தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்முதல் திருமுறை -  பாடல்கள் (1 - 721)முதல் திருமுறை - பாடல்கள் (722 - 1469) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)

campantar tEvAram
tirumuRai 3 part 2 (verses 714- 1347) & later additions (1-33)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)

 
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues, Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany. Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


இரண்டாம் பகுதி - உள்ளுறை

3.067

திருப்பிரமபுரம்

(714- 725)

மின்பதிப்பு

3.068

திருக்கயிலாயம்

(726-736)

மின்பதிப்பு

3.069

திருக்காளத்தி

(737-747)

மின்பதிப்பு

3.070

திருமயிலாடுதுறை

(748 -758)

மின்பதிப்பு

3.071

திருவைகாவூர்

(759 - 769)

மின்பதிப்பு

3.072

திருமாகறல்

(770 - 780)

மின்பதிப்பு

3.073

திருப்பட்டீச்சரம்

(781 - 791)

மின்பதிப்பு

3.074

திருத்தேவூர்

(792-802)

மின்பதிப்பு

3.075

திருச்சண்பைநகர்

(803-813)

மின்பதிப்பு

3.076

திருவேதவனம்

(814-823)

மின்பதிப்பு

3.077

திருமாணிகுழி

(824-835)

மின்பதிப்பு

3.078

திருவேதிகுடி

(835-846)

மின்பதிப்பு

3.079

திருக்கோகரணம்

(847-856)

மின்பதிப்பு

3.080

திருவீழிமிழலை

(857-867)

மின்பதிப்பு

3.081

திருத்தோணிபுரம்

(868-878)

மின்பதிப்பு

3.082

திருஅவளிவணல்லூர்

(879-889)

மின்பதிப்பு

3.083

திருநல்லூர்

(890-900)

மின்பதிப்பு

3.084

திருப்புறவம்

(901-911)

மின்பதிப்பு

3.085

திருவீழிமிழலை

(912-922)

மின்பதிப்பு

3.086

திருச்சேறை

(923-933)

மின்பதிப்பு

3.087

திருநள்ளாறு

(934-944)

மின்பதிப்பு

3.088

திருவிளமர்

(945-955)

மின்பதிப்பு

3.089

திருக்கொச்சைவயம்

(956-966)

மின்பதிப்பு

3.090

திருத்துருத்தியும்
திருவேள்விக்குடியும்

(967-977)

மின்பதிப்பு

3.091

திருவடகுரங்காடுதுறை

(978-988)

மின்பதிப்பு

3.092

திருநெல்வேலி

(989-998)

மின்பதிப்பு

3.093

திருஅம்பர்மாகாளம்

(999-1009)

மின்பதிப்பு

3.094

திருவெங்குரு

(1010-1019)

மின்பதிப்பு

3.095

திருஇன்னம்பர்

(1020-1030)

மின்பதிப்பு

3.096

திருநெல்வெண்ணெய்

(1031-1041)

மின்பதிப்பு

3.097

திருச்சிறுகுடி

(1042-1052)

மின்பதிப்பு

3.098

திருவீழிமிழலை

(1053-1063)

மின்பதிப்பு

3.099

திருமுதுகுன்றம்

(1064-1071)

மின்பதிப்பு

3.100

திருத்தோணிபுரம்

(1072-1078)

மின்பதிப்பு

3.101

திருஇராமேச்சுரம்

(1079-1089)

மின்பதிப்பு

3.102

திருநாரையூர்

(1090-1100)

மின்பதிப்பு

3.103

திருவலம்புரம்

(1101-1111)

மின்பதிப்பு

3.104

திருப்பருதிநியமம்

(1112-1122)

மின்பதிப்பு

3.105

திருக்கலிக்காமூர்

(1123-.1133)

மின்பதிப்பு

3.106

திருவலஞ்சுழி

(1134-1144)

மின்பதிப்பு

3.107

திருநாரையூர்

(1145-1155)

மின்பதிப்பு

3.108

திருஆலவாய்

(1156-1166)

மின்பதிப்பு

3.109

கூடச்சதுக்கம்

(1167-1177)

மின்பதிப்பு

3.110

திருப்பிரமபுரம்

(1178-1189)

மின்பதிப்பு

3.111

திருவீழிமிழலை

(1190-1200)

மின்பதிப்பு

3.112

திருப்பல்லவனீச்சரம்

(1201-1211)

மின்பதிப்பு

3.113

திருக்கழுமலம்

(1212-1223)

மின்பதிப்பு

3.114

திருவேகம்பம்

(1224-1234)

மின்பதிப்பு

3.115

திருஆலவாய்

(1235-1245)

மின்பதிப்பு

3.116

திருவீழிமிழலை

(1246-1256)

மின்பதிப்பு

3.117

சீகாழி

(1257-1267)

மின்பதிப்பு

3.118

திருக்கழுமலம்

(1268-1278)

மின்பதிப்பு

3.119

திருவீழிமிழலை

(1279-1289)

மின்பதிப்பு

3.120

திருஆலவாய்

(1290-1300)

மின்பதிப்பு

3.121

திருப்பந்தணநல்லூர்

(1301-1310)

மின்பதிப்பு

3.122

திருஓமமாம்புலியூர்

(1311-1320)

மின்பதிப்பு

3.123

திருக்கோணமாமலை

(1321-1330)

மின்பதிப்பு

3.124

திருக்குருகாவூர்

(1331-1336)

மின்பதிப்பு

3.125

திருநல்லூர்ப்பெருமணம்

(1337-1347)

மின்பதிப்பு

பிற்சேர்க்கை

1

திருவிடைவாய்

(1-11)

மின்பதிப்பு

2

திருக்கிளியன்னவூர்

(12-22)

மின்பதிப்பு

3

திருமறைக்காடு

(23-33)

மின்பதிப்பு


3.67 திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம் திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

714

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

3.67.1

715.

தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.

3.67.2

716.

பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே.

3.67.3

717.

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.

3.67.4

718.

ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.

3.67.5

719.

நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.

3.67.6

720.

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.

3.67.7

721.

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.

3.67.8

722.

விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.

3.67.9

723.

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே.

3.67.10

724.

நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.

3.67.11

725.

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே.

3.67.12


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.68 திருக்கயிலாயம் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

726

வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.

3.68.1

727.

புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள் நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.

3.68.2

728.

சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.

3.68.3

729.

முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.

3.68.4

730.

குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.

3.68.5

731.

ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.

3.68.6

732.

சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே.

3.68.7

733.

மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.

3.68.8

734.

பரியதிரை பெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அரியமறை புரியவனும் மருவுகயி லாயமலையே.

3.68.9

735.

அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில் உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.

3.68.10

736.

அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.

3.68.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.69 திருக்காளத்தி - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

737

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.

3.69.1

738.

முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே.

3.69.2

739.

வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி *பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.
( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.)

3.69.3

740.

வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.

3.69.4

741.

மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.

3.69.5

742.

பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.

3.69.6

743.

ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்
ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே.

3.69.7

744.

எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே.

3.69.8

745.

இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே.

3.69.9

746.

நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.

3.69.10

747.

காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே.

3.69.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.70 திருமயிலாடுதுறை - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

748

ஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.

3.70.1

749.

அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

3.70.1

750.

தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே.

3.70.3

751.

ஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.

3.70.4

752.

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.

3.70.5

753.

கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.

3.70.6

754.

அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே.

3.70.7

755.

இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினோ டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.

3.70.8

756.

ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.

3.70.9

757.

மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.

3.70.10

758.

நிணந்தரும யானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.

3.70.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.71 திருவைகாவூர் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

759

கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே.

3.71.1

760.

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.

3.71.2

761.

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.

3.71.3

762.

இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

3.71.4

763.

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.

3.71.5

764.

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

3.71.6

765.

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.

3.71.7

766.

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.

3.71.8

767.

அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.

3.71.9

768.

ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.

3.71.10

769.

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.

3.71.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்லவனேசர், தேவியார் - வளைக்கைவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.72 திருமாகறல் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

770

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

3.72.1

771.

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

3.72.2

772.

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

3.72.3

773.

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

3.72.4

774.

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

3.72.5

775.

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

3.72.6

776.

வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

3.72.7

777.

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.

3.72.8

778.

தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.

3.72.9

779.

காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

3.72.10

780.

கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.

3.72.11


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.73 திருப்பட்டீச்சரம் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

781

பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

3.73.1

782.

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.

3.73.2

783.

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே.

3.73.3

784.

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.

3.73.4

785.

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே.

3.73.5

786.

மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.

3.73.6

787.

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

3.73.7

788.

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே.

3.73.8

789.

தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.

3.73.9

790.

தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.

3.73.10

791.

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.

3.73.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பட்டீச்சரநாதர், தேவியார் - பல்வளைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.74 திருத்தேவூர் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

792

காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.

3.74.1

793.

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே.

3.74.2

794.

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்
*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே.
(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )

3.74.3

795.

மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே.

3.74.4

796.

கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.

3.74.5

797.

ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனூர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவூரதுவே.

3.74.6

798.

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவூரதுவே.

3.74.7

799.

ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே.

3.74.8

800.

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே.

3.74.9

801.

பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... ..
... ... ... ... .. ... ... ... ...

( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின )

3.74.10

802.

துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.

3.74.11


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.75 திருச்சண்பைநகர் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

803

எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.

3.75.1

804.

அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே.

3.75.2

805.

போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே.

3.75.3

806.

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.

3.75.4

807.

பணங்கெழுவு பாடலினோ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே.

3.75.5

808.

பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கெண்டிநற வுண்டிசைசெய
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.

3.75.6

809.

விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.

3.75.7

810.

வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.

3.75.8

811.

நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.

3.75.9

812.

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே.

3.75.10

813.

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.

3.75.11


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.76 திருவேதவனம் - திருவிராகம்
(வேதவனம் என்பது வேதாரணியம்)
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்