|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar > திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) > ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (1007 - 1543)
Author: Ramalinga adigal (aka vaLLaLar)
Etext input: Mr. Sivakumar of Singapore (www.vallalar.org) . Our sincere thanks go to Mr. Sivakumar for allowing us to present the TSCII format version of tiruvarutpA verses as part of Project Madurai collections.
Proof-.reading of TSCII version: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India . © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
திருமுறைகள் வெளியீடு அட்டவணை
| 1. முதல் திருமுறை ( பாடல்கள் 1-570) |
| 2. 1 இரண்டாம் திருமுறை முதல் பகுதி ( 571-1007) |
| 2.2. இரண்டாம் திருமுறை இரண்டாம் பகுதி (1007-1543) |
| 2.3. இரண்டாம் திருமுறை மூன்றாம் பகுதி (1544-1958) |
| 3. மூன்றாம் திருமுறை (1959 - 2570) |
| 4. நான்காம் திருமுறை (2571 - 3028) |
| 5. ஐந்தாம் திருமுறை (3029 - 3266) |
| 6.1 ஆறாம் திருமுறை - முதற் பகுதி (3267 -3580) |
| 6.2 ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி (3872 - 4614) |
| 6.3 ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி (4615 - ) |
| 7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) |
| 1007 |
வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால் 1 | | 1008. | கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம் இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன் ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 2
|
1009. | பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த | வாதை உற்றிட வைத்தனை ஐயோ ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால் ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 3
|
1010. | கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக் | பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல் சாவ நீயில தேல்எனை விடுக ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 4
|
1011. | சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா | ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய் ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 5
|
1012. | மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய் | போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும் சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச் ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 6
|
1013. | மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ | சிதமெ னும்பரன் செயலினை அறியாய் இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார் குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 7
|
1014. | அமைவ றிந்திடா ஆணவப் பயலே | எமைந டத்துவோன் ஈதுண ராமல் கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 8
|
1015. | கருமை யாம்அகங் காரமர்க் கடவா | அருமை யாகநாம் பாடினோம் கல்வி இருமை இன்பமும் பெற்றனம் என்றே ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 9
|
1016. | வெண்மை சேர்அகங் காரமாம் வீணா | தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென் அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 10
| |
(26). அறுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
(27). எழுசீர்- தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
(28). எழுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
(29). எண்சீர் - தொ.வே.1, ச.மு.க, ஆ.பா; எழுசீர் - தொ.வே.2,
(30). வஞ்சி விருத்தம் - தொ. வே. 1, ச.மு.க;
Back
1017
ஊதி யம்பெறா ஒதியினேன் மதிபோய்
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
1
1018. கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
2
1019. கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
செய்த வத்திரு மடந்தையர் நடனம்
3
1020. அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
செழுது மாதவி மலர்திசை மணக்கத்
4
1021. உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
5
1022. விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
6
1023. நிலையி லாஉல கியல்படும் மனத்தை
விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
7
1024. காயம் என்பதா காயம்என் றறியேன்
சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
தூய நின்அடி யவருடன் கூடித்
தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
8
1025. புன்னு னிப்படும் துளியினும் சிறிய
என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
9
1026. அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
10
Back
1027.
சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
1
1028. . அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
கழுது துன்றிய காட்டகத் தாடும்
பழுது பேசின தொன்றிலை ஒற்றிப்
பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர்
2
1029. . முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
3
1030. . வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
தன்மை அன்றது தருமமும் அன்றால்
பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
4
1031. . உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
5
1032. . கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
6
1033. . விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
7
1034. . கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
நெடிய மால்அயன் காண்கில ரேனும்
பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
8
1035. . வினையி னால்உடல் எடுத்தன னேனும்
எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர்
மனையி னால்வரும் துயர்கெட உமது
புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர்
9
1036. பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
10
Back
1037.
என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
1
1038. துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
வன்ப தாகிய நீயும்என் னுடனே
ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
2
1039. ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
வாட்டு கின்றனை வல்வினை மனனே
கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
3
1040. வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
4
1041. உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
5
1042. நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
6
1043. கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
மாறு மாயையால் மயங்கிய மனனே
ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
7
1044. யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
போது போக்கினை யேஇனி மனனே
கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
8
1045. விச்சை வேண்டினை வினையுடை மனனே
துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
பிச்சை எம்பெரு மான்என நினையேல்
இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
1046. தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
10
Back
1047.
பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப்
வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே
நசைஇலா மலம்உண் டோ டுறும் கொடிய
தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்
1
1048. அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும்
தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி
புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே
தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால்
2
1049. கண்ணினால் உனது கழற்பதம் காணும்
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால்
3
1050. நின்முனம் நீல கண்டம்என் றோதும்
பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன்
மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே
தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால்
4
1051. குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும்
செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான்
விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே
தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால்
5
1052. கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக்
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர்
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால்
6
1053. அருமருந் தனையாய் நின்திரு முன்போந்
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த
கருமருந் தனைய அஞ்செழுத் தோதும்
தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால்
7
1054. கண்நுதல் கரும்பே நின்முனம் நீல
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல்
நண்ணுதல் பொருட்டோ ர் நான்முகன் மாயோன்
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால்
8
1055. கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத்
செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா
சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால்
9
1056. முறைப்படி நினது முன்புநின் றேத்தி
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல்
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும்
தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால்
10
Back
1057.
சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
வந்து நின்னடிக் காட்செய என்றால்
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
1
1058. மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
2
1059. உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
3
1060. என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
இன்ன தென்றறி யாமல இருளில்
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
4
1061. பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
காவி நேர்விழி மலைமகள் காணக்
ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
5
1062. மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
தேட என்வசம் அன்றது சிவனே
நாட நாடிய நலம்பெறும் அதனால்
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
6
1063. கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
7
1064. மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
8
1065. ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
9
1066. யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
10
Back
1067.
நீல னேன்கொடும் பொய்யல துரையா
சால ஆயினும் நின்கழல் அடிக்கே
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
சீல மேவிய ஒற்றியம் பரனே
1
1068. கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
2
1069. நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
3
1070. இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ
பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்
4
1071. யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
போது போகின்ற தன்றிஎன் மாயப்
சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
5
1072. தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
6
1073. ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
7
1074. உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
8
1075. வாடு கின்றனன் என்றனை இன்னும்
பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
9
1076. சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
வறிய னேன்பிழை யாவையும் உனது
இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
10
Back
1077.
இன்று நின்றவர் நாளைநின் றிலரே
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
1
1078. மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
2
1079. உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
பொய்யி தல்லஎம் ஒற்றிஅம் பரனே
3
1080. வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
செல்லு கின்றன ஐயவோ சிவனே
சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
புல்லு கின்றசீர் ஒற்றிஅம் பரனே
4
1081. ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
பூறு வங்கொளும் ஒற்றிஅம் பரனே
5
1082. கந்த மும்மல ரும்என நின்றாய்
சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
எந்த நல்வழி யால்உனை அடைவேன்
புந்தி இன்பமே ஒற்றிஅம் பரனே
6
1083. அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
ஒல்லை இங்குவா என்றருள் புரியா
புல்லர் மேவிடா ஒற்றிஅம் பரனே
7
1084. ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
போல என்றுரை யாஒற்றி அரசே
8
1085. சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
சித்தம் என்னள வன்றது சிவனே
நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
9
1086. தத்து மத்திடைத் தயிரென வினையால்
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே
10
1087. பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே
11
Back
1088.
அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே
பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே
உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன்
என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல்
1
1089. எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன்
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும்
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே
2
1090. இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய்
முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர்
மருந்தனை யாய்உன் திருவடி மலரை
வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா
3
1091. உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா
கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக்
விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே
அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே
4
1092. தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத்
வினையனேன் பிழையை வினையிலி நீதான்
உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில்
எனையலா துனக்கிங் காளிலை யோஉண்
5
1093. ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன்
ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால்
நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல்
சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள்
6
1094. சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும்
கரணவா தனையும் கந்தவா தனையும்
மரணவா தனைக்கென் செய்குவம் என்றே
தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே
7
1095. கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும்
மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும்
உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்த
நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண்
8
1096. வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான்
தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர்
திகைஎது என்றால் சொலஅறி யாது
பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண்
9
1097. கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக்
சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச்
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன்
அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை
10
கலி விருத்தம் - தொ.வே. 2, ஆ.பா.
Back
1098.
ஒற்றி மேவிய உத்தம னேமணித்
தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே. 1
1099. பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே. 2
1100. ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது
நீதி யேஎனை நீமரு வாததே. 3
1101. வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
காதம் ஓடும் கடியனை ஆள்வது
நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே. 4
1102. தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே. 5
1103. மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன்
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே. 6
1104. உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே. 7
1105. எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே. 8
1106. திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
வருந்த என்தனை வைத்தத ழகதோ. 9
1107. வைத்த நின்அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப்
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே. 10
1108. போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே. 11
Back
1109.
பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
மற்று நோக்கிய வல்வினை அதனால்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
1
1110. கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
2
1111. காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
3
1112. மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
4
1113. வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
5
1114. யாதும் உன்செய லாம்என அறிந்தும்
தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
கோது செய்மலக் கோட்டையைக் காவல்
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
6
1115. பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
உந்த மட்டினால் தருதியோ உரையாய்
7
1116. ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
வான மேவிய அமரரும் அயனும்
ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
8
1117. அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
களிய மாமயல் காடற எறிந்தாங்
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
9
1118. நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
ஓகை நாட்டிய யோகியர் பரவும்
10