kavitaikaL -part 3  
	புரட்சிக் கவிதைகள்
	- மூன்றாம் தொகுதி
Etext in Tamil 
	Script - TSCII format (v. 1.7)
Etext preparation & Proof-reading: 
	Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India
Etext prep in pdf format: Dr. K. 
	Kalyanasundaram, Lausanne, Switzerland
	
� Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, 
	worldwide initiative devoted to preparation of electronic texts of tamil 
	literary works and to distribute them free on the Internet. Details of 
	Project Madurai are available at the website 
	http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this 
	file, provided this header page is kept intact.
 
	உள்ளுறை
	1. கடல்மேற் குமிழிகள்
	2. அமிழ்து எது?
	3. அகத்தியன் விட்ட 
	புதுக்கரடி
	4. நல்லமுத்துக் கதை
	5. ஏற்றப் பாட்டு
	6. திராவிடர் திருப்பாடல்
	7. சமத்துவப் பாட்டு
	8. புரட்சித் 
	திருமணத் திட்டம்
 
	
	1. கடல்மேற் குமிழிகள்
	
	
	கதையுறுப்பினர்
	திறல் நாடு
	புலித்திறல் மன்னன்
	புலித்திறல் மன்னி மனைவி
	வையத்திறல் மகன்
	செம்மறித்திறல் மன்னன் தம்பி
	பொன்னி மன்னன் கொழுந்தி
	ஆண்டி காவற்காரன்
	அழகன் மகன்
	ஆண்டாள் பூக்காரி
	மின்னொளி மகள்
	பெருநாடு
	பெருநாட்டான் அரசன்
	பெருந்திரு மகள்
	பிச்சன் அமைச்சன்
	மலைநாடு
	வலையன் அரசன்
	மலர்க்குழல் மகள்
	
	
	இடம்: திறல்நாட்டின் அரண்மனைத் தனியிடம்.
	நேரம்: பகல் உணவுக்குப் பின்.
	உறுப்பினர்: புலித்திறல் மன்னன், அவன் தம்பி செம்மறித்திறல்
	அகவல்
	புலித்திறல் உண்டபின் பொன்னொளிர் கட்டிலில்
	ஒருபுறம் தனிமையில் உட்கார்ந் திருந்தான்.
	செம்மறித் திறல் அங்கு வந்தான்
	"இம்மொழி கேட்பாய்" என்றான் வணங்கியே.
	விருத்தம்
	"பொன்னியை மணக்க வேண்டும்
	அதைத்தானே புகல வந்தாய்?
	பொன்னிஎன் கொழுந்தி, நீயோ
	புலைச்சியின் மகனே அன்றோ?
	என்னருந் தந்தை, வேட
	ரினத்தவள் தன்னைக் கூடி
	உன்னைஇங் கீன்றார், என்பால்
	உறவுகொண் டாட வந்தாய்."
	புலித்திறல் இவ்வா றோதப்
	"புலைச்சிஎன் தாய்!என் தந்தை
	நிலத்தினை ஆளும் வேந்தன்
	நின்தந்தை அன்றோ அண்ணா?
	புலப்பட உரைக்கின் றேன்நான்
	பொன்னிஉன் கொழுந்தி என்னைக்
	கலப்புறு மணத்தாற் கொள்ளக்
	கருதினாள்; மறுப்ப தேனோ?"
	என்றுசெம் மறிதான் கூற
	புலித்திறல் "இராதே" என்றான்.
	பொன்னிஅந் நேரம் ஆங்கே
	பொதுக்கென எதிரில் வந்து
	தன்எழில் மூத்தார் காலைத்
	தளிர்க்கையால் பற்றி, புஎன்னை
	உன்தம்பி மணக்கும் வண்ணம்
	உதவுகமு என்று சொன்னாள்.
	"தமக்கையை எனக்க ளித்தாய்
	சாதியில் இழிவு பெற்று
	நமக்கெலாம் பழிப் பாவானை
	நங்கைநீ நாடு கின்றாய்;
	இமைக்குமுன் புறஞ்செல். உன்றன்
	எண்ணந்தான் மாறு மட்டும்
	அமைக்கின்றேன் உன்னை என்றன்
	அரண்மனைக் காவல் தன்னில்."
	
	என்றுகா வலரைக் கூவ
	இருவர்வந் தழைத்துச் சென்றார்.
	நின்றசெம் மறித்தி றற்கு
	நிகழ்த்துவான்: புஅரண்ம னைக்குள்
	என்றுமே நுழைதல் வேண்டாம்
	ஏகுகமு என்று சொல்ல,
	நன்றெனக் குன்றத் தோட்செம்
	மறித்திறல் நடக்க லானான்.
	
	
	இடம்: அரண்மனையில் ஒரு காவல் அறை.
	நேரம்: மாலை.
	உறுப்பினர்: பொன்னி, புலித்திறல் மன்னி, காவலர்.
	அகவல்
	உலக மக்களில் உயர்வுதாழ் வுரைக்கும்
	கலக மக்களைக் கருத்தால் தூற்றிக்
	காதற் கண்ணீர் வெளிப்பட
	மாறு நின்றனள் வன்காப் பறையிலே.
	கண்ணி
	"என்ன உனக்கில்லை பொன்னி? - உனக்
	கேனிந்த எண்ணம்? புலைச்சி
	தன்மகன் மேல்மைய லுற்றாய் - எமைத்
	தாழ்வு படுத்த நினைத்தாய்."
	என்று புலித்திறல் மன்னி - மிக
	ஏசிக்கொண் டேஎதிர் வந்தாள்.
	"இந்நில மக்கள்எல் லோரும் - நிகர்"
	என்று புகன்றனள் பொன்னி.
	"நாலு வகுப்பினர் மக்கள் - எனில்
	நானிலம் ஆழ்பவர் நாமே!
	மேலொரு பார்ப்பனர் கூட்டம் - உண்டு!
	மூன்றாமவர் பொருள் விற்போர்!
	காலத னாலிட்ட வேலை - தனைக்
	கைகளி னாற்செய்து வாழும்
	கூலி வகுப்பினன் அன்னோன்" - என்று
	கூறி முடித்தனள் மன்னி.
	"ஆளப்பி பிறந்தவர் தாமும் - மே
	லானவர் என்பவர் தாமும்
	கூளங்கள் அல்லர்; கடல்மேல் - காணும்
	குமிழிகள் அன்னர் என்பேன்
	மாளாப் பெருங்கடல் மக்கள் - அங்கு
	மறைபவர் ஆள்பவர் என்பேன்
	வேளைவரும், வரும் அக்கா - தீரும்
	வேற்றுமை" என்றனள் பொன்னி.
	
	"உன்னை மணந்திட வேண்டி - இவ்
	வுலகிடை எண்ணிக்கை யில்லா
	மன்னர்கள் உள்ளனர் பொன்னி - உன்
	மனநிலை மாறுதல் வேண்டும்;
	அன்னது மட்டும் கிடப்பாய் - பிறர்
	அண்டுதல் இல்லா அறைக்குள்!
	என்னடி வேண்டும் இப்போது - சொல்"
	என்றாள் புலித்திறல் மன்னி.
	"கன்னங் கறுப்புடை ஒன்றும் - மாற்றிக்
	கட்டிடப் பின்னொன்றும் வேண்டும்"
	என்றே உரைத்தனள் பொன்னி - ஒன்
	றீந்தாள் புலித்திறல் மன்னி.
	"என்னுயிர் போன்றவன் தன்னை - இனி
	யானடைந் தின்புறு மட்டும்
	என்னுடை நீ" என் றுடுத்தாள் - நகை
	யாவும் கழற்றினள் பொன்னி.
	
	
	இடம்: ஆற்றிடை என்னும் சிற்றூர்.
	நேரம்: நிலவெறக்கும் இரவு.
	உறுப்பினர்: செம்மறித்திறல்.
	
	அகவல்
	இந்நி லத்தில் இருகுரல்; ஒன்று
	"மன்னர் நாங்கள்" என்பது; மற்றொன்று
	"பெருநி லத்தில்யாம் பெருமக்கள்" என்பதாம்.
	சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
	அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
	சமையம் சாதி தவிர்வ தெந்நாள்?
	என்றுசெம் மறித்திறல் கறுப்புடை
	ஒன்றினை ஏந்தி உரைப்பான் ஆங்கே.
	ப�றொடை வெண்பா
	"மன்னர் பலரும் மணக்க இருக்கையிலும்
	என்னை மணப்பதென்றே எண்ணினாள். எண்ணியதால்
	என்ன இடர்ப்பட்டாள்! ஏச்செல்லாம் ஏற்றாளே!
	அன்னவளை நான்மணக்கும் ஆவலினால் வாழ்கின்றேன்!
	தன்னன்பு மூத்தாளைத் தானிழக்க வுந்துணிந்தாள்.
	இன்னந்தன் மேன்மை எலாமிழக்க வுந்துணிந்தாள்
	என்னன்பு நோக்கினிலே யான்நோக்கத் தன்னருமைத்
	தென்னம்பா ளைச்சிரிப்பால் தின்னுவளே என்ஆவி!
	போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின்
	ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான்திரும்பித்
	தோகையினை மட்டாக நோக்கினால் தான்குனிந்து
	சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள்.
	மூத்தாள் மணாளன் முடிவேந்தைக் கேட்டபின்
	
	போய்த்தார் மணமன்றில் பூண்போம், பெருமக்கள்
	வாழ்த்திடும் வாழ்த்தால் மகிழ்வோம்பின் பஞ்சணையில்
	தீர்த்தோம்நம் ஆவல்எனச் சேர்ந்திருப்போம் என்றுரைப்பாள்.
	பொன்னால் மணியால் புனைந்த நகைஇழந்தாள்
	தன்னால் முடியாத தொல்லையினால் சாய்ந்தாளோ?
	மின்னால் செயப்பட்ட மெல்லிடைக்கு நேர்ந்தவெல்லாம்
	என்னால்என் னால்என்னால் காராடை ஏற்கின்றேன்!
	தண்ணிலவு கொண்ட மகிழ்ச்சி தனைக்கருதி
	வெண்மை உடையணிந்து விண்ணில் துலங்குவதாம்
	துன்பம் உடையேன் கரியதுகில் பூண்டேன்
	என்னருமைப் பொன்னியைநான் எந்நாள் மணப்பேனோ!
	பொன்னியும் நானும்ஒரு காதல் புனல்முழுகா
	திந்நாள் தடுப்பதெது? "மண்ணாள ஏற்றவர்கள்"
	"இன்னலுற ஏற்றவர்கள்" என்னும் பிளவன்றோ?
	இந்நிலையை மாற்றா திரேன்.
	
	
	இருபது ஆண்டுகளின் பின் ஒருநாள்
	இடம்: அரண்மனை
	நேரம்: மாலை
	உறுப்பினர்: புலித்திறல் மன்னி, அவள் மகன் வையத்திறல்,
	ஆண்டாள், அவள் மகள் மின்னொளி,
	காவற்காரன் மகன் அழகன்.
	அகவல்
	மன்னியைச் சுமந்த பொன்னூசல், கூடத்தில்
	தென்னாட்டுத் தோழியர் செந்தமிழ்ப் பாட்டில்
	மிதந்துகொண் டிருந்தது மென்கை அசைத்ததால்!
	எதிரில் ஆண்டாள்; இவள்மகள் மின்னொளி.
	மன்னி ஆணைக்கு வாய்பார்த் திருந்தனர்.
	மன்னி திருவாய் மலர்ந்தருள் கின்றாள்:
	"வையத் திறல்நம் பையன் பிறந்தநாள்
	நாளை! அவ்விழா நன்மலர் அனைத்தும்
	வேளையோடு நீதரல் வேண்டும். அதன்விலைப்
	பொன்னும் பெறுவாய். பரிசிலும் பூணுவாய்!
	மின்னொளி யுடன்நீ விருந்தும் அருந்தலாம்"
	என்றாள்! ஆண்டாள் இளித்தாள்!
	நின்ற மின்னொளி ஆழ்ந்தாள் நினைவிலே.
	கண்ணிகள்
	"வாழிய வாழிய மன்னீ - ஊசல்
	மகிழ்ந்தாடு கின்றனை மன்னீ!
	தோழியர் ஆட்டினர் ஊசல் - கை
	சோர்ந்திட நின்றனர் மன்னீ!
	தோழியரும் சற்று நேரம் - ஆடச்
	சொல்லுக என்னருந் தாயே
	
	வாழிய வாழிய மன்னீ - அவர்
	மகிழ்ந்தாட வும்செய்க தாயே!"
	என்றனள் மின்னொளி தானும் - மன்னி
	எள்ளி நகைத்துப் புகல்வாள்:
	"மன்னியும் தோழியர் தாமும் - நில
	மாந்தரில் ஒப்புடை யாரோ?
	என்னடி மின்னொளி இன்னும் - உனக்
	கேதும் தெரிந்திட வில்லை?"
	என்றுரைத்தாள்! அந்த நேரம் - மகன்
	என்னவென் றேஅங்கு வந்தான்.
	"தூண்டா விளக்கேஎன் கண்ணே - என்
	தூயவை யத்திறல் மைந்தா!
	ஆண்டாள் மகள்சொன்ன தைக்கேள் - ஊசல்
	ஆட்டிய தோழிகள் ஆட
	வேண்டுமென் றேசொல்லி நின்றாள் - இவள்
	வேற்றுமை காணாத பேதை;
	வேண்டாம்இப் பேச்சுக்கள் என்றேன்" - என்று
	விண்டனள் சேயிடம் மன்னி!
	"மாவடு வொத்த கண்ணாளை - இள
	வஞ்சிக் கொடிக்கிணை யாளைத்
	தாவிநல் வாயிதழ் ஓரம் - உயிர்
	தாக்கிடும் புன்சிரிப் பாளைத்
	புதேவைஉன் எண்ணமும் பெண்ணே - அதில்
	தீங்கில்லை வையத்துக்" கென்றான்.
	பாவையும் அம்மொழி கேட்டாள் - எனில்
	பாங்கியர் ஆடுதல் காணாள்.
	அழகனும் அவ்விடம் வந்தான் - தன்
	அன்புறு தோழனை நோக்கி
	எழுதிய ஓவியந் தன்னை - நீ
	ஏன்வந்து பார்த்திட வில்லை?
	பிழையிருந் தால்உரைப் பாயே - என்
	பின்வரு வாய்என்று சொல்ல
	வழியில்லை தப்புதற் கென்றே - அவ்
	வையத் திறல்பிரிந் திட்டான்.
	
	
	இடம்: அரண்மனைக் கூடம்
	நேரம்: நடுவேளை
	உறுப்பினர்: ஆளவந்தார் கூட்டம், புலித்திறல் மன்னன்,
	வையத்திறல், மின்னொளி, ஆண்டாள், தோழியர்.
	
	அகவல்
	திறல்நாட்டு மன்னனின் திருமகன் இருபதாண்டு
	நிறைவு விழாவில் நிகழ்ந்த விருந்தில்
	ஆளப் பிறந்தார் அனைவரும்
	வேளையோடு வந்தார் விருப்போ டுண்ணவே.
	கண்ணிகள்
	பத்தாயிரம் பெயர்கள் - அரண்மனைப்
	பாங்கிலோர் கூடத்திலே
	ஒத்த தலைவாழை - இலைக்கெதிர்
	உண்டிட வந்தமர்ந்தார்.
	எத்தாவி லும்கிடையா - தெனும்படி
	எண்ணிரண்டு வகையாம்
	புத்தம் புதுக்கறிகள் - நறுமணம்
	பூரிக்கவே படைத்தார்!
	தித்திக்கும் பண்ணியங்கள் - அப்பவகை
	தேடரு முக்கனிகள்,
	தைத்திடும் கல்லையிலே - நறுநெய்யும்
	தயிர் ஒருகுடமும்
	அத்தனை பேர்களுக்கும் - எதிரினில்
	அமைத்து நெய்ச்சோறு
	முத்துக் குவித்தாற்போல் - பருப்பொடு
	முயங்கவே படைத்தார்!
	முன்உண்ண அள்ளிடுவார் - உயர்த்திய
	முழங்கை நெய்வழியும்;
	பின்உண்ண ஊன்றியகை - கறிவகை
	பெற்றிட ஆவலுறும்!
	மன்னவன் உண்டிருந்தான் - அவன்மகன்
	வையத் திறலினுடன்!
	இன்ன நிலைமைஎல்லாம் - அரண்மனை
	ஏழையர் பார்த்திருந்தார்.
	ஏழைப் பணியாளர் - ஒருபுறம்
	ஏங்கி இருந்தார்கள்.
	கூழைக் கரைத்தவுடன் - ஒருபுறம்
	கூப்பிடப் பட்டார்கள்.
	தோழியர் கூழ்குடித்தார் - ஒருபுறம்
	தோகைநல் மின்னொளிதான்
	தாழையின் தொன்னையிலே - கூழினைத்
	தாங்கிக் குடித்திருந்தாள்.
	விழவு தீர்ந்தவுடன் - சிறப்புடன்
	விருந்து தீர்ந்தவுடன்
	அழகு மின்னொளிபால் - அவள்தாய்
	ஆண்டாள் புஎன்மகளே,
	விழவு மிக்கநன்றே - அவ்விருந்தும்
	மேல்!முஎன்று சொல்ல,அவள்
	"இழவு பெற்றார்கள் - என்அன்னாய்
	ஏழையர்" என்றுரைத்தாள்.
	"ஆளும் இனத்தார்க்கும் - பார்ப்பனர்
	
	அத்தனை பேர்களுக்கும்
	தாளா மகிழ்ச்சியன்றோ! - இதுதான்
	தனிச் சிறப்பன்றோ!
	ஆளாகி வாழும்இடம் - விருந்துண்ண
	ஆவலும் கொள்வதுவோ?
	நாளும் அவர் மகிழ்ச்சி - நம்மகிழ்ச்சி!"
	என்று நவின்றாள்தாய்!
	
	
	இடம்: அரண்மனையில் தனியறை.
	நேரம்: உணவுக்குப்பின், இரவு.
	உறுப்பினர்: வையத்திறல், அழகன்.
	
	அகவல்
	நிலவு குளிர்வார்க்கக் காற்று நெளிய
	அலைகடல் இசைமை அளிக்க, மலர்சேர்
	பஞ்சணையில் தனியே படுத்தேன்
	நெஞ்சில்அவள் கூத்து நிகழ்த்துகின் றாளே!
	கண்ணிகள்
	மின்னொளி இன்முக நிலவே - நிலவு!
	விண்ணில வேஅக லாயோ!
	அன்னவள் இன்சொல் இசையே - இசையாம்!
	ஆர்கடல் வாயடக் காயோ!
	கன்னங் கருங்குழல் மணமே - மணமாம்!
	காட்டில் மலர்காள் அகல்வீர்.
	என்ன உரைப்பினும் இனியும் - எனையேன்
	இன்னற் படுத்துகின் றீர்கள்?
	காவற் பணிசெயும் அழகன் - இன்னும்
	காணப் படவில்லை இங்கே!
	ஆவலெல் லாம்அவ னிடமே - கூறி
	ஆவன செய்திட வேண்டும்.
	பாவைஅம் மின்னொளி தன்னை - நானே
	பார்க்கவும் பேசவும் வேண்டும்.
	தேவைப் படுமிந்த நேரம் - தெரிந்தும்
	தீமை புரிந்திடு கின்றான்.
	என்று துடிக்கின்ற வேளை - அழகன்
	"இளவரசே!" என்று வந்தான்.
	"ஓன்றுசெய் ஒன்றுசெய் அழகா! - அழகா
	ஒண்டொடி வீட்டுக்குச் செல்வாய்.
	நன்று கிழவனை நோக்கிப் - பழங்கள்
	நாலைந்து கொண்டு வரச்சொல்.
	சென்றிடு வான்பழத் தோட்டம் - நோக்கிச்
	செல்லுக" என்றான் இளங்கோ!
	(அழகன் போகின்றான்.)
	
	
	இடம்: சிற்றூர் மின்னொளி வீடு.
	நேரம்: நள்ளிரா.
	உறுப்பினர்: மின்னொளி, அவள் தந்தையாகிய
	கிழவன், அழகன், வையத்திறல்.
	அகவல்
	அன்னைஇன் றிரவில் அரசர் அரண்மனை
	தன்னில் தங்கினாள் போலும்! தந்தையே,
	சிறிது நேரம் செந்தமிழ்ப் பாட்டொன்று
	பாடுக என்றாள் மின்னொளி
	பாடுமுன் வந்தான் அழகன் பரிந்தே!
	ப�றொடை வெண்பா
	"அன்பு முதிர்ந்தவரே! ஐயா, விரைவில்நீர்
	மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு
	தூயனவாய்க் கொண்டுவரத் தோப்புக்குப் போய்வாரும்
	வாயூறிப் போகின்றான் வையத் திறல்அங்கே"
	என்றான் அழகன்;உடன் ஏகினான் அம்முதியோன்!
	"மன்றிடை ஆடும் மயிலேநன் மின்னொளியே!
	மாவின் கனிமீது மையலுற்ற நம்இளங்கோ,
	மாவின்மேல் ஏறியிங்கு வந்திடுவான் இந்நேரம்"
	என்றான். இளமங்கை "ஏன்நீ நடந்துவந்தாய்?
	மன்னன் மகன்குதிரை ஏறி வருவதென்ன?
	உன்னிளங்கால் நோகா திருக்குமா? மன்னர்மகன்
	தன்கால்கள் மட்டுமா மென்கால்கள்?" என்றே
	அழகன் நிலைமைக் கிரங்கி அவனை
	முழுதன்பால் நோக்கி முகநிலவு சாய்த்திருந்தாள்!"
	வையத்திறல் வந்தான்; வஞ்சி வரவேற்றாள்.
	கையால் தடுக்கிட்டாள் காற்சிலம்பால் பாட்டிசைத்தாள்;
	இன்பஉருக் காட்டி எதிரினிலே நின்றிருந்தாள்.
	அன்பால் "அமர்க" என வையத் திறல்சொன்னான்.
	சற்றே விலகித் தரையினிலே கையூன்றி
	மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து
	மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடைதான் திருத்தி!
	"மின்னொளியே வீட்டில் விருந்தும் அருந்தினையோ?"
	என்று வினவினான். கேட்ட எழில்வஞ்சி,
	"அந்தப் பெரியவிருந் தேழைக் கருந்ருதினைருயோ?
	இந்தவகை நீமட்டும் ஏன்தான் அருந்தினையோ?
	கூழ்குடித்தார் இவ்வூர்க் குடித்தனத்தார் எல்லாரும்!
	வாழ்வுக்கே வந்தவர்கள் வாய்ப்பாய் விழுங்கினரே!"
	என்றாள் முகஞ்சுருங்கி. இன்னல் உளங்கவர
	"மன்னர் வகுப்பென்றும் மற்றவகுப் பென்றும்
	இந்நாட்டில் இல்லா தினிமேற் புரிந்திடுவேன்"
	என்றான்!அவ் வேளை முதியோன் எதிர்வந்து
	"தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான்
	
	பத்துக்கும் மேலிருக்கும் பாராய் இளங்கோவே"
	என்றான். பழத்தோடு வையத் திறலோ,தன்
	குன்றை நிகர்த்த குதிரைஏ றிச்சென்றான்!
	"போய்வருவேன்" என்றான் அழகன். இளவஞ்சி,
	வாயு மிரங்க, மனமிரங்க "நீநடந்தா
	போகின்றாய்?" என்றாள். "புதிதல்ல" என்றழகன்
	ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து.
	
	
	இடம்: அரண்மனை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: பெருநாட்டின் அமைச்சன், புலித்திறல்.
	
	அகவல்
	அரியணை அமர்ந்த அரசனின் எதிரில்
	பெருநாட் டமைச்சன் பிச்சனும் அமர்ந்தே
	"அரசே, உன்னைநான் அணுகிய தேன்எனில்
	பெருநாட்டு மன்னனின் ஒருமக ளான
	�பெருந்திரு� என்னும்அப் பேரெழி லாளைஉன்
	திருமகன் வையத் திறல் மணப்பது
	பெருவான், நிலவைப் பெறுவ தாகும்!
	இந்த உறவினால், இவ்வை யத்தில்
	எந்தப் பகைவரும் இல்லா தொழிவர்.
	அதனால் திறல்நாடும் அப்பெரு நாடும்
	எதனாலும் மேன்மை எய்துதல் கூடும்!
	திருவுளம் யா" தெனக் கேட்டான்.
	அரசன் மகிழ்ச்சியால் அறைவான் ஆங்கே:
	கண்ணிகள்
	�மிக்க மகிழ்ச்சி அமைச்சே! - மிக
	மேன்மை யுடையதிவ் வெண்ணம்.
	சிக்கல்கள் பற்பல தீரும் - பல
	தீமைமைகள் மாய்வது திண்ணம்;
	திக்கை நடுங்கிட வைக்கும் - இத்
	திருமண வுறவு!மெய் யன்றோ!
	விக்குள் எடுக்கையில் தண்ணீர் - உன்
	விண்ணப்பம்� என்றனன் மன்னன்.
	"வையத் திறற்கிதைச் சொல்க! - அவன்
	மணந்துகொள் ளத்தக்க வண்ணம்
	செய்க எனக்கிதை நாளை - நீ
	தெரிவிக்க" என்றனன் பிச்சன்.
	"செய்திடுவே னிதை இன்றே - நான்
	செப்பிடுவேன் பதிலை நாளை!
	துய்யஎன் மன்னி கருத்தும் - கேட்டுச்
	சொல்லுவேன்" என்றனன் மன்னன்.
	
	
	இடம்: அரண்மனை மகளிர் இல்லம்.
	நேரம்: முதிர்காலை.
	உறுப்பினர்: புலித்திறல், மன்னி.
	
	அகவல்
	பாங்கியர் அப்புறப் படுத்தப் பட்டனர்.
	ஆங்கொரு கட்டிலில் அரசனும், மன்னியும்
	விரைவில்வந் தமர்ந்தனர். வேந்தன் முகத்தில்
	புதுமை கண்டாள் மன்னி
	அதனை யறிய ஆவல்கொண் டனளே!
	கண்ணிகள்
	"பெண்ணேஉன் மகனுக்குப் பெருநாட்டான் - தன்
	பெண்ணைக் கொடுப்பதெனும் நல்ல செய்தியைக்
	கொண்டுவந் தான்அமைச்சன் என்னசொல்கின்றாய் - உன்
	கொள்கையும் தெரிந்திட வேண்டு மல்லவோ?
	அண்டைநாட் டரசனின் உறவாலே - நமக்
	கல்லல் குறையுமெனல் உண்மை யல்லவா?
	தொண்டைக் கனிநிகர்த்த இதழாலே - எண்ணம்
	சொல்லுக" என்றுமன்னன் சொன்ன அளவில்,
	"அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப் - பெண்
	அயலினிற் கொள்ளுவது தக்க தல்லவே?
	வெண்ணையை வைத்துநறு நெய்க்கழுவதா? - என்ன
	வேடிக்கை!" என்றுமன்னி துன்ப மடைந்தாள்.
	"கண்ணுக்குப் பிடித்தவள் அண்ணன்மகளா - அக்
	கட்டழகியா, இதனை மைந்த னிடமே
	எண்ணி யுரைக்கும்படி சொல்லிவிடுவோம் - அவன்
	எண்ணப்படி நடப்போம்" என்றனன் மன்னன்.
	"சேயை அழைத்துவரச் சொல்லுக" வென்றான் - அவன்
	"தேரேறி நகர்வலம் சென்றனன்" என்றாள்!
	"ஆயினும் காவலரை விரைந்தனுப்பி இங்
	கழைப்பிக்க வெண்டுமெனமு மன்னன் உரைத்தான்.
	புதூயஎல் லைப்புறத்தின் காட்சிதனையே - அவன்
	துய்த்திடச் சென்றதுண்டு வந்த பிறகே
	ஆயஇச் செய்திதனை அறிவிக்கலாம்" - என
	அரசி அரசனிடம் சொல்லி மறுத்தாள்!
 
	
	இடம்: அரண்மனைத் தனியறை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: மன்னி, வையத்திறல், மன்னன்.
	
	அகவல்
	வையத் திறலை மன்னி யழைத்துத்
	"துய்ய மகனே, வையத்திறலே,
	உன்மணம் பற்றி உன்னிடம் பேச
	மன்னர் தேடினார். மகன்இல்லை என்று
	சொன்னேன். உன்னை முன்னே நான்கண்
	டென்க ருத்தினை இயம்ப எண்ணினேன்!
	பெருநாட் டானின் �பெருந்திரு� தனைநீ
	திருமணம் செய்யத் திட்ட மிட்டனர்.
	என்னருந் தமையன் ஈன்ற பெண்ணாள்
	உன்னரும் பண்புக் கொத்தவள் அன்றோ?
	அழகிற் குறைவா? அன்பிற் குறைவா?
	ஒழுக்கம் அனைத்தும் ஓருவானவள்
	அவளைநீ மணப்ப தாக
	அவரிடம் கூறுவாய்" என்றாள் அரசியே!
	கண்ணிகள்
	"ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அம்மா - நான்
	ஆய்ந்தபின் பேமணம் ஆர்ந்திட எண்ணினேன் அம்மா.
	தீயன நல்லன காணாத இப்பரு வத்தே - ஒரு
	சேயிழை யோடறம் செய்வதெவ் வாறுளம் ஒத்தே?
	தூயஇந் நாட்டினை ஆளுந் திறம்பெற வேண்டும் - நான்
	தொல்லறி வோரிடம் கல்வி பயின்றிட வேண்டும்.
	பாயும் பகைவர் தமக்கிடை யேஉல காள - எனைப்
	பாரோடு போராடும் வண்ணம் பயிற்றுக" என்றான்.
	வையத் திறல் சொன்ன பேச்சினைக் கேட்டனள் மன்னி - தன்
	வாயை அடக்கினள் ஏதும்சொல் லாம லிருந்தாள்.
	பையவந் தானந்த நேரத்திலே எழில் மன்னன் - "எந்தப்
	பாவையை நீமணம் செய்திட எண்ணினை" என்றே
	துய்யதன் மைந்தனைக் கேட்டனன். அன்னை யுரைப்பாள் - "அவன்
	துய்க்க நினைப்பது பல்கலையே" என்று சொன்னாள்.
	வையக மாளும் புலித்திறல் மன்னவன் கேட்டே - தன்
	மைந்தன் கருத்தினை நன்றெனச் சொல்லி நடந்தான.
	
	
	இடம்: அரண்மனை.
	நேரம்: மறுநாட் காலை.
	உறுப்பினர்: புலித்திறல், பிச்சன்.
	
	அகவல்
	ஏந்தலைப் பிச்சன் எதிர்பார்த் தபடி
	அரண்மனைத் தனியிடத் தமர்ந் திருந்தான்.
	புலித்திறல் ஏந்தல் புறப்படு கதிர்போல்
	வந்தான். பிச்சன் மழைநாட் குருவிபோல்
	ஆவலோடு வணங்கி அமர அமர்ந்தான்.
	"என்மகன் வேறோர் எழிலுறு பாவைபால்
	தன்உளம் போக்கினான்" என்றான் மன்னன்.
	"அவள்யார்?" என்றான் கவலையொடு பிச்சன்.
	"பல்கலைப் பெண்" என்று மன்னன்
	சொல்ல, அமைச்சன் சொல்வான் எழுந்தே!
	கண்ணிகள்
	"வையத் திறல்மொழி பொய்யே! - அவன்
	மணம் வெறுத்திட வில்லை.
	தையல் ஒருத்தியை மைந்தன் - உள்ளம்
	தாவி யிருப்பது மெய்ம்மை.
	துய்யவ னாம்பெரு நாட்டான் - பெற்ற
	தோகை மணத்தை விலக்கப்
	பொய்யுரைத் தான்!கலை மீது - நெஞ்சு
	போனதென் றான்அது பொய்யே!
	காளை முகத்தினிற் கண்டேன் - உயிர்க்
	காதல் வருத்தத்தின் வீச்சு!
	மீளவும் மைந்த னிடத்தே - மண
	மேன்மையைச் சொல்லுக" என்றான்.
	"காளை யுரைத்தது மெய்யே - அவன்
	கருத்தில் ஐயுற வில்லை.
	மீளவும் மைந்த னிடத்தே - சொல்லல்
	வீணென்று" மன்னவன் சொன்னான்.
	"மலையன் எம்பகை மன்னன் - அவன்
	மகளைக் கட்டுவ தால்உன்
	நிலை யுயர்ந்திடும் என்றே - நீ
	நினைத் திருக்கவும் கூடும்.
	பலபல நினை யாதே - எம்
	பாவையை ஒப்புக" என்றான்.
	"கலை பயில்கஎன் மைந்தன்" - என்று
	கழறி னன்புலித் திறலே.
	(அமைச்சன் சென்றான்.)
	
	
	இடம்: திறல்நாட்டின் வயல்வெளி.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: காருடை பூண்ட செம்மறித்திறல்,
	வயலுழுவோர்.
	
	அகவல்
	மேழி பிடித்த�கை� மேலாம் இடது�கை�!
	தாழாக் கோல்�கை� வலது�கை� யாக,
	முழங்கால் சேற்றில் முழுக,வாய் திறந்து
	பழந்தமிழ் பாடினர் வயலில் உழுவோர்!
	அவ்வழி அணுகிய செம்மறித் திறலின்
	விழிகள் தொழிற்படும் உழவர்பால் விரைந்தன!
	கருத்தோ கடலுலகு நிலைமையில் ஆழ்ந்தது!
	செம்ம றித்திறல் பாடுவான்
	அம்முழு துழைப்போர் அகத்தை நோக்கியே:
	
	பாட்டு
	எடுப்பு
	ஆளுவோர் என்றே சிலரை
	அளித்த துண்டோநீ உலகே?
	உடனெடுப்பு
	மீளுமாறின்றி மிகுபெரு மக்களைக்
	கருவினில் விளைத்ததும் உண்டோ?
	அடிகள்
	வாளொடு பெற்ற துண்டோ சிலரை?
	வடுவொடு பெற்றாயோ பலரை?
	நாளும் உழைப்பவர் தமைப்பெற்ற தாயே,
	நயவஞ்ச ரைப்பெற்று ளாயே?
	மேலவர் என்றொரு சாதியையும்,
	வீழ்ந்தவர் என்றொரு சாதியையும்
	தோலில் குருதியில் அமைந்திடு மாறு
	தோற்றுவித் தாயோ கூறு!
	அகவல்
	உழைப்பவர் என்றே ஓரினம் உண்டோ?
	பழிப்பிலா துலகின் பயனை நுகரும்
	ஓரினம் உண்டோ பிறவியில்? என்றே
	ஏரும் நிறுத்தி எண்ணினர் உழுநரே!
	(செம்மறித்திறல் செல்கின்றான்.)
	
	
	இடம்: மின்னொளி வீட்டின் எதிரில் உள்ள தோட்டம்.
	நேரம்: இரவு, உண்டபின்.
	உறுப்பினர்: அழகன், மின்னொளி, வையத்திறல், கிழவன்.
	
	அகவல்
	பழத்தோட் டத்தைக் கிழவன் நண்ணினான்
	அழகன், மின்னொளி அருகரு கமர்ந்தே,
	அரசன் மகன்தான் அனுப்பிய பண்ணியம்
	அருந்து கின்றனர். அழகன் அருந்த
	மின்னொளி விரும்பி வேண்டுவாள் அவனை!
	அதனை மின்னொளிக் களிப்பான் அழகன்!
	உற்றதந் தைக்கென ஒருபங்கு வைத்து
	மற்றவை இருவர் அருந்தினர்.
	தெற்றென வந்தான் அரசன் சேயே.
	கண்ணிகள்
	"பெருநாட்டு மன்னவன் பெண்ணை - நான்
	பெற்றிட வேண்டுமென் றார்கள்.
	ஒருநாட்டு மன்னவன் பெண்ணும் - எனக்
	குண்மையில் வேண்டுவ தில்லை;
	திருநாட்டி லேயொரு பாவை - அவள்
	செல்வத்தின் நேர்பகை யாவாள்
	இருநாட்டம் அன்னவள் மேலே - நான்
	இட்டுவிட் டேன்என்று சொன்னேன்.
	இவ்வாறு நான்சொன்ன தாலே - எனை
	ஈன்றவர் ஒப்பிட லானார்;
	அவ்விடத் தேபெரு நாட்டின் - ஓர்
	அமைச்ச னிடத்திலும் சொன்னார்.
	"வெவ்வுளத் தோடவன் சென்றான் - இந்த
	வேடிக்கை எப்படி?" என்றே
	மைவிழி மின்னொளி தன்பால் - எழில்
	வையத் திறல்வந்து சொன்னான்.
	"இத்திரு நாட்டினிற் பாவை - அவள்
	யார்?" என்று கேட்டனள் வஞ்சி!
	"முத்தமிழ்" என்றனன் செம்மல்! - இதை
	மொய்குழல் கேட்டு வியந்தாள்.
	"தித்திக்கப் பேசும் திறந்தான் - பெருஞ்
	செல்வர்கட் கேவரக் கூடும்!
	மெத்த வியப்புறும் பேச்சும் - நல்ல
	வேந்தருக் கேவரக் கூடும்!
	ஏழையர் கற்றது மில்லை - கல்வி
	எய்திட வும்வழி இல்லை.
	கூழை அருந்திக் கிடப்பார் - தம்
	கூரையில் தூங்கி எழுந்தே
	பாழும் உழைப்பினில் ஆள்வார் - நல்ல
	பாங்கினில் பேசுதல் எங்கே?
	வீழும் நிலைகொண்ட மக்கள் - எந்நாள்
	மீளுவர்?" என்றனள் பாவை.
	"இன்புறப் பேசி இருப்போம் - என
	எண்ணிஇங் கேவரும் போதில்
	துன்புறும் பேச்சுக்கள் பேசி - எனைத்
	துன்பத்தில் ஆழ்த்திடு கின்றாய்!
	தன்னலக் காரரை எண்ணி - மிகத்
	தாழ்ந்தவர் தம்நிலை எண்ணி
	மின்னொளி யேஎனை நொந்தாய் - இது
	வீண்செயல்!" என்றனன் செம்மல்.
	மேலும்வை யத்திறல் சொல்வான் - "நீ
	வேண்டிய நற்பண்ணி யங்கள்
	சால அனுப்பிவைத் தேனே - அவை
	தக்கனவோ?" எனக் கேட்டான்.
	"ஏலுமட் டும்புசித் தேன்நான் - அவை
	ஏழையர் அத்தனை பேர்க்கும்
	ஞாலத்தில் எந்நாள் கிடைக்கும்?" - என
	நங்கை உரைத்தனள் ஆங்கே!
	மாம்பழம் கொண்டுவந் திட்டான் - அம்
	மங்கையின் தந்தை; விரைவில்
	கூம்பும் முகத்தோடு செம்மல் - பழங்
	கொண்டுசென் றான்பரி யேறி.
	ஆம்பல் நிகர்த்திடும் வாயாள் - அங்
	கழகனை நோக்கிப் புகல்வாள்:
	"பாம்பு கிடந்திடும் பாதை - நன்று
	பார்த்துச்செல்" என்றனள்; சென்றான்.
	
	
	இடம்: பெருநாடு, ஆய்வுமன்றம்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: பெருநாட்டு மன்னன், அமைச்சனான
	பிச்சன், படைத்தலைவன்.
	
	அகவல்
	"வையத் திறல்என் மகளை மறுத்தான்.
	பெருநாட்டுப் பெருமையைத் திறல்நாடு மறுத்தது!
	இதனை ஆய்க" என்று
	பதறினான் மன்னன் பாங்குளார் இடத்தே.
	ஆனந்தக் களிப்பு எடுப்பு
	"திறல்நாடும் மலைநாடும் சேர்ந்தே - நம்
	திருநாட்டை மாய்த்திட ஒருநாட்டம் வைத்தான்.
	நறுமலர்க் கூந்தலி னாளை - நல்ல
	நம்பெண்ணைப் பின்ஏன் மணக்க மறுத்தான்?
	திறலற்ற மலையவன் பெண்ணை - அவன்
	திருமணம் செய்திட வேநினைக் கின்றான்.
	இறையே, படையெடுப் போம்நாம்" - என்
	றியம்பினன் ஆங்கே படைத்தலை வன்தான்.
	"அந்தத் திறல்நாட்டு மன்னன் - நம்
	ஆயிழை தன்னை மறுத்தது மெய்தான்;
	மந்தி மலையவன் பெண்ணை - அந்த
	வையத்திறல் மணம் செய்ய நினைத்தல்
	எந்தவகை அறிந் தாய்நீ - அதை
	எப்படி நம்புவ" தென்றனன் மன்னன்.
	குந்தி இருந்த அமைச்சன் - தன்
	கோவை வணங்கி யுரைத்திட லானான்:
	தேர்ந்தநல் ஒற்றர்கள் வேண்டும் - அத்
	திறல்நாட்டி லேஅவர் தங்குதல் வேண்டும்.
	நேர்ந்த நிகழ்ச்சிகள் யாவும் - அங்கு
	நேரில் உணர்ந்து நிகழ்த்துதல் வேண்டும்.
	சேர்ந்து மலையவன் பெண்ணை - அவன்
	திருமணம் செய்திடல் மெய்யெனக் கண்டால்,
	
	ஆர்ந்த பெரும்படை கூட்டி - அவன்
	ஆட்சியைக் கைப்பற்ற லாம்" என்று சொன்னான்.
	�நன்றிது என்றனன் மன்னன் - உடன்
	நால்வர்நல் ஒற்றர்கள் தம்மை யழைத்தான்.
	"இன்று திறல்நாடு சென்றே - அங்
	கியலும் நிலைமைகள் யாவையும் இங்கே
	அன்றன் றுரைத்திட வேண்டும். - இடை
	அஞ்சற் படுத்திடும் ஆட்களி னோடு
	சென்றிடு வீ" ரென்று சொன்னான்; - உடன்
	சென்றனர் ஒற்றர்கள் கோவை வணங்கி.
	
	
	இடம்: திறல்நாட்டின் புறநகரான வெண்ணகர்.
	நேரம்: மாலை.
	உறுப்பினர்: புலித்திறல் மன்னன், நகர மக்கள்,
	செம்மறித்திறல்.
	
	அகவல்
	திறல்நாடு சார்ந்த வெண்ணகர் சென்று
	அறநிலை யங்களை, பிறநிறு வனங்களை,
	வழக்குத் தீர்ப்பார் ஒழுக்க மதனைச்
	செழிப்பினை ஆய்ந்து, திருநகர் மக்கள்
	விரும்பிய வண்ணம் வீற்றிருக் கின்றான்
	பெருமணி மன்றில் அரும்புலித் திறல்தான்!
	ஆங்கே ஒருகுரல் எழுந்தது!
	மாங்குயில் அன்றது மக்கள் பாட்டே!
	கண்ணிகள்
	குரல்:
	மாந்தரில் நான்கு வகுப்புக்கள் என்பதும் இல்லை - இல்லை
	மன்னவ னாகப் பிறந்தவன் யாவனு மில்லை!
	புலித்திறல்:
	மாந்தரில் நான்கு வகுப்புக்கள் உண்டெனல் மெய்யே - மெய்யே
	மன்னவ னாகப் பிறந்தவன் நான்எனல் மெய்யே!
	குரல்:
	நால்வகுப் பென்பது நூல்வகுப்பா தமிழ் நாட்டில்?
	நற்றமிழ் மக்கள் ஒரேவகுப்பே தமிழ் ஏட்டில்.
	புலித்திறல்:
	நால்வகுப் பென்பது நன்மனுவே சொன்ன தாகும் - அது
	நற்றமிழ் மக்கள் எவர்க்கும் பொருந்துவ தாகும்.
	குரல்:
	மேல்வர எண்ணிய ஆரியர் நூல்கள் நமக்கோ? - மிகு
	வீழ்ச்சியும் தாழ்ச்சியும் செந்தமிழ் மக்கள் தமக்கோ?
	
	புலித்திறல்:
	கோல்கைக் கொண்டுள மன்னவன்நான் என்றன் ஆணை - இக்
	கொள்கையைப் பின்பற்ற ஒப்பா தவர்நிலை கோணை!
	குரல்:
	கோலை எடுத்தவன் மேலெனக் கூறுதல் குற்றம் - பெருங்
	குற்றமன் றோமக்கள் தாழ்வென்று கூறுதல் முற்றும்?
	புலித்திறல்:
	நூலை மறுத்துநம் கோலை எதிர்ப்பவர் தம்மை - நாம்
	நோவ ஒறுத்திடில் யார்தடுப் பார்இங்கு நம்மை?
	குரல்:
	ஆள்பவர் சிற்சிலர்! ஆட்பட் டிருப்பவர் பல்லோர் - எனில்
	அல்லல் அடைபவர் அப்படியே என்றும் நில்லார்.
	புலித்திறல்:
	வாளுண்டு கையினில் இன்றைக்கும் நாளைக்கும் உண்டு - நிலை
	மாற்ற நினைப்பவர் வந்திட லாமே திரண்டு!
	அகவல்
	செம்ம றித்திறல் அரையடி செப்பவும்
	புலித்திறல் அரையடி புகலவும் ஆக
	அங்குள குடிகள் அனைத்தும் அறிந்தார்.
	இங்கிது கண்ட புலித்திறல்,
	எங்கே செம்மறி என்றெழுந் தனனே!
	அறுசீர் விருத்தம்
	இருக்கைவிட் டெழுந்தான் சீறி
	ஏகினான் வெளிப்பு றத்தே!
	ஒருத்தனை உணர்ச்சி மிக்க
	செம்மறித் திறலை நோக்கிப்
	"பிரித்தேன்உன் ஆவி" என்றான்.
	மன்னவன் பிடித்த வாளைச்
	சிரித்தசெம் மறித்தி றல்வாள்
	சிதைத்தது; திகைத்தான் மன்னன்.
	செம்மறி செப்பு கின்றான்:
	"திறல்நாட்டு மக்கள் தம்பால்
	மெய்ம்மையே புகல்வேன்! மக்கள்
	மேல்என்றும் மட்ட மென்றும்
	பொய்மையால் புகலும் ஏட்டைப்
	புகலுவார் தம்ஏற் பாட்டை,
	இம்மாநி லத்தில் மாற்ற
	ஆவன இயற்றித் தீர்வேன்.
	"இதுவேநான் மக்கட் கிந்நாள்
	இயற்றிட எண்ணும் தொண்டு!
	முதியோன்நீ உடன்பி றந்தாய்
	
	உன்னுயிர் முடிப்ப துன்றன்
	அதிகாரம்! அல்லால் என்கை
	அவ்வினை செய்வ தில்லை!
	பொதுமக்கள் உள்ளம் நோக்கப்
	போகின்றேன்" என்று போனான்.
	
	
	இடம்: திறல்நாட்டின் நகர்ப்புறத்தில் ஒரு குளக்கரை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: அழகன், பெருநாட்டின் ஒற்றனான வேலன்.
	அகவல்
	குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு,பல்
	விளக்கும் அழகனை வேலன் அணுகி,
	"எவ்வூர்" என அவன் இவ்வூர்மு என்றான்.
	"என்ன அலுவல்" என்றான். அழகன்
	"மன்னன் மகனின் துணையாள்"
	என்றான். வேலன் புவணக்கம்மு என்றானே!
	அறுசீர் விருத்தம்
	"பொன்னாற்றூர் முத்துச் செட்டி
	புதல்வன்நான் வாணி கத்தில்
	பொன்னெலாம் இழந்தேன் என்றன்
	புதுமனை யாளும் செத்தாள்.
	என்னைநீ காக்க வேண்டும்
	எளியன்நான்" என்றான் வேலன்.
	"என்னநான் செய்யக் கூடும்"
	என்றந்த அழகன் சொன்னான்.
	"அரண்மனை அலுவல் ஒன்று
	சின்னதாய் அடைந்தால் போதும்
	அரசனின் மகனுக் கோநீ
	அன்பான துணைவன் அன்றோ?
	உரைத்தால்நீ இளங்கோ கேட்பான்
	ஒருக்காலும் மறுக்க மாட்டான்.
	அருள்என்மேல் வைக்க வேண்டும்
	அன்பனே" என்றான் வேலன்.
	"நாளைவா நண்பா!" என்றே
	அழகனும் நவின்றான்.வேலன்
	"வேளைநான் தவற மாட்டேன்
	வருகின்றேன்" என விளம்பிக்
	"காளைஅவ் வரசன் மைந்தன்
	கடிமணம் எப்போ" தென்றான்.
	"கேளாதே அதனை" என்று
	கிளத்தினான் அழகன் ஆங்கே!
	"கேட்டது குற்ற மானால்
	
	மன்னிப்புக் கேட்கின் றேன்நான்!
	நாட்டினில் நானோர் ஏழை
	நாளைக்கே அலுவல் ஒன்று
	காட்டினால் மிகநன் றாகும்;
	கைக்கூலி நூறு பொன்னும்
	நீட்டுவேன் உனக்கே" என்று
	நிகழ்த்திட லானன் வேலன்.
	"ஏழைநீ, நூறு பொன்னை
	எனக்கெவ்வா றீதல் கூடும்?
	தோழனே, உன்றன் சொல்லில்
	ஐயமே தோன்றச் செய்தாய்!
	வாழிநீ உண்மை கூறு
	மறையேல்" என் றழகன் கூறத்
	"தோழனே நாளை வந்து
	சொல்லுவேன்" என்று போனான்.
	
	
	இடம்: படைவீடு.
	நேரம்: இரவு, உண்டபின்.
	உறுப்பினர்: படைமறவர், செம்மறித்திறல்.
	அகவல்
	படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார்.
	இடைவானம் ஈந்த அமுதுபோல் ஒருகுரல்
	காதிற் புகுந்தது. மறவர்
	யாதெனக் கருத்தில் ஏற்கலா யினரே.
	எண்சீர் விருத்தம்
	இந்த நாடு பொதுமக்கள் சிறையே!
	எவரும் நிகரென்ற பொதுவுரி மைதனைப்
	பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
	போரின் மறவரே உங்களின் துணையினால்!
	கந்தை யின்றி உணவின்றிப் பொதுவினர்
	காலந் தள்ளி வருவது கண்டிரோ!
	இந்த நாடு பொதுமக்கள் நாடன்றோ?
	நீவிரெல் லீரும் இந்நாட்டு மன்னரே!
	மன்ன ராகப் பிறந்திட்டோம் என்கின்றார்!
	மக்கள், ஆட்படப் பிறந்தவர் என்கின்றார்!
	இன்ன வாக்கு நுந்துணை இல்லையேல்
	மன்னர் எங்கே, பெரும்படை மறவரே?
	இந்நி லத்துப் பெருமக்கள் ஓர்கடல்!
	இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்!
	இன்று கருதுக குடிகளே, மறவரே!
	நாளைக் கேகுடி யரசினை நாட்டலாம்.
	தமிழ்மொ ழிக்குள ஆக்கத்தைப் போக்கினார்.
	
	தமிழர் கொள்கையைத் தலைசாய்க்க எண்ணியே
	அமுதை நீக்கியோர் நஞ்சைவார்க் கின்றனர்;
	அத்த னைக்கும் நும்துணை கேட்கின்றார்.
	உமையெ லாம்அந்த மன்னவர் கைகளின்
	உளிக ளாக்கி நாட்டைப் பிளப்பதோ?
	நமது கொள்கை மக்களெ லாம்நிகர்!
	நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே!
	அகவல்
	படைவீட்டுப் படுக்கையில் இக்குரல் புகுந்து
	நடைமுறை தன்னில் நாணிட வைத்தது.
	மறவர்கள் தூக்கம் மாய்ந்திட
	இறவாப் பெருவிழிப் பெய்தினர் ஆங்கே.
	
	
	இடம்: திறல்நாடு அரண்மனையின் உட்புறம்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: ஆண்டாள், மின்னொளி.
	
	அகவல்
	அரண்மனை தன்னில் ஆங்காங்குச் சென்று
	மின்னொளி தன்தாய் தன்னைத் தேடினாள்.
	காவல் அறையில் பொன்னியொடு
	மேவி இருப்பது கண்டுவியந் தாளே!
	கண்ணிகள்
	"வீட்டை மறந்தாயோ - எனையும்
	வேம்பென விட்டாயோ?
	நாட்டில் அரண்மனையே - உனக்கு
	நன்றெனக் கொண்டாயோ?
	போட்டது போட்டபடி - விடுத்தே
	போனாள் அரண்மனைக்கே
	கேட்டுவா எண்றுரைத்தார் - தந்தைதாம்"
	என்றனள் கிள்ளை மின்னாள்.
	"மன்னர் கொழுந்தியடி - நிலைமை
	மங்கிட லானதடி!
	கன்னல் மொழியாளை - மன்னவன்
	காவலில் வைத்தானே!
	என்னைத் துணையாக - வைத்தனன்
	ஏந்தலின் நன்மகன்தான்.
	உன்னை மறக்கவில்லை - தந்தையை
	உளம் மறந்ததில்லை"
	என்றனள் ஆண்டாள்தான் - இந்நிலை
	ஏனென்று கேட்டவளாய்
	மின்னொளி நின்றிருந்தாள் - அவள்தாய்
	மேலும் உரைக்கின்றாள்:
	
	"மன்னவன் தம்பியினை - அச்செம்
	மறித்திறல் தனையே
	பொன்னியும் காதலித்தாள் - இதனைப்
	புலித்திறல் எதிர்த்தான்.
	புகலும் செம்மறிதான் - வேடர்தம்
	புலைச்சி யின்மகனாம்;
	இகழத் தக்கவனாம் - அவனை
	இவ்விடம் வைக்காமல்
	அகற்றி விட்டார்கள் - இந்தநல்
	அரண்மனைக் குடையார்.
	மிக இரக்கமடி - நினைத்தால்
	வெந்திடும் உள்ள" மென்றாள்.
	"வேட்டுவ மங்கையிடம் - மறிதான்
	வேந்தனுக் கேபிறந்தான்
	நாட்டில் அவன்புலையன் - எனவே
	நவிலல் என்னமுறை?
	ஏட்டினில் உள்ளதுவோ? - தமிழர்
	இனத்தில் வேற்றுமைதான்?
	வேட்டுவர் மக்களன்றோ?" எனவே
	விண்டனள் மின்னொளிதான்.
	"தோட்டத்தில் ஆடியிரு - மகளே
	தூயவை யத்திறலைக்
	கேட்டு வருகின்றேன் - விரைவில்
	கிள்ளையே வீட்டுக்" கென
	நாட்டம் உரைத்தாளே - ஆண்டாளும்!
	மின்னொளி நன்றென்றே
	தோட்டம் புகுந்தாளே - அழகிய
	தோகைமயில் கண்டாள்.
	
	
	இடம்: அரண்மனைத் தோட்டம்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: மின்னொளி, வையத்திறல்,
	ஆண்டாள், மன்னி.
	
	அகவல்
	பசும்புற் பச்சைப் பட்டு விரித்த
	விசும்பு நிகர்த்த விரிதரை தன்னில்
	முல்லை படர்ந்துபோய், விளாவை அளாவச்
	செல்வச் செழுமலர் கொன்றை திரட்டி
	ஆயிரம் கிளைக்கையால் அளித்து நிற்க
	வாயடங் காது மணிப்புள் பாடப்
	புன்னை மலர்க்கிளை தென்றற் பூரிப்பொடு
	மின்னொளி வருகென அழைக்க
	அன்ன நடையாள் அணுகினாள் ஆங்கே.
	
	வெண்பா
	வளர்ப்பு மயில்தான் மரத்தடியில் ஓடிக்
	களித்தாடக் கண்டு களித்தாள் - கிளிப்பேடு
	கெஞ்சியது சேவற் கிளிவந் தருள்புரிய
	வஞ்சியது கண்டாள் மகிழ்ந்து!
	தனியிருக்கும் தாழ்பலவைக் கண்டாள்பின் வேரில்
	கனியிருக்கக் கண்டு வியந்தாள் - இனியவாம்
	"பூக்முகண்டாள் பூவில் புதியபண் பாடுகின்ற
	பூக்கண்டாள் இன்பங்கண் டாள்.
	கோணிக்கொம் பாட்டியசெங் கொத்தலரிப் பூக்கண்டாள்
	மாணிக்கம் கண்டாள் மகிழ்கொண்டாள் - சேண்நிற்கும்
	தென்னையிலே பாளை சிரிக்கச் சிரிக்கின்றாள்
	புன்னையிலே போய்க்கண்டாள் முத்து.
	மின்னொளி ஆங்கே வெயிலில் உலவுகின்றாள்
	மன்னன் மகனோ தொலைவினிலே - நின்றபடி
	கண்டு களிக்கின்றான் கட்டழகைத் தன்னுளத்தால்
	உண்டு களிக்கின்றான் உற்று!
	மான்கண்டு பூரிக்கும் மங்கையினை மன்னன்மகன்
	தான்கண்டு பூரிப்பான்! தையல்நல்லால் - வான்கண்ட
	செம்மா துளங்கண்டு சேல்விழிபூ ரிக்கஅவன்
	அம்மா துளங்காண்பான் ஆங்கு!
	கோவைக் கனிகண்டு கோவையிதழ் பூரிக்கும்
	பாவைஎழில் கண்டு பதறுகின்றான் - பூவைதான்
	மாங்கனிக்குத் தாவுகின்றாள் மன்னன்மகன் உள்ளம்அத்
	தீங்கனிக்குத் தாவும் தெரிந்து.
	மின்னிடையும் தானசைய மேலாடை யும்பறக்க
	அன்னநடை போடும் அழகுகண்டும் - அன்னவளின்
	பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல்
	நெஞ்சேற நின்றான் நிலைத்து.
	தேசு வெயிலதுதான் தேக்குநிழற் கீழேபொற்
	காசு கிடப்பதுபோல் காட்சிதர - மாசில்லால்
	செங்காந்தட் கைமுகவாய் சேர்த்தாள் இளங்கோவாய்
	அங்காந்தான் அண்ணாந்த வாறு.
	அன்னோன் நிலையனைத்தும் அங்கவனைத் தேடிவந்த
	மன்னி மறைந்திருந்து பார்க்கின்றாள் - மின்னொளிமேற்
	கண்ணானான் பிள்ளை கருத்தழிந்தா னோஎன்று
	புண்ணானாள் நெஞ்சு புகைந்து.
	பூவையத் திறலே மகனே! திருவமுது
	செய்யவா! செந்தீ விளைக்கின்ற - வெய்யில்
	விழிபார்த்தல் தீமை விளைக்கும் அரசர்
	
	வழிபார்த் திருக்கின்றார் வா!பூ
	என்றுரைக்க மன்னி எதிரேதும் சொல்லாமல்
	சென்றான் திறலோன் அரண்மனைக்கே - பின்னர்அங்கே
	ஆண்டாளும் வந்தாள் அழைத்திட்டாள் தன்மகளை
	மீண்டாள்தன் வீட்டுக்கு மின்.
	
	
	இடம்: அரண்மனைத் தனியறை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: புலித்திறல், புலித்திறல் மன்னி.
	
	அகவல்
	வேண்டுகோள் விட்டாள்; வேந்தன் வந்தான்.
	பூஈண்டமர்க ஈண்டமர்க!பூ என்றாள் மன்னி
	மன்னன் முகத்தை மலர்க்கையால் ஈர்த்தே
	ஐயம் அடைந்தேன் என்றாள்.
	வையத் திறலின் வகையுரைப் பாளே!
	கலிவெண்பா
	"பூக்காரி யின்மகளைப் பூங்காவில் நம்பிள்ளை
	நோக்கிய நோக்கின் நிலையினைநான் - போய்க்கண்டேன்.
	கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள்
	தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? - வாழ்வில்
	தனக்கு நிகரில்லாத் தையள்பால் பிள்ளை
	மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் - எனினும்,
	தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை
	துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? - வெடுக்கென்று
	வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம்
	செய்துவைத்தல் நல்லதெனச்" செப்பினாள் - துய்யதென்று
	மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச்
	சொன்னான்; தொடர்ந்தாள்அம் மாது.
	
	
	இடம்: அரண்மனைத் தனியிடம்.
	நேரம்: முதிர்காலை.
	உறுப்பினர்: புலித்திறல், மன்னி, வையத்திறல்.
	
	அகவல்
	மன்னனும் மன்னியும் மைந்தனை "நில்" என்று
	கூறித் தமது கொள்கையைக்
	கூறு கின்றார் சீறும்உளத் தோடே:
	கண்ணிகள்
	"மணம்செய்து கொள்ளுதல் வேண்டும் - உன்
	மாமனின் பெண்ணை மணந்திட வேண்டும்;
	இணங்கிட வேண்டும் இதற்கே - நீ
	
	ஏதும் தடைசொல்ல லாகாது கண்டாய்.
	அணுகும்உன் அன்னையின் அண்ணன் - பெற்ற
	ஆரெழில் மங்கையை நீமணந் திட்டால்
	வணங்குமிந் நானிலம் உன்னை" - என்று
	மன்னவன் சொல்ல மறுத்துரைப் பான்சேய்:
	"மணம்செய்து கொள்வது நானா? அன்றி
	மாநிலம் ஆளும்இம் மன்னவன் தானா?
	இணங்கிட வேண்டுமென் கின்றீர் - எனில்
	என்மன மோமணம் ஒப்பிட வில்லை.
	அணங்கினை மாமனின் பெண்ணை - எனை
	அச்சுறுத் திப்பெறு மாறு புகன்றீர்.
	வணங்குகின் றேன்தந்தை தாயே - நான்
	மணம்புரி யேன்" என்று செம்மல் மறுத்தான்.
	காவலர் தம்மை அழைத்தான் - மன்னன்
	கட்டுக இங்கிவன் கைகளை என்றான்.
	ஆவல் மறுத்ததி னாலே - என்றன்
	ஆணைக்குக் கீழ்ப்படி யாததி னாலே
	காவற் சிறைக்கிவன் செல்க - என்றன்
	கட்டளை தன்னை மறுத்திடு வீரேல்
	சாவது மெய்யென்று சொன்னான் - அந்தத்
	தறுகண்ணர் செம்மலைச் சிறையினிற் சேர்த்தார்.
	வையத் திறல்சிறை சென்றான் - பின்னர்
	மன்னவன் தன்மனை யாளிடம் சொல்வான்:
	"பையனை விட்டுவைத் திட்டால் - அந்தப்
	பாவையைக் கூட்டி நடந்திடல் கூடும்.
	வையம் பழித்திடு முன்னே - அவன்
	மனது திரும்பிடும் என்று நினைத்தே
	வெய்ய சிறைதன்னில் வைத்தேன்" - என்று
	வேந்தன் உரைத்தனன். மன்னி மகிழ்ந்தாள்.
	
	
	இடம்: அரண்மனையில் வையத்திறல் அறை.
	நேரம்: முன்மாலை.
	உறுப்பினர்: அழகன், மன்னி, மன்னன்.
	
	அகவல்
	அழகன், வையத்திறல் அறைக்குச் சென்றான்
	முழுதும் ஆய்ந்த விழிகள் ஏமாந்தன;
	புலித்திறல் மன்னிபால் போனான்
	நலிப்புடன் அவளிடம் நவில லாயினனே.
	கண்ணிகள்
	"வையத் திறல்வந்த துண்டோ? - அன்னாய்
	மற்றெங்குச் சென்றனன் சொல்வாய்?
	வெய்யில் கொதிக்கின்ற நேரம் - அவன்
	
	வேறெங்கும் சென்றிட மாட்டான்;
	துய்யவன் தன்னறை பார்த்தேன் - அங்கும்
	தோன்றலை நான்காண வில்லை
	எய்தநல் அம்பினைப் போலே - உடன்
	இங்குவந்தேன்" என்று சொன்னான்.
	"ஆண்டாள் மகள்மீதில் அன்பால் - என்றன்
	அண்ணனின் பெண்ணை மறுத்தான்.
	பூண்டான் பெரும்பழி தன்னை! - மனம்
	புண்படச் செய்ததி னாலே
	ஈண்டு சிறைப்பட லானான் - அவன்
	எண்ணம் திருந்திட வேண்டும்.
	யாண்டும் இதைச்சொல்ல வேண்டாம் - இது
	என்ஆணை" என்றனள் மன்னி.
	"இப்பிழை செய்திட வில்லை - நெஞ்சம்
	ஏந்திழை மேல்வைத்த தில்லை.
	செப்புவ துண்மைஎன் தாயே - அவன்
	சிறையிடை வாழ்வது முறயோ?
	கற்பது தான்அவன் நோக்கம் - பின்னர்
	கடிமணம் செய்வது நோக்கம்;
	மெய்ப்பட வேஉரைக் கின்றேன் - அவன்
	மீளும்வகை செய்க" என்றான்.
	மன்னனும் அவ்விடம் வந்தான் - அந்த
	மன்னவன் மைந்தனின் நண்பன்
	பின்னும் உரைத்திட லானான்: - புஉன்றன்
	பிள்ளையின் மேற்பிழை யில்லை
	மின்னொளி மேற்கருத் தில்லை - அவன்
	வெஞ்சிறை வாழ்வது நன்றோ?மு
	என்றுரைத் தேநின்ற போது - மன்னன்
	"என்அழ காஇது கேட்பாய்.
	அன்னவன் உள்ளக் கிடக்கை - நானும்
	ஆய்ந்திட வேண்டும் அதற்குள்
	உன்மொழி நம்பிட மாட்டேன் - அவன்
	உற்ற சிறைமீட்க மாட்டேன்.
	இன்ன நிகழ்ச்சிகள் யாவும் - நீயே
	எங்கும் உரைத்திட வேண்டாம்மு
	என்றான் புலித்திறல் மன்னன் - சரி
	என்றுரைத் தான்அழ கன்தான்.
	
	
	இடம்: சிறைக்கூடம்.
	காலம்: முன்னிரவு.
	உறுப்பினர்: வேல்விழி, சிறைக்காவற்காரன், வையத்திறல்.
	அகவல்
	சிறையில் வையத் திறலிருக் கின்றான்.
	
	காவற் காரன் கடிது சென்று
	"மின்னொளி பார்க்க வேண்டு மென்றாள்"
	என்று சொன்னான். "இட்டுவா இட்டுவா"
	என்றான் இளங்கோ! �வேல்விழி� யாளவள்
	முகமலர் மறைய முக்கா டிட்டு
	விரைந்தாள்! இரும்பு வேலிப் புறத்தே
	இருக்கும் செம்மல் இருவிழி மலர்ந்தே
	"மின்னொளி மின்னொளி விளையாடும் மயிலே!
	உன்மேல் வைத்த காதல் உளவறிந்து
	மன்னவன் என்னைச் சிறையில் வைத்தான்!
	என்றன் உயிரே வாவா!" என்றனன்.
	"மின்னொளி அன்றுநான்; வேல்விழி அன்றோ
	என்னை மணந்துகொள்" என்றாள்.
	மன்னவன் மகனின் உள்ளம் எரிந்ததே.
	கண்ணிகள்
	"என்னெதிர் நிற்கவும் வேண்டாம் - இங்
	கேதும் புகன்றிட வேண்டாம்.
	உன்னை மணந்திட மாட்டேன் - நீ
	ஒட்டாரம் செய்திட வேண்டாம்.
	மின்னொளி என்னுயிர்" என்றான் - வந்த
	வேல்விழி ஓடி மறைந்தாள்.
	
	
	இடம்: சிறைக்கூடம்.
	நேரம்: இரவு.
	உறுப்பினர்: புலித்திறல், வையத்திறல், அழகன்.
	
	அகவல்
	வையத் திறலை மன்னன் அணுகினான்.
	சிறையின் கதவு திறக்கப் பட்டது.
	புலித்திறல் புகுந்தான் புதல்வனைப் பற்றி
	வலிதில் இழுத்து மண்ணிற் சாய்த்துச்
	சாட்டையாற் கைகள் சலிக்க அடித்தான்.
	"ஆட்படும் இனத்தின் அணங்கை மணப்பதா?
	வாட்படை மன்னரின் மாண்பைக் குறைப்பதா?
	மின்னொளி தன்னை வெறுப்ப தாகவும்
	வேல்விழி தன்னை விரும்புவ தாகவும்
	விளம்பும் வரைக்கும் மீள மாட்டாய்."
	என்று கூறி மன்னன் ஏகினான்.
	அழகன் உணவுடன் அங்கு வந்தான்.
	குருதிப் பெருக்கில் கொற்ற வன்மகன்
	கிடந்தது கண்டு நடுங்கி, புஅன்பனே
	எவரால் நேர்ந்த இன்னல் ஐயோ!மு
	என்று பதறினான். இளங்கோ, "அழகனே
	வேல்விழி தன்னை வெறுத்ததால் என்னைத்
	தந்தை சாட்டையால் அடித்தார்" என்றான்.
	அழகன் அவ்வுரை கேட்டே
	29
	அழற்படு நெஞ்சுடன் சென்றான் அயலிலே.
	25
	இடம்: திறல்நாட்டின் நகர்ப்புறம்.
	நேரம்: நள்ளிரவு.
	உறுப்பினர்: பெருநாட்டின் ஒற்றர், அழகன்.
	அகவல்
	அனல்பட்டுத் தாண்டுவான் போலும் அழகன்,
	பெருநாட்டின் ஒற்றர் எதிரில்
	விரைந்தோடி நின்றான் விளம்புகின் றானே:
	ப�றொடை வெண்பா
	"பெருநாட்டான் பெற்ற பெருந்திருவை அன்றி
	ஒருநாட்டு மங்கையையும் நான்மணக்க ஒப்பேனே
	என்றுரைத்தான் மன்னன்மகன் என்ன பிழையிதிலே?
	அன்றே சிறைவைத்தான் ஆணழகை அவ்வரசன்
	காட்டுமலை யன்மகளைக் கட்டிக்கொள் என்றுசொல்லிச்
	சாட்டையினால் சாகப் புடைக்கின்றான் தன்கையால்!
	செங்குருதிச் சேற்றில் சிறையில் மடிகின்றான்.
	எங்கிதனைச் சொல்வேன் இரக்கம் உமக்கிலையோ?
	அஞ்சல் எழுதிவிட்டான் ஆட்களையும் போகவிட்டான்!
	வஞ்சியொடும் அந்த மலைவேந்தன் வந்திடுவான்.
	ஏழெட்டு நாளிலந்த ஏந்திழையைத் தான்மணந்து
	வாழட்டும் அல்லதவன் மாயட்டும் என்கின்றான்.
	பெண்ணில் பெருந்திருவை யான்மணப்பேன் அல்லாது
	மண்ணில் மறைந்திடுவேன் என்கின்றான் மன்னன்மகன்."
	என்றே துடித்தான் அழகன்! இதுகேட்டு
	நின்றிருந்த ஒற்றர் நெடுமூச் செறிந்தவராய்,
	"இங்கிதனை யாரிடத்தும் சொல்லாதே. நாளைக்கே
	அங்குள்ள எங்கள் அரசர் பெரும்படைதான்
	பொங்கும் கடல்போற் புறப்பட்டு வந்துவிடும்!
	மங்காத நெஞ்சத்து வையத் திறல்மீள்வான்!
	அன்றே பெருந்திருவை அன்னோன் மணந்திடலாம்.
	இன்றே இதோநாங்கள் செல்கின்றோம்" என்றுரைத்தே
	தம்குதிரை மேலேறித் தட்டினார்! நல்லழகன்
	அங்கே மகிழ்ந்திருந்தான் அன்று.
	26
	இடம்: ஏரிக்கரை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: மண்ணெடுப்போர், அழகன்.
	அகவல்
	ஏரி தூர்க்குமண் எடுப்பார் பல்லோர்
	ஆங்கே அழகன் சென்றுதன்
	தாங்காத் துயரம் சாற்றினான் மிகவே.
	30
	எண்சீர் விருத்தம்
	"ஏரியிலே மண்ணெடுத்துக் கரைஉ யர்த்தும்
	தோழர்களே! இப்பெரிய நாட்டின் ஆணி
	வேரினிலே பெருநெற்றி வியர்வை நீரை
	விட்டுவளர்த் திடுகின்ற நாட்டு மக்காள்!
	ஊரினிலே தெருவினிலே வீட்டில் எங்கும்
	உம்உழைப்பைப் பொன்னெழுத்தால் காண்ப தன்றி
	ஆரிங்கே உழைத்தார்கள்? அரசன் என்போன்
	அரசியொடு பொன்னூசல் ஆடு கின்றான்.
	சடுகுடுவென் றேநெய்வீர் கந்தை யில்லை
	தார்வேந்தன் கட்டுவது சரிகை வேட்டி!
	கடல்நடுவில் முத்தெடுப்பீர்; கஞ்சி யில்லை!
	கடனறியா வேந்துக்கு முத்துத் தொங்கல்!
	மடுப்புனலும் செங்குருதிப் புனலும் வார்த்து
	வளவயலில் களையெடுத்துக் காத்த செந்நெல்
	அடுக்களையில் கண்டீரோ! அரசன் வீட்டில்
	ஆன்நெய்யில் சீரகச்சம் பாமி தக்கும்!
	எவன்படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை
	எவன்காத்தான்? காக்கின்றான்? காப்பான்? கேளிர்!
	தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தை போலும்
	தரை,வீடு, தெரு,சிற்றூர், நகரம் ஆக
	அவிழ்ந்ததலை முடிவதற்கும் ஓயாக் கையால்
	அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணு றங்கிக்
	கவிழ்ந்திடஓர் ஈச்சம்பாய் இல்லை. தங்கக்
	கட்டிலிலே ஆளவந்தார் நாயு றங்கும்!
	சிற்றூரில் ஆயிரம்பேர் செழுந கர்க்குள்
	திகழ்பன்னூ றாயிரம்பேர் விழுக்கா டாக
	முற்றுமுள நாட்டிலுறு மக்கள், எண்ண
	முடியாத தொகையினர்கள்; அவர்கள் எல்லாம்
	கொற்றவரின் பார்ப்பனரின் விரல்விட் டெண்ணும்
	குடும்பங்கள் இடும்பணிக்குத் தலைவ ணங்கிக்
	குற்றேவல் செயப்பிறந்தார் என்றார். மற்றும்
	கொழுக்கட்டை யாய்ப்பிறந்தோம் நாங்கள் என்றார்.
	மின்னொளிமேல் மன்னன்மகன் எண்ணம் வைத்தான்.
	மின்னொளியோ நம்மவரின் பெண்ணே! அந்த
	மின்னொளிதான் மிகத்தாழ்ந்த சாதிப் பெண்ணாம்!
	மின்னொளியைத் தன்மைந்தன் எண்ணும் போதே
	மன்னனென்னும் தன்சாதிக் கிழிவா யிற்றாம்!
	மன்னன்மகன் சிறையினிலே வைக்கப் பட்டான்.
	தன்சாதிக் குமிழிகளை நிலைஎன் கின்றான்
	தடங்கடலின் மக்களினம் தாழ்வென் கின்றான்.
	மக்களிலே தாழ்வுயர்வே இல்லை என்று
	மன்னன்மகன் எண்ணுவதும் பிழையாம். அன்றோ,
	31
	கக்குமுடற் குருதியிலே சேய் மிதக்கக்
	கைச்சாட்டை ஓயுமட்டும் அடித்தான் மன்னன்.
	மிக்குயர்ந்த சாதிகீழ்ச் சாதி என்னும்
	வேற்றுமைகள் தமிழ்க்கில்லை, தமிழர்க் கில்லை.
	பொய்க்கூற்றே சாதியெனல், ஆரி யச்சொல்
	புதுநஞ்சு! பொன்விலங்கு! பகையின் ஈட்டி!
	"கடற்குமிழி உடைந்திடுக! சாதி வீழ்க!
	கடல்மக்க ளிடைவேந்தர் மறைந்து போக
	குடியரசு தழைக!முஎன அழகன் சொல்லிக்
	கொடுவழியைத் தாண்டிஅயற் புறத்தே சென்றான்.
	நெடிதுழைப்போர் மேடழித்தே உணர்ச்சி என்னும்
	நீர்மட்டம் கண்டார்கள். புஉழைத்த நாளுக்
	கடைகூலி காற்பொன்னே! மாதந் தோறும்
	ஆள்வாருக் கறுபதினா யிரம்பொன்" என்றார்.
	27
	இடம்: அரண்மனையில் காவலறை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: செம்மறித்திறல், பொன்னி, காவற்காரர்,
	படைமறவர், மன்னன்.
	அகவல்
	உணவு வட்டில் ஒருகையில் மறுகையில்
	குடிநீர்ச் செம்பும் கொண்டு, காவல்
	அறையில் பொன்னியை அணுகினான் ஒருவன்.
	நிறைநி லாமுகம் நிலத்திற் கவிழக்
	கருங்குழல் அவிழக் கண்நீர் உகுக்க
	இருளிற் கிடந்த பொன்னி எழுந்தாள்.
	"செம்மறித் திறல்நான்" என்ற தீங்குரல்
	மெல்லெனப் பொன்னி காதில் விழுந்ததே!
	அவள்அவன் அணைப்பும் பிணைப்பும் ஆனார்
	உள்ளம் இரண்டும் உலகை மறந்தன.
	வாயிலோர், "அழகன் வராததேன் வெளியில்?
	போயினான் என்ன புரிந்தான் இன்னும்?"
	என்றனர்; ஐயம் எய்தினர். ஒருவன்
	அறைக்குள், ஒருகண் அரைமுகம் சாய்த்தான்.
	இரண்டுடல் ஒன்றிலொன் றிறுகுதல் கண்டான்.
	அவன்பதைத் தோடினான் அரச னிடத்தில்!
	அரசன் மறவர் ஒருசில ரோடு
	விரைவில் வந்தான். "வெளியில் வருவீர்
	இருவரும்" என்று பெருங்குரல் பாய்ச்சினான்.
	அழகன் உடையில் அங்குச் செம்மறி
	மழமழ வென்று வந்து நின்று
	கொழகொழ வென்று சிலசொற் கூறினான்.
	முக்காடு நீக்கி முடியரசன் கண்டான்
	செம்ம றித்திறல் செழுமலர் முகத்தை!
	"இவனைக் கட்டி இழுத்துச் செல்க
	32
	சிறைக்கென்று மன்னன் செப்பினான். மறவர்
	அவ்வாறு பிணித்தே அழைத்துச் சென்றனர்.
	காவலிற் பொன்னியைக் கண்ணால் வெதுப்பிப்
	"புலைச்சி மகனைப் புணர்ந்த புலைச்சி
	கொலைக்குக் காத்திரு" என்று
	நிலத்திடி எனவேந்து நேர்நடந் தானே.
	28
	இடம்: அரண்மனைவாயில், தெருக்கள், தொழிற்சாலை.
	நேரம்: காலை முதல் இரவு வரைக்கும்.
	உறுப்பினர்: அழகன், தோழிமார், தெருவினர், தொழிற்சாலையினர்.
	இணைக்குறள் ஆசிரியப்பா
	தூய்மொழி என்னும் தோழி, அரண்மனை
	வாயிலில் நின்றாள்.அவளை,
	அழகன் அணுகிக் கூறு கின்றான்:
	"நாமெலாம் தாழ்ந்தவர், தாமெலாம் உயர்ந்தவர்"
	என்று மன்னர் இயம்பினார் அன்றோ?
	நம்மில் ஒருத்தியை அம்மன்னர் மகன்
	மணக்க நினைத்தான் என்று
	சிறையில் வைத்ததும் தெரிந்தாய் அன்றோ?
	மன்னியின் தங்கையாம் பொன்னிசெம் மறியை
	மணக்க நினைத்ததால் மாளப் போவதை
	அறிவா யன்றோ?
	செம்மறித் திறலும் சிறையில் உள்ளான்
	அம்மங் கைதனை அணுகிய தாலே
	கண்டாய் அன்றோ?
	தன்மா னத்தைத் தமிழர் இழப்பதா?
	பொன்னே தரினும் மன்னன் அரண்மனை
	வாயிலை மிதிப்பதும் தீயதேமு
	என்றான் அழகன்.
	புருவம் நெற்றி ஏற இருவிழி
	எரியைச் சொரிய "என்போன் றார்க்கும்
	இங்கென்ன வேலை?" என்றே
	அங்கிருப்போரை அணுகினாள் விரைந்தே!
	சிலநா ழிகையில்,
	தோழிமார் அரண்மனை துறந்தனர்;
	பணிப்பெண் டிர்கள் பறந்தனர்.
	காவலர் போயினர்;
	பாவலர் எட்டியும் பாரோம் என்றனர்;
	மெய்க்காப் பாளரும் வீடு திரும்பினர்.
	அடுக்களை ஆக்குநர் இல்லை.
	அரண்மனை இவ்வாறாகத் --
	தெருவெலாம் தெருவின் வீடெலாம், வீட்டின்
	விருந்தினர் பொருந்தினோர் வருந்த லானார்.
	பிறப்பில் தாழ்ந்தது பெருமக்கள் கூட்டமா?
	33
	பிறப்பில் உயர்ந்ததச் சிறிய கூட்டமா?
	என்றே ஆர்த் தார்த்து விழுந்தனர் --
	ஆலைத் தொழிலினர் அங்கொரு பாங்கில்
	"கூலிக் கென்றே ஞாலத்தில் பிறந்தோம்
	கோலைத் தாங்கியே பிறந்தனர் கொற்றவர்
	என்றனன்; மன்னன் வீழ்க!
	என்றனர்; பார்ப்பனர் வீழ்க!"
	என்று கூவினர்.
	மனத்தாங் கல்கள் வளர்ந்தன!
	இனத்தின் எழுச்சி நாடெலாம் எழுந்ததே.
	
	
	இடம்: அரண்மனைக் கூடம்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: புலித்திறல், மன்னி, பார்ப்பனர், அழகன்.
	
	இணைக்குறள் ஆசிரியப்பா
	"யாமிட்ட சோறுகறி எப்படி" என்று
	நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர்.
	"நன்று மிகவும்" என்றான் மன்னன்.
	மேலும் மன்னன் விளம்புவான்:
	"தாழ்ந்தவர் தம்மில் ஒன்று சேர்ந்தனர்.
	உயர்ந்தவர் நாமும் ஒன்று சேர்ந்தோம்"
	என்றான். பார்ப்பனர்,
	"இப்படி விடுவதும் ஏற்ற தல்ல.
	தாழ்ந்தவர் போக்கைத் தடுக்க வேண்டும்
	அவர்களின் நன்மைக் காகவே!
	அவர்மேல் படையை அனுப்ப வேண்டும்
	அவர்கள் நன்மை கருதியே!
	அரண்மனை வேலையை அவர்கள் மறுத்தது
	குற்றமன்றோ?
	பொறுக்க லாமோ, ஒறுக்க வேண்டும்
	அவர் நன்மைக்கே!
	அவர்களில்
	ஓரா யிரம்பேர் ஒழிந்துபோ கட்டுமே
	மற்றவர் வழிக்கு வருவா ரன்றோ?
	திருத்த வேண்டும்; திருந்துவர்.
	மக்களைத் திருத்தல் மன்னன் கடமை!
	மனுநூல் நாட்டில் வழங்க வேண்டுமே
	அதற்குப்
	பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
	ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி
	ஆள வேண்டும்.
	விளை பொருள் விற்பவர் வேண்டும்
	வளவயல் உழவும், குளச்சே றெடுக்கவும்
	இரும்ப டிக்கவும் கரும்பு நடவும்
	
	உப்புக் காய்ச்சவும் தப்ப டிக்கவும்
	சுவர் எழுப்பவும் உவர்மண் எடுக்கவும்,
	பருப் புடைக்கவும் செருப்புத் தைக்கவும்
	மாடு மேய்க்கவும் ஆடு காக்கவும்,
	வழிகள் அமைக்கவும் கழிவடை சுமக்கவும்
	திருவடி தொழுதுநம் பெருமை காக்கவும்
	வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்
	நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே"
	என்றனர்.
	"படைத் தலைவரைக் கடிதில் அழைப்பிக்க"
	என்றான் மன்னன்.
	குதித் தோடினான்ஒரு குள்ளப் பார்ப்பனன்.
	பார்ப்ப னர்பால் பகர்வான் மன்னன்:
	"அரண்மனை வேலைகள் அனைத்தும் நீவிர்
	பார்த்திட வேண்டும். பணியா ளர்கள்
	வரும் வரைக்கும்" என்ன,
	"அடடா! செருப்புத் துடைப்பது முதல்
	அடுப்புத் தொழில்வரை நடத்துவோம்" என்றனர்.
	பார்ப்பன ஆடவர் பார்ப்பனப் பெண்டிர்
	அனைவரும் பணிசெய அரண்மனை வந்தனர்.
	மன்னனும் மன்னியும் மகிழ்ந்தி ருந்தனர்.
	அழகன் வந்தான்.
	"எங்குவந் தாய்?" என எரிந்தான் மன்னன்
	"செம்மறித் திறலும் சேல்விழிப் பொன்னியும்
	பொன்னூசல் ஆடிப் பொழுதுபோக்கு கின்றார்.
	வையத் திறலோ
	மாசுடை நீக்கித் தேசுடை அணிவான்
	ஏனெனில்,
	ஆண்டா ளானதன் அன்பு மாமி
	மாப்பிள்ளை பார்க்க வருகின் றாளாம்"
	என்றான்.
	மன்னி அழுதாள். மன்னவன் சீறி
	"இவர்கள் சிறையினின் றெப்படி வந்தனர்?"
	என்று கேட்டான்.
	"காவலர் எவரும் காணேன் அங்கே?"
	என்றான் அழகன்.
	"எப்படி வரலாம் இவர்கள்?" என்று
	மன்னன் கேட்டான்.
	"அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள்
	வாளைக் கையில் வைத்திருக் கின்றனர்"
	என்றான் அழகன்.
	பார்ப்பனர் தம்மைக் கூப்பிட்டு மன்னன்,
	"வையத்திறலை, மறியை, வஞ்சியைக்
	கடுஞ்சிறை வைத்துக் காவ லிருங்கள்.
	என்றன் ஆணை இது" வெனக் கூறினான்.
	"புல்லேந்து கையில் வில்லேந்து வோம்யாம்"
	
	என்று பார்ப்பனர் இயம்பினர்.
	மகிழ்ச்சி என்றான் மன்னன்.
	"ஆயினும்,
	மல்லேந்து மன்னர்க்குச் செல்வாக் கில்லையே
	எப்படி அதுசெய ஏலும்?" என்றனர்.
	அழகன் சிரித்தான்.
	நன்றென மன்னன் இஞ்சி
	தின்ற குரங்குபோல் திகைத்தான் குந்தியே.
	
	
	இடம்: அரண்மனை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: படைத்தலைவன், மன்னன்.
	
	அகவல்
	தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை
	ஆங்கெதிர் பார்த்தமர்ந் திருந்தான் அரசன்
	அன்னவன் வந்து வணங்கினான்.
	தன்ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே:
	அறுசீர் விருத்தம்
	"விரைந்துசெல்! மானம் காப்பாய்
	அரண்மனை வேலைக் காரர்
	புரிந்தனர் தீமை விட்டுப்
	போயினர் காவ லர்கள்
	பிரிந்தனர் சிறை திறந்து
	பெயர்ந்தனர் குற்றம் செய்தோர்!
	விரைந்துசெல் பணியா ளர்கள்
	வேண்டும்இப் போதே" என்றான்.
	மேலுமே உரைப்பான் மன்னன்:
	"வெந்திறல் மறவர் தம்மை
	வேலொடு தெருவி லெல்லாம்
	நிறுத்திவைத் திடுதல் வேண்டும்.
	வாலசைத் திடுவார் தம்மை
	மண்ணிடைப் புதைக்க வேண்டும்.
	தோலினை உரிப்பாய் நம்மைத்
	தூற்றுவார் தம்மை" என்றான்.
	படைத்தலை வன்பு கல்வான்:
	"படைசார்ந்த மறவர் எல்லாம்
	கடைச்சாதி என்று நாமே
	கழறிய துண்டோ?" என்றான்.
	விடுத்தஇவ் வினாவைக் கேட்ட
	வேந்தனும், "ஆம்ஆம்!" என்றான்.
	"கெடுத்தனிர் அரசே அந்தக்
	கீழ்மக்கள் வருந்தி னார்கள்.
	
	ஆயினும் அவர்கட் கான
	ஆறுதல் கூறு கின்றேன்
	போயினி நீங்கள் சொன்ன
	செயலினைப் புரிய வேண்டும்.
	நாயினும் தாழ்ந்தா ரேனும்
	நாட்டினிற் பெருங் கூட்டத்தார்!
	பாயுமேல் மக்கள் வெள்ளம்
	நம்மாள்வார் பறக்க வேண்டும்."
	உயர்சாதிப் படைத் தலைவன்
	இங்ஙனம் உரைத்துச் சென்றான்.
	துயர்பாதி அச்சம் பாதி
	தொடர்ந்திடத் துக்க மென்னும்
	அயலுல கடைந்தான் மன்னன்
	உணவுண்ணான் அவன் விருப்பம்!
	கயல்மீனும் சோறும் பார்ப்பார்
	கட்டாயம் உணவாய்க் கொண்டார்.
	
	
	இடம்: அரண்மனை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: ஆளும்சாதி, அதிகாரிகள், அரசன்.
	அகவல்
	ஆளும் சாதியார் அதிகா ரத்தினர்
	வாளும் கையுமாய் வந்து மன்னனை,
	"நாலாஞ் சாதியும் மேலாஞ் சாதியும்
	ஆலும் விழுதும் ஆவார். இதனை
	நாமறி வோமே, அறிந்தும்இத்
	தீமை புரிந்தது தீமை" என் றாரே!
	அறுசீர் விருத்தம்
	"நேர்ந்திட்ட நிலைமை தன்னை
	நிகழ்த்துவேன் உறவி னோரே,
	சார்ந்திட்ட ஆண்டாள் என்னும்
	பூக்காரி தன்பெண் ணாளைத்
	தேர்ந்திட்டான் மணமே செய்யத்
	திருமகன்" என்றான் மன்னன்!
	ஆர்ந்தது விழியிற் செந்தீ;
	"ஐயையோ!" என்றார் வந்தோர்.
	"அன்றியும் என் கொழுந்தி
	செம்மறித் திறலை அண்டி
	நின்றனள். சிறையில் வைத்தேன்.
	நிலைகெட்ட செம்ம றிக்கும்
	பன்முறை சொன்னேன் கேளான்;
	படுசிறை என்றேன். மேலும்
	என்பிள்ளை என்றும் பாரேன்
	
	சிறையினில் இருக்கச் செய்தேன்.
	"பணியாளர் தோழி மார்கள்
	இதையெல்லாம் பார்த்தி ருந்தார்
	அணியணி யாகச் சென்றார்
	அரண்மனை வேலை விட்டே!
	துணிவுடன் நகரைக் கூட்டித்
	தூற்றினார் மேல் வகுப்பை!
	பணிவுடன் பணிகள் செய்து
	பார்ப்பனர் உதவு கின்றார்.
	"அரண்மனைப் பின்பு றத்தே
	அம்மறித் திறலும், பொன்னி
	ஒருத்தியோ டுள்ளான். என்றன்
	உயர்மைந்தன், பணிப் பெண்ணாளைத்
	திருமணம் புரிய வேண்டி
	ஆவன செய்கின் றானாம்.
	அருஞ்சிறைக் காவல் இல்லை
	அனைவரும் இவ்வா றானார்."
	என்றனன் மன்னன். இந்த
	இழிவினைக் கேட்டி ருந்த
	மன்னரின் மரபி னோர்கள்
	வாளொடு கிளம்பி னார்கள்.
	"புன்றொழில் புரிந்து ளாரைப்
	புதைக்கின்றோம்" எனக் கொதித்தார்.
	சென்றனர், "சாதி வாழ்க
	தீயர்கள் வீழ்க!" என்றே.
	போயினார் அரண் மனைக்குப்
	புறக்கட்டில் அவர்கள் இல்லை.
	தீயர்கள் மறைந்தார் என்று
	செப்பினார். அரசன் கேட்டு
	நாயினை ஒப்பா ரோடு
	நகரினிற் கலகம் செய்யப்
	போயினார். போவீர் என்றான்
	அஞ்சினர் பொய்கை யாள்வார்.
	
	
	இடம்: திறல்நாட்டு நகர்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: அரசன், படைத்தலைவன், பெருமக்கள்.
	
	அகவல்
	"பெருநாட் டுப்படை, திருநாடு தன்னை
	முற்றுகை யிட்டதே முற்றுகை யிட்டதே!"
	என்று கூவினர் எங்கணும் மக்கள்!
	தீமை குறித்தது செழுநகர்ப் பெருமணி!
	அரசன் படையை அழைத்தான் விரைவில்!
	
	படையின் தலைவன் பரபரப் புற்றான்
	தேர்ப்படை ஒன்று சேர்ப்பீர் என்றான்
	பரிப்படை எழுக என்று பகர்ந்தான்
	யானைப் படையும் எழுக என்றான்
	காலாட் படையும் காண்க என்றான்
	நாலாஞ் சாதியார் நாமாட்டோம் என்றனர்
	மூன்றாஞ் சாதியார் முணுமு ணுத்தனர்
	இரண்டாஞ் சாதியார் இருநூறு பேர்கள்
	திரண் டெழுந்தனர் மருண்ட நெஞ்சொடு
	முதன்மைச் சாதியார் மூக்கைப் பிடிக்க
	அரண்மனைச் சோற்றை அருந்துவ தன்றி
	போரே யணுகோமே "நமோ
	நாராயணா" என்று நவின்றுசென் றனரே.
	
	
	இடம்: நகரின் நடுவில் ஓர் பெருவெளி.
	நேரம்: இரவு.
	உறுப்பினர்: வையத்திறல், செம்மறித்திறல், பெருமக்கள்.
	அகவல்
	நாட்டு மக்கட்கு நல்வழி காட்டச்
	சேய்வை யத்திறல், செம்ம றித்திறல்
	சொற்பெருக் காற்றுவர் என்று
	நற்பெரு மக்கள் நண்ணினார் ஆங்கே.
	எண்சீர் விருத்தம்
	மேடையின்மேல் ஏறிநின்றான் மன்னன் மைந்தன்
	விருப்பத்தால் நகரமக்கள் வாழ்க என்றார்
	வாடாத மலர்முகத்தான் வணக்கம் கூறி
	"மாண்புடையீர், திறல்நாட்டு மக்காள், கேளீர்!
	பீடுடைய நம்திறல்நா டதனை நோக்கிப்
	பெருநாட்டான் பெரும்படையைக் கூட்டி வந்தான்
	வாடிடநாம் முற்றுகையும் போட்டு விட்டான்
	மன்னவரின் அதிர்வெடியில் மருந்தே யில்லை.
	பிரமன்முகம் தனில்நான்கு வகையாம் மக்கள்
	பிறந்தாராம். பார்த்தாராம் என்றன் தந்தை.
	பிரமன்முகந் தனிற்பார்ப்பார் பிறந்திட் டாராம்
	பிரமன்தோள் பெற்றதுவாம் மன்னர் தம்மை;
	பிரமனிடை தனிற்பிறந்தார் வாணி கர்கள்;
	பிரமனடி யிற்பிறந்தார் உலகி லுள்ள
	பெருமக்கள். இதுமனுநூல் ஆரியர் சொல்
	பிழைக்கவந்த ஏமாற்றுக் காரர் சூழ்ச்சி.
	அரசன்மகன் உங்களினப் பெண்ணை நத்தல்
	அடுக்காதாம். அதற்கென்னைச் சிறையில் வைத்தான்.
	அரசன்எழிற் கொழுந்தியார் என்சிற் றன்னை
	அகம்பறித்தார் செம்மறியார் அதுவும் குற்றம்
	39
	பெருஞ்சிறையில் மூவருமே அடைக்கப் பட்டோம்
	பெருமக்காள் இதையறிந்தீர். தன்மா னத்தால்
	வருந்துகின்றீர் ஆள்வோர்பால் ஒத்து ழைக்க
	மறுத்துவிட்டீர் வாழ்கநீர்! வாழ்க வாழ்க!
	பெருநாட்டான் படையெடுப்பைத் தகர்க்க வேண்டும்
	பெருமறவர் கூட்டமே வாரீர் என்று
	திருநாடாம் திருநாட்டின் மன்னர் சென்று
	திருமுழங்காற் படியிட்டுக் கெஞ்ச லானார்.
	வரமாட்டோம் எனமறவர் மறுத்து விட்டார்
	வாழ்கநனி வாழ்கஅவர் வாழ்க வாழ்க!
	இருசாதி தான்மீதி மன்னர் கையில்
	இவர்சாதி ஒன்று!மற்றொன் றினாம்தார் கூட்டம்!
	அரண்மனையின் அறைக்குள்ளே வாள்சு ழற்ற
	அட்டியில்லை என்றததோ அரசச் சாதி!
	பிரமனார் திருமுகத்துப் பெருங்கா யங்கள்
	பெண்டாட்டி பிள்ளையுடன் அரண்ம னைக்குள்
	பெருநாட்டான்அருள்பெற்று விபீ? ணன்தான்
	பெற்றபயன் பெறுவோமே எனக்க யிற்றை
	அருணாச லப்பெரும்பு ராணம் சாத்தி
	அவனடியே உய்யும்வழி என்கின் றார்கள்.
	மேற்சாதி யார்நிலைமை இவ்வா றாக
	மேலும்நாம் செயத்தக்க தின்ன தென்று
	சேற்கருங்கண் பொன்னியார்க் கன்ப ரான
	செம்மறியார் என்னருமைச் சிறிய தந்தை
	சாற்றிடுவார் கருத்தோடு கேட்பீர்மு என்று
	தன்னுரையை முடித்தமர்ந்தான் மன்னர் மைந்தன்.
	"மாற்றுயர்ந்த பொன்போன்ற திறல்நாட் டாரே
	வணங்குகின்றேன்" என்றுரைத்து மறிபு கல்வான்:
	"திறல்நாட்டின் மேல்வந்த பெருநாட் டானைச்
	சிதறடிக்க வேண்டுமெனச் செப்பு கின்றீர்.
	பொறுத்திருங்கள்! பெருநாட்டான் வரட்டும் உள்ளே
	போடட்டும் தன்கொடியை! மகிழ்ந்தி டட்டும்
	வெறுக்காதீர் படைமறவர் விளையா டட்டும்
	வெற்றிவிழாக் கொண்டாட்டம் நடந்தே றட்டும்.
	திறல்நாட்டின் நம்மறவர் தமக்கும் இந்தத்
	திட்டத்தை நன்றாகச் சொல்லி வைப்பீர்.
	தனித்தனியே பகைமறவர் தம்மைக் கண்டு
	தாழ்சாதி எனநம்மேல் உயர்ந்தோர் வைத்த
	மனப்பக்கை அவர்மனத்தில் ஏற்ற வேண்டும்;
	மற்றவற்றை யாமுரைப்போம் அவ்வப் போதில்.
	இனத்தோடே இனம்சேரும்! ஆளும் சாதி
	இங்குள்ள ஆளுஞ்சா தியையே சேரும்.
	அனைத்துள்ள கோல்கொண்டார் நூல்கொண் டாரை
	ஆட்கொள்ள வேண்டியவர் நாமே" என்றான்.
	40
	(கூட்டம் முடிந்தது.)
	34
	இடம்: திறல்நாடு, நகர்.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: பெருநாட்டு மன்னன், பெருநாட்டுப் படைகள்,
	திறல்நாட்டு மக்கள்.
	அகவல்
	கோட்டைமேல் வெள்ளைக் கொடி பறந்தது!
	பேட்டையில் பெருநாட்டுப் படைகள் நுழைந்தன.
	பெரும்படை பின்வர ஒருமணித் தேரில்
	பெருநாட்டு மன்னன் திருநகர் புகுங்கால்,
	நேற்றுப் புலித்திறல் சோற்றை உண்ட
	சிறுமதிப் பார்ப்பனர் நிறைநீர்க் குடத்தொடும்
	நறுமலர்த் தாரொடும் நன்றெதிர் கொண்டு,
	"வருக பெருநாட்டு மன்னரே வருக!
	திருமாற் பிறப்பெனும் செம்மலே வருக!
	புலித்திறல் மன்னனால் பட்டது போதும்
	மனுநூல் தன்னை மன்னரே காக்க
	இனிமேல் எங்கள் தனிநலந் தன்னை
	நாடுக நாடுக நன்றே வாழ்க
	சூடுக மாலை!" என்று சூட்டி
	நல்வர வேற்பு நடத்திய அளவில்,
	அரசனும் வணங்கி, "அறம்பிச காமல்
	பெருமை மனுநூல் பிழைப டாமல்
	பார்ப்பனர் நன்மை பழுது படாமல்
	காப்போம்" என்று கழறி முடித்தான்.
	நாற்படை, முழக்கொடு நகர்மேற் சென்றன.
	தேன்கூட்டில் ஈக்கள் செறிந்தன போல
	வானுயர் வீடுதோறும் வாயிலில் மக்கள்
	தலைவைத் திருந்தார் தம்முளம் மறைத்தே
	பெருநாட்டுப் பிறைக்கொடி திறல்நாடு பெற்றது.
	பெருநாட்டு மன்னனும் பெரும்படை மறவரும்
	திறல்நாட் டரண்மனை சேர்ந்தனர் உடனே!
	புலித்திறல் சிறையில் புகுத்தப் பட்டான்.
	பிரமன் தோளில் பிறந்த பெட்டைகள்
	மரியா தையாகப் பெருஞ்சிறை சென்றனர்.
	மருமக னாகும் வையத் திறலை
	விரைவில் தேட விடுத்தான் ஆட்களை!
	பெருநாட் டான்தன் பெரும்படை மறவர்க்கு
	விடுமுறை தந்தான். வேண்டிப் பார்ப்பனர்
	அரண்மனை அரிசியில் விருந்துண் பித்தார்.
	முரசறை வோனை அரசன் அழைத்தே
	"அரசியல் திட்டம் அமைப்ப தற்கும்
	41
	வையத் திறலைஎன் மகளுக் காகத்
	திருமண உறுதி செய்வ தற்கும்
	நாளைக் காலை நாட்டு மக்கள்
	மாளிகை வரும்படி மணிமுர சறைக"
	என்றான். யானை வள்ளுவன்
	நன்றெனப் பணிந்து நடந்தான் ஆங்கே.
	35
	இடம்: திறல்நாட்டு மாளிகை.
	நேரம்: காலை.
	உறுப்பினர்: அனைவரும்.
	அகவல்
	மென்பட்டு மெத்தை விரித்த பெருந்தரை,
	நன்முறை ஓவிய நாற்பு றச்சுவர்,
	கற்றச்சர் கைத்திறம் காட்டும் ஆயிரங்கால்,
	பொற்கட்டில் பன்மணி புதைத்த மேன்மூட்டு,
	வருகெனப் பொற்பாவை வரவேற்கும் முன்வாயில்,
	பெருமக்கள் மகிழ்ந்துபோம் பின்புறப் பெருவாயில்,
	நறுந்தென்றல் வார்க்கும் நாற்சுவர்ச் சன்னல்கள்,
	நிறந்தரு பவழம், நீலம், மாணிக்கம்
	சுடர்விடு முத்துத் தொங்கல்கள் இடையிடை,
	அடைசுவர் சேர அங்கங்குக் கலைப்பொருள்,
	ஆன மாளிகைநடு அடலேறு சுமப்பதோர்
	வானில வெறித்த மணிக்குடை இருக்கையில்
	வென்றபெரு நாட்டான் வீற்றி ருந்தான்.
	அன்னோன் அமைச்சன் அருகினில் இருந்தான்.
	படையின் தலைவனும் பாங்கில் அமர்ந்தான்.
	முரசு முழங்கும் முன்புற வாயிலால்
	வரும்பெரு மக்கள் மலைபுரள் அருவி!
	திறல்நாட்டு மறவரும் செம்மறித் திறலும்
	வையத் திறலும் தம்முரு மாற்றி
	நீறு பூத்த நெருப்பென இருந்தனர்.
	ஆண்டாள் ஒருபுறம் அவள்மகள் ஒருபுறம்
	ஈண்டிழைப் பொன்னி ஒருபுறம் இருந்தனர்.
	தொலைவிலோர் மூலையில் தோன்றா வண்ணம்
	அழகன் இருந்தான் அச்சத் தோடே.
	பழந்திறல் நாட்டினர் பல்லா யிரவர்,
	பெருநாட்டு மறவர் ஒருசில நூற்றவர்
	ஆங்கே கலந்தபடி அமர்ந்தி ருந்தனர்.
	வையத் திறலோன் வந்துவிட் டானா?
	என்றுபன் முறைகேட்டான். இல்லை என்று
	சொன்னார். சொற்பொழிவு தொடங்கினான்:
	"திறல்நாட்டு மக்களே, செப்புதல் கேட்பீர்!
	இத்திறல் நாடோ, என்பகை யான
	மலைநாட் டோடு கலந்து கொள்ள
	இருப்பதால் நான்படை எடுக்க நேர்ந்தது;
	வென்றேன். சிறையில்உம் வேந்தரை அடைத்தேன்.
	திறல்நாடு தனில்என் பிறைக்கொடி ஏற்றினேன்.
	42
	இவ்வா றிருக்க, இனிஇந் நாட்டின்
	ஆட்சிமுறை எவ்வா றமைய வெண்டும்?
	என்பது பற்றி இயம்பு கின்றேன்;
	என்றன் உறவினன், மன்னர் மரபினன்
	ஆன ஒருவனே இந்நாட் டரசன்.
	வரும்அவ் வரசன் பெருநாட் டுக்குப்
	போர்த்துணை நாளும் புரிய வேண்டும்.
	மேலும் அந்த வேந்தன் பார்ப்பனர்
	மறைநூ லுக்கு மதிப்பீய வேண்டும்.
	இத்தனை கருதி இந்நாட்டு மன்னரின்
	மகனுக் கேஎன் மகளைத் தரவும்
	விரும்பினேன். அவனும் விரும்புவ தாக
	அறிந்தேன்; மகிழ்ந்தேன். ஆதலால் இந்தத்
	திறல்நாட்டை யாள்பவன் திறல் நாட்டினனே!
	வையத் திறல்என் மகளை மணப்பதாய்
	இன்றே உறுதி இயம்பினால் நாளையே
	மண முடித்து, மணிமுடி பெறலாம்!
	வையத் திறலோன் வராமை யாலே
	அன்னோன் சார்பில் இந்நாட் டார்கள்
	உறுதி கூறினும் ஒப்புக் கொள்வேன்"
	என்று மன்னன் இயம்பிய அளவில்,
	கூனும் கோலும், குள்ளமும் வெள்ளைத்
	தாடியும் மீசையும், தள்ளா உடலுமாய்
	எழுந்து நின்றான் ஒரு
	கிழவன் அரசனைக் கேட்டான் ஆங்கே.
	இணைக்குறள் ஆசிரியப்பா
	"உங்கள் உறவுதான் ஊராள வேண்டுமோ?
	வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?"
	என்று கிழவன் கேட்டான்.
	"கேட்பீர் கேட்பீர்" என்று
	முன்னுள்ள மக்கள் முழக்கஞ் செய்தனர்!
	"எங்கள் உறவுதான் ஆள ஏற்றவன்
	வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டும்"
	என்றான் வேந்தன்.
	"எங்களில் ஒருவன் ஏன்ஆளக் கூடாது?
	சொல்கமு என்றான் கிழவன்.
	நாடாள்வ தன்று நாலாஞ் சாதி"
	என்றான் மன்னன்.
	"சாதி ஒழிக! சாதி ஒழிக!"
	என்று முழங்கினர் எதிரில் மக்கள்!
	"எங்கள் நாட்டுக் கினிவரும் மன்னன்
	உங்கட்குப் போரில் உதவ வேண்டுமோ?
	பாரோர் நாட்டைநீர் பறிக்க நினைத்தால்
	சீராம் திறல்நாடு சேர வேண்டுமோ?"
	என்று கேட்டான் முதியோன்.
	"நன்று கேட்டீர் நன்று கேட்டீர்"
	என்றனர் மக்கள்.
	"ஆம்ஆம்" என்றே அதிர்த்தான் மன்னன்.
	43
	"பார்ப்பனர் மறையைப் பைந்தமிழ் மக்கள்
	மாய்ப்பது தீதோ? வளர்ப்பது கடனோ?"
	என்றான் முதியோன்.
	"ஆம்" என்று மன்னன் தீமுகம் காட்டினான்.
	"பார்ப்பனர் பொய்மறை பாழ்பட" என்று
	கூப்பாடு போட்டனர் மக்கள்.
	"வையத் திறல்உம் மகளை மணக்கும்
	எண்ணம் அவனுக் கிருந்த தில்லை;
	இருக்கப் போவதும் இல்லை; இதனை
	இளங்கோ சார்பில் யானுரைக் கின்றேன்"
	என்றான் முதியோன்.
	"ஆம்ஆம்" என்றே அனைவரும் கூவினர்!
	சின்ன முகத்துடன் மன்னன் "கிழவரே,
	வையத் திறலை மன்னன் ஒறுத்தது
	பொய்யோ?" என்றான்.
	"மன்னன் தன்னன்" மைத்துனர் மகளை
	மணக்கச் சொன்னான். மறுத்தான் வையன்
	அதனால்
	ஒறுத்தான்" என்றான்.
	"சிறைமீட்டு வருக புலித்திறலை" என்று
	பெருநாட்டு மன்னன் உரைத்தான்.
	திறல்நாட்டு மன்னன் அவ்விடம் சேர்ந்தான்.
	"வையத் திறலைச் சிறையில் வைத்தனை
	மெய்யாக் காரணம் விளம்" பெனக் கேட்க,
	புலித்திறல் புகல்வான்:
	"உன்மகள் தனையும் என்மகன் மறுத்தான்
	என்மைத் துனன்மகள் தன்னையும் மறுத்தான்
	வேலைக் காரி மின்னொளி தன்னை
	மாலை யிட்டு மன்னர் மரபையே
	அழிக்க எண்ணினான்! அடைத்தேன் சிறையில்"
	என்ன,
	பெருநாட் டான், வாள் உருவி
	"புரட்சியோ! புரட்சியோ! கிழவரே,
	உரைப்ப தென்ன" என்று
	மன்னன் கேட்கக்
	கிழவன், "மன்னா கிளத்துதல் கேட்க,
	சாதி யில்லை
	பார்ப்பன வகுப்பும் பார்ப்பன நூற்களு்
	பொய்யே!
	மதம்எனல் தமிழ் வையத்தின் பகை!
	ஆள்வோர் என்றும் அடங்குவோர் என்றும்
	பிறந்தார் என்பது சரடு.
	தனிஒரு மனிதன் தன்விருப் பப்படி
	இனிநாட்டை ஆள்வ தென்ப தில்லை!
	மக்கள் சரிநிகர்!
	எல்லாத் துறையிலும், எவரும் நிகரே
	நெடுநாட்டு மக்களின் படியினர் (பிரதிநிதிகள்)
	குடியரசு நாட்டல்எம் கொள்கை யாகும்"
	என்று கிழவன் இளைஞனாய் நின்றான்.
	44
	மன்னன் வையத் திறலைக் கண்டான்.
	கையால் தன் வாள் காட்டி,
	"என்மகள் �பெருந்திரு� என்னும் மங்கையை
	மணந்துகொள்; இன்றேல் மன்னன் மைத்துனன்
	மகளை மணந்துகொள்! மக்களில் தாழ்ந்த
	மின்னொளி தன்னை விரும்புதல் நீக்குக;
	என்னொளி வாளுக் கிரையா காதே"
	என்றான்.
	"ஏஏ!" என்றனர் இருந்த மக்கள்!
	வையத் திறல்தன் வாளை உருவினான்.
	"படையின் தலைவனே பற்றுக இவனை"
	என்று படைத்தலை வனுக்குக்
	கட்டளை யிட்டான் மன்னன்!
	எட்டிற்று மறித்திறல் இடிக்குரல் எங்குமே.
	பாட்டு
	மக்களின் உரிமைக்குத் தூக்குவீர் வாளை
	மன்னரின் தனியாட்சி வீழ்க - நாட்டு
	மக்களின் உரிமைக்கு...
	(திறல்நாட்டு மறவரின் மக்களின் வாள் சுழலுகின்றன.
	பெருநாட்டுப் படைத்தலைவனும், அவனைச் சார்ந்த
	சில மறவர்களும் எதிர்க்கிறார்கள்.)
	மக்கட் கடலில் மறைக் குமிழிகள்
	மறுப்பவர் மாள்க மாள்க மாள்கவே - நாட்டு
	மக்களின் உரிமைக்கு...
	(எதிர்த்தோர் இறந்துபடுகின்றனர். இரு மன்னரும்
	படைத்தலைவர்களும், ஆளும் இனத்தோரும்
	பிணிக்கப்படுகின்றனர்.)
	தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்!
	சரிநிகர் எல்லாரும் என்றோம்.
	பொய்க்கதை மறையெனல் புரட்டே
	புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே!
	(பிணிக்கப் பெற்றவர் சிறை சேர்க்கப் பெற்றனர்.)
	36
	இடம்: நகர்கள், சிற்றூர்கள்.
	நேரம்: மாலை.
	உறுப்பினர்: முரசறைவோன்.
	அகவல்
	யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து:
	"பூனைக்கண் போலும் பொரிக்கறிக் காக
	ஆளுக் கிரண்டுகத் தரிக்காய் அடைக.
	45
	செங்கை இரண்டளவு சீரகச் சம்பா
	அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்!
	பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
	ஒருகை யளவு பெருகஒவ் வொருவரும்!
	பாகற் புளிக்குழம்பும் பழமிள கின்சாறும்
	ஆகத் தக்கன அடைக எவரும்!
	ஆழாக்குத் தயிர் அடைகாய் ஒவ்வொரு
	வாழை இலைஇவை வழங்குவார் தெருத்தோறும்.
	விருந்தே நாளை விடியலில் அனைவரும்
	அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே!"
	இதுகேட்டுத் தெருத் தோறும் பொதுவில்லம்
	எதுவெனக் கேட்டே ஏகினர்
	அதுவது பெற்றே அடைந்தனர் வீட்டையே.
	37
	இடம்: மின்னொளி வீட்டு முன்வெளி.
	நேரம்: விடியல்.
	உறுப்பினர்: மின்னொளி, ஆண்டாள், விருந்தினர்,
	வையத்திறல்.
	அகவல்
	வீட்டெதிர் ஆண்டாள் மின்னொ ளிக்குத்
	தலைவாரு கின்றாள். புதையல்மின் னொளியே
	மன்னன் மகனைநீ மணந்த பின்னர்
	என்னை மறப்பாயோமு என்றாள் அன்னை.
	"ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க
	வாழை யிலையில் வார்த்தநெய் ஓடையில்,
	மிதக்கும் பல்கறிச் சோறு விழுங்கும்
	மன்னன் மகனை மணக்கவே மாட்டேன்"
	என்றாள் மின்னொளி. அன்னை திடுக்கிட்டு
	"முன்னர் உன்காதல் மொய்த்த தெவன்மேல்?"
	என்று கேட்டாள். ஏந்திழை "அம்மா
	ஏழ்மை கண்ட இடமெல்லாம் காதல்
	தாழ்மையேல் என்உளம் தாவுதல் அன்றி
	உடல்மிசைக் காதல் உற்றிலேன்" என்றாள்.
	"அழகனை உன்உளம் அண்டிற் றோ" என
	அன்னை, மின்னொளி தன்னைக் கேட்டாள்.
	"அழகன் ஏழ்மையை அணுகிய தென்னுளம்
	என்னுடல் அவனுடற் கில்லை" என்றாள்.
	"மின்னொளி என்னுடன் விரைவில் வருக
	அருந்திட வேண்டும் விருந்" தென் றாள்தாய்.
	இருவரும் எழுந்தார்; விருந்துக் கேகினார்.
	வாகை நீழலில் மறித்திறல் பொன்னி
	ஓகையோடும் உண்டனர் விருந்தே!
	அரசின் நீழலில் அழகனும் பிறரும்
	அருந்தினர் இனிய விருந்து மகிழ்ந்தே!
	வேங்கையின் நீழலில் வேறு பலப்பலர்
	46
	தாங்கா மகிழ்ச்சியில் தாம்உண் டிருந்தார்.
	மாவின் நீழலில் வையத் திறலோன்
	பாவை யைஎதிர் பார்த் திருந்தனன்.
	வீட்டினர் யாவரும் விருந்துண்ணு நிலை
	பார்த்து வந்தாள் பாவை மின்னொளி.
	மரத்து நீழலில் வாயார உண்பார்
	சரிநிலை கண்டாள் தையல் மின்னொளி.
	அரசின் நீழலில் அழகனைக் கண்டாள்;
	அழகன் வையனை அணுகுநீ என்றான்.
	அழகன்பால் ஏழ்மை அறிகிலாள் மின்னொளி.
	மாவின் நீழலில் வையனைக் கண்டாள்.
	மன்னன் மகனை வையத் திறலிடம்
	காணு கில்லாள்! கண்ட வையத்திறல்
	அண்டையில் அமர்கென ஆவலில் அழைத்தான்;
	கெண்டை விழியாள் கிட்ட அமர்ந்தாள்.
	"கத்தரிப் பொரியலும், கரும்பாகற் குழம்பும்,
	புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
	மிளகின் சாறும், புளியாத தயிரும்
	அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி
	உனக்கொன் றதிகம்" என் றுரைத்தான் வையன்.
	என்ன என்றாள் மின்னொளி;
	சின்னதோர் முத்தம் தந்தான்.
	அன்னத னோடே அருந்தினாள் விருந்தே.
	38
	இடம்: திறல்நாட்டு அரண்மனை.
	நேரம்: மாலை.
	உறுப்பினர்: அனைவரும்.
	அகவல்
	அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்.
	செம்மறித் திறல் எழுந்து
	கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே.
	எண்சீர் விருத்தம்
	நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்
	நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்
	காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
	நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
	ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே
	உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்.
	கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
	கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே.
	ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம்!
	உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்!
	47
	திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும் கையில்
	செங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந்தோரே!
	பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
	பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப்பார்கள்.
	வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்
	வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்" என்றான்.
	செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்;
	திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.
	செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்
	திறலுக்கும் நடைபெற்ற திருமணம் பாராட்டி
	நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
	நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.
	"செம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்
	திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே" என்றார்.
 
	
	2. அமிழ்து எது?
	ப�றொடை வெண்பா
	தலைவி :
	இதுதான் தைத்திங்கள் எனக்கடல் மேல்வந்த
	புதியஇளங்கதிர், பொன்அத்தான். பொன்!பொன்! பொன்!
	தலைவன் :
	ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுபுசுடர்ப்பொன்மு
	நீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல்,
	உன்மேல் தனதொளியை வீசி உளத்திலெலாம்
	அன்பின் எழுச்சியினை ஆக்கியது. வாழ்ககதிர்!
	காலை மலர்ந்ததுவே கண்ணேநான் சென்றுவயல்
	வேலை தொடங்கி விளைச்சல் அறுத்துவந்தே
	இந்நாளில் இந்தா எனக்கொடுக்கச் செல்கின்றேன்.
	பொன்னே புனலாடி இல்லம் புதுக்கிடுநீ!
	தலைவி :
	செல்வப் பரிதி சிரித்துவந்த தைக்கண்டீர்.
	கொல்லைக் கொடிகள் குலுங்கச் சிரித்ததுபோல்
	காலை மலர்ந்ததையும் கண்டீர்; விரைந்துவயல்
	வேலை தொடங்கி விளைச்சல் அரிந்தஅரிக்
	கட்டடித்துத் தூற்றியொரு கட்டைவண்டி மேலேற்றிப்
	பட்டபெரும் பாட்டின் பயனிந்தா என்பீர்;பின்
	உள்ளம் மகிழ்ந்துங்கள் உழுதோளை நான்தொழுது
	வெள்ளத் தெடுத்து விடிவெள்ளி போலரிசி
	ஆக்கிநல்ல பானையிலே ஆவின் தனிப்பாலைத்
	தேக்கி அதிலிட்டுச் செங்கரும்பின் கட்டியிட்டுத்
	புதிங்களோ தைத்திங்கள்!மு புசெந்தமிழே தாய்மொழியாம்!மு
	புபொங்கலோ பொங்கல்!முஎனப் பொங்கிவரப் புத்துருக்கு
	நெய்யும் பருப்பும் நறும்பொடியும் நேர்கொடுத்து
	மெய்யன்பி னோடு தமிழர் விழாவாழ்த்திப்
	பானை இறக்கிப் பலபேர்க் கிலையிட்டுத்
	தேனைப் பழச்சுளையைச் சேர்த்துப் படைப்பேன்;
	எடுத்துண்டு நீவிர்அதை என்னவென்று சொல்வீர்?
	தலைவன் :
	அடடா!இப் பொங்கல் அமிழ்தமிழ் தென்பேன்நான்.
	தலைவி :
	அப்பொங்கல் தன்னை அமிழ்தென்று சொல்வதுண்டா?
	ஒப்புவரோ பொங்கல் அமிழ்தென் றுரைத்துவிட்டால்?
	தலைவன் :
	ஆமாம்நான் சொல்வேன் அமிழ்துதான் அப்பொங்கல்
	49
	தீமைஎன்ன?...
	தலைவி :
	...தீமைஒன்றும் இல்லைஅத்தான்; நீங்கள்உண்ணும்
	பொங்கலா அத்தான் அமிழ்து? புகலுங்கள்.
	தலைவன் :
	பொங்கல் அமிழ்துதான். பொய்யில்லை; கட்டிக்
	கரும்பும் அமிழ்து. கனிஅமிழ்து. முல்லை
	யரும்பமிழ்து. தேனமிழ்து. அப்பம் அமிழ்து.
	குழந்தை குதலை மொழியமிழ்து. குன்றாப்
	பழந்தமிழும், பாட்டும் அமிழ்து.தமிழ்ப் பண்அமிழ்து.
	திங்கள் அமிழ்து. திகழ்ஆவின் பாலமிழ்தே.
	இங்கெனக்கு நீஅமிழ்து. நானுனக் கெப்படியோ?
	வாய்மை அமிழ்து. மடிசுமந்து பெற்றுவக்கும்
	தாய்மை அமிழ்து. தனிஇன்ப வீடமிழ்து.
	தென்றல் அமிழ்து.நறுஞ் செவ்விள நீரமிழ்து.
	ஒன்றல்ல, எல்லாம் அமிழ்தென் றுரைக்கலாம்.
	தலைவி :
	ஏன்அத்தான்? எல்லாம் அமிழ்தென்றால் அந்தச்சொல்
	ஏன்அத்தான்? ஏதோ அமிழ்தொன் றிருக்கும்.
	தலைவன் :
	உயர்ந்தபொருட் கெல்லாம் உயர்வு குறிக்க
	உயர்ந்தோர் அமிழ்தை உரைப்பார்கள் பெண்ணரசி.
	தலைவி :
	பேர்இருந்தால் பேர்குறிக்கும் அந்தப் பெயர்இருக்கும்
	ஆரிடத்தில் இந்த அளப்பை அளக்கின்றீர்?
	எதுஅமிழ் தத்தான்? எனக்கதைச் சொன்னால்
	புதுநாளில் இன்பநறும் பொங்கலுண்ணு முன்னரே
	நல்ல அமிழ்துதனை நான்கண்ட தாகாதா?
	சொல்லுவீர் அத்தான் அமிழ்தெது? ...
	தலைவன் :
	... மானே,
	புதுநெல் அறுத்துவரப் போம்போது நீயோ
	எதுதான் அமிழ்ததனைச் சொல்வீர் எனக்கேட்டாய்.
	அப்படியே உன்றன் அருட்படி ஆகட்டும்நான்
	செப்புவதை உற்றுக்கேள் தித்திக்கும் தேனே,
	அமிழ்தென்றால் மேல்நின் றமிழும் உணவாம்;
	யுஅமிழ்ருஎன்றும் யுதுருவ்வென்றும் சொல்இரண்டுண் டத்தொடரில்.
	அவ்வளவுதான் இப்போ தேனும் அறிந்தாயா?
	இவ்வளவோ டென்னைநீ விட்டிடுவாய் ஏந்திழையே.
	தலைவி :
	50
	இல்லையத்தான்! மேல்நின் றிரங்கும் உணவென்று
	சொல்லிவிட்டால் போதுமா? ஒன்றுமே தோன்றவில்லை.
	மேலிருந்து தான்விழும் விளாம்பழமும், அ�தமிழ்தா?
	மேலானதாய் இருக்க வேண்டும் அமிழ்து!
	தெரிந்து கொள்ளக் கேட்டேன். தெரிவித்தாலென்ன?
	தலைவன் :
	சரி, என்றன் கேள்விக்குச் சற்றே விடைபுகல்வாய்.
	அவ்வானத் தேஇருந்து அமிழ்ந்து வருவதெது?
	இவ்வுலகுக் கின்பம் பொதுவாக ஈவதெது?
	கண்ணுக் கெதிரில் கடகடென வீழும்,அதை
	எண்ணிப்பார் இன்னதென்று தோன்றும் உனக்கதுவே.
	தலைவி :
	வானத்தி லேயிருந்து வானூர்தி தான்அமிழும்.
	வானூர்தி அ�தா? சிரிப்புவரு கின்றதத்தான்.
	தலைவன் :
	தேனே!என் செல்வமே செப்புகின்றேன் நீகேட்பாய்
	ஆனதமிழ்ச் சான்றோர் அருளியஓர் செய்யுளிது:
	"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
	நாமநீர் வேலி உலகுக் கவனளிபோல்
	மேல்நின்று தான்சுரத்த லான்" என் றிளங்கோ
	தானுரைத்த செய்யுள் தரும்பொருளைக் கண்டுகொள்வாய்.
	தலைவி :
	அச்சோ! மழைதான் மழையேதான் அத்தான்.
	இச்சேதி இப்போது தானத்தான் நானறிந்தேன்.
	தலைவன் :
	தேனான இன்பச் சிலப்பதிகா ரத்தினிலே
	மேல்நின்று தான்சுரத்த லான்என்று விண்டதனால்
	வான்நின்றமிழும் மழைதான் அமிழ்தென்று
	நீநன் றறிந்தாயா நேரிழையே இப்போது?
	தலைவி :
	நன்றாய் மழைதான் அமிழ்தென்று நானுணர்ந்தேன்;
	ஒன்றிருக்க வேறொன்றில் ஓடிற்றென் நெஞ்சம்.
	அருகில் இருக்கும் மழைஅமிழ் தென்று
	தெரியவில்லை. சொல்லத் தெரிந்துகொண்டேன். ஆனால்,
	மழைதான், அமிழ்தென்றால் மக்கள் அதனைப்
	பிழைதான் எனச்சொன்னால் என்னபதில் பேசுவது?
	தலைவன் :
	"வானின் றுலகம் வழங்கி வருதலால்
	தானமிழ்தம் என்றுணரற் பாற்"றென்று சாற்றிய
	51
	வள்ளுவர் பாட்டை வகையாகச் சொல்லிஅதற்
	குள்ள கருத்தைஉரை. அதையும் கேட்பாய்
	அமிழ்தென் றுணரும் அருமை மழைக்கே
	அமையும் எனஉரைத்தார் வள்ளுவரே அல்லவா!
	கண்டவைஎல் லாம்அமிழ்தே என்று கதைபேசிக்
	கொண்டிருப்போர் பேதைமையைக் கண்டேஇவ் வாறுரைத்தார்.
	தலைவி :
	சாவா மருந்தென்று சாற்றுகின்றா ரே,அதென்ன?
	தலைவன் :
	சாவா மருந்து தனியல்ல இவ்வமிழ்தே!
	வான்பெய்து கொண்டிருக்கும் ஆதலினால் மண்ணுலகம்
	தான்சிறக்கும் என்றுகுறள் சாற்றியதைக் கேட்டாயே.
	தலைவி :
	ஐயம்இன்னும் கேட்பேன் அதற்காக நீங்களென்னை
	வையக் கூடாது...
	தலைவன் :
	...மயிலே வைவேனா?
	தலைவி :
	அமிழ்தா? அமுதா? அமிழ்தமா? இன்னும்
	அமுதமா? இங்கிவைகள் அத்தனையும் ஒன்றா?
	தலைவன் :
	அமிழ்தேயுஅம்ரு சாரியையும் ஆனதிரிபும் பெற்று
	அமிழ்தம், அமுதமுதம் என்றாகும் பெண்ணே.
	தலைவி :
	அமிர்தம் என்றா லென்ன...
	தலைவன் :
	...அதுவா?
	அமிர்தக் கதையை அறிவிக்கின் றேன்கேள்நீ:
	தேவர் அசுரரெல்லாம் சண்டையிட்டுச் செத்திடுவார்
	சாவைத் தடுக்கஓர் அம்ருதங் கடைவதென்று
	திட்டமிட்டார், சேடன் கயிறாக மேருமலை
	இட்டமத் தாக்கி இருந்ததிருப் பாற்கடலைச்
	சேர்ந்து கடைந்தார்கள் தேவர் அசுரரெலாம்,
	ஆர்ந்து வெளிப்பட்ட தேஅம்ருத மென்பார்கள்.
	தலைவி :
	அமிழ்துதனி, அம்ருதம் அ�தொன்றா அத்தான்?
	52
	தலைவன் :
	அமிழ்துவே றம்ருதம்வே றல்லவா பெண்ணே?
	தலைவி :
	இரண்டும்சா வைத்தடுப்ப தென்றீர்நீ ரே;பின்
	இரண்டும் தனித்தனி என்றுரைத்த தென்ன?
	தலைவன் :
	இரண்டும்சா வைத்தடுப்ப தென்றாலும் அந்த
	இரண்டுக்கும் வேறுபா டில்லாமல் இல்லை.
	உணவால் உயிர்நிலைக்கும்; ஆகவே பெண்ணே
	உணவுக்கும் எல்லா உயிர்க்கும் ஆதாரம்மழை!
	அத்தேவர் இன்னுயிரும் அவ்வமிழ்தா லேஅமையும்,
	அத்தேவர் அம்ருதத்தின் முன்பு அமிழ்துண்டு.
	பெரிதுல கோடு பிறந்த தமிழ்து.
	கிரேதா யுகத்திற் கிடைத்தது தான்அம்ருதம்.
	தேவர்க்கு மட்டும் திரட்டியதே அம்ருதம்;
	யாவர்க்கும் ஆதிமுதல் எங்கும் அமிழ்துயிர்.
	தலைவி :
	அத்தானே நான்ஓர் அறிஞர் துணைவியன்றோ!
	இத்தனைநாள் நானே இதனை அறியேன்.
	மழையே அமிழ்து; மழையே உலகை
	அழியாது காப்பாற்றும். அப்படி இருக்கையிலே
	ஏனிதனை யாரும் வெளிப்படையாய்ச் சொல்லவில்லை?
	தலைவன் :
	மானேநம் வள்ளுவர்தாம் வாய்விட்டுச் சொன்னாரே?
	தலைவி :
	பின்னால் புலவரிதைப் பேசுவதே இல்லைஅத்தான்.
	தலைவன் :
	பொன்னே புதிய அமிர்தொன்று வந்ததிங்கே!
	பூட்டாத வீட்டில் புதிதாய் நுழைந்தவர்க்கே
	காட்டாச் சலுகையெலாம் காட்டுவார். வீட்டில்
	இருந்தார் இருளில் இருப்பார்கள். வந்த
	விருந்துக்குத் தாமே விடிவிளக்கு வைப்பார்கள்.
	என்றும் அமிழ்துண்டு; - இதன்பெருமை உண்டு.மற்
	றொன்றும் அமிழ்தென்று போட்டியிட் டோடிவந்தால்
	நாட்டார் நினைவிலது நாலுநாள் கூத்தாட
	மாட்டாதா? ஆனாலும் உண்மை மறையாது.
	தலைவி :
	ஆமத்தா்! ஆமத்தான்! ஆனால் மழைஎனும்பேர்
	நாமும் அறிவோம்.நம் நாட்டாரும் தாமறிவார்.
	53
	அந்தப் பெயர்தான் இருக்க அமிழ்தென்ற
	இந்தப் பெயர்ஒன் றெதற்காக வீணாக?
	தலைவன் :
	நன்று நகைமுத்தே, காற்றென்ற பேர்இருக்கத்
	தென்றலென்ற பேர்ஏன்? சிறப்புநிலை காட்டஅன்றோ?
	நீர்,தீ, நிலம்,காற்று, விண்ணென்ற ஐம்பொருளில்
	நீரின் நிலைகேள்: முகிலென்றும் கொண்டலென்றும்
	விண்ணென்றும் கார்என்றும் மேலும் மழைஎன்றும்
	அண்ணாந்து நோக்கும் அமிழ்தமென்றும் மாரியென்றும்
	ஆயிரம்உண் டன்றோ? அவற்றில் அமிழ்தென்னும்
	தூய நிலைகருதித் தோன்றியதே அப்பெயர்.
	முற்றும்கேள்: வெப்பம் முகந்தநீ ரேமுகிலாம்.
	குற்றமறக் கொண்டநீர் கொண்டல். அக்கொண்டலோ
	மேற்போய் இருந்தநிலை விண்வான் விசும்பென்பார்.
	காற்றால் கருமைபெறக் காராகும்; கார்தான்
	மழைக்கும் நிலையில் மழையாம்; மழைதான்
	தழைய அமிழ்உண வாவது தான்அமிழ்து.
	தலைவி :
	வாழ்வாருக் காக வழங்கொழிக்க, அந்தநீர்
	வீழும் நிலையில்அதை மேலோர் அமிழ்தென்றார்
	என்று புகன்றீர், இதிலோர் மனக்குறை:
	என்னவெனில் இவ்வமிழ்தை மேலான தென்றிருந்தேன்.
	இப்போ தமிழ்து மழைதானே என்றவுடன்
	சப்பென்று போயிற்றுத் தையலாள் என்றனுக்கே.
	தலைவன் :
	செப்பிய உன்பேச்சில் சிறப்பில்லை, என்கண்ணே.
	தப்புக் கணக்கிட்டாய் தாங்கும் மழையை.
	அமிழ்தின் பெருமை அடுக்கடுக்காய்ச் சொன்னேன்.
	அமிழ்தே மழைஎன்றேன்; அப்படியும் நீயோ
	மழையின் உயர்வை மதிக்கவில்லை இந்தப்
	பிழையை இளையவரும் செய்யாரே பெண்ணரசி!
	எங்கும் உளதுமழை; என்றும் உளதுமழை.
	தங்கும் உலகுயிரைச் சாவாது காக்கும்மழை.
	அந்த மழைதான் அளிக்குமோர் இன்பத்தைச்
	செந்தமிழால் வள்ளுவரும் நன்றாய்த் தெரிவித்தார்:
	புவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
	வீழ்வார் அளிக்கும் அளிமுஎன்றார்! விள்ளக்கேள்.
	சென்று திரும்பிவந்து சேர்ந்துஅவர் எனக்களிக்கும்
	இன்பந்தான் எவ்வா றிருக்குமென்றால் இவ்வுலகில்
	வாழ்வார்கள் நல்ல மழைபெற்றாற் போலிருக்கும்.
	யாழ்மொழியே! அந்தக் குறளின் கருத்திதுவே.
	தலைவி :
	பாவையரின் உள்ளப் படப்பிடிப்பே தானத்தான்.
	ஆவல்இனி ஒன்றே அதையும் அகற்றுங்கள்:
	54
	இந்த மழைதான் அமிழ்தென்ற எண்ணத்தில்
	எந்தப் புலவர் எழுதியுள்ளார் செய்யுள்?
	தலைவன் :
	சிறந்தஒரு கேள்வியே கேட்டாய், திருவே!
	"உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
	கமிழ்தின் இயன்றன தோள்" என்ற பாட்டில்
	கமழும் கருத்தைநீ காண்பாய்; உயிர்தளிர்க்கத்
	தீண்டினாள் தன்துணைவி, அன்னதற்குக் காரணம்அம்
	மாண்புடையாள் தோளேயாம். அத்தோள் அமிழ்தாம்.
	தளிர்க்கவைப்ப தியாது? மழையன்றோ! அந்தக்
	குளிர்மழையை அன்னார் அமிழ்தென்றார்! கூறும்
	அதனால் அமிழ்தை மழைஎன்றே சொன்ன
	மதியுடையார் சொல்லால் மகிழ்ந்து நலமடைவாய்.
	தலைவி :
	ஐயமே இல்லை. அமிழ்தே மழையத்தான்.
	வைய மழையே அமிழ்தமிழ்து மெய்யாலும்!
	அத்தான் எனது மகிழ்ச்சிக் களவில்லை.
	முத்து மழைபொழிக முத்தமிழர் நாட்டில்!
	அமிழ்து பொழிக அழகு தமிழ்நாட்டில்!
	தமிழ்தான் தழைகவே! பொங்கலோ பாற்பொங்கல்!
	தலைவன் :
	இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி இலகுகவே!
	நன்று தமிழர் நலிவின்றி வாழ்க!
	அமிழ்தே அனையபாற் பொங்கலோ பொங்கல்!
	தமிழ்நாடு வாழ்க தழைத்து.
 
	
	
	
	3. அகத்தியன் விட்ட புதுக்கரடி
	அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்
	புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்!
	ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே"
	என்ற பழமொழி அன்று பிறந்தது!
	பழைய திராவிடம் செழுமை மிக்கது;
	வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது.
	செந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது.
	வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது.
	செய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன.
	ஓவியம் தருநரும் பாவியம் புநரும்
	ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்
	திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்.
	இராத தொன்றில்லை திராவிட நாட்டில்.
	இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.
	சந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின்
	மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ்,
	நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்!
	இயற்றமிழ், இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ்
	முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின்
	நல்லா தரவை நாடுவா னாகிச்
	"செல்வம் முற்பிறப்பிற் செய்தநல் வினைப்பயன்"
	என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான்.
	மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர்.
	ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில்
	அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை
	ஆய்ந்திட, மன்னன் "அகத்தியோய் அகத்தியோய்
	பிறந்த உடலும் பிணைந்த உயிரும்
	இறந்த பின் இல்லா தொழிந்தன
	எதுபின் உயிர்உடல் எய்தும்?" என்றான்.
	"ஆன்மா என்றும் அழியா" தென்று
	மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான்.
	மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்:
	"வேந்த னாக வீற்றிருக் கின்றாய்
	ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்
	செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
	மணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்?
	பணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும்.
	சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்"
	என்னலும், மன்னன் புபின்னொரு நாள்இதைப்
	"கல்க" என்றனன்; போயினன் அகத்தியன்.
	அழல்வெரூஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள்
	பழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ
	56
	நகர் அலைத்து நற்பொருள் பறித்து
	மிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான்.
	ஊர்க்கா வலர்கள் ஓடி மன்னன்பால்
	இன்ன துரைத்தனர். எழுந்தனன் மன்னன்.
	பழித்துறைக் கள்வன் படையும், மன்னனின்
	அழிப்புறு படையும் அழல்வெரூஉக் கோட்டப்
	பாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே
	பழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்!
	மறவர்சூழ் அரச மன்றின் நடுவில்
	பழித்துறை கட்டப் பட்ட கையுடன்
	நின்றான். மன்னன் நிகழ்த்து கின்றான்:
	"ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை? ஏஏ
	கோன்என் படைவலி குறைந்ததோ? உன்றன்
	தோள்வலி பெரிதோ? சொல்லுக சொல்லுக
	ஆள்வலி பெரிதோ? அறைக" என்னலும்,
	பழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்:
	"இந்நாள் உண்டு பின்னால் இலைஎனும்
	வறுமை எமக்கு! வளமை உமக்கோ?
	ஆள்வலி இல்லை ஆயினும் நாளை
	தோள்வலி மறவர் தோன்றுவார்! இந்நாள்
	என்னுயிர் போக்கல் எளிதாம்; உனக்கே
	இன்னுயிர் போக்குவார் உண்டா கின்றார்."
	சினத்தொடு பழித்துறை இவ்வாறு செப்பலும்,
	மன்னன் அவனைச் சிறையினில் வைத்தான்.
	"செல்வமுற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
	சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்"
	இக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால்
	மக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை?
	எதிர்க்க மாட்டார்; தாங்கள் எய்திய
	"சிறுமைமுமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்
	என்று சும்மா இருப்பர் அன்றோ?
	"அகத்தியோய் அகத்தியோய் அனைவ ரிடத்தும்
	புகுத்துக உன்றன் புதிய கொள்கையை"
	என்று மன்னன் இயம்பினான். அகத்தியன்
	அன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான்.
	இப்பிறப்பு முற்பிறப் பிருவினை ஆன்மா
	ஊழ்இவை யனைத்தும் உரைத்த அகத்தியன்
	அரசே இன்னும் அறைவேன் கேட்பாய்:
	"மண்ணவர் மண்ணில் வாழ்வார்; அதுபோல்
	விண்ணவர் விண்ணில் மேவினார் என்றான்.
	அன்னவர் நம்மை அணுகுவார் என்றான்.
	இன்னல் ஒழிப்பார் என்று புளுகினான்!
	57
	விண்ணவர் விருப்புற வேண்டு மானால்
	மண்ணிடை நான்மறை வளர்ப்பாய் என்றான்.
	மந்திரத் தாலே மகிழ்வர் வானவர்"
	என்று பலபல இயம்பிச் சென்றான்.
	ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட்
	டெரிந்தது! சிற்றூர் எரிந்தது! மக்கள்
	தெய்யோ தெய்யோ தெய்யோ என்றே
	அரச னிடத்தில் அலறினார் ஓடி!
	அங்கி ருந்த அகத்தியன் புஅரசே
	தீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம்
	காற்றொரு தெய்வம் கடுவெளி தெய்வம்
	நிலம்ஒரு தெய்வம் நீஇதை உணர்க.
	தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது.
	இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன்.
	மந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்.மு
	என்று கூறி எகினான் அகத்தியன்.
	அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர்
	அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய்
	இருத்தல் கண்டார் இரங்கினார். தீய
	கருத்து நாட்டில் பரவுதல் கண்டு
	கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்?
	ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி
	பகைவனை அன்போடு பார்த்தாள். அவனும்
	அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான்.
	இருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார் .
	அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன்
	இதனை அறிந்தான் அறைவான் ஆங்கே:
	"மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்.
	ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால்
	மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று!
	மணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே
	இயலுதல் வேண்டும்மு என்று கூறினான்.
	அரசன் புஆம்ஆம் ஆம்" என் றொப்பினான்.
	அகத்தியன் அரசனே ஆகி விட்டான்.
	அரசனும் அகத்தியன் அடிமை யானான்.
	தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன.
	பழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன.
	அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்.
 
	
	4. நல்லமுத்துக் கதை
	காட்சி 1
	திருமண முயற்சி
	விரசலூர் வெள்ளையப்பன், மனைவியாகிய
	மண்ணாங்கட்டியிடம் கூறுகிறான்:
	உன்னைத் தானே என்னசெய் கின்றாய்?
	இங்குவா! இதைக்கேள்! இப்படி உட்கார்!
	பைய னுக்கு மணத்தைப் பண்ணிக்
	கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன்
	எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக்
	காண்டோ இருபது ஆகி விட்டது.
	பாண்டியன் தானோ பழைய சோழனோ
	சேரனே இப்படித் தெருவில் வந்தானோ
	என்று பலரும் எண்ணு கின்றனர்.
	அத்தனை அழகும் அத்தனை வாட்டமும்
	உடையவன், திருமணம் முடிக்கா விட்டால்
	நடையோ பிசகி விடவும் கூடும்.
	நாட்டின் நிலையோ நன்றா யில்லை.
	சாதி என்பதும் சாத்திரம் என்பதும்
	தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார்.
	பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப்
	பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள்.
	இளைஞரை அவர்கள் இவ்வாறு கெடுப்பதே
	வளமை யாக வைத்திருக் கின்றனர்.
	இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப்
	பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்
	வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள்.
	என்ன?நான் சொல்வ தெப்படி? ஏன்?உம்?
	மனைவியாகிய மண்ணாங்கட்டி:
	இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி?
	பைய னுக்குப் பத்து வயசு
	தொடங்கியதி லிருந்து சொல்லி வந்தேன்
	காது கேட்டதா? கருத்தில் பட்டதா?
	ஐயரை உடனே அழைக்க வேண்டும்.
	பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும்.
	கிழக்குத் திசையில் கிடைக்குமா பெண்?
	எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்?
	சொத்துள் ளவளா? தோதான இடமா?
	மங்கை சிவப்பா? மாஞ் செவலையா?
	என்று பெண்பார்க்க இங்கி ருந்துநாம்
	புறப்பட வேண்டும்? புரிய வேண்டுமே.
	வெள்ளையப்பன்:
	59
	புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை
	இராகுகா லத்திலா இங்க ழைப்பது?
	ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம்.
	நடந்ததை, இனிமேல் நடக்கப் போவதை,
	நடந்துகொண் டிருப்பதை நன்றாய்ச் சொல்வான்;
	பகைகுறுக் கிடுவதைப் பார்த்துச் சொல்வான்;
	இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான்;
	எல்லாம் சொல்வான் ஏற்படு கின்ற
	பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும்.
	ஒருபொழு துக்கான அரிசி வாங்க
	அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண
	முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும்
	ஏற்பாடு செய்துகொண் டிட்டு வருவோம்.
	காட்சி 2
	மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்
	சொறிபிடித்த கொக்குப் புரோகிதனிடம்,
	வீட்டுக்கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
	இதுதான் ஐயரே என்மகன் சாதகம்;
	திருமணம் விரைவில் செய்ய வேண்டும்.
	எப்போது முடியும்? எங்கே மணமகள்?
	மணமகட் குரிய வாய்ப்பெலாம் எப்படி?
	அயலா? உறவா? அணிமையா? சேய்மையா?
	பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும்.
	மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள்:
	காலையில் வருவதாய்க் கழறி னீரே,
	மாலையில் வந்தீர் என்ன காரணம்?
	சொறிபிடித்த கொக்கு சொல்லுகிறான்:
	தெரியா மல்என் பெரிய பெண்ணைத்
	திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்.
	வட்டிக் கடையில் வயிர நகையைப்
	பெட்டி யோடு தட்டிக் கொண்டதால்
	சிறைக்குப் போனான். செத்தும் தொலைந்தான்.
	கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து
	மொட்டைத் தலையுடன் மூதேவி போலப்
	பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது.
	சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில்
	கப்பல் கப்பலாய்க் கருவா டேற்றும்
	வாச னுக்கு மணம்செய் வித்தேன்.
	மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது
	வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன்
	வாணிகன் கூலியாள் வாசன் என்பது!
	ஒருநாள் வாசன் பெருங்குடி வெறியால்
	நாயைக் கடித்தான்; நாயுங் கடித்தது.
	நஞ்சே றியதால் நாய்போல் குரைத்தே
	60
	அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே
	இரண்டு நாளின்முன் இறந்து போனான்.
	ஓலை வந்தது காலையில்! கையில் --
	கேட்டா லுஞ்சரி விட்டா லுஞ்சரி --
	இரண்டணாக் காசும் இல்லை மெய்யாய்!
	இந்நேர மட்டும் ஏதேதோ நான்
	தில்லு மல்லுகள் செய்து பார்த்தேன்
	யாரும் சிறிதும் ஏமாற வில்லை;
	உங்க ளிடத்தில் ஓடி வந்தேன்.
	சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன்
	முன்நடந் தவைகளை முதலில் சொல்வேன்:
	ஐயா இதுஓர் ஆணின் சாதகம்.
	வெள்ளையப்பன்:
	ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்!
	புரோகிதன்:
	ஆண்டோ இருப தாயிற்றுப் பிள்ளைக்கு.
	வெள்ளையப்பன்:
	மெய்தான் மெய்தான் மேலும் சொல்வீர்!
	புரோகிதன்:
	பையனோ நல்ல பையன், அறிஞன்.
	ஈன்றதாய் தந்தை இருக்கின் றார்கள்.
	உங்களுக் கிவனோ ஒரே பையன்தான்.
	பையன் தந்தை பலசரக்கு விற்பவர்
	தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது.
	மண்ணாங்கட்டி:
	அத்தனையும் சரி அத்தனையும் சரி
	எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?
	புரோகிதன்:
	இந்தவை காசி எட்டுத் தேதிக்கு
	முந்தியே திருமணம் முடிந்திட வேண்டும்.
	மண்ணாங்கட்டி:
	அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?
	புரோகிதன்:
	நடுவில் ஒரேஒரு தடை யிருப்பதால்
	ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.
	வெள்ளையப்பன்:
	ஆடியில் திருமணம் கூடுமா ஐயரே?
	புரோகிதன்:
	ஆடிக் கடைசியில் ஆகும் என்றால்
	ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்.
	61
	வெள்ளையப்பன்:
	அப்படிச் சொல்லுக அதுதானே சரி.
	மண்ணாங்கட்டி:
	மணப்பெண் என்ன பணக்காரி தானா?
	புரோகிதன்:
	மணப்பெண் கொழுத்த பணக்காரன் மகள்
	பெற்றவர் கட்கும் உற்றபெண் ஒருத்திதான்!
	மண முடிந்தபின் மறு மாதத்தில்
	ஈன்றவர் இருவரும் இறந்து போவார்கள்
	பெண்ணின் சொத்துப் பிள்ளைக்கு வந்திடும்.
	மண்ணாங்கட்டி:
	எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்?
	புரோகிதன்:
	வட கிழக்கில் மணப்பெண் கிடைப்பாள்.
	தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில்.
	மண்ணாங்கட்டி:
	அப்படி யானால் அரசலூர் தானா?
	புரோகிதன்:
	இருக்கலாம் இருக்கலாம். ஏன் இருக்காது?
	வெள்ளையப்பன்:
	எப்போது கிளமபலாம் இதைவிட்டு நானே?
	மண்ணாங்கட்டி:
	எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?
	வெள்ளையப்பன்:
	யான்மட்டும் போகவா? இருவரும் போகவா?
	புரோகிதன்:
	நாளைக் காலையில் நாலு மணிக்கு
	நீவிர்மட்டும் போவது நேர்மை.
	நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.
	மண்ணாங்கட்டி:
	இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர்
	என்ன என்றால் -- வேறொன்று மில்லை
	எனக்குக் குழந்தை இன்னும் பிறக்குமா?
	வெள்ளையப்பன்:
	?�க்கும் இனிமேல் உனக்கா பிள்ளை?
	புரோகிதன்:
	இனிமேல் பிள்ளை இல்லை இல்லை.
	62
	மண்ணாங்கட்டி:
	இந்தா நாலணா. எழுந்துபோம் ஐயரே!
	புரோகிதன்:
	ஆயினும் இந்த ஆவணிக்குப் பின்
	பெண் குழந்தை பிறக்கும் உறுதி;
	போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்.
	மண்ணாங்கட்டி:
	சரிஇந் தாரும் ஒருரூ பாய்தான்!
	காட்சி 3
	புதிய தொடர்பு
	அரசலூர் அம்மாக்கண்ணுவிடம் விரசலூர்
	வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
	நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக்
	கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன.
	அரசலூர் வந்ததை அறிவிக் கின்றேன்:
	இரிசன் மகளை என்மக னுக்குக்
	கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான்.
	சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது;
	மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்;
	சரிதான் என்றேன் வரும்வழி தன்னில்
	உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே
	வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
	பெண் குழந்தை பெறவில் லைநீ
	மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக் கின்றான்.
	அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும்
	உன்றன் கணவன் உயிருடன் இருந்தால்
	திருமணம் மகனுக்குச் செய்தி ருப்பார்.
	அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்:
	அவர்இறந் தின்றைக் கைந்தாண் டாயின.
	பதினெட்டு வயது பையனுக் காயின.
	எந்தக் குறையும் எங்களுக் கில்லை.
	நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும்
	புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும்
	இந்த வீடும் இன்னொரு வீடும்
	சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும்
	சொத்தா கத்தான் வைத்துப் போனார்.
	என்ன குறைஎனில், சின்ன வயதில்
	என்னை விட்டுச் சென்றார் அதுதான்!
	பார்ப்பவர் எவரும் பழுது சொல்லாது
	தனியே காலந் தள்ளி வந்தேன்.
	இனிமேல் என்னமோ யாரதை அறிவார்?
	விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
	63
	நடந்தது பற்றி நாவருந் தாதே
	கடந்தது பற்றிக் கண்கலங் காதே
	நான்இன்று மாலை நாலரை மணிக்கெலாம்
	விரசலூர் போக வேண்டும்! என்ன?
	அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்:
	?�?�ம் நான்அதை ஒப்ப மாட்டேன்.
	இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக்
	காலையில் அடுப்பில் காய்ந்த வெந்நீரில்
	ஆர அமர அழகாய் முழுகி
	இட்டலி, மசால்வடை சுட்டதும் சுடச்சுட
	வெண்ணெய் உருக்கும் மிளகாய்ப் பொடியும்
	தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு
	சற்று நேரம் கட்டிலில் துயின்றால்,
	இரவில் கண்விழித்த இளைப்புத் தீரும்.
	திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப்
	போக நினைத்தால் போவது தானே?
	விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
	அன்பு மிக்க அம்மாக் கண்ணே!
	பின்புநான் என்ன பேச முடியும்?
	அப்படியே என் அம்மாக் கண்ணு
	சொற்படி நடப்பேன் சொற்படி நடப்பேன்.
	காட்சி 4
	பெண் எப்படி?
	விரசலூர் வெள்ளையப்பன்
	மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்:
	நல்ல உயரம், நல்ல கட்டுடல்,
	நல்ல பண்பு, நல்ல சிவப்பே.
	எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம்.
	செல்லாக் காசும் செலவில்லை நமக்கே!
	அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும்
	மணமகள் வீட்டில் மணம்வைத் துள்ளார்.
	மண்ணாங்கட்டி:
	சாதியில் ஏதும் தாழ்த்தி இல்லை!
	சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை!
	ஏழு பெண்களில் இவள்தான் தலைச்சனோ?
	எப்படி யாகிலும் இருந்து போகட்டும்.
	பெண்கள் ஏழுபேர் பிறந்தனர். ஆணோ
	பிறக்க வில்லை பெரிய குறைதான்.
	எப்படி யாகிலும் இருந்து போகட்டும்.
	எழுபது காணி நஞ்செய் என்றால்
	பைய னுக்குப் பத்துக் காணிதான்!
	எழுப தாயிரம் இருப்புப் பணமா?
	பையனுக்குப் பதினாயிரம் வரும்.
	64
	எப்படி யாகிலும் இருந்து போகட்டும்!
	மாப்பிள்ளை பார்க்க எப்போது வருவார்?
	வெள்ளையப்பன்:
	காலையில் வருவார் கட்டாய மாக.
	காட்சி 5
	மாப்பிள்ளை பார்த்தல்
	(விரசலூர் வெள்ளையப்பனும் அரசலூர்
	இரிசனும் பேசுகிறார்கள்.)
	வெள்ளையப்பன்:
	வருக வருக இரிசப்ப னாரே!
	அமர்க அமர்க அந்த நாற்காலியில்;
	இருக்கிறேன் நானும் இந்த நாற்காலியில்
	குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர்.
	வீட்டில் அனைவரும் மிகநலந் தானே?
	பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே?
	என்மகன் இந்த எதிர்த்த அறையில்
	படித்தி ருக்கிறான் பார்க்க லாமே.
	இரிசன்:
	பையன் முகத்தைப் பார்க்க வேண்டும்
	பிள்ளையாண் டானொடு பேச வேண்டும்.
	இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன்.
	(நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்.)
	நல்லமுத்து:
	யார்நீர் ஐயா? எங்கு வந்தீர்?
	ஊர்பேர் அறியேன்! உள்வர லாமா?
	அப்பா இல்லையா அவ்வி டத்தில்?
	இரிசன்:
	அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார்.
	எதற்கு வந்தார் அதுதெரி யாதா?
	நல்லமுத்து:
	அரசலூர் சென்றார் அப்பா என்றால்
	அறியேன், ஏனதை அறிய வேண்டும்?
	இரிசன்:
	திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார்;
	அதற்கா கத்தான் அங்கு வந்தார்.
	உன்பெயர் என்ன உரைப்பாய் தம்பி?
	நல்லமுத்து:
	என்பெயர் நல்லமுத் தென்றி சைப்பார்.
	65
	இரிசன்:
	என்ன படிக்கிறாய் இந்நே ரத்தில்?
	நல்லமுத்து:
	காலே அரைக்கால் கம்பரா மாயணம்.
	இரிசன்:
	காலே அரைக்கால் கம்பரா மாயண
	நூலும் உண்டோ? நுவலுக தம்பி!
	நல்லமுத்து:
	சிதம்பர நாதர் திருவரு ளாலே
	அரையே அரைக்கால் அழிந்தது போக
	மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன்
	காலே அரைக்கால் கம்பரா மாயணம்
	அச்சிடப் பட்டதை அறியீ ரோநீர்?
	இரிசன்:
	உனக்குத் திருமணம் உடனே நடத்த
	என்மக ளைத்தான் உன்தந்தை கேட்டார்.
	பெண்ணை உன்தந்தை பேசினார்; பார்த்தார்.
	நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்.
	நல்லமுத்து:
	அப்பா பார்த்தால் அதுவே போதும்.
	இரிசன்:
	மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே?
	நல்லமுத்து:
	அப்பா இணங்கினார்; அதுவே போதும்.
	இரிசன்:
	கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா
	என்பது தானே எனக்கு வேண்டும்.
	நல்லமுத்து:
	பெற்ற தந்தைக்குப் பிடித்தமா, இல்லையா?
	பிடித்தம் என்றால் எனக்கும் பிடித்தமே!
	இரிசன்:
	என்மகள் ஒருமுறை உன்னைப் பார்க்க
	நினைப்ப தாலே நீவர வேண்டும்.
	நல்லமுத்து:
	அப்பாவைப் பார்த்தாள்; அதுவே போதும்.
	அப்பா கருத்துக் கட்டி உண்டா?
	இந்தரா மாயணம் இயம்புவ தென்ன?
	தந்தை சொல்லைத் தட்ட லாகாதே
	என்று தானே இயம்பு கின்றது?
	66
	இரிசன்:
	மகிழ்ச்சி தம்பி. வருகின் றேன்நான்.
	இரிசன் வெள்ளையப்பனிடம்:
	நல்ல முத்து மிகவும் நல்லவன்,
	தகப்ப னாரை மிகவும் மதிப்பவன்.
	அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன்
	பொழுது போயிற்றுப் போய் வருகின்றேன்.
	வெள்ளையப்பன்:
	போகலாம் நாளைக்குப் பொழுது போயிற்றே?
	இரிசன்:
	பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன்.
	காட்சி 6
	அம்மாக்கண்ணுக்கு ஆளானான்
	(அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்)
	வெள்ளையப்பன்:
	உன்றன் நினைவால் ஓடி வந்தேன்.
	இரண்டு நாள்முன் இரிசன் வந்து
	மாப்பிள்ளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான்.
	திரும ணத்தின் தேதி குறிக்க
	வருவது போல வந்தேன் இங்கே.
	மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள்;
	தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்.
	அம்மாக்கண்ணு:
	இன்று நீங்கள் இங்கு வராவிடில்
	என்றன் உயிரே ஏன் இருக்கும்?
	பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக்
	கையால் அள்ளினால் வாயோ கசக்கும்.
	பச்சைத் தண்ணீர் பருகி அறியேன்.
	ஏக்கம் இருக்கையில் தூக்க மாவரும்?
	பூனை உருட்டும் பானையை; அவ்வொலி
	நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன்.
	தெருநாய் குரைக்கும்; வருகின் றாரோ
	என்று நினைப்பேன் ஏமாந்து போவேன்.
	கழுதை கத்தும்; கனைத்தீர் என்று
	எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன்.
	உம்மை எப்போதும் உள்ளத்தில் வைத்ததால்
	அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள்
	சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள்
	வீடும் நீங்கள் மாடும் நீங்கள்.
	திகைப் படைந்து தெருவில் போனால்
	67
	மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள்
	கழுதை நீங்கள் குதிரை நீங்கள்
	எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்.
	இனிமேல் நொடியும் என்னை விட்டுப்
	பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும்.
	வெள்ளையப்பன்:
	அழாதே, தரையில் அம்மாக் கண்ணு
	விழாதே; உன்னை விட்டுப் பிரியேன்.
	துடை கண்ணீரை; புடவையும் நனைந்ததே!
	பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன்
	என்னுயிர் இந்தா! பிடிஉன் னதுதான்!
	அம்மாக் கண்ணு:
	இரிசன் மகளையும் என்மக னுக்கே
	பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும்
	இங்கே யேதான் தங்கினால் என்ன?
	என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ?
	இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே
	மண்ணாங் கட்டிதான் மனைவியோ? இங்குள
	பொன்னாங் கட்டி போயொழிந் தாளோ?
	வெள்ளையப்பன்:
	உறுதி உறுதி! உன்மக னுக்கே
	இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன்.
	என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்;
	மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்!
	பெண்ணா அவள்? ஒருபேய்! மூதேவி!
	இரு!போய் அந்த இரிசனைக் கண்டு
	பேசி விட்டுப் பின்வரு கின்றேன்.
	காட்சி 7
	வெள்ளையப்பன் மாறுபாடு
	வெள்ளையப்பன்:
	இரிசனார் வீட்டில் இருக்கின் றாரா?
	இரிசப்பன்:
	உள்ளே வருவீர்; வெள்ளையப்பரே!
	எப்போது வந்தீர்? இப்போது தானா?
	மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா?
	நல்ல முத்து நலமா? அமர்க.
	வெள்ளையப்பன்:
	மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்;
	பையன் நிலையைப் பகர வந்தேன்.
	திருமணம் வேண்டாம் என்று செப்பினான்.
	இரிசப்பன்:
	68
	வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு.
	வெள்ளை யப்பரே வெந்தது நெஞ்சம்
	பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன்.
	திருமணம் விரைவில் செய்ய எண்ணி
	எல்லாம் செய்தேன்; எவர்க்கும் சொன்னேன்.
	என்னை ஊரார் என்ன நினைப்பார்?
	எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்?
	மணம்வேண் டாமென மறுத்த தெதற்கு?
	அடங்கி நடப்பவன் அல்லவா உம்மகன்?
	நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்?
	சொல்வது தானே நல்லமுத் துக்கு?
	வெள்ளையப்பன்:
	நூறு தடவை கூறிப் பார்த்தேன்
	வேண்டாம் மணமென விளம்பி விட்டான்.
	மனம்புண் பட்டு வந்தே னிங்கே.
	அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத்
	தங்கள் பெண்ணைத் தருவது நல்லது.
	வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம்.
	என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே?
	இரிசப்பன்:
	அம்மாக் கண்ணை அறிவேன் நானும்.
	வெள்ளை யப்பரே வீண்பேச் செதற்கு?
	நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை.
	காட்சி 8
	வலையில் சிக்கினார் கணவர்
	(இரிசப்பன் மண்ணாங்கட்டியிடம்
	வந்து கூறுகிறான்)
	நல்ல முத்து நல்ல பிள்ளை
	நீங்களும் மிகவும் நேர்மை யுடையவர்.
	வெள்ளை யப்பர் மிகவும் தீயவர்.
	அரச லூரில் அம்மாக் கண்ணின்
	வலையிற் சிக்கி வாழு கின்றார்;
	அங்கேயே அவர் தங்கி விட்டார்.
	இன்னும் இங்கே ஏன்வர வில்லை?
	மான மிழந்து வாழு கின்றார்.
	அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
	நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்!
	மணம்வேண் டாமென மறுத்தா னாம்மகன்!
	நேரில் உம்மிடம் நிகழ்த்தவந் தேன்இதை.
	உங்கள் கருத்தை உரைக்க வேண்டும்.
	மண்ணாங்கட்டி:
	கெடுத்தா ளாஎன் குடித்த னத்தை?
	விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்;
	69
	சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை!
	ஏமாந் தாரா என்றன் கணவர்?
	போய்ப்புகுந் தாரா புலியின் வாயில்?
	எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை
	வேண்டா மென்று விளம்ப வில்லையே!
	அவள் மகனுக்கே அவளைக் கட்ட
	இப்படி யெல்லாம் இயம்பினார் போலும்!
	மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர்.
	மகனை இங்கே வரவழைக் கின்றேன்
	சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான்.
	(நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும்
	சொல்லுகிறார்கள்)
	மண்ணாங்கட்டி:
	ஒருமாத மாக உன்றன் தந்தையார்
	அரச லூரில் அம்மாக் கண்ணிடம்
	விளையாடு கின்றார் வீட்டை மறந்தார்,
	அவர்தாம் அப்படி ஆனார். உன்றன்
	திருமணம் பற்றிய சேதி எப்படி?
	இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்;
	உடனே மணத்தை முடிக்க வேண்டும்.
	நல்லமுத்து:
	அப்பா இல்லை; அது முடியாது.
	விவாக முகூர்த்த விளம்ப ரத்தில்
	அப்பா கையெழுத் தமைய வேண்டும்.
	பாத பூசை பண்ணிக் கொள்ள
	அப்பா இல்லை! எப்படி முடியும்?
	திருமண வேளையில் தெருவில் நின்று
	வருபவர் தம்மை வரவேற் பதற்கும்
	அப்பா இல்லை! எப்படி முடியும்?
	புரோகிதர் தம்மைப் போய ழைக்க
	அப்பா இல்லை! எப்படி முடியும்?
	அரசாணிக் கால்நட அம்மி போட
	நலங்கு வைக்க நாலு பேரை
	அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன்
	பூசை போடப் பொங்கல் வைக்க
	அப்பா இல்லை! எப்படி முடியும்?
	இரிசப்பன்:
	அப்பா இல்லையே அதற்கென்ன செய்வது?
	நல்லமுத்து:
	சோற்றை உண்டு சும்மா இருப்பது!
	மண்ணாங்கட்டி:
	அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
	மகளைக் கட்டி வைக்கச் சொல்லிக்
	கெஞ்சி னாரா மே அவரை!
	இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே?
	70
	நல்லமுத்து:
	என்னருந் தந்தை இயம்பிய படியே
	இவரின் மகளை அவன்மணக் கட்டும்.
	புதெருவில் என்ன பெரிய கூச்சல்?
	போய்வரு கின்றேன் பொறுப்பீர் என்னை!மு
	(நல்லமுத்து போனபின் இரிசனும்,
	மண்ணாங்கட்டியும் பேசுகிறார்கள்.)
	மண்ணாங்கட்டி:
	தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன்.
	உணர்ச்சி இல்லா ஊமை என்மகன்.
	அடிமை எண்ணம் உடையவன் என்மகன்.
	தனக்குப் பார்த்த தையலை, அப்பன்
	அயலான் மணக்கச் செயலும் செய்தால்
	துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்!
	இல்லவே இல்லை! என்ன செய்யலாம்?
	சாப்பி டுங்கள்! சற்று நேரத்தில்
	வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை
	சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம்.
	காட்சி 9
	தமிழ் உணர்ச்சி
	(இரிசப்பனும் மண்ணாங்கட்டியும்
	பேசியிருக்கிறார்கள்)
	இரிசப்பன்:
	எங்கே போனான் உங்கள் பிள்ளை?
	மண்ணாங்கட்டி:
	கூச்சல் கேட்பதாய்க் கூறிப் போனான்.
	இரிசப்பன்:
	என்ன கூச்சல்? எங்கே கேட்டது?
	மண்ணாங்கட்டி:
	கேட்டது மெய்தான், கிழக்குப் பாங்கில்
	வாழ்க தமிழே! வீழ்கஇந்தி! என்று.
	இரிசப்பன்:
	எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை
	அந்த இடத்தை அடைந்த தென்ன?
	மண்ணாங்கட்டி:
	என்ன இழவோ யார்கண் டார்கள்?
	(தமிழ்ப் புலவர் அமுதனார் வந்து இரிசனிடத்திலும்
	மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.)
	71
	அமுதனார்:
	உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்?
	மண்ணாங்கட்டி:
	ஆம்ஆம் ஐயா. அன்னவன் எங்கே?
	அமுதனார்:
	யானதைச் சொல்லவே இங்கு வந்தேன்.
	இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத்
	தீய இந்தியைத் திணிக்கின் றார்கள்.
	தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார்.
	நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ?
	போருக்குத் திராவிடர் புறப்பட் டார்கள்.
	திராவிடர் கழகம் சேர்ந்தான் உங்கள்
	நல்ல முத்தும்! நல்லது தானே!
	இரிசப்பன்:
	எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை
	இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்?
	மண்ணாங்கட்டி:
	திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை
	அமைத் திருந்தார் அவனின் தந்தையார்!
	பாரடா நீபோய்ப் பாவை தன்னை
	என்றால் அதையும் ஏற்க வில்லை.
	அந்தப் பெண்ணை அயலொரு வனுக்குத்
	தரும்படி சொன்னார் தந்தை என்றால்,
	அப்பா மனப்படி ஆகுக என்றான்.
	இப்படிப் பட்டவன் என்ன செய்வான்?
	அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார்
	இப்பக் கத்தில் இனிவரார். ஆதலால்
	திரும ணத்தைநீ செய்துகொள் என்றால்,
	ஓலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும்,
	சாலும் கரகம் தனியே வாங்கவும்,
	பாத பூசை பண்ணிக் கொள்ளவும்
	அப்பா வேண்டும்என் றொப்பனை வைக்கிறான்!
	அமுதனார்:
	மடமையில் மூழ்கி மடிகின் றான்அவன்;
	தன்மா னத்தைச் சாகடிக் கின்றான்.
	மரக்கட் டைபோல் வாழ்ந்து வந்தான்;
	இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர்.
	ஆயினும் தமிழ்ப்பற் றவனிடம் இருந்தது.
	திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான்.
	இனிமேல் அவனோர் தனியொரு மறவன்!
	அரசினர் சிறையில் அடைத்தார் அவனை!
	இரிசப்பன்:
	என்ன? என்ன? எப்போது விடுவார்?
	72
	மண்ணாங்கட்டி:
	இருந்தும் பயனிலான்; இருக்கட்டும் சிறையில்.
	அமுதனார்:
	எப்போது வருவான் என்ப தறியோம்
	துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு!
	நான்வரு கின்றேன். நல்ல முத்துவின்
	திருமணம் விரைவில் சிறப்ப டைக!
	காட்சி 10
	திருமணம் என் விருப்பம்
	(இரிசப்பன் வீட்டில், வெள்ளையப்பன்
	வந்து பேசுகிறான்)
	வெள்ளையப்பன்:
	அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள்.
	உம்மகள் தன்னை, அம்மாக் கண்ணின்
	மகனுக் கே,திரு மணம்செய் விப்பீர்.
	என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்!
	இரிசப்பன்:
	அம்மாக் கண்ணின் அடியை நத்தி
	வீணில் வாழும் வெள்ளை யப்பரே,
	உமது சொல்லில் உயர்வே யில்லை
	எமது கொள்கை இப்படி யில்லை.
	நல்லமுத் துக்கே நம்பெண் உரியவள்;
	பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம்.
	(அதே சமயத்தில் நல்லமுத்து வந்து
	இரிசனிடம் இயம்புகின்றான்.)
	நல்லமுத்து:
	உம்மகள் எம்மை உயிரென்று மதித்தாள்
	திருமணம் எனக்கே செய்துவைத் திடுக!
	(வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை
	நோக்கிக் கூறுகின்றான்)
	என்விருப் பத்தை எதிர்க்கவும் துணிந்தாய்.
	உன்விருப் பத்தால் என்ன முடியும்?
	இன்று தொட்டுநீ என்வீட்டு வாயிலின்
	வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம்.
	என்றன் சொத்தில் இம்மியும் அடையாய்.
	நான்சொன் னபடி நடந்து கொண்டால்
	திருமணம் பிறகு செய்து வைப்பேன்.
	அம்மாக் கண்ணின் அழகு மகனே
	இந்நாள் இந்த எழில் மடந்தையை
	மணந்து கொள்ளட்டும்; மறுக்க வேண்டாம்.
	73
	நல்லமுத்து:
	திருமணம் எனது விருப்ப மாகும்.
	ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல்
	திருமணம் என்க. இரிசனார் மகளும்
	என்னை உயிரென எண்ணி விட்டாள்.
	நானும் என்னை நங்கைக் களித்தேன்.
	உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன்.
	உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன்.
	நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள்
	ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி
	ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ!
	ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து
	சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால்
	துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென
	அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார்.
	இழுக்குறும் இந்நிலை இடர வேண்டி
	நானும்என் துணைவியும் நாளும் முயல்வதில்
	சிறைப்படல் காதல் தேனருந் துவதாம்!
	இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம்.
	(வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்)
	வெள்ளை யப்பரே வெளியில் போவீர்!
	என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக்
	காதல் திருமணம் காண்பார். நீவிரோ
	அம்மாக் கண்ணொடும் அழகு மகனொடும்
	இம்மா நிலத்தில் இன்புற் றிருங்கள்.
	(நல்லமுத்து தன் திருமணத்தின்பின் துணைவியுடன்
	இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகிறான்.)
	நல்லமுத்து:
	வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
	இந்தி ஒழிக! இந்தி ஒழிக!
	(சென்று கொண்டிருக்கையில் நல்லமுத்துவின்
	தாய் அவர்களைத் தொடர்கிறாள்)
	மண்ணாங்கட்டி:
	இன்பத் தமிழுக் கின்னல் விளைக்கையில்
	கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்!
	உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன்.
	இந்தி வீழ்க! இந்தி வீழ்க!
	திராவிட நாடு வாழிய!
	அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே!
	 
	
	
	5. ஏற்றப் 
	பாட்டு
	முற்பகல்
	ஓங்கு கதிர் வாவா - நீ
	[ஒன் றுடனே] வாழி!
	மாங் கனியும் நீதான் - அந்த
	வானம் என்னும் தோப்பில்!
	நீங்கும் பனி என்றே - இங்கு
	நீ சிரித்து வந்தாய்!
	நாங்கள் மறப் போமோ - நீ
	[நாலு டனே] வாழி!
	ஐந் துடனே வாழி - நீ
	அள்ளி வைத்த தங்கம்! 5
	முந்தி யயுக ருக்கல்ரு - எந்த
	மூலை யிலும் இல்லை!
	சந்து பொந்தில் எங்கும் - உன்
	தங்க வெய்யில் கண்டோம்.
	இந்த நன்மை செய்தாய் - நீ
	[எட்டு டனே] வாழி!
	திராவிட நாட்டு வாழ்த்து
	இன்பம் உள்ள நாடு - தம்பி
	இத்தி ராவிடந் தான்
	உன்னி வாழ்த்து வோமே - தம்பி
	[ஒருப துடன்] வாழி! 10
	திராவிட நாட்டின் சிறப்பு
	நன்மை யுள்ள நாடு - தம்பி
	நாவலந் தீ வுக்குள்,
	தென்னை வளம் சேரும் - நல்ல
	தெற்கு வள நாடு.
	கன்னி முதல் வங்கம் - இரு
	கடல் கிழக்கு மேற்கு,
	சின்ன நல்ல தம்பி - நம்
	திராவி டநன் னாடு!
	முன்ன ரசர் நாடு - நல்ல
	மூன்ற ரசர் நாடு! 15
	மன்னர் வில்எ டுத்தால் - பனி
	வட மலைந டுங்கும்.
	பாண்டி யன்பேர் சொன்னால் - இந்தப்
	75
	பார் நடுங்கும் தம்பி.
	ஆண்டி ருந்த சேரன் - அவன்
	ஆரி யரை வென்றான்.
	மாண்ட துண்டு சோழன் - அவன்
	மாநி லத்தைக் காத்தான்.
	மாண்டு விட்டால் என்ன? - அவன்
	வழி வந்தவர் நாமே! 20
	[இருப துடன் ஒன்றே] - வளம்
	எக்க ளிக்கும் நாட்டில்
	எரு தடிப்ப தாலே - தம்பி
	என்ன பயன் என்று
	பொருந்த யானை கட்டி - நெல்
	போர் அடித்தல் உண்டு.
	கரும்பு தரும் சாறோ - தம்பி
	காவி ரியின் ஆறு!
	முப்ப ழமும் தேனும் - நல்ல
	முந்தி ரிப்ப ருப்பும் 25
	எப்பொ ழுதும் காணும் - தம்பி
	[இருப துடன் ஆறு]
	கப்பல் கொண்டு போகும் - இங்கு
	காணும் சரக் கெல்லாம்.
	சிப்ப மாகச் சாயும் - பல
	சீமைச் சரக் கெல்லாம்.
	கெட்டி முத்துச் சாயும் - நம்
	கீழ்க் கடலில் தம்பி.
	முட்டி லாத நாடு - தம்பி
	[முப்ப துடன்] வாழி! 30
	வெட்டும் இட மெல்லாம் - நாம்
	வேண்டிய பொன் கிட்டும்.
	எட்டுத் திசை பாடும் - நம்
	இன்பத் திரு நாட்டை!
	நாக ரிக நாடு - நம்
	நல்ல பெரு நாடு!
	தோகை மயில் ஆடும் - பூந்
	தோட்டங் களில் எல்லாம்.
	வேக வைக்கும் கோடை - அதை
	விழுந்த விக்கும் தென்றல். 35
	வாழ் கறவை மாடு - தம்பி
	76
	மாம லையின் ஈடு!
	சந்த னத்துச் சோலை - அதைச்
	சார்ந்து நிற்கும் குன்றம்.
	அந்தப் யுபொதி கைருபோல் - தம்பி
	ஆருங் கண்ட தில்லை.
	சிந் தருவி உண்டு - தம்பி
	தெங்கி ளநீர் போலே!
	நந்து புனல் ஆறு - தம்பி
	[நாற்ப துடன்] வாழி! 40
	காவிரி நல் வைகை - பல
	கண் கவரும் பொய்கை,
	பூ விரியும் சோலை - நல்ல
	பொன் கொழிக்கும் நன்செய்,
	யாவும் உண்டு கண்டாய் - தம்பி
	இத்தி ராவி டத்தில்.
	தேவை எல்லாம் சாயும் - நம்
	தெற்கு வள நாட்டில்.
	திராவிடர் கலை ஒழுக்கம்
	குற்ற மற்ற கொள்கை - தம்பி
	கொண்ட திந்த நாடு! 45
	கற்ற வருக் கெல்லாம் - தம்பி
	கல்வி தந்த நாடு.
	வெற்றி மற வர்கள் - தம்பி
	வேல் மறவர் நாடு.
	மற்ற வரும் வாழத் - தம்பி
	வழி வகுத்த நாடு.
	ஈர டியும் தந்தான் - தம்பி
	இங்கு வள்ளு வன்தான்
	ஆரும் அறம கண்டோம் - தம்பி
	ஐம்ப துடன் வாழி! 50
	சீரு டைய நாடு - தம்பி
	திராவி டநன் னாடு.
	பேரு டைய நாடு - தம்பி
	பெருந் திராவி டந்தான்.
	ஓர் கடவுள் உண்டு - தம்பி
	உண்மை கண்ட நாட்டில்.
	பேரும் அதற் கில்லை - தம்பி
	பெண்டும் அதற் கில்லை.
	தேரும் அதற் கில்லை - தம்பி
	77
	சேயும் அதற் கில்லை. 55
	ஆரும் அதன் மக்கள் - அது
	அத்த னைக்கும் வித்து!
	உள்ள தொரு தெய்வம் - அதற்
	குருவ மில்லை தம்பி.
	அள்ளி வைத்த ஆப்பி* - தம்பி
	அதிற் கடவுள் இல்லை.
	* ஆப்பி - பசுவின் சாணம்
	குள்ள மில்லை தெய்வம் - அது
	கோயில் களில் இல்லை.
	தெள்ளு பொடி* பூசும் - தம்பி
	சிவன் கடவு ளல்ல. 60
	*தெள்ளுபொடி - திருநீறு
	[அறுப துடன் ஒன்று] - தம்பி
	அரி கடவுள் அல்ல.
	அறுமு கனும் அல்ல - தம்பி
	ஐங்கை யனும் அல்ல.
	அறு சமயம் சொல்லும் - தம்பி
	அது கடவுள் அல்ல.
	பிற மதத்தில் இல்லை - அந்தப்
	பெரிய பொருள் தம்பி.
	திராவி டர்கள் முன்பே - தம்பி
	தெரிந் துணர்ந்த உண்மை. 65
	ஒரு மதமும் வேண்டாம் - தம்பி
	உண்மை யுடை யார்க்கே.
	பெரு மதங்கள் என்னும் - அந்தப்
	பேய் பிடிக்க வேண்டாம்.
	திருட்டுக் குரு மாரின் - கெட்ட
	செயலை ஒப்ப வேண்டாம்.
	காணிக் கைகள் கொட்டி - நீ
	கண் கலங்க வேண்டாம்!
	ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி
	[எழுபதுடன்] வாழி! 70
	தோணி யினில் ஏற்றி - நல்ல
	சொர்க்கம் சேர்க்க மாட்டார்.
	நாண மற்ற பேச்சை - நீ
	நம்ப வேண்டாம் தம்பி.
	சாதி யில்லை தம்பி - மக்கள்
	தாழ் வுயர்வும் இல்லை.
	78
	தீத கற்ற வந்த - நம்
	திருக்கு றளைப் பாராய்.
	நீதி பொது தம்பி - இந்த
	நீணி லத்தில் யார்க்கும். 75
	மாத ருக்கும் நீதி - ஆண்
	மக்க ளுக்கும் ஒன்றே.
	பச்சை விளக் காகும் - உன்
	பகுத் தறிவு தம்பி.
	பச்சை விளக் காலே - நல்ல
	பாதை பிடி தம்பி!
	அச்ச மில்லை தம்பி - நல்ல
	அறம் இருக்கும் போது!
	எச்ச ரிக்கை கண்டாய் - தம்பி
	[எண்ப துடன்] வாழி! 80
	வள்ளு வரின் நூலே - நல்ல
	வழி யளிக்கும் தம்பி.
	குள்ளர் வழிச் சென்று - நீ
	குழியில் விழ வேண்டாம்.
	உள்ள இனத் தார்கள் - உளம்
	ஒன்று பட வேண்டும்.
	தள்ளுக யுபொ றாமைரு - ஒரு
	தாய் வயிற்று மக்கள்.
	நீக்குக பே ராசை - தம்பி
	நிகர் எவரும் ஆவார். 85
	போக்கு சினம் தீச்சொல் - நீ
	பொன் அறத்தை வாழ்த்து.
	சேர்க்கும் அறம் உன்னை - ஒரு
	தீங்கும் அற்ற வாழ்வில்!
	ஊர்க் குழைக்க வேண்டும் - நீ
	உண்மை யுடன் தம்பி.
	நாட்டுக் குழை தம்பி - இந்த
	நானி லத்தை எண்ணி.
	வீட்டுக் குழை தம்பி - இங்கு
	மீதிப் பெயர் எண்ணி! 90
	தோட்டம் பொது தம்பி - இந்தச்
	சீமை பொது தம்பி,
	தேட்டம் பொது தம்பி - உணர்
	[தொண்ணூ றோடி ரண்டே.]
	கண் அடித் தழைக்கும் - ஒரு
	79
	கட் டழகி தன்னை,
	எண்ணம் ஒத் திருந்தால் - நீ
	ஏற்றுக் கொள்ள வேண்டும்.
	பண்ணி வைப்ப தாக - வரும்
	பார்ப்பு* மணம் வேண்டாம். 95
	* பார்ப்பு - பார்ப்பனன்
	கண்ம ணியும் நீயும் - நல்ல
	காதல் மணம் கொள்வீர்.
	திராவி டத்தை மீட்பீர் - நம்
	செந் தமிழை மீட்பீர்.
	திராவி டர்கள் ஒன்றாய்த் - தம்பி
	சேர்ந் துழைக்க வேண்டும்.
	திராவி டத்தில் மாற்றார் - தமைச்
	சேர விட வேண்டாம்.
	ஒரே உறுதி கொள்வாய் - தம்பி
	[ஒருநூ றுடன்] வாழி! 100
	பிற்பகல்
	மாலை
	உச்சிக் குடை சாய்ந்தான் - கதிர்
	[ஒன்று டனே] வாழி!
	மச்சு வேய்ந்தி ருந்தான் - அந்த
	மாற் றுயர்ந்த பொன்னன்,
	மெச்சு தடி பெண்ணே - அந்த
	வெய்யி லையும் வையம்.
	வைச்ச புள்ளி மாறான் - அவன்
	மாலை மாற்றப் போவான்.
	ஒழுக்கம்
	நல்லொ ழுக்கம் ஒன்றே - பெண்ணே
	நல்ல நிலை சேர்க்கும். 5
	புல் ஒழுக்கம் தீமை - பெண்ணே
	பொய் உரைத்தல் தீமை!
	இல்ல றமே பெண்ணே - இங்கு
	நல்ல றமென் பார்கள்.
	கல்வி யுடை யோரே - பெண்ணே
	கண்ணு டைய ராவார்.
	நன்றி மற வாதே - பெண்ணே
	நற் பொறுமை வேண்டும்.
	இன்சொல் இனி தாகும் - பெண்ணே
	80
	இன்னல் செய்ய வேண்டாம். 10
	உன்ன ருமை நாட்டின் - பெண்ணே
	உண்மை நிலை காண்பாய்.
	இந்நி லத்தின் தொண்டில் - நீ
	ஈடு பட வேண்டும்.
	[பத்து டனே மூன்று] - நீ
	பகுத் தறிவைப் போற்று!
	நத்தி யிரு பெண்ணே - நீ
	நல்ல வரை என்றும்!
	சொத்து வரும் என்று - நீ
	தோது தவ ராதே. 15
	முத்து வரும் என்று - நீ
	முறை தவற வேண்டாம்.
	கனியத் தமிழ் பாடு - பெண்ணே
	கச்சே ரிசெய் யாதே.
	சினிமா வினிற் சேர்ந்து - நீ
	தீமை யடை யாதே!
	தனித்து வரும் போது - கெட்ட
	தறுதலை கண் வைத்தால்,
	இனிக்க நலம் கூறு - பெண்ணே
	இல்லா விடில் தாக்கு. 20
	[இருப துடன் ஒன்றே] - பெண்ணே
	இத்தி ராவி டத்தில்
	அரிசி மட்டும் இல்லை - பெண்ணே
	ஆட்சி மட்டும் உண்டு.
	இரிசன் மகன் முத்தை - பெண்ணே
	யுஇந்தி படிரு யென்றான்.
	வரிசை கெட்ட மூளி - அவன்
	வைத்த துதான் சட்டம்!
	[இருப துடன் ஐந்தே] - நம்
	இனிய தமிழ்த் தாயைக் 25
	கருவ றுத்துப் போடும் - ஒரு
	கத்தி யடி இந்தி.
	அரிய செயல் ஒன்று - பெண்ணே
	ஆளு பவர் செய்தார்.
	ஒருவ ருக்கும் கள்ளைப் - பெண்ணே
	ஒழிக்கச் சட்டம் செய்தார்.
	கள்ளை விட்ட பேர்க்குப் - பெண்ணே
	கைப் பணமும் மீதி.
	81
	முள் விலக்கி னார்கள் - பெண்ணே
	[முப்ப துடன்] வாழி! 30
	கள்ளை விட்டுக் கையில் - பெண்ணே
	காசு மீத்தச் செய்தார்.
	கள்ளக் கடை போட்டார் - அதைக்
	கழற்ற வழி செய்தார்.
	ஆள வந்தார் உண்டு - பெண்ணே
	ஐயோ பெரும் மண்டு.
	நாளும் கையில் மட்டும் - பெண்ணே
	நல்ல வரு மானம்!
	ஆளுக் கென்ன பஞ்சம் - பெண்ணே
	அடி மடியில் லஞ்சம்! 35
	தோளி லேமி டுக்காம் - அவர்
	தொழுவ தோவ டக்காம்!
	கெண்டை விழி யாளே - அடி
	கிள்ளை மொழி யாளே,
	கொண்டை யிலே பூவும் - உன்
	கோணை நெடு வாக்கும்,
	தண்டை யிலே பாட்டும் - உன்
	தாழ் அடியில் கூத்தும்,
	கண்ட வுடன் காதல் - நான்
	கொண்டே னேஉன் மீதில். 40
	[நாற்ப துடன் ஒன்று] - பெண்ணே
	நான் உனக்கு மாமன்.
	நேற்று வந்து போனாய் - அடி
	நீல மயில் போலே.
	மாற்று யர்ந்த பொன்னே - அடி
	மாணிக் கமே கேளாய்,
	சோற்றை மறந் தேனே - அடி
	தூக்க மில்லை மானே.
	உன் நினைப்புத் தானே - அடி
	ஊற்றெ டுத்த தேனே! 45
	என்னைக் கொல்லு தேடி - அடி
	ஏதுக் கிந்த மோடி?
	சின்ன வய தாளே - அடி
	சிரித்த முகத் தாளே
	அன்ன நடை யாளே நல்ல
	அச்ச இடை யாளே
	துள்ளு வதென் ஆசை - அடி
	82
	துடித்த தடி மீசை.
	அள்ளு வதென் காதல் - அடி
	[ஐம்ப துடன்] வாழி! 50
	தள்ளத் தகு மோடி - நான்
	தாய்க்குத் தலைப் பிள்ளை.
	நொள்ளை யல்ல பெண்ணே - நான்
	நொண்டி யல்ல பெண்ணே.
	வருத்தம் இல்லை பெண்ணே - என்
	மாமிக் கும்என் மேலே
	கருத்தும் உண்டு மாமன் - என்னைக்
	கட்டிக் கொள்ளச் சொல்வான்.
	சிரிப்பு மலர் வாயால் - அடி
	தெரிவி ஒரு பேச்சே, 55
	கருத்தை உரை கொஞ்சம் - பெண்ணே
	கல்லடி உன் நெஞ்சம்.
	பார் இரண்டு சிட்டு - பெண்ணே
	பழகும் ஒன்று பட்டு
	யார் தடுக்கக் கூடும்? - பெண்ணே
	[ஐம்ப துடன் எட்டு]
	பீர்க்க மலர் பூக்கும் - அடி
	பின் பொழுதும் கண்டாய்
	ஆர்க்கு தடி வண்டும் - பெண்ணே
	[அறுபதுடன்] வாழி! 60
	விரிந்த தடி முல்லை - அடி
	வீசி யது தென்றல்.
	சரிந்த தடி பெண்ணே - மலர்
	தங்கப் பொடி எங்கும்.
	எரிந்த தடி மேனி - பெண்ணே
	இனிப் பொறுக்க மாட்டேன்.
	புரிந்த னைஇந் நேரம் - அடி
	பொல்லா தஒட் டாரம்.
	பூட்டி வைத்த வீட்டின் - அடி
	புது விளக்கும் நீயே. 65
	மாட்டி வைத்த கூட்டில் - அடி
	மணிக் கிளியும் நீயே.
	போட்டு வைத்த சம்பா - இனிப்
	பொங்கி டும்உன் னாலே.
	கூட்டி வைத்த வீட்டின் - நல்ல
	குடும்ப விளக் காவாய்.
	83
	கூண்டு வண்டி கட்டி - நாம்
	கூட லூர்அ டைந்தால்
	பாண்டி யன்கு டும்பம் - என்று
	பார்த்து மகிழ் வார்கள். 70
	தாண்டு நடை போட்டு - நாம்
	தகத கென்று போனால்
	மாண்ட நெடுஞ் சோழன் - அவன்
	வளர் குடும்பம் என்பார்.
	தையல், என்றன் வீட்டில் - நீ
	சமையல் செய்யும் போதுன்
	கையழகு பார்த்து - நான்
	களித்தி டுவேன் பெண்ணே.
	கையில் விளக் கேந்தி - நீ
	கடைசி அறை போவாய் 75
	பொய்யல் லவே பெண்ணே - மிகப்
	பூரிக்கும் என் மேனி.
	[எழுப துடன் ஏழு] - பெண்ணே
	இளமை மாறிப் போகும்
	அழகு மாறிப் போகும் - நீ
	அறிந்து நட பெண்ணே.
	குழந்தை குட்டி பெற்று - நாம்
	குறை தவிர்க்க வேண்டும்.
	பிழிந்த பழச் சாறே - அடி
	பேச்சும் உண்டோ வேறே. 80
	தங்கக் கதிர் மேற்கில் - மெல்லத்
	தவழ்ந்த தடி பெண்ணே.
	மங்கிற் றடி வெய்யில் - அதோ
	மகிழ்ந்த தடி அல்லி.
	தங்கும் தாம ரைப்பூ - மானே
	தளர்ந்த தடி மேனி.
	பொங்கிற் றடி காதல் - அடி
	பூவை யேஉன் மீதில்!
	[எண்ப துடன் ஐந்தே] - பெண்ணே
	எருது களின் கூட்டம் 85
	கண் மகிழ்ந்து பெண்ணே - அவை
	கழனி விட்டுப் போகும்.
	பெண் மயிலே என்னை - நீ
	பெருமை படச் செய்வாய்.
	உண்மை யிலே நானே - உன்
	84
	ஊழி யம்செய் வேனே.
	பட்ட தடி உன்கை - பெண்ணே
	பலித்த தடி வாழ்வு.
	தொட்ட துது லங்கும் - இனித்
	[தொண்ணூ றுடன்] வாழ்க! 90
	இட்டது நீ சட்டம் - என்
	இன்பப் பெரு மாட்டி.
	விட்டுப் பிரி யாதே - எந்த
	வேளை யிலும் மாதே.
	ஆறு தலைச் செய்வாய் - என்
	அண்டை யிலி ருந்தே.
	மாறி டுமோ கண்ணே - நம்
	வாழ்க் கையிலே எண்ணம்?
	மாறும் படிச் செய்வார் - இவ்
	வைய கத்தில் இல்லை. 95
	ஊறு தடி அன்பும் - பெண்ணே
	ஓங் கிடுதே இன்பம்.
	தேக்கி யது நீலம் - அந்தச்
	செங்க திரின் மேலே.
	பூக்கும் மண முல்லை - இனிப்
	போகு மடி மாலை.
	வாய்க்க விளக் கேற்றி - நகர்
	மாத ரும்ம கிழ்ந்தார்.
	நோக்கி யது வையம் - பெண்ணே
	[நூறு டனே] வாழி! 100
	 
	
	
	6. 
	திராவிடர் திருப்பாடல்
	காலைப் பத்து
	வெண்டளையான் வந்த தரவிணைக்
	கொச்சகக் கலிப்பா
	கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
	விழித்தான்; எழுந்தான். விரிகதிரோன் வாழி!
	அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
	மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
	விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்?
	அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
	ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
	வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ! 1
	எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
	முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
	அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்.
	எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
	பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே
	ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
	அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
	எழில்மடவீர், காளையரே இன்னேநீர் வாரீரோ! 2
	காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
	தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ?
	தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார்.
	தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார்.
	சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தை!
	போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
	வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
	போக்க மடவீரே, காளையரே வாரீரோ! 3
	தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
	செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
	தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
	இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
	பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
	எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே
	வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய
	மங்கையீர், காளையீர் வாரீரோ வாரீரோ! 4
	தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
	ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
	ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
	சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
	நேர்மலிந்தார்! பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார்
	86
	பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை
	வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
	கார்குழலீர், காளையரே வாரீரோ வாரீரோ! 5
	செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ
	மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
	பஞ்சணை விட்டெழுந்து பாரீர் திராவிடத்தை
	நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
	வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே!
	நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ?
	அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
	கொஞ்சு குயில்களே, காளையரே வாரீரோ! 6
	கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
	நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்
	தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
	சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்
	வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
	மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
	தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
	பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 7
	மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
	துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
	முன்னால் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
	"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
	பண்பும் பயனும் அது" என்னும் நன்னாட்டில்
	சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும்,
	இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
	கன்னல்மொழி மங்கையீர், காளையரே வாரீரோ! 8
	நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
	ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
	கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
	ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
	தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
	போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி
	மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
	வாலிழையீர், காளையரே வாரீரோ வாரீரோ! 9
	அருவி, மலை,மரங்கள் அத்தனையும் பொன்னின்
	மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
	விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
	அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார்
	ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்
	திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
	உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
	வரைத்தோளீர், காளையரே வாரீரோ வாரீரோ! 10
	87
	விடுதலைப் பாட்டு
	மீள்வது நோக்கம் - இந்த
	மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
	மாள்வது நோக்கம் - இதை
	வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
	ஆள்வது நோக்கம் - எங்கள்
	அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால்
	நீள்வது காணோம் - இதை
	நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! 1
	மீள்வது நோக்கம்...
	கனவொன்று கண்டார் - தங்கள்
	கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ?
	இனநலம் காண்பார் - எனில்
	இங்கென்ன வேலை அடக்குக வாலை!
	தினவுண்டு தோளில் - வரத்
	திறல்மிக உண்டெனில் வந்து பார்க்கட்டும்!
	மனநோய் அடைந்தார் - அந்த
	வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! 2
	கனவொன்று கண்டார்...
	திராவிடர் நாங்கள் - இத்தி
	ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
	ஒரே இனத்தார்கள் - எமக்
	கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே!
	சரேலென ஓர்சொல் - இங்குத்
	தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம்.
	வராதவர் வந்தார் - இங்கு
	வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்! 3
	திராவிடர் நாங்கள்...
	இராப் பத்து
	வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
	கொச்சகக் கலிப்பா
	திருவிளக் கேற்றி இரவு சிறக்க
	வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்!
	அருகு மடவார் அடைகாய் தரவும்
	பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித்
	தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்!
	பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள்
	திருகு வடநாட்டார் கையினிற் சிக்கி
	உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1
	ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின்
	சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்
	88
	தோற்றும் இரவும் சுடர்விளக்கும்! இல்லத்தில்
	காற்று நுகர்ந்திடுவீர்; காது கொடுத்தேயாம்
	சாற்றுதல் கேளீர்! தமிழை வடநாட்டார்
	மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம்
	மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென
	வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2
	பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர்
	சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்!
	தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள்
	நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி
	வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே
	அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி
	இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்
	உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3
	தீயில் நிலநீரில் காற்றில் செழுவானில்
	ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக்
	கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற
	தாயில் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்!
	வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி
	தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்! அறப்பயனே
	வாயிற் பருகுவோம். நம்கொள்கைப் பற்றறுக்க
	நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4
	ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்!
	வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்!
	இழுக்கும் தருமதங்கள் யாவும் விளக்கிக்
	கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத்
	தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற்
	பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை
	அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி
	புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5
	எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும்
	முட்டித் ததும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே
	எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும்
	பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும்
	குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும்
	மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம்
	கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில்
	கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6
	தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்,மாட்டு
	மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமல்லோம்!
	முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக
	இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்!
	வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும்
	சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க
	89
	இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ?
	கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7
	புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர்
	தலையெடுத்தார் இன்பத் திராவிடதின் தக்க
	கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து
	நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க
	வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள்
	பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும்
	மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும்
	தொலையப் பெரும்போர் தொடுப்பதும் உங்கடனே. 8
	தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும்,
	நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும்,
	என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல்
	நன்று விளையும் வளமார்ந்த நன்செயும்,
	அன்றன் றணுகப் புதிய புதியசுவை
	குன்றாத செந்தமிழும், குன்றும் மணியாறும்,
	தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை
	இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9
	"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ�தொருவன்
	வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்ற வள்ளுவர்சொல்
	தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும்
	ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில்
	வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள்
	வாழ்க! நனிவாழ்க! மாற்றார்கள் வீழ்ந்திடுக!
	யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
	வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே. 10
	திராவிடர் ஒழுக்கம்
	சிந்து கண்ணிகள்
	தட்டுப் படாதபெரும் - பொருட்கொரு
	சாதியும் உண்டோடா? - படுவாய்
	சாதியும் உண்டோடா?
	மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும்
	மதங்கள் உண்டோடா? 1
	எட்டுத் திசைமுழுதும் - விசும்பு,மண்
	எங்கும் நிறைபொருட்கே - படுவாய்
	எங்கும் நிறைபொருட்கே
	கொட்டு முழக்குண்டோ? - அமர்ந்திடக்
	கோயில்கள் உண்டோடா? 2
	பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள்
	பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய்
	பெண்டாட்டி கேட்டதுண்டோ?
	கட்டைக் குதிரைகட்டும் - பெருந்தேர்
	காட்டெனக் கேட்டதுண்டோ? 3
	90
	பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள்
	பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய்
	பண்ணியம் உண்பதுண்டோ?
	அட்டைப் படத்தினிலும் - திரையிலும்
	அப்பொருள் காண்பதுண்டோ? 4
	பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப்
	பிச்சையன் என்பதிலும் - படுவாய்
	பிச்சையன் என்பதிலும்
	முருகன் என்பதிலும் - திருமால்
	முக்கணன் என்பதிலும் 5
	வரும் பெருச்சாளி - அதன்மிசை
	வருவன் என்பதிலும் - படுவாய்
	வருவன் என்பதிலும்
	சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத்
	தரகன் என்பதிலும் 6
	பெரும் பொருள்உளதோ? - தொழுவதில்
	பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய்
	பேறுகள் பெற்றதுண்டோ?
	கரும் பிருக்குதடா - உன்னிடத்தில்
	காணும் கருத்திலையோ! 7
	இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும்
	இல்லை உணர்ந்திடடா - படுவாய்
	இல்லை உணர்ந்திடடா!
	திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள்
	தேவை யுணர்ந்திடடா! 8
	தீய பொறாமையையும் - உடைமையிற்
	செல்லும் அவாவினையும் - படுவாய்
	செல்லும் அவாவினையும்
	காயும் சினத்தினையும் - பிறர்உளம்
	கன்ற உரைப்பதையும் 9
	ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்
	அறம் பிறக்குமடா! - படுவாய்
	அறம் பிறக்குமடா!
	தூய அறவுளத்தால் - செயலினில்
	தொண்டு பிறக்குமடா! 10
	ஏயும்நற் றொண்டாலே - பெரியதோர்
	இன்பம் பிறக்குமடா! - படுவாய்
	இன்பம் பிறக்குமடா!
	தீயும் குளிருமடா - உனையண்டும்
	தீயும் பறக்குமடா! 11
	வாயில் திறக்குமடா - புதியதோர்
	வழி பிறக்குமடா - படுவாய்
	வழி பிறக்குமடா!
	ஓயுதல் தீருமடா - புதியதோர்
	ஒளி பிறக்குமடா! 12
	91
	தாயொடு மக்களடா - அனைவரும்
	சரிநிகர் உடைமை - படுவாய்
	சரிநிகர் உடைமை
	தேயும் நிலைவிடுப்பாய் - இவையே
	திராவிடர் ஒழுக்கம். 13
	அன்னை அறிக்கை
	(திராவிடம்)
	என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
	இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!
	உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
	பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
	ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத்
	தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை
	நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்
	அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்.
	பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்
	அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?
	ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால்
	பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?
	மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
	தக்க மு?லீமைத் தாக்கா திருப்பாரோ?
	உங்கள் கடமை உணர்வீர்கள்; ஒன்றுபட்டால்
	இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!
	ஏசு மதத்தாரும் மு?லீம்கள் எல்லாரும்
	பேசில் திராவிடர்;என் பிள்ளைகளே என்றுணர்க!
	சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
	தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!
	ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு
	போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!
	ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன்
	பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ?
	மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில்
	இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ!
	 
	
	7. சமத்துவப் பாட்டு
	(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு)
	புவியிற் சமுகம்இன்பம்
	பூணல் சமத்துவத்தால்;
	கவிழ்தல் பேதத்தாலடி! - சகியே
	கவிழ்தல் பேதத்தாலடி! 1
	புவிவேகம் கொண்டுசெல்லும்
	போதில் உடன்செல்லாதார்
	அவிவேகம் கொண்டாரடி! - சகியே
	அவிவேகம் கொண்டாரடி! 2
	தாழ்வென்றும் உயர்வென்றும்
	சமுகத்திற் பேதங்கொண்டால்
	வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே
	வாழ்வின்பம் உண்டாகுமோ? 3
	தாழ்ந்தவர் என்றுநீக்கிச்
	சமுதாயச் சீர்தேடி
	வாழ்ந்தது காணேனடி! - சகியே
	வாழ்ந்தது காணேனடி! 4
	பிறப்பி லுயர்வுதாழ்வு
	பேசும்ச முகம்மண்ணில்
	சிறக்குமோ சொல்வாயடி? - சகியே
	சிறக்குமோ சொல்வாயடி? 5
	பிறந்தமுப் பதுகோடிப்
	பேரில்ஐங் கோடிமக்கள்
	இறந்தாரோ சொல்வாயடி? - சகியே
	இறந்தாரோ சொல்வாயடி? 6
	இதந்தரும் சமநோக்கம்
	இல்லா நிலத்தில்நல்ல
	சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே
	சுதந்தரம் உண்டாகுமோ? 7
	பதம்பெறப் பணிசெய்வோர்
	பகைகொண்டார் எனில்எந்த
	விதம்அ�து கொள்வாரடி? - சகியே
	விதம்அ�து கொள்வாரடி? 8
	சோதர பாவம்நம்மில்
	தோன்றா விடில்தேசத்தில்
	தீதினி நீங்காதடி! - சகியே
	தீதினி நீங்காதடி! 9
	93
	பேதம்பா ராட்டிவந்தோம்
	பிழைசெய்தோம் பல்லாண்டாக
	மீதம் உயிர்தானுண்டு! - சகியே
	மீதம் உயிர்தானுண்டு! 10
	அற்பத்தீண் டாதார்எண்ணும்
	அவரும் பிறரும்ஓர்தாய்
	கர்ப்பத்தில் வந்தாரன்றோ? - சகியே
	கர்ப்பத்தில் வந்தோரன்றோ? 11
	பொற்புடை முல்லைக்கொத்தில்
	புளியம்பூ பூத்ததென்றால்
	சொற்படி யார்நம்புவார்? - சகியே
	சொற்படி யார்நம்புவார்? 12
	தீண்டும் மக்களின்அன்னை
	தீண்டாரையும் பெற்றாளோ
	ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே
	ஈண்டிதை யார்நம்புவார்? 13
	தீண்டாமை ஒப்புகின்றார்
	தீண்டா ரிடம்உதவி
	வேண்டாமல் இல்லையடி! - சகியே
	வேண்டாமல் இல்லையடி! 14
	அடிமை கொடியதென்போர்
	அவர்சோத ரர்க்கிழைக்கும்
	மிடிமையை எண்ணாரடி! - சகியே
	மிடிமையை எண்ணாரடி! 15
	கொடியோர் பஞ்சமர்என்று
	கூடப்பிறந் தோர்க்கிவர்
	சுடும்பேர்வைத் திட்டாரடி! - சகியே
	சுடும்பேர்வைத் திட்டாரடி! 16
	தீண்டாதார் பழங்கீர்த்தி
	தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
	வேண்டாதார் இல்லையடி! - சகியே
	வேண்டாதார் இல்லையடி! 17
	ஆண்டார் தமிழர்இந்நா
	டதன்பின் ஆரியர்என்போர்
	ஈண்டுக் குடியேறினார்! - சகியே
	ஈண்டுக் குடியேறினார்! 18
	வெள்ளை யுடம்புகாட்டி
	வெறும்வாக்கு நயம்காட்டிக்
	கள்ளங்கள் செய்தாரடி! - சகியே
	94
	கள்ளங்கள் செய்தாரடி! 19
	பிள்ளைக்குக் கனிதந்து
	பின்காது குத்தல்போல்தம்
	கொள்கை பரவச்செய்தார்! - சகியே
	கொள்கை பரவச்செய்தார்! 20
	கொல்லா விரதம்கொண்டோர்
	கொலைசெய்யும் ஆரியர்தம்
	சொல்லுக் கிசைந்தாரடி! - சகியே
	சொல்லுக் கிசைந்தாரடி! 21
	நல்ல தமிழர்சற்றும்
	நலமற்ற ஆரியர்தம்
	பொல்லாச்சொல் ஏற்றாரடி! - சகியே
	பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22
	ஏச்சும் எண்ணார்,மானம்
	இல்லாத ஆரியர்
	மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! - சகியே
	மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23
	வாய்ச்சாலத் தால்கெட்ட
	வஞ்சத்தால் கலகத்தால்
	ஏய்ச்சாள வந்தாரடி! - சகியே
	ஏய்ச்சாள வந்தாரடி! 24
	மன்னர்க் கிடையில்சண்டை
	வளர்த்தார்தம் வசமானால்
	பொன்னாடு சேர்வார்என்றார்! - சகியே
	பொன்னாடு சேர்வார்என்றார்! 25
	பொன்னாட்டு மாதர்போலும்
	பூலோகத் தில்லையென்று
	மன்னர்பால் பொய்கூறினார்! - சகியே
	மன்னர்பால் பொய்கூறினார்! 26
	வான்மறை எனத்தங்கள்
	வழக்கம் குறித்தநூலைத்
	தேன்மழை என்றாரடி! - சகியே
	தேன்மழை என்றாரடி! 27
	�ஏன்மறை?� எங்கட்கென்றே
	இசைத்தால் ஆரியர்,நீங்கள்
	வான்புகத் தான்என்றனர்! - சகியே
	வான்புகத் தான்என்றனர்! 28
	மேலேழு லோகம்என்றார்
	கீழேழு லோகம்என்றார்
	95
	நூலெல்லாம் பொய்கூறினார்! - சகியே
	நூலெல்லாம் பொய்கூறினார்! 29
	மேலும்தமை நிந்திப்போர்
	மிகுக?டம் அடைவார்கள்
	தோலோதோல் கூடாதென்றார்! - சகியே
	தோலோதோல் கூடாதென்றார்! 30
	சுவர்க்கத்தில் தேவர்என்போர்
	சுகமாய் இருப்பதுண்டாம்
	அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! - சகியே
	அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31
	துவக்கத்தில் ஆரியரைத்
	தொழுதால் இறந்தபின்பு
	சுவர்க்கம்செல் வார்என்றனர்! - சகியே
	சுவர்க்கம்செல் வார்என்றனர்! 32
	தம்சிறு வேதம்ஒப்பாத்
	தமிழரை ஆரியர்கள்
	நஞ்சென்று கொண்டாரடி! - சகியே
	நஞ்சென்று கொண்டாரடி! 33
	வெஞ்சிறு வேதம்ஒப்பா
	வீரரை ஆரியர்கள்
	வஞ்சித்துக் கொன்றாரடி! - சகியே
	வஞ்சித்துக் கொன்றாரடி! 34
	அழிவேதம் ஒப்பாதாரை
	அரக்கரென் றேசொல்லிப்
	பழிபோட்டுத் தலைவாங்கினார்! - சகியே
	பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35
	பழிவேதம் ஒப்போம்என்ற
	பண்டைத் தமிழர்தம்மைக்
	கழுவேற்றிக் கொன்றாரடி! - சகியே
	கழுவேற்றிக் கொன்றாரடி! 36
	ஆரியர் தமைஒப்பா
	ஆதித் திராவிடரைச்
	சேரியில் வைத்தாரடி! - சகியே
	சேரியில் வைத்தாரடி! 37
	சேரிப் பறையர்என்றும்
	தீண்டாதார் என்றும்சொல்லும்
	வீரர்நம் உற்றாரடி! - சகியே
	வீரர்நம் உற்றாரடி! 38
	வெஞ்சமர் வீரர்தம்மை
	96
	வெல்லாமற் புறந்தள்ளப்
	பஞ்சமர் என்றாரடி! - சகியே
	பஞ்சமர் என்றாரடி! 39
	தஞ்சம் புகாத்தமிழர்
	சண்டாளர் எனில்தாழ்ந்து
	கெஞ்சுவோர் பேரென்னடி! - சகியே
	கெஞ்சுவோர் பேரென்னடி! 40
	மாதர் சகிதம்தங்கள்
	மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
	போதனை செய்தாரடி! - சகியே
	போதனை செய்தாரடி! 41
	சூதற்ற மன்னர்சில்லோர்
	சுவர்க்கக் கதையைநம்பித்
	தீதுக் கிசைந்தாரடி! - சகியே
	தீதுக் கிசைந்தாரடி! 42
	உலகம் நமைப்பழிக்க
	உட்புகுந் தாரியர்கள்
	கலகங்கள் செய்தாரடி! - சகியே
	கலகங்கள் செய்தாரடி! 43
	கொலைக்கள மாக்கிவிட்டார்
	குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
	நிலைக்களம் என்றாரடி! - சகியே
	நிலைக்களம் என்றாரடி! 44
	சாதிப் பிரிவுசெய்தார்
	தம்மை உயர்த்துதற்கே
	நீதிகள் சொன்னாரடி! - சகியே
	நீதிகள் சொன்னாரடி! 45
	ஓதும் உயர்வுதாழ்வை
	ஆரியர் உரைத்திட்டால்
	ஏதுக்கு நாம்ஏற்பதோ? - சகியே
	ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46
	ஊர்இரண் டுபடுங்கால்
	உளவுள்ள கூத்தாடிக்குக்
	காரியம் கைகூடுமாம்! - சகியே
	காரியம் கைகூடுமாம்! 47
	நேர்பகை யாளிஎன்னை
	நீசனென் றால்என்சுற்றத்
	தார்என்னைத் தள்ளாரடி! - சகியே
	சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48
	97
	வீரமில் ஆரியரின்
	வீண்வாக்கை நம்பினால்நம்
	காரியம் கைகூடுமோ? - சகியே
	காரியம் கைகூடுமோ? 49
	ஆரியர் சொன்னவண்ணம்
	ஆண்டு பலகழித்தோம்
	காரியம் கைகூடிற்றா? - சகியே
	காரியம் கைகூடிற்றா? 50
	எத்தால்வாழ் வுண்டாகும்?நாம்
	ஒத்தால்வாழ் வுண்டாம்!இ�து
	சத்தான பேச்சல்லவோ? - சகியே
	சத்தான பேச்சல்லவோ? 51
	எத்தர்கள் பேச்சைநம்பி
	இரத்தக் கலப்பைநீக்கிச்
	சத்தின்றி வாழ்வாருண்டோ? - சகியே
	சத்தின்றி வாழ்வாருண்டோ? 52
	�ஆரியப்� பேர்மறைந்தும்
	அவர்வைத்த �தீண்டார்� என்ற
	பேர்நிற்றல் ஏதுக்கடி? - சகியே
	பேர்நிற்றல் ஏதுக்கடி? 53
	ஆரியர் பார்ப்பாரானால்
	அவர்சொன்ன தீண்டாதார்கள்
	சேரியில் ஏன்தங்கினார்? - சகியே
	சேரியில் ஏன்தங்கினார்? 54
	ஊர்தட்டிப் பறித்திட
	உயர்சாதி என்பார்இ�தை
	மார்தட்டிச் சொல்வேனடி! - சகியே
	மார்தட்டிச் சொல்வேனடி! 55
	ஓர்தட்டில் உயர்ந்தோர்மற்
	றொன்றில்தாழ்ந் தோரைஇட்டுச்
	சீர்தூக்கிப் பார்ப்போமடி! - சகியே
	சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56
	தீண்டாதார் சுத்தமற்றோர்
	என்றாலச் சுத்தத்தன்மை
	தாண்டாதார் எங்குண்டடி? - சகியே
	தாண்டாதார் எங்குண்டடி? 57
	தீண்டாதார் ஊனுண்டால்
	தீண்டு மனிதர்வாய்க்குள்
	மாண்டன பல்கோடியாம்! - சகியே
	மாண்டன பல்கோடியாம்! 58
	98
	பறவை மிருகமுண்டோர்
	பறையர் என்றால்மனுநூல்
	முறையென்பார் பேரென்னடி? - சகியே
	முறையென்பார் பேரென்னடி? 59
	வெறிமது உண்போர்நீசர்
	என்றால் பிறர்க்கிருட்டில்
	நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே
	நிறைமுக்கா டேதுக்கடி? 60
	சீலம் குறைந்தோர்என்றால்
	சீலமி லாச்சிலரை
	ஞாலத்தில் ஏன்தீண்டினார்? - சகியே
	ஞாலத்தில் ஏன்தீண்டினார்? 61
	மேலை வழக்கங்கொண்டு
	மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
	காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே
	காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62
	சாத்திரம் தள்ளிற்றென்றால்
	சாற்றும் அதுதான்எங்கள்
	கோத்திரத் தார்செய்ததோ? - சகியே
	கோத்திரத் தார்செய்ததோ? 63
	வாய்த்திறம் கொண்டமக்கள்
	வஞ்சம் யாவையும்நம்பி
	நேத்திரம் கெட்டோமடி! - சகியே
	நேத்திரம் கெட்டோமடி! 64
	மனிதரிற் றாழ்வுயர்வு
	வகுக்கும் மடையர்வார்த்தை
	இனிச்செல்ல மாட்டாதடி! - சகியே
	இனிச்செல்ல மாட்டாதடி! 65
	கனிமா மரம்வாழைக்காய்
	காய்க்கா தெனில்இரண்டும்
	தனித்தனிச் சாதியடி! - சகியே
	தனித்தனிச் சாதியடி! 66
	எருமையைப் பசுசேர்தல்
	இல்லை; இதனாலிவை
	ஒருசாதி இல்லையடி! - சகியே
	ஒருசாதி இல்லையடி! 67
	ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
	ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
	இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே
	99
	இருசாதி மாந்தர்க்குண்டோ? 68
	உழைப்பால் உயர்ந்தவர்கள்
	தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
	பிழைப்பைக் கெடுத்தாரடி! - சகியே
	பிழைப்பைக் கெடுத்தாரடி! 69
	தொழிலின்றிச் சோறுண்ணாச்
	சுத்தர் அசுத்தர்என்ப
	தெழிலற்ற வார்த்தையடி! - சகியே
	எழிலற்ற வார்த்தையடி! 70
	உடல்நோய்கள் அற்றபேரை
	ஒழுக்கமில் லார்என்பவர்
	கடலை உளுந்தென்பரோ? - சகியே
	கடலை உளுந்தென்பரோ? 71
	தடையற்ற அன்பினரைச்
	சண்டாளர் என்றுசொல்லும்
	கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே
	கடையர்க்கு வாழ்வேதடி? 72
	பழிப்பவர்க் கும்உதவும்
	பாங்கர் பறையர்என்பார்
	விழித்துத் துயில்வாரடி! - சகியே
	விழித்துத் துயில்வாரடி! 73
	தழைக்கப் பிள்ளைபெறுவோர்
	தாழ்வாம்; பிள்ளைக்கையரை
	அழைப்போர்கள் மேலோர்களாம்! - சகியே
	அழைப்போர்கள் மேலோர்களாம்! 74
	தோள்தான் பொருள்என்போர்கள்
	தாழ்வாம்; துரும்பெடுக்கக்
	கூடாதோர் மேலென்பதாம்! - சகியே
	கூடாதோர் மேலென்பதாம்! 75
	மாடா யுழைப்பவர்கள்
	வறியர்;இந் நாட்டுத்தொழில்
	நாடாதோர் செல்வர்களோ? - சகியே
	நாடாதோர் செல்வர்களோ? 76
	ஏரிக் கரையினில்வாழ்ந்
	திருந்து பிறரைக்காக்கும்
	சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே
	சேரியர் தாழ்ந்தார்களோ? 77
	ஊருக் கிழிந்தோர்காவல்;
	உயர்ந்தோர் இவர்கள்வாழ்வின்
	100
	வேருக்கு வெந்நீரடி! - சகியே
	வேருக்கு வெந்நீரடி! 78
	அங்கம் குறைச்சலுண்டோ
	ஆதித் திராவிடர்க்கே?
	எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே
	எங்கேனும் மாற்றமுண்டோ? 79
	புங்கவர் நாங்கள்என்பார்
	பூசுரர் என்பார்நாட்டில்
	தங்கட்கே எல்லாம்என்பார்! - சகியே
	தங்கட்கே எல்லாம்என்பார்! 80
	ஆதிசை வர்கள்என்பார்;
	யுஆதிக்குப் பின்யார்?ருஎன்றால்
	காதினில் வாங்காரடி! - சகியே
	காதினில் வாங்காரடி! 81
	சாதியில் கங்கைபுத்ரர்
	என்பார்கள் சாட்சி,பத்ரம்
	நீதியில் காட்டாரடி! - சகியே
	நீதியில் காட்டாரடி! 82
	வேலன்பங் காளியென்பார்
	வெறுஞ்சேவ கனைக்கண்டால்
	காலன்தான் என்றஞ்சுவார்! - சகியே
	காலன்தான் என்றஞ்சுவார்! 83
	மேலும் முதலி,செட்டி,
	வேளாளப் பிள்ளைமுதல்
	நாலாயிரம் சாதியாம்! - சகியே
	நாலாயிரம் சாதியாம்! 84
	எஞ்சாதிக் கிவர்சாதி
	இழிவென்று சண்டையிட்டுப்
	பஞ்சாகிப் போனாரடி! - சகியே
	பஞ்சாகிப் போனாரடி! 85
	நெஞ்சில் உயர்வாய்த்தன்னை
	நினைப்பான் ஒருவேளாளன்
	கொஞ்சமும் எண்ணாததால்! - சகியே
	கொஞ்சமும் எண்ணாததால்! 86
	செட்டி உயர்ந்தோன்என்பான்
	செங்குந்தன் உயர்வென்பான்
	குட்டுக்கள் எண்ணாததால்! - சகியே
	குட்டுக்கள் எண்ணாததால்! 87
	செட்டிக்கோ முட்டிநாய்க்கன்
	101
	சேணியன் உயர்வென்றே
	கட்டுக் குலைந்தாரடி! - சகியே
	கட்டுக் குலைந்தாரடி! 88
	சேர்த்துயர் வென்றிவர்கள்
	செப்பினும் பார்ப்பனர்க்குச்
	சூத்திரர் ஆனாரடி! - சகியே
	சூத்திரர் ஆனாரடி! 89
	தூற்றிட இவ்வுயர்ந்தோர்
	சூத்திரர் என்றுபார்ப்பான்
	காற்றினில் விட்டானடி! - சகியே
	காற்றினில் விட்டானடி! 90
	தம்மை உயர்த்தப்பார்ப்பார்
	சமுகப் பிரிவுசெய்தார்
	இம்மாயம் காணாரடி! - சகியே
	இம்மாயம் காணாரடி! 91
	பொய்மை வருணபேதம்
	போனால் புனிதத்தன்மை
	நம்மில்நாம் காண்போமடி! - சகியே
	நம்மில்நாம் காண்போமடி! 92
	நான்கு வருணம்என்று
	நவிலும் மனுநூல்விட்டு
	ஏனைந்து கொண்டாரடி? - சகியே
	ஏனைந்து கொண்டாரடி? 93
	நான்கு பிரிவும்பொய்மை;
	நான்குள்ளும் பேதம்என்றால்
	ஊனத்தில் உள்ளூனமாம்! - சகியே
	ஊனத்தில் உள்ளூனமாம்! 94
	சதுர்வர்ணம் வேதன்பெற்றான்
	சாற்றும்பஞ் சமர்தம்மை
	எதுபெற்றுப் போட்டதடி? - சகியே
	எதுபெற்றுப் போட்டதடி? 95
	சதுர்வர்ணம் சொன்னபோது
	தடிதூக்கும் தமிழ்மக்கள்
	அதில்ஐந்தாம் நிறமாயினர்! - சகியே
	அதில்ஐந்தாம் நிறமாயினர்! 96
	மனிதரில் தீட்டுமுண்டோ?
	மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
	அநீதத்தை என்சொல்வதோ? - சகியே
	அநீதத்தை என்சொல்வதோ? 97
	102
	�புனிதர்என் றேபிறத்தல்�
	�புல்லர்என் றேபிறத்தல்�
	எனுமி�து விந்தையடி! - சகியே
	எனுமி�து விந்தையடி! 98
	ஊரிற் புகாதமக்கள்
	உண்டென்னும் மூடரிந்தப்
	பாருக்குள் நாமேயடி! - சகியே
	பாருக்குள் நாமேயடி! 99
	நேரிற்பார்க் கத்தகாதோர்
	நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
	பாருக்குள் நாமேயடி! - சகியே
	பாருக்குள் நாமேயடி! 100
	மலம்போக்கும் குளம்மூழ்கா
	வகைமக்க ளைநசுக்கும்
	குலமாக்கள் நாமேயடி! - சகியே
	குலமாக்கள் நாமேயடி! 101
	மலம்பட்ட இடம்தீட்டாம்
	மக்கள் சிலரைத்தொட்டால்
	தலைவரைக் கும்தீட்டாம்! - சகியே
	தலைவரைக் கும்தீட்டாம்! 102
	சோமனைத் தொங்கக்கட்டச்
	சுதந்தரம் சிலர்க்கீயாத்
	தீமக்கள் நாமேயடி! - சகியே
	தீமக்கள் நாமேயடி! 103
	தாமூழ்கும் குளம்தன்னில்
	தலைமூழ்கத் தகாமக்கள்
	போமாறு தானென்னடி? - சகியே
	போமாறு தானென்னடி? 104
	பாதரட்சை யணிந்தாற்
	பழித்துச் சிலரைத்தாழ்த்தும்
	காதகர் நாமேயடி! - சகியே
	காதகர் நாமேயடி! 105
	ஓத வசதியின்றி
	உலகிற் சிலரைதாழ்த்தும்
	சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே
	சூதர்க்கு வாழ்வேதடி? 106
	தீராப் பகையுமுண்டோ
	திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
	நேராகிப் போனாலடி? - சகியே
	நேராகிப் போனாலடி? 107
	103
	ஓரைந்து கோடிமக்கள்
	ஓல மிடுங்கால்மற்றோர்
	சீராதல் இல்லையடி! - சகியே
	சீராதல் இல்லையடி! 108
	தாழ்வில்லை உயர்வில்லை
	சமமென்ற நிலைவந்தால்
	வாழ்வெல்லை காண்போமடி! - சகியே
	வாழ்வெல்லை காண்போமடி! 109
	சூழ்கின்ற பேதமெல்லாம்
	துடைத்தே சமத்துவத்தில்
	வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! - சகிே
	வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110
	ஆலய உரிமை
	(�ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை�
	என்ற காவடிச் சிந்தின் மெட்டு)
	கண்ணிகள்
	எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
	றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
	அவ்விதம் நோக்க அவிந்தன வோநம்
	அழகிய நேத்திரங்கள்? 1
	திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று
	சேர்த்திட லாகும்அன்றோ? - எனில்
	அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
	அத்தனை பேரும்ஒன்றே. 2
	ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்
	லாரும் உடன்பிறப்பே - ஒரு
	பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
	லேஉள்ள தோசிறப்பே? 3
	�தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை� என்று
	செப்பிடும் தேசத்திலே - பெரும்
	போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி
	போயிற்று நீசத்திலே. 4
	என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
	எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி
	தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர்
	சமுக நிலைபுரியும். 5
	என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
	104
	ஏழையர்க் கோர்கடவுள் - எனில்
	முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
	முளைக்கும் பொதுக்கடவுள். 6
	உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத்
	தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை
	பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
	பேசிடுவீர் அன்பீர். 7
	உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
	ஒளிமறைவில் தரத்தான் - மிகப்
	பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
	பண்ணின தோஅறியேன். 8
	சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
	சூழ்வது பூசனையோ - ஒரு
	சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
	சதியா லோசனையோ? 9
	ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
	என்று மதித்ததுவோ? - சாமி
	நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
	நீரிற் குதித்ததுவோ? 10
	மாலய மாக வணங்கிடச் சாமி
	வந்திடு வார்என்றீரே - அந்த
	ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
	வழிமறித் தேநின்றீரே. 11
	ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
	அங்கம் சிறந்தாரோ? - சிலர்
	நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
	நலிந்து பிறந்தாரோ? 12
	தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
	சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
	வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
	வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
	தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
	சாமிக்குச் சத்திலையோ? - எனில்
	வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
	மேலும் சமர்த்திலையோ? 14
	தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
	சாமி விழுங்கட்டுமே - அன்றி
	முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
	உருவம் மழுங்கட்டுமே. 15
	105
	இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
	இனத்தினில் பல்கோடி - மக்கள்
	தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
	சாவது வோஓடி? 16
	குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
	கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
	மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
	வகையிலும் கூட்டிலையோ? 17
	திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில்
	சேரிஅப்பால் இல்லையே - நாளும்
	பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
	நம்புவதோ சொல்லையே? 18
	தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத்
	தனிக்கோயில் காட்டுவதோ? - அவர்
	வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
	வம்பினை மூட்டுவதோ? 19
	தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
	சாற்றிடும் தேசமக்கள் - அவர்
	வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை
	மறித்திடும் நாசமக்கள். 20
	தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத்
	தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில்
	சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
	சொல்லிடும் நீதிநன்றோ? 21
	�தாழ்ந்தவர்� என்றொரு சாதிப் பிரிவினைச்
	சாமி வகுத்ததுவோ? - எனில்
	வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
	வம்பு புகுத்தியதோ? 22
	முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
	முற்றும் ஒரேசமுகம் - என
	ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
	ஒப்பாவிடில் என்னசுகம்? 23
	இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
	�யாம்� என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
	இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம்
	இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24
	மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில்
	வருவதற் கில்லைசாத்யம் - எனில்
	ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
	அவனே முதற்பாத்யம். 25
	106
	நீடிய பத்தியில் லாதவர் கோயில்
	நெருங்குவதால் தொல்லையே! - எனில்
	கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும்
	கூறும்பக்தி இல்லையே. 26
	�சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
	சுவாமியைப் பூசிப்பரோ?� - எனில்
	நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
	யாதுக்கு யோசிப்பிரே. 27
	நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
	நேரில்அக் கோயிலிலே - கண்டும்
	ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
	கோயிலின் வாயிலிலே. 28
	கூறும் �உயர்ந்தவர்� �தாழ்ந்தவர்� என்பவர்
	கோயிலின் செய்திவிட்டுப் - புவி
	காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
	காட்டுவீர் ஒன்றுபட்டு. 29
	வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில்
	வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக்
	கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
	தீதெனல் யாதுகொண்டோ? 30
	ஞாயமற்ற மறியல்
	நொண்டிச் சிந்து
	என்றுதான் சுகப்படு வதோ! - நம்மில்
	யாவரும் யுசமானம்ருஎன்ற பாவனைஇல்லை - அந்தோ
	ஒன்றுதான்இம் மானிடச் சாதி - இதில்
	உயர்பிறப் பிழிபிறப் பென்பதும்உண்டோ? - நம்மில்
	அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
	அத்தனையும் யுசாதிகள்ருஎன் றாக்கிவிட்டனர் - இன்று
	கொன்றிடுதே யுபேதம்ருஎனும் பேய்! - மிகக்
	கூசும்இக் கதைநினைக்கத் தேசமக்களே! - நாம்
	என்றுதான் சுகப்படு...
	இத்தனை பெரும் புவியிலே - மிக
	எண்ணற்ற தேசங்கள் இருப்பதறிவோம் - எனில்
	அத்தனைதே சத்து மக்களும் - தாம்
	அனைவரும் யுமாந்தர்ருஎன்று நினைவதல்லால் - மண்ணில்
	இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
	எட்டுல?ம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர்
	பித்துமிகக் கொண்ட வர்கள்போல் - தம்
	பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல்நன்றோ? - நாம்
	என்றுதான் சுகப்படு...
	107
	தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
	தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
	ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர் - செவிக்
	கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார் - பல்
	ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
	அறிவற்ற மாக்கள்என்று கருதப்பட்டோம் - நாம்
	கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
	கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம்
	என்றுதான் சுகப்படு...
	ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
	நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு
	மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
	மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
	வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
	மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
	யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர்
	இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம்
	என்றுதான் சுகப்படு...
	உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
	ஊரைஅடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
	பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
	பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
	வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
	வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக
	முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில்
	முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம்
	என்றுதான் சுகப்படு...
	உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
	உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
	கண்டபடி விலை உயர்த்தி - மக்கள்
	காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு
	தொண்டு செய்யும் சாதிஎன்பதும் - நல்ல
	துரைத்தனச் சாதியென்று சொல்லக்கொள்வதும் - இவை
	பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
	பகர்வது தாங்கள்நலம் நுகர்வதற்கே - நாம்
	என்றுதான் சுகப்படு...
	வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
	மேதினியை ஆள்பவன் ?த்திரியனாம் - மிக
	நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
	நியமித்த வைசியனென் றுயர்வுசெய்தார் - மிக
	நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
	நாத்திறம்அற் றிருந்தவன் சூத்திரன்என்றே - சொல்லி
	ஆதியினில் மனு வகுத்தான் - இவை
	108
	அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும்ஒன்றாம் - நாம்
	என்றுதான் சுகப்படு...
	அவனவன் செய்யும் தொழிலைக் - குறித்
	தவனவன் சாதியென மனுவகுத்தான் - இன்று
	கவிழ்ந்தது மனுவின் எண்ணம் - இந்தக்
	காலத்தினில் நடைபெறும் கோலமும்கண்டோம் - மிகக்
	குவிந்திடும் நால்வரு ணமும் - கீழ்க்
	குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று
	எவன்தொழில் எவன் செய்யினும் - அதை
	ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம்
	என்றுதான் சுகப்படு...
	பஞ்சமர்கள் எனப் படுவோர் - மட்டும்
	பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ? - இனித்
	தஞ்சமர்த்தை வெளிப் படுத்தித் - தம்
	தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ? - இது
	வஞ்சத்தினும் வஞ்ச மல்லவோ - பொது
	வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம்
	நெஞ்சத்தினுள் ஈர மில்லையோ? - அன்றி
	நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ? - நாம்
	என்றுதான் சுகப்படு...
	கோரும் யுஇமயாசலரு முதல் - தெற்கில்
	கொட்டுபுனல் நற்யுகுமரிரு மட்டும்இருப்போர் - இவர்
	யாருமொரு சாதி யெனவும் - இதில்
	எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
	பாரதநற் றேவிதனக்கே - நாம்
	படைமக்கள் எனவும்நம் மிடைஇக்கணம் - அந்த
	ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த
	ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியளிக்கும்! - நாம்
	என்றுதான் சுகப்படு...
	 
	
	
	
	8. புரட்சித் திருமணத் திட்டம்
	நடத்தும் முறை
	[திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற்
	போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப்
	பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர்
	புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல!
	மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள
	வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு
	குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.]
	1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில்
	குழுமியோர் அவையத்தார் ஆவார்.
	2. இசை: திராவிட நாட்டுப் பண்.**
	** திராவிட நாட்டுப் பண் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம்
	தொகுதியில் உளது
	3. மணமக்கள் அவைக்கு வருதல்.
	4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, புஅவைத் தலைமை
	தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை
	வேண்டிக்கொள்கிறேன்மு என்று முன் மொழிதல்.
	5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, புநாங்கள்
	ஆதரிக்கிறோம்மு என்று வழிமொழிதல்.
	6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை
	அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.
	7. அவைத் தலைவர் முன்னுரை.
	8. திருமணம் நடத்துதல்: மணப்பெண், புஇன்னாரை நான்
	என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை
	நடத்த ஒப்புகிறேன்மு என்று சொல்லல். மணமகனும்
	அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை
	மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். புவாழ்கமு என முழங்குதல்.
	9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.
	10.வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.
	இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில்
	மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ
	துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.
	இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில்
	ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும்
	பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான்
	நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது.
	இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம்.
	ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்?
	----- பாரதிதாசன்
	
	1
	அவையத்தார்
	அகவல்
	வருக வருகென மலர்க்கை கூப்பித்
	திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
	திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
	அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!
	குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
	மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்
	மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
	திராவிட நாட்டுப்பண் பாடினான்;
	ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.
	மணமக்கள் வருகை
	மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
	தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
	யுஇருக்கரு என்று தோழர் இயம்ப
	இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.
	2
	முன் மொழிதல்
	மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
	முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:
	புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,
	அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
	என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.
	இன்று நடைபெற இருக்கும்இத் திராவிடர்
	புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
	தலைமை தாங்கவும் நிலைமை உயர
	மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்
	நிறைவேற் றவும்பெரி யாரை
	முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.மு
	வழி மொழிதல்
	அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,
	புமுன்மொழிந் தாரின் பொன்மொழி
	நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
	வேண்டுகோள்
	முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்
	பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
	புஎழுந்தருள்மு கென்றே இருகை கூப்பி
	மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
	இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
	பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:
	3
	அவைத்தலைவர்
	சேர சோழ பாண்டியர் வழிவரு
	திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
	அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
	தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
	ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.
	ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
	வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்
	ஆதலால், அவரின் வேத மந்திரம்
	தீது பயப்பன ஆதலால், திராவிடர்
	வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
	தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
	அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
	நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்
	நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
	தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை
	மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்
	இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
	ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை
	வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?
	அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
	தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
	வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு
	தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?
	தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்
	தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்
	ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
	பெரிதின்பம் பெறுக பெறுக என்று
	வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
	ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
	ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
	வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
	சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி
	ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?
	நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்
	கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?
	மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்
	கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?
	தீதிலா மிகப்பல திராவிட மறவர்
	ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த
	சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?
	கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?
	மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
	தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!
	இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்
	கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!
	தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்
	தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!
	நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!
	திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?
	வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
	தமிழர் பண்பு தலைசா யாதோ?
	தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
	பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
	திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
	திராவிடர் புரட்சித் திருமணம்
	புரிந்தின் புறுக திருமண மக்களே!
	வாழ்க்கை ஒப்பந்தம்
	ப�றொடை வெண்பா
	திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
	இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -
	நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.
	"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
	* பாவையீரே - மணமகளாரே.
	ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்
	கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
	உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,
	உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.
	"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?
	* தோழரே - மணமகனாரே
	வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?
	ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,
	தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட
	வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
	வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!
	தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட
	நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்
	கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்
	துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்
	தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!
	செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:
	
	அற மொழிகள்
	"அன்பும் அறனும்
	உடைத்தாயின் இல்வாழ்க்கை
	பண்பும் பயனும்
	அது" என்றார் வள்ளுவனார்.
	இல்வாழ்வில் அன்பும்
	அறமும் இருக்குமெனில்
	நல்லதன்மை நல்லபயன்
	நாளும் அடையுமன்றோ?
	"மனைத்தக்க மாண்புடையாள்
	ஆகித்தற் கொண்டான்
	வளத்தக்காள் வாழ்க்கைத்
	துணை" என்றார் வள்ளுவனார்!
	வாழ்க்கைத் துணைவி
	மனைக்குரிய மாண்புகொண்டு
	வாழ்வில் அவனின்
	வருவாய் அறிந்து
	செலவு செயல்வேண்டும்
	என்பது மன்றியும்,
	"தற்காத்துத் தற்கொண்டான்
	பேணித் தகைசான்ற
	சொற்காத்துச் சோர்விலாள்
	பெண்" என்று சொல்கின்றார்.
	தன்னையும் தக்கபடி
	காத்துக் கொளல்வேண்டும்
	தன்கொழுநன் தன்னையும்
	காத்திடல் வேண்டும்
	சீர்சால் திராவிடர்
	பண்பு சிதையாமல்
	நிற்பவளே பெண்ணாவாள்.
	"மங்கலம் என்ப
	மனைமாட்சி மற்றதன்
	நன்கலம் நன்மக்கட்
	பேறு" பெறுக.
	"வழங்குவ துள்வீழ்ந்தக்
	கண்ணும் பழங்குடி
	பண்பின் தலைப்பிரிதல்
	இல்"மற வாதீர்.
	"இளிவரின் வாழாத
	மானம் உடையார்
	ஒளிதொழு தேத்தும்
	உலகு" தெளிக.
	மணமகளாரே, மணமகனாரே
	இணைந்தின் புற்றுநன்
	மக்களை ஈன்று
	பெரும்புகழ் பெற்றுநீடூழி
	இருநிலத்து வாழ்கஇனிது.
	
	நன்றி கூறல்
	அறுசீர் விருத்தம்
	மணமக்கட் குரியார் ஆங்கு
	வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,
	"மணவிழாச் சிறக்க ஈண்டு
	வந்தார்க்கு நன்றி! இந்த
	மணஅவைத் தலைமை தாங்கி
	மணமுடித் தருள் புரிந்த
	உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
	உளமார்ந்த நன்றி" என்றே
	கைகூப்பி, அங்கெ வர்க்கும்
	அடைகாயும் கடிது நல்கி
	வைகலின் இனிதின் உண்ண
	வருகென அழைப்பா ரானார்!
	பெய்கெனப் பெய்த இன்பப்
	பெருமழை இசையே யாக
	உய்கவே மணமக்கள் தாம்
	எனஎழும் உள்ளார் வாழ்த்தே.
	
	பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி முற்றும்.