Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Puthumaippiththan - புதுமைப்பித்தன் > புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும் - எம். ஏ. நுஃமான்
 

TAMIL LANGUAGE  & LITERATURE

புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்

எம். ஏ. நுஃமான்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
[see also Puthumaippiththan - புதுமைப்பித்தன்]

August 2002

[காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2002 வெளியிட இருக்கும் 'புதுமைப்பித்தன் கட்டுரைகள் '
நூலுக்கு அளித்துள்ள முன்னுரை]
 


புதுமைப்பித்தன் இறந்தபோது எனக்கு நாலு வயது. நான் பிறக்கு முன்பே அவர் தமிழ்ச் சிறுகதையின் சிகரங்கள் சிலவற்றை எட்டி யிருந்தார் என்பதையும், பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் பிறி தொரு திருப்புமுனையாக விளங்கினார் என்பதையும் 1960களின் தொடக்கத்தில் எனது பதினேழு அல்லது பதினெட்டு வயதில்தான் முதல்முதல் அறிய நேர்ந்தது. என்னிடம் உள்ள புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள் ஆகிய நூல்கள் நான் 1962இல் வாங்கியவை. அப்போதிருந்து புதுமைப்பித்தனை அடிக்கடி படித்து வந்திருக்கிறேன். தொடர்ந்தும் சலிப்பில்லாமல் படிக்கக்கூடிய நவீன தமிழ் எழுத்தாளர் சிலருள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் என்பது என் அனுபவம். தீவிர தமிழ் வாசகர் பலரின் அனுபவமும் அவ்வாறே இருக்கலாம் என்பது என் நம்பிக்கை.

தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும்போது பாரதியையும் புதுமைப்பித்தனையும் அருகருகே வைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இருவருமே பெரும் சாதனையாளர்களாக அற்பாயுளில் மறைந்தது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. பாரதி கவிதையில் சாதித்ததைப் புதுமைப்பித்தன் சிறுகதையில் சாதித்தார். இருவருமே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுப்பாதை சமைத்தவர்கள்.

பாரதியின் காலத்தில் அவனுக்குச் சமமான அல்லது அவனுடன் ஒப் பிட்டுப் பேசக்கூடிய கவிஞர்கள் என்று யாருமே இருந்ததில்லை. ஆனால், புதுமைப்பித்தனின் சமகாலத்தில் அவரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடிய முக்கியமான சிறுகதை ஆசிரியர்களாக கு.ப.ரா., மெளனி, ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா என்று சிலராவது இருந்தார்கள். ஆனால், இவர்களில் யாருமே புதுமைப்பித்தனைத் தாண்டி பாரதியின் அருகில் நிற்க முடியவில்லை. காரணம், புதுமைப்பித்தன்தான் பாரதி போல் தன்காலத்தில் ஒரு கலகக்காரனாகச் செயற்பட்டிருக்கிறார். புதுமைப்பித்தனின் கலகக் குரல் அவரது சமூக நோக்குச் சார்ந்தது. அதாவது, அவருடைய உள்ளடக்கம் சார்ந்தது. கவிதையில் பாரதி யிடம் ஒலித்த தீவிர இலக்கியக் குரலைப் புனைகதையில் அதன் பிறி தொரு வடிவத்தில் நாம் புதுமைப்பித்தனிடம்தான் கேட்கிறோம். புதுமைப்பித்தனின் சக எழுத்தாளர்களைச் சித்தாந்த சனாதனிகள் என்றால் புதுமைப்பித்தன் அவர்களில் இருந்து விலகி ஒரு கலகக் காரனாக, ஒரு எதிர்ச் சனாதனியாக பாரதியின் அருகில் இருக்கிறார்.

புதுமைப்பித்தன் எவ்வகையில் ஒரு கலகக்காரன் ? வழிவழியான நமது நம்பிக்கைகளை, கற்பனைகளை, கனவுகளை, பொய்மைகளை நம் கண்முன்னே போட்டு உடைப்பதில் ஒரு கலகக்காரன். உன் சித் தாந்தப் புனைவுகளுள், புராதன மதிப்பீடுகளுள் இருப்பதல்ல வாழ்க்கை; இதோ என் கதைகளுள் இருப்பதுதான் பச்சையான வாழ்க்கை; இதுதான் உன் யதார்த்தம் என்று நம் முகத்தில் அறைந் தாற்போல் யதார்த்தத்தைப் புனைவதில் புதுமைப்பித்தன் ஒரு கலகக் காரன். ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்ன கரம்’ என்பது வெறுமனே ஒரு கதையின் முடிவல்ல. நம் கற்பனைக் கும் யதார்த்தத்துக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளியை, நம் மதிப்பீடுகளின் பொய்மையை நம் முகத்தில் ஓங்கி அடிக்கும் கலகக் குரல்தான் இது.

பொன்னகரம் மதுரை நகரத்திலுள்ள ஒரு பகுதியின் உண்மைப் பெயர் என்பார் ரகுநாதன். இருக்கலாம். ஆனால், கதையில் அது ஒரு உருவகமாகவே செயற்படுகின்றது. நம் புனிதங்களின் உருவகம். ஈவிரக்கம் இல்லாமல் தன் குத்தலாலும் கிண்டலாலும் நம் மனதில் சிருஷ்டித்துள்ள பொன்னகரங்களை உடைப்பதில் புதுமைப்பித்தன் ஒரு கலகக்காரன்தான். கடவுளரின் பிம்பங்களும் இதனுள் அடங்கும். கந்தசாமிப் பிள்ளையின் முன் கடவுள் சிறுத்துப் போகிறார். ராமனைத் திரஸ்கரித்து அகலிகை மீண்டும் கல்லாகிறாள். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் வெவ்வேறுவகையில் இப்பொன்னகரங்களின் உடைவுதான்.

புதுமைப்பித்தன் எல்லாவற்றையும் போட்டு உடைத்தாரே தவிர அதற்கு மாற்றீடாக எதனை முன்வைத்தார் என்ற கேள்வி எழுவ துண்டு. புதுமைப்பித்தனுடைய இலக்கியக் கோட்பாட்டில் மாற்றீடு களுக்கு இடம் இல்லை. ‘முடிவில் தர்மத்துக்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத்தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை’ என் பதைப் புதுமைப்பித்தன் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ தர்மம் இலக்கியத் தில் மட்டும் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியே யாய்விடுமோ’ என்று கேட்கிறார் அவர்.

 ‘மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடைசெய்வதற்காகக் கட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல’ என்பது அவருடைய அழுத்தமான கருத்தாகத் தோன்றுகின்றது. இலக்கியம் வாழ்வைப் பலவித கோணங்களிலிருந்து புரிந்துகொள்வதற்கான சாதனமே என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை நாம் இதன்மூலம் அறிந்துகொள்கிறோம். புதுமைப்பித்தனின் எழுத்துகளின் மூலம் நாம் வாழ்வை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளின் மீதே புதுமைப்பித்தன் தன் பார்வையைச் செலுத்தியிருக்கிறார். நமது மதிப்பீடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள அவரது சித்திரிப்பு நமக்கு உதவுமானால் அதுவே அவரைப் பொறுத்தவரை அவரது கலையின் வெற்றி எனலாம். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் முதல்முதல் பண்பாடு பற்றிய முற்கற்பிதங்களை உடைத்துக் கொண்டு நடுத்தர அல்லது கீழ்மட்ட மக்களின் வாழ்வின் உண்மையான முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் புதுமைப்பித்தன்தான். அதனாலேயே புதுமைப்பித்தன் மிகுந்த கவனத்துக்கும் விமர்சனத்துக் கும் உள்ளாகி இருக்கிறார்.

‘என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஜங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஜயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம்.’ என்று 1942இலேயே எழுதினார் புதுமைப்பித்தன். ஆயி னும், இன்றுவரை புதுமைப்பித்தன் பற்றிய மதிப்பீட்டில் இப்போக்கு வெவ்வேறு அளவில் தொடர்வதைக் காணலாம்.

நவீன எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தன் அளவு விமர்சனத்துக்கு உள்ளான வேறு ஒரு எழுத்தாளன் இல்லை எனலாம். இந்த விமர்சனம் போற்றலும் தூற்றலும் நிறைந்தது. இதன் ஒரு முனையில் ரகுநாதன் இருக்கிறார். புதுமைப்பித்தனின் திருமேனியில் ஒரு ஈயைக்கூட மொய்க்கவிடாது புனிதப் போர்வையால் அவரைப் போர்த்திப் பாது காக்கும் கரிசனை அவரது சமீபத்திய நூலில் (புதுமைப்பித்தன் கதை கள் : சில விமர்சனங்களும் விஜமத்தனங்களும்) துலக்கமாகத் தெரி கிறது. மறுமுனையில் மார்க்சியத்தை வரலாற்றுக் குப்பைக் கூடைக் குள் வீசிவிட்டு, கட்டுடைக்கும் புனித இயந்திரத்தைக் கையேற்றுள்ள அ. மார்க்ஸ் இருக்கிறார். புதுமைப்பித்தனின் பிரதிகளைக் கட்டுடைத்து அதற்குள் இருந்து தலித்துகள், மறவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மாமிச பட்சிணிகளை இழிவுபடுத்தும் ஆபத்தான கூறுகளை மிகுந்த கரிசனையுடன் தோண்டியெடுத்துக் கொண்டிருக்கிறார். மற்ற வர்கள் இவர்கள் இருவருக்கும் இடையிலே இருக்கிறார்கள். ஆனால், தன் விமர்சகர்களைப் பார்த்துப் புதுமைப்பித்தன் இவ்வாறு சொல்கிறார்.

வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக் குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

புதுமைப்பித்தன் பற்றி எழுதியவர்கள் எல்லாரும் அவரின் சிறுகதைகள் பற்றியே எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு களைத் தவிர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட தன் சிறுகதைகளின் பக்க எண்ணிக்கையின் அளவுக்குப் புனைகதை அல்லாத உரைநடையும் அவர் எழுதியிருக்கிறார் என்று தெரிகின்றது. கட்டுரைகள், கடிதங்கள், மதிப்புரைகள், உலக அரசியல் விமர்சனங்கள் என இது பலரகப்பட் டது. புதுமைப்பித்தனின் இலக்கியக் கொள்கை, விமர்சன நோக்கு, வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகள், சமூக-அரசியல் நிலைப்பாடு என்பன பற்றி இவை வெளிப்படையாகப் பேசுகின்றன. புதுமைப்பித்தனின் சிறு கதைகளோடு இவற்றையும் ஒருமித்து நோக்கும்போது புதுமைப்பித்தன் பற்றிய ஒரு முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கும். புதுமைப்பித் தனின் பன்முகத்தன்மை பரிமாணம் அவற்றின் பலம், பலவீனம் என்ப வற்றை நம் போக்கில் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் மிக முக்கியமான, நெருக்கடி மிக்க காலகட்டத்தில் வாழ்ந்தவர் புதுமைப்பித்தன் (1906-1948). இந்திய விடுதலைப் போராட்டமும், இந்திய சமூகங்களுக் கிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் இது. உலக நிலையில் முதலாளித்துவத்தின் முதிர்நிலையான ஏகாதிபத்திய எழுச்சியும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச, கம்யூனிஸ இயக்கங்களும், சோவியத் புரட்சியும், சோசலிசக் கட்டுமானமும், இரண்டு உலக யுத்தங்களும் நிலவிய காலம். இக்காலகட்டத்தின் இலக்கிய, கருத்துநிலைத் தேவைகளுக்கும் சவால்களுக்கும் புதுமைப் பித்தன் எவ்வாறு முகம்கொடுத்தார், எதிர்வினையாற்றினார் என்பதை அவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் நமக்கு உணர்த்துகின்றன. சிறுகதைகள் அவரது இலக்கிய - அழகியல் எதிர்வினைகள் என்றால் கட்டுரைகள் அவரது அரசியல் எதிர்வினைகளாக உள்ளன.

இவ்வகையில் புதுமைப்பித்தனின் நான்கு நூல்கள் முக்கியமா னவை. பேஸிஸ்ட் ஷடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும், அதிகாரம் யாருக்கு ? என்பன அவை. இவை நான்கும் புதுமைப்பித்த னின் 35-40 வயதுக்குள் எழுதி முடிக்கப்பட்டவை. இது இரண்டாவது உலக யுத்தம் தொடங்கி, தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். முதல் இரண்டு நூல்களும் உலக யுத்தத்தின் பிதாமகர்களான முசோலினி, ஹிட்லர் இருவரையும் பற்றியவை. மூன்றாவது நூல் சோவியத் சோசலிசக் கட்டுமானத்தில் ஸ்டாலினின் பாத்திரம் பற்றி யது. கடைசி நூல் அதிகாரம் பற்றிய அரசியல் விஞ்ஞானத்தை விபரிப் பது. இந்த நூல்களைப் படிக்கும்போது புதுமைப்பித்தனின் வேறொரு பரிமாணம் நமக்குத் தெரிகின்றது. உலக அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறையும் விஜயஞானமும் உடைய, முதலாளித்துவ, ஏகாதி பத்திய, பாசிஸ சக்திகளுக்கு எதிரான, சோசலிச பொதுவுடைமைக் கருத்துக்களுக்கு எட்டி நின்றேனும் ஓரளவு அனுசரணை காட்டுகின்ற, ஷனநாயகம், தனிமனித சுதந்திரம் என்பவற்றை வலியுறுத்துகின்ற புதுமைப்பித்தனின் அரசியல் பரிமாணம் இது. இந்த அம்சத்தைப் புதுமைப்பித்தன் காலத்து வேறு எந்த இலக்கியக்காரர்களிடத்தும் நாம் காண முடியாது.

மேல்குறிப்பிட்ட நான்கு நூல்களிலும் பேஸிஸ்ட் ஷடாமுனி மிகவும் பெரியது. சுமார் 170 பக்கங்கள் கொண்டது. முசோலினியின் வாழ்க்கை வரலாற்றினூடாக இத்தாலியின் அரசியல் வரலாற்றையும், ஐரோப்பிய அரசியலையும் இதில் விரிவாகவும் மிகவும் சுவையாகவும் அலசுகிறார் புதுமைப்பித்தன். தகவல்களுக்குப் புதுமைப்பித்தன் பயன் படுத்திய நூல்கள் எவை என்று தெரியவில்லை. ஆயினும், அவரது பரந்த, பலமான வாசிப்புப் பின்புலம் அவரது எழுத்தில் நன்கு வெளிப் படுகின்றது.

பாஸிசம் பல்வேறு அர்த்தத்தில் நாம் இன்று அன்றாடம் பயன்படுத் தும் சொல்லாகிவிட்டது. முசோலினியின் கட்சியின் பெயருடன் இணைந்து அது ஒரு அரசியல் சித்தாந்தமாகவே நிலைபெற்றுவிட்டது. முதலாளித்துவத்தின் குரூர முகந்தான் பாசிஸம் என்பதை முசோலினி யின் வரலாற்றின் மூலம் புதுமைப்பித்தன் இந்நூலில் விளக்க முயன்றி ருக்கிறார். இதே கருத்தை ஹிட்லர் பற்றிய நூலிலும் (கப்சிப் தர்பார்) அவர் தன் கோணத்தில் விளக்கிச் செல்கிறார். பாஸிசம் தோன்றிய காலத்திலிருந்து அது சோசலிசத்துக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது. முசோலினியும் ஹிட்லரும் பொதுவுடமைவாதிகளைக் கொன்றொழித்தனர் அல்லது சிறையிலடைத்தனர். புதுமைப்பித்தன் தன் நூலில் இதனை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

பாஸிஸமும் பொதுவுடைமையும் தொழில் யுகத்தின் உற்பத்திகளே என்ற புரிதல் புதுமைப்பித்தனுக்கு இருந்தது. பொருத்தம் கருதி இது தொடர்பான புதுமைப்பித்தனின் நீண்ட மேற்கோள் ஒன்றை இங்கு தருகிறேன்.

தேவைகளை - அன்றாடத் தேவைப் பொருள்களை - இலட்சிய மாக்கிய பெருமை இந்த மிஷின் யுகத்தின் கைங்கரியம். அந்த இலட்சியத்தின் தர்க்க முடிவு எல்லோருக்கும் சாப்பாடு கிடைக் கும்படி செய்வதே. அது இவ்வுலகத்தில் மோட்ச சாம்ராஜ் யத்தை ஸ்தாபிப்பது என்ற பொதுவுடைமை சித்தாந்தத்தில் வந்து முடிவடைந்தது. இந்த உபாக்கியானத்தின் கிளைக் கதை கள் நாஸ்திகம், பொருளாதார அடிப்படையுடன் சரித்திரத்தை வியாக்கியானம் செய்தல் முதலியவை. இவற்றை ஆதாரமாகக் கொண்ட ஒரு கட்டுக்கோப்பு ருஷியாவில் எழுந்தது. அங்கு அது எழுவதற்கு முன்னும் பின்னும் அதன் சீடர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று சமுதாயத்தின் ஜீவப் பிண்டத்தைப் பாதித்து வந்தனர். இதற்குத்தான் முதலாளித்துவ சர்க்கார்கள், ‘பொதுவுடைமை அபாயம்’, ‘போல்ஷ்விக் ஆபத்து’, ‘சிவப்புப் பயங்கரம்’ என்ற பெயர்களைக் கொடுத்தார்கள்.

 வெர்ஸேல்ஸ் உடன்படிக்கை ஷரோப்பிய மனநிலையைப் பெரிய கலக்குக் கலக்கியது போல, அது சமுதாய அமைப்பிலும் பெரிய மாறு தல்களை உண்டுபண்ணிற்று. சோனியாக மெலிந்துவந்த முத லாளித்துவம், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, மிகுந்த பயத்து டன் பெற்ற குழந்தைதான் இந்த பேஸிஸமும், நாஜிஸமும். ஐரோப்பாவிலோ மற்ற இடங்களிலோ சிறிய நாடுகள் சுதந் திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனில் ராட்சசத் தன்மையைக் கடைப்பிடித்தால்தான் முடியும் என்பதை இந்த அரசியல் உற்பாதங்கள் நிரூபித்தன. இவை தம்மைப் பலப் படுத்திக் கொள்ள அயல்நாடுகளில் புல்லுருவி போல் பாய்ந்து, அவற்றை நாசமாக்கப் பொதுவுடைமைவாதிகளின் வழி களையே பின்பற்றின. இப்படியாகப் பொதுவுடமை அபாயத்து டன் பேஸிஸ்ட் - நாஜி அபாயங்களும் சம்பவிக்கலாயின. மிஷின் யுகத்தின் இரண்டு சாயைகள்தான் பொதுவுடைமை, பேஸிஸ்ட் தத்துவங்கள்.

பேஸிஸ்ட்டுகள் மனித சமூகத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துகள் எல்லாவற்றிலும் முதன்மையான கோர ஆபத்து பொதுவுடைமையே என்று கூறி அதைச் சபிக்கிறார்கள். எல்லா ஷனங்களுக்கும் ஆளச் சக்தி கிடையாது என்றும், சிலரே ஆளப் பிறந்தவர்கள் என்றும், சாமர்த்தியமுள்ள ஒரு சிலர் கைக்குள் ளேயே சர்க்கார் இயந்திரம், சமூகம் எல்லாம் சிக்கியிருந்தால் தான் தேசத்திற்கு க்ஷேமம் என்றும் அவர்கள் விவாதிக்கிறார் கள். ஆனால் பொதுவுடைமைவாதிகளோ பேஸிஸம் ஒன்றும் புதிதில்லையென்றும், சாகக்கிடக்கும் முதலாளித்துவமே கடை சியாக அந்த ரூபத்தில் தோன்றியிருக்கிறதென்றும், பேஸிஸ்ட்-நாஜி உறுமல்களெல்லாம் முதலாளித்துவத்தின் கடைசி விக்கல் என்றும் சொல்லுகிறார்கள். (பேஸிஸ்ட் ஷடாமுனி)

பாஸிசத்தையும் பொதுவுடைமையையும் எதிரெதிரே நிறுத்தினாலும் புதுமைப்பித்தன் பாஸிசத்தையும் முதலாளித்துவத்தையும் முற்றாக நிராகரிப்பதையும், பொதுவுடைமையின் மீது அனுதாபம் கொண்டிருப் பதையும் அவரது எழுத்துகளில் பரவலாகக் காணலாம். பாஸிசத்தைப் பற்றிக் கூறுகையில் ‘பேஸிஸம் புதிதாகப் பிறந்த தத்துமல்ல; புராதன எதேச்சாதிகாரத்துடன், தற்போதைய மிஷின் யுகத்தின் அவசியத்துக் கேற்ப, மனித சிந்தனையையும் சுதந்திரத்தையும் நசுக்குவதற்காகக் கட்டிக் கோக்கப்பட்ட கடதாசிக் குப்பையே அது’ என்பார் புதுமைப் பித்தன் (பேஸிஸ்ட் ஷடாமுனி). பாஸிஸம் முதலாளித்துவ சமூகத்தின் வக்கரித்த ஆட்சி என்பது அவர் கருத்து.

‘மக்கள் ஆட்சியில் நிர்வாக யந்திரமானது, உறுதி சற்றும் இல்லாத பதவிவேட்டை உடும்புகளிடம் அகப்பட்டு, சமாஷத் தொடர்பை இழந்து நிர்வாகத்தை நல பங்கீடு அங்காடியாக ஆக்கிவிடும்பொழுது, இந்த பாஸிஸம் என்ற முதலாளித்துவ சமாஷத்தின் வக்கரித்த ஆட்சி உதய மாகிறது. தொற்று நோய்கள் போல இந்த ஆட்சியும் ஒரு தற்காலிக மான சாகைதான். சித்த வைத்தியத்தின் பாஜாண சிகிச்சை மாதிரி இற்றுப்போன சமாஷத்தை உயிர்ப்பிக்க, இந்த சர்வ-தாண்டவம் அவசி யம் என வாதிக்கிறவர்கள் உண்டு. இந்த மாதிரியான சித்தாந்தம் எல்லாம் தர்க்க சோதனைகளாக வைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, மனித வம்சத்தின் அந்தராத்மாவான சமாஷ ரூபத்தின்மீது பிரயோ கித்துப் பார்க்க வேண்டிய விஜப் பரிட்சைகள் எனக் கருதக் கூடாது’ எனப் பிறிதோரிடத்தில் புதுமைப்பித்தன் எழுதுகிறார் (அதி காரம் யாருக்கு ? ).

முதலாளித்துவத்தைச் ‘சொத்துரிமை மகோதரம்’ என்று வருணிக் கும் புதுமைப்பித்தன் முதலாளித்துவ சமூகம் பற்றித் தரும் பின்வரும் சித்திரம் நம் கவனத்துக்குரியது.

‘தனிமனிதனுக்கு சொத்துரிமை தந்து யந்திர வசதியில் அகப் பட்டுக்கொண்டு அதில் ஒருமைப்பாடு காணும்படி அதை உப யோகிக்க வகை தெரியாமல் தவிக்கும் சமுதாயமே முதலாளித் துவ சமுதாயம் என்று சொல்ல வேண்டும். யந்திரத்தை உப யோகித்து, சர்க்காருக்கு சமமாக செல்வம் பெற்று அதைத் தன் வசப்படி ஆட்ட தனிமனிதனுக்கு வசதி அளிப்பது இதுதான். இது ஷனங்களின் சம்மதத்தின் பேரில் எழுந்த ஆட்சியாக இருக் குமாகில் அமெரிக்க ரக ஷனநாயகமாக இருக்கும், ஷனங்களின் சம்மதிப்பு உதாசீனம் செய்யும் ஒன்றாக இருந்தால் ெஐர்மன் இத்தாலிய ஏக தர்பாராக விடியும். ஒன்றில் அடிமை வரம்பில் நின்று மேலெவ்வ வொட்டாத சம்பள வாழ்வு சம்பவிக்கும். மற்றொன்றில் அடிமைத்தனம் சம்பவிக்கும். சர்க்காரை இவ் வாறு கவந்த ராசியாகவே வைத்திருப்பதினால்தான் தனிமனித வாழ்வு திரணமாக மதிக்கப்படுகிறது’(அதிகாரம் யாருக்கு ? ).

இதற்கு மாறாக ‘பொதுவுடைமை எல்லோருடைய தேவையையும் திருப்தி செய்வதற்கென்று தர்க்க ரீதியாக வகுக்கப்பட்ட ஓர் அரசியல் சித்தாந்தம்’ என்று கூறும் புதுமைப்பித்தன் (பேஸிஸ்ட் ஷடாமுனி), ‘சொத்துரிமையை தனிமனிதனுக்கு வழங்கும் சமுதாயத்தில் வாழும் மனிதர்களில் பெரும்பகுதியினர் அன்ன விசாரத்தில் ஈடுபடுவதையே பிரதான காரியமாக நடத்திவர வேண்டியிருக்கிறது. இந்தத் தொந்திரவு தனிமனிதனுடைய தோளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டால், அவனுடைய மனோசக்திகள் யாவும் பிரயோஷனப்படக்கூடிய வேறு எத்தனையோ காரியங்களில் ஈடுபடுத்தப்பட முடியும். இது ஓரளவு சாத்தியம் என் பதை நிரூபித்துவிட்டது ஸோவியத் ரஷ்யா’ என்றும், ‘ஏற்றத்தாழ்வு என்பது சாதாரண உண்மைகளில் இல்லாதபடி பார்த்துக்கொண்டால் தான் மனித வம்சம் விருத்தியடைய வகையுண்டு’ என்றும் அதிகாரம் யாருக்கு ? நூலில் கூறுகிறார்.

ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் யூனியனில் சோச லிசக் கட்டுமானம் பற்றிய ஒரு சாதகமான சித்திரத்தை ஸ்டாலி னுக்குத் தெரியும் நூலில் புதுமைப்பித்தன் மிகவும் விஸ்தாரமாகத் தீட்டியிருக்கிறார். ஏனைய எழுத்துகளில் ஆங்காங்கே பொதுவுடைமை பற்றிப் போகிறபோக்கில் விடுக்கும் குத்தல் விமர்சனங்கள் எதையும் இதில் காண முடியவில்லை. அக்டோபர் புரட்சி சமூகங்களுக்கிடையே சமஉரிமையைக் கொண்டுவந்தது பற்றிப் புதுமைப்பித்தன் பின்வரு மாறு எழுதுகிறார். ‘அக்டோபர் புரட்சி கழிந்த இரண்டாவது நாள் ரஷ்யத் தொழிலாளர்கள், குடியானவர்கள் சர்க்காரின் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. பல ஷாதியினரின் கமிஸார் என்ற ரீதியில் ஸ்டாலின் அதில் கையெழுத்திட்டார்.

லெனின், ரஷ்யாவில் உள்ள சகல வர்க்க, ஷாதிய வேறுபாடுடைய மக்கள் யாவரும் சம உரிமை உள்ளவர்கள் என்பதை அங்கீகரித்தார். ஷார் ஆண்ட ரஷ்யாவைப் பல ஷாதீய மக்களின் சிறைக்கோட்டம் என்று வர்ணிப்பார்கள்; இந்தப் பிரகடனம் அந்த சிறைச்சாலையின் பூட்டை திறந்த சாவி’. இவ்வாறு கூறும் புதுமைப்பித்தன், ‘ஸோவியத் சமுதாயத்திலே மிகுந்த கவுரவம் அளிக்கப்படும் பிரஷை கலைஞன்’ என்றும் ‘ஸோவியத் மக்களுக்கு சுயமாகச் சிந்திப்பதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது’ என்றும் புகழ்ந்துரைக்கிறார். சோவியத் அரசு அது உருவான காலத்திலிருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருப்பதையும், அதன் மத்தியில் புதிய சமூகத்தை உருவாக்குவதில் அதன் முயற்சிகளையும் பரி சோதனைகளையும் புதுமைப்பித்தன் அனுதாபத்துடன் நோக்குவதைக் காண முடிகின்றது.

அதிகாரம் யாருக்கு ? என்ற நூல் அரசியல் விஞ்ஞானத்தில் புதுமைப்பித்தனுக்கிருந்த அக்கறையையும் அறிவையும் காட்டுகின்றது. ஏகாதிபத்தியக் கெடுபிடியும், யுத்தமும் உச்சத்தில் இருந்த காலகட்டத் தில் அதற்குப் பின்புலமாய் இருந்த அரசியல் அதிகாரம் பற்றிப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்திருக்கிறார் என்று தெரிகின்றது. அரசியலை அதிகாரத்துக்கான ஆடுகளமாகவே புதுமைப்பித்தன் கருதி யிருக்கிறார். உண்மையான அதிகாரம் இறுதியில் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதுதான் புதுமைப்பித்தனின் கருத்து.

ஆனால் மக்களாட் சியோ, எதேச்சாதிகார ஆட்சியோ ‘இதுவரை மனித நலத்துக்கு பூர்ண பொருத்தத்துடன் வேலை செய்தே வந்திருக்கின்றன என்று சொல்ல முடியாது’ என்பது அவரது முடிவு. ‘அரசியல் கட்டுக்கோப்பு சோதனை யில் லட்சியப் பேச்சுக்கு இடமில்லை’ என்று முன்னுரையில் கூறும் புதுமைப்பித்தன், தனக்குரிய வழக்கமான கிண்டலோடு ‘கருணை என்ற வார்த்தையின் பொருள் இப்போது கிழங்கு வர்க்கத்தில் அடங்கி விட்டது. அரசியல் மண்ணில் அது முளைக்காவிட்டால் அதிசயம் இல்லை.

முளைக்குமாகில் அதற்குக் காரணம் அரசியலின் தன்மை அல்ல’ என அரசியல் அதிகாரத்தின் தன்மையை வலியுறுத்துகின்றார். இந்நூலின் கடைசிப் பகுதி ‘ஏகாதிபத்தியம் : சர்வதேசீயம்’ மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகின்றது. ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க வெறியையும் யுத்த அனர்த்தங்களையும் தன் வாழ்நாளிலேயே கண்ட புதுமைப்பித்தன் ஏகாதிபத்தியம், யுத்தம் பற்றிய தன் பார்வையை இங்கு முன்வைக்கின்றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அவர் இறுதியாகக் கூறுவது நம் கவனத்துக்குரியது.

‘யுத்தம் நிற்பது என்பதன் தெளிவான பொருள் என்னவென்றால், தனிமனிதன் தன்னிடம் எவ்வாறெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஒரு சமாஷத்தின் நிர்வாகம் கருதுகிறதோ அவ்வாறெல்லாம் தானும் பிறநாட்டு ராஷாங்க ஸ்தாபனங்களுடன் எல்லாம் நடந்துகொள் ளுவதில்லை என்று சம்மதித்து வடுப்படாத தனது ஆதிபத்திய உரிமையில் ஒரு பகுதியை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதேயாகும். அவ்வாறு செய்வதால் நாட்டில் உள்ள செலவீனத்தில் பெரும்பகுதி குறைந்துவிடும். இவ்வாறு மனித சமூகத்தின் கழுத்தில் உள்ள பளு குறைவதால் மனித வம்சம் நசித்துப் போகாதிருக்க அது செய்ய வேண்டிய, இன்னும் கவனிக்கப்படாதிருந்துவரும் பல காரியங் களுக்கு அவகாசமும் வசதியும் கிடைக்கும். ஆனால் யுத்தத்தின் மூலம் உலக வம்ச ஒழுங்கை நிலைநாட்டிக் கொள்ளுவது என்பது பிராந்தி மயக்கம் தீர மீண்டும் பிராந்தி குடிப்பதுதான்’. இன்றைய உலக அரசியல் சூழலில் இது இன்னும் பொருத்தமான கருத்தாகவே உள்ளது.

புதுமைப்பித்தனின் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் ஒன்றாக நோக்கலாம். சிறிதும் பெரிதுமான சுமார் அறுபது கட்டுரைகளும் எழுபது மதிப்புரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும் பாலும் எல்லாமே இலக்கியம் பண்பாடு தொடர்பானவை. புதுமைப் பித்தனின் கலை இலக்கியக் கோட்பாடுகளையும் விமர்சன நோக்கை யும் நாம் இவற்றின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கவிதை பற்றிப் புதுமைப்பித்தன் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கவிதையைப் பொறுத்தவரை புதுமைப்பித்தன் அவர் காலத்தில் மேலோங்கியிருந்த புது விமர்சனத்தினதும் (ழிமீஷ் சிக்ஷீவீtவீநீவீsனீ), இரசனைக் கோட்பாட்டினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார் என்று தெரிகின் றது. இடைக்காலத் தனிப்பாடல்கள் பற்றிய நயப்புக் கட்டுரைகளில் இது தூக்கலாக வெளிப்படுகின்றது. கவிதையை இலட்சியமயப்படுத்தி மிகை உணர்வுடன் நோக்குகின்ற பார்வை இது. இங்கு கவிதை, கடவு ளின் படைப்புக்குச் சமனாக்கப்படுகின்றது. ‘கடவுள் கனவுகண்டார். இந்தப் பிரபஞ்சம் பிறந்தது.

கவிஞன் கனவு கண்டான். இலக்கியம் பிறந்தது’ என்பார் புதுமைப்பித்தன். கவிதை கலையின் அரசி என் பதைப் புதுமைப்பித்தனும் வழிமொழிகிறார். கவிதையின் ஜீவநாடி உணர்ச்சி என்பதைப் பல கட்டுரைகளில் வலியுறுத்துகின்றார். அதை சங்கீதத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ‘கவிதை மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை, உள்ளப் பாற்கடலில் பிறந்த அமிர்த கலசம், மனித உள்ளம் யதார்த்த (க்ஷீமீணீறீவீstவீநீ) உலகத்துடன் ஒன்றுபட்டோ பிரிந்தோ கண்ட கனவு, அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுகிறது. அதுதான் கவிதை’ எனக் கவிதையை உணர்ச்சியை மையமாகக் கொண்டு விபரிக்க முனைகிறார். இதைக் கவிதை பற்றிய உணர்ச்சிக் கொள்கை என விமர்சகர் கூறுவர். தமிழில் டி.கே.சி.யிடம் மிதமிஞ்சிக் காணப்பட்ட இக்கொள்கை புனைகதையில் புதுமைகளைச் சாதித்த புதுமைப்பித்த னிடமும் செல்வாக்குப் பெற்றிருந்தமை வியப்புக்குரியது.

சிறுகதை பற்றிப் பேசும்போது புதுமைப்பித்தன் மிகவும் யதார்த்த வாதியாகவும் கலகக்காரனாகவும் இருக்கிறார். இதுபற்றி ஏற்கெனவே சற்று விரிவாகப் பேசினோம். காஞ்சனை, ஆண்மை ஆகிய நூல் களுக்கு எழுதிய முன்னுரைகளில் தன் சிறுகதைக் கொள்கை பற்றி அழுத்தமாகக் கூறியிருக்கிறார். சிறுகதை பற்றிய அவரது கொள்கைக் கும் கவிதை பற்றிய கொள்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. இரண்டு இலக்கிய வடிவங் களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மட்டும் இதற்குக் காரணம் அல்ல. கவிதை பழமையான இலக்கிய வடிவம் என்ற வகையில் கவிதை பற்றிய பாரம்பரியச் சிந்தனையின் தாக்கம் நவீன எழுத்தாளர் கள் பலரிடமும் வலுவாக இருந்தது. புதுமைப்பித்தன் தன்னளவில் வித்தியாசமான கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தபோதிலும் கவிதை பற்றிய பார்வையைப் பொறுத்தவரை இந்த உணர்ச்சிக் கொள்கையிலிருந்து அவராலும் விடுபட முடியவில்லை. (கு. அழகிரி சாமியும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்).

புதுமைப்பித்தனின் கட்டுரைகள் பற்றிப் பேசும்போது 1937இல் தழுவல், மொழிபெயர்ப்பு பற்றிய விவாதத்தில் புதுமைப்பித்தனின் நிலைப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புதுமைப் பித்தன் தழுவலை முற்றாக நிராகரித்து மொழிபெயர்ப்பை மட்டும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தழுவலை வெறும் திருட்டு என்று அவர் முத்திரை குத்தியிருக்கிறார். இது இன்னும் சற்று ஆழமாக விவா திக்கப்பட வேண்டிய விசயம். தழுவலில் பல வகைகள் உண்டு. புதுமைப்பித்தன் ஒருவகை பற்றி மட்டுமே பேசுகிறார். ‘அதாவது ஒரு குறிப்பிட்ட அன்னிய நாட்டுக் கதையின் முக்கிய சம்பவங்களை வைத்துக்கொண்டு ஏறக்குறைய அதைப் போல ஒரு கதையை ஷோடித் தல்’, பிற மொழிக் கதையின் ஊர்ப்பெயர், பாத்திரப் பெயர், பண்பாட்டு அம்சங்களை மாற்றி மூல ஆசிரியரின் பெயர் குறிப்பிடாமல் சொந்தக் கதை போல் எழுதுதல், இதையே புதுமைப்பித்தன் தழுவல் என்று சாடுகிறார்.

இலக்கியத் திருட்டு என்கிறார். புதுமைப்பித்தன் காலத்தி லும் அதற்கு முன்பும் இத்தகைய தழுவல்கள் நிறைய செய்யப்பட்டி ருக்கின்றன. கல்கியை இதற்காகப் புதுமைப்பித்தன் உக்கிரமாகத் தாக்கியும் இருக்கிறார். ஆனால், புதுமைப்பித்தனே இத்தகைய தழு வல்கள் சிலவற்றைச் செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறர்மீது சுமத்திய திருட்டுப் பழியை அவரே சுமக்க வும் நேர்ந்துள்ளது. இந்த விவாதத்தின்போது புதுமைப்பித்தன் தன் தழுவல் விளையாட்டுகளையும் வெளிப்படுத்தியிருக்கலாம். ‘நானும் இத்தகைய தழுவல்கள் சிலவற்றை (பத்திரிகைத் தேவைக்காகச்) செய் திருக்கிறேன். ஆனால், நான் அவற்றை எனது படைப்புகள் என்றோ, நல்ல இலக்கிய முயற்சிகள் என்றோ ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று கூறியிருக்கலாம். ஆனால், புதுமைப்பித்தன் எச்சந்தர்ப்பத்திலும் தன் தழுவல் முயற்சிகள் பற்றிக் கூறியதில்லை. அதற்கு அவர் உரிமை கோர முயன்றதும் இல்லை என்பது நம் கவனத்துக்குரியது. அவற் றுக்குச் சொந்தம் கொண்டாடவோ, தன் படைப்புகளுடன் அவற்றை யும் சேர்த்துக்கொள்ளவோ அவர் விரும்பியதில்லை என்றே தோன்று கின்றது. ஆயினும் பதிப்பாளர்களின் சிரத்தையின்மையால் திருட்டுப் பழியைப் புதுமைப்பித்தனும் சுமக்க நேர்ந்தது.

மூலத்தைக் குறிப்பிடாமல் தன் சொந்தக் கதை போல் பிறமொழிக் கதை ஒன்றைத் தழுவி எழுதுவது அதனுடைய இலக்கியத் தாரதம்மி யம் எப்படி இருந்தாலும் நேர்மைக் குறைவான காரியம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எல்லாக் காலத்திலும் இடம் இருந்தே வந்திருக்கின்றது. கம்பராமாயணம் வால் மீகியின் மொழிபெயர்ப்பல்ல. அது ஒருவகையில் தழுவலே. மூலக் கதையை எடுத்துக்கொண்டு கம்பன் தன் சொந்தப் போக்கில் அதைப் படைத்திருக்கின்றான். முற்காலங்களில் நடந்த மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இத்தகையன என்றே சொல்ல வேண்டும். இது புதுமைப் பித்தன் கூறும் திருட்டுத் தழுவல் அல்ல. நெகிழ்ச்சியான அல்லது சுயாதீன மொழிபெயர்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மூலப் படைப்பை அல்லது அதன் ஒரு பகுதியை மறுவிளக்கம் கொடுப்பதற் காகத் தழுவுவதும் தழுவலின் பிறிதொரு வகை எனலாம். பாரதியின் பாஞ்சாலி சபதம், புதுமைப்பித்தனின் சாப விமோசனம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். ஒரு ஊடகத்தைப் பிறிதொரு ஊடகத் துக்கு மாற்றுவதுகூடத் தழுவல்தான். ஒரு சிறுகதை அல்லது நாவலைத் திரைப்படமாக்குவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவ்வகையில் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி ஒரு அற்புதமான தழுவல். புதுமைப்பித்தன் பாராட்டும் பாரதிதாசனின் புரட்சிக்கவியும் ஒரு நல்ல தழுவல்தான். இவற்றிலெல்லாம் மூல ஆசிரியரும் மூலப் படைப்பும் மூடிமறைக்கப்படுவதில்லை என்பதே இங்கு முக்கியமானது. புதுமைப்பித்தன் தழுவல் இலக்கியத்தைச் சாடும்போது இவற்றை அதற்குள் உள்ளடக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புதுமைப்பித்தன் கட்டுரைகளில் எனக்குச் சற்று ரச மட்டமாகத் தோன்றுவது கல்கி பற்றிய அவரது காட்டமான கருத்துகள்தான். தீவிரமான விமர்சன எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எழுத்து இது. பிற்காலத்தில் தமிழகச் சிறு சஞ்சிகைகளில் வளர்ந்த வசை மரபுக்கு ஒரு முன்னோடியைத் தேட வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கல்கி பற்றிய எழுத்துகளைச் சொல்லலாம் என்று தோன்றுகின்றது.

புதுமைப்பித்தனின் மதிப்புரைகளில் தீவிரமான எள்ளலும் குத்தலும் ஆங்காங்கே பளிச்சிட்டாலும் அவை அவரது இலக்கியக் கொள்கை சார்ந்த, அளவுகோல் சார்ந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. ஒரு மதிப்புரையாளனுக்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் வரைவிலக்கணத்துக்குள்ளேயே அவர் இருக்கிறார் என்பதை அவரது பெரும்பாலான மதிப்புரைகளின் தீவிரம் வெளிக்காட்டுகின்றது. மதிப்புரையாளர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது பற்றி அவர் கூறு கிறார் : ‘நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும் பரிச்சயம் செய்துவைக்கவும் அவனிடம் திராணி வேண் டும், அப்படியே போலியைக் காணும்போது யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதற்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.’

புதுமைப்பித்தன் எழுத்துகளின் பதிப்பு முயற்சிகள் பற்றிச் சிறிது கூற வேண்டும். அதற்கு முன்னுரையாகத் தமிழில் பதிப்பு முயற்சிகள் பற்றிச் சில வார்த்தைகள்.

தமிழில் பதிப்பு முயற்சிகளுக்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு. ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமி நாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றோர் மூலம் தொடர்ந்த இப்பதிப்பு மரபு ஆரோக்கியமானது. பழைய ஏடுகளைத் தேடி, பல பிரதிகளுடன் ஒப்புநோக்கி, பிழைகள் நீக்கி, தகுந்த குறிப்புகளுடன் இவர்கள் பதிப்பித்த நேர்த்தியும், நேர்மையும், அவர்கள் காட்டிய அறிவுசார் அக்கறையும் இந்த ஆரோக்கியத்தின் அடிப்படை. பண்பாடு சார்ந்த கடப்பாடு அவர்களை இதில் ஈர்த்தது. அவர்களது பதிப்புகள் நம்பகமான செம்பதிப்புகள் என்பதில் இரு கருத்துகள் இல்லை.

ஆனால், கடந்த சில தசாப்தங்களில் புத்தக வெளியீடு லாபமீட்டும் வியாபாரமாக மாறிய சூழலில் பதிப்பு முயற்சியிலும் நூல் வெளி யீட்டுத் துறையிலும் பல கோளாறுகள் தோன்றியுள்ளன. மறைந்த எழுத்தாளர்களின் நூல்கள் மீண்டும் வெளியிடப்படும்போது அவை முதற் பதிப்புகளாகவே வெளிவரும் அதிசயம் இங்குதான் நிகழ்கின் றது. 1940களில் வெளிவந்த க.நா.சு.வின் நூல்கள் எல்லாம் சமீபத்தில் முதற் பதிப்புகளாக வெளிவந்ததை உதாரணமாகச் சொல்லலாம். நூலக விற்பனைக்காக இந்த உத்தி கையாளப்படுவதாகச் சொல்லப் படுகின்றது. ஆனால், இது ஒரு வரலாற்று மோசடி என்பது உணரப்படு வதாக இல்லை.

பல எழுத்தாளர்களின் படைப்புகளை அல்லது கட்டு ரைகளைத் தொகுத்து வெளியிடுபவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கின்றனர். எழுத்தாளர்களின் சம்மதம் பெற வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வு பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. தகவல் பிழைகள், அச்சுப் பிழைகளோடு புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இதுபற்றிய அக்கறை பெரும்பாலோருக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழலில் பதிப்பித்தல் என்பது ஜீuதீறீவீsலீவீஸீரீ, மீபீவீtவீஸீரீ என்ற இருவேறு பொருள்களிலும் பயன்படுத்தப் படுவதால் பல கோளாறுகள் நிகழ்கின்றன.

வெளியீட்டாளர், பதிப் பாளர் (ஜீuதீறீவீsலீமீக்ஷீ) அல்லது பதிப்பாசிரியர் (மீபீவீtஷீக்ஷீ) இருவரதும் பணிகள் வேறு. வெளியீட்டாளர் நூல்களைத் தெரிந்து, அச்சிட்டு வெளியிடு பவர். பதிப்பாசிரியர் நூலை வெளியீட்டுக்காகத் தயாரிப்பவர். பண் டைய நூல்கள் அல்லது மறைந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும்போது, இவருடைய பணி பெரிது. உ. வே. சாமிநாதையரை ஒரு பதிப்பாசிரியராக நினைத்துப் பார்க்கும்போது அவரது உழைப்பு, அறிவு நாட்டம் என்பன நம் மனதில் தோன்றும். ஆனால், தமிழ்ச் சூழலில் சில வெளியீட்டாளர்கள் தங்களைப் பதிப்பாசிரியர்களாகவும் கருதிக்கொள்வதனால் நேரும் அனர்த்தங்கள் பல. மறைந்த எழுத் தாளர்களின் நூல்கள் மனம்போன போக்கில் பதிப்பிக்கப்பபடுகின்றன. பாரதி நூல்களுக்கு நிகழ்ந்தவை நமக்குத் தெரியும். எனது அனுபவம் ஒன்றையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது.

பேராசிரியர் கைலாசபதி மறைந்த இரண்டாவது ஆண்டில் அவரது மனைவியாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சித்திரலேகா மெளனகுருவும் நானும் பாரதி ஆய்வுகள் என்ற தலைப்பில் பாரதி பற்றிக் கைலாசபதி எழுதிய கட்டுரைகளை எல்லாம் தேடித் தொகுத்து, கைலாசபதியின் வேறு நூல்களில் பாரதி பற்றி இடம்பெறும் குறிப்புகள் பற்றிய விபரங் களையும் தொகுத்து, பதிப்பாசிரியர்கள் என்ற வகையில் சற்று விரி வான ஆய்வுபூர்வமான பதிப்புரை ஒன்றும் எழுதி அதை வெளியிட ஒப்புக்கொண்டிருந்த தமிழகத்தின் பிரபலமான வெளியீட்டு நிறுவனம் ஒன்றுக்கு (என்.சி.பி.எச்) அனுப்பினோம். அவர்கள் தாங்கள்தானே பதிப்பகத்தார், இவர்கள் இருவரும் எப்படி பதிப்பாசிரியர்களாக இருந்து பதிப்புரை எழுதலாம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

பதிப்பாசி ரியர் என்ற ஸ்தானத்தில் இருந்து எங்களை நீக்கி, நாங்கள் எழுதிய பதிப்புரையின் இறுதியில் ‘இக்கட்டுரைகளைத் தொகுத்து அருளிய திருமதி சித்திரலேகா மெளனகுரு, திரு. எம் ஏ. நுஃமான் ஆகியோருக் கும் எமது நன்றி உரியது’ என்று ஒரு வரி எழுதி, கீழே பதிப்பகத்தார் என்று போட்டதோடு எங்கள் பதிப்புரையையும் உழைப்பையும் இலகு வாகத் தமது உடைமையாக்கிக்கொண்டார்கள். இதை இட்டு அழு வதா, சிரிப்பதா, ஆத்திரப்படுவதா ? ஐயோ தமிழ்ப் பதிப்புலகே என்று அமைதி கண்டோம்.

இத்தகைய பதிப்புத் துறைக் குழறுபடிகளால் பாதிப்பு எழுத்தாள ருக்குத்தான். அப்படி மிக மோசமாகப் பதிக்கப்பட்ட எழுத்தாளன் புதுமைப்பித்தன் என்பதை அண்மைக் காலத்தில் நடைபெற்ற புதுமைப் பித்தனின் ‘இலக்கியத் திருட்டு’ பற்றிய சர்ச்சை நமக்கு உணர்த்தியது.

புதுமைப்பித்தனுடைய எழுத்துகள் அவரின் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டபோது பிழைகளும் தவறுகளும் மலிந்திருந்தது மட்டுமன்றி ஒரு தீவிர வாசகனுக்கு, இலக் கிய மாணவனுக்கு வேண்டிய தகவல் எதையும் தரவில்லை. உதார ணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். 1954இல் ஸ்டார் பிரசுரம் புதுமைப் பித்தன் கட்டுரைகள் நூலை வெளியிட்டது. இதில் புதுமைப்பித்தனின் முன்னுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த முன்னுரையுடன் பார்க்கும்போது இத்தொகுப்பு புதுமைப்பித்தனே தொகுத்தது, அதை வெளியிடுமுன் அவர் மறைந்துபோனார், இப்போது ஸ்டார் பிரசுரம் அதை வெளியிட்டுள்ளது என்ற எண்ணம்தான் வாசகனுக்குத் தோன் றும். நான் அவ்வாறுதான் நினைத்திருந்தேன்.

இப்போது ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகளுள் இடம் பெற்றுள்ள முன்னுரையைப் பார்த்தபோது, எனக்கு ஐயம் தோன்றியது. ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நூலில் இந்த முன்னுரையின் முதல் இரண்டு பந்திகள் மட்டும் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள முன்னுரை யில் மூன்று பந்திகள் உள்ளன. விசாரித்தபோது 1947இல் நமது இலக் கியம் என்ற தலைப்பில் வெளிவந்த புதுமைப்பித்தன் கட்டுரைகளுக்கு அவர் எழுதிய முன்னுரை அது என்று தெரியவந்தது. ஸ்டார் பிரசுரத் தார் அதன் கடைசிப் பந்தியை நீக்கிவிட்டு அதைத் தங்கள் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். இதுபற்றி ஒரு குறிப்புத்தானும் எழுத வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை என்பது வியப்பூட்டுகின்றது.

1953இல் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட புதிய ஒளி பல குழப்பங் களுக்குக் காரணமாக அமைந்தது பற்றி வாசகர் அறிவர். புதுமைப்பித் தனின் தழுவல் கதைகளை ஆராய்ந்து பாராமல் அவரது சொந்தக் கதைகளுடன் சேர்த்து வெளியிட்டதால் வந்த குழப்பம் இது. 1988இல் ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் படைப்புகளை எல்லாம் நூலுருவாக்கும் முயற்சியை மேற்கொண்டது. 15 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு பாராட்டத்தக்க முயற்சியே. ஆவலுடன் வரவேற்றோம். ஆயினும் பதிப்பு நோக்கில் பதிப்புச் செம்மையை அவர்களும் கருத் தில் கொள்ளவில்லை. பேசிஸ்ட் ஷடாமுனி முதல் பதிப்பாகவே வெளி வந்துள்ளது.

 அதன் முதல் வெளியீடு பற்றிய குறிப்புகளைத் தர அவர் கள் முயலவில்லை. புதுமைப்பித்தன் படைப்புகள் முதல் தொகுதியில் (சிறுகதைகள்) புதுமைப்பித்தனின் முன்னுரை ஒன்று இடம்பெற்றுள் ளது. இது அவருடைய ஆண்மை தொகுதிக்கு எழுதிய முன்னுரை என்ற குறிப்பைத் தரவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. காஞ்சனைக்கு எழுதிய முன்னுரை மட்டும் தேதியுடன் தரப்பட்டுள்ளது. கதைகள் பிரசுரமான ஆண்டுகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்ற அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. வாசகரின் உடனடித் தேவையை இத்தகைய பதிப்புகள் நிறைவு செய்யலாம். ஆனால், இலக்கிய விமர்சன, இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கி லும் இவை பயனுடையவையல்ல.

புதுமைப்பித்தன் பற்றிய அக்கறையும், வாசிப்பும், விமர்சன முயற்சிகளும் பெருகிவரும் இன்றைய சூழலில், புதுமைப்பித்தனின் எழுத்துகளுக்கு ஒரு செம்பதிப்புத் தேவை என்பது பரவலாக உணரப் பட்ட நிலையில், காலச்சுவடு பதிப்பகம் அதைக் கையேற்றது மகிழ்ச் சிக்குரியது. இன்றைய தமிழ் வெளியீட்டுச் சூழலில் க்ரியா, விடியல், காலச்சுவடு போன்ற சில வெளியீட்டு நிறுவனங்களே தரமான நூல் களைச் செம்மையாக வெளியிட வேண்டும் என்ற அக்கறை காட்டு கின்றன. ஏற்கெனவே காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தனின் அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் கதைகள் இரண்டும் பதிப்புத் துறையில் பெரிய சாதனைகள் என்பதில் ஐயமில்லை. ஓர் ஆய்வாளன் என்ற வகையில் இவற்றின் முக்கியத்துவத்தையும் இதற்குப் பின்னால் இருந்த உழைப்பையும் என்னால் உணர முடிகின்றது. கண்ணனின் தீவிர அக்கறையும் வேங்கடாசலபதியின் கடின உழைப்பும் இவற்றைச் சாத்தியமாக்கியுள்ளன.

புதுமைப்பித்தன் எழுத்துகளின் செம்பதிப்பு வரிசையில் இப்போது வெளிவரும் இந்த இரண்டாவது தொகுதியில் அவரது அல் - புனை கதை எழுத்துகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை தொகுக்கப் படாத சில புதிய கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் சலபதி கண் டெடுத்திருக்கிறார். நான்கு கட்டுரைகள் தவிரப் பிற கட்டுரைகள் எல்லா வற்றுக்கும் முதல் வெளியீட்டு விபரங்கள் கண்டறியப்பட்டு அவை காலவரிசையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பேஸிஸ்ட் ஷடாமுனி, கப்சிப் தர்பார், அதிகாரம் யாருக்கு ? என்பன முதல் பதிப்போடு ஒப் பிடப்பட்டுப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. ஸ்டாலினுக்குத் தெரியும் புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படியோடு ஒப்புநோக்கப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இது ஒரு நம்பகமான செம்பதிப்பு என்பதில் ஐயம் இல்லை.

புதுமைப்பித்தன் எழுத்துகளைத் தேடுவதில் சலபதியின் கடின உழைப்பை நான் அறிவேன். ஈழகேசரி யில் (ஆண்டுமடல், ஏப்ரல் 1938) பிரசுரமான புதுமைப்பித்தனின் ‘சினிமா உலகம்’ என்னும் தலைப்பிலான கட்டுரை ஒன்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. (இதன் மொழி நடையைப் பார்க்கும்போது இது உண்மையில் புதுமைப் பித்தனுடையதுதானா என்ற ஐயம் எனக்கு எழுந்தது.) இதுபோல் பழைய ஈழகேசரி இதழ்களில் புதுமைப்பித்தன் ஏதாவது எழுதியி ருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அவற்றைத் தேடி அவர் இலங் கைக்கே வந்தார். இரண்டு நாட்கள் ஈழகேசரி யின் பழைய பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. ஓர் ஆய்வாளன் என்ற வகையில் அது அவருக்கு ஏமாற்றம் அளிக்க வில்லை. பதிலாக ஈழகேசரி யில் புதுமைப்பித்தனின் வேறு எழுத்துகள் எதுவும் பிரசுரமாகவில்லை என்பதைக் கண்டுபிடித்த திருப்தியோடு அவர் நாடு திரும்பினார்.

இந்தத் தேடல் முக்கியமானது. இந்தத் தேடலின் காரணமாகத் தான் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்புக்கு எழுதிய பதிப்புரையில் புதுமைப்பித்தன் எழுதாத கதை என்று அவர் குறிப்பிட்ட சாளரம் அவர் எழுதியதுதான், அது சிறுகதையல்ல கட்டுரைதான், பித்தன் என்பது புதுமைப்பித்தனின் புனைபெயர்களுள் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தி அதை இப்போது இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். எனினும் ‘சாளர’த்தை ஒரு கட்டுரையாகக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. அது கதை, கட்டுரை என்பவற்றின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய எழுத்து என்று சொல்லத் தோன்றுகின்றது. திருக்குறள் குமரேச பிள்ளையை ஸ்டார் பிரசுரம் புதுமைப்பித்தன் கதை களில் சேர்த்திருக்கிறது. சலபதி அதை இக்கட்டுரைத் தொகுதியில் சேர்த்திருக்கிறார். அது நிச்சயமாகச் சிறுகதையல்ல. ஒரு நடைச்சித்தி ரம். புதுமைப்பித்தன் காலத்தில் இத்தகைய நடைச்சித்திரங்களில் சிலர் ஈடுபாடு காட்டினார்கள். திருக்குறள் குமரேச பிள்ளை யில் கட்டுரையின் குணாம்சமே மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் அதை இத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டது பொருத்தமானதே.

காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் எழுத்துகள் எல்லாவற் றையும் வெளியிடும் உரிமையை அவரது குடும்பத்திடம் வாங்கிய நிகழ்வு அண்மையில் பெரிய சர்ச்சைக்கு ஏதுவாக அமைந்தது. புதுமைப்பித்தனின் எழுத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் அடியாக எழுந்தது. புதுமைப்பித்தன்மீது கொண்ட அக்கறையே இதற்குக் காரணம் என்று தோன்றவில்லை. இதற்குப் பின்னால் வேறு அரசியல் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தன் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது.

அவை நாட்டுடைமையாக் கப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அவரின் எழுத்துகளுக்கு ஆய்வு பூர்வமான ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செம்பதிப்பு வேண்டும் என்பதை இலக்கியப் பிரக்ஞையுடைய யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நாம் நம்பலாம். சிலவேளை ஒழுங்கு, செம்மை என்பவற்றைப் பாசிசத்தின் அடையாளங்களாகக் காணும் கட்டுடைக்கும் யந்திரப் பார்வையில் இதுவும் ஆபத்தானதாகத் தோன்றக்கூடும். அதுபற்றி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை.

புதுமைப்பித்தனின் ஏனைய எழுத்துகளும் விரைவில் செம்பதிப்பாக வெளிவர வேண்டும் என்பதே எமது விருப்பம். காலச்சுவடு பதிப்பகம் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். புதுமைப்பித்தன் பற்றிய விருப்புவெறுப்பற்ற புறநிலையான ஆய்வுகளுக்கு அது வழிவகுக்கும்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home