Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்!
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்!
26 November 2007


சிறிலங்கா அரசாங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதினாறு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் புறம் தள்ளி, ஷஷபேரம் பேசுதல், கொலை அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கட்சித்தாவல்கள்|| போன்ற அநாகரிகச் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்சவின் அரசு மேற்கொண்டு, தனது வரவு-செலவுத் திட்டத்தை ஒருவாறு நிறைவேற்றியுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, டிசம்பர் மாதம் 14ம் திகதியன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள இவ்வேளையில், சில கருத்துக்களை எமது வாசகர்கள் முன் வைக்க விழைகின்றோம்.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை, தமிழ் மக்கள் மீதான யுத்தச் செலவிற்காக மகிந்தவின் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அறிகின்றோம். இதற்கும் மேலாகக் கடன் அடிப்படையிலும், அன்பளிப்புக்கள் மூலமும், வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகள் மூலமும் யுத்தத்திற்குத் தேவையான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட உள்ளன. அப்படிப் பார்க்கப் போனால் முப்பதாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலான நிதியைக் கொண்டுதான், அடுத்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மீதான யுத்தத்தை, மகிந்தவின் அரசு நடாத்தத் திட்டமிட்டிருக்கின்றது என்பது புலனாகிறது. சம்பந்தப்பட்ட சில வெளிநாடுகளின் ‘மறைமுகமான உதவிகள்’ இதில் உள்ளடக்கப் படவில்லை.

இந்த யுத்தச் செலவுகளுக்கான தொகையின் ஒரு விழுக்காடுப் பகுதி கூட, தமிழ் மக்களின் நலனுக்காகவோ, தமிழ் மக்களின் மறு வாழ்வுக்காகவோ ஒதுக்கப்படவில்லை. இவற்றைச் செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்யும் காரியத்தைத்தான் மகிந்தவின் அரசு செய்துள்ளது. அத்தோடு, உதவி செய்கின்ற வெளிநாட்டு அமைப்புக்களையும் வெளியேற்ற முனைவதில்தான் சிங்கள அரசு முனைப்பாக நிற்கின்றது. ஜனநாயகம், மக்கள் உரிமை, மனித உரிமை, அவர்களின் நலன் என்று பெரிதாக வாய் கிழியப் பேசி அறிக்கைகளை விடுகின்ற நாடுகளோ, இது குறித்து எந்தவித அக்கறையுமே கொள்ளவில்லை.

சிறிலங்கா அரசு ஒரு காட்டுமிராண்டி அரசு என்றால், அதற்குத் துணை நிற்கின்ற சர்வதேசமோ, சிறிலங்காவையும் விட மோசமான, கேவலமான, ஏமாற்றுகின்ற, பொய்மையான, கீழ்த்தரமான நிலையில் நிற்கின்றது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்

ஐனநாயக மரபற்ற ஓர் அரசு, நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யாத ஒரு காட்டுமிராண்டி அரசு, தமிழ் மக்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு பேரினவாத அரசு, மிகப் பெரிய எதிர்ப்புக்களுக்கு இடையே கொண்டு வந்த, போருக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்ற ஷஷஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ், நுPனுP|| போன்ற கட்சிகள்தான் மகிந்த ராஜபக்ச அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்குத் தங்களின் ஷமகத்தான| ஆதரவை அளித்து, வரவு-செலவுத் திட்டம் நிறைவேறக் காரணமாக விளங்கியுள்ளார்கள்.

இன்று இந்தக் கட்சிகள், தங்கள் ஆதரவுக்கான காரணங்களுக்காக என்னதான் ‘விளக்கங்களைக்’ கொடுத்தாலும், இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான போருக்காக, உத்தியோகபூர்வமாகப் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ள இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ள மேற்கூறிய ஷஷதமிழ்க் கட்சிகள்|| தங்களுடைய இந்த வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் மீதான போருக்கான ஓர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

தமிழர்களை அழிக்க வேண்டும் என்று வெளிப்டையாகச் சொல்லி வருகின்ற ஜேவிபியே, வேறு காரணத்திற்காக, மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டத்த்pற்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான - அவர்களை அழிக்க முயலும் யுத்தத்திற்கு ஆதரவான - இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டிய ஷஷதமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள்|| என்று தம்மைச் சொல்லிக் கொள்கின்ற இவர்கள், தமிழ் மக்களின் விரோதியான மகிந்த ராஜபக்சவோடு, ஒட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

அற்ப பதவிகளுக்காகவும், தனிப்பட்ட சுக வாழ்வுக்காகவும், தங்களுடைய மக்களது நலன் சார்ந்த எதையுமே கவனிக்காமல், இவர்கள் விலை போயுள்ளார்கள். இவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாது என்பதால், இவர்கள் தங்களுடைய துரோகத்தனங்கள் குறித்துக் கவபைபடப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாகும்!

மலையக மக்களின் நிலை குறித்து முதலில் சில கருத்துக்களைச் சொல்ல விழைகின்றாம். மலையக மக்களின் தலைவர்கள், மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொன்ளாதவர்களாகத்தான் தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். தமது பதவிகளுக்காகவும், தங்களின் சுயநல இன்பங்களுக்காகவும், தமது சொந்த இனத்தையே விற்று விடவும் இவர்கள் தயங்குவதில்லை. இதில் ஆறுமுகம் தொண்டமான் பற்றிப் புதிதாக எதையும் சொல்லத் தேவையில்லை. இவருடைய பரம்பரையே தொடர்ந்தும் தன்னுடைய மக்களைக் காட்டிக் கொடுத்து, அடிமைகளிலும் அடிமைகளாக்கி, ஏமாற்றி வருகின்றது. தன்னுடைய முன்னோர்களைப் போலவே இவரும் சிறிலங்கா அரசு வழங்குகின்ற ‘எலும்புத் துண்டுகளை’ நக்கிக் கொண்டு திரிகின்றார்.

இந்த ‘எலும்புத் துண்டுகளை’ நக்குவதற்கு ஆறுமுகம் தொண்டமானுக்குப் போட்டியாகப் புதிதாக தோன்றியவர்தான் மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் அவர்கள்! தமிழீழம் சென்று, தலைமையிடம் பெரிதாக ‘தமிழர்கள்-உணர்வுகள்’ என்று சொல்லி விட்டு, இன்று மகிந்த ராஜபக்சவை வானுயரப் புளுகிக் கொண்டு, அவரோடு இணைந்து, சுயலாப அரசியல் நடாத்திக் கொண்டு நிற்கின்றார். காலை எழுந்தவுடனேயே ஆரம்பமாகின்ற இவருடைய தனிப்பட்ட பலவீனம் காரணமாக, மலையக மக்களை இவர் விலை பேசி விற்கின்றார். அத்தோடு தமிழீழ மக்களுக்கு எதிரான போருக்கு ஆதரவாக இன்று வாக்களித்தும் நிற்கின்றார்.

மலையக மக்கள் இன்னும் முற்றாக எழுச்சி பெறவில்லை. அவர்கள் முற்றாக எழுச்சி பெறுவதற்கு இன்னும் நாளெடுக்கக்கூடும் என்றாலும் மலையக மக்கள் முன் போன்ற நிலையில் இல்லாமல், இன்று அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக, பட்டறிவு ஊடாக, மெதுவாக வளர்ச்ச்pயடைந்து வருகின்றார்கள். ஆனால் இவர்களுடைய தலைவர்களோ அற்ப பதவிகளுக்காவும், அற்ப பணத்திற்காகவும் சிங்களப் பேரினவாதத்திடம் விலை போய் விட்டார்கள்.

மலையக மக்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுகின்றார்கள், காணாமல் போகிறார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. மலையகத் தலைவர்களோ இவற்றைக் கண்டு கொள்ளாமல், சும்மா இருந்து கொண்டு கதை பேசிக் கொண்டு தங்கள் மக்களைக் காட்டிக் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்.

மலையக மக்களின் நிலை, அப்படியே முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் தலைவர்களும, தொடர்ந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். முஸ்லிம் மக்களும் தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மிகப் பாரிய இக்கட்டுக்களைச் சிங்கள அரசு முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் முஸ்லிம் மக்களின் தலைவர்களும் சிங்களப் பேரினவாதம் வழங்கும் எலும்புத் துண்டுகளுக்காக சிங்கள அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவைக் கொடுத்து வருகின்றார்கள்.

டக்ளஸ் தேவானந்தா பற்றிப் புதிதாக எதையும் விளக்கத் தேவையில்லை. மேற்கூறிய எல்லோரையும் விடத் தனக்குப் பெரிய எலும்புத் துண்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் இனத்தையே தொடர்ந்தும் காட்டிக் கொடுத்து வருபவர் அவர்!

சிங்களப் பேரினவாத அரசிற்கு, அரசியல் துரோகிகளின் விலை என்னவென்று சரியாகத் தெரியும். இன்று சுமார் 108 அமைச்சர்கள் சிங்கள அரசில் அங்கம் வகிக்கின்றார்கள். சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான உருப்படியான கொள்கைகளும் இல்லாதது போன்றே, இந்த அரசியல்வாதிகளுக்கும் எந்த விதக் கொள்கையோ, மக்கள் நலன் குறித்த அக்கறையோ கிடையாது. தங்களுடைய சுகவாழ்க்கையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதுதான் இவர்களுடைய நோக்கமாகும்.

சிங்களப் பேரினவாத அரசு, தன்னுடைய அநியாயங்களுக்குத் துணை போகின்றவர்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளி வழங்கும். தனக்கு எதிராகக் கிளம்புவர்களை அச்சுறுத்தும், கடத்தும், கொலைப் பயமுறுத்தல் விடும், கொலையும் செய்யும். இவற்றிற்கும் மேலாக தனக்கு எதிராக எழுதும் பத்திரிகை அலுவலகத்தை எரிக்கும்.

இப்படியான குளறுபடியான அரசியலையும், மனிதஉரிமை மீறல்களையும் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மட்டும் புரியவில்லை. சாதாரணச் சிங்களவர்களுக்கும் இதே அநியாயங்களைத்தான் சிங்கள அரசு செய்கிறது.

இப்படிப்பட்டவர்கள் ஒரு மிகப் பெரிய இனப்பிரச்சனையைச் சுமுகமாக, நேர்மையாகத் தீர்ப்பார்கள் என்றும், அதனைச் சமாதானப் பேச்சுக்கள் ஊடாகப் பெறலாம் என்றும் சர்வதேசம் இன்றுவரை சொல்லி வருவதுதான் வேடிக்கையாகும்!

தமிழர் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன்னுடைய கடந்த ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது, ‘சிங்களப் பௌத்தப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியான சமாதானத் தீpர்வைத் தராது’ என்று தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, எமது தேசியத் தலைவரின் கூற்றை மீண்டும் மீண்டும் நிரூபித்தே வந்துள்ளது. ஆகையால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான, நியாயமான எமது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிக்கும்படி சர்வதேசத்திடம் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் வருந்தத்தக்க வகையில், நியாயமற்ற வகையில் சர்வதேசம் நடந்து கொண்டிருக்கின்றது. ஹிட்லரைப் போலச் செயல்படுகின்ற சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக, அதனுடைய தமிழின அழிப்புக்கு ஆதரவாக, அதனுடைய மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாகச் சர்வதேசம் இயங்குகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், சமாதானப்பேச்சு வார்த்தைகளை முன்னின்று நடாத்தியவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிங்கள பயங்கரவாத அரசு கொலை செய்ததன் மூலம், சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பாரிய பின்னடைவை அரசு ஏற்படுத்தியது. அப்போதும்கூட சர்வதேசம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் சர்வதேசம் நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக நடந்து கொண்டது. தமிழீழ விடுதiலைப் புலிகள் இயக்கத்தின் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சர்வதேசம் மேற்கொண்டதன் மூலம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அது ஒடுக்க முனைந்தது. அத்தோடு மட்டும் நின்றுவிடாமல், மகத்தான புனருத்தாரண, புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர்புனர் வாழ்வுக் கழகத்தின் நிதியை முடக்கி வைத்ததன் மூலம், தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகத் தான் செயல்படுவதையும் பகிரங்கப்படுத்திக் கொண்டது.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் குறித்து, மேற்குலகம் வெறுமனே அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர செயல் வடிவம் எதுவுமே கொடுக்கவில்லை. மாறாகச் சிறிலங்கா அரசிற்கு மேலும் மேலும் ஆயுத உதவிகளைச் செய்து வருவதன் மூலம், மேற்குலகம் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குத் துணையாக நிற்கின்றது. இன்று சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை தமிழ் மக்கள் மீதான யுத்தச் செலவாக, சிறிலங்கா அரசு தன்னுடைய வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதையும் இதே சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் சும்மா நிற்கின்றது.

இந்தியா உட்பட, சர்வதேசம் தன்னுடைய மதிப்பை இழந்து கொண்டு வருகின்றது. இவைகள் தங்களுடைய கொள்கையை அடியோடு மாற்றி, நேர்மையான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது என்பது எமது கருத்தாகும்!

இன்று மிகப் பெரிய சக்திகள், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இடையூறாக, எதிராக, நியாயத்திற்குப் புறம்பாக இருக்கின்ற போதும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிகச் சரியான முறையில் நகர்த்திச் செல்கின்றார். கிடைத்தற்கரிய அந்த மகத்தான தலைவனின் விடுதலை வேட்கையும், உறுதியும், அர்ப்பணிப்பும், தன் நம்பிக்கையும், போராளிகளின் தாகமும், மாவீரர்களின் தியாகமும் எமது விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் வெற்றி கொள்ள வைக்கும்.

இன்று புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் முற்று முழுதாக தமது எழுச்சியை வெளிக் காட்டாது போனாலும், ஓர் ஆழமான கருத்து நிலையை, உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களும் இதே நிலையை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவை யாவும் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் ஊக்கத்தைத் தருகின்ற விடயங்களாகும்!

இந்த ஊக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும், அதற்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க வேண்டியதும், நம் எல்லோருடைய தார்மீகக் கடமையாகும். இந்த மாவீரர் தினமாகிய, புனித தினத்திலே, மாவீரர் கனவை நனவாக்குகின்ற உறுதியை எடுத்து, எமது தேசியத் தலைவரின் கரங்களை மேலும் பலப்படுத்துவதன் மூலம், எமது தாயக விடுதலையைத் துரிதப்படுத்துவோம்.

மாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home