|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
periya purANam of cEkkizAr - Canto 2
carukkam 7 -13 (pAcurams 3636-4281)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - இரண்டாம் காண்டம்
சருக்கம் 7 -13 (3636-4281) (வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ . You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 7.1 | சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653) |
| 7.2 | சிறப்புலி நாயனார் புராணம் (3654 .- 3659 ) |
| 7.3 | சிறுத்தொண்ட நாயனார் புராணம் (3660 - 3747) |
| 7.4 | கழற்றி அறிவார் நாயனார் புராணம் (3748 - 3922 ) |
| 7.5 | கணநாத நாயனார் புராணம் (3923 - 3938 ) |
| 3636 | அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய் மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர் உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் | 7.1.1 |
| 3637 | தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் | 7.1.2 |
| 3638 | அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார் முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் | 7.1.3 |
| 3639 | அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் | 7.1.4 |
| 3640 | செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் | 7.1.5 |
| 3641 | எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம் தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் | 7.1.6 |
| 3642 | எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார் அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார் | 7.1.7 |
| 3643 | காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச் சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய் | 7.1.8 |
| 3644 | நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து மாடோ ர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் நீடோ டு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார் பாடோ ர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார் | 7.1.9 |
| 3645 | அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால் இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் | 7.1.10 |
| 3646 | அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால் கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் | 7.1.11 |
| 3647 | தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும் கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப் படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம் | 7.1.12 |
| 3648 | இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் | 7.1.13 |
| 3649 | கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில் வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால் நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலராமால் | 7.1.14 |
| 3650 | அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு வெங்கர்யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார் | 7.1.15 |
| 3651 | கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும் கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால் தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார் | 7.1.16 |
| 3652 | மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில் பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார் | 7.1.17 |
| 3653 | ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித் தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி | 7.1.18 |
| 3654 | பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர் | 7.2.1 |
| 3655 | தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும் | 7.2.2 |
| 3656 | ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார் | 7.2.3 |
| 3657 | ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார் | 7.2.4 |
| 3658 | அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே | 7.2.5 |
| 3659 | அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன் | 7.2.6 |
| 3660 | உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீ வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்து அருளும் பதிவயலில் கருநாட்டக் கடைசியர் தம் களி நாட்டும் காவேரித் திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும் | 7.3.1 |
| 3661 | நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார் | 7.3.2 |
| 3662 | ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும் தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால் பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் | 7.3.3 |
| 3663 | உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால் தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு பள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார் | 7.3.4 |
| 3664 | ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப் பூசல் முனைக் களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார் | 7.3.5 |
| 3665 | மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப் பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும் இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் | 7.3.6 |
| 3666 | கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால் எதிரி இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார் | 7.3.7 |
| 3667 | தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன் உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்று எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் | 7.3.8 |
| 3668 | இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் | 7.3.9 |
| 3669 | உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமது மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச் செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான் | 7.3.10 |
| 3670 | மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து பன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ் சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் | 7.3.11 |
| 3671 | வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத் தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் | 7.3.12 |
| 3672 | நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும் முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும் நிறையுடைய பெருவிருப்பில் நியதி ஆகக் கொள்ளும் துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் | 7.3.13 |
| 3673 | தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய் பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார் | 7.3.14 |
| 3674 | சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால் மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார் ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் | 7.3.15 |
| 3675 | கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர உண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றி எண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண் | 7.3.16 |
| 3676 | நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப் பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின் வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால் சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார் | 7.3.17 |
| 3677 | அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த பெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத் திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப | 7.3.18 |
| 3678 | மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப அங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத் தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுணைந்தார் | 7.3.19 |
| 3679 | ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகமலர அளித்தவர் தாம் பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச் சீர் பெருகச் செய்ய வளர் திருமனார் சீறடியில் தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார் | 7.3.20 |
| 3680 | சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில் பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை தெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் | 7.3.21 |
| 3681 | வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்து தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர் சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயிலத்தம் பந்தமற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார் | 7.3.22 |
| 3682 | அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம் நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் | 7.3.23 |
| 3683 | சண்பையர் தம் பெருமானும் தாங்க அரிய பெரும் காதல் பண்புடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து நண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார் | 7.3.24 |
| 3684 | இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை அத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம் சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார் | 7.3.25 |
| 3685 | மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக் கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல் தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி | 7.3.26 |
| 3686 | அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப் புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத் துஞ்சின் உனித்து தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற | 7.3.27 |
| 3687 | அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப் பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்து சாத்தியது என்ன விரிசுடர் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த் திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க | 7.3.28 |
| 3688 | வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள் செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க | 7.3.29 |
| 3689 | களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழிநிரைத் துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது என உளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ | 7.3.30 |
| 3690 | செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப் பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும் அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க | 7.3.31 |
| 3691 | மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என அக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் கைக்கு அணி கொள்வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும் தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க | 7.3.32 |
| 3692 | பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்
பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல் திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப | 7.3.33 |
| 3693 | அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத் தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப் பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட | 7.3.34 |
| 3694 | அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப் பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத் தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டம் குடிசேர்ந்தார் | 7.3.35 |
| 3695 | தண்டாத ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக் கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்து தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன | 7.3.36 |
| 3696 | வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்று சந்தனம்மாம் தையலார் முன்வந்து தாள் வணங்கி அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார் எந்தமை ஆள் உடையீரே அகத்து எழுந்து அருளும் என | 7.3.37 |
| 3697 | மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த இடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டு விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக் கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி | 7.3.38 |
| 3698 | அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார் வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால் தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார் | 7.3.39 |
| 3699 | இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன ஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம் செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம் எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி | 7.3.40 |
| 3700 | கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம் நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி அண்ணலார் திருவாத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் | 7.3.41 |
| 3701 | நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்தி ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் | 7.3.42 |
| 3702 | அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க் கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து | 7.3.43 |
| 3703 | என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச் சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார் | 7.3.44 |
| 3704 | பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும் நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்று கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில் காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன் | 7.3.45 |
| 3705 | அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும் படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மைப் பரிந்து ஊட்ட முடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள | 7.3.46 |
| 3706 | எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக் கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்க தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் | 7.3.47 |
| 3707 | அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம் பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் | 7.3.48 |
| 3708 | சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக் காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார் | 7.3.49 |
| 3709 | பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம் உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம் புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் | 7.3.50 |
| 3710 | யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் | 7.3.51 |
| 3711 | அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று கதுமென் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் | 7.3.52 |
| 3712 | அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப் பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ | 7.3.53 |
| 3713 | வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம் உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய் கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார் | 7.3.54 |
| 3714 | அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் | 7.3.55 |
| 3715 | மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே? நேர் நின்று தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதே எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழப்போம் யாம் என்றார் | 7.3.56 |
| 3716 | என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம் நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியை சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் | 7.3.57 |
| 3717 | காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன் ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார் | 7.3.58 |
| 3718 | பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்ப பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர் வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி | 7.3.59 |
| 3719 | குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப் பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார் | 7.3.60 |
| 3720 | அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார் பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் | 7.3.61 |
| 3721 | ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள் நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார் | 7.3.62 |
| 3722 | இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத் தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் | 7.3.63 |
| 3723 | பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் | 7.3.64 |
| 3724 | அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார் | 7.3.65 |
| 3725 | மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அரும்கலத்துப் பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச் சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார் | 7.3.66 |
| 3726 | உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைவதற்கு அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின் புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் | 7.3.67 |
| 3727 | அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு பண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் | 7.3.68 |
| 3728 | இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார் நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார் | 7.3.69 |
| 3729 | வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச் சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த | 7.3.70 |
| 3730 | தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம் ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் | 7.3.71 |
| 3731 | பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சி பயிரவராம் புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என | 7.3.72 |
| 3732 | ரிசு விளங்கப் பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றித் தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும் வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல் விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார் | 7.3.73 |
| 3733 | சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு மன்னு சுவையில் கறி ஆக்கிமாண அமைத்தீரே? என்ன அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம் என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் | 7.3.74 |
| 3734 | சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயரச்
சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார் | 7.3.75 |
| 3735 | வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப் பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள ஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் | 7.3.76 |
| 3736 | அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச | 7.3.77 |
| 3737 | உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார் தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி | 7.3.78 |
| 3738 | ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் | 7.3.79 |
| 3739 | நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்து அருள யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவு உற்று எழுந்து அருளால் பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் போது | 7.3.80 |
| 3740 | வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார் செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட | 7.3.81 |
| 3741 | பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த தரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம் கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார் புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால் | 7.3.82 |
| 3742 | வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச் சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் | 7.3.83 |
| 3743 | செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் அஞ்சுகத்துப் பயிரவர் யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடி மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார் | 7.3.84 |
| 3744 | தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப் பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் | 7.3.85 |
| 3745 | அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார் | 7.3.86 |
| 3746 | கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும் வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் | 7.3.87 |
| 3747 | ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப் பேறு பெற்றார் சே அடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள் வேறு கழறிற்று அறிவார் தம் பெருமையும் தொழுது விளம்புவார் | 7.3.88 |
| 3748 | மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்
பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான் சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக் கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர் | 7.4.1 |
| 3749 | காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் | 7.4.2 |
| 3750 | மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன | 7.4.3 |
| 3751 | வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில். | 7.4.4 |
| 3752 | முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின் அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத் திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய் பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர் | 7.4.5 |
| 3753 | திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப் பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால் | 7.4.6 |
| 3754 | மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய் உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார் | 7.4.7 |
| 3755 | உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து | 7.4.8 |
| 3756 | திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும் ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள் | 7.4.9 |
| 3757 | நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ் சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும் காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த் தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான் | 7.4.10 |
| 3758 | வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார் | 7.4.11 |
| 3759 | எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச் செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப் பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண் | 7.4.12 |
| 3760 | இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் | 7.4.13 |
| 3761 | மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத் தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம் காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார் | 7.4.14 |
| 3762 | ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் | 7.4.15 |
| 3762 | உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம் பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம் | 7.4.16 |
| 3764 | தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும் நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார் மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார் | 7.4.17 |
| 3765 | மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார் | 7.4.18 |
| 3766 | சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச் சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் | 7.4.19 |
| 3767 | மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய | 7.4.20 |
| 3768 | யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண் மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப் பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார் | 7.4.21 |
| 3769 | உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார் | 7.4.22 |
| 3770 | நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள் ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம் கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள் | 7.4.23 |
| 3771 | வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம் தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார் | 7.4.24 |
| 3772 | நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் | 7.4.25 |
| 3773 | இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால் பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார் | 7.4.26 |
| 3774 | இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும் பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித் தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று | 7.4.27 |
| 3775 | அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண | 7.4.28 |
| 3776 | சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார் அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித் துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் | 7.4.29 |
| 3777 | கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால் நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார் | 7.4.30 |
| 3778 | அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார் முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர் பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் | 7.4.31 |
| 3779 | பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம் பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார் | 7.4.32 |
| 3780 | தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப் பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத் தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என | 7.4.33 |
| 3781 | சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள் சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல் பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள் | 7.4.34 |
| 3782 | பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும் உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் | 7.4.35 |
| 3783 | பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப் பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச | 7.4.36 |
| 3784 | இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோ ர் பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் | 7.4.37 |
| 3785 | பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர் | 7.4.38 |
| 3786 | வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக் கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார் | 7.4.39 |
| 3787 | அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக் களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம் வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் | 7.4.40 |
| 3788 | வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத் தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி | 7.4.41 |
| 3789 | பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும் ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் | 7.4.42 |
| 3790 | ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர் கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன் தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது ஒழிந்தது என் என்றார் | 7.4.43 |
| 3791 | என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் | 7.4.44 |
| 3792 | என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார் | 7.4.45 |
| 3793 | பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் | 7.4.46 |
| 3794 | இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய் பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம் தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் | 7.4.47 |
| 3795 | யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால் | 7.4.48 |
| 3796 | புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல் விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால் | 7.4.49 |
| 3797 | அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார் | 7.4.50 |
| 3798 | சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத் துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார் | 7.4.51 |
| 3799 | பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர் மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித் திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் | 7.4.52 |
| 3800 | வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச் சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச் சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் | 7.4.53 |
| 3801 | நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் | 7.4.54 |
| 3802 | அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார் களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் | 7.4.55 |
| 3803 | ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப் பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும் காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம் | 7.4.56 |
| 3804 | தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச் செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார் | 7.4.57 |
| 3805 | ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம் கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார் நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார் | 7.4.58 |
| 3806 | பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள் அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ் இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில் | 7.4.59 |
| 3807 | ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக் கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் | 7.4.60 |
| 3808 | அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப் பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் | 7.4.61 |
| 3809 | வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச் சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக் கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார் | 7.4.62 |
| 3810 | நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார் | 7.4.63 |
| 3811 | வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச் சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார் சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் | 7.4.64 |
| 3812 | முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல் என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் | 7.4.65 |
| 3813 | ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த |