			மெனின்அழிந்த தக்கா தாமுணர்விற் பொருள்வினைகள் அணையா 
			வாகும்,
 அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா
 லத்தே அறிவிரண்டு நில்லாதங் கறக்கே 
			டின்றி,
 அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா
 நித்தம் அடையும்உணர் வுக்கநித்த மாயே 
			செல்லா,
 தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு
 மென்னின் ஆம்பொருள்வே றழிந்துசத்தி 
			கிடந்தாக்கும் அவையே.
 | 113 |  
			| கேடிலாச் சந்தானத் 
			தேபலிக்கு மென்று கிளக்கும்நீ சந்தானம் நித்த மாகும்,
 ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை
 மென்னின் ஒழுகுநீ ரிட்டதெல்லா 
			முடன்கழிதல் போலத்
 தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ்
 ஞானஞ் சென்றவுணர் வோடேகு நின்றுணர்வின் 
			ஏயா,
 நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந்
 தோடு நிகழுணர்வுங் கேடின்றி நிறைந்து 
			செலுங் காணே.
 | 114 |  
			| சந்தானங் காரணமோ காரியமோ 
			இரண்டின் தன்மை யதோ காரணமுங் காரியமும் நித்தம்,
 வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின்
 அதற்கும் வருநித்தந் தோற்றக்கே டடை 
			தலின்மற் றொன்றேல்,
 ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம்
 அடைபொருளாம் அறிவும்அறி வடைவு 
			மின்றிச்,
 சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித்
 திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே.
 | 115 |  
			| ஒருகாலத் துணர்வுகெட்டா 
			மெனின்உதிப்பீ றொன்றாம் ஒருபொருளின் திரிவுனக்குக் 
			கால மானால்,
 வருகால நிகழ் காலங் கழிகால மென்று
 வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவால் 
			இன்றேல்,
 திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம்
 செயல்மூன்றும் ஒரகணத்தே சேரு மென்னில்,
 தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில்
 தள்ளூசி யுங்கால மூன்றினையந் தருமே.
 | 116 |  
			| உணர்வுகா ரணமுணர்வுக் 
			கென்னின் நித்தம் உணர்வுக்குண் டாகிநின் 
			றுணர்வையுதிப் பியாதிங்,
 குணர்வுசந் தான விடத் தொழிந்தாற்
 பின்னை யுண்டாகா துடலுணர்வுக் குபாதாக 
			மென்னின்,
 உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும்
 உடலுணர்வின் வினையினால் உணர்வுதிக்கு 
			மென்னில்,
 உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ்
 செய்தி உணர்வைவினை தரினொருவன் 
			செயல்வினையின் றாமே.
 | 117 |  
			| வினையுணர்வு தரும்வினையை 
			உணர்வுதரு மென்றும் விளம்பின்நீ உணர்வுபோல் 
			வினையி னுக்கு,
 நினைவுவரும் ஒன் றையொன்று நிகழ்த்தி
 டாபின் நிலையின்மை யானிகழ்த்திக் 
			கெடுதல் செய்யா,
 கனல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய்
 தாற்போல் கருத்துவினை யிற்றோன்றிக் 
			கழிக்கும்வினை யென்னின்,
 முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும்
 முன்பின் உதியாது முகிழ்நெருப்பின் 
			விறகுதியா வாறே.
 | 118 |  
			| பேயுநர கரும்சரரும் 
			பிரமருமாய் உலகிற் பிதாமாதா ஆதார மொன்று மின்றிக்,
 காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங்
 காரியமாய் வருதலினால் காரணமுண் டாகும்,
 ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம்
 வடித் ததோ வடிவுசெய்து வைத்தாரும் 
			உண்டோ,
 ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய்
 உலகுக் காதிதுணை நிமித்தகா ரணமறிவ 
			தறிவே.
 | 119 |  
			| உருவாகி கந்தங்கள் 
			ஐந்துங் கூடி ஒருவன்வேறொருவனிலை யென்றுரைக்கும் புத்தா,
 உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன
 உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார்,
 உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல்
 உணர்வுபிறி தினையுணர்த்தித் தனை யுணர்த்து 
			மென்னின்,
 உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும்
 உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே.
 | 120 |  
			| காயமுடன் இந்தியம் 
			மனம்நான் என்று கதறுவாய் காயம்உறக் கத்தறியா வாகும்,
 வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா
 மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர 
			வறியா(து),
 ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன் றறிந்தாங்
 கவைநானல் லேனென்றும் அறிந்துமனத் தாலே,
 ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே
 இசைவித்துக் காயத்தால் இயற்றுவதான் மாவே.
 | 121 |  
			| கழிந்தஉணர் வேபின்னும் 
			யானறிந்தே னென்று கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே,
 மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால்
 வாய்தான் மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல,
 எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே
 னென்ற தெதுஅதுகாண் உயிருணர்வால் வாக்கால் மற்றை,
 ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங்
 குணர்வினுக்கும் ஆதார மாய் நிற்கும் உயிரே.
 | 122 |  
			| இந்திரிய வீதிஎழுஞ் 
			சித்தம் நெஞ்சத் தெழுஞ்சித்த மென்றிரண்டு மொன்றுகெட்டே யொன்று,
 வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின்
 வாய்திறவார் நனவு கண்ட படிகனவிற் காணார்,
 அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல்
 அறிகனவும் இறந்துணர்வும் அழிந்துறக்கம் அடைந்தால்,
 உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப
 உயிர்கனவு நனவினையும் உணருங் காணே.
 | 123 |  
			| ஒருகாலத் தோரிடத்தில் 
			ஒருணர்வேல் செவிதான் ஒன்றுணரா திருசெவியும் உணரும் ஓசை,
 ஒருகாலத் திரு கண்ணும் இருசெவியும் மனமும்
 ஒருவனைக்கண் டவனுரை கேட் டுணர்ந்திடுமைம் 
			பொறியும்,
 ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள்
 ஒன்றொன்றா வுணர்வதுள் ளுணர் வைந்தும் உணரா,
 ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக்
 குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.
 | 124 |  
			| அருஉணர்வு மாய்ஆறும் மாறி 
			மாறி அங்கங்கேதோன்றியிடின் அகத்துநிலை யின்றி,
 உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா
 துறக்கத்தின் உடல் தட்ட அழைப்ப,
 வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில்
 வாயில்வினை யறிந்தெழுப்ப ஆயுஅறி யாதாம்,
 திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ்
 சென்ற பொழு தாலுணர்வு நின்றநிலை 
			செப்பே.
 | 125 |  
			| இச்சைவெறுப் 
			பியற்றலின்பத் துன்பம் ஞானம் இவை யணவின் குறியாகும் இவற்றில் இச்சை,
 நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு
 நான்நுகர்ந்த கனியினின மென்று நச்சல் பின்பு,
 மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும்
 இவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே,
 நிச்சய கர்த் தாஒருவ னுளனென்று நல்லோர்
 நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே.
 | 126 |  
			| எப்பொருட்டும் இரந்தரமாய் 
			இடங்கொடுத்து நீங்கா திருளொளிதா னன்றிஇரண் டினுக்குமிட வகையாய்,
 ஒப் பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க
 நிற்கும்வா னுயிர்முன்னே கொன்னோம்,
 செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித்
 திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத்,
 தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி
 தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே.
 | 127 |  
			| காரியமாய் உலகெலாம் 
			இருத்த லாலே கடாதிகள்போல்காரியகர்த் தாவொருவன் வேண்டும்,
 ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம்
 அறைந்துயிர்கட் கறிவுசெயல் அளிப்பதுநூல் அந்நூல்,
 கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர
 லான்முன்னே குற்ற மின்றிச்,
 சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும்
 செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளனென் 
			றறியே.
 | 128 |  
			| மரங்களுயி ரல்லவென்று 
			மறுத்துச் சொன்னாய் வாடுதல்பூ ரித்தலால் மரங்களுயி ராகும்,
 திரங்குநீர் பெறாதொ ழியிற் பெறிற்சிரத்தை சேரும்
 சீவனல எனினுலகில் சீவ னெல்லாம்,
 உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊன்பெரு றாவேல்
 உலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள்,
 கரத்சினை முட்டைகட்கு வாயிலின்று வாயில்
 கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழல்மரங்கள் உயிரே.
 | 129 |  
			| ஒருமரத்தின் உயிரொன்றேல் 
			கொம்பொசித்து நட்டால்உய்யுமுயிர் முன்றுபல வாமோ வென்னில்,
 கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு
 கண்கலந்து கொள்ளு முயிர் அண்டம் வேர்ப்புத்,
 தருபிறப்புச் சராயுசங்கள் சநந மும்பெற் றாற்போல்
 தானடையும் உற்பிச்சம் தலநடவா வென்னில்,
 பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய்
 பிறப்பின்விதம் அநேகங்காண் பேசுங் காலே.
 | 130 |  
			| தின்னுமது குற்றமிலை 
			செத்ததெனும் புத்தா தின்பை யெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் 
			பாவம்,
 மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு
 வதைத்தொன்றை இடாமையினால் வதைத்தவர்க்கே பாவம்,
 என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர
 என்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ,
 உன்னுடலம் அசுசியென நாணி வேறோர்
 உடலுண்ணில் அசுசியென உணர்ந்திலைகாண் நீயே.
 | 131 |  
			| குடைநிழலும் கண்ணாடிச் 
			சாயையும்போல் பிறப்புக் கொள்ளும்உணர் வென்னல்கா ரணமழிய அழியும்,
 அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக்
 கிங்கே அவையழிந்தால் அருங்கதியின் அணையுமுணர் 
			வின்றாம்,
 இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல்
 எழுமுணர்வு கன்மத்தால் நினைந்துகதி யென்னில்,
 மிடைசினையும் அந்தனுமுட் டையுமுயிர்விட்
 டக்கான் மேவுவதென் பிறப்பினுடல் விடாது கன்ம 
			வுணர்வே.
 | 132 |  
			| ஐந்துகந்தம் சந்தானத் 
			தழிதல்பந்த துக்கம் அறக் கெடுகை முத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம்,
 ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன
 அணைபவர்வே றில்லை யென்றாய் ஆர்க்குமுத்தி யின்பம்,
 ஐந்திலுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண்
 டாகவே அவ்விடத்தும் உருவாதி கந்தம்,
 ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தை
 தரும் முத்தியின்பம் அறிந்திலைகாண் நீயே.
 | 133 |  
			| அநாதிமுத்த னாய்ப்பரனாய் 
			அசலனா யெல்லா அறிவு தொழில் அநுக்கிரக முடையஅரன் கன்மம்,
 நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத
 நுழைவித்து மலங்களெல்லாம் நுங்க நோக்கி,
 மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை
 வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால்,
 இனாத பிறப் பினில்நின்று மெடுத்து மாறா
 இன்ப முத்திக் கேவைப்பன் எங்கள்முத்தி யிதுவே.
 | 134 |  3. யோகாசாரன் மதம் (135 -137 )
	
		
			| போதமே பொருளாய்த் 
			தோன்றும் பொருளதாய் எழலாற் போதம்வாதனை அதனாற்கூடி வருதலால் வடிவிலாமை
 ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று)
 ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன்.
 | 135 |  
			| யோகாசாரன் மத மறுதலை
 போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம்
 வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற்
 காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம்
 வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க கருத்தே.
 | 136 |  
			| அறிவதே பொருள தாயின் 
			அகம்சடம் என்ன வேண்டும் பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில்
 உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும்.
 | 137 |  4. மாத்தியமிகன் மதம் (138 -140 )
	
		
			| அவயவம் பொருளாய்த் 
			தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை, இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம்,
 அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று,
 நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான்.
 | 138 |  
			| மாத்தியமிகன் மத மறுதலை
 கடத்தினில் அவயவங்கள் படத்தினில் புகாமற் காத்தும்,
 படத்தினில் அவயவங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும்,
 இத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி,
 உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே.
 | 139 |  
			| கருவியும் ஔ¤யும் வேறு 
			கருதிடுங் கருத்தும் நிற்கப் பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம்
 மருவிடம் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால்
 பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே.
 | 140 |  5. வைபாடிகன் மதம் (141 -142 )
	
		
			| அரிசனம் நூறு கூட 
			வருணம்வந் தெழுந்தாற் போல விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும்
 தெரிசன மிதுவே யென்று தௌ¤ந்திடும் தேரர் வீடு
 பரிவொடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான்.
 | 141 |  
			| வைபாடிகன் மத மறுதலை
 பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும்
 தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம்
 அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா
 உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே.
 | 142 |  6. நிகண்டவாதி மதம் (143 -164 )
	
		
			| வாச மாமலர் அசோகு பேணிமறை 
			நீதி யோடுமலை யுந்தவத்(து), ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்,
 பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினொடு பீலிமேல்,
 நேச மாயவை தரித்துளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம்.
 | 143 |  
			| ஈறி லாதன அநந்த ஞானமுதல் 
			எண்கு ணங்களெனும் ஒண்குணம், மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே,
 வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர்,
 ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன்.
 | 144 |  
			| கருவி கண்படு தொடக்கொ 
			ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம், பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந்த வக்கடவுள் பீடினால்,
 மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும்,
 குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான்.
 | 145 |  
			| பசித்தல் தாகபய செற்ற 
			மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய், நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும்,
 புசிப்பு வந்திடு பிறப்பு றக்க மிவை விட்டொ ரண்ணகுண பூதனாய்,
 வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன்.
 | 146 |  
			| அந்த வாய்மொழியி 
			னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல், இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதப்பொருள்,
 வந்த காலமுயிர் தம் தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம்,
 பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே.
 | 147 |  
			| நிற்ற லோடுதலை போதல் 
			அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும், உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான்,
 கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே,
 பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே.
 | 148 |  
			| பரந்து மீதுதரு மாத்தி 
			காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும், நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும்,
 புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே,
 தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம்.
 | 149 |  
			| ஏணும் ஒன்றுடைய வாகி 
			எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும், பூணும் அங்குருவெ லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம்,
 காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல்,
 மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே.
 | 150 |  
			| நிகண்டவாதி மத மறுதலை
 அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே
 பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல்
 ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின்
 மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில்.
 | 151 |  
			| அறத்தின் மன்னு வித்தவன் 
			ஒருத்த னாய்அவன் அறத் திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம்
 மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன்இறைக்குமேற்
 பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே.
 | 152 |  
			| கருவிதன் தொடக்கொ ழிந்து 
			கண்டு வாழு மென்றியேல் உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள்
 ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான்
 பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான்.
 | 153 |  
			| ஆர்வ கோப மானவை அடைந்தொ 
			றுப்ப வர்க்கெலாம் சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால்
 ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல்
 ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ.
 | 154 |  
			| சொல்ல தொன்று கொண்டிகலின் 
			ஆத்தன் நாடவேசொலின் இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே
 நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை
 ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே.
 | 155 |  
			| இன்ப பூமி சேரிகலில் 
			நாதன் இவ்வி ருநிலத் துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான்
 இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில்
 துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே.
 | 156 |  
			| நிறைந்து காய மோடு சீவன் 
			நின்ற தாகில் இவ்வுடல் குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும்
 இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து)
 உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே.
 | 157 |  
			| கண்டநூல் தருந்தன் மாத்தி 
			காய மோட தன்மமும் உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள்
 கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா
 வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே.
 | 158 |  
			| நீடு பாவ புண்ணி யங்க 
			ளால்நிரய வானகம் கூடு வேர்கள் இன்று நின்று கூட்டு வோர்கள் இன்மையின்
 ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
 வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே.
 | 159 |  
			| ஏண தொன்று புற்கலத்தின் 
			எய்து மென்னின் நாசமே காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை
 பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்
 மாணவே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே.
 | 160 |  
			| ஆறு காரி யங்கள்மாற வேத 
			வங்க ளாமெனின் மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம்
 ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே
 பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே.
 | 161 |  
			| உடல்வ ருந்தல் மாதவஙகள் 
			உறுதி யென்று ரைத்திடில் படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய்
 திடவே ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தியேல்
 கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே.
 | 162 |  
			| பூர்வ கன்மம் அற்றிடப் 
			புசித்த பின்பு பொன்னெயில் நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில்
 தீர்வ தின்மை தீரியின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல்
 நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே.
 | 163 |  
			| கூறு கூவல் மன்னும்அக் 
			குடம் குறித்து நீள்கரை ஏற லுற்ற தன்மை நீ ஒருத்த ரின்றி ஏறுதல்
 வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே
 ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே.
 | 164 |  7. ஆசீவகன் மதம் (165 -180) 
	
		
			| என்உயி ரதற்குப் போல 
			எவர்க்கும்ஒத் திருப்பன் என்று தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
 மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
 அன்னதோர் வாய்மை ஆசீ வகன்அம ணர்களிற் கூறும்.
 | 165 |  
			| வரம்பிலா அறிவன் ஆதி 
			வைத்தநூற் பொருள்கள் தாமும் நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன்
 பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம்
 தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போதத் தாம்.
 | 166 |  
			| பார்புனல் பரக்கும் 
			கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச் சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு
 சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை
 நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே.
 | 167 |  
			| உணர்தரா அணுக்கள் 
			நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும்
 அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான
 இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே.
 | 168 |  
			| கொண்டுமுன் விரித்தல் 
			நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல், உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா,
 விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும்,
 பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே.
 | 169 |  
			| கண்ணினில் காண வொண்ணா 
			சனித்தந்தக் கன்மத் தாலே நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார்
 விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய்
 எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்புமின்னே.
 | 170 |  
			| ஒன்றினை ஒருவி மூன்றங் 
			குற்றிடா திரண்டு விட்டு நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று)
 இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
 றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும்.
 | 171 |  
			| வெண்மைநன் பொன்மை செம்மை 
			நீல்கழி வெண்மை பச்சை உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
 வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
 உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்.
 | 172 |  
			| பேறிழ விடையூ றின்பம் 
			பிரிவிலா திருக்கை மற்றும் வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
 கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும்
 தேறி ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்.
 | 173 |  
			| புண்ணிய பாவம் என்னும் 
			இரண்டணுப் பொருந்த வைத்தே எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு
 நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
 கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான்.
 | 174 |  
			| ஆசீவகன் மத மறுதலை
 வாராநெறி வீடானயின் மண்மேல் அவன் வந்து
 தாராமையின் நூலானது தானோஉள தின்றாம்
 சேராமையில் அணுவானவை ஐந்தும்ஒரு தேயத்(து)
 ஓரானொரு காலத்தினில் ஒன்றாமுணர் வின்றாம்.
 | 175 |  
			| இருபான்மையர் இவர்மண்டலர் 
			செம்போதகர் என்றே வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும்
 தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல்
 ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய்.
 | 176 |  
			| உயிரானவை உடல்தீண்டிடல் 
			ஒட்டுக்கலப் பெய்தும் பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம்
 துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ
 செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே.
 | 177 |  
			| அணுவானவை கீழ்மேல்உள 
			வானால்அவ யவமும் நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும்
 அணுகாவெனின் இறைதொள்ளைகொள் ஆகம்முள வாகும்
 துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம்.
 | 178 |  
			| மிகையாம்அணு உளவாகையின் 
			அவையாம்மிக வென்னில் தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும்
 பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும்
 நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா.
 | 179 |  
			| கூடாஅணு அறியாமையின் 
			வளிகூட்டுதல் கூறின் நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை
 நீடாவினை தன்னாலெனின் நினைவின்றது இன்றாம்
 தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே.
 | 180 |  8. பட்டாசாரியன் மதம் (181 - 203)
	
		
			| வேதமே யோதி நாதன் 
			இலையென்று விண்ணில் ஏறச் சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின்
 நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை
 ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம்.
 | 181 |  
			| உற்றிடுங் காம மாதி 
			குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம்
 கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல்
 பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே.
 | 182 |  
			| உண்டொரு கடவுள் வேதம் 
			உரைத்திட உயிரின் தன்மை கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில்
 பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம்
 கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான்.
 | 183 |  
			| தேவரும் முனிவர் தாமும் 
			சித்தரும் நரரும் மற்றும் யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப்
 போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும்
 கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே.
 | 184 |  
			| உன்னிய அங்க மாறும் 
			மூன்றுப வேதந் தானும் தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து
 முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி
 மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான்.
 | 185 |  
			| செய்தியும் நெறியும் 
			மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும்
 ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய்
 மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே.
 | 186 |  
			| தப்பிலா வாகுந் தாது 
			பிரத்தியந் தன்னி னோடே ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு
 செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம
 வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே.
 | 187 |  
			| போக்கொடு வரவு காலம் 
			ஒன்றினில் புணர்வ தின்றி ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி
 நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி
 ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே.
 | 188 |  
			| நித்தமாய் எங்கு முண்டாய் 
			நீடுயிர் அறிவு தானாய்ப் புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச்
 சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு)
 ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும்.
 | 189 |  
			| செயல்தரு வினைகள் 
			மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம்
 வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு)
 இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான்.
 | 190 |  
			| நீதியா நித்த கன்மம் 
			நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய
 ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம்
 ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே.
 | 191 |  
			| கருதிய கன்மம் ஞானம் 
			இரண்டுங்கா லாகக் கொண்டு மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி
 ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத்
 தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே.
 | 192 |  
			| பசுப்படுத்(து) யாகம் 
			பண்ணப் புண்ணியம் ஆவ தென்று வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக
 நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும்
 பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே.
 | 193 |  
			| பட்டாசாரியன் மத மறுதலை
 வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல்,
 நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல்,
 ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா,
 லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே.
 | 194 |  
			| உரைதந்தி டானஒருவன் 
			எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல்,
 வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும்,
 விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே.
 | 195 |  
			| உருவின்க ணேமருவி 
			வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால்,
 வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால்,
 ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே.
 | 196 |  
			| மறைநின்று நாலுதிசை 
			யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம்,
 குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான்,
 உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே.
 | 197 |  
			| உடல்நின்று நாமுணரு 
			மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின்,
 கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர்,
 திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே.
 | 198 |  
			| முடிவின்றி வேதியர்கள் 
			முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து),
 ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம்,
 அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே.
 | 199 |  
			| அறிகின்ற பான்மைஅவ 
			யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன்,
 குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும்,
 உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே.
 | 200 |  
			| நிறைவெங்கு மாகில்உயிர் 
			நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா,
 உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய்,
 மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே.
 | 201 |  
			| அழிகின்ற தால்வினைகள் 
			ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம்,
 கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர்,
 பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே.
 | 202 |  
			| கருமங்கள் ஞானமது 
			வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா,
 பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே,
 திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே.
 | 203 |  9. பிரபாகரன் மதம் (204 - 207)
	
		
			| அருந்தவனாம் சைமினிபண் 
			டாரணநூல் ஆய்ந்தானாய்த் யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப்
 பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப்
 புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம்.
 | 204 |  
			| அருஞ்செயலின் அபாவத்தே 
			அபூர்வமெனும் அது தோன்றித், தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது,
 வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித்,
 தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும்.
 | 205 |  
			| பிரபாகரன் மத மறுதலை
 வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள்
 கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை
 மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால்
 தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம்.
 | 206 |  
			| ஆநந்தம் கதியென்ன 
			அறிவழிகை வீடென்கை ஊனம்பின் உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி
 தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை
 ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால்.
 | 207 |  10. சத்தப் பிரமவாதி மதம் (208 - 
219) 
	
		
			| உரையா னதுமை யலினால் 
			உலகாம் புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை
 விரையா துணரும் அதுவீ டெனவே
 வரையா துரைவா திவகுத் தனனே.
 | 208 |  
			| பரிணா மம்விவர்த் தநம்மா 
			யம்அதில் தருமாம் உலகுள் ளதுசத் தமதே
 பொருளா வதுசொல் நலம்அல் லவெனில்
 மருவா துபொருட் டிறமற் றிலையே.
 | 209 |  
			| பூமா வெனவே உரையும் 
			பொருளும் ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால்
 நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த்
 தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே.
 | 210 |  
			| சொல்வந் தெழலும் 
			பொருள்தோன் றுதலால் சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ
 சொல்லும் பொருளும் உடனின் றதெனின்
 சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே.
 | 211 |  
			| சத்தப் பிரமவாதி மத 
			மறுதலை
 உரையா னதுமை யலினால் உலகேல்
 உரையாய் ஒருமை யலும்உள் ளதென
 வரையா துணரும் அதுவண் கதியேல்
 வரையா மறையோ டுமலைந் தனையே.
 | 212 |  
			| அருவம் உரையா தலின்அவ் 
			வுருவாய் மருவும் பரிணா மம்மறந் திடுமாம்
 பருகுந் ததியா னதுபா லதெனில்
 உருவம் அதுவாய் அழியும் உரையே.
 | 213 |  
			| ஆயம் உடன்அந் தவிவர்த் 
			தநமும் மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு
 மாய்நின் றமையின் உரையின் நலமும்
 ஆயும் பொருளுக் கறிநா மமதே.
 | 214 |  
			| உரைபோல் பொருளுக் 
			குருவின் மையினவ் உரையே பொருளென் றனைஇன் றரியென்
 உரையே கவிமா லவனுக் குளதாம்
 உரையாய் கவியா கவொர்மா லினையே.
 | 215 |  
			| நெல்லில் பொரியா வதுநீ 
			டழலில் சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால்
 கல்வித் திறமாம் உரைகாட் சியினால்
 மல்லற் பொருள்சா லவளந் தருமே.
 | 216 |  
			| முன்கண் டபொருள் பெயரா 
			தலினால் பின்கண் டபிழம் புணரும் பெயரால்
 நன்கண் டபொருட் கொருநா சமதின்(று)
 என்கண் டனைகா ரணமின் றழிவே.
 | 217 |  
			| பொருள்இந் திரியம் உணர்வோ 
			டுபுமான் இருளின் றியிடும் ஔ¤இத் தனையும்
 மருவும் பொழுதில் வருஞா னமதின்
 ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே.
 | 218 |  
			| அர்த்தம் தௌ¤தற் கொளியா 
			னதுபோல் சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம்
 நித்தம் அதுவன் றுரைநின் றழியும்
 சித்தன் ஒருவன் உரைசெய் தனனே.
 | 219 |  11. மாயாவாதி மதம் (220 - 252)
	
		
			| நானே பிரமம் என்றுரைத்து 
			ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும்,
 மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித்,
 தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம்.
 | 220 |  
			| அறிவாய் அகில காரணமாய் 
			அநந்தா நந்த மாய்அரு வாய்ச், செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க்,
 குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப்,
 பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்.
 | 221 |  
			| ஒன்றாம் இரவி 
			பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண்,
 சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம்,
 என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால்.
 | 222 |  
			| இருளில் பழுதை அரவெனவே 
			இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல்,
 மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத்
 தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம்.
 | 223 |  
			| உலகந் தானும் திருவசநத் 
			துண்டாம் இன்றேல் உதியாது நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால்
 இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம்
 குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால்.
 | 224 |  
			| தாங்கும் உலகுக் 
			குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல்,
 ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும்,
 ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம்.
 | 225 |  
			| மன்னும் பிரமந் 
			தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச்,
 சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய்,
 அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால்.
 | 226 |  
			| ஆறு தாதுக் களும்கூடி 
			வந்த கோசம் அன்னமயம் மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான்
 வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில்
 கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால்.
 | 227 |  
			| கோச உருவில் பிரமந்தான் 
			கூடித் தோன்றும் நீடுமொரு காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன்
 வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும்
 பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ.
 | 228 |  
			| அலகில் மணிக ளவைகோவை 
			அடைந்த பொழுதின் அங்கங்கே, நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம்,
 பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான்,
 குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால்.
 | 229 |  
			| போற்றும் செயலால் பலநாமம் 
			புனைந்து போக போக்கியத்தில், தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு),
 ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும்,
 மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல்.
 | 230 |  
			| கருவி யெல்லாம் நானெனவே 
			கருதல் பந்தம் அக்கருத்தை ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால்
 மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை
 பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே.
 | 231 |  
			| ஆன கன்ம அநுட்டயங்கள் 
			அந்தக் கரண சுத்திதரும் ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும்
 ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால்
 வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே.
 | 232 |  
			| தானே தானாய் அநுபோகம் 
			தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து
 வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி
 நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே.
 | 233 |  
			| சாற்றும் மறைதத் துவமசிமா 
			வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே
 தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல்
 ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால்.
 | 234 |  
			| மாயாவாதி மத மறுதலை
 ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென,
 மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய,
 பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின்,
 தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே.
 | 235 |  
			| நீடு வேதம்அள வாக 
			ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால்,
 ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள்,
 கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால்.
 | 236 |  
			| நீதியால் ஔ¤கொள் பானு 
			வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம்,
 தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால்,
 ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே.
 | 237 |  
			| வேறு வாயில்புல னோடு 
			மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய்,
 ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும்,
 பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே.
 | 238 |  
			| இலகு சோதிமணி எனவும் 
			ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம்,
 பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா,
 உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே.
 | 239 |  
			| புற்றி னேர்பழுதை தொக்க 
			போதுமயிர் புளகமாக அரவிரவிலே, உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே,
 பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய்,
 நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம்.
 | 240 |  
			| ஓதி யேஉலக மாதனை 
			நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய்,
 ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம்,
 நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே.
 | 241 |  
			| வேற தாகியது போல்இ 
			ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம்,
 மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும்,
 சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே.
 | 242 |  
			| மாய நூலதுசி லம்பி 
			வாயினிடை வந்த வாறதனை மானவே, ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று),
 ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ,
 பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே.
 | 243 |  
			| வேற தாகும்உரு வத்தி 
			லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென்,
 மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில்,
 ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே.
 | 244 |  
			| பற்ற தின்றிஉடல் நின்றி 
			டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின்,
 குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும்,
 பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே.
 | 245 |  
			| சோதி மாமணிகள் ஊடு 
			போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய்,
 ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன்,
 பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே.
 | 246 |  
			| ஒத்து நின்றுலின் இன்ப 
			துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல்,
 துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ,
 வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே.
 | 247 |  
			| எங்கும் நின்றிடில் 
			அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா,
 இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர்,
 தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே.
 | 248 |  
			| இருள்பொ திந்ததொரு பரிதி 
			இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே,
 தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும்,
 பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே.
 | 249 |  
			| சுத்த மானதுப ரத்தி 
			னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை,
 ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய்,
 பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே.
 | 250 |  
			| உன்னின் நியும் அநுபோக 
			மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல்,
 மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே,
 சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே.
 | 251 |  
			| ஆர ணங்கள் தரு தத்து 
			வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய்,
 நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ,
 ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே.
 | 252 |  12. பாற்கரியன் மதம் (253 - 259)
	
		
			| மன்னு மறையின் முடிவென்று 
			மாயா வாதி உடன்மலைந்து பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப்
 பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன்
 சொன்னஇதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம்.
 | 253 |  
			| சித்தே உலகாய்ப் 
			பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், சத்தே யெல்லாம் முத்தியினைள் சாரக் கண்ட ஞானங்கள்,
 வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால்,
 ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே.
 | 254 |  
			| பாற்கரியன் மத மறுதலை
 இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே,
 முயங்கு கின்றமையில் இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோல்,
 பயந்த தென்னில்அறி யப்ப டும்பொரும் அறிவு மென்றுபல வாகுமோ,
 தியங்கு கின்ற தெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே.
 | 255 |  
			| உன்னு கின்றபிர மத்தி 
			லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால்,
 தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால்அதுச டத்ததாம்,
 உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே.
 | 256 |  
			| வித்தெ ழுந்துமர மாய்வி 
			ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம்,
 ஒத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி யுண்டு தாரகமு னக்கெனா,
 பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய்இவைபி தற்றிலே.
 | 257 |  
			| சூன கம்கடகம் மோதிரம் 
			சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிசம மாகுமேல்,
 நீடும் அப்பணிகள் சௌ¢து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும்,
 நாடி டும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே.
 | 258 |  
			| அறிவி னோடுசெயல் மாறில் 
			வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண்,
 இறுதி யேல்அதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடின்அவ் வின்பமே,
 பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென்.
 | 259 |  13. நிரீச்சுரசாங்கியன் மதம் (260 - 
263) 
	
		
			| மூலம் புரியட் 
			டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி தூட சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில்
 பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும்
 சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே.
 | 260 |  
			| நிரீச்சுரசாங்கியன் மத 
			மறுதலை
 சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி
 பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால்
 கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல்
 முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம்.
 | 261 |  
			| புருடன் பிரகி 
			ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி,
 இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும்,
 மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம்.
 | 262 |  
			| அறியான் புருடன் 
			பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில்,
 செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம்,
 நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால்.
 | 263 |  14. பாஞ்சராத்திரி மதம் (264 - 301)
	
		
			| ஆதியாய் அருவ மாகி 
			அகண்டபூ ரணமாய் ஞானச் சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு
 நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும்
 ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே.
 | 264 |  
			| உந்தியில் அயனை ஈன்றும் 
			அவனைக்கொண் டுலகுண் டாக்கி அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்துத்
 யூந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி
 வந்திடும் தோற்றம் ஈறும் நிலைமையும் பண்ணும் மாயன்.
 | 265 |  
			| மீன்ஆமை கேழல் நார 
			சிங்கம்வா மனனாய் வென்றி ஆனாத இராமர் மூவர் ஆயனாய் அளித்தான் கற்கி
 தானாயும் வருவன் இன்ன மென்றவன் சாற்றித் தேவர்
 கோனாயும் நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே.
 | 266 |  
			| ஏழ்கடல் செலுவில் ஏற்றும் 
			இருங்கிரி முதுகில் ஏற்றும் தாழ்தலம் முழுதுங் கண்டும் தபநியன் உடல்பி ளந்தும்
 வாழுல களந்தும் மன்னாய் மன்னர்க்கு மன்ன ராயும்
 பாழ்பட உழறப் பாரும் நோக்கும்பின் பரியு மாயே.
 | 267 |  
			| பொய்கைவாய் முதலை வாயில் 
			போதகம் மாட்டா(து) ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப
 உய்யயாம் பணிமால் ஓல ஓலவென் றோடிச் சென்று
 வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே.
 | 268 |  
			| அலைகடல் கடைந்தும் 
			வானோர்க் கமுதினை அளித்துந் தீய கொலைபுரி அசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்தும்
 கலைமலி பொருளன் பர்க்குக் கருணையால் உரைத்தும் மிக்க
 தலைமையில் நிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே.
 | 269 |  
			| மாயையாய் உயிராய் மாயா 
			காரிய மாகி மன்னி மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி
 மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை
 மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்பனன்றே.
 | 270 |  
			| பாஞ்சராத்திரி மத மறுதலை
			
 ஆதிதா னாகில் ஆதிக்(கு) அந்தமுண் டாகும் அந்தக்
 கோதிலான் இறைவ னென்று கூறிடும் வேதம் ஞானச்
 சோதியாய் நின்றா னாகில் தோய்ந்திடான் மாயை ஞானத்
 தீதிலா உருவ மென்னில் சேர்ந்திடான் தாதுச் சென்றே.
 | 271 |  
			| தாதுவா னதுஏ தென்னில் 
			சங்கரன் பலிக்குச் செல்லத் தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்ட போது
 போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ்ந்தான்
 நாதனார் எழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான்.
 | 272 |  
			| இச்சையால் உருவங் கொள்வன் 
			அரியெனில் இகழ்வேள் விக்கண் எச்சனாய் உண்ணப் புக்கங் கிருந்தஅன் றீச னாலே
 அச்சமார் தலைய றுப்புண் டான்தலை யாக்கிக் கொள்ளான்
 நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொ டுத்தான்.
 | 273 |  
			| நூலினை உரைத்த வேத நூலினை 
			நுவலும் வண்ணம் மால்அருள் செய்தா னென்றாய் மறைநீதி உலகி யற்கை
 சாலவே தெரியாக தாகிக் கிடந்தநாள் சகத்து யார்க்கும்
 ஆலின்கீ ழிருந்து வேதம் அருளினான் அறைந்தான் நூலே.
 | 274 |  
			| அயன்றனைப் பயந்தா 
			னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப் பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளும்
 சயந்தரும் அரனைத் தந்தான் அயனென்கை தப்பே யன்றோ
 தியங்கிடா துணராய் எல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே.
 | 275 |  
			| சீவன்கள் சநநம் போலச் 
			சிலர்வயிற் றுதித்த மாலைத் தேவென்றே உலகங் காக்கச் சுவேச்சையாற் சநித்தா னென்பீர்
 பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக்
 கோவந்து முகத்தில் தோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும்.
 | 276 |  
			| நாரணன் அயனை யீன்றும் 
			அயனும்நா ரணனை யீன்றும் காரணம் ஒருவ ருக்கங் கொருவர்தாம் இருவ ருக்கும்
 வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற
 ஆரணம் உரைக்கும் பக்கத் தவர்களும் அடைந்தா ரன்றே.
 | 277 |  
			| அழிப்(பு)அரி யேவ 
			லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு) அழிப்பது தவிர்க்க மாட்டான் அங்கமும் அழித்தே பூண்டான்
 அழிப்(பு)அரி யேவ லென்றபே கறைந்ததும் அழிந்த தன்றோ
 அழித்திடும் அரனே ஆக்கம் நோக்கமும் ஆக்கு வானே.
 | 278 |  
			| வானம்கீழ் மண்ணு மெல்லாம் 
			மாயனே காப்பா னென்றாய் தான்அஞ்சும் கலந்த ரன்தன் உடல்கீண்ட சக்க ரத்தை
 ஆன்அஞ்சும் ஆடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை
 தானெங்கு மாகு மெல்லாம் சங்கரன் காப்பே யாமே.
 | 279 |  
			| மாலினார் சேலி னாராய் 
			வாரிகள் அடக்கிக் கொண்டன்(று) ஆலியா உலக மெல்லாம் அழிப்பவன் நானே என்னச்
 சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை இடந்து கண்ணைச்
 சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே.
 | 280 |  
			| ஆமையாய் மேருத் தாங்கி 
			அடைகலாய்க் கிடந்த போது நாமெனா உலகா தார நாதனென் றகந்தை பண்ண
 ஆமெனா ரன்று மென்னார் அமரரு மானார் பார்த்துத்
 தாமநாள் ஆமையாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே.
 | 281 |  
			| எழுதலம் இடந்து பன்றி 
			யாய்இருங் கொம்பி லேற்றுத் தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்(று)
 அழுதல மந்து வீழ அருங்கோடு பறித்த தணிந்தான்
 கழுதல மந்த காட்டில் ஆடிடுங் கடவு ளன்றே.
 | 282 |  
			| இங்கடா வுளனோ மாலென் 
			றிரணியன் தூணை எற்ற உங்கடா மோத ரன்றான் உரநர சிங்க மாகி
 எங்கடா போவ தென்னா உடல்பிளந் திறையா னென்ன
 அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான் அரன்றான்.
 | 283 |  
			| தானமென் றிரந்து செல்லத் 
			தனக்குமூ வடிகொடுப்ப வானமும் அளந்து கொண்டு மாபலி தன்னைப் பின்னை
 ஈனமாஞ் சிறையி லிட்டான் இறையன்றொன் றீந்தோன் தங்கட்(கு)
 ஊனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும்.
 | 284 |  
			| மாயமான் தன்னைப் பொய்ம்மா 
			னெனஅறி யாத ரக்கன் மாயையி லகப்பட் டுத்தன் மலைவியைக் கொடுத்தான் தன்னை
 மாயைக்குத் கர்த்தா வென்பை மதிகெட்டபே கவனைக் கொன்று
 நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாதே.
 | 285 |  
			| பரசுடன் பிறந்தான் தானும் 
			பத்தனாயப் பரசி னாலே அரசறுத் தரனை நோக்கி அருந்தவம் பரிந்தான் அன்று
 பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லாம்
 உரைசெயும் உமையாள் கோனை உள்நினைந் தியோகி னின்றான்.
 | 286 |  
			| ஓதிய வாசு தேவர் தமைஉப 
			மணியு தேவர் தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி
 ஆதிபா லடிமை யாக்க அரிஉடல் பிராணன் அத்தம்
 ஈதெலாம் கொள்நீ என்றங் கிறைஞ்சினார் அறிந்தி டாயே.
 | 287 |  
			| பின்வரும் பரிதா னாகி 
			அரியென்றாய் பின்பு வந்தால் என்வரு மீச னாலென் றறிகிலோம் இவுளி யார்க்கு
 முன்வரும் அவதா ரங்கள் முடிந்தமை அறிந்தா யன்றே
 பொன்வரும் சடையி னான்தன் புகழெங்கும் புக்க தன்றே.
 | 288 |  
			| கைவரை மூல மேயோ எனக்கரிக் 
			குதவுங் காட்டின் மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டு மோதான்
 ஐயனேமுறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான்
 வையகங் காப்பான்செய்கை வழக்கன்றோ ஊர்காப்பான்போல்.
 | 289 |  
			| அன்றியும் ஆனை மாலுக் 
			கடிமையாய் மூல மேயோ என்றிடு மதனால் மால்தான் இறைவனென் றியம்ப வேண்டா
 உன்றனக் கடிமை யானார் உன்னையெம் பெருமா னென்றால்
 இன்றுநீ வணங்கு முன்றன் எம்பெரு மானோ நீயே.
 | 290 |  
			| ஞாலம்உண் டவனால் உண்டார் 
			நல்லமு தமரர் என்றாய் வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற
 காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாதன்
 ஆலமுண் டிலனேல் தேவர் அமுதமுண் டிடுவ தெங்கே.
 | 291 |  
			| அஞ்சியன் றரிதா னோட 
			அசுரனைக் குமர னாலே துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து)
 அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத
 நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான்.
 | 292 |  
			| பார்த்தனார் இரதமேறிப் 
			படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்தஅம் பாலே எய்து கொன்ற சாளே னென்னத்,
 தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும்,
 வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொல் நூடல மதித்தி டாயே.
 | 293 |  
			| மாயைதான் உயிர்க ளாகா 
			துயிர்கள்தாம் மாயை யாகா மாயவன் இவைதா னாகான் இவைதானு மாய னாகயா
 ஏயுமாம் அநாதி யாக இறைபசு பாச மென்றே
 தூயவன் கலப்பி னாலே எல்லாமாய்த் தோன்று வன்காண்.
 | 294 |  
			| பாசத்தைப் பசுக்கள் 
			விட்டுப் பதியினை அடைய முத்தி ஆசற்ற ஆக மங்கள் அறைந்திட அறிவின் றிங்கே
 மாசற்ற மால்மா சாகி மாயையு முறுவ னென்னில்
 கூசிப்பின் கொள்ளார் நல்லோர் உனக்காமிக் குழப்பு நூலே.
 | 295 |  
			| பிரமம்நா னென்ற போது 
			பிரமனோ டரியுங் கூடிப் பரமனார் இகலி டாமே பார்த்திடர் பண்ணி நின்ற
 உரமனார் அழலு ரூபம் தன்னையு முணர மாட்டான்
 கரமனாள் திகிரி ஏற்றான் கடவுளென்றறைவதென்னே.
 | 296 |  
			| தோரி இறையன் றென்றே 
			சிவமுனி ததீசி யோடே போர்புரிந் திகல மாலைப் புக்கவன் பிடித்த டித்து
 மார்பினி லுதைத்து மால்தன் சக்கரம் வயிற்றில் வைத்திட்(டு)
 ஏர்மலி படைப டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே.
 | 297 |  
			| சூலிகாண் இறைமால் அல்லன் 
			சூலியைத் தொழுந்துயர் வாசன் மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி
 நூலினார் மார்பன் நோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று
 பாலினார் கடலான்ஆங்கே பரிவொடும் திருவை வைத்தான்.
 | 298 |  
			| தவகுண னாய்மால் சென்று 
			தீவியைள் சக்க ரத்தால் அவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவனைப் பார்த்துச்
 சிவனடய தறியே னாகில் இதுசெய்தோன் செறிகப் பத்துப்
 பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழந்தான்.
 | 299 |  
			| பயப்பட்டுப் பரனைநோக்கித் 
			தவம்பண்ணப் பரனும்தோன்றி நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார் ணன்தான்
 பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன
 உயர்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன்.
 | 300 |  
			| இப்படிப் பிருகு சாபத் 
			தீரைந்து பிறப்பின் வீழ்ந்து மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன்
 எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே
 மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே.
 | 301 |  சிவஞானசித்தியார் பரபக்கம் 
முற்றிற்று  
 
 திருத்துறையூர் அருணந்தி 
சிவாசாரியார்அருளிச் செய்த
 சிவஞானசித்தியார் சுபக்கம்
உ
 திருச்சிற்றம்பலம்
 விநாயகர் வணக்கம்
 
	
		
			| ஒருகோட்டன் இருசெவியன் 
			மும்மதத்தன் நால்வாய்ஐங் கரத்தன்ஆறு
 தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
 தருமொருவா ரணத்தின் தாள்கள்
 உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே
 இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
 திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன்
 றோவென்னச் செய்யும் தேவே.
 | 1 |  பாயிரம்
 
	
		
			| அறுவகை சமயத் தோர்க்கும் 
			அவ்வவர் பொருளாய் வேறாம் குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
 அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
 செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.
 | 2 |  
			| என்னைஇப் பவத்திற் சேரா 
			வகையெடுத் தென்சித் தத்தே தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்
 மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல்
 சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம்.
 | 3 |  
			| பண்டைநற் றவத்தால் 
			தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
 கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
 புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்.
 | 4 |  
			| மறையினான் அயனான் மாலான் 
			மனத்தினான் வாக்கான் மற்றும் குறைவிலா அளவி னானுங் கூறொனா தாதி நின்ற
 இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
 நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே.
 | 5 |  
			| அருளினால் ஆக மத்தே 
			அறியலாம் அளவி னாலும் தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே
 மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
 இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே.
 | 6 |  
			| அளவை
 அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்,
 அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு),
 அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்,
 அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே.
 | 7 |  
			| மாசறு காட்சி ஐயந் 
			திரிவின்றி விகற்ப முன்னா ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
 பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
 காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும்.
 | 8 |  
			| கண்ட பொருளை இரட்டுறவே 
			கருதல் ஐயம் திரியவே, கொண்டல் திரிவாம் பெயர்ச்சாத்தி குணமே கன்மம் பொருளெனஐந்,
 துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின்,
 விண்ட வில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே.
 | 9 |  
			| காண்டல் வாயில் மனம்தன்வே 
			தனையோ(டு) யோகக் காட்சியென, ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்,
 மாண்ட உரைதந்த் ரமந்த்ரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்,
 பூண்ட அளவைக் கெதிர் புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே.
 | 10 |  
			| அன்னிய சாதி யுமதன் 
			சாதியும் அகன்று நிற்றல் தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல்
 துன்னிய பொதுஇ யற்கை சொனனஇவ் விரண்டி னுள்ளே
 மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடு மான முற்றால்.
 | 11 |  
			| உயிரினோ டுணர்வு வாயில் 
			ஔ¤யுரு வாதி பற்றிச் செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி
 அயர்விலிந் திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து யிர்க்கண்
 மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே.
 | 12 |  
			| அருந்தின்பத் துன்பம் 
			உள்ளத் தறிவினுக் கராக மாத் தரும்தன்வே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப்
 பொருந்திய தேச கால இயல்பகல் பொருள்க ளெல்லாம்
 இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே.
 | 13 |  
			| பக்க மூன்றின் மூன்றேது 
			வுடைய பொருளைப் பார்த்துணரத், தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
 தொக்க இவற்றாற் பிறர்தௌ¤யச் சொல்லலாகும் அச்சொல்லும்,
 மிக்க வந்நு வயத்தினொடு வெதிரே கக்சொல் லெனஇரண்டாம்.
 | 14 |  
			| மூன்று பக்கம் 
			பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத், தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமாம் உவமை நிகர் பக்கம்,
 ஆன்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுதல்,
 ஏன்ற இரண்டும் பொருளுண்மைக் கிடமாம் ஒன்று பொருளின்றாம்.
 | 15 |  
			| ஏது மூன்றாம் இயல்புகா 
			ரியத்தோ டநுப லத்தியிவை, ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன்,
 ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது,
 சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே.
 | 16 |  
			| புகையால் அனலுண் 
			டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம், வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு,
 முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை,
 தொகையால் உறுப்பைந் தொடுங் கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே.
 | 17 |  
			| போது நாற்றத் தால்அறிதல் 
			பூர்வக் காட்சி அனுமானம் ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம்
 நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி
 ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம்.
 | 18 |  
			| அநாதியே அமல னாய 
			அறிவன்நூல் ஆக மந்தான் பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள்
 மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும்
 தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துல் உபதே சந்தான்.
 | 19 |  
			| ஈண்டு பக்கப் போலிநான் 
			கேதுப் போலி யொருமூன்றான், வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான்,
 காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை,
 யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும்.
 | 20 |  பிராமணவியல் 
 முதற் சூத்திரம் (21-90)
 
	
		
			| ஒருவனோ டொருத்தீ ஒன்றென் 
			றுரைத்திடும் உலகமெல்லாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
 தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி
 மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.
 | 21 |  
			| உதிப்பதும் ஈறு முண்டென் 
			றுரைப்பதிங் கென்னை முன்னோர் மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின்
 இதற்கியான் அனுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம்
 விதிப்படி தோற்றி மாயக் காணலாம் மேதி னிக்கே.
 | 22 |  
			| இயல்புகாண் தோற்றி மாய்கை 
			என்றிடின் இயல்பினுக்குச், செயலதின் றியல்பு செய்தி செய்தியேல் இயல்ப தின்றாம்,
 இயல்பதாம் பூதந் தானே இயற்றிடுஞ் செய்தி யென்னில்,
 செயல்செய்வான் ஒருவன் வேண்டுஞ் செயற்படும் அசேத னத்தால்.
 | 23 |  
			| நிலம்புனல் அனல்கால் காண 
			நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும் பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னின்
 இலங்கிய தோற்ற நிற்றல் ஈறிவை இசைத லாலே
 நலங்கிளர் தோற்ற நாசம் தனக்கிலா நாதன் வேண்டும்.
 | 24 |  
			| சார்பினில் தோன்று 
			மெல்லாம் தருபவன் இல்லை யென்னில் தேரின்இல் லதற்கோ தோற்றம் உள்ளதற் கோநீ செப்பாய்
 ஓரின்இல் லதுவுந் தோன்றா துள்ளதேல் உதிக்க வேண்டா
 சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே.
 | 25 |  
			| உள்ளது மிலது மின்றி 
			நின்றதொன் றுளதே லுண்டாம் இல்லதே லில்லை யாகும் தோற்றமும் இசையா தாகும்
 உள்ளகா ரணத்தி லுண்டாம் காரிய முதிக்கும் மண்ணில்
 இல்லதாம் பங்க டாதி எழில்தரு மியற்று வானால்.
 | 26 |  
			| ஒருபொரு ளொருவ னின்றி 
			உளதில தாகு மென்னில் தருபொருளுண்டேலின்றாம் தன்மையின் றின்றே லுண்டாய்
 வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னில்
 கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம்.
 | 27 |  
			| காயத்தின் அழிவு தோற்றம் 
			கண்டனம் உலகற் காணா நீஇத்தை உரைத்த வாறிங் கென்னெனில் நிகழத்து முண்மை
 மாயத்த உலகம் பூநீர் தீவளி வான மாதி
 யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே.
 | 28 |  
			| ஓரிடம் அழியப் பின்னும் 
			ஓரிடம் நிற்கும் ஒக்கப் பாரிடம் அழிவ தின்றாம் என்றிடிற் பயில்வித் தெல்லாம்
 காரிட மதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்
 சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்.
 | 29 |  
			| காலமே கடவு ளாகக் கண்டனம் 
			தொழிலுக் கென்னில் காலமோ அறிவின் றாகும் ஆயினுங் காரி யங்கள்
 காலமே தரவே காண்டும் காரணண் விதியி னுக்குக்
 காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்.
 | 30 |  
			| அழிந்தபின் அணுக்கள் தாமே 
			அகிலமாய் வந்து நின்று கழிந்திடுங் கன்மத் தென்னில் கன்மமும் அணுவுங் கூட
 மொழிந்திடுஞ் சடமே யாகி மொழிதலான் முடியா செய்தி
 ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலா மொடுங்கு மன்றே.
 | 31 |  
			| காரண அணுக்கள் கெட்டாற் 
			காரிய உலகின் றென்னில் காரண மாயை யாகக் காரியங் காண லாகும்
 காரண மாயை யென்னை காண்பதிங் காணுவே யென்னில்
 காரண மாயை யேகாண் காரியம் அணுவிற் கண்டால்.
 | 32 |  
			| காரிய மென்ப தென்னை காரண 
			அணுவை யென்னில் காரியம் அவய வத்தாற் கண்டனங் கடாதி போலக்
 காரிய உருவ மெல்லாம் அழிதருங் கார ணத்தால்
 காரிய உறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே.
 | 33 |  
			| தோற்றமும் நிலையு மீறும் 
			மாயையின் தொழில தென்றே சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி அணுக்க ளாக
 ஏற்றதே லீண்டு நிற்கும் இல்லதே லியைவ தின்றாம்
 மாற்றநீ மறந்தா யித்தால் மாயையை மதித்தி டாயே.
 | 34 |  
			| மாயையி னுள்ள வஞ்சம் 
			வருவது போவ தாகும் நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு
 போய்உகும் இலைக ளெல்லாம் மரங்களில் புக்குப் போதின்
 ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே.
 | 35 |  
			| கருதுகா ரணமுண் டாகக் 
			காரிய முள்ள தாகி வருதலால் அநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத்
 தருதலால் ஆதி யாகச் சாற்றலு மாகு மாயைக்
 கொருவனா ரென்னிங் கென்னின் உள்ளவா றுரைப்பக் கேள்நீ.
 | 36 |  
			| புத்திமற் காரி யத்தால் 
			பூதாதி புருடன் தானும் அத்தனு கரணம் பெற்றால் அறிதலால் அவற்றை மாயை
 உய்த்திடும் அதனான் மாயைக் குணர்வொன்று மில்லையென்றே
 வைத்திடு மதனால் எல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும்.
 | 37 |  
			| காரிய கார ணங்கள் 
			முதல்துணை நிமித்தம் கண்டாம் பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம்
 தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
 ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம்.
 | 38 |  
			| விந்துவின் மாயை யாகி 
			மாயையின் அவ்வி யத்தம் வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை
 முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம்
 தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே.
 | 39 |  
			| வைகரி செவியில் கேட்ப 
			தாய்அத்த வசன மாகி மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்
 பொய்யற அடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி
 ஐயமில் பிராண வாயு அடைந்தெழுந் தடைவு டைத்தாம்.
 | 40 |  
			| உள்ளுணர் ஓசை யாகிச் 
			செவியினில் உறுதல் செய்யா(து) ஔ¢ளிய பிராண வாயு விருத்தியை உடைய தன்றித்
 தௌ¢ளிய அக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி
 மௌ¢ளவே எழுவ தாகும் மத்திமை வேற தாயே.
 | 41 |  
			| வேற்றுமைப் பட்ட வன்னம் 
			வெவ்வேறு விபாக மாகித் தோற்றுதல் அடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்
 சாற்றிடு மயிலி னண்டம் தரித்திடும் சலமே போன்றங்(கு)
 ஆற்றவே உடைய தாகிப் பைசந்தி அமர்ந்து நிற்கும்.
 | 42 |  
			| சூக்கும வாக்க துள்ளோர் 
			சோதியாய் அழிவ தின்றி ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
 நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டைத்தாய்ப்
 போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.
 | 43 |  
			| நிகழ்ந்திடும் வாக்கு 
			நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித் திகழ்ந்திடும் அஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று
 புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல
 மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை என்பர் நல்லோர்.
 | 44 |  
			| வித்தைகள் வித்தை ஈசர் 
			சதாசிவர் என்றி வர்க்கு வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள்
 தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும்
 உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே.
 | 45 |  
			| மூவகை அணுக்க ளுக்கு 
			மறைமையால் விந்து ஞானம் மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்
 ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல்
 சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே.
 | 46 |  
			| அருவினில் உருவந் தோன்றி 
			அங்காங்கி பாவ மாகி உருவினில் உருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம்
 பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்
 ஒருவனே யெல்லா மாகி அல்லவா யுடனு மாவன்.
 | 47 |  
			| அருஉரு ஈனா தாகும் 
			விகாரமும் அவிகா ரத்தின் வருவது மில்லை என்னின் வான்வளி யாதி பூதம்
 தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
 உருவமின் உருமே றெல்லாம் உதித்திடும் உணர்ந்து கொள்ளே.
 | 48 |  
			| மண்ணினிற் கடாதி யெல்லாம் 
			வருவது குலால னாலே எண்ணிய உருவ மெல்லாம் இயற்றுவன் ஈசன் தானும்
 கண்ணுகா ரியங்க ளெல்லாம் காரண மதனிற் காண்பன்
 பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேள்நீ.
 | 49 |  
			| சீலமோ உலகம் போலத் 
			தெரிப்பரி ததனால் நிற்கும் கோலமும் அறிவா ரில்லை ஆயினுங் கூறக் கேள்நீ
 ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
 காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே.
 | 50 |  
			| கற்றநூற் பொருளும் 
			சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும் பெற்றியும் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம்
 உற்றதும் போல வெல்லா உலகமும் உதித்தொ டுங்கப்
 பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே.
 | 51 |  
			| உயிரவை ஒடுங்கிப் 
			பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில் செயிருறு மலத்தி னாகும் சிதைந்ததே தென்னிற் சித்த(து)
 அயர்வொரிக் காரி யங்கள் அழியுங்கா ரணங்கி டக்கும்
 பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்.
 | 52 |  
			| தோற்றுவித்தளித்துப் 
			பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் போற்றவே உடைய னீசன் புகுந்தது விகார மென்னில்
 சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலருங் காந்தம்
 காற்றிடும் கனலை நீரும் கரந்திடும் காசி னிக்கே.
 | 53 |  
			| உரைத்தஇத் தொழில்கள் 
			மூன்றும் மூவருக் கலகம் ஓத வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின்
 விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்
 புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே.
 | 54 |  
			| இறுதியாம் காலந் தன்னில் 
			ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதா னுண்டா காதாம்
 அறுதியில் அரனே யெல்லாம் அழித்தலால் அவனா லின்னும்
 பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே.
 | 55 |  
			| சொன்னஇத் தொழில்க ளென்ன 
			காரணந்தோற்ற வென்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உ யிர்க்கு
 மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
 துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதுஞ் சொல்ல லாமே.
 | 56 |  
			| அழிப்பிளைப் பாற்றல் 
			ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம் கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
 தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானு
 பழிப்பொழ பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம்.
 | 57 |  
			| அருவமோ உருவா ரூப மானதோ 
			அன்றி நின்ற உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
 அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
 உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.
 | 58 |  
			| நண்ணிடும் உருவ மென்னின் 
			நமக்குள உருவம் போலப் பண்ணிட ஒருவன் வேண்டும் இச்சையேற் பலரும் இச்சை
 கண்ணிய உருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவுள் தானும்
 எண்ணிய யோக சித்தர் போலுரு இசைப்பன் காணே.
 | 59 |  
			| வித்தக யோக சித்தர் 
			வேண்டுருக் கொள்ளு மாபோல் உத்தமன் கொள்வ னென்னின் அவர்களி லொருவ னாவன்
 அத்தகை யவர்க ளெல்லாம் ஆக்குவ தருளா லாங்கு
 வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே.
 | 60 |  
			| மாயைதான் மலத்தைப் பற்றி 
			வருவதோர் வடிவ மாகும் மாயஆ ணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
 நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே
 காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்.
 | 61 |  
			| சத்தியே வடிவென் றாலும் 
			தான்பரி ணாம மாகும் நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே யென்னின்
 அத்துவா மார்க்கத் துள்ளான் அலனிவன் அருமை தன்னைப்
 புத்திதா னுடையை போல இருந்தனை புகலக் கேள்நீ.
 | 62 |  
			| உலகினில் பதார்த்த 
			மெல்லாம் உருவமோ னருவ மாகி நிலவிடு மொன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல
 அலகிலா அறிவன் றானும் அருவமே யென்னி லாய்ந்து
 குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே.
 | 63 |  
			| பந்தமும் வீடு மாய 
			பதபதார்த் தங்க ளல்லான் அந்தமும் ஆதி யில்லான் அளப்பில னாத லாலே
 எந்தைதான் இன்ன னென்றும் இன்னதா மின்ன தாகி
 வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே.
 | 64 |  
			| குறித்ததொன் றாக மாட்டாக் 
			குறைவிலன் ஆத லானும் செறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
 வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
 நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே.
 | 65 |  
			| ஆரணம் ஆக மங்கள் 
			அருளினால் உருவு கொண்டு காரணன் அருளா னாகில் கதிப்பவ ரில்லை யாகும்
 நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
 சீரணி குருசந் தானச் செய்தியும் சென்றி டாவே.
 | 66 |  
			| உருவருள் குணங்க ளோடும் 
			உணர்வருள் உருவிற் றோன்றும் கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம்
 தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி
 அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே.
 | 67 |  
			| உலகினை இறந்து நின்ற 
			தரன்உரு வென்ப தோரார் உலகவ னுருவில் தோன்றி ஒடுங்கிடு மென்றும் ஓரார்
 உலகினுக் குயிரு மாகி உலகுமாய் நின்ற தோரார்
 உலகினி லொருவ னென்பர் உருவினை யுணரா ரெல்லாம்.
 | 68 |  
			| தேவரி னொருவ னென்பர் 
			திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர்
 ஆவது முணரார் ஆதி அரிஅயற் கறிய வொண்ணா
 மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார்.
 | 69 |  
			| போகியா யிருந்து 
			யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
 ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர்.
 | 70 |  
			| ஒன்றொடொன் றொவ்வா வேடம் 
			ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலால் உலக நீங்கி நின்றனன் என்று மோரார்
 அன்றிஅவ் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் றோரார்
 கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணமென் றோரார்.
 | 71 |  
			| நாயகன் கண்ந யப்பால் 
			நாயகி புதைப்ப எங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
 தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
 தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்.
 | 72 |  
			| கண்ணுதல் யோகி ருப்பக் 
			காமன்நின் றிடவேட் கைக்கு விண்ணுசு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான்
 எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
 பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்.
 | 73 |  
			| படைப்பாகித் தொழிலும் 
			பத்தர்க் கருளும்பா வனையும் நூலும், இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்,
 அடைப்பானாம் அதுவும் முத்தி யளித்திடு மியோகும் பாகந்,
 துடைப்பானாந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே.
 | 74 |  
			| உருமேனி தரித்துக் கொண்ட 
			தென்றலும் உருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
 திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
 கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.
 | 75 |  
			| அத்துவா மூர்த்தி யாக 
			அறைகுவ தென்னை என்னின் நித்தனாய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலைமை யானும்
 சித்துடன் அசித்திற் கெல்லாம் சேட்டித னாத லானும்
 வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம்.
 | 76 |  
			| மந்திர மத்து வாவின் 
			மிகுத்தொரு வடிவ மாகத் தந்ததென் அரனுக் கென்னில் சகத்தினுக் குபாதா னங்கள்
 விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச்
 சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும்.
 | 77 |  
			| சுத்தமாம் விந்துத் 
			தன்னில் தோன்றிய ஆத லானும் சத்திதான் பிரேரித் துப்பின் தானதிட் டித்துக் கொண்டே
 அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே
 வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்.
 | 78 |  
			| மந்திர மதனிற் பஞ்ச 
			மந்திரம் வடிவ மாகத் தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
 முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தானும்
 அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே.
 | 79 |  
			| அயன்றன் ஐஆதி ஆக அரனுரு 
			வென்ப தென்னை பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூலம்
 முயன்றனர் இவரே யாயின் முன்னவ னென்னை முற்றும்
 நயந்திடும் அவனி வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே.
 | 80 |  
			| சத்திதான் பலவோ வென்னில் 
			தானொன்றே அநேக மாக வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
 உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
 புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம்.
 | 81 |  
			| சத்திதன் வடிவே தென்னில் 
			தடையிலா ஞான மாகும் உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
 எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
 வைத்தலான் மறைப்பில் ஞானால் மருவிடுங் கிரியை எல்லாம்.
 | 82 |  
			| ஒன்றதாய் இச்சா ஞானக் 
			கிரியையென் றொருமூன் றாகி நின்றிடுஞ் சத்தி இச்சை உயிர்க்கருள் நேச மாகும்
 நன்றெலாம் ஞான சத்தி யால்நயந் தறிவன் நாதன்
 அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகில மெல்லாம்.
 | 83 |  
			| சீவனும் இச்சா ஞானக் 
			கிரியையாற் சிவனை யொப்பான் ஆவனென் றிடின்அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்
 காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்
 பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும்.
 | 84 |  
			| ஞானமே யான போது 
			சிவன்தொழில் ஞான மொக்கின் ஈனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறின்
 ஊனமேற் கிரியை வித்தை உருத்திரன் இலய போகம்
 ஆனபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே.
 | 85 |  
			| வித்தையோ டீசர் சாதாக் 
			கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ் சுத்ததத் துவஞ்சி வன்தன் சுதந்திர வடிவ மாகும்
 நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே
 வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே.
 | 86 |  
			| ஒருவனே இராவ ணாதி பாவக 
			முற்றாற் போலத் தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையும் திரியா னாகும்
 வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும்
 இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்.
 | 87 |  
			| பொன்மைநீ லாதி வன்னம் 
			பொருந்திடப் பளிங்க வற்றின் தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேத மெல்லாம்
 நின்மலன் தானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்
 முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே.
 | 88 |  
			| சத்தியுஞ் சிவமு மாய 
			தன்மைஇவ் வுலக மெல்லாம் ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
 வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
 இத்தையும் அறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.
 | 89 |  
			| சிவன்அரு உருவும் அல்லன் 
			சித்தினோ டசித்தும் அல்லன் பவமுதல் தொழில்க ளொன்றும் பண்ணிடு வானும் அல்லன்
 தவமுத லியோக போகம் தரிப்பவ னல்லன் தானே
 இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல்பினானே.
 | 90 |  இரண்டாஞ் சூத்திரம் (91 -186 
)  
	
		
			| உலகெலா மாகி வேறாய் 
			உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
 தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
 நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்.
 | 91 |  
			| ஒன்றென மறைக ளெல்லாம் 
			உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
 அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும்
 சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே.
 | 92 |  
			| உருவொடு கருவி யெல்லாம் 
			உயிர்கொடு நின்று வேறாய் வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
 தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
 வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே.
 | 93 |  
			| இருவினை இன்பத் துன்பத் 
			திவ்வுயிர் பிறந்தி றந்து வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள்
 தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே
 மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.
 | 94 |  
			| இருவினை யென்னை இன்பத் 
			துன்பங்கள் இயல்ப தென்னின் ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி
 வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை
 தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே.
 | 95 |  
			| தன்னியல் பொழியப் பூவும் 
			தழலும்வந் தணைய நீரின் மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும்
 உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத
 துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே.
 | 96 |  
			| இம்மையின் முயற்சி யாலே 
			இருநிதி ஈட்டி இன்பம் இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி
 இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல்
 இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே.
 | 97 |  
			| இருவினைச் செயல்காண் 
			இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித்
 தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும்
 ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே.
 | 98 |  
			| பேறிழ வின்ப மோடு 
			பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால்
 கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது
 தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே.
 | 99 |  
			| உடற்செயல் கன்மம் இந்த 
			உடல்வந்த வாறே தென்னின் விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
 தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
 இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.
 | 100 |  
			| முற்செயல் விதியை இந்த 
			முயற்சியோ டனுப வித்தான் இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர்
 அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும்
 பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி.
 | 101 |  
			| மேலைக்கு வித்து மாகி 
			விளைந்தவை உணவு மாகி ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம்
 மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம்
 மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே.
 | 102 |  
			| இதமகி தங்கள் என்ப 
			திகல்மன வாக்குக் காயத்(து) இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை
 இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு)
 இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே.
 | 103 |  
			| இறைவனிங் கேற்ப தென்னை 
			இதமகி தங்க ளென்னின் இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்
 அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன்
 மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன்.
 | 104 |  
			| நிக்கிர கங்கள் தானும் 
			நேசத்தால் ஈசன் செய்வ(து) அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி
 இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
 எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும்.
 | 105 |  
			| தந்தைதாய் பெற்ற தத்தம் 
			புதல்வர்கள் தம்சொ லாற்றின் வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
 பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும்
 இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும்.
 | 106 |  
			| செயல்களே பலத்தைச் 
			செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின் முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே
 பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே
 வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல்.
 | 107 |  
			| செய்க்கிடுந் தழையும் 
			தின்னுந் திரவிய மதுவும் போல உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி
 வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால்
 மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ.
 | 108 |  
			| திரவியம் உவமை யன்று 
			செய்திக்கண் திரவி யங்கள் விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை
 பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம்
 கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே.
 | 109 |  
			| செய்தவர் மனத்தே எல்லாச் 
			செய்தியும் கிடந்து பின்னர் எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம்
 பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து)
 ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே.
 | 110 |  
			| தானஞ்செய் பொருள் 
			தரித்தோர் செய்தவர் தக்க செய்தி ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும்
 ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால்
 நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர.
 | 111 |  
			| உலகுடல் கரணங் காலம் 
			உறுபலம் நியதி செய்தி பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால்
 நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து)
 அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே.
 | 112 |  
			| ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் 
			உபசாரம் உறவு சீலம் வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
 அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி
 இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள்.
 | 113 |  
			| மனமது நினைய வாக்கு 
			வழுத்தமந் திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்
 சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும்
 முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே.
 | 1140 |  
			| யாதொரு தெய்வங் கொண்டீர் 
			அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
 வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
 ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே.
 | 115 |  
			| இங்குநாம் சிலர்க்குப் 
			பூசை இயற்றினால் இவர்களோவந்(து) அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண்
 எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து)
 அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன்.
 | 116 |  
			| காண்பவன் சிவனே யானால் 
			அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம்
 வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான்
 பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.
 | 117 |  
			| தாபர சங்க மங்க ளென்றிரண் 
			டுசரவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்
 நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை
 யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே.
 | 118 |  
			| அரனடிக் கன்பர் செய்யும் 
			பாவமும் அறம தாகும் பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
 வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
 நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.
 | 119 |  
			| மறைகளீ சன்சொல் அச்சொல் 
			வழவாரா உயிரை வைக்கும், சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும்,
 உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம்,
 இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும்.
 | 120 |  
			| ஆணையால் அவனி மன்னன் 
			அருமறை முறைசெய் யாரை ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்
 ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி
 ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண்.
 | 121 |  
			| அரசனும் செய்வ தீசன் 
			அருள்வழி அரும்பா வங்கள் தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத்
 துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
 நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம்.
 | 122 |  
			| அருளினால் உரைத்த நூலின் 
			வழிவாரா ததன்மஞ் செய்யின் இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
 பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
 மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன்.
 | 123 |  
			| மருத்துவன் உரைத்த நூலின் 
			வழிவரிற் பிணிகள் வாரா வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத்
 திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன்
 உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன்.
 | 124 |  
			| மண்ணுளே சிலவி யாதி 
			மருத்துவன் அருத்தி யோடும் திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம்
 கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்
 அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன்.
 | 125 |  
			| பூதனா சரீரம் போனால் 
			புரியட்ட ரூபந் தானே யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம்
 நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
 தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம்.
 | 126 |  
			| உடல்விடா யோனி பற்றி 
			உதிப்பினும் உதிக்கு மொன்றிற் படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து
 கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு)
 இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே.
 | 127 |  
			| பன்னகம் அண்ட சங்கள் 
			பரகாயந் தன்னிற் பாய்வோர் துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல
 உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு
 மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல்.
 | 128 |  
			| தன்மமோ டதன்ம வாகித் 
			தானிரு பயனுந் தந்து நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண
 முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக்
 கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்.
 | 129 |  
			| இருவினை அநாதி யாதி 
			இயற்றலால் நுகர்வால் அந்தம் வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத்
 தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி
 அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும்.
 | 130 |  
			| சங்கமம் தாப ரங்கள் 
			தத்தம்கன் மத்துக் கீடா அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின்
 இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம்
 இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ.
 | 131 |  
			| நரர்களாய்த் துய்ப்ப 
			ரென்னின் நரர்பதி சுரரு லோகம் சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும்
 சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது
 நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே.
 | 132 |  
			| வண்டுக ளாகி மாறும் 
			மயிர்க்குட்டி மற்றோர் செந்துப் பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
 கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே
 கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே.
 | 133 |  
			| அகலியை கல்ல தானாள் அரிபல 
			பிறவி யானான் பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு
 நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச்
 சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே.
 | 134 |  
			| செப்பினாய் மாற வேறு 
			சிலர்விதி யாலே கன்மால் வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின்
 எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே
 முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும்.
 | 135 |  
			| அவ்வவ யோனி தோறும் அவ்வவ 
			உலகந் தோறும் செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா
 இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த
 எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே.
 | 136 |  
			| மாறியிவ் வுருவ மெல்லாம் 
			வருவதெங் கேநின் றென்னில் கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின்
 வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும்
 தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும்.
 | 137 |  
			| சூக்குமங் கெட்டுத் தூலந் 
			தோன்றிடா சூக்கு மத்தின் ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு)
 ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று
 நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல்.
 | 138 |  
			| விதிப்படிச் சூக்கு மத்தே 
			உருவரும் வினையா லிங்கே உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில்
 கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க
 மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே.
 | 139 |  
			| தூலமா முருவி னுக்குச் 
			சூக்கும முதல தற்கு மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான்
 மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம்
 சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது.
 | 140 |  
			| அரன்விதி யருள தென்றே 
			அறைந்தனம் அதுவு முன்னே தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம்
 வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப்
 பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும்.
 | 141 |  
			| எழுமுடல் கரண மாதி 
			இவைமலம் மலம லத்தாற் கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில்
 செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை
 முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன்.
 | 142 |  
			| நித்தமாய் அருவாய் ஏக 
			நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
 சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய்
 வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே.
 | 1430 |  
			| மாயையிற் கால மோடு 
			நியதிபின் கலாதி தோன்றும் ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக்
 காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி
 நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம்.
 | 144 |  
			| நியதிபின் தோன்றிக் கன்ம 
			நிச்சயம் பண்ணி நிற்கும் அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின்
 செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை
 உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்.
 | 145 |  
			| விச்சையின் அராகந் தோன்றி 
			வினைவழி போகத் தின்கண் இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும்
 வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா
 நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே.
 | 146 |  
			| வருங்குண வடிவாய் மூலப் 
			பிரகிருதி கலையில் தோன்றித் தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும்
 இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப்
 பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே.
 | 147 |  
			| சித்தமாம் அவ்வி யத்தம் 
			சிந்தனை யதுவுஞ் செய்யுஞ் புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
 வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்
 பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்.
 | 148 |  
			| ஆங்காரம் புத்தி யின்கண் 
			உதித்தகந் தைக்கு வித்தாய் ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே
 நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர்
 பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே.
 | 149 |  
			| மதுமது தைச தத்தின் 
			வந்தொரு பொருளை முந்தி நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே
 இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம்
 முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர்.
 | 150 |  
			| நற்செவி துவக்குக் கண்நா 
			நாசிஐந் தினையு நல்லோர் புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச்
 சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும்
 வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே.
 | 151 |  
			| வாக்கொடு பாதம் பாணி 
			பாயுவோ டுபத்த மைந்து நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே
 ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம்
 ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே.
 | 152 |  
			| வாயாதி சோத்தி ராதி 
			புறத்துவாழ் கருவி யாகும் ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும்
 ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர்
 மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா.
 | 153 |  
			| ஓசைநற் பரிச ரூப இரதகந் 
			தங்க ளென்று பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின்
 நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்
 ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான்.
 | 154 |  
			| சாற்றிய பஞ்ச தன்மாத் 
			திரைகளிற் சத்த முன்னாத் தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு)
 ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
 ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே.
 | 1550 |  
			| இரந்தர மாகி வான்றான் 
			இடங்கொடுத் திடும்ச லித்துப் பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும்
 நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும்
 உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே.
 | 156 |  
			| மண்புனல் அனல்கான் 
			வான்பால் படிவுநாற் கோண மாகும் தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம்
 வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம்
 எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே.
 | 157 |  
			| குறிகள்வச் சிரத்தி னோடு 
			கோகந தஞ்சு வத்தி அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி
 செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம்
 நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை.
 | 158 |  
			| சுத்ததத் துவங்க ளென்று 
			முன்னமே சொன்ன ஐந்தும் இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத்
 தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து
 சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில்.
 | 159 |  
			| ஐந்துசுத் தத்தின் கீழேழ் 
			சுத்தாசுத் தம்அ சுத்தந் தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு
 வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு)
 அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே.
 | 160 |  
			| தத்துவ ரூப மாகும் 
			தரும்அரு வுருவ மெல்லாம் தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும்
 தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில்
 தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண்.
 | 161 |  
			| தத்துவம் எண்மூன் 
			றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும், வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும்,
 நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற,
 சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும்.
 | 162 |  
			| மொய்தரு பூத மாதி மோகினி 
			அந்த மாகப் பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று
 மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி
 எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே.
 | 1630 |  
			| சிவஞ்சத்தி நாதம் விந்து 
			சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப்
 பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய்
 நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர்.
 | 164 |  
			| சத்தியாய் விந்து சத்தி 
			யாய்மனோன் மனிதா னாகி ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
 வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
 எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.
 | 165 |  
			| சத்திதான் நாத மாதி 
			தானாகுஞ் சிவமு மந்தச் சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம்
 சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர்
 சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே.
 | 166 |  
			| சிவம்சத்தி தன்னை ஈன்றும் 
			சத்திதான் சிவத்தை ஈன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
 பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
 தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே.
 | 167 |  
			| தனுகரண புவன போகம் 
			தற்பரம் பந்தம் வீடென்(று) அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள்
 இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி
 நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன்.
 | 168 |  
			| எல்லாமாய்த் தத்துவங்கள் 
			இயைந்ததென் அணுவுக் கென்னில் தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின்
 நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற
 பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே.
 | 169 |  
			| ஒன்றதாய் அநேக சத்தி 
			யுடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
 நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து)
 என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே.
 | 170 |  
			| மலமென வேறொன் றில்லை 
			மாயாகா ரியம தென்னின் இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை
 விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி
 உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே.
 | 171 |  
			| மாயையே ஆன்ம ஞானக் 
			கிரியையை மறைத்து நிற்கும் தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப்
 போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக்
 காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே.
 | 172 |  
			| பரிதியை முகில் மறைப்பப் 
			பாயொளி பதுங்கி னாற்போல் உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும்
 கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால்
 மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே.
 | 173 |  
			| போதகா ரியம்ம றைத்து 
			நின்றது புகல்ம லங்காண் ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே
 காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை
 ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே.
 | 174 |  
			| புருடன்தன் குணம் அவித்தை 
			யெனில்சடம் புருட னாகும் குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய்
 மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும்
 தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன்.
 | 175 |  
			| மும்மலம் நெல்லி னுக்கு 
			முளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று
 பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்
 இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும்.
 | 176 |  
			| மாயையின் காரி யத்தை 
			மாயேய மலம தென்றும் ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும்
 தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
 ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும்.
 | 177 |  
			| மலம்மாயை கன்மம் மாயே 
			யம்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்
 நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண்
 அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே.
 | 178 |  
			| அண்டசம் சுவேத சங்கள் 
			உற்பிச்சம் சராயு சத்தோ(டு) எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால்
 உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல்
 கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண்.
 | 179 |  
			| நரர்பயில் தேயந் தன்னில் 
			நான்மறை பயிலா நாட்டில் விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும்
 தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து
 பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே.
 | 180 |  
			| வாழ்வெனும் மையல் விட்டு 
			வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
 ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே
 போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே.
 | 181 |  
			| மானுடப் பிறவி தானும் 
			வகுத்தது மனவாக் காயம் ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ
 வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்
 ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார்.
 | 182 |  
			| கருவினுள் அழிவ தாயும் 
			கழிந்திடா தழிவ தாயும் பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும்
 தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும்
 உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய.
 | 183 |  
			| ஒருபுலன் நுகரும் போதங் 
			கொன்றில்லை ஒன்றன் பாலும் வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும்
 ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை
 மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே.
 | 184 |  
			| அரிசனம் பூசி மாலை 
			அணிந்துபொன் னாடை சாத்திப் பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட
 வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு
 பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர்.
 | 185 |  
			| பிணத்தினை ஒத்து வாழ்வோர் 
			பின்னடைப் பிணங்கள் போல உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம்
 கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால்
 வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன்.
 | 186 |  மூன்றாஞ் சூத்திரம் (187- 
190)  
	
		
			| உயிரெனப் படுவ திந்த 
			உடலின்வே றுளதாய் உற்றுச் செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்
 பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
 துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம்.
 | 187 |  
			| உடலின்வே றுயிரேன் இந்த 
			உடலன்றோ உணர்வ தென்னின் உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
 உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின்
 உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே.
 | 188 |  
			| அறிவதைம் பொறியே யென்னின் 
			உறக்கத்தி னறியாவாகும் அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின்
 அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு)
 அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே.
 | 189 |  
			| அறிந்திடும் பிராண வாயு 
			அடங்குதல் விடுதல் செய்தால் அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை
 அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா
 அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா.
 | 190 |  இ ல க் க ண வி ய ல் நான்காஞ் சூத்திரம் (191 - 
230)  
	
		
			| உணர்வன கரண மென்னின் 
			ஒன்றையொன் றுணரா வெவ்வே(று) அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப்
 புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி
 இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா.
 | 191 |  
			| கருவியாம் மனமும் புத்தி 
			அகங்காரம் சித்தம் நான்கும் மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு)
 ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர்
 தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம்.
 | 192 |  
			| அவ்வுடன் உவ்வும் மவ்வும் 
			மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள் செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும்
 ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா
 பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும்.
 | 193 |  
			| அயன்அரி அரனு மீசர் 
			சதாசிவம் அதிதெய் வங்கள் உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப்
 பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில்
 சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும்.
 | 194 |  
			| ஆன்மாவின் வடிவு தானே 
			அநேகார்த்தக் கூட்ட மென்னில் பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும்
 சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை
 ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே.
 | 195 |  
			| அறிவிச்சை செயல்களெல்லாம் 
			அடைந்தனல் வெம்மை யும்போல் குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி
 நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம்
 செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே.
 | 196 |  
			| குணங்களை யின்றி யொன்றாம் 
			குறியு டைத்தான்மா வென்னின் இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட்
 பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம்
 உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே.
 | 197 |  
			| சந்நிதி குணம தாகும் 
			தானென்போல் என்னிற் காந்தம் முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம்
 உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
 என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே.
 | 198 |  
			| உருவுயி ரென்னின் இந்த 
			உடலினுட் காண வேண்டும் வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும்
 கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின்
 மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே.
 | 199 |  
			| சூக்கும உருவ தென்னில் 
			தூலகா ரணம் தாகும் ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின்
 நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின்
 ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே.
 | 200 |  
			| அருவுரு வென்னில் ஆன்மா 
			அருவுரு வாவ தின்றாம் உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை
 வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின்
 உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே.
 | 201 |  
			| சந்திரன் வடிவு போலத் 
			தான்அரு வுருவ மென்னின் வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும்
 இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில்
 பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே.
 | 202 |  
			| அருவவி காரி யான்மா 
			ஆகாயம் போல வென்னின் உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி
 மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும்
 பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே.
 | 203 |  
			| அசித்தெனின் உணராதான்மா 
			அசித்துச்சித் தாகுமென்னின் அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை
 அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து)
 அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம்.
 | 204 |  
			| உயிரினை அணுவ தென்னின் 
			உடல்பல துவார மோடும் பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து)
 அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும்
 இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே.
 | 205 |  
			| உடலினின் ஏக தேசி 
			உயிரெனின் உருவாய் மாயும் படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில்
 சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும்
 அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே.
 | 206 |  
			| உருவினில் நிறைந்து 
			நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின் மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும்
 பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண்
 வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே.
 | 207 |  
			| எங்குந்தான் வியாபி 
			யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில், தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும்,
 பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்,
 இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும்.
 | 208 |  
			| சுத்தமாம் ஆன்ம சித்தைத் 
			துகளுடல் மறைத்த தென்னின் வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்
 ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம்
 பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே.
 | 209 |  
			| அசித்தரு வியாப கம்போல் 
			வியாபகம் அருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி
 நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
 பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா.
 | 210 |  
			| மாயையின் வயிற்றுள் மன்னி 
			வருஞ்செயல் ஞான மிச்சை ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு)
 ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம்
 காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா.
 | 211 |  
			| சூக்கும தேகி யாகித் 
			தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும்
 போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம்
 ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா.
 | 212 |  
			| மருவா னந்தம் விஞ்ஞான 
			மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய்
 வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும்
 அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம்.
 | 213 |  
			| தோற்பாவைக் கூத்தும் 
			தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த் தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும்
 பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
 ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே.
 | 214 |  
			| என்னுடல் பொறிபி ராணன் 
			கரணம்என் னுணர்வென் றக்கால் தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம்
 நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின்
 உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி.
 | 215 |  
			| பொன்னணி யாடை மாலை போதுமே 
			லான போதிங்(கு) என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது
 நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில்
 அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே.
 | 216 |  
			| உடலியா னல்லேன் இந்த 
			உணர்வுயான் அல்ல வான கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை
 இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ
 திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண்.
 | 217 |  
			| புந்தியை மனம தென்றும் 
			மனமது புந்தி யென்றும் சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும்
 முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும்
 வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண்.
 | 218 |  
			| அறிவுடல் சிந்தை யான்மா 
			அணைதலால் ஆன்மா வென்பர் எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல்
 பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப்
 பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே.
 | 219 |  
			| கண்டுணர் புருடன் வேறு 
			கனவுகண் டொடுங்கிக் காயம் உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து
 கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய்
 உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும்.
 | 220 |  
			| புருடனே அறிவ னாகில் 
			பொறிபுல னாதி போதம் தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
 வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன்
 அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன்.
 | 221 |  
			| படைகொடு பவனி போதும் 
			பார்மன்னன் புகும்போ தில்லில் கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர்
 அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா
 உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக.
 | 222 |  
			| சாக்கிர முப்பத் தைந்து 
			நுதலினிற் கனவு தன்னில் ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று
 நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி
 நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே.
 | 223 |  
			| இருவகைச் சாக்கி ராதி 
			அவத்தைக ளியல்பு தானும் இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று
 பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில்
 தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும்.
 | 224 |  
			| அறிதரு முதல வத்தை அடைதரு 
			மிடத்தே ஐந்தும் செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ
 பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே
 குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட.
 | 225 |  
			| ஐந்துசாக் கிரத்தின் 
			நான்கு கனவினில் சுழுனை மூன்று வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம்
 தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும்
 உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே.
 | 226 |  
			| கேவல சகல சுத்தம் 
			என்றுமூன் றவத்தை யான்மா மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
 காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம்
 ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே.
 | 227 |  
			| அறிவிலன் அமூர்த்தன் 
			நித்தன் அராகாதி குணங்க ளோடும் செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான்
 குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
 பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா.
 | 228 |  
			| உருவினைக் கொண்டு போக 
			போக்கியத் துன்னல் செப்பல் வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில்
 புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று
 திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே.
 | 229 |  
			| இருவினைச் செயல்க 
			ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
 திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்
 பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே.
 | 230 |  ஐந்தாஞ் சூத்திரம் (231 -239) 
	
		
			| பொறிபுலன் கரண மெல்லாம் 
			புருடனால் அறிந்தான் மாவை அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும்
 செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா
 அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன்.
 | 231 |  
			| இறைவனே அறிவிப் பானேல் 
			ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும் குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா
 முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல்
 அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி.
 | 232 |  
			| அறிந்திடும் ஆன்மா வொன்றை 
			ஒன்றினால் அறித லானும் அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்
 அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
 அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே.
 | 233 |  
			| கருவியால் பொருளால் 
			காட்டால் காலத்தால் கருமந் தன்னால் உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும்
 அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
 ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே.
 | 234 |  
			| கருவியும் பொருளும் 
			காட்டும் காலமும் கன்மந் தானும் உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி
 அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய்
 ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன்.
 | 235 |  
			| இறைவன்தன் சந்நி திக்கண் 
			உலகின்றன் சேட்டை யென்னும் மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண்
 உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம்
 நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே.
 | 236 |  
			| உலகமே உருவ மாக யோனிகள் 
			உறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
 அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
 நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன்.
 | 2371 |  
			| தெரிந்துகொண் டொரோவொன் 
			றாகச் சென்றைந்து புலனும் பற்றிப், புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி,
 திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம்,
 விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன்.
 | 238 |  
			| அருளது சத்தி யாகும் 
			அரன்தனக் கருளை யின்றித் தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை
 மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு)
 இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன்.
 | 239 |  ஆறாஞ் சூத்திரம் (240 -248)
 
	
		
		அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா 
		தவனோ வென்னின் அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும்
 செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்
 நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே.
 
			| 240 |  
			| ஆவதாய் அழிவ தாகி 
			வருதலால் அறிவு தானும் தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி
 மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி
 ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம்.
 | 241 |  
			| மண்தனில் வாழ்வும் வானத் 
			தரசயன் மாலார் வாழ்வும் எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம்
 கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி
 உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர்.
 | 242 |  
			| உணராத பொருள்சத் தென்னின் 
			ஒருபய னில்லைத் தானும் புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்
 தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து)
 இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும்.
 | 243 |  
			| தத்துவம் சத்(து) 
			அசத்துச் சதசத்து மன்றென் றாலென் உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில்
 வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த
 சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம்.
 | 244 |  
			| அறிபொருள் அசித்தாய் 
			வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின் அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை
 அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்
 அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும்.
 | 245 |  
			| பாவிப்ப தென்னிற் பாவம் 
			பாவகங் கடத்திற் பாவம் பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப்
 பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று
 பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே.
 | 246 |  
			| அன்னிய மிலாமை யானும் 
			அறிவினுள் நிற்ற லானும் உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும்
 என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும்
 தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன்.
 | 247 |  
			| ஒன்றெனு மதனால் ஒன்றென் 
			றுரைப்பதுண் டாகை யாலே நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே
 பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே
 என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே.
 | 248 |  சாதனவியல் ஏழாஞ் சூத்திரம் (249 -252)
 
	
		
			| அனைத்துஞ்சத் தென்னின் 
			ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின், முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல்,
 நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும்,
 தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே.
 | 249 |  
			| சத்தசத் தறிவ தான்மாத் 
			தான்சத்தும் அசத்து மன்று நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும்
 ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது
 வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும்.
 | 250 |  
			| சுத்தமெய்ஞ் ஞான மேனிச் 
			சோதிபால் அசத்தஞ் ஞானம் ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே
 சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம்
 வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும்.
 | 251 |  
			| அறிவிக்க அறித லானும் 
			அழிவின்றி நிற்ற லானும் குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன்
 நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே
 பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே.
 | 252 |  எட்டாஞ் சூத்திரம் 
		(253-291 ) >  
		
			| மன்னவன்தன் மகன்வேட 
			ரிடத்தே தங்கி வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப்
 பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப்
 பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல்
 துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத்
 துணைவனையும் அறியாது துயருறும்தொல் 
			லுயிரை
 மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி
 மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் 
			வைப்பன்.
 | 253 |  
			| உரைதரும்இப் பசுவர்க்கம் 
			உணரின் மூன்றாம் உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர்
 நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை
 நிற்கும்முத லிருவர்க்கு நிராதார 
			மாகிக்
 கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால்
 கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம 
			வொப்பில்
 தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித்
 தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா 
			சத்திநிபா தத்தால்.
 | 254 |  
			| பலவிதம்ஆ சான்பாச 
			மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும்
 அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி
 அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம்
 இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால்
 இயற்றுவது கிரியைஎழிற் குணட்மண்ட லாதி
 நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும்
 நிர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும்.
 | 255 |  
			| பாலரொடு வாலீசர் 
			விருத்தர்பனி மொழியார் பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் 
			பண்ணும்
 சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம்
 திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு 
			நித்தத்(து)
 ஏலுமதி காரத்தை இயற்றித் தானும்
 எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் 
			விளங்கும்
 சாலநிகழ் தேகபா தத்தி னோடு
 சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே.
 | 256 |  
			| ஓதியுணர்ந் தொழுக்கநெறி 
			இழுக்கா நல்ல உத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் 
			தம்மை
 நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின்
 நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் 
			செய்து
 சாதகரா சாரியரும் ஆக்கி வீடு
 தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் 
			றிரண்டாம்
 ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம்
 நிருவாணம் அபிடேகம் இவற்றனங்கு மன்றே.
 | 257 |  
			| அழிவிலாக் கிரியையினான் 
			ஆதல்சத்தி மத்தான் ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி
 ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம்
 உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ 
			வர்க்கும்
 வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள்
 வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் 
			கலைகள்
 கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி
 கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் 
			கண்ணாம்.
 | 258 |  
			| மந்திரங்கள் முதல் 
			ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ்
 அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு)
 அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் 
			தெய்வம்
 வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ்
 வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு
 தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று
 தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் 
			தானாம்.
 | 259 |  
			| வித்தையின்மந் திரமிரண்டு 
			பதம்நா லைந்துவிரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு
 தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம்
 தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில்
 வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று
 வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும்
 உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும்
 உணரில்அதி தேவதையும் உயரீச னாமே.
 | 260 |  
			| சாந்தியா தீதகலை 
			தன்னின்மந் திரங்கள் தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி 
			னாறு
 வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு
 மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம்
 ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள்
 எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் 
			றாகும்
 ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம்
 அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே.
 | 261 |  
			| மூன்றுதிறத் 
			தணுக்கள்செயும் கன்மங் கட்கு முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின்
 ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து)
 அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித்
 தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத்
 துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே 
			சோதித்(து)
 ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு)
 இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் 
			தால்இடிப்பன்.
 | 262 |  
			| புறச்சமய நெறிநின்றும் 
			அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் 
			சிரம
 அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
 அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் 
			படித்தும்
 சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
 சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் 
			வைசத்
 திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
 செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் 
			சேர்வர்.
 | 263 |  
			| இம்மையே ஈரெட்டாண் 
			டெய்திஎழி லாரும் ஏந்திழையார் முத்தியென்றும் 
			இருஞ்சுவர்க்க முத்தி
 அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம்
 அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி 
			யென்றும்
 மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும்
 விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் 
			சிவத்தைச்
 செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள்
 சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் 
			கியாமே.
 | 264 |  
			| ஓதுசம யங்கள் பொருளுணரு 
			நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
 யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில்
 இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
 நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
 நின்றதியா தொருசமயம் அதுசமயம் 
			பொருள்நூல்
 ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே
 அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் 
			அடங்கும்.
 | 265 |  
			| அருமறையா கமமுதனூல் 
			அனைத்தும்உரைக் கையினான் அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் 
			அணுக்கள்
 தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில்
 தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா 
			தித்து
 மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்
 மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே 
			தாங்கம்
 சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை
 சொல்லுவார்த் மக்கறையோ சொல்லொ ணாதே.
 | 266 |  
			| வேதநூல் சைவநூலென் 
			றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த 
			நூல்கள்
 ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும்
 ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
 நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
 நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே 
			தாந்தத்
 தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
 திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த 
			மாகும் .
 | 267 |  
			| சித்தாந்தத் தேசிவன்தன் 
			திருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றி லேசீவன் முத்த ராக
 வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
 மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை 
			அறுத்து
 முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
 மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க 
			ராகிப்
 பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
 பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன 
			பிராந்தி.
 | 268 |  
			| இறைவனா வான்ஞான மெல்லா 
			மெல்லா முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் 
			இயம்பு
 மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும்
 மரபின்வழி வருவோர்க்கும் வாரா 
			தோர்க்கும்
 முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே
 முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு 
			போகத்
 திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே
 சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் 
			சிவற்கே.
 | 269 |  
			| சன்மார்க்கம் சகமார்க்கம் 
			சற்புத்ர மார்க்கம் தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
 நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
 நற்கிரியா சரியையென நவிற்றுவதும் 
			செய்வர்
 சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
 சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் 
			விதமாம்
 முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
 முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத 
			மென்பர்.
 | 270 |  
			| தாதமார்க் கம்சாற்றிற் 
			சங்கரன்தன் கோயில் தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் 
			சாத்திப்
 போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
 புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து 
			பாடித்
 தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
 செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் 
			செய்வ(து)
 யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும்
 இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல 
			கிருப்பர்.
 | 271 |  
			| புத்திரமார்க் கம்புகலில் 
			புதியவிரைப் போது புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் 
			டைந்து
 சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம்
 சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
 பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
 பரிவினொடும் எரியில்வரு காரியமும் 
			பண்ணி
 நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள்
 நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் 
			காலே.
 | 272 |  
			| சகமார்க்கம் 
			புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும் சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
 அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
 கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் 
			டலத்தின்
 முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
 முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக 
			வினைகள்
 உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
 உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் 
			பெறுவர்.
 | 273 |  
			| சன்மாக்கம் சகலகலை புராண 
			வேத சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் 
			உணர்ந்து
 பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
 பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் 
			காட்டும்
 நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
 ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
 பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
 பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.
 | 274 |  
			| ஞானநூல் தனையோதல் ஓது 
			வித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் 
			நன்றா
 ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
 இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
 ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
 ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
 ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
 அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ 
			ரெல்லாம்.
 | 275 |  
			| கேட்டலுடன் சிந்தித்தல் 
			தௌ¤த்தல் நிட்டை கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்
 வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள்
 மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு)
 ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம்
 இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் 
			பார்மேல்
 நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால்
 ஞானநிட்டை அடைந்தவர் நாதன் தாளே.
 | 276 |  
			| தானம்யா கம்தீர்த்தம் 
			ஆச்சிரமம் தவங்கள் சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர்
 ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர்
 ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
 ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
 ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப 
			வித்து
 ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு
 நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே.
 | 277 |  
			| சிவஞானச் செயலுடையோர் 
			கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலமலைபோல் 
			நிகழ்ந்து
 பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப்
 பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை 
			அறுக்கத்
 தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
 சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே
 நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
 நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் 
			தானே.
 | 278 |  
			| ஞானத்தால் வீடென்றே 
			நான்மறைகள் புராணம் நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும்
 ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்
 உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான்
 ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல்
 அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி 
			யாகும்
 ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
 இறைவனடி ஞானமே ஞான மென்பர்.
 | 279 |  
			| சூரியகாந் தக்கல்லி 
			னிடத்தே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
 ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற
 அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத்
 தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்
 தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும்
 நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
 நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து 
			தோன்றும்.
 | 280 |  
			| மிக்கதொரு பக்குவத்தின் 
			மிகுசத்தி நிபாதம் மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் 
			அருளால்
 புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்
 பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித்
 தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில்
 தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் 
			கரனோ(டு)
 ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே
 உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே 
			காண்பர்.
 | 281 |  
			| அறியாமை அறிவகற்றி அறிவி 
			னுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து
 குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
 கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்
 பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
 பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி
 நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
 நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார 
			னாயே.
 | 282 |  
			| புண்ணியமேல் 
			நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
 நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
 ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
 எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
 எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை 
			வின்றிக்
 கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
 கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் 
			நிற்பன்.
 | 2830 |  
			| ஞாலமதின் ஞானநிட்டை 
			யுடையோ ருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
 சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
 செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை
 கோலமிலை புலனில்லை கரண மில்லை
 குணமில்லை குறியில்லை குலமு மில்லை
 பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
 பாடலினொ டாடலிவை பயின்றிடினும் 
			பயில்வர்.
 | 284 |  
			| தேசமிடம் காலம்திக் 
			காசனங்க ளின்றிச் செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் 
			செய்தங்(கு)
 ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல்
 உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் 
			கிடத்தல்
 மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின்
 வருத்தத்தில் திருத்தத்தில் 
			மைதுனத்தில் சினத்தின்
 ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம்
 அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை 
			அகலார்.
 | 285 |  
			| இந்நிலைதான் இல்லையேல் 
			எல்லா மீசன் இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் 
			நின்ற
 அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி
 அறிவதொரு குறிகுருவின் அருளினால் 
			அறிந்து
 மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே
 மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத்
 துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம்
 தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ 
			திகமாம்.
 | 286 |  
			| சாக்கிரத்தே அதீதத்தைப் 
			புரிந்தவர்கள் உலகிற் சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் 
			இவர்கள்
 பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
 பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
 ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு)
 அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் 
			றிருப்பர்
 நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
 நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி 
			டாவே.
 | 287 |  
			| கருவிகழிந் தாற்காணா 
			ரொன்றுமெனிற் காணார் காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள்
 மருவிஇரு வரும்புணர வந்த இன்பம்
 வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர்
 உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை
 உணராதார் உணர்வினால் உணர்வதுகற் 
			பனைகாண்
 அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர்
 அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் 
			அறாதே.
 | 2880 |  
			| பன்னிறங்கள் அவைகாட்டும் 
			படிகம்பால் உள்ளம் பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் 
			திட்(டு)
 இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன்
 எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் 
			வேறாய்ப்
 பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
 பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் 
			பின்னை
 முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி
 முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா 
			முறைபோல்.
 | 289 |  
			| எங்குந்தான் என்னினாம் 
			எய்த வேண்டா எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன்
 அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து)
 அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா
 இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து)
 இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த
 துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல்
 சோதிக்குட் சோதியாய்த் தோன்றிவன் காணே.
 | 290 |  
			| பாசிபடு குட்டத்திற் 
			கல்லினைவிட் டெறியப் படும்பொழுது நீங்கிஅது விடுமபொழுதிற் 
			பரக்கும்
 மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
 அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்
 நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
 நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே 
			யாகி
 ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர்
 அரும்பாச மறுக்கும் வகை அருளின்வழி 
			யுரைப்பாம்.
 | 291 |  ஒன்பதாஞ் சூத்திரம் (292 - 
303)  
	
		
			| பாசஞா னத்தாலும் பசுஞானத் 
			தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
 நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
 நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
 ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
 அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும்
 ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
 உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட.
 | 292 |  
			| வேதசாத் திரமிருதி 
			புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கள் 
			மேலாம்
 நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
 நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
 காதலினால் நான்பிரம மென்னு ஞானம்
 கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்(டு)
 ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம்
 ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் 
			காணே.
 | 293 |  
			| கரணங்கள் கெடவிருக்கை 
			முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் 
			உயிர்கள்
 மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க
 வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
 சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி
 தவிராது மலமிதுவும் பசுஞான மாகும்
 அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு)
 அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே.
 | 294 |  
			| சிவனைஅவன் திருவடிஞா 
			னத்தாற் சேரச் செப்புவது செயல்வாக்குச் சிந்தை 
			யெல்லாம்
 அவனையணு காவென்றும் ஆத லானும்
 அவனடிஅவ் வொளிஞான மாத லானும்
 இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை
 என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் 
			கொத்தோ
 அவமகல எனையறியேன் எனும்ஐய மகல
 அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும்.
 | 295 |  
			| கண்டிடுங்கண் தனைக்காணா 
			கரணம் காணா கரணங்கள் தமைக்கான உயிருங் காணா
 உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து)
 உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா 
			தாகும்
 கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக்
 கண்ணாகிக் கரணங்கள் காணமல் நிற்பன்
 கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம்
 கூடாது கூடிடினும் குறித்தடியின் 
			நிறுத்தே.
 | 296 |  
			| குறித்தடியின் 
			நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
 வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க
 வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ 
			ழில்லான்
 நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு
 நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் 
			துள்ளே
 பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே
 புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் 
			புரிந்தே.
 | 297 |  
			| கண்டஇவை யல்லேன்நான் 
			என்றகன்று காணாக் கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் 
			கசிந்த
 தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
 சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
 விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
 விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
 பண்டைமறை களும்அதுநா னானே னென்று
 பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் 
			காணே.
 | 298 |  
			| அஞ்செழுத்தால் ஆன்மாவை 
			அரனுடைய பரிசும் அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் 
			அறிந்திட்(டு)
 அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
 ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் 
			சித்(து)
 அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி
 அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் 
			வழிநின்(று)
 அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன்
 அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே.
 | 299 |  
			| நாட்டுமித யந்தானும் 
			நாபியினில் அடியாய் ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் 
			நாளத்தாய்
 மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய்
 முழுவிதழ்எட் னக்கரங்கள் முறைமையினின் 
			உடைத்தாய்க்
 காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும்
 கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் 
			சத்தி
 வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி
 மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து 
			போற்றே.
 | 300 |  
			| அந்தரியா கந்தன்னை 
			மத்திசா தனமாய் அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி 
			யாகும்
 கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக்
 கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு
 சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால்
 சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை 
			விளக்க
 வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே
 வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே.
 | 301 |  
			| புறம்பேயும் அரன்கழல்கள் 
			பூசிக்க வேண்டில் பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் 
			கொண்டு
 சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச்
 சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் 
			போற்றி
 அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும்
 ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே
 திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ
 சீரடியார் தம்முடைய செய்தி தானே.
 | 302 |  
			| இந்தனத்தின் எரிபாலின் 
			நெய்பழத்தின் இரதம் எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் 
			இறைவன்
 வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும்
 மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற்
 சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித்
 தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப்
 பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்
 பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் 
			பாலே.
 | 303 |  ப ய னி ய ல்பத்தாஞ் சூத்திரம் (304 - 
309)  
	
		
			| இவனுலகில் இதமகிதம் செய்த 
			வெல்லாம் இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் 
			இசையும்
 அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
 அரன்பணியின் நின்றிடவும் அகலுங் 
			குற்றம்
 சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும்
 செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
 பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
 பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி 
			விடுமே.
 | 304 |  
			| யான்செய்தேன் 
			பிறர்செய்தார் என்னதியான் என்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி 
			நிமிர்த்துத்
 தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
 தனையளித்து முன்நிற்கும் 
			வினையொளித்திட் டோடும்
 நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி
 நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் 
			கன்மம்
 ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால்
 ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.
 | 305 |  
			| இந்திரிய மெனைப்பற்றி 
			நின்றேஎன் வசத்தின் இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப 
			திவற்றைத்
 தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும்
 தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் 
			தாள்கள்
 வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி
 வாட்டமின்றி இருந்திடவும் வருங்செயல்க 
			ளுண்டேல்
 முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள்
 மூளாஅங் காளாகி மீளா னன்றே.
 | 306 |  
			| சலமிலனாய் ஞானத்தால் 
			தனையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை 
			தன்னால்
 நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
 நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
 உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
 உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா 
			யென்றும்
 நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
 நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் 
			தானே.
 | 307 |  
			| நாடுகளிற் புக்குழன்றும் 
			காடுகளிற் சரித்தும் நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் 
			தவிர்ந்தும்
 நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
 நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் 
			பிறப்பின்
 ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
 எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை 
			ஞானங்
 கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
 குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே 
			இருப்பார்.
 | 308 |  
			| அங்கித்தம் பனைவல்லார்க் 
			கனல்சுடா தாகும் ஔடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா
 எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு)
 இருவினைகள் சென்றணையா முற்செய்வினை 
			இங்குத்
 தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
 சக்கரமும கந்தித்துச் சுழலு மாபோல்
 மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
 மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே.
 | 309 |  பதினொராஞ் சூத்திரம் (310 - 
321) 
	
		
			| காயமொழிந் தாற்சுத்த னாகி 
			ஆன்மாக் காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய 
			கண்ணுக்(கு)
 ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல
 ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் 
			இத்தை
 ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய
 அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே
 மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன்
 மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே.
 | 310 |  
			| பரஞானத் தாற்பரத்தைத் 
			தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் 
			பார்க்க
 வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
 வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் 
			கலக்கம்
 தருஞானம் போகஞா திருஞான ஞேயம்
 தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்
 திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம்
 ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் 
			டிருப்பர்.
 | 311 |  
			| அநாதிஉடல் ஒன்றினைவிட் 
			டொன்றுபற்றிக் கன்மால் ஆயழிந்து வருதலால் அந்த மில்லை
 பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப்
 பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே 
			இதுவும்
 இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல்
 இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம்
 மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி
 மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் 
			காணே.
 | 312 |  
			| தெரிவரிய மெய்ஞ்ஞானம் 
			சேர்ந்த வாறே சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த 
			னாகும்
 உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும்
 ஔ¢ளெரியின் ஔ¤முன்னர் இருளுந் தேற்றின்
 வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி
 மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம்
 திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ்
 சேராத வகைதானுந் தேயு மன்றே.
 | 313 |  
			| ஆணவந்தான் அநாதிஅந்த 
			மடையா தாகும் அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் 
			செம்பிற்
 காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
 கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
 தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
 தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் 
			தாளைப்
 பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
 புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் 
			போமே.
 | 314 |  
			| நெல்லினுக்குத் 
			தவிடுமிகள் அநாதி யாயே நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை 
			நிகழ்த்தீர்
 சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை
 தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி 
			டாவாம்
 மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை
 மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே 
			நீங்கும்
 நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
 நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே.
 | 315 |  
			| எவ்விடத்தும் இறையடியை 
			இன்றியமைந் தொன்றை அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் 
			றானும்
 செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
 சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து 
			நிற்பன்
 இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா
 இவற்றினுக்கம் முதலெழுத்துக் 
			கெல்லாமாய் நிற்கும்
 அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம்
 அரன்டியை அகன்றுநிற்ப தெங்கே யாமே.
 | 316 |  
			| எங்குந்தான் 
			நிறைந்துசிவன் நின்றா னாகில் எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில்
 இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும்
 ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே 
			யிருளாம்
 பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்
 பதிரிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே 
			ருயிர்க்குத்
 துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே
 சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் 
			காணே.
 | 317 |  
			| சென்றணையும் நிழல்போலச் 
			சிவன்நிற்ப னென்னில் சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் 
			தொன்றாய்
 நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம்
 நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட 
			தென்னில்
 பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ
 பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த 
			னன்றாம்
 ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின்
 ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் 
			றன்றே.
 | 318 |  
			| செம்பிரத குளிகையினாற் 
			களிம்பற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் 
			சீவன்
 நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்
 நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி
 அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும்
 அக்குளிகை தானும்பொன் னாகா தாகும்
 உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன்
 உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு 
			முரித்தே.
 | 319 |  
			| சிவன்சீவ னென்றிரண்டுஞ் 
			சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் 
			தவன்றான்
 பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற்
 படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து 
			மிவன்றான்
 அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும்
 அணைந்தாலு மொன்றாகா தநந்நியமாக 
			யிருக்கும்
 இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி
 இதுஅசித்தென் றிடில்அவனுக் 
			கிவனும்அசித் தாமே.
 | 320 |  
			| இரும்பைக்காந் 
			தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா 
			னாக்கி
 அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை
 அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து
 விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி
 மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக்
 கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்
 கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் 
			கலந்தே.
 | 321 |  பன்னிரண்டாஞ் சூத்திரம் (322 
-328) 
	
		
			| செங்கமலத் தாளிணைகள் சேர 
			லொட்டாத் திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் 
			செறிந்திட்(டு)
 அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம்
 அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி
 எங்குமியாம் ஒருவர்க்கு மௌ¤யோ மல்லோம்
 யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் 
			பெய்தித்
 திங்கள்முடி யார்அடியார் அடியே மென்று
 திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை 
			யோரே.
 | 322 |  
			| ஈசனுக்கன் பில்லார் 
			அடியவர்க்கன் பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார் 
			தமக்கும்அன் பில்லார்
 பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற்
 பிறப்பினினும் இறப்பினினும் 
			பிணங்கிடுவர் விடுநீ
 ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு)
 அவர்கருமம் உன்கரும மாகச் செய்து
 கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று
 கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் 
			திரியே.
 | 323 |  
			| அறிவரியான் தனையறிய 
			யாக்கை யாக்கி அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் 
			தருளால்
 செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும்
 சிவோகம்பா விக்கும்அத்தாற் சிவனு மாவர்
 குறியதனால் இதயத்தே அரனைக் கூடும்
 கொள்கையினால் அரனாவர் குறியொடுதாம் 
			அழியும்
 நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால்
 நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே.
 | 324 |  
			| திருக்கோயி 
			லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் 
			அங்கே
 உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
 உளனெங்கும் இலன்இங்கும் உளனென் 
			பார்க்கும்
 விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
 மந்திரத்தின் வந்துதித்து 
			மிகுஞ்சுரபிக் கெங்கும்
 உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
 ஒழுகுவது போல்வௌ¤ப்பட் டருளுவன்அன் 
			பர்க்கே.
 | 325 |  
			| ஞானயோ கக்கிரியா சரியை 
			நாலும் நாதன்தன் பணிஞானி நாலினிக்கும் உரியன்
 ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
 யோகிகிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
 ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன்
 அச்சரியைக் கேஉரியன் ஆதலினால் 
			யார்க்கும்
 ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே
 ஈசனிவன் தான்என்றும் இறைஞ்சி ஏத்தே.
 | 326 |  
			| மந்திரத்தான் 
			மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால் மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும்
 தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத
 சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம்
 அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம்
 அடைந்திடும்ஆ சான்அருளால் அடிசேர் 
			ஞானம்
 வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும்
 மற்றவையும் அவனருளால் மருவு மன்றே.
 | 327 |  
			| பரம்பிரமம் இவனென்றும் 
			பரசிவன்தா னென்றும் பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும்
 அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
 அருட்குருவை வழிபடவே அவனிவன்தா னாயே
 இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை
 இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் 
			பார்த்தும்
 பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும்
 பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் 
			தானே.
 | 328 |  சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று  |