பதாகத் திரிபதாக வர்த்த பதாககர்த்
தரிம யூரம் சுதாவர்த் தசந்த்ர னோட ராளசுக துண்ட முட்டி சதாசிக ரங்க
பித்தந் தகுகட காமு கஞ்சூ சிதானெனப் பதும கோசஞ் சிரசர்ப்ப மிருக சீர்ஷம்.
|
...161 |
தருசிம்ம முககாங் கூல மலபதுமந்
தானாம் பாணம் பிரமரஞ் சந்தம் சம்தாம் பிரசூட முகுள மாஞ்ச துரமமு சாசியமமு
சப்பக் கஞ்சொலும் பூர்ண நாபங் கருதிரு பத்தெட் டாமொற் றைக்கையி லக்க
ணங்கேள்.
|
...162 |
1. பதாக ஹஸ்தம் பிறப்பு
அப்பதா கம்பி றந்த தயனிட மதன்கு
லங்கேள் முப்புரி நூலோ னாகு மொழிநிறம் வெண்மை யாகும் அப்பணிந் திலகு
மீசன் அதற்கிரு டியெனத் தோன்றும் செப்பிய வதிதெய் வந்தான் றிருமாலென்
றோது நூலே.
|
...163 |
இலக்கணமும் விநியோகமும்
அங்குலி நாலு நீட்டி அங்குட்டந் தனை வளைத்த செங்கையைப் பதாக மென்று
செப்பினர் விநியோகங் கேள் மங்கையே நாட்யா ரம்பம் வாரிநீ ரோடல் காடு
தங்குமிந் துவைநிந் தித்த தனதடங் கட்கு மாமே.
|
...164 |
அஞ்சன மலைகா ரோலை அங்கனம் நடன
பாவம் நெஞ்சென அரசன் மாவு நிலமதி கதவு வீதி பஞ்சணை விபக்தி யேழும் பந்தடி
காற்று முன்னம் மிஞ்சியே நதியி லோடும் வெள்ளத்தின் மீது நீச்சாம்.
|
...165 |
நீச்சுடன் மௌனஞ் சத்தியம்
நிலைவிலாக் காலங் கந்தப் பூச்சுடன் சமர்த்தன் புண்ணியன் போதனை போகச் சொல்லல்
ஆச்செனப் பெருக்கித் தீத்த லளந்திடு முழமும் வேலும் ஏச்சுன சூதுக் காயை
யெறிந்திடல் வெயில் மறைப்பாம்.
|
...166 |
மறைப்புடன் வாளின் ரூபம்
வளர்த்தியுங் குட்டை கூதல் விரைப்புடன் காய்தல் வீரம் வெகுதய வாசீர் வாதம்
சிறப்புள தெய்வ லோகத் தினைகட்டு நீட்ட லூணல் உறப்புடன் செவிடு தன்னி
லோங்கியே யடித்த லாமே.
|
...167 |
அடித்திடும் பெரியோர் கண்டிப்
பகங்கையாற் றயிரின் மத்தைப் பிடித்துக் கடைத் மூடல பெருவழி நடத்தல் வேண்டாம்
அடித்திட வடேயென் றேசி யழைத்தலுந் தொடுதல் தன்னைப் படித்திட வுரைக்குங்
கையின் பதாகமே வருமென் றோதே.
|
...168 |
சங்கீர்ணபதாகம்
பதாகமென்
றுரைத்த நந்தி பரதத்திற் குகந்த கையில் விதாயமாய் மத்திமத்தை விரைவுடன்
மடக்கிச் சுட்டைச் சுதாவுடன் நாமி கத்தாற் றொட்டுமே நீட்டி நாக்காற்
சதாபுகழ் பெண்கள் தங்கள் தானத்தி லுருவந் தானே.
|
...169 |
தானென வுரைத்த ரூபந் தண்ணீர்பால்
வருஷம் மாசம் ஏனெனக் கேட்டல் துக்கம் வில்லினைப் பிடித்தி ழுத்தல் மோனமா
மழைவி கார மொய்குழல் விளக்கு மாறுபோல் நானெனக் கையாற் றூத்தல் நலமுடன்
தியானம் கேட்பாய்.
|
...170 |
கேட்டிடு மனையிற் கந்தங்
கிண்ணத்திற் றொடுதல் ரூபத் தீட்டியாங் காடா லிங்ன மதின்மகிழ் சுரத லீலை
நாட்டிய பூரட் டாதி நல்கவே யநுமந் தன்றன் பாட்டிலே சங்கீர் ணப்ப தாகமென்
றுரைத்தான் பாரே.
|
...171 |
சிலிட்ட பதாகம்
பாருமே
பதாகந் தன்னிற் பதிகனி வளையு மாகி சாருமே குக்க விற்குந் தானணி முதுகி
னிற்கும் நீரிந் மேல் வட்டப் பூச்சி நிகழ்த்துமர்ச் சுனம தத்திற் கூறுமே
யிதுசி லிட்ட பதாகமென் றுைாத்தல் கொள்ளே.
|
...172 |
தலபதாகம்
அணிபதா கக்க
ரத்தி லங்குட்டங் கனியு யர்த்தித் தணியவே மற்ற மூன்று விரல்தனைச் சாடை யாக
நுனிதனை யடக்கிக் காட்டல் நுவல்தல பதாகைக் கையாம் பணியுலா விநியோ கந்தான்
உடும்புக்கும் பகர லாமே.
|
...173 |
பகருமே நரம்பி ழுத்துப் பதைத்திடு
ஜன்னி ரோகம் தகையுள குட்ட ரோகஞ் சார்ந்திடு ராமப் பற்றும் அகமகிழ்ந் தோது
மின்ன மகத்தியின் மலர்க ளுக்கும் தகுமென விநாய கன்றன் மதத்தினிற் சாற்றும்
பாரே.
|
...174 |
2. திரிபதாக அஸ்தம்
இத்திரி பதாகந் தோன்று மிணங்கவே மாலி டத்திற் சுத்தமாஞ் சாதி வேந்தன்
துலங்கிய நிறம்சி வப்பாம் சத்திவேற் கரத்திற் கொண்ட சாமியே யிருடி யாகும்
சித்தியா மதிதெய் வந்தான் சிவனெனச் சொல்லு நூலே.
|
...175 |
அன்னமே பதாகந் தன்னி லநாமிகாங்
குலியா மொன்று தன்னையே வளைக்கத் திரிபதா கம்விநி யோகங் கேளு மன்னிய வருட
மாதம் வருருது தினங்க ளுக்கும் முன்னிய வாரு கோற்கு முயுத்தங்க ளுக்கும்
விள்ளே.
|
...176 |
விண்டதோர் கபோல ரேகை விளங்கிய
திருமா லுக்கும் சண்டையிற் பாணம் போடல் தரிக்கும் கிரீடம் கோபம் எண்டிசை
புகழ்தே வேந்த்ர னிலகிய திலதம் நாமம் மண்டிய வாசங் காலும் மன்கள மரமு மாமே.
|
...177 |
மரமுடன் சுடர்வி ளக்கு வச்சிரா
யுதமே நெஞ்சில் திரமுடன் வைத்தால் ஞானச் செவிக்கரு கிடநி மித்தம் உரமுடன்
தபித்தால் வைதல் ஓங்கிய மூன்று மாகும் திரமறிந் தளித்து வாங்க றம்பதி
சேர்க்கை யாமே.
|
...178 |
தானெனப் புருவ மத்தி தன்னிலே
வைத்தாற் றெய்வம் ஆனதோர் முகத்தி னேரா யமைத்திடி லோட மாகும் மானமாய்ப்
புயத்தில் வைத்தால் வம்சமாம் சவாதெ டுத்தல் நானென வுரைக்கும் வீர ரசமுடன்
றாழம் பூவே. .
|
..179 |
சலிதந்திரி பதாகம்
திரிபதா கத்த சைத்தாற் செலுமது சலித மென்னும் திரிபதா கமதா மீதுதிக ழீட்டி
திருப்ப றூளைக் குறுகவே குவிப்ப தற்குங் குடுகுடுப் பையையாட் டற்கும்
பெருமரக் கொம்பா டற்கு பலத்தரோ கணிக்கு மாமே.
|
...180 |
3. அர்த்த பதாகம்
சொல்லுமர்த் தபதா கந்தான் தோன்றும்பி ருகுவி டத்தில் புல்லுமே குலத்தில்
வேந்தன் புகழ்நிறம் பொன்ன தாகும் அல்லலில் லாம லோது மப்பிரு கிருடி யென்றே
சொல்லுமே யதிதெய் வந்தான் திருமாலுஞ் சிவனு மாமே.
|
...181 |
கண்டதி ரிபதா கத்திற் கனிட்டிகை
தனைவ ளைத்துக் கொண்டதர்த் தபதா கம்பின் கூறிய விநியோ கங்கேள் வண்டமிழ்ப்
பலகை தீரம் வருமிரு பேர்க ளென்னல் துண்டிக்குஞ் சூர்க்கந் திக்குந்
துவசத்துஞ் சிகரத் தாமே.
|
...182 |
வக்கிரார்த்த பதாகம்
தக்கவர்த் தபதா கத்திற் றற்சனி மத்தி மத்தை வக்கிர மாய்வ ளைத்தல் வக்ரார்த்த
பதாக மீது மிக்கவங் குசமு நீள்பல் வேடதா ரிக்கு மீன்கொத் திக்குமி
டுக்கித் தேள்கொ டுக்கிற்குஞ் செப்ப லாமே.
|
...183 |
4. கர்த்தரீமுக அஸ்தம்
இக்கர்த்த ரீமு கந்தா னிறையோ னிடத்திற் றோன்றும் முக்கிய குலமாம் வேந்தன்
மொழிநிறஞ் சிவப்ப தாகும் தொக்குலா விருடி யேவ ருணனதி தெய்வந் தோன்றும்
சக்கரந் தாங்கும் கையோ னென்னவே சாற்று நூலே.
|
...184 |
அர்த்தப தாகத் திற்றச் சனிகனி
பின்ன தாக வைத்தல் கர்த்தரி முகக்கை வயணங் கேளாண் பெண்ணைப்பி ரித்திடல்
விபரீ தங்கள் புரண்டிடல் கண்க டைக்கு மொய்த்திடு மரணம் பேத முகில்மின்ன
லுக்கு மாமே.
|
...185 |
வையத்தில் வீழ்த லுக்கும்
வளர்கொடி களுக்கும் போக சையோகம் விரகத் திந்குந் தனிக்கோல மிடுத லுக்கும்
பையதோ முகமாய் ைக்கப் பட்சிகண் மூக்கிற் காகும் எய்யுமுத் வேஷ்டி தத்தா
விதயவி கார மாமே.
|
...186 |
ஆமது சந்த டிக்கு மாகுபுங்
கிதமாம் வேகம் தாமது சிரமேல் வைக்கச் சாவென்பர் நெற்றி தன்னில் போமது
நிந்த னைக்கும் பொருந்திய சோத னைக்கும் மாமார்பு நேராய் வைத்தல் மனதுபே
தித்த லாமே.
|
...187 |
மதிபே தங்க ளிரட்டை மஞ்சமாம் நாபி
தன்னில் இதமுடன் வைத்த லாழ்ந்த இதவஞ்ச கபட மாகும் விதங்களிப் பொருளை
யெல்லாம் விதித்தனர் பரத நூலோர் கதிகர்த்த ரீமு கக்கைக் காம்விநி யோக
மென்றே.
|
...188 |
சிலிட்ட கர்த்தரீமுகம்
கர்த்தரீ முகக்கை யின்றன் கவட்டுக்கு ளங்குட் டத்தை வைத்தது புதனுக் காகும்
வன்னிம ரம்வ ராளிக் கத்தமா மெனவே சுங்கன் பரதத்தி னிற்சி விட்டக்
கர்த்தரி முகக்கை நேர்மை கருதிய தறிந்து கொள்ளே.
|
...189 |
5. மயூர அஸ்தம்
ஆகிய
விம்ம யூர மழையுண்டோ னிடத்திற் றோன்றும் நீகமா கியகு லத்தில் விஞ்சையன்
நிறங்க றுப்பாம் சோகந்தீ ரிருடி யாகுஞ் சுகனதி தெய்வ மேக வாகன னாகு மெ்றே
வழுத்தினர் பரத நூலோர்.
|
...190 |
மையுரு கர்த்த ரிக்கை வருமிலக்
கணத்த நாமி கையுட னங்குட் டத்தைக் கலந்திட மயூர மாகும் வையுறும் விநியோ
கங்கேள் மயிலுக்குங் கொடிக ளுக்கும் எய்யுமாஞ் சக்க ரத்தோ டியல்கூந் தலுக்கு
மாமே.
|
...191 |
கூந்தற் சிறுக்க ணிக்குங்
குடுகுடுப் பைக்குங் கோல வாந்திசெய் வதற்கும் ரத்ந மலர்மாலை சாற்ற லுக்கும்
பாந்தமா மரியா தைக்கும் பட்சியின் கூட்டத் துக்கும் ஏந்திய நுதலில் நாம
மிடல்தி லகத்து மாமே.
|
..192 |
மேலதா மைதீட் டற்கும் விழிநீரைச்
சிதறு தற்கும் சாலவே பயங்காட் டற்குஞ் சாத்திர வாதத் திற்கும் ஆலஞ்சேர்
விழியி னாளே யருள்பிராணா யாமத் திற்கும் மாலதாய்க் கமழ்ந்து பூத்த மலர்கொய்த
லுக்கு மாமே.
|
...193 |
சிலிட்ட மயூரம்
ஆகுமே
மயூரந் தன்னி லழகிய மத்தி மத்தைத் தாகமாய் வளைக்கச் செய்வாய் தன்னுடன்
பரிக்கு மென்றே பாகமாய் விளக்குஞ் சுக்ர பரதத்தி லுதிற்ற வாற்றை யூகஞ்சே
ருஞ்சி லிட்ட மயூரமா யுரைத்த வாறே.
|
...194 |
6. அர்த்த சந்திர அஸ்தம்
துதிக்குமிவ் வர்த்த சந்திரன் றோன்றுமம் புலியிடத்தே மதிக்கின்ற குலமாம்
வைசியன் வண்ணமே தூம மாகும் கதியரு ளிருடி யத்திரி கருதுமே யதிதெய் வந்தான்
விதிதலை கையிற் கொண்டோ னென்னவே விள்ளு நூலே.
|
...195 |
திட்டம்ப தாகக் கையிற் சேருமங்
குட்டந் தன்னைச் சட்டமாய் நீட்ட வர்த்த சந்த்ரனாம் விநியோ கங்கேள்
அட்டமிச் சந்தி ரன்பல் லாயுதங் கண்டத் திற்கை இட்டுத்தள் ளவுந்தே வாபி
டேகங்க ளுக்குந் தானே.
|
...196 |
பாத்திரங் களுக்கு மேவும்
பவங்கட்கு மிடைக்க மென்ப சாத்திய தியானங் கட்குந் தனக்குள்சிந் தைக்கு
மென்பி ராத்தினை களுக்கு மூணர் பால்நமஸ் காரங் கட்கும் காத்திரன் தொடவு
மேவுங் கரமர்த்த சந்த்ரன் றானே.
|
...197 |
தான்சர நோட்டம் பார்த்தற்
றனிப்பாவங் கேள்வி கேட்டல் வானுறு குயவன் கையால் மண்பிடித் திடலோ டொத்து
யானைக்கா தசைத்தல் வில்லி னடையாளங் காட்டப் பெண்கள் கானமா மஞ்சட் பூசற்
கண்ணாடி பார்த்தல் சொல்லே.
|
...198 |
சொல்லுவ ரிடைபி டித்தற் சூழுமாத்
திரையைத் தள்ளி புல்லிய தாள மொத்து போடுதல் பிரதிபிம் பத்தின் வல்லிய
வர்த்த சந்த்ர பாணத்தும் பொருந்து மென்று கல்விசேர் பரத நூலோர் காட்டு
மிவ்வாறு ணர்ந்தே.
|
...199 |
தெரியக்கை ரேகை பார்த்தல்
திரிப்பதாங் கயிறு நூற்கும் தரையிற்கை கூடு தற்குந் தலைசுற்றி யாடு தற்கும்
நெரிநெட்டி சுற்று தற்கும் நிகழ்த்துங் கர்ப்பூர தீபங் கரமுகம் வைப்ப
தற்கும் கதிரொளி பார்ப்ப தென்னே.
|
...200 |
என்னவே பண்டி தன்கை காட்டென
நீட்டு தற்கும் இன்னும் பாணத் திற்கை யிதமுட னீர்ப்புரோ க்ஷித்தல் நன்னய
மாகக் கண்ணா டிக்குப மான மென்பர் கன்னியே அர்த்த சந்திரன் கைதனை யாய்ந்து
ணர்ந்தே.
|
...201 |
ஆயந்தகன் னத்தில் வைக்கி
லதுவேசிந் தனையாஞ் செல்வம் தோய்ந்தமுன் கையில் வைக்கில் துலங்கிய கடக மேதான்
வாய்ந்தப வேஷ்டி தச்சீர் வைத்திடிர் புலிய தாகும் காய்ந்தொளிர் கழுத்தில்
வைக்கிற் கருதுப்ப சத்திற் கென்னே.
|
...202< |
கருதுங்கா தருகே வைத்தால்
காணுமாச் சரிய முந்திக் கருகிடை மிடையிற் பூண்ட லம்பிய சதங்கைக் காகும்
பெருகிய மார்பின் கிட்டப் பிடித்திடத் தியான மாகும் செருவிய புயத்தில்
வைத்தாற் கருடனுஞ் சிறகு மாமே.
|
...203 |
ஓதிய முகத்தி னேரா யசைத்ததை யுறநி
றுத்தத் தீதிலாக் கதலி வாழை மரத்திற்குங் கலகத் திற்கும் நீதிசேர்
மூக்கின் முன்னே யசையாம லிருத்த நீழல் போதவே யர்த்த சந்த்ரன் விநியோகம்
பொருந்தும் பாரே.
|
...204 |
சிலிட்ட சந்திரன், யுக்த
சந்திரன்.
பாரர்த்த சந்திர னிற்க னிவளைக்கச் சிலிட்ட சந்திரன்
கூர்சுங் கனுக்கென் றேசுக் கிரபர தத்திற் கூறும் நேரணி வளைக்க யுக்த சந்திர
னைந்தாம் பிறைக்கும் ஊருத்தி ராடங் கெள்ளைக் கோதுமர்ச் சுனம தத்தே.
|
...205 |
இரேகா சந்திரன்
யுத்தசந் திரக்கை தன்னி லூருமத் திமைவ ளைக்க முக்திசே ரிரேகா சந்திரன்
உரைசனி திரிபு ரைக்கும் பக்தியாங் கண்டா ராகம் பகர்சுக்ர பரதத் தேவி
யக்தவு ரைத்த சொல்லை யறிந்தபி நயிக்க வென்றே.
|
...206 |
மானேதற் சனியங்குட்ட நீட்டிமற்
றதைம டக்க மீனெனு மிரேகா சந்த்ர விநியோகம் விநயம் ஞானம் மானமாம் கியாதி
நன்மை நன்மையென் பதற்கும் வாழ்த்தும் தேனேசந் திரக லாவாய்ச் செப்பின
னிதைத்தா னந்தி.
|
...207 |
தலரேகா சந்திரன்
தகுரேகா சந்திர னிற்றற் சனியங்குட் டம்வ ளைத்தல் மிகுதல ரேகா சந்திரன்
விநியோக மீச விருக்ஷம் அகத்திப்பூ வளையம் பின்ன மகமகிழ்ந் தருளு மாதே
இகத்தினி லொற்றைக் கொம்ப னியம்பினன் பரத நூலில்.
|
...208 |
அராள அஸ்தம்
இடுமிவ்
வராளத் திற்கு மியல்பென்னும் பரத நூலில் குடத்துதித் தோன்பாற் றோன்றும்
குலமது பலவ தாகும் கடுநிறம் வெள்ளை யாமக் கலசச்சே யிருடி யாகும் தொடுமதி
தெய்வ மப்பிற் றுயிலுமந் நெடியோ னென்றே.
|
...209 |
தயலே பதாகந் தன்னிற் றற்சனி தனைவ
ளைத்த கையரா ளமதே யாகும் விநியோகங் கருதக் கேளாய் மெய்யுகந் தமுத பானம்
விடபானங் களுக்கு மென்றும் வையகத் திற்பிர சண்ட வாயுவிற் காகு மென்னே.
|
...210 |
நேமித்த பந்து மார்க்க
நிர்த்தமாந் தராசு நிற்றற் காமின்னஞ் சக்ர வாளப் பட்சிக்காம் காதில் வைக்கத்
தாமது போத னைக்கா மார்பினிற் பெருமை சாரும் சேமமாய் நுதலில் வைத்தால்
அமாவாசை யெனவே செப்பும்.
|
..211 |
சேர்த்தது நாபி தன்னில் வைத்திடல்
நீர்ச்சு ழிக்காம் பூர்த்தியாய் மார்பு நேரிற் புங்கித மாக வைக்க
நேர்த்தியாம் விழிய ணங்கே நிகழ்கூசி மார னாகும் பார்த்துநீ யராளக் கையின்
பகர்விநி யோக மென்னே.
|
...212 |
சிலிட்ட அராளம்
அராளமா
மஸ்தந் தன்னி லடுத்தமத் திமைவ ளைக்கப் புறாமுதற் பட்சி கட்காம் புகலுங்கொங்
கணதே சத்தும் பராவிய துசாவந் திக்கும் பகருமென் றனுமந் தன்றான் நிராம
யஞ்சி லிட்ட வராளமாம் நிகழ்த்தி னானே.
|
...213 |
8. சுகதுண்ட அஸ்தம்
இதம்பெறப் பரத நூலோ ரியம்பினர் சுகதுண் டந்தான் உதித்தது துர்க்கை தன்னு
ளுயர்குல மறையோ னாகும் மதித்திடு நிறஞ்சி வப்பு வன்முனி தூரு வாசன்
எதித்திடு மதிதெய் வம்ம ரீசியே யாகு மென்றே.
|
...214 |
அகமகி ழராளந் தன்னி லநாமிகை
விரல்வ ளைத்தால் சுகதுண்ட வஸ்த மாகுஞ் சொல்விநி யோகங் கேளாய் பகர்பண
மெய்த லுக்ர பாவனை களுக்கு மற்றும்
மகிழுமுள் ளர்த்தங் கட்கு மர்மங்க டனக்கு மாமே.
|
...215 |
உக்கிர வுத்திரா கார முகந்தசொற்
பகுத்துக் காட்டல் தக்கதோ ரீட்டி கட்குஞ் சாளய நாட்டி யத்தும் நிக்கபுங்
கிதமாய் வைக்க நிகழ்பிண்டி பாலத் திற்கும் மிக்கவா யுதங்க ளுக்கு மேவுமிச்
சுகதண் டக்கை.
|
...216 |
தானக் கரமே நோக்கத் தததுண்ட நாய
னுக்கும் வானத்தைப் பார்த்த வஸ்தம் விரல்மணிக் கையோ டொத்துப் பானுபோற்
சுற்றி யாடல் பாஞ்சால புருட னுக்காம் மோனமாஞ் சுகதுண் டக்கை விநியோக முறையி
தாமே.
|
...217 |
சிலிட்ட சுகதுண்டம்
ஆகுமே சுகதுண் டத்தி லடிநுனி சேரா வண்ணம் தாகமாய் மத்தி மத்தை வளைத்திடில்
விருச்சி கந்தான் எகமாங் கங்கை நீரில் எழில்மண்ணி லூர்ஜெந் துவிற்கும்
பாகமா யறிந்து கூறும் பயன் சிலிட்ட சுகதுண் டத்தே.
|
...218 |
பிரம சுகதுண்டம்
நிகடகா முகத்திற் றற்சனி யங்குட்டம் கூட்டிப் பிரம்ம சுகதண்டம் விநியோகம்
வைரி முதற்பக்கி கட்குச் சொல்லும் அகமகிழ்ந் திவற்றை யெல்லா மம்பிகை யருளும்
யானை முகவன்றன் மதத்தில் நன்றாய் முழங்கிய தறிந்து கூறே.
|
...219 |
9. முட்டி அஸ்தம்
ஓதுமிம் முட்டிக் கைதா னுதித்தது மானி டத்தில் நீதன்சேர் குலத்திற்
சூத்திரன் நிறமது நீல் மாகும் ஆதர வாமு ருத்திர னிருஷியா மதிதெய் வந்தான்
மீதுரை செய்யு நூலில் வீரபத் திரனா மென்றே.
|
...220 |
அங்குலி நாலையு முள்ளங் கையின்
வளைத்த தன்மேல் அங்குட்டம் வளைத்தால் முட்டி யஸ்தமாம் விநியோ கங்கேள்
தங்கிய திறங்க ளுக்குந் தலைமயிர் பிடிப்ப தற்கும் திங்கள்மல் லர்கள் யுத்தம்
சேலைகட் டுதற்கி யம்பே.
|
...221 |
இடுப்பொரு பிடியாங் கோப மீனர்கள்
வந்த னத்தும் பிடிவாத மென்ப தற்கும் பின்புசா திப்ப தற்கும் நெடியமன்
மந்தி ரிக்கும் பரசுநேர் பிடிப்ப தற்கும் கொடியாங் கேத ஸ்தானங் குறிப்பிட
மாகும் பாரே.
|
...222 |
பாருமே மார்பில் வைக்கப் பதருண்ட
நாய னுக்கும் சாருமே பலபொ ருட்கள் தனித்தனி பிடிப்ப தற்கும் சேருமே பரத
நூலிற் செப்பிடு புலன றிந்து கூருமே முட்டிக் கையிற் குறித்தது விநியோ
கம்மே.
|
...223 |
அர்த்தமுட்டி சிலிட்டமுட்டி
யோகமா முட்டி தன்னி லுள்நடு வங்குட் டத்தைத் தாகமாய் நுழைய வைத்தல்
சலத்தினுட் பறவைக் கெல்லாம் ஆகுமே தற்ச னிக்குள் ளமைத்திடிற் பெண்கள் பூவாம்
பாகக்கை யர்த்த முட்டி பகர்சிலிட்ட முட்டிக் கையே.
|
...224 |
சங்கீர்ணமுட்டி
முட்டியில் மத்தி மத்தோ டணிகனி முன்பு நீளிற் கெட்டிதுப் பாக்கி வாயி
னுரல்கே ணித்துணைக ளுக்கும் வட்டமாம் பரத நூலில் வகுத்திடு மேசங் கீர்ண
முட்டிக்கை யென்றே கோரட் சகன்மத முழங்கும் வாறே.
|
...225 |
10. சிகர அஸ்தம்
இச்சிக ரக்கை தோன்று மீசன்பார் குலங்கந் தருவன் நச்சிலா நிறங்க றுப்பு
நவிலுமே யிருடி யாக அர்ச்சுன னாகு மென்றே யதினதி தெய்வ மாகிப் பச்சைவில்
லுடைய மார னென்னவே பகரு நூலே.
|
...226 |
உதவிய முட்டி அஸ்தத் துயரவங்
குட்ட நீட்ட இதமுறுஞ் சிகர மாகு மிதற்கினி வினியோ கங்கேள் அதரத்திற்
கும்வில் லிற்கு மாலிங்க னங்க ளுக்கும் மதனுக்கு மிலிங்கத் திற்கு நிச்சய
வரம்பிற் காமே.
|
...227 |
இல்லையென் பதுநி னைத்த லிளைத்தரூ
பங்கள் நாதம் பல்லுடன் பிதிருகர்மம் பக்கங்க ளிற்கு மென்ப நல்லபி நயனா
ரம்ப நாதஞ்சேர் மணிக ளுக்கும் மெல்லிய ரிடையிற் கட்டி விரைந்திழுக் கவுந்தா
னாமே.
|
...228 |
ஆமெனுங் குழல்வ குத்துக் கோதுத
லைங்க ரற்கும் நேமமால் வணங்கிக் கொட்டுங் கோபுரஞ் சிகர நேராம் காமியர்
லீலை தன்னில் நகக்குறி காட்டு தற்கும் மாமலை வேலன் கையில் பிடித்திடும்
வேற்கு மாமே.
|
...229 |
ஆனன நேராய் வைக்க வற்பனாம் புயனே
ராகத் தானது வைக்க நோய்த்த ததுண்ட நாய னுக்கும் மானமாங் கண்ட நேராய்
வைக்கச் சிநேக னாகும் பூணுமே வியாவி ருத்தம் பரிவிருத்தம் பொருந்த வோட்டம்.
|
...230 |
பொருந்துகை மார்பு நேராய்ச்
சலனமாய்ப் பிடிக்க வப்போ வரிந்தோலை யெழுது தற்கும் வாகான வெழுத்தா ணிக்கும்
அறிந்துணர் பரத நூலோ ரருளிய சிகரக் கையின் திருந்திய விநியோ கங்கேள் செப்பின
ரெவருங் காண.
|
...231 |
அர்த்த சிகரம்
செப்பிய
சிகரந் தன்னி லணிகனி சேர நீண்டு நிற்பதூர்க் குருவிக் காகு நெய்காட் டுப்பு
றாவும் ஒப்பவே கோக ளன்றன் மதத்தினி லுதித்த நாமம் எப்பவும் புகல்வா
ரர்த்த சிகரக்கை யென்றி யம்பே.
|
...232 |
சங்கீர்ண சிகரம்
கூறுமுட் டியிலங் குட்டங் கொஞ்சமா யெடுத்தி டச்சங் கீரணச் சிகர மாகும்
விநியோகங் கழுகுக் கென்றும் சீருறும் பரத நூலிற் செப்பின ருலகிற் காணப்
பேருறும் கோக ளன்ம தத்தினிற் பெரிதாய் மானே.
|
...233 |
11. கபித்த அஸ்தம்
சொல்லிய விக்க பித்தந் தோன்றுமே மாலி டத்தில் புல்குல மிருடி வண்ணம் புகலுமே
வெண்சி வப்பு அல்லிலா விருடி நார தன்னதி தெய்வ மாகும் வில்லெனும் பிரம
னென்றே விண்டனர் பரத நூலோர்.
|
..234 |
இச்சையாஞ் சிகரந் தன்னி லிலங்கும்
குட்டந் தன்னைத்
தர்ச்சினி யுடனே சேர்த்த தாகுமே கபித்த வஸ்தம் லட்சுமி பார்வ திக்கும்
நீள்வலை வீசு தற்கும் பச்சமாய்ச் சித்தி ரம்போற் படமெழு திடவே யாகும்.
|
...235 |
விரும்பிய தூப தீபம் வெட்டெனுந்
தாளங் கட்கும் பிரம்புகள் கவரி யால வட்டத்தைப் பிடிப்ப தற்கும் நிரம்புமா
லாத்தி யேந்த லெழுத்தாணி தீட்டு தல்நேர் இருபுறங் காட்டு கின்ற கயிறது
பிடிப்ப தென்னே.
|
...236 |
தெருவில்லுண் டைகள் தராசு
துலாக்கோல் களைப்பிடித்தல் பரகூசி துண்டி பிண்டம் பசுமுலைப் பால்க றத்தல்
விரசுள்ள நெசவு நூலைப் பிடித்திடல் விரல்நி மிர்த்தல் இறைப்பது தானி யத்து
மிபத்துக் கோல்பி டித்தல்.
|
...237 |
பிடிஜப மாலை தன்னைச் செபித்தலு
மோலை தன்னைப் பிடித்ததை வாரு தற்கும் பின்புவாத் தியமு ழக்கம் அடிமுர
சாதி கத்தி னதின்வாரைத் தொட்டி ழுத்தல் வடித்தமுக் காடு போடல் மலர்ச்செண்டு
தரிப்ப தாமே.
|
...238 |
ஆக்கவே வதன நேராய் வைக்கவா கரிஷ
ணத்தாம் பார்க்கவே புகைபா ணத்துப் பகர்நெற்றி சமயங் காலம் நோக்கவி ரண்டு
கையால் நுவலிடி வருண னுக்காம் ஏற்கவே கபித்தக் கையின் விநியோக மென்றி யம்பே.
|
...239 |
சிலிட்ட கபித்தம் அர்த்த கபித்தம்
இயம்புங்க பித்தந் தன்னி லெழுகனி விரலை நீட்ட நயம்பெறுங் குயிலுங் கிள்ளை
நவிலுமா ளவதே சத்தும் செய்லிட் டக்க பித்தஞ் சேரணி விரலை நீட்டும்
கையர்த்த கபித்த நாண வந்தான்கா னாங்கோ ழிக்கே.
|
...240 |
தெலுங்கெழு தெழுத்தா ணிக்கை
பிடித்திடல் மைனா விற்கும் நலுங்கிடற் கோலம் போடல் நாட்டிய காகங் கோழி
சலங்களிற் றிரியும் நாரை கொக்குநீர்க் காக முந்தான் நிலந்தனிற் காட்டு
மர்த்த கபித்தக்கை நிகழ்த்தி னாரே
|
...241 |
12. கடகாமுக அஸ்தம்
கடகாமு கந்தோன் றும்பார்க் கவனிடங் குலத்திற் றேவன் திடமுறும் வண்ணஞ்
செம்பொன் செப்புமே யிருடி பார்த்தன் மடலவிழ் குழலி னாளே வழுத்துமே யதிதெய்
வந்தான் முடிபெறு மிராம னென்றே மொழிந்திடும் பரத நூலே.
|
...242 |
தங்குக பித்தக் கையிற் றற்சனி
மத்தி மத்தோ டங்குட்டந் தன்னை நீட்ட வதுகட காமு கந்தான் பொங்கமாய்ச் பேசு
தற்கும் பூவிற்கும் பார்வை கட்கும் துங்கமாம் நாணி லம்பு தொடுத்திழுத் திடவு
மாமே.
|
...243 |
திடமுடன் மலர்கள் கொய்தல்
செம்பொனா பரணஞ் சார்த்தல் நடைபாத சாரி நாட்யம் நவிலுந்திட் டாந்த ரத்தும்
அடைவுடன் சுருள்கொ டுத்தல் அடுப்புப்பே னாப்பி டித்துக் கடுதாசி யெழுது
தற்குங் காணலாஞ் சுவாதி முத்தி.
|
...244 |
முத்துரத் தினங்க ளுக்கு மோகநாக
வல்லி கட்கு முத்திராங் கிதங்க ளுக்கு முதிர்ந்தவா சங்க ளுக்கும் கத்தூரி
யாதி யாகக் கமழ்வஸ்துச் சிமிழ்த னக்கும் கைத்தா லேகாட் டுங்கட காமுகக் கையி
தாமே.
|
...245 |
சிலிட்ட கடகாமுகம்
கடகாமு
கக்கை தன்னிற் கனியணி விரல்கள் நீட்டி வடிவுடன் மத்தி மத்தை வளைத்திட லுமைய
வட்கும் பிடித்தெழு தோலை கையிற் பிடிசெண்டு தந்தி மீட்டல் கடிவாளம்
பிடிக்கச் சிலிஷ்ட கடகாமு கக்கை யாமே.
|
...246 |
இரத்ன கடகாமுகம்
கடகாமு
கத்திற் றற்ச னியைக்கூட்டிக் காட்ட ரத்ந கடகா முகக்கை யாகுங் கருதிய விநியோ
கங்கேள் கொடியிடை யாளே யட்ட வசுக்களுக் கெனவே கூறும் திடமுள நார தன்ம
தத்தினிற் றேர்ந்து பாரே.
|
...247 |
சூசி அஸ்தம்
பேணுமிச்
சூசிக் கைதான் பிரமதே வன்பாற் றோன்றும் நாணிலாக் குலத்திற் றேவன் நன்மைசேர்
நிறமாம் வெள்ளை தோணுமே யிருடி யாகச் சூரிய னதிதெய் வந்தான் வீணிலா விசுவ
கர்மன் என்னவே விள்ளு நூலே.
|
...248 |
கடகாமு கக்கை தன்னிற் கருதுந்தற்
சனியை நீட்டத் திடமுறு சூசி யென்று செப்பினர் விநியோ கங்கேள் படருமோ
ரர்த்தத் திற்கும் பரப்பிரம்ம பாவ னைக்கும் அடர்நூ றிலக்க மோசை யாதவ னுக்கு
மாமே.
|
...249 |
அதுவது வென்ப தற்கு மாச்ச ரியங்க
ளுக்கும் எதுவோவ தென்ப தற்கு மிசைகொள்நா மாவ ளிக்கும் கதிக்கப்
பல்விளக்கு தற்குங் காரிகா லீலை கட்கும் துதிநிலத் தெழுது தற்குந் தோன்றுதா
டனஞ்சக் ரத்தும்.
|
...250 |
சக்கரஞ் சுழற்றல் வட்டச் சடைதனத்
தவிட மாலை உக்கிரந் தானி ளைத்த வுடல்பிரித் திடமுன் மூக்கு மிக்கதுந்
துமிய டித்தல் வேளான்மண் டிரிகை வண்டில் தக்கவூ ருலகம் வெய்யிற் றங்கிய
குடைக்கு மென்ப.
|
...251 |
பக்கத்தி லுயர மாகப் பகர்கை
சாய்ந்திடரா விற்கும் நிற்குங்கை புங்கி தத்தால் நீநீர்நீங் களென்ப தற்கும்
அக்கியம் பரிவிருத் தத்தா லவளவ னவரா மென்ப சக்கிய வதோமு கத்தாற் சாற்றுநாம்
நாங்க ளென்றே. .
|
..252 |
என்றகை நெஞ்சில் வைக்கச் சத்திய
வசன மிய்யும் நின்றவ யிற்றி லாட்ட மயிர்க்கூச்சல் நேர்தூக் கிச்சு
ழன்றிடி லுருளை யாகுஞ் செவிக்குநேர் குண்ட லத்து நன்றென விநியோ கத்தால்
நாட்டிய சூசி யாமே.
|
...253 |
அர்த்த சூசி
இருந்ததோர்
கபித்தந் தன்னி லலகுதற் சனியை நீட்டத் தெரிந்திடு மர்த்த சூசி செப்பினர்
விநியோ கங்கேள் பெரும்புழு முளைக ளுக்கும் பேசிய பட்ச பாதம் சிறந்திடு
மர்த்த சூசிக் கையெனச் செப்பு மாதே.
|
...254 |
வக்ரசூசி
மாதேகேள் சூசி
தன்னிற் றற்சனி வளைக்கு மாகில் நீதியாம் வக்ர சூசி நிகழ்த்துங்கை விநியோ
கங்கேள் காதினி லணிய வாணைக் கரியஸ்த மென்றும் தைக்கும் போதூசி பிடிப்ப
தற்கும் பொருந்துமென் றுரைசெய் மானே.
|
...255 |
14. பதுமகோச அஸ்தம்
பதுமகோ சக்கை தோன்றும் பரந்தாம னிடங்கு லந்தான் மதியுள வியக்கன் வண்ணம்
வெண்மையா யிருடி வாழ்த்தும் விதியென மதிதெய் வந்தான் விள்ளும்பார்க் கவனா
மென்று சதிர்பெறு பரத நூலோர் சாற்றினர் முறைதெ ரிந்தே. ...256
அங்குலி தனைப்ப ரப்பி யைவிரல் நுனிவ ளைத்த செங்கைதான் பதும கோசஞ் செப்பினர்
விநியோ கங்கேள் பங்கய மலருக் குஞ்செம் பரத்தம்பூ விற்கும் பெண்கள்
கொங்கைக்கும் பந்ுக் கும்பூங் கொத்துக்கும் மணிக்கு மாமே.
|
...257 |
மாம்பழங் களுக்கும் புஷ்ப வருஷங்க
ளுக்கு நல்வி ளாம்பழங் களுடன் வில்வப் பழமுதற் கனிக ளுக்கும் பூம்பந்து
களுக்கு மற்ப போசன விதானங் கட்கும் தூம்படர் பூத்து வட்டந் துலங்குமுட்
டைக்கு மாமே.
|
...258 |
என்பதோ முகமாய் வைக்க வேனுகத்
தும்பிக் கையாம் நன்புமுத் வேஷ்டி தத்தால் நவிலலா மின்ன லுக்கு செம்பொடு
வெள்ளி தங்கப் பாத்திரங் கட்குங் கிண்ணி சம்பும்வி யாவி ருத்தம் பாவிருத்தஞ்
சக்கர வாளம்.
|
...259 |
ஆழிக்கும் கப்ப ரைக்கும் வளர்கபா
லங்க ளுக்கும் நாழிமி டாக்க ளுக்கு நற்றொன்னை சகோரத் திற்கும் பாழிலாத்
தேங்காய் தாளம் பழத்துக்கும் பஞ்சா னிக்கும் தோழியே பதும கோசஞ் சொல்விநி யோக
மாமே.
|
...260 |
சிலிட்ட பதுமகோசம்
வருபது
மகோசக் கையில் நுனிவிர லுள்ம டக்கில் தருசிலிட் டபது மகோச மாமுப மானந்
தானும் அருமையாங் குட்ட ரோகம் ஐந்தலை நாக மென்பார் விரிதலை கோது தற்கும்
விளம்பினர் பரத நூலோர்.
|
...261 |
15. சர்ப்ப சீர்ஷ அஸ்தம்
சர்ப்பசி ரக்கை தோன்றுஞ் சக்கரக் கையன் றன்பால் கற்பதாங் குலத்திற் றேவன்
கடுநிறம் மஞ்ச ளாகும் துப்புறு மிருடி வாச வன்சொலு மதிதெய் வந்தான்
செப்பெனு முலையி னாளே சிவனென்னச் சொல்லு நூலே.
|
...262 |
விரைசேர்ப தாகந் தன்னுள் விரல்களை
வளைத்தாற் சர்ப்ப சிரவஸ்த மாம தற்குச் செப்பினர் விநியோ கங்கேள் அரவிற்கு
மந்தத் திற்கும் யானைமத் தகங்க ளுக்கும் மருவுசந் தனங்க ளுக்கு மல்லர்தோள்
களுக்கு முன்னே.
|
...263 |
உன்னிய முனிவர் தேவ ருதகதா னங்க
ளுக்கும் தன்னிருப் பிடம்பு ரோக்ஷ ணங்களா தரவு கட்கும் மின்னலே பானை
வாத்யம் மிருகத்தின் செவிகள் தோணி கண்ணிய மாக வேறுங் கரிபரி தட்டு தற்கே.
|
...264 |
தகைக்குத்தண் ணீர்கு டித்த
லிலச்சையாய் முகம றைத்தல் சிகைக்குநற் றயிலம் வாங்கல் சிறங்கையா லள்ளு
தற்கும் பகைவரைக் கெலித்து முண்டாத் தட்டுதல் படமே ழுதுதல் குகைக்கும்
பெண்குறிக ளுக்குங் குழவியேந் தற்கு மாமே.
|
...265 |
ஆட்டுக்க லாட்டு தற்கு மம்மிக்கல்
லரைப்ப தற்கும் கூட்டிய வாசல் தன்னைச் சாணநீர் தௌிப்ப தற்கும் நாட்டியே
கோலம் போடல் நடைகிண றிறங்கு றற்கும் காட்டிய சர்ப்ப சீர்ஷக் கையென்று ரைக்கு
நூலே.
|
...266 |
சலனசர்ப்ப சிரம்
பிசகாமற்
சர்ப்ப சீர்ஷம் பிடித்துப்பெ ருவிர லாட்ட விசையெனுஞ் சலன சர்ப்ப சிரமாகும்
விநியோ கங்கேள் பசையுள மெழுகு மையுங் களைசோத னைக்குப் பற்றும் நிசமென நார
தன்ம தத்தினி னிகழ்த்து மானே.
|
...267 |
மிருகசீ ரிடமே தோன்றும் விமலிபால்
முனிக்கு லாத்தாம் வறுமைதீ ரமுத வண்ண மிருடிய தாமார்க் கண்டன் பொறுமைசே
ரதிதெய் வந்தான் புனலணிந் தோனே யாமென் றுறுதியாய்ப் பரத நூலோ ருரைத்தனர்
முறைதெ ரிந்தே.
|
...268 |
அரிசர்ப்ப சிரக்கை தன்னி
லங்குட்டங் கனியை நீட்ட மிருகசி ரக்கை யென்று விளம்பினர் விநியோ கங்கேள்
திரிபுண்ட ரத்திற் கும்நற் றிரைகளுக் கும்ப டிக்கும் கரமரி யாதை கட்குங்
கபோலங்க ளுக்கு மென்ப.
|
...269 |
பாதவிந் யாசங் கட்குப் பண்பான
பெண்க ளுக்கும் நாதங்கட் குஞ்சு வர்க்கு நல்லிருப் பிடங்க ளுக்கும்
தாதுகை பிடிப்ப தற்கு முகசலம் வழிப்ப தற்கும் கோதியே வகுப்ப தற்குங் குறிவழி
காட்டற் காமே.
|
...270 |
காலுகை குத்து தற்குங் கதிக்கநீ
றணிவ தற்கும் கோலமா விடுவ தற்குங் குடைக்கும்வி வாதங் கட்கும் சீலனை
யழைப்ப தற்குஞ் சிலைமதன் கிரகத் திற்கும் வாலிபர் கும்மி கொட்டல்
விலங்கின்றன் வதன மாமே.
|
...271 |
விண்டகை முகநே ராக்க மெள்ளப்பே
சென்ப தற்கும் பண்டுநெஞ் சதனில் வைக்கப் பகர்சிவ லிங்கத் திற்கும்
கொண்டுகண் கடையில் வைக்கச் சைக்கினை வெட்கத் திற்கும் நண்டிய சிறுபிள்
ளைக்கு னாபியில் வைத்துக் காட்டே.
|
...272 |
காட்டுங்கைப் பக்கம் நேரிற்
காணலாம் யௌவ னஸ்திரீ வாட்டமில் லாவ யிற்றில் வைத்திடப் பதுமி னிக்காம்
நாட்டிய சித்தி னிக்கே நன்மார்பு புயனே ராகச் சூட்டுதற் சங்கி னிக்காஞ்
சொல்நெற்றி யத்தி னிக்கே.
|
...273 |
சிலிட்ட மிருகசிரம்
திறமிரு கசிரந் தன்னிற் சிறுவிரல் வளைத்து நீக்கி உரமதாய்ப் பிடிப்ப தற்கே
யுரைக்கலாங் கோலிக் குண்டு தரையிற்கை தள்ளு தற்கும் தாஷ்டகே னென்ப தற்கும்
பருசிலிட்ட மிருக சீரி டக்கையாய்ப் பகர லாமே.
|
...274 |
முஷ்டிமிருகசிரம்
சங்கோசமிருகசிரம்
செகமிரு கச்சி ரத்திற் சீறுவிர லுள்வ ளைக்கத்
தகும்விநி யோகங் கொண்டு சங்கோச மிருக மென்றே நிகழுமுட் டியிற்க னிட்டாங்
குட்டத்தை விரித்து நீட்டப் புகழ்முட்டி மிருக மீதுப் புல்கலை மானுக்
கென்னே.
|
...275 |
17. சிம்மமுக அஸ்தம்
இச்சிம்ம முகமே தோன்று மினியதக் கன்பாற் சாதி மெச்சிய வேத னாகும் நிறமது
வெள்ளை யாகும் பச்சமா மிருடி வேந்தன் பகர்ந்திடு மதிதெய் வந்தான்
நச்சுடைக் கழுத்தோ னென்றே நவிலுமிப் பரத நூலே.
|
...276 |
அநாமிகை மத்தி மத்தோ டங்குட்ட
நுனிகூட் டித்தற் சனிகனிட் டிகையி ரண்டுந் தனித்தனி பரப்பி நீட்டில்
இனியசிங் கமுக மீதிற் கனியிதின் விநியோ கங்கேள் வனிதையே வோம மானை மான்முய
லுக்குந் தானே.
|
...277 |
தாதுசோ தனைக்குஞ் சிங்கா
சனத்திற்குந் தருப்பை கட்கும் ஓதுதா மரைம ணிக்கு முரைபசு மேடம் பாகம்
நீதியாய்ப் பார்ப்ப தற்கு நிகழ்புங்கி தமதாய் வைத்த போதது இடபத் திற்கு
மார்புற மோக்க மாமே.
|
...278 |
சிலிட்ட சிம்ம முகம்
சிங்கமு கக்கை தன்னிற் சிறுவிரல் வளைக்க மேலாம் திங்கள்சேர் முனிக லைக்கோட்
டின்னுப மானத் திற்கும் கங்கைநீ ரருவி கட்குங் காணுமொற் றைக்கொம் பன்வி
லங்குகள் முகந்த னக்குஞ் சிலிட்டசிங் கமுகக் கையே.
|
...279 |
வக்கிரதந்த சிம்மமுகம். சங்கீர்ண
சிம்மமுகம்
சிலிட்டசிங் கமுகக் கையிற் சேர்ந்ததற் சனிவ ளைத்து
மெலிதாய் நிற்கக் கூழைக் கிடாய்முதல் மிருகத் திற்கும் நலிவக்கி ரதந்த சிங்க
முகக்கையாம் கீழே நோக்கில் எலியணில் முகமுஞ் சூர்சங் கீர்ணசிங் கமுக
மேற்கும்.
|
...280 |
தலசிம்ம முகம்
பலசிம்
மமுகக் கையிற் பெருவிரல் நீட்டி நின்றால் தலசிம் மமுகக் கையாகுங் தங்குப
மானந் தானும் வலிய காண்டா மிருகம் வனக்கிடாய்க் கொம்பு கட்கும்
நிலைமையாய்ச் சார்ஞி தேவர் நிகழ்த்தினர் பரத நூலில்.
|
...281 |
18. காங்கூல அஸ்தம்
இசையதாம் காங்கூ லஞ்ச னித்தது சிவனி டத்தில் வசையிலாக் குலத்திற் சித்தன்
வண்ணமே பொன்மை யாகும் அசைவிலா விருடிக் கந்த னாகுமே யதிதெய் வந்தான்
பசையுள கமல மாது என்னவே பகரு நூலே. .
|
..282 |
பதுமகோ சக்கை தன்னிற் பகரநா மிகைவ
ளைத்தால் இதுகாங் கூலக் கையா மிதற்கினி விநியோ கங்கேள் அதோமுக மாக
வைக்கக் கணிசமா மட்டந் தன்னில் இதுகனி நவ்வற் கொவ்வை முந்திரிக் கனிமு
கஞ்சேர்.
|
...283 |
சிறுதனங் கொட்டைப் பாக்குத்
தேங்காயாம் பற்பூ விற்கும் சிறுபொருள் சகோர பட்சி சிறந்தசா தகப்பட் சிக்காம்
சிறுகிண்கி ணிக்கு மெலுமிச் சம்பழங் களுக்கு மென்று அறியவே காங்கூ லக்கை
யாமென்று விளம்பி னாரே.
|
...284 |
சிலிட்டகாங்கூலம்
விளம்பிய
காங்கூ லத்திற் றற்சனி விரல்வ ளைக்க வளம்பெறு வியாத னுக்கும் வகுத்தன ரன்றி
லிற்கும் விளம்பதாய்ச் சுக்கி ரன்றன் பரதத்திற் றேர்ந்து நன்றாய்
வௌிப்படச் சிலிட்ட காங்கூ லம்மென வுரைத்தார் மின்னே.
|
...285 |
சங்கீர்ண காங்கூலம்
உரைபத்ம கோசந் தன்னில் மத்திம முள்வ ளைக்க நிறைந்தசிந் தாம ணிக்கு நிகழ்வது
மாத விக்கும் பிரகற்பதி யின்ம தத்திற் பேசுமிக் கைநா மத்தைக் குறித்த
னர்சங் கீர்ண காங்கூ லாமென் றுமின்னே.
|
...286 |
19. அலபதும அஸ்தம்
அலபல்ல வந்தான் றோன்று மரியிட மதின்கு லந்தான் துலையிலா திலகு மேகங்
துருவனன் னிறமே பச்சை நிலைமையா மிருடி யேவ சந்தனா மதிதெய் வம்நேர்
குலவுமா தித்த னென்றே கூறுமிப் பரத நூலே.
|
...287 |
விரலைந்தும் வளைத்து நீட்டி
வேறுவே றாய்ப்பி டித்த கரமல பதுமக் கையாங் கருதியே விநியோ கங்கேள்
விரகங்கண் ணாடி வட்ட மேல்வீடு முலைக ளுக்கும் இரதமூர் பூர்ண சந்த்ர
னெழில்குளங் களுக்கு மாமே.
|
...288 |
கொண்டைகெம் பீரங் கர்வங்
கோபங்கூக் குரல்ம லர்ந்த முண்டகப் பூக பித்த முதலான கனிக ளுக்கும்
வண்டில்கொண் டாட்டம் சக்ர வாகமாம் சப்தத் திற்கும் எண்டிசை புகழும் பந்து
நிருத்தமு மழகுக் காமே.
|
...289 |
அழகுடன் நாபி தன்னி லமைத்திட
விகாரத் திற்கும் வளம்பெறு முகநே ராக வைக்கவித் தனைதா னென்றும் தளம்பதி
சுபசந் தோஷ மதன்புய னேரி னிற்பாம் தௌிந்தகை சிரத்தின் மீதிற் சேர்த்திடக்
கிரீட மாமே.
|
...290 |
சிலிட்ட அலபதுமம்
நோக்கல
பதுமக் கையில் நுனிகனிட் டிகைவ ளைக்கத் தாக்கிய பனைசா கைக்கும் பருத்ததன்
னியனு னிக்கும் சூக்குமக் கயிறு தனக்கு மோதத்தின் சூசனத் திற்கும்
பார்க்கவே யிதுசி லிட்ட வலபதுமக் கையிதாமே.
|
...291 |
20. பாண அஸ்தம்
கருதுமிப் பாணந் தோன்றுங் கந்தன்பார் குலத்திற் பார்ப்பான் நிறமது கறுப்ப
தாகு மிருடியே நிமல னோதும் அருமைசேர் மொழியி னாளே யதிதெய்வங் கந்த னென்றே
பெருமையாய்ப் பரத நூலோர் பேசினர் முறைதெ ரிந்தே.
|
...292 |
பகர்முட்டி கனிட்டமது நீட்டலாகும்
பாணக்கை விநியோக மயிர்தி ருத்தல் அகல்கலப்பை திருத்தியுழல் நந்திநாட்டியம்
ஆரென்னுஞ் சங்கைக்கா வுடையா ருக்கும் தகைமையிலா வேர்வைதனைத் தெறித்தலோடே
தாக்குமே கெண்டிச்செம் பிற்கு நீண்ட நகங்களினாற் கிள்ளியதைக்
குறிப்புக்காட்ட
லாகுமென வுரையாக நவிலு நூலே.
|
...293 |
சங்கீர்ணபாணம்
அங்குட்ட
மத்யங் கூட்டி யநாமிதற் சனிவ ளைத்துத் தங்குக னிட்டம் நீட்டிற் சங்கீர்ண பாண
மாகும் சங்கைதீர் விநியோ கங்கேள் காமதே னுவிற்காய்ச் சாற்றும் பொங்கிய
வானோர்க் காசான் மத்தினிற் புகன்றான் பாரே.
|
...294 |
21. பிரமர அஸ்தம்
இப்பிர மரக்கை தோன்று மேலக்கா சிபனி டத்தில் செப்பிய குலத்திற் றேவன்
திகழ்நிறம் பச்சை யாகும் ஒப்புடை யிருடி யாக வுரைத்திடுங் கபில னென்றே
துப்புறு மதிதெய் வந்தான் கருடனாஞ் சொல்லு நூலே.
|
...295 |
மத்தியமங் குட்டங் கூட்டி
மன்னுதற் சனிவ ளைத்து மத்தவி ரண்டு நீட்ட வரும்பிர மரக்கை யாகச் சுத்திய
பிரமரத் திற்குஞ் சுகங்கட்குங் கூடு தற்கும் குத்தமில் சராச ரங்கள் கோகிலா
திகட்குந் தானே.
|
...296 |
தாநகம் வளைத லுக்குந் தங்கிய
தும்பி கட்கும் கானகப் பட்சிக் கெல்லாக் கருத்தறிந் துவமா னத்தும்
மோனமாம் யோகி கட்கு முகந்ததி தானத் திற்கும் ஆனதோர் பிரம ரக்கை யின்விநி யோக
மாமே.
|
...297 |
சிலிட்டபிரமரம்
சொல்லிய
பிரமரக் கையிற் கழித்தநா மிகைவ ளைக்கக் கல்லினுட் டேரை கட்கு முட்டையின்
குஞ்சு கட்கும் துல்லிபங் குளவிக் கூண்டு சொல்சிலிட் டபிரம ரக்கை வல்லப
விநியோ கத்தை வகுத்தனர் பரத நூலோர்.
|
...298 |
பூருவபிரமரம்
தாரம முசாசி
யத்திற் றற்சனி வளைத்த கையே பூருவ பிரமர மாகும் புகலுமிவ் விநியோ கந்தான்
கூர்பிர மத்திற் குள்ள குணமதா மிதனை நந்தி சாரும்பி ரமரக் கையாய்ச் சாற்றின
ரறிந்து கொள்ளே.
|
...299 |
22. சந்தம்ச அஸ்தம்
சந்தம் சந்தா னென்றுஞ் சரசுப தியினி டத்தில் விந்தைசேர் குலம தாகும்
வித்தியா தரனவ் வண்ணம் அந்தமாம் வெண்சி வப்பு யிருடிவி சுவாவ சுவாகும்
உந்தகொள் ளதிதெய் வம்வால் மீகனென் றோது நூலே.
|
...300 |
விடுத்திடு பதும கோசம்
விரலைந்தும் வெவ்வே றாக அடிக்கடி பரப்பிக் கூட்டி லதுதான் சந்ம் சம்மாம்
கொடுப்பது பலிதா னங்கள் கூறுமர்ச் சனையைந் திற்கும் அடுப்புள் பிராண
னுக்கும் மனப்பயங் களுக்குந் தானே.
|
...301 |
பயமுறும் பெருவ ழக்குப் பந்திமுத்
துத்தி ராட்சம் நயவச னங்க ளுக்கும் நல்வெள்ளிக் குளிகை காட்டல்
மெய்ப்புண் புளகங் காட்டல் விரிமல்லி கைக்கும் வாச மயமுறு நாசி நாடும்
வளர்நெஞ்சு சிந்த னைக்காம்.
|
...302 |
சிலிட்டசந்தம்சம்
சந்தம்ச
வத்தந் தன்னில் நடுவனா மிகையைத் தாங்கி முந்தவே மடக்கிக் காட்டச் சிலிட்டசந்
தம்ச முன்னே நந்தையாம் நண்டு தேளு நட்டுவக் காலி கட்காம் இந்தக்கை பரதந்
தானு மியம்புங்கற் கடக மென்றே.
|
...303 |
23. தாம்பிரசூட் அஸ்தம்
துடியுள தாம்பிர சூடம் சுருதியிற் பிறப்பாஞ் சாதி திடமுள தேவ னாகுஞ்
சிறப்புடை நிறமாஞ் சங்கு முடிபெறு மிருடி விண்ணோர் முதல்வனா மதிதெய் வந்தான்
வடிவுள வமரற் காசா னென்னவே வழுத்து நூலே.
|
...304 |
தாங்கிய முகுளந் தன்னிற் றற்சனி
தனைவ ளைத்தல் ஆங்கது தாம்பிர சூட மதற்கினி விநியோ கங்கேள் ஓங்கிய கோழி
காக்கை ஓலையி லெழுது தற்கும் பாங்குறு மோர்பூ விற்கும் பாலர்க ளுக்குந்
தானே.
|
...305 |
மதாந்திர தாம்பிரசூடம்
முட்டியிற் கனியங் குட்ட மோதிப்பின் னீக்கிக் கூட்ட ஒட்டகை குதிரை கட்கு
முபமானம் பசுவும் செப்பும் வெட்டுமின் னட்டாம் பூச்சி மேவும ழைத்து ளிக்கும்
திட்டந்தூள் சொக்கு மதாந்திர தாம்பிர சூடக் கையே.
|
...306 |
24. முகுள அஸ்தம்
வளருமிம் முகுளந் தோன்று மாருதி யிடத்திற் சாதி வளம்பல வாக நிற்கும் வண்ணமே
கபில மாகும் அளவிலா விருடி கந்த னாகுமே யதிதெய் வந்தான் புளகித முலையி
னாளே யிந்துவாய்ப் புகலு நூலே.
|
...307 |
விரனுனி யைந்துங் கூட்டி
மின்னுங்கை முகுள மாகும் பரிவுறு போச னங்கள் பஞ்சபா ணங்க ளுக்கும் வருநீல
மலருந் திக்கும் வாழைப்பூ விற்கும் மென்ப தருபுகழ் முத்தி ராதி தாரணத்
துக்குந் தானே.
|
...308 |
அர்த்தமுகுளம்
முகுளவஸ்
தத்திற் றற்ச னியுமத்தி மையு முன்னாகச் சிகமதை நீட்டிக் காட்டத் தேசாட்சி
ராகத் திற்கும் மிகுவாழை மாமர நொச்சி விதித்த வனுமா னத்தில் பகுத்ததைச்
செப்பு மர்த்த முகுளக்கை யென்னும் பண்பே.
|
...309 |
சிலிட்டமுகுளம்
அர்த்தமா
மகுளந் தன்னி லணிவிரல் நீண்டு மற்றத் தற்சனி மத்தி மத்தைச் சார்ந்துமுன்
னங்குட் டத்தோ டொத்திவே டர்கு றிக்கு முயர்பிண்டி பாலத் திற்கும்
கொத்தினிற் பிரித லுக்குங் கூர்சிலிட்ட முகுளந் தானே.
|
...310 |
கண்டமுகுளம் : முட்டிமுகுளம்
வளருமே முகுளந் தன்னிற் றற்சனி வலிதாய் நீட்ட விளைகண்ட முகுள மாகும்
விநியோகம் பெருச்சா ளிக்காம் குளைமுட்டி மத்தி மாங்குட் டம்முட்டி முகுள
மாகும் வளமைசேர் விநியோ கந்தான் வகுத்தனர் குரங்கிற் கென்றே.
|
...311 |
மத்திமமுகுளம் - சந்தம்சமுகுளம்
குத்துமுட் டியில நாமி யங்குட்டம் பொருத்தக் கூட்டில் மத்திம முகுள மாகும்
விநியோகம் பூனை வாழ்த்தும் நித்தவண் டிகளிலங் குட்டந் தற்சனி வளைத்துக்
காட்ட முத்தென வளர்சந் தம்ச முகுளங்கா கத்திற் கென்னே.
|
...312 |
பிரதேசமுகுளம்
முகுளத்திற்
கனிவ ளைத்தாற் பிரதேச முகுள மாகும் தகும்விநி யோகஞ் சாற்றுஞ் சாரசப் பட்சிக்
கென்று நிகமஞ்சேர் சோம நாத னிகழ்த்தின னிவற்றை யெல்லாம் மகிமைசேர் மொழியி
னாளே மனதுணர்ந் துரைசெய் வாயே.
|
...313 |
25. சதுர அஸ்தம்
கருதுமிச் சதுரக் கையே காசிப னிடத்திற் றோன்றும் பெருகுலம் பலவ தாகும்
பேசுஞ்சித் திரவண் ணந்தான் இருடியாம் வால கில்ய னிதற்கதி தெய்வ மாகும்
கருடனா மென்றே நூலோர் கருதுவர் முறைதெ ரிற்தே.
|
...314 |
அங்குட்டந் தனைவ ளைத்த நாமிகை
யடியிற் கூட்டித் தங்குமத் திமம நாமி தற்சனி மூன்றுங் கூட்டி அங்கனிட்
டிகைமுன் னீட்டி லந்தக்கை சதுர மாகும் இங்கினி வினியோ கங்க ளியம்பின ரிசைவல்
லோரே.
|
...315 |
கத்தூரி தங்கஞ் செம்பு காரீய
மிரும்பு கட்கும் பித்தளை வதனம் வர்ண பேதங்கள் கண்க ளுக்கும் சத்திய மிரச
பானஞ் சரசம்நெய் யெண்ணெய் மெல்ல வைத்திடு நடைக ளச்சம் வருங்கொஞ்சப் பொருட்கு
மாமே.
|
...316 |
பொருந்திய செவிநே ராக்கக் கம்மலா
மார்பு நேராய்த் திருந்தம னவவதா னத்தின் திகழ்வெள்ளை பச்சை யாதி வருணபே
தங்க ளோடே யடையாளம் வகுத்துச் சொல்லும் குருவினாற் றெரிந்து காட்டக்
கொளுஞ்சது ரக்கை யென்னே.
|
...317 |
அர்த்தசதுரம்
சதுரக்கை
மத்தி மத்தில் நுனிவரை யங்குட் டந்தான் இதமுடன் கூட்டிச் சேர்த்தா லிந்தோளி
ராகத் திற்கும் கொதிநீர்நெய்த் துளிக ளுக்குந் துரிதவி ராமத் திற்கும்
பதியது மான்ம தத்திற் பகரர்த்த சதுரக் கையே.
|
...318 |
கண்டசதுரம்
சதுரம தாகுங்
கையிற் றற்சனி நீட்டிற் கண்ட சதுரமாம் விநியோ கங்கோ ரோசன மமுதம் பூதி
துதிபெறு சிவப்பு ரத்னந் துலங்கிய பாதிக் காமென் றிதமுடன் யாஞ்ய வல்கன்
மதத்தினி வியம்பு மின்னே.
|
...319 |
சர்ப்பசதுரம்
சரர்ப்பசீ
ருடக்கை தன்னி லநாமிகாங் குட்டந் தன்னில் நிற்பதா முபமா னந்தான் நிகழ்சர்ப்ப
சதுர மென்பர் கற்பனை மதுபா னங்கற் பூரஞ்சூ தம்நெய் போஜ னப்பிரிய கறிப
தார்த்தம் நவிலுமே விநியோ கத்தே.
|
...320 |
26. அம்சாரியஅஸ்தம்
துலங்குமம் சாசி யக்கை தோன்றுமே சிவனி டத்தில் மலங்கலில் லாக்கு லத்தில்
மறையோனா நிறம் வெளுப்பு துலையிலா விருடி யாகுஞ் சுக்கிர னதிதெய் வற்தான்
மலரவ னாகு மென்றே வழுத்துமிப் பரத நூலே.
|
...321 |
தற்சனி யுடனங் குட்டந் தன்னையே
கூட்டி நீட்டி மிச்சமூ விரல்க டன்னை வேறுவே றாக நீட்டி இச்சமு சரசி யக்கை
யென்றனர் விநியோ கங்கேள் நிச்சய முபதே சங்கண் ணீர்த்துளி களுக்கு மாமே.
|
...322 |
27. அம்ஸபட்ச அஸ்தம்
பிரித்தவிவ் வமு பட்சம் பிருங்கியி னிடமாய்த் தோன்றும் விரித்திடுங்
குலத்திற் றேவ வேசியா நிறங்க றுப்பு பருத்திடு மிருடி யாகும் பரதனே யதிதெய்
வந்தான் கருப்புவில் லுடையோ னென்றே கருதமிப் பரத நூலே.
|
...331 |
ஓதியசர்ப் பசிரந் தன்னி லொருகனிட்
டிகையை நீட்ட ஈதம்ச பட்சக் கையா மிதற்கினி விநியோ கங்கேள் சேதுபந் தனங்க
ளுக்குந் தேகத்தி னகக்கு றிக்கும் மாதுகே ளாறி லக்கம் வாகனங் களுக்குந்
தானே.
|
...332 |
நெத்திக்க டைக்கண் நேராய் நின்றது
சைக்கி னைக்காம் பத்தியா யழைப்ப தற்கும் பரிந்தகை லாகு விற்கும் மித்ரசம்
பாஷ ணைக்கும் வெகுதுக்கம் நாசி தன்னில் பொத்திய முகநேர் சொக்குப் பொடிமனத்
திடமு மாமே.
|
...333 |
சிலிட்ட அம்ஸபட்சம்
ஆமம்ஸ
பட்சக் கையி லணிவிரல் வளைக்கு மாகில் தாமது தெற்குத் தேசந் தங்கிய மண்வெட்
டிக்கும் சாமிவை ரவர்க்கு கந்த கபாலத்தைத் தரித்த கையாய்க் காமிநீ
சிலிட்ட வம்ஸ பட்சக்கை காட்டி விள்ளே.
|
...334 |
28. பூர்ணநாப ஹஸ்தம்
ஓதுமிப் பூர்ண நாப முதித்தது மாலி டத்தில் நீதிசேர் குலத்தில் வேந்தன்
நிறமது சிவப்ப தாகும் சாதுவா மிருடி யோதுஞ் சார்த்தூல முனிய தாக ஆதிகூ
ருமமே யீதற் கதிதெய்வ மென்னு நூலே.
|
...335 |
பதுமகோ சத்தில் விரல்நுனிக
ளெல்லாம் வளைத்திட வேபூர்ணநா பமதாய்ப் பற்றும் இதன்விநி யோகந்
திருட்டுக்கு ரங்கு சிங்கம் ஏற்றபுலி யாமைநர சிங்கம் நாளும் கதிபுடைத்த
முலையரக்கன் கர்ன்னி காரங் காட்டுமப ஜெயமோவாய் தாங்கல் மற்றும் சதிர்பெறு
கெட்டிக்காரத் தனத்தி னோடே தலைசொரித லாமெனவே சாற்று நூலே.
|
...336 |
இப்பூர்ண நாபக் கையை யியம்பிய
சார்ஞி தேவர் ஒப்பவே சங்கீர் ணால பதுமக்கை யென்று கந்து தப்பிலா வுறிக
ளுக்குந் தரித்திர னென்ப தற்கும் செப்பினர் வினியோ கத்தைச் செயறிந் துரைசெய்
வாரே.
|
...337 |
29. திரிசூல அஸ்தம்
வருகனிட் டிகையங் குட்டம் வளைத்துமூ விரலை நீட்டத் திரிசூலக் கைய தற்குச்
செப்பினர் விநியோ கங்கேள் திரிபுர சிகரம் வில்வத் தழைதிரி சூலத் துக்கும்
திரிமூர்த்தி யென்ன நந்தி செப்பின கையி தாமே.
|
...338 |
30. வியாக்கிர அஸ்தம்
மிருகசீ ரிடக்கை தன்னில் மேவிய கனிஷ்டாங் குட்டம் நிரைசமா னங்க ளாக நீட்டவே
வியாக்கிர வஸ்தம் மிருகராசன் மண்டூ கம்வி ளங்கிய விராக்க தற்கும் வெறிதரு
குரங்கு கட்கு வியாக்கிரக் கையா மென்னே.
|
...339 |
31. பிண்டி அஸ்தம்
பரதமுனி சொல்லு வியாக்ரக் கைதனைக் கும்ப யோனி வருசிங்க நகைக்கை யென்றான்
வளர்தத்தி லன்ம தத்தில் தருபூர்ண நாபக் கையாய்ச் சாற்றுமே லாகச் சுற்றிச்
சுருங்கிடப் பிண்டிக் கையாய்ச் சொல்லினர் பரத நூலோர்.
|
...340 |
32. சலவக்ஷ அஸ்தம்
சிலிட்டமாம் பதும கோசக் கைதனைச் செப்பும் யாஞ்ஞ வல்கியுஞ் சங்கீர் ணால
பதுமக்கை யாய்வ குத்தான் சலவட்ச கரமே யென்றுஞ் சார்ஞிதே வன்ம தத்தில்
சிலந்திபூச் சிக்கும் பூசம் செப்பினர் விநியோ கத்தே.
|
...341 |
33. தூப அஸ்தம்
சாற்றிய திரிப தாகந் தற்சனி நடுமே லாகச் சேர்த்திடத் தூப வஸ்தஞ் சிறந்தரா
க்ஷகர்மு கத்தும் தோற்றிய வீணர் கட்குஞ் சொற்பரத முனிவன் றானும்
போற்றினன் விநியோ கத்தைப் புகன்றதை யறிந்து கொள்ளே.
|
...342 |
34. மண்டூக அஸ்தம்
அமையும்ப துமகோ சத்தை யதோமுக மாய்ப்பி டித்து இமைவிலா தசைத்துக் காட்ட
விதுமண்டூ கக்கை யென்பர் சுமையதாம் விநியோ கங்கேள் கனவிர ணங்க ளுக்கும்
சமையஞ்சேர் மதன னுக்குஞ் சாற்றினர் நூல்வல் லோரே.
|
...343 |
35. பிரம்ம அஸ்தம்
பதாகக்கை மத்தி மத்தி லங்குட்டம் பகர்ந்து கூட்ட விதாயமாய்ப் பிரம்மக்
கையாய் விளம்பினர் விநியோ கங்கேள் நிதானமாஞ் சுத்த சூன்ய வஸ்துவின் சொரூப
நீளுஞ் சுதாவுட னறிந்து செய்யச் சொல்லினர் நூல்வல் லோரே.
|
...344 |
36. வர்ஜித அஸ்தம்
மருவிலா
திருக்கும் செங்கை மணிக்கட்டுக் குழையக் கையைப் பிரியவே சுற்றும் போது
பேசும்வற் சிதக்கை யென்றே பெருமையாம் விநியோ கங்கேள் பேர்முலை தளர்த
லுக்கும் பொருளிலர் சேர்த லுக்கும் புகலலாம் தூலா ராய்ந்தே.
|
...345 |
37. மானுஷ அஸ்தம்
காணும
ராளக் கையிற் கனிட்டிகை வளையு மாகில் மானுட வஸ்த மாகும் வழங்கிய விநியோ
கங்கேள் மானிடர் பொதுவ தாகு மரத்திலாந் தளிர்க ளுக்கும் ஈனமிற் கடாரி
பிச்சு மாயுதத் திற்குஞ் சொல்லே.
|
...346 |
38. கஜமுக அஸ்தம்
கொள்ளுஞ்சிங் கமுகக் கையிற் கூர்பெரு விரல கற்றி மெள்ளநீட் டக்க சத்தின்
முகக்கையாம் விநியோ கங்கேள் விள்ளும்பாண் டியநாட் டுக்கு மிகுமணம் பார்த்த
லுக்கும் தெள்ளிய கண்மு கங்க டேர்ந்துகாட் டுதற்கு மாமே.
|
...347 |
ஆனைக்கோர் செவியை யாட்ட
லடர்ந்தகாட் டெருமை கட்கும் பூணிக்கை யொன்று மேலாய்ப் பொருந்த மற்றொன்று
வைக்கில் வானுல கத்தை யாளும் வாசவன் றனக்கு கந்த சேனையை ராவ தத்தைச்
செப்பலாம் விநியோ கம்மே.
|
...348 |
பந்தமி லகத்தி யன்றான் பகர்கஜ
முகக்கை தன்னைச் சந்த்ரமி ருகச்சி ரக்கை யென்றனர் சார்ஞி தேவர் முந்தவே
நார தன்றான் மொழிபிர மரக்கை யென்றே சொந்தமாய்ப் பரத நூலிற் சொல்லிய தறிந்து
கொள்ளே.
|
..349 |
39. மென்னிலைக்கை
அங்குட்டந் தனைக்குஞ் சித்து அடுத்தநால் விரல்வி ரித்து நீங்காமுன் னீட்ட
வேமென் னிலைக்கையாம் விநியோ கங்கேள் சங்கைதீர் சாமம் நாலுஞ் சாதிநாற்
குழல்வா சித்தல் பங்கய மலரோன் சென்னிப் பாகமென் றுரைப்பர் மாதே.
|
...350 |
40. கூர்மக்கை
நடுவிர
னீீட்டி மற்ற நால்விரல் வளைத்துக் காட்டல் குடிபெறுங் கூர்மக் கையாய்க்
கூறுவர் விநியோ கங்கேள் தடியிலா மைக்கு மோர்பூத கணத்திற்கு மொண்கு றிக்கும்
கொடுராக்ஷ தகணத் திற்குங் குலைசோர்தற் காகு மெண்ணே.
|
...351 |
41. திரிலிங்கக்கை
கூறுதற்
சனியங் குட்டங் கூட்டிமற் றதைம டக்கில் வாராகி யமணக் கட்டை வைப்பது திரிலிங்
கக்கை சேரவே விநியோ கங்கேள் திருவிளக் கும்முக் கோணம் பாராகும் பணத்தைச்
சுண்டல் பருவிரை யூன்றல் பாரே.
|
...352 |
ஆவுடை யார்க்கும் யோனிக்
குங்கொக்குங் குங்கோ ழிக்கும் மேவுகூ ழைக்கி டாய்க்கும் விசையுற யூசி
குத்தல் தாவுமெ ழுகுப தத்தைப் பார்ப்பதற் காகு மென்றே பாவசாத் திரங்கற்
றோர்கள் பாடிய திவ்வா றென்றே.
|
...353 |
42. சாளையக்கை
நிறையுமங் குட்டந் தற்ச னியுமத்தி மத்தை நீட்டி மறுரெண்டு விரல்ம டக்கி
மணிக்கட்டைச் சோர வாட்டல் பெறுஞ்சாளை யக்கை யென்று பேசுவர் விநியோ கங்கேள்
அறும்பல கோலக் கோம ளப்பாவ னைகூத் திற்காம்.
|
...354 |
சூழும்வாத் தியமு டுக்குச்
சுழல்பொரு வண்டு வீழல் வாழ்வண்டு சுழற்றற் சூறா வளிக்காற்றுக் குளிர்வா
டைக்கும் ஈழமின் வெட்டல் ராட்டு விசைகத்தி சுழற்றல் வேகம் ஆழிவண்
டியுருளல் பம்ப ரம்மெய்க்கூச் சிடுதல் மற்றும்.
|
...355 |
தயிர்சிலுப் புதலெ ரிப்புத்
தனித்தேங்காய் பிடித்த லோடே இயல்புறச் சந்தோ ஷித்த லேந்துசக் கரத்தைக்
காட்டல் அயலிரா திதுகேள் சேடை யாமெனப் பரத நூலோர் நயமுட னுரைத்த திந்த
நடன பாவனைக ளென்னே.
|
...356 |
43. சிலிமுகக்கை
நிலையாமங் குட்டத் தின்னி ரையிற்றற் சனிந கத்தைப் பலமாக வூன்றிற் தற்ச
னியினடு வரைமேற் பற்றி விலகாமத் திமைந கத்தை விசையூன்றி யிவ்வா றாகப்
பலசிறு விரல்வ ரைக்கும் பிடிப்பது சிலீமு கக்கை.
|
...357 |
சொல்லுமிவ் வத்தத் திற்குச்
சூழ்விநி யோகங் கேளு புல்லுநாட் டியமும் லாசியம் பொருநடங் கணைதொ டுத்தல்
சிள்ளுநா மங்கீ றல்எகினச் சிறகுந்த வத்து ..... நல்பல கணிக்குஞ் சங்கு
சோழிநண் டூரு தற்கே.
|
...358 |
தடையிலா தெதிரிற் றண்ணீர்த்
தடாகத்தைக் காட்டு தற்கும்
அடைவுடன் காய்ந்த தண்ணீர் அதன்சூடு பார்ப்ப தற்கும் கடமையா யபிந
யித்துக் காட்டலா மென்று நூலோர் படிமிசைக் கும்ப யோனி பாடின தறிந்து கொள்ளே.
|
...359 |
44. சங்க அஸ்தம்
சர்ப்பசீ ருஷக்கை தன்னிற் சாருமங் குட்டம் நீளில் செப்பிய சங்கம் பேருச்
செய்யென விநியோ கங்கேள் ஒப்பலாங் குட்ட ரோகிக் குவமானஞ் சுரத நீர்க்கும்
இப்புவி தன்னிற் கண்டு இசைந்துநீ பிடிப்பாய் மன்னே.
|
...360 |
45. வலம்புரி அஸ்தம்
மாதாந்திர தாம்பிர சூட மருவிய கனிவ ரைக்கீழ் தோதாக வங்குட் டத்தைத்
தொந்தமாய் வைத்து நீட்ட வேதாவ லம்பு ரிக்கை விதித்தனர் விநியோ கந்தான்
சூதாம்ந கக்கு றிக்குஞ் சொல்வர்மூக் குத்திக் காமே.
|
...361 |
46. இலதை அஸ்தம் 47. மண்டல
அஸ்தம்
தற்சனி நடுவங் குட்டஞ் சேர்த்துமற் றிருவி ரற்றான் வர்ச்சித
மாய்வ ளைக்க வளரில தைக்கை யாகும் மெச்சிய மலர்மொட் டிற்கு முறுக்கான்மூக்
குத்தி மேவும் மச்சுமு குளத்தில் நீட்டுங் கனிமண்ட லக்கை யாமே.
|
...362 |