Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5  (செய்யுள் 389 -497) > பகுதி 6  (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 ( செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) >  பகுதி 14 (2027-2128) >  பகுதி 15 (1709 - 1810) > பகுதி 16 (1925 - 2026) > பகுதி 17 (2129 - 2236) > பகுதி 18 (2237 - 2338) >பகுதி 19 (2339 - 2440) > பகுதி 20 (2441 - 2543) > பகுதி 21 (2544 - 2644) > பகுதி 22 (2645 - 2669) >  பகுதி 23 (2670 - 2770) > பகுதி 24 (2771 - 2809) > பகுதி 25 (2810-2914) > பகுதி 26 (1811 - 1924) > பகுதி 27 (2027 - 2128)

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" : பகுதி 27 (2027 - 2128)
திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S. Mohan Muthu Kumar, R. Navaneethakrishnan, Sakthikumaran and Nalini Karthikeyan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2009. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


    காப்பு.
    விநாயகர் துதி.


    2027

    ஒருமான்கரத்துத்தரித்தபிராயனோடுநிறங்
    கருமான்முதற்சுரர்யாருங்கொண்டாடுங்கதலிவனப்
    பெருமானந்தாதியுரைக்கமுக்கட்டுப்பெருகிமதம்
    வருமானற்றோட்டகிப்பூட்டிருதாட்டென்வயினுளதே.

    0

    நூல்.

    2028

    திருத்தாமரையிலனஞ்சேர்பைஞ்ஞீலிசிறக்கவளர்
    கருத்தாமரையமர்கையாமுகில்கடுக்குங்குழலின்
    மருத்தாமரையமிடவேற்றவாவினைவாட்டுதலி
    னுருத்தாமரைபடுவேனையின்றாளவுரைத்தருளே.

    1

    2029

    அருந்தவரும்பர்குழாம்புடைசூழவரம்பைவனத்
    திருந்தவரும்பலுரித்தார்புரத்திடைநாணுமடும்
    பெருந்தவரும்பணிவெற்பாக்கொண்டார்பிறங்கும்புயத்திற்
    பொருந்தவரும்பணிபூண்டாரின்றென்னைப்புரப்பவரே.

    2

    2030

    புரங்காவலரைமுன்செற்றாய்வெண்மேனிபொருந்தும்விடைத்
    துரங்காவலர்கொன்றைத்தாராய்பைஞ்ஞீலியெந்தோன்றன்மன
    மிரங்காவலநினக்கின்றாதலினின்றெடுத்தவுட
    றிரங்காவலமருமுன்னெனையாண்டருள்செய்குவையே.

    3

    2031

    . செய்யுந்தரம்பைக்கவானுமைக்கண்ணுஞ்செந்தாமரைப்பூங்
    கையுந்தரளநகையுமெய்யாகக்கழறும்வெறும்
    பொய்யுந்தரங்கொடனமுமுள்ளாரைப்புரிந்துலைவே
    னுய்யுந்தரமுமுளதோபைஞ்ஞீலியென்னுத்தமனே.

    4

    2032

    உத்தமனேயென்றும்பைஞ்ஞீலியாயென்றுமொண்கனல்சே
    ரத்தமனேயென்றும்வாழ்த்தறியேனையின்றாண்டருள்வாய்
    நித்தமனேயப்பனேயென்றலறுவர்நெஞ்சுறுவாய்
    முத்தமனேகம்பொலிமுலைபாகவென்முன்னவனே.

    5

    2033

    முன்னந்தவம்புரிந்தேனலனின்பதமுன்னுவதற்
    க‌ன்னந்தவம்பொலிநெஞ்சேனையோவினியாழ்வினைக‌
    டுன்னந்தவம்புக்கிடனாய்விடாதெனைத்தொண்டுகொள்வாய்
    வ‌ன்னந்தவம்பிற்பயிலுங்கதலிவனத்தவனே.

    6

    2034

    . வனக்காரிகையர்கணேற்றாற்குநீலிவனத்தவற்கு
    மினக்காரிகைப்பில்பணியணிந்தாற்குவிளம்பிழைகொ
    ட‌னக்காரிகைவளைசோர்ந்ததெல்லாமுபசாரஞ்சொல்ல‌
    நினக்காரிகைக்குஞ்சுகப்பரிமாரனெருங்குமுன்னே.

    7

    2035

    நெருங்குந்தனத்தியொருபாகனாரநிறைபழன‌
    ம‌ருங்குந்தனத்திரள்சூழுங்கதலிவனத்துறைவோன்
    பெருங்குந்தனத்திமுகனத்தன்மேற்சொலப்பெற்ற‌னன்யான்
    சுருங்குந்தனத்தினரைப்புகழ்ந்தேகவிசொல்லலற்றே.

    8

    2036

    சொல்லற்கரியயனாலுமொண்ணாப்புகழ்தொன்மையனே
    ம‌ல்லற்கரியதள்போர்த்தாய்கதலிவனத்தையனே
    வெல்லற்கரியதென்றாலுநின்றாளைவிரும்புமென‌
    த‌ல்லற்கரியவருள்செயின்யானினக்கானவனே.

    9

    2037

    . ஆனக்கரவம்பரிகலன்கச்சையென்றாதரித்தோய்
    வானக்கரவஞ்செலவேதம்வாழ்த்தும்பைஞ்ஞீலிமன்னா
    தானக்கரவல்விலங்குரியாய்வினையைத்தவிரா
    யானக்கரவகன்றெஞ்ஞான்றுனைவந்தடைகுவதே.

    10

    2038

    அடைந்தேனின்றாள்கதியென்றினிமேனினக்காளலன்போ
    லுடைந்தெனின்றாலதுநன்றேவினைப்பட்டுழலுமென்முன்
    மிடைந்தேனின்றாவென்றதென்றருணீலிவனமெய்யதேன்
    குடைந்தேனின்றாதளைந்துண்டேனென்றாடிடுங்கொன்றையனே.

    11

    2039

    கொன்றைக்க‌னியனகூந்தன்மின்னார்கள்குலமடங்க‌
    வென்றைக்க‌னியமெனத்தள்ளியேநினக்கின்புறுவே
    ன‌‌ன்றைக்க‌னியநன்மாச்சேர்பைஞ்ஞீலியையாவென்மனக்
    குன்றைக்க‌னியவைத்துன்னடியாரொடுங்கூட்டுவையே.

    12

    2040

    கூட்டப்படைகொள்புரத்தைவென்றாய்நறுங்கொன்றையனே
    வேட்டப்படையுஞ்சடையாய்பைஞ்ஞீலிவிமலமின்னார்
    நாட்டப்படைதெறவெம்பிநின்றாள்கணண்ணாமலெனை
    வீட்டப்படைத்தவிதியார்பொருளிலென்வெஃகினனே.

    13

    2041

    இனகரமைந்தர்மடவாரென்றெண்ணியிடைந்தவிவீர்
    கனகரமேன்மழுவுள்ளார்கதலிவனத்தமரு
    மனகரமாரனைசெற்றாரெனைத்தடுத்தாண்டவையர்
    சினகரமேவித்தொழுவீர்விடுமுங்கள்சென்மங்களே.

    14

    2042

    மங்காதசெல்வம்பெருகுங்கதலிவனத்தனைவான
    றங்காதவன்பற்புடைத்தவெம்மானைச்சலந்தரனென்
    வெங்காதகனைத்தடிந்தானையோதவிரும்பிலர்துன்
    பங்காதவந்தகற்காளாய்நரகிற்படுபவரே.

    15

    2043

    படந்தாங்குவெம்பணிப்பூணாய்பைஞ்ஞீலியப்பாவரிமண்
    ணிடந்தாங்குநேடவெட்டாதநின்பாதத்திறைஞ்சியன்பாய்
    கிடந்தாங்குநாட்டமற்றின்றிக்கதறிக்கிடந்துவினைக்
    கடந்தாங்குநீரெனக்கண்ணீர்பெய்யேற்கென்கதியுளதே.

    16

    2044

    கதிக்குந்தங்கைக்கொடுலகாண்டுமாற்றலர்கண்பிதுங்க
    மிதிக்குந்தடக்கரிமேல்வரும்வேந்தர்பொய்வாழ்வைமெய்யா
    மதிக்குந்தரத்தவரென்னாவர்நீலிவனத்தையனே
    கொதிக்குந்தழற்கட்பிரானேயெனைப்பணிகொண்டவனே.

    17

    2045

    கொண்டற்புரையுங்கருங்குழல்வெண்ணகைக்கோதையரைக்
    கண்டற்புறுமனமேகனறூங்குகண்காட்டியன்பு
    விண்டற்புடைக்குநிறத்தான்வரினென்விளம்புவையின்
    றண்டற்புதனையெம்பைஞ்ஞீலிமேவியவத்தனையே.

    18

    2046

    அத்தனைவாம்பரியேற்றனைநீலிவனத்தமர்ந்த
    நித்தனைவாவென்றென்குற்றேவலுங்கொணிருமலனைக்
    கத்தனைவாய்மனமெய்யாற்றொழார்முற்கருமங்கணூ
    லெத்தனைவாசித்திருக்கினுநீங்குவதேதவர்க்கே.

    19

    2047

    ஏதென்பணிகொண்டருள்வதின்றோவிரங்காமனமோ
    வோதென்பணியதுனக்கியான் மந்தாகினியுற்றசடை
    மீதென்பணிந்தவெம்பைஞ்ஞீலியைநல்வெற்பரையன்
    மாதென்பணியைமொழியொருபாகமறைமுதலே.

    20

    2048

    முதலிவனத்துச்சடையானெனமுன்னலின்றியைம்பா
    லதலிவனத்துக்களந்தனங்களுஞ்சவரும்பெனவே
    நுதலிவனத்துமடவார்பின்சென்றுறுநோயகலக்
    கதலிவனத்துப்பெருமான்றிருவடிகண்டனனே.

    21

    2049

    கண்டலப்போதைமுடிக்கணியாதமுக்கட்பரற்கு
    வண்டலப்போதைமலியுங்கதலிவனத்தவற்கு
    விண்டலப்போதைநகையுடைத்தாற்குவிருப்பிலைநீ
    தொண்டலப்போதையலார்பாலுயிர்த்துணைசூழ்ந்துநெஞ்சே.

    22

    2050

    நெஞ்சத்திருக்குமடவார்மயக்கமுநீங்குதல்செய்
    தஞ்சத்திருக்குமரன்றாதையைவெள்ளனப்பெடைகள்
    கஞ்சத்திருக்குமெம்பைஞ்ஞீலிநாதனைக்கண்டுதொழா
    வஞ்சத்திருக்கும்விடுமோபிறப்புமரணமுமே.

    23

    2051

    மரணங்கடந்துய்யலாகுங்கண்டீர்முன்வருங்கரியை
    முரணங்கடங்கவுரித்தார்பைஞ்ஞீலிமுதல்வரொன்னா
    ரரணங்கடங்கலிலாதெரித்தாரெனையாண்டவர்பொற்
    சரணங்கடந்திடத்தொண்டாகிவாழுந்தரத்தருக்கே.

    24

    2052

    தரங்கந்தரும்பிறவிக்கடன்மூழ்கித்தளர்ந்துமனக்
    குரங்கந்தமாதரைப்பற்றநிற்பேன்முன்கொடியகடாத்
    துரங்கந்தறுகட்சமனேறிவேகத்திற்றோன்றுவனீ
    யிரங்கந்தநாளினிற்பைஞ்ஞீலிமேவியிருப்பவனே.

    25

    2053

    இருந்தனமீதெனவீட்டிமின்னார்களியம்புமொழி
    மருந்தனமென்னடையென்றுழல்வீர்நமன்வந்துவிட்டான்
    முருந்தனவெண்ணகைபங்கனைநீலிவதனமுதலைப்
    பொருந்தனன்னெஞ்சமுறுமோவுறுதல்பொல்லாத்தரமே.

    26

    2054

    தரத்தருக்கன்றனகர்சூழ்தரவச்சந்தந்தபத்துச்
    சிரத்தருக்கன்வலிதேய்த்தார்க்கரம்பைசெறியுஞ்சிவ
    புரத்தருக்கன்மலிகண்டர்க்குத்தொண்டர்புகழவருள்
    வரத்தருக்கன்புடையேற்கேதிருவினைவாட்டுதலே.

    27

    2055

    வாடாதிசைமலர்க்கண்மடவார்வலைப்பட்டுழன்று
    நீடாதிசைவநெறிச்செல்கிலாதுநினதடிக
    டேடாதிசைபகராதிருந்தாலுமென்றீமைகெடத்
    தாடாதிசைதொழும்பைஞ்ஞீலிமேவியசங்கரனே.

    28

    2056

    சங்கரனேசம்புவேயிறையேபொற்றனவமலை
    பங்கரனேயெனப்பாடாவெனக்கருள்பாதமணிப்
    பொங்கரனேசத்தணிந்தவனேமுக்கட்புண்ணியனே
    செங்கரனேதிருப்பைஞ்ஞீலிமேவுஞ்சினகரனே.

    29

    2057

    சினனாதனையில்வழியேசெலுஞ்சிறியேன்சிறிது
    மனனாதனைச்சுத்தஞ்செய்யேன்பொல்லாமடவார்மயலா
    மினனாதனைவிலனானாலுமோங்குமிருங்கதலி
    வனனாதனைத்தொழுவேற்கில்லையோசிவமாநகரே.

    30

    2058

    மானாடும்வாசவன்வானாடுமற்றயனாடுமினி
    யானாடும்வண்ணமிலையேனென்றாலருளெம்பெருமான்
    றேனாடும்பொங்கர்மலியும்பைஞ்ஞீலிச்சிவனுமையாள்
    கோனாடுமஞ்ஞையுமூர்ந்தானுக்கத்தன்கொடுத்தனனே.

    31

    2059

    கொடுக்குந்தருநன்னிழலிருந்தேயிகல்கொண்டடல்வே
    லெடுக்குந்தருக்கர்குறும்போட்டிவாழ்தலுமெண்ணுகிலேன்
    முடுக்குந்தருமன்சினந்தெதிராமுனையக்கரங்கா
    னடுக்குந்தருணத்தில்வந்தாள்பைஞ்ஞீலியென்னாயகனே.

    32

    2060

    அகத்தாசையற்றிலனின்னடியார்க்கன்பனாகிலனிச்
    சகத்தாசையெங்குந்திரிந்துழன்றேசலித்தேனதனா
    லுகத்தாசைநீக்கியெனையாளவேண்டினனுன்னையைந்து
    முகத்தாசையிலச்சிலையாய்பைஞ்ஞீலியின்முக்கண்ணனே.

    33

    2061

    கண்ணுதலிக்குப்பணைசேர்பைஞ்ஞீலிக்கடவுண்மலைப்
    பெண்ணுதலிக்குறிக்கும்பாகமீந்தபெருமநினை
    யெண்ணுதலிக்குமற்றங்கேனெனலன்றியேங்கிடுமென்
    னொண்ணுதலிக்குமனமிரங்காததென்னுத்தமனே.

    34

    2062

    உத்தமனத்தனமலைபங்காளனொளிர்சடையா
    னித்தமனத்தன்முகிலூர்புரந்தரனேமியொடு
    சுத்தமனத்தன்பணியும்பைஞ்ஞீலியெஞ்சுந்தரனிம்
    மத்தமனத்தன்மட்னென்றெண்ணாதென்னுள்வந்தனனே.

    35

    2063

    வந்தானைசீறிப்பொரும்போதுதுரித்ததன்மாவதளை
    நந்தானையென்றரைமீதுடுத்தானைநஞ்சுண்டவனைப்
    பந்தானைகொங்கைவயினுமைபாகனைப்பங்கயனைத்
    தந்தானையம்பனைப்பைஞ்ஞீலியானைச்சரண்புகுமே.

    36

    2064

    சரமாரனைச்செற்றவனைப்பைஞ்ஞீலிச்சயம்புவைமுப்
    புரமாரனைவின்றியுண்ணக்கண்டானைப்பொருவில்பல
    சிரமாரனைத்தொழுதேத்தீர்நுஞ்சென்மங்கடீர்வதற்கா
    தரமாரனையர்கருப்பாழ்படாதங்கடுப்பவரே.

    37

    2065

    அடுவாரணவுரிபோர்த்தபிரானையணிகளத்திற்
    கடுவாரணலையெம்பைஞ்ஞீலியானைக்கனதனத்திற்
    றொடுவாரணங்கொருபாகனையேத்தித்தொழார்களெல்லாம்
    படுவாரணங்கிலெனமறைநான்கும்பகர்தருமே.

    38

    2066

    தருமந்தகவின்றியேமடமாதர்தருமயல்பட்
    டருமந்தகல்வியிழப்பீர்பைஞ்ஞீலியனைப்பணியீர்
    தெருமந்தகன்றுதிரிந்தால்வெம்போத்தைச்செலுத்தியெதிர்
    வருமந்தகன்விடமாட்டானெங்கோடிமறையினுமே.

    39

    2067

    மறைவாயவர்புகழ்ந்தேத்துங்கதலிவனத்தினமர்ந்
    துறைவாயன்றாழிமதித்திடுங்காலத்துதித்தவிடக்
    கறைவாய்மணிமிடற்றெம்மையனேநினைக்காண்டலின்றித்
    தறைவாயடியன்வருநதுவனோவினித்தாங்கிக்கொள்ளே.

    40

    2068

    தாங்கரும்பாரமெனயான்பெறும்வினைதன்னொடென்று
    போங்கரும்பாரமயக்கமெல்லாமுக்கட்புண்ணியனே
    கோங்கரும்பாரமுலைபங்கனேகுற்றமற்றவனே
    தீங்கரும்பாரஞ்செறியும்பைஞ்ஞீலிச்சிவபரனே.

    41

    2069

    சிவசம்புசங்கரநின்மலதீஞ்செங்கழைகட்குமீ
    துவசம்புமஞ்சளுமோங்கும்பைஞ்ஞீலியுறைபவபொற்
    கவசம்புயங்கத்தநின்மேற்கவிபகரத்தலைவி
    திவசம்புன்மைச்சிறியேனுக்குண்டாயதுன்செவ்வருளே.

    42

    2070

    அரும்பன்னமென்முலைமேற்சாந்திடாவெனதாசைமுற்றும்
    விரும்பன்னமேதுருப்பைஞ்ஞீலிமேவும்விமலற்கெதிர்
    பொரும்பன்னகப்புலித்தோலணிந்தாற்குப்புகைந்துழலா
    வரும்பன்னகப்பணியாற்கோதியிங்குவரச்சொல்வையே.

    43

    2071

    வரந்தந்துதொண்டனையாளுங்கதலிவனத்தானை
    நரந்தந்துதைகொன்றைத்தாரனைவாழ்த்தியெஞ்ஞான்றுமிரு
    கரந்தந்துயர்கெடச்சென்னிவையார்கள்கணக்கில்பல்லா
    யிரந்தந்துகற்றிருந்தாலும்விடாவினையீட்டங்களே.

    44

    2072

    ஈட்டமரப்பனையேட்டைவிடாதெடுத்தேயெழுதும்
    பாட்டமரப்பனையார்மீதன்பாகப்பகர்ந்தென்பெற்றீர்
    வாட்டமரப்பனைவிக்குநஞ்சுண்டவனைக்கதலிக்
    காட்டமரப்பனைப்பாடாதுழலுங்கவிஞர்களே.

    45

    2073

    கவிக்குமகுடம்புனைந்துசெங்கோலொன்றுகையிற்கொண்டு
    புவிக்குமனாகவிருக்கினும்வானம்புரக்கினுமெ
    னவிக்குமகிழுஞ்சுரர்சூழரம்பைவனத்தனைக்கை
    குவிக்குமனத்தன்புகொண்டிலராயிற்குறித்திடினே.

    46

    2074

    குறித்தேனினியபைஞ்ஞீலியென்பார்முன்னுங்குற்றமற
    முறித்தேனினித்திலப்பல்லார்மயலென்பர்முன்னுநிற்பாய்
    வெறித்தேனினின்னருளாலடியேன்வினைவேரொடுங்கப்
    பறித்தேனினியந்தகற்கொருநாளும்பயமிலையே.

    47

    2075

    இலையம்புயனெடுமாற்குமெட்டாதபைஞ்ஞீலியெம்மான்
    றலையம்புயங்கமணிந்தோனைப்பாடித்தழைமினிப
    மலையம்புயர்கழையான்செயும்போரினறிவழிந்து
    மலையம்புயவெனமூடரைப்பாடிவருந்துவிரே.

    48

    2076

    வருந்தத்தைகாள்கைவளைசோர்ந்தனையர்மனம்வெறுக்க
    விருந்தத்தையின்றறியீரோபைஞ்ஞீலியிறையவற்குப்
    பொருந்தத்தையற்கொருபாகந்தந்தாற்கின்றுபோயெனது
    பெருந்தத்தையோதிவருவீர்மதியம்பிறக்குமுன்னே.

    49

    2077

    முன்னும்படியறிவில்லாதவென்முழுமூடநெஞ்சை
    மின்னும்படிகமெனவாக்கிவெவ்வினைவேரறுத்தான்
    மன்னும்படியெங்குங்கொண்டாடவாணிமலர்மகளுந்
    துன்னும்படிக்குளப்பைஞ்ஞீலிமேவியசுந்தரனே.

    50

    2078

    சுந்தரத்தார்நின்பதத்தணிந்தாடித்துதித்துவிடக்
    கந்தரத்தாவெனப்போற்றறியேற்குன்கழறருவாய்
    குந்தரத்தாவெங்கொடுங்காலற்செற்றகுரைகழலா
    யந்தரத்தார்தொழும்பைஞ்ஞீலிமேவியமரத்தனே.

    51

    2079

    அத்தத்திலங்குசபாசமுள்ளாற்கத்தனைவினையேன்
    சித்தத்திலங்கும்பரனைப்பைஞ்ஞீலியிற்சென்றுதொழார்
    கத்தத்திலங்குழைப்பார்போல்யமன்கசக்கத்திரிபட்
    டுத்தத்திலங்குமழிந்திங்குந்தோன்றியுலைபவரே.

    52

    2080

    உலகஞ்சவெம்மைகொண்டோங்குஞ்சமனையுதைத்தவனே
    பலகஞ்சமீதுபொற்றூவிசெங்கால்பசுஞ்சூட்டுடனே
    யிலகஞ்சமேவும்பைஞ்ஞீலியசற்றுமிரக்கமிலேன்
    கலகஞ்சங்கேந்தியுங்காணாநின்றாள்கொளக்கண்டனனே.

    53

    2081

    கண்டனஞ்சத்திவரைகடுப்பாள்பங்கனேகொதிப்புக்
    கொண்டனஞ்சத்திறல்குன்றவுண்டாய்குளத்தாமரையில்
    வண்டனஞ்சத்திக்கும்பைஞ்ஞீலிநாதமனமயங்கு
    தொண்டனஞ்சத்தினம்வாட்டிடுமோவினைத்தொல்லைகளே.

    54

    2082

    தொல்லையிலாயவினையாற்சுழன்றடைந்தேன்மனத்தை
    யொல்லையிலாக்குடிகொள்வாய்பைஞ்ஞீலியென்னுத்தமனே
    வெல்லையிலாதரன்றந்தாய்பொற்கோபுரமேவுதிருத்
    தில்லையிலாடியதாளாய்த்தீவினைதீர்வதற்கே.

    55

    2083

    தீராக்கவலையுடையேனையன்பரிற்சேர்த்தருளிச்
    சீராக்கவலைப்புனல்வாவி்யிலுகள்சேலைக்கண்டு
    சாராக்கவலைச்சிரல்கொள்பைஞ்ஞீலித்தலைவகைக்குப்
    பேராக்கவலையொப்பாமென்னகந்தையைப்பேர்த்தருளே.

    56

    2084

    பேரரம்பைக்குலமோங்கும்பைஞ்ஞீலியர்பெய்மதுவார்த்
    தாரரம்பைச்சடைவைத்தவர்முப்புரந்தம்மைவென்ற
    வீரரம்பைப்பணிபூண்டவர்மேவமிரும்பியவென்
    னோரரம்பைக்கனையாளையின்றாளவந்துற்றிலரே.

    57

    2085

    உற்றவர்தொண்டர்வினைவேரறுப்பதற்கும்பருட
    னற்றவர்சூழ்திருப்பைஞ்ஞீலிமேவியநாயகர்பொற்
    கற்றவர்கொண்டருள்புண்ணியர்தாளையென்கன்னெஞ்சமே
    பற்றவரன்றிமற்றாரேகொடுப்பர்பரகதியே.

    58

    2086

    பரமனையன்புசெறிநெஞ்சியற்பகையார்க்குமுத்தி
    தரமனையிற்சென்றவனையெம்மானைத்தழங்குகனற்
    கரமனையோங்குங்கதலிவனத்துமுக்கண்ணனைநல்
    வரமனைவர்க்கும்கொடுப்பானைவாழ்த்திவரங்கொணெஞ்சே.

    59

    2087

    வருந்தாரெனமகிழ்ந்தேனிற்றைஞான்றுவரையுஞ்சும்மா
    விருந்தாரனுப்புதலின்றிவண்டீரின்றுபோய்ச்சொலுங்கோள்
    பெருந்தாரணிபுகழ்ந்தேத்தும்பைஞ்ஞீலிப்பெம்மானுக்குத்தேன்
    றிருந்தார்முடியுடையாருக்குத்தேவர்தந்தேவருக்கே.

    60

    2088

    தேவிக்குருவம்பகிர்ந்தார்பைஞ்ஞீலிச்சிவபுரர்க்குப்
    பாவிக்குருகுமனமிலராயபரமருக்குத்
    தூவிக்குருமணிநந்தினஞ்சிந்துந்துறைமலியும்
    வாவிக்குருகினங்காள்சொல்லுவீரென்றன்மையலையே.

    61

    2089

    மையற்கடாக்களிறல்லாநடத்திவருமதனப்
    பையற்கடாததென்செய்தேனெஞ்ஞான்றும்பகைத்துவெங்கோன்
    மொய்யற்கடாவினனாகப்பைஞ்ஞீலிமுழுமுதலென்
    னையற்கடானையுரித்தாற்குறுமையலாயினனே.

    62

    2090

    ஆயனையம்பனுமையொருபாகனரம்பைவனத்
    தூயனையம்பன்மினாரிடத்தேற்றவன்றூத்திரையான்
    சேயனையம்பகத்தாலெரித்தானைச்சிலகவிதந்
    தாயனையம்பதவென்றோதிடவென்றளர்விலையே.

    63

    2091

    இல்லாதவாதனையீராகவையனிரும்புகழைக்
    கல்லாதவாவுற்றுழல்வீர்கதலிவனத்தமர்ந்தோன்
    பல்லாதவாவற்றினையோவென்றியாரும்பகரச்செய்தோ
    னல்லாதவானவனுண்டோநுந்தீமையறுப்பதற்கே.

    64

    2092

    அறுகாரணிசடையாற்குயரோங்கலரையனன்பாய்ப்
    பெறுகாரணியொருபாகற்குத்தேவர்பிராற்கிலங்கு
    மருகாரணிதிருப்பைஞ்ஞீலியாற்கென்வருத்தஞ்சொல்லி
    யுறுகாரணியலகொணர்ந்தாலென்னாங்கொலிவ்வொண்மதியே.

    65

    2093

    மதித்தலையாழிகடைவேலைவந்தநஞ்சுண்டவனே
    விதித்தலையார்கரத்தோனேபைஞ்ஞீலியெம்வித்தகனே
    துதித்தலையான்செய்திலனேனுமின்னந்தொடர்ந்தனைபா
    லுதித்தலையாமலெனையாளநீயென்றுடம்படலே.

    66

    2094

    படப்பணிபூண்டபுயத்தபைஞ்ஞீலிப்பரம்பரபூங்
    கடப்பணிவேளத்தசெங்கையின்வண்டுகழலமுத்து
    வடப்பணிசிந்திமலர்ப்பாயனீத்துமருவவெண்ணி
    நடப்பணிற்பாடிகைப்பாளுயிர்ப்பாளெங்கணன்னுதலே

    67

    2095

    நன்னத்தனேடும்பொற்பாதத்தனேநல்லரம்பைவன
    மன்னத்தனேரில்லாபைஞ்ஞீலியனேமருவாரைவெல்வேன்
    மின்னத்தனேகமருப்பன்விரும்பும்விருப்பத்தனே
    யென்னத்தனேநினையல்லான்மற்றியாரையுமெண்ணலனே.

    68

    2096

    எண்ணாதவனன்பொடுநின்பதத்தையென்றாலுமெனை
    யுண்ணாதவன்னஞ்சமுண்டதுபோலவுவந்தருள்வாய்
    விண்ணாதவன்கதிர்தோற்றாவரம்பைவியன்வனமுக்
    கண்ணாதவனன்குடையார்மனத்துறைகாரணனே.

    69

    2097

    காராழியொக்குநிறத்தான்செய்பூசனைகண்டினிதா
    வாராழிமுன்னமளித்தாய்பைஞ்ஞீலியமர்ந்தவனே
    பாராழித்தேருடையாய்மடவார்மயல்பட்டுழலும்
    பேராழியவினையேனுன்னருளென்றுபெற்றுய்தலே.

    70

    2098

    பெற்றனடாவும்பெருமான்பைஞ்ஞீலிப்பெம்மானிலங்கும்
    பொற்றனடாவுழைக்கண்ணிபங்கானன்புபூண்மனத்திற்
    குற்றனடாமற்குணநடுமூன்றுகட்சோவைத்தொழக்
    கற்றனடாவந்தகாவந்துபாரொருகையினியே.

    71

    2099

    கையத்திலங்கறத்தோலுரித்தவன்காலற்செற்றோன்
    மொய்யத்தியங்குஞ்சடையான்பைஞ்ஞீலிமுழுமுதல்வன்
    வையத்தியங்கொள்பொற்றேரானையன்றிவருத்தம்வினை
    செய்யத்தியங்கினும்பாடேனினிமற்றொர்தேவரையே.

    72

    2100

    தேவாகருங்குழல்பாகாபைஞ்ஞீலிச்சிவபுரனே
    மாவாகருங்குலவேதருந்தேடுமறைமுதலே
    பூவாகருங்குன்றுபன்னிரண்டாற்குப்பொருந்தத்தனே
    நீவாகருங்குண்டைமேலம்மையோடென்முனேயமுற்றே.

    73

    2101

    உற்பத்தியாவதுஞ்சாவதுமன்றியுன்றாண்மலர்க்கு
    நற்பத்திகொண்டுய்ந்தறியேன்பைஞ்ஞீலியென்னாயகனே
    கற்பத்தினான்சக்கரத்தானின்றேத்தக்கடும்புரம
    திற்பத்திவேவச்செற்றாயுய்யுமாறருள்செய்தருளே.

    74

    2103

    செய்க்குவளைக்குநிகர்நேத்திரம்புனல்சிந்துவதுங்
    கைக்குவளைக்குலஞ்சேராததுஞ்சுகங்காள்சொலுநன்
    மைக்குவளைக்குங்கடல்சீறிடுமுன்மதியெழுமு
    னைக்குவளைக்குழைபாகற்கரம்பையடவியற்கே.

    75

    2103

    அடவிக்கதலிபிபசுங்குருத்தோடியகல்விசும்பைத்
    தடவிக்கதறக்கதிரோன்குரகதத்தைத்தகர்த்துக்
    கடவிக்கதனஞ்செய்பைஞ்ஞீலிமேவுங்கடவுண்மதன்
    படவிக்கதமுறச்செற்றாயருணின்பொற்பாதத்தையே.

    76

    2104

    பாதம்பணியும்வகையறியேற்குன்பசும்பணியும்
    போகம்பணியுமைபாகபைஞ்ஞீலியபொற்சடையின்
    மீதம்பணியும்விமலமன்றேறிவிமலையுடன்
    வாதம்பணியும்பரேத்தநின்றாடுமறைமுதலே.

    77

    2105

    மறைவழியேநின்றிருப்பகழோதிமனங்கனிந்து
    முறைவழிபாடுபுரியமுன்னாதிருப்பேற்குமனக்
    குறைவழியத்தயைசெய்தாண்டருள்வைபொற்குன்றுவில்லாய்
    நறைவழியுங்கதலிச்சோலைமேவியநாயகனே.

    78

    2106

    அகலப்படவரவாய்த்தேரைபோலுமம்மாதர்விழி
    யிகலப்படவரந்தைக்கிடனாய்க்கொடியேய்கடன்மே
    வுகலப்படவரவந்தீர்ந்தபோலுமுள்ளேற்குளத்தா
    சுகலப்படவரம்பைக்காடவோடத்துரத்துதியே.

    79

    2107

    உதிக்கின்றவம்புலிவெம்புலியாகியுறவவ்வுடு
    பதிக்கின்றவம்புரிந்தேன்சந்தம்பூசப்பருமுலைமேற்
    கொதிக்கின்றவம்பல்செய்வேனோபெண்காளென்குறையுரையீர்
    மதிக்கின்றவம்பலத்தாடும்பைஞ்ஞீலிவரனுக்கின்றே.

    80

    2108

    வரம்பலமாவொன்றுநாயேற்குதவுமருமலர்ச்செ
    யிரம்பலமாமொய்யனைச்செற்றவாநல்லிருங்கதலி
    மரம்பலமாப்பலசேரும்பைஞ்ஞீலிமறைமுதலே
    சிரம்பலமாலையணிந்தாய்நின்றாட்கன்புசெய்வதற்கே.

    81

    2109

    செல்லைக்கடுத்தகுழலார்பிறையைச்செயித்துவரி
    வில்லைக்கடுத்தநுதலார்மயக்கைவிரும்பிவினைத்
    தொல்லைக்கடுத்தவுடம்பெடுத்தேனைநின்றொண்டரிற்சே
    ரொல்லைக்கடுத்தருக்கோட்டீபைஞ்ஞீலியுறாபவனே.

    82

    2110

    பவனாசனப்பனெம்பைஞ்ஞாலிநாதன்பருப்பதவிற்
    சிவனாசனங்கயிலாயவெற்பான்செஞ்சடைப்பெருமா
    னிவனாசன்மக்கடனீத்தேறுவனென்றியம்பவமைந்
    தவனாசன்வஞ்சனென்றென்னையெண்ணாதினிதாண்டனனே.

    83

    2111

    ஆண்டலைப்பத்திரக்கேதனத்தாற்கத்தனேயணிகொள்
    பூண்டலைப்பத்திரியேற்றாய்பைஞ்ஞீலியனேநின்பொற்றாள்
    காண்டலைப்பத்தியினாலறியாக்கள்வனேற்குவினை
    யீண்டலைப்பத்தியங்கித்திரிவேற்கென்றிரங்குவையே.

    84

    2112

    இரக்கஞ்சற்றுங்கிடையாமனத்தேற்கஞ்சலென்றுநின்செங்
    கரக்கஞ்சங்காட்டிநின்றொண்டர்குழாத்திற்கலக்கவைப்பாய்
    தரக்கஞ்சமுன்னமுரித்தாய்பைஞ்ஞீலித்தலைவமிக்க
    விரக்கஞ்சர்ப்பந்தரித்தாய்மழுவேந்தும்விடையவனே.

    85

    2113

    அவனிவனென்றலையாமனெஞ்சேயென்னையாளுடைய
    சிவனிவரேறுடைப்பைஞ்ஞீலிநாதன்றிசைமுகத்தோன்
    புவனிவனிதைபுணர்வோன்கிளைத்தபுரனுமைக்கோர்
    தவனிவரும்பவந்தீர்ப்பான்பொற்றாளிணைசாருவையே.

    86

    2114

    சாருக்கனையமொழியாயிரதிதவனடத்தும்
    போருக்கனையர்பகைக்கினிச்செய்வதென்பூங்கதலித்
    தாருக்கனையடர்பைஞ்ஞீலிமேவுந்தலைவனெம்மான்
    மேருக்கனையக்குழைத்தானிங்கெய்தின்மிகவுநன்றே.

    87

    2115

    நன்றத்தம்வேண்டினனீகெனமூடரைநண்ணியம்பொற்
    குன்றத்தடம்புயனேயெனப்பாடிக்குறைந்தலைந்து
    வன்றத்தளாவித்திரியாமனீலிவனத்தவபொன்
    மன்றத்தயானினக்கேகவிபாடமனந்தந்ததே.

    88

    2116

    தந்தக்கரியதள்போர்த்தான்பைஞ்ஞீலித்தலைவனுள்ளு
    வந்தக்கரியணிந்தான்கோலமாகிமலரடியை
    முந்தக்கரியவன்றேடநின்றானென்முழுவினைநோய்
    சிந்தக்கரியப்புரிந்தாண்டருடருந்தேசிகனே.

    89

    2117

    கனத்துப்புடைகொடனமதர்நோக்கங்கறுத்தகுழல்
    வனத்துப்புடையிதழம்மைபங்காகஞ்சவாவிகளி
    னனத்துப்புடைமலங்குந்துபைஞ்ஞீலிநம்பாநிற்றொழ
    மனத்துப்புடையவனோவாதலாலெற்குவந்தருளே.

    90

    2118

    வந்தித்தலையுடையார்க்கன்பனீலிவனத்துறைவோன்
    பந்தித்தலையன்வரைக்கீழலறும்படிநெரித்தோன்
    சிந்தித்தலைகடல்போலேகண்ணீர்மிகச்சிந்துமென்முன்
    னிந்தித்தலைவருமுன்வருமாறியம்பெய்திமஞ்சே.

    91

    2119

    மஞ்சனகண்டனைப்பைஞ்ஞீலிவாழுமறைமுதலை
    வஞ்சனமன்புரளக்கழறூக்குமெம்மானையொண்கண்
    ணஞ்சனமாதர்மயல்விழிவீழ்ந்தறிவற்றழிந்துழல்வீர்
    வெஞ்சனனங்களைந்தீடேறியுய்யவிரும்புமினே.

    92

    2120

    விரும்பன்னமீதில்லைபாலினுமில்லைவெண்முத்தணிகொ
    ளரும்பன்னமென்முலைகாந்துவதாலவ்விருப்பமெங்ங
    னிருப்பன்னமுண்டகஞ்சேரும்பைஞ்ஞீலியினெம்மிறைவர்
    திருப்பன்னகந்தரித்தார்புயத்தேறுந்தெரியலினே.

    93

    2121

    அலம்புகுவால்வினையெஞ்ஞான்றும்வாட்டவயர்ந்திருகண்
    ணிலம்புகுமாறலறித்திரிவேனையென்றாண்டருள்வாய்
    விலம்புகுலாநுதற்கண்ணிபங்காமிகுமென்கதலிக்
    குலம்புகுகோயிலிருப்பாயடியன்குலதெய்வமே.

    94

    2122

    குலமலையாவுந்தொழநின்றபொன்மலைக்கோனருளு
    நலமலைபாகபைஞ்ஞீலியனேநதிபோலுமத
    சலமலையுங்கவுட்டோலுரித்தாயென்னைச்சார்ந்துவினை
    வலமலையாமலினிதாவென்றோதயைவைப்பதுவே.

    95

    2123

    பதுமத்தனங்குடிகொள்ளும்பைஞ்ஞீலிப்பரசிரத்தில்
    விதுமத்தனங்கையொருபாகவெள்ளைவிடையநினை
    முதுமத்தனங்கம்வருந்தலுந்தேடலுமுன்னலைச்செய்
    வதுமத்தனங்கொண்மடவார்க்கென்றாலெங்ஙன்வாழ்த்துவனே.

    96

    2124

    வனத்தனையன்றொழும்பைஞ்ஞீலிமேவுமறைமுதலை
    யெனத்தனையன்றுபுரமெரித்தானையிலங்கிலைவேற்
    சினத்தனையன்குகனாகப்பெற்றானைச்செம்மான்மழுவாண்
    மினத்தனையன்றிப்புகழேன்புறஞ்சிலவீணரையே.

    97

    2125

    வீணாகவம்பரைக்கொண்டாடிப்பாடும்வெறும்புலவீர்
    நாணாகவம்பலகோடலல்லாற்சற்றுநன்மைய்ண்டோ
    பூணாகவம்பலர்கொன்றையவோங்குகதலிப்பொங்கர்
    வாணாகவம்பற்றுமுன்வாவென்றோதும்வருந்தலின்றே.

    98

    2126

    வருத்தத்தையாற்றுதல்செய்யேனினியத்தைமாற்றிவருங்
    க‌ருத்தத்தையுந்தவிர்த்தாள்வாய்கடற்கட்டுகிரினிறப்
    பொருத்தத்தைமேவுஞ்சடையாய்பைஞ்ஞீலியெம்புண்ணியனே
    ம‌ருத்தத்தையார்கொன்றைத்தாராய்புரத்தொருமாதினனே.

    99

    2127

    மாதப்புனற்குமனஞ்சேரொட்டாததைமாற்றுதல்செய்
    தேதப்புனற்பரிற்கூட்டாதெனையுய்யவைத்ததுபூந்
    தாதப்புனற்கொன்றைத்தாரானென்னம்மைதழுவிடத்தான்
    சீதப்புனற்பணைப்பைஞ்ஞீலிநாதன்றிருவடியே.

    100

    திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி முற்றிற்று

    சிறப்புப்பாயிரம் *
    * இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை

    2128

    மறைநூறுகளையறவோர்ந்துளாருமகிழ்ந்துபவக்
    க‌றைநூறுமாறுணர்ந்துய்ந்திடுமாறுகயிலையொப்ப‌
    வுறைநூறுமாடங்கொள்பைஞ்ஞீலிநாதற்குவந்துகலித்
    துறைநூறுசொற்றனன்மீனாட்சிசுந்தரத்தூயவனே.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home