Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணிபொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்'நற்போக்கும்' 'முற்போக்கும்''முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் >  சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);  Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA (Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]
 


0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'
3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்
4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்'
5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்
7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
 
6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்

56க்குப் பின் வந்த புதிய பரம்பரையின் பார்வையில் இன்னுமோர் படி வளர்ச்சியைக் காட்டுபவர் தருமு சிவராமு. 56க்குப் பின் நம் இலக்கியச் சூழலில் புதிய வேகமும் அக்கறையும் பிறந்தன. நம் பழைய இலக்கியங்களைப் பற்றிய அறிவோடு வெளியே பார்க்கும் ஒர் ஒப்பிலக்கியப் பார்வை அழுதப்பட்டது. ஆனால் அத்தகைய பார்வையைத் தேடுபவர்களாக அறிகுறி காட்டுபவர்கள் மிகச் சிலரே வந்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் மிகப் பிந்தியே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் முருகையன், கனக ரத்தினா, தருமு சிவராமு, மு. தளையசிங்கம் போன்றவர்களைச் சொல்லலாம்.

கைலாசபதி போன்றோர் வெளிப் பார்வையின் தேவையைக் காட்டினார்கள்தான். ஆனால் அதற்கு அவர்கள் முழு உதாரணமாக நிற்கவில்லை. உலக இலக்கியங்களைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இன்று ஒர் சராசரி உலக எழுத்தாளன் அக்கறை காட்டும் அத்தனை பல்வேறு துறைகளிலும் மேலழுந்தவாரியாகவாவது ஈடுபடுமளவுக்கு அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்ளவில்லை. அது வருவதற்கு முன்னரே தங்களை 'முற்போக்கு' இலக்கியம் என்ற ஒன்றுக்குள் சிறைப்படுத்திக்கொண்டனர்.

எனவே, அந்தப் பரந்த, விரிந்த, ஆழமான பார்வை தர்மு சிவராமு, மு. தளையசிங்கம், எஸ்.சிவகுமாரன் போன்றோர்களுடன்தான் பரவலாக ஆரம்பிப்பதற்குரிய அறிகுறியைக் காட்டுகிறது.

சுருங்கச் சொல்லின் சுய உணர்வுடன் சர்வதேசத் தரத்தைத் தொடுவதற்கும் அதற்கேற்ற ஒரு பார்வையைப் பெறுவதற்குமுரிய முயற்சிக்கு இவர்கள் தான் உதாரணமாக நிற்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். எஸ். சிவகுமாரனைப்பற்றி இங்கு ஒன்று குறிப்பிடப்பட வேண்டும். என் 'விமர்சக விக்கிரகங்கள்' வந்தபோது இருந்த சிவகுமாரனுக்கும் இப்போதுள்ள சிவகுமாரனுக்குமிடையே பொ¢ய வித்தியாசமிருக்கிறது. இவரைப்பற்றி 'விழாவின் வெட்டு முகத்தில்' நான் குறிப்பிட்டவை ஏனோ அமுக்கப்பட்டுவிட்டன. பெனடிக்ற் பாலன், செம்பியன் போன்றவர்களின் பரம்பரரையில் இப்போ மிக ஆழமான பார்வையுள்ளவர் இவர் ஒரு ஒருவரேதான். சிருஷ்டி இலக்கியத்தில் அவ்வளவு ஈடுபடுவதாகத் தெரியாவிட்டாலும் பழைய சிருஷ்டி எழுத்தாளர்களைவிட இவாரிடம் கூடுதலான பார்வை ஆழம் இருக்கிறது. இவரிடம் இல்லாதவற்றுள் துணிச்சலும், தன்னம்பிக்கையும் மிக முக்கியமானவை. இருந்தாலும், கடைசி விமர்சனத் துறையிலாவது இவர் எதிர்காலத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவார் என்பதே என் எண்ணம்.

நிற்க, தருமு சிவராமுவிடம் திரும்பவும் வரலாம். 'முற்போக்கு' இலக்கிய சர்வாதிகாரத்தில் கனக செந்திநாதன் ஒத்துழைப்பவராக இருந்தார் என்றால், எஸ்.பொன்னுத்துரை ஒதுக்கப்பட்டவராக இருந்தார் என்றால், தருமு சிவராமு தானாகவே வெளியே, வெளிநாட்டுக்கே ஓடியவராக நிற்கிறார். Emigre. புரட்சியையும் அது கொண்டுவரும் சர்வாதிகாரத்தையும் கண்டு அதிருப்திப்பட்டு வெளிநாட்டுக்கு ஓடுபவர்கள் ஒரு நாளும் தங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கு உதவுபவர்களாய் இருப்பதில்லை. அவர்கள் ஆத்திரத்தாலும் வெறுப்பாலும் பீடிக்கப்பட்டு, புரட்சியால் உள்நாட்டில் ஏற்பட்ட நல்ல பண்புகளைக் கூட ஒப்புக்கொள்ளாதவர்களாக மாறிவிடுகின்றனர். பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து தப்பி ஓடியவர்களும் சரி, ரஷ்யப் புரட்சியிலிருந்து தப்பி ஓடியவர்களும் சரி, அப்படி ஒரு மனநிலையைத்தான் காட்டுகின்றனர்.

உள்நாட்டுச் சர்வாதிகாரங்கள் ஆபத்தை விளைவித்திருக்கலாம். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல் நம்மை எதையும் செய்யாமல் விட்டுவிடுவதுமில்லை. தருமு சிவராமுவின் நிலை அப்படித்தான். தருமு சிவராமு, ஈழத்து இலக்கிய விவகாரங்களிடமிருந்து தப்பி ஓடிப்போய் இந்திய எழுத்தாளர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறார். (மு.தளையசிங்கத்தைப் போல் இங்குள்ள நிலையை இங்கிருந்தே எதிர்த்துத் திருத்தும் துணிவும் பொறுமையும் அவா¢டமில்லை.) அதனால் 56க்குப் பின் ஈழத்தில் வந்த வளர்ச்சியைப்பற்றிக் கொஞ்சமும் ஒப்புக்கொள்ளாதவராகவே அவர் மாறிவிட்டிருக்கிறார். இந்திய இலக்கியத் தரத்தாலும் மற்ற வெளிநாட்டுத் தரத்தாலும் இழுக்கப்படும் இவர் உள்நாட்டு நிலையை உணராதவராகத் தொ¢கிறார்; உணர அவர் முயல்வதில்லை. அப்படி ஒரு மனோநிலை!

அவரைப் பொருத்தவரையில் தமிழ்நாடு, ஈழம் என்ற வித்தியாசமே இல்லையாம்! 'தீ'பற்றி அவர் 'எழுத்து'வில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் 'தீ' என்ற நாவலின் பெயரையோ அதை எழுதிய பொன்னுத்துரையின் பெயரையோ ஒரு தடவைகூட அவர் பாவிக்கவில்லை. (அவற்றுக்குப் பதிலாக பிரஸ்தாப நாவல் போன்ற நீண்ட சொற்றொடர்கள்தான் கையாளப்பட்டுள்ளன.) பாவிப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. அத்தனை மறுப்பு, அத்தனை ஆத்திரம், அத்தனை வெறுப்பு. இத்தகைய மறுப்பின் காரணமாய் அவா¢டம் பார்வை ஆழம் இருப்பினும் அதன் பயனை ஈழத்துத் தமிழ் இலக்கியம் பெற முடியாமலே இருக்கிறது. சர்வதேசத் தரத்தைத் தொட முயலும் முயற்சி சொந்தப் பிரதேசத்தைப்பற்றிய அறியாமையாக மாறிவிட்டால் ஆபத்தாக மாறிவிடும்.

அது ஒருவகை schizophrenia. தருமு சிவராமுவின் எண்ணங்களும் அபிப்பிராயங்களும் அப்படி ஒரு schizophreniaவையே காட்டுகின்றன. அதனால்தான் எந்தப் பின்னணியில் வைத்து 'தீ'யின் முக்கியத்துவத்தை ஒரு மரபு உடைப்பாக நான் ஆராய்தேனோ அதை அவரால் உணர முடியவில்லை. வேதாந்தத்தின் அடிப்படையில் 'தீ'யை மறுக்க முயலும் அவர் வேதாந்தத்தின் அடிப்படையில் வெளியான முல்க்ராஜ் ஆனந்தின் 'காமகலா'வுக்குக் கூட இங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறதென்பதை உணரத் தவறிவிடுகிறார்.

கஜுராஹோ, கொனோராக் கோயிற் சிலைகளை மட்டுமல்ல, அவற்றைப்பற்றிய நூல்களைக்கூடப் பார்க்க முடியாத நிலை ஈழத்துத் தமிழர்களுக்கு இருக்கிறது என்பது அவருக்குத் தொ¢வதில்லை. அவர் யதார்த்தத்திலிருந்து விடுபட்டவராக நிற்கிறார். அதோடு பால் என்ற ஒரு துறையை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என்று 'தீ'யின் முன்னுரையில் எழுதப்பட்டிருந்தும் அதை மறந்து, ஆத்மீகத்தின் அடிப்படையில் பொன்னுத்துரையைப் பொதுப்படையாக எதிர்க்கும் தருமு சிவராமு ஆத்மீகத்தின் அடிப்படையில் பொன்னுத்துரை எழுதிய மற்ற கதைகளை மறந்துவிடுகிறார்.

அதே schizophrenia. (தருமு சிவராமுவின் கட்டுரைக்குப் பதிலாக நான் எழுதிய கட்டுரை நம் இலக்கிய சர்ச்சைகளில் மிகச் சுவையான ஒரு பகுதியைக் காட்டியிருக்கும். ஆனால் 'எழுத்து' அதைப் பிரசு¡¢க்கவில்லை. மேல்நாட்டு இலக்கிய முறைகளைக் கையாள்வதாகக் கூறும் 'எழுத்து' அங்கு முக்கியமாகக் கருதப்படும் ஒரு சிறந்த முறையைப் புறக்கணித்தது ஆச்சா¢யந்தான். சர்ச்சையை ஆரம்பித்த கட்டுரை ஆசிரியன்தான் கடைசியாக எழுதிச் சர்ச்சையை முடிக்க வேண்டும். 'எழுத்து' அதற்கு இடம் கொடுக்கவில்லை. கட்சிச் சாய்வு என்பது 'எழுத்து'வுக்கும் இல்லாமலில்லை.) இருந்தாலும் தருமு சிவராமுவிடம் ஓர் ஆழ்ந்த கலையுள்ளம் இருக்கவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

எப்படி ஒரு schizophrenia கீற்றுகள் அவரது எழுத்துகளில் (முக்கியமாக ஈழம் சம்பந்தப்பட்டவையாய் வரும்போது) இருக்கின்றனவோ அப்படியே mysticismற்குரிய முத்திரைகளும் இல்லாமலில்லை. அதனால்தான் தருமு சிவராமுவை எனக்கு அப்படிப் பிடிக்கிறது. ஆனால் அவர் சில சமயங்களில் அதிசய simplificationஇல் ஈடுபட்டுவிடுகிறார். இதோடு அவரது எழுத்துகள் விளங்காமல் இருக்கின்றன என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அதே சமயம், படிப்பவர்களின் பார்வை ஆழத்தையும் பொருத்திருக்கிறது என்று சொல்வதும் உண்மைதான். அதோடு அவருடைய எழுத்துகளில் நம் நாட்டு சிருஷ்டி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் வராத கலையைக் காண முடியும் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தருமு சிவராமுவுக்கு உரிய இடம் ஒர் emigre என்ற காரணத்தால்தான். அது ஒரு தனி ஓட்டம். அதனால்தான் இங்கு அவரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.


7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்

தர்மு சிவராமு வெளியே ஓடியவர் என்றால் மு. தளையசிங்கம் அடியோடிப் (underground) பதுங்கியவர். பதுங்கிச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்துவிட்டுப் பின்பு தாக்கியவர். 'முற்போக்கு' இலக்கியச் சர்வாதிகாரத்தை எதிர்த்த உண்மையான முரளி, புரட்சிவாதி (rebel) இவரேதான்.

இவர் விமர்சகரா?

நிச்சயமாக இல்லை. விமர்சனத் தரத்தைத் தொடும் போதெல்லாம் ஹிட்லா¢ன் கோயபெல்ஸ், குவாய் நதிப்பாலம் என்றெல்லாம் மிக்க உயர்வு நவிற்சியாக எழுதி வேண்டுமென்றே அதைக் குலைப்பவர். 'வேண்டுமென்றே' - அது கவனிக்கப்பட வேண்டும். காரணம், விமர்சகராக இருப்பதல்ல இவரது நோக்கம். கட்டுரைகள் எல்லாம் ஒரு எழுத்தாளனின் சுய 'விளம்பரங்களே'.

இவற்றைப் படித்தவுடன் சிலர் துள்ளிக் குதிக்கலாம். அப்பாடா ஒர் ஆபத்தைத் தட்டிக் கழிப்பதற்கு ஒரு சாட்டு கிடைத்துவிட்டதே என்ற சந்தோசத்தில். 'அவரசக்குறிப்புகள்' என்ற அடைமொழி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றின் மூலம் ஆசி¡¢யர் சொன்னவற்றைப்பற்றி ஒன்றும் கவலைப்படாது எதிர்க்கும் சிலருக்கு இது இன்னும் உதவக்கூடும். இருந்தும், அவர்களைப் பற்றி இங்கு கவலைப்படத் தேவையில்லை. என்ன வகையான வார்த்தைகளைக் கொண்டும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது.

மு. தளையசிங்கம் 56ஐ ஓட்டி எழுத ஆரம்பித்தார். 'முற்போக்கு'க் கூட்டின் உண்மையான சர்வாதிகாரத்துக்கு முந்தியவர். இவரது முந்தைய கதைகள் பெரும்பாலும் தரமற்றவை. ஆனால் 'அருளி மொட்டு' 'பெப்ரவா¢-4' போன்றவை தரமானவை மட்டுமல்ல, 56க்குப் பின்னர் வந்த பரம்பரைக்கு¡¢ய சிறந்த கதைகளில் சில என்று எடுக்கப்பட வேண்டியவையுங்கூட. 'புதுயுகம் பிறக்கிறது' என்பதோடு இவருடைய 'புதுயுகம்' ஆரம்பமாகிறது.

ஆனால் புதுயுகத்துக்கும் பழைய புகத்துக்குமிடையில் இவர் சில காலம் - வேண்டமென்றே பதுங்கிக் கிடந்தார். அந்த இடைக்காலத்தில் இரண்டுக்கு மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதிக்கொண்டே இருந்தாலும் எதையும் பத்தி¡¢கைக்கு அனுப்பியதில்லை. அந்த மெளனமும் 'முற்போக்கு' சர்வாதிகாரத்தின் உச்ச வளர்ச்சியும் சிலருக்கு வால் பிடிப்பதையும், பிரபல்யத்துக்காக வேண்டி தனக்குப் பிடிக்காத ஒரு கட்சிக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. அதனால் மெளனம்.

ஆனால் அந்த மெளன இடைவெளியில் அவரது பார்வை வளர வளர மற்றவாகள், மற்ற பத்தி¡¢கைகள், விமர்சகர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் நிற்பதையே அவர் உணர்ந்தார். அதே வகையில் இன்றைய நிலையில் ஒரு தரமான எழுத்தளனின் சிருஷ்டிகளுக்கு அரங்கமைக்க நம் நாட்டுப் பத்திகைகளுக்குத் தரம் போதாது என்றும் முடிவு கட்டிக்கொண்டார். அது மட்டுமல்லாமல் 56க்குப் பின் வந்த இலக்கிய வேகமும் மெல்ல மெல்ல ஒரு கட்சியின் இலக்கியமாக இறுகி ஒரே ரகமான மந்த நிலையில் வீழ்ந்து உண்மைகளையும் அந்த ஒருமைப்பாட்டுக்குள் திணித்துத் திருக முயல்வதையும் அவர் உணரத் தொடங்கினார்.

அதே நிலையில் மெளனமாக இருந்து தன் சிருஷ்டிகளைப் பத்தி¡¢கை எதிலும் வெளியிடாமல் நூல் வடிவங்களாக வெளியிட்டு புரட்சி செய்யக் காத்திருந்தார். அவற்றுக்காக முதலில் கட்டுரைகள் எழுதி வழிவகுக்க வேண்டியவராக சூழலால் நிர்பந்திக்கப்பட்டார். அந்த வகையில் 'முற்போக்கு' சர்வாதிகாரம் முழு உண்மையையும் நீதியையும் நியாயத்தையும் தன் கட்சிக்குள்ளேயே அமுக்க முயன்றபோது அவை திமிறிக்கொண்டு மு. தளையசிங்கம் மூலம் வெளிக்கிளம்பின என்றும் சொல்லலாம்.

'முற்போக்கு' சர்வாதிகாரம் ஆரம்பத்தில் நம் இலக்கிய வேகத்துக்கு உதவினாலும் பின்னர் படிப் படியாக அதைச் சிதைக்கக்கூடிய வகையில் ஒருமைப்பாட்டையும் யந்திர இறுக்கத்தையும் புகுத்தியபோது விடுதலை சேர்ந்த ஒரு இளகலை (thaw) கொண்டு வருவதற்கு இவர்தான் உதவியிருக்கிறார் எனலாம். இறுக்கமாக மாறியதோடு எல்லாராலும் அதுவே நியதி என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்த ஒரு நிலையிலிருந்து மாற்றம் தேடும் கலைஞன் தன்னை வெளிக்காட்டுவதற்கும் தன்னை ரசிக்கச் செய்வதற்கும் ஏற்றவகையில் புதிய சூழலையும் வழிகளையும் ஏற்படுத்த வேண்டியவனாகிவிடுகிறான்.

இலக்கிய விவகாரங்கள் என்று நடத்தப்படும் கூட்டு வழிபாடுகளும் விமர்சனம் என்று செய்யப்படும் முதுகு சொறிதலும் சாதனையாகப் போற்றப்படும் மலிந்த சரக்குகளும் எற்படுத்திய ஒரு மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே இவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அந்த வகையில் இவருடைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அந்த வகையில் இவருடைய கட்டுரைகள் ஒரு புதிய போக்குக்கு¡¢ய விளம்பரங்களே. ஆனால் அந்த விளம்பரங்கள் உண்மையின் பக்கம், தரத்தின் பக்கம். அவர் உண்மையை விரும்புவதனால்தான் 'முற்போக்கு'க் கூட்டிலுள்ள தனிப்பட்ட பலா¢ன் திறமையையும் அதே சமயம் அவர் ஒப்புக்கொள்ள மறுப்பதில்லை.

மு. தளையசிங்கத்தின் உண்மையான நோக்கத்தையும் போக்கையும் விளங்குவதற்கு இவரை இக்கட்டுரைத் தொடா¢ல் குறிப்பிட்ட மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். உண்மையையோ தரத்தையோ மனசாட்சியின் குறுகுறுப்பையோ நீதியையோ நியாயத்தையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெறும் பிரபல்யத்தையும் பிரசுர வசதிகளையுந்தான் இவர் தேடியிருந்தால் அப்போதைக்கப்போது அதிகாரத்தை அனுபவிப்பவர்களோடு இவர் ஒத்திழைத்திருக்கலாம். கடைசி கனக செந்தியைப் போலாவது இடைக்கிடை விட்டுக் கொடுத்திருக்கலாம்.

இவர் அப்படிச் செய்யவில்லை. அதிகாரம் தேவையென்றால் மற்றவர்களின் தரத்தையும் கெட்டத்தனத்தையும் முற்றாக மறுத்திருக்கலாம். கொள்கைகளைப் பொருத்தவரையில் அடுத்தவர்கள் முரண்பாடுடையவர்களாக இருப்பினும் அவர்களிடம் திறமை இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் குதர்க்கம் செய்திருக்கலாம். அப்படியும் இவர் செய்யவில்லை, செய்ய விரும்பவில்லை. அல்லது நம் சூழலின் போக்கில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக முற்றாக அதைப் பார்க்கவே மறுத்திருக்கலாம். அடுத்த நாட்டு இலக்கியங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்றும் செய்ய இவர் விரும்பவில்லை. மாறாக, தானாகத் தனியாகவே நின்று திசை திருப்ப முயல்கிறார். அதுதான் முக்கியம். இவா¢டமுள்ள தன்னம்பிக்கையும் தன் திறமையைப் பற்றிய உணர்வுந்தான் இவரை வேறுபடுத்துகிறது. ஆனால் அதே காரணத்தால்தான் 56க்குப் பின் வந்த வளர்ச்சியைச் சில சமயம் அதிகப்படுத்தியும் இவா கூறிவிடுகிறார்.

இவர் தன்னிடம் காணும் நம்பிக்கையையும் வளர்ச்சியையும் சில சமயம் சூழலிலும் ஏற்றி அதனால் அதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறார் என்று சொல்லவும் இடமுண்டு. தர்மு சிவராமு ஓரளவுக்கு உண்மையைத்தான் கூறுகிறார். உலகத் தரத்தை வைத்து ஒப்பிடும்போது நம் முயற்சிகள் மிக மிகச் சின்னவையாகவே படக்கூடும்.

ஆனால் மு. தளையசிங்கம் தன் சொந்தத் தன்னம்பிக்கையின் காரணமாய் தன் சூழலிலும் அதிலுள்ள மற்ற எழுத்தாளர்களிடமும் அதை ஏற்றிக்காண முயல்கிறார். 'முற்போக்கு'க் கூட்டைப்பற்றியும் கைலாசபதி, சிவத்தம்பி, காவலூர் ராசதுரை, செல்வராசன் போன்றோரைப்பற்றியும் பொன்னுத்துரையைப் பற்றியும் இவர் தேவைக்கு மிஞ்சி அதிகமாகவே கூறுகிறார், புகழ முயல்கிறார் என்று கூறவும் இடமுண்டு. 56க்குப் பின் வந்த பரம்பரைக்கும் இலக்கிய வேகத்துக்கும் இவர் கொடுக்கும் முக்கியத்துவம் அதே வகையில் அதே காரணத்தால் அதிகமாக்கிக் காட்டப்படுகிறது என்று சொல்லவும் இடமுண்டு.

இவருடைய தனிப் போக்கிலும் ஒரு குறையுண்டு. மற்றவர்களுடைய சாணக்கியத்தையும் கயிறிழுப்புகளையும் கட்சி வெறியையும், இதை மட்டும் கொண்டு சமாளிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. முக்கியமாக 'முற்போக்கு' வாதிகளை எதிர்க்க, அவர்களுக்குத் தொ¢ந்த அதே சாணக்கியத்திலும் விளம்பரத்திலும் கட்சி அமைப்பிலும் அவர்களையும் வெல்லக்கூடிய ஒரு பொன்னுத்துரை போன்றவர்தான் தேவை. அதை மு. தளையசிங்கம் அடிக்கடி உணராமலில்லை.

அதோடு இவருடைய போக்கு தனிப் போக்கு. ஒவ்வொருவனையும் ஏதோ ஒரு கட்சிக்குள் போட்டுப் பார்க்க முயலும் சாதாரண மக்களுக்கு இது பு¡¢யாத ஒன்றாகும். அதனால் இவர் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு எவருடைய ஆதரவையும் பெறாமல் போய்விடும் ஆபத்தும் ஏற்படலாம். அவற்றை எல்லாம் இவர் உணராமலில்லை. இருந்தும் அவற்றுக்காக வேண்டி இவர் தன்னை இழக்கவும், நேர்மைக்கும் உண்மைக்கும் மாறானவற்றோடு சமரசம் செய்துகொள்ளவும் இவர் விரும்புவதில்லை. இந்தப் போக்குக்கு அடிப்படையாக ஒரு முக்கிய காரணம் இல்லாமலில்லை.

இவர் ஒருவகையான existentialist. அதனால் திட்டவட்டமான எந்தக் கொள்கைகளும் தத்துவங்களும் இவருக்குப் பிடிப்பதில்லை. உண்மை என்பதை எந்தத் தனித் திட்டத்துக்குள்ளும் அமுக்கிவிட முடியாது என்பதே இவருடைய எண்ணம். அதே சமயம் அது எல்லாவற்றிற்குள்ளும் ஓரளவுக்காவது இல்லாமலில்லை என்பதையும் மறுக்க முயல்வதில்லை.

உண்மையைப்பற்றிய தேடல் கடைசியில் ஆத்ம விசாரணையாக முடியும் என்பதே இவருடைய எண்ணம். அந்த வகையில் சமயத்தின் தேவையை இவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் சமயக்கொள்கைகளும் தத்துவங்களும் ஸ்தாபனங்களும் அந்த உண்மைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அவையே இவையாக மாற்றப்படுவதுதான் உண்மையான ஆபத்து என்பதையும் உணர்ந்தவர். இன்று மக்கள் கடவுளைக் காண முயலாமல் சமயங்களையும் தத்துவங்களையும்தான் வழிபட முயல்கிறார் என்பதுதான் இவரது அபிப்பிராயம். அதனால்தான் சமயச் சண்டைகளும் 'என்மதந்தான் எல்லாம்', 'என் மதந்தான் பெரியது' என்ற அறியாமையும் பிறக்கின்றன என்பது இவரது அபிப்பிராயம்.

 ஆனால் எந்த ஒரு தனி மதத்துக்குள்ளும் தன்னை நிறுவிக்கொள்ள இவர் விரும்புவதில்லை. எல்லா மதங்களையும் படித்து எல்லாவற்றுக்கும் அப்பால் செல்ல வேண்டும் என்பதே இவருடைய அபிப்பிராயம். அத்தகைய தேவையையும் பார்வையையும் மற்ற தத்துவங்களைவிட வேதாந்தம் அதிகமாக வலியுறுத்துகிறது என்பதையும் இவர் மறுப்பதில்லை. அதனால்தான் காளியையும் அல்லாவையும் யேசுவையும் வணங்கி அவர்களுக்க அப்பாலும் செல்ல முயன்ற ராமகிருஷ்ணர் இவருக்கு மிகவும் பிடித்தமானவர்.

ரமணரும் அப்படியே. இலக்கியத்தில் இவருடைய நேர்மையையும் தனித்தன்மைக் கொள்கையையும் இந்த ஆத்ம விசாரணையின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். அதே ஆத்ம விசாரணையின் அடிப்படையில் பார்த்தால் இந்த இலக்கியக் கட்டுரைகளம் சுய விளம்பரங்களும், சுய விசாரணையாகவும் சூழல் விசாரணையாகவும் இருப்பதுபோல் எல்லைதாண்டிவிட்டால் அனாவசியமானவையாகவும், ஆணவத்தை, egoவை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்துபவையாகவும் மாறிவிடக் கூடியவை என்பதையும் இவர் உணராமலில்லை. அதைப்பற்றி அடிக்கடி கவலைப்படாமலுமில்லை. ஒருவேளை இந்த கட்டுரைத் தொடரே இக்காலத்து ஈழத்து இலக்கியம்பற்றிய இவருடைய கடைசிக் கட்டுரையாகவும் இருக்கலாம்.

இருந்தாலும் மொத்தத்தில் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் மு.தளையசிங்கத்தின் பங்கானது, நேர்மை, நீதி, தரம், தனித்தன்மை, சுதந்திரம், உண்மை என்பவற்றைத் தேடும் ஓர் வி¡¢ந்த பார்வையை புகுத்த ஏற்பட்ட முயற்சியாகும். அதனால் இவருடைய சுய விளம்பரங்கள் அவற்றுக்குரிய விளம்பரங்களாகவும் மாறிவிடுகின்றன.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home