Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Tamilnation > Tamilnation Library> Eelam Section > விழுதாகி வேருமாகி .....போரியல் பதிவுகள் -

TAMIL NATION LIBRARY: Eelam

  • விழுதாகி வேருமாகி .....போரியல் பதிவுகள் -
     நுஃலாசிரியர்கள் : அ.காந்தா,  செ.புரட்சிகா,  மலைமகள
     

Book Review by M.Thanapalasingham, 20 February 2005
[see also Selected Writings by M.Thanapalasingham]
 

"..தமிழ் ஈழமக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் புறநிலைக்காரணிகளால் வடிவெடுத்த ஆயுதப்போராட்டத்தின் போரியல் பதிவுகளாக 2ம் லெப்.மாலதி படையணியின் விழுதாகி வேருமாகி என்னும் போர்க் காவியம், போரியல் பதிவுகள், தமிழ் மொழிக்கு புதியவை. போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்டது என்ற புதுமை ஒருபுறம், அதுவும் பெண்கள் படை அணியின் போரியலை, போர் நிகழ்வுகளை பெண் போராளிகளே எழுதியுள்ள அற்புதம், விழுதாகி வேருமாகி என்னும் நூலாகும்... கேணல் விதுஷாவின் மொழியில் கூறுவதாயின் "வரலாற்றை ஆக்கியோரின் வரலாறு "  ஆகவும் இந்நூல் அமைகின்றது. "


கிரேக்க நாகரிகத்தின் இலக்கியச் சாதனையாகவும், மேற்கத்தைய நாகரிகத்தின் அடிப்படை அத்திவாரமாகவும் கொள்ளப்படும் ஹோமர் (Homer) என்னும் கிரேக்க ஆதிக்கவியால் பாடப்பட்ட இலியாட் (Illiad) என்னும் நீண்டபாடல் ஒரு போர் இலக்கியமாகும் அதன் கருவாக அமைந்தது றோயன்(Trojan) போரின் பத்தாவது ஆண்டுப் போர் நிகழ்வுகள் வேகமாகச் செல்லும் பாதங்களைக் கொண்ட அச்சிலியஸ் (swift footed Achilles) கடவுளைப்போன்ற ஹெக்ரர் என்னும் வீரனைக் (God like Hector) கொல்வது இப்போரின் தலைவிதியை நிர்ணயித்தபோதும் இக்காவியத்தில் போரும், மாவீரமும்,  இழப்புக்களும், மரணங்களும், இளமையின் மரணத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் முதுமைகள் பெண்கள் இளம் சிறுவர்கள் இவற்றிடையே கதைக்கோலங்கள் தொடர்கின்றது. வேத வியாசரின் மகாபாரதத்தைப் போன்று கடவுள்களும், தேவர்களும் மனிதர்களுடன் இந்த யுத்ததில் பங்கேற்பதே இலியாட்.

கிரேக்கரைப் போன்று தொன்மையும் இசெம்மையும் கொண்ட தமிழ் மக்களின் வீரயுகமாகச் சான்றோரால் எடுத்தாளப்படும் சங்ககால இலக்கியங்கள் மன்னர்களும் சிற்றரசர்களும் முட்டிமோதிய போர்களை உள்ளவாறே பாடுகின்றன. இந்த வகையில் கிரேக்கரின் வீரயுகப்பாடல்களைக் காட்டிலும் தமிழ்மக்களின் வீரயுகப் பாடல்கள் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களை விளக்குகின்றன எனலாம்.

இவற்றின் பின்னணியில் தமிழ் ஈழமக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் புறநிலைக்காரணிகளால் வடிவெடுத்த ஆயுதப்போராட்டத்தின் போரியல் பதிவுகளாக 2ம் லெப்.மாலதி படையணியின் விழுதாகி வேருமாகி என்னும் போர்க் காவியம் போரியல் பதிவுகள் தமிழ் மொழிக்கு, புதியவை. போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்டது என்ற புதுமை ஒருபுறம், அதுவும் பெண்கள் படை அணியின் போரியலை, போர் நிகழ்வுகளை பெண் போராளிகளே எழுதியுள்ள அற்புதம், விழுதாகி வேருமாகி என்னும் நூலாகும்.

கப்டன் மலரவனின் போர் உலா ஒரு போர்ப்பரணியாக 1993 இல் வெளிவந்ததை பலர் அறிந்திருக்கலாம். இது தமழ் மக்களின் போர் இயல் பதிவுகளுக்கு ஒரு முன்னோடி எனலாம். இதன் பின் 2001 ஆம் ஆண்டில் வெளஹவந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் விடுதலைப்புலிகளின் படையணியின் ஒரு சிறப்புப் பிரிவின் சாதனைகளை விளக்கிநிற்கக் காணலாம். இவற்றில் இருந்து வேறுபட்டு நிற்கும் போரியல் பதிவுகளாக விழுதாகி வேருமாகி விரிவுபெறுகின்றது

"எதிரிமட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் " என்ற தேசியத் தலைவரின் எழுத்தோவியம் இப் பதிவுகளுக்கான நோக்கத்திற்கு முத்தாரமாகின்றது.

" உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்திற் பங்குபெறாதுஇ எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும் முழுமைபெறாது. "

என்னும் தேசியத் தலைவரின் ஆழ்ந்த ஞானத்தின் விளைச்சலே விழுதாகி வேருமாகி என்பதை அழுத்திக் கூறவேண்டிய அவசியம் இல்லை.

கேணல் விதுஷாவின் மொழியில் கூறுவதாயின் "வரலாற்றை ஆக்கியோரின் வரலாறு "  ஆகவும் இந்நூல் அமைகின்றது.

எமது விடுதலைப் போராட்டத்தில் பெண்படையணியில் முதல் வித்தாகிய மன்னாரில் குளித்து எடுத்த மணிமுத்தான 2ஆம் லெப்.மாலதி படையணியின் பதிவாகவும் இது அமைகின்றது.

நுஃலாசிரியர்கள் : அ.காந்தா,  செ.புரட்சிகா,  மலைமகள் என்போராவர்.

இந்த மாதத்துடன் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே மூன்றாம் தரப்பான நோர்வே நாட்டின் அனுசரணையுடன் அமூலுக்கு வந்த யுத்த நிறுத்தம் மூன்றாவது ஆண்டை தொட்டு நிற்கின்றது. இதனது ஆரம்ப வைபவங்களில் ஒரு நிகழ்வு இங்கு பதிவாகின்றது.

"2002.04.08 நேரம் மதியமாகிக்கொண்டிருந்தது. மழைபெய்யத் தொடங்கிவிட்டிருந்தது. கண்காணிப்பாளர் ஒருவர் நாடாவை வெட்டஇ அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்க ஊர்தியொன்று முதலில் இங்கிருந்து அங்கே செல்லஇ அதைத் தொடர்ந்து போராளிகள் செல்ல ......................................................ஓடிவந்த மக்கள் கட்டித்தழுவி, முத்தமிட்டு, தம்தோள்களிலே காவிச்சுமந்து................எங்களை மறுபடி ஊடககவியலாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.

"நீங்கள் எந்தப் பிரிவு ?"
"மாலதி படையணி"

ஆ, நல்லது. இந்தப் பாதை திறக்கிறதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'
எதைச் சொல்வது நண்பர்களே?

பாதை திறக்கப்போகின்றோம் என்று "கதை " விட்டவாறு வவுனியாவில் இருந்து மாங்குளம் வரையும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம்வரையும் பாதையை மூடிவைத்திருந்த படையினரை முறியடித்து, பாதையை நாம் இன்று திறப்பதைப்பற்றிச் சொல்வதா?

சமாதனத்திற்கான போர் என்று பெயர் சூட்டி தமிழர்களை அழித்தொழிக்கும் போரைச் செய்தவர்களின் முகமூடியைக் கிழித்து, உண்மையான சமாதானத்துக்கான கதவுகளை இப்போது நாமே திறந்துவிட்டிருப்பதைச் சொல்வதா? எதைச் சொல்வது?

நுஃலாசிரியர்கள் இக்கேள்வியை நூலில் பல இடங்களில் எழுப்புகின்றனர். இந்த பாதை திறப்பிற்காக இவர்கள் நடந்த இரத்தம் தோய்ந்த பாதை, அதில் பெண்போராளிகள் சந்தித்தவை, சாதித்தவை இழந்தவை யாவுமே பதிவுகளாகின்றன.

மன்னகுளச் சமரில் இவர்களின் போர்திறம் படிப்போரை திகிலடையவைக்கின்றது. இறந்த சிறி லங்காவின் நூற்றுக்கணக்கான சடலங்களை செஞ்சிலுவைச் சங்கமூலம் ஒப்படைத்ததை கூறிவிட்டு.....

 "ஆனால் மன்னகுளத்தின் நீண்ட அடர்ந்த காட்டு மரங்களிடையே இழக்கப்பட்ட சிறப்பு அணியினரின் மானம்,  மரியாதை, கௌரவத்தை எடுத்து ஒப்படைக்க எந்தச்சங்கமும் முன்வரவில்லை "

அன்று பனங்காமத்து வன்னிச்சிகள்,  இன்று அவர்களையும் விஞ்சிநிற்கும் புலிப்பெண்கள்.

மண்மீட்பு போர் அத்தனையிலும் எமது சகோதரிகள், எங்கள் சொந்தங்கள், எமது உறவுகள் தரையிலும், கடலின் முதுகிலும் சவாரிசெய்து சாதித்தவை இந்நூலில் புதிய போர்த் தமிழில் பதிவாகின்றது.
நூலின் இடையிடையே எமது பண்பாட்டின் விழுமியங்களும், மக்களின் பங்களிப்புக்களும் சுவாரசமாகப் பதிவாகின்றது.

1999 தைப்பொங்கலை போரின் நடுவிலும் தழுவிய பதிவு நெஞ்சை நெகிழவைக்கின்றது.

"3.00 மணிக்கே எழும்பித் தலைமுழுகியவர்களும், மேய்ப்பர்களற்று கிளிநொச்சியெங்கும் பரவலாக உலவும் மாடுகளின் பின்னும் முன்னும் முதல்நாளே ஓடித்திரிந்து பொறுக்கி வைத்திருந்த சாணத்தால் தரையை மெழுகியவர்களும்இ அதன்மேல் வெளகளை மணலாலும் நாயுண்ணிப் பூக்களாலும் கோலத்தை வரைபவர்களும்இ கழுவி வைத்திருந்த கற்களை எடுத்து அடுப்பாக அடுக்கியவர்களும்,.............. சரி சரி பொங்குது அரிசியைப் போடு"

"கிண்டு கிண்டூ துணி எங்கை இறக்குவம்க
என்ற கதம்பக் குரல்களுமாக பொங்கல் பானை அடுப்பிலேறிஇ இறங்கிய பின்னும் சூரியனைக் காணவில்லை.

"அவர் ஆறுதலா வரட்டும். நீ கிழக்குத் திசையைப் பார்த்தபடிஇ வாழையிலையில பொங்கலை வை. அஞ்சு நிமிசம் பாத்திட்டு நாங்கள் சாப்பிடுவம்." ஆனால் அம்பகாமத்தில் நின்ற மைதிலியின் கொம்பனியின் நிலையோ வேறுவிதமானதாக இருந்தது "

மணிவாசகரின் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என்ற அழகு தமிழில் போரின் நடுவிலும் நடைபெறும் பொங்கலும், எமது பண்பாட்டில் பெண்கள் புரியும் புரட்சியும் இகங்கு அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்து.

இது போல் குடிநீரும், குளிப்பும,  இதற்காக இவர்கள் பட்டபாடுகள் யாவுமே பதிவாகின்றன.

போரின் மத்தியிலும் போராளிகளின் கலை நிகழ்வுகள் மேடையேறிய நிகழ்வுகளும் பதிவாகின்றன. அவ்வாறான ஒரு நிகழ்வில் தேசியத்தலைவரும் கலந்து கொள்கிறார். அதில் ஒரு கருத்தாடல். சண்டையொன்றின் வெற்றியை தீர்மானிப்பது பயிற்சியா துணிவா என்பதே பொருள். விறுவிறுப்பான விவாதம். முடிவில் தேசியத் தலைவரின் உரை பதிவாகின்றது.

 

" உலகளாவியரீதியில் மிகக் கூடியளவு பயிற்சிபெற்ற படைகள்கூடத் துணிவின் முன்னால் மண்டியிட்டுத்தான் இருக்கின்றன. துரோகி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டபோது லெப்.செல்லக்கிளிக்கு இயந்திரத் துப்பாக்கியில் பயிற்சியில்லை. அவர் துப்பாக்கி வைத்திருந்த விதத்தைப் பார்த்து ஊகித்துதான் இவர் சுட்டார். அந்த வெற்றி துணிவால் கிடைத்தது.

இருதரப்புமே எனது கருத்துகளைக் கூறி வாதிட்டது எனக்கு வியப்பைத் தந்தது. உடல் முக்கியமா, உயிர் முக்கியமா என்ற விவாதம் என்மனதில் நடந்தது. உடலை வைத்துத்தான் உயிர் இயங்குகின்றது. துணிவு உடலைப் போன்றது. துணிவை வைத்துத்தான் பயிற்சி செய்யலாம்; சாதிக்கலாம்; இரண்டுமே பிரிக்கமுடியாதவை.

இந்திய இராணுவக் காலத்தில் அவர்களின் ஆயுதப் பயிற்சியுடன் ஒப்பிடும்போது நாங்கள் துணிவை வைத்துத்தான் செயற்பட்டோம். எனவே பயிற்சி, தந்திரம், துணிவு என்பதை இன்றிலிருந்து துணிவு, பயிற்சி, தந்திரம் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

துணிவு என்ற உடல்கொண்டு, பயிற்சி எனும் உயிர்பெற்ற எதிர்காலத்தில் செயற்படுவோம் "

மொத்தத்தில் விழுதாகி வேருமாகி என்னும் போரியல் பதிவுகள் பெண்போராளிகளின் அபார ஆற்றலை, அவர்தம் அனுபவங்களை இதியாகங்களை அழகு தமிழில் பதிவுசெய்கின்றது.

தமிழ் மக்களின் தொன்மையின் பெருமைகளை எல்லாம் பறைசாற்றி நிற்கும் தொல்காப்பியம் பெண்பாற்கு "அச்சமும், நாணமும். மடனும் ....

" உரித்தாக்கினார். இதனால் அரசிற்கு உரியதாக அவர் கூறும் " படையும், கொடியும், குடையும், முரசும், நடைநவில் புரவியும், களிறும், தேரும், தாரும், முடியும், நேர்வனபிறவும்...."

ஆண்களின் ஏகபோகமாக இருந்து வந்தது. தமிழ் ஈழப்போராட்டம் பெண்ணின் சமத்துவத்திற்கான போராட்டமாகவும் பரிணாமம் பெற்று நிற்கும் பார்வையையும் பதிவுகளையும் விழுதாகி வேருமாகி விளக்கி விரிவுபெறுகின்றது.

சங்ககாலத்து ஒளவையின் தகடூர்யாத்திரை பரிசில்பெறுவதற்காக இடம் பெற்றது. இதில் ஆரம்பத்தில் அவள் ஏமாற்றம் அடைந்தாலும், விடாமுயற்சியால் வென்றாள். இன்று எங்கள் சகோதரிகளின் யாத்திரை நடுகற்கள் ஊடாக நடக்கின்றது.

நடுகற்கள் இழப்புக்களினதும் சோகங்களினதும் அடையாளங்களல்ல. மாவீரத்திற்கான வீரவணக்க அடையாளங்களாக விழுந்தவர்களை விதையாக்கி, அந்த விதை வேராகியதால்தான் போராட்டம் தொடர்கிறது. இந்த நூலில் பதிவாகியுள்ளவை எதிர் காலத்தில் பிறக்க இருக்கும் வரலாற்று நாவல்,  காவியம் இபடத்துறை என்பவற்றிற்கு கருவாக அமையும் எனத் துணியலாம்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home