Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > கவிப்பேரரசு வைரமுத்து - Kavi Perarasu Vairamuthu > Lyrics

Kavi Perarasu Vairamuthu
கவிப்பேரரசு வைரமுத்து

Selected Lyrics

ஆயிரத்தில் நான் ஒருவன்
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
எங்கே எனது கவிதை
ஒருவன் ஒருவன் முதலாளி
சந்தனத் தென்றலை
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்ணாமூச்சி ஏனடா
ஸ்மையையையை ஸ்மையையை
கொஞ்சும் மைனாக்களே எங்கே
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
மெட்டுப்போடு மெட்டுப்போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
நானொரு சிந்து காவடிச்சிந்து

 

ஆயிரத்தில் நான் ஒருவன்

ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில்)

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கட்டுத் தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வைத்துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்குக் கூலிவாங்கிக் கொடுப்பேன் உண்மைக்குக் காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில்)

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

(ஆயிரத்தில்)
 

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை)
 

எங்கே எனது கவிதை

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

 

ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை (2)
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

(ஒருவன்)

வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

(ஒருவன்)

 

சந்தனத் தென்றலை

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா

என்ன சொல்லப் போகிறாய்


கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ...
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்


கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா


ஸ்மையையையை ஸ்மையையை

ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்

ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ (2)

ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு Eண்IEEற் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா
ஒளித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா
கண்ணிலே யே யே யே சொப்பனம் கரையுதே யே யே யே எவ்வனம்
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று யையையையா

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையை

நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் யேயேயேயே

ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு Eண்IEEற் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இளை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ


கொஞ்சும் மைனாக்களே


கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ
கனவே கை சேர வா

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம் (2)
பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்
 

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

 

மெட்டுப்போடு மெட்டுப்போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனையெத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

(மெட்டுப்போடு)

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

இது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

(மெட்டுப்போடு)

இனி கண்ணீர் வேண்டாம் புதுக்கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க

(மெட்டுப்போடு)

 

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

 

நானொரு சிந்து காவடிச்சிந்து

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

(நானொரு சிந்து)

பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home